About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
தேடல் - 12
இன்றைய நேரத்தை வீட்டியிலே கழித்தவள் மதிய உணவருந்த தந்தையுடன் அமர, அவளின் அன்னையோ மகளுக்காக சமைத்த பிடித்தமான உணவை இருவருக்கும் பரிமாற, சாப்பிட்டுக்கொண்டிருந்தவள் “அம்மா.. இன்னும் ரெண்டு நாள்ல சென்னை கிளம்பிடுவேன்” என்று கூறியதை கேட்டு பெற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள, மாதவியோ மகளிடம் பேச சொல்லி கணவனிடம் கண்ணை காட்ட, அவரும் சமதமாக தலையசைத்து மகள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தார்.
சாப்பிட்டு முடித்து கை கழுவியவள் தொலைக்காட்சி பார்ப்பதற்காக அமர, பெற்றவர்கள் இருவரும் தன்னருகில் அமர்ந்ததில் தொலைக்காட்சியை அணைத்துவிட்டவள் ‘சொல்லுங்க’ என்பது போல் அவர்களை காண,
மகளின் கைபற்றிய தந்தையோ “மதிமா.. இன்னும் ரெண்டு நாள் எக்ஸ்ட்ரா இருந்து சென்னை போகலாம்டா”
“ஏன்பா”
“அப்பா கொஞ்சம் மாசம் முன்னாடியே உனக்கு வரன் பாக்க ஸ்டார்ட் பண்ணிட்டேன்டா.. இந்த தடவ தான் ஒரு ஜாதகம் பொருந்தி வந்திருக்கு.. அதோட நான் விசாரிச்சது வர குடும்பமும் நல்ல குடும்பம் பையனும் நல்ல பையன்.. எங்களுக்கும் இந்த வரன் திருப்தியா இருந்துச்சு..
அவங்க இன்னும் ரெண்டு நாள்ல பொண்ணு பாக்க வாரோம்ன்னு சொல்லிருந்தாங்க.. அதுனால நீ பாத்து பேசி உனக்கு பிடிச்திருந்தா மேற்கொண்டு கல்யாணத்த பத்தி பேசலாம்”
“அப்போ.. நான் யார பிடிச்சிருக்குன்னு சொல்லுறேனோ அவர தான் எனக்கு கட்டி வைப்பீங்க?”
“கண்டிப்பா மதிமா.. உன்னோட வாழ்க்கைகான நபர தேர்ந்தெடுக்க உனக்கும் உரிமையிருக்கு”
“ம்.. எனக்கான நபர நானே தேர்ந்தெடுத்துட்டேன்.. சோ அவரையே நீங்க எனக்கு கட்டி வச்சிடுங்க” என்று கூறியதை கேட்டு உலகநாதனோ உறைந்து விட, அவளின் அன்னையோ “மதி.. என்னடி இதெல்லாம்”
“ஆமாமா.. அப்பா தான எனக்கு உரிமையிருக்குன்னு சொன்னாங்க.. அதான் நான் விரும்புறவரையே எனக்கு கட்டி வைங்கன்னு கேக்குறேன்.. இதுல என்ன தப்பிருக்கு”
“இந்த காதல் மண்ணங்கட்டிலாம் அப்பாக்கு பிடிக்காதுன்னு தெரியும் தான.. ஏன் சென்னைக்கு நீ வேலைக்கு போகும் போது கூட படிச்சி படிச்சி சொல்லி தானடி அனுப்பினோம்.. அவர் நம்பிக்கைய சிதச்சிட்டியேடி”
“அம்மா.. அவர் ரொம்ப நல்லவர்.. எனக்கு அவர தான் பிடிச்சிருக்கு” என்று கூறி தந்தையின் புறம் திரும்பியவளோ “அப்பா.. அவரு பெயர் பூமிநாதன் சென்னைல ஒரு பெரிய காலேஜ்ல பிராப்போஸரா இருக்கார்.. நல்ல சம்பளம் என்ன நல்லா பாத்துப்பார்.. சின்ன வயசுலயே அம்மா அப்பாவ இழந்து அனாத ஆசரமத்துல தான் வளர்ந்தார்.. என்மேல உயிரையே வச்சிருக்கார்.. என்னலாயும் அவர தவிர யாரையும் நினைச்சி பாக்க முடியாது”
“என்னோட தங்கச்சி செத்து போன அன்னைக்கு தான்.. நீ பிறந்த அதுனால என் தங்கச்சியே மறுபிறவி பிறந்திருக்கான்னு நினைச்சி.. அவ பெயர உனக்கு வச்சி என் தங்கச்சி பக்கத்துல இருக்கிறதா நினைச்சி தான் உன்ன வளத்தேன்..
ஆனா, அவ காதலங்குற சாக்கடையில விழுந்து வாழ்க்கைய சிதச்சது மட்டுமில்லாம என்னவிட்டு மொத்தமா போயிட்டா.. இப்போ நீ வந்து நிக்குற.. அதே போல உன்ன இழக்க நான் தயராயில்ல..”
“அப்பா..”
“மதிமா.. எனக்கு நீ பண்ணின காரியத்துக்கு பயங்கரமா கோவம் வருது.. ஆனாலும் பொறுமையா பேசுறேன்.. தயவு செஞ்சி என் பொறுமைய சோதிக்காத”
“அப்பா.. ஒரு தடவ அவர்கிட்ட பேசி பாருங்க.. கண்டிப்பா அவர உங்களுக்கும் பிடிக்கும்”
“இப்போ சொல்லுறேன் கேட்டுக்க, இதுவரை உனக்கு உடனே கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு ஐடியா இல்ல.. ஆனா இப்போ முடிவு பண்ணிட்டேன்..
நீ மறுபடியும் சென்னைக்கு போகனும்ன்னா அது உன் கழுத்துல தாலி ஏறினா தான் போக முடியும்.. அதுவும் நான் பாக்குற பையனோட.. ரெடியா இரு ரெண்டு நாள்ல மாப்பிளை வீட்டுலிருந்து வருவாங்க” என்று கட்டளையிட்டு மனைவியிக்கு கண்ணைகாட்டி எழுந்து சென்றுவிட, அவரும் மகளை அழுத்த பார்வை பார்த்துவிட்டே சென்றார்.
தந்தை இறக்கிய இடியை கேட்டு பெண்ணவள் இடிந்து விட, என்ன செய்வதென்று தெரியாமல் அறைக்குள் சென்று கதவை தாழிட்டு படுக்கையில் அமர்ந்து அடுத்தது என்னவென்று யோசித்தவள் ஒரு உறுதியான முடிவுடனே பூமிநாதனுக்கு அழைத்தாள்.
அழைப்பை ஏற்றவன் “மதி பேபி.. எப்போடி வருவ.. சத்தியமா நீயில்லாம முடியல”
“பூமி நான் உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்”
“சொல்லு பேபி”
“எங்க வீட்டுல நம்ம லவ் பத்தி சொன்னேன்.. அப்பாக்கு பயங்கரமா கோவம்.. உடனே அப்பா ரெண்டு நாள்ல பொண்ணு பாக்க மாப்பிளை வீட்டிலயிருந்து வாராங்க கல்யாணத்த முடிச்சிட்டு சென்னை போன்னு சொல்லிட்டார்.. அதுனால தான் நான் நல்லா யோச்சி ஒரு முடிவெடுத்திருக்கேன்” என்று கூறியதை கேட்க கேட்க உறைந்தவன்,
இறுதியாக அவள் முடிவென்று கூறியதும் எங்கே தன்னைவிட்டு பிரிந்துவிடுவாளோ என்று பயம் வர, எதையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் தடுமாறியவாறே “என்ன முடிவு”
“இன்னைக்கு நைட் வீட்டுக்கு தெரியாம சென்னை வந்துடுவேன்.. நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் ரெஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று கூறியதை கேட்டு,
தனக்காக அவள் முடிவெடுத்ததில் ஒரு பக்கம் மகிழ்ச்சி எழுந்தாலும் மறுபக்கம் தனக்காக அவள் பெற்றோரை பிரிவதில், அவனுக்கு சிறிதும் உடன்பாடு இல்லாததால் “மதி பேபி.. நான் வந்து பேசி பாக்குறேன்டா.. ரொம்ப அவசரப்படுறேன்னு தோணுது”
“இல்ல பூமி.. என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்ல.. நாளைக்கு நமக்கு கல்யாணம் நடக்கணும் அவ்வளவு தான்.. அதுக்குப்புறம் வீட்ட நான் சமாளிச்சுப்பேன்” என்று கூறியதை கேட்டு பதில் வரவில்லை என்றதும்
“பூமி உனக்கு என்மேல இருக்கிற காதல் உண்மைன்னா நாளைக்கு என்னோட கழுத்துல தாலி கட்டுற.. நைட் ட்ரெயின் ஏறிட்டு மெசேஜ் பண்றேன்.. நடக்க வேண்டிய வேலைய பாரு” என்று கூறி அழைப்பை துண்டித்தவள், தான் செய்ய போகும் செயலை நினைத்து நொந்து அழுது கரைந்தாள்.
****
மதி பேசியதை கேட்டு குழப்பமிகுந்தாலும், இப்போது யோசிப்பதற்கு நேரமில்லாததால் அவள் திட்டத்தை செயல்படுத்த எண்ணியவன் நண்பனிடம் உதவி கேட்க, அவனின் வீட்டை நோக்கி சென்றான்.
அப்போது தான் சசி மருத்துவமனைக்கு சென்றியிருக்க, ஆதியோ தன்னுடைய அலுவலக அறைக்கு சென்று வழக்கு சம்பந்தமாக கணினியில் தட்டிகொண்டிருக்க, அழைப்புமணி சத்தம் கேட்டு கதவை திறந்தவனோ வெளியே நண்பன் நிற்பதை கண்டு “வாடா பூமிநாதா” என்று தோலில் கைபோட்டு உள்ளே அழைத்து வந்து குடிப்பதற்காக தேனீரையும் கொடுத்துவிட்டு, அவன் முகம் வாட்டதத்தை கண்டவன் “மச்சி.. எனி திங்க் சீரியஸ்டா?” என்று கேட்டதில் அனைத்தையும் நண்பனிடம் கூறினான்.
“ம்ம்.. கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணிட்ட தான.. அப்போ கன்புஷன்லாம் தூர வச்சிட்டு ஜாலியா பண்ணிக்க..”
“எனக்கு உடன்ப்பாடு இல்லடா.. இருந்தாலும் அவ பிடிவாதமா இருக்கா”
“அதான் அவளே ஸ்டராங்கா இருக்காளே.. சோ தைரியமா உன்ன நம்பி வருற பொண்ணு கழுத்துல தாலி கட்டுடா.. அதான் நாங்க இருக்கோம்ல பாத்துக்ககலாம்”
“தேங்க்ஸ்டா.. அப்புறம் மார்னிங் எல்லாரும் ரெஜிஸ்டர் ஆபீஸ் வந்துருங்க.. அவங்க ரெண்டு பேர்கிட்டயும் சொல்லிடு.. அவங்க வீட்டுல இல்லையா”
“சசி ஏதோ எமர்ஜென்ஸின்னு ஹாஸ்பிட்டல் போனான்.. தாரா ப்ரெண்ட் வெட்டிங் போயிருக்கா மே பீ வர டூ டேஸாகும்.. அவ வந்ததும் சொல்லிக்கலாம்.. சசிய கூட்டிட்டு கண்டிப்பா வந்துருவேன் அதுவும் உனக்கு சாட்சி கையெழுத்து போட போடுறதே நான் தான்.. சோ டோண்ட் வொர்ரிடா” என்று கூறியதை கேட்டு நண்பனை அணைத்து விடுவித்தவன் “சரிடா அப்போ நாளைக்கு பாக்கலாம்” என்று கூறி வெளியே சென்றவனை வழியனுப்ப வந்த ஆதியோ “டேய்.. உன் பைக் எங்க”
“சர்வீஸ் விட்டுருக்கேன்டா.. ஆட்டோல வந்தேன்” என்று கூற, ஆதியோ தனது வண்டி சாவியை தூக்கி வீச, அதை வாகாக பிடித்தவனோ நண்பனின் வண்டியை எடுத்துகொண்டு அங்கிருந்து விடை பெற்றான்.
**
அன்று இரவு வரை அறையினுள்ளே நேரத்தை கழித்தவளை, அவளின் பெற்றோர்களும் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட, பெண்ணவளோ உடைகளை அடுக்கிவிட்டு பெற்றோர்களுக்காக கடிதத்தை எழுதி தெரியும்படி வைத்துவிட்டு தயாராகியவள் பெற்றோர்கள் தூங்கும் நேரம்வரை காத்திருந்து தன்னறையிலிருந்த ஜன்னலுக்கு இடையில் எந்த கம்பிகளும் இல்லாததால், அதில் ஏறி குதித்து ரயில் நிலையத்திற்கு சென்றவள் சென்னை ரயிலில் ஏறி, பூமிக்கு குறுஞ்செய்தி அனுப்பிட்டு ஜன்னல் வெளியே தெரியும் இருட்டை வெறித்து சில நிகழ்வுகளை சிந்தித்தவாறே உறங்கி போனாள்.
தான் இறங்கும் இடம் வரப்போவதை உணர்ந்து கண்விழித்தவள் உடமைகளை எடுத்து கொண்டு ரயில், நிலையத்தில் நிற்கவும் வேகமாக இறங்கி ஆட்டோ பிடித்து தன்னுடைய வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு, திருமணம் என்பதால் புடவை கட்டி சிறு ஒப்பனையில் தன்னை அலங்கரித்து கொண்டு, பூமிக்கு அழைத்து வந்து அழைத்து செல்லும்படி கூறிவிட்டு அவன் வரும்வரை காத்திருந்தாள்.
அவளை அழைக்க வந்தவனோ, வெளியே வரும்படி கூறிவிட்டு தன்னவளின் வருகைக்காக வாசலையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவன், அவள் அழகை கண்டு கிறங்கியவன்,
சிவப்பு நிற புடவைக்கு சிறிது நகைகளையும் அணிந்து ரெண்டு பக்கமும் முடிவை இழுத்து குத்தி விரித்து விட்டு, நெற்றியில் சிறியளவில் வட்ட வடிமான கருப்பு போட்டு வைத்து கண்களில் மை தீட்டி, எப்போதும் உதடிற்கு சாயம் பயன்படுத்தாதவள் இன்று சாயத்தால் உதடு சிறிது சிவந்திருக்க, அதற்கில் இருக்கும் அவளின் மச்சமென்று அவளின் அழகை கண்களால் வருடியவனுக்கு, அவளை அணைக்க பரபரத்த கைகளை கட்டுப்படுத்திவிட்டு “பேபி.. செம கியூட்டா இருக்க”
அவனும் கல்யாணம் தோரணையில் சட்டை வேஷ்டியில் இருப்பதை பார்த்தவள் “நீயும் அழகா இருக்க.. எல்லாம் ரெடி தான கிளம்பலாமா”
“ரெடி தான்.. நான் சொல்லிருக்கேன்ல எனக்கு எல்லாமே என்னோட க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்ன்னு.. அவனுங்க நேரா ரெஜிஸ்டர் ஆபீஸ் வருறதா சொன்னானுங்க” என்று கூறி நண்பனுக்கு அழைத்தான்.
ஆதியோ, நேற்று சசி மருத்துவமனையிலே இருந்து விட்டதால் அவன் காலை வந்ததுமே விஷயத்தை கூறி, அவனுடன் அப்போது தான் காரில் ஏறியவன் பூமியின் அழைப்பை ஏற்று “ஆன் தி வே மச்சி” என்று கூற, அதை கேட்ட பூமியும் தன்னவளை அழைத்து கொண்டு பதிவு அழுவலகத்தை நோக்கி சென்றான்.
வந்து கொண்டிருக்கும் போது நண்பன் ஹர்ஷாவுக்கு ரெண்டு மூன்று முறை அழைத்து பார்த்து சோர்ந்தவளின் திறன்பேசியில் குறுஞ்செய்தியை பார்த்தவள் கண்கள் விரிய அதிர்ந்த நேரம், பதிவு அலுவலகத்தில் சற்று தள்ளி வண்டி நிறுத்திய பூமியோ,
அவள் இறங்காமல் இருப்பதை உணர்ந்து அவளின் புறம் பார்வை திருப்பிய நேரம் பின்னே வேகமாக வந்த கார் அவனின் பைக்கை பலமாக அடிக்க, அதில் இருவரும் சிதறி தனியே தனியே விழுந்து கிடந்தனர்.
அப்போது, அங்கு சசியுடன் வந்து சேர்ந்த ஆதியோ நண்பனை கண்டு பதறி ஓடி வந்து, அவன் கன்னம் தட்ட, அடிப்பட்டதில் ரத்தோடு தள்ளி விழுந்தவளின் கண்களோ ஆதி அவனருகில் செல்வதை கண்டு மூடியது.
நண்பணின் வருகை கண்டு உயிரை இழுத்து பிடித்த பூமியோ “மச்சான்.. மதி.. மதிய.. பாருடா” என்று திக்கி திணறி மதியை நோக்கி கைக்காட்ட, உடனே நம்பணிடமிருந்து மதியை நோக்கி இருவரும் சென்று அவளை திருப்பியதில் அவள் முகம் கண்டு ஆதியும் சசியும் ஒருசேர அதிர்ந்தனர்.
தேடல் தொடரும்..
இப்படிக்கு
VSV42😍😍
Latest Post: கையில் மிதக்கும் கனவா நீ..!! (முதல் பாகம்) - Story Thread Our newest member: Mohana Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page