About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
தேடல் - 14
சசியின் அனுமதியோடு அவளை தொந்திரவு செய்யாமல் விழிகளால் வருடியவனுக்கு, இன்று காலை நிகழ்ந்த சம்பவமே நினைவில் வருவதால் ஒரு நிமிடம் கூட,
அவனால் அங்க நிற்க முடியாமல் வேகமாக வெளியே வந்தமர்ந்து கண்கள் மூடியவனுக்கு ஒரு வாரத்திற்கு முன் அவளை சந்தித்த போது நிகழ்ந்த நிகழ்வுகளே கண்முன் தோன்றியது.
தோழிக்காக உதவி கேட்டு ஆதிரனை சந்தித்துவிட்டு வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தவளுக்கு, அவளின் அலுவகத்திலிருந்து முக்கியமான வேலையாக உடனே வரும்படி அழைத்ததால் வீட்டிற்கு செல்லாமல் அலுவலகதிற்கு சென்று வேலையை முடித்துவிட்டு,
இரவு நேரம் கிளம்பியவள் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்க, அவ்வழியாக வந்த ஆதியோ “ஏய்.. சவுண்ட் சரோஜா இங்க என்ன பண்ற”
“ஹான்.. தெரு பெருகிட்டுருக்கேன்.. பஸ் ஸ்டாண்டுல எதுக்கு நிப்பாங்க”
“ஓகே கூல்.. உன் பைக் என்னாச்சி”
“பைக்ல பெட்ரோல் இல்ல.. வீடு வரைக்கும் தள்ளிட்டு போக முடியாதுன்னு.. ஆபீஸ்ல விட்டுட்டு பஸ்ல போகலாம்ன்னு வந்தேன்”
“பெட்ரோல் கூடவா வாங்கி வைக்க மாட்ட”
அதில் கடுப்பானவள் “ப்ச்.. உன்ன பீச்ல பாத்துட்டு வீட்டுக்கு தான் போனேன்.. ஆனா.. ஆபீஸ்ல அர்ஜன்ட்ன்னு உடனே வர சொன்னதுல வாங்க மறந்துட்டேன்.. போதுமா”
“ஓகே.. உனக்கு ஹெல்ப் பண்ண தான் கடவுள் என்ன அனுப்பி வச்சிருக்கார் போல.. வண்டில ஏறு ட்ராப் பண்றேன்”
“தோடா.. நான் போகிற இடமெல்லாம் ஃபாலோ பண்ணிட்டு வந்துட்டு கடவுள் அனுப்பி வச்சாராமே.. நல்லா கதை அடிக்கிற மேன்”
“உன்ன பாலோ பண்ற அளவுளாம் நீ வொர்த் பீஸ் இல்ல.. இருந்தாலும் உனக்கு ஹெல்ப் பண்ண நினைச்சேன் பாத்தியா என் தப்பு தான்.. பஸ் வந்ததுமே போ.. பாய்” என்று கூறி பறந்து விட,
“அடப்பாவி.. பொசுக்குன்னு போயிட்டானே.. வாய வச்சிட்டு சும்மா இருந்துருக்கலாம்.. இனி பஸ் வந்து எப்போ போய்..
இந்த தவள வாயன் வாயுலயே மிதிக்கணும்.. காலைல பெட்ரோல் வாங்கி வைக்க சொன்னா.. நாய் வாங்கி வைக்காம போயிட்டு” என்று இரு ஆடவர்களையும் மனதிற்குள் அர்சித்தவாறு சாலையை வெறித்து கொண்டிருந்தாள்.
அப்போது, அவ்வழியாக வந்த இரு ஆடவர்கள் அவளை விட்டு இரெண்டடி தள்ளி இருபக்கமும் நின்றவர்கள் சிறிது சிறிதாக அவளை நெருங்கி கைப்பையை இழுக்க தொடங்க, அதை உணர்ந்து சுதாகரித்தவள் “டேய் விடுங்கடா.. என் பேக்ல அம்பது ரூபா தவிர நயா பைசா இல்லடா..”
“அத நாங்க பாத்துக்குறோம்.. பேக்க கொடுடி இல்ல.. இல்லன்னா உன்ன அறுத்துருவேன்” என்று கூறி கத்தியை காட்டி அவளை குத்த வர, பயத்தில் கண்களை மூடி கொண்ட பெண்ணவளோ,
அவன் அலரும் சத்தம் கேட்டு ‘உயிரோட தான் இருக்கோம்’ என்று எண்ணி, எதிரே நிற்பவனின் கையை முறுக்கிய ஆதிரனை கண்டு ‘அட நம்மாளு’ என்று கண்கள் மின்ன அவனை பார்க்க,
அவனோ “என்னமோ சொன்னியே.. ஹான் அறுத்துருவேன்னு சொன்னேல.. இப்போ அறுடா பாப்போம்” என்று இரு ஆடவர்களையும் அடித்து வெளுத்தில் அவர்களும் ஓடி விட,
அது கூட தெரியாமல் தன்னை இமைக்காமல் பார்ப்பவளை கண்டு ஒரு நொடி தன்னை இழந்தவன் பின் “ஏய் சவுண்ட் சரோஜா.. போதும்டி சைட் அடிச்சது”
அதில் கண்களை சிமிட்டியவள் “ச.. இப்படியா பாத்து அசிங்கபடுவோம்” என்று நினைத்து அவன் டி என்று உரிமையாக அழைத்ததில் வெட்கத்தை மறைத்து
“எது.. சைட் அடிக்கிறேனா.. அப்போ போனது போல சீன் போட்டுட்டு இவ்வளவு நேரம் மறஞ்சி நின்னு சைட் அடிச்சது யாரு”
அவள் சீண்டும் பொறுத்து குத்து மதிப்பாக தான் கூறினாள்.
ஆனால், அவனுக்கோ சரியாக எப்படி கூறுகிறாள் ஒருவேளை பார்த்திருப்பாளோ என்று நினைத்து கொண்டு கெத்தை விட்டு கொடுக்காதவன் “ஒரு பொம்பிள பிள்ளைய தனியா விட்டுட்டு போகிற அளவு.. நான் கல்நெஞ்சகாரன் இல்ல”
“சரி.. நீ ரொம்ப நல்லவன் தான் ஒத்துக்குறேன்..” என்று கூறி, எங்கே தன்னை விட்டுவிட்டு போயிடுவானோ என்று அஞ்சி வேகமாக அவனின் பின்புறம் ஏறியவள் “சீக்கிரம் கிளம்பு” என்க,
அவனோ, அவள் செயலில் இதழ் விரித்து சிரித்து கொண்டே, அவள் கூறிய இடத்திற்கு வந்து வண்டியை நிறுத்த,
இறங்கியவள் “தேங்க்ஸ் ஆர்வகோளாறு.. அப்படியே மார்னிங்கும் வந்து ஆபீஸ்ல ட்ராப் பண்ணிட்டு போறது” என்று கூறியதை முறைப்பவனை கண்டு “அய்யோ.. உனக்கு வேலை இருந்தா வேண்டாம்.. நானே போய்க்குறேன்”
“வெயிட்.. நீ போட்ட சல்லேன்ஜ் முடிஞ்சி ரெண்டு தடவ மீட் பண்ணியாச்சு.. பட் உன்ன பத்தி எதுவுமே சொல்லவே இல்ல”
"டிடெக்டிவ் ஆபீஸ்ருக்கு என்ன பத்தி கண்டுபிடிக்குறதுல என்ன கஷ்டம்” என்பதை முறைப்பவனை கண்டு
“சரி சொல்லுறேன் எல்லாத்துக்கும் முறைச்சா எப்படி.. ஐ அம் மகிழ்மதி, சொந்த ஊர் மதுரை.. எக்ஸ்பிரஸ் பிராஞ்ச்ல ஜர்ணலிஸ்டா வொர்க் பண்றேன்.. இப்போதைக்கு இது போதும் முடிஞ்சா இதவச்சி உனக்கு தேவையானத நீயே கண்டுபிடிச்சிக்க, வரட்டா” என்று கூறி நடப்பவளை கண்டு “ஏய்.. எங்க போற”
“அது என்னோட வீடு இல்ல.. இது தான் என் வீடு.. பாய்” என்று கண்சிமிட்டி செல்ல, பாவம் மங்கையின் பாவனைகளில் ஆடவன் தான் நிலை தடுமாறினான்.
அடுத்ததாக நண்பி மருத்துவமனையிலிருந்து வந்த மறுநாள் தன்னவளின் நினைவில் அவளை காண சென்றவன் வீட்டிற்கு சிறிது தள்ளி வண்டியை நிறுத்தி உள்ளே செல்ல எத்தனிக்க, அன்று அவளை தாக்க வந்த ஒருவன் உள்ளே நுழைவதை கண்டு, அவனை இழுத்து சிறிது தூரம் தள்ளி வந்து மூக்கிலே குத்த,
அடிவாங்கியவனோ இரத்தம் வடிய அவனை அருகிலிருந்த மரத்தில் தள்ளிவிட, அதில் நெற்றியில் கீரியதால் வந்த ரத்தத்தை தொட்டுபார்த்து திரும்ப, அதற்குள் அவனோ தப்பி சென்றான்
இவ்வாறு ரெண்டு நிகழ்வுகளையும் மாறி மாறி நினைத்து பார்த்தவாறே நிகழ் உலகத்திற்கு வந்தவன் சசியின் அறைக்குள் சென்று “மச்சான்.. இந்த புட்டேஜ உன் லேப்டாப்ல கனெக்ட் பண்ணுடா” என்க,
நண்பன் கூறியதை செய்து அதை ஓட விட, இருவரும் அவை முடியும் வரை கூர்ந்து நோக்கினார்கள்.
அதில் வேகமாக வந்த கார் பூமியின் பைக்கை இடித்துவிட, மகியின் கையிலிருந்த திறன்பேசி கைப்பை மற்றும் பூமியின் திறன்பேசி பறந்து ஒரு இடத்தில் விழுந்தது,
காரிலிருந்து இறங்கிய ஒருவன் கைப்பையில் எதையோ தேடி எடுத்து பையை கீழே போட்டுவிட்டு காரில் ஏறி பறந்து விட்டார்கள்.
அதோடு, அவர்கள் கார் இடித்ததில் தூக்கி வீசப்பட்டதும் தெரிய, அதில் மகியை இந்நிலையில் கண்டதுமே இதயம் துடி துடிக்க, மற்ற எதையும் அவனால் கூர்ந்து கவனிக்க முடியவில்லை
அதை உணர்ந்த சசியோ “மச்சான்.. நீ உக்காரு நான் எதாவது க்ளூ கிடைக்குதான்னு பாக்குறேன்”
“ஐ ஆம் ஓகே மச்சான்.. மறுபடியும் முதலிருந்து ஓட விடு” என்று கூறி மறுபடியும் அதை பார்க்க, இம்முறை தான் கார் எண்ணியிலிருந்து இறுதியாக ஒருவன் கைப்பையில் எதையோ எடுப்பதையும் கண்டவனுக்கு அவனின் முகம் சரியாக பதியவில்லை என்பதால்
அவனை அடையாளம் காண முடியாமல், அனைத்தையும் நன்றாக நோட்டமிட்டவன் மச்சான் “இத என்னோட வாட்ஸ்அப்க்கு செண்ட் பண்ணுடா.. அப்புறம் நாளைக்கு மகி வீடு வர போயிட்டு வரலாம்” என்று வெளியே வந்தவன் தன்னவள் இருக்கும் அறைக்கு, வெளியே நின்று காவல் காக்க தொடங்கினான்.
அன்றிரவு முழுவதும் அவள் கண்விழிப்பதற்காக, இவன் விழி மூடாமல் காத்து கொண்டிருக்க, நண்பனை இந்நிலையில் விட்டு பிரிய மனமில்லாத மருத்துவன் சசியோ அவ்வப்போது மகியை பரிசோதிக்கும் வேலையையும் பார்த்து கொண்டான்.
*******
மறுநாள் காலையில் மகிழ்மதி கண்விழித்ததாக கூறிய செவிலியரின் பின்னால் சென்ற இரு ஆடவர்களும், தலையை பிடித்தவாறு முகம் சுருக்கி அமர்ந்திருப்வளை காண, சசி அவளை பரிசோதித்தான்.
அப்போது மெல்ல குனிந்து தன் கழுத்திலிருந்த தாலியை கண்டு தன்னை பார்த்து கொண்டிருப்பவனை கண்டவள் “ஆமா.. நீங்க யாரு.. என் கழுத்துல எப்படி தாலி.. எனக்கு எப்போ கல்யாணமாச்சு” என்று வரிசையாக கேள்வியை அடுக்க,
அவள் யாரென்று கேட்டதிலே நெஞ்சில் எழும் வலியை கட்டுப்படுத்தியவன் அவளருகில் அமர்ந்து “மகிழ் உன் கழுத்துல தாலி கட்டின புருஷன் நான் தான்.. உனக்கு ஆக்சிடென்டானதுல பழச மறந்துட்ட.. சோ ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத பிளீஸ்.. உனக்கு காயமாறவும் எல்லாத்தையும் எக்ஸ்பிளைன் பண்றேன்” என்க,
அவன் புருஷன் என்று கூறிய வார்த்தை மட்டும் கேட்டு,
‘எப்போது கல்யாணம் நடந்தது எனக்கு எதுவும் ஞாபகமில்லையே’ என்று அவன் கூறிய மற்ற எதையும் கேட்காமல் சிந்தித்தவள் அப்படியே மயங்கி விட, ஆதியோ “மச்சான்.. என்னாச்சிடா அவளுக்கு”
“தனக்கு எப்போ கல்யாணமாச்சுன்னு யோசிக்க டிரை பண்ணிருப்பா.. அதுனால மயங்கிட்டா..” என்று அவளின் ரிப்போர்டை பார்த்து “மச்சான்.. அடிப்பட்டதுல பழச மறந்துட்டா.. மத்தப்படி ஷீ ஸ் ஆல்ரைட் பட் காயமாருற வரை ஓவர் தின்கிங் இருக்கிறது நல்லதில்ல.. இப்போ அவ ரியாக்ட் பண்ணினத வச்சி பாக்கும் போது குறிப்பிட்ட காலத்த மட்டும் மறந்திருக்கா..
அதுல நீயும் அடக்கம்.. மத்தப்படி அவளோட ப்ரண்ட்ஸ் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் அவளுக்கு ஞாபகமிருக்கும்.. அவளுக்கு அடுத்து கான்ஸ்கியஸ் வந்தா தான் எங்கிருந்து மறந்துருக்கான்னு கண்டுபிடிக்க முடியும்” என்க,
அடுத்ததாக நண்பனுடன் மகியின் வீட்டிற்கு வந்தான்.
பூட்டியிருந்த வீட்டை திறந்து கொண்டிருந்த ஆதியிடம் “என்னடா.. அவ வீட்டு சாவிய நீ வச்சிருக்க.. அடிக்கடி வந்து போறியா?”
“டேய்.. அவ ஹேன்ட்பேக் நம்மகிட்ட தான இருக்கு.. அதிலிருந்து எடுத்தேன்” என்று உள்ளே சென்று இரு அறைகளில் ஒரு அறைக்குள் நுழைந்தவன் சுற்றி பார்வையை சுழலவிட்டு தன்னவள் அறை என்பதை கண்டு
“மச்சான்.. அவ லேப்டாப் அப்புறம் எதாவது டைரி.. அந்த மாதிரி ஏதாவது முக்கியமான திங்க்ஸ் கண்ணுல பட்டாலும் எடுத்துக்க.. நான் போய் லாக்கர் செக் பண்றேன்” என்று கூறி அதை திறந்தவன், அதிலிருப்பதை எடுத்து ஆராய நேரமில்லாததால் அனைத்து கோப்புகளையும் எடுத்து பையில் போட்டுக் கொண்டான்.
அதோடு தன் பார்வையில் சந்தேகப்படும் பொருளையும் எடுத்து கொள்ள,
சசியோ “மச்சான்.. இந்த போட்டோ பாருடா.. இந்த பிள்ளைக்கு இவன் ரொம்ப க்ளோஸ்ன்னு நினைக்கிறேன்.. அவன் பர்த்டேக்கு இந்த பிள்ளை கிஃப்ட் கொடுத்துருப்பா போல” என்று கூறி கீழே ‘ஹேப்பி பர்த்டே தவள வாயா’ என்று பொறிக்கப்பட்டதை கண்டு புன்னகைத்தவனோ
“மச்சான்.. இந்த தவளை வாயன்.. இப்போ எங்க இருப்பான்” என்று கேட்டு கொண்டிருக்க, அவனின் கேள்விக்கானவனோ நேற்று சென்னை வந்து நண்பியை செல்லும் இடங்களில் தேடி விசாரித்துவிட்டு சோர்ந்த முகத்துடன், அப்போது தான் வீட்டிற்கு வந்தவன் வீடு திறந்திருப்பதை கண்டு யோசனையாக உள்ளே வந்து,
தோழியில் அறையில் சத்தம் கேட்பதில் அங்கு விரைய,
அவனை கண்ட சசியோ கையிலிருந்த புகைப்படத்தையும் எதிரில் நிற்பவனையும் மாறி மாறி பார்த்து கொண்டு “டேய் மச்சான் தவள வாயன்டா” என்க,
ஹர்ஷாவோ “டேய்.. யாருடா நீங்க.. மதி ரூமுல என்னடா பண்றீங்க” என்று ஆதியின் சட்டையை பிடிக்க, அவனோ புருவம் உயர்த்தி “நீ யாரு”
“நான் யாருன்னு உனக்கு தேவையில்ல.. என்னோட வீட்டுக்கு வந்தது நீ தான.. மரியாதையா நீ யாருன்னு சொல்லு” என்க,
அவன் கரத்திலிருந்த தன் சட்டை விடுவித்து நெற்றியை நீவியவன் “நான் உன் பிரென்டோட புருஷன்” என்று கூற, சசியோ அதிர்ந்து விட்டான்.
தன்னை சந்தேகமாக பார்க்கும் ஹர்ஷாவிடம் “இதோ பாரு.. இப்போ நம்புறியா.. நான் உன் ப்ரெண்டும் ஒருத்தர் ஒருத்தர் லவ் பண்ணினோம்..
அவ வீட்டுல கல்யாணம் பண்ணிக்க சொல்லி ஃபோர்ஸ் பண்ணினதுல.. வேற வழியில்லாம ரெண்டு பேரும் நேத்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. இது போதுமா.. இப்போ நீ யாருன்னு சொல்லு” என்று மகியின் தோல் மேல் கைபோட்டு அவளுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை காட்டி கூறினான்.
அதை கண்டு ஹர்ஷாவை விட அதிர்ந்த சசி ‘ஆத்தி.. எம்புட்டு க்ளோஸ்.. பயபுள்ள எப்போவும் நம்ம கூட தான் சுத்துறான்.. எப்படி இந்த வேலைய பாத்துருப்பான்’ என்று எண்ணி இருவரையும் பார்க்க,
இதையெல்லாம் கண்ட ஹர்ஷாவுக்கு தோழி தன்னிடம் இவ்வளவு பெரிய விஷயத்தை மறைத்துவிட்டாளே என்று நெஞ்சில் வலி எழ, அக்கவலையை வெளிக்காட்டாமல் “நானும் அவளும் சின்ன வயசுலிருந்து க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்”
“ப்ரெண்ட்ன்னு சொல்லுற.. எதுவுமே தெரியாதா”
“தெரியாது.. நான் கொஞ்சம் நாளா சென்னைல இல்ல மும்பை போயிருந்தேன்.. நேத்து நேரா மதுரைக்கு அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்ன்னு போனேன்” என்று கூறி மதுரையில் அவள் வீட்டியில் நிகழ்ந்த நிகழ்வை கூறிவிட்டு
“அதுக்கு அப்புறம் சென்னை வந்து அவ போகிற இடம்லாம் அவள தேடி அலைஞ்சிட்டு வாரேன்” என்று தோய்ந்து அமர்ந்து விட்டான்.
அவனின் நிலை புரிந்து அருகில் அமர்ந்து தோலில் கைப்போட்ட ஆதியோ “உன் பெயர்”
“ஹர்ஷவர்தன்”
“ஹர்ஷா.. உன் ப்ரெண்டுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு.. இப்போ ஹாஸ்பிட்டல இருக்கா.. அதான் அவ உன்ன பாக்க வரல”
“என்ன சொல்லுற.. என்னாச்சி அவளுக்கு”
“ரெஜிஸ்டர் ஆபீஸ்ல.. அவள இறக்கிவிட்டுட்டு நான் பைக் பார்க் பண்ணின நேரம் கார் அவள மோதி ஆக்சிடென்டாயிடுச்சு.. அதுக்கு அப்புறம் செத்து போயிடுவாளோன்னு பயந்து சாகும் போது கூட என்கையால கட்டுற தாலியோட சாகனும்ன்னு.. நான் அவ்வளவு சொல்லி கேட்காம அவ தலைல சத்தியம் பண்ணி தாலி கட்ட வச்சிட்டா.. அப்புறம் ஹாஸ்பிட்டல அட்மிட் பண்ணிட்டோம் உயிருக்கு எந்த ஆபத்துமில்ல.. பட் தலைல அடிப்பட்டதுல பழச மறந்துட்டா..
இதோ நிக்குறானே இவன் என்னோட ப்ரெண்ட் சஷ்டிக் இவன் டாக்டர் தான்.. இவன் தான் மகிக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தான்” என்க,
இவன் கூறிய கதையெல்லாம் புதிதாக கேட்ட சசியோ, இறுதியாக அவன் கூறியதை கேட்டு தன்னை கண்டவனிடம் அனைத்தும் உண்மை என்றவாறு தலையையாட்டி வைத்தான்.
மேலும் தொடர்ந்து ஆதியோ “இங்க பாரு ஹர்ஷா.. இது சாதாரண ஆக்சிடென்ட் இல்ல.. மகிய கொலமுயற்சி பண்ணிருக்காங்க”
“எப்படி சொல்லுற”
அவனோ, ஒருவாரம் முன் மகியை கொலை முயற்சி செய்த நிகழ்வை கூறி “ஃபர்ஸ்ட் டைம் நான் கூட திருட வந்தவன்னு நினைச்சேன்.. செகண்ட் டைமும் அதே போல ஒருத்தன் வீட்டுக்கே கத்தியோட வந்தான்.. அப்போவே டவுட் வந்துச்சு.. கேக்கணும்ன்னு நினைக்கும் போது மகி ஊருக்கு போயிட்டா..
வந்ததும் என்னவோ நடந்து போச்சு.. இப்போ நடந்த எல்லாத்தையும் கூட்டி கழிச்சி பாக்கும் போது.. இது கொலமுயற்சின்னு தெரியுது.. அதான் அவ ரூம்ல எதாவது ஆதாரம் கிடைக்குதான்னு பாத்தேன்”
“அப்போ போலீஸ்கிட்ட போகலாம்”
“தேவையில்ல.. நானே டிபார்ட்மெண்ட் ஆளு தான்.. சீக்ரெட் டிடெக்டிவ்.. என் மகிழ கொல பண்ண முயற்சி பண்ணினவன எப்படி கண்டுபிடிக்கணும்ன்னு எனக்கு தெரியும்”
“என்ன ஹெல்ப் வேணும்னாலும் என்கிட்ட கேளுங்க”
“கண்டிப்பா.. உன்னோட ஹெல்ப் தேவைப்படும்.. இப்போ என்ன பண்ற மகியோட லக்கேஜ் பேக் பண்ணி கொண்டுட்டு ஹாஸ்பிட்டல் வா..” என்று கூறி இருவரும் அவளின் அறையிலிருந்து எடுத்த பொருகளுடன் வெளியே வந்தனர்.
இருவரும் காரி ஏற, இப்போது சசியோ “டேய்.. ஒரு நிமிஷம்.. நீ எப்படிடா அவ்வளவு தைரியமா அவன்கிட்ட நான் தான் புருஷன்னு சொன்ன.. அப்போ அவனுக்கு எதுவும் தெரியாதுன்னு உனக்கு முன்னமே தெரியுமா..”
“இல்லடா.. நீ தான் ஃபோட்டோ காமிச்சல அதவச்சே ரெண்டு பேரும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்ன்னு புரிஞ்சிது.. அதுமட்டுமில்ல இவனுக்கு தெரிஞ்சிருந்தா.. ஆஸ் ய க்ளோஸ் ப்ரெண்டா.. இவன் தான் முன்ன நின்னு அவ கல்யாணத்த நடத்திருக்கணும் ஆனா அப்படி எதுவும் நடக்கலயே அதவச்சி தான் கெஸ் பண்ணினேன்”
“சரி தான்.. நீ அந்த பொண்ணு கூட எடுத்த போட்டோ”
“அது.. நான் முன்னமே எடிட் பண்ணினதுடா” என்றவனின் மூளையோ அவள் நண்பனின் காதலி என்று உரைத்ததில் முகம் வாடினான்.
அதை சரி செய்யும் பொருட்டு சசியோ “அடேய்.. எதாயிருந்தாலும் சொல்லிட்டு செய்டா.. எனக்கு திக்குன்னு இருக்கு” என்று கூறியதை கேட்டு போலி புன்னகையை சிந்தியவன் மருத்துவமனைக்கு சென்றான்.
தேடல் தொடரும்...
இப்படிக்கு,
VSV42😍😍
Latest Post: வாகை சூடவா ரிவ்யூ Our newest member: Sahithya varun Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page