All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தீரா காதலின் தேடல்..? , தேடல் - 18.

 

VSV 42 – தீரா காதலின் தேடல்
(@vsv42)
Estimable Member Author
Joined: 8 months ago
Posts: 43
Topic starter  

 

தேடல் - 18

 

மறுநாள் சென்று தன்னவள் மற்றும் நண்பனின் திறன்பேசியை வாங்கி வந்து, முதலில் இருவரின் அழைப்பு வரலாற்றை நோட்டமிட்டவனின் கண்களில் இதழிகாவின் எண் பட, 

 

“இதழ்.. இவளுக்கு எப்படி பழக்கமாயிருக்கும் ஒருவேளை பூமி மூலமா பழக்கமோ.. இவ அக்காக்கு தான கல்யாணம் வந்துச்சு” என்று எண்ணும் போதே

 

‘நேற்று ஹர்ஷா ஏதோ திருமணத்திற்கு போட்டோகிராபரா போனதா சொன்னது இதழ் தமைக்கையின் திருமணத்திற்காக தானா, அப்படியென்றால் அங்க போய் என்ன கண்டுபிடித்திருப்பாள்’ என்று ஆழ்ந்த யோசனையில் இருந்தவன் யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டு, 

 

மகிழ் வந்துவிட்டாளோ என்று பதறி அனைத்தையும் மறைத்துவைத்து கதவை திறந்தவன், ஹர்ஷா நிற்பதை கண்டு “நீ தானா.. நான் கூட மகிழ் வந்துட்டான்னு பதறிட்டன்.. சரி உள்ள வா” என்று அழைத்து கதவை தாழிட்டான்.

 

இப்போது ஹர்ஷாவோ “ஆதி.. நேத்து ஒரு விஷயம் பேசினேன்ல அதபத்தி பேச தான் இப்போ வந்தேன்”

 

“என்ன விஷயம்”

 

“நேத்து ஒரு மேரேஜ்க்கு ஃபோட்டோகிரபரா மதி என்ன அனுப்பினான்னு சொன்னேன்ல..”

 

“ஆமா.. யாரோட டீட்டேல்ஸ் கலெக்ட் பண்ணினான்னு சொன்னியே”

 

“அதே தான்.. அவர் பெயரு சதாசிவம்.. பொலிட்டிசியன்.. அவரோட பொண்ணு கல்யாணம் தான் அது.. பட் அங்க என்ன கண்டுபிடிச்சான்னு எதுவுமே எனக்கு தெரியாது”

 

“ஓகே.. எப்படி அவரு பழக்கம்”

 

“அது மதி ப்ரெண்டுக்கும்.. அவரோட ரெண்டாவது பொண்ணு இதழிகாவுக்கும் பழக்கம் போல.. அத வச்சி மதி பழக்கமாம்.. அந்த பொண்ணு தான் அவ அக்கா கல்யாணத்துக்கு ஃபோட்டோகிரேபர் வேணும்ன்னு சொல்லியிருக்கு உடனே இவ என்ன கோர்த்துவிட்டுட்டா..” என்றவன் இதழிகா என்ற பெயரை உரைக்கும் போது முகம் வாடிவிட, அதை ஆதியும் கண்டு கொண்டான்.

 

“ஓகே.. உனக்கு சதாசிவத்துக்கும் மகி ஆக்சிடென்டுக்கும் எதாவது லிங்கிருக்குன்னு தோணுதா”

 

“எனக்கு தெரியல.. ஒருவேளை அவர பத்தின தகவல.. அவ வெளியவிட்டப்புறம் இந்த ஆக்சிடென்ட் நடந்திருந்தா.. அவராயிருக்க வாய்ப்பிருக்குன்னு சொல்லியிருப்பேன்.. ஆனா இப்போ நோ ஐடியா”

 

“சொல்ல முடியாது ஹர்ஷா.. அவளுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிடுச்சுன்னு கூட கொல்ல முயற்சி பண்ணியிருக்கலாம்” என்று கூறியவன் பெண்ணவள் வீட்டிலிருந்து எடுத்த கோப்புகளில் சதாசிவம் என்று பெயரிடப்பட்ட கோப்புவை ஆராய்ந்தவன்,

 

பக்கத்திலிருந்த ஹர்ஷாவிடம் காட்டி “பாத்தியா.. அந்த ஆளு எவ்வளவு பெரிய முள்ளமாரியா இருக்கான்.. கண்டிப்பா இந்த ஆளுக்கும் ஆக்சிடென்டுக்கும் சம்மந்தமிருக்கும்” என்று கூறியவனின் ‘பூமிக்கும் இவருக்கும் என்ன பகை இருக்கும்.. அவன எதுக்கு கொல்லனும்’ என்று சிந்திக்க,

 

ஹர்ஷாவோ “நம்மகிட்ட இருக்கிறது ஒரிஜினலோட காபீஸ்.. அப்போ ஒரிஜினல் எங்க.. விஷயம் இவ்வளவு சீரியஸ்ன்னு தெரிஞ்சும் எப்படி இந்த ஒரிஜினல்ஸ எடுக்காம விட்ருப்பா? என்று கூறியவன்,

 

இதழிகாவின் தந்தை செய்யும் இழிவான வேலைகளை அறிந்தால், அவள் துடித்து போயிவிடுவாளே என்று எண்ணியவனின் மனமோ வேதனை கொள்ள,

 

ஆதியோ “ரொம்ப யோசிக்காத ஹர்ஷா.. நான் எல்லாத்தையும் பாத்துக்கிறேன்.. அப்புறம் நாளைக்கு எல்லாரும் உத்தர்காந்த் போறோம் தாராக்கிட்டயும் மகிழ்கிட்டயும் சொல்லிடு”

 

“ம்ம்..” என்று கூறி தலையசைத்து சென்று விட்டான்.

 

அவன் சென்றதும் விபத்து நிகழ்ந்த போது சிசிடிவில் பதிவான பதிவை பார்க்க தொடங்கியவன், இறுதியில் ஒருவன் பெண்ணவளின் கைப்பையில் எதையோ எடுப்பதை மட்டும் மாறி மாறி ஓட விட்டு பார்த்தவன்

 

“அப்போ இதான் அந்த ஒரிஜினல்.. இத எடுக்க தான் ரெண்டு முறையும் டிரை பண்ணி அட்டாக் பண்ணியிருக்காங்க.. ரெண்டு முறையும் நான் உள்ள பூந்து ஆட்டை கலச்சிட்டேன்.. அப்போ என்னையும் டார்கெட் பண்ணியிருக்கணுமே.. ஏன் வரல.. ஒருவேளை நான் அசந்த நேரமா பாத்து அவள தூக்கிட்டு..

 

நம்மக்கிட்ட வரணும்ன்னு நினைச்சியிருப்பானுங்கலோ.. அப்படியிருந்தாலும் இதுல பூமி எங்கயிருந்து வந்தான்.. அப்போ ஆக்சிடென்டுக்கும் மகி 24 இயர்ஸ் முன்னாடி நடந்த டெத் பத்தி கண்டுபிடிக்க டிரை பண்ணினதுக்கும் சம்பந்தம் இல்லையா? எங்கயோ இடிக்குதே” என்று குழம்பியவனுக்கு பதில் என்னவோ பூஜ்ஜியமாகவே கிடைக்க, 

 

மேலும் சில கோப்புகளை ஆராய்ந்தவனுக்கு அதிர்ச்சி மற்றும் குழப்பமே அதிகம் மிஞ்ச,

 

மறுபடியும் பதிவை ஓட விட்டவன், இருவரையும் இடித்த காரின் எண்ணுடன் சில பலவற்றை நோட்டமிட்டு விழிகளில் பதிவு செய்தவன், விபத்து நடப்பதற்கு முன் பெண்ணவள் திறன்பேசியில் எதையோ கண்டு அதிர்வதை யோசனையாக கண்டவன், அவளின் திறன்பேசியை மொத்தமாக ஆராய்ந்து தேவையான சில விஷயங்களை தனக்குள் சேகரித்து கொண்டான்.

 

***

மறுநாள் கூறியது போல் உத்தர்காண்டில் இருக்கும் வீட்டிற்கு அனைவரையும் அழைத்து கொண்டு சென்றவன்,

 

அதற்கு மறுநாள் அங்கியிருக்கும் தனது மனதை கவர்ந்த இடமான மலைகளின் ராணி என்றழைக்கப்படும் முசோரிக்கும் (mussorie) அழைத்து சென்றவனிடம்

 

“தேங்க்ஸ் தீரா.. எனக்கு இந்த பிளேஸ் ரொம்ப பிடிக்கும்.. அடிக்கடி வரணும்ன்னு ஆசை பட் ஹர்ஷா கூட ரெண்டு மூணு தடவ வந்திருக்கேன்”

 

“ஓ.. எனக்கும் இந்த இடம் பேவரைட்.. வொர்க் ஸ்ட்ரெஸ் ரிலீப் பண்ண அடிக்கடி இங்க வந்துருவேன்.. இதுல இன்னொரு விஷயம் என்னன்னா.. இங்க தான் நம்மளோட பர்ஸ்ட் மீட்.. சோ இது எனக்கு பிரசியஸ் பிளேஸ்ன்னு கூட சொல்லலாம்” என்க, 

 

மறுநொடி, அவனை இறுக அணைத்தவள் “இந்த நேரத்த நான் மிஸ் பண்ண விரும்பல.. சோ லவ் யூ தீரா.. லவ் யூ லாட்.. எனக்கு நம்ம லவ் பார்ட் எதுவுமே சுத்தமா ஞாபகமே இல்ல தான்.. ஆனாலும், இந்த ஒரு வாரத்துல உங்களோட காதல புரிஞ்சிக்கிட்டேன்..

 

என்னால உங்களவிட்டு கொஞ்ச நேரம் பிரியவே கஷ்டமாயிருக்கு.. நைட் உங்க அணைப்பில்லாம தூக்கம் கூட வரமாட்டிக்கு.. உங்கள மட்டுமில்ல உங்கள நிழல விட்டு கூட பிரிஞ்சிருக்க முடியாம தான் பெத்தவங்கள கூட விட்டுட்டு ஓடி வந்துட்டேன் போல.. இப்போ மட்டுமில்ல எத்தன ஜென்மம் எடுத்தாலும் நீங்க மட்டுமே எனக்கு வேணும் தீரா.. உங்கள திகட்ட திகட்ட லவ் பண்ணணும் அதான் என்னோட ஆசை.. லவ் யூ.. லவ் யூ சோ மச் தீரா” என்க,

 

பாவம் ஆடவன், அவள் அணைப்பில் திகைத்து பெண்ணவளின் காதலில் செய்வதெரியாமல் விழிவிரித்து நின்றவன் ‘சாரி மகிழ்.. உனக்கு பழசு நினைவு வந்தும்.. இதே காதலோட என்ன ஏத்துக்கிட்டா.. கண்டிப்பா என்னோட காதல உன்கிட்ட சொல்லுவேன்.. ஒருவேளை நீ என்ன வெறுத்துட்டா.. எனக்குள்ளே என்னோட காதல புதச்சிப்பேன்.. லவ் யூ டூ மகிழ்’ என்று மனதிற்குள் காதலை உரைக்க,

 

அவளோ, அவனை விட்டு விலகாமல் “தீரா.. லவ் யூ டூ சொல்ல மாட்டீங்களா” என்று அவனை சொல்லுவான் என்று ஏங்கியவள் நேரடியாகவே கேட்டு விட, 

 

அவள் இப்படி கேட்பாள் என்று எதிர்பாரதவன் “சொன்னா தான் தெரியுமா?” என்று மழுப்ப,

 

“தெரியும் தான்.. பட் நீங்க இப்போ சொல்லுறத கேட்க ஆசையாயிருக்கு.. பரவாயில்ல உங்களுக்கு தோணும் போது சொல்லுங்க” என்று வாய் கூறினாலும் மனமோ, அவனின் வார்த்தைக்காக ஏங்கியது, 

 

“சொல்லுவேன்.. நீயே அதிர்ச்சியாகிற அளவு சொல்லுவேன்..”

 

“ம்ம்” என்றவளின் தோய்ந்து போன குரலை கேட்டு, வாயால் கூறவில்லை என்றாலும் நெற்றியில் இதழ் முத்தம் மூலம் காதலை கூற,

 

இதுவே பெண்ணவளுக்கு இப்போதைக்கு போதுமானதாக இருந்தாலும், அவனின் வாயால் தனக்கான காதலை கேட்கும் நாட்களுக்காக காத்திருந்தாள்.

 

****

 

உத்தர்காந்தில் நான்கு நாட்கள் பொழுதை கழித்துவிட்டு சென்னை விமான ஏற, 

 

விமானத்தில் ஏறி, அவன் கையை இறுக பற்றியவளுக்கு இதுவரை இருந்த பயம் இல்லாமல் போனாலும், அவளின் முகம் எதையோ யோசித்து வாடியிருக்க,

 

அதை கொண்ட ஆதியோ “மகிழ்.. ஆர் யூ ஓகே”

 

“ம்ம்”

 

“என்னாச்சி”

 

“தெரியல பயமா இருக்கு”

 

“என்னோட வீட்டுல உள்ளவங்கள நினைச்சி பயப்படுறியா”

 

“ம்ம்”

 

“டோண்ட் வொர்ரிடா.. அதெல்லாம் எல்லார்க்கிட்டாயும் தெளிவா பேசி புரிய வச்சிட்டேன்.. இருந்தாலும் அத்தை தாராக்கு என்ன கட்டிவைக்க முடியலன்னு உன்ன அவாய்ட் பண்ணுவாங்க..

 

நான் தான் அவங்க எப்படின்னு சொல்லி கொடுத்தேன்ல சோ பேசி கரெக்ட் பண்ணிடு.. மத்தப்படி யாரும் உன்ன ஹர்ட் பண்ற மாதிரி நடந்துக்க மாட்டாங்க.. நான் பண்ணவும் விட மாட்டேன்.. நான் உன் கூடவே தான இருக்க போறேன்.. அப்புறம் எதுக்கு பயம்”

 

“தீரா.. லவ் யூ”

 

“ம்ம்.. நான் சொல்லணும்ன்னு எதிர்பாக்குறியா”

 

“இல்ல தீரா.. நீங்க சொல்லலனாலும் நீங்க செய்யுற ஒவ்வொரு செயலும் மூலமா.. உங்க காதல சொல்லுறீங்க.. அதுவே எனக்கு போதும்” என்று அவன் தோல் சாய்ந்தாள்.

 

பிறகு பயணத்தை முடித்து அனைவருடனும் வீட்டிற்கு வந்தவன், உள்ளே நுழைய இருவரும் வாசலில் கால் வைத்த நொடி “நில்லுங்க” என்ற அழுத்தமான குரல் கேட்டு, அனைவரும் நிமிர்ந்து பார்க்க,

 

தெய்வானை தான், தன் கணவர் மற்றும் நாத்தனருடன், அவர்கள் எதிரில் ஆரத்தி தட்டுடன் வந்தவர் “என்ன மருமகளே பயந்துட்டியா.. ஆரத்தி எடுக்க தான் நிக்க சொன்னேன்.. ம் மாமியாருக்கு அடி பணியிருற மருமகள தான் என் பையன் தேடி கூட்டிட்டு வந்திருக்கான் போல.. பாக்க மஹாலக்ஷ்மி போல தான் இருக்க.. நான் தேடியிருந்தா கூட இப்படி ஒரு பொண்ண கண்டுபிடிச்சுருக்க முடியாது.. சோ உங்க கல்யாணத்த பெரிய மனசு பண்ணி மன்னிச்சு ஏத்துக்க முடிவு பண்ணிட்டேன்..” என்று குரல் உயர்த்தி அழுத்தமாகவே பேசினார்.

 

ஆதியோ “அம்மா.. நீ டம்மி பீஸ்ன்னு சொல்லி தான் கூட்டிட்டு வந்திருக்கேன்.. சோ டெரர் மாமியா போல பேர்பார்ம் பண்ணி காமெடி பண்ணாம.. சீக்கிரம் ஆரத்தி எடுக்குறியா கால் வலிக்குது”

 

“அடப்பாவி சபைல அசிங்கப்படுத்துறியே.. சரி சரி ரெண்டு பேரும் இப்படி பக்கத்துல நில்லுங்க” என்று இருவரையும் நிற்க வைத்து திருஷ்டி கழித்தவர் “இங்க பாரு மகி.. உனக்கு மாமியாவா மட்டுமில்லாம உனக்கு இன்னொரு அம்மாவா எப்போவும் சப்போர்டா இருப்பேன்.. எதைப்பத்தியும் யோசிக்காம சந்தோசமா என் மகன் கூட சேர்ந்து வலது கால் வச்சி உள்ள வா” என்று கூற,

 

அவர் வார்த்தையிலே, அவரை பற்றி உணர்ந்து கொண்டவள் அவரை அணைத்து “தேங்க்ஸ் அத்தை” என்று கூற,

 

ஆதியோ “போதும்.. உங்க மாமியார் உன்கூட தான் இருக்க போறாங்க ஆசை தீர எப்போனாலும் கட்டிப்பிடிச்சுக்க.. எவ்வளவு நேரம் நிக்குறது செம டையடா இருக்கு.. உள்ள போலாமா”

 

“ம்க்கும்.. என் மருமகளும் நானும் ஒத்துமையா இருக்கிறத கண்ணு வைக்காதடா.. கண்ண நோண்டிடுவேன்” என்று மகனிடம் செல்லமாக திட்டி, இருவரையும் வீட்டிற்குள் அழைத்து வந்தார்.

 

ஆடவனின் கை கோர்த்து மனதார கடவுளை வேண்டிவிட்டு புகுந்த வீட்டிற்கு நுழைய,

 

தெய்வானையோ அவளை அழைத்து கொண்டு பூஜை அறைக்கு சென்று விளக்கு ஏற்ற கூறி, அனைவரும் தெய்வத்தை வழிப்பட, பிறகு தன்னவளுடன் தாய் தந்தை காலில் ஆசி வாங்கியவன்,

 

அத்தையின் காலில் விழுந்தும் ஆசி வாங்க, தன் பெண்ணை கட்டிக்கொள்ளவில்லை என்ற கோவம் இருந்தாலும் அதையெல்லாம் ஓரம்வைத்து மனதார வாழ்த்தினார்.

 

இப்போது அவளுடன் சோஃபாவில் வந்து அமர, தெய்வானையோ இருவருக்கும் பால் பழம் கொடுத்து விட,

 

ஆதியின் தந்தை சுப்பிரமணியனோ “டேய் ஆதி.. கொஞ்ச நாள் வீட்டுல மருமக கூட இரு.. ஆபீஸ் வொர்க் நான் பாத்துக்குறேன்”

 

“சரிப்பா.. எதாவது இம்பாட்டன்டுனா கூப்பிடுங்க.. அப்புறம் சொல்ல மறந்துட்டேன் அம்மா அப்பா அத்தை இதான் மகி ப்ரெண்ட் ஹர்ஷவர்தன்.. கொஞ்சம் நாள் இங்க தங்க சொன்னேன்.. மாட்டேன்னு சொல்லிட்டான்” என்க,

 

அவனின் தந்தையோ “நாங்க எதுவும் நினைக்க மாட்டோம்.. நீ தாராலமா தங்கலாம்”

 

"அப்படி இல்லப்பா.. எனக்கு ஆபீஸ்லிருந்து வீடு தான் பக்கம்.. அடிக்கடி இங்க வந்து போவேன்” 

 

“சரி.. உன் இஷ்டம்.. இன்னைக்கு ஒருநாள் இங்க ஸ்டே பண்ணி ரெஸ்ட் எடுத்து நாளைக்கு போ” என்க, அவருக்கு மதிப்பு கொடுத்து இன்று மட்டும் தங்க சம்மதித்தான்.

 

இப்போது அங்கு வந்த சசியின் கண்கள் தாராவை வட்டமடித்தாலும், மூவருடனும், சிறிது நேரம் பேசிவிட்டு மகியின் காயங்களை பரிசோதித்தவன் “தலைல இருக்குற காயமாற மே பீ டூ டூ த்ரீ மந்த்ஸ் ஆகும்.. மத்த காயம் எல்லாம் நல்லா ஆறிடுச்சு.. நெக்ஸ்ட் மந்த் ஹாஸ்பிட்டலுக்கு செக்அப் கூட்டிட்டு வாடா” என்று கூற, அவனும் தலையசைத்து விட்டு தன்னவளுடன் அறைக்கு சென்றான்.

 

மதியம் உணவை முடித்துவிட்டு பால்கனி பக்கம் வந்த ஆதியோ திறன்பேசியில் அழைப்பு விடுத்து “ஹலோ இதழ்”

 

“சொல்லுங்க ஆதி அண்ணா” 

 

“உன்ன நான் மீட் பண்ணனுமே”

 

“என்ன விஷயம் அண்ணா..”

 

“சொல்லுறேன்டா.. ஈவ்னிங் நாங்க மூனு பேரும் ஸ்டே பண்ற வீட்டுக்கு வந்துடு”

 

“சரி அண்ணா.. பூமி எங்க இருக்கான்னு தெரியுமா.. போன் பண்ணினா கால் போக மாட்டிக்கு.. அவனுக்கு ஏதோ ஆகுற மாதிரி கனவு வந்துடுச்சு அண்ணா..

 

அவனுக்கு எதுவுமே இல்ல தான.. அவன கால் பண்ண சொல்லுங்க அண்ணா.. எனக்கு பயமா இருக்கு”

 

“சரிடா வொர்ரி பண்ணிக்காத.. நீ வீட்டுக்கு வா மீதி அங்க சொல்லுறேன்” என்று கூறி அழைப்பை துண்டித்தவன் சசிக்கு “மச்சான்.. ஈவ்னிங் நம்ம ஸ்டே பண்ற வீட்டுக்கு வந்திடுடா.. ஆக்சிடென்ட் சமந்தமா பேசணும்” என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு அறைக்குள் சென்று ஒரு தூக்கத்தை போட்டான்.

 

**

 

மாலை வேலையில் நண்பனுடன் தன் வீட்டிற்கு வந்தவனோ, தனக்கு தெரிந்த விஷயத்தை அனைத்தையும் அவனிடம் கூறி கோப்புகளை காட்ட,

 

சசியோ “என்னடா சொல்லுற.. எல்லாத்துக்கும் இதழோட அப்பா தான் காரணமா”

 

“எனக்கு அப்படி தான் தோணுது.. இருந்தாலும்.. ஒரு பக்கம் 24 வருஷம் முன்னாடி நடந்த டெத் ரிப்போர்ட் இடிக்குது”

 

“புரியல மச்சான்.. என்ன சொல்ல வர.. அதபத்தி அவ கண்டுபிடிக்க டிரை பண்ணினதுல அவள கொன்னுட்டாங்கன்னு சொல்லுறியா”

 

“அப்படி கூட இருக்கலாம் தான் தோணுது..”

 

“சரி ஓகே.. இப்போ இதழ எதுக்கு வர சொன்ன.. எல்லாத்தையும் அவகிட்ட சொல்ல போறியா”

 

“எல்லாத்தையும் சொல்லணும் மச்சான்.. அவ அப்பா பத்தி எப்படி பேசுறதுன்னு தெரியல” என்று எல்லாத்தையும் மட்டும் அழுத்தி கூற,

 

“என்னடா சொல்லுற.. அப்போ எல்லாத்தையும் சொல்ல போறியா”

 

“ஆமாடா.. பூமி அவள தன்னோட சொந்த தங்கச்சியா நினைச்சவன் கண்டிப்பா அவன் லவ் மேட்டர் அவளுக்கு தெரிஞ்சிருக்கும்.. சோ மறைக்க முடியாது” என்று கூறி கொண்டிருக்கும் போதே, 

 

“ஹாய் அண்ணாஸ்” என்றவாறு இதழிகா வர,

 

“எப்படிமா இருக்க”

 

“எனக்கென்ன நான் நல்லாயிருக்கேன்.. சசி அண்ணா.. தாரா அக்கா பத்தி பூமி சொன்னான் இப்போ எப்படியிருக்காங்க”

 

“ம்ம்.. இப்போ நல்லா இருக்கா”

 

“சரி அண்ணா.. என்ன விஷயமா பாக்க வர சொன்னீங்க”

 

“எனக்கு ஒரு உதவி பண்ணனுமா.. நீ” 

 

“என்ன அண்ணா சொல்லுங்க” என்றவள் அவன் கூறியதை கேட்டு உறைந்து விட்டாள்.

 

             தேடல் தொடரும்...

 

இப்படிக்கு,

VSV42😍😍


   
ReplyQuote

You cannot copy content of this page