All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தீரா காதலின் தேடல்..? , தேடல் - 9.

 

VSV 42 – தீரா காதலின் தேடல்
(@vsv42)
Estimable Member Author
Joined: 8 months ago
Posts: 43
Topic starter  

தேடல் - 9

 

தோழியிடம் பேசி முடித்த ரித்திக்கா சஷ்டிகிடம் பேசி நாளை முக்கியமான விஷயமாக சந்திக்க வேண்டுமென்று கூற, அவனும் வருவதாக ஒப்புக்கொள்ள, பிறகு இருவரும் சேர்ந்து ஒரு ரெஸ்டாரன்டில் சந்திக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டு அழைப்பை துண்டிக்க, அதன் பிறகு தோழி மகிக்கு அனைத்தையும் தெரிவித்து நாளை சந்திக்கலாம் என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட்டவளோ 

 

“ஏதோ தைரியத்துல அப்படி பேச ஓகே சொல்லிட்டோம்.. இருந்தாலும் ஒரு நல்ல மனுஷன ஹார்ட் பண்ணி பேச போறோமே கோபத்துல மனுஷன் கைநீட்டி அடிச்சிட்டா..” என்று எண்ணி மிரண்டு இரு கன்னத்தையும் தேய்த்து “அய்யோ.. நினைச்சாலே பயந்து வருதே.. பைரவா.. நீ தான் வலிய தாங்கிக்க எனக்கு தைரியத்த கொடுக்கணும்.. முடிஞ்சா.. இப்படியொரு விபரீதம் நடக்காம பாத்துக்கோ” என்ற வேண்டுதலுடன் நாளைய பொழுதை நினைத்து பயத்துடனே உறங்கி போனாள்.

 

******

 

மறுநாள் காலையில் தன்னுடைய வேலைக்கு விடுப்பு எடுத்துவிட்டு தன்னவளின் தமக்கையின் திருமணமன்று எடுத்த புகைப்படத்தை அல்பமாக மாற்றவதற்கான வேலையை சிரத்தையாக செய்து கொண்டிருந்தவனின் தோலில் அடிபோட்டவளோ “டேய் தவள வாயா.. என்னடா பண்ற”

 

அவள் அடித்ததில் ஏற்பட்ட வலியால் தோலை தடவியவனோ “ஹான்.. சுடுக்காட்டுக்கு போறேன் வரியா”

 

“உன் மாமியா வீடு அங்கையாடா இருக்கு.. சொல்லவே இல்ல”

 

அதை கேட்டு முறைத்தவனோ “இப்போ எதுக்கு வான்டடா வந்து மொக்க போட்டுட்டுருக்க”

 

"அது ஒன்னுமில்லடா.. இன்னும் மூணு நாள்ல ஊருக்கு போயிடுவேன்.. அதுக்கு அப்புறம் வந்து பாத்தா.. நீ இருப்பியான்னு கூட தெரியாதுல.. அதான் கடைசியா பேசலாம்ன்னு வந்தேன்”

 

“எதேய் கடைசியாவா.. என்னடி சொல்லுற.. நானே இன்னும் ரெண்டு நாள்ல மும்பை போறேன்டி”

 

நண்பனின் பாவனையில் பக்கென்று சிரித்துவிட, அதில் கடுப்பானவனோ “அடியே.. என்னத்தடி பண்ண.. இப்போவே அடி வயிறு கலங்குதுடி.. சொல்லி தொல”

 

“அடேய்.. அன்னைக்கு நான் கல்யாணத்துக்கு என்ன விஷயமா வந்தேன்னு மறந்துட்டியா என்ன”

 

“நல்லா ஞாபகம் இருக்கே.. உன்னோட புராஜக்ட் விஷயமா தான வந்த”

 

“சரி தான்.. ஆனா நீ எல்லாம் புரிஞ்சு தான் கேக்குறியாடா” என்று கூறியதை கேட்டு புரியாமல் விழிக்கும் நண்பனை கண்டு நக்கலாக சிரித்தவளோ “டேய் தவள வாயா.. என்னோட புராஜக்டே 

சதாசிவம் தான்.. அவர பத்தின விஷயம் வெளிய வருற நேரம்.. கண்டிப்பா என்ன கண்டுபிடிக்க டிரை பண்ணுவாங்க ஏன் அப்போ நீயும் தானடா மாட்டுவ.. ஆனா நீ அவரோட பொண்ணுக்கே ரூட் விடுற பாத்தியா.. வேற லெவல் போ”

 

“அட.. இப்படியொரு விஷயம் இருக்கா.. இத எப்படி மறந்தேன்” என்று கூறியவனின் முகமோ தன்னவளை நினைத்து ‘அப்போ விஷயம் வெளிய தெரியும் போது.. இதுக்கு பின்னாடி நான் இருக்கேன்னு தெரிஞ்சா.. இதுக்காக தான் அவள் கூட பழகினன்னு இதழ் நினைப்பாளோ” என்று எண்ணி வாட, 

 

மதியோ “ஹர்ஷா.. ஆர் யூ சீரியஸ்டா?”

 

“ஆமாடி.. அவள பாத்ததும் பிடிச்சிருக்குன்னு சொன்னேனே உன்கிட்ட” 

 

“டேய்.. இவ்வளவு சீரியஸ்ன்னு நான் நினைக்கலடா.. நீ மத்த பொண்ணுங்க மாதிரி தான் டைம் பாஸ் பண்றன்னு நினைச்சேன்.. சரி விடு உன் காதல அவகிட்ட சொல்லிட்டியா?..”

 

“ஆமா.. அவ அக்கா கல்யாணத்துல வச்சே புரோபோஸ் பண்ணிட்டேன்.. அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் ஒருத்தர் ஒருத்தர் மீட் பண்ணவே இல்ல.. அதான் ஆல்பம் கொடுக்கிற சான்ஸ் வச்சி மீட் பண்ணலாம்ன்னு சீக்கிரம் ரெடி பண்றேன்” என்று கூறியவன் மூளையோ ஏதோ சிந்தித்தது.

 

இப்போது நண்பனை கருத்தில் கொண்டு இவ்விஷயத்தை எப்படி எதிர்கொள்ளலாம் என்று சிந்தித்தவள் ‘எனக்கும் பூமிக்கும் கல்யாணம் முடிஞ்சதும்.. எல்லா விஷயத்தையும் எடுத்து சொல்லி ஹர்ஷாக்காக இதழிகாகிட்ட பேச சொல்லுவோம்.. அதுவரை சதாசிவம் பத்தி வெளிய தெரியாம பாத்துக்கணும்’ என்று எண்ணி நண்பனின் கையை பற்றியவள் “ஹர்ஷா.. சதாசிவத்த பத்தின விஷயம் வெளிய வரும்.. ஆனா, இதுனால உன் காதலுக்கு எந்த பிராப்ளமும் வராது”

 

“எப்படிடி முடியும்.. இதுக்குக்காக தான் நான் பழகி ஏமாத்திட்டேன்னு.. அவ நினைச்சா அடுத்த நிமிஷமே என்னோட காதல் ஒண்ணுமில்லாம போயிடும்”

 

“டேய்.. நான் அவகிட்ட பேசுறேன்”

 

“வேண்டாம்டி.. நீ உன்னோட புராஜக்ட சக்சஸ்புல்லா முடி.. விஷயம் வெளிய தெரிஞ்சப்புறமும்.. என்னோட லவ்மேல அவ சந்தேகப்படாம என்ன தேடி வந்தா பாக்கலாம்”

 

“பைத்தியமாடா நீ.. அது எப்படிடா இப்படி நடக்கும்.. நம்ம இதுக்காக தான் அவள தேடி போனோங்குறது உண்மை தான..”

 

“உண்மை தான்.. இதுக்காக தான் தேடி போனோம்.. பட் என்னோட காதல் உண்மை..” என்று தான் கூறியதை கேட்டு, தனக்காக பேச நினைக்கும் நண்பியை பேச விடாமல் தடுத்தவனோ

 

“வேண்டாம்டி.. இந்த விஷயத்த இப்படியே விடு.. என்னோட காதல் மேல எனக்கு நம்பிக்கயிருக்கு கண்டிப்பா என்னோட இதழ் எனக்கான காதலோட என்ன தேடி வருவா” என்று கூறிவிட்டு மடிக்கணினியில் கவனத்தை செலுத்த, 

 

அவனை பார்த்திருந்தவளுக்கு தன்னால் தான் நண்பனுக்கு இப்படியொரு நிலை ஆதலால் தாமே அதை சரி செய்து, அவன் காதலை சேர்த்து வைக்க தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டுமென்று முடிவெடுத்தவள் நண்பனுக்கு உதவி செய்யாத நிலையில் தள்ளப்பட போகிறோம் என்பதை உணராமல் போனாள்.

 

நண்பனை நினைத்து கவலை கொண்ட மனமோ, தன் அலைபேசியில் வந்த பூமியின் அழைப்பை கண்டு மேலும் பாரமேற, அங்கிருந்து தன்னறைக்கு வந்தவளோ ‘ஹர்ஷாகிட்ட.. இதுவரை என்னோட பெர்சனல் எதுவுமே மறச்சதில்ல அப்படியிருக்கும் போது பூமி பத்தி ஏன் சொல்ல முடியல.. இனி மறைக்க முடியாது ஊருக்கு போயிட்டு வந்து சொல்லிட வேண்டி தான்’ என்று எண்ணிக்கொண்டு பூமியுடன் சிறிது நேரம் அழைப்பு பேசிவிட்டு துண்டித்தவள் தன் பணியை கவனிக்கலானாள்.

 

************

 

மாலை நேரம் மருத்துவமனையை விட்டு வீட்டிற்கு வந்த சஷ்டிக்கோ குளித்து தயாராகி நண்பனையும் வற்புறுத்தி அழைத்து கொண்டு ரித்திக்காவை காண ரெஸ்டாரன்டில் காத்து கொண்டிருக்க, பெண்ணவளும் அதிக நேரம் காக்க வைக்காமல் தோழியுடன் வந்து அவர்களின் முன்னே நின்றவள் “இவ என்னோட ப்ரெண்ட் மகி.. ரெண்டு பேரும் சேந்து தான் ஷாப்பிங் வந்தோம்.. அதான் அவளையும் கூட்டி வந்துட்டேன்” 

 

அதற்கு சஷ்டிக்கோ “இட்ஸ் ஓகே ரித்தி.. நோ பிராப்ளம்..” என்று கூறி மகியிடம் “ஹாய் மகி” என்று கை குலுக்கிவிட்டு ‘இவ மச்சான் போட்டோல சைட் அடிச்ச பொண்ணாச்சே’ என்று எண்ணி நண்பனை பார்க்க, அவன் பார்வையால் அவளை களவாடி கொண்டிருப்பதை கண்டவனோ, இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக தெரியும் என்பது அறியாமல், அவனை அறிமுகப்படுத்த நினைத்து “இது என்னோட ப்ரெண்ட் ஆதிரன்” என்று கூறியதை கேட்டு பெண்கள் இருவரும் கைகுலுக்க, மகி மற்றும் ஆதியோ, இப்போது தான் முதல் முறை பார்ப்பது போல் பேச, ரித்திக்காவோ தன்னுடைய கல்யாணத்தை நிறுத்த உதவிய ஆதியை நன்றி தெரிவிக்கும் விதத்தில் பார்க்க, அவள் பார்வையிலே தன்னவள் அனைத்தையும் இவளிடம் கூறிவிட்டாள் என்பதை உணர்ந்து, அவள் நன்றியை ஏற்கும் வகையில் கண்களை மூடி திறந்தவனோ “டேய் மச்சான்.. நீங்க பேசுங்க.. நாங்க லாஸ்ட் டேபிள்ல இருக்கோம்” என்று கூறி மகியிடம் கண்ணைக்காட்டிவிட்டு செல்ல, அவளும் அவனுடன் இருப்பதாக கூறிவிட்டு அவர்களிடமிருந்து விடைபெற்று, அவன் பின்னே சென்று அவன் எதிரே அமர்ந்தவள்,

 

இவர்கள் இருவரையே பார்த்து கொண்டிருப்பதை கண்ட ஆதியோ “மிஸ் சவுண்ட் சரோஜா.. எவ்வளவு நேரமா என் மச்சானையே சைட் அடிப்ப.. கொஞ்சம் என்னையும் சைட் அடிக்கலாமே” என்று கூறியதை கேட்டு கோவமாக திரும்பியவள்,

 

அப்போது தான் அவன் தான் வாங்கி கொடுத்த உடை அணிந்திருப்பதை கண்டு விழிகளால் அவனை அளந்தவளின் இதழ் ‘சோ ஹேன்ட்சம்’ என்று முனுமுனுக்க, அதை படித்தவனோ “தேங்க்ஸ்”

 

“எதுக்கு”

 

“இந்த ஷர்ட்ல.. நான் பாக்க ஹேன்ட்சமா இருக்கன்னு சொன்னியே அதுக்கு”

 

“நான் அப்படி சொல்லவே இல்ல.. ஆனா நிஜமாவே இந்த ஷர்ட்ல ஹேன்ட்சமா தான் இருக்க” என்று தான் கூறியதை கேட்டு இதழ் விரித்து சிரித்தவனை கண்டு, அவளும் புன்னகைத்தாள்.

 

“பிடிச்சியிருக்கா” என்று கேட்டவனை கண்டு விழி விரித்து “என்ன” என்பதை தட்டு தடுமாறி அவள் கேட்பதற்குள் அவர்களின் நண்பர்கள் இருந்த திசையிலிருந்து வந்த சத்தை கேட்டு, அத்திசையை நோக்கி பார்வையை செலுத்தினார்கள்.

 

**********

 

நண்பர்கள் இருவர் சென்றதும் ரித்திக்காவோ முகத்தை சிறிது 

காட்டமாக வைத்தவாறு “உங்களுக்கு இது செகண்ட் மேரேஜ் தான”

 

“ஆமா.. உன் வீட்டுல சொல்லிருப்பாங்களே”

 

“இல்ல.. அவங்களுக்குள்ள மேலோட்டமா பேசிக்கிட்டத வச்சி வந்த டவுட்ல அவங்களுக்கு தெரியாம உங்களோட ஜாதக நகல பாத்தேன்.. அப்போ தான் உண்மை தெரிஞ்சிது.. கேக்குறேன்னு தப்பா எடுத்தக்காதீங்க நான் விர்ஜின் சார்.. நீங்க? என்று தான் கேட்ட கேள்விக்கு அமைதியை பதிலாக தந்தவனிடம்

 

“உங்க முத கல்யாணம் வாழ்க்கைல தொலைச்சத.. இன்னொரு கல்யாணத்துல தேடுறீங்க.. பட் தொலைஞ்ச எல்லாம் திரும்ப கிடைக்குமா?.. அது எப்படி சார் பசங்க நீங்க மட்டும் ஒருத்தர் சாப்பிட்ட எச்சி பிளாட் சாப்பிட அசிங்கப்பட்டு.. புது பிளாட் வாங்குவீங்க..

 

இதே அசிங்கம் பொண்ணுங்களுக்கும் இருக்கும்ன்னு யோசிக்க முடியாத சுயநலவாதிங்களாவே இருக்கீங்க.. யார் எப்படியும் போகட்டும்.. என்ன பொறுத்தவரை ஒருத்தர் சாப்பிட்ட எச்சி பிளாட்ட தொடுறதே அறுவெருப்பு.. நான் பிளேட்ட மட்டும் சொல்லல” என்று முழுதாக கூறிமுடிக்கும் முன் சத்தம் கேட்டு பார்வையை திருப்ப,

 

கண்ணாடி குவளையை, கையோடு சேர்த்து மேஜையில் இடித்து உடைத்து குருதி வழிய நின்ற தாரணியின் வரவை இரு ஆடவர்களும் எதிர்பார்க்காமல் ஸதம்பிக்க, மகியுடன் ஆதியும் அங்கு விரைந்தான்.

 

தாரணியோ தன்னவனை அசிங்கமாக பேசியவளின் கன்னத்தை பதம் பார்க்க, அவள் கையில் நிக்காமல் வடியும் குருதியை கண்டு இரு ஆடவர்களுக்கும் அவர்களின் நெஞ்சிலே குருதி வருவது போன்ற உணர்வு, இருப்பினும் அவர்களின் வலியை மறைத்து கொண்டு அவளின் அருகில் செல்ல, அதை கண்டவள் “ஒரு அடி யாராவது முன்ன எடுத்து வச்சா.. கழுத்த அறுத்துப்பேன்” என்று கூறி ரித்தியின் புறம் திரும்பியவள் “எனக்கு ஒரு விஷயம் புரியல.. அவன் நீ தான் எனக்கு வாழ்க்க கொடுக்கணும்ன்னு வந்து பிச்சை எடுத்தானா என்ன..

 

உன் இஷ்டத்துக்கு பேசுற.. முதல அவன அப்படி பேச உனக்கு என்னடி உரிமையிருக்கு.. இவ்வளவு பேசினியே அவன பத்தி எதாவது தெரியுமாடி உனக்கு.. ஆனா, எனக்கு எல்லாம் தெரியும் ஏன் நீயே நினைச்சியிருந்தாலும்.. இந்த கல்யாணத்த கண்டிப்பா அவனே நிறுத்திருப்பான்.. இப்போ சொல்லுறேன் கேட்டுக்கடி இவன்கூட செகண்ட் சான்ஸ் வேண்டாம்ன்னு அசிங்கமா பேசினியோ உன்னோட லைஃப்ல நீ விரும்புனவனே உன்ன செகண்ட் சான்ஸா தான்டி யூஸ் பண்ணுவான்” என்று சாபம்விட, இரு பெண்களும் அவள் யார் என்பதை அறிந்து கொண்டார்கள்.

 

 

ரித்தியோ நல்லது செய்ய வந்து அவளிடம் சாபம் வாங்கியதை நினைத்து கண்களில் வரும் கண்ணீரை இதழ் கடித்து அடக்கியவாறு நிற்க, அதை உணர்ந்த மகியோ தோழியின் கரத்தை ஆதரவாக பற்றினாள்.

 

தன் தோழிக்கு உதவ வந்ததை அறிந்து, இவள் பேசியது அதிகப்படி என்பதையும் உணர்ந்த ஆதியோ “தாரா.. லிமிட் தாண்டி பேசுற.. போதும் முத ஹாஸ்பிட்டல் போகலாம்”

 

“நான் என்ன பண்ணனும்ன்னு.. நீ சொல்ல தேவையில்ல..” என்று கூறி தன்னவனின் அருகில் வந்தவள் “எப்படியும் இந்த கல்யணத்த ஸ்டாப் பண்ணிடுவேன்னு தெரிஞ்சி தான் கொஞ்சம் விட்டு புடிக்க நினைச்சேன்.. அதுக்காக நீ நினைக்கிறது எதுவுமே எனக்கு தெரியலன்னு அர்த்தமில்ல.. உன்னோட முடிவுல இனியும் மாற்றமில்லேனா..

 

என்னோட முடிவு சொல்லுறேன் கேளு.. நான் கன்னிகழியாம சாவேனே தவிர நீ நினைக்கிறது எப்போவும் நடக்காது.. அதோட உன்கையால இன்னொருத்தி கழுத்துல தாலி ஏறுச்சு.. அடுத்த நிமிஷம் என் சோலிய முடிச்சிப்பேன்.. இது நான் என் உயிரா நினைக்கிற என் நண்பன் மேலயும்.. என்னோட சரிபாதியா நேசிக்கிற உன்மேலயும் சத்தியம்” என்று கண்கள் சிவக்க கூறியவள், கையில் வடியும் குருதி காரணமாக அதற்கு மேல் முடியாமல் மயங்கி சரிய,

 

அதை உணர்ந்து பெண்ணவளை தாங்கி கையில் ஏந்தியவன், ஆதியிடம் கண்காட்ட, அவனும் வேகமாக சென்று கார் முன்பக்கம் ஏற, சசியோ தன்னவளுடன் பின்னேயேறி அவளை தன் மடியில் கிடத்தி, அவள் நிலையை கண்டு பதறி நெஞ்சோடு இறுக்கியணைத்து

கொள்ள, நண்பர்களின் நிலையை கண்ணாடி வழியே கண்ட ஆதியோ காரை மருத்துவமனை நோக்கி செலுத்தினான்.

 

அவர்கள் சென்றதும் தோழியை சமாதானம் செய்து ரெஸ்டாரன்டிலிருந்து அவள் வீட்டில் விட்டுவிட்டு தன் வீட்டிற்கு வந்து அறைக்குள் நுழைந்தவள் தாராவின் நிலையை

நினைத்து வருந்தி, ஆதியின் அழைப்புக்காக திறன்பேசியை ஏக்கமாக பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

 

                   தேடல் தொடரும்..

 

இப்படிக்கு 

Vsv42😍😍

 

 

 

 

 


   
ReplyQuote

You cannot copy content of this page