All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

சித்திரையில் நீ மார...
 
Notifications
Clear all

சித்திரையில் நீ மார்கழி..!! - Story Thread

Page 4 / 4
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 291
Topic starter  
 
 
சித்திரை - 24
 
 
வர்மாவுக்குத் தாமதமாகவே இங்கே நடக்கும் பிரச்சனை பற்றித் தெரிய வந்திருந்தது. பாலு தான் அவசரமாக இதைப் பற்றி அலைபேசியில் அழைத்து வர்மாவிடம் சொல்லியிருக்க.. வேகமாக அங்கு வர்மா வந்து சேர்ந்த நொடி அவன் கேட்டது எல்லாம் நிலா இறுதியாகப் பேசிய வார்த்தைகளைத் தான்.
 
 
அவளைப் பற்றியோ, மற்றவர்கள் அவளை என்ன நினைப்பார்கள்..? இனி எப்படிப் பார்ப்பார்கள் என்பதைப் பற்றியோ துளியும் கவலைப்படாமல் நிலா பேசிய வார்த்தைகளின் திகைப்பில் இருந்து மீள முடியாமல் அப்படியே நின்றுவிட்டான் வர்மா. பாட்டி நிலாவை நோக்கி வருவதைக் கண்ட பின்பே அவன் இயல்புக்குத் திரும்பினான்.
 
 
இதையெல்லாம் யோசித்தப்படியே நிலாவின் மேல் பார்வையை வர்மா பதித்திருக்க.. அவளோ யாரையும் பார்க்காமல் பார்வையைத் தழைத்தப்படியே பாட்டியை தாங்கிப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள். மின் தூக்கியிலிருந்து வெளியே வந்தவர்கள் சரோஜா பாட்டியின் அறைக்குள் நுழைந்தனர்.
 
 
அங்கிருந்த சோபாவிற்கு பாட்டியை அழைத்துச் சென்றவர்கள் அவரைக் குஷன் வைத்து சாய்வாக அமர வைக்க.. நிலாவின் கையை மெதுவாகப் பிடித்துக் கொண்டவர் தன் அருகில் அமருமாறு சைகையில் சொல்ல.. அவளும் தயக்கத்தோடே அங்கு அமர்ந்தாள்.
 
 
நிச்சயம் அப்படிப் பேசியதற்காகப் பெரிதாகத் திட்டப் போகிறார் என்ற பயத்தோடு நிலா அமர்ந்திருக்க.. சில நிமிடங்களுக்கு அவள் கைகளை அன்போடு பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அதில் புரியாமல் மெல்ல விழிகளை உயர்த்தி பாட்டியை பார்த்தாள் நிலா.
 
 
அவள் பார்வையைக் கண்டு கொண்ட சரோஜா “அத்தனை பேர் முன்னே இப்படி ஒரு வார்த்தையைச் சொல்லிட்டியேமா.. யாராவது தப்பா நினைச்சுக்குவாங்கன்னு உனக்குக் கொஞ்சம் கூடத் தயக்கமா இல்லையா..?” என்றார்.
 
 
அதற்கு உடனே நிலாவிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்றாலும் சில நொடிகளுக்குப் பிறகு விழிகளை உயர்த்திப் பாட்டியை பார்த்தவள், “இல்லைனா மட்டும் என்னைத் தப்பா பேசாமலா இருக்கப் போறாங்க பாட்டி மேடம்.. எப்படியும் அவங்க நினைக்கறதை தான் பேச போறாங்க, அதை இப்படிப் பேசிட்டு போகட்டுமே..!” என்றாள் நிலா.
 
 
“ஆனாலும்..” என்று பாட்டி ஏதோ சொல்ல தொடங்கவும், “சார் எனக்குச் செஞ்சதுக்கு இதெல்லாம் ஒண்ணுமில்லை பாட்டி மேடம்.. நான் கேட்காமலே எங்க அம்மா உயிரை காப்பாத்தி கொடுத்திருக்கார்.. அன்னைக்கு மட்டும் அவர் அதைச் செய்யலைனா இன்னைக்கு நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன்.. இது அவர் கொடுத்த உயிர் பிச்சை, அவருக்குச் செய்யறதில் என்னவாகிடப் போகுது..” என்றாள் நிலா.
 
 
வெளி வார்த்தைக்கு அப்படிச் சொன்னாலும் நிஜத்தில் அவளுள் வேறு காரணமும் இருந்தது. அதை அவளால் வெளிப்படுத்திக் கொள்ளத் தான் முடியவில்லை. வர்மாவை இப்படிப் பேசுகிறார்கள் என்று தெரிந்த உடன் வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்தக் கெட்ட பெயரை துடைத்து தூர ஏறிய தான் மனம் பரபரத்தது.
 
 
அந்த நொடி வேறு எந்த நினைவும் அவளுக்கு வரவில்லை. ஆனால் அதையெல்லாம் இவரிடம் சொல்ல முடியாதே என்ற தயக்கத்திலேயே நன்றி என்ற ஒன்றை வைத்து நிலா தப்பித்துக் கொள்ள நினைக்க.. வர்மாவுக்குத் தான் அந்தப் பதில் ஏமாற்றத்தை தந்தது.
 
 
காதலோடு அவள் பேசவில்லை என்றாலும் இப்படி நன்றியென்று சொல்பவளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்..? அதுவும் இப்படியான ஒரு பழி தன் மேல் இருப்பதை அவள் அறிந்து கொண்ட பின் என்ற எண்ணத்தோடு “எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு பாட்டி.. நீங்க ரெஸ்ட் எடுங்க, நான் அப்பறம் வரேன்..” என்று விட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறி இருந்தான் வர்மா.
 
 
அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த பாட்டி, மெல்ல திரும்பி நிலாவைப் பார்த்தார். அதுவரை வர்மா சென்ற திசையைப் பார்த்தப்படி இருந்த நிலா சட்டெனப் பார்வையைத் தழைத்துக் கொண்டாள்.
 
 
அவள் சொல்வதில் உள்ள உண்மை புரிந்தாலும் இன்று அவள் பேசியதில் வர்மாவின் மேல் இருந்த பழி வேண்டுமானால் காணமால் போகலாம். ஆனால் அவள் இனி பழி சுமக்க வேண்டி இருக்குமே..! வயது பெண், இப்படியொரு பெயரோடு இருப்பது பாவம் இல்லையா..! என சரோஜாவின் மனம் அடித்துக் கொண்டது.
 
 
இன்று நிலாவை பார்க்க தான் இங்கே கிளம்பி வந்திருந்தார் சரோஜா. நேற்று வீடு திரும்பியதில் இருந்து வர்மாவின் முகத்தில் தெரிந்த சந்தோஷம் அவரை யோசிக்க வைத்தது. டெண்டர் கிடைத்திருக்கும் விஷயம் வர்மாவின் மூலம் தெரிய வந்திருந்தாலும் அவனின் இந்த மலர்ந்த முகத்திற்குப் பின் வேறு ஏதோ இருப்பதாக அவருக்குத் தோன்றியது.
 
 
இதற்கு முன் பெரிய வெற்றிகளைப் பார்க்காதவனா வர்மா..? அப்போதெல்லாம் இல்லாத ஒரு மலர்ச்சி இன்று தெரிவதற்கான காரணம் என்னவென்று தான் அவருக்குத் தெரிய வேண்டி இருந்தது. அதோடு அவன் இதழ்களில் தங்கி விட்ட மெல்லிய புன்னகை அவரை மனம் பூரிக்கச் செய்திருந்தது.
 
 
இப்படி அவனைப் பார்த்து எத்தனை வருடங்களாகிறது..?’ என எண்ணியவருக்குக் கண்கள் கலங்கியது. நிச்சயம் இது தொழில்சம்பந்தபட்ட விஷயமில்லை எனத் தெளிவாக புரிய.. இதற்குப் பின் இருப்பது நிலா தான் என்ற முடிவுக்கு வந்தவராகத் தான் அவளைப் பார்க்க அலுவலகம் கிளம்பி வந்திருந்தார் சரோஜா.
 
 
வர்மாவுக்குக் கூட அவர் இங்கே வரும் விஷயம் தெரியாது. சரியாக அவர் காரிலிருந்து இறங்கும் போதே நிலா அலுவலகத்திற்குள் நுழைய.. அவளிடம் பேசவே வழக்கமாகச் செல்லும் வழியில் உள்ளே போகாமல் நிலாவைப் பின் தொடர்ந்து வந்திருந்தவருக்கு அடுத்து நடந்த அத்தனையும் தெரியும்.
 
 
தன் பேரனின் முகத்தில் மீண்டும் புன்னகையைக் கொண்டு வந்ததற்கே அவளுக்கு என்னவும் செய்யத் தயாராக இருந்தவர், இன்று நிலா பேசியதை கேட்ட பின் இந்த நொடியே கையோடு அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் தயாராகி விட்டார் சரோஜா.
 
 
ஆனால் இதில் அவளுக்கு எத்தனை தூரம் சம்மதம் எனவும் அவருக்குத் தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. அவசரப்பட்டு இந்தப் பேச்சை தொடங்கி மீண்டும் ஒரு தவறை செய்ய அவருக்கு விருப்பமில்லை. இதில் யோசனையோடு அமர்ந்திருந்தவர், “மஹி வாழ்க்கையில் என்னாச்சுன்னு உனக்குத் தெரியுமா நிலா..?” என்றார்.
 
 
நிலா இல்லை என்பதாகத் தலையசைக்க.. நீண்ட ஒரு பெருமூச்சை வெளியேற்றியவாறே அவளைப் பார்த்த பாட்டி மெல்ல அனைத்தையும் சொல்ல தொடங்கினார்.
 
 
***********
 
 
ஒரு பிசினஸ் பார்ட்டியில் தான் முதன்முதலில் நேஹாவை பார்த்திருந்தான் வர்மா. கருப்பு ஃபுல் பிராக்கில் தங்க நிற நட்சத்திரங்களை வாறி இறைத்தது போலான உடையில் தேவதை போல் ஜொலித்துக் கொண்டிருந்தாள்.
 
 
அங்கிருந்த அத்தனை பேரின் பார்வையும் அவளையே வட்டமிட்டுக் கொண்டிருக்க.. வர்மாவும் அதற்கு விதிவிலக்கல்ல. அவளின் அழகு அவனையும் திரும்பி பார்க்க செய்திருந்தது.
 
 
ஆனால் மற்றவர்களைப் போல் பார்வையாலேயே அவளைப் பின்தொடர்ந்து தொல்லை செய்யாமல் ரசனையோடு நேஹாவை ஓரிரு முறை பார்த்ததோடு நிறுத்திக் கொண்டான் வர்மா.
 
 
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்திருக்க.. திடீரெனத் தனியே நின்று அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த வர்மாவின் அருகில் வந்து நின்ற நேஹா, “எனக்கு ஒரு ஹெல்ப் செய்யறீங்களா..?” என மெல்லிய குரலில் கேட்க.. அவளை வர்மா என்னவென்பது போல் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனின் முழங்கையோடு சேர்த்து தன் கரத்தை கோர்த்துக் கொண்டவள், அவனின் தோளில் சாய்ந்து நெருக்கமாக நின்றாள்.
 
 
இது அவனுக்குப் பிடித்திருந்தாலும் திடீரென ‘என்ன இது..?’ என்பது போல் அவன் நேஹாவை கேள்வியாகப் பார்த்துக் கொண்டிருக்க.. “ப்ளீஸ் இப்படிப் பார்க்காதீங்க.. நாம கப்பிள் இல்லைன்னு ஈஸியா கண்டுபிடிச்சுடுவான்.. கொஞ்சம் ஆக்ட் செய்ங்க..” என அவன் பின்னே விழிகளால் சுட்டி காண்பித்தவாறே மெல்ல கிசுகிசுத்தாள் நேஹா.
 
 
அதில் அவள் பார்வை சென்ற திசையைத் திரும்பிப் பார்த்தவன், அங்கு நேஹாவையே ஏமாற்றத்தோடு பார்த்தப்படி ஒருவன் நிற்பதை கண்டு ஏதோ பிரச்சனை எனப் புரிய.. அவள் சொன்னது போலவே சில நொடிகள் நேஹாவோடு நெருக்கமாக இருப்பது போல் நடித்தான் வர்மா.
 
 
சிறிது நேரத்திற்குப் பின் மெதுவாகத் தலையை உயர்த்திப் பார்த்தவள், அங்கு யாரும் இல்லாததைக் கண்டு உண்டான நிம்மதி பெருமூச்சோடு “தேங்க்யூ சோ மச்.. இதுக்குத் தான் இந்த மாதிரியான பிசினஸ் பார்டிக்கெல்லாம் நான் வருவதே இல்லை.. எனக்கு இதெல்லாம் கொஞ்சமும் பிடிக்காது, செட்டும் ஆகாது.. ஆனா எங்க அப்பா தான் ரொம்பக் கம்பல் செஞ்சு, எனக்கு பிறகு நீ தானே அடுத்து இதையெல்லாம் பார்க்கணும்னு கூட்டிட்டு வந்தார்.. இந்தச் சர்க்கிளில் இருக்கும் எல்லாரையும் தெரிஞ்சு வெச்சுக்கோ, நாளைக்கு யூஸ் ஆகும்னு சேம் ஓல்ட் ப்ளா ப்ளா.. அது தான் வேற வழியே இல்லாம கிளம்பி வந்தேன்.. ஆனா இங்கே வந்ததில் இருந்து இந்த கௌஷிக் தொல்லை தாங்க முடியலை..
 
 
ஐ அம் நாட் இன்டரஸ்டட்னு டீசண்ட்டா சொல்லியும் பார்த்துட்டேன்.. ஆனாலும் புரிஞ்சுக்காம ஒரு டேட் போகலாமா..? பழகி பார்த்தா உனக்குக் கண்டிப்பா என்னைப் பிடிக்கும்னு ஓவர் கான்பிடண்டில் பேசறான்.. இந்தச் சிவேஷ் எங்கே போனான்னு வேற தெரியலை.. நான் வர மாட்டேன்னு சொன்ன போது அவன் தான் நீ வா நான் உன்னைப் பார்த்துக்கறேன்னு பெரிய பெரிய டயலாக் எல்லாம் பேசினான்.. இப்போ ஆளையே காணோம்..” என அவள் பேசிக்கொண்டே செல்ல.. மற்றதை எல்லாம் விடுத்து “சிவேஷ்..?” என்றான் கேள்வியாக விழிகளைச் சுருக்கி வர்மா.
 
 
“ஹ்ம்ம், என் ஸ்கூல்மேட், சைல்ட்வுட் ப்ரண்ட்.. அவனும் இங்கே வருவேன்னு சொன்னான்.. அதை நம்பி தான் வந்தேன், ஆனா இப்போ என்னாச்சுன்னு தெரியலை.. என் கால் கூட எடுக்கலை..” என வேகமாகச் சொல்லிக் கொண்டே வந்தவள், தன் இத்தனை பேச்சுக்கும் அவன் அமைதியாகவே இருப்பதைக் கண்டு அப்படியே பேசுவதை நிறுத்தி “சாரி உங்களை ரொம்பப் போர் அடிக்கறேன்னு நினைக்கறேன்.. இதோ கிளம்பிடறேன், ஒன்ஸ் அகைன் தேங்க்யூ..” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் நேஹா.
 
 
சிறு மென்னகையோடு அவள் சென்ற திசையையே வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்த வர்மாவுக்கு அவளின் பேச்சு நடந்து கொண்ட விதம் என அனைத்துமே பிடித்திருந்தது. தன் கைகளைக் கோர்த்துக் கொண்டு அவள் முகம் புதைத்திருந்த இடத்தை ஒரு முறை தடவி விட்டுக் கொண்டான் வர்மா.
 
 
அதன் பிறகு எதிர்பாரா பல சந்திப்புகள் அடிக்கடி நடக்கத் தொடங்க.. இருவரும் இயல்பாகப் பேசிப் பழகத் தொடங்கி இருந்தார்கள். இந்நிலையில் தான் ஒரு நாள் நேஹா திடீரெனத் தன் விருப்பத்தை வர்மாவிடம் சொல்ல.. அவனுக்கும் அதில் எந்த ஒரு மறுப்பும் இல்லை.
 
 
எந்தத் தடையோ பிரச்சனையோ இல்லாமல் இவர்கள் காதல் அழகாகச் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தான் சிவேஷை எதிர்பாராமல் ஒருமுறை ஹோட்டலில் சந்தித்தான் வர்மா.
 
 
நேஹாவோடு டின்னருக்கெனச் சென்றிருந்த இடத்தில் சிவேஷை சந்திக்க நேர.. அவனின் தந்தையைப் பற்றி முன்பே அறிந்திருந்த வர்மா, சமீபமாகத் தான் சிவேஷ் தொழிலை கையில் எடுத்திருப்பதை அறிந்து இருந்ததால் இன் முகமாகவே வாழ்த்தினான்.
 
 
ஆனால் வர்மாவோடு நேஹாவை கண்டதும் நொடியில் அவன் முகம் மாறிய விதமும், அதன் பின் நேஹாவிடம் அதிக உரிமை தனக்குத்தான் என்பது போல் அவன் நடந்து கொண்ட முறையும் கண்டு, அமைதியாகி விட்ட வர்மாவுக்கு சிவேஷ் அவளை விரும்புவது தெளிவாகவே புரிந்தது.
 
 
முன்பே நேஹாவின் பேச்சில் இருந்து சிவேஷ் அவளின் பள்ளி காலத் தோழன் எனத் தெரிந்து கொண்டிருந்த வர்மாவுக்கு, அப்போதிலிருந்தே சிவேஷிற்கு நேஹாவை பிடிக்குமென்றும் புரிந்தது.
 
 
ஆனால் நேஹாவிடம் இதைப்பற்றி இப்போது வரை அவன் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்பதும் வர்மாவுக்குப் புரிய.. இனி என்ன செய்ய முடியும் என்பது போல் அமைதியாக இருந்தான் வர்மா. ஆனால் அப்படி அமைதியாக இருக்கச் சிவேஷால் முடியவில்லை. எப்படியாவது வர்மாவை ஒதுங்கிக் கொள்ளச் செய்ய வேண்டுமென்பதே அவனின் நோக்கமாக இருந்தது.
 
 
நேஹாவின் முன்னே ஒரு மாதிரியும் அவள் இல்லாத நேரங்களில் ஒரு மாதிரியும் சிவேஷ் நடந்து கொள்ள.. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன் தொழில் காதல் எனச் சந்தோஷமாகவே இருந்தான் வர்மா.
 
 
ஒரு நாள் வேறொரு தொழிற்சம்பந்தப்பட்ட கூட்டத்தில் பங்கெடுத்து விட்டு வெளியில் வந்த வர்மாவின் வழியை மறிப்பது போல் வந்து நின்ற சிவேஷ் “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றான். அவன் பேசிய விதத்தில் இருந்தே அது நேஹாவை பற்றியது எனப் புரிய.. “அது நேஹா சம்பந்தப்பட்ட விஷயம்னா நாம அவளையும் வெச்சுட்டு பேசுவோம்..” என்றிருந்தான் வர்மா.
 
 
“இப்போ என்ன என்னை விட அவ மேலே உங்களுக்கு அதிக அக்கறை இருக்குன்னு காண்பிக்க நினைக்கறீங்களா..?” என நக்கலாகக் கேட்டவன் “உங்க நல்லதுக்குத் தான் சொல்றேன் நேஹா மாதிரியான கேரக்டரை ஹேண்டில் செய்யறது ரொம்பக் கஷ்டம்.. அவ பர்சனாலிட்டிக்கு நீங்க செட்டாக மாட்டீங்க.. அவகிட்ட இருந்து விலகிடுங்க..” என்று சிவேஷ் சொல்லவும், “விலகிடுன்னு சொல்றியா..? இல்லை உனக்கு விட்டுக் கொடுத்துட்டு போகணும்னு சொல்றியா..?” என்றான் வர்மா.
 
 
“உங்களுக்கு எப்படிப் புரியுதோ அப்படியே வெச்சுக்கோங்க.. ஆனா நேஹா எனக்குத் தான் சொந்தம்..” என்று விட்டு சிவேஷ் கோபமாக அங்கிருந்து சென்று விட.. அவன் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாத வர்மாவுக்கு இது தன் பொருள் தனக்குத்தான் சொந்தம் எனச் சிறு பிள்ளைத்தனமாக அவன் அடம் பிடிப்பது போல் தான் இருந்தது.
 
 
அதில் அப்போதைக்கு அதைப் பெரிதுப்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டான் வர்மா. இப்படியே நாட்கள் சென்று கொண்டிருக்க.. வர்மாவுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார் சரோஜா. அவனுக்கும் அதில் எந்த மறுப்பும் இல்லை என்பதால் நேஹாவை பற்றி அவரிடம் உடனே பகிர்ந்து கொண்டான் வர்மா.
 
 
முதலில் அவன் காதலிக்கும் விஷயம் அறிந்து சந்தோஷித்த சரோஜா பின் அவள் யார் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவள் எனத் தெரிய வந்த போது அதிர்ந்தார். “இல்லை மஹி.. இது சரிப்பட்டு வராது.. அந்த ஆளவந்தான் பொண்ணு நம்ம குடும்பத்துக்கு வேண்டாம்..” என்று உறுதியான குரலில் கூறினார் பாட்டி.
 
 
எப்போதுமே தன் தேவைகள் ஆசைகள் என எதையுமே மறுத்து பேசாத பாட்டியிடமிருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பாராதவன் சிறுத் திகைப்போடு அவரைப் பார்த்து “ஏன் பாட்டி..? என்னாச்சு..? நீங்க இப்படி எல்லாம் பேசறதை என்னால் நம்பவே முடியலை..” எனவும் “உனக்கு ஆளவந்தான் பத்தி தெரியும் தானே..!” என்றார் சரோஜா.
 
 
ஆளவந்தான் அவன் தாத்தா வழியில் நெருங்கிய சொந்தம். ஆனால் அப்போது சொத்துப் பிரிப்பது சம்பந்தமான பிரச்சனையில் கோபித்துக் கொண்டு இவர்கள் உறவே வேண்டாமென ஆளவந்தான் குடும்பம் இரு தலைமுறைக்கு முன்பே வெளியேறி இருந்தது.
 
 
அதன் பின் பேச்சு வார்த்தைகளே இல்லாமல் இருந்தாலும், பழிவெறி சொத்தின் மீதான பேராசை என இப்போது வரை அந்தக் கோபத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு வர்மாவின் தந்தை ராஜவர்மாவோடு அவ்வபோது தொழிலில் மோதி பலமுறை மூக்குடைபட்டு போய் உள்ளார் ஆளவந்தான்.
 
 
இதையெல்லாம் முன்பே அறிந்திருந்தாலும் ஏனோ நேஹாவை இதனோடெல்லாம் தொடர்புப்படுத்திப் பார்க்கவோ மறுக்கவோ வர்மாவின் காதல் மனம் இடம் தரவில்லை.
 
 
தொழில் முறையில் இரு குடும்பங்களுக்கும் பல வருடங்களாக முட்டல் மோதல்கள் இருப்பது அவனும் அறிந்த ஒன்று தான். ஆனால் ‘அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்..?’ என இன்றைய தலைமுறை இளைஞனாக யோசித்தான் வர்மா.
 
 
“இல்லை மஹி, உனக்கு அவனைப் பற்றித் தெரியலை.. என் இத்தனை வருட அனுபவத்தில் சொல்றேன்.. ஆளவந்தான் மாதிரி ஒருத்தன் இருக்கக் குடும்பத்தில் யாராலும் நிம்மதியா வாழ முடியாது.. அவனுக்கு அப்படியே அவங்க அப்பா குணம், தாத்தாவை எவ்வளவு எல்லாம் தொல்லை கொடுத்தாங்கன்னு எனக்குத் தான் தெரியும்.. அந்த வீட்டு பொண்ணு நமக்கு வேண்டாம்..” என்று ஆளவந்தான் பற்றிச் சரியாகவே கணித்துப் பேசினார் பாட்டி.
 
 
ஆனால் அந்த நொடி காதல் வயப்பட்டிருந்த வர்மாவின் மனதுக்கு அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. எப்போதுமே தெளிவாக யோசிப்பவனை அந்த நேரத்தில் நேஹா யோசிக்க விடவில்லையா..! இல்லை காதல் கண்ணை மறைத்ததா எனத் தெரியவில்லை.
 
 
“என்ன பாட்டி இது..? நீங்களா இப்படி..? உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு எதிர்ப்பை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை, டிபிக்கல் பேமிலி பாட்டிங்க மாதிரி நடந்துக்காதீங்க.. எனக்கு நேஹாவை ரொம்பப் பிடிச்சு இருக்கு, அவளுக்கும் அப்படித் தான்.. இதுக்கு இடையில் வேற யாரும் வர முடியாது..
 
 
இதுவே நேஹா ஆளவந்தான் பெண்ணா இல்லைனா நீங்க சம்மதிச்சு இருப்பீங்க தானே..! இப்போவும் ஆளவந்தான் மகளா அவளைப் பார்க்காதீங்க.. என் மனைவியா மட்டும் பாருங்க..” என்று இந்தப் பிரச்சனையை அதற்கு மேல் நீடிக்க விரும்பாமல் முற்றுப்புள்ளி வைத்திருந்தான் வர்மா.
 
 
அவன் குரலில் தெரிந்த உறுதியே அவளைத் தவிர வேறு யாரையும் வர்மா மணந்து கொள்ளச் சம்மதிக்கப் போவதில்லை எனப் பாட்டிக்கு புரிய வைக்க.. மறுத்து எதுவும் பேச தோன்றாமல் அமைதியாக அவன் திருமணத்திற்குச் சம்மதித்திருந்தார் பாட்டி.
 
 
ஆனால் இந்தத் திருமணத்திற்கு இவர் மட்டும் சம்மதித்தால் போதாதே..! ஆளவந்தானின் அனுமதியும் வேண்டுமே..!! அவர் நிச்சயம் பிரச்சனை செய்வார் எனப் பாட்டி எதிர்பார்த்திருக்க.. அதற்கு நேர்மாறாக எந்த ஒரு எதிர்மறையான கருத்தோ மறுப்போ இல்லாமல் உடனே தன் சம்மதத்தைத் தெரிவித்து இருந்தார் ஆளவந்தான்.
 
 
இது பாட்டிக்கு மட்டுமல்ல.. வர்மாவுக்குமே பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவன் அறிந்திருந்த வரையிலும் பாட்டி சொன்னதை வைத்து விசாரித்த வகையிலும் ஆளவந்தான் கொஞ்சம் பிரச்சனைக்குரியவர் தான்.
 
 
‘தன் காரியம் நடக்க வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் சென்று அதை நடத்திக்கொள்ளக் கூடியவர், அதற்காக எதிரில் இருப்பவர்களை என்ன செய்தும் அழிக்கக்கூடியவர்..’ என்றே அனைவரும் சொல்லி வைத்து போல் ஒரே பதிலை சொல்லி இருந்தனர்.
 
 
இதில் பெரும் பிரச்சனை ஒன்றை எதிர்பார்த்தே அவரை நேரில் சந்திக்கச் சென்றிருந்தவனுக்கு, இத்தனை சுமூகமாகத் திருமணத் தேதியை குறிப்பதை பற்றி அவர் பேசியது பெரும் திகைப்பை கொடுத்தது.
 
 
ஆனால் இதுவுமே தன் ஒரே மகளின் மீது அவர் கொண்டுள்ள அன்பாகத்தான் வர்மாவுக்கு தெரிந்தது. தொழிலையும் குடும்பத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் அவர் தெளிவாக இருப்பதாக நினைத்தவன், அடுத்து வந்த முகூர்த்தத்திலேயே மனமகிழ்ச்சியோடு நேஹாவை மணம் முடித்திருந்தான் வர்மா.
 
 
ஆசை ஆசையாய் காதலித்த மனைவி அழகு பதுமையாக அருகிலிருக்க.. ஆயிரம் கனவுகளோடு அவளை வர்மா நெருங்க முயன்ற ஒவ்வொரு முறையும், ஏதோ ஒரு காரணம் சொல்லி அவனைத் தள்ளி நிறுத்திக் கொண்டிருந்தாள் நேஹா.
 
 
ஆரம்பத்தில் இதெல்லாம் வர்மாவுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அந்த நேரத்தில் நடந்த சில முக்கியமான தொழில் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் பெரிய டெண்டர்களைக் கைவசப்படுத்துவது என ஓடிக்கொண்டே இருந்தவனுக்கு வேறு எதையும் யோசிக்க நேரமில்லை.
 
 
மனதுக்குப் பிடித்தவள் மனைவியாகி தன்னருகே இருப்பதே போதும் என்பது போன்ற மனநிலையில் இருந்தான் வர்மா. ஒருவேளை முற்றிலும் நேஹா அவனைத் தள்ளி நிறுத்தி இருந்தால் சந்தேகம் வந்திருந்திருக்குமோ என்னவோ..! ஆனால் அப்படியும் அவள் செய்யவில்லை.
 
 
வர்மா வேலையாக இருக்கும் நேரமாகப் பார்த்து அவளே நெருங்கி வந்து அணைத்துக் கொள்வது, எதிர்பாரா நேரங்களில் முகம் எங்கும் தன் முத்திரையைப் பதிப்பது, இருவரும் அடிக்கடி வெளியே செல்ல திட்டமிடுவது, சின்னச் சின்னப் பரிசுப் பொருட்கள் கொடுத்துச் சர்ப்ரைஸ் செய்வது என மிக இயல்பாக இருப்பது போலவே இருந்த அவளின் நடவடிக்கைகளில் பெரிதாக அவனுக்குச் சந்தேகம் எழவில்லை.
 
 
ஆனால் இவனாக நேஹாவை நெருங்க முயன்றாலோ, அடுத்த நிலைக்குச் செல்ல நினைத்தாலோ தான் அதைத் தடுப்பது போல் அவள் ஏதேதோ காரணங்களைத் தேடி சொல்வது தாமதமாகவே அவனுக்குப் புரிந்தது.
 
 
அப்போதும் கூட அவளுக்கு இந்த விஷயத்தில் மனரீதியாக ஏதேனும் பிரச்சனைகள் இருக்குமோ என்று தான் நினைத்தான் வர்மா. அதைப் பற்றி உடனே கேட்டு அவளின் மனதை வருத்த விரும்பாமல், மெல்ல தன்னைப் புரிந்து தானாக நெருங்கி வர வேண்டுமென அவளுக்கான கால அவகாசம் கொடுத்துக் காத்திருக்கத் தொடங்கினான் வர்மா.
 
 
இதற்கிடையில் ஒரு நாள், இருவரும் தனியே இருக்கும் போது இவர்களின் பூர்வீக வீட்டை பற்றி நேஹா கேட்டுக் கொண்டே இருக்க.. “என்ன திடீர்னு இவ்வளவு கேள்வி கேட்கறே..?” என்றான் வர்மா.
 
 
“ஏன் நான் கேட்கக் கூடாதா..?” என்றவளை கண்டு புன்னகைத்தவன், “யார் சொன்னா தாராளமா கேட்கலாம்..” எனவும், “அப்போ கேட்கறேன்.. அந்த வீட்டையும் நிலத்தையும் என் பேருக்கு எழுதி வைங்க..” என்றிருந்தாள் நேஹா.
 
 
அப்போதும் அவள் கேலியாகப் பேசுவதாக நினைத்து சிரித்தவன், “எப்போவும் உனக்கு விளையாட்டு தானா..?” எனவும், “நான் விளையாடலை.. நிஜமா தான் கேட்கறேன், எனக்கு அந்த வீடு வேணும்..” என்றாள் நேஹா.
 
 
இப்போது அவளைப் புரியாமல் பார்த்த வர்மா, “உனக்கு வீடு வேணும்னா கேளு.. சிட்டிக்கு நடுவில் இடம் வாங்கி உனக்கு எப்படி வேணுமோ அப்படிக் கட்டி தரேன்.. நம்ம தொழிலே பலரின் கனவை நிறைவேற்றுவது போல வீடு கட்டி தருவது தான்.. உன் கனவை நிறைவேற்றாமா இருப்பேனா..?” என்றான்.
 
 
“என்னமோ நீங்க மட்டும் தான் இந்தத் தொழிலில் இருக்கறது போலப் பேசறீங்க.. எங்க அப்பாவும் தான் இதே தொழிலில் இருக்கார்.. எனக்கு வேண்டியதை அவர் செய்ய மாட்டாரா..? நான் கேட்டது புது வீடு இல்லை.. பூர்வீக வீடு.. அது உங்களுக்கும் மட்டுமில்லை எங்களுக்கும் தானே சொந்தம்.. பெரிய தாத்தா புத்தி கெட்டு போய் உங்க தாத்தாவுக்கு எழுதி வெச்சுட்டார்.. இப்போ நீங்க என் பேருக்கு அதை எழுதி வைங்க..” என்றாள் ஒரு மாதிரியான குரலில் நேஹா.
 
 
அதிலேயே முதன்முறையாக அவளைச் சந்தேகத்தோடு பார்த்தான் வர்மா. ஆனால் அன்றோடு அந்தப் பேச்சை விடவில்லை நேஹா. அவ்வபோது இதையே அவள் கேட்டுக் கொண்டிருக்க.. “இப்போ எதுக்குத் தேவையில்லாத இந்தப் பேச்செல்லாம் நேஹா.. நீ வேற நான் வேறயா என்ன..? இனி அது நம்ம சொத்து..” என்றான் வர்மா.
 
 
“அதே தான் நானும் கேட்கறேன்.. நீங்க வேற நான் வேறயா..? அப்பறம் அது என் பேரில் இருந்தா உங்களுக்கு என்ன பிரச்சனை..?” என்றாள் நேஹா.
 
 
இப்படிக் காரணமே இல்லாமல் அவள் பூர்வீக வீட்டை வைத்துப் பிரச்சனை செய்வது ஏனெனப் புரியாமல் குழம்பிய வர்மாவுக்கு இதற்குப் பின் ஆளவந்தான் இருப்பது அப்போது புரியவில்லை. ஆனால் நேஹாவின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்த பாட்டிக்கு ஏதோ தப்பாக இருப்பது புரிந்தது.
 
 
இந்தப் பேச்சு வார்த்தையே ஒரு முடிவுக்கு வராத நிலையில், அடுத்தப் பிரச்சனையாக இரண்டு மாதங்கள் கழித்து வரப்போகும் ரத்தன் குழுமத்தின் டெண்டரை ஆளவந்தானுக்கு விட்டுக் கொடுக்குமாறு நச்சரிக்கத் தொடங்கினாள் நேஹா.
 
 
இது வர்மாவுக்கு எரிச்சலை தர.. “பிசினஸ் விஷயத்தில் தலையிடாதே நேஹா.. இத்தனை வருஷமா எங்க அப்பா, தாத்தான்னு கஷ்டப்பட்டு வளர்த்த இந்தத் தொழிலை எதுக்காகவும் என்னால் விட்டு கொடுக்க முடியாது..” என்று திட்டவட்டமாகக் கூறி இருந்தான் வர்மா.
 
 
“அதென்ன அப்படி ஒரு சைக்கோத்தனம்..? எப்போவும் நீங்க மட்டும் தான் ஜெயிக்கணுமா..? ஏன் எங்க அப்பா ஒருமுறை ஜெயிச்சா என்ன..?” என்று கோபத்தில் கத்தினாள் நேஹா.
 
 
புரியாமல் பேசுபவளிடம் சொல்லி புரிய வைக்கலாம்.. ஆனால் வேண்டுமென்றே பேசுபவளிடம் என்னவென சொல்லிப் புரிய வைப்பது என்பது போல் அவளை ஒருமுறை பார்த்தவன், வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து வேகமாக விலகி சென்றான்.
 
 
இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே வர்மா கிளம்பியது அவளை எரிச்சலாக்க.. அவன் சென்ற திசையை முறைத்துக் கொண்டிருந்தாள் நேஹா.
 
 
அன்றோடு அந்தப் பேச்சை அவள் விடவில்லை. அடுத்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் விதவிதமாக இந்த இரு விஷயங்களைப் பற்றியும் அவள் பேசிக் கொண்டே இருக்க.. ஒரு கட்டத்தில் வர்மாவுக்கு இது வெறுப்பைத் தந்தது.
 
 
வேலை முடிந்து களைப்போடு வீடு வந்து சேர்பவனை நிம்மதியாக ஓய்வெடுக்க விடாமல், தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருந்தாள் நேஹா. தன் கோபம், சண்டை, அடம் என எதுவும் அவனிடம் வேலை செய்யவில்லை எனப் புரிய.. இறுதியாகக் கெஞ்சலிலும் கொஞ்சலிலும் இறங்கினாள் நேஹா.
 
 
“நான் என்ன அப்பாக்காக மட்டுமா இதைச் சொல்றேன்.. உங்களுக்காகவும் தானே சொல்றேன்.. தனியா ஒரே ஆளா எவ்வளவு தான் நீங்களும் கஷ்டப்படுவீங்க, நமக்கு இப்போ தான் கல்யாணம் நடந்திருக்கு.. ஆனா நமக்குத் தனியா இருக்க நேரமே கிடைக்கலை.. இதுவே அப்பா கூடச் சேர்ந்து நீங்க பிசினஸ் செஞ்சா, எவ்வளவு உதவியா இருக்கும் தெரியுமா..? நமக்கும் நிறைய நேரம் கிடைக்கும்.. அதோட அவருக்கும் வயசான காலத்தில் தனியா கஷ்டப்பட வேண்டியதில்லை..
 
 
அதே போல உங்களுக்கும் அவரோட அனுபவம் பயன்படும்.. ஒரே துறையில் இருந்தும் ஏன் நாம தனிதனியா வேலை செய்யணும்.. ஒண்ணா சேர்ந்து வேலை பார்த்தா நாம தான் இந்தத் தொழிலில் நம்பர் ஒன்னா இருப்போம்.. நாமளும் எந்த டென்ஷனும் இல்லாம ஜாலியா இருக்கலாம்..” என்று கண்களில் கனவு மிதக்க பேசிக் கொண்டே சென்றாள் நேஹா.
 
 
ஆனால் அவளின் அத்தனை பேச்சுக்கும் சேர்த்து “நாம இப்போவே நம்பர் ஒன் ப்ளேசில் தான் இருக்கோம் நேஹா..” என்றிருந்தான் நிதானமான குரலில் வர்மா.
 
 
அவனின் இந்தப் பதிலில் கோபமானவள், “உங்களுக்கு நான் என்ன சொல்றேன்னு புரியவே இல்லையா..? நமக்குன்னு தனியா நேரம்..” என்று தொடங்கியவளை இடைமறித்தவன், “இப்போ வேணும்னாலும் சொல்லு, உனக்காக என்கிட்டே நிறைய நேரம் இருக்கு.. நீ கூப்பிட்டு நான் எங்கேயும் வராம இருந்திருக்கேனா..! இப்போ கூடச் சொல்லு ஹனிமூன் ட்ரிப் பிளான் செய்யலாமா..?” என்றான் வர்மா.
 
 
வர்மாவின் பதில் நேஹாவுக்கு எரிச்சலை தர.. “நாம இப்போ அதையா பேசிட்டு இருந்தோம்..?” என்றாள். “ஆமா நீ தானே சொன்னே.. நமக்குன்னு நேரம் கிடைக்கலைன்னு.. அதான் என்கிட்டே நேரம் நிறைய இருக்குன்னு சொன்னேன்..” என்றான் வர்மா.
 
 
“அப்போ அதைத் தவிர நான் சொன்ன எதுவும் உங்க காதில் விழலை அப்படித் தானே..?” என்று ஆத்திரமானவளை சோர்வோடு பார்த்தவன், “இங்கே பார் நேஹா.. திரும்பத் திரும்ப நாம இதையே பேச வேண்டாம்.. எத்தனை முறை பேசினாலும் இதுக்கு நான் சம்மதிக்கப் போறதும் இல்லை..
 
 
உறவு சொந்தம் எல்லாம் வேற, தொழில் வேற.. இதையும் அதையும் போட்டுக் குழப்பிக்கக் கூடாது, நாம ஒரே தொழிலில் இருந்தாலும் உங்க அப்பாவுக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கு, எனக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கு.. அவர் வழியில் அவர் போகட்டும், என் வழியில நான் போறேன்..” என வர்மா கூறவும், அன்று அவனோடு பெரும் வாக்குவாதமே செய்து விட்டாள் நேஹா.
 
 
அதன் பின் அவளைச் சமாதானம் செய்து இயல்பாக்க ஒரு மாதத்திற்கு மேலானது. ஆனாலும் அவ்வப்போது இது போல் ஏதோ ஒன்றை அவள் கொண்டு வருவதும் அதற்கு வர்மா மறுப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்க.. ஒரு கட்டத்தில் வர்மாவுக்கே வெறுப்பானது.
 
 
இந்நிலையில் தான் தொழில் ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் ஓர் இரவு விருந்துக்கு நேஹாவை அழைத்துச் சென்றிருந்தான் வர்மா. அங்கு அவனுக்குக் கிடைத்த மரியாதை, மற்றவர்கள் அவனின் தொழில் யுக்தியை பாராட்டியது என அனைத்தையும் அருகிலிருந்து பார்த்து, ஒரு மனைவியாகச் சந்தோஷிக்க வேண்டியவளோ, அதை வைத்து வர்மாவிடம் பெரும் பிரச்சனையை அன்று இரவுக் கிளப்பினாள்.
 
This post was modified 2 weeks ago 2 times by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 291
Topic starter  
 
 
சித்திரை – 25
 
 
அதுவரை இருந்த பொறுமை எல்லாம் காணாமல் போயிருக்க.. விருந்தில் இவள் நடந்து கொண்ட முறையும் கொஞ்சமும் பிடிக்காமல் போனதில், வர்மா தன் ஒட்டுமொத்த கோபத்தையும் அன்று அவளிடம் வெளிப்படுத்தி இருந்தான்.
 
 
“நீ என்ன சின்னக் குழந்தையா..? திரும்பத் திரும்ப இதையே பேசறே.. உங்க அப்பாவை அந்த விருந்துக்குக் கூப்பிடலைனா அதுக்கு நான் எப்படிக் காரணமாக முடியும்.. உன்னைக் கல்யாணம் செஞ்சுகிட்டதுக்காக என் ஆசையைக் கனவை எல்லாம் தூக்கி கொடுத்துட முடியாது.. இத்தனை வருஷமா இந்தத் தொழிலில் இருந்தும் அவரால் இங்கே யாருகிட்டேயும் நல்ல பேர் எடுக்க முடியலைனா அது எப்படி என் தப்பாகும்..? நீ இந்தப் பேச்சை ஆரம்பிக்கும் போதே நான் இது வேண்டாம் சரிப்பட்டு வராதுன்னு தெளிவா சொல்லிட்டேன்.. உனக்கு உங்க அப்பாவும் முக்கியம், நானும் முக்கியம் தான்.. யாரும் இல்லைன்னு சொல்லலை.. ஆனா அதுக்காக எல்லாம் நீ நினைக்கறது போலச் செஞ்சுட முடியாது..
 
 
இது நான் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமும் இல்லை.. இதில் என் அப்பா தாத்தா உழைப்பும் இருக்கு.. திரும்ப இதைப் பற்றி என்னைப் பேச வைக்காதே.. உனக்குத் தனிப்பட்ட முறையில் என்ன வேணும்னாலும் என்கிட்ட கேளு.. அதைச் செய்ய நான் கடமைப்பட்டிருக்கேன்.. ஆனா என் குடும்பச் சொத்து, தொழில் இதெல்லாம் பற்றி இனி பேசாதே..!” என்று திட்டவட்டமான குரலில் சற்று அழுத்தமாகவே பேசி இருந்தான் வர்மா.
 
 
“இதைக் கூடச் செய்ய முடியலைனா அப்பறம் எதுக்கு என்னைக் கல்யாணம் செஞ்சீங்க..? நீங்க உண்மையாவே என்னை லவ் செஞ்சீங்களான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு..” என்றாள் நேஹா.
“கண்டபடி உளறாத நேஹா.. உன்னைக் காதலிக்கிறதுக்காக என்ன வேணும்னாலும் செய்யணும்னு அவசியமில்லை.. எதைச் செய்ய முடியுமோ அதைத்தான் செய்ய முடியும்..” என்றான் வர்மா.
 
 
“ஓஹோ.. அப்போ எனக்காக நான் ஆசைப்படும் எதையுமே செய்யாதே நீங்க எதுக்காக என்னைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க..? நீங்க எப்போ ஏன்னா செய்வீங்கன்னு எதிர்பார்த்துக் காத்திருக்க நான் என்ன பிச்சைக்காரியா..?” என்றாள் நேஹா.
 
 
“இதையே நானும் கேட்கலாம்.. நமக்குக் கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகப்போகுது.. இப்போ வரைக்கும் எத்தனையோ ஆசை இருந்தும் நீ என்னை உன் பக்கத்தில் கூட வர விடலை.. நீயா நினைக்கும் போது என்னை நெருங்கி வந்து என் உணர்வுகளைத் தூண்டி விட்டு விளையாடுவே.. அப்படி இருந்தும் நீயா என்னை நெருங்கி வரும் போது உன்னை நான் விலக்கி வெச்சதோ தள்ளி நின்றதோ இல்லை.. அப்போ உனக்கு என் மேலே காதலே இல்லைன்னு நான் சொல்லலாமா..?” என்றான் வர்மா.
 
 
இப்படிச் சட்டென முகத்திற்கு நேராகக் கேட்டு விடுவான் என எதிர்பாராத நேஹா, ஒரு நொடி தடுமாறினாலும் நொடியில் தன்னைச் சமாளித்துக் கொண்டு “அப்போ உங்க நோக்கம் முழுக்க என் உடம்பு தான் இல்லை.. என் மனசை பற்றி உங்களுக்கு எந்தக் கவலையுமில்லை.. தெரியாம தான் கேட்கறேன், நீங்க என்னைக் காதலிச்சீங்களா இல்லை என் உடம்பையா..?” இப்படி ஒரு கேவலமான மைண்ட் செட் இருக்க ஒருத்தரோட இனி என்னால் வாழவே முடியாது, நாம டிவோர்ஸ் செஞ்சுக்கலாம்..” எனக் கத்திவிட்டு அந்த நள்ளிரவில் தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி சென்று விட்டாள் நேஹா.
 
 
‘கொஞ்சமும் யோசிக்காமல் என்ன வார்த்தை பேசி விட்டாள்..? திருமணமாகி ஒரு வருடமாகியும் அவளின் மனநிலைக்கு மதிப்புக் கொடுத்து அவளை எந்த வகையிலும் தொந்தரவு செய்யாமல் பொறுமையாகக் காத்திருந்த என்னைப் பார்த்தா இப்படி ஒரு வார்த்தை பேசினாள்..?’ என மனம் உடைந்து போய் அப்படியே அமர்ந்து விட்டான் வர்மா.
 
 
நேஹாவின் வார்த்தை கொடுத்த அதிர்வில், அவளைப் பின் தொடர்ந்து செல்லவோ சமாதானம் செய்யவோ அன்று அவன் முயலவில்லை. ஏனெனில் அவள் பேசிச் சென்ற வார்த்தைகள் அந்த அளவு அவனைக் காயப்படுத்தி இருந்தது.
 
 
அதோடு ஏதோ கோபத்தில் பேசுகிறாள் என்றே அந்த விவாகரத்து விஷயத்தை அப்போது அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த நிமிட கோபம் அவளை இப்படியெல்லாம் பேச வைக்கிறது, கொஞ்ச நாட்கள் போனால் எல்லாம் சரியாகிவிடும் என அவன் நினைத்திருக்க.. அவனின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி அடுத்த ஒரு வாரத்தில் விவாகரத்துப் பத்திரம் அனுப்பியிருந்தாள் நேஹா.
 
 
உடனே அவளை நேரில் பார்த்துச் சமாதானம் செய்ய எண்ணி தேடிச் சென்றவனுக்கு அதற்கான வாய்ப்பையே அவள் கொடுக்கவில்லை. ஆனாலும் விடாமல் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருந்தவனை நேஹாவை பார்க்க ஆளவந்தான் அனுமதிக்கவே இல்லை.
 
 
ஒரு நாள் அவரே அமர்ந்து அவனிடம் திட்டவட்டமாகப் பேசினார். “இங்கே பார் வர்மா, நேஹா உன் கூட வாழணும்னா அவ ஆசைப்பட்ட எல்லாத்துக்கும் நீ சம்மதிக்கணும்.. இல்லை முடியாதுனா நேஹாவை மறந்துடு..” என மகளின் வாழ்க்கையை வைத்துப் பேரம் பேசிக் கொண்டிருப்பவரை பார்த்தவனுக்கு அப்போதே பாட்டி கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
 
 
அதில் நிதானமாக அவர் பேசிய வார்த்தைகளை உள் வாங்கியவனுக்கு அப்படியே நேஹா இத்தனை நாள் பேசியது போலவே இருக்க.. இத்தனை நாள் அவள் பேசியதெல்லாம் இவர் சொல்லிக் கொடுத்து தான் எனத் தாமதமாகப் புரிந்தது.
 
 
அவர் தொடர்ந்து பேசிக் கொண்டே செல்ல.. அவரைச் சில நொடிகள் வெறுப்பாகப் பார்த்தவன், பதிலேதும் பேசாமல் எழுந்து வந்து விட்டான் வர்மா.
 
 
என்னதான் கோபத்தில் சென்றாலும் நேஹாவின் மேல் அவனுக்குள்ள காதலின் ஆழத்தை அறிந்திருந்த ஆளவந்தான், தெளிவாக யோசித்து வர்மா ஒரு நல்ல முடிவுக்கு விரைவில் வருவான் என எதிர்பார்த்துக் காத்திருக்க.. அதன் பின் அவனிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.
 
 
இனி ஆளவந்தானிடம் பேசி எந்தப் பலனுமில்லை என்று புரிய.. இறுதி முயற்சியாக நேஹாவிடம் பேசி அவளைச் சுற்றி நடப்பதை நேஹாவுக்குப் புரிய வைக்க நினைத்தான் வர்மா. ஆனால் அவளோ தன் தந்தையின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அவனைப் பார்க்கவே முடியாது என மறுத்து விட்டாள்.
 
 
இப்படியே இரு மாதங்கள் சென்றிருக்க.. ஒரு கட்டத்தில் தன் பொறுமையெல்லாம் காணாமல் போய், இனி அவளைத் தொடர்பு கொள்ளவே கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டிருந்தான் வர்மா.
 
 
இத்தனை நாள் காத்திருந்து பார்த்தும் வர்மாவிடமிருந்து தனக்குச் சாதகமான பதிலேதும் வரவில்லை என்று உணர்ந்த ஆளவந்தான், மீண்டும் விவாகரத்துப் பத்திரத்தை அவனுக்கு அனுப்பி வைக்க.. இந்த முறை எந்த ஒரு தயக்கமுமின்றி அதில் கையெழுத்திட்டு திருப்பி அனுப்பி விட்டிருந்தான் வர்மா.
 
 
இதை நேஹா மட்டுமல்ல ஆளவந்தனுமே கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இப்படியெல்லாம் செய்து வர்மாவை தங்கள் நிபந்தனைக்கு அடிபணிய வைக்க நினைத்து இருவரும் எல்லை மீறி ஆடிக்கொண்டிருக்க.. அதையெல்லாம் ஆட்டம் காண செய்வது போல் இருந்தது வர்மா கையெழுத்திட்டு அனுப்பி இருந்த விவாகரத்துப் பத்திரம்.
 
 
இதைக் கண்டு நேஹா பெரிதாக அதிர்ந்து ஆளவந்தானிடம் அழுகையோடு சென்று நிற்க.. “இதுக்கெல்லாம் நீ டென்ஷனாகாத பேபி.. அவன் நம்மகிட்ட விளையாடி பார்க்க நினைக்கறான், விவாகரத்துக்குச் சம்மதிச்சு அவன் கையெழுத்து போட்டு கொடுத்தா நாம பயந்து போய்விடுவோம்னு நினைக்கறான்..
 
 
இப்போ நீ அழுதுட்டே வந்தே இல்லை இது தான் அவனுக்கு வேணும்.. அவன் சம்மதிச்சா நீ பயந்து அவன்கிட்ட திரும்பப் போவேன்னு எதிர்பார்க்கறான்.. அந்த நினைப்பை தான் நாம உடைக்கணும், அவனைக் கோர்ட்டுக்கு வர வழைச்சு அசிங்கப்படுத்தணும்..” என அவர் அடுத்து சொன்ன திட்டத்தைக் கேட்டு திகைத்தாள் நேஹா.
 
 
“டாட்.. என்ன சொல்றீங்க..?” என அவள் தடுமாற.. “நம்ம திட்டம் நிறைவேற இது ஒண்ணு தான் வழி.. எதுக்காக அவனை நீ காதலிச்சுக் கல்யாணம் செஞ்சியோ அது எனக்கு நடந்தாகணும்.. இல்லை நடக்க வைப்பேன்..” என்றார் ஆளவந்தான்.
 
 
அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்தவள் என்பதால், சொன்னதைச் செய்வார் எனப் புரிய.. எப்படி அவரைத் தடுப்பது எனத் தெரியாமல் நின்றாள் நேஹா. அவளின் முகத்தைப் பார்த்தே நேஹாவின் மனதில் இருப்பதைப் புரிந்துக் கொண்டவர், “உனக்கே தெரியும் நான் நினைச்சது நடக்க நான் என்ன வேணும்னாலும் செய்வேன்.. அது நடக்கக் கூடாதுனா நான் சொன்னதைச் செஞ்சு முடி..” என்றிருந்தார் ஆளவந்தான்.
 
 
அவர் சொல்லிச் சென்ற விதத்தில் உண்டான பதட்டத்தோடு வர்மாவைத் தேடிச் சென்றாள் நேஹா. சில மாதங்களுக்குப் பிறகு நேரில் காண வந்திருப்பவளை கண்டு அவனுள் இருந்த காதல் துளிர்க்க.. அதைப் பெரும் முயற்சிக்குப் பின் மறைத்தவாறே முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டவன், “என்ன விஷயம்..? திடீர்னு இங்கே வந்திருக்க..” என்றான் வர்மா.
 
 
பலமுறை தன்னைப் பார்க்க முயற்சித்தும் முடியாமல் போன வர்மா இன்று தன்னை நேரில் கண்டவுடன் ஆசையோடு வந்து அணைத்துக் கொள்வான், மகிழ்ச்சியோடு வரவேற்பான் என்றெல்லாம் எண்ணிக் கொண்டு அவனைத் தேடி சென்றிருந்தவள், வர்மாவின் இந்த ஒதுக்கத்தோடான பேச்சில் உண்டான திகைப்போடு வேகமாக அவன் அருகில் சென்று அமர்ந்து வர்மாவின் கைகளை இறுக பிடித்தப்படியே “நான் வேண்டாமா மஹி உங்களுக்கு..? நான் வேணாம்னு முடிவு செஞ்சிட்டீங்களா..? என்னை டைவர்ஸ் செய்யப் போறீங்களா..?” எனக் கண்ணீரோடு கேட்டாள்.
 
 
“இந்த முடிவுக்கு வந்தது நான் இல்லை நீ..” என்றான் வர்மா. “அப்படி ஒரு முடிவுக்கு என்னை வர வெச்சது நீங்க தானே..! நான் கேட்டதைச் செஞ்சுருந்தா இப்படி ஒரு முடிவுக்கு வர வேண்டிய அவசியமே இல்லையே.. நாம சந்தோஷமா வாழ்ந்திருக்கலாமே..!” என அவள் சொல்லிக் கொண்டே செல்ல.. “நாம சந்தோஷமா வாழறதுக்கும் நீ கேட்கறதும் என்ன சம்பந்தம் நேஹா..?” என்றான் அவளையே கூர்மையாகப் பார்த்தப்படியே வர்மா.
 
 
அதில் லேசாகத் தடுமாறினாலும் “என்னை நீங்க உண்மையா தானே காதலிக்கறீங்க..?” என அவள் பேச வந்ததைப் பேசி முடிக்க எண்ணி நேஹா தொடங்க.. “நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு நேஹா.. நாம ஒருத்தரை ஒருத்தர் விரும்பினோம், அதனால் கல்யாணம் செஞ்சுக்கிட்டோம்.. இதில் கண்டிஷன் எங்கே வந்தது..? நீ நினைக்கறதெல்லாம் நடந்தா தான் நாம சேர்ந்து வாழ முடியும்னா, அதில் காதல் எங்கேயிருக்கு..? இதெல்லாம் செஞ்சு அப்படியொரு வாழ்க்கையோ காதலோ எனக்கு வேண்டாம்..” என்றான் வர்மா.
 
 
“ஆ.. ஆமா.. ஆ.. ஆனா..” என இத்தனை தெளிவாக வர்மா கேள்வி கேட்பான் என நினைத்திராதவள் என்ன சொல்லி சமாளிப்பது எனத் தெரியாமல் தடுமாற.. அவளையைப் பதிலுக்காக நிதானமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் வர்மா.
 
 
அவன் எதிர்பார்க்கும் நேரடியான பதிலை கொடுக்க முடியாமல் சில நொடிகள் அமைதியாக இருந்த நேஹா, சட்டென அவன் இரு கரங்களையும் பிடித்துத் தன் மார்போடு வைத்துக் கொண்டு “மஹி நீங்க என்னை நம்புறீங்க இல்லை.. நான் சொல்றதை கேட்பீங்க தானே..! எனக்காக ப்ளீஸ்..” என விழிகள் கலங்க உள்ளம் உருகும் குரலில் அவள் பேசிக் கொண்டே செல்ல.. அவனிடமிருந்து ஒரு அசைவும் இல்லை.
 
 
அவளின் விழிகளையைக் கூர்மையாகப் பார்த்தபடி வர்மா அமர்ந்திருக்க.. “ஏதாவது சொல்லுங்க மஹி.. ஏன் இப்படி அமைதியா இருக்கீங்க..?” என்றாள் கெஞ்சலாக நேஹா.
 
 
“என்ன சொல்லணும்..? நீ கேட்கறதுக்கு எல்லாம் ஓகே சொல்லணுமா..!” என்றவன், நேஹா பதிலின்றி அமர்ந்திருப்பதைக் கண்டு “நிஜமாவே நீ என்னை லவ் செஞ்சியா நேஹா..? இந்தக் கல்யாணம் நிஜமாவே நாம காதலிச்சதால் தான் நடந்ததா..?” எனச் சில நாட்களாகத் தன் மனதை உறுத்திக் கொண்டிருந்த சந்தேகத்தை வர்மா வார்த்தைகளில் வெளியிட்டு இருக்க.. அது பெருமளவில் அவளைத் தாக்கியிருந்தது.
 
 
அதில் அவனை அடிபட்ட பார்வை பார்த்தவள் “உங்களுக்குத் தெரியாதா..?” எனவும், “நிஜமாவே தெரியலை நேஹா.. அதனால் தான் கேட்கறேன், இந்தக் கல்யாணம் நடந்த காரணம் என்னன்னு நீயே சொல்லேன், தெரிஞ்சுக்கறேன்..” என்றவனை அழுகையோடு சில நொடிகள் பார்த்தவள், “நீங்க என்னை நிஜமாவே காதலிச்சீங்களா மஹி..?” என்றாள் நேஹா.
 
 
தன் வார்த்தைகளை வைத்தே அவள் தன்னை மடக்க நினைப்பது புரிந்து ஒரு கசப்பான புன்னகையை இதழின் ஓரம் வழிய விட்டவன், “இப்போ என்ன சொல்ல வர..? நான் உன்னை உண்மையா காதலிக்கறேன்னு சொன்னா.. என் அப்பா தாத்தா கௌரவமா பார்த்த தொழிலையும் சொத்தையும் உன் காலடியில் கொட்டிட்டு உன் கூட ரொமான்ஸ் செய்யணும் அப்படித் தானே..!
 
 
இப்படியெல்லாம் கொடுத்து வாங்கினா அது காதலே இல்லை.. எந்த எதிர்பார்ப்புமில்லாம வருவது தான் காதல், அது ஒரு அழகான உணர்வு.. உள்ளுக்குள்ளே இருந்து தானா வரணும்.. இப்படிக் கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் போட்டு நம்ம விருப்பத்துக்கு அதை வளைக்க நினைக்கக் கூடாது.. மொத்தமா உடைஞ்சுடும்.. இப்போ என் மனநிலையும் அது தான், இப்படியொரு காஸ்ட்லியான காதல் எனக்கு வேண்டாம், நாம டிவோர்ஸ் செஞ்சுக்கலாம்..” என்றிருந்தான் வர்மா.
 
 
அவனிடமிருந்து இப்படி ஒரு வார்த்தையை நேஹா கொஞ்சமும் எதிர்பார்த்து இருக்கவில்லை. ஆரம்பத்தில் விவாகரத்து என்ற பேச்சை அவள் தான் தொடங்கி இருந்தாள் என்றாலும், அது நிஜமாகச் சொல்லப்பட்டது இல்லை. ஆளவந்தானின் பேச்சை கேட்டு வர்மாவை பயம் காண்பிக்க எண்ணி சொல்லியிருந்தது.
 
 
அதைக் கண்டே வர்மா தன் நிபந்தனைகளுக்குச் சம்மதித்து விடுவான் எனப் பெரிதும் நம்பினாள் நேஹா. ஏனெனில் அந்த அளவு அவன் தன்னை விரும்புவது அவளுக்குமே தெரியும். தன்னை இதற்காக எல்லாம் இழக்க விரும்ப மாட்டான் என்று எண்ணியே விவாகரத்து என்று ஆயுதத்தைக் கையில் எடுத்து இருந்தவள் இப்படி அனைத்தும் தனக்கு எதிராகத் திரும்புமெனக் கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை.
 
 
ஆரம்பத்தில் ஆளவந்தான் சொன்னதற்காக வர்மாவோடு நெருங்கி பழகி காதல் சொல்லி இருந்தாலும், அவளுக்குமே வர்மாவை ரொம்பவே பிடித்திருந்தது. ஆனால் அதை வெளிப்படுத்திக் கொண்டால் எதைச் செய்தாவது ஆளவந்தான் இருவரையும் பிரித்து விடுவார் எனப் பயந்தே இறுதி வரை அதை அவரிடமிருந்து மறைத்து வர்மாவை திருமணம் செய்து கொண்டிருந்தாள் நேஹா.
 
 
ஆனால் அப்படி மறைத்து விட்டதாக அவள் மட்டுமே நினைத்திருக்க.. முன்பே இதைக் கண்டு கொண்டிருந்த ஆளவந்தான், அதை வைத்தே அவளை மேலும் தன் இஷ்டத்திற்கு ஆட வைத்துக் கொண்டிருந்தார்.
 
 
இப்போதுமே இதற்கு மட்டும் சம்மதிக்க மறுத்து அவரிடம் நேஹா எவ்வளவோ கெஞ்சியும் கூடக் கொஞ்சமும் ஆளவந்தான் இறங்கி வரவில்லை.
 
 
இனி அவரிடம் பேசி பயனில்லை என்று புரிந்து வர்மாவிடம் சொல்லி புரிய வைக்க எண்ணி வந்திருந்தவளுக்கு அதற்கான வாய்ப்பை இன்று வர்மாவும் தரவில்லை. அதோடு நீயோ உன் காதலோ வேண்டாமென அவன் சொல்லி சென்ற விதம் வேறு அவளைச் சீண்டி விட்டிருந்தது.
 
 
இப்போதும் தன் செயல்களுக்கான எதிர்வினை தான் வர்மாவிடம் இருந்து வருகிறது எனப் புரிந்து கொள்ளாமல் தேவையில்லாமல் அவன் வீம்பு பிடித்து இருவரின் வாழ்க்கையையும் பிரச்சனையாக்குவதாகத் தான் அவளுக்கு நினைக்கத் தோன்றியது.
 
 
ஏனெனில் ‘நான் கேட்டு நீ எப்படி மறுக்கலாம்..?’ என்ற அகங்காரமும், ‘என்னை விட அதெல்லாம் உனக்கு முக்கியமாகிப் போனதா..?’ என்ற கோபமும் அவளின் கண்ணை மறைத்தது. அதோடு ‘நீ எனக்கு வேண்டாமென எத்தனை எளிதாகச் சொல்லி விட்டான்..! நான் அவ்வளவு எளிதாகிப் போனேனா..?’ என்ற ஆத்திரமும் அவளைத் தூண்டி விட.. துளியும் யோசிக்காமல் ஆளவந்தான் சொல்லியவாறே கோர்ட்டில் பேசினாள் நேஹா.
 
 
இருவரும் எதிரெதிரே அமர்ந்திருக்க.. வர்மாவை முறைத்துக் கொண்டிருந்தவளின் மனமெங்கும் அத்தனை ஆத்திரம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
 
 
இப்போது கூட இதெல்லாம் வேண்டாம், நீ சொன்னதைச் செய்கிறேன்.. கேட்டதைத் தருகிறேன் என ஒரு வார்த்தை சொன்னால் போதும் அப்படியே அனைத்தையும் விடுத்து அவனோடு சேர்ந்து வாழ சென்று விடலாம்.. ஆனால் அதைப் பற்றிப் பேசவோ யோசிக்கவோ மாட்டேன் என்பது போல் வர்மா அமர்ந்திருப்பதைக் கண்டவளுக்கு ஆளவந்தான் சொன்னது போல் அவனைக் கதற விட வேண்டுமெனத் தான் தோன்றியது.
 
 
என்ன தான் வர்மாவின் மேல் காதல் கொண்டிருந்தாலும், ஆளவந்தானின் மகளாகிற்றே அவரின் குணம் இல்லாமல் போகுமா..? தனக்கு எதிராக இருப்பவர்களை எந்த எல்லைக்கும் சென்று அசிங்கப்படுத்த வேண்டுமெனத் தான் அந்த நொடி அவளுக்கும் தோன்றியது.
 
 
அதன் பின் விளைவுகளை அந்த நொடி அவளுக்கு யோசிக்கத் தோன்றவில்லை. அதில் வன்மமாக வர்மாவை பார்த்தவாறே “இவர் கூட என்னால் வாழ முடியாது.. இவர் திருமண வாழ்க்கைக்குக் கொஞ்சமும் தகுதியில்லாதவர், இந்த உண்மையை மறைச்சு என்னைக் கல்யாணம் செஞ்சு என் வாழ்க்கையை வீணாக்கிட்டார்..” என்றிருந்தாள் நேஹா.
 
 
எத்தனை தான் கோபமும் மாற்று கருத்துகளும் இருந்தாலும் இப்படி ஒரு வீண் பழியைத் தன் மேல் சுமத்துவாள் எனத் துளியும் எதிர்பார்க்காத வர்மா பெரும் அதிர்வோடு அவளைப் பார்த்து “என்ன உளறல் இது..?” எனப் பல்லைக் கடித்தான்.
 
 
ஆனால் அவளோ கொஞ்சமும் தயக்கமின்றி அந்தப் பார்வையைத் தாங்கி நின்றாள். “நேஹா என்ன பேசிட்டு இருக்கேன்னு உனக்குப் புரியுதா..? கோபத்தில் என்ன வேணும்னாலும் சொல்லுவியா..?” என்றவனை இடைமறித்த நேஹாவின் வழக்கறிஞர் “நீங்க என் கட்சிக்காரரை மிரட்ட பார்க்கறீங்க.. எத்தனை நாள் இப்ப்படி உண்மையை மிரட்டி மூடி வைக்க முடியும்னு நினைக்கறீங்க..? இவங்க வாழ்க்கைக்கு என்ன வழி..?” எனப் பேசிக் கொண்டே செல்ல.. வர்மாவின் மொத்த பார்வையும் நேஹாவின் மேல் மட்டும் தான் இருந்தது.
 
 
அதுவே அவளுக்குத் தனி ஒரு திமிரை கொடுத்திருந்தது. அன்று தன்னை வேண்டாமெனச் சொல்லி சென்றவனை மீண்டும் தன் பக்கம் திரும்ப வைத்து விட்டோமென அவள் நினைத்திருக்க.. ஆனால் வர்மாவோ ‘இப்படி ஒருத்தியையா விரும்பினோம்..? அந்த அளவு காதல் தன் கண்ணை மறைத்து விட்டதா..!’ எனத் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டிருந்தான்.
 
 
அதேநேரம் நேஹாவின் குற்றசாட்டை வைத்து பல கேள்விகள் வர்மாவிடம் கேட்கப்பட.. அதில் ஒரு அடிப்பட்ட பார்வை நேஹாவை பார்த்தான் வர்மா. அவளோ இவன் பக்கமே திரும்பவில்லை. இத்தனை நாள் காரணமே இல்லாமல் அவள் தன்னைத் தள்ளி வைத்ததற்கான காரணங்கள் எல்லாம் இந்த நொடி தெளிவாகப் புரிய.. இதெல்லாம் முன்பே தெளிவாக திட்டமிட்டது என்று அறிந்து, அதன் பின் வேறு எதுவும் பேசாமல் அமைதியாகி போனான் வர்மா.
 
 
அவனின் இந்த அமைதி அவர்களுக்குச் சாதகமாகப் போக.. அவர்களாகவே பேசி முடிவெடுத்து விவாகரத்தும் கிடைத்துவிட.. அதெல்லாம் வர்மாவுக்கு அந்த நொடி பெரிதகாவே தெரியவில்லை.
 
 
அவனை வலிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவே ஆளவந்தானின் வழக்கறிஞர் பயன்படுத்திய வார்த்தைகளும், அதற்குத் துணை போவது போல் அனைத்திற்கும் நேஹா ஆமெனச் சம்மதித்து நின்ற விதமும் வர்மாவை மனதளவில் குத்தி கிழித்தது.
 
 
அவர்கள் எதிர்பார்த்ததை விடவும் ஆயிரம் மடங்கு வலியை அன்று அனுபவித்தான் வர்மா. அதற்குள் இந்த விஷயம் மீடியாவில் காட்டுத்தீ போலப் பரவியிருக்க.. பிரபலமானவர்கள் பற்றிய கிசுகிசுக்கள் என்றால் தான் நம் மக்கள் ஆர்வமாகப் பார்த்து அனைவருக்கும் பகிர்ந்து தங்கள் கடமையைச் செவ்வணச் செய்வார்களே..! அதே போல இதுவும் ஒரே நாளில் ட்ரெண்டாகிப் போனது.
 
 
நேஹாவின் நடவடிக்கைகள் எதுவும் பிடிக்காமல், இவர்கள் இருவருக்கும் இடையே வரக் கூடாது என்ற எண்ணத்தோடு தங்கள் பூர்வீக வீட்டில் போய்த் தங்கிக் கொண்டிருந்த பாட்டிக்கு நேஹா விவாகரத்துக் கேட்டிருக்கும் செய்தியே பெரும் அதிர்வை தந்திருக்க.. தன் ஒரே பேரனின் சந்தோஷமான வாழ்க்கையை விட வேறு எதுவும் முக்கியமில்லை என்றெண்ணி வர்மாவிடம் அவள் கேட்டதைச் செய்து விடச் சொல்லி இருந்தார்.
 
 
ஆனால் அப்போதே அதைத் திட்டவட்டமாக மறுத்து விட்டிருந்தான் வர்மா. “இன்னைக்கு இதைச் செஞ்சா நாளைக்கு வேற எதையும் கேட்டு வந்து நிற்பா.. இப்படி வாழ்க்கை முழுக்க எதையாவது கொடுத்துட்டே அவ கூட வாழ முடியாது பாட்டி.. நான் வேணும்னா அவளா வரட்டும்..” என்றிருந்தான்.
 
 
அதில் ஏதாவது அதிசயம் நடந்து விடாதா என அவருக்குத் தெரிந்த தெய்வத்தை எல்லாம் வேண்டிக் கொண்டு பாட்டி காத்திருக்க.. அடுத்தடுத்து அவருக்கு வந்த தகவலோ அவரின் இதயத்தின் துடிப்பை நிறுத்துவதாக இருந்தது.
 
 
எதற்குப் பயந்து எது நடந்து விடக்கூடாது என எண்ணி ஆளவந்தானின் வீட்டுப் பெண் வேண்டாம் என மறுத்தாரோ அதெல்லாம் அவர் எண்ணி பயந்ததை விடவும் பல மடங்கு பெரிதாக நடந்து கொண்டிருப்பதைக் கண்டும் எதுவும் செய்ய முடியாத நிலையில் தவித்துக் கொண்டிருந்தார் பாட்டி.
 
 
இன்றைய சூழ்நிலையில் தன் பேரனை தேற்றுவது மட்டுமே முக்கியம் என்றெண்ணி தன் மன வலிகளை எல்லாம் தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டு அவனுக்கு ஆறுதலாக நிற்க முயன்றவருக்கு அதிலும் பெரும் தோல்வி தான் கிடைத்தது.
 
 
அன்றைய நாளுக்குப் பின் யாரையுமே வர்மா தன் அருகில் நெருங்க விடவில்லை. விவரம் அறிந்து ஓடி வந்து தாங்கிக் கொள்ள முயன்ற நட்புக்களையும் நேரில் காண முடியாமல் தள்ளி வைத்தான்.
 
 
மனதளவில் சுக்கு நூறாக அவன் உடைந்து போய் இருக்கும் இந்நிலையில் அவனால் யாரையும் எதிர்க் கொள்ளவும் முடியவில்லை. தன் வலிகள் தன்னைச் சேர்ந்தவர்களையும் பெரிதாகப் பாதிக்கும் என உணர்ந்திருந்தவன் அவனின் மனநிலையை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாமல் தனக்குள்ளேயே மூடி மறைக்கப் போராடிக் கொண்டிருந்தான்.
 
 
ஆனால் எங்கே சென்றாலும் இதைச் சொல்லியே வர்மாவை வம்பிழுத்து அசிங்கப்படுத்தி அவனை வார்த்தைகளில் துன்புறுத்திக் கொண்டே இருந்தனர். தொழிற்சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் தொடரும் கேலி பார்வைகளும், குத்தல் பேச்சுகளும் அவனை உள்ளுக்குள் சுருண்டு கொள்ளச் செய்ய.. இதற்கு மேல் எதுவும் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தவனாக இந்தியாவை விட்டே சென்று விட்டான் வர்மா.
 
 
இப்போது யோசித்துப் பார்க்கும் போது அன்று அவன் அப்படிச் செய்திருக்கக் கூடாது எனப் புரிந்தாலும், அன்றைய மனநிலையில் வர்மாவுக்கு அதைத் தவிர வேறு வழியும் தெரியவில்லை.
 
 
இந்தச் செய்தி அறிந்த யாரையும் பார்க்கவோ பேசவோ விரும்பாமல் அனைவரிடமிருந்தும் தன்னை மொத்தமாக ஒதுக்கிக் கொண்டிருந்தவனுக்கு, தன் மன காயங்கள் ஆற அவகாசம் தேவைப்பட்டது.
 
 
சிறு வயதிலேயே தாயை இழந்து தந்தையின் கட்டுப்பாட்டிலேயே வளர்ந்திருந்தவளுக்கு இன்று வரையும் கூட அவரின் வார்த்தையை மீறும் தைரியம் வரவில்லை. எப்போதும் அனைவரிடமும் திமிரோடு நடந்து கொள்பவள் தான் என்றாலும், ஆளவந்தானிடம் மட்டும் அவளால் இன்றுவரை அதைச் செய்ய முடிந்ததில்லை.
 
 
பணத்தாசையும் தான் என்ற அகங்காரமும் கொண்ட ஆளவந்தானுக்கு மகளோ அவளின் வாழ்க்கையோ என்றுமே பெரிதாகத் தெரிந்ததில்லை. அதுவரை தன் பேச்சை மீறாமல் இருந்ததில் நேஹாவிடம் நன்றாக நடந்து கொண்டிருந்த ஆளவந்தானுக்கு, வர்மாவிடம் இருந்து அவர் எதிர்பார்த்தது கிடைக்காமல் போன கோபம் மொத்தமும் இப்போது நேஹாவின் பக்கம் திரும்பியது.
 
 
“நீ நினைச்சு இருந்தா எப்போவோ நான் சொன்னதைச் செஞ்சு முடிச்சு இருக்கலாம்.. ஆனா உனக்கு அவன் மேலே இருக்கக் காதல் கண்ணை மறைச்சு இருக்கில்லை.. அதான் உன்னை வெச்சே அவனைக் கேவலப்படுத்தினேன்.. இனி வெளியே அவன் எப்படித் தலை காட்டுவான்னு பார்க்கறேன்..” என்று கத்தினார் ஆளவந்தான்.
 
 
இந்த விவாகரத்து விஷயமும் அதற்கான காரணமாக நேஹா சொல்லியதும் வெளியே பரவி, வர்மாவை அனைவரும் கேவலமாகப் பேசுவதை எல்லாம் கண்டே தன் தவறின் அளவு புரிய.. எப்படி இதைச் சரி செய்யப் போகிறோம் என்ற குழப்பத்தில் இருந்தவளுக்கு, வர்மா இங்கே இல்லை என்ற தகவலே தாமதமாக தெரிய வர, பெரிதாக அதிர்ந்தாள்.
 
 
அவன் எங்கே சென்றான்..? என அறிய எத்தனையோ முயன்றும் அவளால் முடியாது போக.. மனதளவில் வர்மாவை பார்க்க தவித்துக் கொண்டிருந்தவள், ஆளவந்தானின் கெடுப்பிடியில் களைத்துப் போனாள்
 
 
தன் மேல் எத்தனை கோபம் இருந்தாலும் அதையும் மீறி தன் மீதான காதல் வர்மாவின் மனதை மாற்றும். ஆரம்பக் கட்ட கோபத்தில் முகம் திருப்பினாலும், எப்படியும் அவனைப் பேசி சமாதானம் செய்து விட முடியுமென நம்பி அந்த முயற்சியில் இருந்தவளுக்கு, அத்தனையும் தோல்வியில் முடிந்தது.
 
 
ஆனாலும் தன் முயற்சியைக் கை விடாமல் தொடர்ந்து மூன்று வருடங்களாக முயற்சித்துக் கொண்டே இருந்தவள், அவன் தன்னை முற்றிலும் வெறுத்து விடுவான் எனத் துளியும் எதிர்பார்த்திருக்கவில்லை.
எப்போதிருந்தாலும் வர்மா தனக்குத் தான் என்ற எண்ணத்தில் இருந்தவளுக்கு வர்மாவின் இந்த ஒதுக்கமும், நிலாவின் வருகையும் பெரும் பயத்தைக் கொடுத்திருக்க.. அதனாலேயே இந்த அதீத ஆக்ரோஷமும் தவறான முடிவுகளும் எடுத்து தன்னையும் வர்மாவையும் சேர்த்தே காயப்படுத்திக் கொண்டிருந்தாள் நேஹா.
 
 
இவை அனைத்தையும் பாட்டியின் மூலம் கேட்டு தெரிந்து கொண்ட நிலா வெகு நேரம் அதிர்வு மாறாமல் அமர்ந்திருந்தாள். அவளுக்கு எப்படி இதற்கு எதிர்வினையாற்றுவது என்று கூடப் புரியவில்லை.
 
 
நேஹாவின் கண்மூடித்தனமான காதலை நேரில் பார்த்திருந்தவளுக்கு ‘இவர்களுக்குள் அப்படி என்ன பிரச்சனை இருந்திருக்கக் கூடும்..?’ என்ற கேள்விக்குக் கிடைத்திருக்கும் பதிலோ கொஞ்சமும் நம்ப முடியாததாக இருந்தது.
 
 
‘கைக்குக் கிடைத்த அற்புதமான வாழ்க்கையை ஒருத்தி இப்படியா மடத்தனமாகக் கீழ் போட்டு உடைத்து விடுவாள்..?’ என்ற எண்ணமே அவளுள் அத்தனை திகைப்பை விதைத்திருந்தது.
 
 
‘தந்தை சொல்வதைக் கேட்பதெல்லாம் சரிதான். ஆனால் எது சரி எது தவறு என உணர்ந்து நடந்து கொள்ளக் கூட வா அவளுக்குத் தெரியவில்லை..! அதோடு காதலித்துத் திருமணம் செய்து கொண்டவன் மேல் இப்படி ஒரு பழியை அள்ளி வீச எப்படி அவனால் முடிந்தது..?’ என்ற யோசனையே வீடு வந்து சேர்ந்த பின்பும் அவளுள் இருக்க.. மகளைத் தொடர்ந்து கவனித்த உமாவுமே “என்னாச்சு நிலா..? ஏதாவது பிரச்சனையா..! ஏன் ஒரு மாதிரி இருக்கே..?” எனக் கேட்டு பார்த்து விட்டார்.
 
 
ஆனால் அவரின் அத்தனை கேள்விக்குமே “அதெல்லாம் ஒண்ணுமில்லை ம்மா..” என்ற பதிலை மட்டுமே நிலா சொல்லிக் கொண்டிருக்க.. அவள் ஏதோ குழப்பத்தில் இருக்கிறாள் எனப் புரிந்து, எதுவாக இருந்தாலும் அவளாகவே சொல்லட்டும் என அமைதியாகிவிட்டார் உமா.
 
 
ஆனால் இரவெல்லாம் நிலாவுக்கு இதையெல்லாம் யோசித்து உறக்கமே இல்லை. மீண்டும் மீண்டும் வர்மாவின் முகம் மட்டுமே அவள் மனதில் வந்து நின்றது.
 
 
‘உண்மையா காதலிச்சவங்க இப்படி ஒரு பழியைச் சொன்னா அது இவருக்கு எவ்வளவு வலியை கொடுத்திருக்கும்..? அந்த நேரத்தில் எப்படி எல்லாம் துடிச்சு இருப்பார்..? கேவலம் சொத்துக்காகவும் பணத்துக்காகவும் இப்படி எல்லாம் ஒரு மனுஷன் மேலே சேறை அள்ளி வீச முடியுமா..? அப்படி முடிஞ்சா இது காதலா..?’ என்றெல்லாம் மனதில் ஓடிக் கொண்டிருக்க.. வர்மாவை விட நேஹாவை அதிகம் வெறுத்தாள் நிலா.
 
 
This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 291
Topic starter  

ஹாய் டியர்ஸ்

எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. இத்தனை நாள் பொறுமையாக காத்திருந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்..

CNM - 23, 24 & 25

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

https://kavichandranovels.com/community/topicid/265/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா 

This post was modified 5 days ago 2 times by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 291
Topic starter  
 
 
சித்திரை - 26
 
 
தன் அறையில் பொதுத் தேர்வை எழுதி விட்டு ரிசல்ட்டிற்காகக் காத்திருக்கும் மாணவனின் மனநிலையில் அமர்ந்திருந்தான் வர்மா.
 
 
அவன் வாழ்வில் நடந்த அனைத்தையும் அறிந்த பின் ‘நிலாவின் மனநிலை எப்படி இருக்கும்..? தன்னிடம் எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறாள்..?’ என அவனுக்குத் தெரிய வேண்டி இருந்தது.
 
 
தன் மனம் என்னவென வர்மாவுக்குத் தெளிவாகப் புரிந்திருந்தது. அதைப் பற்றி நிலாவோடு பேச வேண்டுமென நினைத்திருந்தவனுக்கு அவள் மனநிலை பற்றியும் இப்போது தெரிந்தாக வேண்டி இருந்தது.
 
 
அதில் நிலாவின் வருகையைப் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருந்தவன், ஆனால் தன் முகத்தில் எதுவும் வெளிப்பட்டு விடாதவாறு கவனமாகப் பார்த்துக் கொண்டே, வேலையில் கவனமாக இருப்பது போல் மடிக்கணினியில் பார்வையைப் பதித்தப்படியே அமர்ந்திருந்தவனின் விழிகள் மட்டும் நொடிக்கு ஒருமுறை அறை வாயிலை தொட்டு மீண்டு கொண்டிருந்தது.
 
 
அதே நேரம் அவன் எதிர்பார்ப்புக்கு சொந்தமானவள் அறைக்குள் நுழைய.. சட்டெனப் பார்வையைத் தழைத்துக் கொண்டான் வர்மா. நிலாவும் நேருக்குநேர் அவனைப் பார்ப்பதை தவிர்த்தவாறே “குட் மார்னிங் சார்..” என மெல்லிய குரலில் கூறிவிட்டு தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தாள்.
 
 
அவளின் வருகையை மிகப்பெரும் எதிர்பார்ப்போடு பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு நிலாவின் இந்தச் செயல் பெரிய ஏமாற்றத்தை தர.. யோசனையும் கேள்வியுமாக அவளையே பார்த்தான் வர்மா.
ஆனால் நிலாவுக்கு வர்மாவை நேருக்கு நேர் பார்ப்பதில் பெரும் தயக்கம் உண்டாகி இருந்தது. முன்பு நடந்த அனைத்தையும் அறிந்து கொண்டவளுக்கு, ‘எங்கே தன் மனநிலை அப்படியே விழிகளில் வெளிப்பட்டுவிடுமோ..! மறந்தும் வர்மாவை பரிதாபமாகப் பார்த்து விடுவோமோ..!!’ என்ற பதட்டமே அவளை இயல்பாக இருக்க விடாமல் செய்து கொண்டிருந்தது.
 
 
அதிலும் இறுதியாக நேஹா நடந்து கொண்ட முறையைக் கேள்விப்பட்ட நிமிடத்திலிருந்து ‘அந்த நொடி வர்மா மனதளவில் எப்படி எல்லாம் தவித்துத் துடித்துப் போயிருப்பான்..?’ என்ற கலக்கமே நிலாவினுள் நிறைந்திருந்தது.
 
 
‘எங்கே அந்தப் பரிதாபம் தன் பார்வையில் வெளிப்பட்டு வர்மாவின் மனதை நோகடித்து விடுமோ..!’ என்றெல்லாம் யோசித்தே அவனைப் பார்ப்பதை முடிந்தளவு தவிர்த்துக் கொண்டிருந்தாள் நிலா.
 
 
இதைப் புரிந்து கொள்ளாத வர்மாவோ ‘நடந்ததை எல்லாம் அறிந்த பின் நிலாவும் தன்னைப் பற்றித் தவறாக நினைத்து விட்டாளோ..? தன்னை நேருக்கு நேர் பார்ப்பதைக் கூடத் தவிர்க்கிறாளே..!’ என்றெண்ணி மனதளவில் சோர்ந்து போனான்.
 
 
கடந்த மூன்று வருடங்களாக இனி வாழ்வில் எதுவுமில்லை என்ற முடிவுக்கு வந்தவனாக, உடலும் மனமும் மறுத்துப் போய் இறுக்கமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு, எதிர்கால வாழ்க்கை பாதைக்கான அழகிய வெளிச்சத்தைக் காண்பித்து விட்டு திடீரென அனைத்தையும் தட்டிப் பறித்தது போல் இருந்தது இன்றைய அவனின் மனநிலை.
 
 
அதில் தன் வேலையெல்லாம் மறந்து கன்னத்தில் கை வைத்தவாறே யோசனையாக நிலாவையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் வர்மா. அவளோ மறந்தும் அவன் பக்கம் திரும்பி விடவேக்கூடாது என்பது போல் அமர்ந்திருந்தாள்.
 
 
ஆனால் வர்மாவின் பார்வை மட்டும் பின்னால் இருந்து அவளைத் தொடர்ந்து உறுத்திக் கொண்டே இருந்தது. அதில் யோசனையாக நிலா வர்மாவின் பக்கம் திரும்பி பார்க்க.. அவனோ வேலையிலேயே கவனமாக இருப்பது போல் தன் பார்வையை எதிரில் இருந்த மடிகணினியின் பக்கம் திருப்பிக் கொண்டான்.
 
 
இப்படியே தொடர்ந்து நடக்க.. அன்றைய நாள் முழுக்க இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்திலேயே கழிந்தது.
 
 
*******
 
 
ஒருவாரம் சென்று இருந்தது..
 
 
இருவரும் இப்படியே அவர்களுக்குள் இருக்கும் உணர்வையும், ஒருவருக்கு மற்றவர் மேல் உண்டான விருப்பத்தையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் மற்றவர் பேச வேண்டும் என்று எண்ணியே நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தனர்.
 
 
வர்மாவுக்கோ ‘தன்னை நிலா எப்படிப் பார்க்கிறாள்..? நேஹா சொல்லியதை எல்லாம் இவளும் நம்பி விட்டாளோ..!’ என்ற குழப்பமே அவளிடம் எதையும் மனம் விட்டு பேச பெரும் தடையாக இருந்தது. இல்லையெனில் தன் மனதை எப்போதோ அவளிடம் திறந்து இருப்பான் வர்மா.
 
 
ஆனா நிலாவினுள்ளோ பல குழப்பங்கள் முட்டி மோதிக் கொண்டிருந்தன. ஒன்று வர்மாவுக்குத் தன்னைப் பிடிக்குமா..? இல்லையா..! என்ற கேள்வி, மற்றொன்று இருவருக்கும் இடையே இருக்கும் அந்தஸ்து வித்தியாசம், மூன்றாவது இத்தனை பெரிய அடி மனதில் விழுந்து இருக்க.. மீண்டும் ஒரு வாழ்க்கைக்கு வர்மா தயாராக இருப்பாரா..? என்ற சந்தேகம், ஒருவேளை இவள் தன் மனதில் இருப்பதைச் சொல்லி அதை வர்மா மறுத்து விட்டால் என்ன செய்வதென்ற பயம், இப்படி அவள் பலதையும் யோசித்துக் குழம்பிக் கொண்டிருக்க.. இருவருக்கும் இடையில் பனிப்பாறையாக எழுந்து நின்ற தயக்கங்களையும் தடைகளையும் யார் முதலில் உடைப்பது என்ற போட்டி இருவருக்குள்ளும் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.
 
 
அன்று காலை வழக்கம் போல் அலுவலகம் வருவதற்காக நிலா பஸ் ஸ்டாண்ட்டில் நின்று கொண்டிருக்க.. நேரம் கடந்து கொண்டே இருந்தது, ஆனால் அவள் அலுவலகம் செல்வதற்கான பஸ் மட்டும் வரவில்லை.
 
 
இந்த வாரத்திலேயே மூன்றாவது நாள் இப்படித் தாமதமாகிறது. இவள் இருக்கும் பகுதியில் இருந்து அலுவலகம் இருக்கும் பகுதிக்கு செல்ல ஒருமணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே உண்டு.
 
 
பாலு கூடப் பலமுறை இருசக்கர வாகனம் வாங்கிக் கொள் எனச் சொல்லிப் பார்த்து விட்டான். ஆனால் அதற்குப் பணம் வேண்டுமே..! அதற்கான ஏற்பாடுகளை இப்போதைக்குத் தான் பார்த்துக் கொள்வதாகப் பாலு சொல்லியும் நிலாவினால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
 
 
இப்போதே அலுவலகம் சார்பாகத் தனக்காக நிறையச் செலவு செய்திருக்கிறார்கள். இதுவரை முன்பணம் எனக் கையில் எதுவும் வாங்கவில்லை என்றாலும் மருத்துவமனை செலவு, வீடு பார்ப்பது அட்வான்ஸ் கொடுப்பது என நிறையச் செய்திருக்கிறார்கள்.
 
 
இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் மாத சம்பளத்தில் இருந்து எடுத்துக் கொள்ளச் சொல்லி நிலா அப்போதே கூறி இருந்தும் இப்போதுவரை அப்படி ஒன்று நடக்கவே இல்லை.
 
 
மாதம்தோறும் அவளின் ஊதியம் முழுமையாக நிலாவின் கைக்கு வந்து கொண்டிருக்கிறது. சென்ற மாதம் இதைப் பற்றி பாலுவிடம் கேட்ட போது “அச்சோ மறந்துட்டேன் மூன், அடுத்த மாசம் பார்த்துக்கலாம்..” எனச் சொல்லி சமாளித்திருந்தான் பாலு.
 
 
இந்த மாதமாவது சம்பளம் வாங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்பே பாலுவிடம் இதைப் பற்றி நினைவுபடுத்த வேண்டும் என்றெல்லாம் எண்ணிக் கொண்டு இருப்பவளுக்கு, மீண்டும் புதிதாக வேறு ஒரு செலவை இழுத்து விட்டுக் கொள்ள மனமில்லை.
 
 
இதையெல்லாம் யோசித்தப்படியே நின்றிருந்தவள் தன்னைக் கடந்து சென்ற இருசக்கர வாகனத்தை ஏதேச்சையாகப் பார்க்க.. அதில் ஸ்ருதி பின்னே அமர்ந்திருப்பது தெரிந்தது.
 
 
“ஸ்கூல் போகலையா இவ..?” என அவள் பள்ளி சீருடையில் இருப்பதைக் கண்டு ஸ்ருதியின் பள்ளி இந்தப் பக்கம் இல்லையே என்ற யோசனையோடு ஒரு நொடி திகைத்து நின்றவள், சட்டென முடிவெடுத்தவளாக அங்கு நின்றிருந்த ஆட்டோவில் ஏறி “அதோ அந்தப் பைக்கை ஃபாலோ செய்ங்க அண்ணா..” என்றாள் நிலா.
 
 
பள்ளிக்கு நேர் எதிர் திசையில் இளைஞன் ஒருவனோடு இருசக்கர வாகனத்தில் நெருக்கமாக அமர்ந்து செல்பவளையே படபடக்கும் மனதோடு பார்த்த நிலா, அவளைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருக்க.. ஸ்ருதியோ தன் பின்னால் நிலா வருவதை அறியாமல் அந்த இளைஞனை இறுக்கமாகக் கட்டிப்பிடித்தபடி அவன் முதுகில் சாய்ந்து புன்னகையோடு ஏதோ பேசிக்கொண்டே சென்றாள்.
 
 
இருவரையும் பார்த்த போதே இது ஏதோ காதல் விவகாரம் என நிலாவுக்குத் தெளிவாகப் புரிந்தது. ஆனால் ஸ்ருதியின் வயது இதற்கெல்லாம் ஏற்றது இல்லையே என நிலாவின் மனம் அடித்துக் கொண்டது.
 
 
“அண்ணா கொஞ்சம் சீக்கிரம் போங்களேன்..” என ஓட்டுநரை அவசரப்படுத்தியவள், இருசக்கர வாகனம் அதுவரை சென்று கொண்டிருந்த சாலையில் இருந்து பிரிந்து வேறு பாதையில் செல்வதைக் கண்டு மேலும் பதறினாள்.
 
 
அவளின் அவசரம் புரிந்து ஆட்டோவும் வேகமாகச் சென்று அந்த இருசக்கர வாகனத்தை இடைமறிக்க.. திகைத்து பிரேக்கிட்டு நிறுத்தி “யோவ் அறிவிருக்கா உனக்கு..?” என ஆட்டோ ஓட்டுநரை பார்த்துக் கத்தினான் சரவணன். ஆட்டோவிலிருந்து வேகமாக நிலா இறங்குவதைக் கண்டு அதுவரை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ருதியும் முகம் மாறினாள்.
 
 
வேகமாக அவளை நெருங்கிய நிலா “எங்கே போயிட்டு இருக்கே ஸ்ருதி..?” எனக் கோவமாகக் கேட்கவும், “உனக்கு எதுக்கு அது..?” என்றாள் எரிச்சலோடு ஸ்ருதி. “ஸ்கூல் போகாம எங்கே போயிட்டு இருக்கே நீ..?” என்று மீண்டும் நிலா கேட்கவும், “அதைக் கேட்க நீங்க யாரு..?” என்றான் சரவணன்.
 
 
“நான் யாருன்னு ஸ்ருதிக்கு தெரியும்..” என்றவள், ஸ்ருதியின் பக்கம் திரும்பி “சொல்லு ஸ்ருதி, எங்கே போறே..?” எனவும் “நான் எங்கே போனா உனக்கு என்ன..?” என்றாள் ஸ்ருதி.
 
 
“ஸ்ருதி..” என்று நிலா ஏதோ சொல்ல வரவும், “இது யாரு..?” என்றான் ஸ்ருதியை பார்த்து எரிச்சலோடு சரவணன். “இவ தான் எங்க வீட்டில் ஓட்டிட்டு இருந்த அந்த நன்றி கெட்ட நாய்..” என்று ஸ்ருதி வெறுப்பாகக் கூறவும், அலட்சியமாக நிலாவை பார்த்தான் சரவணன்.
 
 
அவர்கள் தன்னைப் பார்க்கும் விதமும் பேசும் விதமும் புரிய.. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் “ஸ்ருதி இந்த வயசில் இதெல்லாம்..” என மீண்டும் நிலா தொடங்க.. “யோவ் வண்டியை எடுக்கறியா..! இல்லை இடிச்சு தள்ளிட்டு போகட்டுமா..?” என ஆட்டோ ஓட்டுநரை பார்த்துக் கத்தினான் சரவணன்.
 
 
கொஞ்சம் கூட எதைப் பற்றியும் கவலைப்படாத இன்றைய பொறுப்பில்லாத இளைஞர்களின் மறு உருவமாக நின்றிருந்தவனைக் கண்ட ஓட்டுனர் இவன் செய்தாலும் செய்வான் என நினைத்து, தன் வாகனத்தைப் பின்னால் நகர்த்த.. “ஏறி உட்கார் ஸ்ருதி.” என்றவன் வேகமாக வண்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான்.
 
 
இங்கே ஒருத்தி நிற்பதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவர்கள் கிளம்பி சென்ற திசையையே திகைப்போடு நிலா பார்த்துக் கொண்டிருக்க.. “சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்கமா.. யார் சொன்னாலும் கேட்கும் நிலையில் அவங்க இரண்டு பேரும் இல்லை.. நான் கூட நீங்க பதட்டப்பட்டதைப் பார்த்து உங்க தங்கச்சியா இருக்குமோன்னு நினைச்சேன்.. ஆனா அவங்க யாரையும் மதிக்கற நிலையில் கூட இல்லை.. நாம என்ன சொன்னாலும் அவங்களுக்குப் புரியாது.. இது போல ஆள் இல்லாத இடத்தில் வந்து என்ன காதல் வளர்க்க போறாங்க.. கெட்டு சீரழிய போகுதுங்க.. இது போல ஆளுங்க எல்லாம் ரொம்ப ரிஸ்க், அவங்களுக்குக் குறுக்கே வரோம்னு தெரிஞ்சா என்ன வேணும்னாலும் செய்வாங்க.. இப்படியொரு தனியான இடத்தில் அவங்ககிட்ட நாம மாட்டிக்காம இருக்கறது தான் நமக்கு நல்லது.. அவங்களுக்கு நீங்க சொல்ற நல்லது புரியாது.. வாங்க கிளம்புவோம்..” என்று பேசிக் கொண்டே வண்டியில் ஏறினார் ஓட்டுனர்.
 
 
“அவ என்னை எப்படிப் பார்த்தாலும் அவ எனக்குத் தங்கச்சி மாதிரி தான் அண்ணா.. கூடப் பிறக்கலைனா என்ன ஒண்ணா சேர்ந்து வளர்ந்து இருக்கோமே..! அந்த அக்கறை அவளுக்கு இல்லைனாலும் எனக்கு இருக்கு.. இப்படித் தெரிஞ்சே அவ வாழ்க்கை வீணாகப் போறதை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது..” என்றாள் கவலையோடு நிலா.
 
 
“உங்களுக்கு இருக்கும் அக்கறையில் கொஞ்சம் கூட அந்தப் பொண்ணுக்கு உங்க மேலே இல்லைமா.. நீங்க என்ன சொன்னாலும் கேட்கக் கூடாதுன்னு மட்டும் தான் நினைக்கறாங்க, அவங்களா புரிஞ்சு விலகினா தான் உண்டு, நாம சொல்லி எல்லாம் திருத்த முடியாது..” என்றவர் “இங்கே வேற வண்டி எதுவும் கிடைக்காது, வரீங்களா உங்களை மெயின் ரோட்டில் விட்டுடறேன்..” என்றார்.
 
 
அதில் பைக் சென்ற திசையைச் சில நொடிகள் கவலையோடு பார்த்த நிலாவும் சரி என்ற தலையசைப்போடு ஆட்டோவில் ஏறிக்கொண்டாள். அன்று முழுக்க இந்த நினைவே அவளை ஆக்கிரமித்து இருந்ததில் மற்ற எதுவும் அவள் கவனத்தில் பதியவில்லை.
 
 
நிலாவின் முகத்தில் தெரிந்த கவலை ரேகையைக் கவனித்திருந்த வர்மா கூட “எனி இஷ்யூ..?” என இரண்டு முறை கேட்டு விட்டிருந்தான். ஆனால் அதற்கும் அதெல்லாம் ஒண்ணுமில்லை எனத் தலையசைப்பில் மட்டுமே பதில் சொல்லி இருந்தவள், இந்தச் சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது என்ற தீவிர யோசனையிலேயே இருந்தாள்.
 
 
அதன் பலனாக மாலை அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் கிளம்பியவள், நேராக ராணியின் வீட்டிற்குத் தான் சென்றாள். வர்மா மதியத்திற்கு மேல் அலுவலகத்தில் இல்லாததால் பாலுவிடம் சொல்லி விட்டுச் செல்ல வந்திருந்தவள், ஏதோ ஞாபகத்தில் அவன் மேஜை மேலேயே தன் அலைபேசியை வைத்துவிட்டு கிளம்பி விட.. நிலா அங்கிருந்து கிளம்பி சென்ற பிறகே அதைக் கவனித்திருந்தவன், அவளிடம் அலைபேசியைக் கொடுக்க எண்ணி வெளியில் வர.. அதே நேரம் வாயிலில் ஆட்டோவில் ஏறி கொண்டிருந்தாள் நிலா.
 
 
“என்னாச்சு..? ஆட்டோவில் போறா..! திரும்ப அவங்க அம்மாவுக்கு உடம்பு எதுவும் முடியலையா..? இவ்வளவு அவசரமா பர்மிஷன் போட்டுட்டு ஆட்டோ பிடிச்சு வேற கிளம்பறானா வேற என்னவா இருக்கும்..? இந்த நேரத்தில் போன் இல்லாம என்ன செய்வா..!” என்று எண்ணியவனாகத் தன் இருசக்கர வாகனத்தில் ஏறி அவளைப் பின் தொடர்ந்து சென்றான் பாலு.
 
 
ஆட்டோ அவள் வீடு இருக்கும் திசையில் செல்லாமல் வேறு பக்கம் செல்வதைக் கண்டு குழம்பியவனாக நிலாவை பாலு பின் தொடர்ந்திருக்க.. நேராக நிலா தன் மாமாவின் வீட்டு முன் சென்று இறங்கவும், ‘இங்கே எதுக்கு வந்திருக்கா..? திரும்ப எதுவும் பிரச்சனை செய்யறாங்களா..!’ என யோசனையானவன், பக்கத்து வீட்டிற்கு அருகில் தன் பைக்கை நிறுத்தி விட்டு அங்கேயே அவளுக்காகக் காத்திருந்தான் பாலு.
 
 
வீடு வரை வந்து விட்ட நிலா அழைப்பு மணியை அடிக்கத் தயங்கி கையைக் கொண்டு செல்வதும், பின் தயக்கத்தோடு பின்னிழுத்துக் கொள்வதும் கையைப் பிசைவதுமாக நின்றிருப்பதைக் கண்டவன், ‘என்ன செய்யறா இவ..? எதுக்கு இங்கே வந்திருக்கா..?’ எனக் குழப்பத்தோடு பார்த்திருக்க.. அதேநேரம் ஒரு முடிவுக்கு வந்தவளாக நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டவாறே அலைபேசியை அடித்திருந்தாள் நிலா.
 
 
முதல்முறை அழைப்பு மணி அடித்து ஓய்ந்தும் யாரும் வந்து கதவை திறக்கவில்லை. இரண்டாவது முறை நிலா மணியை அடிக்கவும் “யாரது சும்மா நொய் நொய்னு..” என்ற கடுப்போடு வந்து கதவை திறந்தார் ராணி.
 
 
அவரை எப்படி எதிர்கொள்வது என்ற தயக்கத்தில் இருந்த நிலா, ராணியின் இத்தகைய வரவேற்பை கண்டு அடுத்த வார்த்தை வராமல் அப்படியே நிற்க.. நிலாவை அங்கே கண்ட எரிச்சலில் “நீயா..? இப்போ எதுக்கு இங்கே வந்தே..?” என்றார் முகத்தை சுழித்து ராணி.
 
 
“மா.. மாமி நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..” எனக் கையைப் பிசைந்தபடியே நிலா சொல்லவும் “அதானே பார்த்தேன், வாடி வா.. என்ன வீம்பா கிளம்பி போனியே அதெல்லாம் என்னாச்சு..? உன்னைக் கூட்டிட்டு போனவன் காரியம் முடிச்சதும் கழட்டி விட்டுட்டானா.. இப்போ போக்கிடம் இல்லாம திரும்ப இங்கேயே ஒட்டிக்கலாம்னு வந்து நிற்கறியா..? நீ தலைகீழா நின்றாலும் என் காலிலேயே விழுந்து கதறினாலும் உன்னை வீட்டுக்குள்ளே விடவே மாட்டேன்..” என்றார் ராணி.
 
 
“அதில்லை மாமி..” என்று நிலா மீண்டும் பேச தொடங்கவும் “ஏய் நிறுத்துடி.. எங்களை அந்த அளவுக்கு அசிங்கப்படுத்திட்டு போனே, உன்னால் எங்க மானம் மரியாதையே போச்சு.. என் பிள்ளை இன்னைக்கு உன்னால் தான் ஜெயிலில் இருக்கான்.. உன்னைத் திரும்ப இந்த வீட்டுக்குள்ளே சேர்த்துக்கவே மாட்டேன்டி..” என்று ராணி வசைப்பாடிக் கொண்டே செல்ல.. அதற்குள் ராணியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் எல்லாம் வெளியில் வந்து எட்டிப் பார்த்தனர்.
 
 
இதைச் சங்கடமாகப் பார்த்த நிலா “மாமி ப்ளீஸ், நான் திரும்ப இங்கே வருவதைப் பற்றிப் பேச வரலை.. உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும், அதுக்காகத் தான் வந்தேன்.. கொஞ்சம் உள்ளே போய்ப் பேசலாமா..?” என அக்கம் பக்கம் இருப்பவர்களைப் பார்த்தவாறே கேட்டாள் நிலா.
 
 
“அடி என் மகாராணி அப்படி என்னடி முக்கியமா யாருக்கும் தெரியாம பேச போறே..! காசு ஏதாவது வேணுமா..? பிச்சை எடுக்க வந்தியா..? அது எதுவா இருந்தாலும் சரி உன்னை வீட்டுக்குள்ளே விடவே மாட்டேன்..” என்றார் ராணி.
 
 
“இல்லை மாமி, எனக்கு எதுவும் வேண்டாம்.. நான் உங்ககிட்ட எதுவும் கேட்டு வரலை, நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.. அதுக்காகத் தான் வந்து இருக்கேன்..” என்று மீண்டும் நிலா கெஞ்சலாகச் சொல்லவும், அவள் பணிந்து பேசுவதே, ராணிக்கு திமிரை கொடுத்தது.
 
 
அதில் வாய்க்கு வந்ததை எல்லாம் ராணி பேசிக்கொண்டே சென்றார். இத்தனை நாள் நிலாவின் மேல் அவருக்கு இருந்த கோபம் எல்லாம் வார்த்தைகளில் வெளிப்பட்டுக் கொண்டிருக்க.. “என்ன ராணி என்ன பிரச்சனை..?” என்று பக்கத்து வீட்டில் இருந்து குரல் கொடுத்தார் சாவித்திரி.
 
 
“வாடியம்மா.. அடுத்த வீட்டு கதைனா என்ன நொன்னன்னு நாக்கை தொங்க போட்டுட்டு வந்துடுவீங்களே..” என அவர்கள் மேல் இருந்த கோபத்திலும் கத்தி தீர்த்தவர், நிலாவின் பக்கம் திரும்பி “வெளியே போடி..” என்று சிடுசிடுத்து விட்டு கதவை அடைத்திருந்தார் ராணி.
 
 
இதில் செய்வதறியாது நிலா நின்றிருக்கும் போதே அங்கு வந்து சேர்ந்தாள் ஸ்ருதி. நிலாவை அங்கே கண்டும் கொஞ்சமும் அவளிடம் பதட்டம் வரவில்லை. நிலாவை எகத்தாளமான ஒரு பார்வையைப் பார்த்தவாறே கடந்து சென்று அழைப்பு மணியை அடித்தாள் ஸ்ருதி.
 
 
“அடடா இவளுக்கு ஒருமுறை சொன்னா புரியாது போலேயே..!” என்று எரிச்சலோடு வந்து கதவை திறந்த ராணி வெளியே தன் மகள் நிற்பதை கண்டு “நீயா உள்ளே வா..” என வழி விட்டு நிற்க.. “இவ எதுக்குமா இங்கே வந்திருக்கா..” என்றாள் ஸ்ருதி.
 
 
“ஹாங் திரும்ப இங்கே வந்து ஒட்டிக்கலாம்னு பார்க்கறா..” என்று ராணி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அதற்கு மேல் பொறுமை இல்லாமல் கதவை வேகமாகத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த நிலா “முதலில் நான் என்ன சொல்ல வரேன்னு கேளுங்க மாமி.. நீங்களா ஒண்ணை நினைச்சுட்டு பேசாதீங்க..” என்றாள் எரிச்சலோடு.
 
 
“என்னடி குரல் எல்லாம் உயருது, திமிர் ஏறி போச்சோ..! நாலு அறை விட்டேன்னு வை மொத்த திமிரும் காணாம போயிடும்..” என்றார் ராணி. “உங்ககிட்ட சண்டை போடவோ அடிவாங்கவோ நான் இங்கே வரலை.. முக்கியமா திரும்ப இங்கே வர எண்ணமும் எனக்கில்லை.. ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசிட்டு போலாம்னு தான் வந்தேன்.. இப்போவாவது நான் சொல்றதை கேளுங்க..” என்றாள் நிலா.
 
 
“அப்படி என்ன சொல்ல போறே..? எங்கே சொல்லு பார்க்கலாம்..” என ராணி கேட்கவும், ஸ்ருதியை ஒரு பார்வை பார்த்தபடியே “இன்னைக்கு நீ எங்கே போயிருந்தே ஸ்ருதி..?” என்றாள் நிலா.
 
 
“அதைக் கேட்க நீ யாரு..?” என்று ஸ்ருதி எரிச்சலோடு சொல்லவும், “அதானே நீ யாரு என் பொண்ணைக் கேள்வி கேட்க..?” என்றார் ராணி. “மாமி இவ இன்னைக்கு ஸ்கூலுக்கே போகலை.. ஆனா ஸ்கூல் முடிஞ்சு வர டைமுக்கு சரியா வரா பாருங்க.. எங்கே போயிட்டு வரான்னு கேளுங்க..” என நிலா படபடக்கவும், “அடி செருப்பால.. என் பிள்ளை மேலே பழி போட்டது போதாதா.. அடுத்து என் பொண்ணு வாழ்க்கையும் நாசமாக்க வந்து இருக்கியா நீ..?” என்று எகிறிக் கொண்டு நிலாவை அடிக்கப் பாய்ந்தார் ராணி.
 
 
அதற்குள் இரண்டடி பின்னுக்கு நகர்ந்து தன் மேல் ராணியின் கை படாதவாறு தள்ளி நின்ற நிலா, “முதலில் இப்படி எதுக்கு எடுத்தாலும் குதிக்காம நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க.. காலையில் ஸ்கூலுக்குப் போகாம ஒரு பையன் கூடப் பைக்கில் எங்கேயோ போனா.. இவ்வளவு நேரம் எங்கே போயிட்டு வரான்னு கேளுங்க.. இவ வயசுக்கு இதெல்லாம்..” என நிலா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதற்கு நேர்மாறாக “என் பொண்ணை வேவு பார்க்கறியா நீ..?” என்றிருந்தார் ராணி.
 
 
“ஐயோ மாமி.. உங்களுக்கு எப்படிச் சொல்லி புரிய வைக்கறது..? நான் இவளை இன்னைக்கு ஏதேச்சையா தான் பார்த்தேன்.. இந்தப் பக்கம் எங்கே போறான்னு தான் இவளை ஃபாலோ செஞ்சுட்டு போனேன்..” என்றவளை வேகமாக இடைமறித்த ராணி “ஓஹோ.. அதை வேற செஞ்சியா நீ..?” என்று தன் பெண் மேல் உள்ள தவறை புரிந்து கொள்ளாமல் நிலா அவளைப் பின்தொடர்ந்து சென்றதும் கேள்வி கேட்டதுமே தவறு என்பது போல் பேசிக் கொண்டிருந்தார்.
 
 
ராணி தனக்குச் சாதகமாகப் பேசுவதில் உண்டான நக்கல் புன்னகையோடு நிலாவை பார்த்த ஸ்ருதி, “நீ எவ்வளவு தான் முயற்சி செஞ்சாலும் வேலைக்கு ஆகாது கிளம்பு..” எனக் கேலியாகச் சொல்லவும், செய்வதறியாது ராணியின் பக்கம் பார்த்தாள் நிலா.
 
 
ராணியும் நிலாவின் வார்த்தையை நம்பாதது போல் நின்றிருக்க.. “மாமி என் மேலே இருக்கக் கோபத்தை எல்லாம் கொஞ்சம் தள்ளி வெச்சுட்டு யோசிங்க.. இது ஸ்ருதியோட வாழ்க்கை, அவ சின்னப் பொண்ணு இந்த வயசில் காதல் அது இதுன்னு வெளியே சுத்தறது சரியில்லை.. எனக்கு அவன் நல்லவன் மாதிரியும் தெரியலை..” என நிலா பேசிக் கொண்டே செல்ல.. “என்னைப் பற்றிப் பேசற தகுதியே உனக்குக் கிடையாது.. நீ எத்தனை பேர் கூட எப்படி எல்லாம் சுத்தினேன்னு தான் எங்களுக்குத் தெரியுமே..!” என்றாள் இடக்காக ஸ்ருதி.
 
 
“அதானே.. நீ என்னமோ பெரிய ஒழுக்கச் சிகாமணி போல என் பொண்ணைக் குறை சொல்ல வந்துட்டே.. நீ எப்படி எல்லாம் வாழறேன்னு முதலில் யோசிச்சு பாரு.. தினம் ஒருத்தன் காரில் வந்தானே.. அதெல்லாம் மறந்துடுச்சா..” என ராணி கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக விரட்டினார்.
 
 
இதற்கு மேல் என்ன செய்வது எனப் புரியாமல் சில நொடிகள் நின்றவள், “எனக்கு உங்ககிட்ட சொல்லணும்னு தோணுச்சு கிளம்பி வந்துட்டேன்.. அதுக்குப் பிறகு உங்க விருப்பம் மாமி, நீங்க என்னை எப்படிப் பார்த்தாலும் சரி.. இன்னைக்கும் இதை என் வீடா, என் குடும்பமா, அவளை என் தங்கச்சியா தான் நான் நினைக்கறேன்.. அதனால் தான் அவ வாழ்க்கைக்குக்காக உங்ககிட்ட பேச வந்தேன்.. ஸ்ருதி உங்க பொண்ணு தான் நான் இல்லைன்னு சொல்லலை.. என்னை விட நீங்க அவளைத் தான் நம்புவீங்க, ஆனா அதுக்காக இப்படிக் கண்மூடித்தனமா செய்யும் தப்பை எல்லாம் நியாயப்படுத்திட்டு இருக்காதீங்க.. ஏற்கனவே உங்க பையன் விஷயத்தில் இப்படிச் செஞ்சு தான் அவன் ஜெயிலில் இருக்கான்.. அதே தப்பை திரும்பச் செய்யாதீங்க.. என்கிட்ட இப்படிப் பேசினதோடு நிறுத்திக்கோங்க, நான் போனதுக்குப் பிறகாவது அவகிட்ட என்ன நடந்ததுன்னு கேட்டு தெரிஞ்சுக்கோங்க.. இது அவளோட வாழ்க்கைக்கு நல்லது..” எனச் சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறி விட்டாள் நிலா.
 
 
சுற்றிலும் நின்றிருந்தவர்களின் பார்வையைப் பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் வேகமாக வெளியில் வந்தவள், தன் பைக்கில் அமர்ந்திருந்த பாலுவை கண்டு தன் நடையை நிறுத்தி “பாலு..?” என்றாள் குழப்பமாக நிலா.
 
 
“ஹ்ம்ம், நானே தான்..” என்றான் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு பாலு. அவனின் இறுக்கத்திற்கான காரணம் புரியாமல் “என்ன..?” என நிலா அவனைப் பார்க்கவும், “வண்டியில் ஏறு, கிளம்பலாம்..” என்றவனை முறைத்தவள், “நீ இங்கே என்ன செய்யறே..?” என்றாள் நிலா.
 
 
“ஹாங்.. சோஷியல் சர்வீஸ் செய்ய வந்தேன்..” என்றான் நக்கலாக பாலு. “என்னது..?” என்றவளை பதிலுக்கு முறைத்தவன், “ஆமா, ஏன் நீ மட்டும் தான் சோஷியல் சர்வீஸ் செய்வியா..? நாங்களும் செய்வோம்..” என ராணியின் வீட்டை அர்த்தத்துடன் பார்த்தவாறே தன் பாக்கெட்டில் இருந்த அலைபேசியை எடுத்து அவளிடம் நீட்டினான் பாலு.
 
 
அதில் அவ்வளவு நேரம் இருந்த இறுக்கமெல்லாம் காணாமல் போய்ச் சட்டெனச் சிரித்து விட்டாள் நிலா. “இதெல்லாம் உனக்குத் தேவையா மூன்..?” என பாலு மனம் தாங்காமல் கேட்டுவிட.. “அவ சின்னப் பொண்ணு பாலு..” என்றாள் நிலா.
 
 
“அந்த அக்கறை அவங்க அம்மாவுக்கே இல்லையே..!” என பாலு கூறவும் அதுக்கு நான் என்ன செய்யறது.. அவ மேலே எனக்கு அக்கறை இருக்கே, இந்த வயசில் உயிரையும் உடலையும் காப்பாத்திக்கப் போராடறது எவ்வளவு கொடுமையானதுன்னு எனக்குத் தெரியும் பாலு.. அதை அவளும் அனுபவிக்க வேண்டாம்னு நினைக்கறேன்..” என்றவளின் வார்த்தைகள் பாலுவை பெரிதாகப் பாதித்தது.
 
 
இதையெல்லாம் அவள் மூலம் முன்பே அறிந்திருந்தான் என்றாலும் இப்போது மீண்டும் கேட்கும் போதும் மனம் ஏதோ செய்தது. ஆனால் அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் சட்டென்று பேச்சை மாற்றியவன், “சரி, வா உன்னை வீட்டில் விட்டுடறேன்..” என்றான் பாலு.
 
 
“உங்களுக்கு வேலை எதுவும் இல்லையா..?” என நிலா கேட்க.. “நிறைய இருக்கு, அதானி கூட ஒரு மீட்டிங் இருக்கு.. அடுத்து எலான் மஸ்க் கூட டின்னர் போகணும்.. அப்பறம்..” என பாலு சொல்லி சொல்லிக்கொண்டே செல்ல.. புன்னகையோடு செல்லமாக பாலுவின் தோளில் அடித்தவாறே வண்டியில் ஏறி அமர்ந்தாள் நிலா.
 
 
This post was modified 5 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 291
Topic starter  
 
 
சித்திரை - 27
 
 
மீட்டிங் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வர்மா சிக்னலில் நின்றிருக்க.. எதிர் சிக்னலில் பாலுவின் இருசக்கர வாகனத்தில் நிலா அமர்ந்திருப்பது அவன் பார்வையில் விழுந்தது.
 
 
சிக்னல் விழுந்ததும் இருவரும் சிரித்துப் பேசியப்படியே சென்று கொண்டிருக்க.. நிலா சிரித்துக் கொண்டே செல்லமாக பாலுவின் தலையில் தட்டினாள். இதைக் கண்ட வர்மாவின் மனதில் ஏதோ ஒரு ஏமாற்றம் பரவியது.
 
 
சற்று முன்பு தான் அலுவலகத்தில் இருக்கும் ஒரு கம்பெனி சம்பந்தமான தகவலை பற்றிக் கேட்பதற்காக பாலுவுக்கு அழைத்து இருந்தான் வர்மா. “சாரி பாஸ், நான் இப்போ ஆபீஸில் இல்லை.. ஒரு அவசரமான வேலை ஒன் ஹவர் பர்மிஷன் போட்டு கிளம்பிட்டேன்..” என்று பாலு கூறியிருந்தது இப்போது வர்மாவின் நினைவுக்கு வந்தது.
 
 
இருவரும் ஒன்றாகப் பர்மிஷன் போட்டு விட்டு, அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் கிளம்பி எங்கோ வெளியில் சென்று விட்டு திரும்புவது புரிய.. அவர்கள் தன்னைக் கடந்து சென்ற பின்னும் அந்தத் திசையையே சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தான் வர்மா.
 
 
நிலாவை இழக்க விரும்பா மனம் இதைக் கண்டு ஒரு விதத்தில் தவிக்க.. அதே நேரம் அவளை எதற்கும் கட்டாயப்படுத்தவும் அவனுக்கு விருப்பமில்லை. இதில் ஒருவித கலவையான உணர்வில் வர்மா தத்தளித்துக் கொண்டே, சோர்வாக வீட்டை நோக்கி சென்றான் வர்மா.
 
 
பெரிதாக எதையோ இழந்தது போலான உடல் மொழியோடு வீட்டிற்குள் நுழைந்த வர்மாவை புரியாமல் பார்த்தார் சரோஜா பாட்டி. இந்த வாரம் முழுக்கவே ஏதோ ஒரு குழப்பமும் கவலையும் அவன் முகத்தில் படர்ந்திருக்க.. எதையோ இழந்தது போலான ஒரு தவிப்பு அவனிடம் வெளிப்பட்டது.
‘என்னவா இருக்கும்..?’ என யோசித்தவருக்கு நிலாவின் முகம் தான் நினைவில் வந்து நின்றது.
 
 
‘அவங்களுக்குள்ளே ஏதாவது பிரச்சனையா இருக்குமா..? என்னன்னு தெரியலையே..! நிலா பொண்ணு ரொம்ப நல்லவளாச்சே..! எதுவும் சண்டை போட்டு இருப்பாங்களோ..?” என்றெல்லாம் யோசித்துக் குழம்பிக் கொண்டிருந்தவருக்கு, இதுவரை அவர்கள் இருவரும் எதையும் தெளிவாகப் பேசிக்கொள்ளவே இல்லை என்பது தெரியவில்லை பாவம்.
 
 
‘இப்போ தான் கொஞ்சம் பழைய மாதிரி வந்துட்டு இருக்கானேன்னு நினைச்சு சந்தோஷப்பட்டுட்டு இருந்தேன்.. அதுக்குள்ளே என்னாச்சுன்னு தெரியலையே..! பேசாம நிலாகிட்டயே நேரில் போய்ப் பேசி பார்ப்போமா..? மஹிகிட்ட என்ன கேட்டாலும் சொல்ல மாட்டான்.. தானா சரியாகும்னு நினைச்சு இனியும் காத்திருக்க முடியாது.. இப்போ தான் கொஞ்சமா மனசு மாற ஆரம்பிச்சுருக்கான், இந்தச் சந்தர்ப்பத்தை விடாமல் கெட்டியா பிடிச்சுக்கணும்.. இல்லை திரும்பப் பழைய மாதிரியே வனவாசம் கிளம்பினாலும் கிளம்பிடுவான்..” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டவர், நிலாவை நேரில் பார்த்து பேச முடிவு செய்தார்.
 
 
**
 
 
மறுநாள் அலுவலகத்திற்குள் நுழைந்த வர்மாவை சோதிப்பதற்கென்றே பாலுவுடன் நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருந்தாள் நிலா. இயல்பாக இருவரும் ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசிக்கொள்வதும், அவர்களுக்குள் இருக்கும் நெருக்கமும் கண்ட வர்மாவுக்கு அத்தனை பொறாமையாக இருந்தது.
 
 
அதற்காக நிலாவின் மேல் அவனுக்குச் சந்தேகமா என்றால் நிச்சயம் இல்லை என்பான் வர்மா. ஆனால் அவள் தன்னுடையவள் என உறுதியான பிறகு வரும் மனோதிடம் இப்போது அவனிடம் இல்லை. அவள் தனக்குக் கிடைப்பாளா..? இல்லையா..! என மனம் ஒரு பதட்டத்திலேயே இருந்தது.
 
 
அதற்கு ஏற்றார் போல் பாலு உடனான நிலாவின் இந்த நெருக்கமும் தன்னைத் தவிர்ப்பது போல் சமீபமாக அவள் நடந்து கொள்வதும், அவனைப் பொறாமை தீயில் பொசுங்க செய்து கொண்டிருந்தது.
 
 
பார்வையாலேயே இருவரையும் எரித்து விடுவது போல் சில நொடிகள் வெறித்தவன், வேகமாக அங்கிருந்து நகர்ந்து விட்டான். ஆனால் இதில் இவர்கள் இருவருமே வர்மா வந்ததையோ, நின்றதையோ, சென்றதையோ கவனிக்கவே இல்லை. அத்தனை சுவாரஸ்யமாக அவர்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.
 
 
தன் இருக்கைக்கு வந்த பின்பும் மீண்டும் மீண்டும் நிலா பாலுவை தொட்டு பேசிக் கொண்டிருந்ததும் சிரித்துக் கொண்டிருந்ததுமே அவன் மனக்கண்ணில் ஓடிக்கொண்டிருக்க.. வேலையில் வர்மாவால் கவனத்தைச் செலுத்தவே முடியவில்லை.
 
 
இதே மனநிலையில் அவன் இருக்கும் போதே அறையின் கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள் நிலா. “குட் மார்னிங் சார்..” என்றப்படியே நகர்ந்தவள், “இது தான் ஆஃபீஸுக்கு வர நேரமா..?” என்ற வர்மாவில் இறுக்கமான குரலில், தன் நடையை நிறுத்தி மெல்ல திரும்பி அவனைப் பார்த்தாள்.
 
 
முதன்முதலில் இந்த அலுவலகத்தில் நிலா வேலைக்குச் சேர்ந்த போது இருந்தது போல் வர்மாவின் முகம் இருக்க.. ‘என்னாச்சு..? ஏன் இப்படி இருக்காங்க..? எதுவும் பிரச்சனையா..! நேத்து மீட்டிங் போயிருந்தாங்களே அங்கே எதுவும் சரியா போகலையோ..!’ என்றெல்லாம் நொடியில் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டவள், அமைதியாக இருப்பதைக் கண்டு பொறுமை இழந்த வர்மா “உன்கிட்ட தான் கேட்கறேன்.. ஏன் லேட்..?” என்று எரிச்சலில் கத்தவும், “இல்லை சார், நான் அப்போவே வந்துட்டேன்..” என லேசான தடுமாற்றத்தோடு கூறினாள் நிலா.
 
 
“அப்போவே வந்து என்ன செஞ்சுட்டு இருந்தே..? வேலை எதுவும் நடந்த மாதிரி தெரியலையே..!” என நிலாவின் மேஜையை நிதானமாகப் பார்த்தப்படியே மீண்டும் அதே போன்ற குரலில் கேட்டான் வர்மா. “இல்... இல்லை சார், நான் இப்போ தான் இங்கே வரேன்.. கீழே பாலு கூட..” எனக் கையை வெளிபக்கம் காண்பித்தவாறே சொல்ல தொடங்கியவள், வர்மாவின் பார்வையில் அப்படியே பேச்சை நிறுத்தி அமைதியானாள்.
 
 
“ஓஹோ.. உனக்கு இந்த ஆபீஸில் வெட்டி கதை பேச தான் சம்பளம் கொடுக்கறேனா..?” என வர்மா கடினமான குரலில் கேட்கவும், இதற்கு என்ன சொல்வது எனத் தெரியாமல் பார்வையைத் தழைத்துக் கொண்டவள் அமைதியாக நின்றிருக்க.. அவளின் இந்தத் தயக்கமும் அமைதியும் வர்மாவிற்கு அதீத கோபத்தை வர வழைத்தது.
 
 
அதில் மேலும் அவன் ஏதோ சொல்ல வர.. அதே நொடி அறையின் கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தான் பாலு. இருவரும் இருந்த நிலையைக் கண்டு தீவிரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருப்பது போல் இருக்க.. என்னவென்பது போல் நிலாவை பார்த்தான் பாலு.
 
 
அவளும் அதே நேரம் அவனை என்னை எப்படியாவது காப்பாற்றேன் என்பது போல் பாவமாகப் பார்க்க.. இவர்கள் இருவரின் இந்தப் பார்வை பரிமாற்றத்தை கண்ட வர்மா கோபத்தில் தன் கை விரல்களை இறுக மூடியவாறே பாலுவை பார்த்து “என்ன விஷயம்..?” என்றான்.
 
 
அந்த இறுக்கமான குரலிலேயே வர்மாவின் பக்கம் திரும்பிய பாலு, தன் கையில் இருந்த கோப்பை வர்மாவின் முன் வைத்து “இல்லை பாஸ், நேற்று ஈவினிங் நீங்க கால் செஞ்சு கேட்ட பைல் அண்ட் டீடெய்ல்ஸ்.. இந்தப் பைல் மூன்.. ம்ப்ச் நிலா தான் ஹேண்டில் செஞ்சுட்டு இருந்தா, அதான் நேற்று எனக்கு இதைப் பற்றித் தெரியலை.. நிலாவை காலையில் கொஞ்சம் சீக்கிரம் வர சொல்லி இன்னைக்கு இந்த வேலையை முடிச்சுட்டோம் பாஸ்.. நீங்க கேட்ட எல்லா டீடைல்ஸும் இதில் இருக்கு..” என வர்மா அதைப் புரட்டிப் பார்ப்பதற்கு ஏதுவாகக் கோப்பை தள்ளி வைத்தான் பாலு.
 
 
இதில் இவ்வளவு நேரமும் கொதித்துக் கொண்டிருந்த வர்மாவின் மனம் லேசாகத் தணிய.. இருவரையும் ஒரு பார்வை பார்த்தவன் ‘சரி போ..’ என்பது போல் பாலுவிடம் விரலசைவில் கூறினான். வர்மாவின் முகத்தில் இருந்த அழுத்தமும் குரலில் தெரிந்த இறுக்கமும் பாலுவுக்கு நன்றாகப் புரிய.. ‘பாஸ் செம்ம கோபத்தில் இருக்கார் போல..’ என நினைத்தவனாக அவனும் வேறு எதுவும் பேசாமல் சரி என்ற தலையசைப்போடு நகர்ந்தான்.
 
 
அறையின் கதவு வரை சென்றவனுக்கு நிலாவின் முகத்தில் இருந்த ஏதோ ஒன்று அவனை மீண்டும் திரும்பி நிலாவை பார்க்க செய்திருந்தது. அவளும் என்னைத் தனியே விட்டு போகாதே..!’ என்பது போல் பாலுவை பார்த்திருக்க.. வர்மாவும் இதைக் கவனித்திருந்தான்.
 
 
ஆனாலும் பாலுவிடம் எதையும் பேச விரும்பாமல் அமைதியாக இருந்தவன், அவன் அங்கிருந்து வெளியேறிய அடுத்த நொடி நிலாவின் பக்கம் திரும்பி “இங்கே இன்னும் நின்று என்ன செய்யறே..? வேலை எதுவும் செய்யும் ஐடியா இருக்கா..?” என்று சிடுசிடுக்கவும், “சா.. சாரி சார்..” என வேகமாகத் தன் இருக்கைக்குச் சென்றாள் நிலா.
 
 
ஆனாலும் திடீரென்ற இந்த வர்மாவின் கோபம் எதற்கெனப் புரியா குழப்பம் அவளைத் தாக்க.. திரும்பி திரும்பி வர்மாவை பார்த்தப்படியே வேலை செய்து கொண்டிருந்தவளின் முகத்தில் தெரிந்த கலக்கம் அவனையும் சேர்த்து கலங்க செய்தது.
 
 
‘ச்சே.. என்ன செஞ்சுட்டு இருக்கேன் நான்..?’ என்ன தன்னையே தீட்டிக் கொண்டவன், அதன் பின் அவளின் பக்கமே திரும்பக் கூடாது என்ற முடிவுக்கு வந்தது போல் வேலையில் கவனமானான்.
 
 
இதன் பின் இருவருக்குள்ளும் எந்தப் பேச்சும் இல்லாமல் அறையே நிசப்தத்தில் மூழ்கியிருக்க.. அவரவர் வேலையில் கவனமாக இருந்தாலும் அவ்வபோது ஒருவர் அறியாமல் மற்றவரின் பார்வை அவர்களைத் தொட்டு மீண்டு கொண்டிருந்தது.
 
 
மதிய உணவு இடைவேளைக்காக எழுந்த நிலா, அப்போது வரையும் கூட வர்மா அங்கிருந்து அசையாமல் வேலையிலேயே மூழ்கி இருப்பதைக் கண்டு கவலையானாள். இடையில் தன் வழக்கம் போல் டீ குடிக்க நிலா சென்று வந்திருக்க.. வர்மா அதைக் கூடச் செய்திருக்கவில்லை.
 
 
இதில் கவலையாக அவனைத் திரும்பி பார்த்தபடியே வெளியேறியவள், சாப்பிடச் சென்று அமர.. மனமோ வர்மாவையே சுற்றி வந்து கொண்டிருந்தது. அவன் இப்படியிருக்கையில் அவளால் நிம்மதியாகச் சாப்பிட முடியும் எனத் தோன்றவில்லை.
 
 
‘காலை இங்கே வந்ததிலிருந்து எதுவும் சாப்பிடாம இருக்காங்களே.. என்ன பிரச்சனையா இருக்கும்..? பழைய மாதிரி ரொம்ப டென்ஷனா கோவமா வேற இருக்காங்க, பிசினஸில் ஏதாவது பிராப்ளமா..? இல்லை டீலிங் எதுவும் கையை விட்டு போச்சா..? பாலுவை கேட்டா தெரியுமா..? இல்லை வேண்டாம், அப்பறமா பேசிக்கலாம்..’ என்றெல்லாம் யோசித்தவள், அவன் சாப்பிடாமல் இருப்பது மட்டுமே மீண்டும் மீண்டும் மனதை ஏதோ செய்து கொண்டிருந்ததில், சட்டென அங்கிருந்து எழுந்து காபி மேக்கரை நோக்கி சென்றாள்.
 
 
வேலை அதிகமாக இருக்கும் நேரங்களில் வர்மா லெமன் டீயை விரும்பி குடிப்பது வழக்கம் என்பதால் அதைத் தயார் செய்து கொண்டு மீண்டும் அறைக்குச் சென்றவள் “சார் நீங்க காலையிலிருந்து எதுவுமே சாப்பிடலை.. கொஞ்சம் டீ குடிச்சுட்டு வேலையைப் பாருங்க..” என்றப்படியே அவன் முன் அதை நகர்த்தி வைத்தவள், வர்மா திட்டுவதற்குள் வேகமாக அங்கிருந்து ஓடி விட்டாள்.
 
 
தன் மடிக்கணினியில் கவனமாக இருந்தவன், விழிகளை உயர்த்தி அவளைப் பார்த்தான். ‘இப்போ உன்கிட்ட யார் இதைக் கேட்டது..?’ எனச் சொல்ல நினைத்தவன், அவள் முகத்தில் தெரிந்த பதட்டத்தையும், வேகமாக இங்கிருந்து ஓடுவதையும் கண்டு வேறு எதுவும் பேசாமல் சரியெனத் தலையசைத்தான்.
 
 
அவள் சென்ற திசையையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தவன், ஒற்றை விரலால் நெற்றியை நீவி விட்டுக் கொண்டவாறே வேலையின் பக்கம் கவனத்தைத் திருப்பினான். அதன் பிறகு அன்று முழுக்க வர்மா அமைதியாக மட்டுமே இருந்தான். நிலாவின் அந்த ஒரு சின்னச் செயல் அவன் மனதை அமைதியாக்கி இருந்தது.
 
 
அவனுக்கே தன் செயல்களை நியாயப்படுத்த முடியவில்லை. தன் விருப்பப்படி எப்படி வேணும்னாலும் இருக்க நிலாவுக்கு எல்லா உரிமையும் இருக்க.. அவளிடம் கேள்வி கேட்கவோ கோபப்படவோ தனக்கு என்ன உரிமையும் அதிகாரமும் இருக்கிறது என அவன் மனமே வர்மாவை குற்றம்சாட்ட.. இனி இப்படி இருக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருந்தான் வர்மா.
 
 
ஆனால் அதை அவனால் ஒரு நாள் கூட முழுதாகக் கடைபிடிக்க முடியவில்லை. மறுநாள் மீண்டும் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட நொடி அவனுள் ஒரு கோபம் தானாக உருவானது.
 
 
ஏனோ அதை ஒரு நாளும் பாலுவிடம் காண்பிக்க வர்மாவுக்குத் தோன்றவே இல்லை. தன் கோபம் அனைத்தையும் நிலாவிடம் மட்டுமே அவன் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். அதுவும் யாரும் எல்லா நேரங்களில் மட்டுமே..! பாலுவின் முன்பு கூட நிலாவிடம் கோபப்பட அவன் விரும்பவில்லை.
 
 
இதில் வர்மாவின் செயல்கள் புரியாமல் நிலா முற்றிலும் குழம்பிப் போயிருந்தாள். திடீரெனச் சூரியனைப் போல் சுட்டெரிப்பவன், கோபம் திடீரெனக் குளிர் நிலவைப் போல் இதமான பார்வையால் வருடி செல்வான். இப்படி ஒரே நாளில் பல காலநிலைகளை அவளுக்குக் காண்பித்துக் கொண்டிருந்தான் வர்மா.
 
 
‘என்னதான் ஆச்சு இவங்களுக்கு..? ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கறாங்க..? திடீர்னு ஏன் இப்படி ஒரு கோபம் என் மேலேன்னு நானே போய்க் கேட்டுடட்டுமா..?’ என்றெல்லாம் யோசித்தவளை, ‘ஓ, உனக்கு அவ்வளவு தைரியம் இருக்கா..? எங்கே நேரில் போய் அவரைக் கேளு பார்க்கலாம்..!’ என நிலாவின் மனசாட்சியே அவளைக் கேலி செய்தது.
 
 
“ஐயோ.. எனக்கு எதுக்கு வம்பு..? சும்மாவே சிடுசிடுன்னு இருக்கார், இதில் நான் போய்க் கேள்வி கேட்டேன் அவ்வளவு தான்.. நமக்கு வேலை முக்கியம் பிகிலு.. அதைக் காப்பாத்திக்கப் பார்..” என்றவாறே அமைதியாகி போனாள் நிலா.
 
 
ஆனால் அவள் மனம் அப்படி அமைதியாக மாட்டேன் எனச் சண்டித்தனம் செய்ததில், தினமும் அது என்னவென அறிந்து கொள்ள எண்ணி வர்மாவையே பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தாள் நிலா.
 
 
இதை பாலுவும் சில நேரங்களில் கவனித்திருந்தான். அவனுக்கும் ஓரளவு நிலாவின் மனம் புரிந்து தான் இருந்தது. ஆனால் ‘இது எங்கு எப்படிப் போய் முடியுமோ..!’ என்ற பயம் அவளின் மேல் அக்கறை உள்ளவனாகப் பாலுவுக்கு அதிகம் உண்டானது.
 
 
ஏனெனில் வர்மாவின் மனதில் என்ன இருக்கிறது என இந்த நொடி வரை பாலுவுக்குத் தெரியாது. நடந்ததை எல்லாம் மறந்து மற்றொரு வாழ்க்கைக்கு அவன் தயாரா..? என்று கூடத் தெரியாத நிலையில் நிலாவை இந்த விஷயத்தில் ஊக்குவிப்பதில் பாலுவுக்கு விருப்பமில்லை.
 
 
சிறு வயதில் இருந்தே பெரிதாக எந்தச் சந்தோஷங்களையும் அனுபவிக்காமல் வாழ்ந்தவள் நிலா. அவளுக்கு இனி வரும் வாழ்க்கையாவது சந்தோஷமும் நிம்மதியுமாக அமைய வேண்டும் என்ற வேண்டுதல் பாலுவிடம் இருந்தது.
 
 
இப்படி நடக்குமா..? நடக்காதா..! என்று தெரியாத ஒன்றில் சிக்கி அவள் மனவேதனை அடைவதை விட, அதிலிருந்து வெளி வருவது தான் நிலாவின் நிம்மதியான வாழ்க்கைக்குச் சரியென எண்ணியவனாக முடிந்த வரை வர்மா பற்றிய பேச்சை அலுவலகச் சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தவிர மற்ற நேரங்களில் அவளிடம் தவிர்க்க தொடங்கினான் பாலு.
 
 
அவளாக இந்தத் திடீரென்ற வர்மாவின் நடவடிக்கைகளைப் பற்றிப் புரிந்து கொள்ள எண்ணி பேச்சை தொடங்கினாலும் அதை அவளே அறியாமல் தவிர்த்து விட்டு அடுத்தப் பேச்சுக்குத் தாவி விடுவான் பாலு. நிலாவுக்கும் இது புரியாமலே போனது.
 
 
அவளின் மனம் உடைந்து நிலா வலிகளை அனுபவிக்காமல் இதில் இருந்து அவளை வெளிக்கொண்டு வருவது எப்படி என்ற தீவிரமாக யோசிக்கத் தொடங்கினான் பாலு.
 
 
 
 
அந்தக் காபி ஷாப்பில் கண்ணாடி வழி தெரிந்த சாலையைப் பார்த்தவாறு தனியே அமர்ந்திருந்தான் வர்மா. வெளியே மழை தூறிக் கொண்டிருந்தது. இன்று ஒரு கிளையண்டை சந்திக்க வேண்டி இங்கே வந்திருந்தான் வர்மா. ஏனோ பேச்சுவார்த்தை முடிந்த பின்பும் அங்கிருந்து கிளம்ப மனம் இல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தான் வர்மா.
 
 
வானம் மேகமூட்டத்தோடு இருள் சூழ்ந்திருக்க.. தன் மனமும் இப்படித்தான் இருக்கிறது என நினைத்தவனுக்கு இதை எப்படிச் சரி செய்வது என்றே புரியவில்லை.
 
 
இதுவே நேஹா என்ற ஒருத்தி அவன் வாழ்வில் இல்லையென்றால் எந்த ஒரு தயக்கமுமின்றி நிலாவிடம் சென்று இதைப் பற்றிப் பேசிவிட்டு இருப்பான் வர்மா. ஆனால் அப்படி ஒருத்தி வந்து போனதோடு தீரா பழியையும் அவன் மேல் சுமத்தி விட்டுச் சென்றிருக்க.. எப்படி இந்தப் பேச்சை தானாகச் சென்று துவங்குவது என்றே அவனுக்குப் புரியவில்லை.
 
 
அதே நேரம் இது வேண்டாம் எனவும் அவனால் நினைக்க முடியவில்லை. எங்குச் சென்றாலும் எதைச் செய்தாலும் மனம் நிலாவையே சுற்றி வந்து கொண்டிருந்தது. இதில் செய்வதறியாது திகைத்தவன், வெளியில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த மழையைப் பார்த்தபடியே அமர்ந்திருக்க.. அவன் மனதை பிரதிபலிப்பது போல் மெல்லிய ஒலியில் அந்தப் பாடல் அங்கே ஒலித்தது.
 
 
உன் ஞாபகம் நெஞ்சில் வந்தாடுதே..
ஓயாமலே என்னைப் பந்தாடுதே..
உன் பூ முகம் கண்ணில் நின்றாடுதே..
நான் கொஞ்சவே என்னை மன்றாடுதே..
 
 
இந்த வரிகளைக் கேட்ட நொடி அழகு பதுமையாய் கொடைக்கானலில் அவனோடு சேர்ந்து இருந்த நிலாவின் நினைவுகள் வர்மாவின் மனதில் வந்து நின்று அவனை வதைத்தது.
 
 
‘நிலா என்ன செஞ்சு வெச்சிருக்கே நீ..? உன்னைத் தவிர்த்து வேறு எதையுமே என்னால் யோசிக்க கூட முடியலை, இவ்வளவு குறுகிய காலத்தில் இப்படி ஒரு நிலைமைக்கு என்னைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்க நீ..!’ என மனதிற்குள் அவன் புலம்பிக் கொண்டிருக்க..
 
 
படித்தால் இனித்திடும் புதினம்..
உன்னை நான் மறப்பது கடினம்..
அலையாய் தொடர்ந்திடும் நினைப்பு..
வலைக்குள் தவித்திடும் தவிப்பு..
துடிக்கும் ஆசை துளிர்த்தால்
மேனி சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும்..
 
 
என்ற வரிகள் மீண்டும் மீண்டும் நிலாவை மட்டுமே நினைவு படுத்திக் கொண்டிருக்க.. ஏற்கனவே அவள் நினைவுகளில் இருந்து விடுபட முடியாமல் போராடிக் கொண்டிருந்தவன், இதற்கு மேலும் இங்கேயே அமர்ந்திருந்தால் நிலாவின் தாக்கம் தன் மனதை அதிகம் ஆக்கிரமிக்கும் என உணர்ந்து வேகமாக அங்கிருந்து வெளியேறி இருந்தான் வர்மா.
 
 
அவன் காரை சற்று தள்ளி இருந்த மரத்தடியில் நிறுத்தியிருக்க.. கொட்டும் மழையில் நனைந்தபடியே காரை நெருங்கியவன், அதனுள் ஏறி அமர்ந்த நொடி ‘ஓ காட்.. என்ன ஒரு மனநிலை இது..?’ என ஓங்கி ஸ்டீரிங்கில் குத்தினான் வர்மா.
 
 
அதே நேரம் நிலாவும் வர்மாவை பற்றித் தான் யோசித்துக் கொண்டிருந்தாள். ‘ஒரு வாழ்க்கை தப்பா போனா என்ன..? அதுக்காக அவங்க அப்படியே இருக்கணுமா..! இன்னொரு வாழ்க்கையைத் தேடிக்கக் கூடாதா என்ன..? ஏன் அப்படிச் செய்யாம இத்தனை வருஷமா இப்படியே இருக்காங்க..? ஒருவேளை நேஹாவை அவங்களால் மறக்க முடியலையோ..!
 
 
இவ்வளவு செஞ்ச பிறகும் அவ ஞாபகமாவா இருப்பாங்க..? நேஹாவை எப்போவோ மறந்துட்டு இருப்பாங்க, இல்லையே மறந்திருந்தா இன்னொரு கல்யாணம் செஞ்சு இருந்திருப்பாங்களே..! பாட்டியும் அதுக்குத் தானே ஆசைப்படுறாங்க.. எல்லாம் தெரிஞ்சும் அமைதியா இருக்காங்கனா என்ன அர்த்தம்..?
 
 
நேஹாவை மறக்க முடியலைன்னு தானே அர்த்தம், அவ்வளவு செஞ்சும் அவளை மறக்க முடியலைனா அவ மேலே எவ்வளவு காதல் இருக்கணும்..? இல்லை அதெல்லாம் அப்போ.. இப்போ அவர் மனசில் நேஹா இல்லை.. அன்னைக்குக் கொடைக்கானலில் அவர் எப்படி நடந்துக்கிட்டார்னு பார்த்தே தானே..!’ என நிலாவும் அவளின் மனதும் மாறி மாறி வாதிட்டுக் கொண்டிருந்தனர்.
 
 
‘இப்போ எனக்கு ஒரு சந்தேகம்.. நீ வர்மா கல்யாணம் செஞ்சுக்கணும்னு நினைச்சு பீல் செய்யறியா..? இல்லை உன்னைக் கல்யாணம் செஞ்சுக்கணும்னு நினைச்சு பீல் செய்யறியா..!’ என அவளின் மனது திடீரெனக் கேள்வி கேட்கவும், சட்டெனத் திகைத்தவள் “அதெல்லாம் இல்லை.. அவங்க சந்தோஷமா வாழ்ந்தா போதும்னு தான் நினைக்கறேன்..” என்றாள் லேசான தடுமாற்றத்தோடு நிலா.
 
 
ஆனால் அவளின் மனமோ அதை நம்பாமல் கேலியாகச் சிரிக்க.. அதன் பின் இதைப் பற்றி யோசிக்கவே பயந்தது போல் வேறு வேலையில் தன் கவனத்தைத் திருப்பினாள் நிலா.
 
 
எப்போதும் தன் குழப்பத்தை உமாவிடம் பகிர்ந்து கொண்டு அதற்கு விடை காண நினைப்பவளுக்கு இந்த விஷயத்தைப் பற்றி அவரிடம் பேசவே தயக்கமாக இருந்தது.
 
 
எந்தத் தைரியத்தில் வர்மாவை விரும்புவதாக உமாவிடம் அவளால் சொல்ல முடியும். இதைப் பற்றி அறிய நேர்ந்தால் கொஞ்சமும் யோசிக்காமல் உமா தன்னைத்தான் திட்டுவார் என நிலாவுக்கு நன்றாகவே தெரியும்.
 
 
அதேபோல் பாலுவிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்பவளால் இதைப் பற்றி மட்டும் மனம்விட்டு அவனிடம் பேசவே முடியவில்லை. ‘வர்மாவை விரும்ப உனக்கு என்ன தகுதி இருக்கிறது..?’ என ஒரு வார்த்தை கேட்டு விட்டாலும் அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது.
 
 
தனக்கும் வர்மாவுக்கும் இடையே உள்ள அத்தனை வித்தியாசங்களும் அவள் கண் முன்னே வந்து போனாலும் வர்மாவை மறக்க தான் அவளால் முடியவில்லை.
 
 
***
 
 
இரண்டு நாட்கள் இப்படியே நிலாவின் குழப்பத்திலும் வர்மாவின் மனப்போராட்டத்திலும் சென்றிருக்க.. நிலாவில் முகவாட்டத்தைக் கண்டு அவளை இயல்பாக்க முயன்று கொண்டிருந்தான் பாலு.
 
 
அன்று காலையில் இருந்து வர்மாவும் அலுவலகத்தில் இல்லாததால் நிலாவுக்கு உடனே செய்து முடிக்க வேண்டிய வேலை என எதுவும் இல்லை. அதில் பிறகு பார்க்கலாம் என எடுத்து வைத்திருந்த சில வேலைகளை மட்டும் அப்போதைக்குச் செய்து முடித்தவள், பாலுவின் அறைக்கு வந்து அமர்ந்து கொண்டாள்.
 
 
அவன் சில நிறுவனங்களின் கோப்புகளைச் சரி பார்த்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான். அதற்கு உதவியாய் நிலாவும் இருக்க.. இருவரும் பேசியபடியே அந்த வேலையைச் சுலபமாகவும் வேகமாகவும் செய்து கொண்டிருந்தனர்.
 
 
இடையிடையே பாலுவின் அலைபேசிக்கு வாட்ஸ்அப் மெசேஜ் வந்த ஒலி கேட்டுக் கொண்டிருக்க.. அதை எடுத்துப் பார்த்து லேசான புன்னகையோடு பதில் அளித்தபடியே பாலு வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்க.. அவனைச் சந்தேகமாகப் பார்த்தாள் நிலா.
 
 
அவளின் பார்வையைக் கண்டு கொண்டவனும் “என்ன அப்படிப் பார்க்கறே..?” எனவும், “இல்லை மெசேஜ் சவுண்ட் கேட்கும் போதெல்லாம் உன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரியுதே..! அதோட ரகசியம் என்னன்னு பார்க்கறேன்..” என நிலா குறும்பாகச் சொல்லவும், அவனும் பதிலேதும் சொல்லாமல் ஒரு மாதிரியாகப் புன்னகைத்துக் கொண்டான்.
 
 
“உன் சிரிப்பை பார்த்தா சந்தேகமா இருக்கே.. அப்போ அதுதானா..?” என நிலா குறுகுறுப்போடு புன்னகைக்க.. “எது தானா..?” என்றான் ஒன்றுமறியா பாவனையில் பாலு. “ஒய், உண்மைய சொல்லு.. நிஜமா எனக்கு அண்ணி இருக்காங்க தானே..!” என நிலா குதூகலத்தோடு கேட்கவும், “அண்ணியா..? அது யாரு..?” என்றான் வேண்டுமென்றே அவளை வம்பு இழுப்பது போல் பாலு.
 
 
“ஆமா உன்னை அப்படிக் கூப்பிட பிடிக்கலைனாலும், நீ எனக்கு அண்ணன் தான்..” எனப் போனால் போகிறது என்பது போலான குரலில் கூறினாள் நிலா. அதில் அவள் தலையில் செல்லமாகத் தட்டியவன், “நானும் அப்படி நினைச்சு தான் உன்னைப் பத்திரமா பார்த்துக்கணும்னு நினைக்கறேன்..
சின்ன வயசிலேயே எங்க அம்மா இறந்து, அப்பாவும் வேலை வேலைன்னு ஓடிட்டே இருந்ததால் பெருசா உறவுகள் இல்லாமல் தனியா வளர்ந்தவன் நான்.. உன் அப்பாவித்தனம், இந்த ஆபீஸுக்கு வந்த புதுசில் நீ மருண்டு விழிச்சதுன்னு எல்லாம் சேர்ந்து உன்னைப் பார்த்ததும் சட்டுன்னு மனசில் ஒட்டிக்கிட்டே.. இப்படி ஒரு குட்டி தங்கச்சி நமக்கு இருந்தா எப்படி இருக்கும்னு அப்போவே எனக்குத் தோணுச்சு.. அதனால் தான் யார்கிட்டயும் எடுக்காத உரிமையையும் அக்கறையையும் உன் மேல் அதிகம் எடுத்தேன்..” என பாலு சொல்லிக் கொண்டே செல்ல.. “அம்மாவும் இதையே தான் அடிக்கடி சொல்லுவாங்க.. உனக்கு ஒரு அண்ணன் இருந்திருந்தா இப்படித்தான் பாலு போல உன்னை அன்பா பார்த்துட்டு இருப்பான்னு..” எனக் கூறினாள் நிலா.
 
 
அப்படியே சில நிமிடங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அதில் சட்டெனப் பேச்சை நிறுத்தி அவனைத் திரும்பி முறைத்தவள், “பேச்சை மாத்த பார்க்காதே.. என் அண்ணியைப் பத்தி சொல்லு..” என்றாள் மிரட்டல் குரலில் நிலா.
 
 
“அவ பேர் சங்கீதா.. என் கூடக் காலேஜில் படிச்சவ, அப்போ எல்லாம் எங்களுக்குள்ளே பெருசா எந்த ஒரு ஃபீலும் இல்லை.. ரொம்ப க்ளோஸ் பிரண்ட்ஸா தான் இருதோம்.. ஆனா காலேஜ் முடிச்சுட்டு வெளியே வந்த பிறகு தான் எங்க மனசு எங்களுக்கே புரிஞ்சது.. ரொம்ப அவளை மனசளவில் தேடி தவிக்கத் தொடங்கினேன்.. ஆனா இதை அவகிட்ட எப்படிச் சொல்றதுன்னு எனக்குத் தெரியலை..
 
 
ஒருவேளை நான் இதைச் சொல்லி அதை அவ தப்பா எடுத்துக்கிட்டு எங்களுக்குள் இருக்கும் நட்பும் காணாமல் போயிடுச்சுனா என்ன செய்யறதுன்னு எனக்கு ஒரே குழப்பம்.. அப்போ ஒரு நாள் எங்க கூடப் படிச்ச ஒரு பிரிண்ட் கல்யாணத்தில் ஏதேச்சையா மீட் செஞ்சோம்..
 
 
ஆனா என்னைப் போல எந்தத் தயக்கமும் அவளுக்கு இல்லை.. நேரா வந்து எனச் சட்டையை பிடிச்சுச் சண்டை போடாத குறையா ஏன் என்னைத் தேடி வர தெரியாதான்னு கேட்டா.. அன்னைக்குப் புரிஞ்சது அவ மனசு எனக்கு..” என பாலு ரசனையான குரலில் சொல்லிக் கொண்டு செல்ல.. கன்னத்தில் கை வைத்தப்படி அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், “கவிதை போல இருக்கு..” என்றாள்.
 
 
“என்னது..?” என பாலு புன்னகையோடு கேட்கவும் “உங்க காதல் அப்படியே கவிதை போல இருக்கு..” என்றாள் ரசனையோடு நிலா. அதைக் கேட்டு சிரித்தவன் “உன்னைப் பற்றியும் சங்கீகிட்ட சொல்லி இருக்கேன்.. உன்னைப் பார்க்கணும்னு சொன்னா, ஒரு நாள் போகலாம் தானே..” என்றான் பாலு.
 
 
“இது என்ன கேள்வி..? கண்டிப்பா போகலாம், எங்க அண்ணியை எப்போ பார்ப்பேன்னு இருக்கு.. உன்னை மாதிரி ஒருத்தனை எப்படி வெச்சு சமாளிக்கிறாங்கன்னு முதலில் எனக்குத் தெரியணும்..” என்று நிலா சொல்லவும் “என்னது..? என்னை மாதிரி ஒருத்தனா..! ஹலோ நான் கிடைக்க உங்க அண்ணி தான் கொடுத்து வெச்சு இருக்கணும்..” என்றான் காலரை தூக்கி விட்டு கொண்டவாறே பாலு.
 
 
“ஆமாமா.. ஞாபகம் வெச்சுக்கறேன், எங்க அண்ணியைப் பார்க்கும் போது மறக்காம நீ சொன்னேன்னு சொல்லிடறேன்..” என நிலா சீரியஸான குரலில் சொல்லவும், பதறியவன் “அடியே குட்டி ராட்சசி.. அப்படி எதுவும் செஞ்சுடாதே..” என அலற.. “அது அந்தப் பயம் இருக்கணும்..” என்றாள் மிரட்டலாக நிலா.
 
 
அதில் “சரிங்க மேடம்..” என பவ்யமாக பாலு கையைக் கட்டிக் கொள்ளவும், “சரி எங்க அண்ணி போட்டோ எங்கே காட்டு..” என்றாள் நிலா. “அதெல்லாம் என்கிட்டே இல்லை, நீ நேரில் வந்து பார்த்துக்கோ..” என பாலு சொல்லவும், “இந்த உருட்டல் எல்லாம் என்கிட்ட வேணாம் தம்பி.. மரியாதையா கொடு..” என மிரட்டினாள் நிலா.
 
 
தன் அலைபேசியை எடுத்து சங்கீதாவின் படத்தை பாலு காண்பிப்பதற்குள் அவனிடமிருந்து அலைபேசியைப் பறித்துக் கொண்டு சற்று தள்ளி சென்றவள் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அடுத்து நகர்த்த.. அவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பது போலான ஒருப்படம் இருந்தது.
 
 
அதைக் கண்டு விழிகளை விரித்தவள், “ஆஹா.. சார் செம ரொமான்டிக் தான் போலேயே..” என பாலுவை நிலா வம்புக்கு இழுக்க.. “அச்சோ நீ ஏன் அதையெல்லாம் பார்க்கறே.. என்கிட்ட கொடு..” என அலைபேசியை அவளிடமிருந்து வாங்க முயன்றான் பாலு.
 
 
“அடடே, அப்படி எல்லாம் கொடுத்துட முடியாது சார்.. இருங்க இன்னும் என்னென்ன எல்லாம் செஞ்சு வெச்சு இருக்கீங்கன்னு பார்க்கறேன்..” என அவள் அலைபேசியில் கவனமாக.. நிலாவிடமிருந்து அதைப் பறிக்க முயன்றான் பாலு.
 
 
இதைக் கண்டு கொண்ட நிலாவும் அந்த அறையிலேயே சுற்றி சுற்றி ஓடி அவனிடமிருந்து தப்பிக்க முயல.. அவளை எட்டிப் பிடிக்க பாலு முயன்று கொண்டிருந்த அதே நொடியில் அலுவலகத்திற்குள் நுழைந்த வர்மா பாலுவை காண்பதற்காக அங்கு வந்து நின்றான்.
 
 
கண்ணாடி கதவின் வழியே தெரிந்த இந்தக் காட்சியைக் கண்டவனின் முகம் ஆத்திரத்தில் இறுகியது. கோபத்தில் தன் விரல்களை இறுக்கமாக மூடியவன், இருவரையும் முறைத்துக் கொண்டே விரட்டென அங்கிருந்து நகர்ந்தான் வர்மா.
This post was modified 5 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 291
Topic starter  
 
 
சித்திரை - 28
 
 
பாலு கேட்ட ஒரு தகவல் அடங்கிய கோப்பு தன் மேசையில் இருப்பது நினைவுக்கு வர.. அதை எடுத்துச் செல்ல வர்மாவின் அறைக்கு வந்தாள் நிலா.
 
 
அங்கிருந்த ஓய்விருக்கையில் விழிகள் மூடி சாய்ந்திருந்த வர்மாவைக் கண்டு தன் நடையின் வேகத்தைக் குறைத்தவள், “இவங்க எப்போ ஆபீஸ் வந்தாங்க..? இன்னைக்குத் திரும்ப என்னாச்சு..? ரொம்ப டயர்டா தெரியறாங்க, மீட்டிங் சரியா போகலையா..? உடம்பு எதுவும் முடியலையா..! இல்லை வேற எதுவும் பிரச்சனையா..? இப்போ எல்லாம் அடிக்கடி இப்படி தான் இருக்காங்க..” என்று யோசித்தபடியே சில நொடிகள் நின்றவள், வர்மாவிடம் சென்று இதைக் கேட்க தைரியம் வராமல் கைகளைப் பிசைந்தப்படி பார்த்தாள்.
 
 
பின் வர்மாவின் இந்த மோன நிலையைக் கலைக்க மனம் வராமல், பாலு சொன்ன வேலை நினைவுக்கு வரவும், அங்கிருந்து நகர்ந்து தன் மேஜைக்குச் சென்று அந்தக் கோப்பை தேடி எடுத்தாள் நிலா.
 
 
அதே நேரம் ‘வர்மா வேறு ஏதேனும் வேலை சம்பந்தமான குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறானா..?’ என ஒருமுறை சரி பார்த்துக் கொண்டவள், அலுவலக நேரம் முடிய போகிறதென்பதால் தன் உடமைகளையும் எடுத்து வைத்துக் கொண்டே திரும்பியவளுக்குப் பாலுவிடமிருந்து அழைப்பு வந்தது.
வர்மாவை தொந்தரவு செய்து விடக் கூடாதே என்ற பதட்டத்தில் ஒரே ரிங்கில் அதை எடுத்திருந்தவள் “சொல்லு பாலு..” எனக் கிசுகிசுப்பாகப் பேசினாள் நிலா.
 
 
அவளின் குரலில் நெற்றியை சுருக்கிய பாலு “எங்கிருந்து பேசறே..?” எனவும் “நான் சார் ரூமில் தான் இருக்கேன்..” என்றாள் நிலா. “அப்புறம் ஏன் ஏதோ பாதாளத்துக்குள்ளே இருந்து பேசறது போல இருக்கு உன் குரல்..?” என அவன் கேலி செய்ய.. “ம்ப்ச்.. விளையாடாதே பாலு..” என்றாள் மெல்லிய சிணுங்கலோடு நிலா.
 
 
“ஆமா எனக்கு வேற வேலை இல்லை பாரு, உன் கூட விளையாடறாங்க.. நான் கேட்ட டீடெயில்ஸ் எங்கே..?” என்றான் பாலு. “இதோ அங்கே தான் வந்துட்டு இருக்கேன்..” எனச் சொல்லி அவள் அழைப்பை துண்டித்த நொடி, வேகமாக வந்து அவளைப் பற்றித் தன்னை நோக்கி திருப்பி இருந்தான் வர்மா.
 
 
அவனின் இந்தச் செயலில் திடுக்கிட்டு திரும்பியவள், ஒன்றும் புரியாமல் வர்மாவை பார்க்க.. “நீ உன் மனசில் என்னதான் நினைச்சுட்டு இருக்கே..? ஏன் இப்படி எல்லாம் செய்யறே..?” என ஆத்திரத்தில் விழிகள் சிவக்க தாடை இறுக அவன் பேசிய விதத்தில் நிலாவுக்குப் பயத்தில் உடல் நடுங்கியது.
 
 
அதேநேரம் அவளுக்கு என்ன தவறு செய்தோம் எனவும் புரியவில்லை. அதில் தவிப்போடு அவனைப் பார்த்து “நா.. நான் என்ன செஞ்சேன்..?” எனக் குரல் தடுமாறக் கேட்டாள் நிலா.
 
 
“என்.. என்ன செஞ்சியா..? சின்னக் குழந்தையா நீ.. என்ன செய்யறேன்னு தெரியாம இருக்க..! ஏன் இப்படித் தினமும் என் உயிரை எடுக்கறே..? என்னால் நிம்மதியா எந்த வேலையும் செய்ய முடியலை..” என அவன் பேசிக்கொண்டே செல்ல.. புரியாத மொழி படத்தைப் பார்ப்பது போல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா.
 
 
அவளின் இந்தப் பார்வை வேறு அவனின் ஆத்திரத்தை மேலும் தூண்டியது. “எத்தனை நாளைக்கு இன்னும் இப்படியே இருக்கறது..? எவ்வளவு நாள் நான் இதையெல்லாம் சமாளிக்கணும்..? என்னால் முடியலை, கொஞ்சம் கூட முடியலை..” என அவன் படபடக்கவும், “நான் என்ன செஞ்சேன்..?” என்றாள் மீண்டும் மெல்லிய குரலில் நிலா.
 
 
“என்ன செய்யலைன்னு கேளு, அது தான் சரியா இருக்கும்.. நீ செய்யறது எல்லாமே தப்பு தான்..” என அவன் சிடுசிடுக்கவும், அவளுக்குச் சட்டென விழிகள் கலங்கிவிட்டது. ‘எதற்காகத் திட்டுகிறான்..?’ என்று கூடத் தெரியாமல் நிலா அப்படியே நின்றிருக்க.. அவளின் கலங்கிய விழிகளை அதற்கு மேல் பார்க்க முடியாமல் வேகமாக அவளிடம் இருந்து விலகி திரும்பி நின்றான் வர்மா.
 
 
‘அலுவலக வேலையில் ஏதாவது பெரிய தவறு செய்து விட்டேனா..? அப்படி என்ன செஞ்சுட்டேன்..?’ எனப் புரியா குழப்பத்தோடு வர்மாவின் முதுகையைச் சில நொடிகள் பார்த்தப்படி நின்றிருந்தவளுக்கு, இது அவர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது எனக் கொஞ்சமும் புரியவில்லை.
 
 
அதில் மெல்லிய குரலில் நிலா “சார்.. நா.. நான்..” எனத் தொடங்கவும் வேகமாகத் திரும்பி மீண்டும் அவள் தோள்களை இரு பக்கமும் பிடித்து உலுக்கி, “இரண்டு பேரும் பர்மிஷன் போட்டு எங்கே போனீங்க..?” என்றான் வர்மா.
 
 
“என்.. என்ன..?” என அவன் கேட்க வருவது புரியாமல் நிலா விழிக்கவும் “நீயும் பாலுவும் பர்மிஷன் போட்டுட்டு எங்கே போனீங்க..?” என்றான் கோபமாக வர்மா.
 
 
திடீரென வர்மா இப்படிக் கேட்கவும், அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏனெனில் இருவரும் திட்டமிட்டெல்லாம் இப்படி வெளியே போனதில்லையே..! அதில் எதை மனதில் வைத்து வர்மா பேசுகிறான் என்றே அவளுக்குப் புரியவில்லை.
 
 
நிலாவின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தவனுக்கு அவளின் இந்த அமைதி ஆத்திரத்தை கொடுக்க.. “உன்கிட்ட தான் கேட்கறேன்.. இரண்டு பேரும் எங்கே போனீங்க..?” என்றான் அவளை முறைத்துக் கொண்டே வர்மா.
 
 
அப்போதும் இதை ஏன் வர்மா கேட்க வேண்டும் என்றே தோன்றினாலும், இருவரும் எப்போது சேர்ந்து வெளியே போனோம் என அவசரமாக யோசித்தவளுக்கு அன்றைய நிகழ்வு நினைவுக்கு வந்தது. ஆனாலும் ஸ்ருதி விஷயத்தைப் பற்றி இப்போது ஏன் பேச வேண்டுமென எண்ணியவளாக “கொ.. கொஞ்சம் பர்சனல் வேலை இருந்தது சார்..” என்றாள் நிலா.
 
 
அவளின் இந்தப் பதில் அவனின் ஆத்திரத்தை தூண்டிவிட.. “ஓஹோ.. பர்சனல்..?” என்று கேலியாகக் கேட்டு அவள் முகம் பார்த்தவனின் விழிகளில் அத்தனை வெறுப்புத் தெரிந்தது.
 
 
அது ஏன் எனப் புரியாமல் நிலா பார்த்திருக்க.. “உனக்கு அவ்வளவு திமிராகிப் போச்சா..? ஆபீஸ் நேரத்தில் இரண்டு பேரும் பர்மிஷன் போட்டுட்டு ஊரை சுத்துவீங்க, நான் என்னன்னு கேட்டா பர்சனல்னு என்கிட்டேயே சொல்லுவே இல்லை..?” என்றான் அவளைப் பிடித்து உலுக்கிக் கொண்டே வர்மா.
 
 
அவன் மேல் தீரா காதலோடு இருப்பவளுக்கு வர்மாவின் இந்தப் பேச்சுக் கோபத்தைக் கொடுக்க.. கொஞ்சமும் யோசிக்காமல் என்ன வார்த்தை சொல்லி விட்டார் என்ற கோபத்தோடு அவன் தன்னைப் பிடித்திருக்கும் கைகளைத் தட்டி விட முயன்றவளின் கைகளை அவன் உதறியதில் வர்மாவின் சட்டையை இறுக பிடித்திருந்தது.
 
 
அப்போதிருந்த மனநிலையில் அதைக் கூடக் கவனிக்காதவள், “ஆமா சொல்லுவேன்.. நான் எங்கே வேணும்னாலும் போவேன், ஆபீஸில் இருக்கும் வரை தான் என்னைக் கேள்வி கேட்கும் உரிமை உங்களுக்கு இருக்கு.. ஆபீஸுக்கு வெளியில் நான் என்ன செஞ்சாலும் அதைக் கேட்கும் உரிமை உங்களுக்கு இல்லை..” என்றாள் கோபத்தோடு நிலா.
 
 
“என்.. என்ன எனக்கு உரிமை இல்லையா..?” என்று அவள் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகளை நம்ப முடியாமல் வர்மா கேட்க.. அவளுள் இத்தனை நாள் இருந்த தவிப்பும் வார்த்தைகளாக வெளிவந்தது.
 
 
“ஆமா.. இதையெல்லாம் எந்த உரிமையில் கேட்கறீங்க..? நான் எதுக்கு உங்களுக்குப் பதில் சொல்லணும்..? நான் எங்கே வேணும்னாலும் போவேன், என்ன வேணும்னாலும் செய்வேன்.. அதைக் கேட்க நீங்க யாரு..?” என்றாள் அழுகையும் கோபமும் போட்டி போடும் குரலில் நிலா.
 
 
“நா.. நான் யாரா..? என்னைப் பார்த்தா இப்படிக் கேட்டே..?” என்றவனின் வார்த்தைகள் அவளை மேலும் தூண்டி விட.. “ஆமா.. நீங்க யாரு..?” என்றாள் நிலாவும் விட்டுக் கொடுக்காமல்.
 
 
ஏற்கனவே அவளின் வார்த்தைகளில் காயப்பட்டு இருந்தவன், “நா.. நான் உன்னை..” என்று தொடங்கி அடுத்து பேச முடியாமல் நிறுத்தியவன், “நீ எனக்கு..” என்று மீண்டும் தொடங்கி அதற்கு மேல் பேச முடியா தவிப்போடு வார்த்தையை அப்படியே நிறுத்தி, தன் அருகில் நின்றிருந்தவளை ஒரு வெற்று பார்வையில் அளவிட்டவாறே சட்டென நிலாவை உதறி தள்ளிவிட்டு வேகமாக ஆங்கிருந்து வெளியேறி இருந்தான் வர்மா.
 
 
அவனின் இந்தச் செயல் கொடுத்த வலியை விட, வர்மா சொல்லிச் சென்ற வார்த்தைகளின் தாக்கம் நிலாவை அதிகம் அசைத்துப் பார்த்திருந்தது. அதில் சில நொடிகள் அவன் சென்ற திசையையே பார்த்தப்படி அசைவற்று நின்றிருந்தவளின் மனமோ, ‘இப்.. இப்போ என்ன சொல்ல வந்தாங்க..? நான் உன்னைன்னு என்ன சொல்ல வந்தாங்க..? அப்பறம் நீ எனக்குன்னு என்ன சொல்ல நினைச்சு இருப்பாங்க..” என்று அவசரமாகச் சிந்திக்க.. வேகமாக வர்மாவை தேடிக்கொண்டு பின்னால் ஓடினாள் நிலா.
 
 
அதற்குள் தன் காரில் ஏறி வர்மா விருட்டெனக் கிளம்பியிருக்க.. வேகமாக மூச்சிரைக்க ஓடி வந்து நின்றவள், அவன் சென்ற திசையே பதட்டத்தோடு பார்த்தபடி நின்றிருந்தாள்.
 
 
அதேநேரம் நிலா பின் பக்க வாசலை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதைக் கண்டு அவளைப் பின்தொடர்ந்து வந்திருந்த பாலு “நிலா என்னாச்சு..? ஏன் இப்படி ஓடி வர..?” என்றவாறே வந்து அவளருகில் நின்றான்.
 
 
“பா.. பாலு, சார்..” என்று தொடங்கியவள் அவன் புரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு வேகமாகப் பார்வையைச் சுழற்ற.. அங்கங்கே சிலர் நின்றிருப்பது அவளுக்குத் தெரிந்தது.
 
 
அதில் வேகமாக பாலுவின் கையைப் பிடித்து யாருமற்ற பகுதியை நோக்கி அவனை இழுத்துச் சென்றவள், “பாலு சார் திடீர்னு ரொம்பக் கோபப்பட்டார்.. ஆனா ஏன் திடீர்னு இவ்வளவு கோபம்..? நான் என்ன தப்பு செஞ்சேன்னு எனக்குப் புரியவே இல்லை.. அதைக் கேட்டாலும் அவர் சொல்லலை..” என்று நிலா தொடங்கவும் “ஏன் என்னாச்சு திடீர்னு..?” என்றான் பாலுவும் புரியாமல்.
 
 
“ஐயோ அது தான் பாலு எனக்கும் புரியலை..” என்றவள் “திடீர்னு சார் இப்படிக் கேட்கவும் எனக்குக் கோபம் வந்துடுச்சு.. ஆபீஸில் தான் நீங்க என்னைக் கேள்வி கேட்க முடியும், வெளியே நான் என்ன வேணும்னாலும் செய்வேன்.. அதைக் கேட்க நீங்க யாருன்னு சொல்லிட்டேன்..” என்றவளை திகைப்பாகப் பார்த்தவன், “அடிப்பாவி.. அப்படியே வா சொன்னே..?” என்றான் பாலு.
 
 
“ஆமா என்ன தப்பு செஞ்சேன்னு சொல்லாம சும்மா திட்டிட்டே இருந்தாரா.. அதான் நானும் அப்படிச் சொல்லிட்டேன்..” என்றவளை நம்பாமல் பார்த்தவன் “அதுக்கு சார் எதுவும் சொல்லலையா..?” என்றான் பாலு.
 
 
அவன் இப்படிக் கேட்கவும் தன் குரலை மேலும் தழைத்துக் கொண்டவள், அக்கம் பக்கம் ஒருமுறை பார்த்துக் கொண்டே “நா.. நான் இப்படிக் கேட்டதும், சார் என்னைப் பார்த்தா இப்படிக் கேட்டே..? நான் உன்னை அப்படின்னு சொல்லி பாதியிலேயே நிறுத்திட்டார்.. அப்பறம் நீ எனக்குன்னு ஏதோ சொல்ல வந்து அதையும் நிறுத்திட்டார்.. நான் என்னன்னு பார்த்துட்டு இருக்கும் போதே திடீர்னு எதுவுமே பேசாம கிளம்பி போயிட்டார்.. அவர் என்ன சொல்ல வந்திருப்பார் பாலு..? அவர் சொன்னதுக்கு என்ன அர்த்தமா இருக்கும்..?” என்று மனம் படபடக்க அவள் மனதில் நினைப்பது சரிதானா என அறிந்து கொள்ளும் ஆவலில் பாலுவின் முகம் பார்த்து நின்றாள் நிலா.
 
 
“நிஜமாவே பாஸ் இப்படியா சொன்னார்..?” என்றான் பெரும் அதிர்வோடு பாலு. “ஆமா பாலு, ஆனா ஏன் பாதியிலேயே நிறுத்திட்டு போயிட்டார்.. ஏன் சொல்ல வந்ததை முழுசா சொல்லலை..?” என நிலா கேட்கவும், அவள் மனம் எதிர்பார்ப்பது எதுவெனப் புரிய.. ‘என்ன பாஸ் செஞ்சு வெச்சுருக்கீங்க..? ஏற்கனவே குழப்பத்தில் இருக்கும் இந்தப் பொண்ணைப் போட்டு இப்படி மேலும் குழப்பிவிட்டு இருக்கீங்களே..? இதெல்லாம் உங்க அந்தஸ்துக்கும் சரிப்பட்டு வருமா பாஸ்..? உங்க இரண்டு பேருக்கும் ஏணி வெச்சாலும் எட்டாதே..! நீங்க அதெல்லாம் பார்க்கலைனாலும், பாட்டி என்ன யோசிக்கிறாங்கன்னு நமக்குத் தெரியாதே..! ஒரு சின்னப் பொண்ணு மனசில் ஆசையை வளர்த்துட்டு, அது நடக்காம போனா அவ அதை எப்படித் தாங்குவா..? எந்தச் சந்தோஷமும் பார்க்காத பாவப்பட்ட பொண்ணு பாஸ், இவ கூட ஏன் இப்படி விளையாடறீங்க..? நிஜமாவே உங்களுக்கும் இவ மேலே விருப்பம் இருக்கா..? இத்தனை நாள் இவ மட்டும் தான் இப்படி யோசிச்சுட்டு இருக்கான்னு நினைச்சேன்.. இரண்டு பேருக்கும் விருப்பம் இருந்தா நல்லது தான்.. ஆனா இது சரியா நடக்குமா..?’ என நொடியில் நூறு விஷயங்களை மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டான் பாலு.
 
 
அவனின் இந்த அமைதியை கண்டு எரிச்சலான நிலா “என்ன பாலு அமைதியா இருக்கே..? நான் கேட்டுட்டு இருக்கேன் இல்லை, பதில் சொல்லு.. சார் என்ன சொல்ல வந்திருப்பார்..? எனக் கேட்டப்படியே அவனைப் பிடித்து உலுக்கினாள் நிலா.
 
 
அதில் தன் நினைவு கலைந்து அவளைப் பார்த்த பாலு “நானும் அதைத் தான் யோசிச்சுட்டு இருக்கேன்..” எனச் சமாளிப்பாகச் சொல்லவும், “என்னன்னு தெரிஞ்சுதா..?” என்றாள் ஆர்வமாக நிலா.
 
 
“ஹ்ம்ம்.. ஆனா பாஸ் இப்படிச் சொல்லும் அளவுக்கு நீ என்ன செஞ்சு இருப்பேன்னு தான் யோசிக்கறேன்..” என்றவனைப் புரியாமல் பார்த்தவள், “ஏன் அப்படி என்ன சொன்னார்..?” எனவும், “அது.. நான் உன்னை வெறுக்கறேன்னு சொல்லி இருப்பார்னு நினைக்கறேன்..” என்றவனைத் திகைப்போடு பார்த்த நிலா “ஏ.. ஏன் அப்படி..?” எனச் சிறு தடுமாற்றத்தோடான குரலில் கேட்டாள்.
 
 
“ஏன்னு என்னைக் கேட்டா..!” என பாலு தோளை குலுக்கவும், வெடித்துக் கொண்டு கிளம்பிய கண்ணீரை எச்சிலை கூட்டி விழுங்கியவாறே கட்டுப்படுத்தியவள், “அப்.. அப்போ நீ.. நீ எனக்குன்னு சொன்னாரே.. அதுக்கு என்ன அர்த்தம்..?” என்றாள்.
 
 
அதற்கு நிலாவின் முகத்தைப் பார்த்து நீண்ட ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன், “நீ எனக்கு வேண்டாம், இந்த வேலைக்கு நீ சரிபட்டு வர மாட்டேன்னு அர்த்தம்..” என்றான். அதுவரை அவளுள் இருந்த எதிர்பார்ப்பெல்லாம் காணாமல் போய்க் காற்று போன பலூனாக அவளின் முகம் சுருங்கி போனது.
 
 
“நிஜமாகவே இப்படித்தான் சொல்ல வந்திருப்பாரா..?” என அப்போதும் அவள் நம்பாமல் கேட்க.. “ஆமா உனக்குத் தான் தெரியுமில்லை பாஸுக்கு நீ இங்கே வேலைக்குச் சேர்ந்ததில் இருந்தே உன்னைப் பிடிக்காது.. இந்த வேலைக்கு நீ பிட் இல்லைன்னு நினைக்கறார்.. பாட்டிக்காக வேற வழியில்லாம தான் உன்னைச் சேர்த்துக்கிட்டார்.. ஆரம்பத்தில் இருந்தே அவர் உன்கிட்ட இப்படித்தானே இருக்கார்.. இது புதுசு இல்லையே..!” என்றான் பாலு.
 
 
“ஆமா.. ஆனா அதெல்லாம் அப்போ தானே..! இப்போ அப்படியெல்லாம் இல்லையே, அதுவும் கொடைக்கானலில் எல்லாம் அவர் அவ்வளவு நல்லா நடந்துகிட்டார் தெரியுமா..?” என்றாள் தன் எதிர்பார்ப்பு பொய்யாகி போனதை ஏற்றுக்கொள்ள முடியாத குரலில் நிலா.
 
 
“அங்கே அவருக்கு உன் தேவை இருந்தது மூன் புரிஞ்சுக்கோ.. உன்னை வெச்சுதான் அவர் நேஹாவை சமாளிக்கணும், அதுக்காக அப்படி நடந்துக்கிட்டார்.. ஆரம்பத்திலிருந்தே பாஸுக்கு உன்னைப் பிடிக்காது மூன், அதனால் தான் இப்போ நீ செய்யும் சின்னத் தப்பு கூட அவருக்குப் பெருசா தெரியுது.. இப்போ நீ என்ன தப்பு செஞ்சேன்னு வேற தெரியலையே.. இன்னைக்கு மீட்டிங்குக்கு வேற நீ ரெடி செஞ்ச பைலை தான் எடுத்துட்டுப் போனார், அதில் எதுவும் சொதப்பி வெச்சுட்டியா..?” என அவளை வேறு எதுவும் யோசிக்கவிடாமல் அலுவலகச் சம்பந்தமாகப் பேசி திசை திருப்பினான் பாலு.
 
 
ஆனால் நிலாவின் மனமோ மீண்டும் மீண்டும் வர்மாவின் வார்த்தைகளிலும் அதைச் சொன்ன போது அவன் குரல் உணர்த்திய பொருளிலுமே சுழன்று கொண்டிருந்தது. அடுத்து வர்மா தன்னை உதறி விட்டு சென்றதை நினைக்கும் போது ‘ஒருவேளை பாலு சொல்வது போல் தான் இருக்குமோ..!’ என அவளுக்கே தோன்றியது.
 
 
இதில் நிலாவின் கண்கள் சட்டெனக் கலங்கிப்போனது. இந்த ஏமாற்றத்தை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஆரம்பத்தில் இருந்தே இது சரிவராது என அவளுக்குமே புரிந்திருந்தாலும், அதை வர்மாவின் வார்த்தைகளில் கேட்கும் போது அதிகம் வலித்தது.
 
 
“அப்போ அதுதான் சொல்ல வந்திருப்பார் இல்லை..” என மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்வது போல் ஏமாற்றத்தோடான குரலில் அவள் கேட்கவும், வருத்தத்தோடு ஆம் எனத் தலையசைத்தான் பாலு.
 
 
சரி என்பதாகத் தலையசைத்தவள், “நான் கிளம்பறேன் பாலு..” என்று தொண்டையடைக்கச் சொல்லி விட்டு வேகமாக வாயிலை நோக்கி நிலா நடக்க.. அப்படி மனமுடைந்து செல்பவளையே கவலையாகச் சில நொடிகள் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் பாலு.
 
 
இப்படித்தான் நடக்கும் என முன்பே மனதிற்குள் பலமுறை யோசித்து வைத்திருந்தாலும் நிஜத்தில் அதுவே நடக்கும் போதும் வலிக்கத்தான் செய்கிறது. நிலாவின் நிலையும் இப்போது அப்படித்தான் இருந்தது.
******
இது ஒரு தலை காதலாக இருக்கும், எப்படியாவது கொஞ்சம் கொஞ்சமாக நிலாவின் மனதை மாற்றிவிடலாம் என நினைத்துக் கொண்டிருந்த பாலுவுக்கு வர்மாவின் இன்றைய பேச்சு கவலையைக் கொடுத்தது.
 
 
ஒருவேளை அவருக்கும் நிலாவை பிடிச்சிருக்கோ..? அப்படி மட்டும் இருந்தா இந்த உலகத்திலேயே சந்தோஷப்படும் முதல் ஆள் நானா தான் இருப்பேன்..
 
 
ஆனா பாட்டி..? அவங்க என்ன சொல்லுவாங்க..? அதையும் இங்கே யோசிக்கணுமே..! ஒருவேளை அவங்க நிலாவை வேண்டாம்னு சொல்லிட்டா பாஸ் என்ன செய்வார்..?
 
 
அவர் இந்த விஷயத்தில் உறுதியாக இருந்தா நிச்சயம் நிலாவை யாருக்காவும் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்.. ஆனா அப்படி இருக்காறான்னு தெரியலையே..! ஒருவேளை அவருடைய கடினமான காலத்தில் கூட இருந்து உதவி செய்ததால் உண்டான லேசான சலனமா இருந்தா..! அது தெரியாம இந்தப் பொண்ணு மனசில் ஆசையை வளர்த்துட்டு நாளைக்கு ஏமாந்து நிற்கக்கூடாதே..!’ என்றெல்லாம் எண்ணியவனாக, கொஞ்சமும் யோசிக்காமல் வர்மாவுக்கு அழைத்திருந்தான் பாலு.
 
 
காரில் வேகமாகச் சென்று கொண்டிருந்த வர்மா டிஸ்ப்ளேவில் தெரிந்த பாலுவின் பெயரை பார்த்துவிட்டு எடுக்காமல் அழைப்பை தவிர்த்தான். எப்போதும் இப்படி வர்மா அழைப்பை ஏற்கவில்லை என்றால் மீண்டும் அழைக்க மாட்டான் பாலு.
 
 
ஆனால் இன்று பேச வேண்டியது முக்கியமான விஷயம் என்பதால் அதைத் தவிர்க்க மனம் இல்லாமல் மீண்டும் வர்மாவுக்கு அழைத்தான் பாலு. இரண்டாவது முறை வந்த பாலுவின் அழைப்பை ஒற்றைப் புருவத்தை லேசாக உயர்த்திப் பார்த்தாலும் இந்த அழைப்பையும் தவிர்த்தான் வர்மா.
 
 
இதைக் கண்டு சில நொடிகள் தயங்கி நின்ற பாலு, பின் கொஞ்சமும் யோசிக்காமல் “பாஸ் அர்ஜென்ட்.. நான் உங்ககிட்ட பேசியே ஆகணும், நீங்க எங்கே இருக்கீங்கன்னு சொல்லுங்க.. நான் வரேன், இது நிலா பற்றின விஷயம்.. இன்னைக்கே பேசியாகணும்.. ப்ளீஸ் பாஸ்..” என்று வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் செய்திருந்தான் பாலு.
 
 
தன் அலைபேசியில் மெசேஜ் வந்ததற்கான ஒலி கேட்டு யார் எனப் பார்த்த வர்மாவின் புருவங்கள் பாலுவின் பெயரைக் கண்டு முடிச்சிட்டது. ‘இது என்ன புதுப் பழக்கம்..? எப்போதும் இல்லாத செயலாக இரண்டாம் முறையாக அழைத்ததுமில்லாமல், இப்போது வாட்சப்பில் மெசேஜ் வேறு செய்திருக்கிறான் என நினைத்தவனாக பாலு அனுப்பி இருந்த வாய்ஸை கேட்டான் வர்மா.
 
 
அதில் நிலாவை பற்றிப் பேச வேண்டும், அதுவும் உடனே என அவன் சொல்லி இருந்த விதம் வர்மாவை மனதளவில் இறுக்கமடையச் செய்தது. இதுவரை இல்லாத தைரியம், தன்னை அழைத்துப் பேச வேண்டும் என்ற அளவுக்கு வந்திருப்பதற்கான காரணம் இதுவெனப் புரிய.. ‘அப்படி என்னதான் பேசறான்னு நானும் பார்க்கறேன்..’ என நினைத்தவனாக அருகில் இருக்கும் காபி ஷாப் பற்றிய தகவலை பாலுவுக்கு அனுப்பி அங்கு வருமாறு கூறியிருந்தான் வர்மா.
 
 
அதைக் கண்ட அடுத்த நொடி வேகமாகத் தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வர்மா சொன்ன இடத்தை நோக்கி கிளம்பி விட்டான் பாலு.
 
 
தனக்கு முன்பாக வந்து காத்துக் கொண்டிருந்த வர்மாவை பார்த்து ஓரு மரியாதையான தலையசைப்பை கொடுத்தவாறே சென்று அவனின் முன்னே அமர்ந்தவன், ‘எப்படிப் பேசுவது..? எதில் தொடங்குவது..?’ என ஒரு நொடி தயங்கி யோசிக்க.. “என்ன பேசணும் பாலு..?” என்று ஆரம்பித்து வைத்தான் வர்மா.
 
 
“பாஸ்.. நான் இங்கே மூன்.. ம்க்கும், நிலா பற்றிப் பேச வந்திருக்கேன்..” என பாலு சொல்லவும் “அதான் சொல்லிட்டியே..! என்ன பேசணும்..?” என நிதானமாகக் கேட்டான் வர்மா.
 
 
“இன்.. இன்னைக்கு நீங்க அவகிட்ட கோபப்பட்டதா சொன்னா.. அப்போ நீங்க சொன்ன வார்த்தைகள்..” என்று சொல்லி பாலு அப்படியே நிறுத்தவும் அவன் சற்று முன் பேசியது வரை பாலுவிடம் சென்று இருப்பதில் எரிச்சலானான் வர்மா.
 
 
அதில் முகம் இறுக அடுத்த வார்த்தை பேசாமல் வர்மா அமர்ந்திருக்க.. அவனாக ஏதாவது சொல்வான் என எதிர்பார்த்து வர்மாவின் முகம் பார்த்த பாலு, அப்படி எதுவும் அங்கிருந்து வராததில் யோசனையாகி, பின் தன் தயக்கத்தை எல்லாம் உதறி “நீங்க நிலாவை எப்படிப் பார்க்கிறீங்கன்னு எனக்குத் தெரிஞ்சாகணும் பாஸ்..” என்றான் உறுதியான குரலில் பாலு.
 
 
அவனின் இந்தக் கேள்வி வர்மாவை தூண்டி விட, “என்ன சொன்னே..?” என நக்கலாகப் பாலுவை பார்த்தான் வர்மா. ஆனால் அதற்கு எந்தத் தயக்கமும் இல்லா குரலில் நேர் பார்வையாக வர்மாவை பார்த்தப்படியே “எஸ் பாஸ் எனக்குத் தெரிஞ்சாகணும்..” என மீண்டும் பாலுவின் குரல் உறுதியோடு ஒலித்தது.
 
 
அதில் நிதானமாக அவனை அளவிடுவது போல் பார்த்துக் கொண்டே “என்ன தெரியணும் உனக்கு..?” என்றான் வர்மா. “நிலா.. நிலாவை நீங்க எப்படிப் பார்க்கறீங்கன்னு எனக்குத் தெரியணும் பாஸ்..” என்றான் பாலு.
 
 
“அது உனக்கெதுக்குத் தெரியணும்..?” என்று வர்மா கேட்கவும் “ஒரு அண்ணனா எனக்கு அவ மேலேயும் அவ வாழ்க்கை மேலேயும் அக்கறை இருக்கு.. ஏற்கனவே மனதளவில் நிறையக் காயப்பட்டு இருக்கா.. பெருசா எந்தச் சந்தோஷத்தையும் அனுபவிக்காமலே வளர்ந்தவ.. இனியாவது அவ நிம்மதியும் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கறேன் பாஸ்.. உங்களால் மறுபடியும் அவ மனசு காயப்படும்னா அதுக்கு நான் அனுமதிக்கவே மாட்டேன்..” என்று பாலு பேசிக் கொண்டே செல்ல.. அவன் அண்ணன் என்று சொன்னதிலேயே வர்மாவின் மனம் நின்று விட்டிருந்தது.
 
 
அதில் வர்மா அமைதியாகவே இருக்க.. அவன் இவ்வளவு பேசியும் வர்மா பதில் சொல்லாமல் இருப்பதைக் கண்டு பதட்டமான பாலு “நிலா உங்களை ரொம்ப விரும்பறா பாஸ்.. அவ மனசு காயப்படக் கூடாதுன்னு தான் இத்தனை நாள் இதை நான் ஊக்குவிக்காம இருந்தேன்.. ஆனா இப்போ உங்களுக்கும் விருப்பம்னு தெரியும் போது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு.. ஆனா இந்த விருப்பம் எப்படிப்பட்டது..? இது எந்த அளவுக்குப் போகும்..? உங்க வீட்டில் இதுக்குச் சமம்திப்பாங்களா..? இதெல்லாம் எனக்குத் தெரியணும்..?” என பாலு பேசிக்கொண்டே செல்ல.. முகம் முழுக்கப் புன்னகையோடு அவனைப் பார்த்த வர்மா, “என்ன சொன்னே..? அவளுக்கு என்னைப் பிடிக்குமா..?” என்றான்.
 
 
மூச்சை பிடித்துக் கொண்டு மூன்று நிமிடமாக அவன் பேசிக் கொண்டிருக்க.. அதையெல்லாம் விடுத்து திடீரென வர்மா இப்படிக் கேட்டதில் தன் பேச்சை நிறுத்தி புரியாமல் வர்மாவை பார்த்தான் பாலு.
 
 
“அப்பறம் மச்சான் என்ன சாப்பிடறே..?” என்று அதுவரை இருந்த இறுக்கமான உடல்மொழி எல்லாம் தளர்ந்து சரிவாகச் சாய்ந்து அமர்ந்தப்படியே சிறு புன்னகையோடு கேட்டான் வர்மா.
 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 291
Topic starter  

ஹாய் டியர்ஸ்

எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. இத்தனை நாள் பொறுமையாக காத்திருந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்..

CNM - 26, 27 & 28

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

https://kavichandranovels.com/community/topicid/265/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா 


   
ReplyQuote
Page 4 / 4

You cannot copy content of this page