All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தீரா காதலின் தேடல்..? , தேடல் - 19.

 

VSV 42 – தீரா காதலின் தேடல்
(@vsv42)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 50
Topic starter  

தேடல் - 19

 

இப்போது ஆதி “இதழ்மா.. உனக்கு பூமி லவ் பண்ணின பொண்ணு மகிழ்மதி தெரியும் தான”

 

“தெரியுமே.. உங்ககிட்டயும் அவன் சொல்லிட்டானா”

 

“ம்ம் தெரியும்.. முதல நான் சொல்லறத முழுசா பதற்றப்படாம கேளு” என்று கூறி நடந்த நிகழ்வு அனைத்தும் ஒவ்வொன்றும் கூறும் போதே அவள் கண்களில் நீர் எட்டி பார்க்க,

 

இறுதியாக பூமி உயிரோடு இல்லையென்று முடிக்கையில் உடைந்து விட்டாள் அதோடு தன் பாதி உயிரை பிடுங்கிய போன்ற வலியில் உறைந்து ஆடாமல் அமர்ந்திருக்க, 

 

பாவம் பெண்ணவளை கண்டு இரு ஆடவர்களும் பதறி அவளருகில் அமர்ந்து அவளை மாறி மாறி அழைக்க, 

 

அவளுக்கு தான் செவியிலே எட்டவில்லை. அதுனால் அவளை உலுக்கிய ஆதி “இதழ்.. என்ன பாருடா.. இப்படி இருக்காத.. அழுகனும்ன்னா நல்லா அழு” என்க,

 

இரு ஆடவர்களின் கையையும் இறுக பற்றி, ஆதியின் தோலில் சாய, இரு ஆடவர்களும் தன் உடன்பிறவா தங்கையின் தலையை கோதி விட்டனர்.

 

சசிக்கோ, அவளின் நிலை கண்டு மனதில் வலி எழுந்தாலும் மறைத்து கொண்டு “என்ன மன்னிச்சிடு இதழ்மா.. ஒரு டாக்டரா இருந்துட்டு என்னோட நண்பன எவ்வளவு முயற்சி பண்ணியும் காப்பாத்த முடியல” என்று குரல் தோய்ந்து கூறியவனை, கண்டு விழியை விட்டு வெளி வந்த நீரை உள்ளிழுத்து

 

“விடுங்க சசி அண்ணா.. இப்போ மதி எப்படியிருக்காங்க எப்படியும் அவங்களுக்கு என்ன தெரியாது தான” 

 

“அவளோட ப்ரெண்ட்ஸ் ப்ரண்ட்ஸ் மட்டும் ஞாபகம் இருக்காங்க.. பூமி பத்தின நிகழ்வுகள் கூட அவளுக்கு இல்ல”

 

“ம்ம்..” என்று கூறியவளுக்கோ பூமியின் பிரிவை நினைத்து எந்த உணர்வுகளுமின்றி முகம் இறுகிவிட,

 

சசியோ “இந்த ஆக்சிடென்டுக்கு உன்னோட அப்பாக்கும் சம்மந்தம் இருக்கு இதழ்மா” என்று கூறியதை கேட்டு புரியாமல் விழி விரித்தவளிடம் ஆதி

 

“சசி சொல்லுறது உண்மை தான்.. மதி உன்னோட பழகுனதே உன்னோட அப்பா பத்தின நெகடிவ் பேஸ் கண்டுபிடிக்க தான்” கூறி அவர் சமந்தப்பட்ட கோப்புவை அவளிடம் கொடுத்தவன் “தன்ன பத்தி அவ கண்டுபிடிச்சிட்டான்னு கூட கொல்ல டிரை பண்ணியிருக்கலாம்” என்க,

 

தந்தை பற்றியதை கண்டவளுக்கோ அவரை நினைக்கவே அறுவெருக்க, இப்படியொரு கீழ்தனமான காரியத்தை செய்தவர் கண்டிப்பாக தன்னை பற்றி தெரிந்த மதியை கொல்ல முயற்சி செய்திருக்க மாட்டாரா என்று தோன்றினாலும் சற்று குழப்பத்துடன் “நீங்க சொல்லுறது ஓகே தான் அண்ணா.. இதுல எங்கயிருந்து பூமி வந்தான்.. அவன் மேல அப்பாக்கு என்ன பகையிருக்க போகுது..” 

 

“அது தான்டா.. புரியாதா புதிராயிருக்கு.. இதுல இன்னொரு விஷயம் என்னன்னா உன்னோட அப்பாவோட டார்கெட் இந்த ஆக்சிடென்ட் முடிஞ்சதும் நானா கூட இருக்கலாம்”

 

“உங்களுக்கு இதுல என்ன சம்பந்தம்” 

 

“ரெண்டு தடவ மகிய கொல்ல டிரை பண்ணாங்கடா.. நான் தான் ரெண்டு தடவையும் சேவ் பண்ணினேன் பட் மூணாவது தடவ தோத்து போயிட்டேன்” என்று கூறியவனின் குரல் தோய்ந்து பெண்ணவளை கொலை முயற்சி செய்த நிகழ்வை பகிர்ந்தவன்

 

“சோ எனக்கும் எதாவது தெரிஞ்சியிருக்கும்ன்னு பயந்து என்ன கூட டார்கெட் பண்ணலாம்”

 

“புரியுது அண்ணா.. இப்போ நான் உங்களுக்கு என்ன உதவி பண்ணனும்”

 

“உன்கைல இருக்கிற பைல்ஸ் டூப்ளிகேட் உன்னோட அக்கா கல்யாணத்து அன்னைக்கு தான் மகி ஒரிஜினல் பைல்ஸ் எடுத்தது மட்டுமில்லமா ஒரு சேப்டிக்காக இத ஒரு காபீஸ் எடுத்து வச்சியிருக்கா.. ஆக்சிடென்ட் நடந்ததும் அந்த ஒரிஜினல் பைல ஆக்சிடென்ட் பண்ணினவங்க எடுத்துட்டு போயிட்டானுங்க..

 

சோ இப்போ எனக்கு உன் அப்பாகிட்ட இருக்கிற ஒரிஜினல் பைல் வேணும்.. உன்னால மட்டும் தான் அத எடுக்க முடியும்”

 

“எனக்கு அப்பா எது எங்க வச்சிருப்பார்ன்னு சரியா தெரியாது.. இருந்தாலும் எடுக்க டிரை பண்றேன் அண்ணா.. கொஞ்சம் டைம் கொடுங்க”

 

“அப்புறம் இதழ்.. உன்னோட அப்பாகிட்ட இப்போதைக்கு அவரபத்தி தெரிஞ்ச விஷயத்த காட்டிக்காம நார்மலாவே நடந்துக்கோ

 

அதோட நான் உன்கிட்ட சொன்ன விஷயம் யாருக்கு தெரிய வேணாம்.. ஹர்ஷா மகி அப்புறம் என்னோட வீட்டுலன்னு எல்லார்கிட்டயும் நானும் மகியும் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணியிருக்கோம்ன்னு பொய் தான் சொல்லிருக்கேன்” என்று கூறி அவர்களிடம் கூறிய கதையை கூற, 

 

இதழோ “புரியுது அண்ணா.. நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்” என்று கூறியவளின் எண்ணமோ

 

அவன் ஹர்ஷாவின் பெயரை கூறியதில் அன்று அவன் வருந்தியதுக்கு, தான் அவனை தவறாக நினைத்துவிடுவேன் என்று எண்ணி அன்று பேசிய பிறகு தன்னை தவிர்ப்பதுக்கு காரணமும் இதுவாயிருக்கோமோ என்று தன்னவனை சரியாக பாவையவள் கணித்து கொண்டாள்.

 

பாவையவளின் முகம் பாவனையை புரிந்தவன் “இதழ் நீயும் ஹர்ஷாவும் லவ் பண்றீங்களா”

 

தன்னை சரியாக கவனித்து இப்படியொரு கேள்வியை கேட்பான் என்று எண்ணாமல் அதிர்ந்தாலும் அவனிடம் மறைக்க மனமின்றி உண்மையை கூறிவிடலாம் என்று நினைத்தவள் “லவ் பண்றானான்னு தெரியல அண்ணா.. ஆனா எனக்கு இப்போ ஆறுதலுக்கு அவன் தோல் சாயனும் போல இருக்கு.. பட் இதுக்கு என்ன பேருன்னு எனக்கு தெரியல.. அவர் என்னோட அக்கா கல்யாணத்துல ப்ரொபோஸ் பண்ணினார்..

 

அதுக்கு அப்புறம் ஒன் டைம் தான் பேசிக்கிட்டோம்.. அப்போ நான் மும்பை போறேன் சொன்னவரு ஏதோ என்னவிட்டு நிரந்தரமா போகிற போல ரொம்ப எமோஷனல் ஆயிட்டார்.. அதுக்கு அப்புறம் ஹர்ஷாவ பாக்கவே இல்ல..”

 

“இதுக்கான பெயரு என்னன்னு நான் சொல்லுறத விட நீயே ஃபீல் பண்ணனும்.. எவ்வளவு டைம் வேணும்ன்னாலும் எடுத்துக்க பட் ஹர்ஷா மாதிரி ஒரு நல்லவன மிஸ் பண்ணிடாத”

 

“ம்ம்.. பயமா இருக்கு அண்ணா.. எனக்கு நெருக்கமான எல்லாருமே என்னவிட்ட தூரம் போகிற போல ஃபீல் ஆகுது.. ஒருத்தர் மேல அட்டாசாகி அவங்க இல்லன்னா ரொம்ப வலிக்குமே அண்ணா அதுனால தான் ஹர்ஷு விஷயத்துல குழப்பமா இருக்கு இப்போ.. யோசிக்கிறேன்.. அதுக்குள்ள அப்பாக்கான தண்டனையும் கிடைக்கட்டும்”

 

“ஓகே இதழ்.. பூமி நமக்கு பெரிய இழப்பு தான் ஆனா அதையே நினைச்சி உன்ன வருதிக்காத.. எனக்கு உன்னோட சேஃப்டியும் ரொம்ப முக்கியம் சோ பைல் எடுக்கும் போது உன் அப்பாகிட்ட கவனமா இரு” என்று தங்கையை காக்கும் பொருட்டு அனைத்து அறிவுரைகளையும் கூறி முடித்தே பெண்ணவளுக்கு விடை கொடுத்தான்.

 

*****

 

புது இடம் புது ஆட்கள் என்று எல்லாரிடமும் பட்டும்படாமல் பேசிக்கொண்டிருந்தாலும் பெண்ணவளின் கண்களோ ஆடவனின் வரவுக்காக வாசலையே நோக்க, அருகிலிருந்த தாரா “என்ன மகி புருஷன விட்டு கொஞ்ச நேரம் கூட இருக்க முடியலயா என்ன.. பார்வ வாசல் பக்கமே அலைப்பாயுது”

 

“அப்படியில்ல.. மதியத்துலிருந்து அவர பாக்கவே இல்ல.. அதான் இன்னும் வரலயன்னு பாக்குறேன்” என்க 

 

தெய்வானையோ “வேலை விஷயமா போயிருப்பான்.. அவன் வரும் போது வரட்டும்.. நீ வா சாப்பிடலாம்”

 

“இல்ல அத்த.. இப்போ எனக்கு பசிக்கல.. அவர் வந்ததும் சேர்ந்து சாப்பிட்டுக்குறேன்” என்க 

 

தாராவோ “அத்த.. அவ அவங்க அவரோட தான் சாப்பிடுவா.. நம்ம கூட சாப்பிட்டா பசிக்காது போல.. வாங்க நம்ம சாப்பிடுவோம்” என்று நக்கலடித்துவிட்டு தெய்வானையை அழைத்து கொண்டு சாப்பிட செல்ல, 

 

மகியோ “என்னாச்சி இவருக்கு எங்க போனாருன்னு கூட ஒரு வார்த்த சொல்லவே இல்ல.. கால் பண்ணினா கூட எடுக்க மாட்டிக்கார் அப்படி என்ன பிஸியோ..” என்று புலம்பிவிட்டு அவளரைக்கு சென்றவள் டெல்லி கொண்டு வந்த உடைமைகள் அப்படியே இருப்பதை கண்டு, அதை எடுத்து அலமாரியில் அடுக்கி வைத்துவிட்டு கடிகாரத்தை பார்க்க, மணி பத்தை 

காட்டியது, இவ்வளவு நேரமாகியும் வரவில்லையே என்று அவனின் வரவுக்காக ஏங்கினாலும் அவன் வரும்வரை காத்திருக்கலாம் என்ற முடிவோடு அங்கிருந்த கதை புத்தகம் ஒன்றை எடுத்து படிக்க தொடங்கினாள்.

 

11 மணியளவில் வீட்டிற்கு வந்த ஆதிக்கோ, அவளின் எண்ணம் வந்தாலும் அவளிடம் சற்று விலகியே இருக்க வேன்டும் என்று எண்ணியவன் பெண்ணவள் இருக்கும் அறை காண அது திறந்திருப்பதிலே

 

இன்னும் தூங்காமல் தனக்காக தான் விழித்திருக்கிறாள் என்பதை அறிந்து, அவளுக்கு நினைவு வரும் வேலையில் அனைத்தும் மாறிவிடுமோ என்று நினைத்து வருத்தம் கொண்டவன், இதை இப்படியே விட கூடாதென்று கோவமாக பெண்ணவளை காண செல்ல, 

 

அப்போது அவனை வழிமறித்த தாராவோ “டேய் ஆதி.. கொஞ்சம் கூட அறிவேயில்லையா.. உன்ன நம்பி ஒருத்தி இருக்கா அது ஞாபகமிருக்கா..

 

மணி என்னாகுது உன் இஷ்டத்துக்கு வீட்டுக்கு வர அட்லீஸ்ட் போகும் போதாவது எங்க போன வர லேட்டாகும்ன்னு அவகிட்ட சொல்லிட்டு போக வேண்டி தான.. நீ வந்தா தான் சாப்பிடுவேன்னு உனக்காக எவ்வளவு நேரம் வெயிட் பண்றா தெரியுமா..”

 

“நானா வெயிட் பண்ண சொன்னேன்” 

 

“பைத்தியம் மாதிரி பேசாதடா.. அவளுக்கு நீ மட்டும் தான் வேணும்.. அது உனக்கே தெரியும் சோ இனி இப்படி பண்ணாம அவள புரிஞ்சிகிட்டு வேலைய கொஞ்சநாள் மூட்டக்கட்டி வச்சிட்டு அவக்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுடா..” என்று கூறியதை கேட்டு மேலும் கடுப்புடன் அவளை காண சென்றவன்

 

“இவ்வளவு நேரம் சாப்பிடாம என்ன பண்ணிட்டுருக்க” என்று கேட்க,

 

சுவாரசியமாக கதை படித்து கொண்டிருந்தவளோ, ஆடவன் சத்தம் கேட்டு புத்தகத்தை மூடி வைத்து எழுந்து “உங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. எங்க போனீங்க கால் பண்ணினா கூட எடுக்கல.. சரி விடுங்க ஃப்ரெஷ் ஆயிட்டு வாங்க சேந்து சாப்பிடலாம்”

 

“இங்க பாரு மகிழ்.. எனக்கு ஆயிரம் வேலை இருக்கும் எப்போவும் உன்னோட பின்னாடியே சுத்திகிட்டு இருக்க முடியாது.. இருக்கிற பிஸில சில நேரம் வெளிய கூட சாப்பிட்டு வந்திருவேன்.. சோ நீ எனக்காக வெயிட் பண்ண தேவையில்ல.. நான் ஊட்டியா தர போறேன்.. உனக்கு கையிருக்கு நீ சாப்பிட போற அதுக்கு நான் வந்தா தான் சாப்பிடுவேன்.. நான் வந்தா தான் தூங்குவேன்னு குழந்தை மாதிரி அடம்பிடிச்சு என்ன இரிட்டேட் பண்ணாத” என்று கத்த,

 

“நான் பண்றது உங்களுக்கு இரிட்டேட்டா இருக்கா” என்று கேட்டவளின் கண்களில் அவன் பேசியதை நினைத்து இரு சொட்டு கண்ணீர் வெளியே வந்தது 

 

“நான் சொன்னத கேட்டு நடந்துக்க திருப்பி.. என்ன கேள்வி கேட்காம போய் சாப்பிட்டு தூங்கு.. எனக்கு ஒரு வேலையிருக்கு பக்கத்து ரூம்ல தான் இருப்பேன்.. என்ன வேணும்னாலும் கூப்பிடு” என்று கூறி பக்கத்து அறைக்குள் சென்றான்.

 

அவன் கூறியதை கேட்டு தட்டில் தனக்கான உணவை எடுத்து அறைக்குள் அமர்ந்து ஒரு வாய் வைத்தவளுக்கு உணவு உள்ளே இறங்க மறுக்க,

 

ஒரு வாய்க்கு மேல் சாப்பிட முடியாமல் தட்டிலே கைகழுவிட்டு படுத்தவளுக்கு அவன் தன்னிடம் கடுமையாக பேசியது நினைவில் வர, உறங்க முடியாமல் தன் எண்ணத்தை மாற்றும் பொருட்டு பாதியில் நிறுத்திய கதை புத்தகத்தை எடுத்து படிக்க தொடங்கினாள்.

 

*****

 

அவளை திட்டியதை நினைத்து தன்னையே நொந்து மது குவளையுடன் அறையின் பால்கனியில் அமர்ந்து குடித்து கொண்டிருக்க, அப்போது உள்ளே நுழைந்த தாராவோ “ஆதி.. என்ன பண்ற.. பாட்டடில கீழ வை”

 

“பிளீஸ்டி முடியல.. ரொம்ப ஸ்ட்ரெஸா இருக்கு இன்னைக்கு ஒரு நாள் மட்டும்டி” என்று கூறி குடிப்பவனை தடுக்காமல் “இங்க பாரு ஆதி.. நீ பண்றது கொஞ்சமும் சரியில்ல.. யார்மேல உள்ள கோவத்த அவகிட்ட காட்டுற.. சொல்லு அவ பூமிய லவ் பண்ணினத உன்னால ஏத்துக்க முடியாம தான இப்படியெல்லாம் பண்ற..”

 

“பைத்தியமாடி நீ.. எனக்கு என்னோட மகிழ் மேல எந்த கோவமும் இல்ல ஏன் அவ பூமிய லவ் பண்ணியிருந்தா கூட எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல.. ஆனாலும் இப்போ என்ன முழுசா நம்புறா..

 

அவகிட்ட உண்மைய சொல்ல முடியாம குற்றயுணர்சில இருக்கேன்டி.. அது மட்டுமில்லாம அவகிட்டயிருந்து கிடைக்குற தீரா காதல் நினைவு வந்தப்புறம் எனக்கு கிடைக்குமான்னு நினைக்கும் போது ரொம்ப வலிக்குதுடி”

 

“கண்டிப்பா நினைவு வந்தாலும் உன்ன ஏத்துப்பா.. நீ என்கிட்ட சொன்னது தான் உன்னோட காதல் உண்மைன்னா கண்டிப்பா.. உன்னோட மகிழ உன்கிட்டயிருந்து யாரலையும் பிரிக்க முடியாது.. சோ இப்போதைக்கு பழச மறந்துட்டு அவகூட எப்படி வாழலாம்ன்னு யோசி.. 

 

அவளுக்கு பழசு ஞாபகம் வரும் போது என்ன நடக்குதுன்னு அப்புறம் பாக்கலாம்.. தேவையில்லாம அவள திட்டி ஹார்ட் பண்ணி உன்னையும் கஷ்டப்படுத்திக்காத.. இதுக்கப்புறம் நீ குடிக்கவே கூடாது.. மகிக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவா” என்று கூறி நண்பனை அணைத்து விடுவித்தவளோ “ஆதி.. எதையும் யோசிக்காம நிம்மதியா தூங்கு.. குட் நைட் டா” என்று அங்கிருந்து சென்றாள்.

 

அவள் சென்றதும், அதற்கு மேல் குடிக்க முடியாமல் மதுகுவளையை ஓரமாக வைத்துவிட்டு மகியை காண வந்தவன் அவள் சாப்பிடாமல் தட்டிலே கை கழுவிருப்பதை கண்டு ‘ச்ச என்னால அவ சாப்பிடாமலே தூங்கிட்டா போல.. சாரி மகிழ்.. உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்’ என்று தனக்குள் கூறிவிட்டு குளியல் அறைக்குள் சென்று தன்னை சுத்தப்படுத்தி இரவு உடையில் வெளியே வந்தவன், தூங்கும் பெண்ணவளின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அவளை தன் மார்பில் இழுத்து போட்டு அவளின் தலையை கோதியவாறே உறங்கினான்.

 

தன்னவன் அருகில் இல்லாமல் தூக்கம் வர மறுத்ததில் கதை படித்து கொண்டிருந்தவள்,

 

ஆதியின் வருகை உணர்ந்து தூங்குவது போல் நடித்து, கண்கள் மூடியே அவன் அணைப்பை உணர்ந்தவள் ‘நான் இல்லாம உங்களாலையும் தான் இருக்க முடியல.. பின்ன எதுக்கு அப்படி பேசணும்..’ என்று தனக்குள் இதழ் சுழித்தவளோ,

 

அவன் உறங்கி விட்டதை உறுதி செய்து, அவன் மார்பில் இதழ்பதித்து “லவ் யூ தீரா” என்று கூறியவள், ஆடவன் கதகதப்பிலே நிம்மதியாக உறங்கி போனாள்.

 

             தேடல் தொடரும்...

 

இப்படிக்கு,

VSV42😍😍

 


   
ReplyQuote

You cannot copy content of this page