About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
நைட் லைஃப் - 36
சிதம்பரத்தின் வீட்டு வாசலில் ஒட்டு மொத்த கட்சி ஆட்களும் தொண்டர்களும் கூடியிருந்தார்கள். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வீடு முழுவது கட்சி ஆட்கள் நிறைந்திருக்க, உள்ளே ஆட்கள் சோகத்தின் மறு உருவமாய் அமர்ந்திருந்தார்கள். மேலே சிதம்பரத்தின் அறை வாசலில் ஒரு சிலர் அழுது கொண்டிருந்தார்கள். மெத்தையின் அருகே அமர்ந்திருந்த ரோகன் சிதம்பரத்தின் ரத்தஓட்டம் இல்லாத கையை பற்றிக் கொண்டு இமைக்காமல் அவரையே பார்த்தான். மற்றவர்கள் முன்பு உடைந்து அழுக கூடாது என்ற எண்ணம் அவனுக்கு. சிதம்பரத்தின் இறப்பு செய்தி தான் ஊர் முழுதும் பேச்சு. அவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்க அரசு விடுமுறை விடப்பட்டது. அனைத்து ஊடங்கங்களிலும் சிதம்பரம் செய்த அருமை பெருமை அனைத்தும் போட்டு காட்டினார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் பல்வேறு தொகுதிகளில் இருந்து அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொள்ள ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்தார்கள். யாருமே எதிர்பார்க்காத மரணம். பல்வேறு கட்சியினரும், பிரதம மந்திரி முதற்கொண்டு அவருக்கு இரங்கல் தெரிவித்தார்கள்.
திரும்ப எழவே முடியாத நித்திரையில் படுத்திருந்த சிதம்பரத்தையே ரோகன் வெறித்துக் கொண்டிருக்க, சிதம்பரத்தின் பி.ஏ அந்த அறை உள்ளே நுழைந்தார். “சார்.. ஐஸ் பாக்ஸ் வந்துருச்சு.. ஐயாவ நம்ம வீட்டுலையே பொது மக்கள் அஞ்சலி செலுத்த வைக்கலாமா இல்ல வேற ஏற்பாடு பண்ணவா?” என தயக்கத்துடனே கேட்டார். மூக்கை உருஞ்சியவன், “வீட்டுல சரிபட்டு வராது.. வழக்கமா என்ன ஏற்பாடு பன்னுவிங்களோ பண்ணுங்க” என்றிட, அந்த நேரம் அறை உள்ளே ஒரு மருத்துவர் நுழைந்தார். அவரை கண்டதும் ரோகன் எழுந்து நிற்க அவனிடம் கோப்பு ஒன்றை கொடுத்தார்.
மருத்துவர், “இது அவரோட டெத் சர்டிபிகேட்.. கார்டியாக் அர்ரெஸ்ட்னால இறந்துட்டாரு” என்றிட அதனை அமைதியாய் வாங்கிக் கொண்டான் ரோகன். “எல்லாரும் இங்க இருந்து வெளிய போங்க.. நான் அப்பா கூட தனியா இருக்கணும்” என்றிட ஒருவர் பின் ஒருவராக அங்கிருந்து கிளம்பினார்கள். ரோகன் சிறுவயதிலே தாயை இழந்து விட்டான். அதன் பின் சிதம்பரம் வேறு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளவில்லை. ஆயிரம் தவறுகள் அவர் செய்தாலும் அவரின் தேவைக்காக இன்னொரு பெண்ணை நாடியதே இல்லை. அந்த அளவிற்கு அவர் மனைவி மீது காதல். தாயை தேடும் பிள்ளையிடம் பணத்தையும் விளையாட்டு பொருளையும் காட்டி திசைதிருப்புவார். வளர வளர தந்தை மட்டும் தான் தமக்கு என்று புரிந்துக் கொண்டவன் அவர் பேச்சை மீறா பிள்ளை ஆனான். இப்பொழுது அவரும் இல்லாமல் அனாதையாக நின்றான். சிதம்பரத்திற்கு அருகே வந்த ரோகன் அவரின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, “சாரி பா.. என்ன மன்னிச்சிடுங்க” என கூறி வெடித்து அழுக ஆரம்பித்தான். அவரின் தோளில் முகத்தை புதைத்தவன் இன்னும் அழுதான். ஐந்து நிமிடம் அழுதவன், கண்ணீரை துடைத்துக் கொண்டு அவர் காதில், “சாரி பா.. எனக்கு வேற வழி தெரியலை.. எனக்கு என் உயிர் முக்கியம் பா.. உங்களை மட்டும் நான் கொல்லாம விட்டு இருந்தா இந்நேரம் நானும் நம்ம கட்சியும் இருந்து இருக்காது” என்று கூறி அழுதான்.
ஆம் நன்றாய் இருந்த மனிதரை கொன்றது அவனே.. நேற்று இரவு துறைமுகத்தில் வேலையாக இருந்த ரோகனுக்கு ஒரு அழைப்பு வந்தது. கிங் ஆட்களிடம் இருந்து வர உடனே ஓரம் சென்று அழைப்பை ஏற்று பேசினான்.
“ஏற்கனவே ட்ரக் மாட்டிக்கிட்ட விஷயத்துல கிங் ரொம்ப கோவமா இருக்காரு இந்த முறை எல்லாம் ஒழுங்கா நடக்கணும்” என ஒருவன் மிரட்ட, உடனே ரோகன், “கண்டிப்பா இந்த முறை எல்லாம் சரியா நடக்கும், நான் எல்லாத்தையும் பக்காவா பண்ணிட்டேன்” என்று அவனுக்கு புரியும் விதத்தில் ஆங்கிலத்தில் பேசினான்.
“நாளக்கி கப்பல் அங்க இருந்து கிளம்ப போது.. பாடர் சரியா கிராஸ் ஆகணும்.. இப்போ இருக்குற சூழல்ல ரொம்ப சிக்கல்.. அதனால நீ என்ன பன்றன்னா உன் அப்பாவ கொன்னுடு” என சர்வ சாதாரணமாய் கூறிட ரோகன் அதிர்ச்சியில் உறைந்தான். போனை எடுத்து பார்த்தவனுக்கு சரியாக தான் காதில் விழுந்ததா என்ற சந்தேகம் எழுந்தது.
“சொன்னது கேட்டுச்சா இல்லையா? உன் அப்பாவை கொன்னுடு” என மீண்டும் அவன் அழுத்தமாய் கூறிட, எச்சிலை கூட்டி விழுங்கியவன், “அது எப்படி.. நான் பத்திரமா கப்பலை பாடர் தாண்ட வைக்குறேன்.. என் அப்பாவை கொல்ல முடியாது” என்று தயங்கினான்.
“சொல்றதை மட்டும் கேக்கல அப்பறம் உன்னையும் சேர்த்து நானே கொன்னுடுவேன்.. பாடர்ல செக்கிங் அதிகமா இருக்குன்னு எங்களுக்கு தகவல் வந்திருக்கு, அதுவும் குறிப்பா சென்னை பாடர்ல தான்.. சோ ஒழுங்கு மரியாதையா உன் அப்பாவை கொல்லு.. அப்போதான் கவனம் எல்லாம் அவரு மேல இருக்கும்.. திரும்ப திரும்ப இதையே சொல்ல வைக்காத” என காட்டு கத்தலாக கத்தினான்.
“அது இல்ல.. அவரை எப்படி நானே கொல்றது?” என மீண்டும் தயங்கினான். அவனின் உலகமே சிதம்பரம் தான் அப்படியிருக்கையில் எப்படி அவரையே அவன் கொல்லுவான்?
“சரி நீ கொல்லாத உன்னையும் சேர்த்து கொல்ல நான் ஆளு அனுப்புறேன்.. அது மட்டும் இல்ல உன்னோட ஒட்டு மொத்த கட்சியும் நாளைக்கு காலையில இருக்காது.. நீங்க குடும்பமா பண்ண எல்லா பிராட் வேலைய பத்தியும் நாங்களே சிபிஐக்கு அனுப்பி வைப்போம்.. ஊரே உங்களை வெறுத்துறம்.. உனக்கு ரெண்டே ஆப்சன் ஒன்னு உன் அப்பாவை கொல்லு இல்ல உன் அப்பா கூட சேர்ந்து நீயும் சாவு... நான் சொன்னதை செஞ்சா உன் அப்பா சொத்து மொத்தமா நீயே எடுத்துக்கலாம்.. அதுக்கு அப்பரம் நீ இந்த வேலை பண்ணாலும் சரி பன்னலனாலும் சரி நான் உன்ன தொந்தரவு பண்ண மாட்டேன்.. ஆனா கிங் சொல்றதை கேக்கல இன்னிக்கு தான் உனக்கு கடைசி நாள்” என்று கூறி அழைப்பை துண்டிக்க ரோகன் அதே இடத்தில் சிலையாக நின்றான்.
இப்பொழுது என்ன செய்வது என்று அவனுக்கு தெரியவில்லை. ஒரு பக்கம் அவனின் உயிர் இன்னொரு பக்கம் அவன் தந்தையின் உயிர். நிச்சயம் இந்த வயதிலே அவனுக்கு சாகும் விருப்பம் இல்லை. இக்கட்டான சூழ்நிலையில் அவன் மனம் சுயநலமாய் முடிவெடுத்தது. உடனே காரில் ஏறி வீட்டிற்கு கிலம்பியவன், அழுதபடியே வண்டியை ஓட்டினான். “சாரி அப்பா எனக்கு வேற வழி தெரியலை.. என்ன மன்னிச்சிடுங்க” என அவனுக்குள்ளே சொல்லிக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.
நள்ளிரவு தாண்டிய வேலை என்பதனால் சிதம்பரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். மெல்ல அவர் அறை கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றவன், பயத்துடனே அவரை பார்த்தான். பெற்ற தந்தையை தன் கையாலே கொள்ள வேண்டுமா என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும், அவரை கொள்ளலாமல் விட்டாள் தானும் சேர்ந்து சாக வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை நோக்கி குனிந்தான். கண்ணை மூடி திறந்தவன் தன்னை ஒரு நிலைபடுத்திக் கொண்டு, தலையணை ஒன்றை எடுத்து சிதம்பரத்தின் மூக்கிலே வைத்து அழுத்தினான். அடுத்த நொடி சிதம்பரம் மூச்சு காற்றுக்காய் தவிக்க கை கால்களை மிக வேகமாய் அசைத்தபடியே கண்ணை திறந்தார். ரோகன் விடவே இல்லை. அழுத்தமாய் தலையணையை அவர் முகத்தில் வைத்து அழுத்தினான். தலையை சிலுப்பிய சிதம்பரம் மூச்சு காற்றுக்கு ஏங்க, ரோகன் தான் இப்படி செய்வதை கண்டு அதிர்ந்தார். தன்னை அவர் பார்த்து விட்டாரே என்று பயத்தில் இன்னும் ரோகன் அழுத்த கொஞ்சம் கொஞ்சமாய் சிதம்பரத்தின் மூச்சு அடங்க துவங்கியது. கால்கள் அசைவது நிற்க ரோகன் இன்னும் அழுத்துவதை விடவே இல்லை. ஒட்டு மொத்தமாய் அவரின் மூச்சு அடிங்கிய பின்பு தான் அவரை பார்த்தான். தலையணையை இருந்த இடத்தில் வைத்து விட்டு மூச்சு இருக்கிறதா என்று சோதித்து பார்த்தான். அவர் இறந்ததை உறுதிபடுத்தியவனுக்கு கண்களில் கண்ணீர் திரண்டது.
அவர் நெற்றி மீது அவனின் நெற்றி வைத்து அழுதவன், “சாரி பா எனக்கு வேற வழி தெரியலை.. என்னையும் கொன்னுடுவேன்னு மிரட்டுனாங்க பா.. நீ வாழ்ந்துட்ட.. நான் இனிமேல் தான் வாழனும்.. எனக்காக என்ன வேண்ணாலும் பண்ணுவேன்னு சொல்லுவிங்கல.. எனக்காக செத்ததுக்கு தேங்க்ஸ் அப்பா.. அம்மா கூட பத்திரமா இருங்க..” என்று கூறி அவர் தோளிலே அழுதான்.
கண்ணீரை துடைத்துக் கொண்டவன், “லவ் யூ பா.. என்ன மன்னிச்சிடுங்க” என்று கூறி அவன் அறைக்கு வந்தபோது மெத்தை எப்படி இருந்ததோ அப்படியே ஒழுங்குபடுத்தினான். சத்தமில்லாமல் அவனறைக்கு சென்றவன், கிங்க்கு மெசேஜ் அனுப்பினான். விடியற் காலையில் அவனே அவன் தந்தை மாரடைப்பால் இறந்து விட்டார் என்று கூறி மருத்துவரிடம் பணத்தை கொடுத்து இறப்பு சான்றிதழும் வாங்கிக் கொண்டான். மேற்கொண்டு யாரையும் விசாரணை செய்ய விடவில்லை.
சிதம்பரத்தின் உடலை ஐஸ் பெட்டியில் வைப்பதை பார்த்தபடியே இரவு நடந்ததை நினைத்து பார்த்துக் கொண்டிருந்தான். பொதுமக்கள் பார்வைக்காக வேறு ஒரு அரங்கிற்கு கொண்டு செல்ல, அமைதியாய் அவர்களுடன் சென்றான்.
இடம் கிங் ட்ரைனிங்
பாக்சிங் ரிங்கில் கருப்பு நிற ஷார்ட்ஸ் மட்டும் அணிந்திருந்த கிங் அவனெதிரே இருப்பவனுடன் குத்து சண்டை போட்டுக்கொண்டிருந்தான். எதிராளிக்கு அடி சரமாரியாக விழ, கிங்கின் அடியாள் ஒருவன் அவனை அழைத்ததனால் எதிரே இருந்தவனுக்கு உயிர் தப்பியது. “கிங், சிதம்பரம் செத்துட்டாரு, நீங்க நினைச்ச மாதிரியே கப்பல் பாடர் கிராஸ் பண்ணிடுச்சு” என தாய் பாசையில் ஒருவன் கூறிட சத்தமாக சிரித்தான் கிங். அவன் நினைத்ததை சாதித்ததில் கர்வம் தலைக்கேறியது. மகிழ்ச்சியில் கிளவுஸ்சை கழட்டி விட்டு ரிங்கை விட்டு வெளியேறினான்.
சுல்லென்று முகத்தில் வெயில்பட முகத்தை சுறுக்கியபடியே கண் விழித்தாள் யுகித்தா. சுற்றி முற்றி பார்க்க அவள் அருகில் ஆருத்ரா மட்டும் தான் இருந்தாள். ஏதோ ஒரு அறையில் இருப்பது தான் அவளுக்கு புரிந்தது. ஆருத்ராவை எழுப்ப தலையை பிடித்துக் கொண்டே எழுந்தமர்ந்தாள். “எங்க டி இருக்கோம்..” என சோர்ந்த குரலில் கேட்க யுகி தோளை குலுக்கினாள். அவளுக்குமே எங்கு இருக்கிறோம் என்று தெரியவில்லை. “ஆரு அங்க ஒரு ஜென்ன்னல் இருக்கு பாரேன்” என கைகாட்ட, “சூப்பர் உடனே அது வழியா எகிறி குதிச்சி வெளிய தப்பிச்சி போலாம்.. ஆளுங்க யாராவது இருக்காங்களான்னு பாரு” என ஆருத்ரா ஐடியா கொடுக்க யுகியும் உடனே எழுந்து சென்று பார்த்தாள். கடத்திட்டு வந்தவர்கள் கைகால்களை கட்டாமல் இருப்பதை யோசிக்க மறந்தார்கள்.
யுகி ஜென்னல் வழியே எட்டி பார்க்க அதிர்ச்சியில் உறைந்தாள். வாயை பிளந்துக் கொண்டு பார்க்க, “என்ன டி நெறையா பேரு இருக்காங்களா?” என கேள்வியாக கேட்டாள்.
“ஒருத்தனும் இல்ல”
“சூப்பர் அப்போ வா ஓடிடலாம்” என ஆர்வமாக ஆருத்ரா கூற, “ஓட முடியாது நீந்தி தான் போனும்” என திகைப்புடனே யுகி சொல்ல, குழப்பத்துடன் ஜென்னல் வெளியே எட்டி பார்த்த ஆரு அதிர்ந்தாள். இருவரும் மிகப்பெரிய கப்பலில் நடுகடலில் இருப்பதை அப்பொழுது தான் உணர்ந்தார்கள்.
கருத்து திரி:
Latest Post: நேசம் 15 Our newest member: P.Paramu Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page