About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
தேடல் - 15
இவர்கள் மருத்துவமனைக்கு வந்த சிறிது நேரத்தில் மகியின் உடமைகளோடு ஹார்ஷாவும் வந்து சேர, மகியை அப்போது தான் தனினறைக்கு மாற்றலானாள்.
சசியோ மற்ற நோயாளிகளை பரிசோதிக்க செல்ல, இரு ஆடவர்களும் பெண்ணவளின் அறைக்குள் நுழைந்தனர்.
அப்போது மறுபடியும் கண்விழித்த மகி எதிரே நிற்பவனை கண்டு “டேய் ஹர்ஷா” என்க,
ஆச்சரியத்தில் அவளருகில் அமர்ந்து கரம் பற்றியவனோ “மதி.. என்ன உனக்கு ஞாபகமிருக்கா.. நான் யாருன்னு தெரியுதா”
“ஏன்டா.. உன் காதுல யாராவது ஈயத்த காட்சி ஊத்திட்டாங்களா.. உன் பெயர தான சொல்லுறேன் கேக்கலையா”
“என்ன நீ மறைக்கலயா மதி” என்க,
அதில் கடுப்பானவள் ஏதோ கூற வருவதற்கு முன், அங்கு வந்த சசியோ “அதெல்லாம் அவளுக்கு உன்ன நல்லாவே ஞாபகமிருக்கு.. அவ பழச மறந்தது உண்மை தான் பட் எல்லாத்தையும் மறக்கல.. குறிப்பிட்ட காலத்த மட்டும் மறந்திருக்கா.. அதுல அவளோட லவ் பார்ட்டும் ஒன்னு” என்று ஆதியை பார்த்துவிட்டு அவளை பரிசோதிக்க,
அவளும் எதிரே இருப்பவனை பார்த்துவிட்டு தன் கழுத்தில் கிடந்த தாலியையும் யோசனையுடன் பிடித்து பார்க்க,
அதை உணர்ந்த ஹர்ஷாவோ மதுரையிலிருந்து கொண்டு வந்த, அவள் கடிதத்தை அவளிடம் நீட்டி “இத படி மதி.. இது நீயே எழுதி வீட்டுல வச்சிட்டு தான் நைட்டோடு நைட்டா ஓடி வந்திருக்க” என்று அவள் படித்து முடித்ததும் ஆதி தன்னிடம் கூறியதையும் மதுரையில் அவளிருந்த போது நிகழ்ந்த நிகழ்வையும் கூறிவிட்டு “இங்க பாரு.. இப்போதைக்கு எதையும் யோசிச்சு ஸ்ட்ரெஸ் பண்ணிக்காம ஆதி சொல்லுறத கேட்டு நடந்துக்கோ”
“ஹர்ஷா.. அம்மா அப்பா என்மேல கோவமா இருக்காங்களா.. இனி நான் அவங்கள பாக்கவே முடியாதா” என்க,
அதற்கு ஆதியோ “மகிழ்.. உனக்கு முழுசா கியூராகட்டும் அதுக்கப்புறம் நானே உங்க வீட்டாளுங்க காலுல கைல விழுந்தாவது சேத்து வைக்கிறேன்.. இட்ஸ் அ பராமிஸ்.. சோ அதுவர நீ எதையும் திங்க் பண்ணி ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத பிளீஸ்” என்க,
அதை கேட்டு, அவன் விழிகளில் தெரியும் தனக்கான காதலையும் தன்னை நினைத்து அவன்படும் வேதனையும் கண்டு இப்படிப்பட்டவனின் காதலை மறந்துவிட்டோமே? என்று தனக்குள் நொந்தவள், மறந்தால் என்ன இனி காதலிப்போம் என்று புதிதாக காதலிக்க முடிவு செய்து, கண்கள் சிமிட்டி புன்னகைத்து “ஓகே” என்று கூறியவளின் முகம் நோடியில் வாடி,
“உங்க பெயரு என்ன” என்று ஒரு வித சங்கடத்துடனே கேட்டாள்.
அவளின் கண் சிமிட்டயில் தன்னை இழந்தவன், அவள் கேட்ட கேள்வியில் எழும் வலியை அடக்கி “ஆதிரன்” என்க,
அவன் பெயரை மனதிற்குள் உச்சரித்து பார்த்தவளின் உடம்பிலோ மின்சாரம் பாய்ந்த உணர்வு எழ,
அதில் உள்ளுக்குள் வெட்கித்தவள் அவனின் கரம்பற்றி “சாரி தீரா.. என்னால உங்களுக்கு தான் அதிக மனஒலைச்சல்.. எனக்கு பழசு நினைவு வரலைன்னா கூட பரவாயில்ல.. உங்ககிட்ட எதையுமே கேட்டு கஷ்டப்படுத்த மாட்டேன்”
“ஏய் மகிழ் என்ன பேசுற.. எனக்கு எந்த கஷ்டமும் இல்ல.. உனக்கு தோன்றத செய்.. உன் சந்தோசம் தான் எனக்கு முக்கியம்” என்றவனின் கண்களும் கலங்க,
நண்பனின் பேசியில் அர்த்தம் புரிந்த சசியோ அவனை உறுத்து விழித்து “மச்சான்.. தலைல இருக்கிற காயமாற கொஞ்சம் டைம் எடுக்கும்.. மத்தப்படி நடந்த ஆக்சிடென்ட்ல உடம்புல அங்க அங்க ஸ்கிராட்சிருக்கு அது ஒன் வீக்குள்ள கியூராகிடும்..
தலைல அதிகமா பையின் வந்தா மட்டும் ஹாஸ்பிட்டல் வந்தா போதும்.. வீக்லி டுவாய்ஸ் நானே வீட்டுல செக் பண்ணிடுவேன்.. மத்தப்படி அவ நல்லா ரெஸ்ட் எடுக்கணும்.. நாளைக்கே கூட டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்” என்று கூறி நண்பனின் காதருகில்
“யாருக்கு தோன்றததையும் யாரும் செய்ய முடியாது.. கடவளுக்கு தோன்றத செய்வான்.. இதுவர செஞ்சவன் இனிமேயும் செய்வான்” என்று நகர,
“அண்ணா” என்று அவள் அழைத்ததில் நின்று கேள்வியாக அவள் முகம் நோக்க,
“என்னோட புருஷனோட ப்ரெண்ட் நீங்க அந்த உரிமைல அண்ணான்னு கூப்பிட்டேன்.. கூப்பிடலாம் தான”
“கூப்பிடுடா” என்று அவள் தலையை களைக்க,
“தேங்க்ஸ் அண்ணா.. அப்புறம் இன்னைக்கே டிஸ்சார்ஜ் பண்ணிடுறீங்களா.. இங்க இருந்தா பழச யோசிச்சி மைண்ட் டிஸ்டபாகுது”
“புரியுதுமா.. இன்னைக்கு ஒருநாள் அட்ஜஸ்ட் பண்ணிக்க.. நாளைக்கு ஈவ்னிங் எல்லா ஃபார்முலாட்டீஸ் முடிஞ்சதும் போயிடலாம்” என்று கூறி தன்னறைக்கு சென்று ஏதோ யோசனையில் மூழ்கியவன்,
திறன்பேசி விடாமல் ஒலிப்பதில் தான் நிகழ்விற்கு வந்து தாரா அழைப்பதை கண்டவன் ‘இவள எப்படி மறந்தோம்’ என்று நினைத்து அழைப்பை ஏற்க,
“டேய்.. ரெண்டு பேரும் என்னடா பண்றீங்க.. கால் பண்ணினா பேச வலிக்கு.. அப்போ என்ன எழவுக்குடா ரெண்டு பேரும் போன் வச்சிருக்கீங்க”
“சாரி கொஞ்சம் பிஸியாயிட்டேன் என்ன விஷயம்”
“என்ன விஷயமா.. இன்னைக்கு என்ன பிக்அப் பண்ண வர சொன்னேன்ல எவனுக்குமே என்ன கூட்டிட்டு போகிற எண்ணம் வரல தான”
“நேத்து கேட்டதுக்கு.. நீ தான் இன்னும் ரெண்டு நாள் ப்ரெண்ட்ஸ்கூட இருந்து வரலாம்ன்னு நினைக்கேன்.. பாத்துட்டு சொல்லுறேன்னு சொன்ன”
“பாத்துட்டு சொல்லுறேன் சொன்னேன்.. ஏன் அதுக்கப்புறம் நீ என்ன ஏதுன்னு கால் பண்ணி கேக்க மாட்ட.. அப்போ நான் அங்க வருறது உனக்கு பிடிக்கல.. சரி இனி உன்ன டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன்.. நான் எக்கெடோ போறேன்”
“என்னாச்சி இவளுக்கு சமந்தமேயில்லாம பேசி இந்தா குதி குதிக்கிறா” என்று நினைத்து “ஏய் சரவெடி.. எங்கேயும் போய் தொலஞ்சிடாதே.. பத்து நிமிஷத்துல அங்கயிருப்பேன்” என்று அழைப்பை துண்டித்த சசியோ சொன்னது போல் பத்து நிமிடத்தில், அவள் கண்முன் நின்றான்.
அவனுடன் வண்டியில் ஏறியவள் எதுவும் பேசாமல் கடுப்பாகவே வர, அவளை நோட்டமிட்டவாறே சாலையில் கவனத்தை பதித்தவன் “ப்ரெண்ட்ஸ் கூட இன்னும் ரெண்டு நாள் என்ஜாய் பண்ணிட்டு வர வேண்டி தான”
“என் ப்ரெண்ட் மேரேஜ்காக போனேன்.. முடிஞ்சுது.. அதுக்கு மேல அங்கயிருக்க பிடிக்கல.. சோ கிளம்பிட்டேன்.. அதுல உனக்கு என்ன பிராப்ளம்?”
‘என்னவாயிற்று இவளுக்கு’ என்று எண்ணியவன் அதற்குமேல் அமைதியாகவே அவளுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
வீட்டிற்குள் வந்தவள் கடுப்பை குறைக்க, குளியலை போடுவோம் என்று எண்ணி குளித்துவிட்டு வந்தவளுக்கு, அப்போது தான் இதமாக இருக்க, தன்னறை ஜன்னல் கதவை திறந்து தலையை துவட்டியவாறு அணில் பழத்தை கொரிக்கும் அழகை ரசித்து கொண்டிருந்தவள்.
அது பாதிற்கு மேல் சாப்பிடாததை கண்டு “என்னாச்சி அணிபேபி.. மீதி பாதி உன் பாய் ப்ரெண்டுக்கு தான.. இன்னும் எத்தன நாளைக்கு நீயும் அவன் வருவான்னு காத்திருக்க போற?.. நம்ம காத்திருப்புக்கான கேள்விக்கு எப்போ தான் பதில் கிடைக்குமோ” என்று கூறியவள், அருகில் நிழாடுவதை கண்டு பார்வையை திருப்ப,
அந்நிழலுக்கு சொந்தகாரனான சசியோ அவள் பேசிய அனைத்தையும் கேட்டுவிட்டு அவளுக்காக தேனீரை கையில் கொடுக்க, அதை கையில் வாங்கியவள் “ஆதி எங்க”
“அவன் எங்க சொல்லுறேன்.. அதுக்கு முன்னாடி உன்கிட்ட சில விஷயம் சொல்லணும்” என்க,
படுக்கையில் அமர்ந்து சொல்லு என்பது போல் பார்க்க, அவனும் நேற்று நிகழ்ந்த அனைத்தையும் கூற, நண்பனுக்கு இப்படியொரு சூழ்நிலையில் தள்ளப்பட்டதை நினைத்து வருந்தியவளின் முகம் வாடியது,
உடனே அவளருகில் அமர்ந்து இறுக்கியணைத்து கொண்டவனின் கண்களும் கலங்கி விட, அதில் ஒரு துளி பெண்ணவளின் தோலை ஈறமாக்க, அவன் அழுகிறான் என்பதை உணர்ந்தவள், அவன் தலையை கோதி “என்ன சசி.. சின்ன பிள்ளை மாதிரி நீயே அழுதா.. அவனுக்கு எப்படி தைரியம் சொல்லுறது”
“முடியல தாரூ.. என்னால அவன இப்படி பாக்க முடியல.. பாவம்டி அவன் குழப்பத்துக்கும் குற்றயுணர்ச்சிக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு தவிக்கிறான்..”
“புரியுதுடா.. சீக்கிரமே எப்படி எல்லாம் சரி பண்ணலாம்ன்னு யோசிக்கலாம்.. தைரியமா இரு” என்று அவன் கரம்பற்றி அழுத்தம் கொடுத்தவள்,
அவனை தன்மடி மீது சாய்த்து தலையை கோதிவிட, நேற்று உறங்காததால் அவனும் உறங்கி போனான்.
இப்படியே ரெண்டு மணிநேரம் கடந்தும் பெண்ணவள் அவன் தலை கோதுவதை நிறுத்தாமல் தொடர, சட்டென்று கண்விழித்தவன் தான் தலைசாய்த்திருக்கும் இடத்தை உணர்ந்து விலுக்கென்று, அவள் கையை தட்டிவிட்டு எழுந்து அவளிடம் ‘தன் சுயத்தை இழக்கிறோம்’ என்று தன்னையே நொந்து கொண்டவன் “நான் போய் ஃப்ரெஷ் ஆயிட்டு வரேன்.. ரெண்டு பேரும் ஹாஸ்பிட்டல் போகலாம்” என்று கூறி பெண்ணவளின் முகம் காணாமல் வேகமாக வெளியே செல்ல,
“ம்க்கும்.. ரேப் பண்ணின போல ரொம்ப தான் பண்றான்.. இருடா என்கிட்ட சிக்காமலா போயிடு அப்போ இருக்குடி” என்று கூறியவளின் இதழோ அவனின் அணைப்பை எண்ணி முகம் சிவந்தது.
அவளின் அறையிலிருந்து வந்தவன் பின்புறமாக சென்று பெண்ணவள் அணிபேபி என்றழைக்கும் அணில் அருகில் சென்றவன் “என்னால உனக்கும் கஷ்டம்.. சாரி அணிபேபி..” என்று அதனிடம் மன்னிப்பு கேட்டு,
அது சாப்பிட்டு மீதி வைத்த பழத்தை எடுத்து கொண்டு தன்னறைக்கு பின்னால் தனக்காக காத்திருக்கும் ஆண்அணிலுக்கு அப்பழத்தை கொடுத்தவன் “பாவம்டா அணிபேபி.. உனக்காக எவ்வளவு வருஷம் வெயிட் பண்ணுது.. ஏன்டா இப்படி பண்ற” என்று கேட்டதற்கு சாப்பிடுவதை நிறுத்தி அவனை பார்க்க, அதில் அர்த்தம் புரிந்தவன் “இப்போ என்ன.. நான் உன்ன ஒன்னும் சொல்லல.. எண்ணமோ பண்ணு” என்று அங்கிருந்து சென்றான்.
ஆண் அணிலோ தன் காதலி சாப்பிட்ட மீதி பழத்தை சாப்பிடும் பணியை தொடங்கியது.
இவ்விரு அணியில்களும் இவர்களின் செல்ல பிராணி, இவர்களை போலவே இவ்விரு அணில்களும் காதலித்தும் பிரிந்திருக்கிறது. இரு காதல் ஜோடிகளின் பிரிவிற்கு என்ன காரணம் என்பதை பின்னால் காணலாம்.
*************
சிறிது நேரத்தில் தயராகி அவனுடன் மருத்துவமனை வந்து சேர்ந்தவளோ, வேகமாக மகியிருக்கும் அறைக்குள் வந்து நண்பனை அணைத்து ஆறுதல் அளிக்க,
இவ்வணைப்பை கண்ட மகியோ தன்னவனை எப்படி வேறொரு பெண் அணைப்பது என்று எண்ணத்தில் மூக்கு விடைக்க அவர்களை கண்டு முறைத்திருக்க,
ஹர்ஷாவோ பெண்ணவளின் காதருகில் “என்னடி டியூப் லைட்டு ஓவர் ஸ்மோக் வருது”
“யாருடா அவ.. என்னோட தீராவ கட்டிபிடிக்கிறா”
“ப்ரெண்டா இருக்கும்டி”
“ப்ரெண்டாயிருந்தா கட்டிப்பிடிக்கலாமா அதுவும் என்முன்னால” என்று கூறி கொண்டிருக்க,
அவளை உணர்ந்த தாரணியோ புன்னகைத்தவாறு அவளருகில் அமர்ந்து “என்ன மகி.. சிகரெட் பிடிக்காம புகை விடுறது எப்படின்னு கோர்ஸ் போனியா என்ன.. ஓவர் புகை வருது” என்று கூறியதை கேட்டு முறைப்பை பதிலாக கொடுத்தவளிடம்
“ஓகே ஓகே முறைக்காத.. ஐ அம் தாரணி.. நான் லாயர்.. அப்புறம் சின்ன வயசுலிருந்தே மூணு பேரும் ஒண்ணா தான் இருப்போம்” என்று ஆதி சசி இருவரையும் சுட்டிகாட்டி கூறியவள்,
“ஆதி எனக்கு நண்பன் மட்டுமில்ல.. என்னோட சொந்த மாமா பையனும் கூட.. உனக்கு புரியுற மாதிரி சொல்லணும்ன்னா முறை பையன்.. வீட்டுல கூட எங்க ரெண்டு பேருக்கும் கட்டி வைக்க தான் பிளான் பண்ணினாங்க.. நான் தான் போனா போகுதுன்னு உனக்கு விட்டு கொடுத்தேன்.. சோ எல்லாத்தையும் கம்பர் பண்ணும் போது உன்னைவிட எனக்கு தான் அவன ஹக் பண்ண உரிமை அதிகம்.. சோ நேத்து வந்த உனக்காக இது எப்போவும் மாறாது.. மாத்திக்கவும் மாட்டேன்.. அண்டர்ஸ்டன்ட்” என்க,
மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசியதில், அவர்களின் நட்பை உணர்ந்து கொண்டாலும், அவளை சீண்டும் பொறுத்து “புரியுதுகா.. தாராலமா ஹக் பண்ணிக்கோங்க.. பட் என் முன்னாடி பண்ணாதீங்க எனக்கு பிடிக்கல”
“எதெய் அக்காவா.. ஐ அம் ஜஸ்ட் 26டி..”
“ஆமா.. என் புருஷனோட அத்தை பொண்ணு எனக்கு அக்கா முறை தான் வரும்..” என்று பக்கத்திலிருக்கும் சசியிடம் “சரி தான அண்ணா”
“சரி தான்மா” என்று கூறி சிரிக்க,
‘கொய்யால சிரிக்கவா செய்ற’ என்று சசியை முறைத்த தாரா “இங்க பாரு அவன அண்ணன்னு கூப்பிட்ட வாயால என்ன அக்கான்னு கூப்பிடாத.. நான் வேணா உன் புருஷன கட்டிப்பிடிக்கல அதுக்காக அக்கான்னு கூப்பிட்டு ஏற்கனவே வெந்த புண்ணுல வேல பாய்ச்சாதடி”
அவளின் அர்த்தம் உணர்ந்தவள் “ஓ உங்க ஆளா.. சரி பொலச்சி போங்க.. பட் உங்க கழுத்துல எங்க அண்ணன் தாலி கட்ட.. இந்த நாத்தனார் தயவு வேணும்.. சோ என் மனசு கோனாம நடந்துக்கோங்க”
“ஆகட்டும் நாத்தனாரே” என்று கூறி சிரிக்க, பதிலுக்கு அவளும் சிரித்தாள்.
இப்போது சசி “இங்க பாரு மகிமா.. நீ இவள அக்கானே கூப்பிடு இவள எப்போவும் நான் உன் அண்ணியா நிறுத்த மாட்டேன்” என்று கூறி சென்று விட,
அவனவளின் பேச்சில் வாடியவளின் கரம்பற்றியவள் “சாரிங்க என்னால தான்”
“அய்யோ அதெல்லாம் ஒண்ணுமில்ல.. எங்களுக்குள்ள சின்ன மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் சீக்கிரமே சரியாயிடும் நீ வொர்ரி பண்ணிக்காம நல்லா ரெஸ்ட் எடு.. நாங்க இங்க தான் இருப்பேன்.. என்ன வேணும்னாலும் என்ன கூப்பிடு.. அப்புறம் வாங்க போங்க பேசாம.. வா போன்னே பேசு” என்க
அவளும் சம்மதமாக தலையாட்டி சிரிக்க, தாராவோ நண்பனிடம் கண்ணை காட்டிவிட்டு வெளியே செல்ல,
தன்னவளின் பேச்சை ரசித்தவன், நண்பி அழைத்ததும் அவள் பின்னேயே சசியின் அறைக்குள் நுழைந்தான்
தன்னவனை முறைத்துவிட்டு ஆதியின் புறம் திரும்பியவள் “ஆதி நாளைக்கு டிஸ்சார்ஜ் முடிஞ்சதும் வீட்டுக்கு கூட்டிட்டு போகனும்.. அம்மா அத்தைகிட்ட பேசிட்டியா”
“இல்லடி.. டெல்லிக்கு கூட்டிட்டு போறேன் ஒரு ஒன் ஆர் டூ வீக் அங்கேயிருந்துட்டு அப்புறம் தான் வீட்டுக்கு கூட்டி வருவேன்”
“இப்போ எதுக்கு டெல்லிக்கு..”
“அவளுக்கு கொஞ்சம் கியூராகுற வர இங்கயிருக்கிறது சேபில்லன்னு தோணுது.. எப்போனாலும் அவ உயிரோட இருக்கிற விஷயம் தெரிஞ்சி அவள அட்டாக் பண்ண வருவாங்க..”
“உன் இஷ்டம்.. பட் இப்போவே வீட்டுல பேசிட்டு கூட்டி போ”
“நான் மட்டும் போகல கூட.. நீங்களும் தான் வரீங்க”
“உடனே வர முடியாது.. ஒரு முக்கியமான கேஸ் இருக்கு நாளைக்கு முடியவும் ரெண்டு மூணு நாளுல வரேன்”
“சரி மச்சான்.. அப்போ நீ வா.. அவ வேலை முடியவும் வரட்டும்.. ஹர்ஷா வரான்னான்னு கேட்டு சொல்லுறேன் சேத்து டிக்கெட் போடு” என்க,
சரியென்று கூற வந்த சசியோ எதையோ சிந்தித்து “இல்ல மச்சான்.. இந்த மந்த் நிறைய ஆபரேஷன் கமிட்மெண்டிருக்கு.. நீங்க போங்க எதாவது எமர்ஜென்ஸினா டெல்லிலயிருக்குற என்னோட ப்ரெண்ட்கிட்ட மகி பத்தி சொல்லுறேன் அவன் செக் பண்ணிப்பான்”
“ஓகே மச்சான்.. நான் ஹர்ஷாகிட்ட கேட்டு சொல்லுறேன்.. நீ டிக்கெட் போடு” என்று கூறிவிட்டு செல்ல,
சசியின் பதில் கேட்டு தாரணிக்கோ குழப்பம் ‘இன்று மதியம் கூட அவனை நினைத்து கண்ணீர் விட்டவன், இப்போது நண்பன் கூப்பிட்டு மறைப்பதற்கு ஏதோ காரணம் இருக்கிறது’ என்ற சந்தேக கண்ணை திறக்க,
சசியோ “என்னடி”
“சசி நீ ஏதோ மறைக்குற.. எதாவது இருந்தா என்னன்னு சொல்லு” என்க,
‘இவளிடம் சொல்லிவிடலாமா என்று எண்ணினாலும் இப்போது சொல்ல வேண்டாம்’ என்று முடிவெடுத்து “எதுவுமே இல்ல.. அப்படி இருந்தாலும் உன்கிட்ட கண்டிப்பா சொல்லுவேன்” என்று கூறினான்.
நண்பர்களிடம் பேசிவிட்டு ஹர்ஷாவை வெளியே அழைத்து டெல்லி போகும் எண்ணத்தையும், அதற்கான காரணத்தை பற்றி கூறியவன் அவனையும் அழைக்க, நண்பியின் நலனுக்காக அவர்கள் போவதற்கு சம்மதித்தவன், சில வேலைகள் இருப்பதாகவும் அதை முடித்துவிட்டு முறைப்படி விடுப்பெடுத்து தாராவுடன் இணைந்து வருகிறேன் என்று கூறியவனை தடுக்காமல், அவன் இஷ்டம் போல் விட்டுவிட்டான்.
தேடல் தொடரும்...
இப்படிக்கு
VSV42😍😍
Latest Post: வாகை சூடவா ரிவ்யூ Our newest member: Sahithya varun Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page