About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம்: 49
ஒரு வாரம் நகர்ந்திருந்தது.
பூத்திருந்த மூங்கில் பூவைச் சுற்றிய பறவைகளை காணவேண்டி, கண்ணாடி சுவர் பதிக்கப்பட்டிருந்தது.
அது நம் ப்ரஜித்தின் ஃபேவரேட் ஸ்பாட்.
இன்று அதை ரசித்துக் கொண்டிருப்பது ரிபேக்கா. எப்போதும் அவனுடன் சேர்ந்தமர்ந்து பானத்தை பருகுவது வழக்கம்.
இன்று கையில் காப்பிக் குவளையுடன் அவளை வெகுநேரமாக காத்திருக்க வைத்து, தன் விளையாட்டை முடித்துக் கொண்டு அப்பொழுது தான் வந்தான் ப்ரஜித்.
"குட் மார்னிங் பேப். நீ இவ்ளோ சீக்கிரம் எந்திரிக்கிற ஆள் இல்லயே. காபி கப்போட வேற உக்காந்திருக்க, உடம்புக்கு எதுவும் சரியில்லயா?." எனக் கேலி செய்தவனை அருகில் அமரச் சொன்னாள் அவனின் மனைவி.
"ஷவர் பண்ணிட்டு வர்றேன்." என்றபடி குளியலறைக்குள் செல்ல முயன்றவனை கரம்பற்றி நிறுத்தி அணைக்கவர,
"வியர்வையா இருக்கேன் கண்ணம்மா. உனக்கு அது பிடிக்காது." என்றவன் ஈரமாகியிருந்த தன் டீசர்ட்டை காட்ட,
"இப்ப பிடிச்சிருக்கு." என்று அணைத்துக் கொண்டாள் அவள்.
அவளின் விசித்திர நடவடிக்கையால் குழம்பிப் போனவன், "ஆஃபர்ல உன்னோட கொள்கைகள எல்லாம் எக்ஸ்சேஞ்ச் பண்ணி மாத்திட்டு வந்திட்டியா என்ன!" எனக் கேலி செய்ய, அவனின் புஜத்தில் குத்தியவள், ஒரு கார்ட்டை நீட்டினாள்.
அது சொல்லியது ரிபேக்கா கர்ப்ப தரித்துள்ளாள் என்று.
ப்ரஜித் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லையென்று சொல்லலாம்.
"கண்ணம்மா!, பேபி! நமக்கு! ஓ மை காட்..." என்றபடி அவளை கட்டியணைத்து உயரே தூக்கிச் சுற்றியவன்,
"என்ன அப்பான்னு கூப்பிட ஒரு குட்டி வரப்போது. ஹே...." எனக் கத்த,
"ப்ரஜி கன்ட்ரோல் யூவர் செல்ஃப்." என வாய் கூறினாலும் அவனின் மகிழ்ச்சியில் சேர்ந்து கொண்டாள்.
"என்னால வயித்த தள்ளிட்டுல வொர்க் பண்ற இடத்துக்கு போக முடியாது. அத்தோட ஒரு குழந்தையோட பொறுப்ப எடுத்துக்கிற அளவுக்கு எனக்கு டயமில்ல வயசுமில்ல." என்றவள் ப்ரஜித்துடன் வாழ்ந்த நாட்களில் குழந்தை தங்காது இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்திருந்தாள்.
குழந்தை விசயத்தில் முடிவெடுக்கும் உரிமை தாய்க்கு மட்டுமே உள்ளது என்பதால் அவனும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஆசை இருந்தது.
இன்று தங்கள் காதலின் அடையாளமாக கருவைச் சந்தோஷமாக சுமக்க முடிவு செய்துள்ளாள்.
சந்தோஷத்தில் கட்டித் தூக்கிக் சுற்றியவன், "ஐ ப்ராமிஸ்ஸிங் யூ குழந்த விசயத்துல என்னோட பொறுப்ப நா சரியா செய்வேன். நாம ரெண்டு பேருக்குமே ஈக்வெல் ரெஸ்பாண்ஸ் தான். ஆனா நா குட்டிய எக்ஸ்ட்ரா கேரோட பாத்துப்பேன்."
"அப்ப என்ன கண்டுக்க மாட்டியா டியர்.!" எனக் கொஞ்சலோடு தோளில் மாலையாய் கரம் கோர்க்க,
"என்னோட கண்ணம்மாவ கவனிக்காம இருப்பேனா!." என்றவன் இடையில் கரம் கொடுத்து தன் அணைப்பிலேயே அவளை வைத்துக் கொள்ள, அங்கு மேட்னி ஷோ ஆரம்பித்தது.
ஆனால் டயிட்டில் போடும் முன் அதற்கு என்டு கார்ட் போட்டார் போல் அவர்களின் வீட்டு அழைப்பு மணி அடித்தது.
யார்? என்ற குழப்பத்துடன் கதவை திறக்க, அங்கு கோகோ நின்று கொண்டிருந்தாள்.
"ஹேய் குலாப்! காலைலயே பூத்திருக்கு!" என கேலியாக கேட்டானென்றால்,
ரிபேக்கா, "நீ இங்க என்ன பண்ற?" எனக் அதிர்ச்சியாக கேட்டாள்.
"ப்ரஜித் சார கூட்டீட்டு போக வந்தேன்." என்று அவனின் கரம்பற்றி இழுத்தவள்,
"அந்த சத்யா ரொம்பத்தான் பண்றான். என்ன பழி வாங்குறான். என்ன நமப வச்சி ஏமாத்திட்டான். உங்கள விட்டா அவன கேள்வி கேட்க யாரும் கிடையாது. வாங்க..." எனப் புலம்பியபடி நடக்க,
ரிபேக்கா, "சஜி உன்ன நம்ப வச்சி ஏமாத்தினானா! ஆமா நீ எதுக்கு மும்பை வந்த?" நண்பனுக்காக பேசினாள்.
"நியாயம் வாங்க. அத ப்ரஜித் சாரால தான் வாங்கித் தர முடியும். நா அப்பவே சொன்னேன் சஜித் எனக்கு வேண்டாம் சத்யா மட்டும் போதும்னு. புறாக்கூண்டா இருந்தாலும் எவ்ளோ அழகா இருந்தது எங்க லைஃப். பட் சத்யாவோட ஸ்லிப் பர்ஸ்னாலிட்டி சஜித், என்ன டார்ச்சர் பண்ணுது." எனக் கண்டபடி புலம்பியவளிடம் என்ன பிரச்சினை என்று கேட்டால் மெகா சீரியலை ஒலிபரப்புவாள் என்பதால் ரிபேக்கா சஜித்தை காண சித்தாராவின் இல்லம் நோக்கி நடந்தாள்.
"வாங்க சார், நாமலும் போலாம். இன்னைக்கி ஒரு முடிவு தெரிஞ்சே ஆகனும்." என்றவளிடம்.
"நா இன்னும் குளிக்கலயே!"
"இப்ப அது முக்கியமா சார்!. முதல்ல எனக்கு ஒரு நியாயம் வாங்கி குடுத்திட்டு குளிங்க." என இழுத்துச் சென்றாள்.
இந்தர்-சித்தாரா இல்லம்...
ஹால், சின்னச் சின்ன பெட்டிகளால் நிறைந்து வழிந்தது.
"சாச்சி இது ரிசப்ஷனுக்கு போட லகங்கா. இது பட்டு. கல்யாணத்துப்ப கட்டனும்னு சொல்லி வேந்தனோட அப்பா கடைல இருந்து கோகோ வரவச்சா. இது அதுக்கேத்த நகை." என ஒவ்வொன்றாக பிரித்துக் காட்டினாள் துகிரா.
முன்பு கோகோவுடன் சேந்து சாப்பிங் செய்தவை இவை. அனைத்தையும் இளவேந்தனை மனதில் நிறுத்தி ஆசை ஆசையாய் தேர்ந்தெடுத்திருத்தாள்.
அன்று சஜித் அழைத்து வந்த பின் அவளின் தாய் மாமன் வீடே தாய் வீடாகிப் போனது.
ஸ்மித்தாவின் பக்கம் கூட அவள் செல்லவில்லை. அவளின் உடமைகளை நேற்று தான் அள்ளிக் கொண்டு வந்தாள்.
ஆசையாய் வாங்கியது அல்லவா!
"எல்லாம் நல்லா இருக்குடாமா. வேந்தன் வீட்ல முகூர்த்த புடவ எடுத்தாச்சாம். அதுக்கும் ஏத்த நகை செட் எடுத்துக்க வேந்தனும் நீயுமா போய்ட்டு வாங்க." என்க, தன்னவனை சந்திக்க உள்ளோம் என்பது சிலிர்ப்பை தந்து முகத்தை அந்திவானமாய் மாறியது.
அப்பொழுது சண்டை போட மூவரும் வந்து சேர்ந்தனர். சித்தாரா கருவுற்றிருக்கும் ரிபேக்காவை ஆவலுடன் வரவேற்றார்.
கோகோ, அவரை தீயாய் முறைக்க, சின்னச் சிரிப்புடன் அவளையும் வரவேற்றவர், ப்ரஜித்துடன் அளவளாவத் தொடங்கினார்,
"கோகோ!! நீ எப்ப வந்த? எதுக்கு வந்த? வேந்தன் கூட வந்திருக்காறா?" என ஆவலோடு துகிரா எட்டிப்பார்க்க, யாரையும் காணாது, "நீ தனியா மும்பை வந்தியா?" என்றாள் ஆச்சர்யமாக.
"வரவேண்டிய சூழ்நிலை. சத்யா எங்க?" என்றதற்கு துகிரா தோள்களை உயர்த்தினாள் தெரியாது என்று.
"உங்களுக்கு தெரியுமா த்த?" என்றாள் சித்தாராவை பார்க்காது எங்கேயோ பார்த்தபடி, அவரின் மீது கோபம் போலும். அதற்கு காரணம் தெரிந்த சித்தாரா மெல்லிய சிரிப்புடன் மாடியில் உள்ளதாகச் சொல்ல, ப்ரஜித் இழுத்துக் கொண்டு கதவைத் தட்டினாள்.
அலுவலகம் செல்ல ஏதுவாய் பார்மல் ஷர்ட்டில் தயாராகியிருந்தவன், கையில்லாத பனியனுடன் சாட்ஸ் அணிந்த ப்ரஜித்தை பார்த்து புருவம் சுருக்க,
"பஞ்சாயத்து தலைவரா கூட்டீட்டு வந்திருக்கேன்." என்றாள் கோகோ.
இதழ் விரிய கதவை முழுதாய் திறந்து உள்ளே அழைத்தான். அவன் ஒற்றை சோஃபாவில் அமர்ந்து கொள்ள, ப்ரஜித் நடுவிலிருந்த பெரிய சேஃபாவில் நீதிபதி போல் அமர்ந்து கொண்டான்.
இதழ் சுழித்தபடி சஜித்தினை முறைத்துக் கொண்டு அவனுக்கு எதிரில் இருந்த இருக்கையை நிரப்பியவளின் பாவனை சஜித்தை கவர, தன் பச்சை விழிகளை அவளின் மேல் அழுத்தமாய் பதித்தான். பல நாட்களாகி விட்டது அவளை கண்டு, அதனால் கட்டுப்பாடின்றி மொய்க்கும் பார்வை பார்க்க, அந்தப் பார்வையில் வழக்கம்போல் கோகோவிற்குள் போதை ஏறத் தொடங்கியது. தலையில் தட்டி தெளிய வைத்தவள்,
'கோகோ இது மட்டையாகுற நேரம் கிடையாது. கோபப்படுற நேரம். ம்... கோபமா பாரு அவன.' எனத் தனக்கு தானே சொல்லிக் கொண்டு அவனை முறைத்துப் பார்த்தாள்.
இருவரின் பார்வையும் பின்னியிருக்க,
ப்ரஜித், "பஞ்சாயத்து பண்ணுமா வேண்டாமா"
"பண்ணனும்." என்றவள் நடந்ததை விளக்கினாள்.
அன்றைய நிகழ்விற்குப் பின் சஜித் முதல் வேலையாக வேந்தனை ஊருக்கு துரத்தி விட்டான்,
"உங்க பேரன்ஸ்கிட்ட துகிய பத்தி பேசுங்க வேந்தன்." என்று.
அவன் மட்டும் செல்லாது கோகோவையும் கையோடு இழுத்துச் சென்றான்.
"நா அவசியம் வருமா அத்தான்?"
"பின்ன வீட்ட விட்டு வந்து ஒரு வாரமாகுது. அத்த அழுதிட்டே இருக்காங்களாம். வா போலாம்."
"ஆனா போனா அண்ணா அடிப்பான்." என்றவளை,
"அடிக்காம நா பாத்துக்கிறேன்."
"ஆனா சத்யாவ பாக்காம நா எப்படி?." என்றவளின் தலையில் தட்டி,
"இத்தன நாள் எப்படி இருந்தியோ அப்படித்தா." என்று இழுத்துச் சென்றான் இளா.
அங்கு அவர்களுக்கு கிடைத்த மரியாதையை ராஜமரியாதை என்று சொல்லலாம்.
பின்னே இந்தரே நேரில் வந்து கோகோவை சஜித்திற்கும், இளவேந்தனை துகிராவிற்குமெனக் கேட்க்கும் போது, முடியாது என்ற வார்த்தை எப்படி வரும்.
இரு திருமணத்திற்கும் அனைவரின் சம்மதமும் கிடைக்கப் பெற்றதும், இளவேந்தன் மும்பை திரும்ப, கோகோவால் முடியவில்லை.
"இன்னும் ஒரு மாசத்துல கல்யாணத்த வச்சிட்டு எங்கையும் போகக்கூடாது." எனப் பிடித்துக் கொள்ள, கல்யாணக் கற்பனையில் மிதந்தவளை கரையேற்றியது இளவேந்தன் துகிராவுக்கு மட்டும் தான் திருமணம் நடக்க உள்ளது என்ற செய்தி.
"அப்ப எனக்கு கல்யாணம் இல்லையா? நா எப்ப சத்யாவ கல்யாணம் பண்ணிக்கிறது?" எனக் கேட்டு தாயிடம் திட்டு வாங்கி, அவளின் அண்ணியின் ஆவேசப் பார்வையை பெற்று, அண்ணனின் உக்கிற வார்த்தைகளால் குளித்து எழுந்தாள் கோகோ.
"அத்தான் கல்யாணம் உங்களுக்கு மட்டும் தானாம். எனக்கு இல்லயாம்." என ஃபோனில் இளவேந்தனிடம் முறையிட்டாள் கோகோ. அதற்கு அவன் சிரிக்க,
"சிரிச்சா என்ன அர்த்தம் அத்தான்."
"நீ கேள்வி கேக்க வேண்டிய ஆள் நா இல்லன்னு அர்த்தம்."
"யார்ட்ட கேக்கனும்." என்றவளுக்கு அவனின் மௌனம் சொல்லியது இது சத்யாவின் வேலையென்று.
அவனுக்கு அழைத்தாள், அது எடுக்கப்படாததால் சித்தாராவிற்கு அழைத்து, 'எனக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுங்கள்,' என்க,
அவரோ, "துகிரா கூட நடக்க இருக்குற கல்யாணத்த நிப்பாட்டுறேன்னு தான் வாக்கு குடுத்தேன். அந்தக் கல்யாணம் தான் நின்னுடுச்சே." என்றவரின் குரலே சொல்லியது அவர் தன்னை கேலி செய்கிறார் என்று.
"அப்ப சத்யாக்கும் எனக்கும் எப்ப கல்யாணம்?" என்ற கேள்விக்கு பதில் வேண்டி ப்ரஜித்தை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாள்.
"கேளுங்க ப்ரஜித் சார். அவன் என்ட்ட கேட்டப்ப நா மறுத்து தப்பு பண்ணிட்டேன் தான். அதுக்கு நா சாரி கேட்டேன். இவனும் சரின்னு அக்சப்ட பண்ணிட்டான். இப்ப கல்யாணப் பேச்சு எடுத்தா கண்டுக்க கூட மாட்டேங்கிறான். அத்த கூட இவனுக்கு சப்போட்டாத்தா இருக்காங்க போல. மலுப்புறாங்க. இளாத்தான், பாஸ்னு பம்முறாரு.
எனக்காக பேச உங்கள கூட்டீட்டு வந்திருக்கேன். நா என்ன அத்தான் கல்யாணம் நடக்குற அன்னைக்கேவா பண்ணிக்கச் சொல்லி கேக்குறேன். அதுக்கு அடுத்த நாள் பண்ணா போதும்னு தான் சொல்றேன்." என இடைவெளியே விடாது புலம்ப, ப்ரஜித் எழுந்து சென்றான்.
'இது ஒரு பஞ்சாயத்துன்னு குளிக்காம, ஏங்கண்ணம்மா கூட ரொமான்ஸ் பண்ணாம வந்து உக்காந்திக்கேன் பாரு.' என முணுமுணுக்க, கோகோ தடுத்தாள்.
"நியாயம் தான குலாப். அவன் நிறைய வச்சிருப்பான். கேட்டு வாங்கிக்க." என்று விட்டு செல்ல, அவனின் பின்னாலேயே செல்ல இருந்தவளின் கரம் பற்றி தன் மேல் போட்டுக் கொண்டான் சஜித்.
பூக்குவியலாய் தன் மடியில் கிடந்தவளிடம், "கோகிலாக்கு என்ன கேக்கனும்?." என்று வாகாய் கரத்தை பெண்ணவளின் இடைக்கு கொடுத்து அணைத்தவன், பெண்ணவளின் கழுத்தில் வாசம் பிடிக்க, நீண்ட நாட்களுக்கு பின் கிடைக்கும் இந்த நெருக்கம் இருவருக்குமே மயக்கத்தைத் தந்தது.
ஆழ்ந்த மயக்கத்திற்குள் செல்லும் முன், “எம்மேல இன்னும் கோபமாத்தா இருக்கியா சத்யா?”
“எஸ்… ரொம்ப… ரொம்ப… ரொம்ப கோபமா இருக்கேன்.” என அணைப்பை இறுக்க,
"அப்ப என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டியா.?" என்றாள் சிணுங்களாக,
"அதா ஆல்ரெடி ஆயிடுச்சே." என்றவனின் முகத்தை தன்னுடலிலிருந்து பிரித்து, "எப்ப?" என வினவ, அவளின் மதி முகம் ஏந்தியவன்,
"எனக்கு பொய் பிடிக்காது கோகிலா. அதுவும் கல்யாண விசயத்துலயும் குழந்தை விசயத்துலயும் பேசுற பொய் சுத்தமான பிடிக்காது."
"நா எப்ப பொய்...." என்றபோது ரேவன் பவனில் நுழைய சித்தாராவிடம் அவிழ்த்து விட்ட கதை நினைவு வர,
"அதுக்கு?"
"மூணு வர்ஷம் லிவ்விங் டுகெதர்ல ஒன்னா ஒரே வீட்டுல வாழ்றோம். ஆல்ரெடி கந்தவர்வ கல்யாணம் பண்ணியாச்சி, ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிறோம். அப்றம், kg baby-யோட ஊரறிய கல்யாணம் பண்ணிக்கிறோம். உன்னோட இன்ஸ்டால போஸ்ட் போடுறோம்." என்றவனுக்கு தந்த மறுப்பு நீர்த்து போனது.
அவன் சொன்னது போல் வேந்தன் துகிரா திருமணம் முடிந்ததும், அவளை இரு வீட்டாரின் முன் பதிவு திருமணம் செய்து கொண்டவன், நெருல்லில் அவர்கள் குடியிருந்த அப்பார்ட்மெண்ட்டை பவன் ஆஃப் ரேவனின் கட்டி, அந்த புறாக்கூண்டிற்குள் குடி புகுந்தான் அவளுடன்.
அந்த சிறிய இடத்தில் அவனின் நெருக்கும் அவளு
க்கும், அவளின் அண்மை அவனுக்கும் கள் உண்ட மயக்கத்தை தந்து தெளியாத போதைக்குள் இருவரையும் இழுத்துச் செல்லும்.
அவர்கள் மயக்கம் தொடரட்டும்.
நாம் அவர்களை தொடவேண்டாம்.
...சுபம்...
கதை உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நம்புறேன். இதுவரை கதையை பொறுமையாக வாசித்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுல மூணு ஜோடி இருக்கு. உங்களுக்கு பிடிச்ச ஜோடி எதுன்னு மறக்காம கமெண்ட் பண்ணுங்க. அப்றம் கதை பற்றிய விமர்சனங்களும் வரவேற்கப்படுகிறது.
இதுவரை ஆதரவு தந்த அனைத்து உள்ளங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏
Latest Post: வாகை சூடவா ரிவ்யூ Our newest member: Syedalisadiq Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page