About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம் 9
மருத்துவர் கொடுத்த மருந்து மாத்திரைகளை நேரம் தவறாமல் சரியாகச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள் வைஷ்ணவி. மாத்திரைகளை எடுத்துக் கொண்ட ஒரு மாதத்திலேயே மாதவிடாய் காலத்தில் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தாள் நல்ல செய்தி கிடைக்கும் என. ஆனால் அந்த மாதம் மாதவிடாய் ஆனதும் மனம் சோர்ந்து போனவள் பின் தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொண்டு
' ஒரு மாசத்திலேயே குழந்தையை எதிர்பார்ப்பதெல்லாம் ரொம்ப தப்பு வைஷு. இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணலாம். ஆறு மாசத்துக்கு மருந்து சாப்பிட சொல்லி இருக்காங்க இல்ல... அப்புறம் என்ன..?"என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டவள், அதற்குப் பின்பும் நாள் தவறாமல் நேரம் தவறாமல் மாத்திரைகளை எடுத்துக் கொண்டாள்.
இப்படியாக ஆறு மாதங்கள் முடிந்து இருந்தது. ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்து, எதிர்பார்த்து வேதனை கொண்டது தான் மிச்சம் என்ற நிலையில் அதற்கு மேல் துயரப்படவும் தெம்பு இல்லை என்பது போன்ற நிலைக்கு வந்திருந்தாள் பெண் அவள்.
ஒவ்வொரு மாதமும் கணவனிடம் புலம்புவது மட்டும் நிற்கவேயில்லை அவளுக்கு... அவனுக்குமே மனைவியின் ஆசை நிறைவேறாமல் இருப்பதும் தங்களுக்கு ஒரு குழந்தை செல்வம் இன்னும் வராமல் இருப்பதும் லேசான மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தது. பெண் அவள் புலம்பித் தவித்து அனைத்தையும் அவனிடம் சொல்லிச் சற்று அழுதும் விடுவதால் மற்ற நேரங்களில் அவளால் சற்று இலகுவாக வலம் வர முடிந்தது. ஆனால் ஆண் அவனுக்கோ பெண் அவளின் சோகமும் கண்ணீரும் அவனையும் அழுத்தி அவனுக்கே உண்டான ஆசைகளும், ஏக்கங்களும் மனதை கணக்கச் செய்திருந்தது.
அன்று பவித்ராவின் சித்தி முறையில் உள்ள ஒரு தூரத்து உறவினர் வந்திருந்தார் இவர்களின் வீட்டைத் தேடி.
"கற்பகம் சித்தி, வாங்க, வாங்க நல்லா இருக்கீங்களா.? எவ்வளவு நாளாச்சு உங்கள பார்த்து.?" என்ற படியே வந்தவரைக் கைப்பிடித்து அழைத்து வந்து தன் அருகில் அமர வைத்துக் கொண்டார் பவித்ரா சோபாவில்.
"நல்லா இருக்கேன் பவித்ரா. நீ எப்படி இருக்க.? பிள்ளைகள் எல்லாம் எப்படி இருக்காங்க.?" என்று கேட்டபடியே நன்றாகச் சாய்ந்து அமர்ந்தவர்
"எங்க உன் மருமகள காணோம்.?" எனக் கேட்டவாரே வீட்டைச் சுற்றி தன் பார்வையை சுழல விட்டார். இவர்களின் பேச்சுக் குரல் கேட்டபடி வெளியில் வந்த சக்தியும் வைஷ்ணவியும் அவர்களின் அருகில் சென்று,
"வாங்க பாட்டி. நல்லா இருக்கீங்களா.?" என்று கேட்டபடி சக்தியும் அவரின் எதிரில் அமர "வாங்கமா." என்ற வைஷ்ணவி அவருக்கான தண்ணீரை கொண்டு வந்து கொடுக்க. வாங்கிக் கொண்டவர்
"நல்லாருக்கியாமா.?" என்று கேட்டபடியே சக்தியின் புறம் திரும்பியவர்
"ஆமா.பார்க்கும்போது தான் நல்லா இருக்கீங்களா பாட்டினு விசாரிப்பீங்க. ஒரு பாட்டி இப்படி இருக்கிறாளே அவள போய் ஒரு எட்டு பாத்துட்டு வருவோம்னு என்னைக்காவது நினைச்சு என்னைத் தேடி வந்திருக்கீங்களா.? நானா தான் உங்கள எல்லாம் பார்க்கத் தேடி வரணும்." என்று அங்கலாய்த்துக்கொள்ள
"அப்படி எல்லாம் இல்ல பாட்டி. பார்க்க வரக்கூடாதுன்னு இல்ல. வேலை சரியா இருக்கு." என்றான் சக்தியும்.வும்
"அதுவும் சரிதான். அவங்க அவங்களுக்குன்னு வேலை இருக்கே. ஓடுனா தானே சம்பாதிக்க முடியும். எங்க முன்னையாவது கொஞ்சம் அங்க இங்கன்னு போய்கிட்டு இருந்தேன். இப்போ எங்கேயும் போவதில்லை. வீட்டோட இருக்கேன். முன்ன மாதிரி ஓட முடியல. உன் தம்பியும் என்னை எங்கேயும் விட மாட்டேங்குறான்." "நல்லது தானே சித்தி. தனியா நீங்க எங்கேயும் போயிட்டு உங்களுக்கு உடம்பு முடியாம போயிருச்சுனா யாரு வருத்தப்படறது. யாருக்கு கஷ்டம்." எனப் பவித்ராவும் கேட்க
"ஆமா, ஆமா அதனால தான் எங்கேயும் போவதில்லை. வீட்டோட இருந்துக்கிறது. உதவி செய்யலனாலும் உபத்திரம் செய்யாமலாவது இருக்கணும்ல..."
"ஏன் சித்தி அப்படி எல்லாம் பேசுறீங்க.?"
"அதுதாம்மா உண்மை. ஏதோ இருக்கிற காலத்துக்கு யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் இருந்துட்டு போயிடனும்."என்று கூறியவரின் மனநிலையை மாற்றும் பொருட்டு.
"இப்போ என்ன இந்தப் பக்கம்.? தனியா வா வந்திங்க.?" எனக் கேட்ட பவித்ராவிடம்
"தனியா வரல. என் மகன் மருமக கூடத் தான் வந்தேன். மருமகளோட ஒன்னு விட்ட தம்பி வீட்டுல அவங்க பிள்ளைக்குப் பிறந்தநாள் விசேஷம் அதுக்காக வந்தோம். நான் வரலைன்னு சொன்னாலும் என்னைத் தனியா வீட்டுல விட முடியாதுன்னு என்னையும் சேர்த்து இழுத்துகிட்டு வந்துட்டாங்க... அங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருந்தேன். விசேஷ முடிஞ்சதும் இங்கதானே பக்கத்துல நம்ம வீடு உங்கள எல்லாம் பார்த்து ரொம்ப நாள் ஆகிருச்சுன்னு ஒரு எட்டு பாத்துட்டு போகலாம்னு உன் தம்பி கிட்ட சொல்லவும். என்னை ஒரு தெரிஞ்ச ஆட்டோ ஏத்தி அனுப்பி விட்டான் அதான் வந்தேன். வந்த ஆட்டோவும் வெளியில தான் நிக்குது. வந்த மாதிரியே என்னைக் கொண்டு போய் விட்டுடுவான் ஒன்னும் பயம் இல்லை... அது சரி, எங்க உன் புருஷன காணோம்." எனப் பவித்ராவிடம் நீண்ட விளக்கம் கொடுத்துவிட்டு கேட்க.
"கொஞ்சம் கடைவரைக்கும் போயிருக்காரு சித்தி." என்றவரிடம் "இன்னும் கடையை நடத்திக்கிட்டு தான் இருக்கீங்களா." எனக் கேட்க "ஆமா வீட்டு முன்னாடியே தானே. நமக்குப் பொழுது போகணும் இல்ல." "ஆமா, ஆமா உள்ள வரும்போது கடையைப் பார்த்தேன். மூடி இருந்துச்சு. அது என்னமோ உண்மைதான் பொழுது போகணுமே. அதுதானே இப்ப ரொம்ப சிரமமா இருக்கு.அதோடு சேர்த்து ஒரு சம்பாத்தியமும் நல்லது தான்." என்றவர்
"அப்புறம் உன் சின்ன மகளுக்கு எதுவும் மாப்பிள்ளை பாக்குறியா.? எந்த இடமாவது கேட்டு வந்ததா.?" எனக் கேட்க
"இல்ல சித்தி. இப்பதான் அவ வேலைக்குப் போக ஆரம்பிச்சுருக்கா. ரெண்டு மாசம் ஆகுது. ஒரு ஆறு மாசம் போகட்டும் அதுக்கப்புறம் ஜாதகத்தை எடுக்க வேண்டியது தான்." என்றவரிடம்
"எதுக்கும் எங்கிட்டயும் ஜாதகத்தோட ஒரு நகல குடு.நானும் நல்ல இடம் வந்தா சொல்றேன்..." என்றவர் லேசாகப் பவித்ராவின் புறம் குனிந்து,
"உன் மருமக சும்மா தான் இருக்காளா.? எதுவும் நல்ல செய்தி இருக்கா." எனக்கேட்க
"இல்ல சித்தி. நானும் அதுக்கு தான் கடவுளை வேண்டிக்கிட்டு இருக்கேன். எப்ப நல்ல செய்தி கிடைக்குமோன்னு." என்றபடியே மேலே பார்த்து இரு கைகளையும் கும்பிட்டுக் கூற.
"இங்க விக்கிரவண்டியில ஒரு கோவில் இருக்காம். ரொம்ப சின்னக் கோவில் தான். ஆனா குழந்தை இல்லாத வங்க அங்க போய்த் தொட்டில் கட்டிட்டு வந்தா அடுத்த வருஷமே நம்ம வீட்டுல தொட்டில் கட்டுற யோகம் வந்துடுமாம். அங்க போயிட்டு வந்த நிறைய பேர் சொல்றாங்க. ஒருமுறை குடும்பமா அங்க போயிட்டு வாங்க. அப்படி குடும்பமா போக முடியலன்னா புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரை மட்டும் ஆவது அனுப்பி வை."என்றவரிடம்.
"சரிங்க சித்தி. என்னதான் மருந்து மாத்திரை சாப்பிட்டாலும் தெய்வம் துணை இருந்து எப்போ கொடுக்கணும்னு நினைக்கிதோ அப்பதானே வரம் கிடைக்கும். நீங்கச் சொல்றது சரிதான். நான் சக்தி கிட்ட சொல்றேன். அவனால எப்போ முடியுமோ அப்ப அவங்க ரெண்டு பேரும் போயிட்டு வரட்டும்." என்று இவர்கள் இருவரும் சிறு குரலில் பேசிக் கொண்டிருக்க. சூடான வெங்காய பஜ்ஜி உடன் காபியும் கொண்டுவந்து வைத்தாள் வைஷ்ணவி அனைவருக்கும் பொதுவாக அங்கிருந்த டேபிளில்.
"அடடே வெங்காய பஜ்ஜியா எனக்கு ரொம்ப பிடிக்குமே." என்று சிலாகித்துக் கூறியவர் ஒரு பஜ்ஜியை எடுத்துக் கடித்தபடியே காபியையும் ஒரு குடி குடித்துக்கொண்டார்.
இவர்களின் சம்பாஷனைகளை உள் அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த பவித்ராவின் இளைய மகள்
வந்ததும் வராததுமா தனக்கு மாப்பிள்ளை பார்ப்பதாகக் கூறி தற்போது அமைதியாக இருக்கும் அம்மாவையும் தூண்டி விடுவது போல நல்ல இடம் வந்தா சொல்றேன்னு தனது திருமணத்தை நினைவூட்டும் பாட்டியின் மேல் கடுப்பில் இருந்தவள்.
"என்ன பாட்டி வயசான காலத்துல பஜ்ஜி எல்லாம் சாப்பிட முடியுமா.? பல்லெல்லாம் ஸ்ட்ராங்கா இருக்கா.?" என்று வம்பு வளர்க்க,
"வாடிமா. ஏன் சாப்பிட முடியாது? அப்படி என்ன வயசு ஆயிடுச்சு எனக்கு.? வைரம் பாஞ்ச கட்டை இது. எனக் கூறியபடியே
"ஒரு கடி, ஒரு குடி." எனச் சிரிப்புடன் கூறிக் கொண்டே சாப்பிடுவதை தொடர்ந்தார்.
சிறிது நேரம் எல்லோருடனும் அளவலாவி விட்டுப் பாட்டி கிளம்பி சென்றார். காத்திருந்த ஆட்டோவில். அவர் சொல்லிச் சென்ற விஷயத்தை யோசித்துக் கொண்டிருந்தார் பவித்ரா. மகன் மற்றும் மருமகளிடம் இதைப் பற்றி எப்படி கூறுவது என்று.
மறுநாள் காலையில் வழக்கம்போல் சக்தி கடைக்குக் கிளம்பும் நேரத்தில் அவன் முன் வந்து நின்றவர்,
"சக்தி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்." என்ற படியே அவனின் அருகில் அமர
"சொல்லுங்கம்மா என்ன விஷயம்.?" என்றான் அவனும் குடித்த காபி டம்ளரை கீழே வைத்தபடி.
"நேத்து சித்தி வந்து இருந்தாங்கல்ல. அவங்க ஒரு விஷயம் சொன்னாங்க."
"என்ன விஷயம் சொன்னாங்க.? நீங்க ரெண்டு பேரும் ஏதோ குசுகுசுன்னு பேசிட்டு இருக்கும்போதே நான் நினைச்சேன் இப்படியான விஷயம் ஏதாவது ஒன்று இருக்கும் என்று. சொல்லுங்க. என்ன சொன்னாங்க.?" என்று லேசாக முறைத்தபடி கேட்க.
"டேய் அப்படி என்ன நாங்க பேசிட போறோம் குசுகுசுன்னு.? இங்க விக்கிரவண்டியில ஒரு கோயில் இருக்காம். ரொம்ப பிரசித்தி பெற்ற கோயிலாம், ஆனால் ரொம்ப சின்னக் கோயில் தானாம். அங்க குழந்தை வரம் இல்லாதவங்க போய்த் தொட்டில் கட்டிட்டு வேண்டிக்கிட்டு வந்தா உடனே குழந்தை வரம் கிடைக்குமாம். அதைப் பத்தி தான் சொன்னாங்க. முடிஞ்சா ஒரு முறை குடும்பமா போயிட்டு வாங்கன்னு சொன்னாங்க. இல்லனா உங்க ரெண்டு பேரையும் மட்டுமாவது அனுப்பி வைக்கச் சொன்னாங்க. அதுதான் என்ன? எப்ப போகலாம்னு கேட்பதற்கு தான் உன்னைக் கூப்பிட்டேன்." என்றார் அவரும் சக்தியைப் போலவே லேசாக முறைத்தபடி படி
"கோயிலுக்கா.?" என்றவன் மனைவியைப் பார்க்க அவள் சம்மதமாகத் தலையை அசைக்கவும். சற்று யோசித்தவன்.
"சரி எப்ப போறது.? அப்படியே போறதா இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமைல மட்டும் தான் என்னால வர முடியும். மத்த எல்லா நாளும் எனக்கு நிறைய வேலை இருக்கு. முடிச்சு தரேன்னு வாங்கி வச்சிருந்த பெயிண்டிங் வேலை எல்லாம் இன்னும் செய்யவே ஆரம்பிக்கல. அவங்களுக்கு எல்லாம் என்னால பதில் சொல்லிட்டு இருக்க முடியாது. அதனால அந்த வேலையைத் தள்ளிப் போட முடியாது. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் ஃப்ரீ. அப்ப வேணா போலாம். என்ன சொல்றீங்க.? அப்பா கிட்ட கேட்டுச் சொல்லுங்க.?" என இவன் கூறும் போதே உள் அறையிலிருந்து வெளிவந்த அவனின் தந்தை,
"இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தானே என் பிரண்டோட மகளுக்குக் கல்யாணம். அதுக்கு கண்டிப்பா போகணும். அன்னைக்கே சொன்னேனே." எனப் பவித்ராவை பார்த்துக் கூற
"ஆமா, ஆமா சொன்னீங்க. இப்போதான் ஞாபகம் வருது. அப்போ எங்களால வர முடியாது. உனக்குத் தான் நேரம் கிடைக்கலைன்னு சொல்றியே. இந்த ஞாயிற்றுக்கிழமை நீயும் வைஷ்ணவியும் மட்டுமா போயிட்டு வந்துடுங்க. கோயில் விஷயம் எல்லாம் தள்ளிப் போட வேண்டாம்."எனப் பவித்ரா கூற மனைவியைப் பார்த்தவன் அவள் அமைதியாக நிற்பதை கண்டு
"சரி, அப்போ இந்த ஞாயிற்றுக்கிழமை நாங்க போயிட்டு வந்துடறோம்." எனக் கூறியபடியே தன் கடைக்குக் கிளம்பி சென்றான். மனைவியிடம் கண்களால் விடை பெற்று.
முடிவு செய்தபடி, ஞாயிற்றுக்கிழமை காலைக் குளித்துக் கிளம்பி சென்றார்கள் இருவரும் குறிப்பிட்ட கோயிலுக்கு. அவர்கள் வீட்டிலிருந்து ஒன்றரை மணி நேர பயண தூரத்தில் இருந்தது அக்கோயில். சிறிய கோவில் தான். கூட்டமும் அவ்வளவாக இல்லை. இருவரும் சென்று வணங்கி நின்றவர்கள், தங்களுக்கான கோரிக்கைகளைக் கூறிக் கொண்டிருக்க. பூசாரி இடம் பெயர், நட்சத்திரம் கூறி அர்ச்சனையும் செய்து விட்டு அங்கிருந்த மரத்தைப் பார்த்தவர்கள் நிறைய தொட்டிலும் மஞ்சள் கயிறும் மரத்தில் கட்டி இருப்பதை பார்த்தபடி நின்றிருந்தார்கள்.
"சில பெண்கள் மரத்தைச் சுற்றுவதை பார்த்துவிட்டு. வைஷ்ணவியும் சென்று சுற்ற ஆரம்பித்தாள். சுற்றிக் கொண்டிருந்தவள் எதேச்சையாகப் பின்னால் திரும்ப, சக்தியும் அவளோடு சுற்றிக் கொண்டிருந்தான்.
"நீங்க என்ன பண்றிங்க.? என் பின்னாடி." எனக் கேட்டவளிடம்
"நானும் சுத்துரேன் டி எனக்கும் தான் பிள்ளை வரம் வேணும்."என்றான் அவன்.
"அங்க போய் அமைதியா உட்காருங்க. நான் மட்டும் சுத்திட்டு வரேன்."
"அடியே மரத்தை மட்டும் சுத்துனா புள்ள பிறக்காது. புருஷன் பொண்டாட்டியை சுத்தணும். இல்ல பொண்டாட்டி புருஷனை சுத்தணும். நீ மரத்தைச் சுத்து. நான் உன்னைச் சுத்துறேன்." என்றான் லேசான சிரிப்புடன்.
*ச்சே...எங்க வந்து என்ன பேசுறீங்க? பேசாம போங்க. போய் ஒரு ஓரமா உட்காருங்க."என்றாள் உதட்டை மீறி வரவிருந்த சிரிப்பை அடக்கிய படி. "அதான் சிரிப்பு வருதுல்ல. சிரிச்சிடு." என்ற படியே மேலும் அவளை நெருங்கி மரத்தைச் சுற்றிய கணவனின் சேட்டை தாங்க முடியாமல் முறைத்தவள்.
"எல்லாரும் பாக்குறாங்க நம்மளையே. அங்க போய் உட்காருங்க போங்க." எனக் கூறிக் கொண்டிருக்கும்போது
"டேய் சக்தி." எனச் சத்தம் கேட்க. "யாருடா அது.? தெரியாத ஊரில் நம்மளை கூப்பிடுறது."என மனைவியிடம் கூறிக் கொண்டே திரும்பியவன் அங்குத் தன் பள்ளி கால நண்பன் குமாரை பார்க்க,
"டேய் குமார் நீ என்னடா இங்க.?"என்றான் அவனும் நண்பனைக் கண்டுவிட்ட மகிழ்வுடன் அவனிடம் நெருங்கி.
இன்னும் ஒரு சுற்று மட்டுமே சுற்ற வேண்டி இருக்க. அதையும் சுற்றிவிட்டு கணவனை நோக்கி நடந்தவள். அவன் அருகில் நின்று கொண்டிருந்த குமாருடன் இன்னொரு பெண்ணும் இருப்பதை பார்த்துச் சிநேக புன்னகை சிந்தியபடியே கணவனின் அருகில் சென்று நின்று கொண்டாள். தன் அருகில் வந்து நின்ற மனைவி திரும்பிப் பார்த்த சக்தி,
"வைஷ்ணவி இது என்னோட பிரண்டு குமார். என் பள்ளி காலத்து நண்பன்." என அறிமுகப்படுத்த "வணக்கங்க." என்றாள் இவளும். "வணக்கம் மா. நல்லா இருக்கீங்களா.? நான் உங்க கல்யாணத்துக்கு வந்தேன். உங்களுக்கு அப்ப என்ன தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மறந்து இருப்பீங்க."என்றான் சிரித்துக் கொண்டே
ஆமோதித்துக் கொண்டாள் அவளும். "இது என்னோட மனைவி பேரு லட்சுமி." என்றான் குமார். பொதுவான அறிமுகத்தை முடித்துக் கொண்ட இருவரும்
"அப்புறம் டா. நீ என்ன நம்ம ஊர்ல இருக்கிற கோயில் எல்லாம் விட்டுட்டு இந்தக் கோயிலுக்கு வந்திருக்கே...?" என்ன கேட்டான் குமார் சக்தியைப் பார்த்துப் படி.
"அதை ஏன்டா கேக்குற.?எங்க அம்மாவுடைய சித்தி, ஒரு பாட்டி ஒருத்தவங்க இந்தக் கோயிலுக்குப் போய்த் தொட்டில் கட்டுங்க சீக்கிரமா குழந்தை வரம் வந்திடும்ன்னு சொன்னாங்க. அத கேட்டவுடனே எங்க அம்மாவும் போயிட்டு வந்துடுங்கன்னு ஒரே நச்சரிப்பு. அதனால தான் வந்தோம் ரெண்டு பேரும். நீ என்ன விஷயமா வந்த.?" எனக் கேட்க,
"உனக்கு ஒரு பாட்டி. எங்களுக்கு ஒரு தாத்தா."என்றான் லேசாகச் சிரித்துக் கொண்டு.
"உனக்கு ஒரு பையன் இருக்குல்ல..?" என்று கேள்வியாக கேட்ட சக்தியிடம். "ஆமா டா, அம்மாகிட்ட விட்டுட்டு வந்து இருக்கோம்.." என்றவன்,
"என் மனைவியோட தம்பிக்கு இன்னும் கல்யாணம் ஆகல. வர்ற ஜாதகம் எல்லாம் தட்டிக்கிட்டே போகுது. அதான் இந்தக் கோயில்ல வந்து கயிறு கட்டினால் சீக்கிரமா நல்ல ஜாதகம் அமையும்ன்னு சொன்னாங்க. அவனால வர முடியல. ஒர்க் பிரஷர். நாம போகலாம்னு எங்க வீட்டம்மா ஒரே நச்சரிப்பு. தம்பிக்குச் சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்னு ஒரே ஆசை அவங்களுக்கு.அதான் நாங்க வந்தோம்." என மனைவியைப் பார்த்துக்கொண்டே கூற.
"சரிதான் என்ன பண்றாங்க உங்க தம்பி.?" என வைஷ்ணவி லட்சுமியை பார்த்துக் கேட்க.
"ஐடியில் வேலை பார்க்கிறான். சென்னையில."
"ஓ.! சென்னையா.?"
"ஆமா."
"உங்க வீடு.?"
"எங்க வீடு விழுப்புரம் தான்."
"ஆமா அவங்களும் விழுப்புரத்தில் தான் இருக்காங்க." என்று சக்தி கூற,
"ஓ.! சரி, சரி. எங்க அத்தையும் இவரோட தங்கச்சி ஜாதகத்தை எடுக்கணும்னு சொல்லிட்டு இருந்தாங்க. வேணும்னா அவங்க ரெண்டு பேருக்கும் ஜாதகம் பொருந்துதானு பாக்கலாமா.?" எனச் சக்தியைத் திரும்பிப் பார்த்துக் கேட்க.
"அவளுக்கா.?அவ இப்பதானே வேலைக்குப் போயிட்டு இருக்கா.?"
"ஆமா, ஆனா மூணு மாசத்துல அவளோட ஜாதகத்தை எடுக்கணும்னு அத்தை சொல்லிட்டு இருந்தாங்க…"என்று கணவனுக்கு பதில் கூற,
"ஓ! அப்படியா.! உங்களுக்கு நாத்தனார் இருக்கா. என்ன செய்றாங்க.?"என்று ஆர்வத்துடன் கேட்டாள் லட்சுமி.
"அவ படிச்சிட்டு ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்த்துட்டு இருக்கா."என்ற அவளின் பதிலில் முகம் மின்ன,
"இந்தாங்க இது என்னோட தம்பியோட ஜாதகம். உங்க நாத்தனார் ஜாதகத்தோட ஒத்து போனா உங்களுக்கும் விருப்பம் இருந்தா எங்களுக்குத் தகவல் சொல்லுங்க."
"ஓ.! கையிலேயே வச்சிட்டு இருக்கீங்களா.?"
"ஆமா எங்கயாவது நல்ல ஜாதகம் அமைந்த உடனே பார்த்துவிடலாம் பாருங்க. அதனாலதான்." என்று லேசான புன்னகைத்தபடி கூற.
"அதுவும் சரிதான். கொடுங்க. கோயில்ல வைத்துக் கொடுக்குறீங்க. எல்லாமே நல்லதா நடக்கும்." எனக் கூறியபடி வைஷ்ணவி வாங்கிக் கொண்டாள்.பின் பொபொதுவாகச் சிலவிஷயங்கள் பேசிக் கொண்டவர்கள் விடை பெற்று சென்றார்கள் தங்களின் இல்லம் நோக்கி. குழந்தை வரம் கேட்டு வந்தவர்களுக்குத் திருமண யோகத்திற்கான வரம் தான் கிடைத்தது போல..
காத்திருப்போம் நாமும்...
Latest Post: வனமாலி - Story Therad Our newest member: Arunasiva Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page