All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

போகனின் மோகனாங்கி - 25

 

VSV 32 – போகனின் மோகனாங்கி
(@vsv32)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 36
Topic starter  

அத்தியாயம் 25

 

அகத்தியன் மேக்னாவின் முதுகை ஆதூரமாக தடவிக் கொடுக்க, அவள் அவன் மார்பில் முகம் சாய்த்துக் கொண்டு, 

 

“கொஞ்சம் கவனிக்காம போயிருந்தா, உங்களை கொன்னிருப்பானே, இந்த முறையும் நாம பிரிஞ்சு இருப்போம் இல்ல அகன். இத்தனை ஜென்மமா நீங்க பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போயிருக்கும். நினைச்சு பார்க்கவே முடியல” என்றவள் மேலும் அவனுக்குள் புதைந்து அவன் வெற்று மார்பில் முகம் புரட்டினாள், அதில் அவளின் மென்மையான இதழ்கள் பட்டு அகனின் அகமெல்லாம் உணர்ச்சி பிழம்பானது.

 

அவளின் இடையை அழுத்தி பிடித்தபடி “இந்த முறை நீ தான் என்னை முன்னாடியே புரிஞ்சுக்கிட்டியே மோகி. அப்படி எனக்கு எதுவும் ஆகியிருந்தாலும் குற்ற உணர்ச்சியில்லாம நான் உனக்கு என்னை புரிய வச்சுட்டேன்ங்கிற நிம்மதியோட போய் சேர்ந்திருப்பேன்”

 

“ஐயோ அகன், விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதீங்க” என்று அவன் வாயை பொத்தினாள். அவள் உள்ளங்கையில் மென்மையாக முத்தமிட்டு, “சொன்னா என்ன பண்ணுவ?” என்றான் குறும்பு புன்னகையுடன்

 

“சொல்லித் தான் பாருங்களேன், அப்போ தெரியும் இந்த மோகனாங்கி யார்னு” என்றாள் அவளும் விளையாட்டாக

 

“நான் உயிரை விட்டு இருந்தா என்ன பண்ணியிருப்ப” என்று அவன் முடிப்பதற்குள் எட்டி அவன் கன்னத்தை பற்றி, ஆவேசத்துடன் அவன் உதட்டை வலிக்க கடித்தாள். 

 

வலியில் கத்துவான் என்று எதிர்பார்க்க, அவனோ அவளுக்கு வாகாக குனிந்து நின்றான். முடிந்தவரை அவன் உதட்டை பதம்பார்த்து விட்டு அவனிலிருந்து சற்றே பிரிந்தவள்

 

“வலிக்கலயா? இருங்க இன்னும்” என்று அவள் முடிப்பதற்குள் அவள் இதழ்களை சிறை செய்திருந்தான் அகன். நீண்ட ஆழமான இதழ் அணைப்பில் இருவரும் லயித்திருக்க, அவனுடைய கரங்கள் தன்னவளின் மீது உரிமையுடன் உலா வர, வான் நிலவு வெட்கத்தில் மறைய, இருள் கவிய தொடங்க, அவர்களின் நெருக்கத்தை பார்த்த மேகங்கள்  இருவரின் மேல் பூமழையை தூவியது.

 

மெதுவான தூறலாக தொடங்கி அடைமழையாக பெய்யவும் இருவரும் தெப்பலாக நனைத்திருந்தனர். தலைக்கு மேலேயும் கப்பலின் தரைக்கு கீழேயும் அளவிலா தண்ணீர் இருந்தும், தன் தீரா தாகத்தை தன்னவளின் இதழ்நீரில் தீர்த்துக் கொள்ள போராடிக் கொண்டிருந்தான் அகன். 

 

மழை நீரின் குளுமையில் இருவரின் உடல் வெடவெடத்தாலும், இறுக்கமான அணைப்பும் அழுத்தமான இதழ் தீண்டல்களும்  அகத்தியனுக்குள் மோகத்தீயை கிளர்ந்தெழச்செய்ய தன் கட்டுபாட்டை இழந்து தன்னவளுக்குள் மூழ்க தொடங்கினான். 

 

குளிருது குளிருது

இருஉயிர் குளிருது

காதல் உறவாடி

நகருது நகருது

ஒருவிரல் நகருது

மோட்ச வழி தேடி

 

அகத்தியனின் ஆளுமையில் மயங்கி கிறங்கியவள் கால்கள் தடுமாறி கீழே சரிந்தாள். அவளை அப்படியே கைகளில் ஏந்திக் கொண்டு, செயற்கை குளத்தில் இறங்கினான். தோள்களில் சாய்ந்திருந்தவளை எழுப்பி அவள் கன்னத்தை பற்றி, “மோகி கண்ணை திறந்து பாருடி” என்றான்

 

அவள் மெல்ல கண்களை திறந்து அவன் கைக்காட்டிய பக்கம் பார்வையை திருப்பினாள். அந்த செயற்கை குளத்தில் நிலவின் ஒளி தெரிந்தது.

 

“இன்னும் பெளர்ணமி முடியல, இந்த பிறவியின் நம்மோட முதல் கூடலை தொடங்கலாமா?” என்று அவள் ரகசியம் பேசினான்.

 

நாணம் தாங்காமல் அவன் மார்பில் தன் முகத்தை மறைத்துக் கொண்டாள். இருவரும் தங்களை அகன் மோகனாங்கியாகவே நினைத்து அவர்களுக்குள்ளான அன்றைய தேடலை, பல யுகங்களுக்கு பிறகு இன்று தொடங்கியிருந்தனர்.

 

பலயுகங்களாக காத்திருந்தவனாயிற்றே, எளிதில் அவளை விட்டு விடுவானா என்ன? தன்னவளை தோளின் மீது போட்டுக் கொண்டு அவர்கள் அறை நோக்கி சென்றான். அவளை கட்டிலில் கிடத்தி, தன் கைப்பாவையாக மாற்றியிருந்தான். அவன் சொல்லி தரும் பயிற்சிகளை முறையாக கற்று தேர்ச்சிக்கு தயாராகி கொண்டிருந்தாள் அகனின் மோகனாங்கி.

 

பத்து நாட்களுக்கு பிறகு,

 

அகத்தியனும் மேக்னாவும் கன்னியாகுமரி ஹார்பரில் தரையிறங்கினார்கள். திலீப் அவர்களை அழைத்துச் செல்ல காருடன் வந்திருந்தான்.

 

“என்ன திலீப், ஊர்ல என்ன விஷேசம்” 

 

“பாஸ், அந்த நேத்ரனை போலீஸ் லாக்அப்ல வச்சிருக்காங்க. தீவிரமான விசாரணை போயிட்டு இருக்கு. நாம நினைச்சதை விட மோசமானவனா இருப்பான் போல இருக்கு. நீங்க வந்ததும் அபிமன்யூ சார் உங்களை போன் பண்ண சொன்னார்”

 

“ஓகே, நான் அவன் கிட்ட பேசிக்கிறேன். அப்புறம் வேறென்ன விஷேசம்”

 

“அது வந்து பாஸ், நித்யாவோட பேரண்ட்ஸ்ம் வந்திருக்காங்க. உங்களுக்காக தான் வெயிட்டிங்”

 

“ஓஹோ, அதான் உன் மூஞ்சு இவ்வளவு பளிச்சுனு இருக்கா?”

 

“அப்படியெல்லாம் இல்ல பாஸ்” வெட்கத்தை மறைக்க முகத்தை திருப்பிக் கொண்டான்.

 

“இவன் என்ன மோகி இப்படி வெட்கப்படறான்?” என்றான் மனைவியை பார்த்து

 

“ம் உங்கள மாதிரியா இருப்பாங்க. இராத்திரி பகல்னு வெளியவே போகாம என்னை படுத்தி எடுத்திட்டீங்க. கேப்டன் கேட்டாரே, என்ன சார் நீங்க இரண்டு பேரும் வெளியவே வரல, இவ்ளோ பெரிய கப்பல்ல எவ்வளவு பெசிலிட்டீஸ் இருக்கு. அதை எதுவுமே யூஸ் பண்ணாம ரூமுக்குள்ளவே இருக்கறதுக்கு வீட்லயே இருந்திருக்கலாம்னு சொல்றாரு. நீங்களும் வெக்கமே இல்லாம சிரிச்சிட்டு, நீங்க சொல்றதும் கரெக்ட் தான்னு சொல்றீங்க, எனக்கு அங்கே யார் முகத்தையும் நிமிர்ந்து பாக்கவே முடியல” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சிடுசிடுத்தாள்.

 

“நாம ஹனிமூனுக்கு தான் ஷிப் டிராவல் போனோம்ங்கிறது அவங்களுக்கு நல்லாவே தெரியும். இதுல மறைக்க என்ன இருக்கு மோகி. இன்பாக்ட் நேத்ரனோட கேஸ் இருக்கறதால தான் பத்து நாள்ல வரவேண்டியதா போச்சு. இல்லனா அடுத்த பெளர்ணமியையும் அங்கேயே கொண்டாடிட்டு தான் வந்திருப்பேன்” என்று கண்சிமிட்டினான்.

 

அவனை முறைத்துக் கொண்டே, அவன் தோளில் அடித்தாள். 

 

“என்ன பாஸ், உங்களையே அடிக்கிறாங்க” என்றான் திலீப் கண்ணாடி வழியே இருவரையும் பார்த்து

 

“என்ன பண்றது திலீப், மானுக்கு அடிமையான வேங்கை கதையா ஆயிடுச்சு என் நிலைமை. நீயும் இவ பிரெண்டை தானே கட்டிக்க போறே. இப்போ இருந்தே மனசை தயார்படுத்திக்கோ” என்றான் அகத்தியன் சிரித்துக் கொண்டே

 

மூவரும் வீட்டை அடைந்ததும், நித்யா ஓடிவந்து தோழியை அணைத்துக் கொண்டாள். “மேகி, நீ முன்னை விட ரொம்ப அழகா இருக்கடி. உன் முகம் என்னடி இவ்வளவு பொலிவா இருக்கு?”

 

மேக்னா பதில் சொல்லாமல் கணவனை பார்க்க, அவனும் அவளை தான் அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான். 

 

திலீப், நித்யாவின் கரத்தை பிடித்து இழுத்து, “நித்தி, உன் முகமும் அதே போல பொலிவாகணுமா?” என்று அவள் காதில் கிசுகிசுத்தான்

 

“ம் ஆமா திலீப், உங்களுக்கு அந்த பார்லர் எங்கே இருக்குனு தெரியுமா?”

 

“அதுக்கு எதுக்கு பார்லர் போகணும், கொஞ்சம் அந்த பக்கம் வா” என்று விட்டு முன்னால் நடந்தான்

 

நித்யாவும் புரியாமல் அவன் பின்னே நடக்க, ஒரு அறைக்குள் நுழைந்தவன், அவளை இழுத்து அணைத்து முகமெங்கும் முத்தமிட தொடங்கினான். எதிர்பாராத முத்த தாக்குதலில் முகத்திலும் உடலிலும் ஜிவ்வென்று ரத்தம் பாய்ந்தோட நின்றிருந்தவளை அதே வேகத்தில் விட்டவன், “இப்போ போய் உன் முகத்தை கண்ணாடில பாரு, பொலிவா இருக்கும். கல்யாணத்துக்கு அப்புறம் இன்னும் பொலிவாக்கி காட்றேன்” என்று ஒற்றை கண்ணை அடித்து விட்டு வெளியேறி விட்டான்.

 

மேக்னா வந்து அழைக்கும் வரை நித்யா அசையாமல் அப்படியே நின்றிருந்தாள்.

 

“ஏய் நித்தி, கூப்பிடறது காதுல விழலயா? உன் அப்பா கூப்பிடறாரு” 

 

மேக்னா பின்னால் பேசாமடந்தையாக நடந்தாள் நித்யா.

 

படபடவென்று பேசிக் கொண்டே இருக்கும் நித்யா இப்போது அமைதியாக இருப்பதை பார்த்து திலீப் மௌனமாக புன்னகைத்துக் கொண்டான்.

 

“நித்யா, அடுத்த வாரமே கல்யாணம் வச்சுக்கலாம்னு சொல்றாரு மேக்னாவோட ஹஸ்பென்ட். நீ என்ன சொல்றே” என்றார் நித்யாவின் தந்தை.

 

“உங்க விருப்பம் போல செய்யுங்கப்பா” என்று அவள் சொல்லி விட, அடுத்தடுத்து கல்யாண வேலைகள் நடந்தன.

 

திலீப் மற்றும் நித்யாவின் திருமணத்தை அகத்தியனும் மேக்னாவும் முன்னின்று நடத்தி வைத்தனர். 

 

இதற்கிடையில் அகத்தியன் கோர்ட்டுக்கு சென்று நேத்ரனுக்கு எதிராக சாட்சி சொல்லிவிட்டு வந்திருந்தான்.

 

மேக்னாவின் ஆசையை நிறைவேற்ற அகத்தியன் போகனின் மோகனாங்கி என்னும் பெயரில் அனிமேஷன் எடுக்கும் பணிகளை தீவிரமாக செய்து கொண்டிருந்தான். உடனிருந்த திலீப்பிற்கு போன் வர அதை எடுத்து பேசியவன்,

 

“பாஸ் வசுந்தராவும் திருச்செல்வமும் மெயின் கேட் கிட்ட வந்து உங்களை பாத்தே ஆகணும்னு பிரச்சனை பண்ணிட்டு இருக்காங்களாம்” என்றான்.

 

“சரி வரச்சொல்லு”

 

“ஆனா அவங்க நேத்ரனை ஜெயில்ல போட்டதுக்கு உங்க மேல கோபமா இருக்காங்களே” தயங்கினான் திலீப்

 

“இருக்கட்டும் திலீப், வரச்சொல்லு”

 

அவன் செக்யூரிட்டிக்கு போன் செய்து, இருவரையும் உள்ளே அனுப்ப சாெல்ல திருச்செல்வமும் வசுந்தராவும் விருந்தினர் அறைக்கு வந்தனர். அகத்தியன் அவர்களிடம் பேச உள்ளே நுழையும் போதே வசுந்தரா வேகமாக வந்து அவன் சட்டையை பிடித்து, “அடப்பாவி என் பையன் உனக்கு என்னடா துரோகம் பண்ணான்? அவன் கல்யாணம் பண்ணிக்க நினைச்ச மேக்னாவை தான் தாலிகட்டி உன் பொண்டாட்டியா ஆக்கிக்கிட்ட. அவனை என்ன சொல்லி மிரட்டினியோ தெரியல. இப்போ என்னடான்னா அவன் மேல பொய் கேஸ் கொடுத்து ஜெயில்ல தள்ளிட்ட? எதுக்குடா இப்படி பண்றே? நாங்க என்ன பண்ணோம் உன்னை?” என்று கோபமும் அழுகையுமாக  அவன் சட்டையை பிடித்து உலுக்கினார் வசுந்தரா.

 

சத்தம் கேட்டு மேக்னாவும் ரவீந்தரனும் அவர்கள் இருந்த அறைக்கு ஓடி வர, நிமிடத்தில் விஷயத்தை கிரகித்துக் கொண்ட ரவீந்தரன், தன் தங்கையை இழுத்து அவர் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டார்.

 

வசுந்தரா சில நிமிடங்கள் எதுவுமே புரியாமல் கன்னத்தை பிடித்தபடி அதிர்ச்சியில் நின்று விட்டார். “அண்ணா, தங்கச்சினு கூட பார்க்காம உன் மாப்பிள்ளைக்காக என்னையே அடிச்சிட்டியா? ஓ உன் புது மாப்பிள்ளையோட பணத்துல மயங்கிட்டியா? அது சரி சொத்துக்காக தானே உன் மகளை என் மகனுக்கு கட்டிக் காெடுக்க சம்மதிச்ச. இப்போ உன் பொண்ணு கழுத்துல தாலி கட்டினவன் எங்களை விட பெரிய பணக்காரன்னு தெரிஞ்சதும் அவன் பக்கம் சாஞ்சிட்டியா? 

 

கேள்விப்பட்டேன், ஹார்பர்ல நடக்கற பிசினஸையும் நீதான் பாத்துக்கறீயாமே. ஆக வீட்டோட மாப்பிள்ளை மாதிரி வீட்டோட மாமனார் ஆயிட்டே. வெக்கமா இல்ல?” என்று அவர் வார்த்தைகளை நெருப்பு கங்குகளாக அள்ளி வீச, ரவீந்தரன் துடித்து போனார்.

 

வசுந்தரா கேட்ட கேள்வியில் உண்மை இருக்க தானே செய்கிறது. தலைகுனிந்து நின்றார். மேக்னாவாலும் எதுவும் பேசமுடியவில்லை.

 

அகத்தியன் தான் அதட்டினான். “போதும் இத்தோட நிறுத்திக்கோங்க. ஆத்திரத்துல அறிவிழந்து பேசாதீங்க”

 

“நான் சொன்னதுல என்ன தப்பு? உன் சொத்தை பாத்து தானே இவர் மயங்கிட்டாரு?”

 

“என் சொத்து முழுசும் அனுபவிக்க அவருக்கு முழு உரிமை இருக்கு”

 

“என்ன உளர்றீங்க? ஓ மனைவி மேல இருக்கற மயக்கத்துல மாமனாருக்கு முழு சொத்திலும் உரிமை இருக்குனு சொல்றீங்களா?” என்றார் வசுந்தர நக்கலாக

 

“இல்ல போன ஜென்மத்துல என் மேல துவேசத்தோட இறந்தது மோகனாங்கி மட்டுமில்ல, அவளோட அப்பா வேங்கையனும் தான். அப்போ அவர் இழந்ததை இப்போ திருப்பி தர வேண்டிய கடமை எனக்கு இருக்கு”

 

மற்றவர்கள் அவன் சொல்ல வருவதின் அர்த்தம் புரியாமல் விழிக்க, மேக்னா அவனருகே வந்து, “என்ன சொல்றீங்க அகன்? நீங்க சொல்றத பார்த்தா, அப்பா” என்று மேற்கொண்டு பேச முடியாமல் தடுமாறினாள்.

 

“ஆமாம் மோகி. நீ நினைக்கறது சரிதான். உன் அப்பா ரவீந்தரன் தான் போன ஜென்மத்துல குமரியின் தென்மதுரையை ஆண்ட புலிப்பாண்டியன் என்னும் வேங்கைய மகாராஜா” என்றான் அகத்தியன்.

 

(தொடரும்)


   
ReplyQuote

You cannot copy content of this page