All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

கையில் மிதக்கும் கன...
 
Notifications
Clear all

கையில் மிதக்கும் கனவா நீ..!! (முதல் பாகம்) - Story Thread

Page 2 / 2
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 311
Topic starter  

ஹாய் பிரெண்ட்ஸ்..

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

KMKN - 8

https://kavichandranovels.com/community/topicid/628/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 

கவி சந்திரா 

This post was modified 1 week ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 311
Topic starter  
கனவு – 9
 
 
இன்னைக்கு வந்த செய்திக்காக நடந்த திருமணமா இதுன்னு எல்லாம் சில்லியா கேக்க மாட்டீங்க நினைக்கறேன்...” என்று பத்திரிக்கையாளர்களை நோக்கி கூறியவன், “இதோ கமிஷனர் சார் கூட இங்கே தான் இருக்கார், வேணும்னா அவர்கிட்ட கேட்டுக்கோங்க... அவர் முன்னிலையில் அவர் ஆசிர்வாதத்தோடு தான் எங்கே கல்யாணம் நடந்தது...” என்று ஆராவமுதனை நோக்கி கைக்காட்டினான்.
 
 
“எஸ்... மிஸ்டர் ஆத்ரேயன் இரண்டு வாரம் முன்னேயே என்னை இந்தத் திருமணத்தை முன் நின்று நடத்திக் கொடுக்கச் சொல்லி அழைப்பு விடுத்திருந்தார்...” என்று தன் கம்பீர குரலில் கூறியவர், “படுபாவி காலங்காத்தால கனவுல என் பொண்டாட்டிக் கூட லவ்ஸ் விட்டுகிட்டு இருந்த என்னைக் கதற கதற கடத்திகிட்டுப் போனான்னா சொல்ல முடியும்... இப்படியே நம்ம கெத்தை மெயின்டைன் செய்வோம்...” என்று முணுமுணுத்தது சஞ்சய்க்கு மட்டும் தெளிவாகக் கேட்டது.
 
 
அதில் அவரை ஒரு மர்ம புன்னகையோடு பார்த்தவன், மீண்டும் செய்தியாளர்களை நோக்கி திரும்ப... “சார் உங்க மிஸ்ஸஸையும் கூட்டிக்கிட்டு வந்து பேட்டி தந்து இருக்கலாமே...” என்று ஒருவர் கேட்டிருக்க... “மேடம் ரொம்பவே அமைதி விரும்பி... அப்படி எல்லாம் சட்டுன்னு வந்துட மாட்டாங்க...” என்றவனிடம், “நீங்க இங்கே வந்தே இரண்டு மாசம் கூட ஆகலையே சார்... அதுக்குள்ளே எப்படிக் காதல்... கல்யாணம்...?” என்று சந்தேகமும் பொறாமையுமாகச் செய்தியாளராக அமர்ந்திருந்த ஒரு நைன்டீஸ் கிட் கேள்வி எழுப்பியது.
 
 
“இங்கே பதிய இரண்டு மாசம் எல்லாம் தேவை இல்ல... இரண்டு நிமிஷம் போதும்...” எனத் தன் இதயத்தைச் சுட்டிக் காண்பித்தப்படி கூறியவன், “ஆனா அதுக்குள்ள உயிர் உள்ள வரை உயிரா நினைச்சு பார்த்துக்க முடியும்னு தோணனும், அப்படித் தோணினா யோசிக்காம உடனே முடிவேடுத்துடலாம்...” என்று கூறி முடிக்கவும், படபடவெனக் கைதட்டிய ஒரு இளம் பெண், “சான்சே இல்ல சார்... நீங்க ஒரு சிறந்த காவலன் மட்டுமில்ல.. காதலன் கூடன்னு நிருபிச்சிட்டீங்க சார், சூப்பர்...” என்றாள்.
 
 
ஒரு புன்னகையை மட்டும் அதற்குப் பதிலாகக் கொடுத்தவன், அங்கிருந்தவர்களைக் கூர்மையாகப் பார்த்தவாறே “உங்ககிட்ட கொஞ்சம் பேசலாமா...?!” என்றான்.
 
 
“சொல்லுங்க சார்...” என ஒட்டு மொத்தமாகக் குரல் வரவும், “பத்திரிகை சுதந்திரம் என்பது என்ன...?” எனக் கேட்டு சிறு இடைவெளிவிட, ஒவ்வொருவரும் ஒரு பதிலை சொல்லிக் கொண்டே சென்றனர்.
அவர்களைக் கையமர்த்தித் தடுத்தவன், “உண்மையை ஊருக்கு சொல்வதும், மறைந்து இருக்கும் உண்மையை வெளிக் கொண்டு வருவதும் தான் பத்திரிகை சுதந்திரம்... இது எப்போ அடுத்தவர் அந்தரங்கத்தில் மூக்கை நுழைப்பதாக மாறி போனது...? அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது...
 
 
நான்கு பேருக்கு தெரியும் அளவுக்குப் பிரபலமாக இருப்பவர்களுக்குத் தனிப்பட்ட வாழ்க்கையே இருக்கக் கூடாதா என்ன...? இன்னைக்கு நீங்க செய்தது சரின்னு உங்களுக்குத் தோணுதா...? என் வருங்கால மனைவியோடு நான் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை இப்படிப் பொதுவில் பகிரும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது... என் மனைவி அமைதி விரும்பியாக யாரோடும் அதிகமாகப் பேசி பழகாதவளாக இருந்த போதும் மன தைரியம் மிக்கவள், இதே அவள் இடத்தில் வேறு ஒரு பெண் இருந்திருந்தால் என்ன செய்துக் கொண்டு இருப்பாளோ...?! உங்க டிஆர்பி, உங்க சர்குலேஷன், உங்க இன்கிரிமென்ட்னு மட்டும் யோசிக்காம கொஞ்சம் மனசாட்சியோடவும் யோசிங்க...
 
 
உங்க வீட்டை சேர்ந்தவங்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் என்ன செய்வீங்க... எங்க குடும்பத்துல இருக்கறவங்க அப்படி எல்லாம் இல்லைன்னு ஸ்டாண்டர்ட் டையலாக் பேசாதீங்க... தன் குடும்பத்தில் இருக்கவங்களைத் தவிர மத்தவங்க எல்லாம் தப்பானவங்கன்னு நினைக்கறதும் பார்க்கறதும் தொழில் இல்ல அது ஒரு வியாதி... இன்னைக்கு வந்த செய்தியால் என் மனைவி அடைந்த மன உளைச்சலுக்கும் பட்ட அவமானத்துக்கும் யார் பொறுப்பு... என்னோட சேர்த்தே பேசப்பட்ட போதும் அதில் இருந்த வார்த்தைகள் அளவோடு இல்லாமல் அத்து மீறி இருந்தது சரியா...? இதனால் என் மனைவிக்குச் சுற்றி இருந்தவர்களால் ஏற்பட்ட அவமானம் எல்லாம் இப்போது உண்மை தெரிந்த பிறகு இல்லாமல் போய்டுமா என்ன...?
 
 
அந்த மனஉளைச்சல் ஏற்பட்டது ஏற்பட்டதுதானே...? கல்யாணம் நடக்க இருந்த இன்னைக்கு அந்தச் சந்தோஷத்தை முழுசா அனுபவிக்க முடியாம அவங்க மனவலியோடு தானே இருந்து இருப்பாங்க... நம்மளை சுத்தி எத்தனையோ ப்ரச்சனைகள் நடக்குது, அதைச் சுட்டிக் காட்டி தீர்வு காண பாருங்க... வெளிச்சதுக்கு வராத எவ்வளவோ திரைமறைவு வேலைகள் நடக்குது... அதைப் பகிரங்க படுத்துங்க... அதைவிட்டு அடுத்தவங்க படுக்கையறை எட்டி பார்ப்பது தான் பத்திரிக்கை சுதந்திரம்னு நினைச்சு செயல்படாதீங்க... கத்தி முனையைவிட சக்தி வாய்ந்தது உங்க பேனா முனை... ஒரு செய்தி உங்களுக்குத் தெரிய வந்தா முதலில் அது உண்மையானு தெரிஞ்சிக்கோங்க, அப்பறம் பிரசுறீங்க... அதை ஆக்கபூர்வமா பயன்படுத்தி நமக்கும் நம்மைச் சுத்தி இருப்பவங்களுக்கும் நாட்டுக்கும் முடிஞ்ச அளவு உபயோகமா இருப்போமே...!!” என்றவனின் தெளிவான இடைவிடாத பேச்சை கேட்டவர்கள் என்ன பதிலளிப்பது என்று தெரியாமல் அமைதி காக்க...
 
 
அங்கிருந்தவர்களில் சற்று நடுத்தர வயதில் இருந்த பெண்மணி எழுந்து, “நீங்க சொன்ன அத்தனையும் சரி தான் சார்.. இப்போ எல்லாம் வியாபார கண்ணோட்டத்தோடே பார்க்கவும் அணுகவும் படுது... அதில் தேவையில்லாமல் பாதிக்கப்படுபவர்களைப் பற்றிக் கவலைபடவெல்லாம் இங்கு யாருக்கும் நேரமும் இல்லை... பொறுமையும் இல்லை... இதில் செய்தியாளர்களை மட்டும் குறை கூறி எந்தப் பயனும் இல்லை... மேலிடத்தில் இருந்து அவர்களுக்கு வரும் பிரஷர் அப்படி... அதற்காக உங்களுக்கு நடந்தது சரின்னு நான் சொல்ல வரலை... ஒரு பெண்ணா உங்க மனைவியின் மனம் என்ன பாடுப்பட்டு இருக்கும்னு என்னால் புரிஞ்சிக்க முடியுது... ஒரு செய்தியாளரா இதுக்கு நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கறேன்...” என்று கைக் கூப்பி மன்னிப்பு கேட்டார்.
 
 
“அட ஏன் மா நீ வேற... அவன் இதையே சாக்கா வெச்சு கல்யாணத்தையே முடிச்சிட்டான்... நீ என்னனா...” என மெல்லிய குரலில் புலம்பிய ஆராவமுதனை திரும்பி ‘என்ன’ என்பது போலப் பார்த்தான் சஞ்சய். அவரோ தனக்கும் சற்று முன் கேட்ட முணுமுணுப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போன்றே அமர்ந்திருந்தார்.
 
 
“இல்ல இல்ல... நீங்க மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை... இது முழுக்க முழுக்க என் மேல் உள்ள வஞ்சத்தைத் தீர்த்துக்க நடந்த ஒரு கேவலமான செயல், என்றவன் தான் கையோடு கொண்டு வந்திருந்த ஆதாரங்களை அவர்களிடம் கடை பரப்பினான்.
 
 
சஞ்சய் ஆந்திராவில் இருந்த போது ஒரு மிகப் பெரிய கடத்தல் கும்பலை கூண்டோடு பிடித்திருந்தான். பல கோடி ரூபாய் பெறுமானம் உள்ள சரக்குகளோடு பிடிப்பட்டு இருந்தவர்களால் தப்பிக்கவும் முடியவில்லை சஞ்சயின் நடவடிக்கையைத் தடுக்கவும் முடியவில்லை... கடைசி நேரம் வரை எப்படியாவது இதிலிருந்து தப்பித்துவிடுவோம் என்றே நம்பிக் கொண்டிருந்தனர் பிடிப்பட்டவர்கள்... ஆனால் அப்படிப்பட்ட எந்த மேஜிக்கும் அங்கு நிகழவே இல்லை என்று கூறுவதை விடச் சஞ்சய் நிகழவிடவில்லை என்பதே சரி.
 
 
எத்தனையோ பேரங்கள், கெஞ்சல்கள், மிரட்டல்கள் எனத் தொடர்ந்து வந்த போதும் தூசியைத் தட்டுவது போலத் தட்டிவிட்டு சென்று விட்டான் சஞ்சய். இதில் அளவுக்கு அதிகமாகவே அவன் வேகத்தையும் கெடுபிடியையும் கையாண்டு வழக்கை முடிக்கக் காரணம் அது ஒரு மத்திய மந்திரி தன் பினாமி பெயரில் நடத்திக் கொண்டிருந்த கடத்தல் தொழில் என்பதைக் கண்டு கொண்டதால் தான்.
 
 
அறக்கட்டளை என்ற பெயரில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்தக் கடத்தல் தொழில் வெளிச்சத்துக்கு வந்ததில் அந்த அறகட்டளை இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டது. அதில் பிடிபட்ட சரக்கே பல கோடிகளைத் தொட்டு இருக்க... அதன் பிறகும் ஏதும் செய்ய முடியாத நிலை அந்த மந்திரிக்கு... அவரால் இதை மேலிடத்து துணையோடு கையாளவும் முடியவில்லை பாவம்... அவர்தான் இப்படி ஒரு தொழில் இருப்பது தெரிந்தால் பங்கு கொடுக்க வேண்டி இருக்குமே என அதை மறைத்திருந்தாரே...!!
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தவரின் கோபம் மொத்தமும் இதற்குக் காரணமான சஞ்சயின் மேல் திரும்பியது. அவனைப் பழி வாங்க சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தவரின் எதிர்ப்பார்ப்பை பூர்த்திச் செய்வது போல் அவரின் சொந்த ஊருக்கு மாற்றலாகி வந்தான் சஞ்சய்.
 
 
அவனை ஆள் வைத்து அவர் கண்காணித்த போது தான் அன்று கலவரத்தில் நேத்ராவுக்கு ஒன்று என வரும் போது அவனிடம் காணப்பட்ட துடிப்பும் பதட்டமும் அவருக்கு சஞ்சய் என்னும் திமிங்கிலத்தைப் பிடிக்க நேத்ரா தான் தூண்டில் என்று புரிய வைத்தது.
 
 
அதன் பிறகு நேத்ராவின் விடுதி அருகே நின்று கண்காணிப்பதே அவனின் முழு நேர வேலையாக மாறிப் போனது. அப்படி எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தான் ஊர் பேர் குறிப்பிடாமல் பத்திரிகை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்களும் அதில் உள்ள உண்மை தன்மையைப் பற்றித் தெரிந்துக் கொள்ளாமலே மற்ற பத்திரிகைகளில் வருவதற்கு முன் தங்கள் பத்திரிகையில் வர வேண்டும் என்று போட்டுவிட்டார்கள்.
 
 
ஆனால் சஞ்சய்யை அழிக்க அந்த மந்திரி எடுத்த முயற்சி அவருக்கு எதிராகவே திரும்பிவிட்டது. எப்போதோ அவர் பற்றி அறிந்துக் கொண்டாலும் மேலும் அவரின் சில தகிடுதத்தங்களோடும் தக்க ஆதாரத்தோடும் வெளிக் கொண்டு வர காத்திருந்தவன் இன்றே அவற்றை வெளிபடுத்திவிட்டான்.
 
 
சஞ்சய் இவ்வளவு நாள் அமைதியாக இருந்ததை வைத்துத் தன்னைப் பற்றி அவனுக்கு எதுவும் தெரிந்து இருக்கவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த மந்திரி தலையில் துண்டை போட வேண்டிய நிலை இப்போது. அவனைத் தொட்டாலே சும்மா விட மாட்டான்... இதில் அவர் தொட்டது அவனின் உயிரை எனும் போது சும்மாவிட்டுவிடுவானா என்ன...?!
 
 
அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கொண்டாட்டம்... எதையோ எதிர்ப்பார்த்து வந்து புதையலே கிடைத்தது போல் இருந்தது அவர்கள் நிலை...
 
 
சஞ்சய்யின் கோபம், ஆளுமை, திமிர், அதிரடி, ஆக்ஷன் என அனைத்தையும் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஆராவமுதனுக்கு அவ்வளவு சந்தோஷமும் பெருமையுமாக இருந்தது. ஆனாலும் தன் பதவிக்கு மதிப்பளித்து இதை எதையும் வெளிபடுத்திக் கொள்ளாமல் இறுக்கமாகவே அமர்ந்திருந்தார்.
 
 
‘பத்திரிகையில் செய்தி வந்து அரை நாளுக்குள்ளேயே அதைச் செய்தவர் யார் எனக் கண்டறிவதில் தொடங்கி அதற்கு மூலம் யார் என்பது வரை கண்டறிந்து அவர்களை அம்பலப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கான தண்டனையையும் ஊர்ஜிதப்படுத்தி விட்டு அதோடு சேர்த்து தான் விரும்பிய பெண்ணோடு திருமணத்தையும் முடித்துக் கொண்டானே...!!’ என்று அவனையே இமைக்காமல் பார்த்திருந்தவரின் பார்வை அருகில் இருந்த புகைப்படத்தின் மேல் பதிய...
 
 
தன் மகனிடம் சென்றது அவரின் நினைவுகள்... அவனுமே யாரையோ விரும்புகிறான்... கூடிய விரைவில் அவனோடு பேசி திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்திருந்தவருக்குத் தன் ஒரே மகனின் திருமணத்தை எண்ணி பல கனவுகள் இருந்தது.
 
 
இதே நினைவுகளோடே வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டு இருந்தவருக்கு அவரின் எண்ணங்களின் நாயகனே அழைத்தான். மகிழ்வோடு எடுத்து நலம் விசாரித்தவர், சில பல பேச்சுவார்த்தைக்குப் பிறகு சஞ்சயின் திருமணத்தைப் பற்றிச் சந்தோஷத்தோடு பகிர்ந்துக் கொண்டார்.
 
 
அதைக் கேட்டு அந்தப் பக்கம் இன்பமாக அதிர்ந்தவன், “என்னப்பா திடீர்னு...? என்கிட்ட கூடச் சொல்லலை...” என்று சந்தோஷமாகவே கேட்டான்.
 
 
“லவ் மேரேஜ் டா... சடனா முடிவாகிடுச்சு...” என்று பதில் அளித்தவர் நடந்தது அனைத்தையும் கூறி எங்கோ இருக்கும் மகனை கவலையில் ஆழ்த்த விரும்பாமல், அவன் மனம் ஏற்றுக் கொள்ளமாறு பதிலளித்தார்.
 
 
“லவ்வா..?! சஞ்சுவா பா...?” என்று நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் கேட்டவனுக்கு ஆராவமுதனின் பதில் ஆச்சர்யத்தையே கொடுத்தது. இதுவரை சஞ்சய் அவனின் காதலை பற்றியோ நேத்ராவை பற்றியோ ஒரு வார்த்தை கூட ராமிடம் கூறியது இல்லை.
 
 
இரண்டு நாட்கள் முன்னதாகப் பேசிய போது கூடத் தன்னிடம் இதைப் பற்றி ஒரு வார்த்தையும் சொல்லவில்லையே என்று யோசனை செல்ல... திருமணம் வரை வந்து இருக்கிறான் என்றால் காதலில் தீவிரமாகவே இருந்து இருக்கிறான் என்று புரிந்துக் கொண்டவன் தன்னிடம் ஏன் மறைத்தான் என்றே யோசித்துக் கொண்டிருந்தான்.
 
 
“டேய் தம்பி... உன் கூட்டாளி கூடக் கல்யாணம் செஞ்சிகிட்டான் டா... நீ எப்போ டா ஒகே சொல்ல போறே...? காலையில் ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து நான் தான் எல்லாம் செஞ்சேன், அப்போ எனக்கு உன் ஞாபகம் தான் கண்ணா... சீக்கிரம் நல்ல செய்தி சொல்லு பா...” என்றவரின் குரலில் இருந்த பாச தவிப்பில் பேச்சிழந்து நின்றான் ராம்.
 
 
அவருக்கு என்ன பதில் அளிப்பது என்று உண்மையாகவே அவனுக்குத் தெரியவில்லை... அவனவளின் காதலுக்காகக் காலமெல்லாம் காத்திருக்க அவன் தயார் தான்... ஆனால் அதையே தன்னைச் சார்ந்தவர்களிடமிருந்தும் எதிர்பார்க்க முடியுமா...?! ஆனால் அவளைத் தவிர வேறு யாரையும் மனதால் கூட அவனால் தன் அருகில் வைத்து பார்க்க முடியாதே...!!
 
 
இதெல்லாம் எப்படி இவரிடம் பேசி புரிய வைக்க முடியும், ஒரு தந்தையாக அவரின் தவிப்பும் நியமானது தான்... தனக்காகக் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுமாறு சொன்னால் நிச்சயம் காத்திருப்பார் தான்... ஆனால் அது எவ்வளவு நாள் என்று தனக்கே தெரியாத போது அவரிடம் என்ன சொல்ல முடியும்..!! அவள் மனதில் தனக்கென ஒரு இடம் இருப்பதை ராம் தெள்ள தெளிவாக அறிந்தே இருந்தான்... அதை அவள் வெளிப்படுத்த ஏன் தயங்குகிறாள் என்பது முதற்கொண்டு அறிந்து இருந்ததனாலேயே அவளை வற்ப்புறுத்தவோ தொந்தரவு செய்யவோ இல்லாமல் அவளுக்காகக் காத்திருக்கிறான்.
 
 
மனதில் ஆயிரம் கேள்விகளும் குழப்பமும் சூழ பதிலளிக்காமல் இருந்தவனின் அமைதியை சரியாகப் புரிந்துக் கொண்டவர், நொடியில் பேச்சை மாற்றி, சஞ்ஜயின் திருமணத்தைப் பற்றிக் கேலி பேசி மகனையும் அதற்குள் இழுத்தார். ஒரு நல்ல தந்தையாக அவரின் கணக்குத் தப்பாகாமல் நண்பனின் திருமணத்தைப் பற்றி ஆர்வமாகவே பேச தொடங்கினான் ராம்.
 
 
“எல்லாத்தையும் அதிரடியா செய்றவன் அவன் கல்யாணத்தையும் அப்படியே முடிச்சிட்டான் பாரேன்... ஆனா சும்மா சொல்லக் கூடாது இரண்டு பேரு ஜோடி பொருத்தமும் அவ்வளவு அழகு டா கண்ணா...” என்றவர், “ஒரு நிமிஷம் நீயே பாரேன்...” என அவர்களின் திருமணத்தின் போது தான் எடுத்திருந்த புகைப்படத்தை ராமுக்கு அனுப்பி வைத்தார்.
 
 
அதை ராம் பார்த்ததற்கான அறிகுறி தெரிந்த அடுத்த நிமிடம் அவனின் அலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டது... அவன் இருக்கும் இடத்தில் அடிக்கடி தொடர்புகள் தகராறு செய்யுமென்பதால் ஆராவமுதன் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை... ‘இது வேற’ எனச் சலிப்போடு அலைபேசியை அணைத்திருந்தார்.
 
 
இங்கு வீடு திரும்பிக் கொண்டிருந்த சஞ்சயின் மனம் காலையில் நடந்த விஷயங்களைத் தான் அசைப்போட்டுக் கொண்டிருந்தது. முதலில் வந்து பேசிய போதே நேத்ராவை சம்மதிக்க வைக்க அவன் எவ்வளவோ இறங்கி போய்ப் பேசியும் அவள் ஒத்துக்கொள்ளவே இல்லை...
 
 
ஆரம்பத்தில் அவன் மனதில் இருந்ததெல்லாம் அந்தச் செய்தியை பார்த்து நேத்ராவின் மனம் என்ன பாடுப்பட்டதோ என்பதே...?! அதற்குத் தானே காரணம் ஆகிவிட்டதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. எனவே அவளைச் சமாதனப்படுத்தும் விதமாகப் பேச தொடங்கியவன்,
 
 
“இது இன்னையோடு முடிய போற விஷயம் இல்ல நீரு... உன்னை ரொம்பவே மனம் நோக பேசுவாங்க... ஒவ்வொரு நாளும் உன்னை இதையே பேசி நோகடிப்பாங்க... அப்படியெல்லாம் உனக்கு நடக்க நான் விட மாட்டேன்... நம்ம கல்யாணம் இது எல்லாத்துக்கும் ஒரு முற்று புள்ளியா மாறும்...” என்று அமைதியாகவே அவளுக்குப் புரிய வைக்க முயன்றான்.
 
 
‘இது போல உங்க கூடச் சேர்த்து செய்தி வரவங்களை எல்லாம் கல்யாணம் செஞ்சிகிட்டே போவீங்களா...?!” என்று நக்கலாகக் கேட்டவளை கண்டு ஒரு நொடி திகைத்து அப்படியே நின்றுவிட்டான் சஞ்சய். ‘இது இவள் என்பதால் தானே இப்படி ஒரு முடிவுக்கு வந்தான்... வேறு யாரோடாவது இப்படி நெருங்கி இதுவரை பழகி இருக்கிறானா... இல்லை வம்பிழுத்து இருக்கிறானா...? இவளாக இல்லையென்றால் இதை வேறு மாதிரி தானே டீல் செய்திருப்பான்...’ என்ற எண்ணம் மனதில் ஓட...
 
 
“உனக்கு நிலைமையின் விபரீதம் கொஞ்சமும் புரியலை...” என்று தொடங்கியவனை இடைமறித்தவள், “நல்லா புரியுது... ஆனா அதுக்கு இந்தக் கல்யாணம் தான் ஒரே தீர்வுன்னு நான் ஒத்துக்க மாட்டேன்... நாளைக்கே இன்னொருத்தனோடு இப்படிச் சேர்த்து வெச்சு எழுதினா அவனையுமா நான் கல்யாணம் செஞ்சிக்க முடியும்...” என்று எகத்தாளமாகக் கேட்டப்படியே இகழ்ச்சியாக இதழ் சுழித்தாள்.
 
 
“விதண்டாவாதம் பேசாதே நீரு... உங்க அப்பா அம்மா இருந்து இருந்தா இப்போ இப்படி ஒரு முடிவை நீ எடுக்க விட்டு இருப்பாங்களா...? அவங்க பெயர் முதற்கொண்டு இதில் நீ கவனிக்கணும்...” என்று வேண்டுமென்றே அவளின் குடும்ப மரியாதையை இதில் இழுத்து நேத்ராவை சற்று குழப்பி அதில் தன் திட்டத்தைச் செயல்ப்படுத்த எண்ணினான்.
 
 
சஞ்சயின் திட்டம் என்னவோ கல்யாணத்தை முடிப்பதாகவே இருந்தாலும் அதில் அவளின் நலனே அவனுக்குப் பிரதானமாக இருந்தது. ஆனால் இவன் நினைத்ததற்கு நேர்மாறாகப் பேச தொடங்கினாள் நேத்ரா.
 
 
“உனக்கு என்ன தெரியும் அவங்களைப் பற்றி... இப்போ இருந்து இருந்தா நிச்சயம் நான் எடுத்த முடிவு தான் சரின்னு சொல்லி இருப்பாங்க... நான் செய்யாத தப்புக்கு யாரோ எதுவோ பேசுவாங்கன்னு நான் ஏன் பயப்படணும்... இந்தத் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் எனக்குக் கொடுத்ததே அவங்க தான்...” என்று அசால்ட்டாகக் கூறியவள், இறங்க முயலவும் தான் இனி அதிரடி தான் வேலைக்கு ஆகும் என்று புரிந்து இரண்டு மணி நேரம் அவகாசம் கொடுத்துச் சென்றிருந்தான்.
 
 
தன் அலைபேசியில் வந்த சஞ்சயின் மெசேஜை கண்டு நேத்ரா திகைத்து பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அவனிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது. சற்றும் யோசிக்காமல் உடனே அவளின் கரங்கள் அதை எடுத்திருந்தது.
 
 
“என்ன மேடம் பார்த்தீங்களா...? எப்படி...? எப்படி...? எந்தத் தப்பும் செய்யாத நான் ஏன் பயப்படணும்... செம டையலாக்... இதுக்கெல்லாம் உன்னைச் சொல்லி என்ன பிரயோஜனம், என் மாமனார் மாமியாரை சொல்லணும்... இந்தத் தைரியம் துணிச்சல் எல்லாம் பார்க்கும் போது போலீஸ்காரன் பொண்டாட்டிக்கு இது கூட இல்லைனா எப்படினு தோணுச்சு... உன்னை அப்படியே அள்ளிக் கொஞ்சணும் போல இருந்தது குல்பி... ஆனா அதெல்லாம் வெளியே இருக்கவங்ககிட்ட காட்டினா ஒகே... நீ என்கிட்டேயே காட்டக் கூடாது இல்ல... இந்தக் கல்யாணம் இன்னைக்கு நடந்தே ஆகணும் அதுக்கு நான் எந்த எல்லைக்கு வேணா போவேனு காட்ட ஒரு சாம்பிள் தான் இது... உனக்கு வேணா இது சாதரணமா கடந்து போக முடிஞ்ச ஒண்ணா இருக்கலாம்... ஆனா எனக்கு இது என் மனைவியோட கௌரவம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம்... அவ்ளோ ஈசியா என்னால் விட்டு கொடுக்க முடியாது...” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியவன் அனுப்பி இருந்தது எல்லாம் இது தான்.
 
 
காலையில் பத்திரிக்கையில் வந்திருந்த புகைப்படங்களை அனுப்பி அதன் கீழே, “இப்படி எல்லாம் என் கூடப் பழகிட்டு காதலிச்சிட்டு இப்போ கல்யாணம் செஞ்சுக்க மறுக்கும் என் காதலியை எப்படியாவது என் கூடச் சேர்த்து வைங்க... என் காதல் உண்மை, அவ இல்லைனா எனக்கு வாழ்க்கையே இல்ல...” என்று ஒன்பது மணிக்கு நீ என் கூட வரலைனா ஒன்பதரை மணிக்கு எல்லா டிவி சேனலுக்கும் பேட்டி கொடுப்பேன்... இப்படித் தான் அனுப்பி இருந்தான்.
 
 
அதில் தான், இதை எதிர்ப்பார்க்காதவள் அதிர்ந்து அலைபேசியை உடனே எடுத்திருந்தாள். இப்போது சஞ்சய் கூறிய அனைத்தையும் கேட்டவள் பதில் கொடுப்பதற்குள், அதற்குக் கொஞ்சமும் சந்தர்ப்பம் கொடுக்காமல் மீண்டும் அவனே, “இல்லை நீ என்ன செஞ்சாலும் எனக்குக் கவலை இல்லைன்னு மேடம் சொன்னீங்கனா...” என்று சற்று இடைவெளிவிட்டு அவளின் ரத்த அழுத்தத்தைக் கொஞ்சம் எகிற செய்தவன், “நீங்க ஒரு டீச்சர்னும் பாடம் எடுக்கறது பத்தாம் கிளாசுக்குனும் நியாபகம் வெச்சுக்கோங்க... இரண்டும் கேட்டான் வயதில் இருக்கும் பிள்ளைங்க எது சரி எது தப்புன்னு புரியாத ஒரு குழப்பமான மனநிலையிலேயே இருப்பாங்க... இப்போவே காலையில் வந்த செய்திய வெச்சு எல்லாரும் பேசறதை கேட்டுக் கொஞ்சமா குழம்பி போய் இருப்பாங்க... அடுத்து என் செய்தியும் வந்தா உன்னை எப்படிப் பார்ப்பாங்க தெரியுமா...?! அதையும் விட இப்போதான் பதின் பருவத்தில் இருக்கும் அவங்க உன்னையே ஒரு முன் உதாரணமா எடுத்துகிட்டு நடக்கத் துவங்கினா...?!” என்று வேண்டும் என்றே நேத்ரா இந்தத் தொழிலையும் அந்தப் பிள்ளைகளையும் எவ்வளவு நேசிக்கிறாள் எனத் தெரிந்தே ஏற்ற இறக்கத்தோடான குரலில் சஞ்சய் அவளின் மன உறுதியை குலைக்க வேண்டும் என்றே பேசிக் கொண்டு சென்றான்.
 
 
அதில் நிஜமாகவே நேத்ரா ஆடி தான் போய் விட்டாள். இந்தக் கடைசி அஸ்திரத்தை அவன் எய்யவில்லை என்றால் எப்படியோ... ஆனால் இப்போது தன்னால் பிள்ளைகளின் வாழ்க்கை தவறான பாதையில் சென்றுவிடுமோ என்ற பயமே அவளை வார்த்தைகள் இல்லாமல் திணற செய்தது.
 
 
அவளின் இந்த நிலையைச் சரியாக அந்தப் பக்கம் இருந்தவன் அறிந்துக் கொண்டதன் அடையாளமாக அவன் முகத்தில் ஒரு மென்னகை தவழ்ந்தது. “இதெல்லாம் நடக்கக் கூடாதுனா என்னோடு நீ வரணும்...” என்று கட்டளையிடும் குரலில் கூறிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் அவன் வைத்துவிட்டான்.
 
 
அதே நேரம் தயாராகி அருகில் வந்த வித்யாவை நிமிர்ந்தும் பார்க்காமல் கீழ் இறங்கி சென்றவளின் அருகே மீண்டும் அதே கார் வந்து நிற்க... ஒரு தயக்கத்தோடான பார்வையை வித்யாவை நோக்கி செலுத்திய நேத்ரா அமைதியாகக் கதவை திறந்து ஏறி அமர்ந்திருந்தாள். இதில் மொத்தமாகக் குழம்பி நின்றது வித்யா தான்.
 
 
கதவை திறந்த சில நொடிகளில் உள்ளே இருப்பது சஞ்சய் என்று பார்த்திருந்தவளுக்கு இங்கே என்ன நடக்கிறது என்று தான் புரியவில்லை... அவள் அதிர்வோடு விழித்துக் கொண்டிருக்கும் போதே கார் சென்றுவிட்டு இருந்தது.
 
 
அதன் பின் சஞ்சய் தான் ஏற்பாடு செய்திருந்த கோவிலுக்கு அழைத்துச் சென்று அவன் தயாராக வைத்திருந்த பையைக் கொடுத்து அங்கிருந்த அறையில் சென்று மாற்றிக் கொண்டு வருமாறு கூறியவனின் வார்த்தைகளுக்குக் கீ கொடுத்த பொம்மை போல அனைத்தையும் செய்துக் கொண்டு இருந்தாள் நேத்ரா.
 
 
அங்கு ஆராவமுதன் ஆசிர்வாதத்தோடு கடவுளின் முன் மாங்கல்யம் அணிவித்தவன், அடுத்து அவளைக் கையோடு அழைத்து சென்று அதை முறைப்படி ரிஜிஸ்டரும் செய்திருந்தான்...
 
 
நேத்ராவின் பள்ளியில் மதிய உணவு நேர இடைவெளியில் எதேச்சையாகச் சஞ்சயின் பேட்டியை கண்டவரின் வழி அனைவருக்கும் செய்தி பரவ, அனைவரும் தங்கள் அலைபேசியில் அதைப் பார்க்க தொடங்கினர். வழக்கம் போல வித்யாவின் மூலமே இதுவும் நேத்ராவுக்குத் தாமதமாகவே தெரிய வந்தது.
 
 
அவளுக்கு நேர்ந்த அத்தனை அவபெயரையும் ஒன்றுமில்லை என்று ஆதாரத்தோடு நிரூபித்துக் கொண்டிருந்தான் அங்கு அவளின் கணவன். ஓர் உணர்வில்லா பார்வையோடு அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள் நேத்ரா.
 
 
அதன் பின் ஒவ்வொருவராகத் தேடி வந்து நேத்ராவை வாழ்த்திவிட்டு செல்ல... அவர்கள் காலை இவள் இரண்டு மணி நேர பிர்மிஷனுக்குப் பிறகு பள்ளிக்கு வந்த போது எப்படித் தன் முகத்திற்கு நேராகப் பேசினார்கள் என்ற நினைவோடு அவர்களின் இந்த வாழ்த்தையும் ஒரு சிறு தலையசைப்போடு ஏற்றுக் கொண்டிருந்தாள் நேத்ரா.
 
 
நேத்ராவின் திருமணம் முடிந்திருந்ததைப் பற்றி அறியாதவர்கள் எல்லாம் தாங்கள் அப்படிப் பேசவும் கூட இவள் அவர்களிடம் எதையும் வாயை திறந்து கூறாததே காரணம் என்பது போலச் சொல்லிவிட்டு செல்ல... அதையும் அமைதியோடே பார்த்திருந்தாள்.
 
 
வித்யாவுக்குத் தான் தலையும் புரியவில்லை... காலும் புரியவில்லை... இது எல்லாம் எப்படிச் சாத்தியம் என்ற எண்ணம் செல்லும் போதே காலையில் அவளின் அலைபேசியில் பார்த்த ‘புருஷ் காலிங்’ நினைவுக்கு வர, ‘கள்ளி நம்மகிட்டேயே மறைச்சு இருக்கா பாரேன்...’ என்று எண்ணிக் கொண்டாள்... பாவம் அவளுக்குத் தெரியாதே, இது எல்லாம் நேத்ரா அறியாமல் அந்தப் புருஷ் நேற்று இரவு அவளின் அலைபேசியை பறித்து வைத்திருந்த கொஞ்ச நேரத்தில் செய்திருந்த வேலை என்பது...!!

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 311
Topic starter  

ஹாய் பிரெண்ட்ஸ்..

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

KMKN - 9

https://kavichandranovels.com/community/topicid/628/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 

கவி சந்திரா 

This post was modified 1 week ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 311
Topic starter  
கனவு – 10
 
 
அன்று முழுவதும் நடந்து முடிந்த எதுவுமே தன்னை எந்த வகையிலும் பாதித்தது போலக் கொஞ்சமும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் தன் வேலையில் கவனமாக இருந்த நேத்ராவை அங்கிருந்த அனைவருமே வியப்பும் குழப்பமும் கோபமுமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
 
 
ஒவ்வொருவரும் எவ்வளவு மனம் நோக பேசிய போதும் அவளின் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் கூட வரவில்லை. அவை தன்னைப் பாதித்ததாகக் கூடக் காண்பித்துக் கொள்ளவில்லை நேத்ரா. இறுகி போய் இருந்தவளின் மன உணர்வுகளை அவர்களால் புரிந்துக் கொள்ள முடியாதே...! புரிந்துக் கொள்ளக் கூடியவனும் இப்போது அருகில் இல்லையே...!!
 
 
“இவளுக்குத் திமிர் அதிகம் தான்...”
 
 
“சும்மாவே திமிர் காட்டுவா... இப்போ அந்த ஹீரோ போலீஸை வேற கல்யாணம் செஞ்சு இருக்கா.. அதிலும் காதல் கல்யாணம்... இன்னும் ஓவரா திமீர் காட்டுவா...”
 
 
“இந்த உம்மணா மூஞ்சியை எப்படி அவருக்குப் பிடிச்சுதோ...?!”
 
 
“ஆளு பார்க்க சிக்குன்னு பளபளன்னு இருக்கா இல்லை... அதான் கவுந்துட்டு இருப்பாரு...” என ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாகப் பேசிக் கொண்டே தான் இருந்தனர். அவர்கள் எதிர் பார்த்தது எல்லாம் என்ன...? நேத்ரா அழுது கரைய வேண்டும் என்பதா...?! இல்லை கூனி குறுக வேண்டும் என்பதா...?! இவை இரண்டையுமே நேத்ரா செய்யவும் இல்லை செய்யப் போவதும் இல்லை.
 
 
அவர்கள் பேசுவது அனைத்தும் காதில் விழுந்தாலும் நேத்ரா அதைப் பற்றி ஒரு துளியும் கவலைப்படவில்லை. ஆனால் அப்படி இருக்க முடியாமல் சிலரிடம் சண்டைக்குப் போய் இருந்தாள் வித்யா. அவர்களோ நேத்ரா தங்களிடம் முன்பே காதலை பற்றிக் கூறாததே தவறு இல்லையென்றால் நாங்க எதுக்குப் பேச போறோம் என்றே வாதிட்டனர்.
 
 
இவர்களிடம் ஏன் அவளின் காதலை சொல்ல வேண்டும் என்ற யோசனை கூட அவர்களில் யாரிடமும் இல்லை... என் மேல் எப்போதும் எந்தத் தவறும் கிடையாது, நீ சொல்லாதது தான் தவறு என்றே இருந்தது அவர்களின் என்ன போக்கு... என்ன படித்து என்ன பிரோயஜனம், இன்னும் இப்படித் தானே இருக்கிறார்கள்...!!
 
 
அவர்களிடம் வாதிட்டுக் கொண்டு இருந்த வித்யாவை பிரித்து இழுத்து வருவதற்குள் நேத்ராவுக்குப் போதும் போதுமென ஆகிவிட்டது. வீடு திரும்பும் வேளையில் நடந்த இந்த விவாதத்தால் சலிப்படைந்த நேத்ரா “நீயும் ஏன் டி...?” என்று கடிந்துக் கொள்ள அப்படியே பொங்கி விட்டாள் வித்யா.
 
 
“எப்படி இப்படி எல்லாம் அவங்களால் பேச முடியுது தாரா... அவங்களும் மனுஷங்க தானே...?! மனசாட்சி வேண்டாம்...” என்று ஆத்திரத்தோடு வித்யா கத்திக் கொண்டு இருக்கும் போது அவர்களருகில் வேகமாக வந்து நின்றது சஞ்சயின் பிளாக் ஸ்டோன்.
 
 
அதில் ஆர்வமாக அவனைத் திரும்பி வித்யா பார்த்து புன்னகைக்க... “எப்படி இருக்கீங்க வித்யா...?” என்று பதிலுக்குப் புன்னகைத்தவாறே வினவினான் சஞ்சய். “வாவ்... என் பேரு கூட உங்களுக்குத் தெரியுமா ஹீரோ சார்...?” என்று விழி விரித்து ஆச்சர்யப்பட்டவளை கண்டு தலையசைத்தவன், “தெரியாம எப்படி இருக்கும்...?!” என எதிர் கேள்வி கேட்க...
 
 
“அதானே...!! என்னைப் பற்றி உங்ககிட்ட சொன்னவ ஆனா பாருங்க உங்களைப் பற்றி என்கிட்ட எதுவுமே சொல்லலை ஹீரோ சார்...” என்றாள் குறைப்பட்டுக் கொள்ளும் குரலில்,
 
 
“என்னது ஹீரோ சாரா...?!” என்று புருவம் சுருக்கியவனுக்கு, “ஆமா என்னைக்கு உங்க ஆக்ஷனை டிவில பார்த்தேனோ அப்போல இருந்து நீங்க எனக்கு ஹீரோ சார் தான்... அதுவும் அன்னைக்கு மார்கெட்ல உங்க ஆக்ஷனை நேரில் பார்த்து ரசிச்சிட்டு இருந்த என்னை இவ ஏன் கதற கதற இழுத்துட்டு போனான்னு இப்போ இல்ல தெரியுது... அவ மட்டும் சைட் அடிக்கணும்னு நினைச்சு இருக்கா... ஆனா அப்போவே தெரிஞ்சு இருந்தா நீங்க எப்பவோ எனக்கு அண்ணாவா பிரமோஷன் ஆகி இருப்பீங்க ஹீரோ சார்...” என்று குறைப்பட்டுக் கொள்ளும் குரலில் தொடங்கிக் கோபத்தோடு முடித்தாள்.
 
 
அதில் அழகிய பல்வரிசை தெரிய சிரித்து, “இப்போ தான் தெரிஞ்சிடுச்சே... இனியாவது பிரமோஷன் தரலாமே...” என்று புன்னகையோடே கேட்டவனுக்கு, “அதெல்லாம் காலையிலேயே கொடுத்துட்டேன்... ஆனாலும் எனக்கு இப்படிக் கூப்பிட தான் பிடிச்சு இருக்கு ஹீரோ சார்...” என்றாள் பிடிவாதம் பிடிக்கும் குழந்தை குரலில்.
 
 
“ஒகே... ஒகே... ஆஸ் யுவர் விஷ்...” என்றவன் நேத்ராவின் பக்கம் திரும்பி, “கிளம்புவோமா...?” என்றான் அது தான் தினசரி வழக்கம் என்பது போல வெகு இயல்பாக, அதுவரை இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருந்ததை எனக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போல நின்று பார்த்துக் கொண்டு இருந்தவள், சிறு திடுக்கிடலோடு திரும்பி பார்த்தாள்.
 
 
“ஆமா இல்ல... இனி தாரா என்னோட இருக்க மாட்டா இல்ல... எனக்கு அது ஞாபகமே வரலை பாருங்க...” என வருத்தப்பட்டவளுக்கு என்ன பதில் சொல்வது என்பது போல சஞ்சய் பார்த்திருக்க... நேத்ராவோ சென்றே ஆக வேண்டும் போலேயே...! இனி இவளே விடமாட்டாளே...!! என்பது போலப் பார்த்திருந்தாள்.
 
 
“சரி மா பார்ப்போம்..” என வித்யாவை பார்த்து சொன்னவன், திரும்பி நேத்ராவை பார்க்க... அவள் எதுவும் பேசாமல் வந்து பின்னால் ஏறி அமர்ந்தாள். அதற்காகவே காத்திருந்தது போலப் பறந்தது அவனின் பிளாக் ஸ்டோன்.
 
 
சற்றுத் தூரம் சென்றதும் அவன் மேல் இருந்த கோபம் அப்பட்டமாகத் தெரிய “இப்போ எங்கே போறோம்...?” என மெல்லிய குரலில் கேட்டாள் நேத்ரா. “ம்ம்ம்... குடும்பம் நடத்த தான்...” எனச் சாதாரணக் குரலில் கூறினான் சஞ்சய்.
 
 
“என்னதுஊஊஊஊ...” என நிஜமான அதிர்வோடு குரல் எழுப்பியவளை வண்டியை செலுத்தியவாறே திரும்பி பார்த்தவன், “நமக்குக் காலையில் தான் கல்யாணம் முடிஞ்சு இருக்கு குல்பி.. அடுத்து அதானே...” என்று அசால்ட்டாகக் கூற, “முதலில் வண்டியை நிறுத்து...” எனக் கத்தியவளின் வார்த்தைக்காக ஓரமாக வண்டியை நிறுத்தினான்.
 
 
அடுத்த நொடி அதிலிருந்து வேகமாக இறங்கியவள், “என்ன விளையாடறீயா... என்னால எல்லாம் உன் கூட...” என்று தொடங்கியவள் அதற்கு மேல் அந்த வார்த்தையைப் பயன்படுத்த முடியாமல் நிறுத்தி தடுமாறி... பின் “நான் உன்னோட எங்கேயும் வரமாட்டேன்...” என்றாள் அழுத்தம் திருத்தமான குரலில்.
 
 
அதில் அப்படியா என்பது போல ஒற்றைப் புருவத்தை உயர்த்திப் பார்த்தவனைக் கண்டு, “என்ன இப்போ என்ன சொல்லி மிரட்டலாம்னு யோசிக்கறீயா...?! நீயே உன் வாயாலே எல்லாருக்கும் இது காதல் கல்யாணம்னு சொல்லி இருக்க... அதை மறந்துடாதே...” என்று இனி நீ என்னை எதைச் சொல்லியும் மிரட்ட முடியாது என்பது போல எகத்தாள குரலில் கூறியவளை ஒரு நக்கல் பார்வை பார்த்தவன்,
 
 
“அதான் பேபி நானும் சொல்றேன்... காதல் கல்யாணம்னா பொண்டாட்டி புருஷன் கூடத் தானே இருக்கணும்... இப்போ நீ உன் ஹாஸ்டலில் என்ன சொல்லுவ...? உன் பிரண்டுக்கு என்ன சொல்லுவ...?” எனக் கேட்டுப் புருவம் உயர்த்தியவனை அடுத்த வார்த்தை வராமல் தடுமாற்றத்தோடு நேத்ரா பார்த்திருக்க... “இப்படியெல்லாம் கேட்டு உன்னைக் கார்னர் செய்ய மாட்டேன் குல்பி... மீ சமத்து பையன், என் பொண்டாட்டி என் கூடக் குடும்பம் நடத்த வர மாட்றான்னு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஏக் பேட்டி மட்டும் தான் கொடுப்பேன்...” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கூறியவனை அதிர்ந்து விழி விரிய பார்த்திருந்தாள் நேத்ரா.
 
 
‘இதெல்லாம் கூடவா சொல்லுவாங்க...?!’ என அவளின் மனம் எழுப்பிய கேள்வியை அவளின் கண்களிலேயே அறிந்துக் கொண்டவன், “நான் சொல்லுவேன்...” என்று உதடு பிதுக்கி கண் சிம்மிட்டலோடு அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு நான் ஒரு அக்மார்க் அடபாவி என்று நிரூபித்திருந்தான்.
 
 
“இப்போ உனக்கு என்ன தான் வேணும்...?” எனக் கைகளைக் கட்டி கொண்டு சலிப்போடு கேட்டவளுக்கு, “இப்போவே உடனே நம்ம வீட்டுக்கு போயாகணும்... மீதியை அங்கே போய்ப் பேசிக்கலாம்...” என்றவனின் மேல் பொங்கிய கோபத்தைக் காட்ட வழியில்லாமல் தங்கென ஏறி வண்டியில் நேத்ரா அமர்ந்ததில் பிளாக் ஸ்டோன் சற்று தடுமாறியது.
 
 
“இங்கே பாரு நீரு... நமக்குள்ள என்ன பிரச்னை வேணா இருக்கலாம்... அதை நமக்குள்ளேயே பேசி தீர்த்துக்கறது தான் சரி... மத்தவங்க முன்னே காட்றதோ, இல்லை அவங்களை அதனால் கஷ்டப்படுத்தறதோ கொஞ்சமும் சரி இல்லை...” என்று தீவிரமான குரலில் கூறியவனை ‘இப்போ எதுக்கு இது...?’ என்று புரியாமல் பார்த்திருக்க... அவனோ இப்போ நம்ம பிரச்னையில் எதுக்கு என் தம்பியை கஷ்டப்படுத்தற... அவன் பாவம் உன் மேலே உயிரா இருக்கான்...” என்றான் அன்பு தோய்ந்த குரலில் தன் பிளாக் ஸ்டோனை தடவி கொண்டே.
 
 
அதில் கொலைவெறியானவள் அவனை முறைக்கத் துவங்கவும், முன்னால் இருந்த கண்ணாடி வழியே அதைக் கண்டு சிரித்துக் கொண்டே வண்டியை எடுத்தவன் நேராகச் சென்று நிறுத்தியது அவர்கள் வீட்டின் முன்பு தான்.
 
 
அது சற்று வசதியானவர்கள் வசிக்கும் பகுதி. அழகான ஒரு டியுப்லக்ஸ் சிறு பங்களாவின் முன் வண்டியை நிறுத்தியவன் நேத்ராவை உள்ளே அழைத்துச் சென்று அந்தக் கலைவேலைப்பாடுகளாலான முன் கதவை திறந்து விட்டவன், “கல்யாணம் முடிந்து முதல் முறை வரும் உன்னை ஆரத்தி எடுத்து வரவேற்க இங்கே யாருமில்லை நீரு...” எனச் சற்று ஒரு மாதிரியான குரலில் கூறியவன், சோ நானே “கம் இன் டூ ரூல் திஸ் பேலஸ் அண்ட் யுவர் கிங் மை டியர் குயின்...” என இடைவரை குனிந்து வலது கையை உள் பக்கம் நீட்டி அவளை வரவேற்றான்.
 
 
அவனின் மேல் இருந்த கோபத்தில் ஒரு சலிப்பும் சுனக்கமுமான மனநிலையிலேயே உள்ளே நுழைந்தவள் அங்கிருந்தவற்றைக் கண்டு இமைக்க மறந்து அப்படியே நின்றுவிட்டாள். வெகு சுத்தமாகவும் அழகியலோடும் பராமரிக்கப்பட்டுக் கொண்டு இருந்த அந்த வீடு முழுவதும் ஒரு ரசனையைக் கண்டுக் கொள்ள முடிந்தது.
 
 
வழக்கமாக இருக்கும் வரவேற்பறையைப் போலப் பெரிய அழகிய சோபாக்கள் போடப்பட்டு அதைச் சற்றி ஒற்றைச் சோபாக்கள் சூழ்ந்திருக்க... அவற்றை மேலும் அழகாக்குவது போல அதன் அருகில் வைக்கப்பட்டு இருந்த வீட்டிற்குள் வளர்க்கும்படியான தொட்டி செடிகள் ஓரு மலர்ச்சியை உண்டு செய்தது.
 
 
அதற்கு நேரெதிரில் தரையில் விரிக்கபட்டிருந்த படுக்கையும் அதன் மேல் வழக்கமாக இருக்கும் உருளை திண்டுகளுக்குப் பதில் அழகிய பெரிதும் சிறிதுமான வட்டவடிவ திண்டுகளும் அழகாக வைக்கப்பட்டிருந்த விதமே கண்ணைக் கவருவதாக இருந்தது.
 
 
இன்னும் அதை அழகாக்குவது போல அதன் இருபுறமும் பீங்கானில் செய்யப்பட்ட இடுப்பு உயரத்திலான கலைநயமிக்க மதுபாணி ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்த பானைகளும் அதைச் சுற்றி சிறுசிறு அதே போல வரையப்பட்டிருந்த குடுவைகளும் வைக்கப்பட்டு அதில் பல வண்ண மலர்கள் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்தது.
 
 
இதைத் தவிர ஒரு பக்கம் முழுவதும் சுவரை அடைத்துக் கொண்டு மாட்டப்பட்டிருந்த சிறிதும் பெரிதுமான ஓவியங்கள்... மற்றொரு பக்க சுவரில் தீட்டப்படிருந்த மாடர்ன் ஆர்ட்... இருளும் ஒளியும் கலந்து ஒளிவீசும் மின் விளக்குகளில் தொடங்கி, அழகிய உணவு மேசை சமையலறை வாயிலில் இருந்தாலும் பால்கனிக்கு எதிரில் சுற்றுப்புறத்தை ரசித்துக் கொண்டே சாப்பிடும் வகையில் சிறு தரையில் அமர்ந்து சாப்பிடும்படியான உணவு மேசையும்... என அனைத்தும் இதற்கெல்லாம் சொந்தக்காரன் ரசனைக்காரன் என்பதைச் சாட்சியோடு பறைசாற்றிக் கொண்டு இருந்தது.
 
 
‘இந்த ஒரு ரவுடி பொறுக்கிக்குள்ளே இப்படி ஒரு கலா ரசிகனா...?!’ என இமைக்கக் கூட மறந்து நின்றிருந்தவளின் மனநிலையில் இங்கே வந்த போது இருந்தது எல்லாம் சுத்தமாகக் காணாமலே போய் இருந்தது. அவளின் புருஷுக்கு மட்டும் இல்லை அவன் உபயோகிக்கும் பொருட்களுக்கும் கூட நேத்ராவின் மனதை மாற்றும் கலை கை வரபெற்றிருந்தது அவளுக்குப் புரியவே இல்லை.
 
 
அப்போது அவளின் முன்பு பெரிய கோப்பையில் சூடான கமகம மனத்தோடான காபி நீட்டப்படவும், அவள் இருந்த மனநிலையில் எதுவும் பேசாமல் வாங்கி அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து பருக தொடங்கி இருந்தாள் நேத்ரா.
 
 
ஒவ்வொரு மிடக்காகப் பருக தொடங்கியவளுக்கு அதன் ஒவ்வொரு துளியும் மனமும் சுவையும் சொல்லொண்ணா களைப்பை போக்கும் வகையில் இருந்தது. நேத்ரா எப்போதும் விரும்பி பருகுவது காபியை தான்... அதிலும் களைப்பும் கோபமுமான நேரங்களில் அவளுக்குக் காபி ரொம்பவே அவசியம். ஆனால் மாலை இவள் விடுதி திரும்பும் நேரத்திற்குள் அவை தீர்ந்து விட்டு இருக்கும்... சனி ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் மட்டுமே இந்த மாலை வேலை காபி அவளுக்குக் கிடைக்கும்.. இன்று அவளுக்குப் பிடித்த பதத்தில் கலந்திருந்ததைக் கண்களை மூடி ரசித்துப் பருகி கொண்டிருந்தவளை அருகில் அமர்ந்து காபியோடு சேர்த்து அவளையும் கண்களால் பருகிக் கொண்டிருந்தான் சஞ்சய்.
 
 
அவள் அதைப் பருகி முடிப்பதற்காகவே காத்திருந்தவன், வீட்டை சுற்றி காண்பிக்க அழைத்துச் செல்ல... அந்த வீட்டின் அழகில் மயங்கி மறுப்பேதும் சொல்லாமல் உடன் சென்றாள் நேத்ரா.
தரை தளத்தில் வரவேற்பறை, அணைத்து வசதிகளையும் கொண்ட நவீன சமையலறை, ஒரு சிறிய படுக்கையறை, அதன் அருகே ஒரு அலுவலக அறை, அதன் ஒரு பக்கம் முழுவதும் அடைத்துக் கொண்டு புத்தக அலமாரி, அதில் விதவிதமான ரசனையோடு புத்தகங்கள்... என்று கண்ணைக் கவர்வது போல அமைந்து இருந்தது.
 
 
அடுத்து மேல் தளத்திலும் ஒரு வரவேற்பறை, இரு பெரிய படுக்கையறைகள் அதே போல அழகியலோடு வடிவமைக்கப்பட்ட ஒவ்வொரு சிறு இடமும் எனக் கண்ணைக் கவர்ந்தது. அனைத்தையும் ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவளை அருகில் இருந்த அறைக்குள் அழைத்துச் சென்றான் சஞ்சய்.
 
 
அங்கு அனைத்தும் கருப்பும் வெள்ளையும் கலந்து அலங்கரிக்கப்பட்டுக் கண்ணைப் பறித்தது. இது நேத்ராவுக்கு மிகவும் பிடித்த நிறம் அவளின் ஆசையும் இப்படி ஒரு அறை தன் வீட்டில் தனக்கு வேண்டும் என்பதே...! அதைக் கண் முன் கண்டவள் ஒவ்வொரு சிறு பொருளையும் ஆர்வமாகப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.
 
 
“இது தான் நம்ம ரூம்...” என்ற சஞ்சயின் வார்த்தை காதில் விழுந்த நொடி அதுவரை அவளைச் சூழ்ந்திருந்த மாயவலை அறுப்பட... அதிர்ந்து திரும்பியவள் அவனின் வார்த்தையை மறுத்து கூறி கீழே பார்த்த சிறிய அறையைத் தான் உபயோகப்படுத்திக் கொள்வதாகக் கூற எண்ணி மறுப்போடு வாயை திறக்க இருந்த நொடி...
 
 
“உனக்கு நான் வாய்ப்பு தர தயார்... ஆனால் அது ரூமை மாத்த இல்லை... உன் மனசை மாத்திக்க... நான் இன்னைக்குப் பேட்டியில் சொன்னது போல என்னைப் பொறுத்தவரை இது முழுக்க முழுக்கக் காதல் கல்யாணம் தான்... சீக்கிரம் இந்த வாழ்க்கைக்குத் தயாராகப் பாரு... இல்ல முடியாதுன்னு சீன் கிரியேட் செஞ்சு வேற ரூம் போக நினைச்சா இன்னைக்கே நீ என் பொண்டாட்டியா முழுசா மாறி இருப்பே பாத்துக்கோ...” என்றவனின் குரலில் இருந்த பாவத்தைக் கண்டு உள்ளுக்குள் ஒரு பயம் எழ,
இன்றே இதை மறுத்து பேசி நிலைமையை விபரீதமாக்கிக் கொள்ள விரும்பாத நேத்ரா, அவன் கொடுத்திருக்கும் அவகாசத்தைப் பயன்படுத்தி மெல்ல மெல்ல இந்தச் சிக்கலில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள நினைத்து அமைதி காத்தாள்.
 
 
அவளின் மனதை அறியாதவனா அந்தக் காவ(த)லன் அந்த அவகாசத்துக்குள் எப்படி அவளைத் தன்னவளாக மாற்றிக் கொள்வது என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தான் அவன்.
 
 
மீண்டும் அவளை அழைத்துக் கொண்டு கீழே வந்தவன், “டின்னர் நீ செய்யறீயா...? இல்லை நான் செய்யட்டுமா...?” எனவும் அவனைத் திகைப்போடு பார்த்தவள், “எனக்கு வராது...” என்றிருந்தாள்.
 
 
அதில் அவளைக் கேள்வியாகப் பார்த்தவன் உள்ளே சென்று சமையலை துவங்க... அங்கேயே அமர்ந்தவள் அருகில் இருந்த பத்திரிக்கையை எடுத்து புரட்ட துவங்கினாள். நேத்ராவின் அருகாமை வேண்டி மனம் தவிக்கத் தொடங்கியதில், “நீரு கொஞ்சம் இதை வாஷ் செஞ்சு கொடேன்...” என்று குரல் கொடுத்தவனுக்கு மீண்டும் “எனக்கு வராது..” என்றே அங்கிருந்து பதில் வந்தது.
 
 
அதில் செய்துக் கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு அவளைத் திரும்பி பார்த்தவன், கால் மேல் கால் போட்டு அமர்ந்து பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தவளை கண்டு ‘எனக்கு ஒரு வேலையும் தெரியாதுன்னு எவ்வளவு ஸ்டைலா சொல்லுது பார்த்தீயா பயபுள்ள...’ என்று முணுமுணுத்துக் கொண்டே வேலையைக் கவனிக்கத் தொடங்கினான்.
 
 
இன்றே திருமணம் முடிந்திருந்ததால் பால் பாயாசம் செய்து இனிப்போடு சமையலை முடித்திருந்தவன், அவளைச் சாப்பிட அழைக்க... சஞ்சய் உணவு மேசையில் அனைத்தையும் கொண்டு வந்து வைப்பதை பார்த்தவாறே இதில் கூட அவனுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் கொஞ்சமும் இல்லாமல் அமர்ந்திருந்தவளின் பார்வை மட்டும் அவ்வபோது அந்தத் தரையில் அமர்ந்து உண்ணும் மேசையைத் தொட்டு தொட்டு மீண்டது.
 
 
எந்த வேலை செய்துக் கொண்டு இருந்தாலும் அவளின் மேலும் ஒரு கண்ணை வைத்திருந்தவனுக்கு நேத்ராவின் ஆசை புரியவும், அங்கேயே அனைத்தையும் இடம் மாற்றி வைத்து அவளைச் சாப்பிட அழைத்தான்.
 
 
முதலில் பாயசத்தைப் பரிமாறி சாப்பிட செய்தவன், அடுத்து சூடாகச் சாதம் போட்டு நெய் விட்டுக் கடைந்த பருப்பை ஊற்றி, அவள் கை வைக்கப் போவதற்குள் “ஹே சூடு இரு..” என அவளின் கைகளைப் பற்றித் தடுத்து அவனே பிசைந்தும் வைத்தான்.
 
 
பின் இப்போது சாப்பிடு என்பது போலத் தலையசைத்தவனைக் கண்டு சிறு தலையசைப்போடு சாப்பிட தொடங்கியவளின் நினைவு முழவதையும் ஆக்கிரமித்து இருந்தது அவளின் அம்மா திலகா தான். நேத்ராவுக்கு இப்படிச் சுடு சாதத்தில் பருப்பும் நெய்யும் விட்டு சாப்பிடுவது என்றால் கொள்ளை விருப்பம்.
 
 
அதனால் போட்டதுமே கை வைக்கப் போபவளை தடுத்து தானே பிசைந்து ஊட்டுவார். கிட்டத்தட்ட பல வருடங்களுக்குப் பிறகு அதே போல ஓரு சாப்பாடும் அதட்டலும் அவளின் மனதை வெகுவாக அசைத்துப் பார்த்திருந்தது.
 
 
அதன் பிறகு சஞ்சய் பரிமாறிய அவரைக்காய் சாம்பாரோ கத்தரிக்காய் மிளகு பிரட்டலோ எதுவுமே அவளின் கவனத்தில் பதியவில்லை. ஆனால் உணவின் ருசி மட்டும் அவளையும் அறியாமலே வழக்கத்தை விடச் சற்று அதிகமாகவே சாப்பிட வைத்திருந்தது.
 
 
சூடான சாதத்தில் சஞ்சயின் கைப்பக்குவத்தில் தயாராகி இருந்த தக்காளி ரசம் தேவாமிர்தமாக இருக்க... துளியும் வீணாக்காமல் சாப்பிட்டு முடித்திருந்தாள். அதன் பிறகும் அதை எடுத்து வைக்கவோ ஒழுங்கு செய்யவோ எந்த உதவியும் செய்யாமல் இருந்தவளை ஒரு பார்வை பார்த்தவன், “நீரு கொஞ்சம் இதைக் கிளீன் செய்ய ஹெல்ப் செய்...” எனவும் மீண்டும் “எனக்கு வராது...” என்ற பதிலையே கொடுத்திருந்தாள்.
 
 
அதில் வேகமாக அவளை நெருங்கிய சஞ்சய், “வராது... வராது இல்ல... தெரியாதுன்னு பேசி பழகு... இவ்வளவு நாள் தெரியலைனாலும் பரவாயில்லை இனி தெரிஞ்சிக்க... இத்தனை நாள் அதுக்கான அவசியம் வரலை... ஹாஸ்டலில் அதுக்கான தேவையும் இல்ல, ஆனா இங்கே அப்படி இல்ல... உனக்கு உன் வேலையைச் செஞ்சிக்கத் தெரியணும், உன் சாப்பாட்டைச் சமைச்சிக்கத் தெரியணும்... எல்லா நேரமும் நானே சமைச்சு கொடுக்க முடியாது, புரியுதா..?!” என அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டு மீண்டும் சமையலறைக்குள் சென்றுவிட்டான்.
 
 
‘ஒருவேலை சாப்பாட்டை போட்டுட்டு ரொம்பத் தான் அதிகாரம் செய்யறான்... போடா என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும்...’ என மனதில் வீம்பாக எண்ணிக் கொண்டவளுக்குச் சற்று முன் குளிர்சாதன பெட்டியில் பார்த்த பிரட்டும் ஜாமும் நினைவு வர, நாளை காலை அதைச் சாப்பிடுவது என்ற முடிவுக்கு வந்தாள். (அப்போவும் மேடமுக்கு சமையல் கத்துக்க எல்லாம் தோணவே இல்லை)
ஒரு வழியாக வீட்டை எல்லாம் பூட்டிக் கொண்டு வந்தவன் அவளையும் உறங்க அழைக்க... மனம் மாற அவகாசம் தருவதாகச் சஞ்சய் கூறி இருந்த தைரியத்தில் எந்தப் பயமும் இல்லாமல் உடன் சென்றாள்.
 
 
அங்கிருந்ததோ ஒரே படுக்கை தான் என்பதால் இருவருமே அதைத் தான் பகிர்ந்துக்க வேண்டிய நிலை... வேறு ஏதாவது வழி இருக்கிறதா எனச் சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு ஒற்றைச் சோபாக்கள் மட்டுமே வட்ட வடிவில் போடப்பட்டு இருப்பது தெரிய வேறு எதுவும் புலப்படவில்லை. இப்போது நேத்ராவின் பார்வை தயக்கத்தோடு படுக்கையைப் பார்க்க... திரும்பி பார்க்காமலே அவளின் பார்வையை உணர்ந்தவன்,
 
 
“சில நேரங்களில் ஆரம்பத்தில் எதுவுமே ஒரு தயக்கத்தைக் கொடுக்கத் தான் செய்யும்... ஆனா அதுக்குப் பழகிக்கறது தான் நல்லதுனா அந்தத் தயக்கத்தை உடைக்கறதில் தவறே இல்லை...” என்று இவளை திரும்பியும் பாராமலே தன் பக்க தலையணையைத் தட்டி போட்டவன் இரண்டு கைகளையும் தூக்கி சோம்பல் முறித்துவிட்டு சாய்ந்து படுத்துக் கண் மூடிக் கொண்டான்.
 
 
அவனின் அந்தச் செய்கை சற்றுத் தைரியத்தைத் தர, மெல்ல மற்றொரு பக்கம் வந்தவள் தயக்கத்தோடு படுக்கையில் அமர்ந்து விட்டு சஞ்சய்யை பார்க்க... அவன் மூடிய விழியைத் திறக்கவும் இல்லை, இவளை திரும்பி பார்க்கவுமில்லை. அதில் ஒரு நிம்மதி பெருமூச்சை வெளியிட்டவள், படுக்கையில் சரிந்த அடுத்த நொடி சஞ்சயின் கரங்களில் இருந்தாள்.
 
 
இதைக் கொஞ்சமும் எதிர்ப்பார்க்காதவள் இவன் எப்போது இந்தப் பக்கம் வந்தான் எப்படி என்னைக் கைகளில் தாங்கினான் எனப் புரியாமல் திகைத்து விழிக்க... அவளைத் தன் கரங்களில் கொண்டு வந்திருந்தவன் குனிந்து அவள் விழிகளையே இமைக்காமல் பார்த்ததில் அவளோ பயத்திலும் படபடப்பிலும் உறைந்திருந்தாள்.
 
 
மெல்ல மெல்ல தன் பார்வையைக் கீழ் இறக்கியவனின் பார்வை, அவளின் நடுங்கும் இதழ்களில் வந்து நிலைத்தது. சஞ்சயின் பார்வை சென்ற இடத்தைக் கண்டு எழுந்த பதட்டத்தில் அவனிடமிருந்து விலக நேத்ரா எடுத்த முயற்சிகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீரானது.
 
 
கொஞ்சம் கொஞ்சமாக அவளின் முகத்தை நோக்கி குனிந்தவன், அந்தத் துடித்துக் கொண்டிருந்த இதழ்களுக்கு ஆதரவளித்திருந்தான். இதில் மேலும் திகைத்து நேத்ரா விடுபடப் போராட, அவனோ அவளைத் தன் கைவளைவில் இருந்து அசைய கூட அனுமதிக்கவில்லை.
 
 
வெகு நேரம் தொடர்ந்த ஆதரவு படலத்திற்குப் பிறகு, அவளிடம் இருந்து விலகியவனைக் கண்களில் கனலோடு அவள் பார்த்திருக்க... அவனோ மீண்டும் ஒரு ரசனையான பார்வையால் அவளின் இதழை வருடியபடியே... “இது நம்ம கல்யாணம் முடிஞ்சதை கொண்டாட குல்பி... மத்தப்படி நான் ரொம்ப நல்ல பிள்ளை, உனக்குக் கொடுத்த அவகாசம் கொடுத்தது தான்...” என்றாவறே அவளிடம் இருந்து விலகி படுத்தவன், “ஆனா ரொம்ப நாள் எல்லாம் அவகாசம் எடுத்துக்காதே குல்பி... அப்பறம் மாமன் வேற எதையாவது கொண்டாட காரணம் தேட வேண்டியதா இருக்கும்...” என்று விட்டு திரும்பி படுத்துக் கொண்டவனின் முதுகை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் நேத்ரா.

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 311
Topic starter  

ஹாய் பிரெண்ட்ஸ்..

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

KMKN - 10

https://kavichandranovels.com/community/topicid/628/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 

கவி சந்திரா 

This post was modified 7 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 311
Topic starter  
கனவு – 11
 
 
சஞ்சய்யின் திடீர் செய்கையில் செய்வதறியாது திகைத்து அமர்ந்திருந்தவள், அவனின் முதுகையே வெறித்துக் கொண்டு இருந்தாள். ‘எத்தனை தைரியம் திமிர் என்கிட்ட இப்படி நடந்துக்க...?’ என வேகவேகமாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு ஆற்றாமையோடு அமர்ந்திருந்தவளுக்கு இப்படி ஒன்று நிகழ்ந்ததாகக் கூட அலட்டிக் கொள்ளாமல் திரும்பி படுத்து உறங்க துவங்கியிருந்தவனைப் பார்க்க பார்க்க ஆத்திரம் பொங்கியது.
 
 
எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ, அவனிடம் ஒரு அசைவும் தெரியவில்லை என்றான பிறகு, தன் நிலையைக் குறித்தே எழுந்த துயரில் கண்களை மூடி படுத்துக் கொண்டவளுக்கு உறக்கம் என்பது வரும் வழி தெரியவில்லை.
 
 
அவளுக்குக் கொஞ்சமும் குறையாத துயரத்தில் உறக்கமின்றித் தான் இருந்தான் சஞ்சையும், ஆனால் துயரத்தின் காரணம் தான் வேறு. தன் அறையில் தன் அருகில் தன் மனதிற்கினியவள், ஆனால் அவளோடு இயல்பாக வாழ முடியாத சூழல், அதிலும் சற்று நேரத்திற்கு முன் நிகழ்ந்த இதழொற்றல் அவனைப் பித்துக் கொள்ளச் செய்திருக்க... அவளிடம் இருந்து விலகி இருக்க முடியாமல் உறக்கமில்லாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
 
 
இதற்கு மேலும் அவளருகில் இருப்பது சரி வராது என்று தோன்ற நேத்ராவின் உறக்கம் கலையாமல் எழுந்து பால்கனி கதவை திறந்துக் கொண்டு சென்று நின்றான்.
 
 
அவன் எழுந்துக் கொள்ளும் போதே சிறு திடுக்கிடலோடு லேசாக விழிகளைத் திறந்து அவனைப் பார்த்திருந்தவள், சஞ்சய் தன் பக்கம் வராமல் பால்கனியை நோக்கி செல்வதைக் கண்டு நிம்மதி பெருமூச்சை வெளியிட்டவள், அதன் பின் உறங்க கூடத் தோன்றாமல் ஒரு பதட்டத்தோடே அவன் சென்ற திசையையே பார்த்தப்படி படுத்திருந்தாள்.
 
 
தன் மன உணர்வுகளோடு போராடியவாறே நடையால் பால்கனியை அளந்துக் கொண்டிருந்தவன், கொஞ்சம் கொஞ்சமாக அந்த இளங்காற்றின் உபயத்தால் தன்னையே கட்டுக்குள் கொண்டு வந்து உடனே உள்ளே செல்ல விரும்பாமல் இருளை வெறித்துக் கொண்டு நின்றிருந்தான்.
 
 
சற்று நேரத்தில் திடீரெனத் தோன்றிய பரபரப்போடு அறைக்குள் நுழைந்து நேத்ராவை நெருங்கி எழுப்ப முயன்றவன், அவள் தன்னைக் கண்டதும் பதறி எழ முயல்வதைக் கண்டு, அந்த நிலையிலும் அவளின் பதட்டம் புரிந்தாலும் வார்த்தையேதுமின்றி அவளின் கைகளைப் பற்றி இழுத்துக் கொண்டு ஓடினான்.
 
 
என்ன எது என்று புரியாமல் “லீவ் மீ... லீவ் மீ...” எனக் கத்திக் கொண்டே கைகளை அவனிடமிருந்து விடுவிக்க முயன்றவாறே அவன் இழுத்த இழுப்புக்கு சென்றுக் கொண்டிருந்தாள் நேத்ரா. நேராக வெளிக்கதவை திறந்துக் கொண்டு சாலையைக் கடந்து இருளில் மூழ்கியிருந்த எதிர் வீட்டு வாயிலில் சென்று நின்றவன். பரபரப்பாக அந்த வீட்டை சுற்றி பார்வையை ஒட்டிக் கொண்டே, “நீரு அட் எனி காஸ்ட்... நான் வர வரை இங்கேயே நில்லு...” என்று கூறிக் கொண்டே சட்டென அந்தப் பெரிய இரும்பு கேட்டை தாவி ஏறி மதில் சுவர் மேல் குதித்து அங்கிருந்த தூணைப் பற்றிக் கொண்டு மேலேறி பால்கனிக்குள் குதித்தான்.
 
 
‘பைத்தியமா இவன்...!!’ என்பது போல நடு இரவில் உறங்கிக் கொண்டு இருந்தவளை இழுத்து வந்து இப்படித் தெருவில் நிறுத்திவிட்டு அடுத்தவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைபவனைப் பார்த்திருந்தவள், ‘இதில் இவன் வர வரைக்கும் நான் இங்கேயே இருக்கணுமாம்...!!!’ என மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தாள்.
 
 
‘இவன் நிஜமாவே போலீஸ்ஸா...?! இல்ல திருடனா...?!’ என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே மேலே இருந்து ஒரு பெண் அழுது அலறலும் குரல் கேட்கவும் தான் நின்றிருந்த இடத்தில் இருந்து மெல்ல பின்னால் நகர்ந்து சஞ்சய் எகிறி குதித்த பால்கனியில் எதுவும் தெரிகிறதா எனப் பார்க்க... அதே நேரம் அந்த வீட்டின் வாசற்கதவை திறந்து வெளியே வந்த சஞ்சய், “நிரு பாலோ மீ கியூக்....” என நின்று கூடச் சொல்லாமல் வேகமாகச் சொல்லிக் கொண்டே இரண்டு இரண்டு படிகளாகத் தாவி ஏறி ஓடினான்.
 
 
அதில் தொற்றிக் கொண்ட பதற்றத்தோடு சஞ்சயின் பின்னாலேயே வேகமாக ஓடியவள், மேலே இருந்த அந்த அறைக்குள்ளே ஒரு பெண் தரையில் அமர்ந்தவாக்கில் ஒற்றைச் சோபாவில் தலை கவிழ்ந்து அழுது கொண்டிருக்க... அவளுக்குச் சற்று தள்ளி சஞ்சய் இடுப்பில் கை வைத்து ஆழ மூச்செடுத்துத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டிருப்பது தெரிந்தது.
 
 
அங்கிருந்த சூழல் ஏதோ சரி இல்லை என்பதை உணர்த்த... மெல்ல பார்வையைச் சுழற்றியவள், மேலே தொங்கிக் கொண்டிருந்த துப்பட்டாவை கண்டு திடுக்கிட்டாள். நொடியில் நடந்தது என்ன என்று விளங்கவும், அந்தப் பெண்ணின் பக்கம் பார்வையைத் திருப்ப, சஞ்சய் அப்பெண்ணுக்கு அருந்த தண்ணீர் கொடுத்துக் கொண்டு இருப்பது தெரிந்தது.
 
 
அழுது அழுது கலைத்து இருந்தவளுக்கு அது தேவையாக இருந்ததோ என்னவோ...?!! வேகமாக அதைத் தொண்டைக்குள் சரித்துக் கொண்டாள். அதுவே அவளுக்கு மேலும் நீர் தேவைப்படும் என்பதைத் தெளிவாக்க... சஞ்சய் எழுவதற்குள் அங்கிருந்த தண்ணீர் ஜக்கை அவன் முன் நீட்டி இருந்தாள் நேத்ரா.
 
 
சஞ்சய் அதை வாங்குவதற்குள் வேகமாக வாங்கி மொத்தமாக மேலே எல்லாம் கொட்டிக் கொண்டு குடித்து முடித்தவள், அதை அருகில் வைத்தவாறே “என்னை ஏன் காப்பாத்துனீங்க...? ஏன்...?” என ஓய்ந்துப் போன தோற்றத்தில் அழுகை மீண்டும் தொடங்கியிருந்த குரலில் கேட்டாள்.
 
 
“ஏன் இப்படி மிஸஸ் ஆஷா...?”
 
 
“எனக்கு வாழவே பிடிக்கலை...”
 
 
“அப்படி என்ன நடந்தது...? எனக்குத் தெரிந்து நீங்க போல்ட்... ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க...?”
“வேற என்ன செய்யச் சொல்றீங்க...?” என ஆத்திரமும் ஆற்றமையுமாகக் கேட்டவளுக்கு என்ன பதிலளிப்பது என்றும் இவர்களுக்குத் தெரியவில்லை, என்ன பிரச்சனை என்றும் தெரியவில்லை...
“என்ன பிரெச்சனை...?” என்றவன், ஏதோ தோன்ற... “உங்க ஹஸ்பண்ட் எங்கே...?” எனவும், பெரும் குரலெடுத்து “அவர்... அவர் தான் போயிட்டாரே... அவ தான் வேணும்னு போயிட்டாரே...” எனத் தலையில் அடித்துக் கொண்டு அழ தொடங்கினாள்.
 
 
இதை ஓரளவு இதற்குள் ஊகித்தே இருந்தான் சஞ்சய். “யார் கூட...?” என அப்பெண்ணையே கூர்மையாகப் பார்த்தவாறே கேட்கவும், “எ.. ன்... எ.. ன்... தங்... கை... யோ... ட...” என்று இன்னும் அதிகமாகக் கதறியவளின் நிலையைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.
 
 
எந்த அளவு இது அவரின் மனதை பாதித்து இருக்கிறது எனத் தெளிவாக இவர்களுக்குப் புரிந்தது. “எவ்வளவு நம்பினேன் இவங்களை... எனக்கு... எனக்கு... போய்த் துரோகம் செய்ய எப்படி மனசு வந்தது... நான்... நான்... என்ன தப்பு செஞ்சேன்...?” என இன்னும் அதிகமாக அழுது புலம்பத் தொடங்கி இருந்தவளை எப்படித் தேற்றுவது எனப் புரியாமல் சஞ்சய் திகைத்துப் பார்த்திருக்க... அப்பெண்ணின் அருகில் மண்டியிட்டு அமர்ந்த நேத்ரா, தோளோடு அணைத்துப் பிடித்துத் தேற்ற தொடங்கி இருந்தாள்.
 
 
சமாதானம் செய்தவாறே கொஞ்சம் கொஞ்சமாக விஷயத்தை வாங்கி இருந்தாள் நேத்ரா. ஆஷாவின் கணவன் நல்ல வசதியானவன், இருவரும் காதல் திருமணம். ரொம்பச் சந்தோஷமாகவே சென்றுக் கொண்டிருந்தது அவர்களின் வாழ்க்கை. ஐந்து வயதில் ஒரு மகனும் உண்டு அதற்குச் சாட்சியாக...
அந்தச் சமயத்தில் தான் ஆஷாவின் தங்கை இங்குள்ள கல்லூரியில் தங்கி படிக்க வந்து சேர்ந்தாள். இவர்கள் இருவருக்கும் இடையில் எட்டு வருட வித்தியாசம். முன்பு போல இல்லாமல் குழந்தை பிறந்த பிறகு உடல் எடை அதிகமாகி சரிவரத் தன்னைக் கவனித்து அலங்கரித்துக் கொள்ளாத ஆஷாவை விட...
 
 
பதினெட்டு வயதில் கச்சிதமான உடல்வாகுடன் எப்போதும் தன்னை அலங்கரித்துக் கொண்டு வலம் வரும் ஆர்த்தியின் மேல் பிரகாஷின் பார்வை திரும்பியது. வீட்டை கவனிப்பது, கணவனின் தேவைகளைப் பார்த்து பார்த்துச் செய்வது குழந்தையே உலகம் என இருந்த ஆஷாவிற்கு இவை கொஞ்சமும் தெரிய வராமலே போனது... அவ்வளவு நம்பிக்கை அவர்கள் மேல்.
 
 
தன் குடும்பத்தைப் பற்றி மட்டுமே யோசித்த ஆஷாவுக்குத் தன் கணவனையும் தங்கையையும் சந்தேகிக்கவோ கண்காணிக்கவோ தோன்றவில்லை. ஆனால் இவள் அறியாமலே இருவரும் இதே வீட்டிலேயே தங்கள் லீலைகளை வருட கணக்காகத் தொடர்ந்து கொண்டிருந்தனர்.
 
 
சமீபத்தில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனை அழைத்துச் சென்றிருந்த ஆஷா, கணவனை உதவிக்கு அழைக்க... அவனோ முக்கிய வேளையில் இருப்பதாகக் கூறி வர வாய்ப்பில்லை என்று கூறவும், எப்படிச் சமாளிப்பது என்ற யோசனையிலேயே அப்படியே திகைத்து நின்றிருந்தவளுக்கு அந்தப் பக்கம் இருந்து, “இது தான் உங்க முக்கியமான வேலையா...?” எனக் கொஞ்சும் ஆர்த்தியின் குரல், எப்போதும் போல் ஆஷா அலைபேசியை அணைத்திருப்பாள் என்று அப்படியே படுக்கைக்கு அருகில் இருந்த இருக்கையில் விட்டெரியப்பட்டிருந்த அலைபேசியின் வழியே கேட்டதில் அதிர்ந்து நின்றவள், உடனே குழந்தையோடு வீட்டிற்குக் கிளம்பினாள்.
 
 
தன்னிடம் இருந்த சாவியின் மூலம் திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தவள், தங்கையின் படுக்கையறையில் இருவரும் இருந்த நிலையைக் கண்டு ஆத்திரத்தோடு தங்கையை அறைய, அதில் கோபம் கொண்டு ஆஷாவை அடி வெளுத்துவிட்டான் பிரகாஷ்.
 
 
அன்றே ஆர்த்தி தான் தனக்கு முக்கியம் என்று கூறி அவளோடு வீட்டை விட்டும் வெளியேறியும் விட்டான். ஒரே நாளில் நிகழ்ந்த அதிர்ச்சிக்கு மேலே அதிர்ச்சியினால் நிலைகுலைந்து போனவள், பிறகு குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு அவனுக்கு மருத்துவம் பார்த்து எல்லாம் சரி ஆகும் வரை பிரகாஷ் திரும்ப வரவே இல்லை.
 
 
ஒரு மாதம் ஆகியும் அவன் வராமல் போகவே, விஷயத்தைத் தன் பெற்றோரிடம் ஆஷா கொண்டு செல்ல... அவர்களோ நடந்தது நடந்துவிட்டது இனி என்ன செய்ய முடியும் நீ தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சிக்கணும் என்று கூறி ஒதுங்கிக் கொண்டனர்.
 
 
வசதியான மாப்பிளையோடு தன் இன்னொரு மகளின் வாழ்க்கை பைசா செலவில்லாமல் அமைவது தான் அவர்களுக்குப் பெரிதாகத் தெரிந்தது போலும்... இதே வேறு பெண் அந்த இடத்தில் இருந்திருந்தால் தன் பெண்ணின் வாழ்க்கைக்காகப் போராடி இருப்பார்களோ என்னவோ...?! இப்போது சண்டையிட்டாலும் கொஞ்ச நாளில் நிலைமையைப் புரிந்து ஆஷா வாழ பழகிக் கொள்வாள் என்று எண்ணிவிட்டனர் அவர்கள்.
 
 
ஆனால் ஆஷாவால் அப்படி ஒரு வாழ்வை எப்போதும் வாழ முடியாது. தன் காதல் உண்மை அது தன் கணவனைத் தன்னிடம் கொண்டு வந்து சேர்க்கும் என்று திடமான நம்பிக்கை இருந்தது. அதே போல இன்று காலை பிரகாஷும் அவளைத் தேடி வந்தான்.
 
 
ஆனால் காதலோடு இல்லை... விவாகரத்து பத்திரத்தோடு, அதில் கையெழுத்துப் போடுமாறு மிரட்ட... அவளோ அறவே அதை மறுத்துவிட்டாள். உடனே குழந்தையைத் தூக்கிக் கொண்டு சென்றவன், அவள் பத்திரத்தில் கையெழுத்திட்டால் தான் குழந்தை திரும்பக் கிடைக்கும் என்று மிரட்டிவிட்டுச் சென்றதில் மொத்தமாக உடைந்து போனாள் ஆஷா.
 
 
என் மேல தான் காதலோ அக்கறையோ இல்லை என்றால் குழந்தையின் மேல் கூடவா ஒரு துளி பாசமும் இல்லாமல் போனது. எப்படி ஒரு காலத்தில் கொஞ்சி கொண்டாடுவான் இந்தப் பிள்ளையை என்று எண்ணி பார்த்தவளுக்கு அப்போதே ஒரு வருடமாகவே அவன் குழந்தையிடம் கூட அதிக நெருக்கம் காட்டாதது நினைவு வந்தது.
 
 
அவனில்லாமல் வாழ்வது நரகம், அதிலும் விவாகரத்து எல்லாம் கொடுக்கும் அளவு அவளுக்கு மனதில் தெம்பு இல்லை... தளும்பத் தளும்ப அவன் மேல் காதல் தான் இருந்தது. இத்தனை வருடங்களாகத் தன் கண் முன்னேயே முட்டாளடிக்கப்பட்டிருக்கிறோம் என்ற நினைவே அவளைத் தினம் தினம் கொன்று கொண்டிருக்க.... இப்படி ஒரு நிலையில் அனைவருக்கும் தடையாக இருப்பதை விட இல்லாமல் போவதே மேல் அப்போது தான் குழந்தையும் தந்தையோடு வளருவான்... என்று எண்ணியே இப்படி ஒரு முடிவுக்கு வந்தாள்.
 
 
அனைத்தையும் கேட்டு முடித்த இருவரும், “இதுல நீங்க ஏன் சாகணும்...?” என ஒரே நேரத்தில் ஒரே கேள்வியையே கேட்டிருந்தனர். அதில் சட்டெனத் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் மீண்டும் தங்கள் கவனத்தை ஆஷாவிடம் திருப்பினர்.
 
 
“வேற என்ன செய்யறது... இத்தனை நாள் அவருக்காகத் தான் காத்திருந்தேன்... என் உண்மையான அன்பு புரிந்து காதல் புரிந்து என்னைத் தேடி வருவாருன்னு... ஆனா இன்னைக்கு வந்தவரு...” என்று அதற்கு மேல் பேச முடியாமல் தேம்பியவளை பார்த்து, “உங்களை வேணான்னு சொன்னவரு தான் உங்களுக்கு வேணுமா...?” என்றான் சஞ்சய்.
 
 
“அவர் காதல் எப்படிப்பட்டதோ...?! ஆனா என் காதல் நிஜம்... அவர் இல்லாம என்னால் வாழவே முடியாது...” என்று தேம்பினாள் ஆஷா. அவளையே சற்று நேரம் பார்த்திருந்தவன், “உங்களுக்கு என்ன பிடிக்கும் காபியா...? டீயா...?” எனவும் “எனக்கு எதுவும் வேண்டாம்...” என்றிருந்தாள் வேதனையோடு ஆஷா.
 
 
“இல்லை உங்களை இப்போ சாப்பிட சொல்லலை... என் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க... என்ன பிடிக்கும்...?” என்றவனை, ‘இவன் என்ன லூசா...?’ என்பது போல நேத்ரா பார்த்துக் கொண்டிருக்க... ஆஷாவோ கேள்வியாக நிமிர்ந்து பார்த்தவள், “காபி” என்றிருந்தாள் மெல்லிய குரலில்.
 
 
“உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச காபியை உங்களுக்குப் பிடித்த பதத்தில் பார்த்து பார்த்து கலந்து ரசிச்சு ருசிச்சு குடிச்சிட்டு இருக்கும் போது திடீரென நெருங்கிய ஒருவருக்கு உடல்நிலை சரியில்லைனு தகவல் வந்து அவசரமா கிளம்பி போறீங்க... அங்கே இருக்கச் சூழ்நிலையால் உங்களால் ஒரு வாரம் கூடவே இருந்தாக வேண்டிய கட்டாயம்... ஒரு வாரத்திற்குப் பிறகே வீடு திரும்பறீங்க, அப்போ நீங்க பாதியில் விட்டுட்டு போன காபி அதே இடத்தில் தான் இருக்கும்... ஆசையா மறுபடியும் அதை எடுத்து குடிப்பீங்களா...?” என்று கேட்டதும், அஷ்ட கோணலாக மாறிய முகத்தோடு ஆஷா “உவ்வாக்... ச்சீ...” என்றாள்.
 
 
“ஏன் என்னாச்சு மிஸஸ் ஆஷா.. உங்களுக்குப் பிடிச்ச அதே காபி... நீங்க பார்த்து பார்த்து கலந்த அதே காபி தான்...” எனப் புரியாமல் கேட்கும் பாவனையோடு சஞ்சய் கேட்கவும், “அய்யே... அதுக்காக இதைப் போய்ச் சாப்பிடுவாங்களா... வேணும்னா நான் வேற காபி கலந்துக்குவேன்...” என்றாள் தெளிவாக.
 
 
“ம்ஹும்... எக்ஸாட்லி... தேவைபட்டா... தேவைபட்டா வேற காபி கலந்துக்கலாம், அப்போ அந்தப் பழைய காபி அது தான் உங்க கணவர்...” என்று ஆழ்ந்த குரலில் கூறியவனைத் திகைத்துப் போய்ப் பார்த்தவள், ஏதோ சொல்ல வந்து பின் நிறுத்தி யோசனையோடு சஞ்சய்யை பார்த்தாள். “என்ன சொல்ல வந்தீங்க... சொல்லுங்க...” என்று சஞ்சய் ஊக்கியும், ஒன்றுமில்லை என்ற தலையசைப்போடு தலை குனிந்து அமர்ந்திருந்தவளுக்கு “இத்தனை நாள் உங்களுக்குத் துரோகம் செஞ்சவர் திரும்பி வந்தா நீங்க ஏத்துக்குவீங்கன்னு சொல்றதே ரொம்பப் பெரிய தப்பு... இது போல உண்மையான அன்போடு மனைவிங்க காத்திருக்கறதுனால தான் பல ஆம்பளைங்க கொஞ்சமும் பயமில்லாமல் தப்பு செய்றாங்க... இது போனா அதுனு ஒரு திமிர்... எப்போ போனாலும் ஏத்துக்குவாங்கன்னு ஒரு அலட்சியம்... திரும்ப வந்தா வெளியே தள்ளி கதவை சாத்தினீங்கன்னா ஒரு பயம் வரும்...” என்று சஞ்சய் விளக்கவும், அந்தக் காப்பியோடு ஒப்பிட்டு பார்க்கும் போது பிரகாஷ் இனி அப்படித் தான் என்பது தெளிவாகப் புரிந்தது.
 
 
இப்போது ஆஷாவின் முகத்தில் லேசாகத் தெளிவு வந்திருந்தது. அதன் பின் குழந்தையை மீட்டுக் கொடுப்பது தன் பொறுப்பு என்று புரிய வைத்தவன், “அவர்கள் இருவரையும் அப்படியே எங்கேயாவது சந்தோஷமா வாழுங்கன்னு ஆசிர்வாதம் செஞ்சு விடக் கூடாது... அப்படி நீங்க தியாகியா மாறினா அது இதையெல்லாம் விட மிகப் பெரிய தப்பு... இரண்டு பேர் மேலேயும் கேஸ் கொடுங்க... மனைவிக்குத் துரோகம்... இல்லிகள் ரிலேஷன்ஷிப்... குழந்தையைத் தாயிடம் இருந்து பிரித்தது... நம்பிக்கை துரோகம்... இப்படி லைனா கேஸ் போட்டு ஒரு வழியாக்கிடறேன்...” என்றவனுக்கு முழுமனதாகச் சம்மதித்தாள் ஆஷா.
 
 
அதன் பிறகும் கூட ஆஷாவின் முகம் தெளிவில்லாமல் இருப்பதைக் கண்டு “உங்க ஹஸ்பண்ட் அண்ட் உங்க சிஸ்டர் போட்டோ எதுவும் உங்ககிட்ட இருக்கா...” என்று நேத்ரா கேட்டாள். “ஹ்ம்ம்” எனத் தலையசைத்து தன் அலைபேசியைத் தேடும் போது தான் தன்னை வரவேற்பறைக்கு அழைத்து வந்து சோபாவில் அமர வைத்து இருப்பதே ஆஷாவின் கவனத்தில் பதிந்தது.
 
 
மற்றொருவரின் படுக்கையறையில் வெகு நேரம் இருப்பது சரியில்லை என்று ஆஷாவின் கடந்த காலத்தைக் கேட்டவாறே நேத்ரா தான் அதைச் செய்திருந்தாள். காரணம் புரிந்த ஆஷா ஒரு புன்னகையை நேத்ராவை நோக்கி சிந்தியவள், மீண்டும் அலைபேசியைத் தேட... “இல்லை... புகைப்படமா இருக்கா..?” என்றாள் நேத்ரா.
 
 
அறைக்குள் சென்று தேடி எடுத்து வரவும் அருகில் இருந்த மேசையில் ஆஷாவை அமர வைத்தவள் அங்கிருந்த பேனாவை எடுத்து கொடுத்து, “உங்க மனசில் இருக்கக் கோபம் போகும் வரை இதை வைத்து அவங்க முகத்தில் கிறுக்குங்க...” எனவும் கேள்வியாக நேத்ராவை பார்த்தாள் ஆஷா.
 
 
“சில மாதமா உங்க மனதுக்குள்ளேயே அவங்க மேல் உள்ள கோபத்தையும் உங்க ஏமாற்றத்தையும் பூட்டி வெச்சு இருக்கறது அவ்வளவு நல்லதில்லை... அதுக்கு ஒரு வடிகால் தேவை... இப்படிச் செய்வதின் மூலம் உங்க மன அழுத்தம் கொஞ்சம் குறையும்... முயற்சி செய்யுங்க...” என அழுத்தி நேத்ரா கூறவும், ஏதோ சொல்கிறாளே என்பது போல மெல்ல கிறுக்கத் தொடங்கிய ஆஷா போகப் போகக் கோபமும் வெறுப்புமாக இருவரின் முகம் மட்டுமல்லாமல் அந்தப் படம் முழுவதையும் ஒருவித தீவிரமான முகபாவத்தோடு வேகமாகக் கிறுக்கத் தொடங்கினாள்.
 
 
அதன் பின்பும் ஆஷாவின் வேகம் குறையாமல் இருப்பதைக் கண்டு தீப்பெட்டியை எடுத்து கொடுத்த நேத்ரா, “ஹ்ம்ம்ம்...” என விழியசைக்க... நொடியும் யோசிக்காமல் இரு படங்களையும் தன் கரங்களால் எரிக்கத் தொடங்கியவளுக்குச் சற்று மனதில் இருந்த பாரம் இறங்கியது போலவே இருந்தது.
 
 
“ரொம்பத் தாங்க்ஸ்... எனக்கு நீங்க ஏன் சொல்றீங்கன்னு புரியலை... ஆனா இப்போ நான் பெட்டரா பீல் செய்யறேன்..” என்ற ஆஷாவை கண்டு புரிந்தது என்பது போலத் தலையசைத்தவள், “இது நிஜமாகவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவங்களுக்கு நல்ல பயனை தரும்... இது போல எந்த வடிக்காலும் இல்லாத பட்சத்தில் தான், பாதிக்கப்பட்டவங்க தவறான முடிவுக்குப் போறாங்க... ஒண்ணு அவங்களையே அழிச்சுக்கவோ இல்லை சம்பந்தப்பட்டவங்களை அழிக்கவோ முடிவெடுக்கக் காரணமே அவங்க மேலே இருக்க அந்த வெறுப்பு தான்... இனி நீங்க அந்த இரண்டையும் செய்ய மாட்டீங்க... அவங்க மேல் இருந்த உங்க கோபம் எல்லாம் வெளியே வந்தாச்சு... இனி அவங்க உங்க எதிரிலேயே சந்தோஷமா வாழ்ந்தாலும் அது உங்களைப் பெரிதாகப் பாதிக்காது... உங்க அன்பை பெற அவங்களுக்குத் தகுதி இல்லைன்னு எளிதா கடந்து போய்டுவீங்க... தகுதி இல்லாதவங்களை எண்ணி உங்க குழந்தையோடு அமைய போகும் அழகான வாழ்க்கையை வீணாக்கிக்காம சந்தோஷமா வாழ பாருங்க... இவ்வளவு தூரம் காதலிக்கும் உங்களோடே அவரால் சந்தோஷமா வாழ முடியவில்லை என்றால் வெறும் உடல் கவர்ச்சியினால் சேர்ந்து இருக்கும் உறவு மட்டும் எவ்வளவு நாளைக்கு நிலைக்கும் சொல்லுங்க... விட்டு தள்ளுங்க பிரண்ட், தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர் கொள்ளுங்க... பெண்ணாகப் பிறப்பதும் இருப்பதும் அவ்வளவு சுலபம் இல்லை... நாம அனுமதிக்காதவரை எதுவும் நம்மைப் பாதிக்காது... நாம பாதிக்கவிடவும் கூடாது...” என்று நீளமாகவும் விளக்கமாகவும் பேசியவளை மற்ற இருவரும் வியப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
 
 
அவளின் வார்த்தைகளில் இருந்த நிஜம் புரியவும், தெளிவாக முடிவெடுத்து இதைச் சட்டப்படி கையால சஞ்சயிடம் ஆலோசித்தாள் ஆஷா. அவளுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கிய சஞ்சய் மற்றவற்றைத் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறினான். இதற்கிடையில் ஆஷாவின் பேச்சில் இருந்து காலை குழந்தையைத் தூக்கி சென்றதிலிருந்தே அவள் எதுவும் சாப்பிடவில்லை என்பதை அறிந்து, சூடாகப் பால் காய்ச்சி கொண்டு வந்து கொடுத்தாள் நேத்ரா.
 
 
இப்போது மனதில் ஏற்ப்பட்டிருந்த தெளிவின் காரணமாக மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிப் பருகியவள், இருவருக்கும் மீண்டும் மீண்டும் நன்றி கூறினாள். இனி ஆஷா எந்தத் தவறான முடிவுக்குச் செல்ல வாய்ப்பில்லை என்று புரிந்த போதும் அவளிடம் அதை வார்த்தைகளில் உறுதி வாங்கிக் கொண்டே கிளம்பினர்.
 
 
தங்கள் வீடு வந்து சேரும் வரை இருவருமே மற்றவரை பற்றித் தான் யோசித்துக் கொண்டிருந்தனர். அந்த இரவின் இருளில் ஒரு பெண் தனியாக இருக்கும் வீட்டிற்குச் சுவர் ஏறி செல்வது சரியாக வராது என்று அந்தப் பதட்டத்திலும் அவசரத்திலும் யோசித்துச் செயல்ப்பட்டதோடு அவளுக்குப் புரியும் வகையில் எடுத்து கூறி இனி அவளின் வாழ்க்கை இப்படித் தான் என்று புரிய வைத்தவனின் செயலிலும் பேச்சிலும் தெரிந்த முதிர்ச்சி இதுவரை நேத்ரா சஞ்சயிடம் பார்க்காதது.
 
 
எப்போதும் தன்னை வம்பிழுத்துக் கொண்டும் கோபப்படுத்திக் கொண்டும் இருக்கும் அவனுக்குள் இப்படி ஒரு முகமா என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.
 
 
அதே நேரம் நேத்ரா ஆஷாவை கையாண்ட விதம் சஞ்சய்யை மலைக்கச் செய்திருந்தது. அவனுக்காவது இது போலச் சிலவற்றைக் கையாண்டு பழக்கம் இருக்கிறது என்று கூறலாம், அதிகம் யாரோடும் பேசி கூடப் பாழகாதவளுக்குள் இவ்வளவு முதிர்ச்சியும் தெளிவும் இருப்பதைக் கண்டு ஒரு கணவனாக அவன் மனம் பெருமை கொண்டது.
 
 
அப்போதே கை கால்களைச் சுத்தம் செய்துக் கொண்டு வந்து படுக்க முயன்றவளை திரும்பி பார்த்தவன், “ஏன் குல்பி... என் போட்டோ எதுவும் நீ வெச்சு இருக்கீயா என்ன...?” என யோசனையும், குறும்புமாக முகவாயை தடவியவாறே கேட்டவனை முதலில் புரியாமல் பார்த்தவள், பின் புரிந்து “ஆள் உயரத்துக்குச் செய்யச் சொல்லி இருக்கேன்...” என்றாள் கடுப்போடு.
 
 
“அவ்வளவு பெருசா வா...?! மாமன் மேலே அம்புட்டு லவ்வா குல்பி... மாமன் வீட்டில் இல்லாத போது அது கூட லவ்ஸ் விடத் தானே... நிஜம் நான் இருக்க நிழல் உனக்கெதுக்குப் பேபி..” என்று கூறி கண்சிமிட்டியவனை, எதற்குத் தான் சொன்ன பதிலை எப்படி எடுத்துக் கொண்டு பேசுகிறான் என முறைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் நேத்ரா.
 
 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 311
Topic starter  

ஹாய் பிரெண்ட்ஸ்..

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

KMKN - 11

https://kavichandranovels.com/community/topicid/628/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 

கவி சந்திரா 

This post was modified 2 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 311
Topic starter  
கனவு – 12
 
 
மறுநாள் காலை நேத்ரா கண் விழித்த போதே சஞ்சய் அங்கு இருப்பதற்கான அறிகுறியே இல்லை. விரைவாகவே எழுந்து விடும் பழக்கம் கொண்டவளான அவளுக்கு நேற்று இரவு முழுவதும் விழித்திருந்து விடியும் நேரத்தில் உறங்கியதால் எழ தாமதமாகி இருந்தது.
 
 
சஞ்சய் கிளம்பி போய்விட்டான் என்பதே ஏதோ ஒரு பெரிய நிம்மதியை உணர செய்ய... குளியலைறைக்குள் நுழைய முயன்றவளுக்கு அப்போதே தான் மாற்று உடை கூட எடுக்காமல் அவனின் தொந்தரவு தாங்காமல் இங்கு வந்துவிட்டது நினைவு வந்தது.
 
 
பள்ளிக்கு வேறு நேரமாவதால் இப்போது என்ன செய்வது என்ற யோசனையோடே தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டவளுக்குப் படுக்கைக்கு அருகில் உள்ள சிறு அலங்கார மேசையும் அதன் மேல் இருந்த புத்தம் புதிய சல்வாரும் கண்ணில்பட்டது.
 
 
கண்களில் தாங்கிய கேள்வியோடு எழுந்து சென்று அங்கிருந்தவற்றை எடுத்து பார்த்தவள், மலைத்தே போனாள். அனைத்தும் அவளுக்குத் தேவையனவையாகவே அணிவகுத்திருந்தது.
 
 
நேரம் வேறு கடந்துக் கொண்டிருப்பதைக் கண்டு வேகமாகச் சென்று குளித்து விட்டு அந்த உடை அணிந்து வந்தவள், டிரஸ்ஸிங் டேபிளின் முன் நின்று அவசரமாகத் தயாராகத் தொடங்கினாள்.
 
 
என்ன தான் கைகள் தன் பணிகளைச் செய்துக் கொண்டு இருந்தாலும் மனம் என்னவோ இந்த அறையையும் அதில் உள்ள அலங்காரங்களையும் தான் மீண்டும் மீண்டும் எண்ணி பார்த்துக் கொண்டிருந்தது. நேற்று முதன்முதலில் இந்த அறைக்குள் நுழைந்ததில் இருந்து அவளின் மனதை குடையும் அதே கேள்விகள் தான் அவை.
 
 
வீடு முழுவதுமே மிகச் சிறந்த வகையில் தேர்ந்த ரசனையோடு அலங்கரிக்கப்பட்டு இருந்தாலும் அதில் எல்லாம் இதன் சொந்தக்காரன் சிறந்த கலா ரசிகன் என்று ஒத்துக் கொள்ள வேண்டும் என்பது போலே இருந்தது... ஆனால் அது எப்படி இந்த அறை மட்டும் தன் ரசனைக்குத் தக்க அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.
 
 
இதற்கு வாய்ப்பே இல்லையே...! இதுவரை தன் ஆசையையோ கனவையோ பற்றி அவள் யாரிடமும் பகிர்ந்துக் கொண்டது கூடக் கிடையாதே...!! அவளின் அண்ணன் ஆகாஷிவிடம் கூட அவள் இதைப் பற்றிப் பேசியது இல்லை... இது தன் உழைப்பில் தானே செய்ததாக இருக்க வேண்டும் என்றே அவள் எண்ணினாள்.
 
 
இந்தக் கதைகளிலோ சினிமாவிலோ வருவது போல நேத்ராவின் டைரி அவளே அறியாமல் சஞ்சயின் கையில் கிடைத்திருக்குமோ என்றெல்லாம் யோசித்துப் பார்க்க கூட வாய்ப்பில்லாத வகையில் அவளுக்கு டைரி எழுதும் பழக்கமே இல்லை. பிறகு எப்படி இது சாத்தியம் என்ற கேள்வியே மனதை அறிக்க... அவளுக்குக் கிடைத்த விடையோ இருவருக்கும் ஒரே ரசனை என்பதே...!!
 
 
‘இப்படிக் கூட இருக்க வாய்ப்பிருக்கிறதா என்பதை அவளால் நம்பவே முடியவில்லை... வேறு வேறு இடங்களில் பிறந்து வளர்ந்து வேறு வேறு வாழ்க்கை முறைகளைக் கொண்ட இதுவரை ஒரு முறை கூட வாழ்க்கையில் சந்தித்து இருக்காத இருவருக்குள் இப்படியும் ரசனை ஒத்து போகுமா...?!’ என்ற சிந்தனையிலேயே உழன்று கொண்டு இருந்தவள், நேரமாவதை உணர்ந்து வேகமாகத் தயாராகி வெளியில் வந்தவள், பிரட் ஜாமை எடுக்க நினைத்து அவசரமாகச் சமயலறைக்குள் நுழைய, அங்கு இலகுவாக முட்டிவரை தொட்டுக் கொண்டிருக்கும் ஷார்ட்ஸ்ஸும் கையில்லாத பனியனும் அணிந்து தோளில் ஒரு துண்டுடன் சஞ்சய் சமைத்துக் கொண்டிருந்தான்.
 
 
வேகமாக நுழைந்தவளை கேள்வியாகத் திரும்பி சஞ்சய் பார்க்க... அவனுக்கு அந்தப் பக்கமாக இருந்த குளிர்சாதன பெட்டியை விரலால் சுட்டி காட்டினாள் நேத்ரா. “ஓ... டூ மினிட்ஸ்...” என்றவன் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்ததை எடுத்துக் கையில் ஊற்றி உப்புக் காரம் சரி பார்க்க தொடங்கினான்.
 
 
அவனுக்கு ஒரு தலையசைப்பையே பதிலாகக் கொடுத்தவள், வெளியில் இருந்த உணவு மேசையில் வந்து அமர்ந்துக் கொண்டாள். முகத்தைக் கையில் தாங்கியவாறு அமர்ந்திருந்தவளுக்கு உள்ளே இருந்து வந்த தக்காளி தொக்கின் வாசம் மூக்கை துளைக்க... பசி வேறு வயிற்றைக் கிள்ளியது.
 
 
இந்த வாசம் சென்றதாலோ என்னவோ அடுத்து தான் சாப்பிட இருக்கும் பிரட் நினைவு வந்து முகம் அஷ்டகோணலாக மாறியது. “திமிர் பிடிச்சவன்... அவன் செய்யறதிலேயே கொஞ்சம் எனக்கும் கொடுத்தால் தான் என்ன...?! நானா இவனைக் கல்யாணம் செஞ்சிக்கத் தவம் இருந்தேன்... நிம்மதியா ஹாஸ்டலில் இருந்த என்னைக் கூட்டிகிட்டு வந்து கொடுமைப்படுத்தறான்...” என்று மெல்ல முனகிக் கொண்டிருந்தவளின் முன் சூடாக இட்லியும் தக்காளி சட்னியும் ஒரு தட்டில் வைத்து நீட்டினான் சஞ்சய்.
 
 
அவனை நம்பாமல் வியப்போடு திரும்பி பார்த்தவளுக்கு, “நான் இல்லாத போது உன்னைப் பார்த்துக்க உனக்குத் தெரியணும்னு தான் எல்லாத்தையும் கத்துக்கச் சொன்னேன்... நான் இருக்கும் போது உன்னை இப்படிப் பார்த்துக்குவேன் குல்பி...” என்று அவனின் உள்ளங்கையை விரித்துக் காண்பித்தான் சஞ்சய்.
 
 
அதில் அவசரமாகப் பார்வையைத் திருப்பிக் கொண்டவள், வேகமாகச் சாப்பிட்டு விட்டு எழ, அவளின் முன் சிறு டப்பர் வேர் டிபன் பாக்ஸோடு இணைந்த பையைக் கொண்டு வந்து வைத்தவன், “இதுல லஞ்ச் இருக்கு குல்பி... மிச்சம் வைக்காம ஒழுங்கா சாப்பிடு...” என்று விட்டு அறைக்குள் நுழைய, செல்பவனின் முதுகையே நம்ப முடியாமல் திகைப்போடு பார்த்து கொண்டிருந்தாள் நேத்ரா.
 
 
சஞ்சய் தான் நேத்ராவை கொண்டு வந்து பள்ளியில் இறக்கினான். அமைதியாக இறங்கி செல்ல முயன்றவளின் துப்பட்டா வழக்கம் போலவே இழுக்கப்பட... ‘இது வேற ஜூனியர் பொறுக்கி...’ என்ற எண்ணத்தோடு துப்பட்டாவை விடுவிக்கத் திரும்பியவள், அது பிளாக் ஸ்டோனில் சிக்கி இல்லாமல் சஞ்சயின் கைகளில் சிக்கி இருப்பதைக் கண்டு திகைத்தாள்.
 
 
நம்ப முடியாமல் அவனின் சைகையில் திகைத்து நின்றிருந்தவளை கண்டு “அது போன மாசம்... இது இந்த மாசம்...” என ஏற்ற இறக்கத்தோடு கூறியவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்த நேத்ராவை அந்தத் துப்பட்டாவின் உதவியோடு பிடித்துத் தன் அருகில் இழுத்தவன், “இப்படித் தான் டிரைவர் வந்து இறக்கிவிட்ட மாதிரி எனக்கென்னன்னு இறங்கி போவாங்களா...?! இதெல்லாம் என் மாமியார் சொல்லி தரலையா...?” என அவளின் காதருகில் கிசுகிசுத்தவன், “டாட்டா சொல்லி புருஷனுக்கு உம்மா கொடுத்துட்டு போகணும் குல்பி... என்ன உனக்கு இது கூடத் தெரியலை... சரி விடு, உனக்கு அ, ஆல தொடங்கி அத்தனையும் அத்தான் சொல்லி தரேன்...” என்று கண் சிமிட்டினான்.
 
 
அவன் ஆரம்பத்தில் உம்மா என்றதிலேயே பீதியோடு நின்றிருந்தவள், அடுத்தடுத்து அவனின் பேச்சில் முகத்தைச் சூழித்தாள். “ஹே... ஹே.. நேத்து மாதிரி இல்லை டி... சும்மா இப்படித் தான்...” என்று உதட்டை குவித்துச் சைகையில் கூறியவனிடமிருந்து துப்பட்டாவை பறித்துக் கொண்டு பேயை கண்டது போல ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்.
 
 
இப்படியே சஞ்சயின் வம்பிழுத்தளிலும் குறும்பிலும் நேத்ராவின் கோபத்திலும் பொறுமலிலும் நாட்கள் சென்றிருந்தது. இதற்கிடையில் ஆஷாவின் கணவனின் பெயரிலும் அவளின் தங்கையின் பெயரிலும் வழக்குப் பதியப்பட்டது.
 
 
அடுத்துத் தனக்குத் துரோகம் இழைத்துவிட்டதாக இருவரின் மீதும் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஆஷா அதற்கு நஷ்ட ஈடாகப் பிரகாஷின் பாதிச் சொத்தை தன் எதிர்கால வாழ்க்கைக்காகத் தன் பெயரில் மாற்றி எழுதுமாறு கூறியவள், குழந்தையின் வயதை கருத்தில் கொண்டு அவன் தாயிடம் வாழ்வதே நல்லது என்றும் அவனை மீட்டுத் தன்னிடம் ஒப்படைக்குமாறும் அவனின் எதிர் கால வாழ்க்கைக்குப் பொறுப்பேற்றுத் தந்தையாக மாதம் மாதம் அவனின் செலவை ஏற்றுக் கொள்ளும் படியும் சஞ்சயின் வழிகாட்டுதலின் படி அதில் குறிப்பிட்டு இருந்தாள்.
 
 
இதில் ஆத்திரம் அடைந்து அவளை மிரட்டி அடக்கி வைக்க நினைத்துப் பிரகாஷ் தேடி வந்த போது ஆஷாவை பார்க்கவே முடியாமல் போனதோடு அவள் எங்கிருக்கிறாள் என்றும் தெரிந்துக் கொள்ள முடியாமலே போனது. எப்படியும் இரண்டு நாட்களில் குழந்தையை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கும் நிலையில் அவனைத் திரும்பப் பெற, நீதிமன்றம் வந்து தானே ஆக வேண்டும் என்ற திமிரோடு பிரகாஷ் ஆஷாவை பயம் காட்ட எண்ணி எடுத்த முடிவு அவனுக்கே வினையாக மாறியது.
 
 
ஆம்... பிரகாஷை பற்றி அடுத்த நாளே அத்தனை விவரங்களையும் திரட்டி விட்ட சஞ்சயின் திட்டமே, இந்த இடைவிடாத தொடர் தாக்குதல், எப்போதும் காதலாகவும் தன்னிடம் கெஞ்சி அழுதுக் கொண்டும் இருக்கும் மனைவியையே பார்த்து பழக்கப்பட்டவனுக்கு அவளின் இந்தத் தைரியம் தன்னை எதிர்க்கும் துணிவு என்று அடுத்தடுத்து யோசிக்கக் கூட அவகாசம் கொடுக்காமல் அடித்தால் மட்டுமே கோபத்திலும் பதட்டத்திலும் எதாவது தங்களுக்குச் சாதகமாகச் செய்து மாட்டிக் கொள்வான் என்ற சஞ்சயின் திட்டம் சரியாக வேலை செய்திருந்தது.
 
 
நேரிலும் காண முடியாமல் அலைபேசியிலும் தொடர்புக் கொள்ள முடியாமல் அவளை மிரட்டி பணிய வைத்து விடலாம் என்ற நினைப்பில் இருந்தவனுக்கு இது பெரும் மன உளைச்சலாக மாற... என்னையே எதிர்க்கும் அளவு உனக்குத் துணிவு வந்து விட்டதா...?! என்ற ஆத்திரத்தோடு அவள் மேல் உள்ள கோபத்தைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டுக் குழந்தையை அடித்து முகமெல்லாம் வீங்க வைத்தவன் ‘இதைக் கண்டால் பயந்து போய்த் தன் வழிக்கு வந்து தான் சொல்வதைக் கேட்டுக் கொண்டு அடங்கிக் கிடப்பாள்...’ என்று பதட்டத்தில் முட்டாள் தனமாக முடிவெடுத்தான்.
 
 
மறுநாள் சரியாக நீதிமன்றம் துவங்கும் நேரத்திற்குப் பாதுகாவலர்கள் சூழ வந்தவளை பிரகாஷால் நெருங்க கூட முடியாமலே போக... வெளியே வைத்தே அவளைப் பிள்ளையைக் காண்பித்து மிரட்டி வழக்கை திரும்பப் பெற வைக்கத் திட்டமிட்டு இருந்தவனின் திட்டம் படு தோல்வியைத் தழுவியது.
 
 
இவர்களின் வழக்கு வந்த பிறகு வேறு வழி இல்லாமல் நீதிபதியின் முன் பிள்ளையைக் கொண்டு வந்து பிரகாஷ் நிறுத்த... குழந்தையின் முகத்தைக் கண்டு அனைவருமே அதிர்ந்தனர். அதிலும் ஆஷா கதறிக் கொண்டு சென்று தூக்கி வைத்துக் கொண்டு பரிதவிப்போடு அந்தப் பிஞ்சு முகத்தைத் தடவியதை கண்டவர்களுக்குக் கண்கள் கலங்கி போனது.
 
 
குழந்தை விளையாடும் போது விழுந்து அடிப்பட்டது என்றெல்லாம் கூறி எவ்வளவோ சமாளிக்கப் பிரகாஷ் முயன்றும் அந்தக் காயங்களே உண்மையை அனைவருக்கும் புரிய வைத்திருக்க... பிள்ளையும் அழுகையோடு தனக்கு நடந்ததை விவரிக்க... உடனடியாக பிரகாஷை பதினைந்து நாள் கடுங்காவலில் வைக்க உத்தரவிட்டார் நீதிபதி.
 
 
அதன் பின் ஆஷாவுக்கும் குழந்தைக்கும் நடந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமானவனே அதற்குப் பிராயச்சித்தமும் செய்ய வேண்டும் என்று கூறி அவன் வசம் உள்ள குடும்பச் சொத்தை குழந்தைக்கு முறைப்படி மாற்றி எழுதி தர வேண்டும் என்றும் அதில் ஆஷாவும் அவனின் மகனும் வாழ்ந்து கொள்வர் என்றும் குழந்தைக்கோ ஆஷாவுக்கோ ஏதாவது நடந்தால் அதன் காரணம் பிரகாஷே என்றும் ஆஷாவின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வக்கீல் திறமையாக வாதாட... அனைத்து வகையிலும் ஆஷாவின் பக்கமே சாதகமாகத் தீர்ப்பு வந்தது.
 
 
பதினைந்து நாள் காவல் என்று அறிந்ததிலேயே ஆத்திரத்தில் கொதித்துக் கொண்டு இருந்தவன், இந்தத் தீர்ப்பில் கொந்தளித்துப் போனான். அனைத்தும் வழி வழியாக வரும் சொத்துக்கள் தான் என்பதால் அவனால் எதுவும் செய்யவும் முடியாமல் போனது.
 
 
குழந்தைக்குத் தந்தையாலேயே ஆபத்து என்ற ஒன்றே இவன் பக்கம் வழக்கை ஆட்டம் காண செய்திருந்தது. இருந்தும் இதை அப்படியே விட்டுவிட மனமில்லாதவன், வெளியில் வரும் நாளுக்காகக் காத்திருந்தான். ஆனால் அவனுக்கு வேறு ஒரு தண்டனை சஞ்சயின் ஸ்டைலில் உள்ள காத்திருப்பதை அப்போது அவன் அறியவில்லை பாவம்.
 
 
அதற்கு மறுநாளே சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட தகராறில் பிரகாஷ் இடையில் எதிர்பாராமல் சிக்கி உயிர் நிலையில் தாக்கப்பட்டுக் குற்றுயிராக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். இந்தச் செய்தியை கேள்வி பட்ட போதும் அது ஆஷாவை ஒரு துளியும் பாதிக்கவில்லை...
 
 
ஆஷாவின் வழக்கு பற்றிய அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தாள் நேத்ரா. அவளின் நிலையை எண்ணி ரொம்பவே மன வருத்தம் நேத்ராவுக்கு எழுந்திருந்தது. தீர்ப்பை கேட்டே சந்தோஷித்தவள், தொலைக்காட்சியில் சிறைக்குள் நிகழ்ந்த கலவரத்தை பற்றிக் கூறியவர்கள் அதில் ஒரு கைதிக்கு நிகழ்ந்த கோர விபத்தைப் பற்றியும் கூற... அதில் அவனின் நிலையை பார்த்துக் கொண்டிருந்த நேத்ராவுக்கு அருகில் ஒன்றுமே அறியாத முகத்தோடு அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சஞ்சய்.
 
 
அப்போது சஞ்சய்யை தேடி வந்த ஆஷா இது சஞ்சயின் ஏற்பாடே என்று தனக்குத் தெரியும் என்பதைக் கூறி நன்றி தெரிவித்தாள். ‘என்ன இது இவன் வேலையா...?!’ என நேத்ரா திகைத்து பார்த்துக் கொண்டு இருக்க... சஞ்சயோ அதெல்லாம் இல்லை என்று மறுக்க முயல, அவனின் தண்டனை ஸ்டைல் எப்படி இருக்கும் என்று இப்போது இடைப்பட்ட காலங்களில் தான் தேடி அறிந்து கொண்டதாகக் கூறிய ஆஷா மனதார நன்றி கூறிவிட்டே வெளியேறினாள்.
 
 
இருவரையும் நேத்ரா நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டே இருக்க... ஆஷா வெளியேறியதும், இவள் பக்கம் திரும்பியவன் “இன்னொரு முறை இந்த முட்ட கண்ணை விரிச்சு இப்படி நேரம் காலம் புரியாம பார்த்த நடக்கற சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை சொல்லிட்டேன்...” என அவளின் முகவாயை பற்றி இப்படியும் அப்படியுமாகத் திருப்பிச் செல்லமாக மிரட்டி விட்டுச் சென்றான் சஞ்சய்.
 
 
மறுநாள் சனிக்கிழமை என்பதால் நேத்ராவுக்கு அரைநாள் தான் பள்ளி... காலையிலேயே அவளைக் கொண்டு வந்து விடும் போதே தன்னால் அந்த நேரத்துக்கு அழைத்துச் செல்ல வர முடியாது என்று கூறி ஆட்டோவில் செல்ல சொல்லி இருந்தான் சஞ்சய்.
 
 
வித்யா வேறு பக்கம் செல்வபவள் என்பதால் பள்ளி வாகனத்திலேயே சென்று விட, ஏதோ யோசைனையோடே நடந்துக் கொண்டிருந்தவளின் காதுகளில் “டேய்... ராம்ம்ம்ம்ம்ம்ம்...” என்று யாரோ யாரையோ அழைக்கும் சத்தம் கேட்டது.
 
 
அதில் திடுக்கிட்டு திரும்பி பார்த்தவளுக்கு, அப்போது தான் ராமை பற்றிய நினைவே வந்தது. எப்போது என்ன செய்வானோ என்று தொடர்ந்து சஞ்சய் அவளைப் பதட்டத்திலும் குழப்பத்திலுமே வைத்து இருப்பதால் வேறு எதைப் பற்றிய யோசனையுமே அவளுக்கு வராமல் போயிருந்தது.
 
 
இன்று ராமை பற்றிய நினைவு வந்தவுடன் அவசரமாகத் தன் அலைபேசியை எடுத்து பார்த்தவள், அவனிடமிருந்து அழைப்போ மெசேஜ்ஜோ எதுவும் இல்லாமல் வெறிச்சோடி இருப்பதையே வெறித்துப் பார்த்தப்படி ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்தவள், வீடு வந்து சேர்ந்து ஒரு வித சோர்வில் அப்படியே படுக்கையில் சரிந்து விட்டாள்.
 
 
கால்களைக் கட்டிக் கொண்டு ஏதோ ஆதரவற்று தவிக்கும் குழந்தை போலச் சோர்வோடு படுத்துக் கொண்டிருந்தவளின் மனமோ ‘எங்கே போனீங்க ராம்... ஏன் எனக்கு மெசேஜ் செய்யலை... இப்படி நீங்க இருந்தது இல்லையே... எனக்குன்னு என் மனசை புரிந்த ஒரே ஆள் நீங்க தானே... நான் எதுவும் சொல்லாமலே என் தேவையை வலியை ப்ரச்சனையைப் புரிஞ்சிக்குவீங்களே... இப்போ ஏன் உங்களுக்கு என் தவிப்பு புரியாம போச்சு... நீங்களும் என்னைவிட்டு போயிட்டீங்காளா ராம்... இனி எனக்குன்னு யாருமே இல்லையா... மறுபடியும் ஒரு போலீஸ் என் வாழ்க்கையில் வரும் போதே தெரியும் ஏதோ பெருசா நடக்கப் போகுதுன்னு, அதுக்கு ஏத்தது போலப் பேப்பரில் என் போட்டோ வந்து எவ்வளவு அவமானப்பட்டேன் தெரியுமா...?! இப்போ உங்களையும் கொஞ்ச நாளா காணலை... அவன் என் வாழ்வில் இடையிட்டதுக்கே இந்த நிலைனா இப்போ அவன் என் கழுத்தில் தாலி கட்டி என்னை அவனோடவே வெச்சு இருக்கான்... இன்னும் நான் எதை எதை இழக்கணுமோ, என்னென்ன ஆகுமோ எனக்கே தெரியலை ராம்... மனசு ஒரு நிலையில் இல்லாம தவிக்குது... நான் போன் செஞ்சப்போ நீங்க ஏன் எடுக்கலை ராம்... ஏன் எடுக்கலை... நீங்க எடுத்திருந்தா இன்னைக்கு எனக்கு இந்த நிலை வந்திருக்காது ராம்...’ எனத் தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டு இருந்தாள்.
 
 
அதே நேரம் அவளின் அலைபேசியில் மெசேஜ் வந்ததற்கான ஒலி வரவும், சட்டென மனதிலும் உடலிலும் தோன்றிய பரபரப்போடு எழுந்து அருகில் இருந்த அலைபேசியை எடுத்து பார்த்தவள், தான் எதிர்ப்பார்த்தவனிடம் இருந்தே மெசேஜ் வந்திருப்பதைக் கண்டு தன் கண்களை நம்பமுடியாமல் இமைக்க மறந்து அதையே பார்த்திருந்தாள்.
 
 
“ஹாய் அம்மு..” என்ற இரு வார்த்தைகளையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தவள், மனதில் எழுந்த தவிப்போடு,
 
 
“ராம்ம்ம்ம்...”
 
 
“என்னாச்சு அம்மு...?”
 
 
“ராம்ம்ம்ம்...”
 
 
“என்னாச்சு டா...?” என அவளின் அந்த அழைப்பே வித்தியாசமாய் இருக்க... தவிப்போடு கேட்டிருந்தான்.
 
 
“......”
 
 
“அம்மு ஆர் யூ ஒகே...?” என்று அவளிடமிருந்து தன் கேள்விக்குப் பதில் வராமல் போனதில் எழுந்த படபடப்போடு மீண்டும் கேட்க...
 
 
“எங்கே போனீங்க ராம்...?’
 
 
“ஏன் அம்மு...? என்னாச்சு...?”
 
 
“நீங்க ஏன் நான் போன் செஞ்சப்போ எடுக்கலை...?”
 
 
அந்தப் பக்கம் இந்த வரியை பார்த்தவன் திகைத்துப் போனான். அவனுக்கு அவளின் அழைப்பு எதுவும் வரவில்லை, இது எப்போது எப்படி என்று அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் ‘அவள் தன்னைத் தேடினாளா...?!’ என்ற எண்ணமே ஏதோ சரியில்லை என்பதை உணர்த்த...
“நீ என்னைத் தேடினீயா அம்மு...?”
 
 
“......”
 
 
“சொல்லு அம்மு, என்னைத் தேடினீயா... என்ன ஆச்சு டா...?” என்று மீண்டும் அழுத்தி கேட்க,
 
 
“நீங்க ஏன் எனக்கு மெசேஜ் செய்யவே இல்லை...?”
 
 
“அது என் நிலை இங்கு அப்படி அம்மு...?” என்று அவளுக்கு முழுவதும் விளக்க முடியாமல் சுருக்கமாகத் தன் நிலையைப் புரிய வைக்க முயன்றான்.
 
 
அதே நேரம் இதுவரை தானாக அழைக்காதவள் இப்போது அழைத்திருக்கிறாள் என்றாள் என மனம் படபடக்க...
 
 
“எதுக்குக் கூப்பிட்டே...? என்ன விஷயம் அம்மு...?”
 
 
“.....”
 
 
இதுவரை படபடத்தவளுக்கு இப்போது இதற்கு என்ன பதில் அளிப்பது என்று சுத்தமாகப் புரியவில்லை... அப்போது அவன் எடுத்திருந்தால் ஒருவேளை அதைப் பற்றிப் பேசி ஒரு முடிவுக்கு வந்து இருக்கலாம்... ஆனால் இனி அதைப் பற்றிப் பேசி தான் என்ன பயன் எனத் தோன்ற அமைதி காத்தாள்.
 
 
“அம்மு..”
 
 
“ம்ம்ம்...”
 
 
“என்ன விஷயம்...?”
 
 
ராமுடன் அவளுக்கு ஐந்து வருடங்களுக்கும் மேல் பழக்கம், அவன் தன் மனதை திறந்து சொல்லி இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்கும்... ஆனாலும் இதுவரை அதைப் பற்றி எந்த முடிவும் எடுக்காமல் தான் அமைதி காத்தாலும் பொறுமையாகத் தன்னைத் தொந்தரவு செய்யாமல் இருந்தவன், இப்போது அனைத்தும் தலை கீழாக மாறி போய் இருக்க... இனியும் மறைத்து அவனைக் காத்திருக்க வைக்க விரும்பாதவள், அவனிடம் சொல்லிவிடும் முடிவுக்கு வந்தாள்.
 
 
ஆழ மூச்செடுத்துத் தன்னைத் தயார் செய்துக் கொண்டவள், “எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு ராம்..” எனப் பெரும் தயக்கத்திற்குப் பிறகே தெரிவித்தவளின் மனம் வேறு வகையில் தவிப்போடு அவனிடம் இருந்து உதிர போகும் வார்த்தைக்காகக் காத்திருந்தது.
 
 
இந்த உலகில் தன்னைச் சார்ந்தவர்கள் என்று யாரும் இல்லாமல் போன பிறகு அவளின் ஒரே துணையாக இருந்தவன் ராம் தான், அவனின் மனம் புரிந்து இருந்த போதும், அன்றிருந்த சூழலில் உடனடியாக அவளால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை... ஆனால் அதன் பிறகு ஏதோ தன் தேவைக்காக அவனோடு இருப்பது ஒரு பாதுகாப்பையும் அரவணைப்பையும் தரும் என்பதற்காகச் சுயநலமாக அவனின் தூய்மையான அன்பை பயன்படுத்திக் கொள்கிறோமோ என்ற எண்ணமே அவளை ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியாமல் தடுத்துக் கொண்டிருந்தது.
 
 
ஆனால் இன்று காட்சிகள் மாறி போன பிறகு அதை மறைத்து வைத்து தன் இந்த அனாதரவான நிலைக்கு ராமிடம் ஆறுதல் தேட அவளால் முடியாது. எனவே உண்மையை உரைத்திருந்தவள், அந்தத் திரையையே வெறித்தப்படி அதில் ஒளிர போகும் பதிலை எதிர்ப்பார்த்து காத்திருந்தாள்.
 
 
வெகு நேரம் அந்தப் பக்கமிருந்து எந்த ஒரு பதிலும் வரவே இல்லை.
 
 
“ராம்..”
 
 
“.....”
 
 
“ராம்..”
 
 
“ஹ்ம்ம்... தெரியும்..” என்ற எழுத்துக்கள் உளிர்ந்ததை நம்ப முடியாமல் பார்த்தவள்,
 
 
“எ.. ன்.. ன... உங்... களு... க்கு தெ... ரியு... மா...?”
 
 
“.....”
 
 
“சொல்... லுங்க ராம்... உங்களுக்கு முன்னாலேயே தெரியுமா...?”
 
 
“ஹ்ம்ம்...”
 
 
“எப்படி...?”
 
 
“உங்க கல்யாண போட்டோ பார்த்தேன்...”
 
 
என்றவனும் எங்குப் பார்த்தேன் எப்படிப் பார்த்தேன் என்பதைச் சொல்லவில்லை... ஊரறிய செய்தி வந்து இருந்ததால் நேத்ராவும் எங்கு எப்படி என்று கேட்கவில்லை.
 
 
“ஓ... தெரிஞ்சதால் தான், அப்போ நீங்க எனக்கு மெசேஜ் செய்யலை அப்படித் தானே...?!”
 
 
“சேச்சே... அப்படி எல்லாம் எதுவும் இல்லை அம்மு... இங்கு எனக்கு அப்படி ஒரு சூழ்நிலை...”
 
 
“என்ன பெரிய சூழ்நிலை...? அன்னைக்கு நீங்க என் போன் எடுத்திருந்தா இன்னைக்கு எனக்கு இந்தச் சூழ்நிலை இல்லை தெரியுமா...?!”
 
 
என்று கோபத்தோடு வந்து விழுந்த வரிகளைக் கண்டு அந்தப் பக்கம் திகைத்து போய் அமர்ந்து இருந்தான் ராம்.
 
 
“அம்மு என்ன சொல்றே...?”
 
 
“உங்ககிட்ட மட்டும் தான் நான் என் மன குழப்பத்தைப் பேசுவேன்னு உங்களுக்குத் தெரியாதா ராம்...?”
 
 
“தெரியும் அம்மு... என்ன ஆச்சுத் தெளிவா சொல்லு...?”
 
 
“.....”
 
 
“அம்மு... உனக்கு ஏதாவது ப்ரச்சனையா... அங்கே... அங்கே... நீ சந்தோஷமா தானே இருக்க...?”
 
 
“......”
 
 
“சொல்லு அம்மு... உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே...?”
 
 
“.......”
 
 
“நீ அங்கே சந்தோஷமா இல்லையா...?! உனக்கு ஏதாவது ப்ரச்னையா...?”
 
 
“ஆமா பிரச்சனை தான்... பிரச்சனை தான்... ஒவ்வொரு நாளும் அந்தப் போலீஸ்காரனை பார்க்கும் போதெல்லாம் எனக்கு... எனக்கு... நரக வேதனையா இருக்கு ராம்... இவனால் இன்னும் நான் எதையெல்லம் இழக்க போறேனோன்னு பயமா இருக்கு... ஒரு நிமிஷம் கூட என்னால் நிம்மதியா இருக்க முடியலை... இந்தப் பயமே என்னைக் கொல்லாமல் கொல்லுது... என்னைக்கு அவனைப் பார்த்தேனோ அப்போதிலிருந்து நிம்மதி இல்லாம தவிச்சிக்கிட்டு இருக்கேன்... அவன் என் வாழ்க்கையில் நுழைந்ததுக்கு அப்பறம் நான் நானாவே இல்லை ராம்... அவன் நினைக்கறதை மட்டுமே என்ன செய்ய வெச்சிட்டு இருக்கான்.. ராட்சசன்...” என்று இத்தனை நாளாக யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள முடியாத அவளின் வேதனைகளை ஒரே மூச்சில் கொட்டி தீர்த்திருந்தாள் நேத்ரா.
 
 
“அப்போ கிளம்பி என்கிட்ட வந்துடு அம்மு...” என்று வந்த பதிலில் செய்வதறியாது திகைத்து அப்படியே அமர்ந்து விட்டாள் நேத்ரா.
 
 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 311
Topic starter  
கனவு – 13
 
 
ராமிடம் இத்தனை நாள் தனக்குள்ளேயே புதைத்து வைத்திருந்த தன் மன குமுறல்களை எல்லாம் வேகமாகத் தன்னையும் அறியாமல் கொட்டி தீர்த்தவள், அதற்கு அவனிடம் இருந்து தீர்வையோ இல்லை ஆதரவையோ அவ்வளவு ஏன் ஆறுதலான வார்த்தையையோ கூட அவள் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதே உண்மை.
 
 
கடந்த சில நாட்களாக நடப்பவற்றை அதனால் தான் அனுபவிக்கும் கலவையான உணர்வுகளின் தாக்கம் என்பதையெல்லாம் தான் அவனோடு பகிர்ந்துக் கொண்டிருந்தாள். அதற்கு அவனிடம் இருந்து வந்த பதில் அவள் கொஞ்சமும் எதிர்ப்பாராதது.
 
 
“அப்போ கிளம்பி என்கிட்ட வந்துடு அம்மு...” என்ற வார்த்தையில் திடுக்கிட்டு ஒரு நொடிக்கும் குறைவான நேரமே அதைப் பார்த்திருந்தவள்,
 
 
“உளறாதீங்க...” என்று அனுப்பிவிட்டு அடுத்த மெசேஜ் அவன் அனுப்புவதைக் கூடப் பார்க்க விரும்பாமல், அலைபேசியை விட்டெறிந்தவள் அதைப் பார்க்க கூடப் பிடிக்காமல் முகத்தைத் திருப்பித் தலையணையில் முகம் புகைத்து படுத்துக் கொண்டாள்.
 
 
இன்னும் அவளின் பதட்டமும் படபடப்பும் கொஞ்சமும் குறையவில்லை. உள்ளங்கைகள் வேர்க்கும் அளவுக்கு இருந்தது அவளின் மனநிலை. அவள் விட்டெறிந்ததில் இருந்தே தொடர்ந்து மெசேஜ் வந்துக் கொண்டிருப்பதற்கான ஒலி கேட்டுக் கொண்டு இருந்தாலும் அதை எடுக்கவோ பார்க்கவோ அவளுக்குத் தோன்றாமல், படுத்துக் கொண்டிருந்தாள் நேத்ரா.
 
 
சற்று நேரத்திற்குப் பிறகு மெசேஜ் ஒலி நின்றுப் போய் இருக்க... அப்போதும் முகத்தைக் கூட நிமிர்த்தாமல் இருந்தவளின் மனம், ‘ராம் இப்படியெல்லாம் பேச கூடியவர் இல்லையே... இன்று ஏன் இப்படி...?!’ என யோசனையோடே தவித்துக் கொண்டிருந்தது.
 
 
கொஞ்சம் நேரம் சென்ற பிறகு தயக்கத்தோடு பேசியை எடுக்கக் கையை நீட்டுவதும், கையை இழுத்துக் கொள்வதுமாக இருந்தவள், பின் ஒருவாறாக முடிவுக்கு அதை எடுத்து பார்த்திருந்தாள்.
 
 
“நான் உளறலை அம்மு...”
 
 
“நிஜமா தான் சொல்றேன்...”
 
 
“நீ இங்கே வந்துடு...”
 
 
என்கிற ரீதியில் அங்குத் தொடர்ந்து மெசேஜ் இருந்ததைக் கண்டு கோபத்தில், “இது உளறல் இல்லாம வேற என்னது ராம்...?!” என்று பதில் அனுப்பி இருந்தாள்.
 
 
அவளின் பதிலுக்காகவே வெகு நேரம் காத்திருந்தது போல உடனே பதில் வந்திருந்தது.
 
 
“இதில் என்ன உளறல் இருக்கு அம்மு...?”
 
 
“......”
 
 
“சொல்லு அம்மு...”
 
 
“.....”
 
 
“உன் விருப்பத்தோட தான் இந்தக் கல்யாணம் நடந்ததா...?!”
 
 
“......”
 
 
“சொல்லு அம்மு...”
 
 
“இல்லை...”
 
 
“நீ... நீ... அவனை விரும்பறீயா...?!”
 
 
“இல்லை...”
 
 
“உனக்கு அவனைப் பிடி... பிடிச்சு இருக்கா...?”
 
 
“இல்லவே இல்லை...”
 
 
“அவனோடு வாழ ஆசைப்படறீயா...?”
 
 
“......”
 
 
“எனக்குப் பதில் வேணும் அம்மு...”
 
 
“இல்லை...”
 
 
“சரி அப்போ அடுத்து என்ன செய்யறதா ஐடியா...?”
 
 
“....”
 
 
“அம்மு”
 
 
“தெரியலை...”
 
 
“இப்படிச் சொன்னா எப்படி அம்மு...”
 
 
“நிஜமாவே தெரியலை ராம்...”
 
 
“அப்போ கொஞ்ச நாளில் மனசு மாறும்னு நினைக்கறீயா...? மஞ்சள் கயிறு மேஜிக் வேலை செய்யும்னு யோசிக்கறீயா...?”
 
 
“ச்சே... நெவர்..” என நொடியும் யோசிக்காமல் பதில் வந்தது.
 
 
“அப்பறம் என்ன தான் செய்யப் போறே அம்மு...?”
 
 
“....”
 
 
“இதனால் தான் உன்னை வர சொன்னேன் அம்மு...”
 
 
“அதுக்காக... அதுக்காக... நீங்க... நீங்க...” என்று இன்னமும் அந்தப் படபடப்பு கொஞ்சமும் குறையாமல் பேசியவள் ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு “எப்படி ராம் அப்படிக் கேக்கலாம் நீங்க...?” என்றாள் ஆற்றாமையோடு.
 
 
“ஏன்... என்ன தப்பு...?”
 
 
“என்ன... என்ன தப்பா...?”
 
 
“ம்ம்ம்... ஆமா என்ன தப்பு...?”
 
 
“எப்படி ராம் உங்களால என்ன தப்புன்னு கேக்க முடியுது... உங்களுக்கு இது தப்பா தெரியலையா...?! நான் இப்போ இன்னொருத்தர் மனைவி ராம்... நீங்க எப்படி என்னைக் கூப்பிடுவீங்க... என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படித் தெரியுது ராம்...?” என்று படபடப் பட்டாசாகப் பொரிந்து தள்ளிவிட்டாள் நேத்ரா.
 
 
“இன்னொருத்தர் மனைவி...?!!!”
 
 
“ஆமா...”
 
 
“அப்போ என்ன செய்யறதா உத்தேசம்...?”
 
 
“.....”
 
 
“சொல்லு அம்மு... இவ்வளவு நேரம் பேசின இல்ல... இப்போ பேசு அம்மு...”
 
 
“அது... வந்து...”
 
 
“ம்ம்ம்... அது... வந்து...”
 
 
“தெரியலை ராம்...”
 
 
“இதுக்காகத் தான் உன்னைக் கூப்பிட்டேன் அம்மு... வேற எந்த எண்ணமும் அதில் இல்லை... உன்னை எனக்கு நல்லா தெரியும் அம்மு... உன் குணமும், சும்மா கூட யாருக்கும் தீங்கு செய்ய நினைக்காதவ நீ... உன்னைக் கல்யாணம் செஞ்சவனுக்கா தீங்கு செய்வே... என் கேள்வி குழம்பி அடுத்து என்னன்னு தெரியாம தவிப்பில் இருக்க உன் மனசை தெளிவாக்கும்னு எனக்குத் தெரியும்... இதோ இப்போ சொன்னீயே, இன்னொருத்தர் மனைவின்னு அதுவே அதற்குச் சாட்சி... அப்போ அதில் நீ தெளிவா தானே இருக்க...?! இனி நீ தெளிவா முடிவு எடுப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு...” என்று விளக்கியவனின் வார்த்தைகளில் இருந்த உண்மை அவளுக்குமே புரிந்தது.
 
 
சிறிது நேரம் அமைதி காத்தவளுக்கு, எந்த நிலையிலும் தன் பெயருக்கோ தன்னைச் சார்ந்தவர்களுக்கோ அவ பெயர் வருவதை விரும்பாதவள், சஞ்சய் மேல் இருந்த கோபத்தில் இத்தனை நாள் இதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் யோசிக்கக் கூட அவகாசம் இல்லாமல் அவன் தன்னை மிரட்டி ஒவ்வொன்றாகச் செயல்ப்படுத்திக் கொள்வதில் எழுந்த வெறுப்பிலேயே எப்படியாவது கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்ப்படுத்திக் கொண்டு அவனிடமிருந்து விலகி தூர சென்றுவிட வேண்டும் என்று நினைத்திருந்தாள்.
 
 
ஆனால் அப்படிச் செய்வது இருவருக்குமே எப்படி அவபெயரையும் அவமானத்தையும் தேடி தரும் என்பது அந்தக் கடைசி நொடியில் புரிய வந்து அதையுமே நேத்ரா செயல்ப்படுத்தி இருக்க மாட்டாள் தான் என்றாலும் அவ்வளவு தூரம் கூட யோசித்துக் குழம்பிக் கொள்ள அவசியம் இல்லா அளவு தன்னைப் பற்றி நன்கு அறிந்திருந்தவன் அதைத் தானே புரிந்து உணரும்படி உணர்த்தியதும் தெளிவாகப் புரிந்தது.
 
 
‘இத்தனை வருடம் நம்பி பழகியவன் பொய்த்து போனானோ என்று இவ்வளவு நேரம் அவள் மனம் தவித்த தவிப்பு அவளுக்குத் தானே தெரியும்... எத்தனை எளிதாக என் மனதையே எனக்கேப் புரிய வைத்து விட்டான்...’ என்று எண்ணியவள், அவனைச் சற்று வம்புக்கு இழுக்க நினைத்து, “அப்போ சும்மா தான் கூப்பிட்டீங்களா...?! நான் கூட என் மேல எவ்வளவு அக்கறைன்னு நினைச்சுட்டேன்...” என்றிருந்தாள்.
 
 
அதற்குச் சில நொடிகள் அந்தப் பக்கம் மௌனமே நீடிக்க... பிறகு “நீ எப்போ வந்தாலும் உன்னை உள்ளங்கையில் வெச்சு நான் பார்த்துப்பேன் அம்மு... இப்பவும் நீ இதை என்கிட்ட வம்பு செய்யத் தான் கேக்கறேன்னு எனக்குத் தெரியும்... ஆனா ஒண்ணு மட்டும் நியாபகம் வெச்சுக்கோ, உனக்கு ஒரு ப்ரச்சனைனாலும் கவலைனாலும் உனக்காக நான் ஒருத்தன் எப்பவும் இருப்பேன்... உன் நலன் விரும்பியா... அதை எப்பவும் மறந்துடாதே...” என்று முடித்துக் கொண்டான்.
 
 
இதோ இந்தக் கடைசி நொடி கூடத் தன்னைச் சரியாகப் புரிந்து கொண்டு பதிலளித்து இருந்தவனை எப்போதும் போலவே நேத்ராவுக்கு அவ்வளவு பிடித்தது... இப்படி ஒரு மனதளவில் எல்லா வகையிலும் நெருக்கமாக நினைப்பவனை இழந்துவிட்டோமோ என்று தான் அவ்வளவு துடித்துப் போனாள் நேத்ரா.
இன்னும் சிறிது நேரம் ராமோடு பேசிக் கொண்டிருந்தவளுக்கு நிறையப் பேசி மனதின் குழப்பத்தைத் தீர்த்து தெளிவுப்படுத்தியவன், முன்பு போல் தொடர்ந்து அவனால் இனி பேச முடியாது... தான் இருக்கும் இடமும் சூழலும் அப்படி என்று விளக்கியவன், நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசுவதாகக் கூறி விட்டு வைத்திருந்தான்.
 
 
அதன் பின் படுத்துக் கொண்டே யோசித்தவளுக்குச் சஞ்சய்யை ஒரு சதவீதம் கூடச் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது. அதற்கு ஏன் அவனை விட்டு விலகி செல்ல வேண்டும், கூட இருந்தே அவனை ஒரு வழியாக்க வேண்டும் என்ற தெளிவான முடிவுக்கு வந்தவள், ‘நானா அவனைத் தேடி வந்தேன்... அவன் தானே என்னைத் தேடி வந்து... தொடர்ந்து வந்து... தொல்லை செய்து தன்னை இங்கு அழைத்து (இழுத்து) வந்திருக்கிறான்... அதற்கான பலனை அவன் அனுபவித்துத் தானே ஆகவேண்டும்...!’ என்று எண்ணிக் கொண்டாள்.
 
 
அப்படியே படுத்திருந்தவள், எப்போது உறங்கினாளோ...! இரவு மணி ஓன்பதை நெருங்கிக் கொண்டிருந்த போது பதட்டமாக வீட்டிற்குள் நுழைந்த சஞ்சய், வீடு இருளில் மூழ்கி இருப்பதைக் கண்டு ஒரு திடுக்கிடலோடு தன் அறையை நோக்கி ஓடினான்.
 
 
அறையும் இருளில் மூழ்கி இருக்க... படுக்கையில் சுருண்டிருந்த நேத்ராவின் உருவம் கலக்கத்தை உண்டு செய்வதாக இருந்ததில் விளக்குகளை ஒளிர செய்தவன், அவளின் அருகில் நெருங்கும் போதே ஆதரவற்ற சிறு குழந்தையைப் போல இரு கால்களையும் கட்டிக் கொண்டு உறங்கிக் கொண்டிருப்பவளின் நிலையைக் கண்டு சற்று ஆசுவாசத்தோடு இரு பக்கம் இடுப்பில் கை வைத்து நின்று தன்னைச் சற்று நிதானப்படுத்திக் கொண்டான்.
 
 
அதன் பிறகு அருகில் சென்று பார்க்க... நேத்ராவிற்குச் சற்று தள்ளி அவளின் அலைபேசி இருப்பது தெரிந்தது... அதை எடுத்து பார்த்தவன், அது சைலண்ட் மோடில் இருப்பது தெரிந்து அவளை ஒரு புரியா பாவனையில் திரும்பி பார்த்தான்.
 
 
நேத்ரா ராமிடம் பேசி முடித்துச் சஞ்சய்யை என்ன செய்யலாம் என்ற தீவிர சிந்தனையில் இருந்த போது ஏதோ தெரியா எண்ணிலிருந்து வந்த தொடர் அழைப்பும், அவர்கள் எண்ணை தவறாகப் போட்டதுமில்லாமல் மீண்டும் மீண்டும் அவளையே தொல்லை செய்ததும் சேர்ந்து அவளைச் சைலண்டில் போட வைத்திருந்தது.
 
 
இதைப் பற்றியெல்லாம் எதுவும் அறியாத சஞ்சய் இரவு எழு மணியிலிருந்து அவளுக்கு அழைத்துக் கொண்டிருந்தான். அவனின் பணியின் காரணமாக வெகு தூரம் சென்றிருந்தவன், இரவு வீடு திரும்ப எப்படியும் பதினொரு மணியைக் கடந்துவிடும் என்பதனால் எப்படியும் அவளுக்குச் சமைக்க வராதுஊஊஊஊ என்று அறிந்திருந்தவன், எதையாவது ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொள்ளச் சொல்ல அழைத்திருந்தான்.
 
 
ஆனால் தொடர்ந்து பதினைந்து இருபது முறை அழைத்தும் அவள் அதை எடுக்கவில்லை என்றதும் மனதில் ஒரு பயம் பிடித்துக் கொள்ள... இன்று சென்றிருந்த கேஸ் வேறு சற்று சிக்கலான பெரிய இடம் என்பதால் அவளுக்கு எதுவும் ஆபத்து வந்து இருக்குமோ என்று எண்ணி பயந்தவன், இன்னும் இதைப் பற்றியெல்லாம் கூறி இது போன்ற சூழலில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவளுக்குச் சொல்லிக் கூடக் கொடுத்திருக்கவில்லை என்பதால் அவசரமாக வீடு திரும்பி இருந்தான்.
 
 
அவளுக்கு எதுவுமில்லை என்று கண்ணால் கண்டு மனதில் பதிய வைத்த பிறகே மனம் சற்று நிம்மதி அடைந்தது. அதே நேரம் அவள் படுத்திருந்த கோலம் அவனின் மனதை வேதனை கொள்ளவும் செய்திருந்தது. அது தனிமையில் தவிக்கும் யாருமற்ற குழந்தையின் உடல் மொழி...! நானிருக்க உனக்கு ஏன் இந்த நிலை என்றே நினைத்து வருந்தியவனுக்கு, அப்படியே அவளை அள்ளி தனக்குள் புதைத்துக் கொண்டு, “உனக்கு இப்போவும் எப்போவும் எல்லாமுமா நான் இருக்கேன் நீரு...” என்று அவளின் தலையை ஆறுதலாக வருடி கொடுக்க மனமும் கைகளும் பரபரத்தாலும் அதற்கு இது சரியான நேரம் இல்லை என்று உணர்ந்தவன், குளித்துவிட்டு வந்து அவளருகில் படுத்திருந்தான்.
 
 
எழு மணி முதல் அழைத்தும் அவள் எடுக்கவில்லை என்பதே அவள் சாப்பிட்டு இருக்க வாய்ப்பில்லை என்று புரிய வைக்க... சூடாகக் கொஞ்சம் பால் கொண்டு வந்து குடிக்க வைப்போமா என்று எண்ணியவனுக்கு அவனுமே இன்னும் சாப்பிடவில்லை என்பதெல்லாம் நினைவுக்கே வரவில்லை.
 
 
பின் அவளின் தூக்கத்தைக் கலைக்க விரும்பாமல், அப்படியே விட்டுவிட்டவன், அவளைப் பார்த்தவாறு திரும்பி படுத்துக் கொண்டான். நேத்ராவின் முகத்தையே அந்த இரவு விளக்கின் ஒளியில் ரசித்திருந்தவன் அப்படியே உறங்கி போனான்.
 
 
மறுநாள் ஞாயிறு என்பதால் முன்பே போட்டிருந்த தன் திட்டப்படி, அவளுக்குத் தேவையானதை எல்லாம் வாங்கித் தர எண்ணி எக்ஸ்பிரஸ் அவின்யு அழைத்து வந்திருந்தான்.
 
 
முதலில் அவனோடு வர கொஞ்சமும் சம்மதிக்காதவள், அவளின் விடுதியில் உள்ளவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு வந்தால் போதுமெனச் சொல்லி பார்க்க.. அதற்கெல்லாம் துளியும் சம்மதிக்கவில்லை சஞ்சய். இனி அவளின் தேவைகளைக் கவனிக்கத் தான் இருக்கிறேன் என்பதில் உறுதியாக நின்று வழக்கம் போலவே அவனின் சண்டி ராணியை இழுத்து வந்திருந்தான்.
 
 
ஆரம்பத்தில் ஏனோ தானோவென்று அவனுக்காக எடுத்துக் கொண்டிருந்தவள், நேற்று அவள் எடுத்த சபதம் நினைவு வரவும், வேண்டுமென்றே விலை உயர்ந்தவையாகப் பார்த்து பார்த்து எடுக்கத் தொடங்கியிருந்தாள்.
 
 
ஒரு தளத்தில் இருந்து மற்றொரு தளத்துக்குச் செல்ல தானியங்கி படிகளில் இறங்கி கொண்டிருந்த போது தன் அலைபேசியை எடுத்து அதில் உள்ள முன் பக்க கேமராவின் வழியே தனக்குப் பின்னால் நின்றிருந்தவளை கண்களில் வழியும் நேசத்தோடு ரசித்துக் கொண்டிருந்தான் சஞ்சய்.
 
 
வேறு எங்கோ முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றிருந்தவள், ஏதோ தோன்ற சஞ்சயின் பக்கம் திரும்பி அவனைப் பார்த்த நொடி அந்தத் தருணம் அழகிய செல்பியாக எடுக்கப்பட்டிருந்தது.
 
 
அதிலும் நேத்ரா சஞ்சய்யை பார்த்து, அவனின் பார்வையை உணர்ந்து “பொறுக்கி எப்படிப் பார்க்கறான் பாரு..?” என்று முணுமுணுப்பதற்குள், அவளைப் பார்த்து வழக்கம் போல உதடு குவித்துத் தன் பரிசை அவளை நோக்கி பறக்கவிட்டவாறே அவள் திரும்புவதற்காகவே காத்திருந்தவன் எடுத்திருந்த படத்தைப் பார்த்தவர்கள், இவர்களின் வாழ்க்கை பற்றிக் கூறினால், சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள் அப்படி வந்திருந்தது அந்தப் படம்.
 
 
அன்றைய நாள் சஞ்சயின் வழக்கமான வம்பிழுத்தலிலும், நேத்ராவின் அவனை நிறையச் செலவு செய்ய வைப்பதிலும் கழிந்துக் கொண்டு இருக்க... ஷாப்பிங் முடிக்க இருந்த நிலையில் சஞ்சய்க்கு ஒரு அழைப்பு வரவும், முக்கியமான அழைப்பு என்பதால் “டூ மினிட்ஸ்...” என்று அவளிடம் கூறிவிட்டு பேச தொடங்கி இருந்தான்.
 
 
அவர்கள் இருந்த தளத்தில் இருந்து கீழ்தளத்தைப் பார்ப்பதற்கு வசதியாக இருந்த அந்த அழகிய கைப்பிடி சுவரில் சாய்ந்து திரும்பி நின்றவாறே சஞ்சய் பேசிக் கொண்டிருக்க... நேத்ராவோ அவனுக்குச் சற்று தள்ளி திரும்பி நின்று கீழ் தளத்தில் பரபரப்பாக நடந்துக் கொண்டிருந்த மனிதர்களின் செயல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
 
அப்போது அந்த வழியே சென்ற ஒருவன் எதேச்சையாக நேத்ராவை பார்த்தபடியே இரண்டடி நடந்தவன், மீண்டும் நின்று சற்று முன் பக்கமாக குனிந்து ஆச்சர்யமும் சந்தோஷமுமாக அவளை நம்ப முடியாத பார்வை பார்த்தவன், நேத்ராவை நோக்கி புன்னகையோடு நகர முயன்ற நொடி அவன் கண்களில் எதிர்புறம் இருந்த பூங்கொத்து விற்கும் கடை கண்ணில் படவும், நேத்ராவையும் அந்தக் கடையையும் மாறி மாறி பார்த்து விட்டு நடையில் ஒரு துள்ளலோடு அந்தக் கடையை நோக்கி சென்றான்.
 
 
பேச்சிலேயே கவனமாக இருந்தாலும் சஞ்சய் இது அனைத்தையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். அடுத்த ஐந்து நிமிடத்தில் திரும்ப வந்த அந்தப் புதியவன் கையில் அழகிய ஒற்றைச் சிகப்பு ரோஜாவாலான சிறு பூங்கொத்து இருந்தது.
 
 
நேத்ராவின் பின் வந்து நின்றவன் அவளை அழைக்க முயல்வதும், பின் ஒரு தயக்கத்தோடு தலையைக் கோதி கொள்வதுமாக நின்றிருக்க... அவனின் அத்தனை செய்கைகளையும் பார்த்தப்படி பேசிக் கொண்டிருந்தான் சஞ்சய்.
 
 
சஞ்சய்க்கும் நேத்ராவுக்கும் நடுவில் இருந்த இடைவெளி அந்தப் புதியவனுக்கு இவர்கள் இருவரும் சேர்ந்து வந்திருப்பர் எனக் கொஞ்சமும் தோன்றாமலே செய்திருந்தது.
 
 
மீண்டும் மீண்டும் அவன் செய்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்த சஞ்சய் நேத்ராவின் தோளில் தட்ட... அதில் திரும்பி அவனைக் கேள்வியாகப் பார்த்தவளை அவளுக்குப் பின்னால் பார்க்குமாறு சைகை செய்தவன், தன் பேச்சை தொடர்ந்தான்.
 
 
என்னவெனப் புரியாமல் பின்னால் திரும்பியவள் அங்கு நின்றிருந்தவனைக் கேள்வியாகப் பார்க்கவும், “ஊஊப்ப்ப்ஸ்ஸ்ஸ்ஸ்.. பைனலி... திடீர்னு எங்கே சொல்லாம கொள்ளாம காணாமல் போயிட்டீங்க... எங்கேயெல்லாம் உங்களைத் தேடறது, அங்கே யாருக்குமே நீங்க எங்கே போனீங்க என்ன ஆனீங்கன்னு கொஞ்சம் கூடத் தெரியலை... மூணு வருஷ தேடல் ஒரு வழியா முடிவுக்கு வந்திருக்கு...” என்று அகமும் முகமும் மலர, கண்கள் மின்ன பேசிக் கொண்டு சென்றவன், அதற்கு அவளிடமிருந்து எந்த ஒரு எதிர்வினையும் இல்லாது போகவே தன் பேச்சை நிறுத்தி, “என்னை நியாபகம் இருக்கா...?” எனத் தயக்கமும் தவிப்புமாகக் கேட்டான்.
 
 
‘ஆம்’ என்ற தலையசைப்பு மட்டுமே பதிலாகக் கிடைத்ததற்கே ஏதோ விருது கிடைத்ததைப் போல மகிழ்ந்தவன், சட்டென அவள் முன் மண்டியிட்டு “வில் யூ மேரி மீ...?” என்றவாறே அந்தப் பூங்கொத்தை அவளின் முன் நீட்டினான்.
 
 
அதில் திகைத்தவள், சஞ்சய்யை திரும்பி பார்க்க... அவனோ இங்கு நடப்பவைக்கும் எனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பது போல நின்று பேசிக் கொண்டிருந்தான். அவனைச் சிறு தயக்கத்தோடு பார்த்தவள், “சாரி... எனக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆகிடுச்சு... மிஸ்டர்...” எனத் தொடங்கி அவனின் பெயரை நினைவுப்படுத்துவது போல நெற்றியை தேய்த்து யோசித்தவள், பின் நினைவு இல்லை என்பது போல நின்றிருந்தாள்.
 
 
அதில் அவளை அதிர்வோடு பார்த்தவன், ‘சும்மா தன்னை மறுப்பதற்குக் காரணம் சொல்கிறாளோ...?!’ என்று தோன்ற... அவள் திருமணம் ஆனவள் என்பதை நம்பா பார்வை பார்த்தவனிடம் எப்படிச் சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல் பார்வையைச் சுழற்றியவள், சட்டென வலது கையைப் பாக்கெட்டில் நுழைத்தது போல நின்றிருந்த சஞ்சயின் கைக்குள் தன் கையை நுழைத்து நின்றுக் கொண்டவள், “மீட் மை ஹப்பி... ஆத்ரேயன்...” என்றாள்.
 
 
நேத்ரா கையைக் கோர்த்துக் கொண்டதில் அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்திருந்தவன், அடுத்து அவள் அறிமுகம் செய்த விதத்தில் உள்ளுக்குள் வியந்தவாறே “ஹாப்பி டூ மீட் யூ...” என்று எதிரில் இருந்தவனிடம் கை குலுக்க முயல, அவனோ சங்கடமாக நெளிந்தவாறே இருவரையும் ஒரு பார்வை பார்த்திருக்க... நேத்ராவோ ‘இது இப்போ ரொம்ப முக்கியம்...!’ என்பது போலச் சஞ்சய்யை தீ பார்வை பார்த்திருந்தாள்.
 
 
ஆனால் அந்தப் புதியவனோ கணவன் கண் முன்னே அவனின் மனைவியை மணக்க கேட்டதை எண்ணி தலை கவிழ்ந்தவாறே, “சாரி... சாரி... ஐ ம் ரியலி வெரி சாரி...” என சஞ்சய்யை சங்கடமாக நிமிர்ந்து பார்க்க கூடத் தயங்கியவாறே இருவருக்கும் சேர்த்து ஆயிரத்தெட்டு சாரி சொல்லிவிட்டு விட்டால் போதும் என்பது போல ஓட்டமெடுத்தான்.
 
 
அதன் பின் சஞ்சய் தன் பேச்சில் கவனத்தை செலுத்த தன் அருகில் நின்றிருந்த சஞ்சய்யை முறைத்துக் கொண்டிருந்தாள் நேத்ரா. அவளின் பார்வையை உணர்ந்திருந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை அவன்.
 
 
ஆனாலும் நேத்ரா தொடர்ந்து முறைக்கவும், "என்ன குல்பி அப்படி வெச்ச கண்ணு மாறாம பார்க்கற... மாமன் இன்னைக்கு அம்புட்டு அழகாவா இருக்கேன்..." எனத் தன் இடது கையால் தலையைக் கோதியவறே குளிர் கண்ணாடியை லேசாக இறக்கி அவளைப் பார்த்தான்.
 
 
"உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா அவன் வந்ததும் என்னைக் கூப்பிட்டு இருப்ப... அவன் எதுக்கு வந்திருக்கான்னு உனக்குத் தெரியாதா... இப்போ என்ன உன்னை என் புருஷன்னு நான் என் வாயாலேயே அவன்கிட்ட சொல்லணும் அதானே..." என்று முறைத்துக் கொண்டே கேட்டவளை கண்டு "அது அப்படி இல்ல குல்பி... நாளை பின்னே நீயே எனக்கு வந்த நல்ல ஒரு சான்ஸ் உன்னாலே தான் மிஸ் ஆகிடுச்சுன்னு என்கிட்டே சொல்ல கூடாது பாரு... அதுக்குத் தான்..." என்றான் அசால்ட்டாக.
 
 
"ஹே... என்னைப் பார்த்தா எப்படி இருக்கு..." என்று ஆத்திரத்தில் படபடத்தப்படி விரல் நீட்டி எச்சரித்தவளை மேலிருந்து கீழாகப் பார்வையாலேயே அளந்தவன், "சும்மா கும்முன்னு இருக்கு..." என்றான் ரசனையான குரலில்.
 
 
"ச்சீ... பொறுக்கி..." என முகத்தைச் சுழித்தவாறே திரும்பிக் கொண்டவள், "அவனுக்கு நீயே பதில் சொல்லி அனுப்பி இருக்கலாமே... ஏன் என்னைக் கூப்பிட்டே...?" என்றாள் மீண்டும் ஆத்திரம் கொஞ்சமும் அடங்காமல்.
 
 
"உன் பதில் என்னன்னு எனக்கு எப்படிக் குல்பி தெரியும்...?! ஒரு வேலை நீ அவனுக்கு ஒகே சொல்ல நினைச்சு இருந்தா...!!?" எனப் போலி ஆச்சர்யத்தோடு விழிவிரித்தவனை எரிப்பது போலப் பார்த்தாள் நேத்ரா.
 
 
"அது இதை என் கழுத்தில் மிரட்டி கட்டும் போது யோசிச்சு இருக்கணும்..." என வெறுப்போடு மொழிந்தவளை யோசனையோடான கூர்மையான பார்வையில் அளந்தவன், "அதனால மட்டும் நீ என் கூடக் காதலோட சேர்ந்து வாழ்ந்துட போறீய என்ன..." எனத் தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து கேட்டான்.
 
 
அதற்கு நொடி நேரம் கூட யோசிக்காமல் "நோ... நெவர்..." என்றிருந்தாள் நேத்ரா. “அப்பறம் என்ன பீரியா விடு...” என்றவாறே தொடர்ந்து நடக்கத் துவங்கியவனை அப்படியே பிடித்துக் கழுத்தை நெறிக்கும் அளவு வெறி வந்தாலும் இரண்டு கைகளையும் மடக்கி தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டவள், அவனைப் பின் தொடர்ந்தாள்.
 
 
வெளிவாயிலை இவர்கள் நெருங்கவும் எதிரில் வந்த ஒரு பெரியவர், யோசனையோடு நேத்ராவை பார்த்துவிட்டு கடந்து செல்ல முயன்று பின் மீண்டும் வந்து “ஏம்மா குழந்தை... நீ ரங்கராஜன் பொண்ணா மா...?” என்று யோசனையும் சந்தேகமுமாகக் கேட்டார்.
 
 
அதில் ஒரு நொடி திடுக்கிட்டவள், “இல்.. லை.. யே... இல்.. ல..” என்று தடுமாற்றத்தோடான குரலில் கூறியவாறே அங்கிருந்து நகர முயல, “இல்ல மா... திலகா... ரங்கராஜன்... அவங்க பொண்ணு தானே மா நீ... உனக்கு ஒரு அண்ணன் கூட இருப்பானே... அவன் பேரு...?!” என்று சிந்தித்தவரை பார்த்து, “இல்லை... இல்லை.... அது... நான் இல்லை... அப்படி... அப்படி... யாரையும் எனக்குத் தெரியாது...” என்றவளை மேலும் ஏதோ கேட்க முயன்றவரை அவருடைய மகன், “அவங்க தான் இல்லைன்னு சொல்றாங்க இல்லை பா... நீங்க வாங்க...” என்று அழைக்க... அவரோ, “இல்லை தம்பி... திலகா...” என்று தொடங்கவும், “இவங்க வேற யாரோ பா...” என்று சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றிருந்தான் அவன்.
 
 
அதன் பின் ஒருவித பதட்டத்திலேயே வந்தவளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்த சஞ்சயின் மனதில் திருமணத்தைப் பதிவு செய்யக் கொடுக்கப்பட்ட சான்றிதழில் பார்த்த நேத்ரா ரங்கராஜன் என்ற பெயர் தெளிவாக நினைவுக்கு வந்து அவனை யோசனையில் ஆழ்த்தியது.
 
 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 311
Topic starter  

ஹாய் பிரெண்ட்ஸ்..

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

KMKN - 12 & 13

https://kavichandranovels.com/community/topicid/628/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 

கவி சந்திரா 

This post was modified 20 hours ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 311
Topic starter  
கனவு – 14
 
 
வீட்டிற்கு வந்த பிறகு இருந்த இடத்திலிருந்தே நேத்ரா போகும் இடமெல்லாம் சஞ்சய் கூர்மையான பார்வையோடு அவளை தொடர்ந்தபடியே அமர்ந்திருந்தான். இங்குமங்கும் அலைந்து கொண்டிருந்தாலும் நேத்ராவும் சஞ்சயின் பார்வையை உணர்ந்தே இருந்தாள்.
 
 
சிறிது நேரம் பொறுத்து பார்த்தவள், பின் அவன் முன் வந்து இடுப்பில் கை வைத்து முறைத்தவாறே “என்ன...?” என்று கேட்க... ஒன்றுமில்லை என்பது போலத் தோள்களைக் குலுக்கியவன், அந்தக் கூர்மையான பார்வையைக் கொஞ்சமும் மாற்றிக் கொள்ளாமல் அவளின் கண்களுக்குள் ஊடுருவி பார்க்க தொடங்கினான்.
 
 
வழக்கமாக வம்பிழுப்பது போலவோ அவளைச் சீண்டுவது போலவோ இல்லாமல் இந்தப் பார்வையில் இருந்த வித்தியாசம் புரிய, யோசனையாக அவனைப் பார்த்தவள்... “எ..ன்...ன...?!” என்றாள் காற்றாகி போன குரலில்.
 
 
“அவங்ககிட்ட ஏன் பொய் சொன்னே...?” என்று அதே பார்வையோடு கேட்டவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தடுமாறியவள், “யாரு... யாருகிட்ட...?!” என்றாள்.
 
 
அதற்கு அவனிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை... ஆனால் தன் பார்வையில் கொஞ்சமும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் நேத்ராவையே பார்த்துக் கொண்டிருக்க... அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் நகர முயன்றவளை “பொய் பேச உனக்கு வரலை...” என்றான். “நான்... நான்... ஏன் பொய் சொல்லணும்...?” என்று வீம்பாகக் கேட்க முயன்று மீண்டும் காற்றாகி போன குரலிலேயே கேட்டாள் நீரு.
 
 
“அதை நீங்க தான் சொல்லணும் மிஸ் நேத்ரா ரங்கராஜன் அலைஸ் மிஸஸ் நேத்ரா சஞ்சய் தத்தாத்ரேயன்...” என்று அழுத்தம் திருத்தமாக உச்சரித்தவனைக் கண்களில் தோன்றிய சிறு அதிர்வோடு பார்த்தவள், “என்ன சொல்லணும்... சொல்லறதுக்கு எல்லாம் எதுவும் இல்ல... ஏன் இன்னைக்கு வெளியே எதுவும் கேஸ் கிடைக்கலையா...?! எல்லாரும் செய்றது போலப் பெண்டிங் கேஸ் எல்லாம் என் மேலே போட்டு உள்ளே தள்ள பார்க்கறீயா...?” எனச் சிடுசிடுத்துவிட்டு அறைக்குள் சென்று புகுந்துக் கொண்டாள்.
 
 
அவளையே யோசனையோடு பார்த்தவன், வலது கை கொண்டு கன்னங்களைத் தேய்த்தப்படியே சிந்தனையில் மூழ்கினான். மறுநாள் காலை பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தவளை கண்டவன், “உன்னை வேற ஸ்கூல் பார்த்துக்கச் சொன்னேன் இல்ல...! அது என்னாச்சு...?” என்றான்.
 
 
“இப்போ என்ன ப்ரச்சனை அந்த ஸ்கூல்ல...?! சும்மாவே இருக்க மாட்டீயா... எப்போ பாரு இதைச் செய்யாதே, அதைச் செய்யாதேன்னு ஏன் என்னைப் போட்டு படுத்தறே... நான் என்ன குழந்தையா... எனக்குத் தெரியும் என்ன செய்யணும் செய்யக் கூடாதுன்னு... சும்மா சும்மா தொல்லை செய்யாதே...?!” என்று படபடத்தவள் அங்கிருந்து கிளம்ப முயல, “சீக்கிரம் வேற ஸ்கூல் பார்த்துக்கோ...” என்று அழுத்தமான குரலில் உரைத்தவன், அவளுக்கு முன்னே வெளியே சென்றிருந்தான்.
 
 
அவன் சென்ற திசையையே பார்த்து முணுமுணுவெனத் திட்டியவள், அவன் பின்னே கிளம்பி சென்றாள். ஆனால் அத்தோடு அந்தப் பேச்சை விடாமல் சஞ்சய் மாலையும் அதையே தொடர, நேத்ராவுக்கு ஆயாசமாக வந்தது.
 
 
“இப்போ என்ன தான் பிரச்சனை உனக்கு..?! நான் எங்கேயும் போகக் கூடாது, எதுவும் செய்யக் கூடாது, அதானே...?! இங்கேயே உன் பேச்சை கேட்டு தலை ஆட்டும் பொம்மையா இருக்கணும் இல்ல...” என்று படபடத்தவளை, இழுத்து பிடித்த பொறுமையோடு பார்த்தவன், “நான் சொல்ல வருவதைப் புரிஞ்சிக்கவே மாட்டீயா...?” என்றான்.
 
 
“முதலில் நான் சொல்ல வருவதை நீ புரிஞ்சிக்க... என் விஷயத்தில் தலையிடாதே...” என்று நீரு விரல் நீட்டி எச்சரிக்கும் தொனியில் பேசவும், அந்த விரலை பற்றி மடக்கி தன்னருகில் அவளை இழுத்தவன், “வேலைக்குப் போகாதேன்னு சொல்றதுக்கும் வேற இடம் பார்த்துகோன்னு சொல்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு டி...” எனவும், “அதே தான் நானும் சொல்றேன், உண்மையில் எனக்கு நல்லது நினைக்கறவங்களுக்கும் உனக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு...” என்றாள் முறைப்போடு. “போன ஜூலையில் உங்க ஸ்கூலில் ஒரு பொண்ணு காணாம போனா உனக்குத் தெரியுமா...?” என்று பல்லை கடித்தபடியே கேட்டான்.
 
 
“ஆமா தெரியும்... அதுக்கென்ன இப்போ...?! பாவம் ஸ்கூல் வர வழியில் காணாம போயிட்டா... உங்க ஆளுங்களால் இப்போ வர அவளைக் கண்டுப்பிடிக்க முடியலை... இதில் எனக்கு அட்வைஸ் செய்ய வந்துட்ட போ...” என்று பதிலுக்கு முறைத்தாள் நீரு.
 
 
“ஊஊப்ப்ப்ஸ்... உனக்கு எப்படிச் சொல்லி புரிய வைக்கறது டி...?” என்று உன்னை என்ன தான் செய்வது என்பது போன்ற குரலில் கூறியவன், “நீயே இந்த லட்சணம்னா இதில் உன் ஸ்டுடென்ட்...?” என்று கேலியாகக் கேட்கவும், “ஹே... யாரை கிண்டல் செய்யற... என் ஸ்டுடன்ஸ் எல்லாம் சென்டம் எடுக்கறவங்க...” என்றாள் சிலிர்த்துக் கொண்டு.
 
 
“ஆமாமா... ஸ்கூல் முடிஞ்ச பிறகும் மூணு ஹவர் அடைச்சு வெச்சு டார்ச்சர் செய்யறீங்களே, இது கூட இல்லைனா எப்படி...?” என்று சஞ்சய் எகத்தாளமாகக் கூறவும், “யாரு...? யாரு..? அடைச்சு வெச்சு டார்ச்சர் செய்யறா...?! அதுக்குப் பேர் அக்கறை அவங்க நல்லா படிச்சு நல்ல மார்க் எடுக்கணும்னு அக்கறை...” என்றாள் தன்னையும் தன் வேலையையும் கேலி செய்வதைத் தாங்கிக் கொள்ள முடியாத குரலில்.
 
 
“கம்பெனிகளில் கொடுக்கறது போல உங்களுக்கும் இது மந்த் எண்டு டார்கேட் தானே... ஒரு கிளாஸ்ல இருக்க எல்லா ஸ்டுடன்ட்டும் இத்தனை மார்க் எடுத்தே ஆகணும்... அதுக்கு எவ்வளவு வேணாலும் அவங்களைத் தொல்லை செய்யலாம்னு சொல்லி இருக்காங்க அதானே... அப்படி எல்லாரும் அவங்க சொன்ன மார்க் எடுக்கலைனா உங்க சம்பளத்தில் கை வைப்பாங்க... சோ கொஞ்சமும் மனசாட்சி இல்லாம உங்க லாபத்துக்கு அவங்களை டார்சர் செய்யறீங்க...” என்று அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளைச் சஞ்சய் எடுத்து வைத்துக் கொண்டே போனான்.
 
 
‘என்ன உளறல் இது...?!’ என்று எழுந்த எரிச்சலோடு நீரு கோபமாகப் பதில் அளிக்க இருந்த நேரத்தில் வெளி வாயிலின் அழைப்பு மணி ஒலித்தது. அதில் அந்தப் பக்கம் கவனத்தைத் திருப்பியவன், மணியைப் பார்க்க அது இரவு ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.
 
 
இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்ற யோசனையோடு கதவை சென்று சஞ்சய் திறக்க... அந்தப் பக்கம் புதியவன் ஒருவன் நின்றிருந்தான். சஞ்சய் அவனை யார் என்பது போலப் பார்க்க...
 
 
“வணக்கம் ஏசிபி சார்..”
 
 
“வணக்கம்... நீங்க..?”
 
 
“பெயரை சொன்னாலே தெரியற அளவுக்கு நான் உங்க அளவு பெரிய ஆள் எல்லாம் இல்லை சார்... உங்க போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கறவங்களுக்கு வேணா லேசா ஞாபகம் இருக்கலாம்... அதுவும் இருக்கோ இல்லையோ தெரியலை...” என்றான் விரக்தியான குரலில்.
 
 
“சரி உள்ளே வாங்க...”
 
 
“இல்லை... இது தான் வசதி, இங்கேயே இருக்கேன்...” என அவன் பேச ஆரம்பத்தில் இருந்தே இவனிடம் ஏதோ சரியில்லை என்று புரிய, சஞ்சய் ஓரு அடி அவனை நோக்கி முன் வைக்கவும், அந்தப் புதியவனின் கைகளில் துப்பாக்கி முளைத்து இருந்தது. சரியாக அதே நேரம் சஞ்சய் சென்று இவ்வளவு நேரம் ஆகுதே வந்தது யாராக இருக்கும் என்று பார்க்க சஞ்சயின் பின்னால் வந்து நின்று இருந்தாள் நீரு.
 
 
“டோன்ட் டிரை டு டூ எனிதின்ங் ஸ்மார்ட் ஆபிசர்...” என்றவன் சஞ்சய்யின் முன் துப்பாக்கியை காண்பிக்கவும், அவனையும் அவன் கையில் இருந்த துப்பாக்கியையும் கொஞ்சமும் பதட்டமும் பயமும் இல்லாத சாதாரணப் பார்வை பார்த்து வைத்தான் சஞ்சய்.
 
 
“ஐ நோ ஆபிசர்... என்னை அடிச்சு சாய்க்கவோ இல்லை இதை உங்க கைக்குக் கொண்டு வரவோ உங்களுக்கு அரை நொடி கூட ஆகாது... அவ்வளவு ஏன் உங்களுக்கு அந்த அவசியம் கூட இருக்காது... நீங்களே துப்பாக்கி வெச்சு இருந்தாலும் இருப்பீங்க... ஆனா எனக்குத் தேவை வெறும் ஐந்து நிமிஷம் தான்... அதை மட்டும் கொடுங்க போதும்...” என்றவன், சஞ்சயையும் அவன் அருகில் இருந்த நீருவையும் ஒரு பார்வை பார்த்தான்.
 
 
அந்த ஒரு பார்வைக்கே தன் அருகில் இருந்தவளை இடது கையால் தன் பின்னால் நகர்த்தி அவளை மறைத்தது போல நின்றான் சஞ்சய். “ம்ஹும்... பயப்படாதீங்க ஆபிசர், என்னால் உங்க மனைவிக்கு எந்த ஆபத்தும் வராது... நாம காதலித்து மணந்தவங்களை எந்த நிலையிலும் காப்பாத்த தானே நினைப்போம் ஏசிபி சார்...?! அப்பறம் நான் மட்டும் அப்படிச் செய்வேன்னு ஏன் யாருக்குமே தோணாம போச்சு சார்...?” என்றான் விரக்தியும் வேதனையுமான குரலில்.
 
 
யார் இவன்...!? என்ன பேசுகிறான்...!? எனப் புரியாமல் சஞ்சய் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே... “கறை படாத கைகள்... பணத்தால் வளைக்க முடியாத நேர்மையான விசராணை... அலசி ஆராய்ந்து உண்மையை வெளி கொண்டு வரும் துணிச்சல்... சட்டத்திடம் தப்பித்தாலும் உங்க சட்டத்தில் தப்பிக்க முடியாது... இப்படிப்பட்ட நீங்க ஒன்பது மாசம் முன்னே ஏன் சார் இங்கே வரலை... ஏன் வரலை... வந்திருக்கலாம் இல்லை... வந்திருக்கலாம் தானே... ஆறு... ஆறு உயிர் காப்பாத்தப்பட்டிருக்குமே சார்... காப்பாத்தப்பட்டிருக்குமே...” என்று சாதாரணக் குரலில் தொடங்கித் துயரத்தோடான குரலில் முடித்தான்.
 
 
ஒன்றும் புரியாமல் சஞ்சய் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தன் கையில் இருந்த துப்பாக்கியை கொண்டு நெற்றியில் சுட்டுக் கொண்டு சரிந்து இருந்தான் அவன். கடைசி நொடியிலேயே அவன் செய்ய இருக்கும் செயல் புரிந்து சஞ்சய் அவனைத் தடுக்க முயல்வதற்குள் அனைத்தும் நடந்து முடிந்து இருந்தது.
 
 
“ஹக்” என அருகில் கேட்ட சத்தத்தில் சஞ்சய் நீருவை பார்க்க... விழிகள் நிலை குத்தி நிற்க, பயத்தில் திறந்த வாய் மூடாமல் நின்றிருந்தவளை சட்டென அணைத்து “ஒண்ணுமில்லை... ஒண்ணுமில்ல.. ஈஸி... ஈஸிடா...” என்று முதுகை நீவி விட்டவாறே அங்கிருந்து அவளை மெல்ல அறைக்குள் நகர்த்திச் சென்றவன், அவளைப் படுக்கையில் அமர வைக்க முயல, வெளியே பயத்தில் இறுக்கமாக பற்றி இருந்த அவனின் இருபக்க சட்டை காலரை இன்னுமும் விடாமல் பிடித்திருந்தாள் நீரு.
 
 
“பேபி... ஒண்ணுமில்லடா, ஈஸி...” என்று ஆறுதல்படுத்த முயன்றவனை நிமிர்ந்து பார்த்தவள், “என்ன டா செஞ்சீங்க அவனை, என்ன செஞ்சீங்க... பாவம் டா அவன், இன்னும் நீங்கல்லாம் எத்தனை பேர் வாழ்க்கையை அழிக்கப் போறீங்க... என்னையும் இவனையும் போல இன்னும் எத்தனை பேர்... சொல்லுங்க எத்தனை பேர்... அப்போவும் உங்க வெறி அடங்காது இல்ல... அடங்காது...” என்று சஞ்சயின் சட்டையைப் பற்றி உலுக்கியவளின் இந்தத் திடீர் செய்கை புரியாமல் திகைத்தான் சஞ்சய்.
“நீரு... நீரு...” என்று அவளை மெல்ல சமாதனப்படுத்த சஞ்சய் எடுத்த எந்த ஒரு முயற்சியும் அவளிடம் பலிக்கவில்லை என்பதை விட அவள் இவனின் அழைப்பை கூட உணரும் நிலையில் இல்லை... மீண்டும் மீண்டும் அதையே பேசியவாறு அரற்றிக் கொண்டு இருந்தவளை தன்னிடமிருந்து ஒரு வேகத்தோடு பிரித்தவன், படுக்கையில் அமர செய்து “ஹேய்... இனி ஒரு வார்த்தை வாயில் இருந்து வந்துது அப்படியே அறைஞ்சிடுவேன்... மூச்...” என வாயின் மேல் விரலை வைத்து மிரட்ட... அவனின் இந்தக் குரலில் மிரண்டு திகைத்தவள் அமைதியானாள்.
 
 
அவளின் இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டவன், அவசரமாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் காவல் நிலையத்திற்கு அழைத்து விஷயத்தைக் கூறி வேகமாக அவர்களை வருமாறு கட்டளையிட்டான். அவர்கள் வருவதற்குள் வாசல் படியில் தலைகீழாகச் சரிந்து இறந்து கிடந்தவனின் அருகில் சென்று அவனைத் தொட்டுக் கிரைம் சீனை கலைத்து விடாமல் சுற்றி வந்து கூர்மையாக ஏதேனும் புலப்படுகிறதா என ஆராயத் தொடங்கினான்.
 
 
அதே நேரம் சஞ்சயின் அலைபேசி அழைக்கவும், கவனம் முழுவதையும் உடலை சுற்றி ஆராய்வதிலேயே வைத்திருந்தவன், யார் என்று கூடப் பார்க்காமல் எடுத்து காவல் நிலையத்தில் இருந்து என்று எண்ணி பேச தொடங்கினான்.
 
 
“சொல்லுங்க ஏன் லேட்...” என்ற குரலில் இருந்த குழப்பத்திலும் கோபத்திலும் அந்தப் பக்கம் அழைத்திருந்த ஆராவுமுதன், “என்ன ஆச்சு சஞ்சு...?” எனவும், “அங்கிள் நீங்களா...?!” என்றவாறே அலைபேசியை எடுத்து பெயரை பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டான்.
 
 
அவன் குரலிலும் அதன் பின்னான அமைதியிலுமே சஞ்சயின் சைகையைக் கணித்து இருந்தவர், “எனி பிராப்ளம் சஞ்சு..?” என்றிருந்தார். அவனும் எதையும் மறைக்காமல் அனைத்தையும் அவரிடம் கூறி இருக்க... “ம்ம்ம்... கொஞ்சம் வியர்டா இருக்கு, என்ன கேஸ்னு முதலில் கவனி சஞ்சு...” என்று தொடங்கி மேலும் சிலவற்றைப் பேசிவிட்டுப் போனை வைத்திருந்தார்.
 
 
சஞ்சய் இப்போது இருக்கும் மன நிலையில் அவரும் எதற்கு அழைத்தார் என்று கூறாமல் விட்டிருக்க.. அவனுமே அவரின் இந்த நேரத்து அழைப்பையும் அவரின் குரலில் இருந்த வித்தியாசத்தையும் கவனிக்கத் தவறி இருந்தான், பின் இதைக் குறித்து வருந்த போவது தெரியாமலே.
 
 
சம்பந்தமே இல்லாமல் ஒருவன் தன் வீட்டு வாசலில் வந்து புரியாத எதையோ பேசி விட்டு இறந்ததே சஞ்சயின் மனம் முழுவதும் குழப்பத்தையும் சந்தேகத்தையும் விதைத்து இருக்க... வேறு எந்த நினைவுமே அவனுக்கு வரவில்லை.
 
 
அதற்குள் காவலர்களும் வந்து விடவே, இறந்தவனின் உடலை வேகமாக ஆராய்ந்து முடித்து அவனை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு சென்றனர். அவர்களுக்குச் சில பல கட்டளைகளையிட்டவன், இவன் யார் என்ன என்ற தகவல் தனக்கு உடனடியாக வேண்டும் என்று தெரிவித்து இருந்தான்.
 
 
அவர்கள் கிளம்பி சென்றதும் யோசனையோடே நடந்துக் கொண்டு இருந்தவனுக்கு, இறந்தவன் கூறிய “பெயரை சொன்னாலே தெரியற அளவுக்கு நான் உங்க அளவு பெரிய ஆள் எல்லாம் இல்லை சார்... உங்க போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கறவங்களுக்கு வேணா லேசா ஞாபகம் இருக்கலாம்... அதுவும் இருக்கோ இல்லை தெரியலை...” என்ற வரிகள் நினைவுக்கு வரவும், மீண்டும் மனதில் அதையே சில முறை ஓட்டிப் பார்த்தவன், இன்ஸ்பெக்டர் ஆனந்த்திற்கு அழைத்தான்.
 
 
“சார்... இப்போ தான் விஷயம் கேள்விபட்டேன் சார்...”
 
 
“ம்ம்... ஆனந்த், ஒரு ஒன்பது இல்லை பத்து மாசம் முன்னே நடந்த கேஸ்ல சம்பந்தப்பட்டவனா இருக்கலாம்னு நினைக்கறேன்... அப்போ இருக்க மேஜர் கேஸ் என்னனு லிஸ்ட் கொடுங்க...” என்று பேசிக் கொண்டு இருக்கும் போதே சற்று முன் இறந்தவனைத் தூக்கி சென்ற ஏட்டுவிடம் இருந்து சஞ்சய்க்கு அழைப்பு வந்தது.
 
 
உடனடியாக அந்த அழைப்பை துண்டித்து இதை எடுத்தவனுக்கு, “சார்... செத்தவன் யாருன்னு தெரிஞ்சிடுச்சு சார்...” என்ற ஏட்டின் உற்சாகமான பதில் வியப்பை தந்தாலும், “அதுக்குள்ளவா கோவிந்தன்...” என ஆச்சர்யமாகக் கேட்டிருந்தான்.
 
 
“ஆமா சார்... முகத்தில் இருந்த ரத்தத்தை டாக்டர் இப்போ தான் துடைச்சாங்க சார்... இவன் பேரு மதன்... பொண்டாட்டியை கொலை செஞ்ச  வழக்கில் உள்ளே இருந்தவன் சார் இவன்...” என்று அவர் கூறவும், சற்று முன்பு அவன் தன் மனைவியைப் பற்றிக் கூறியது நினைவுக்கு வரவும்,
 
 
“ஏன் மனைவியைக் கொன்னான் கோவிந்தன்...?”
 
 
“இல்லிகள் ரிலேஷன்ஷிப் சார்... கண்ணால் பார்த்ததும் ரெண்டு பேரையும் குத்தி கொன்னுட்டான்...”
“ஓ...” என்று இழுத்தவனுக்கு, ‘காதலித்து மணந்தவங்களை எந்த நிலையிலும் காப்பாத்த தானே நினைப்போம் ஏசிபி சார்...?! அப்பறம் நான் மட்டும் அப்படிச் செய்வேன்னு ஏன் யாருக்குமே தோணாம போச்சு சார்...?’ என்ற அவனின் குரலே மீண்டும் மீண்டும் காதில் ஒலித்தது.
 
 
“சார்... சார்...”
 
 
“ஆங்... கோவிந்தன் சொல்லுங்க...?”
 
 
“இல்லை சார்... இவன் ஏன் உங்க வீட்டு வாசலில் வந்து தற்கொலை செஞ்சிக்கணும் சார்..?”
 
 
“அதான் எனக்கும் புரியலை... பார்க்கலாம், நீங்க அங்கே பார்த்துகோங்க...” என்றபடியே யோசனையோடு வைத்தவனுக்கும், இதே கேள்வி தான் மனம் முழுக்க இருந்தது. ‘இந்த வழக்கு நடக்கும் போது தான் இங்கு இல்லை... தனக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத வழக்கில் தண்டனை பெற்ற ஒருவன் ஏன் இங்கு வந்து தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணியவன், உடனே ஆனந்தை அழைத்து மதன் சம்பந்தப்பட்ட கேஸ் பைலை கொண்டு வர பணித்தான்.
 
 
அடுத்தப் பதினைந்து நிமிடத்தில் ஆனந்த் அந்தக் கோப்போடு வந்து விடவே, “இது யார் பார்த்த கேஸ் ஆனந்த்...?”
 
 
“மதுசூதனன் பார்த்தார் சார்...”
 
 
“ஓ...” என்றவன், அனைத்தையும் படித்துப் பார்த்ததில் ஏதோ எங்கோ தவறாக இருப்பது போலப் பட்டது.
 
 
“ஏதோ பிசுறுதட்டுதே ஆனந்த்... அங்கே என்ன பார்த்தீங்க ஒருமுறை கிளியரா சொல்லுங்க...”
 
 
“என்ன சார்... எல்லாம் கிளியரா தானே சார் இருக்கு... நானும் அன்னைக்கு அவர் கூடப் போய் இருந்தேன் சார்... உடம்பெல்லாம் ரத்தத்தோடு இரண்டு பிணங்களுக்கு நடுவில் உட்கார்ந்து நானே உன்னைக் கொன்னுட்டேனேன்னு புலம்பிகிட்டே இருந்தான் சார்...”
 
 
“சோ... இவன் தான் கொலை செஞ்சான்னு முடிவே செஞ்சிட்டீங்க அப்படித் தானே...”
 
 
“இதில் சந்தேகப்படும்படி எதுவுமே இல்லையே சார்... இவன் வீட்டில் இரவு ஒன்பது மணிக்கு ஒய்ப் வேற ஒருத்தன் கூட இருந்து இருக்கா... உள்ளே வந்து அதைப் பார்த்தவன், கோபத்தில் இரண்டு பேரையும் கொன்னுட்டான்...”
 
 
“ஓ... அப்படி வரீங்க... ம்ம்ம்... சரி இவன் என்ன செய்யறான்...?”
 
 
“வக்கீல் சார்...”
 
 
“யாருஊஊ...?”
 
 
“வக்கீல்”
 
 
“இவனே தான் கேஸ் அட்டென்ட் செஞ்சானா...?”
 
 
“இல்லை சார்... வேற யாரும் கூட வேண்டாம்னு சொல்லிட்டான்... தண்டனையையும் அமைதியா ஏத்துகிட்டான்... பத்து வருஷ ஆயுள்தண்டனை கொடுத்தாங்க சார்... இப்போ எப்படி வெளியே வந்தான்னு இப்போ தான் நீங்க பைல் கேட்டதும் விசாரிச்சேன், பெயில் வாங்கி இருக்கான் சார்... வெளியே வந்து பத்து நாள் ஆகுது...”
 
 
ஆனந்த் கூறிய அனைத்தையும் மனதிற்குள் ஒட்டி பார்த்தான் சஞ்சய், ‘இவனே வக்கீல் ஆனாலும் வழக்கை எதிர்த்து வாதாடலை... அரஸ்ட் செய்யும் போதும் கொலை செய்யலைன்னு சொல்லலை... இப்போ இத்தனை மாசத்துக்குப் பிறகு தானே பெயில் கேட்டு வெளியே வந்தவன், ஏன் தற்கொலை செஞ்சிக்கணும்... அப்படித் தற்கொலை தான் அவன் எண்ணம்னா அதை அவன் உள்ளேயே கூடச் செஞ்சிகிட்டு இருந்து இருக்கலாமே...!? அப்படியே செஞ்சிக்கிட்டாலும் என் வீட்டு வாசலில் ஏன்...?!’ இப்படி விடை இல்லாத கேள்விகள் நீடு கொண்டே செல்ல...
 
 
“அந்த லேடி பேர் என்ன...?”
 
 
“ஆயிஷா சார்...”
 
 
“ஆயிஷா...?!!!”
 
 
“எஸ் சார்... லவ் மேரேஜ், ஸ்கூல் படிக்கும் போதில் இருந்தே இரண்டு பேருக்கும் லவ்... இரண்டு வீட்டிலேயும் சம்மதிக்கலை... முடிஞ்ச வரை போராடி பார்த்துப் பின் வீட்டை எதிர்த்துக் கல்யாணம் செஞ்சிக்கிட்டாங்க... கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆகுது... குழந்தை இல்லை, ஐந்து வருஷத்துக்குக் குழந்தை வேண்டாம்னு முடிவு செஞ்சு இருந்தாங்களாம்...
 
 
இவங்களே தான் எல்லாம் செய்யணும்னு வரும்போது அதுக்கு முதலில் தயாராகிட்டு குழந்தை பற்றி யோசிக்கலாம்னு முடிவாம்... வீடு சொந்த வீடு தான் சார்... வளர்ந்து வரும் ஏரியா அது... அந்த வீதியில் மொத்தம் இருப்பதே ஆறு வீடு தான் சார்... லோன் போட்டு வாங்கி ஒரு வருஷம் கூட ஆகலையாம்...
 
 
கொலை நடந்த அன்னைக்கு அந்த ரவி ஆயிஷாவை பார்க்க நைட் அவங்க வீட்டுக்கு எட்டரை மணிக்கு வந்திருக்கான் சார்... ஆயிஷா தான் வெளியே வந்து கூட்டிகிட்டு போய் இருக்கா... இரண்டு பேரும் உள்ளே போகறதுக்கு முன்னே சுத்தி முத்தி பார்த்துட்டு தான் போய் இருக்காங்க..
 
 
எதிர் பக்கம் கொஞ்சம் தள்ளி இருந்த வீட்டு லேடி வாக்கிங் போயிட்டு திரும்ப வரும் போது கவனித்து இருக்காங்க சார்... தனி வீடு தான் அதனால் எந்த ப்ரச்சனையும் இல்ல... மதன் சனிக்கிழமை சயந்திரம் பெருமாள் கோவில் போவதை வழக்கமா வெச்சு இருக்கான் சார், ஒன்பது மணிக்கு தான் வீட்டுக்கு வருவானாம்... அந்த நேரத்தை இவங்களுக்குச் சாதகமா யூஸ் செஞ்சிக்கப் பார்த்து இருக்காங்க... அப்போ மதன் வீட்டுக்கு வந்து இவங்களைப் பார்த்ததும் எழுந்த கோபத்தில் கொன்னுட்டான் சார்... எல்லாம் கிளியரா தானே சார் இருக்கு...?”
 
 
“நம்ம பக்கம் தப்பில்லைன்னு ரொம்ப உறுதியா இருக்கீங்களா...?! இல்லை தப்பிலைன்னு நம்ப வைக்க முயற்சிக்கறீங்ககளா ஆனந்த்...?!” என்ற சஞ்சயின் கேள்வியில் “சார்... இல்லை சார்... நம்ம பக்கம் தப்பிருக்க வாய்ப்பே இல்லை சார்... நல்லா விசாரிச்சிட்டேன்..” என்று பதறினான் ஆனந்த்.
 
 
“ம்ம்ம்... ஆயிஷா என்ன செஞ்சுகிட்டு இருந்தாங்க...?”
 
 
“டீச்சர் சார்..”
 
 
“என்ன...?”
 
 
“ஆமா சார், டீச்சர்... அந்த ரவியும் டீச்சர் தான் சார்... இரண்டு பேரும் ஒண்ணா எம்எட் பண்ணி இருக்காங்க... அப்போதிலிருந்து பழக்கம் போலச் சார்... ஆயிஷா மூணு வருஷமா அங்கே வேலை செஞ்சு இருக்கா... ரவி இரண்டு மாசம் முன்னே தான் அங்கே சேர்ந்து இருக்கான்... மறுபடி அவங்களுக்குள்ளே கனெக்ஷன் ஆகிடுச்சு...”
 
 
“அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்லறீங்க ஆனந்த்...?”
 
 
“ஸ்கூல்ல போய் விசாரிச்சேன் சார்... கூட வேலை செய்யற டீச்சர் எல்லாம் அவங்க எப்பவும் ஒண்ணாவே தான் இருப்பாங்கன்னும்... மத்தவங்களுக்குத் தெரியாம புரியாம ரகசியம் பேசிக்குவாங்கன்னும் சொன்னாங்க சார்...”
 
 
“பிரண்ட்ஸ் ரகசியம் பேசிக்கக் கூடாதா ஆனந்த்...?”
 
 
“அப்படி இல்லை சார்... அந்த ஸ்கூல் கரஸ் ஒரு படி மேலே போய் இரண்டு பேரும் லேப்ல கட்டி பிடிச்சு இருக்கறதை பார்த்து வார்ன் செஞ்சி விட்டேன்னு கூடச் சொன்னாரு சார்... இதை அன்னைக்குச் சில டீச்சரும் பார்த்து இருக்காங்க சார்...”
 
 
“ஓஹோ... இதுக்கெல்லாம் வாக்குமூலம் இருக்கா...? பைல் செஞ்சு இருக்கீங்களா...?!”
 
 
“இருக்கு சார்...”
 
 
“எந்த ஸ்கூல்...?”
 
 
“புஷ்பாஞ்சலி கல்வி குழுமம் சார்..”
 
 
“வாட்...?”
 
 
“எஸ் சார்”
 
 
“ஓ...” என்று யோசனையோடு கன்னத்தைத் தடவியவன், “ரவிக்குப் பேமிலி இல்லையா...?”
 
 
“இருக்கு சார்... அது இன்னும் ரொம்ப வேதனை... அவன் ஒய்ப் நிறை மாசம் சார்... விஷயம் தெரிஞ்சு தற்கொலை செஞ்சுகிட்டாங்க...”
 
 
சஞ்சய்க்கு இதைக் கேட்டதும் மனம் பதறிப் போனது. சில நொடிகள் எடுத்துத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், “ஆயிஷா, ரவி, அவன் மனைவி, குழந்தை, இதோ இப்போ மதன்... ஆக மொத்தம் ஐந்து உயிர் பலி, ஆனா அவன் ஏன் ஆறுன்னு சொன்னான்...?!”
 
 
“அதுதான் சார் எனக்கும் புரியலை... ஏதோ கோபத்தில் வந்து உளறி இருக்கான் சார்...” என்றவன், ஒரு சிறு இடைவெளிவிட்டு “ஆனா சார்... இந்தக் கேசை ஹாண்டில் செஞ்சது மதுசூதனன்... அவர் மேலே கோபம் வருவது நியாயம், அவர் இப்போ உள்ளே இருக்கும் பட்சத்தில் அடுத்து கூட இருந்தது நான் என் வீட்டுக்கு வந்திருந்தா கூடப் பரவாயில்லை... சம்பந்தமே இல்லாம உங்க வீட்டுக்கு எதுக்கு சார் வரணும்...”
 
 
“அதே தான் எனக்கும் புரியலை ஆனந்த்...”
 
 
“ஏதோ இடிக்குது சார்...”
 
 
“எனக்கும் தான் ஆனந்த்... பார்ப்போம், ஒகே ரொம்ப லேட் நைட் ஆகிடுச்சு, நீங்க கிளம்புங்க... காலையில் சிக்கீரம் ரிப்போர்ட் வந்ததும் வேலையைத் தொடங்கணும்...” என்று எழுந்துக் கொண்டான்.
 
 
கூடவே எழுந்துக் கொண்ட ஆனந்தும் “எனக்கு இதில் புதுசா என்ன இருக்கப் போகுதுன்னு தான் தோணுது சார்...” என்று தயங்கி இழுக்க...
 
 
“அதையும் தான் ஒரு முறை பார்த்துடுவோமே...” என்று ஆனந்துக்கு விடைக் கொடுத்துவிட்டு வந்து சஞ்சய் படுக்கையில் விழுந்த போது மணி இரண்டை தொட்டிருந்தது. அருகில் நீரு சரியாகக் கூடப் படுக்காமல் அப்படியே சாய்ந்தவாக்கிலேயே உறங்கிக் கொண்டிருந்தாள்.
 
 
வழக்கம் போல ஐந்தரை மணிக்கு நீரு விழித்த போது, எப்போதும் போலவே சஞ்சய் அருகில் இல்லை. உடற்பயிற்சி அறையில் இருப்பான் என்ற எண்ணத்தோடு குளித்துத் தயாரானவள், வெளியில் வரும் போது உணவு மேசை மேல் இருந்த துண்டு சீட்டு அவளை வரவேற்றது.
 
 
“அவசர வேலை... நீ ஆட்டோ பிடித்து ஸ்கூல்க்கு போயிடு... காலை உணவு ஆர்டர் செஞ்சிடறேன்... மறக்காமல் சாப்பிட்டு கிளம்பு...” – உன் பொறுக்கி
 
 
இரண்டே வரிகள் அதுவும் செல்லும் வேகத்தில் அவசரமாக எழுதப்பட்டிருப்பது தெரிந்தது. முன்பே அவன் என்றால் பிடிக்காது... இதில் நேற்று அவன் பேசிய பேச்சும் வைத்த குற்றசாட்டும் அதன் பின் நிகழ்ந்தவைகளும் கண் முன்னால் வந்து போனதில் நீ இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி அது எனக்கு ஒன்று தான் என்பது போன்ற மன நிலையோடு தயாராகிக் கொண்டிருந்தாள் நீரு.
 
 
ஆட்டோவில் பள்ளி இருந்த வீதியின் உள்ளே நுழைய முடியாத அளவு வீதி முழுவதும் கும்பல் இருக்கவே... அங்கேயே இறங்கி நடந்தவளின் பார்வையில் பள்ளியின் பிரதான வாசல் அருகே அதை அடைத்ததைப் போல ஒரு சிறுவனைப் படுக்க வைத்து அதைச் சுற்றிலும் இருந்தவர்கள் அழுகையிலும் கோபத்திலும் கொந்தளித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
 
 
“பாவிங்களா... பாவிங்களா... அப்படி என்னடா செஞ்சிட்டான் என் பையன், இப்படிப் பொட்டலமா கட்டி கையில் கொடுத்துட்டீங்களே... ஐந்து வருஷமா தவம் இருந்து பெத்தேனே... இப்படி இருந்த ஒத்த புள்ளையையும் இல்லாம செஞ்சிட்டீங்களே டா... என் வயித்தெரிச்சல் உங்களைச் சும்மா விடாது டா...” என்று மார்பிலும் வயிற்றிலும் ஒரு தாய் அடித்துக் கொண்டு அழுவது தெரிந்தது.
 
 
அருகில் சுற்றி நின்றிருந்தவர்கள் எல்லாம் உள்ளே புகுந்து துவம்சம் செய்யும் வெறியில் கொந்தளித்துக் கொண்டிருந்தனர். அவர்களைத் தடி தடியான ஆட்கள் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தனர். இதெல்லாம் எதையோ உணர்த்த, மெல்ல அங்குக் கிடத்தப்பட்டிருந்த சிறுவனின் முகத்தைச் சற்று நகர்ந்து எட்டி பார்த்தவளுக்கு நேற்று காலை முதல் மாலை வரை மூன்று நான்கு முறை அலுவலக அறைக்குச் செல்லும் வழியில் இவன் பள்ளி முதல்வரின் அறைக்கு வெளியே பெற்றோரோடு நின்றிருந்ததைப் பாத்தது நினைவு வந்து திக்கென்றது.

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 311
Topic starter  

ஹாய் பிரெண்ட்ஸ்..

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

KMKN - 14

https://kavichandranovels.com/community/topicid/628/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 

கவி சந்திரா 


   
ReplyQuote
Page 2 / 2

You cannot copy content of this page