All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

பாரிஜாத மலர் என் கை சேருமா?-53

 

VSV 30 – பாரிஜாத மலர் என் கை சேருமா?
(@vsv30)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 54
Topic starter  

 

அத்தியாயம்: 53 (இறுதி அத்தியாயம்)

 

பைரவ் ஆரபியை தூக்கி கொண்டு வந்த இடம் வசந்த மண்டபம் ஆரபி கண்கள் விரிய அதை சந்தோஷமாக பார்த்தவள் “சாம்ராட் இது என்ன இடம்?... என கேட்டாள். 

 

பைரவ் அவளை அங்கே இருந்த ஊஞ்சலில் அமர வைத்தவன் அவனும் அவள் அருகில் அமர்ந்தவன்…

 

பைரவ் “ இது வசந்த மண்டபம் என் அம்மேக்கு மட்டுமல்ல எனக்கும் பிடித்த இடம்…இங்கே தான் கலைகள் சங்கமிக்கும் என் ரூம்மை விட நான் மனசார சிரிப்பது ஏன் மூச்சு விடுவது கூட இங்கே தான்….

 

அம்மேக்கு பிறகு நீ தான் இங்கே வந்த முதல் பெண்குட்டி…ஆரணிக்கு இங்கே வர சந்தர்ப்பம் கிடைக்கவில்லை ரூபி நாங்க கிட்ட தட்ட வாழ்ந்தது மூன்று மாதம் தான். 

 

காதலித்தது ஒரு வருடம் கல்யாணம் பண்ணி வாழ ஒரு வருடம்…உண்மையை சொன்னால் அவள் கூட சந்தோஷமான நிகழ்வுகள் என்று பெரிதும் நினைவு இல்லை…ரொம்ப மென்மை அவள்  உன்னை போல தான் உதவும் குணம்…

 

உன்னை பார்க்க முன்னே நான் கேட்டது உன் குரலை தான் காருண்யம் நிரம்பி வழிந்த குரல். 

 

ஆக்சிடென்ட்க்கு பிறகு லண்டனை விட்டு நகராது நான் என்னை அசைத்த குரலுக்குரியவளை பார்க்க ஓடி வந்தேன்…அந்த குரல் கர்த்தரை நோக்கி மதுர கானம் பாடி கொண்டு இருந்தது…உன் உருவம் பார்க்க ஆசைபட்டேன் அதை விட உன் காருண்யத்தை கண்டேன். 

 

அது தான் நீ வளர்ந்த ஹோம் என்பதால் நீ கேட்காமல் எல்லாம் செய்தேன்…ஆரா போனதற்க்கு பிறகு பெண்களை மட்டுமல்ல விவாகத்தை வெறுத்த நான் என் மக்களுக்கா என சொல்லி உன்னை விவாகம் செய்தேன்…

 

பட்சே சத்தியம் அது இல்லா என் உள்ளே இருந்த பிரேமம் தான் உன்னை விவாகம் பண்ண சொல்லி இருக்கு போல…

 

இல்லா என்றால் நான் பைரவ் சாம்ராட் ரகுநந்தன்… இந்த பிரஷ்னங்களை தீர்க்க வேற வழியா இல்லா…ஞான் இப்போ இப்படி கேட்பது கூட தப்பு தான் நீ என்னை ஏற்று கொள்வாயா?...

 

ரூபி என் மேலே பிரேமம் கொள்வாயா?...என கேட்டான்…ஆரபி அழகாக சிரித்தவள் பைரவ் கழுத்தில் பூமாலை என தன் கைகளை கோர்த்தவள்…அவன் கண்களை பார்த்து கொண்டே 

 

உன்னாலே கண்கள் 

தள்ளாடி உறக்காமல் 

எங்கும் என் ஆவி… பாடினாள். 

 

என பாட ஆரம்பித்தாள் பைரவ் எழுந்தவன் ஊஞ்சலை மெல்ல ஆட்டி விட்டவன்…

 

நீராவியாய் என்னை 

நீ மோதினாய் உன் 

பார்வையில் ஈரம் 

உண்டாக்கினாய்….என பாடினான். 

 

ஆரபி அவனை கை நீட்டி அழைத்தவள்…

 

நீ தொட தொட நானும் 

பூவாய் மலர்ந்தேன் 

நான் என் பெண்மையின் 

வாசம் உணர்ந்தேன்…என பாடினாள். 

 

பைரவ் அவள் அருகில் வந்தவன் அவளை தூக்கி கொண்டவன்…

 

நீ அருகில் வர வர 

ஆவல் அறிந்தேன் 

நான் என் ஆண்மையின் 

காவல் துறந்தேன்…. என பாடினான். 

 

ஆரபி அவன் தோள் சாய்ந்தவள்…

 

முன் ஜென்மம் எல்லாம்

பொய் என்று நினைத்தேன் 

உன் கண்ணை பார்த்தேன் 

மெய் தானடா…என பாடினாள். 

 

 

பைரவ் அவளை தூக்கி கொண்டவன்…அவளை நெற்றியில் முட்டியவன். 

 

உருவங்கள் எல்லாம் 

உடல் விட்டு போகும் 

உள்ளத்தின் காதல் சாகாதடி…என பாடினான். 

 

ஆரபி அவன் தலையை கோதி விட்டவள்…

 

உன்னாலே கண்கள் 

தள்ளாடி… என பாட..

 

உறங்காமல் எங்கும் 

என் ஆவி…என பாடினான் பைரவ்.

 

பைரவ் ஆரபியை தூக்கி கொண்டு அங்கே படுக்கை போல உள்ள திவான் சோபாவில் படுக்க வைத்தவன்…அவள் நெற்றியில் முத்தம் வைத்தவன். 

 

ஏதோ ஒன்றை நான் 

உன்னில் கண்டேன் 

எரியும் தீயை நான் 

என்னில் கண்டேன்….என பாடினான்….ஆரபி அவன் மார்பிலே சாய்ந்தவள். 

 

உயிரின் உயிராய் 

உன்னை கண்டேன் 

என்னை அள்ளி உன் கையில் தந்தேன்…என பாடினாள்.

 

 

 

பைரவ் அவள் செவ்விதழ்களை மென்மையாக தடவி அதில் தன் முதல் முத்தத்தை பதித்தான். 

 

காதல் கொண்டு 

கண்கள் கெஞ்ச அடி 

கை மீறி உயிர் ஓடுதே….என பாடினான்…

 

 

ஆரபி அவன் கன்னத்தில் தன் முதல் முத்தத்தை பதித்தவள்….அவள் அருகில் உள்ள குளத்து நீரை மெல்ல வாரி அவன் மேலே தெளித்தவள்…

 

முழுதாய் நிலவு நம்மை 

பார்க்க காற்றில் எங்கும் 

அது மாயம் சேர்க்க 

கைகள் கோர்த்து நீ வெப்பம் 

சேர்க்க வெட்கம் தாண்டி 

நான் என்னை தோற்க…என பாடினாள். 

 

பைரவ் அவள் கழுத்து வளைவில் முத்தம் வைத்தவன்…

 

மரணம் தாண்டி வாழும் 

காதல் உன் விழியோரம் 

நான் காண்கிறேன்…என பாடினான்..

 

 

ஆரபி அவன் சட்டை காலரை பிடித்து தன்னை நோக்கி இழுத்தாள்….

 

நீராவியாய் என்னை நீ 

மோதினாய் உன் பார்வையில்

ஈரம் உண்டாக்கினாய்…என இருவருமே பாட்டை நிறைவு செய்தார்கள்…

 

 

பைரவ் ஆரபியை தூக்கி தன் மேலே தூக்கி போட்டு கொண்டவன்…அவள் மூக்கில் முத்தம் வைத்தவன். 

 

 

பைரவ் “ உண்மையை சொல்ல வேணும் என்றால்…இன்று என் மனசு மட்டுமல்ல என் உடலும் என் வசம் இல்லை ரூபி…அது உன்னிடம் தஞ்சம் அடைந்து விட்டது பட்சே உன் மனசில் என்ன இருக்கு என தெரியாமல்…என்னால் உன்னை தொட முடியாது அதை விட உன் உடல், மனநிலை எனக்கு முக்கியம்…

 

இந்த இடம் எனக்கு பிடித்த இடம் இங்கே என்னை தவிர யாருமே வர மாட்டாங்க என்பதை விட…நான் வர விடுவது இல்லை அப்படிப்பட்ட ஒரு ஸ்பெஷல் இடம் இது…யஸ் இங்கே என் அம்மே, அச்சன் வாசம் மட்டுமல்ல ஆசியும் இருக்கு…இங்கே தான் நம்ம வாழ்க்கையை தொடங்க வேணும் என நினைத்தேன் “...என்றான். 

 

அவன் மார்பில் இருந்த தலையை உயர்த்தி அவனை மோகனமாக பார்த்தவள்….

 

 

ஆரபி “ கொடுக்க எனக்கு தடையில்லை எடுக்க உங்களுக்கு தடை ஏதும் இருக்கிறதா?...என்ற ஒற்றை கோள்வியை எழுப்பினாள்…தன் மேலே இருந்த அவளை கீழே போட்டவன் அவள் மேலே தன் மொத்த பாரத்தையும் அழுத்தாது…

 

 

பைரவ் “ இந்த பாரிஜாத மலர் என் கை சேர வேணும் என்ற விதி இருந்தால் அதை யாராலும் மாற்ற முடியாது…இந்த பிரின்ஸ் பைரவ் சாம்ராட்டின் பாரிஜாத மலர் நீயடி இப்போ என் கைபட்டு மலர போகிற"…என்றவன்.

 

 

அவள் நெற்றியில் இருந்து அவள் உடல் முழுவதும் தன் முத்தத்தை பதித்து வந்தான்…அவன் கால் பிடித்து மெதுவாக அதை தன் நெஞ்சில் வைக்க காலில் உள்ள காயம் அழுத்தியதால் ஸ்’ என்றாள் ஆரபி…

பைரவ் அந்த காலில் தன் முத்தத்தை பதித்தவன்…மெல்ல மெல்ல அவள் புடவையை மேலே தள்ள ஆரபி ம்” என்ற குரலோடு தன் காலை உள்ளே இழுத்தாள்…பைரவ் மெல்ல மேலே வந்தவன் அவள் புடவை விலக்கி அவள் நாபியை சுற்றி தன் உதட்டால் கோலம் போட்டான்…

 

 

ஆரபி அவன் இன்ப தாக்குதல் தாங்க முடியாமல் திவான் சோபாவில் தன் கைகளை இறுக்க பற்றினாள். 

 

 

அடுத்து பைரவ் அவள் மார்பில் தொங்கி கொண்டு இருந்த தாலியில்… மென் முத்தம் ஒன்றை வைத்தான் ஆரபி சட்டென திரும்பி கொள்ள அவள் முதுகில் முத்தம் வந்தவன்…

 

 

அவள் பிளவுஸ் முடிச்சை பற்களால் கழட்டியவன் அவளை திரும்பி அவள் புடவைக்கு விடுதலை கொடுத்தவன்… அது போல அவன் குர்தாவுக்கும் விடுதலை கொடுத்தான்…

 

 

அவள் மேலே தன் மொத்த பாரத்தையும் போடாது அவளை ஆட் கொள்ள ஆரம்பித்தான்….அவர்கள் இருவரின் மீதி உடைகளும் விடை பெற்றதது..பைரவ் பெண் பற்றி அறிந்தவன் ஆரபி  ஆண் பற்றி அறியாதவள்…

 

 

அவளுக்கு அவன் புது உலகை காட்டி கொண்டு இருக்க அதி்ல் அவள் சுகமாக தொலைந்து போனாள்…

விடியும் வரை அவளை விடாது ஆட் கொண்டு இருந்தவன் அவளை தூங்க விடும் போது காலை நான்கு மணி…உலகம் விழிக்கையில் காதலர்கள் தூங்கி போனார்கள் அது போல தான் யுவராஜ், ராதிகாவும்… 

 

 

இரு ஜோடிகளும் தங்கள் உலகத்தை விட்டு எழும் போது மதியம் தாண்டி விட்டது….அங்கே யாருமே அவர்களை தேடவில்லை மதியம் தான் சாப்பிட வந்தார்கள். 

 

 

ஆரபி, ராதிகா, முகத்தின் உள்ள வெட்கம் கலந்த சிவப்பு மீனாட்சி, கார்த்திகாவுக்கு சந்தோஷமாக இருந்தது…ஹோம் பசங்களை பைரவ், ராதிகா, யுவராஜ், ராதிகா சேர்ந்து கேரளாவை சுற்றி காட்டினார்கள்…

 

 

அவர்கள் கூட ராதிகா குடும்பம் நயனா, நிவி இணைய பிரணவ், முகேஷ்ம் தங்களும் வருவதாக சொன்னார்கள்…

 

அவர்கள் ஒரு வாரம் சந்தோஷமாக இருந்து விட்டு ஊருக்கு மகிழ்ச்சியாக கிளம்பி போனார்கள்…மறு வீட்டுக்கு கட்டாயமாக சென்னை, மதுரைக்கு வர வேணும் என்று அன்பு கட்டளையோடு…

 

 

அடுத்த வாரம் யுவராஜ்க்கு தம்புரான் பட்டம் தேவன் கட்டினார்…அதன் பிறகு அவன், ராதிகா மட்டுமல்ல கார்த்திகாவும் தன் கூட இருக்க வேணும் என்ற அன்பு கட்டளை போட்டார்…

 

 

அது நியாயமும் கூட என்பதால் பைரவ்வால் மறுக்க முடியவில்லை இருந்தாலும் யுவராஜ், கார்த்திகா பிரிவை அவனால் தாங்க முடியவில்லை…யுவராஜ் அவன் நிழல் யுவராஜ்க்கும் அது போல தான் ஆரபி, ராதிகா அழுதார்கள்.

 

 

கடைசியில் பெரியவர்கள் சேர்ந்து தான் கேரளாவில் தானே அனைவருமே இருக்க போகிறோம் என அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்கள்…

 

 

அவந்தி, பூஜாவை பிரணவ், முகேஷை விவாகம் பண்ண சொல்ல அவர்கள் நேரடியாக மறுத்து விட்டார்கள்…

 

 

அந்த எண்ணத்தில் அவர்களை பார்க்கவில்லை என்று…ரவிவர்மன் வற்புறுத்தாது அவந்தி, பூஜாவுக்கு மட்டுமல்ல அஜந்தாவுக்கும்…. வேற கொட்டாரத்தில் விவாகம் பண்ணி அவர்களை புகுந்த வீட்டுக்கு அனுப்பி விட்டார்…

 

நிலா அவள் மேல் படிப்பு படிக்க போகிறேன் என சொல்லி விட்டாள்…பிரணவ், முகேஷ்க்கு நயனா, நிவியை கேட்டுவர மறுக்க எந்த காரணமும் இல்லை என்பதால் சந்தோஷமாக சம்மதம் சொன்னார் ரவிவர்மன்…

 

 

அவர்கள் விவாகம் காலாகாலமாக நடை பெற்றது அது போல மலை கிராமத்துக்கு காவலை அதிகப்படுத்தி அவர்களை சுதந்திரமாக வழி செய்து விட்டான் பைரவ்…

தன் லண்டன் பிசினஸை ஒரு ஆறுமாதம் காலம் அங்கே இருந்து பார்த்து விட்டு வருவதாகவும்…இங்கே உள்ள பிசினஸை எல்லாம் இனி விஜயன், அருள் பார்த்து கொள்ளட்டும் என்று அவர்களை கெளரவபடுத்தி விட்டவன்…

 

 

பல்லவியை மாதவன் கூட இனி இருக்க வேணும் அவரை தனியாக இருக்க விட கூடாது என்று அவள் புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தான்…

 

 

ரவிவர்மன் அதற்க்கு மறுப்பு சொல்லவில்லை என்பதை விட இதற்க்கு ஆதரவு அளிக்க...பல்லவிக்கும் மாதவன் மேலே சந்தேகம் இருந்தால் அவர் கூட கிளம்பி விட்டாள். 

 

 

தன் தந்தையின் ஆசை, கடமையை எல்லாம் நிறைவேற்றி விட்டவன்…. தன் பாரிஜாத மலர் கை சேர அவள் கூட தன் லண்டன் பயணத்தை இனிதாக தொடங்கி விட்டான்…விரைவில் பாரிஜாத மலர் மணம் பரப்புவாள் அவன் வாழ்க்கையில்….

 

பாரிஜாத மலர் நிறைவு பெற்றது….

This topic was modified 1 week ago by VSV 30 – பாரிஜாத மலர் என் கை சேருமா?

   
ReplyQuote

You cannot copy content of this page