About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம் 28.2
அமைதியாக அமர்ந்திருந்தவர்களை பார்த்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
"என்னம்மா ஏன் இப்படி உக்காந்து இருக்கீங்க…?" என்று பவித்ராவை பார்த்துக் கேட்டவன் தன் தங்கையை ஒரு பார்வை பார்த்துவிட்டு
"ஆமா நீ என்ன காலையிலேயே குழந்தைகள் கூட இல்லாமல் வந்து இருக்க. ஏதாவது பிரச்சனையா.?" என்று அண்ணனாகக் கவலையுடன் கேட்க.
"பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லை." என்றார் சரவணன்.
"அப்புறம் இவ ரொம்ப கோவமா இருக்கா. மாப்பிள்ளை ரொம்ப சோகமா இருக்காரு… என்னதான் பிரச்சனை.?"
"ஹாஸ்பிடல்ல இருந்து வராங்க ரெண்டு பேரும்..." என்றார் பவித்ரா. "ஹாஸ்பிடல்ல இருந்தா.? ஏன்.? யாருக்கு என்ன ஆச்சு.?" என்று இருவரையும் பார்த்துக்கொண்டே கேட்க.
அப்போதுதான் குளித்துவிட்டு அறையிலிருந்து வெளி வந்தாள் வைஷ்ணவி.
அண்ணியும் அவரின் கணவரும் வந்திருப்பதை பார்த்தவள், மகிழ்வுடன்.
"வாங்க அண்ணி. வாங்க அண்ணா. எப்ப வந்தீங்க.?" என்று கேட்டபடி அவர்களின் அருகில் வந்தவள்
"எங்க பசங்களை.? யாரையும் கூட்டிட்டு வரலையா.?" என்று ஆராய்ச்சியாகப் பார்க்க.
"வைஷு நீ போய் எல்லோருக்கும் காபி போட்டு எடுத்துட்டு வா." என்று மனைவியை அனுப்பி வைத்தான். சக்தி. கணவன் சொன்னதற்கு தலையாட்டியவள் தான் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் இல்லாததை யோசித்துக் கொண்டே சமையலறை நோக்கிச் சென்றாள்.
"என்ன ஆச்சு.? ஏதாவது பிரச்சனையா.?" என்று மறுபடியும் சக்தி கேட்க. இவர்கள் பேசுவது தெளிவாகவே கேட்டது வைஷ்ணவிக்கு.
"காயத்ரி மாசமா இருக்களாம்." என்ற பவித்ரா.
"அப்படியா.! ரொம்ப சந்தோஷம். அதுக்கு தான் மருத்துவமனைக்குப் போயிட்டு வந்தீங்களா.?" எனச் செல்வத்தைப் பார்த்துக் கேட்க
"ஆம்." என்று அவன் தலையசைத்தான்.
"ஆனா குழந்தையோட வளர்ச்சியைப் பற்றித் தெரிஞ்சுக்க போகல.அந்தக் குழந்தையைக் கலைப்பதற்கு போய் இருக்காங்க." என்று பவித்ரா சோகத்துடன் கூற.
"என்ன.?' என்று அதிர்ந்தான் சக்தி. அதே அளவு அதிர்வு சமையலறையில் கேட்டிருந்த வைஷ்ணவிக்கும் இருந்தது. அவள் நெஞ்சில் கைவைத்து அதிர. இங்கு வார்த்தைகளால் தன் அதிர்வை வெளிக்காட்டி இருந்தான் சக்தி.
"என்ன இது பைத்தியக்காரத்தனம்." என்று தங்கையிடம் கோபப்பட்டவன். பின் செல்வத்தைப் பார்த்து
"உங்க கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கவில்லை மாப்பிள்ளை." என்றான்.
"இது என் முடிவு இல்ல மச்சான். எல்லாம் உங்க தங்கச்சி தான்." என்றான் அவனும். தன்னை கோர்த்து விடும் கணவனை முறைத்துப் பார்த்தவள்
"இன்னும் பைத்தியமாகாம இருக்கேனு சந்தோஷப்படு அண்ணா." என்றாள் அவளும் கோபம் குறையாமல்.
"இப்போ எதுக்கு இந்த முடிவு எடுத்தீங்க.? டாக்டர் என்ன சொன்னாங்க.?"
"டாக்டர் நாலு மாசம் முடிஞ்சதால ரொம்ப கஷ்டம்னு சொல்றாங்க. ஆனா இவ பிடிவாதமா நின்றதால கொஞ்சம் ரிஸ்க் தான் யோசிச்சிட்டு நாளை மறுநாள் வரச் சொல்லி இருக்காங்க."
"அப்படி என்ன ரிஸ்க் எடுத்து இப்படியொரு பாவச் செயலைச் செய்யணும்னு." என்று தங்கையைப் பார்த்துக் கேட்க.
"ஐயோ அண்ணா.! உனக்குச் சொன்னா புரியாது."
"சொல்லு புரிஞ்சிக்கிறேன்."
"இவரு நல்லா தான் சம்பாதிக்கிறார். இல்லங்கள. ஆனா இன்னொரு குழந்தை என்னும்போது அதற்கான செலவுகள் அவ்வளவு இருக்கு. இப்போ கடவுள் புண்ணியத்துல ஆண் ஒண்ணு பெண் ஒண்ணுன்னு இருக்கு. அதுங்களுக்கு படிப்புச் செலவு, துணிமணி நாளைக்கு கல்யாணம் காட்சின்னு எவ்வளவோ இருக்கு. இன்னொரு குழந்தைக்கு அதே அளவு செய்ய முடியுமான்னா.? அது கொஞ்சம் கஷ்டம் தான்."
"பணத்துக்கு யோசிச்சா இப்படியொரு முடிவு எடுத்திருக்கே. இப்போ இவ்வளவு பேசுற நீ இதையெல்லாம் குழந்தை உண்டாகுறதுக்கு முன்னாடியே யோசிச்சிருக்கணும்.."
"இது நாங்களே எதிர்பார்க்காதது." என்றாள் தலையைக் குனிந்து.
தங்கையின் பதிலில், ஆழ்ந்த மூச்சு எடுத்தவன்.
"இப்போ என்ன.? பணம் தானே உன்னோட கவலை. குழந்தைக்கான பிரசவ செலவை நான் பார்த்துக்கிறேன்."
"பிரசவ செலவு மட்டும் தானா.? அதுக்கப்புறம் எவ்ளோ இருக்கு. அதெல்லாம் சொன்னா உனக்குப் புரியாது."
"ஆமா, ஆமா எனக்குப் புரியாது. உங்களுக்கு எல்லாம் கேக்குறதுக்கு முன்னாடியே குழந்தையைக் கொடுத்துடுறாருல அந்தக் கடவுள். அந்தத் திமிரு தான் உங்களுக்கு. இது கிடைக்காதவங்க கிட்ட போய்க் கேளு அந்த வேதனை என்னன்னு. இதுக்கே உள்ள ஒருத்தி நடுங்கிக்கிட்டு இருப்பா." என்றவன்.
"ப்ச்." என்று சலித்து,
"வைஷு." என்று குரல் கொடுக்க.
"இதோ வரேன்." என்ற குரல் நலிந்து நடுங்கி கேட்டது. அதற்கு மேல் மனம் தாங்காமல் எழுந்து மனைவியை நோக்கிச் செல்ல முயல. அதற்குள் அவளே அவனை எதிர் கொண்டு கைகளில் காபி ட்ரேயுடன் வந்தாள்.
அனைவருக்கும் காபியை கொடுத்து முடித்துக் கணவன் அருகில் வந்து அமைதியாக அமர்ந்து கொண்டாள். அவளுக்கான காபியை எடுத்துச் சக்தி அவளிடம் கொடுக்க வேண்டாமெனத் தலை அசைத்து மறுத்தவள் கணவனின் முறைப்பில் வாங்கிக் கொண்டாள். அனைவரும் அமைதியாகக் காபியை குடித்து முடிக்க.
"இப்போ என்னதான் சொல்ல வர.?" என்ற சக்தியின் கேள்விக்கு,
"என்னால முடியாது ண்ணா. இந்தக் குழந்தையைப் பெத்து வளர்க்கறதுக்கு நான் மனசளவுல தயாரா இல்லை." என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு. அனைவரும் இருவரையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள். கணவனின் அருகில் அமர்ந்திருந்த வைஷ்ணவி டக்கென்று எழுந்து காயத்ரியின் அருகில் அமர்ந்தவள். அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு, "உங்களுக்குத் தான் இந்தக் குழந்தை வேண்டாம்ல. எங்களுக்குக் கொடுத்துடுறீங்களா? ப்ளீஸ்." என்று மன்றாடும் குரலில் கேட்க. கேட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி தான்.
ஆனால் அதற்குள்ளாக, பவித்ரா வேகமாகக் கணக்கு போட்டிருந்தார். ஏற்கனவே சக்தி வைஷ்ணவியின் தமக்கை குழந்தையைத் தத்தெடுப்பதில் அவன் மாமியாரின் சம்மதத்துடன் ஆர்வம் காட்ட. அவர்கள் வீட்டு குழந்தையைத் தத்தெடுப்பதற்கு பதில், தன் வீட்டு குழந்தையை, தன் மகளின் குழந்தையை தத்தெடுப்பதில் இருக்கும் நன்மைகளை வேகமாக கணக்கிட்டவர். எப்படி இருந்தாலும் இது தங்கள் வீட்டு குழந்தையாகிவிடும். மகளின் குழந்தைக்கு மகனின் சொத்துக்கள் வருவதும். நல்லது தான். என்று யோசித்தவர். இதற்கு தன் முழு சம்மதத்தையும் கொடுத்து, மகளையும் சம்மதிக்க வைத்து விடும் நோக்கத்துடன் நிமிர்ந்து அமர்ந்தார். இரண்டு பக்கமும் தீர்வு கிடைத்து விட்ட எல்லையில்லா மகிழ்வுடன்.
தங்கையிடம் யாசகம் கேட்பது போல கைகளை விரித்து கேட்கும் மனைவியை பார்த்தவனுக்கு தாங்க முடியாத வேதனை உண்டானது. அவளின் அருகில் வந்து அமர்ந்து அவள் கைகளைப் பிடித்துக் கொண்டவன் தங்கையை கேள்வியாக பார்க்க, இன்னும் அதிர்விலிருந்து மீளவில்லை அவள்.
"சொல்லு காயத்ரி உனக்கு தான் இந்த குழந்தை வேண்டாம்ல்ல அத அழிக்க முடிவு பண்ணிட்ட. அதை உயிரா வளர்த்துக்க உங்க அண்ணி கேட்கிறா.. என்ன சொல்ல போற..?" என்றவனின் கேள்வியில் கணவனை திரும்பி பார்த்த காயத்ரி,
"கர்ப்பகால செலவும்,பிரசவ செலவும் முழுசா நீங்க தான் பாக்கணும். நாங்க எந்த செலவும் செய்ய மாட்டோம்.."என்று கண்டிப்பான குரலில் கூற.
"அதைப் பற்றிய எந்த கவலையும் உனக்கு வேண்டாம். எப்போ அது எங்க குழந்தையாகிவிட்டதோ. அதற்கான செலவுகளை பார்ப்பது எங்களின் கடமையும், உரிமையும்.." என்றான் அவனும். அனைவருக்குமே இதில் நிம்மதி ஏற்பட, ஆசுவாச மூச்சை வெளிப்படுத்தும் நேரத்தில்
"எனக்கு முக்கியமா கொஞ்சம் பேசணும்.." என்றான் செல்வம்.
அனைவரும் கேள்வியாக அவனைப் பார்க்க, மனைவியை திரும்பி ஆழ்ந்து நோக்கியவன்.
"இந்தக் குழந்தையை கொடுக்க முழு மனசா தானே நீ சம்மதிக்கிற.." என்று கேட்டவன்.
"இப்போ இவ்வளவு யோசித்து இந்த குழந்தை வேண்டாம்னு சொல்ற நீ. நாளைக்கு அது பிறந்த பிறகு அதன் மேல் உரிமை உணர்வு கொள்வதோ..? உன் குழந்தைன்னு அதன் மேல் ஆதிக்கம் செலுத்துவதோ..? கூடாது. வயிற்றில் இருக்கும் போதே அது உன் குழந்தை இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு தான். நீ அதை சுமக்கணும். பெற்ற பின் அதன் மேல் நமக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதனை மனசுல நல்லா பதிய வச்சுக்கணும். இப்ப ஒரு பேச்சு, குழந்தை பிறந்த பிறகு ஒரு பேச்சுன்னு இருக்கவே கூடாது. அதை மனசில உறுதி எடுத்துக்கிட்டு அவங்களுக்கு சம்மதம் சொல்லு.." என்றான் மனைவியை பற்றி தெரிந்தவனாக.
செல்வத்தின் பேச்சைக் கேட்டிருந்த சக்திக்கும் சரவணனுக்கும் பெரும் நிம்மதியாக இருந்தது. கிடைக்கும் குழந்தை சக்தி மற்றும் வைஷ்ணவியின் குழந்தையாக மட்டுமே இருக்கும் என்பதில் சரவணனுக்கு எந்த சந்தேகமும் இல்லாமல் புரிந்தது. அது மனதிற்கும் நிறைவை கொடுத்தது. அதோடு விட்டுவிடாமல் மனைவியிடம் கைநீட்டி சத்தியமும் பெற்றுக் கொண்டான் செல்வம்.
"சத்தியம் எல்லாம் எதுக்கு மாப்ள..?" என கேட்ட சக்தியிடமும்
"இல்ல மச்சான் இது ரொம்ப அவசியம்தான்.." என்று விட்டான். அவனும். மனைவியிடம் இருந்து அந்த உறுதியை பெற்றுக் கொண்டே சமாதானம் ஆனான் அவன்.
சரி, இன்றிலிருந்து இது எங்க குழந்தை. அதனால், அதன் எல்லாம் முடிவுகளும் இனி நாங்க தான் எடுப்போம்.." என்றான் வைஷ்ணவியை பார்த்துவிட்டு. "நாங்க குழந்தைக்காக ட்ரீட்மென்ட் எடுத்துகிட்ட மருத்துவமனையிலேயே அந்த மருத்துவரிடமே காட்டலாம். குழந்தையை நாங்கள் தத்தெடுப்பதை பற்றியும் அவரிடம் சொல்லிவிடலாம். மற்றவர்களுக்கு புரிய வைப்பதை விட அவருக்கு இதை நன்றாக புரிந்து கொள்ள முடியும்.."என்று அவன் கூறியது அனைவருக்குமே சரி எனப்பட ஒரு மனதாக ஒப்பு கொண்டார்கள் அனைவரும்.
வைஷ்ணவிக்கு தான் அனைத்தும் கனவில் நடப்பது போல் இருந்தது. தனக்கென ஒரு குழந்தை வரப் போகிறதா என்ற ஆசையில் இப்போதே அவள் கண்கள் கலங்கி தழும்பி நின்றது. மனைவியின் மன ஓட்டத்தை அறிந்தவன் மெதுவாக அவள் கைப்பிடித்து எழுப்பி தங்களின் அறைக்கு அவளை அழைத்துச் செல்ல. அதற்காகவே காத்திருந்தது போல, காற்றும் புகாத அளவில் இருக அணைத்துக் கொண்டாள் கணவனை.
"நமக்குன்னு ஒரு குழந்தை இல்லங்க.."என்று கணவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்து, முகம் விகாசிக்க கேட்டவளை ஆதூரமாக பார்த்தவன் புன்னகையுடன் தலையசைக்க. அதற்கு மேல் முடியாமல், "ஓஹ் .." என்று கதறி அழுதாள். மனைவியின் மனநிலை அறிந்து சிறிது நேரம் அவளை அழவிட்டவன்.
"ப்ச்.. வைஷு. என்னது இது..? போதும்.." என்று கண்டிக்க. அழுகை மெல்ல மெல்ல சிரிப்பாக மாறியது.
வாய்விட்டு சத்தமாக சிரித்தவளை பார்த்தவன், அவளோடு இணைந்து கொண்டான் சிரிப்பில். சட், சட்டென்று மாறும் அவள் மனநிலை நன்றாகவே புரிந்திருந்தது அவனுக்கு.
அவன் மார்பில் சாய்ந்திருந்தவளை குனிந்து பார்த்தவன் இன்னும் புன்னகை குறையாம மலர்ந்து இருக்கும் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே.
"இப்படியே இருக்க போறியா.? எனக்கு ஒன்னும் இல்ல. உங்க அம்மா கிட்ட சொல்ல வேண்டாமா.?"
"ஆமா, ஆமா சொல்லணும்." என்று வேகமாக அவனை நீங்கியவள் தன் அலைபேசியை எடுத்து அன்னைக்கு அழைத்தாள்.
அவளின் பெயரைத் தாங்கி வந்த அலைபேசி அழைப்பைச் சற்று கலவரமாகப் பார்த்துக்கொண்டிருந்தார் வள்ளி. மருமகன் அவளிடம் கூறியிருப்பாரோ.? அதைப் பற்றிப் பேசவே அழைக்கிறாளோ.? என்று பெரும் சஞ்சலமாக இருந்தது. அப்போதுதான் வாந்தி எடுத்து விட்டு வந்து சோபாவில் அமர்ந்திருந்த விஷாலாட்சியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அழைப்பை ஏற்க. அவளும் இவரையே தான் பார்த்துக்கொண்டிருந்தாள் மிரட்சியுடன்.
"அம்மா எப்படி இருக்கீங்க.? அக்கா எப்படி இருக்கா.? என்று விசாலாட்சியை பற்றி முதலில் விசாரிக்க இன்னும் கலவரம் கூடியது அவருக்கு.
"நல்லா இருக்கேன் மா. நீ எப்படி இருக்க.?"
"நான் ரொம்ப நல்லா இருக்கேன். பாட்டி எப்படி இருக்காங்க.?" என்றவள், அவரின் பதிலுக்கும் காத்திருக்காமல்,
"அம்மா உங்க கிட்ட முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும்." என்னும்போதே வயிற்றுக்குள் பயப்பந்து உருண்டது அவருக்கு.
அவள் சொல்ல வரும் விஷயத்தைத் தவிர்ப்பதற்காக,
"உங்க அக்காவா. இங்க தான் பக்கத்துல இருக்கிறாள். பேசுறியா.?" எனக் கேட்க. வேண்டாம் என்பதாக வேகமாகத் தலையாட்டினாள் விசாலாட்சி.
'தான் கேட்காததை அன்னை கூறுவதில் அவருக்குத் தான் சொல்ல வருவது சரியாகக் கேட்கவில்லையோ.?' என நினைத்தவளாக
"அக்கா கிட்ட அப்புறமா பேசறேன். உங்ககிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும். இன்னைக்கு பெரிய அண்ணி வீட்டுக்கு வந்து இருந்தாங்க. அவங்களும் மாசமா இருக்காங்க." "என்னது...? அப்படியா.! அவளுமா.?" என்றார் ஆச்சரியம் தாங்காமல்.
"ஆமா ம்மா. ஆனா அவங்களுக்கு உருவான குழந்தையைப் பெத்துக்கிறதுல விருப்பம் இல்லை."
"ஐயையோ.!"
"ம்ம் அதுதான் உங்களுக்கு விருப்பமில்லாத குழந்தையை எனக்குப் பெற்று கொடுத்திடுங்க. நான் விருப்பமா வளத்துக்குறேன்னு கேட்டுட்டேன். அவங்களும் சம்மதிச்சுட்டாங்க." என்றவளின் குரலில் இருந்த சந்தோஷத்தில். இவருக்கும் பெரும் பாரம் விலகியது போல
"அப்பாடா." என்ற நிம்மதி பெருமூச்சு வந்தது.
"அதுக்கு எல்லோரும் சம்மதிச்சிட்டாங்களா. அவங்க மாமியார் வீட்டில் ஒத்துக்கு வாங்கலாமா.?"
"எல்லோருக்கும் சம்பந்தம். செல்வம் அண்ணனும் குழந்தையை எந்த உரிமையும் இல்லாமல் முழுசா எங்களுக்கே கொடுத்திடனும் என்று அண்ணிகிட்டேயும் சொல்லிட்டாங்க." என்று ஆனந்த குரலில் கூற.
"என்னவோ நல்லது நடந்தா சரி." என்றார் அவரும். தான் இழுத்து வைத்த சஞ்சலம் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் சுமுகமாக முடிந்ததில் சற்று நிம்மதி தான் அவருக்கு. பெரிய மகளிடமும் இதைப் பகிர,
தன் குழந்தைக்கு இனி எந்தப் பங்கீடும் இல்லை என்ற ஆசுவாசம் தான் அவளுக்கும். தன் தங்கையுடனான சுமுக நிலையில் இனி எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதே அவளுக்கு மன நிறைவை கொடுத்தது.
இங்குப் பவித்ராவுடன் அவரின் அறையில் அமர்ந்திருந்தாள் காயத்ரி.
"என்னம்மா அண்ணி கேட்டதுக்கு நீங்க எதுவுமே மறுப்பு சொல்லல.?"
"அடி போடி, நான் ஏன் மறுப்பு சொல்லப் போறேன்.?"என்றவர் பெருமூச்சு விட்டு அங்க வைஷ்ணவியின் அக்கா விசாலாட்சியும் மாசமா இருக்கா.
"அப்படியா இந்த வயசுல.?"
"ம்ம் ஆமா. ஆனா, அவ உன்ன மாதிரி முடிவு எடுக்கல." என்று மகளிடம் அவள் செய்யத் துணிந்த செயலுக்குக் கோபம் முகம் காட்டியவர்.
"ஆனா அவ உடல் நிலையைக் கருத்தில் கொண்டு. அவங்க அம்மா ஒரு முடிவு எடுத்துச் சக்தி கிட்ட பேசி இருக்காங்க.." "என்னன்னு..?"
"ம்ம் அவளுக்கு குழந்தை பிறந்து அதை வளர்ப்பதில் நிறைய சிரமம் இருக்கு. உங்களுக்கும் குழந்தை இல்லை. அதனால குழந்தை பிறந்ததும் அதை நீங்க தத்து எடுத்துக்கோங்கன்னு கேட்டிருக்காங்க.."
"ஓஹ்..! அதுக்கு அண்ணன் என்ன சொன்னாங்களாம்..?"
"அவன் என்கிட்டயும் வைஷ்ணவி கிட்டயும் இதைப்பற்றி பேசி சம்மதம் சொல்றதா இருந்தான்.."
"என்னம்மா சொல்றீங்க அவங்க வீட்டு குழந்தை எப்படி நம்ம வீட்ல..?"
"அதே நினைப்புதான் எனக்கும். உங்க அண்ணன தடுக்க முடியாமல் அதை நினைச்சு கவலையா இருந்தேன். இதுக்கு உங்க அப்பாவும் சம்மதம் சொல்லிட்டாரு. பிறந்த குழந்தை கிட்ட வேற்றுமை காட்டக்கூடாது என்று எனக்கு புத்திமதி வேற. எப்படியோ.. உன் மூலமா கடவுள் காப்பாத்திட்டார். இப்போ உன் குழந்தை அவன் குழந்தையா வளர்வதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். எப்படியும் அது நம்ம வீட்டு குழந்தைங்குறதுனால யாருக்கும் எந்த வேற்றுமையும் இருக்காது..." என்ற நிம்மதி பெறுமூச்சு அவரிடம்.
"ஆமாம்மா அது என்னமோ உண்மைதான்.." என்றாள் அவளும்.
இப்படி ஒவ்வொருவரும் அவரவர் நிலையில் திருப்தி அடைந்து கொண்டார்கள்.
Latest Post: "காலம் தாண்டியும் காதலைத் தேடி" கதைக்கான விமர்சனங்கள் Our newest member: Baskar Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page