All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தீரா காதலின் தேடல்..? , தேடல் - 7.

 

VSV 42 – தீரா காதலின் தேடல்
(@vsv42)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 50
Topic starter  

தேடல் - 7

ஒரு பெரிய மருத்துவமனை அருகில் இருக்கும் கேன்டீன்யில் செவிலியர் பெண் ஒருத்தியின் வருகைக்காக காத்து கொண்டிருக்க,

 

அதிகம் நேரம் காத்திருக்க வைக்காமல் அவள் முன்னே சென்றவளோ “சாரி ரித்தி.. லேட் ஆயிடுச்சா ரொம்ப நேரம் வெயிட் பன்றியா”

 

“இல்ல மகி.. இப்போ தான் வந்தேன்.. நீ உக்காரு”

 

“என்ன விஷயம்டி.. நேத்து ஒரு மேரேஜ் பங்ஷன் போயிருந்தேன்.. அதான், உன் கால் அட்டென்ட் பண்ண முடியல”

 

“தேங்க்ஸ்டி.. எனக்காக இவ்வளவு தூரம் வந்ததுக்கு 

 

“லூசு.. முத என்ன விஷயம்ன்னு சொல்லுடி”

 

“அது வந்து.. எங்க வீட்டுல எனக்கு மாப்பிளை பாத்து ஓகே பண்ணிட்டாங்கடி.. இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்ன்னு ஃபிக்ஸ் பண்ணி டூ வீக்ஸ் கழிச்சு சின்னதா எங்கேஜ்மென்டுக்கு ஏற்பாடு பண்ணிருக்காங்க”

 

“ஏய் சூப்பர்... காங்கிரட்ஸ்டி நல்ல விஷயம் தான.. அத ஏன் சோகமா சொல்லுற”

 

“எனக்கு இதுல கொஞ்சம் கூட விருப்பம் இல்ல மகி.. நான் சொல்ல சொல்ல கேட்காம அவசரமா பண்றாங்க.. எப்படியாவது இந்த கல்யாணத்த நிறுத்தனும்.. அதுக்கு எதாவது ஹெல்ப் பண்ணுடி”

 

 

“ஏய்.. நீ தான்டி உங்க வீட்டுல பேசி புரிய வைக்கணும்.. இதுல நான் எப்படி தலையிட முடியும்”

 

 

“அப்பாகிட்ட பேசி மனசு மாத்தினாலும் சித்தி அதுக்கு விட மாட்டாங்க.. என்ன பண்றதுன்னு தெரியாம உன்கிட்ட வந்தேன்.. உன்னவிட்டா எனக்கு யாரு இருக்கா சொல்லு” என்று கூற,

 

 

அதை கேட்டு தோழியின் முகத்தை ஆராய்ச்சி பார்வை பார்த்தவளோ “சரி ஓகே.. இந்த மேரேஜ் ஸ்டாப் பண்ணிட்டா அடுத்த மாப்பிளை பாத்து கல்யாணம் கட்டி வைக்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்”

 

“கண்டிப்பா மாட்டாங்கடி.. என்னோட ஜாதகத்து படி ரெண்டு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணி வைக்கலன்னா.. அதிலிருந்து ரெண்டு வருஷம் கழிச்சி தான் கல்யாணம் கட்டி வைக்கணும்ன்னு ஜோசியர் சொல்லிருக்கார்.. ஆரம்பத்துல ஜாதகம் ஒத்து போகாம, மாப்பிளை வீட்டுக்கு பிடிக்காமன்னு நாளா தட்டி கழிச்சாச்சு நானும் அதான் வொர்ரி பண்ணிக்காம.. அவங்க இஷ்டம்ன்னு விட்டுட்டேன்.. ஆனா இந்த தடவ எனக்கே தெரியாம பூ வைக்க வந்து கல்யாணம் வர கொண்டு வந்துட்டாங்க.. எனக்கு நிதானமா எதுவும் யோசிக்க முடியல.. அதான்.. உன்கிட்ட ஐடியா கேட்டு வந்தேன்” 

 

“சரிடி.. யாருக்கும் எந்த பிராப்ளமும் வராம எப்படி ஸ்டாப் பண்ணலாம்ன்னு யோசிப்போம் முத மாப்பிளை பத்தி சொல்லு”

 

“மாப்பிள்ளை நான் வொர்க் பண்ற ஹாஸ்பிட்டல்ல டாக்டரா இருக்கார்.. பேரு சஷ்டிக் மத்தபடி அவர பத்தி எனக்கு வேற ஒன்னுமே தெரியாது”

 

 

“அவர் ஃபோட்டோ மட்டும் எனக்கு வாட்ஸ்அப் பண்ணு.. அவர பத்தின டீட்டெல்ஸ் கலெக்ட் பண்ணிட்டு மூணு நாள்ல உன்ன வந்து பாக்குறேன்”

 

“அடியே அவர் பத்தி தெரிஞ்சு மேட்றிமோனில வரன் பாத்து கொடுக்க போறியா.. கல்யாணத்த நிறுத்த ஐடியா கேட்டா.. சிஐடி ரேஞ்ச்கு அவர துப்பறிய போறேன்னு பேசிக்கிட்டு இருக்க”

 

“லூசு.. எதையும் எடுத்தோம் கவுத்தோம்ன்னு பண்ண கூடாது பிளான் பண்ணி பண்ணனும்.. மூணு நாள் கழிச்சி இங்கேயே இதே டைமிங்ல மீட் பண்ணலாம்” என்று அவளிடமிருந்து விடை பெற்று சென்றாள்.

 

அவளை தன் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்து கொண்டிருந்தவளோ, தன் மனபாரத்தை தன் தோழியிடம் இறக்கி வைத்து விட்டோம் என்ற நிம்மதியில் பணியை காண செல்கிறாள் ரித்தி என்றழைக்கப்படும் ரித்திக்கா.

 

***********************

 

இரவு நேரம் வீட்டிற்கு வந்து இரவு உணவு சாப்பிட்டு விடுமுறை நாட்களில் வீட்டில் செய்யும் வேலையை முடித்து குளித்துவிட்டு கணினி முன் அமர்ந்த மகியோ தோழி அனுப்பிய புகைப்படம் வைத்து பெயர் மற்றும் மருத்துவமனை பெயர் ஆகியவற்றை வைத்து வலை தளங்களில், அவனை கண்டறிந்து அவன் தற்சமயம் வெளியிட்ட புகப்படத்தை பார்த்து கொண்டிருந்தவளின் கண்கள் “இவனா” என்று முணுமுணுத்தவாறு அதிர்ச்சியில் விரிய, அதில் தாராவின் பிறந்தாநாள் அன்று இருவருடன் வெளியே சென்ற போது எடுத்த புகைப்படத்திலிருந்த ஆதிரனை கண்டு தான் அதிர்ந்ததாள்.

 

அதோடு அவனுடன் கழித்த பொழுதுகள் கண்முன்னே தோன்றியதில், பாவையின் இதழ்கலோ அவள்யறியாமலே விரிந்தது.

 

மேலும் சில புகைப்படத்தை ஆராய்ந்ததை வைத்து சஷ்டிக்கின் நண்பன் தான் ஆதிரன் என்பதை அறிந்த பாவையோ, அவனால் தனக்கு கண்டிப்பாக உதவ முடியும் ஆதலால் அவனை சந்தித்து பேசி பார்க்கலாமா?.. ஒருவேளை அவன் உதவ மறுத்து விட்டால் என்ன செய்வது? என்று மூளைக்கும் மனதுக்கும் இரு வாத போராட்டங்கள் நிகழ, 

 

இறுதியில் வென்றது என்னவோ மனம் என்பதால் வேகமாக எழுந்து சென்று தன் கைபையிலிருந்த அவன் கொடுத்த வரவேற்பு அட்டையை எடுத்து அதிலிருந்த எண்ணை திறன்பேசியில் தட்டச்சு செய்து, ஒரு முறை சரி பார்த்தவளுக்கோ ஏன் இவனிடம் பேச நினைக்கையில் மற்றும் தனக்குள் இத்தனை மாற்றங்கள் என்று இதயத்தில் கேள்வி எழுந்தாலும் அதனை சட்டை செய்யாமல், இதழ் குவித்து ஊதிவிட்டு அவனுக்கு அழைப்பை விடுத்தாள்.

 

**************************

 

டெல்லியிருந்து சென்னை வந்து ஒருநாள் கழிந்திருந்த நிலையில் பயணத்தில் ஏற்ப்பட்ட களைப்பின் காரணமாக மூவரும் ரெண்டு நாட்கள் தங்கள் பணிக்கு விடுமுறை எடுத்து தங்கள் குடும்பத்தினருடன் கதைத்துவிட்டு தங்களுக்கென்று இருக்கும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

 

இவர்கள் மூவரும் மட்டும் தனியாக இருக்க ஆதிரனின் ரகசிய பணியே காரணம், ஏனெனில் இவனின் பணியை பற்றி தாய் தந்தை அத்தை நண்பர்கள் மற்றும் மகிழையும் தவிர வேற யாருக்கும் தெரியாது என்பதால் சென்னையிலிருக்கும் போது தன் பணியுடன் தந்தையின் அலுவலகத்திற்கும் உதவியாக இருப்பதால் மற்றவர்கள் முன் தந்தையின் தொழிலை பார்த்து கொள்கிறேன் என்று கூறிவிடுவான் 

 

அதோடு தன்னுடைய ரகசிய பணியை அதன் சமந்தப்பட்ட கோப்புகள் எல்லாம் தங்கள் வீட்டில் வைப்பது பாதுகாப்பாக இருக்காது என்று கருதி தனியாக வசிப்பதே சரியென்று முடிவெடுத்து சென்னையிலிருக்கும் பட்சத்தில் மட்டும் குடும்பத்தினரை தினமும் பார்த்துவிட்டு வருவதும் வாரம் ஒரு முறை அவர்களுக்காக அங்கேயே தங்குவதும் உண்டு.

 

அதுமட்டுமின்றி, அவனை தனியே விட மனமின்றி நண்பர்கள் இருவரும் அவனுடனே வசித்தார்கள்.

 

 

இரவு உணவை சமைத்துவிட்டு தாராவின் அறைக்குள் சென்றவனோ “சரவெடி சாப்பிட வாடி”

 

“இல்லடா.. எனக்கு பசிக்கல.. நீங்க சாப்பிடுங்க எனக்கு டையடாயிருக்கு நான் ரெஸ்ட் எடுக்கிறேன்”

 

“நீ மூணு நாள்லா ஒழுங்காவே சாப்பிட மாட்டிக்க.. இப்படியிருந்தா ஹெல்த்கு இஸ்யூஸ் வரும்.. பிளீஸ்டி எனக்காக கொஞ்சம் சாப்பிடு” என்று அவளருகில் அமர்ந்து கைபற்ற, 

 

அவ்வளவு தான் அவன் மார்பில் சாய்ந்து கண்ணீரால் சட்டையை ஈரமாக்கி தொடங்கிவிட்டாள் 

 

“பயமா இருக்கு ஆதி.. பூ வச்சி எங்கேஜ்மெண்ட் வர கொண்டு வந்துட்டான்.. இதுக்கு மேலயும் மனசு மாறுவான்னு நம்பிக்கையே இல்ல.. இந்த தடவையும் நான் தோத்துட்டேன்”

 

 

“பைத்தியமாடி நீ.. இன்னும் அவன் அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டுற வரை நமக்கு டைமிருக்கு.. அதுக்குள்ள நீயே எப்படி தோல்வின்னு முடிவு பண்ணுவ”

 

 

“இவ்வளவு நாள் மாறாதவன் இந்த ஒரு மாசத்துக்குள்ள மாறிட போறான்.. போடா காமெடி பண்ணிட்டு”

 

“உனக்கு சசி மேல இருக்குற செவன் இயர்ஸ் லவ் ட்ரூன்னாலும்.. அவன் உனக்கானவன்னு இருந்தாலும் கண்டிப்பா அவனே நினைச்சாலும் அவனால் உன்னவிட்டு போக முடியாது… முத தடவவேனா தோல்வியா இருந்துருக்கலாம் ஏன் அந்த தோல்வி உன் காதலுக்கான கடவுள் வச்ச பரிட்சையா கூட இருந்துருக்கலாம் அதுக்கு பலனா உன் காதல் உன்கிட்ட சேரும்ன்னு, எனக்கு நம்பிக்கை இருக்கு.. முதல நீ உன்னோட காதல நம்பு” என்று கூற,

 

நண்பன் தனக்காக பேசியதை கேட்டு இயல்பு நிலைக்கு மாற முயற்சித்தவளோ “டேய்.. நீ பக்கம் பக்கமா பேசுறத பாத்தா.. அவன தூக்கிட்டு வந்து என் கழுத்துல தாலி கட்ட சொல்லுவ போல”

 

“சொல்ல முடியாது கடைசி நேரத்துல அது நடந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல.. பட் அந்தளவு சீனாக வாய்ப்பில்ல.. பாக்கலாம்.. அவன் என்ன நினைக்கிறான்னு” என்று கூறி மேலை கைக்காட்ட,

 

அதில் புன்னகைத்தவளோ “அவன் என்னடா நினைக்கிறது.. தூக்கணும்ன்னு முடிவு பண்ணியாச்சுல.. அப்போ தட்டி தூக்குறோம்டா” என்று கூறி அவனுடன் கையடித்து வெளியே சிரித்தவளின் மனமோ ரணமாக எரிந்தது,

 

ஒருவழியாக, அவளை சாப்பிட வைத்து தானும் உண்றுவிட்டு நீச்சல் குளத்தை வெறித்தவாறு அமர்ந்திருந்த நண்பனின் அருகே வந்து தோலோடு அணைத்து அமர்ந்தவனோ “என்ன மச்சான் கல்யாண கனவா” என்று தான் கூறியதை கேட்டு விரகத்தியாக சிரித்தவனிடம் “அதான் கஷ்டமா இருக்குலடா.. பின்னே எதுக்கு.. நீயும் கஷ்டப்பட்டு அவளையும் கஷ்டப்படுத்துற”

 

“கொஞ்சம் நாள் அப்படி தான் இருக்கும்.. அதுக்கு அப்புறம் பழகிடும்”

 

“மனச தொட்டு சொல்லு.. இந்த கல்யாணம் நடந்தா கண்டிப்பா உன்னால சந்தோசமா வாழ முடியுமா இல்லன்னா.. அவ தான் உன்ன மறந்துட்டு வேற கல்யாணம் பண்ணிப்பாளா”

 

“அதான் சொன்னேனே பழகிடும்ன்னு”

 

“நீ பண்றது தப்பு மச்சான்” என்று கூறிய மறுநொடி நண்பனை இறுக்கமாக அணைத்து கொண்டவனுக்கு கல்யாணம் நிறுத்த வேண்டுமென்று தோன்றினாலும், அதனால் தன்னவளும் கஷ்டப்படுவாள் என்று நினைக்கையில் மனம் வலித்தாலும்

 

இப்போது நடக்கயிருக்கும் திருமணத்தை நிறுத்தி விடலாம் என்று உறுதியாக முடிவெடுத்தவன், அதற்கான நேரத்திற்காக காத்திருக்கலாம் என்று எண்ணி தன்னவளின் வாழ்கைக்காக வேறு சில திட்டங்களை தீட்டினான்.

 

அதனால், அவள் மனது கஷ்டப்படும் என்று அறிந்தும், அவளின் நலத்திற்காக செய்வோம் என்று முடிவெடுத்துவிட்டு நண்பனின் அணைப்பிலிருந்து விலகியவன் “கொஞ்சம் நேரம் தனியா இருக்கேன் மச்சான்.. நீ போ” என்று கூற,

 

அவனுக்கு தனிமை கொடுத்து தனது அறைக்குள் வந்தவன், நண்பர்கள் இருவரின் கஷ்டத்தை பார்த்து இதற்கு மேல் வேறுவழியில்லை என்பதை உணர்ந்து, அவன் நண்பியிடம் கூறியதை செயல் படுத்திவிடலாம்ன்னு என்று உறுதியாக முடிவெடுத்தவன் தனது அறையிலிருக்கும் வெளிச்சத்தை அணைத்துவிட்டு படுக்கையில் தலையை வைத்த நேரம் திறன்பேசி அலறியது.

 

புது எண் என்பதால் யோசனையாகவே எழுந்து அமர்ந்து அழைப்பை ஏற்று காதில் வைத்த நொடி மறுபுறத்திலிருந்து வந்த “ஹலோ” என்ற வாசகத்தின் குரலை வைத்தே தன்னுடைய மகிழ் என்பதை உணர்ந்தவனின் மனதில் இத்தனை நேரம் இருந்த இறுக்கம் தளர்ந்து காதல் சாரல் வீச, அவளின் முகம் காண ஒவ்வொரு அணுவும் ஏங்கி துடித்தது.

 

எந்த பதிலும் வரவில்லை என்றதும் மறுபடியும் பெண்ணவள் “ஹலோ.. லைன்ல இருக்கீங்களா” என்று அவள் கூறியதை கேட்ட பிறகே சுயநினைவிற்கு வந்தவன் 

 

“ஹான் இருக்கேன்.. நீங்க யாரு” என்று தெரியாதவன் போல் வினவ,

 

அவளும் புது எண் என்பதால் தன்னை யாரு என்று தெரியவில்லை என்கிறான் என்று நினைத்தவள் “என்ன டிடெக்டிவ் ஆபீஸர் என்னோட வாய்ஸ் தெரியலயா” என்று அவனை சீண்டும் பொறுத்து நக்கலடிக்க,

 

அதை உணர்ந்து நடிப்பை தொடர்ந்தவன் “ஹலோ யாரு நீங்க.. என்னோட வொர்க் பத்தி உங்களுக்கு எப்படி தெரியும்”

 

“நீங்க தான சொல்லிருக்கீங்க.. கூடவே விசிட்டிங் கார்ட் கூட கொடுத்தீங்களே மறந்துட்டீங்களா”

 

“என்னோட கார்ட் ரெண்டு மூணு பேர்கிட்ட இருக்கு அதுல யாருன்னு எனக்கு எப்படி தெரியும்.. விளையாடாமே சொல்லுங்க”

 

‘அடப்பாவி.. அன்னைக்கு என்னோட ப்ரெண்ட்ஸ் ஃபேமிலி தவிர்த்து யார்கிட்டயுமே கார்ட் கொடுக்கல உனக்கு மட்டும் தான் கொடுக்கிறேன்னு சொன்னானே.. அப்போ அத்தனையும் நடிப்பா கோபால்’ என்று தன்னிடம் பொய் கூறிவிட்டானோ என்ற வருத்தம் எழ, தான் ஏன் இப்படி யோசிக்க வேண்டும் அவன் என்ன செய்தால் தனக்கு என்ன என்று தோலை உலுக்கினாள்.

 

அவனோ “ஹலோ யாருன்னு சொல்லுங்க”

 

“மிஸ்டர் ஆர்வகோளாறு என்ன தெரியலயா”

 

“அடடே சவுண்ட் சரோஜாவா.. என்ன விஷயம்.. என்ன ரொம்ப தேடிட்ட போல”

 

“ம்க்கும்.. ஆசை தான்”

 

“பின்ன ஒரு பொண்ணு பையனுக்கு நைட் டைம்ல கால் பண்ணினா இதான அர்த்தம்”

 

“ஊருல அப்படி தான் சொல்லிக்கிட்டாங்க..” என்று கூறி இதழ் குவித்து ஊதியவளோ “உங்க நக்கல் எல்லாம் ஓரம் கட்டிவச்சிட்டு.. நான் பேசுறத கேக்குறீங்களா”

 

“ம்ம் சொல்லு”

 

“இப்போ எங்க இருக்கீங்க..”

 

“வீட்டுல.. என்னோட பெட்ரூம்ல இருக்கேன்”

 

அதில் கடுப்பானவள் “அத கேக்கல.. சென்னைக்கு வந்தாச்சா”

 

“ஆமா.. வந்து டூ டேஸ் ஆகுது.. நீ விஷயத்த சொல்லு”

 

“நாளைக்கு நீங்க ஃப்ரீனா மீட் பண்ணலாமா.. முக்கியமான விஷயம் பேசணும்..”

 

“என்ன விஷயம்”

 

“அது நேருல தான் பாத்து பேசணும்.. உங்களால எனக்கு ஒரு ஹெல்ப்பாகனும்”

 

“ஓகே.. அப்போ ஈவ்னிங் 5o கிளாக் கிட்ட பெசன்ட் நகர் பீச்ல மீட் பண்ணலாம்”

 

“எதே பீச்சா.. நம்ம என்ன லவ் பண்ணவா போறோம் பீச்சுக்கு போகிறதுக்கு வேற ஏதாவது ரெஸ்டாரன்ட்ல மீட் பண்ணலாம்”

 

“நான் லவ் பண்ண தான வாரேன்” என்று முணுமுணுக்க,

 

அதை கவனிக்காதவளோ “என்ன சொன்னீங்க”

 

“வொர்க் முடிஞ்சி அந்த டைம் பீச்ல வாக் போவேன்.. என்னோட ஆபீஸ் பெசன்ட் நகர் சோ அந்த பீச் தான் பக்கம்.. அங்க போனா கொஞ்சம் மைண்ட் ரிலாக்ஸா இருப்பேன்.. அப்போ தான் நீ பேசுறது என்னோட மண்டைக்கு ஏறும்”

 

‘நம்ம பேச போற விஷயத்த கேட்டு அவன் எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தெரியாது.. சோ இங்க தான் நமக்கு சேப்.. ஓகே சொல்லி உசுர காப்பத்திக்க மகி’ என்று எண்ணி “சரி ஓகே.. அங்கயே மீட் பண்ணலாம்”

 

“அப்புறம்..”

 

“அவ்வளவு தான் நாளைக்கு பாக்கலாம்.. அப்புறம் தூங்குற நேரத்துல டிஸ்ட்ரப் பண்ணியிருந்தா சாரி”

 

“அதான் டெய்லி பன்றியேடி” என்று முனுமுனுக்க,

 

“என்ன சொன்னீங்க”

 

“அதான் பண்ணிட்டியே அப்புறம் எதுக்கு சாரி”

 

“ம்க்கும்.. ஃபோன வைக்கிறேன்.. பாய்” என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.

 

தன்னவளுடன் பேசியது மட்டுமின்றி நாளை அவள் தரிசனம் காண போகிறோம் என்று சந்தோசத்தில் படுக்கையில் உருண்டு பிரண்டு தலையணையை கட்டியணைத்தவாறே நாளைய பொழுதை நினைத்து உறங்கி போனான்.

                   தேடல் தொடரும்..

 

இப்படிக்கு 

Vsv42😍😍


   
ReplyQuote

You cannot copy content of this page