About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம்-9
அதற்கிடையில் இங்கே ரணவேந்தனின் வீட்டிலோ காலையில் அனைவருக்கும் டிபனை வைத்துக் கொண்டு இருந்த ரணவேந்தனின் அன்னையோ
"நடுவலவனே எப்பதாண்டா கல்யாணம் பண்ணிக்க போற...” என்று பொய்யாக அலுத்தவாறே ரணவேந்தனிடம் கேட்க..
அவனோ தன் அன்னையை நிமிர்ந்து பார்த்து அழகான சிரிப்பை ஒன்று கொடுத்தவன். "நீ என்னிக்கு உன்னை மாதிரி ஒரு அழகான அன்பான பொண்ணா பாக்குறியோ அன்னைக்கு ம்மா...”என்றான் சாப்பிட்டவாறே
“அப்போ உனக்கு கல்யாணத்துக்கு சம்மதம் அப்டிதானே...”என்றான் ஈஸ்வரன் உண்டவாறே
"எஸ் எஸ்.. மாமா" என்றான் ரணவேந்தன்.
"அப்போ உனக்கு கல்யாணத்துக்கு சம்மதம் அப்படித்தானே...” என்றார் அவன் அன்னை ஈஸ்வரனின் அதே மாடுலேசனில்
அதில் அவரை நிமிர்ந்து பொய்யாக முறைத்தவனோ "என்னம்மா இப்படி கேக்குற. எனக்கு 29 வயசு ஆகுது.. இப்ப கல்யாண பண்ணாம எப்பமா கல்யாணம் பண்ணுவ...” என்றான் வேண்டுமென்றே பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு… நாக்கை சுழட்டியவாறே
அதில் அவன் தோளில் செல்லமாக அடித்த அவன் அன்னை தாமரையோ.. “ நீ விளையாட்டுக்கு சொல்லல நடுவலவனே.. அம்மா பொண்ணு பாத்துடவா...” என்றார்.
"ம்ச் ம்மா இதுல விளையாட்டுக்கு என்னமா இருக்கு.. என் செல்ல அம்மா ஆசைப்படுறீங்க.. என் குடும்பமே என் கல்யாணத்துக்காக காத்துட்டு இருக்கு அப்ப கண்டிப்பா நான் கல்யாணம் பண்ணிக்க தானே வேணும்.. இப்ப இல்லைன்னாலும் இன்னும் அஞ்சி மாசம் இல்லனா ஆறு மாசத்துல திரும்ப கல்யாணமும்னு ஆரம்பிப்பீங்க... அதுக்கு இப்பவே பார்க்க ஆரம்பிச்சிடுங்களேன்..." என்றான்.
அதில் அவன் அன்னையின் முகம் போல் பொலிவாக ரணவேந்தனின் தந்தை தவசியை பார்த்தவர்.. “பாத்தீங்களா நான் தான் அப்பவே சொன்னேன் இல்ல என் மகன் நான் சொல்றதை கேட்பானு.. நீங்க தான் என்னவோ சொன்னிங்க.. அவங்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுடு.. அவனுக்கு வேற எதும் ஆச இருக்க போகுதுனு..” என்று அவன் கண்ணத்தை வருடி முத்தம் கொடுத்தவாறே கூற
தவசியோ தாமரையை முறைத்தவாறே இப்டி மாட்டிவிட்டுட்டாளே… என்று நினைத்துக்கொண்டார்.
அவர் நினைப்பது சரி என்பது போல ரணவேந்தன் தன் தந்தையை முறைத்தவன்.. “என்னப்பா லவ்வு கிவ்வு பண்ணிட்டு வருவான் நம்ம புள்ள.. நமக்கு பொண்ணு பாக்குற வேலை எல்லாம் மிச்சம்னு நினைச்சீங்களோ...”என்றான் பொய்யான கோவத்தில்
அதில் தவசி புன்னகைத்தவர்.. “அது இல்ல வேந்தா.. இந்த காலத்து பசங்க லவ்வு மேரேஜ்னு ஓடுதுங்க.. அது மாதிரி என் பிள்ளைங்களும் ஆசப்படுமோனு தான் யோசிச்சேன்..”என்றார் அவர்
“மத்தவங்க பத்தி எனக்கு தெரில.. ஆனா நானு என் அம்மா பாக்குற பொண்ண தான் மேரேஜ் பண்ணுவேன்… ஏனா அவங்களுக்கு தான் எனக்கு எப்டிப்பட்ட பொண்ணு பாக்கனும்னு தெரியும்...”என்று தன் அன்னையை பார்த்தவாறே கூற.. அதனை கேட்டவாறே உட்கார்ந்திருந்தனர் அனைவரும்..
“அய்ய் அப்போ கூடிய சீக்கரம் எனக்கு இன்னொரு அண்ணி வரபோறாங்களா...”என்றான் யுகதேவ்…
“ஆமாண்ணா.. அப்போ அவங்க கூட ஜாலியா நாம டைம் ஸ்பென்ட் பண்லாம்… அம்மா நம்ம ஷாலினி அண்ணி மாதிரி பொண்ணு பாருங்கம்மா… அப்போ தான் அவங்கள மாதிரி ஜாலியா வர அண்ணி கூடவும் சுத்த முடியும்.. அப்புறம் நல்ல ஷாலு அண்ணி மாதிரி சமைக்கனும்.. நானு நல்லா அத காலி பண்ணனும்..”என்றாள் அழகான குறும்பு புன்னகையுடன் சுடர்விழி
“எப்டி இப்போ காலி பண்றியே அப்டியா...”என்றான் யுகவேஷ் கிண்டலாக
அதில் மூக்கை சுருக்கி முறைத்தவள்.. “அண்ணாங்களா பாருங்க அண்ணாங்களா இந்த யுகா அண்ணாவ...”என்று ரணவேந்தனிடமும், ஆதித்தனிடமும் வத்தி வைக்க.. அவர்கள் இருவரும் ஸ்லோ மோஷனில் அவனை முறைக்க.. யுகாவோ திருத்துருவென பார்த்தவாறே சாப்பிட்டான்..
தாமரையோ தன் மகன் திருமணத்திற்கு பெண் பார்க்க சொன்னதிலையே சந்தோஷமாகிவிட அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தார். அதில் ரணவேந்தனோ தன் அன்னையை கேலியாக பார்த்தவாறே... "இப்படி இன்னிக்கி முத்தம் கொடுத்து கரெக்ட் பண்றம்மா.. நாளைக்கி என் பொண்டாட்டி வந்தா அவ முன்னாடி எனக்கு முத்தம் கொடுப்பியா.. இல்ல அவ தான் விட்டுடுவாளா..” என்று கூறியவாறே தன் கன்னத்தை திரும்ப முத்தம் கேட்டு ஏதுவாக காட்ட.
அதில் தாமரையோ செல்லமாக முறைத்தவர்.. "லொள்ளுடா நீ.. கல்யாணத்துக்கு முன்னாடியே என்னையும் என் மருமகளையும் பிரிக்க பாக்குறியா.. அது உன்னால முடியாது.. அவ வந்ததும் நான் ஏன்டா உனக்கு முத்தம் கொடுக்கறேன்.. அவளுக்கு கொடுத்துட்டா போகுது..” என்று அவன் கன்னத்தை பிடித்துக் கிள்ளியவாறே அவர் ஆசையாக கூற.
அவர் கூறியதை கேட்டு உடல் சிலிர்க்க உட்கார்ந்து இருந்தவனோ தன் அன்னையை பார்த்து கம்பீரமாக புன்னகைத்தான். ரணவேந்தனை பொறுத்தவரை வெளியிலோ இல்லை அவன் அலுவலகத்திலோ அல்லது அவனை பற்றி நன்கு அறிந்தவர்கள் யாரும் ஒருத்தர் இப்போது அவனைப் பார்த்தால் கூட கண்டிப்பாக மாரடைப்பு தான் வரும்.
"ஓகே.. இன்னிக்கி முக்கியமான வேட்டை இருக்கு.. வசூல் வேட்டை நான் போய்ட்டு வரேன்.."என்றவனோ அனைவருக்கும் பாய் சொல்லிவிட்டு கம்பீரமாக எழுந்து சென்றான்.. மகனின் கம்பீரத்தையே தவசி பெருமை பொங்க பார்க்க அதே போல அனைவரும் அங்கிருந்து தங்கள் வேலையை பார்க்க சென்றுவிட்டனர்.
ரணவேந்தனின் அன்னையோ தன் மகன் கொடுத்த அனுமதியிலேயே அவனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்.
ரணவேந்தனோ தன் பிசினஸை எப்போதும் போல அடிதடியுடன் சிறப்பாக நடத்திக் கொண்டுதான் இருந்தான். அடிதடி என்றால் கை காலை உடைப்பது அப்படி அல்ல. பொருட்களை சேதமடைய செய்து தன் வழிக்கு கொண்டு வருவது தான் அவனின் ஸ்டைல். சில நேரம் அது ஆளை அடிப்பதிலும் சென்று முடியும்.
சில நேரம் தன் தந்தையின் ஃபினான்ஸ் கட்டப்பஞ்சாயத்துக்கு கூட ரணவேந்தன் தான் அடிக்கடி முடிவுக்கு கொண்டு வருவான்.
வசிகா கோபத்துடன் பெங்களூர் டு சென்னை பஸ்ஸில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவள் முகம் அப்படி ஒரு கோபத்தை அடக்கி கொண்டிருந்தது. "யாரைக் கேட்டு சித்தப்பா நீங்க பரசு அண்ணா கிட்ட இப்படி ஒரு முடிவ எடுக்க மாதிரி ரிக்வொஸ்ட் வச்சிங்க...” என்றாள் வசீக கோவத்துடன் தன் சித்தப்பா முரளிதரனிடம்.
"ம்ச் நானும் என்னதான் செய்யறது வசி உன்னை... இந்த வீட்டுக்கு வர வைக்கிறதுக்கு எனக்கு இதை தவிர வேற வழி தெரியல..” என்றார் பாவமாக முரளி
"இப்ப நான் அங்க வந்து என்ன சித்தப்பா செய்ய போறேன்… வழக்கம் போல உங்க பொண்ணு என்னை ரூம்லையே அடைக்க போறா...”என்று கடைசி வரியை மட்டும் முணுமுணுப்பாக அதே கோபத்துடன் கேட்க
பட்டென்று அவர் சித்தப்பா முரளியின் கையில் இருந்து போனை பறித்து அவளின் சித்தி வைஷ்ணவி பேசினார்.. "அதே தாண்டி நானும் கேக்குறேன் இங்க வர்றது அப்டி உனக்கு என்ன தாண்டி பிரச்சனை...” என்றாள் வருத்தமாகவும் அதே நேரத்தில் கோபமாகவும்.
அதுவரை கோவமாக பேசிக்கொண்டிருந்தவளுக்கு தன் சித்தியின் குரல் கேட்டதும் அப்படியே சிலை போல நின்றுவிட்டாள். வைஷ்ணவியின் குரலில் தெரிந்த வருத்தம் வசிகாவை வதைத்தது. ஆனால் அவளால் சித்தியின் வீட்டிற்குள் மட்டும் இல்லை வாழ்க்கைக்குள் வருவது கூட அவளுக்கும் சரி அவர்களுக்கும் சரி கொஞ்சமும் நிம்மதி இல்லாமல் தான் போகும். ரகசியா போக வைப்பாள்.
"உன்னதான்டி கேட்குறேன்.. சொல்லு.. இவ்ளோ நேரம் உன் சித்தப்பாகிட்ட எதிர்த்து பேசிட்டு இருந்தியே இப்போ எங்கிட்ட பேசு..."என்றார் வைஷ்ணவி
"வைஷூ கத்தாத அவ பாவம்.. ஏற்கனவே அவ தனியா இருக்கா. இப்போ நீ வேற கத்துனா அவ இன்னும் கஷ்டப்படுவா… ப்ளீஸ் காம் டவுன்.."என்றார் முரளி.
முரளி கூறுவதில் என்னதான் நியாயம் இருந்தாலும் தன்னுடைய அக்கா மகளின் நிலைமை இப்படி யாரும் அற்ற அநாதையானதே என்று நினைத்து இன்னும் வைஷூவிற்கு ஆற்றாமை தான் அதிகமானது.
அதனால் முரளியை பார்த்து முறைத்த வைஷூவோ.. "நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க.. ஏற்கனவே நாம அவ முடிவுக்கு ஒத்து போய் ஒத்து போய் தான் இன்னிக்கு யாரும் இல்லாம தனிமையில போய் நிக்கிறா… இனியும் அவள இப்டி தனியா விட நான் தயாரா இல்லை…"என்று கத்தியவர்.. "சொல்லு வசி.. உன்னதான் கேட்குறேன்… இங்க வரதுல அப்டி என்னதான் உனக்கு பிரச்சனை.."என்றார்
ஆனால் அப்போதும் வசி வாயை இறுக்க மூடிக்கொண்டு இருக்க.. அவள் முகமோ அழுகையையும், கோவத்தையும் அடக்கிக்கொண்டு இருப்பதற்கு சான்றாக முகம் சிவக்க உட்கார்ந்திருந்தாள். அவர்களிடம் என்னதான் அவளிடம் கூற முடியும். சொன்னால் தான் தம்புவார்களா.. அப்படி நம்ப வேண்டும் என்றால் அன்றே தான் கூறியதை நம்பி இருப்பார்கள். அன்று நம்பாதவர்கள் இன்று மட்டும் எப்படி தன்னை நம்புவார்கள் என்ற எண்ணமே அவள் மனதில் விரூட்ஷமாக வளர்ந்து நிற்கின்றதே.
"நீ பதில் சொல்லமாட்ட இல்ல.. சொல்லாத வசி சொல்லாத..."என்று கத்திய வைஷுவோ.. "நான் செத்தாதான் இங்க வருவனா அப்போ வா..."என்றார் கடைசியாக
அதில் அதிர்ந்தவள்… "சித்தி...” என்று கத்த.. "வைஷூ..."என்று கத்தினார் முரளி..
"என்ன வைஷூ இது அவதான் சின்ன பொண்ணுனா நீ இப்டி பேசுற..."என்றார் முரளி வருத்தத்துடன்
ஆனால் வைஷூவோ அவரை கண்டுக்கொள்ளாமல் "சித்தி இல்லை அம்மா...” என்றார் அவர் மாற்றலாக.
அதனை கேட்ட வசிகாவின் முகம் கோவத்தில் சிவக்க…."நோ..."என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டவளின் பேச்சை கேட்டவருக்கு முகம் வேதனையில் கசங்கியது.
"என்னைக்கோ நடந்தத.. இப்போ வரைக்கும் நினைச்சிக்கிட்டே வாழ்ந்துட்டு இருக்கியாடி நீ வசி..."என்றார் வைஷூ அழுகையுடன்
இந்த பக்கம் அவளிடம் எந்த பேச்சும் இல்லை. இனி அவள் பேசவும் மாட்டாள் என்பதை உணர்ந்து கொண்டவரோ. “சரி நீ எப்டி கூப்டாலும் சரி ஆனா நீ இங்க வந்தாகணும் ஒரு மாசம் இங்கதான் இருக்கணும். எனக்கு உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும் வசி.. கூடிய சீக்கிரம் உனக்கு கல்யாணம் பண்ற ஐடியாவுல தான் நாங்க இருக்கோம்..."என்றவரை ஏதோ தடுக்க நினைத்து வசிகா வாயை திறப்பதற்குள்…
"ஒன்னும் பேசகூடாது.. உன்ன வளத்தது நாங்க அப்போ கண்டிப்பா உன்னோட லைப்ல நடக்குற ஒரு சில விசியத்துக்கு நாங்க தலையிடலாம் இல்லையா… அந்த உரிமை கூட எங்களுக்கு இல்லையா..."என்று குரலில் அவ்வளவு வேதனையை தேக்கி வைத்து அவர் கேட்க..
அவரின் வேதனை குரல் அவளை வருந்ததான் செய்தது. என்ன இருந்தாலும் அவளின் சித்தி, சித்தப்பா தன்னை வளர்த்தவர்கள் ஆயிற்றே.. அவள் அமைதியை கையில் எடுத்துக்கொண்டவர்.. "அதனால தான் சொல்றேன்.. கொஞ்ச காலம் உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ணி ஆகனும்.. கல்யாணம் ஆகிட்டா உன் கூட ஸ்பென்ட் பண்ற டைம் எங்களுக்கு கிடைக்காது புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறேன்…. நேரா வீட்டுக்கு வந்து சேரு..”என்றார் அவர்
அவர் பாட்டிற்கு வெடித்துவிட்டு போனை வைத்து விட்டார். அதில் வசிகா தன் தலையிலேயே போனால் நான்கு அடி கொடுத்துக் கொண்டவள். தன்னையே நினைத்து நொந்து கொண்டாள்.
"என்னம்மா வைஷூ அவகிட்ட போய் இப்டி பேசிட்டியே.. கொஞ்சம் அன்பா, பாசமா பேசி இருக்கக் கூடாதா..” என்றார் முரளி வருத்தத்துடன்
“ஆமாங்க இவ்ளோ நாள் அவகிட்ட பாசமாதானே பேசுனோம்.. ஏதாவது காரியம் ஆனிச்சா.. இல்லைல.. இப்போ திட்டிருக்கேன் ஏதாவது நல்லது நடக்குதானு பாப்போம்..”என்றார் வைஷூ
“ஆனாலும்..”என்று முரளி மனம் கேட்காமல் இழுக்க
“அட நீங்க சும்மா இருங்க சும்மா அவ கூட சேர்ந்துட்டு அவளுக்கு சப்போர்ட் பண்ணியே பேசாதீங்க.. எனக்கும் அவ கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு ஆசையா இருக்காதா.. அவ நம்மள விட்டு போனது எப்போனு நினைச்சி பாருங்க.. அவளோட எட்டு வயசுல நம்மள விட்டுட்டு ஹாஸ்டல் போனா.. நானும் இப்போ வருவா அப்போ வருவானு ஏமாந்து ஏமாந்து தான் போறேன்.. அப்டி என்னங்க நாம தப்பு பண்ணுனோம் இப்டி வெறுக்கற அளவுக்கு...” என்று அவர் எகிற அவரின் மன காயத்தை கொட்டட்டும் என்று முரளியும் அடங்கி விட்டார்.
"சரி கோபப்படாத... அமைதியா இரு.. எல்லாம் நல்லதுக்கே நடக்கும்.. ஏன் இப்போ வர வசி நம்மள விட்டு போகாம இங்கையே கூட தங்கிடலாம் இல்லையா...”என்றார்
“அதெல்லாம் இப்போ வரவள கண்டிப்பா நான் தனியா விட போறது இல்ல.. அவளுக்கு எப்படியாச்சும் கல்யாணத்தை பண்ணி அனுப்ப போறேன்.. என்னங்க நீங்க சீக்கிரம் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிங்க...” என்றார் வைஷூ
"சரி சரிம்மா அத நான் பாத்துக்குறேன்.. நீ கொஞ்சம் ரிலாக்ஸ்டா இரு..”. என்றவர் "இன்னும் இருபது நாள்ல ரிஷிக்கும், ரகசியாவுக்கும் நிச்சயதார்த்தம் இருக்கு அது உனக்கு ஞாபகம் இருக்கு இல்ல..” என்றார் வைஷூவை பார்த்து.. அவர் கூறியதில் வைஷூவின் முகம் கருமை பூசிக்கொள்ள… "ம்ம்ம் அதெல்லாம் இருக்கு...” என்று வெடுக்கென்று கூறியவர் தன் அறைக்குள் நுழைந்து கொண்டார்.
முரளியோ போகும் வைஷூவை நினைத்து இரு பக்கமும் மறுப்பாக தலையை அசைத்தவர். தன் வேலையை பார்க்க சென்று விட்டார்.
(வசியக்காரி)
Latest Post: காற்றின் நிறம் கருப்பு - (Comment Thread) Our newest member: Ghanaselvi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page