All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மயக்கம் 44

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 4 months ago
Posts: 132
Topic starter  

அத்தியாயம்: 44

 

நள்ளிரவு நேரம்...

 

"இத்தன வர்ஷமா எங்க இருக்காருன்னு தெரியாம இருந்த ரேவன் குடும்பத்து முடிசூடா இளவரன் சஜித்ரேவன், நேத்து தன்னோட சகோதரர் ப்ரஜித்ரேவன் ஷோ ரூம் திறப்பு விழாவுக்கு வந்து, நம்ம எல்லாருக்கும் சர்ப்ரைஸ் குடுத்திருக்காருன்னு தான் சொல்லனும்." என ஒரு பெண் மைக்கில் உணர்ச்சி பொங்க கத்திக் கொண்டிருந்த வீடியோவை விரல்களால் தட்டி விட்டவன், அடுத்த வீடியோவிற்குச் சென்றான்.

 

அதுவும் அந்த ரேவன் குடும்பத்து பெருமையைச் சொல்ல, எரிச்சலாக வந்தது இளவேந்தனுக்கு. 

 

எழுந்து தொலைக்காட்சிக்கு உயிர் கொடுக்க, அதில் ஸ்மித்தாவின் பேட்டி ஓடிக் கொண்டிருந்தது. 

 

"நாந்தா ஏற்கனவே சொன்னேனே, எங்க ரேவன்‌ க்ரூப்க்குள்ள எந்தப் பிரச்சனையும் இல்ல. ஆல் ஆர் குட். மூணு வாரிசுங்களுக்குள்ளவும் எந்தச் சண்டையும் இல்ல. நீங்க தா தேவையில்லாதத கற்பனை பண்ணி எழுதி வச்சிருக்கிங்க. பை த வே இன்னும் பத்து நாள்ல கல்யாணம் முடிவாகிருக்கு. சாட் டயம்ல நடக்குறதுனால நிறைய வொர்க் இருக்கு. சோ... ப்ளீஸ்." என்றபடி அவர் திரும்பிச் செல்ல, அப்போது ஒரு செய்தி சேகரிப்பாளர் சோரூமில் நடந்தோறியது குறித்து கேட்ட கேள்வி அவருக்கு எரிச்சலைத் தந்திருக்க வேண்டும். 

 

ஒரு நொடியில் வந்த கோபத்தை விரட்டியவர், "லவ் லைஃப்ல எத்தனையோ இருக்கலாம். பட் வைஃப் ஒன்னு தான். அது என்னோட பொண்ணு தான்." என ரைமிங்காகப் பேசிச் சிரித்து விட்டுச் செல்ல, அதைக் கண்ட இளவேந்தனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. 

 

அவர் கொடுத்த பேட்டியைவிட, பக்கத்தில் எதுவும் சொல்லாது அமைதியாக நின்றிருந்த துகிரா தான் அவனின் ஒட்டு மொத்த ஆத்திரத்திற்கும் சொந்தக்காரி. 

 

தன்னிடம் காதலிப்பதாகச் சொல்லி விட்டு, இப்பொழுது வேறு ஒருவனுடன் திருமணம் என்று அவளின் தாய் கூறியதைக் கேட்டு, எவ்வித சலனமும் காட்டாது நின்றவளின் மீது டீவி ரிமோட்டை தூக்கி எறிந்தான். 

 

வலி, அதீத கொடுமையாக இருந்தது. 

 

கண்ணில் நீர் வர, இதமான காற்றை வேண்டி ஜன்னலைத் திறந்தான். அப்போதும் ஒரு கார், இவர்கள் வீட்டைக் கடந்து கோகோவின் வீட்டில் வந்து நிற்க, கண்களைக் கூர்மைப்படுத்திப் பார்த்தான். 

 

காரிலிருந்து தரதரவென இழுத்து வரப்பட்டக் கோகோவைக் கண்டு அவனின் இதயத்துடிப்பு நின்று விட்டது. 

 

வேகமாக அறையை விட்டு வெளியேறும் முன் அவனின் ஃபோனில் ஓடிக் கொண்டிருந்த வீடியோ கவனத்தை ஈர்க்க, நடந்தது என்னவென்று ஓரளவிற்கு அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. 

 

சஜித்தும், கோகோவும் ஒட்டி நின்று ஸ்கேட்டிங்கில் நடனமாடியதும், இருவரின் முகத்தில் இருந்த புன்னகையும், சஜித் தந்த முத்தத்தில் மயங்கி நின்றவளின் பாவனையையும் அழகாய் அது பதிவு செய்திருந்தது. 

 

இறுதியாக அவன் திருமணம் செய்யக் கேட்டதும், அவள் பதில் கூறும் முன் துகிரா சந்தோஷமா வந்து சஜித்தை அணைப்பதும் வீடியோவாகப் பதிவாகியிருந்தது. ட்ரெண்ட்டிங் வீடியோவாகி வைரலான அது கோகோவின் அண்ணன் கண்களுக்குப் படாமல் இருக்குமா அல்லது ஸ்மித்தா படாமல் இருக்க விடுவாரா. 

 

செய்து விட்டார். அந்த வீடியோவைக் கண்ட ஆத்திரம் கூடப் பிரணவை மிருகமாக்கவில்லை. ஸ்மித்தாவின் பேச்சு மாற்றியது. 

 

"இத்தன நாளா எங்க மாப்ளைக்கு கம்பெனி குடுத்ததுக்காக ஒரு அமௌண்ட் அனுப்பி வச்சிருக்கோம். இனி உங்க பொண்ணோட சேவ தேவையில்ல." என்று கொத்தாகப் பணத்தை தாரைவார்க்க, எவ்வித விளக்கமும் கேட்காது ரயிலில் வந்திறங்கியவள் அடித்து இழுத்து வந்து விட்டான். 

 

கண்கள் சொருக, தன் அண்ணன் அடித்த அடியில், மயங்கிக் கிடந்தவளின் கன்னம் தட்டி,

 

"கோகிலா!... கோகிலா!... என்ன பாரும்மா... கோகிலா..." என்றவனுக்கு முணங்கல்கள் பதிலாய் கிடைக்க, வேகமாகச் சென்று தண்ணீரை ஊற்றித் தெளிய வைத்தான். 

 

"அத்தான்..." என்று அழுகையுடன் அணைக்க, இளவேந்தனுக்குள் அத்தனை கோவம். 

 

ஆவேசத்துடன் பிரணவை அடிக்கப் பாய்ந்தவனை பிடித்திழுத்து வைத்தனர் வீட்டார். 

 

"எங்க வீட்டு பொண்ண, உ முதலாளிக்கி சின்ன வீடா செட் பண்ணி குடுக்கத்தா கல்யாணம் பண்ணிக்கிறேன் பொய் சொல்லிக் கூட்டீட்டு போனியா! எவ்ளோ வாங்கிட்டு எங்க வீட்டு பொண்ண அவனுக்கு வித்த." என்றாள் கோகோவின் அண்ணி.

 

"வார்த்தைய அளந்து பேசுங்க. இல்லன்னா..." என மிரட்ட, 

 

"என்ன பண்ணுவ?. கல்யாண பண்ணிக்கிறேன்னு கூட்டீட்டு போய் விபசாரம் பண்ணிட்டு இருக்குற உங்கிட்ட எதுக்கு அளந்து பேசனும்." எனப் பிரணவும் பேச, அங்குக் கலவரமே மூண்டது. 

 

"இவள இப்படியே விட்டா சரிப்பட்டு வராது..." என்றவர்கள் அவசர அவசரமாகக் கோகோவிற்கு திருமணம் என்று பேச,

 

அப்பொழுது கணீரென்ற கோகோவின் குரல், "நா எவனையும் கல்யாணம் பண்ண மாட்டேன். எனக்குச் சத்யாவ பிடிச்சிருக்கு." என்றது. 

 

தன் மொத்த பலத்தையும் எடுத்துக் கத்தியவளின் மீது இளவேந்தனின் பார்வை பெருமிதத்துடன் விழுந்தது.

 

இதைத் தான்... இந்த உறுதியைத்தான் துகிராவிடம் எதிர்பார்த்தான். அவளிடம் அது இல்லை. கோகோவிடமும் இதற்கு முன் கிடையாது தான். 

 

வெளியில் பல சேட்டைகள் செய்யும் கோகோவை வீட்டில் பேசச் சொன்னால் மாட்டாள். 

 

'அத்தான்... எனக்கு இது வேணும்... அண்ணாட்ட சொல்லேன். அப்பாட்டா பேசேன்.' என இளவேந்தனிடம் தான் வந்து நிற்பாள்.

 

அவன் தான் அனைவரிடமும் பேசி அவளின் விருப்பத்தை நிறைவேற்றுவான். 

 

அவளுக்கு அப்பா அடிப்பார், அண்ணன் திட்டுவான் என்ற பயம் எப்பொழுதுமே உண்டு.

 

இன்று தன் பயத்தையும் தாண்டி, உதட்டில் இரத்தம் வடிய, கன்னத்தில் கோடுகள் விழ, செவிப்பறை கிழிய வாங்கிய அடியின் வலியையும் மீறி, "நா சத்யாவ லவ் பண்றேன். நீங்கக் காட்டுற எவனையும் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது." என்றாள்.

 

"தெனவெடுத்த நாயே, இத்தன அடி வாங்கினதுக்கு அப்றமும் தின்னக்கமா அவெ பேரச் சொல்லிக் காதலிக்கிறேங்கிற. உன்ன கொன்னாத்தான்டி அடங்குவ." என வெறியோடு பாய்ந்தவனை தடுத்து இடை நின்றான் இளா. 

 

விடியும் வரை சண்டையும் ஏச்சுப் பேச்சும் ஓயவே இல்லை. வீட்டிற்குள் சிறை வைக்கப்பட்டாள் கோகோ. 

 

முழங்கால்களை கட்டிக் கொண்டு ஜன்னலை வெறித்தபடி இருந்தவளின் முன் மருந்துடன் வந்தான் இளவேந்தன். 

 

"உங்களுக்குச் சத்யா தான் சஜித்ரேவன்னு தெரியும் தான. அதா அன்னைக்கி அவ்ளோ கோபப்பட்டிருக்கிங்களா. நாந்தா முட்டாள் மாறி இருந்திருக்கேன்."

என்று அழ, சற்று நேரம் அவளை அழவிட்டவன்,

 

"சஜித் உங்கிட்ட மேரேஜ் ப்ரப்போஸ் பண்ணானா?"

 

அவனால் நம்ப முடியவில்லை சஜித் உண்மையாகவே கோகோவை காதலித்திருக்கிறான் என்று. 

 

இத்தனை நாட்களாகத் தன்னை அடையாளப்படுத்தாதவன், பலர் மத்தியில் காதலை பகிராது திருமணத்திற்காகக் கேட்டிருக்கிறான் என்றதே, சஜித்தின் காதலை நினைத்து இளவேந்தனுக்கு சிலிர்ப்பைத் தந்தது.

 

"ஆமா..."

 

"ஏ அக்சப்ட் பண்ணல.?" என்றவனுக்கும் கோகோவின் மீது ஆத்திரம். 

 

ஏற்றுக் கொண்டிருந்தால் அவளின் மீது கை வைக்கச் சஜித் விட்டிருக்க மாட்டானே.

 

"எப்படி அத்தான் முடியும்?. சஜித் துகிராக்கு நிச்சயம் பண்ண பையன்." என்றபோது, சஜித்தைப் போல் இளவேந்தனும் உச்சுக் கொட்டி எழுந்து, 

 

“சஜித்த நிராகரிச்ச நீ ஒரு பெரிய முட்டாள் கோகிலா.” என்றுவிட்டுச் சென்றவனைப் பார்த்து உள்ளம் வாடியது.

 

கேள்வியாய் தன்னைத் திருமணம் செய்யக் கேட்டவனுக்கு பதில் கூறியிருக்கும் நொடிகளுக்கு முன் துகிரா சந்தோஷமாக, "சஜி..." என்று அணைத்ததும் கோகோ உறைந்து விட்டாள். 

 

சஜித்தை அடையாளம் கண்டு மெல்ல சேர்ந்த கூட்டத்தால் கோகோ ஓரமாக ஒதுக்கப்பட்டாள். 

 

கூட்டத்தில் நடுநாயனாக நின்றிருந்தவன் சஜித்ரேவன் என்றதில் தொண்டைக்குழி அடைக்க எப்படியோ வீடு வந்து சேர்ந்தாள். 

 

எந்த வீடு அவளுக்கும் சத்யாவிற்கும் எல்லாமுமாக இருந்ததோ அந்த வீடு அவளைப் பயங்கொள்ள வைத்தது.

 

பல நாட்களாகச் சஜித்தை துகிராவின் கணவனாக மனக்கண்ணில் உருவகப்படுத்தியவளாள், சத்யா தான் அந்தச் சஜித் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

 

அதே நேரம் தன் தோழிக்கு நிச்சயிக்கப்பட்டவனுடன் கூடிக் கழித்ததை எண்ணி மனமும் உடலும் ஒருசேர அவமானத்தில் கூனிக் குறுகியது. 

 

இருவரின் சந்தோஷமான நினைவுகளை தாங்கி நின்றிருந்த வீடு, திடீரென எரிகலனாக பட்டது. 

 

கண்களை மூடும் ஒவ்வொரு நொடியும், சத்யாவுடனிருந்த காட்சிகள் விரிய, இமை மூடப் பயமாக இருந்தது.  

 

அவளின் வீட்டு அழைப்புமணி இசைக்க, பெட்டியுடன் ரயில் நிலையத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தவள் கதவுகளுக்குப் பின்னால் நின்றிருந்த சஜித்தைக் எதிர்பார்க்கவில்லை.

 

விலையுயர்ந்தாக இருந்தாலும் அவன் அணிவது எளிமையான டீசர்ட், ஜீன், ஷாட்ஸ். இப்படியே அவனைப் பார்த்துப் பழகியவளுக்கு, கோர்ட் சூட் சகிதமாகக் கூலருடன் கம்பீரமாக வந்து நின்ற சஜித்ரேவனை பார்த்து சற்று மிரண்டு தான் போனாள். ஏனோ வரவேற்க மனம் வரவில்லை. 

 

"நீங்கத் தா சஜித்ரேவனா.?" என்றவளின் அன்னியத்தன்மை புரியாது,

 

"எஸ்..." என்றான் சந்தோஷமாகவே.

 

"நீ என் சத்யா இல்ல. சஜித்ரேவன்." 

 

"அது மத்தவங்களுக்கு. உனக்கு நா எப்பவும் சத்யா தா." என்றபடி அவளின் கன்னம் பற்ற, தட்டி விட்டவள், 

 

"ஆனா சத்யா சஜித் ரெண்டு பேருமே ஒன்னு தான்." என்க, அவளின் அந்த நிராகரிப்பு அவனுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. 

 

நிராகரிப்பு அவனுக்கு புதிது. அதிலும் தன் மனம் விரும்பியவளின் நிராகரிப்பு தந்த எரிச்சலை மறைத்தவன்,

 

"சோ வாட்... சஜித் சத்யா அதுல உனக்கு என்ன பிரச்சினை?." என்ற போது சஜித்ரேவனாகவே மாறியிருந்தான். கோகோவின் சத்யா அங்கு இல்லை.

 

"துகிக்கு நா நல்ல ஃப்ரெண்ட். அவளுக்கும் உங்களுக்கும் நடக்கப்‌போற மேரேஜ் நடக்கப்போது. அட்லீஸ்ட் நமக்குள்ள அது நடக்குறதுக்கு முன்னாடியாது நீங்க கமிட்டர்டுன்னு சொல்லிருக்கனும்." 

 

சத்யா, சஜித்ரேவனாக மாறியதில் அவளுக்குக் கவலை இல்லை. அந்தச் சஜித் துகிராவிற்கு நிச்சயிக்கப்பட்டதும், துகிரா மனதில் சஜித்திற்கான காதல் இருப்பதாக உண்டான எண்ணமும் தான் அவளுக்குப் பிரச்சினை. 

 

கண்டபடி உளறியவாறு இருந்தவளை நெருங்கியவன், "எனக்கு அன்சர் வேணும், நேத்து நா உங்கிட்ட கேட்டத்துக்கு..."

 

"நோ... முடியாது. என்னால என்னோட ஃப்ரெண்டோட ஹஸ்பெண்ட்ட..." 

 

"மேரேஜ் எதுவும் நடக்கல." 

 

"ஆனா ஊருக்கே தெரியும் சஜித் துகிரா மேரேஜ் பண்ணிக்க..." என்றபோது கரம் உயர்த்தியவன், 

 

"பைனலா... என்ன சொல்ற.?" என்றான் அழுத்தமாக.

 

"எனக்கு என்னோட சத்யா வேணும். நா அவன தா லவ் பண்றேன். சஜித் துகிராவுக்கு சொந்தமானவன். சத்யாவும் சஜித்துன் ஒன்னுன்னா. எனக்குச் சத்யாவும் வேண்டாம்." என்றாள் எங்கோ பார்த்தபடி,

 

இமை மூடித் திறந்தவன், திரும்பி நடக்கத் தொடங்கினான். 

 

அவன் தூரம் செல்லச் செல்ல, அவளுள் உண்டான வலியில்,

 

"ச…த்யா..." என்றழைக்க, வேகமாகத் திரும்பியவன். 

 

"சத்யான்னு கூப்பிடாத. நா சஜித்.” என உறுமியவன்,  

 

“சஜித்ரேவன். என்னோட அடையாளம் இது தா." என்ற போது அதில் கர்வம் குடியிருந்தது.

 

"ஆனா சத்யா..." 

 

"தட்ஸ்... இட்..." எனக் கத்தி கோகோவை பேசவிடாது செய்தவன், "போதும். எல்லா உறவுக்கும் முடிவு உண்டு கோகிலா. நமக்கும்." 'இது தான் முடிவு.' என்பது போல் சென்றான். 

 

இதயத்தை யாரோ அறுத்துக் கொண்டு சென்ற உணர்வு. வேகமாக பால்கனிக்கு ஓடிச் சென்று, அவன் காரில் ஏறி கண்ணை விட்டு மறையும் வரை கண்ணீருடன் பார்த்தபடி நின்றாள்.

 

அப்பொழுதும் மனம் துகிராவின் கணவன் என்று நினைத்ததே தவிர, அவனின் ஸ்டேடஸ் தாண்டி, ஈகோவையும் மீறித் தனக்காக வந்திருக்கிறான் என்ற எண்ணம் வரவில்லை அவளுக்கு. 

 

ரயிலில் ஏறி அமரும் முன் அவனைக் காணச் சென்றாள். ஆனால் ஸ்மித்தா சஜித்தின் ஸ்டேட்ஸ் என்னவென்று கோகோவிற்கு பாடம் நடத்தி துரத்தி விட்டார். 

 

ஸ்மித்தாவை தாண்டி அவளின் சத்யாவை பார்க்க வேண்டும். அதற்கு அவளின் அத்தானின் வழிகாட்டல் வேண்டும். இளவேந்தனெனும் சைன் ஃபோர்ட் வேண்டும். அவனை முதலில் சமாதானம் செய்து, பின் சஜித்தை காணலாம் என்றெண்ணி ஊர் திரும்பியவள் வீட்டுச் சிறையில் இருக்கிறாள்.

 

இன்றோடு ஒரு வாரம் முடிந்துவிட்டது. 

 

அவனின் நினைவுகளில் உடல் பசலை நோய் கண்டது. சத்யாவுடன் கழித்த ஒவ்வொரு நிமிடங்களையும் யோசித்து யோசித்து பார்த்தவளுக்கு அவன் இல்லாது, அவனின் முகம் பார்த்து, குரல் கேட்காது மூச்சு முட்டியது.

 

அவனால் பித்து பிடித்த நிலையில் இருந்தவளுக்கு, வீட்டாரின் தீவிர திருமண ஏற்பாடு தெரியவர வழக்கம் போல் இளவேந்தனிடம் தஞ்சமைடைந்தாள், "நாம் ஓடிப் போய்டலாமா?" என்ற கேள்வியுடன். 

 

“என்ன?”

 

“எனக்குச் சத்யா வேணும். நா யாருக்காகவும் அவன தியாகம் பண்ண விரும்பல. ஏற்கனவே நா பண்ண முட்டாள் தனத்தால அவன காயப்படுத்திட்டேன். அத சரி பண்ணனும். என்ன அவெங்கிட்ட கூட்டீட்டு போங்கத்தான்.” 

 

"முட்டாளா நீ?. சஜித்த பத்தி என்ன தெரியும் உனக்கு?. இதுவர அவனோட முடிவுல இருந்து அவன்பின் வாங்கினதே இல்ல. பேக்டரில எத்தனயோ கஷ்டமான சூழ்நிலை வந்திருக்கு, ஏன் அவனோட முடிவால இழுத்து மூடுற நிலம கூட வந்திருக்கு. ஆனா தன்னோட முடிவ மாத்திக்கிட்டதே இல்ல. அவங்க எல்லாருக்கும் அந்த JET குழுமம் தான் முக்கியம். மத்தெல்லாம் ஒன்னுமே கிடையாது. இந்தக் கல்யாணமும் அதுக்காகத் தான் நடக்கப் போது." என்றவன் கூறிய எதையும் அவள் ஏற்கவில்லை.

 

‘எனக்கு சத்யாவைப் பற்றி நன்றாகத் தெரியும். நான் என் சத்யாவே பார்த்துப் பேசினால் அனைத்தும் சரியாகிவிடும். இந்த திருமணம் நடக்காது.’ என்று திரும்பத் திரும்பச் சொல்ல, அழைத்து வந்துவிட்டான். 

 

சொல்லப்போனால் ஓடி வந்துவிட்டனர்.

 

இதன் பின் நடந்ததைத்தான் முதல் அத்தியாயத்தில் கண்டோமே. 

 

மயக்கம் தொடரும்...

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments

 

மயக்கம் 45

https://kavichandranovels.com/community/postid/1387/


   
ReplyQuote

You cannot copy content of this page