About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம் 28
நேரம் கழித்து வீடு வந்து சேர்ந்தார்கள் சக்தியும் வைஷ்ணவையும். இவர்களை எதிர்பார்த்து அமர்ந்திருந்த பவித்ரா இவர்கள் வந்த நேரத்தைப் பார்த்து
"என்னடா சாப்பிட்டு வந்துட்டீங்களா என்ன.?" என்று கேட்க.
"இல்லம்மா. நீங்கச் செஞ்ச கோலா உருண்டை சாப்பிடணும்னு உங்க மருமகள் என்னை அங்கே சாப்பிட விடாமலேயே கூட்டிட்டு வந்துட்டா." என்று சொன்னவனின் முகம் ஆழ்ந்த யோசனையில் இருந்தது.
ஆனால் அதற்கு நேர் மாறாக வைஷ்ணவியின் முகம் மலர்ந்து மகிழ்வோடு இருந்தது.
"என்னடா எல்லாரும் எப்படி இருக்காங்க அங்க.?" என்று மகனின் கண்களைப் பார்த்துக் கொண்டே கேட்க,
"எல்லாரும் நல்லா இருக்காங்க." என்றான் அவன் பட்டும் படாமல்.
"நீ ஏன் இப்படி உம்முன்னு இருக்க.?" என்ற பவித்ராவிற்கு அவன் பதில் ஏதும் கூறாமல் தங்களின் அறையை நோக்கிச் செல்ல.
"ஆமா அத்தை. இப்படித்தான் இருக்கிறார். ஏன்ன்னு தான் தெரியல.? அப்புறம் அத்தை விசாலாட்சி அக்கா மாசமா இருக்காங்க." என்று புன்னகை முகத்துடன் கூற.
"அப்படியா.!" என்று ஆச்சரியமாகக் கேட்டவர். 'அதனால் தான் மகன் சோர்வுடன் இருக்கிறானோ.?' என்று நினைத்துப் பெருமூச்சை பெரிதாக இழுத்து விட. அது எதற்கான பெருமூச்சு என்பதை தெரிந்த வைஷ்ணவி சட்டென்று முகம் வாட நின்றவள். பின்பு சமாளித்துக் கொண்டு,
"நாங்க சாப்பிட்டுக்றோம் அத்த. நீங்கப் போய்த் தூங்குங்க." என்றாள்.
சம்மதமாகத் தலையாட்டியவர் அவர்களின் அறையை நோக்கிச் சென்றார். பெரும் சிந்தனையில் வரும் மனைவியைப் பார்த்த சரவணன்.
"என்னம்மா மகனும் மருமகளும் வந்தாச்சா.?" எனக் கேட்க
"வந்துட்டாங்க." என்ற பதில் கூறியவர் அமைதியாக விட
"என்ன ஆச்சு.? ஏதாவது சொன்னானா சக்தி.?"என்றதற்கு
"சக்தி எதுவும் சொல்லல. வைஷ்ணவி தான் சொன்னாள்."
"என்ன சொன்னாள்.?"
"ம்ம் அவங்க அக்கா விசாலாட்சி மாசமா இருக்கலாம்."
"ஓஹ்.! நல்ல விஷயம் தானே."
"ஆமா நல்ல விஷயம் தான். ஆனால் எதிர்பார்த்துகிட்டு இருக்கிற இவங்களுக்கு ஒன்னும் அமைய மாட்டேங்குது."
"பவித்ரா இதெல்லாம் ரொம்ப தப்பு. அப்படி எல்லாம் நினைக்கக் கூடாது."
"ஆமா நானும் அப்படியெல்லாம் நினைக்கக் கூடாதுன்னு தான் நினைக்கிறேன். ஆனா எங்க.? நானும் மனுஷி தானே." என்றவருக்கு பெருமூச்சு தான் வந்தது.
சிறிது நேரம் அமைதியாக இருவரும் அமர்ந்திருக்க,
"அப்பா." என்று அழைத்த படி அறையின் கதவைத் தட்டும் சக்தியின் குரல் கேட்டது.
"உள்ள வாச்சக்தி." என்ற சரவணனின் குரலுக்கு. செவி சாய்த்து உள் நுழைந்தவன் அன்னையின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான். அவன் வந்ததில்லையே ஏதோ பேச வந்திருக்கிறானெனப் புரிந்து கொண்ட பவித்ரா, அவனே ஆரம்பிக்கட்டும் என்று பார்த்திருந்தார்.
"வைஷ்ணவி எங்கப்பா.?" எனக் கேட்ட சரவணனிடம்
"தூங்கிட்டா பா.அவ தூங்கும் வரைக்கும் காத்து இருந்துட்டு தான் வரேன்." என்று அவன் கூறியதிலேயே விஷயம் பெரிது என்று புரிந்து கொண்டார் பவித்ரா. ஆனாலும் அவனிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் கூர்மையாக ஆராயும் பார்வை பார்த்துக்கொண்டிருந்தார் அவனை.
"என்னமா அமைதியா இருக்கீங்க." என்று அன்னையின் மனநிலை அறிந்து கொள்ள கேட்ட சக்தியைப் பார்த்தவர். "உங்க அண்ணி மாசமா இருக்காங்கிற விஷயத்தை உன்கிட்ட சொல்றதுக்காகவா உங்க மாமியார் உன்ன வரச் சொன்னாங்க." என்று, இதில் வேறு ஏதோ இருக்கிறது என்பதை குரலில் கொண்டு கேள்வியாக அவனைப் பார்க்
"அதைச் சொல்றதுக்கு தான் அழைத்து இருந்தாங்க. ஆனா அது மட்டும் காரணம் இல்லை." என்றான் அவனும்.
"புதிர் போடாம என்ன விஷயம்னு சொல்லு சக்தி.என்ன சொன்னாங்க உங்க மாமியார்." எனக் கேட்ட சரவணனை பார்த்தவன்.
"அண்ணியோட குழந்தையை எங்களைத் தத்தெடுத்து வளத்துக்க சொல்றாங்கப்பா." என்றான் அன்னையைப் பார்த்துக் கொண்டே.
"அப்படியா.! ஆனா ஏன்.?" என்று ஆச்சரியமும், கேள்வியும் ஒருங்கே எழும்பக் கேட்டவரிடம்.
"ரொம்ப வயசுக்கு அப்புறமா குழந்தை உண்டாகி இருக்காங்க இல்லையா. அவங்களால் அந்தக் குழந்தையைப் பார்த்துக்க முடியுமானு அவங்களுக்கு சந்தேகமா இருக்கு போல. அவங்க உடல்நிலையை கருத்தில் கொண்டு, எங்களுக்கும் குழந்தை இல்லாம எங்க ஏக்கத்தையும் தீர்க்கும் பொருட்டு இந்த முடிவு எடுத்திருக்கிறதா சொன்னாங்க."
"வைஷ்ணவி கிட்டயும் சொன்னாங்களா.?" என்று கேட்ட பவித்ராவை பார்த்தவன்.
"இல்ல அவளுக்கு இத பத்தி எதுவும் தெரியாது. என் கிட்ட தனியா தான் கேட்டாங்க."
"ஓஹோ.! நீ வைஷ்ணவி கிட்ட சொன்னியா.?
"இல்ல அவகிட்ட நான் இத பத்தி எதுவுமே பேசல.?"
"சரிதான். உங்க மாமியார் கேட்டதுக்கு நீ என்ன பதில் சொன்ன.?"
"அவன் என்ன சொல்லுவான் நல்லது தானே. ஒரு அம்மாவா அவங்க யோசிக்கிறது சரிதானே. ரொம்ப வருடத்திற்கு பிறகு குழந்தை பெற்று அதை வளர்த்து ஆளாக்குறது அவங்க மகளுக்குச் சிரமமா இருக்கும்னு தான் இந்த முடிவு எடுத்திருக்காங்க. இதனால ரெண்டு பேருக்கும் நன்மை தானே." என்றவரின் கூற்றில் அவரை முறைத்துப் பார்த்தவர்.
"நீ அவங்க கிட்ட என்ன சொல்லிட்டு வந்த சக்தி.?' என்று மறுபடியும் மகனைக் கூர்ந்து பார்த்துக் கேட்க.
"நான் என்னம்மா சொல்லுவேன். இது நான் மட்டும் தனிப்பட்டு எடுக்கிற முடிவில்லை. முதல்ல வைஷ்ணவி கிட்ட கேட்கணும். எங்க அம்மா, அப்பா கிட்ட கேக்கணும்னு சொல்லிட்டு தான் வந்தேன்."
"ம்ம் நல்லது தான். அவங்க கிட்ட விருப்பம் இல்லைன்னு சொல்லிடு."
"ஏன் பவித்ரா அப்படி சொல்ற.?"
"என்ன.? ஏன் பவித்ரான்னு.? என்னைக் கேள்வி கேக்குறீங்க.? இதெல்லாம் சரிப்பட்டு வருமா.?"
"எல்லாம் சரிப்பட்டு வரும். அவங்க என்ன வேத்து ஆளா எல்லாம் ஒரே குடும்பம் தானே."
"இருந்தாலும். எனக்கு மனசு கேட்கல."
"பச்ச குழந்தை கிட்ட பேதம் பார்ப்பியா நீ.?"
"ப்ச்.உங்களுக்குச் சொன்னா புரியாது."
"ஏன் சக்தி.? இதுக்கு உங்க அண்ணி ஒத்துக்கிட்டாங்களா.?"
" இல்லம்மா அத்தை இன்னும் அவங்க கிட்ட எல்லாம் பேசவே இல்ல. என்கிட்ட தான் முதல்ல சொல்லி இருக்காங்க. நம்ம சம்மதம் சொன்ன பிறகுதான் மற்ற எல்லார்கிட்டயும் பேசுறேன்னு சொல்லி இருக்காங்க.."
"நீ உங்க அத்தை கிட்ட, உன் சகல கிட்டயே முதல்ல பேச சொல்லு. அவங்களுக்கு சம்மதமான் கேக்க சொல்லு. அதுக்கப்புறம் நம்ம சம்மதத்தை சொல்லிக்கலாம்.." என்று பவித்ரா கூற.
"ஆனா சகலைக்கு குழந்தையை பெத்துக்கறதுலையும் வளர்க்கறதுலையும் விருப்பம் இருக்கிற மாதிரி தான் இருக்கு.."
"அப்புறம் என்ன..? அவங்களே இதுக்கு ஒத்துக்கொள்ள மாட்டாங்க.." மறுத்து ஏதோ கூற வந்த சரவணனை தடுத்த பவித்ரா.
"இங்க பாருங்க முதல்ல அவங்க வீட்ல என்ன சொல்றாங்கன்னு கேட்போம். அவங்க சம்மதம் கொடுத்த பிறகு தானே நாம தத்து எடுக்கறத பத்தி முடிவு எடுக்கணும். அதனால உங்க அத்தை கிட்ட அவங்க வீட்ல சம்மந்தமான முதல்ல கேட்டு சொல்ல சொல்லு. அதுக்கப்புறம் நம்ம சம்மதத்தை சொல்லிக்கலாம்.." என கூறிய பவித்ராவின் முடிவே சரியாக இருந்தது சக்திக்கு.
"ஆனா அவங்க சம்மதம் சொல்லிட்டா அந்த குழந்தையை தத்து எடுத்து வளர்க்கறதுல எனக்கு எந்த தயக்கமும் இல்ல மா .." என்று அன்னைக்கும் தன் மனதை புரிய வைத்துவிட்டு தங்களின் அறையை நோக்கி சென்றான்
காலை விடிந்ததும் அன்றாட வேலைகளை அவரவர்கள் பார்க்க.
அன்னை சொன்னதை அத்தையிடம் சொல்லிவிடலாமா என்று யோசித்துக் கொண்டே இருந்தான் சக்தி. தமக்கை மறுபடியும் உண்டாகி இருந்ததில் பெரு மகிழ்ச்சி கொண்டது வைஷ்ணவி தான். தனக்கு கிட்டாத பாக்கியம் மறுமுறை அவளின் அக்காவிற்கு கிடைத்ததில் மகிழ்வே அவளுக்கு. சற்று உற்சாகமான மனநிலையில் ஏதோ ஒரு பாடலை முனுமுனுத்துக் கொண்டே அன்றைய வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
தாத்தாவின் மறைவிலிருந்து இந்த நிகழ்வு சற்றே அவளை மாற்றி இருந்தது. வீட்டிற்கு வரப் போகும் ஒரு புதிய வரவின் நினைவில் மனம் மகிழ்ந்திருந்தது.
அங்கு வைஷ்ணவியின் தாய் வீட்டில். அப்பொழுது நான் உண்ட அனைத்தையும் வாங்கி எடுத்துவிட்டு வந்து சோர்வுடன் அமர்ந்திருந்த விஷாலாட்சியை பார்த்த வள்ளி, "கொஞ்சம் கவனமா இருந்திருக்க கூடாதா.? இப்போ எவ்வளவு சிரமம் பாரு.?" எனக் கேட்க ஏற்கனவே வாடிச் சோர்வில் வதங்கி இருந்தவள். சட்டென்று சினம் கொண்டு,
"அதுக்கு என்னம்மா செய்றது.? கவனம் இல்லாமல் தானே, எங்களுக்கே தெரியாம நடந்திருக்கு. என் பிள்ளையைச் சுமக்கிறது எனக்கு ஒன்னும் சிரமம் இல்லை. நல்லபடியா பெற்று வளர்த்துப் பார்த்து க்கொள்வோம்."என்றவள் சற்று இடைவெளி விட்டு,
"அன்னைக்கும் அப்படித்தான் சொல்றீங்க, என் புருஷன் முன்னாடி." என்று கோபமாகக் கேட்க.
"இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி கோபப்படுற.? உன் நல்லதுக்கு தானே சொல்றேன். நீ தானே இப்போ சிரமப்படுற உன் புருஷனுக்கு ஒன்னும் இல்லையே." என்றார் அவரும் ஆதங்கம் தாங்காமல்.
"அம்மா போதும். சுமக்கிறது நானு, பெத்தெடுக்க போறதும் நானு, வளர்க்கப் போறது நானும் என் புருஷனும் சேர்ந்து. அதனால எங்க குழந்தையை நாங்க பார்த்துக் கொள்வோம்.அந்தத் திடம் எங்களுக்கு இருக்கு. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க." என்றாள் இன்னும் கோபம் தீராமல்.
இவள் பேச்சில் திடுக்கிட்ட வள்ளி.
"ஏம்மா இப்ப என்ன சொல்ல வர.? அப்ப இந்தக் குழந்தையைப் பெற்று வளர்க்க தான் போறீங்களா.?"
"பின்ன என்ன நினைச்சீங்க நீங்க.?" என்றாள் அவளும் புரியாத தொனியில் நெற்றி சுருக்கி அன்னையைப் பார்த்துக் கொண்டே.
"இல்ல நான் வேற யோசனை வச்சிருந்தேன்."
"என்ன யோசனை."என்றாள் இன்னும் கூர்மையாக அவரைப் பார்த்துக் கொண்டே
"நான் இந்தக் குழந்தையைப் பெற்று வைஷ்ணவி கிட்ட உன்னைக் கொடுக்கச் சொல்லலாம்னு நெனச்சிட்டு இருந்தேன்."
"என்னம்மா சொல்றீங்க.? நீங்க எப்படி அப்படி நினைக்கலாம்.?" என்றாள் கோபத்தில் குரல் நடுங்க.
"இல்லம்மா, நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு.நீயே வயசு போய் இந்தக் குழந்தையை உண்டாகி இருக்க.அதைப் பெத்து வளர்க்கறது எல்லாம் உனக்கு ரொம்ப சிரமம். இப்ப சுளுவா இருக்கிறது அப்புறம் ரொம்ப சிரமமா போயிடும். நீதான் இரண்டு குழந்தைகளையும் பாக்கணும். அதான், அவளும் குழந்தை இல்லாம கஷ்டப்படுறா. உனக்கும் இந்தக் குழந்தையால கஷ்டம் தான்." என்றவரை இடையூற்று அவரின் பேச்சை நிறுத்தியவள்.
"அம்மா எனக்குக் கஷ்டம்னு உங்க கிட்ட நான் சொன்னேனா.?" என்றாள் கோபம் அடங்காமல்.
"நீ சொல்லலாமா. ஆனா நிதர்சனம் அதுதானே. அது தான் சின்ன மாப்பிள்ளை கிட்ட நான் ஏற்கனவே சொல்லிட்டேன். இந்தக் குழந்தை பிறந்தபிறகு நீங்கத் தத்தெடுத்து வளத்துக் கோங்கன்னு.". என்ற தாயின் கூற்றைக் கேட்டு, தன் நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தவள்.
"யாரைக் கேட்டு அவரு கிட்ட இப்படி சொன்னிங்க. என் புருஷனும், மாமியாரும் இதுக்கு ஒத்துக்குவாங்கன்னு நீங்க எப்படி நினைச்சீங்க.? முதல்ல நான் எப்படி இதுக்கு ஒத்துக்குவேன். அவள் என் தங்கச்சி தான். அவளுக்கு ஒரு குழந்தை வேணும்னு ஆசைப்படறேன் தான்.அதுக்காக என் குழந்தையை நான் எப்படி கொடுக்க முடியும். அவளுக்குன்னு கண்டிப்பா ஒரு குழந்தை வரும் ஆனால் என் குழந்தையை நான் யாருக்கும் கொடுக்கறதா இல்ல.." என்றவள் தன் இரு கைகள் கொண்டு தன் வயிற்றை அணைத்து பிடித்துக் கொள்ள.
"உன் நல்லதுக்காக தான் அம்மா இந்த முடிவை எடுத்தேன். சின்ன மாப்பிள்ளைக்கு இதுல சம்மதம் தான் நினைக்கிறேன். அவங்க அம்மா கிட்டயும் வைஷ்ணவி கிட்டயும் பேசிட்டு சொல்றேன்னு சொல்லி இருக்காங்க. அம்மா சொல்றத புரிஞ்சுக்கோ மா.. எல்லாம் உன் நல்லதுக்கு தான்.." என்றபடி அவள் நாடி பிடித்து கூற அவர் கைகளை தட்டி விட்டவள்.
"என்ன நினைச்சு இப்படி எல்லாம் செஞ்சீங்க. என்கிட்ட ஒரு வார்த்தை கூட இத பத்தி கேட்காம நீங்களா ஒரு முடிவு எடுத்து, அதை பத்தி சக்தி கிட்ட வேற பேசி வச்சிருக்கீங்க. இதுக்கு நானும் சரி, என் புருஷனும் சரி ஒரு நாளும் சம்மதிக்க மாட்டோம். அவங்க கிட்ட தெளிவா சொல்லிடுங்க. நான் இன்னைக்கு எங்க வீட்ட பாக்க போறேன். இங்கே இருக்கிறதுனால தானே என்னோட முடிவை நீங்களே எடுக்குறீங்க. என்னை தங்கமா பார்த்துக்க என் புருஷனும் மாமியாரும் இருக்காங்க. நான் கிளம்புறேன்.." என்றவள். கிளம்ப முற்பட, கர்ப்பகால மயக்கத்தினால் உடல் தள்ளாட ,மறுபடியும் சோபாவில் அமர்ந்தாள்.
"சரிடி உன்னை கேட்காமல் உனக்கு நல்லதுன்னு நெனச்சி ஒரு விஷயத்தை செய்துட்டேன்.. இப்பதான் உனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்ட இல்ல. எனக்கும் அது நல்லாவே புரிஞ்சிடுச்சு. இன்னும் கோபத்தை தூக்கி சுமக்காமல் உடம்பு தேறும் வரைக்கும் இங்கேயே இரு..." என்றவர் விறுவிறுவென தன் அறையை நோக்கி சென்றார்.
தான் நல்லது என்று செய்ய நினைத்த ஒரு செயல் இப்படி இக்கட்டில் வந்து நிற்பதில் அவருக்கு பெரும் மண்டை இடியாக இருந்தது. இவளிடம் பேசாமல் அவசரப்பட்டு சின்ன மாப்பிள்ளையிடம் பேசியதை நினைத்து வருந்தியவர், இப்பொழுது அவர் சம்மதம் என்று கூறினால் என்ன செய்வது என்பது புரியாமல் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார்.
ஆர்ப்பாட்டம் இல்லாமல் இரண்டு நாட்கள் கடந்திருந்தது. தமக்கையுடன் பேசும் பொருட்டு அவள் உடல் நிலையைத் தெரிந்து கொள்ள அவளுக்கு அழைத்து இருந்தாள் வைஷ்ணவி. தங்கையின் பெயரைத் தாங்கி வந்திருந்த அலைபேசியின் அழைப்பை எடுக்காமல் அதையே விழி விரித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் விசாலாட்சி. தங்கை தனக்கு எதற்கு அழைக்கிறாளோ என்ற பெரும் பயம் இருந்தது அவளுக்கு.
அவளின் கணவன், அன்னை அவனிடம் கூறிய குழந்தை விஷயம்பற்றி ஏதேனும் அவளுக்குச் சொல்லி இருப்பானோ என்று பெரும் சந்தேகமாகவும், பயமாகவும் இருந்தது. குழந்தையைப் பெற்று, தன்னிடம் கொடுத்து விடச் சொல்லித் தங்கை கேட்டால் அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது.? எப்படி அதைத் தவிர்ப்பது.? எப்படி அவள் மனம் வருந்தாமல் மறுப்பு கூறுவது.? எனச் சிந்தித்துக்கொண்டே அமர்ந்திருந்தாள். அதற்குள் முழுவதுமாக அடித்து ஓய்ந்திருந்தது அலைபேசி. பெருமூச்சு விட்டபடி அதையே சிறிது நேரம் பார்த்திருந்தவள் தங்கையிடம் பேசாமல் தப்பி விட்டதாக நினைத்து ஆசுவாசமடைய, மறுபடியும் அடித்தது அலைபேசி. எப்படியும் பேசிவிடத்தான் வேண்டும் ஓடி ஒளிய முடியாது என்பதை புரிந்தவளாக அழைப்பை ஏற்றவள் பேசுவதற்கு முன்பாகவே,
"அக்கா எப்படி இருக்க.? தூங்கிட்டு இருந்தியா.? நான் உன்னை எழுப்பித் தொல்ல செஞ்சுட்டேனா.?" என்று படபடப்புடன் பாசமாகக் கேள்வி எழுப்பினாள்.
"இல்ல, இல்ல சொல்லு எப்படி இருக்க.?"
"நான் நல்லா தான் இருக்கேன். நீ எப்படி இருக்குன்னு சொல்லு. பாப்பா என்ன சொல்லுது.? மசக்கை இன்னும் உன்னை ரொம்ப வாட்டி எடுக்குதா.?"
"ஆமா.?" என்றாள் சோர்வுடன். வேறு எதுவும் அவளுடன் பேசப் பயமாக இருந்தது இவளுக்கு. எங்கே தன் குழந்தையைக் கேட்டு விடுவாளோ என்ற பதைப்பதைப்பு மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. பேச்சை வளர்க்காமல் சீக்கிரம் வைத்து விட வேண்டும் எனக் கடவுளை வேண்டியவள்.தனக்கு மிகவும் சோர்வாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாள்.
"என்னக்கா ஒன்னுமே பேச மாட்டேங்கற.?" என்று கேட்ட தங்கையிடம் எதையும் வெளிப்படையாகக் கேட்க தயக்கமாக இருந்தது.
"ஒன்னும் இல்ல சோர்வா இருக்கு." என்றவளின் பதிலில்
"சரிக்கா. உடம்ப பாத்துக்கோ." என்று கூறிவிட்டு அலைபேசியை அணைக்க சற்று நிம்மதியாக உணர்ந்தாள் விசாலாட்சி.
அங்கு வள்ளியும் பயந்து கொண்டு தான் இருந்தார் சக்தியோ அல்லது வைஷ்ணவியோ அழைத்து விடுவார்களோ என்று அஞ்சிக்கொண்டிருந்தார். குழந்தை விஷயமாகப் பேசினால் இருபக்கமும் எந்தப் பிரச்சனையும் வராமல் எப்படி சமாளிப்பது என்பதை யோசித்து யோசித்தே சோர்ந்து போனார் அவர். தன் அவசர குடுக்கை தனத்தால் இரு மகள்களுக்கும் இடையில் பேச்சு வார்த்தை இல்லாமல் உறவு அற்று போகுமோ என்று மிகவும் பயமாக இருந்தது.
நல்லது நினைத்து இவர் ஒன்று செய்ய முனைய அது பெரும் துன்பத்தில் முடிந்து விடுமோ என்ற அச்சப்பட்டு கொண்டே இருந்தார். முதல்முறையாக மகளிடம் இருந்து அலைபேசி வராமல் இருப்பது அவருக்குப் பெரும் நிம்மதியாக இருந்தது.
சக்தியும் அன்னைக்கு கூறியதைப் பற்றி மாமியாரிடம் தெரியப்படுத்தி விடலாமா என்று யோசித்துக் கொண்டே இருந்தான். அவர் தன் பதிலுக்காகக் காத்திருப்பாரோ என்று பெரும் யோசனையாக இருந்தது அவரே தனக்கு அழைப்பாரோ என்று சிந்தித்துக் கொண்டிருந்தவன் அவரிடமிருந்து எந்த அலைபேசி அழைப்பும் இல்லை என்ற நிலையில் சற்று நிம்மதியாக உணர்ந்தான்.
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் நிம்மதியாக உணர்ந்தார்கள்.
அன்று விடுமுறை நாளாக இருக்க. நேரம் கழித்து தான் விழித்தான் சக்தி. தன் கைவளைவில் சுருண்டு படுத்திருந்த மனைவியைப் பார்த்தவன் மென்புன்னகையுடன் அவள் கண்களில் அழுந்து முத்தமிட. அவன் மீசையின் குறுகுறுப்பில் சிணுங்கியவள் மீண்டும் தூக்கத்தை தொடர, அதற்கு மேல் அவளைத் தொல்லை செய்யாமல் எழுந்து குளியல் அறைக்குச் சென்றவன். குளித்து வெளிவர இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள் அவள்.
"ஹேய்.! தூங்கு மூஞ்சி
இன்னும் எந்திரிக்கலையா.?" என்று, அவன் தலையில் இருந்த நீர்த் துளிகளைத் தலையை ஆட்டி, அவள்மேல் தெளிக்க, மெதுவாகக் கண் விழித்தவள்
"மணி என்னங்க.?" என்று கேட்டபடியே மறுபடியும் நன்றாகத் தலையணையில் முகம் புதைத்துக்கொள்ள.
"பத்தரை." என்றான் புன்னகையை அடக்கிக் கொண்டே
"அய்யய்யோ.!" என்று பதறி எழுந்தவள் நேரத்தைப் பார்க்க எட்டு ஐந்து என்றது அது.
"அய்யய்யோ.!" என்ற மறுபடியும் பதற "ஏய் என்னடி.? பத்தரை என்றாலும் பதறுற. எட்டு என்றாலும் பதறுற."
"ம்ம் உங்களுக்கு என்ன.? அத்தை என்னைதான் திட்டுவாங்க." என்றபடி குளியலறைக்குள் ஓடியவளை பார்த்தவன்,
"விழுந்து வாராத டி மெதுவாவே வா." என்றவன் புன்னகை முகத்துடன் வெளிவர. அங்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க கோபத்தில் அமர்ந்திருந்தாள் அவன் தங்கை காயத்ரி. பக்கத்தில் நெற்றியில் கை வைத்த படி முகம் கசங்க ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தான் அவள் கணவன் செல்வம். அவர்களுக்கு அருகில் பெரும் குழப்பத்துடன் அமர்ந்திருந்தார்கள் பவித்ராவும் சரவணனும். அவர்களையே பார்த்தபடி.
'என்ன ஆயிற்று இவர்களுக்கு..? தங்கை காலையிலேயே வந்திருப்பதில் அதுவும் குழந்தைகள் இருவரும் இல்லாமல் வந்திருப்பதில் யோசனையுடன் அவர்களின் அருகில் வந்தவன்.
"வாங்க மாப்ள, வா, காயத்ரி." என்று முறையே வரவேற்று அவர்களின் அருகில் அமர்ந்தான் சக்தி.
என்ன குழப்பம் இவர்களுக்குத் தெரிந்து கொள்வோம் நாமும்.
Latest Post: "காலம் தாண்டியும் காதலைத் தேடி" கதைக்கான விமர்சனங்கள் Our newest member: Baskar Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page