All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

சித்திரையில் நீ மார...
 
Notifications
Clear all

சித்திரையில் நீ மார்கழி..!! - Story Thread

Page 3 / 3
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 6 months ago
Posts: 266
Topic starter  
 
 
சித்திரை – 16
 
 
அதே வேகத்தில் அலுவலகம் வந்து சேர்ந்தவுடன், “வெள்ளிக்கிழமை நாம கொடைக்கானல் போகணும், மூணு நாள் ட்ரிப்.. தேவையான ஏற்பாடுகளைச் செஞ்சுக்கோ..” என்று விட்டு வர்மா அங்கிருந்து நகர, “என்ன நானா..? நான்.. அது..” என லேசாகத் தயங்கி இழுத்தாள் நிலா.
 
 
அதில் நின்று அவளை பார்த்தவன், “உங்க அம்மாவை நினைச்சு யோசிக்காதே.. அந்த த்ரீ டேஸ்க்கு அவங்க கூடவே இருந்து பார்த்துக்க ஹோம் நர்ஸ் அரேஞ்ச் செஞ்சுடலாம்..” என்றான் கடினமான குரலிலேயே வர்மா.
 
 
“அது.. அதில்லை சார்.. நான்.. நான் எப்படி உங்க கூட..?” என அப்போதும் நிலா தடுமாறி நிறுத்த.. “நீ வரியான்னு நாம இங்கே டிஸ்கஸ் செய்யலை.. வரணும்னு ஆர்டர் போடறேன் புரியுதா..? இட்ஸ் யுவர் டியூட்டி..” என்று கடினமான குரலில் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் வர்மா.
 
 
அதில் அவன் சென்ற திசையையே சில நிமிடங்கள் திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா. கடந்த சில நாட்களாக இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தவனிடம் பழைய வர்மா திரும்பி இருந்தது போல் அவளுள் ஒரு எண்ணம்.
 
 
அடுத்தப் பத்து நிமிடத்தில் பரபரப்போடு அந்த இடத்திற்கு வந்த சேர்ந்தான் பாலு. வர்மாவிடம் இருந்து வந்த தகவலை கண்டே இத்தனை பதட்டத்துடன் நிலாவை தேடி வந்தவன், “சார் என்னென்னவோ சொல்றார்.. என்ன மூன்..?” என்றான் பாலு.
 
 
அப்போதும் தன் திகைப்பிலிருந்து மீளாமலே நிலா “என்ன..? என்ன சொன்னார்..?” என்று கேட்க.. “கொடைக்கானல் ட்ரிப் அது இதுன்னு..” என முழுமையாகச் சொல்லாமல் நிறுத்தினான் பாலு.
 
 
அதற்குள் தன் திகைப்பில் இருந்து மீண்டு இருந்தவள் “ஹே பாலு, இப்போ நான் என்ன செய்யறது..?” என்று பதட்டத்தோடு அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.
 
 
“எனக்கும் எதுவும் புரியலை.. இது என்ன பிளான் புதுசா..?” என்றான் பாலு. “ஐயோ அதை ஏன் கேட்கறே..?” எனக் கவலையானவள், “திடீர்னு இப்படிச் சொல்லி நீ கிளம்பி தான் ஆகணும்னு வேற மிரட்டிட்டு போறார்.. இப்போ நான் என்ன செய்யறது..?” என்று சோகமாகக் கூறவும், “ஆண்டியை நினைச்சு நீ கவலைப்படறியா..? சார் ஏதோ ஹோம் நர்ஸ் அரேஞ்ச் செய்யப் போறதா சொன்னார்.. அநேகமா டாக்டர் தர்ஷன் மூலமா தான் அரேஞ்ச் செய்வார்.. நீ அவரைத் தாராளமா நம்பலாம், நல்ல ஒர்க்ரா தான் இருக்கும்..” என்றான் பாலு.
 
 
“ஐயோ.. நான் அதைப் பத்தி பேசலை, எனக்கு அதில் எல்லாம் எந்தச் சந்தேகமும் இல்லை.. அவர்கிட்ட நான் உதவின்னு கேட்காத போதே எனக்கு அவ்வளவு செஞ்சவர், இப்போ செய்ய மாட்டாரா என்ன..? எனக்கு அதில் எல்லாம் சந்தேகம் இல்லை பாலு..” என்றாள் நிலா.
 
 
“அப்புறம் என்ன தான் உன் பிரச்சனை..?” என்று பாலு கேட்கவும், “என்ன பாலு இப்படிக் கேட்கறே..? நான் எப்படிச் சார் கூடக் கொடைக்கானல் வரைக்கும் தனியா.. அதுவும் மூணு நாள்..” என்றாள் கவலையான குரலில் நிலா.
 
 
“இது கொஞ்சம் கவலையான விஷயம் தான்..” என்றவன் “திடீர்னு சார் ஏன் பிளானை மாத்தினார்.. இதுக்கு முன்னே கொடைக்கானல் ட்ரிப்பில் நீ இல்லையே..” என்றான் பாலு.
 
 
“அது தான் பாலு எனக்கும் புரியலை.. இந்த மூணு நாளில் எந்த வேலையை எல்லாம் நான் முடிச்சு வைக்கணும்னு என்கிட்ட அவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தார்.. திடீர்னு இப்போ வந்து இப்படிப் பேசினா நான் என்ன செய்ய..?” என்றாள் நிலா.
 
 
“இப்படி ஒரு முடிவெடுக்கும் அளவுக்குத் திடீர்னு என்ன நடந்தது..?” என்றான் பாலு. “சாருக்கு அங்கே ஒரு மேடம் கூட ஆர்கியூமென்ட் நடந்தது.. அப்போ தான் சட்டுன்னு இப்படிச் சொன்னார்..” என்று நிலா நினைவுப்படுத்திக் கூற.. “மேடமா யாரு அது..?” என்றான் பாலு.
 
 
“எனக்கு அவங்க பேரு தெரியாதே.. ஆனா இதுக்கு முன்னே கூட நான் அவங்களை ஒருமுறை பார்த்து இருக்கேன், அன்னைக்குச் சாரோட மீட்டிங் போகும் போதும் இதே மாதிரி தான் வந்து பேசினாங்க..” என்றாள் நிலா.
 
 
அதில் யோசனையானவன் “அவங்க பார்க்க எப்படி இருந்தாங்க..?” எனவும் “ரொம்ப அழகா இருந்தாங்க.. அழகுனா அதை எப்படிச் சொல்றது..? அப்படி ஒரு அழகு, ஹ்ம்ம் உலக அழகின்னு ஐஸ்வர்யா ராயை சொல்லுவோம் இல்லை.. ஆனா அவங்களுக்கு இப்போ வயசாகிடுச்சு, அந்த இடத்துக்குத் தாராளமா இவங்க போகலாம்.. அப்படி ஒரு அழகு..” என்று விழிகள் மின்ன பேசிக் கொண்டிருந்தவளையே சந்தேகமாகப் பார்த்தான் பாலு.
 
 
“உனக்கு அவங்க பேர் இல்லைனா எந்தக் கம்பெனின்னு ஏதாவது டீடைல்ஸ் தெரியுமா..?” என்றான் பாலு. “அதெல்லாம் தெரியலை, ஆனா சார்கிட்ட ஏதோ வம்பு செய்யறது போலவே பேசறாங்க.. அவங்களைப் பார்த்தாலே சாருக்கு பிடிக்கலை கோவமா பேசறார்..” என்றாள் நிலா.
 
 
“ஏதாவது உருப்படியான க்ளு கொடுக்குறியா நீ..? ஐஸ்வர்யா ராய்ன்ற சார் சண்டை போட்டார்ன்ற இதை வெச்சு யாருன்னு யோசிக்கறது..?” என்றவன் பின் ஏதோ நினைவு வந்தவனாகத் தன் அலைபேசியில் தேடி எடுத்து “இவங்களா பார்..?” என்று நேஹாவின் படத்தைக் காண்பித்தான் பாலு.
 
 
அதைக் கண்டதும் உற்சாகமானவன், “ஆமா இவங்களே தான்..” எனக் கூறவும், அவளை முறைத்தவன் “இவங்களைத் தான் அப்படிப் புகழ்ந்தியா நீ..?” எனவும் “ஆமா ஏன் புகழக் கூடாதா..? எவ்வளவு அழகா இருக்காங்க, நான் முதல்முறை அவங்களைப் பார்க்கும் போது வாய்க்குள்ளே கொசு போனா கூடத் தெரியாது.. அப்படி வாயை பிளந்து பார்த்தேன்..
 
 
இவ்வளவு அழகா யாரையும் நான் நேரில் பார்த்தது கூடக் கிடையாது.. சினிமாவில் தான் பார்க்க முடியும், நான் எங்கே சினிமாவுக்கு எல்லாம் போனேன்.. அந்தப் பெரிய ஹோட்டலில் அவங்க போட்டு இருந்த குட்டி ஸ்கர்ட் அதுக்கு மேட்சா அந்தக் கோட்டு அவங்க போட்டிருந்த பெரிய பிளாக் ஹீல்ஸ் ஷூவோட டக்டக்னு நடந்து வந்த ஸ்டைல் அப்படி ஒரு சூப்பர் மாஸ் தெரியுமா..?” என்று நிலா பேசிக் கொண்டே செல்ல..
 
 
“வாயை மூடு, இவங்க நீ நினைப்பது போல ஹீரோயின் எல்லாம் இல்லை.. வில்லி..” என்றான் வெறுப்போடு பாலு. “என்ன..?” என என்று புரியாமல் நிலா கேட்கவும், “ஆமா, அதுவும் நம்ம சாருக்கு இவங்க பெரிய வில்லி.. இவங்களைப் பாத்தாலே அவருக்குப் பிடிக்காது..” என்றான் ஒருவித கோபமான குரலில் பாலு.
 
 
“ஆமா, இரண்டு பேரும் கோவமா மட்டும் தான் பேசிக்கிட்டாங்க..” என்று நிலா தொடங்கவும், அவளை இடையிட்டு இருந்தவன் “நீ இந்தக் கொடைக்கானல் ட்ரிப்புக்குக் கண்டிப்பா போகணும் மூன்..” என்றான்.
 
 
“எனக்கு வேறு வழியும் இல்லை, நான் போய்த் தான் ஆகணும்.. சார் கேட்டு நான் நோ எப்படிச் சொல்ல முடியும்..?” என்றாள் நிலா. “ஆமா, இது நீ நோன்னு சொல்ல கூடிய விஷயம் இல்லை தான், ஆனா உன் பொறுப்பைப் புரிஞ்சு நடந்துக்கோ.. இப்போ உன் உதவி சாருக்கு அவசியம் தேவை.. அதனால் தான் உன்னைக் கூட்டிட்டு போக நினைக்கறார்.. அவர் என்ன சொல்றாரோ அதை மட்டும் செய்.. அவங்க முன்னே சாரை எந்த விதத்திலும் தலை குனிய வெச்சுடாதே ப்ளீஸ்..” என்றான் கெஞ்சுதலான குரலில் பாலு.
 
 
“ஏய் என்ன பாலு.. என்னென்னமோ பேசறே..? எனக்குப் பயமா இருக்கு..” என்றாள் நிலா. “பயப்படாதே சார் கூட இப்போ மீட்டிங் எப்படிப் போய் வந்தியோ.. அதே போலப் போ, மீதியை எல்லாம் அவர் பார்த்துப்பார்.. ஆனா உன்கிட்ட யாராவது வந்து பேசினாலோ.. இல்லை தப்பா ஏதாவது சொன்னாலோ நம்பாதே.. வர்மா சாரை மட்டும் நம்பு, அவர் சொல்றதை மட்டும் கேள்..” என்றான் பாலு.
 
 
இதில் குழப்பமாக நிலா அவனைப் பார்க்க.. “ஒண்ணுமில்லை பயப்படாதே.. இதை ஒரு முன்னெச்சரிக்கையா தான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்..” என்றான் பாலு.
 
 
“ஓ அப்படியா.. என்னென்னமோ சொல்றீங்களேன்னு நான் கூட ரொம்பப் பயந்துட்டேன், நீங்க என்னை நம்பலாம் பாலு.. நிச்சயமா என்னால் சாருக்கு எந்தத் தலை குனிவும் வராது.. அவர் எதிர்பார்க்கறது போல நான் நடந்துப்பேன்.. நான் கேட்காமலேயே எனக்கு அவ்வளவு உதவி செஞ்சிருக்கார், அவருக்கு வேலை சம்பந்தமான உதவியை நான் செய்ய மாட்டேனா என்ன..? என்றாள் நிலா.
 
 
“எனக்கு இது போதும்.. நிறைய வேலை இருக்கு நான் போய் அதைப் பார்க்கறேன்.. நீயும் முக்கியமான வேலையை எல்லாம் முடிச்சு வெச்சுடு, ஊருக்குப் போகத் தயாராகணும் இல்லை..” என்று விட்டு அங்கிருந்து சென்றான் பாலு.
 
 
அவன் சென்ற திசையைச் சில நொடிகள் பார்த்தவள் “வர்மா சாருக்கு ஏதோ பெரிய பிரச்சனை இருக்கு போல, அது என்னன்னு தெரியலை.. முடிஞ்ச வரைக்கும் அவருக்கு எப்படி உதவியா இருக்கலாம்னு தான் யோசிக்கணும்..” எனத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டு வேலையில் கவனமானாள் நிலா.
 
 
**
 
 
வெங்கட்டை வீடு புகுந்து காவலர்கள் அடித்து இழுத்துச் சென்ற காணொளி சோஷியல் மீடியாக்களில் எல்லாம் வைரலாகி கொண்டிருந்தது. அதிலும் காவலர்களின் முகங்கள் எதுவுமே தெரியவில்லை. தெளிவாக எடிட் செய்யப்பட்டது போல் அனைவரின் முகங்களும் தெரியாத விதத்தில் எடுக்கப்பட்ட காட்சியாகவோ, இல்லை காவலர்கள் கழுத்துக்குக் கீழ் மட்டுமே தெரியும் படியாகவோ மட்டுமே அந்தக் காணொளி இருந்தது.
 
 
அதில் வெங்கட் முகம் மட்டும் தெளிவாகக் காட்டப்பட்டதோடு ராணியும் சேகரும் பிள்ளையை விட்டு விடுமாறு கெஞ்சுவதும் ஒரு இடத்தில் வந்து போனது.
 
 
இந்தக் காட்சியைக் கண்ட தெரிந்தவர்கள், உறவினர்கள் என ஒவ்வொருவரிடமிருந்தும் சேகருக்கும் ராணிக்கும் தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன.
 
 
அதற்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் அதை எடுக்கப் பயந்து அவமானத்தில் அமர்ந்திருந்தனர் இருவரும். இதில் அக்கம் பக்கத்தவர்கள் எல்லாம் வந்து கதவை தட்டி ராணியிடம் துக்கம் விசாரிக்க.. வீட்டை உள்ளே பூட்டிக் கொண்டு யாருக்கும் பதிலளிக்காமல் உள்ளே முடங்கிக் கிடந்தனர்.
 
 
ஸ்ருதியும் பள்ளிக்குச் செல்லவில்லை. அவளின் நெருங்கிய தோழிகளிடமிருந்தும் அவளுக்குத் தொடர் மெசேஜ்களும் அழைப்பும் வந்து கொண்டே இருந்தன.
 
 
“இவனால் எனக்கு மானம் போகுது.. என் பிரெண்ட்ஸ் முன்னே எவ்வளவு அசிங்கம் தெரியுமா..! இப்போ நான் எப்படி ஸ்கூலுக்குப் போவேன்..? எல்லாரும் என்னைத் தானே கேள்வி கேட்பாங்க..” என்று ஸ்ருதி அழ.. “உனக்கு மட்டும் தான் அசிங்கமா..! எனக்கும் தான், நான் ஆபீஸ் போக வேண்டாமா..? அக்கம் பக்கம் தலை காட்ட முடியலை..” என்றார் எரிச்சலோடு சேகர்.
 
 
“இரண்டு பேரும் உங்களைப் பத்தி மட்டும் நினைக்கறீங்களே.. அங்கே என் பிள்ளை என்ன கஷ்டப்படுறானோ தெரியலை..” என ராணி அழுது கொண்டிருக்க.. “அவன் செஞ்ச தப்புக்கு அவன் கஷ்டப்படறான், நான் ஏன் கஷ்டப்படணும்..?” என்றாள் ஸ்ருதி.
 
 
“கொஞ்சமாவது அவன் தங்கச்சி போலப் பேசுடி..” என்று ராணி கோபப்பட.. “இது போல நீங்க அவனைத் தலையில் தூக்கி வெச்சு ஆடினதால் தான் அவன் இன்னைக்கு இப்படி வந்து நிற்கறான்.. வீட்டுக்குள்ளேயே இதெல்லாம் செஞ்சுருக்கான்னு கூடத் தெரியாம இருந்திருக்கீங்க.. நினைச்சாலே அசிங்கமா இல்லை உங்களுக்கு..?” என்றாள் ஸ்ருதி.
 
 
“வாயை மூடுடி, வயசுக்கு தகுந்த மாதிரி பேசு.. உங்க அண்ணன் அப்படி எல்லாம் செய்யறவனே கிடையாது..” என்று ராணி சண்டைக்குத் தயாராக.. “இதுக்கு மேலேயும் அவனை இப்படியே விட்டுக் கொடுக்காமல் பேசிட்டு இருந்தா அடுத்து நீயும் ஜெயிலுக்குப் போக வேண்டி இருக்கும் பார்த்துக்கோ..” என்றிருந்தார் ஆத்திரமாக சேகர்.
 
 
“என்னங்க நீங்களும்..” என்று ராணி ஏதோ சொல்ல தொடங்க.. “ஏன்டி உன் கண்ணு முன்னே தானே போலீஸ் உள்ள இருந்து எல்லாத்தையும் எடுத்தாங்க.. அவன் வீட்டிலேயே பாட்டில் ஒளிச்சு வெச்சிருக்கான். எப்போவும் போதையிலேயே இருக்கான், இதெல்லாம் உனக்குத் தெரியாதா..? இப்படியே செய்யற தப்பை எல்லாம் நீ மூடி மறைச்சு என்ன செய்யப் போறே..?
 
 
இத்தனை நாள் வீட்டுக்குள்ளேயே ஒரு பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி செஞ்சவன் தானே.. இதை வெளியே செஞ்சு இருக்க மாட்டானா என்ன..? ஆனா நீ மொத்த தப்பையும் அந்தப் பொண்ணு பக்கம் திருப்பிட்டு இவனைத் தலையில் தூக்கி வெச்சு பேசிட்டு இருந்தே.. அதோட பலன் தான் இன்னைக்கு இங்கே வந்து நிற்குது..” என்ற சேகரை கண்ணீரோடு பார்த்து “நான் என்னங்க செஞ்சேன்..?” என்றார் ராணி.
 
 
“என்ன செஞ்சியா..? அவன் இப்படியாக முக்கியமான காரணமே நீதான்.. நிலாகிட்ட அவன் எப்படி நடந்துக்கிட்டான்னு உனக்கு மட்டும் இல்லை, எனக்கும் தெரியும்.. ஆனா அவங்களுக்குச் சாதகமா பேசி உங்களுக்கு எதிரா நிற்க வேண்டாம்னு நினைச்சு தான் அமைதியா இருந்தேன்.. அதோட நான் அவங்க பக்கம் பேசினா அது நாளைக்கு நமக்கே பிரச்சனையாகிடும்.. இதெல்லாம் யோசிச்சு அமைதியா இருந்தேனே தவிர வீட்டில் நடக்கறது தெரியாம இல்லை..” என்றார் சேகர்.
 
 
இப்படியே தங்களிடம் இருக்கும் குறைகளை மறைத்து நடக்கும் தவறுக்கு அடுத்தவர்களை அதுவும் எதிர்க்க முடியா நிலையில் இருப்பவர்களைக் கை காண்பித்துக் கொண்டிருந்த சேகரின் குடும்பம் இன்று அவமானத்தில் வெளியே தலை காட்ட முடியாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தது.
 
 
**
 
 
கொடைக்கானலை நோக்கி சென்று கொண்டிருந்த காரில் வர்மாவோடு அமர்ந்திருந்தாள் நிலா.
 
 
இது தன் வேலை, வர்மாவோடு சென்று தான் ஆக வேண்டும் என்று முடிவு எடுத்த பின் கொஞ்சமும் யோசிக்காமல், பின் வாங்காமல் அதற்குத் தேவையான அனைத்தையும் தயார் செய்து விட்டிருந்தாள் நிலா.
 
 
முதலில் உமாவிடம் விஷயத்தைச் சொல்லி அனுமதி கேட்க.. “வேலை விஷயம்னா போய்த் தான் ஆகணும் நிலா.. என்னைப் பத்தி கவலைப்படாம போயிட்டு வா..” என்றிருந்தார் உமா.
 
 
அதோடு உமா வீட்டிற்கு வந்த பிறகே வர்மா செய்திருந்த உதவிகளைப் பற்றி எல்லாம் நிலா சொல்லி இருக்க.. அவனின் மேல் மிகப் பெரிய மரியாதையும் நன்றி உணர்வும் உமாவுக்கு உண்டாகியிருந்தது.
அதில் பாலு சொல்லியதை எல்லாம் வேறு கூறி இருந்த நிலா, “சாருக்கு அவங்களால் ஏதோ பிரச்சனைன்னு நினைக்கறேன் ம்மா.. நான் கூடப் போறது ஹெல்ப்பா இருக்கும்னு பாலு சொன்னார்..” என்றாள்.
 
 
“நாம கேட்காமலே வந்து உதவி செஞ்சவர், வாய் விட்டு உன்கிட்ட ஒரு விஷயத்தைக் கேட்டு இருக்கார் நிலா.. அதோட இது உன் வேலை சம்பந்தப்பட்ட விஷயமும் கூட.. கவனமா பார்த்து நடந்துக்கோ..” என்று உமா சொல்ல.. “அதெல்லாம் சரி தான் ம்மா.. ஆனா மூணு நாள் நீங்க தனியா சமாளிசுப்பீங்களா..?” எனக் கவலையாகக் கேட்டாள் நிலா.
 
 
“நான் என்ன குழந்தையா..? என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும், இங்கே எனக்கு வேலையும் எதுவுமில்லை.. அதோட என் கூடவே இருந்து பார்த்துக்கத் தான் நர்ஸ் ஏற்பாடு செய்றேன்னு சொல்லி இருக்காரே.. அப்புறம் என்ன..?” என்றார் உமா.
 
 
“அதெல்லாம் புரியுது ம்மா, ஆனாலும்..” எனத் தயங்கி இழுத்தவளுக்கு, உமா தன் இறுதிக்கட்டத்திற்குச் சென்று போராடி திரும்பியது தான் மனதில் இருந்தது.
 
 
“இங்கே பார் நிலா, நாம அவருக்குக் கடன் பட்டிருக்கோம்.. இன்னும் அது எவ்வளவுன்னு கூட நமக்குத் தெரியாது.. இப்போ வரைக்கும் உங்க சார் கேட்கலைன்றதுக்காக நாம அதைத் திரும்பக் கொடுக்காம இருக்க முடியாது.. அதுக்கு நீ தான் சம்பாதிக்கணும், எனக்குக் கொஞ்சம் உடம்பு சரியானதும் வீட்டில் இருந்து நானும் சமையல் வேலையோ வேற ஏதாவது வேலையோ செஞ்சு கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்க்க பார்க்கறேன்..” என்றார் உமா.
 
 
“ம்மா அதை எல்லாம் நீங்க இப்போ யோசிக்காதீங்க, பார்த்துக்கலாம்..” என நிலா சொல்லவும் “இல்லை நிலா ஹாஸ்பிடல் செலவு மட்டுமில்லை, இதோ இந்த வீட்டை வேற நமக்கு எடுத்துக் கொடுத்து இருக்காங்க.. இதுக்கெல்லாம் எவ்வளவோ ஆகியிருக்கும், நாம இரண்டு பேரும் சேர்ந்து வேலை பார்த்தா தான் அதைத் திரும்பக் கொடுக்க முடியும்.. இப்போ அவர் உன்கிட்ட உதவி கேட்கலை.. உன் வேலையைச் செய்யச் சொல்றார்.. அதுக்கும் நீ காரணம் சொல்லாம கிளம்பு..” என்றார் உமா.
 
 
“ம்மா நான் மறுபடியும் சொல்றேன், இப்போ உங்க உடம்பு மட்டும் தான் முக்கியம்.. முதலில் நீங்க சரியாகி வாங்க, அதுக்குப் பிறகு இதெல்லாம் யோசிக்கலாம்.. கண்டிப்பா நான் சார் கூடப் போறேன்.. சரியா..?” என்றாள் நிலா.
 
 
அதோடு உமாவும் அமைதியாகி போக.. மூன்று நாட்கள் அதிகச் சிரமப்படாமல் பசிக்கும் நேரம் சாப்பிட அவசர தேவைக்கெனச் சில உணவுகளைத் தயார் செய்து அவருக்குக் கைக்கு எட்டும் தூரத்தில் அருகில் கொண்டு வந்து வைத்தவள், “ரொம்பப் பசியா இருந்தா இதைச் சாப்பிட்டுக்கோங்க.. சரியான நேரத்துக்கு மருந்து போட்டுக்கோங்க.. எனக்குன்னு இருக்கறது நீங்க மட்டும் தான் மறந்துடாதீங்க..” என்றவள், நர்ஸ் இங்கேயே தங்கி கொள்ளவும் வசதி செய்து வைத்தாள்.
 
 
அதற்குள் அவளைத் தேடி பாலு வர, “என்ன பாலு..? ஏதாவது முக்கியமான விஷயமா..?” என்றிருந்தாள் திடீரென அவன் வந்ததில் கேள்வியாக அவனை பார்த்து நிலா.
 
 
“உன்னை ஷாப்பிங் கூட்டிட்டுப் போகச் சொல்லி சார் ஆர்டர்..” என்றான் பாலு. “ஷாப்பிங்கா எதுக்கு..?” எனப் புரியாமல் அவனை நிலா பார்க்க.. “வர்மா சார் கூட நீ த்ரீ டேஸ் அங்கே ஸ்டே செய்யப் போறே.. அங்க வரவங்க எல்லாம் பிசினஸ் சர்க்கிள், அவங்க முன்னே நீ நார்மலா இந்த மாதிரி டிரஸ் எல்லாம் போட முடியாது..” என்றான் எங்கே அவள் தப்பாக எடுத்துக் கொள்ளக் கூடுமோ என்ற தயக்கத்தோடே பாலு.
 
 
“இந்த மாதிரியெல்லாம் போட கூடாதுனா வேற எப்படிப் போடணும்..?” என நிலா கேட்க.. “உன்னோட ட்ரெஸ்ஸிங் ஸ்டைலை மாத்த சொல்லலை மூன்.. நீ எப்போவும் போடறது போலச் சல்வார், சாரியே ஓகே தான்.. ஆனால் அதைக் கொஞ்சம் கிளாசியா.. பிராண்டட்டா இருக்கறது போலப் பார்த்துக்கணும்..” என்றான் பாலு.
 
 
அதில் நிலா தயக்கத்தோடு அமர்ந்திருக்க.. “ஏய் நான் சொன்னதை நீ தப்பா எடுத்துக்காதே..!” என பாலு அவசரமாக மேலும் எதுவோ சொல்ல வரவும் “இல்லை பாலு, எனக்குப் புரியுது.. ஆனா என்னால் இப்போ அதுக்கெல்லாம்..” என்று நிலா தயங்க.. “அதைப் பத்தி எல்லாம் நீ கவலைப்படாதே சார் பார்த்துப்பார்..” என்றான் பாலு.
 
 
“எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு, எனக்காக நிறையச் செலவு செஞ்சுட்டு இருக்கார்.. இதெல்லாம் அவர் செய்யணும்னு அவசியமே இல்லை..” என நிலா தொடங்கவும், “அவசியம் தான் நிலா.. இது அவரோட கௌரவம் சம்பந்தப்பட்ட விஷயம், நீ அவர் கூடப் போகும் போது நீ எப்படி இருக்கேன்னு தொடங்கி எல்லாமே அங்கே கவனிக்கப்படும்.. அப்போ நீ போட்டிருக்க உடையிலிருந்து எல்லாமே அங்கே அலசி ஆராயப்படும்.. அதில் அவர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் தான்..” என்றான் விளக்கமாக பாலு.
 
 
இதைக் கேட்டுக் கொண்டிருந்த உமா “தம்பி சொல்றதும் சரி தானேம்மா.. ஆள் பாதி ஆடை பாதின்னு சொல்லுவாங்க, நீ தனியா போகும் போது எப்படி வேணும்னா போகலாம்.. ஆனா நீ ஆபீஸ்க்கு போகும் போது இப்படித்தான் இருக்கணும்னு ஒருமுறை இருக்கில்லை.. இப்போ உங்க முதலாளி கூட நீ பிசினஸ் விஷயமா போகும் போது அதுக்குத் தகுந்தது போலத் தானே இருக்கணும்..” என்றார்.
 
 
நிலாவுக்கும் இருவரும் சொல்வதில் உள்ள உண்மை புரிந்தாலும், இப்படி மேலும் மேலும் வர்மா தனக்காகச் செலவு செய்து கொண்டிருப்பதை எண்ணி அவளுக்குக் கவலையானது.
 
 
அவளுமே அலுவலகத்தில் இருக்கும் பெண்களைக் கவனித்திருக்கிறாள். அவர்கள் அணியும் உடைக்கும் தன் உடைக்கும் இடையே உள்ள வித்தியாசம் அவளுக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படும் நிலையில் அப்போது அவள் இல்லை.
 
 
இப்போது இது அவசியம் என்று உணர்ந்த பிறகு அதைச் சரி செய்ய வேண்டியது தன் கடமை என்று புரிந்தாலும், அதற்கான பணம் கையில் இல்லாதது தான் அவளைத் தயங்க வைத்தது.
 
 
அதை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனப் பேசி நிலாவைத் தேற்றி பாலு அழைத்துச் சென்று சில உடைகளையும் அதற்குத் தகுந்தது போலான அணிகலன்களையும் அவளுக்கு வாங்கிக் கொடுத்திருந்தான்.
 
 
“இந்த ட்ரிப் முடியும் வரைக்கும் நீ எல்லா விஷயத்திலும் கவனமாக இரு, புரியுதா..?” என பாலு மீண்டும் வீட்டில் அழைத்து வந்து இறக்கி விட்டு நிலாவிடம் கூறினான்.
 
 
இதையெல்லாம் மீண்டும் மீண்டும் பாலு ஏன் சொல்கிறான் எனப் புரியவில்லை என்றாலும் இத்தனை முறை அவன் சொல்வதில் ஏதோ ஒரு காரணம் இருப்பது மட்டும் அவளுக்குத் தெளிவாகப் புரிந்ததில் ஆமென உறுதியாக அசைந்தது நிலாவின் தலை.
 
 
அதேநேரம் வர்மாவோடு கொடைக்கானலுக்கு நிலாவும் சென்று இருப்பதை அறிந்து யோசனையானார் சரோஜா.
 
தொடரும்...
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 6 months ago
Posts: 266
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ புது கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. இத்தனை நாள் பொறுமையாக காத்திருந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்..
 
 
CNM - 16
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 
This post was modified 3 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 6 months ago
Posts: 266
Topic starter  
 
 
சித்திரை – 17
 
 
ரத்தன் குரூப்ஸ் ரிசார்டில் இவர்களை வரவேற்பதற்காகவே நியமிக்கப்பட்டு இருந்த ஊழியர்கள் முன்னே வந்து வர்மாவை முறைப்படி வரவேற்று அவன் தங்க ஏற்பாடாகியிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
 
 
இது போல் பல ஊழியர்கள் அங்கு வருபவர்களைக் கவனிப்பதற்காகவே ஒரே நிற உடையில் சுற்றிக் கொண்டிருந்தனர். வருபவர்கள் எந்தச் சிரமுமின்றி ஊழியர்களைக் கண்டு கொள்ளவும், தங்களுக்கு வேண்டியதை கேட்கவும் முடிந்தது. அதிலேயே ஒரு ஒழுங்கு தெரிய.. மனதிற்குள் மெச்சுதலாக அவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டான் வர்மா.
 
 
பல தொழிலதிபர்கள் முன்பே வந்து விட்டிருக்க.. வர்மா சற்றுத் தாமதமாகத் தான் அங்கு வந்தான். அன்று மாலை தான் கொண்டாட்டம் என்பதால் மதியத்திற்கு மேல் அங்குச் சென்று சேரும்படி தான் தன் பயணத்தைத் திட்டமிட்டிருந்தான் வர்மா. ஆனால் ரத்தன் குழுமத்தினரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவே பலர் காலையிலேயே அங்கு வந்து விட்டிருந்தனர்.
 
 
அதில் சிவேஷ் மற்றும் நேஹாவும் அடக்கம். பெரும்பாலும் இது போன்ற தொழில் முறையான பேச்சு வார்த்தைகளுக்கு எல்லாம் மகளைத் தனி அனுப்ப மாட்டார் ஆளவந்தான்.
 
 
அடுத்து தன் தொழில் வாரிசாக நேஹா தான் தொழிலை எடுத்து நடத்த வேண்டும் என்பதால் அதில் உள்ள நுணுக்கங்களை எல்லாம் மகளுக்குக் கற்றுத் தர நினைப்பவர், அவளைத் தன் கைக்குள்ளேயே வைத்துக் கொள்ளவும் முயல்வார்.
 
 
தன்னை மீறியோ தனக்குத் தெரியாமலோ எதுவும் நடந்து விடக் கூடாது என்பதிலும் நேஹா அப்படி ஒன்பரை செய்து விடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருப்பார். இப்போது நேஹாவின் அன்னை சுகந்திக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டிருந்தது. அதைச் சரி செய்ய இருவரும் வெளிநாட்டுக்கு சென்று இருந்தனர்.
 
 
அதனாலேயே கடந்த இருமுறையும் நேஹா தனியாகத் தொழில் முறை பேச்சு வார்த்தைக்கு வந்திருந்தாள். இப்போதும் அப்படியே அவளும் அவளின் உதவியாளர் பிங்கியும் மட்டுமே இங்கு வந்திருந்தனர்.
 
 
அன்று என்ன தான் வீம்புக்கு சொல்லி இருந்தாலும், வர்மா அவளை உடன் அழைத்து வரமாட்டான் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தாள் நேஹா. ஏனெனில் அவளுக்குத் தெரிந்த மஹேந்திரவர்மன் அப்படிப்பட்டவன் தான்.
 
 
அவன் எத்தனை அன்பானவன் என்பதை ஒரு காலத்தில் முழுமையாக அனுபவித்தவளாகிற்றே..! அதில் தன்னை விடுத்து வேறு ஒருத்தியின் பக்கம் அவன் கவனம் செல்லாது என்ற திடமும் நம்பிக்கையும் நேஹாவுக்கு இன்றளவும் அதிகமாக இருந்தது.
 
 
ஒருவேளை அப்படிச் சென்று விடுவானோ என்ற சந்தேகம் கூட அவளுக்குத் துளியும் வர்மா மேல் இல்லை. இப்போது தன் மேல் கோபமாக இருக்கிறான், இது அவள் தெரிந்தே செய்த தவறுக்கான தண்டனை.. கொஞ்ச நாள் போனால் எல்லாம் சரியாகிவிடும். எப்படியும் வர்மாவை தன்னால் சமாதானம் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை அவளுக்கு உண்டு.
 
 
அதன் பின் நேஹா எதிர்பார்த்தது போல் வர்மா ஆசைப்பட்டது போல் இவர்கள் வாழ்க்கை வண்ணமயமாக மாறிவிடும் என்றெல்லாம் நினைத்துக் கனவு கண்டு கொண்டிருந்தாள் நேஹா.
 
 
இத்தனை காதலோடு விலகி இருப்பதை விட.. யாரை பற்றியும் கவலைப்படாமல் இருவரும் இணைந்து, தன் தந்தை எதிர்த்தாலும் பரவாயில்லை என அதையெல்லாம் மீறி, இந்த நாடே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து வேறு நாட்டிற்குச் சென்று விடலாம் என்றெல்லாம் அவள் மனதில் பல திட்டங்கள் இருக்க.. அதைப் பொய்யாக்குவது போல் அடிக்கடி வர்மா நிலாவோடு தென்படுவது அவளைக் காலவரப்படுத்தி இருந்தது.
 
 
அவளுக்குமே நிலா வெறும் வர்மாவின் உதவியாளர் தான் எனத் தெரியும். ஆனாலும் அவளுள் இருக்கும் ஏதோ ஒரு இனம் புரியா பயம் நேஹாவை பதட்டம் கொள்ளச் செய்திருந்தது.
 
 
ஒருவேளை வர்மாவோடு அவள் சேர்ந்து வாழ்ந்திருந்தால், இப்படியான பயமோ பதட்டமோ நேஹாவுக்கு வந்துருக்காது. இப்போது அவளிடமிருந்து வர்மா தள்ளி இருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வேறு யாரும் அவனை நெருங்கி விடக் கூடாது என்ற பதட்டம் தான் அவளை இப்படியெல்லாம் அதிகமாக ரியாக்ட் செய்ய வைத்துக் கொண்டிருந்தது.
 
 
அப்போதும் கூட வர்மாவின் மேல் அவளுக்குச் சந்தேகம் இல்லை. ஒருவன் தோற்றம், பழகும் விதம், தொழில், பணம் என அனைத்திலும் உயர்ந்த இடத்தில் இருக்கும் போது அவனைப் பார்க்கும் பல பெண்கள் ஆசைப்படத்தான் செய்வார்கள்.
 
 
அதுபோல் ஒரு எண்ணம் நிலாவுக்குத் தோன்றி, அவள் வர்மாவிடம் நெருங்கி பழக நினைத்தால் என்ற எண்ணம் கூட நேஹாவை நிம்மதியின்றித் தவிக்க வைத்தது. இது தன் கை பொம்மையை பாதுக்காக்கும்படியான ஒரு மனநிலை.
 
 
இதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும் என்ற எண்ணமே அவளை ஏதேதோ செய்ய வைத்துக் கொண்டிருந்தது. தனக்குச் சொந்தமான ஒன்றை மற்றவர்கள் பார்ப்பதை கூட, அவளால் அனுமதிக்க முடியவில்லை.
 
 
ஆனால் இப்படி எல்லாம் செய்து நேஹாவே வர்மாவிடம் நிலாவை நெருங்க செய்து கொண்டிருப்பதைப் பாவம் அந்த நொடி அவள் அறிந்திருக்கவில்லை.
 
 
இப்போதும் வர்மா கண்டிப்பாகத் தனியாகத் தான் வருவான். அவன் இங்கே தங்க இருக்கும் மூன்று நாட்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மீண்டும் அவனோடு பேசி பழகி எப்படியாவது வர்மாவின் கோபத்தைக் குறைத்து மீண்டும் பழைய உறவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடே, தன் தந்தை இங்கில்லா இந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் திட்டத்தோடு இங்குக் கிளம்பி வந்திருந்தாள் நேஹா.
 
 
மீண்டும் இப்படி ஒரு வாய்ப்புத் தனக்குக் கிடைக்கவே கிடைக்காது என அவளுக்கு நன்றாகத் தெரியும். வர்மாவை அவள் நெருங்க நினைத்தாலே அதை அவர் அனுமதிக்கப் போவதில்லை என்பதும் மேலும் இருவரும் இணையவே முடியாதது போல எதையாவது செய்து இதை முற்றிலும் தலைகீழாக மாற்றி விடுவார் என்பதும் புரிந்தே அவர் இல்லாத நேரத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள எண்ணி இருந்தவள், ரிசார்ட்டுக்குள் நுழைந்ததிலிருந்து அத்தனை முறை வெளியில் சென்று வர்மா வந்து விட்டானா எனப் பார்த்துக் கொண்டே இருந்தாள் நேஹா.
 
 
இதைப் பிஏ பிங்கியும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். ஆளவந்தான் தன் மகள் வர்மாவை நெருங்கி விடவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர், பிங்கியிடம் பலமுறை எச்சரித்தே இங்கு அனுப்பி இருந்தார்.
 
 
இங்கு நடப்பவற்றையெல்லாம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அவருக்குத் தகவலாகச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் பிங்கி. அதோடு வர்மாவின் பக்கமே நேஹா போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் இவளின் வேலை என அவர் கட்டளையிட்டிருக்க.. அமைதியாக நேஹாவை கவனித்துக் கொண்டிருந்தாள் பிங்கி.
 
 
இப்போதும் அப்படியே தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த குடிலில் இருந்து மெதுவாக வெளியில் வந்தவள், நடப்பதற்கெனப் பதிக்கப்பட்டிருந்த அழகிய கற்களின் மேல் நடந்தபடியே வாயிலின் பக்கம் பார்வையைப் பதித்திருக்க..
 
 
பார்த்து பார்த்துக்
கண்கள் பூத்திருந்தேன்
நீ வருவாயென..
 
 
எனப் பின்னே இருந்து ஒரு ஆண் பாடும் குரல் கேட்டது. அதில் பார்வையைத் திருப்பியவள், அங்கு அவளையே பார்த்தபடி சிவேஷ் நின்றிருப்பதைக் கண்டு வேகமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“ஹாய் பேப், அந்த வர்மாவுக்குக் கொஞ்சம் கூடப் பொறுப்பே இல்லை பாரேன்.. இங்கே நீ அவனுக்காகக் காத்திருப்பேன்னு தெரிஞ்சும் கொஞ்சமாவது அக்கறை இருக்கா அவனுக்கு.. ஆனா என்னைப் பார், உனக்காக நீ வரதுக்கு முன்னையே வந்து நான் காத்திருந்தேன்..” என்றான் சிவேஷ்.
 
 
“ஓ காட்.. இப்போ அதுக்கு என்னை என்ன செய்யச் சொல்றே..?” என்றாள் எரிச்சலோடு நேஹா. “நான் என்ன கேட்பேன்னு உனக்கே தெரியுமே..” என அவன் ஒரு மாதிரி குரலில் இழுக்கவும், “இங்கே பார் சிவேஷ்..” என அவள் எதையோ சொல்ல தொடங்கும் போது தான் வர்மாவின் கார் உள்ளே நுழைந்தது.
 
 
அதைக் கண்டு அவள் உற்சாகமாகி சிவேஷிடம் பேச விரும்பாதது போல் வேகமாக அங்கிருந்து நகர.. “இன்னும் எவ்வளவு நாள் இப்படியே அவன் பின்னே சுத்துவேன்னு நானும் பார்க்கறேன்.. என்னைக்கு இருந்தாலும் அவன் உன்னை ஏத்துக்கப் போறதும் இ’ல்லை, நான் உன்னை விடப் போறதும் இல்லை, நீ எனக்குத் தான்..” என்று அவளையே பார்த்தபடி உறுதியான குரலில் கூறினான் சிவேஷ்.
 
 
அதே நேரம் வர்மாவை காணும் ஆவலில் லேசான துள்ளலோடு ஓடியவள், காரில் இருந்து இறங்கிய வர்மா அங்கிருந்த ஊழியனோடு பேசிக் கொண்டிருக்கும் போதே காரின் மற்றொரு பக்க கதவை திறந்து கொண்டு நிலா இறங்குவதைக் கண்டு திகைத்தாள்.
 
 
இதை நேஹா ஒரு சதவீதம் கூட எதிர்பார்த்து இருக்கவில்லை என்பது அவள் அதிர்ந்து நின்ற விதத்திலேயே தெரிந்தது. இதைப் பின்னால் இருந்து சிவேஷும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
 
 
“நீ என் கைக்கு வந்து சேரும் நாள் ரொம்பத் தூரத்தில் இல்லை போலேயே பேப்..” என அவன் லேசான கேலி புன்னகையோடு சொல்லிக் கொண்டு அப்படியே நின்றிருக்க.. நேஹா அசைய மறந்து அப்படியே நின்றுவிட.. அதே நேரம் வர்மாவையும் நிலாவையும் அழைத்துக் கொண்டு அவர்களுக்கென ஒதுக்கப்பட்டு இருந்த குடிலை நோக்கி நகர்ந்தார் ஊழியர்.
 
 
அங்கிருந்து மற்றொரு ஊழியரிடம் தன் கார் சாவியை வர்மா கொடுத்து விட்டுச் செல்ல.. நிலா இது போன்ற இடங்களுக்கெல்லாம் வருவது இதுவே முதல் முறை என்பதோடு கொடைக்கானலின் குளிரும் அவள் உடலை நடுங்க செய்ததில், அணிந்திருந்த சேலை முந்தானையை எடுத்துப் போர்த்திக் கொண்டபடி மெதுவாக சுற்றும் முற்றும் பார்த்தவாறே வர்மாவின் பின்னே சென்றாள் நிலா.
 
 
நேஹாவுக்கு ஒதுக்கியிருந்த குடிலுக்கு நேர் எதிர் திசையில் வேறு பகுதியை நோக்கி அவர்கள் செல்வதைக் கண்டு பதட்டமானவள், இங்கு அவள் இருந்த பகுதியிலேயே மேலும் நான்கு குடில்கள் இப்போது வரை யாரும் வராமல் இருப்பதைக் கண்டு, வேகமாக அந்தப் பகுதியில் இருந்த ஊழியரை நோக்கி சென்றாள்.
 
 
தன் முன் வந்து வேகமாக நின்றவளை புன்னகை முகமாக எதிர்கொண்ட அந்த ஊழியர் “எஸ் மேம் சொல்லுங்க, நான் உங்களுக்கு எந்த வகையில் உதவ முடியும்..?” என்று கேட்க.. “அது.. அதோ போறாரே, அவர்.. ஏன் அந்தப் பக்கம் போறார்..?” என்றாள் கையை நீட்டி வர்மா செல்லும் பகுதியை சுட்டி காண்பித்து நேஹா.
 
 
அதில் அவள் காண்பித்த திசையில் திரும்பி பார்த்தவர், இப்போது நேஹாவை கேள்வியாகப் பதிலின்றிப் பார்க்கவும், சட்டெனச் சுதாரித்துக் கொண்டவள் “அது.. அவர் என்னோட பிரண்ட் தான், இங்கேயே இன்னும் நாலு ஹட் ஃப்ரீயா தானே இருக்கு.. இங்கே கூட்டிட்டு வராம எதுக்காக அந்தப் பக்கம் கூட்டிட்டு போறாங்கன்னு தான் கேட்டேன், இங்கே இருந்தா நாங்க பிரெண்ட்ஸ் எல்லாம் ஒண்ணா இருக்கறது போல ஜாலியா இருக்குமே..” எனச் சமாளிக்க முயன்றாள் நேஹா.
 
 
“அவருக்கு அங்கே தான் ஹட் அலாட் செய்யப்பட்டு இருக்கு மேம்..” என்றார் ஊழியர். “ஆனா ஏன்..? இங்கே தான் இன்னும் யாரும் வரலையே..! இங்கே அவரை ஸ்டே செய்ய வைக்கலாம் இல்லை.. அதுவும் இந்த ஹட் நம்பர் 12 தான் சரியா இருக்கும்.. அதுக்குப் பக்கத்தில் இருக்க ஹட் நம்பர் 11ல் தான் நான் இருக்கேன்.. எனக்குப் பக்கத்திலேயே அவரும்..” என்று அவள் படபடத்துக் கொண்டே செல்ல.. “அதெல்லாம் வேறு சிலருக்கு அலாட் ஆகி இருக்கு மேம்..” என்றார் பொறுமையான குரலில் ஊழியர்.
 
 
“சோ வாட், இப்போவே அதை மாத்துங்க..” என அவள் சிடுசிடுக்க.. அப்போதும் நிதானமாகவே அவளை எதிர்கொண்டவர், “அது என் கையில் இல்லை மேம்.. நான் மேனேஜ்மென்ட் என்ன சொல்றாங்களோ அதை மட்டும் தான் செய்ய முடியும், எனக்கு அலர்ட் செஞ்சு இருக்க வேலையை மட்டும் தான் நான் பார்க்க முடியும், டிசிஷன் எடுக்கறது என் கையில் இல்லை..” என்றார்.
 
 
“ஓகே, அப்போ யார்கிட்ட பேசணுமோ அங்கே பேசுங்க.. இப்போவே மாத்துங்க..” என அப்போதும் அவன் சொல்ல வருவதைப் புரிந்து கொள்ளாமல் நேஹா பேசிக் கொண்டே செல்ல.. “அவர் முடியாதுன்னு தான் அவ்வளவு பாலிஷா சொல்லிட்டு இருக்கார் பேப், இன்னுமா உனக்கு அது புரியலை..” என்றான் இவ்வளவு நேரமும் இதையெல்லாம் கவனித்துக் கொண்டு அமைதியாக இருந்த சிவேஷ்.
 
 
அதில் அவனைத் திரும்பி முறைத்தவள் “யூ ஸ்டே அவே ஃப்ரம் திஸ்..” என்றாள். “நான் ஹட் நம்பர் 10ல் தான் இருக்கேன்.. நாமும் பிரெண்ட்ஸ் தானே.. ஓ கமான்..” என்று அந்த ஊழியருக்கு கேட்கும்படி கூறியவன், மெல்ல அவள் பக்கம் திரும்பி “நீ என்ன செஞ்சுட்டு இருக்கேன்னு உனக்குப் புரியுதா இல்லையா..? உன்னை நீயே அசிங்கப்படுத்திட்டு இருக்கே, இப்படி எதுக்கும் வேலைக்கு ஆகாதவனுக்காக நீ இதெல்லாம்..” என்று பல்லை கடித்தபடி அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சிவேஷ் பேசிக் கொண்டே செல்ல.. “ஷட் அப்..” என்று அவனை முறைத்தாள் நேஹா.
 
 
இருவரும் கிட்டத்தட்ட சண்டை போட்டுக் கொள்வது போல் நின்று பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட ஊழியர், “எனி இஷ்யூஸ்..?” என்றார்.
 
 
அதற்குச் சட்டெனப் புன்னகை முகமாகத் திரும்பி அவரைப் பார்த்திருந்த சிவேஷ் “நத்திங், வீ ஆர் ப்ரெண்ட்ஸ் ஜஸ்ட் பிரெண்ட்ஸ் டாக் அவ்வளவு தான்..” என்றான்.
 
 
அதில் அந்த ஊழியரும் ஒரு தலையசைப்போடு அங்கிருந்து நகர்ந்து விட.. “உன்னை யார் இப்போ இங்கே வர சொன்னது..? முக்கியமா பேசிட்டு இருந்தேன் தெரியுமா..” என்று அந்த ஊழியரின் பின்னே செல்ல முயன்ற நேஹாவின் கையைப் பிடித்து நிறுத்தியவன் “ஸ்டாப் இட் நேஹா.. உன் இஷ்டத்துக்கு நீ நினைச்சதும் எல்லாம் மாற, இது உங்க அப்பா ஏற்பாடு செஞ்சு இருக்கப் பார்ட்டி இல்லை.. இது ரத்தன் க்ரூப்ஸ் செலிப்ரேஷன்.. அங்கே வந்து நீ உன் இஷ்டத்துக்கு ரூமை மாத்தி கொடு, என் இஷ்டத்துக்கு அதை அலாட் செய், இதைச் சேஞ்ச் செய்னு எல்லாம் சொன்னா அவன் உன்னையே சேஞ்ச் செஞ்சு வீட்டுக்கு அனுப்பிடுவான், அப்புறம் உங்க அப்பாவுக்கு என்ன பதில் சொல்லுவே..?” என்றான் சிவேஷ்.
 
 
அவனின் இந்த வார்த்தையில் அப்படியே அமைதியானவள், அடுத்து என்ன செய்வது எனப் புரியாமல் சோர்ந்து போய் நின்று விட.. அவள் முகத்தில் இருந்த கவலையைக் கண்ட சிவேஷ் “எதை வேண்டாம்னு தூக்கி போட்டியோ அதையே திரும்பச் சொந்தமாகிக்கணும்னு எதுக்கு நினைக்கற நேஹா..?” என்றான்.
 
 
அதற்குப் பதிலளிக்காமல் அவனை ஒருமுறை திரும்பிப் பார்த்து விட்டு நேஹா தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த குடிலுக்குள் சென்று, அவள் அறையின் கதவை வேகமாக அடித்து மூடினாள். இது அவள் அதீத கோபமாக இருக்கும் நேரங்களில் நடந்து கொள்ளும் முறை தான் என்பதால் வரவேற்பறையில் அமர்ந்திருந்த பிங்கி திரும்பிப் பார்த்து விட்டு எதுவும் நடக்காதது போலத் திரும்பி கொண்டாள்.
 
 
இங்கே தனக்கென ஒதுக்கப்பட்ட குடிலுக்குள் நுழைந்த வர்மா பார்வையாலே அந்த இடத்தை வலம் வந்து கொண்டிருக்க.. அதற்குள் மற்றொரு ஊழியர் வர்மாவின் காரை பார்க் செய்து விட்டு உள்ளிருந்த இவர்களின் லக்கேஜை எடுத்து வந்து குடிலுக்குள் வைத்தார்.
 
 
ஒரு சிறு தலையசைப்போடு அவரைப் பார்த்து “தேங்க்யூ..” என்றவன், கிட்டதட்ட சூட் போல் இருந்த அந்தக் குடிலை ஒருமுறை சுற்றி வந்தான்.
 
 
அவர்களின் ரசனை, ஒவ்வொன்றிலும் மிளிரும் பணக்காரத்தனம், சின்னச் சின்ன விஷயங்களைக் கூட அழகுணர்ச்சியோடு பார்த்து பார்த்துச் செய்வது என அவர்களின் ரசனை வர்மாவை வியக்க வைத்தது.
 
 
இத்தனை வருடங்களாக அவர்கள் கோலோச்சி கொண்டிருக்கும் காரணம் புரிய.. இதுவரை ரத்தன் குரூப்போடு வர்மா இணைந்து பணியாற்றியது இல்லை. மூன்றரை வருடங்களுக்கு முன் ஒருமுறை இதேபோல் அவர்கள் பெங்களூரில் கட்டிய ரிசார்ட்டிற்குக் கொட்டேஷன் அனுப்பி இருந்தான் வர்மா.
 
 
ஆனால் அதன் முதல் கட்ட பேச்சு வார்த்தையில் கூட அவன் கலந்து கொள்ளவில்லை. அதற்குள் அவன் வாழ்க்கையில் ஏதேதோ நடந்து விட்டிருந்தது.
 
 
அதோடு அதற்கடுத்த ஆறு மாதங்கள் வர்மா முற்றிலும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு விட்டிருந்ததில், இவர்களோடு சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பும் அவனுக்கு அமையாமல் போனது.
 
 
இதில் அவனே அறியாத ஒன்று, இப்போது போலவே முதற்கட்ட தேர்வில் வர்மாவின் நிறுவனமும் அப்போது தேர்வாகி இருந்தது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படும் நிலையில் அப்போது இல்லாத சரோஜாவும் அதைப் புறக்கணித்து இருந்தார்.
 
 
அன்று அவரின் கவனம் முழுக்க வர்மாவை மீண்டும் தேற்றி பழைய நிலைக்குக் கொண்டு வருவதில் மட்டுமே இருந்தது. அதில் இந்த முறை கிடைத்த வாய்ப்பை தவற விடக் கூடாது என்ற எண்ணமும், அதோடு தன் தொழில் நேர்த்தியை பார்த்து இனி வரும் காலங்களில் யோசனையின்றி ரத்தன் குழுமம் தொடர்ந்து தன்னோடு இணைந்து வேலை பார்க்க வேண்டும் என்ற உறுதியும் வர்மாவின் மனதில் இருந்தது.
 
 
அதனால் ஒவ்வொன்றையும் ஊன்றி கவனித்து அவர்களின் தேவை, ரசனை என மனதில் பதிய வைத்துக் கொண்டிருந்தான் வர்மா. இதையெல்லாம் பார்த்தபடி அமைதியாக நிலா நின்றிருக்க.. அதே நேரம் அவளின் பக்கம் திரும்பி இருந்தவன் “இங்கே த்ரீ ரூம்ஸ் இருக்கு, இதில் நான் இந்த ரூமை எடுத்துக்கறேன், உனக்கு எந்த ரூம் வேணும்னு பார்த்து நீ தங்கிக்கோ..” என்றான்.
 
 
அதில் அவனை ஒரு தலையசைப்போடு பார்த்தவள், தன் பையை எடுத்துக் கொண்டு அவள் நின்றிருந்த இடத்திற்கு அருகில் உள்ள அறைக்குள் நுழைந்தாள் நிலா.
 
 
வர்மாவும் தன் லக்கேஜை அறைக்குள் எடுத்துச் சென்று வைத்து விட்டு அங்கிருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்து விழி மூடினான். சற்றுமுன் இங்கு வந்த போதே, காரில் இருந்து இறங்கும் முன் நேஹாவை அவன் பார்த்து விட்டிருந்தான்.
 
 
அடுத்து வரும் மூன்று நாட்கள் இவளை வேறு சமாளித்தாக வேண்டும் என்று மனம் நினைக்க.. இத்தனை நாட்கள் போல் அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ மட்டும் பார்த்து விட்டு கிளம்பி விடவும் முடியாது எனப் புரிந்தது.
 
 
நேஹாவுக்குக் கோபம், துக்கம், சந்தோஷம் என எல்லாமே அளவு கடந்து தான் வரும். அதை ஒரு எல்லைக்குள் வைக்க அவளுக்குத் தெரியாது. அவள் நினைத்தது நடக்கவில்லை என்றால் எதிரில் இருப்பவர்களை எவ்வளவு வேணுமானாலும் காயப்படுத்த தயங்க மாட்டாள்.
 
 
இறுதியாக அவள் தனக்குக் கொடுத்த வலியே அதற்குச் சாட்சி. ஆனால் இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் அவளின் குணத்தை ஒரு காலத்தில் ரசித்திருக்கிறான் வர்மா.
 
 
ஆனால் இப்போது நினைக்கையில் அதெல்லாம் எரிச்சலை தந்தது. அன்று சந்தோஷமாக அனுபவித்த சில தொந்தரவுகள் இன்று தன் நிம்மதியை கெடுக்க முயல்வதைக் கண்டு அதற்கு வாய்ப்பே அளிக்கக் கூடாது என்ற முடிவோடு நிமிர்ந்தவன், இவ்வளவு நேரம் பயணித்து வந்த களைப்பு நீங்க குளித்து முடித்து வேறு உடைக்கும் மாறி வெளியில் வந்தான்.
 
 
அதற்குள் வர்மா சொல்லாமலே நிலாவும் குளித்துத் தயாராகி வரவேற்பறை இருக்கையில் அமர்ந்திருந்தாள். அவளை லேசான வியப்போடு பார்த்தவன், “குட்.. நானே சொல்லணும்னு நினைச்சேன்..” எனவும், ஒரு புன்னகையோடு எழுந்து நின்றவள் “ஏதாவது வேலை இருக்கா சார்..?” என்றாள்.
 
 
“இப்போதைக்கு எதுவுமில்லை, இன்னைக்குப் பார்ட்டி தான்.. நாளைக்கு நமக்கு என்ன பிளான் வெச்சிருக்காங்கன்னு தெரியலை, அதை வைத்து தான் நம்ம ஒர்க் பத்தி யோசிக்க முடியும்..” என்றவன் “அப்படியே வெளியே ஒரு ரவுண்ட் போகலாம் வா..” என நிலாவையும் அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான்.
 
 
அங்கு வந்திருந்தவர்களில் ஒரு சிலர் ஆங்காங்கே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை எல்லாம் ஒரு பார்வை பார்த்தப்படியே அந்த இடம் முழுக்கச் சுற்றி வந்தான் வர்மா.
 
 
வெளிப்புற கட்டிட வடிவமைப்பு, அழகுக்காக வளர்க்கப்பட்டிருந்த செடிகள், செயற்கையாக உருவாக்கப்பட்டிருந்த நீரூற்றுக்கள் என்று ஒவ்வொன்றிலும் மிளிர்ந்த கலைநயத்தைக் கண்டு அவர்களின் ரசனை என்னவெனத் தெளிவாக வர்மாவுக்குப் புரிந்தது.
 
 
இதன்படி சரியாகத் திட்டமிட்டு வடிவமைத்தால் அவர்களின் எதிர்பார்ப்பை விடப் பல மடங்கு அதிகமாகவே செய்து முடிக்க முடியும் என்ற திடம் வர்மாவுக்கு வந்திருந்தது.
 
 
இதே யோசனையோடு நின்றிருந்தவன், “பரவாயில்லையே, திரும்பி வர மாட்டேன்னு நினைச்சேன்.. வந்துட்டே போலே..” என அருகில் கேட்ட குரலில் பார்வையைத் திருப்பினான் வர்மா.
 
 
தொடரும்...
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
This post was modified 3 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 6 months ago
Posts: 266
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ புது கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. இத்தனை நாள் பொறுமையாக காத்திருந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்..
 
 
CNM - 17
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 
This post was modified 3 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 6 months ago
Posts: 266
Topic starter  
 
 
சித்திரை – 18
 
“பரவாயில்லையே இவ்வளவு நடந்தும் திரும்பி வந்து இருக்கே..!” என்ற குரல் கேட்டு வர்மா திரும்பி பார்க்க.. அங்கு ஒரு நக்கலான சிரிப்போடு நின்றிருந்தான் சிவப்பிரகாஷ்.
 
 
அவனைத் துச்சமாக ஒரு பார்வை பார்த்து விட்டு வர்மா எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர.. “பதில் சொல்ல முடியாம பயந்து ஓடற நீ, இத்தனை பேர் முன்னே வந்திருக்கவே கூடாது..” என்றான் கேலி புன்னகையோடு சிவப்பிரகாஷ்.
 
 
அதில் ஒரு எல்லளான சிரிப்போடு பார்வையை மட்டும் திருப்பிச் சிவப்பிரகாஷை பார்த்த வர்மா, அப்போதும் எதுவும் பேசவில்லை.
 
 
ஆனால் அந்தப் பார்வையும் சிரிப்பும் சிவப்பிரகாஷுக்கு ஆயிரம் பதில்களைச் சொல்வது போல் இருந்தது. அதில் ஆத்திரமானவன் “எப்படித் தான் இவ்வளவு அவமானத்துக்குப் பிறகும் இத்தனை பேர் முன்னே வந்து நிற்க உன்னால் முடியுதோ தெரியலை.. நானா இருந்தா தூக்கு போட்டுட்டு இருப்பேன்.. மானம் தான்டா ஒருத்தனுக்கு முக்கியம், அதுவே போன பிறகு நீ என்ன பிசினஸில் சாதித்து என்ன யூஸ்..?” என்று வேண்டுமென்றே வர்மாவை தூண்டி விட்டான் சிவப்பிரகாஷ்.
 
 
வர்மாவின் அருகில் நின்று அவன் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நிலாவுக்கு அவ்வளவு கோபம் வந்தது. தன் முதலாளியை யாரோ இப்படி நிற்க வைத்துத் தேவையில்லாமல் பேசிக் கொண்டிருப்பதை அவளால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.
 
 
வர்மா எவ்வளவு நல்லவன் என அவளுக்குத் தெரியுமே...! கேட்காமலே இத்தனை உதவிகளைச் செய்பவனைப் பற்றி என்ன தெரியுமென இப்படி எல்லாம் ஒவ்வொருவரும் வந்து மனதை நோகடிக்கப் பேசுகிறார்கள் என்ற கோபம் அவளுக்கு உண்டானது.
 
 
ஆனால் இவர்கள் யார் எவரேன தெரியாமல் அவசரப்பட்டு வார்த்தைகளை விட முடியாமல் வர்மாவின் முகம் பார்த்தாள் நிலா. ஆனால் வர்மாவோ அவள் எதிர்பார்த்தது போல் முகம் வாடி நிற்காமல், “பயமா இருக்கா..? ஐயோ இவன் திரும்ப வந்துட்டானே.. இவனை எதிர்த்து நம்மால் போட்டி போட்டு ஜெயிக்க முடியாதேன்னு ரொம்பப் பதட்டமா இருக்கா..? ம்ப்ச், அதுக்காக எல்லாம் என்னால் உனக்கு விட்டு கொடுக்க முடியாது.. இப்படி எல்லாம் பேசி என்னை இங்கே இருந்து போக வைக்க நீ திட்டம் போட்டிருந்தா..! ஐ அம் சாரி, ட்ரை சம்திங் எல்ஸ்.. ஆல் த பெஸ்ட்..” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தான் வர்மா.
 
 
“இவ்வளவு நடந்தும், அவ்வளவு அசிங்கப்பட்டும் கொஞ்சமும் உன் திமிர் குறையலை இல்லை..” என்று பல்லை கடித்தப்படி முணுமுணுத்த சிவப்பிரகாஷ் “இங்கே தானேடா இருக்கப் போறே.. உன்னைப் பார்த்துக்கறேன்..” என்று விட்டு வேறு பக்கம் சென்றான்.
 
 
வர்மா தொழிலை கையில் எடுப்பதற்கு முன் ஓரளவு சிவப்பிரகாஷின் கை தான் இந்தத் துறையில் ஓங்கி இருந்தது. வர்மாவின் தந்தை ராஜவர்மாவுக்கு அவரின் காதல் மனைவி சந்திரிகாவின் இழப்புக்கு பிறகு தொழிலில் பெரிதாக ஆர்வம் இல்லை.
 
 
ஆனால் அதே நேரம் தொழிலை நஷ்டம் அடையாமல் பல வருடங்களாக ஒரே நிலையில் கொண்டு சென்று கொண்டிருந்தார். இதில் சரோஜா தேவியும் பெரிதாகத் தலையிடவில்லை. ஏனெனில் தன் மருமகள் மேல் மகனுக்கு இருந்த காதலை பற்றி அறிந்திருந்ததால் சரோஜாதேவி அவரை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை.
 
 
எப்படியும் வர்மா கைக்குத் தொழில் வந்த பிறகு அது வேறு ஒரு பரிணாமத்திற்கு மாறிவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அதேபோல் தான் தொழிலை கையில் எடுத்த சில மாதங்களிலேயே மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்தி காண்பித்து இருந்தான் வர்மா.
 
 
இது அந்த நேரம் தொழில்துறையில் தங்கள் கை தான் மேலோங்கி இருக்கிறது என நினைத்து இறுமாந்திருந்த பலருக்கு பலத்த அடியாக இருந்தது. ஏனெனில் அவர்கள் வர்மாவின் நிறுவனத்தைத் தங்களுக்குப் போட்டியாகக் கூட அப்போது நினைத்திருக்கவில்லை.
 
 
கிட்டத்தட்ட பத்து வருடங்களாகப் பெரிதாக எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் எதிலும் போட்டி போடாமல் இவர்கள் நிறுவனம் ஒதுங்கியே இருந்தது, அவர்களுக்குச் சாதகமாகிப் போனது.
 
 
அதில் இப்படி ஒரு போட்டி நிறுவனம் இருப்பதையே மறந்திருந்தவர்கள், வர்மா அதைத் தன் கையில் எடுத்த அடுத்த நான்கு மாதங்களில் ஒரு மிகப்பெரிய டெண்டரை தன் வசப்படுத்தி இருந்த போதே அதிர்ந்து இவன் பக்கம் பார்த்தனர்.
 
 
அதன் பின் இவன் சின்னப் பையன் தானே என நினைத்து வர்மாவை ஓரம் கட்ட அவர்கள் எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. முதலில் பின்னேயிருந்து சில திருகு தாளங்கள் செய்து வர்மாவிற்குப் பெரும் நஷ்டத்தை உருவாக்கி அவனைத் தொழிலை நடத்த விடாமல் செய்ய முயற்சித்தவர்கள், அது பலனளிக்காமல் போனதில் அடுத்து அவனை மிரட்டி பணிய வைக்க நினைத்து, அதுவும் முடியாமல் போக.. இப்படி ஒவ்வொன்றாக முயன்று பார்த்து அவர்கள் தோல்வியைத் தொடர்ந்து தழுவி கொண்டிருக்க.. வர்மாவோ அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்ந்து அவர்கள் அண்ணாந்து பார்க்கும் இடத்தில் சென்று நான்கு வருடத்தில் அமர்ந்து விட்டிருந்தான்.
 
 
இதில் சின்னப் பையனிடம் தோற்றுவிட்ட அவமானம் ஒரு பக்கம். தங்கள் இடத்தைத் தட்டிப் பறித்த கோபம் ஒரு பக்கம். இவனால் இத்தனை வருடங்கள் கட்டிக் காத்த பெருமை, பேர், புகழ், காணாமல் போன ஆத்திரம் ஒரு பக்கம் என்றிருந்த பல தொழில் ஜாம்பவான்கள் ஒன்றிணைந்து வர்மாவை கவிழ்க்க முயன்று கொண்டிருக்க.. அவர்களோடு சேராமல் தனியாகத் திட்டமிட்டு காய் நகர்த்தினார் ஆளவந்தான்.
 
 
வேறு எதிலும் சிக்காமல் வேறு எதற்கும் பணியாமல் தன் பாதையில் மட்டுமே கவனமாக இருந்த வர்மா, இங்குச் சருக்கினான். சிவப்பிரகாஷ் பேசிச் சென்ற பிறகு இதெல்லாம் வர்மாவின் மனதில் ஓட.. மெல்ல நடந்து கொண்டிருந்தான் வர்மா.
 
 
அதற்குள் வர்மா நிலாவோடு வெளியே வந்திருப்பதை அறிந்த நேஹா வேகமாக அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி வந்தாள். அதேநேரம் அங்குத் தங்கி இருந்த வேறு சிலர் வர்மாவோடு இன்முகமாக நின்று கை கொடுத்து பேசிக் கொண்டிருக்க.. அவர்களுக்கெல்லாம் அதே போல் மரியாதையாகப் பதில் அளித்துக் கொண்டிருந்தான் வர்மா.
 
 
வர்மாவோடு மீட்டிங் சென்ற சில முறைகளிலேயே அவனுக்குத் தொழில் வட்டாரத்தில் இருக்கும் மரியாதையை நிலா கவனித்து இருந்தாள். பலர் அவனோடு பேசி பழக முயல்வதும், மரியாதையாக நடத்துவதும் புரிந்தாலும் ஒரு சிலர் மட்டும் வேண்டுமென்றே அவனைச் சீண்டிக் கொண்டு இருப்பதையும் கவனித்தாள் நிலா.
 
 
அது போல் வர்மா யாரிடமும் தானாகச் சென்று பேசவும் முயலவில்லை. யாரின் வம்புக்கும் செல்லதுமில்லை என்பதையும் கவனித்திருந்தவள், ‘இவர்கிட்ட மட்டும் எல்லாரும் ஏன் இப்படி நடந்துக்கறாங்க..?’ என்ற யோசனையோடே நிலா நின்றிருக்க.. அதே நேரம் அங்கு வந்து சேர்ந்தாள் நேஹா.
 
 
இருவரும் ஜோடியாகப் பக்கத்தில் நின்றிருப்பதைக் காணக் காண அவளுக்கு அப்படி ஒரு ஆத்திரம் உண்டானது. அதோடு இருவரும் ஒரே குடிலில் தங்கி இருப்பது வேறு அவளை நிலை கொள்ள விடாமல் தவிக்கச் செய்து கொண்டிருக்க.. கோபமாக அங்கே வந்தவள் வர்மாவோடு மூன்று பேர் நின்று பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அமைதியானாள்.
 
 
இவர்களை நினைத்தெல்லாம் நேஹாவுக்குக் கொஞ்சமும் தயக்கமில்லை. அவளின் பயமெல்லாம் இவர்கள் மூலம் விஷயம் ஆளவந்தானுக்குத் தெரிய வந்துவந்தால் டெண்டரும் வேண்டாம் பார்டியும் வேண்டாமென அவளை இங்கிருந்து உடனே கிளம்பச் செய்து விடுவார்.
 
 
அதனாலேயே அமைதியாக இருந்தவளின் அடக்கப்பட்ட கோபம் அவளின் விழிகளிலேயே தெரிய நிலாவை முறைத்துக் கொண்டு நின்றாள் நேஹா. அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் மெல்ல தயங்கி வர்மாவிடம் இருந்து தள்ளி நிற்க முயன்றாள் நிலா.
 
 
ஒரு பெண்ணாக நிலாவுக்கு நேஹாவின் மனம் தெளிவாகப் புரிந்தது. வர்மாவை தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள நேஹா முயல்வதும் அவளுக்குப் புரிய, இவர்களின் பிரச்சனைக்கு இடையில் நாம் எதற்கு என்ற மனநிலையில் தான் அவள் இரண்டடி பின்னுக்கு நகர்ந்தாள்.
 
 
ஆனால் அதே நேரம் மற்றவர்களோடு பேசிக் கொண்டிருந்தாலும் இதைக் கவனித்திருந்த வர்மா, நிலாவின் கைபிடித்து மீண்டும் தன்னருகே இழுத்து நிறுத்தினான்.
 
 
இதில் திகைத்தவள் வர்மாவை தயக்கத்தோடு விழிகளை உயர்த்திப் பார்க்க.. அவனும் அவளை அதே நேரம் திரும்பிப் பார்த்து விழிகளாலேயே அமைதியாக இரு என்று விட்டு மீண்டும் தன் பேச்சை தொடர்தான்.
 
 
இது நேஹாவை மேலும் கொந்தளிக்கச் செய்திருந்தது. இதற்கு மேல் இங்கு நின்றிருந்தால் யார் இருக்கிறார்கள் எனப் பார்க்காமல் ஏதாவது பேசி விடுவோம் எனப் புரிய.. அங்கிருந்தவர்களுக்கு லேசான புன்னகையோடு ஒரு தலையசைப்பை மட்டும் கொடுத்து விட்டு நகர்ந்தாள் நேஹா.
 
 
‘எவ்வளவு தைரியம் இருந்தா அவளை இங்கே கூட்டிட்டு வந்ததும் இல்லாம அவ கையைப் பிடிச்சுப் பக்கத்தில் வேற இழுத்து நிறுத்தறார்.. இது சரியில்லை மஹி.. நீங்க இப்படிச் செய்யக் கூடாது..’ என்று தனக்குள்ளேயே புலம்பியவாறு நேஹா நடந்து கொண்டிருக்க.. அதே நேரம் சில அடிகள் தள்ளி நின்று நேஹாவையே கவனித்துக் கொண்டிருந்த பிங்கிக்கு ஆளவந்தானிடமிருந்து அழைப்பு வந்தது.
 
 
அதைப் பவ்யமாக ஏற்று “குட் ஈவினிங் சார்..” என்றாள் பிங்கி. “ம்ம்..” என்று மட்டும் அதற்குப் பதிலளித்தவர், “என்ன நடக்குது அங்கே..?” என்று அதிகார குரலில் கேட்க.. “இப்போ தான் ஒவ்வொருத்தரா வந்துட்டு இருக்காங்க சார்.. இன்னும் பங்க்ஷன் ஆரம்பிக்கலை..” என்றாள் பிங்கி.
 
 
“உன்னை ஒன் ஹவருக்கு ஒருமுறை கால் செய்யச் சொல்லி இருந்தேன் இல்லை..” என்று அவர் கோபமாகக் கேட்கவும், “இங்கே வந்ததுமே உங்களுக்கு ரிப்போர்ட் செஞ்சுட்டேன் சார்.. அதுக்குப் பிறகு இரண்டு முறை கால் செய்ய ட்ரை செஞ்சேன்.. ஆனா இங்கே சிக்னல் சரியா இல்லை..” என்றாள் பிங்கி.
 
 
“இதெல்லாம் ஒரு சாக்கா..? அங்கே சிக்னல் இல்லைனா எங்கே சிக்னல் கிடைக்குதோ அந்தப் பக்கம் போய்க் கால் செய்யத் தெரியாதா உனக்கு..?” என்று அவர் எரிச்சலோடு கேட்கவும், “இல்லை சார்.. இங்கே நிறையப் பேருக்கு சிக்னல் கிடைக்கலை.. தூரமா போய்த் தான் பேச வேண்டி இருக்கும், மேடமை தனியா விட்டுட்டு எப்படி..?” என்று அவள் தயங்கி நிறுத்தினாள்.
 
 
“அந்தப் பைய வந்துட்டானா..?” என்று கொஞ்சமும் மரியாதை இல்லா குரலில் ஆளவந்தான் எரிச்சலோடு கேட்கவும், “எஸ் சார், இப்போ தான்..” என்றாள் பிங்கி. “ஹாங் சரி, அவன் மேலே ஒரு கண்ணை வை..” என்றிருந்தார் ஆளவந்தான்.
 
 
இவ்வளவு நேரம் மகளைக் கண்காணிக்கச் சொன்னவர், இப்போது அவனைக் கண்காணிக்கச் சொல்லவும் குழம்பியவள், அதைப் பற்றி வேறு எதுவும் கேட்கவில்லை. கேட்கும் அதிகாரமும் தனக்கு இல்லை என அவளுக்குத் தெளிவாகத் தெரிந்ததால் பவ்யமாக “சரிங்க சார்..” என்றதோடு முடித்துக் கொண்டாள் பிங்கி.
 
 
தன்னோடு பேசிக் கொண்டிருந்தவர்களிடம் இருந்து விடை பெற்று வர்மா நிலாவோடு வேறு பக்கம் நகர்ந்தான். “ஏழு மணிக்கு பார்ட்டி தொடங்கும்.. இப்போ மணி ஐந்து தான் ஆகுது, ஒரு மணி நேரத்துக்குப் பிறகு பார்ட்டிக்கு நாம தயாரானா போதும்.. இப்போ சும்மா இந்த இடத்தைச் சுத்தி வரலாம்..
 
 
எனக்கு இவங்க பில்டிங் ஸ்டைல் பார்க்கும் போது ஒரு ஐடியா மனசில் தோணுது.. உனக்கு அது போல ஏதாவது தோணினா மறக்காம குறிச்சு வெச்சுக்கோ.. நாம இதைப் பத்தி அப்புறமா டிஸ்கஸ் செஞ்சுக்கலாம்..” என்றான் வர்மா.
 
 
“சரிங்க சார்..” என்றவள், முன்பே அவள் இங்கு வந்ததிலிருந்து கவனித்ததை எல்லாம் மனதிற்குள் ஒருமுறை நினைவுப்படுத்திக் கொண்டவள், அறைக்குத் திரும்பி பின் முதல் வேலையாக அதையெல்லாம் குறித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
 
 
இப்படி இருவரும் பேசிக் கொண்டே செல்ல.. “மஹேந்தர்..” என்ற ஆரவார அழைப்போடு அங்கு வந்து நின்றார் ஜனார்த்தன். அவரைக் கண்டதும் வர்மாவும் முகம் மலர “அங்கிள் எப்படி இருக்கீங்க..?” என்று விசாரிக்க.. “நான் நல்லா இருக்கேன்டா கண்ணா, நீ எப்படி இருக்கே..? உன்னைப் பார்த்து எத்தனை வருஷமாகுது, ஒரு போன் கூடச் செய்யலை நீ..” என்று அவர் வருத்தத்தோடு வர்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு நலம் விசாரிக்க.. அவரின் அன்பில் மகிழ்ந்தவன் “சாரி அங்கிள் நான்..” என்று அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் தயங்கி நிறுத்தினான்.
 
 
“புரியுதுடா கண்ணா.. என்னென்னவோ நடந்து போச்சு, சரி அதை விடு.. போனதை யோசிச்சு என்ன செய்ய..? இனி நடக்க வேண்டியதை தான் நாம பார்க்கணும்..” என்றவர், “உன்னை இங்கே பார்ப்பேன்னு நான் நினைக்கவே இல்லை.. நீ இந்தியா வந்துட்டேன்னு கேள்விப்பட்டேன்.. நான் பிசினஸ் விஷயமா டெல்லி போய் இருந்தேன்..” என்றார் ஜனார்த்தன்.
 
 
“நானும் உங்களை இங்கே எதிர்பார்க்கலை அங்கிள்.. நீங்க எப்படி இங்கே..?” என்றான் வர்மா. ஏனெனில் ஜனார்த்தன் கட்டுமான தொழிலில் இருப்பவவர் இல்லை.
 
 
“மிஸ்டர் ரத்தன் என்னை பார்ட்டிக்கு இன்வைட் செஞ்சு இருந்தார் மஹி.. நேற்று தான் டெல்லியில் இருந்து வந்தேன்.. அவ்வளவு வேலைக்கு நடுவில் இங்கே வரணுமான்னு கூட யோசிச்சேன்.. ஆனா வந்ததும் நல்லதா போச்சு.. உன்னை பார்க்க முடிஞ்சுதே..” என்றவர் சிறு இடைவெளி விட்டு “நான் நைட் பிளைட்டில் கிளம்பிடுவேன்..” என்றார்.
 
 
“ஓ.. ஏன் அங்கிள் அவ்வளவு அவசரம்..?” என்ற வர்மாவை பார்த்து புன்னகைத்தவர், “வேலை நிறைய இருக்கு..” என்றார். பின், “நீ எப்படி இருக்கே..? சரோ ஆண்ட்டி எப்படி இருக்காங்க..? உன்னை நினைச்சு ரொம்பக் கவலைப்பட்டு இருந்தாங்க, அவங்க உடல்நிலைக் கூட ரொம்ப மோசமா போச்சு, அன்னைக்கு ஹாஸ்பிட்டலில் அந்த நிலைமையில் அவங்க இருந்தப்போ கூட உன்னைப் பத்தி தான் பேசினாங்க..” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க.. சிறுத்திகைப்போடு அவரைப் பார்த்தவன், “பாட்டியா..? ஹாஸ்பிடலிலா..! எப்போ..?” என்றான் அதிர்வோடு வர்மா.
 
 
அதில் லேசாக அதிர்ந்தவர், “உனக்கு இன்னும் தெரியாதா..?” என்று தயங்க, “இல்லை அங்கிள் எனக்குத் தெரியலை, பாட்டிக்கு எப்போ என்னாச்சு..?” என்று கூற, “ஒரு நாள் காலையில் இருந்து ஆண்ட்டி கீழே வரலைன்னு வீட்டில் வேலை செய்யறவங்க மேலே ரூமுக்குப் போய்ப் பார்க்கும் போது ஆண்ட்டி அங்கே மயங்கி கிடந்து இருக்காங்க.. உடனே ஹாஸ்பிடலில் அவங்களை அட்மிட் செஞ்சு ஐசியூவில் பத்து நாள் இருந்தாங்க ஆண்ட்டி..
 
 
செல்வராகவன் தானே எங்களுக்கும் பேமிலி டாக்டர், அவர் மூலமா எனக்கு விஷயம் தெரிஞ்சது.. அப்போ தான் நான் போய்க் கூட இருந்து பார்த்துகிட்டேன்.. உங்க காயு ஆண்ட்டி தான் ஒரு வாரமும் சரோ ஆண்ட்டி கூடவே இருந்தா..” என்றவர், “நான் அப்போவே உனக்குச் சொல்லணும்னு தான் நினைச்சேன், ஆனா சரோ ஆண்ட்டி தான் உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு என்னைத் தடுத்துட்டாங்க..” என்றார் ஜனார்த்தனன்.
 
 
“என்ன அங்கிள் அவங்க தான் சின்னபிள்ளை மாதிரி நடந்துக்கறாங்கனா நீங்களுமா..? ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லி இருக்கலாமே..!” என்று தன் மன வேதனையை அவரிடம் வர்மா வெளிப்படுத்த.. சில நொடிகள் அமைதியானவர், “எனக்கு அந்தச் சூழ்நிலையில் என்ன செய்யறதுன்னு தெரியலை வர்மா.. ஆண்ட்டி நிம்மதியா இருக்கணும், அவங்க உடல்நலம் தேறி வரணும்னு மட்டும் தான் என் மனசுக்கு அந்த நிமிஷம் தோணுச்சு..” என்று சொல்லி சிறு இடைவெளி விட்டவர், “அவங்களும் இல்லாம போனா உன் நிலை என்னாகும்னு மட்டும் தான் நான் அன்னைக்கு யோசிச்சேன்..” என்றார் ஜனார்த்தனன்.
 
 
இதில் மனம் கணக்க.. “பாட்டிக்கு என்னாச்சு அங்கிள்..? இப்போவாவது சொல்லுங்க..?” என்றான் வர்மா. “எல்லாம் உன்னைப் பத்தின கவலை தான்.. உன்னையே யோசிச்சு ஓவர் ஸ்ட்ரேஸ், சரியா சாப்பிடாம தூங்காம மருந்து எடுக்காம இருந்ததுன்னு எல்லாம் சேர்ந்து அவங்களை இப்படி ஆக்கிடுச்சு..” என்றவர் “ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் அன்னைக்கு அவங்களைக் காப்பாத்தினோம்..” எனச் சேர்த்து கூற, மனதளவில் உடைந்து விட்டான் வர்மா.
 
 
தனக்கென இருக்கும் ஒரே உறவு, தன்னை மட்டுமே நினைத்து வாழும் ஒரு உறவு, அவருக்கு இப்படியானது கூடத் தெரியாமல் எங்கோ எதையோ எண்ணி பயந்து வருந்தி ஓடி ஒளிந்து தன் வாழ்க்கையின் முக்கியமான நாட்களைத் தொலைத்தது வர்மாவுக்குத் தாமதமாகப் புரிய.. தன் கரத்தைப் பிடித்திருந்த அவரின் கைகளை வேகமாக நன்றியோடு அழுத்தி பிடித்தவன் அவரைப் பார்த்து “சாரி அங்கிள்.. என் மேலே தான் தப்பு, நான் இங்கே இருந்து இருக்கணும்.. பாட்டி கூட இருந்து இருக்கணும், அவங்களை அப்படி விட்டு நான் போயிருக்கக் கூடாது.. என்னை மட்டுமே யோசிச்சுட்டு அவங்களைப் பத்தி நான் யோசிக்காமல் விட்டுவிட்டேன்..” என்றான் வர்மா.
 
 
“அட அதெல்லாம் இல்லைப்பா.. அந்த நிமிஷம் அப்படியான ஒரு அதிர்வில் இருந்து நீ மீண்டு வந்ததே பெரிய விஷயம்.. தப்பான ஒரு முடிவுக்குப் போகாம இருந்த பார் எங்களுக்கு அதுவே போதும்.. அதை நினைச்சு தான் நானும் உன் நலன் விரும்பும் எல்லாரும் ரொம்பப் பயந்தோம்..” என்று நிஜமாகவே வர்மாவின் நலன் நாடும் சிலரின் பெயரைக் கூறி அவர் சொல்ல.. அப்படி ஒரு முடிவையும் எடுக்க நினைத்து இறுதி நேரத்தில் அதைக் கைவிட்டிருந்த வர்மா பதில் பேச முடியாமல் தலை கவிழ்ந்தான்.
 
 
“ஆண்ட்டியோட ஹெல்த் பத்தி தெரிஞ்சா நீ கண்டிப்பா இங்கே கிளம்பி வருவேன்னு அவங்களுக்குத் தெரியும்.. ஆனா நீ அப்படி வரக்கூடாதுன்னு அவங்க நினைச்சாங்க, நீயா மனம் மாறி மனம் தேறி வரணும்.. அப்போ தான் உன்னால் இங்கே இருக்கப் பலரை எதிர் கொள்ள முடியும்.. பாட்டிக்காக நீ கிளம்பி வந்து வேற ஏதாவது பிரச்சனையில் சிக்கி திரும்ப மனம் உடைந்து போனா.. அடுத்து நீ என்ன முடிவு எடுப்பியோன்னு அவங்க பயந்தாங்க.. அந்தப் பயம் எனக்கும் சரின்னு தோணினதால் தான் நான் உனக்குச் சொல்லவே இல்லை..” என்றார் ஜனார்த்தன்.
 
 
அந்த நொடி தன் நண்பர்கள் தொடங்கி இத்தனை பேர் தன் மேல் அவ்வளவு அன்போடு இங்கு அக்கறையோடு காத்துக் கொண்டிருந்ததை எல்லாம் மறந்து, யாரோ தனக்குத் தீங்கு இழைத்தவர்களை மட்டும் மனதில் நிறுத்தி மூன்று வருடங்களைத் தொலைத்திருப்பதைத் தாமதமாக உணர்ந்தான் வர்மா.
 
 
“சாரி அங்கிள், ரொம்பச் சாரி.. உங்களையெல்லாம் நான் ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன்னு புரியுது.. நீங்க செஞ்சு இருக்கும் உதவிக்கு நான் எந்த வகையில் நன்றி சொல்றதுன்னு எனக்குத் தெரியலை.. ஆனா திரும்ப இது போலானா தவறு என் பக்கம் இருந்து நடக்காது..” என்று அவன் உறுதியளிக்க.. “எனக்கு இது போதும் மஹி.. இது போதும்.. உன் அப்பா இடத்தில் இருந்து தான் நான் உன்னைப் பார்க்கறேன், உனக்கு அது புரியும்னு நினைக்கறேன்.. அவன் இல்லைனா என்ன நான் இருக்கேன் உனக்கு.. எதுவாயிருந்தாலும் மனசு விட்டு பேசணும்னு தோணினா எப்போ வேணும்னாலும் நீ என்னைப் பார்க்க வரலாம்.. உனக்கு நம்ம வீட்டில் இல்லாத உரிமையா..” என்றார் ஜனார்த்தனன்.
 
 
அதற்குப் புரிந்தது என்பது போல் வர்மா தலையசைக்க.. அவன் மனமோ இதே ஜனார்த்தன் நான்கு வருடங்களுக்கு முன் தன் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளக் கேட்டு வர்மாவின் முன் வந்து நின்றதை நினைவுக்குக் கொண்டு வந்தது.
 
 
ஜனார்த்தனமும் ராஜவர்மாவும் உயிர் நண்பர்கள். இருவருக்கும் இடையே பல வருட பழக்கம். அது அப்படியே குடும்ப நட்பாக மாறிப் போயிருந்தது. இரு குடும்பமும் எந்த வேறுபாடு இல்லாமல் கலந்து பழகி ஒன்றாகவே இருக்க.. ஜனார்த்தனன் மகள் ஸ்ரீஷா படித்து முடித்தவுடன் தன் மகளை வர்மாவுக்குக் கொடுக்க வேண்டும் என்ற ஆசையோடு பல வருடங்களாகக் காத்திருந்த ஜனார்த்தன், அப்போது ராஜவர்மா இல்லாததால் நேராக வர்மாவிடமே வந்து அந்தத் திருமணப் பேச்சைத் தொடங்கியிருந்தார்.
 
 
ஆனால் அப்போது அவரைச் சங்கடமாகப் பார்த்தவன், “சாரி அங்கிள் நான் ஒரு பொண்ணை விரும்பறேன்..” என்று கூற, அதைக் கேட்டுத் திகைத்தாலும் “அப்படியா..! ரொம்பச் சந்தோஷம்பா, எப்போ கல்யாணம்..?” என்று சின்னக் கோபமும் மனசுணக்கமோ இல்லாமல் கேட்டிருந்தார் ஜனார்த்தன்.
 
 
“இப்போதைக்கு எதுவும் முடிவு செய்யலை அங்கிள்.. இனி தான் அதைப் பத்தி பேசணும்..” என்றிருந்தான் வர்மா.
 
 
“சரி எல்லாம் நல்லபடியா நடக்கும், நீயே என் மருமகனா வந்தா குடும்பம் தொழில் எல்லா வகையிலும் நல்லா இருக்கும்னு நினைச்சேன்.. அதான் ஒரு வார்த்தை உன்கிட்ட கேட்கலாம்னு வந்தேன்.. அதனால் என்ன..? நீ சந்தோஷமா இருந்தா போதும்.. இதுக்காக எல்லாம் உன் கல்யாணத்துக்கு என்னைக் கூப்பிடாம இருந்துடாதே மஹி..” என்று அவர் கேலியாகக் கூற, “என்ன அங்கிள் நீங்க..? அப்பா ஸ்தானத்திலிருந்து நீங்க தான் எனக்கு எல்லாம் செய்யணும்..” என்றிருந்தான் வர்மா.
 
 
அடுத்த இரண்டு மாதத்திற்குள் அவர் மகள் ஸ்ரீஷாவுக்கு வேறு ஒரு நல்ல வரன் பார்த்து ஜனார்த்தன் கோலாகலமாகத் திருமணம் முடித்திருந்தார்.
 
 
இப்போதும் அதைப்பற்றிச் சிறு கோபமும் இல்லாமல் தன் நலனை மட்டும் மனதில் நிறுத்தி பேசிக் கொண்டிருப்பவரை, தான் வியப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான் வர்மா.
 
 
‘இப்படியான நல்ல உள்ளங்களும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். சில விஷ ஜந்துக்கள் மட்டுமே இருப்பதாக நினைத்து, இந்த உலகமே மோசம். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாரும் கெட்டவர்கள்னு நாம தான் தப்பா புரிஞ்சுக்கறோம்..’ என்று எண்ணியவன், அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு தன் குடிலை நோக்கிச் சென்றான் வர்மா.
 
 
இப்போது வேறு எங்கும் செல்லும் மனநிலை அவனுக்குச் சுத்தமாக இல்லை. நிலாவும் இவ்வளவு நேரம் அவர்கள் பேசியதை எல்லாம் கேட்டிருந்ததால் பெரும் துயரம் ஒன்று அவனை அழுத்துவதைச் சரியாகப் புரிந்துக் கொண்டவள், எதுவும் பேசாமல் அமைதியாக உடன் நடந்தாள்.
 
 
அதே நேரம் அவள் மனமோ ஜனார்த்தனனுக்கு வர்மாவின் மேல் எவ்வளவு அன்பு இருக்கிறது என மறக்காமல் குறித்து வைத்துக் கொண்டது. அவன் மேல் அக்கறை உள்ள சிலரை இங்கு கண்டிருந்ததையும் சேர்த்துக் கவனமாக மனதில் நிறுத்திக் கொண்டாள் நிலா.
 
 
வர்மா கூறியது போல ஆறு மணிக்கெல்லாம் பார்ட்டிக்கு எனச் சொல்லி பாலு எடுத்துக் கொடுத்திருந்த உடையில் தயாராகிக் காத்திருந்தாள் நிலா. தன் அறைக்குள் சென்ற வர்மா, முதலில் அழைத்தது அவனின் பாட்டிக்கு தான்.
 
 
அவரின் உடல் நிலையைப் பற்றி அக்கறையாக வர்மா விசாரிக்க.. அவன் குரலில் இருந்த தவிப்பை சரியாகக் கண்டு கொண்டிருந்த பாட்டி “என்னாச்சு மஹி..? ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கு.. எனக்கு என்ன நான் நல்லா தானே இருக்கேன், எனக்கு எதுவும் இல்லை கண்ணா..” என்றார்.
 
 
“மாத்திரை எல்லாம் ஒழுங்கா எடுக்கறீங்களா பாட்டி..?” என்று அடுத்து அவன் கேட்க.. “நான் நல்லா தான் மஹி இருக்கேன்.. நீ என்னைப் பத்தி கவலைப்படாம அங்கே போன வேலையை வெற்றிகரமா முடிச்சுட்டு வா..” என வாழ்த்துக் கூறி அழைப்பை துண்டித்து இருந்தார்.
 
 
அதன் பின் விழி மூடி பல நிமிடங்கள் படுத்திருந்த வர்மா நேரமாவதை உணர்ந்து எழுந்து கிளம்பி வெளியில் வந்தான். வழக்கமாக அவன் அணியும் கருப்பு நிற சூட் தான்.
 
 
ஆனால் இன்று அதில் ஒரு தனி அழகில் மிளிர்ந்தான் வர்மா. எப்போதும் அலவலகத்திற்கு வருவது போல் தயாராகி வருபவன், இன்று பார்ட்டிக்கு செல்லவென தயாராகி இருக்க.. இதற்கு முன் வர்மாவை இப்படி பார்த்தது இல்லை என்பதால் இமைக்க மறந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா.
 
 
அவளின் பார்வையைக் கவனித்து, ‘என்ன..?’ என்பது போல் விழிகளை உயர்த்தினான் வர்மா. அதிலேயே சுயம் உணர்ந்தவள் அவசரமாக ‘ஒண்ணுமில்லை’ என்பது போல் தன் பார்வையைத் தழைத்துக் கொண்டே தலையசைக்க.. “கிளம்பலாமா..?” என்றவன், அவளின் ஆடை அலங்காரத்தையும் விழிகளால் ஒருமுறை ஸ்கேன் செய்தான்.
 
 
இந்த இடத்திற்குப் பொருத்தமாகத் தயாராகி இருந்தவளை கண்டு ஒரு மெச்சுதலான தலையசைப்பை அவளுக்குக் கொடுத்தவன், நிலாவோடு இணைந்து வெளியில் வந்தான் வர்மா.
 
 
இருவரும் பத்தடி கூட நடந்திருக்க மாட்டார்கள், “நிலா..” என்ற வர்மாவின் குரலில் அப்படியே நின்றாள் நிலா. முதன்முறையாகத் தன் பெயரை சுருக்கி வர்மா அழைக்கவும், சிறு திகைப்போடு விழிகளை உயர்த்தி அவனை நிலா பார்க்க.. “நாம இங்கே வேலை விஷயமா தான் வந்திருக்கோம்.. ஆனா அதையும் மீறி சில சந்தர்ப்பங்கள் சில சூழ்நிலைகள் அமையலாம்.. அப்போ அதைச் சமாளிக்க நான் ஏதாவது பேசினாலோ இல்லை செஞ்சாலோ நீ தப்பா எடுத்துக்கக் கூடாது..” என்றான் வர்மா.
 
 
‘அவன் என்ன சொல்ல வருகிறான்..?’ எனப் புரியாமல் நிலா குழப்பமாக வர்மாவை பார்க்க.. “ஐ மீன் நான் அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்கச் சொல்ற ஏதாவது ஒரு விஷயம் உண்மை இல்லாம இருக்கலாம்.. ஆனா அதை உன் முகத்திலோ வார்த்தையிலோ வெளிப்படுத்திக்காதே.. எதுவாக இருந்தாலும் நாம ரூமுக்கு வந்த பிறகு பேசிக்கலாம் புரியுதா..?” என்றான் வர்மா.
 
 
இப்போதும் ஓரளவு புரிந்தும் புரியாமலே சரி என்பதாக நிலா தலையசைக்க.. “உனக்கு இன்னும் தெளிவா புரியலைன்னு தெரியுது.. ஆனா என்ன மாதிரி சூழ்நிலை எப்படி வரும்னு தெரியாம எனக்கும் இதை எப்படி விளக்கமா சொல்றதுன்னு தெரியலை..” என்றவனைப் பார்த்து “புரியுது சார் நீங்க கவலைப்படாதீங்க, பாலு என்கிட்ட எல்லாம் சொல்லி இருக்கார்.. நான் பாத்துக்கறேன், உங்களுக்கு எந்தச் சங்கடமும் வராது..” என்றாள் உறுதியான குரலில் நிலா.
 
 
அவளின் அந்த வார்த்தைகளைக் கேட்டவன், பாலுவின் மூலம் இவளுக்கு அனைத்தும் தெரிந்து இருப்பதாக நினைத்துக் கொண்டான். இங்கு நடக்கும் விஷயங்களைக் கண்டு இவள் அதிர்ந்து நிற்க வாய்ப்பில்லை, புரிந்து நடந்து கொள்வாள் என்ற எண்ணமே அந்த நொடி வர்மாவுக்குப் பெரும் நிம்மதியை கொடுக்க.. நிலாவின் கையை இறுகப்பற்றி “தேங்க்யூ..” என்றான் உள்ளார்ந்த குரலில் வர்மா.
 
 
இப்படி விழியோடு விழி பார்த்து இருவரும் கைபிடித்துப் பேசி கொண்டிருப்பதைத் தூரத்திலிருந்து முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் நேஹா.
 
 
தொடரும்...
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
 
This post was modified 3 weeks ago 2 times by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 6 months ago
Posts: 266
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ புது கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. இத்தனை நாள் பொறுமையாக காத்திருந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்..
 
 
CNM - 18
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 
This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 6 months ago
Posts: 266
Topic starter  
 
 
சித்திரை – 19
 
நேஹாவின் முகத்தில் இருந்தே அவள் விபரீதமாக எதையோ செய்யப் போவதை அறிந்த பிங்கி “நாம போகலாமா..? நேரமாகுது..” என்றாள்.
 
 
அதில் அவளைக் கோபமாகத் திரும்பி பார்த்த நேஹா. ஏதோ சொல்ல வருவதற்குள் “பார்ட்டிக்கு எல்லாரும் வர தொடங்கிட்டாங்க மேம்.. இங்கே இருக்கறவங்க நம்மைக் கவனிப்பாங்க, உங்களுக்கு நான் என்ன சொல்ல வரேன்னு புரியும்னு நினைக்கறேன்..” என்றாள் மெல்லிய குரலில் பிங்கி.
 
 
இதைக் கேட்டு வேறு வழியில்லாமல் பிங்கியோடு சென்றாலும் நேஹாவின் பார்வை அவ்வப்போது அவர்கள் இருவரின் மேல் ஆத்திரமாகப் படிந்து மீண்டும் கொண்டு தான் இருந்தது.
 
 
மிகப் பிரம்மாண்டமாக ஏற்பாடாகி இருந்த பார்ட்டியில் நேரம் செல்வதே தெரியாமல் அனைவரும் சந்தோஷமாகப் பங்கேற்றுக் கொண்டிருந்தனர்.
 
 
ஐம்பதாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் பிரம்மாண்டமாகத் தயாராகியிருந்த கேக்கை அந்தக் குழுமத்தின் உரிமையாளர்கள் மேடையில் நின்று அதை வெட்டி தங்கள் மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்து கொண்டனர்.
 
 
இத்தனை வருடங்களாக இந்த நிறுவனத்தை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல அவர்கள் எத்தனை சிரமங்களைக் கடந்து வர வேண்டி இருந்தது என்பதை எல்லாம் ஒருவர் மாற்றி ஒருவர் சிறு உரையாகப் பேசி முடித்தனர்.
 
 
அதன் பின் அங்குக் கொண்டாட்டங்கள் களைக்கட்ட தொடங்கியது. வெளிநாட்டு பொன்னிற திரவங்கள் தங்கு தடையின்றி அங்கு அனைவருக்கும் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்க.. சம்பிரதாயத்துக்காகவாவது அதை அனைவரும் கையில் பிடித்தபடி நின்றிருந்தனர்.
 
 
அங்கு வந்திருந்த சில தொழிலாதிபர்கள் தங்கள் பெண் உதவியாளர்களையும் அழைத்து வந்திருக்க.. அவர்களும் அந்தக் கலாச்சாரத்திற்கு ஏற்றது போல் முட்டிக்கு மேல் ஏறிய கவுனும், கழுத்திற்குக் கீழ் அபாயகரமான வளைவை தாண்டி கீழே இறங்கிய உடையுமாகவே பலர் வந்து கொண்டிருந்தனர்.
 
 
அவர்களின் கையிலும் தவறாமல் ஒரு பொன்னிற திரவம் நிரம்பிய கோப்பை இடம் பெற்று இருந்தது. ஒரு சிலரே அங்குச் சேலையில் இருக்க.. அவர்களில் நிலாவும் ஒருத்தி.
 
 
ஆனால் அந்தச் சேலை அணிந்திருந்தவர்களும் முதுகில் ரவிக்கை என்ற ஒன்று இருக்கோ இல்லையோ எனும் அளவுக்குச் சந்தேகம் வரும் படியான வகையில் அங்குள்ளவர்கள் எல்லாம் அதிகக் கவர்ச்சியில் மிளிர்ந்து கொண்டிருக்க.. அழகிய டிசைனர் சேலை அணிந்து மிதமான ஒப்பனையோடு அங்கு வலம் வந்து கொண்டிருந்தாள் நிலா.
 
 
அங்கு வந்திருந்த பல ஆண்களின் விழிகள் அவ்வப்போது இவளை நோட்டமிட்டுக் கொண்டிருந்தது. அனைவரின் கையிலும் இருந்த கோப்பை அவளிடம் இல்லை. இதெல்லாம் வேண்டாம் என்பது போல் பெரும் தயக்கத்தோடு நின்றிருந்தவளுக்கு வர்மா ஜூஸ் வரவழைத்துக் கொடுத்தான்.
 
 
இந்த டெண்டரில் தேர்வாகி வந்தவர்கள் இல்லாது தொழில் முறை நண்பர்களாக வந்திருந்த மிஸ்டர் குப்தாவின் மனைவி நிலாவின் டிசைனர் சேலையைக் கண்டு புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
 
 
“வாவ்.. இந்தச் சேரி டிசைன் சிம்ப்ளி சூப்பர்.. இந்தக் கலரும் உனக்கு ரொம்ப நல்லா இருக்கு, எந்த டிசைனிங் கம்பெனி..?” என அவர் கேட்டதற்கு நிலா பதில் சொல்வதற்குள் இதைக் கண்டு எரிச்சலாகி அங்கு வந்து “பாவம் அவளுக்கு அதெல்லாம் தெரியாது.. இன்னைக்கு இங்கே வர யாருகிட்டேயோ கடன் வாங்கிப் போட்டு வந்திருப்பா..” என்றாள் நக்கலாக நிலாவை பார்த்துக் கொண்டே நேஹா.
 
 
இதில் பேசிக் கொண்டிருந்த பெண்மணி நெற்றியை சுருக்க.. “எஸ் மிசஸ் குப்தா.. இவ நம்ம ஸ்டேடஸ் கிடையாது..” என நேஹா சொன்ன அதே நேரம் “இந்தச் சேரி நீத்தா டிசைனிங் கம்பெனியின் லிமிட்டட் எடிஷன்..” என்றிருந்தாள் நிலா.
 
 
அதில் நேஹா நம்ப முடியா அதிர்வோடு திரும்பி நிலாவை பார்க்க.. இப்போது மிசஸ் குப்தாவின் பார்வை நேஹாவின் மேல் ஒரு மாதிரியாகப் பதிந்தது. இதில் “எக்ஸ்க்யூஸ் மீ..” என்று விட்டு நேஹா அங்கிருந்து நகர.. சற்று தள்ளி நின்று இதைக் கவனித்த வர்மாவின் முகத்தில் கீற்றாய் ஒரு புன்னகை வந்து போனது.
 
 
மிசஸ் குப்தா வந்து நிலாவோடு பேச தொடங்கியதுமே பெண்களுக்கு இடையில் நிற்க விரும்பாமல் அங்கிருந்து நகர்ந்திருந்தான் வர்மா. இங்கிருந்து நாகர்ந்து சென்று விட்டிருந்தாலும் நிலாவின் மேல் கவனமாக இருந்தவன், நேஹா அங்கு வந்ததைக் கவனித்து அருகில் வருவதற்குள் நிலாவை அவள் இளக்காரமாகப் பேசி இருக்க.. அதற்கு வர்மா பதில் சொல்வதற்குள் நிலாவே சிறப்பாகச் சிறு சிரிப்போடு நேஹாவின் மூக்கை உடைத்திருந்தாள்.
 
 
ஏற்கனவே அவள் செய்திருந்த செயலில் தொழில் வட்டாரத்தில் நேஹாவுக்கும் ஆளவந்தானுக்கும் பெரும் கெட்ட பெயர் உண்டாகி இருந்தது. அவளைக் கண்டாலே ஒதுங்கி செல்லும் அளவுக்குச் சிலர் மாறி இருக்க.. வர்மாவை பிடிக்காத சிலர் மட்டும் ஆளவந்தானுக்கு நெருக்கமாகி இதைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
 
 
இப்போதும் நேஹாவை மிசஸ் குப்தா அப்படியே சந்தேகமாக பார்த்திருக்க.. அதனாலேயே அங்கிருந்து விலகி சென்றிருந்த நேஹாவின் மனதில் எரிமலையாக நிலாவின் மேலான ஆத்திரம் கனன்று கொண்டிருந்தது.
 
 
‘நான் அவளை அசிங்கப்படுத்த நினைச்சா, அவ என்னை..” எனப் பல்லை கடித்தவள், அடுத்து கிடைக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தாள். ஆனால் அவ்வளவு சீக்கிரம் அப்படியொரு வாய்ப்பு அவளுக்குக் கிடைக்கவே இல்லை.
 
 
அதன் பின் வர்மா நிலாவை விட்டு விலகவே இல்லை. அவளருகிலேயே அவன் இருக்க.. அது வேறு நேஹாவை நிம்மதியிழக்க செய்து கொண்டிருந்தது.
 
 
இவள் கவனம் முழுக்க வர்மாவின் மீதே இருக்க.. சிவேஷ் நேஹாவையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘இவளுக்கு இதே வேலையா போச்சு..!’ என எண்ணிக் கொண்டே அவன் நின்றிருக்க.. அதே நேரம் ஐந்தாறு பேர் வந்து வர்மாவிடம் பேச தொடங்க.. அவர்களுக்கு வழி விட்டு சற்று தள்ளி நின்றாள் நிலா.
 
 
அவர்களுக்கு இடையே இருந்த இடைவெளியில் சிலர் நடக்கத் தொடங்க.. மேலும் நிலா கொஞ்சமாகப் பின்னால் நகர்ந்தாள். இது பெரும் இடைவெளியை இருவருக்கும் இடையில் உண்டாக்கி இருக்க.. இந்தச் சந்தர்பத்தைத் தவற விடக் கூடாது என்பது போல் வெகு நேரமாக அங்கு நின்று நிலாவையே பார்த்திருந்த மாதேஷ் அவளை நெருங்கினான்.
 
 
“ஹே பியூட்டி.. என்ன திருவிழாவில் காணாமல் போன குழந்தை மாதிரி முழிச்சுட்டு நிற்கறே..? இதென்ன அசிங்கமா கையில் ஜூஸ் எல்லாம் வெச்சுட்டு, இட்ஸ் பார்ட்டி டைம் பேப், என்ஜாய்..” என்றவன் தன் கையில் கொண்டு வந்திருந்த மற்றொரு கோப்பையை அவளிடம் நீட்டினான்.
 
 
“இல்லை, எனக்கு இதெல்லாம் பழக்கமில்லை வேண்டாம்..” என்றாள் நிலா. “பழக்கம் இல்லைனா என்ன..? இனி பழகிட்டா போச்சு, பிறக்கும் போதே நாம எல்லாம் பழகிட்டா வந்தோம்..” என்று வற்புறுத்தி அவளின் கையில் அந்தக் கோப்பையை அவன் திணிக்க முயன்றான் மாதேஷ்.
 
 
“அவ எதைப் பழகணும் பழகக் கூடாதுன்னு அவளுக்குத் தெரியும்.. அதைப் பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம் மிஸ்டர்..” என்றபடியே அங்கு வந்த வர்மா, நிலாவின் கை பிடித்துத் தன் பக்கத்தில் இழுத்து நிறுத்தினான்.
 
 
“ஹேய் வர்மா.. நான் உன்னைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கேன், பட் மீட் செய்ய வாய்ப்பு கிடைக்கலை.. ப்ளீஸ் டூ மீட் யூ..” எனக் குரல் கொடுத்தப்படியே தன் கையை நட்புக்காக நீட்டினான் மாதேஷ்.
 
 
ஆனால் அவனுக்கு நட்புக்கரம் நீட்டாமல் வர்மா தன் கையைப் பேண்ட் பாக்கெட்டில் விட்டுக் கொள்ள.. ‘ஓஹோ’ என்பது போல் இதழ் பிதுக்கி ஒரு சிறு தோள் குலுக்களோடு தன் கையை மடக்கிக் கொண்டான் மாதேஷ்.
 
 
அதே நேரம் “ஹாய் மிஸ்டர் வர்மா..” என்றப்படி அங்கு வந்து நின்றார் ரத்தன். அதில் அனைவரின் கவனமும் அவர் பக்கம் திரும்பியது. “ஹலோ மிஸ்டர் ரத்தன்..” என வர்மா கைக் கொடுக்க.. பதிலுக்குக் கைக் கொடுத்தவர், “லாஸ்ட் டைமே நாம சேர்ந்து வேலை பார்க்க வேண்டியது.. உங்க டிசைன், கொட்டேஷன் எல்லாமே வெரி இம்ப்ரசிவ்.. சேர்ந்து வேலை செய்ய ரொம்ப ஈகரா இருந்தேன்.. ஆனா நீங்க தான் மீட்டிங் அட்டெண்ட் செய்யவே இல்லை..” என்றார் ரத்தன்.
 
 
அதற்குச் சிறு தயக்கத்தோடு “சாரி மிஸ்டர் ரத்தன்.. அப்போ என்..” என்று வர்மா தொடங்கவும், “யாஹ.. ஐ நோ.. சில மாதத்துக்குப் பிறகு கேள்விப்பட்டேன்.. நீங்க திரும்ப வந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.. எதுக்காகவும் நம் இலக்கை நாம விட்டுடக் கூடாது..” என்றார் ரத்தன்.
 
 
ஆமெனத் தலையசைத்து அதை ஆமோதித்தவன், “இது எனக்குக் கொஞ்சம் தாமதமா தான் புரிஞ்சுது மிஸ்டர் ரத்தன்..” என்றான் வர்மா. “பெட்டர் லேட் தென் நெவர்னு சொல்லுவாங்க.. ஐ வுட் லவ் டூ வொர்க் வித் யூ.. இப் தேர் இஸ் எ சான்ஸ்..” என்று விட்டு புன்னகையோடு விடைப் பெற்றார் ரத்தன்.
 
 
அதைக் கண்டு சந்தோஷமானவள், “இவர் பேசறதை பார்த்தா அப்போ டெண்டர் நமக்குத் தானா சார்..” என்றாள் சட்டெனத் தொற்றிக் கொண்ட உற்சாகக் குரலில் புன்னகையோடு நிலா.
 
 
அவளின் முகத்தில் இருந்த புன்னகையைக் கண்டு தானும் சிரித்தவன், “அப்படியெல்லாம் சொல்லிட முடியாது.. இது அவருக்கு நம் மேல் இருக்கும் மரியாதை விருப்பம்னு வேணும்னா சொல்லலாம்.. ஆனா அதுக்காக எல்லாம் யோசிக்காம நமக்குக் கொடுத்துட மாட்டாங்க.. அதான் அவரே சொன்னாரே, வாய்ப்பிருந்தா சேர்ந்து வேலை பார்க்கலாம்னு.. பார்ப்போம்..” என்றான் வர்மா.
 
 
“ஓ, இதில் இவ்வளவு இருக்கா..?” என்று நிலா யோசிக்க.. “இதுக்கு மேலேயும் இருக்கு.. கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கலாம்..” என்றான் வர்மா.
 
 
இப்படி இருவரும் பேசிக் கொண்டிருப்பதை வயிறு எரிய பார்த்தாள் நேஹா. ‘அப்படி என்ன அவ கூடப் பேச்சு..? அதுவும் முகம் முழுக்கச் சிரிப்பு வேற..!” என்ற எரிச்சலோடு நின்றிருந்தவளை நெருங்கிய சிவேஷ், “வெறும் வயிற்றில் இப்படியே பார்த்து வயிறு எரிஞ்சா அல்சர் தான் வரும்.. வா சாப்பிட்டே வேடிக்கை பார்ப்போம்..” என்றான்.
 
 
“உனக்கு வேணும்னா நீ போய்ச் சாப்பிடு..” என்று விட்டு நேஹா அங்கிருந்து வேகமாக நகர்ந்தாள். அதேநேரம் வர்மா நிலாவை அழைத்துக் கொண்டு சாப்பிட சென்றான்.
 
 
அதைக் கண்டு புன்னகைத்த சிவேஷ் நேஹாவை திரும்பி பார்த்தான். அதற்குள் அங்கிருப்பவற்றை எடுத்து வைத்து சாப்பிட தெரியாமல் தடுமாறிய நிலாவிற்குத் தானே வர்மா பரிமாற.. அனைவரும் நின்று கொண்டு சாப்பிட.. அங்கிருந்த இருக்கையைக் காண்பித்து அதில் சென்று அமருமாறு நிலாவை அனுப்பினான் வர்மா.
 
 
நிலாவும் சென்று அங்கே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க.. ‘சிகப்பு காயின் போகுது.. இப்போ கருப்பு, இல்லையில்லை வெள்ளை காயினும் கூடப் போகணுமே..!’ என சிவேஷ் மனதிற்குள் நினைக்க.. அதே போல் தனக்கெனக் கொஞ்சமாகச் சாப்பிட எடுத்துக் கொண்டு சென்று நிலாவின் அருகில் அமர்ந்தாள் நேஹா.
 
 
நேஹாவை கண்டதும் தேவையில்லாத வம்பு ஏன் என எழுந்து போக நினைத்த நிலா, வேறு யாராவது பார்த்தால் தப்பாக நினைப்பார்களோ என யோசிக்க.. “சேரி பிராண்ட் நேம் சொல்லிட்டா நீ பெரிய இவளா.. மஹி வாங்கிக் கொடுத்து இருப்பார், எனக்குத் தெரியாதுன்னு நினைக்கறியா நீ..? உன்னை நான் பார்த்த இரண்டு முறையும் எப்படி டிரஸ் செஞ்சுட்டு வந்தேன்னு பார்த்தேனே.. அது தான் உன் ஸ்டேட்டஸ்..” என்றாள் மெல்லிய குரலில் நேஹா.
 
 
இதில் நேஹாவை நிமிர்ந்து பார்த்த நிலா எதுவும் பேசாமல் அமைதியாகவே சாப்பிட.. அவளின் இந்தச் செயல் தன்னை அவமதிப்பதாக நேஹாவுக்குத் தோன்றியது.
 
 
“என்னடி என்கிட்டேயே திமிர் காட்டறியா..? இதெல்லாம் மஹி உனக்காகச் செய்யறார்னு நினைக்கறியா.. அவர் என்னை வெறுப்பேத்த செய்யறார்.. அதுக்காக எல்லாம் நீ மஹிக்கு உன்னைப் பிடிக்கும்னு கனவெல்லாம் காணாதே..! உன் தகுதி தெரிஞ்சு நடந்துக்கோ.. மஹி யாருன்னு தெரியுமா உனக்கு..? அவர் லெவல், அவர் ஸ்டேட்டஸ் ஏதாவது தெரியுமா உனக்கு..?” என்றவள், இறுதியாக “நான் யாருனாவது தெரியுமா..?” என்றாள் நேஹா.
 
 
இத்தனை பேர் மட்டும் இங்கே இல்லையென்றால் நிலாவை கன்னம் கன்னமாக அறைந்திருப்பாள் நேஹா. அவ்வளவு கோபம் அவளுள் கனன்று கொண்டிருந்தது.
 
 
ஆனால் அவள் இத்தனை பேசியும் ஒரு வார்த்தையும் பதில் பேசாமல் அமைதியாகச் சாப்பிட்டு முடித்து அங்கிறுந்து எழுந்து சென்றாள் நிலா. ‘திமிரை பாரு.. இவ லெவலுக்கு எல்லாம் நான் இவ கூடப் பேச வேண்டியதா இருக்கு.. இருடி உன்னை எப்படி விரட்டறேன்னு பார்..’ என முணுமுணுத்துக் கொண்டே எழுந்து சென்றாள் நேஹா.
 
 
கிட்டதட்ட எல்லாம் முடிந்து ஒவ்வொருவராகக் கலைந்து செல்ல தொடங்க.. ஜனார்த்தன் அன்று இரவே கிளம்புவதாகச் சொல்லி இருந்தது நினைவுக்கு வர.. அவரைப் பார்த்து பேசி விட்டு செல்ல நினைத்த வர்மா, நிலாவை இங்கே தனியே விட்டு செல்ல விரும்பாமல் அவர் இருக்கும் இடத்திற்கு நிலாவையும் அழைத்துச் சென்றான் வர்மா.
 
 
அதே நேரம் அவரும் மற்றவர்களோடு பேசி முடித்து, வர்மாவை நின்ற இடத்தில் இருந்தே பார்வையால் தேட.. சரியாக அங்கு நிலாவோடு வந்து சேர்ந்தான் வர்மா.
 
 
“ஹே மஹி.. உன்னைத் தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன், வீட்டுக்கு எப்போ வர..? ஆன்ட்டிகிட்ட சொன்னா ரொம்பச் சந்தோஷப்படுவா..” என்றார் ஜனார்த்தன்.
 
 
“வரேன் அங்கிள்.. கொஞ்சம் இந்த வேலை எல்லாம் முடியட்டும், கண்டிப்பா வரேன்..” என்றவன், “நீங்க இப்போவே கிளம்பறீங்களா..? இங்கேயே இருந்துட்டுக் காலையில் போகலாமே..!” என்றான் வர்மா.
 
 
“இல்லை மஹி, வேலை இருக்கு.. சொன்னேன் இல்லை..” என ஜனார்த்தன் கூறவும், புரிந்தது எனத் தலையசைத்த வர்மா அவரோடு நின்று பேசிக் கொண்டிருக்கும் போதே “என்ன மிஸ்டர் ஜனார்தனன் நீங்க கிளம்பறீங்களாமே..?” என்று கேட்டபடியே அங்கு வந்தார் ரத்தன்.
 
 
“ஆமாம் மிஸ்டர் ரத்தன், நாளைக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு.. நான் போயே ஆகணும்..” என ஜனார்த்தன் கூறவும் “ஹ்ம்ம், பிசினஸ் பிரஷர் புரியுது..” என்றவர் “இவ்வளவு டைட் ஷெட்யூலிலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கி வந்ததுக்குத் தேங்க்யூ மிஸ்டர் ஜனார்த்தன்..” எனச் சொல்லி நினைவு பரிசாக ஒரு பார்சலை ஜனார்த்தனிடம் நீட்டினார் ரத்தன்.
 
 
இவர்கள் மூவரும் இப்படிப் பேசிக் கொண்டு இருக்கும் போதே, சுற்றி நின்றிருந்த இன்னும் சிலரும் அங்கு வந்து நிற்க.. இதில் முன்பு போல் நிலா அவர்களுக்கு இடம் விட்டுப் பின்னால் நகர முயல.. அதற்கு வாய்ப்பளிக்காமல் நிலாவின் கையை இறுக பிடித்து எங்கும் நகராதப்படி அவள் விரலோடு தன் விரலை கோர்த்துக் கொண்டான் வர்மா.
 
 
இதில் எங்கும் நகர முடியாத சங்டத்தோடு நிலா நின்றிருக்க.. “மஹி பையா.. அப்போவே கேட்கணும்னு நினைச்சேன், யார் இந்தக் கியூட் கேர்ள்..?” என்றார் உற்சாகமான குரலில் ஜனார்த்தன்.
“ஆமாமா, நானும் கேள்விப்பட்டேன்.. உங்க கூட ஒரு பியூட்டிஃபுல் கேர்ள் வந்து இருக்கா, அவ உங்க பிஏன்னு.. ஆனா இப்போ பார்த்தா அப்படித் தெரியலையே..!” என்று இருவரின் கோர்த்து இருந்த விரல்களையும் பார்த்தபடி ரத்தன் ஒரு மாதிரி இழுக்க.. “ஹாங், நானும் அதைத் தான் கேட்க வந்தேன்..” என்றார் ஜனார்த்தன்.
 
 
அதற்கு ஒரு புன்னகையோடு திரும்பி இருவரையும் பார்த்தவன், “நீங்க நினைக்கறது சரி தான்.. கூடிய சீக்கிரம் நல்ல செய்தி சொல்றேன்..” என்றான் வர்மா.
 
 
இதெல்லாம் ஏதோ வேற்றுக் கிரகப் பாஷை போல் பார்த்துக் கொண்டிருந்த நிலாவுக்கு வர்மாவின் எச்சரிக்கை வார்த்தைகள் தெளிவாக நினைவில் இருக்க.. முகத்தில் எதையுமே வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஒட்ட வைத்த ஒரு புன்னகையோடு மட்டுமே நின்றிருந்தாள்.
 
 
“அதானே பார்த்தேன்.. நம்ம மஹி பையா கூட ஒரு பொண்ணான்னு நான் அப்போவே நினைச்சேன்..” என்று சந்தோஷமாகக் கூறிய ஜனார்த்தன், “நல்லா இருடா கண்ணா, இப்படி ஒரு மாற்றத்தை தான் நான்.. இல்லை நாங்க இல்லாம் உன்கிட்ட எதிர்பார்த்தோம்.. இந்த விஷயம் தெரிஞ்சா பாட்டி எவ்வளவு சந்தோஷப்படுவாங்க தெரியுமா..? ஆமா அவங்களுக்குச் சொல்லிட்டியா..?” என்றார் ஜனார்தனன்.
 
 
இதைக் கேட்டு உள்ளுக்குள் அதிர்ந்தாலும் “இன்னும் இல்லை அங்கிள்.. அவங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு இருக்கேன், இப்போதைக்கு நீங்க எதுவும் சொல்லிடாதீங்க..” என்றான் முன்னெச்சரிக்கையாக வர்மா.
 
 
“ஓ.. ஓகே ஓகே, நான் சொல்ல மாட்டேன்..” என்றார் சந்தோஷமாக ஜனார்த்தன். அவ்வளவு நேரமும் அருகில் நின்று இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரத்தன், “ரியலி ஹாப்பிப் பார் யூ மிஸ்டர் வர்மா.. ஒரு வெல்விஷரா இப்படி நீங்க மாறணும்னு நான் எதிர்பார்த்தேன்.. இந்தச் சந்தோஷத்தை ஒரு ட்ரிங்க் எடுத்துச் செலிபரேட் செய்வோமா..?” என்று ரத்தன் கேட்க, “ஆஹா பேஷா..” என்றார் ஜனார்த்தன்.
 
 
அதில் அங்கு இருந்த வெயிட்டரின் பக்கம் திரும்பிய ரத்தன், இங்கே சர்வ் செய்யுமாறு சைகை செய்தார். ஜனார்த்தன் நிற்கும் இடத்தை நோக்கி நிலாவை வர்மா அழைத்துச் செல்வதைப் பார்த்த நேஹா, அவர்கள் பின்னேயே வந்திருக்க.. இவை அனைத்தும் அவளின் முன்னிலையில் தான் நடந்திருந்தது.
 
 
“நோ மஹி நோ.. இதை நீங்க செய்யக் கூடாது, ஏதோ என் மேலே கோவமா இருக்கீங்க.. என்னை வெறுப்பேத்தி கோபப்படுத்த இதை எல்லாம் செய்யறீங்கன்னு பார்த்தா, நீங்க.. நீங்க.. இல்லை.. நோ இது சரி இல்லை.. இது தப்பு நீங்க எனக்குத் தான்.. எனக்கு மட்டும் தான்..” என்று மனதிற்குள் உறுதியோடு சொல்லிக் கொண்டவள், திடமான ஒரு முடிவோடு அங்கிருந்து நகர்ந்தாள் நேஹா.
 
 
அதே நேரம் நிலாவின் கைகளை விடுவித்த வர்மா, அவளை விழிகளாலேயே சற்று தள்ளிப்போய் அமர்ந்து கொள்ளுமாறு கூறினான். அங்கு அடுத்து நடக்கப் போவது புரிய.. சிறு தலையசைப்போடு நிலாவும் அங்கிருந்து நகர.. அதேநேரம் அங்கு அனைவருக்குமான கோப்பைகளோடு வந்து நின்றான் வெயிட்டர்.
 
 
நிலாவை தன் கண் பார்வையிலேயே வைத்துக் கொள்ள எண்ணி அவள் எங்கே செல்கிறாள் எனத் திரும்பி பார்த்துக் கொண்டிருந்த வர்மா, அனைவருக்கும் கொடுத்து முடித்துத் தன் முன் வந்தது நின்ற வெயிட்டரை கண்டு சிறு தலையசைப்போடு அதை எடுத்துக் கொண்டான்.
 
 
மற்றவர்களோடு பேசியவாறே வர்மா அதைக் குடிக்க.. இதைச் சற்று தள்ளி மறைவாக நின்று பார்த்துக் கொண்டிருந்த நேஹா, இதழில் வழிந்த ஒரு எள்ளல் புன்னகையோடு அங்கிருந்து நகர்ந்தாள்.
 
 
அதே நேரம் நிலா இருளில் ஒளிர்ந்த வானத்தை ரசித்தப்படியே மெல்ல நடந்து கொண்டிருக்க.. வேண்டுமென்றே வந்து அவளை இடித்து விட்டு வெற்றிப் புன்னகையோடு கடந்து சென்றாள் நேஹா.
அதில் தடுமாறி நிலா கீழே விழ இருந்து இறுதி நொடியில் சமாளித்து அருகில் இருந்த இருக்கையைப் பிடித்து நின்றாள். சரியாக அதே நேரம் அவளைத் திரும்பி பார்த்திருந்த வர்மா, நிலா சரியாக நடக்க முடியாமல் லேசாகத் தடுமாறி விந்தி நடக்கவும், வேகமாக வந்து அவளைத் தாங்கி பிடித்தான் வர்மா.
 
 
“ஆர் யூ ஒகே..?” என்றவனுக்கு ஆமெனத் தலையசைத்தவள், “எனக்கு ஒண்ணுமில்லை சார்..” எனவும், “நடக்க முடியாம தள்ளாடறே.. ஒண்ணுமில்லையா இது உனக்கு..?” என்று அவளைக் கடிந்துக் கொண்டவாறே கைத் தாங்கலாகப் பிடித்து அழைத்துச் சென்று அருகில் உள்ள இருக்கையில் அமர வைத்தான் வர்மா.
 
 
அதில் உண்மையைச் சொல்ல விரும்பாமல் சூழ்நிலையைச் சமாளிக்க எண்ணி, “அது நான் ஹீல்ஸ் போட்டதில்லை சார், அதான் லேசா தடுமாறிட்டேன்.. அதில் கொஞ்சம் கால் பிசகிடுச்சு..” என்றாள் நிலா.
 
 
“ஓ.. எங்கே..?” என உடனே அவள் முன் மண்டியிட்டவன், தன் கையில் இருந்த கோப்பையை அங்கே வைத்து விட்டு நிலாவின் காலை பிடித்துப் பார்க்க முயல.. “ஐயோ.. என்ன செய்யறீங்க சார்..? முதலில் எழுந்துருங்க..” என அவசரமாக எழுந்து நிற்க முயன்றவளை “மூச்.. நான் சொல்ற வரை இங்கிருந்து அசைய கூடாது..” என்று அதட்டியவன், அவளின் காலை பிடித்துப் பார்க்க.. அங்கு நிஜமாகவே ஹீல்ஸ் அணிந்ததில் கால் கன்றி சிவந்து போய் இருந்தது.
 
 
“உனக்குப் பழக்கமில்லைனா எதுக்குப் போட்டே..?” என வர்மா கடிந்து கொள்ள.. “பாலு தான்.. இங்கே எல்லாம் இப்படித் தான் போடணும்னு சொன்னார்..” என்றாள் தயக்கமான குரலில் நிலா.
 
 
பாலு எதற்குச் சொல்லி இருப்பான் எனப் புரிய.. வேறு எதுவும் பேசாமல் கால் பிசகி இருந்த இடத்தை மெல்ல நீவினான் வர்மா. “ஐயோ சார் நீங்க போய் என் காலை பிடிச்சுட்டு ப்ளீஸ் வேண்டாம்..” என அவள் பேசிக் கொண்டிருந்த எதையும் அவன் காதிலேயே வாங்கவில்லை.
 
 
“நாளையில் இருந்து நீ ஹீல்ஸ் எல்லாம் போட வேண்டாம்.. குதிக்கால் கன்றி சிவந்து போய் இருக்கு.. இங்கே கால் பிசகியும் இருக்கு..” என்றவன் லேசாகக் காலை மசாஜ் செய்து விட்டு “இப்போ மெதுவா எழுந்து நில்லு..” என்றான் வர்மா.
 
 
அதில் எழுந்து கொள்ள முயன்று நிலா தடுமாற.. தன் கையைக் கொடுத்து அவளைப் பிடித்து எழுப்பினான் வர்மா. இதையெல்லாம் கவனித்திருந்த ஜனார்த்தன் “ஹ்ம்ம்.. ஹ்ம்ம்.. மஹி பையா நீ நடத்து..” என்று அங்கிருந்தே குரல் கொடுத்தார்.
 
 
“லவ் ஓவர் ப்ளோ ஆகுது யங் மேன்..” என்றார் சிரித்துக் கொண்டே சத்தமாக ரத்தன். இதைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் எல்லாம் சத்தமாகச் சிரித்தனர்.
 
 
அதில் சங்கடமாக நெளிந்தவன், அவர்களை எதிர் கொள்ள முடியாமல் தடுமாறுவது போல் முகத்தை ஒற்றை விரல் கொண்டு கீறிக் கொள்ள.. “அடடே, என் மஹி பையன் வெட்கம் கூட அழகு தான்..” என்றார் ஜனார்த்தன்.
 
 
“வா சீக்கிரம் இங்கிருந்து கிளம்புவோம்..” என நிலாவுக்கு மட்டும் கேட்கும் குரலில் பேசியவன், மெதுவாக அவளைப் பிடித்தப்படி அனைவருக்கும் ஒரு தலையசைப்பில் விடை கொடுத்து விட்டு அங்கிருந்து நகர.. நிலாவின் முன் அவன் மண்டியிட்டு அமர்ந்து காலை பிடித்த அதிர்வில் அப்படியே அசைவின்றி நின்று விட்ட நேஹா, இப்போதே தன்னிலை மீண்டு வேகமாக அந்த வெயிட்டரை தேடினாள்.
 
 
தொடரும்...
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 6 months ago
Posts: 266
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ புது கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. இத்தனை நாள் பொறுமையாக காத்திருந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்..
 
 
CNM - 19
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 
This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 6 months ago
Posts: 266
Topic starter  
 
 
சித்திரை – 20
 
ஆரம்பத்தில் வர்மா, ஜனார்த்தன் மற்றும் ரத்தனோடு பேச தொடங்கிய போது மற்றவர்களும் வந்து இணைந்து கொள்ள.. நிலா அவர்களுக்கு இடம் விட்டு நகர முயன்ற நேரம், சற்று முன் இதே போல் அவள் இடம் விட்டு நகர்ந்து நிற்கும் போதே மாதேஷ் வந்து அவனைத் தொல்லை செய்தது நினைவுக்கு வர.. மீண்டும் அது போல் நடந்து விடக் கூடாது என்றே அவளின் கையைப் பிடித்துத் தன் அருகில் நிறுத்திக் கொண்டவன், நிலா தனக்கு முக்கியமானவள் எனத் தெரிந்தால் இனி யாரும் நிலாவை தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்ற எண்ணத்திலேயே அவள் விரலோடு விரல் கோர்த்துக் கொண்டு நின்றான் வர்மா.
 
 
ஆனால் அதைக் கண்டு ஜனாத்தனும் ரத்தனும் கேலி பேச.. ‘அதெல்லாம் இல்லை..’ என மறுக்க நினைத்த வர்மா, அப்போதே வெகு அருகில் நேஹா நின்று இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருப்பதையும் அவள் முகத்தில் அத்தனை அலட்சியமான ஒரு புன்னகை வந்ததையும் கண்ட பின்பே சட்டென ஆமென்று சொல்லி விட்டிருந்தான் வர்மா.
 
 
இதைக் கேட்டதும் அவள் முகத்தில் உண்டான அதிர்வும், அதன் பின் வேகமாக நேஹா அங்கிருந்து விலகிச் சென்றதையும் கண்டு வர்மாவுக்குச் சந்தோஷமானது. ‘இனியாவது தன்னை அவள் தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும்..’ என்ற எண்ணத்தோடே அங்கிருந்தவர்களோடு பேசிக் கொண்டிருந்தான் வர்மா.
 
 
ஆனால் அங்கிருந்து வேகமாகச் சென்றவளோ அதற்கு நேர் மாறாக வேறு ஒன்றை செய்து கொண்டிருந்தாள். இங்கே வர்மாவோடு தங்க இருக்கும் இந்த மூன்று நாட்கள் தான் தனக்கான வாய்ப்பு என்று நேஹாவுக்கு நன்றாகவே தெரியும்.
 
 
இதைத் தவற விட்டால் திரும்ப இப்படி ஒரு வாய்ப்போ ஆளவந்தான் இல்லாத பயணமோ சாத்தியமில்லை என்று அறிந்திருந்தவள், எப்படியாவது இந்த மூன்று நாட்களுக்குள் திரும்ப வர்மாவை தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தாள்.
 
 
அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்ய ஓரளவு தயாராகவே வந்திருந்தாள் நேஹா. இப்போதும் அப்படியே ரத்தன் அங்கிருந்த வெயிட்டரிடம் அனைவருக்கும் மதுபானம் கொண்டு வரச் சொன்னதைக் கவனித்திருந்தவள், வேகமாக அவரை நோக்கி சென்றாள்.
 
 
தன் கையோடு கொண்டு வந்திருந்த போதை பொருளை அவரிடம் கொடுத்தவள், வர்மாவை கை காண்பித்து “அவருக்குக் கொடுக்கும் கிளாஸில் மட்டும் யாருக்கும் தெரியாம இதைக் கலந்துடுங்க..” என்றாள் நேஹா.
 
 
ஆனால் அதைக் கேட்டு அதிர்ந்த வெயிட்டரோ “இல்லை மேடம், இதை எல்லாம் நான் செய்ய மாட்டேன்.. ரத்தன் சாருக்கு மட்டும் தெரிஞ்சதுனா அவ்வளவு தான்..” என்று பயந்து பின் வாங்கினான்.
 
 
“என்ன அண்ணா அவருக்கு எப்படித் தெரிய வரும்..? அதெல்லாம் யாருக்கும் தெரியாது, ப்ளீஸ் எனக்காக இந்த ஹெல்ப்பை செய்யுங்களேன்..” என்று தன் தலை கணத்தை எல்லாம் விடுத்துக் கெஞ்சலில் இறங்கினாள் நேஹா.
 
 
“மேடம் நீங்க நினைக்கறது போல இது சின்ன விஷயம் இல்லை, நான் இதைச் செய்ய மாட்டேன்.. வெளியே தெரிஞ்சா பெரிய பிரச்சனையாகும்.. போலீஸ் கேஸ் வரைக்கும் போகும்..” என்று அவன் அப்போதும் மறுத்தான்.
 
 
“இது பெரிய பிரச்சனை எல்லாம் ஆகாது அண்ணா.. நீங்க நினைக்கறது போல அவர் வேற யாரோ இல்லை.. எங்களுக்குள்ளே ஒரு சின்னப் பிரச்சனை, என்னால் அவர்கிட்ட போய்ப் பேச கூட முடியலை.. நான் சொல்றதை கேட்கறதுக்கு அவருக்கு நேரமும் இல்லை, இது போல ஏதாவது நடந்து நான் அவருக்கு உதவி செய்யறது போலப் போனா தான், நான் என்ன சொல்ல வரேன்னே அவர் கேட்பார்.. நிச்சயமா தப்பா எதுவும் நடக்காது, பிரச்சனையாவும் ஆகாது.. எல்லாம் நல்லாபடியா முடியும், உங்களுக்குப் புரியுதா..
 
 
நாங்க திரும்பச் சேர நீங்க தான் உதவி செய்யணும்.. நாளைக்கு எல்லாம் சரியான பிறகு அவரே வந்து உங்களுக்கு நன்றி கூடச் சொல்லுவார்.. ஏன்னா அந்த அளவுக்கு அவர் என்னை விரும்பறார், இப்போ ஏதோ ஒரு கோபம்.. அதில் இப்படி எல்லாம் நடந்துக்கறார்..” எனக் கண்கலங்க அவள் பேசியதை, அவர் யோசனையோடு பார்த்துக் கொண்டிருக்க.. இது தான் தனக்கான சந்தர்ப்பம் என முடிவு செய்தவள்,
 
 
“நான் அவரை ரொம்ப விரும்பறேன், அவர் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் நினைச்சு கூடப் பார்க்க முடியாது.. ஒரு சின்னப் பிரச்சனை, அது இவ்வளவு தூரம் எங்களுக்குள்ளே பெரிய இடைவெளியை உண்டாக்கும்னு நான் நினைச்சு கூடப் பார்க்கலை.. ஆனா அப்படி ஒண்ணு நடந்து நாங்க இப்போ தனித்தனியா இருக்க வேண்டிய சூழல்..
 
 
இப்போ உடனே இதை நான் சரி செய்யலைனா திரும்ப நாங்க வாழ்க்கையில் ஒண்ணா சேரவே முடியாதோன்னு எனக்கு ரொம்பப் பயமா இருக்கு.. இங்கே இருந்து ஊருக்குப் போனதும், அடுத்த நாளே அவர் வெளிநாடு கிளம்பி போறார், அதுக்குப் பிறகு அவர்கிட்ட பேசக்கூட எனக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போயிடும்..
 
 
நான் பெருசா எதுவும் ஆசைப்படலை, நான் சொல்றதை அவர் ஒருமுறை கேட்டா போதும்.. நிச்சயம் அதற்குப் பிறகு என் மேலே இருக்கும் கோபம் எல்லாம் அவருக்குக் காணாம போயிடும், அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு..
 
 
நீங்க இந்த உதவி மட்டும் எனக்குச் செஞ்சா, என் வாழ்நாள் முழுக்க உங்களை நான் மறக்கவே மாட்டேன்.. திரும்ப நாங்க சேர்ந்ததுக்கான காரணமா நீங்க தான் இருப்பீங்க.. இப்போவும் உங்களுக்கு நம்பிக்கை வரலைனா இதோ பாருங்க..” எனத் தன் அலைபேசியில் இருவரும் சேர்ந்து இருக்கும் போது எடுத்த புகைப்படத்தைக் காண்பித்தாள் நேஹா.
 
 
அதில் நேஹாவை பின்னிருந்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு புன்னகை முகமாக நின்றிருந்தான் வர்மா. புகைப்படத்தில் இருந்த இருவரின் முகங்களிலும் அவ்வளவு சந்தோஷம்.
 
 
அதையே பார்த்தப்படி வெயிட்டர் நின்றிருக்க.. “வேணும்னா உங்களுக்கு இதுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன் அண்ணா.. என் வாழ்க்கையை எனக்கு மீட்டுக் கொடுங்க..” என்றவளின் உருக்கமான பேச்சில் அவர் மனம் கரைந்து போனது.
 
 
அவளின் அண்ணா என்ற அழைப்பும், ஒரு சிறு தவறால் தன் காதல் வாழ்க்கை பிரச்சனையில் இருப்பதாகச் சொல்லி அதைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடுவதாக அவள் பேசியதும் எல்லாம் சேர்ந்து அவரின் மனதை கரைத்திருந்தது.
 
 
ஏனெனில் அவரின் காதலும் இப்படியான ஒரு சிறு தவறால் தான் பெரும் பிரிவை சந்தித்து இருந்தது. அங்கே தவறை சரி செய்து கொள்ள இப்படியொரு வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவே இல்லை.
 
 
அதில் இவளாவது சந்தோஷமாக வாழட்டும் என்ற முடிவுக்கு வந்தவராக “பணம் எல்லாம் வேண்டாம் மேடம், உங்க வாழ்க்கையை இது சரி செய்யும்னு சொல்றீங்க, அதுக்காகச் செய்றேன்..” என்றிருந்தார் நேஹா ஒரு நச்சுப் பாம்பு என அறியாதவராக அந்த வெயிட்டர்.
 
 
“இல்லை, நீங்க செய்யப் போற உதவிக்கு நான் ஏதாவது கைமாறு செஞ்சே ஆகணும்.. இதை என்னோட பரிசா வெச்சுக்கோங்க..” என அவள் எடுத்துக் கொடுத்த தொகை அவரின் இரண்டு மாத சம்பளம்.
 
 
அதைக் கண்டு அவர் திகைக்க.. “வெச்சுக்கோங்க அண்ணா ப்ளீஸ், இதை யாருக்கும் தெரியாம கச்சிதமா செஞ்சு முடிப்பீங்கன்னு நம்பறேன்.. உங்க கையில் தான் என் வாழ்க்கையே இருக்கு அண்ணா.. இப்போ விட்டா திரும்ப இப்படி ஒரு வாய்ப்ப்பு நமக்குக் கிடைக்காமலே போகலாம், பார்த்து செய்ங்க..” என்றாள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு நேஹா.
 
 
அதில் அவரும் “இது உங்க வாழ்க்கையைச் சரி செய்ய உதவும்னா கண்டிப்பா செய்யறேன் மேடம்..” என்று விட்டு நகர்ந்தார். அதன்படி அவர் சரியாக அந்தப் போதைப் பொருள் கலந்த மது கோப்பையை வர்மாவிடம் சேர்த்து விட்டு, நேஹாவுக்கு விழியசைவில் அதைத் தெரியப்படுத்தி விட்டு நகர்ந்தார் வெயிட்டர்.
 
 
அவளும் மறைந்திருந்து வர்மா அந்தக் கோப்பையில் இருப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பதை விழிகள் மின்ன பார்த்துக் கொண்டிருந்தாள் நேஹா.
 
 
தன் திட்டப்படி அனைத்தும் சரியாகச் செல்வதை எண்ணி உண்டான மகிழ்ச்சியோடே, இனி உன்னால் எதுவும் செய்ய முடியாது.. நான் நினைத்தது தான் இங்கே நடக்கும்..’ என்ற திமிரோடே அவள் நிலாவை இடித்துக் கொண்டு சென்றாள்.
 
 
ஆனால் அதுவே தனக்குப் பிரச்சனையாகுமென அப்போது அவள் அறிந்திருக்கவில்லை. அதன் பிறகு நேஹா கொஞ்சமும் எதிர்பாராதது எல்லாம் நடந்திருந்தது. நிலா தடுமாறுவதைக் கண்டு வர்மா ஓடி சென்று அவளுக்கு உதவியதையும், இத்தனை பேர் இங்கு இருக்கிறார்கள் என்ற தயக்கம் கொஞ்சமும் இல்லாமல் நிலாவின் காலை பிடித்துக் கொண்டு இருந்ததும், அதன் பின்னான மற்றவர்களின் கேலியும் என அத்தனையும் நேஹாவை முள் மேல் நிற்பது போன்ற ஒரு நிலைக்குத் தள்ளி இருந்தது.
 
 
அதிகபட்சம் இன்னும் ஒரு அரை மணி நேரம் சென்றிருந்தால், அவள் நினைத்தது போல் எல்லாம் நடந்திருக்கும். அதற்குள் நிலா கீழே விழுவது போல் தடுமாறியதில் எல்லாம் தலைகீழாக மாறிப் போய் இருந்தது. இப்போது தன் கண் முன்பே நிலாவின் காலை பிடித்துக் கொண்டிருக்கும் வர்மாவை காண காண அவளுக்கு அப்படி ஒரு ஆத்திரம் பொங்கியது.
 
 
இதற்கெல்லாம் தானே காரணம் என எப்போதும் போல் மறந்து விட்டு, இப்போதும் நிலாவே தவறு என எண்ணியவள், வர்மாவை தன் பக்கம் இழுக்க அவள் நாடகம் ஆடுவதாகவே நினைத்தாள்.
 
 
‘என் வாழ்க்கையிலேயே விளையாட நினைக்கறியா..? என் மஹியை என்கிட்ட இருந்து பிரிக்கப் பார்க்கறியா..?’ எனப் பல்லை கடித்தவளுக்கு நிலாவை அடித்துத் துவைக்கும் அளவுக்கு ஆத்திரம் எழ.. இத்தனை பேர் முன்பு என்ன செய்வதெனத் தெரியாமல் நேஹா முறைத்துக் கொண்டு இருக்கும் போதே கை தாங்கலாக நிலாவை பிடித்தபடி அவர்கள் தங்கி இருந்த அறையை நோக்கிச் சென்றான் வர்மா.
 
 
இது வேறு அவளுள் பயப்பந்தை உருளை செய்திருந்தது. அவனுள் சென்று இருக்கும் போதை இன்னும் சில நிமிடங்களில் தன் வேலையைக் காண்பிக்கத் தொடங்கும் என்று புரிய.. வேகமாகச் சென்று அவர்களை அறைக்குச் செல்ல விடாமல் வழி மறிக்க நினைத்தவள், அங்கிருந்த அத்தனை பேரின் கவனமும் வர்மா மற்றும் நிலாவின் மேல் பதிந்திருப்பதைக் கண்டு லேசாகத் தயங்கினாள் நேஹா.
 
 
ஏற்கனவே இங்கே சிலருக்கு நேஹா மற்றும் ஆளவந்தானின் மேல் நல்ல அபிப்ராயம் இல்லை.. அதோடு அவள் தங்கி இருக்கும் இடமும் வேறு திசையில் இருப்பதால் என்ன காரணம் சொல்லி இவர்களின் பின்னே செல்வது எனப் புரியாமல் விழித்தவள், அவசரமாக யோசித்து ஏதோ ஒரு முடிவுக்கு வருவதற்குள் அங்கே வர்மாவின் நடை லேசாகத் தள்ளாடத் தொடங்கி இருந்தது.
 
 
நிலாவின் முன் மண்டியிட்டு அமர்ந்து, அவள் கால்களைப் பரிசோதித்துக் கொண்டிருக்கும் போதே அவனுக்குக் கண்கள் லேசாக இருட்டிக் கொண்டு வருவது போல் இருந்தது. ஆனால் தலையை உலுக்கி அதைச் சரி செய்து கொண்டப்படியே அப்போது சமாளித்து விட்டிருந்தவன், அறையை நோக்கி நடக்கத் தொடங்கிய நொடியில் இருந்து காலுக்குக் கீழே பூமி நழுவுவது போல் அவனுள் ஒரு எண்ணம்.
 
 
தள்ளி இருந்து பார்ப்பவர்களுக்கு நிலாவை வர்மா கை தாங்கலாகப் பிடித்து அழைத்துச் செல்வது போல் தோன்றினாலும், உண்மையில் அவள் தான் வர்மாவை பிடித்து அழைத்துச் சென்று கொண்டிருந்தாள்.
 
 
வர்மாவின் கைபிடித்துச் சில அடிகள் நடக்கத் தொடங்கிய போதே அவளுக்கு அந்த வித்தியாசம் புரிந்து விட்டிருந்தது. அவனின் மொத்த பாரமும் தன் மேல் சரிய.. நடக்க முடியாமல் தடுமாறியவள் “சார் உங்களுக்கு ஒண்ணுமில்லையே..?” என்றாள் வர்மாவை பார்த்துப் பதட்டத்தோடான குரலில் நிலா.
 
 
“நோ.. ஐ ம் நாட் ஓகே நிலா, எனக்கு என்னவோ செய்யுது, ஆனா என்னன்னு சொல்ல தெரியலை.. இப்போ என்னால் பேசவும் முடியலை.. என்னை எப்படியாவது ரூமுக்கு கூட்டிட்டு போயிடு ப்ளீஸ், வேற யாரும் இதைக் கவனிக்கறதுக்கு முன்னே நாம ரூமுக்கு போயிடலாம்..” என்று மெல்லிய குரலில் சொல்லி இருந்தான் வர்மா.
 
 
அதில் சூழ்நிலை புரிய, நிலாவும் வர்மாவை மெதுவாக அறையை நோக்கி அழைத்துச் சென்றாள். அவளுக்கும் காலில் வலி இருந்ததால் இருவராலும் வேகமாகச் செல்ல முடியவில்லை. மெதுவாகவே நடந்தவர்கள் மற்றவர் கண்ணில் இருந்து மறையும் வரை பொறுமையாக இருந்த பின் “சார் உங்களுக்கு என்ன செய்யுது..? நாம டாக்டரை பார்க்கணுமா..?” என்று பதறினாள் நிலா.
 
 
ஏனெனில் கண்கள் சொருகி நடை தள்ளாட வர்மா இருந்த நிலை அவளைக் கலவரம் கொள்ளச் செய்திருந்தது. இதுவரை இப்படி ஒரு நிலையில் வர்மாவை அவள் பார்த்ததே இல்லை.. அந்த அளவிற்கு அவன் பார்ட்டியில் குடித்து விட்டான் என்றும் அவளுக்குத் தோன்றவில்லை.
 
 
அவள் கவனித்த வரை வர்மா பார்ட்டி முழுக்க ஒரே கோப்பையைத் தான் கையில் வைத்திருந்தான். இப்போது குடித்தது இரண்டாவது கோப்பை. இங்கிருக்கும் பலர், ஆறேழு கோப்பைகளுக்கு மேல் குடித்தும் இவ்வளவு தள்ளாடவில்லை.
 
 
அப்படி இருக்கும் போது இது என்ன என அவளுக்குப் புரியவில்லை. ஒருவேளை வர்மாவுக்கு உடல்நிலையில் எதுவும் பிரச்சனையோ என்று எண்ணியவள், “சார் நாம டாக்டர்கிட்ட போயிடலாமே..?” என்று தயங்கி இழுத்தாள்.
 
 
“இல்லை வேண்டாம், நாம ரூமுக்குப் போயிடலாம்.. எனக்கு ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்னு நினைக்கறேன்.. சம்திங் பிஷி.. ஐ திங்க் லாஸ்ட்டா நான் குடிச்சதில் தான் ஏதோ பிரச்சனைன்னு நினைக்கறேன்..” என்று அவன் சொல்ல.. அப்போதே அந்தத் திசையில் யோசித்தவள் “ஓ அப்படியா சார், ஓகே நாம ரூமுக்கே போயிடலாம்.. நீங்க தூங்கி எழுந்தா சரியாகிடும்னா ஒகே தான்..” என்று ஒருவாறாக அவனை அழைத்துக் கொண்டு குடிலுக்கு வந்து சேர்ந்திருந்தாள் நிலா.
 
 
இப்போது கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல வேண்டும். கீ கார்ட் வர்மாவிடமிருந்து இருந்தது. “சார் கார்ட் கொடுங்க..” என்று நிலா கேட்கவும், “கார்ட்டா..? என்ன கார்ட்..?” என்று புரியாமல் கேட்டான் வர்மா.
 
 
இதில் அவனுக்குப் புரிய வைக்க இப்போது நேரம் இல்லை என்று உணர்ந்தவள், ‘என்ன செய்வது..?’’ என அவசரமாக யோசித்தாள் நிலா. வர்மாவின் முழுப் பாரத்தையும் அவளால் அதிக நேரம் தாங்கிப் பிடிக்க முடியாது.
 
 
அவன் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் உணர்வை இழந்து கொண்டிருப்பது தெளிவாக நிலாவுக்குப் புரிந்தது. அதே நேரம் அவளுக்கும் கால் அதிக வலியை கொடுக்க நிலாவாலும் சரியாக நிற்க முடியவில்லை.
 
 
அதில் உள்ளே செல்ல என்ன வழி என யோசித்தவள், இங்கிருந்து கிளம்பும் போது வர்மா கீ கார்டை தன் பர்ஸில் வைத்தது நினைவுக்கு வந்தது. உடனே வர்மாவின் பக்கம் திரும்பி “சார் பர்ஸ் எடுங்க..” என்றாள் நிலா.
 
 
அவளின் குரலுக்குத் தலையை நிமிர்த்தி விழிகளைத் திறந்து நிலாவை பார்க்க முயன்றவன், அது முடியாமல் மீண்டும் அவள் மீதே சரிய.. இனி அவனிடம் பேசி பயனில்லை என்று புரிய.. வர்மாவை அருகில் இருந்த சுவரில் சாய்த்து நிற்க வைத்தவள், அவனின் முன் நின்று வர்மாவின் பேக்கட்டில் இருந்து பர்ஸை எடுக்க முயன்றாள் நிலா.
 
 
ஆனால் சுவரில் சாய்ந்து நிற்காமல் வர்மா மீண்டும் இவள் மீதே சரிய.. “இரண்டு நிமிஷம், இரண்டே நிமிஷம் சார், ப்ளீஸ் இப்படியே சாய்ந்து இருங்க..” என அவனை மீண்டும் சுவரில் சாய்த்து நிற்க வைத்தவள், ஒரு கையால் வர்மா மீண்டும் சாய்ந்து விடாதவாறு அவன் மார்பில் கை வைத்து அழுத்தி பிடித்துக் கொண்டே மற்றொரு கையால் பர்ஸை எடுக்க முயன்று தன் கையை வர்மாவின் அருகில் கொண்டு சென்றவள், அவனின் பேக்கெட்டிற்குள் கையை நுழைக்கத் தயங்கி அப்படியே நின்றாள்.
 
 
‘என்ன இருந்தாலும் இப்படிச் செய்வது சரியா..?’ என அவளுக்கே புரியவில்லை. அதில் உண்டான தயக்கத்தோடு ‘இது.. இது தப்பில்லையா..?’ என்று நிலா தனக்குத் தானே கேட்டுக் கொள்ள.. ‘ஆபத்திற்குப் பாவம் இல்லை, இப்போ இதைச் செய்யலைனா இரண்டு பேருமே உள்ளே போக முடியாது.. அதோட சாரும் இப்படியே எவ்வளவு நேரம் இருக்க முடியும்..? கீழே விழுந்துட்டா என்ன செய்ய..? எனக்குத் தேவையான போது கேட்காமலே வந்து உதவி செஞ்சவருக்கு இப்போ உதவி தேவை.. அதை மட்டும் தான் நான் யோசிக்கணும்.’ என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு திடமான ஒரு முடிவுக்கு வந்தாள் நிலா.
 
 
பெரும் தயக்கத்தோடு தன் வலது கையை வர்மாவின் பேண்ட் பாக்கெட்டினுள் நுழைத்தவள் பஸ்ஸை எடுக்க.. மீண்டும் வர்மா அவள் மேல் சரிந்தான்.
 
 
அவனைக் கீழே விழுந்து விடாதவாறு தாங்கி பிடித்து மீண்டும் சுவரில் சாய்த்தவள், வேகமாக அந்தப் பர்ஸில் இருந்து கீ கார்டை வெளியில் எடுத்தாள்.
 
 
அதேநேரம் தலையை உலுக்கிக் கொண்டு அவளைப் பார்த்த வர்மா மீண்டும் அவள் மேல் தலை சாய்க்க.. “ஒன் மினிட் சார்.. இதோ உள்ளே போயிடலாம்..” என்றவாறே சென்சாரின் முன் கீ கார்ட்டை காண்பித்தவள், கதவை திறந்து கொண்டு வர்மாவோடு உள்ளே நுழைந்தாள்.
 
 
வர்மா தங்கி இருந்த அறைக்குள் அவனை அழைத்துச் சென்றவள், அவனைப் படுக்க வைக்க முயல.. சரியாக அதே நேரம் நிற்க முடியாமல் வர்மா தடுமாறியதில் நிலாவின் கால் இடறி அவளோடு சேர்ந்து படுக்கையில் விழுந்தான் வர்மா.
 
 
தன் மேல் சரிந்திருந்தவனைப் பெரும் திகைப்போடு பார்த்தவள், வர்மாவை மெதுவாகத் தன் மேல் இருந்து நகர்த்த முயல.. ஆனால் அவளால் அது முடியவே இல்லை.
 
 
இவ்வளவு தூரம் அவனை அழைத்து வந்திருந்ததிலேயே சோர்ந்து போய் இருந்தவள், முழு வேகத்தோடு அவனை நகர்த்த முடியாமல் முயன்று தோற்றாள்.
 
 
விழிமூடி நினைவே இல்லாமல் தன் கழுத்து வளையில் முகம் புதைத்திருந்தவனை எப்படித் தன் மேல் இருந்து நகர்த்துவது என்று புரியாமல் விழித்தவள், மீண்டும் மீண்டும் அதற்கு முயன்று கொண்டிருக்க.. இந்த அசைவில் லேசாக விழிகளைத் திறந்தான் வர்மா.
 
 
தன் முகத்திற்கு நேரே வெகு அருகில் தெரிந்த அவள் முகத்தையே சில நொடிகள் இமைக்காமல் பார்த்தவன், தன் ஒற்றை விரல் கொண்டு அவள் முகத்தை வருட.. இதைக் கண்டு திகைத்தவள் விழி விரிய அவனைச் செய்வதறியாது பார்க்க.. “ப்யூட்டிஃபுல்..” என்றான் ரசனையான குரலில் வர்மா.
 
 
இப்போது மூச்சு விட மறந்து நிலா அப்படியே அசையாமல் இருக்க.. அவள் முகத்தையே ரசனையோடு பார்த்தவனின் விழிகள் அவளின் முகம் முழுக்க பயணித்து இதழில் வந்து நிலைத்தது. பின் மெதுவாக அவள் முகத்தை வர்மா ஆசையோடு நெருங்க.. பெரும் அதிர்வோடு அவனைப் பார்த்தாள் நிலா.
 
 
வர்மா தன் நிலையில் இல்லை என்று புரிந்திருந்ததால் மெல்ல அவனை நிலா நகர்த்த முயல.. அவனோ அதற்கு வாய்ப்பளிக்காமல் மேலும் அழுத்தமாக அவள் மேல் சரிந்தான். இதில் செய்வதறியாது நிலா விழிக்க.. மெல்ல மெல்ல அவள் இதழ்களை நெருங்கியவன், அப்படியே மீண்டும் மயங்கி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான் வர்மா.
 
 
அதுவரை மனம் மத்தளம் வாசிக்கத் திகைப்போடு வர்மாவை தடுக்கும் வழி தெரியாது பார்த்திருந்தவள், இப்போதே “ஊப்ப்ப்ப்..” என ஆசுவாச பெருமூச்சோடு விழிமூடினாள்.
 
 
பின் மெதுவாக வர்மாவை தன் மேல் இருந்து நகர்த்திப் படுக்கையில் சரித்தவள், அவனின் ஷூ மற்றும் கோட்டை மட்டும் கழற்றி வர்மாவுக்கு உறங்க வசதி செய்து கொடுத்தவள், நன்றாகப் போர்த்தி விட்டு அந்த அறையின் கதவை மூடிக் கொண்டு வெளியில் வந்தாள்.
 
 
தன் அறைக்குள் வந்து குளித்து முடித்து உடை மாற்றிப் படுத்தவளுக்குக் கொஞ்சமும் உறக்கமில்லை. வர்மாவின் இன்றைய நிலையே அவள் மனதை எதுவோ செய்தது. எப்போதும் கம்பீரமாகவே பார்த்து பழகி இருந்தவனின் இன்றைய நிலை அவளைக் கவலைக் கொள்ளச் செய்தது.
 
 
‘இத்தனை பெரிய மனிதர்கள் கூடி இருக்கும் இடத்தில் வர்மாவுக்கு இப்படியானது மற்றவர்களுக்குத் தெரிந்தால் அது எவ்வளவு அசிங்கம்..?’ எனத் தோன்ற.. இரவெல்லாம் அவளுக்கு உறக்கமே வரவில்லை.
 
 
அதிலும் வர்மா இறுதியாகச் சொன்ன ‘கடைசியா குடிச்சது தான் ஏதோ ஒத்துக்கலை..’ என்ற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவள் மனதில் ஒலிக்க.. நிலா சற்று தள்ளி வந்து நின்ற பின் வெயிட்டர் வர்மாவுக்கு மதுக் கோப்பையைக் கொடுத்து விட்டு நகரும் போது நேஹாவை பார்த்து ஏதோ சைகை செய்தது போல் அவளுக்குத் தோன்றியது.
 
 
மீண்டும் அந்தக் காட்சியை மனதில் ஒட்டி பார்த்தவளுக்கு, அது நிஜம் தான் என்பது போல் நேஹா திரும்பப் புன்னகைத்ததும் புரிந்தது. இதில் அவளே எதுவோ செய்திருப்பதைக் கண்டு கொண்டவள், விடிந்ததும் முதல் வேலையாக நேஹாவை தேடி சென்றாள்.
 
 
ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல் நேஹா இவர்களின் குடிலுக்கு வெளியே தான் சற்று தள்ளி இருந்த ஒரு மரத்தின் மேல் சாய்ந்து நின்றிருந்தாள். நிலாவுக்கு மட்டுமில்லை, நேஹாவுக்கும் இரவெல்லாம் துளியும் உறக்கமில்லை. இங்கே இரவு என்ன நடந்தது எனத் தெரிந்து கொள்ளும் வரை அவளுக்கு நிம்மதியும் கிடையாது.
 
 
அதில் பிங்கியின் தடையை எல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தமால் இங்கே வந்து நின்றிருந்தவள், நிலா கதவை திறந்ததில் இருந்து அவளையே ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருக்க.. நேராக அவள் முன் வந்து நின்ற நிலா “ச்சீ.. இப்படி எல்லாம் செய்ய உனக்கு வெட்கமா இல்லை..?” என்றாள்.
 
 
தன் அத்தனை முயற்சியையும் வீணாக்கியதோடு திமிராகத் தன் முன் வந்து நின்று பேசுபவளை ஆத்திரமாகப் பார்த்த நேஹா “உனக்கே இல்லாத வெட்கம் எனக்கு எதுக்கு..? காலில் அடிப்படாமலே போலியா நடிச்சு அவரைப் பணத்துக்காக ஏமாத்த பார்த்தவத் தானே நீ..?” என்றாள்.
 
 
“உன்னைப் போலவே என்னையும் நினைச்சா அப்படித் தான் யோசிக்கத் தோணும்.. நீ செஞ்ச கேவலமான வேலை எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா.?” என்றாள் நிலா.
 
 
“ஹாஹா.. என்னைப் போல உன்னை நினைச்சேனா..? யாரு நானா..? என் கால் தூசிக்கு நீ வர மாட்டே.. உன்னை எனக்குச் சமமா நான் நினைப்பேனா..!” என்று பெரிய ஜோக் சொன்னது போல் சிரித்தாள் நேஹா.
 
 
“நீ என்னை என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ.. அதைப் பற்றி நான் கவலைப்படவே மாட்டேன், ஆனா நேற்று நீ செஞ்சது எவ்வளவு கேவலமான செயல் தெரியுமா..? இத்தனை பேர் வந்திருக்க இடத்தில் சாருக்கு ஏதாவது நடந்திருந்தா அவருக்கு எவ்வளவு அசிங்கம்..?” என்றாள் நிலா.
 
 
“போதும் உன் நடிப்பு, உன் நாடகத்தை எல்லாம் அவர்கிட்ட காட்டு, நம்புவார், உன்னை விட அவர் மேலே எனக்கு அக்கறை இருக்கு..” என அலட்சிய குரலில் கூறினாள் நேஹா.
 
 
“உன் அக்கறையைத் தான் நேற்று நான் பார்த்தேனே..! இத்தனை நாள் சார் மேலே ஆசைப்படறீங்க..” என்று தொடங்கியவள், “இனி உனக்கு என்ன மரியாதை..?” என்று விட்டு “அதனால் தான் இப்படி எல்லாம் நடந்துக்கறேன்னு நினைச்சேன், அதனால் தான் உங்களுக்கு இடையில் நான் வரவே இல்லை.. ஆனா இனி அப்படி இருக்க மாட்டேன்.. உனக்கு ஒண்ணு தேவைனா அதுக்கு எந்த எல்லைக்கும் நீ போவேன்னு தெரிஞ்சுடுச்சு.. இனி என்னை மீறி உன்னால் எதுவும் செய்ய முடியாது.. என் அனுமதி இல்லாம உன்னால் அவரை இனி நெருங்கவே முடியாது..” என்றாள் கோபக் குரலில் நிலா.
 
 
ஆனால் அவளின் கோபத்திற்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் சத்தம் போட்டு சிரித்தவள், “நான் அவரை நெருங்க உன் அனுமதி யாருக்கு வேணும்.. முதலில் என்னை அனுமதிக்க நீ யார்..?” என்றவள் அப்படியே குரலை மாற்றி “ஆமா, இவ்வளவு திமிரா வந்து என்கிட்டே பேசிட்டு இருக்கியே, நான் யார்னு உனக்கு தெரியுமா..? நான் அவர் மனைவி.. மிசஸ் மஹேந்திரவர்மன்..” என்றாள் திமிராக நேஹா.
 
 
இதைக் கேட்டு அடுத்த வார்த்தை வராமல் நிலா திகைத்து நிற்கும் போதே அங்கு வந்து சேர்ந்தான் வர்மா.
 
 
தொடரும்...
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 
This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 6 months ago
Posts: 266
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ புது கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. இத்தனை நாள் பொறுமையாக காத்திருந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்..
 
 
CNM - 20
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 

   
ReplyQuote
Page 3 / 3

You cannot copy content of this page