All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மனதில் நின்றவள் 25

 

VSV 31 – மனதில் நின்றவள்
(@vsv31)
Trusted Member Author
Joined: 8 months ago
Posts: 29
Topic starter  
மனம் -25
ஒரு மணி நேரம் சென்றிருக்கும் ரிஷிக்கு  அழைப்பெடுத்தாள், சகஸ்தா,ரிஷியும் அழைப்பை ஏற்றவன் தாயை வீட்டில் கொண்டு விட்டு மீண்டும் விபுலானந்த மண்டபத்திற்கு வந்தான்.இதோ வாரன் என்றவன் சிறிது நேரத்தில் கண்காட்சி நடக்கும் இடம் பிரகாஷை அழைத்துக் கொண்டு வர, பிரகாஷ் மற்றும் வேணியின் ஓவியம் ஜோடியாக வரையப்பட்டிருந்தது.

பிரகாஷோ, ஆச்சரியமாக அதைப் பார்த்தவர் "பெஸ்ட் ஃபியூசர் இருக்குமா,ஆல் த பெஸ்ட்", என்றார்.அவளும் புன்னகையுடன் "தாங்ஸ் மாமா" என புன்னகைத்துக் கொண்டாள்.

"அப்பா ரைவர் கார் கொண்டு வந்திருக்கார், நீங்க கிளம்புங்க, நேரமாகுது நாங்க முடிய வாரோம்" என்றான் ரிஷி,ஓகேபா "சீலா நீங்க என்ன செய்ய போறீங்க","நாங்களும் வாரோம் "என்றனர் சீலனும் சாருவும்.

சீலனுக்கும் சாருவுக்கும் தங்கள் பெண்னை நினைத்து பெறுமையே,அவர்களும் மகளுக்கு வாழ்த்தைத் தெரிவித்து விடை பெற்றனர்.

எஞ்சியது சுபியும்,ரிஷியும் சகஸ்தாவும் தான் .சகஸ்தாவின் ஓவியங்கள் சில அங்கேயே விற்கப்பட்டது.சிலர் தங்களை வரைந்து கேட்டனர். அதையும் அவள் வரைந்து கொடுத்தாள்.ரிஷியும், சுபியும் வெளியே சென்றவர்கள்,மில்க் பைக்கட் வாங்கி வந்து சகஸ்தாவிற்குக் கொடுத்தனர்.

நான்கு மணியளவில் தான் கண்காட்சி முடிவடைந்தது.இரு நாட்களாக இக் கண்காட்சி நடைபெறுகிறது.இறுதி நாளான அன்று தான் ரிஷி சகஸ்தாவை கௌரவிப்பு விழாவுக்கு அழைத்து வந்தான்.

அனைத்தையும் ரிஷி தனது உதவியாளர் மூலம் தான் அனைத்தது ஓவியங்களையும் ப்ரேம் போட்டு செய்தான்.சுபி அனைத்து ஓவியங்களையும் திரட்டி ரிஷி பொத்துவில் வரும் போது கொடுத்தான்.

விற்ற ஓவியங்கள் போக மிகுதி ஓவியங்களை வேணில் ஏற்றிக் கொண்டு மூவரும் வீட்டிற்குப் புறப்பட்டனர்.

போகும் வழியில் தங்களது ரிசாட்டில் சிறிதாக உணவையும் உண்டனர். சகஸ்தாவிற்கோ மகிழ்ச்சியின் உச்சம்.

வீட்டிற்கு வந்ததும்,சுபியும் ரிஷியும் ஓவியங்களை வேணில் இருந்து இறக்கினர்.பின் வீட்டினுள் நுழைய அனைவரும் ஹாலில் தான் இருந்தனர்.

ஓவியங்களை ஒரு புறம் வைத்து விட்டு அவர்களுடன் இணைந்து கொண்டனர். "சாப்பிட்டீங்களா என வேணி கேட்க" சகஸ்தாவோ "ஆமாத்த" என்றாள்.

" குட்டி எங்க என சகஸ்தா ஸ்ரீயிடம் கேட்க" "தூங்குறான் என்றாள் புன்னகையுடன். "ம்மா இருங்க குளிச்சிட்டு வாரன்" என்றபடி மாடியேறினாள் சகஸ்தா,அடுத்த படியில் கால் வைக்க,புடவை தடக்க,தட்டுத் தடுமாறி ஒருபக்கமாக சரிந்தவளை அவள் பின்னால் வந்த ரிஷி சரியாக நிற்க வைத்தவன்,அவளை முறைக்க ,இதான் நான் சேலை கட்டுறல என்றாள்,

இருவரும் படியில் நின்று தான் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது படியேறி வந்த ஸ்ரீ"ஆமா சகஸ்தா சேலை அழகாக கட்டிருக்க,என்றவள்,ரிஷியை அசட்டுச் சிரிப்புடன் பார்க்க ,அவனோ எதுவும் பேசாது முன்னே படியேறிச் செல்ல,"தம்பி தான் கஷ்டப்பட்டிருப்பான் என்றாளே பார்க்கலாம்"சகஸ்தாவோ வெட்கம் ஒருபுறம் அனைவரும் கீழே இருக்க ,என்ன சொல்லி சமாளிப்பது , "யூடியூப் பார்த்து கத்துகிட்டன்கா" என்றாள் தனது வெட்கத்தை மறைத்து. "ஸ்ரீயும் நக்கலாக உண்மையாவா" என்றபடி அவளைப் பார்க்க, விட்டால் அழுதுவிடுபவள் போல் இருந்தாள் சகஸ்தா.படியேறிச் சென்ற ரிஷிக்கும் ஸ்ரீ பேசியது கேட்டது அவன் இதழிலும் வெட்கச் சிரிப்பு.

அங்கிருந்த வேணி, மற்றும் சாருக்கு தெரியும் அவளுக்கு சேலை கட்டத் தெரியாது என்பது. பிரகாஷ், சுபி, சீலன் வெளியே தோட்டத்தில் இருந்தனர் அந் நேரம்.

"சரி சரி இனி உன் புருஷன் கூப்பிடுவான் அப்புறம் எனக்கும் சேர்ந்து திட்டுவான் போ என்றாள் ஸ்ரீ நக்கலாக" விட்டால் போதும் என்று அறைக்குள் ஓடினாள் சகஸ்தா.

அறைக்குள் நுழைந்தவளை சுவரில் சாய்த்த ரிஷி," யூடியூப்ல பார்தா சேலைய கட்டின???" எனக் கேட்க,"அவளோ அக்காட்ட என்ன சொல்றது,என தவிக்க இந்த "பொய் சொன்ன வாய்க்கு என்ன செய்றது" என அவள் இரு விரல் கொண்டு இதழை இழுக்க, அதன் மென்மையை அறிய அவனிதழும் ஆசை கொண்டதோ என்னபவோ மறு நொடி நீண்ட முத்தம்,அவளும் அவனின் முத்தத்தில் கிறங்கித் தான் போனாள்.

தன் இதழை எடுத்தவன்,
"டால் உனக்கு தான் சேலை கட்டத் தெரியுமே அப்புறம் இது எதுக்கு என அவள் இடையில் தன் விரல் கொண்டு விளையாட,அவளோ அவன் தொடுகைக்கு சிலிர்த்தது அடங்கினாள்.

பின் அவளையும் தூக்கிக் கொண்டு குளியலறை நுழைந்தவன்.சிறிது நேரத்தில் தலையைத் துவட்டியபடி அவன் வெளியே வர, குளியலறைக் கதவை இலேசாக திறந்தபடி "பாஸ் டலவக் கொடுங்க,என்றாள். அவனோ "நான் கேட்டது ஓகே சொல்லு என்றான்" அவளும் சிணுங்கலுடன்,"ஓகே டவலக் கொடுங்க பாஸ் என்றாள். அவனும் மற்றோரு டவலை அவளிடம் கொடுத்தான்.

பின் இருவரும் உலர்ந்த ஆடையணிந்து வெளியே வந்தனர்.சகஸ்தாவின் கன்னச் சிவப்பும், அவர்களின் கோர்த்த விரல்களுமே இருவரின் அந்நியோன்னியத்தையும் ,சந்தோசத்தையும் கூறியது. பெற்றவர்களுக்கு வேறென்ன வேண்டும்,உள்ளம் மகிழ்ந்து போயினர்,சகஸ்தாவின் பெற்றோர்.

தரணி எனபவனால் ஏற்பட்ட வடு இருந்த அடையாளம் கூட அவளில் இல்லை.முன்பொருமுறை ரிஷியிடம் அவள் இதை சொல்ல,முற்பட அவனோ அவளை இதை நினைக்கக் கூட விடவில்லை.

அவளும் ரிஷி இதைப் பேச விரும்பவில்லை என புரிந்தவள்.அன்றுடன் மொத்தமாக மனதில் இருந்து அவற்றை அகற்றினாள்.இல்லை இல்லை தன் காதல் அவற்றை அவள் மனதில் இருந்து அகற்றினான்.

அன்று இரவே மட்டக்களப்ப்பிற்கு புறப்பட தயாராக சீலன் ,சாரு ,சுபியை "நின்று செல்லமே மாமா" என்றான் ரிஷி வேணியோ "நானும் அத தான் சொல்றன் ரிஷி சாரு போகனும்"என்றா என்றார்.

"ம்மா நின்று நாளைக்குப் போகலாமே என்றாள் சகஸ்தா" ,பின் அன்று இரவு அங்கு நின்று மறு நாள் காலை தான் மட்டக்களப்பிற்கு புறப்பட்டனர்.

நாட்களும் மாதங்களாக கடக்க சகஸ்தா, ரிஷி திருமணம் நடந்து எட்டு மாதங்கள் கடந்திருக்கும்,"சகா கேலரி எனும் பெயரில் சகஸ்தா ஓவியங்களை வரைந்து கொண்டு தான் இருந்தாள்.ரிஷியும் அவள் வரைவதற்கு ஏதுவாகவே தங்களது அறையோடு இணைந்த மற்றைய அறையை தயார் செய்து கொடுத்தான்.

ரஞ்சித்தும் கனடா இருந்து வந்துள்ளான்.ஸ்ரீயும் ரஞ்சித்தும் இந்த சிலமாதங்கள் தங்கி  கனடா கிளம்ப உள்ளனர்.

"ஹலோ ஆமாக்கா ம்ம்... இதோ வாரன் "என்றான் ரிஷி அழைப்பை துண்டித்து விட்டு அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு கிளம்பினான். சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்தவனை ஸ்ரீயும்,வேணியும் கவலையுடன் எதிர் கொண்டனர்.

"என்னாச்சு" என ரிஷி கேட்க, அப்பா டாக்டருக்கு ஹால் பண்ணிருக்கார் என்றார் வேணி.

ஸ்ரீயின் குழந்தையுடன் விளையாடிய சகஸ்தா, ஹாலிலேயே மயங்கி சரிந்தாள்.இதனை கண்ட குழந்தையும் வீரிட்டு அழ, குழந்தை அழும் சத்தத்தில் ஸ்ரீயும் வேணியும் முன்னறைக்கு வந்தவர்கள். பார்த்தது மயங்கிய சகஸ்தாவைத் தான் .ஸ்ரீ அழும் குழந்தையைத் தூக்கி சமாதனப்படுத்தத் தொடங்க,

வேணியும் அலுவலக அறையில் இருந்த கணவனுக்கு சொல்ல அவரும் டாக்டருக்கு அழைத்துக் கூறினார்.டாக்டரும் சிறிது நேரத்தில் வருவதாகக் கூறினார்.

டாக்டரும் வர ரிஷியும் சகஸ்தாவை இரு கைகளிலும் ஏந்தியவன் தங்களது படுக்கையறையில் மெதுவாக அவளை படுக்கையில் கிடத்தினான்.

வேணியும் குழந்தையுடன் நுழைந்தவர்,டாக்டரும் சகஸ்தாவை பரிசோதித்து விட்டு, தொலைக்காட்சியில் வருவது போல .....வாழ்த்துக்கள் ரிஷி, குட்டி ரிஷி வரப்போறாங்க,உங்க வைஃப் ரொம்ப வீக்கா இருக்கா, இன்ஜெக்ஷன் போட்டிருக்கன். கொஞ்ச நேரத்தில கண்முழிச்சிருவாங்க இந்த மாத்திரைய ரெகுலராக கொடுங்க என்றவர்.ஸ்ரெதஸ்கோப்பை கழட்டி பையில் வைத்தபடி, வேணியின் கையில் இருந்த குழந்தையை கொஞ்சியவர்.அறையை விட்டு வெளியேறினார்.

சகஸ்தா கண் விழிக்கும் வரை அவளுடன் இருந்தான். அப்போது அவ்வறையினுள் நுழைந்த ஸ்ரீயின் கண்ணில் முதலில் பட்டது அவ்வறையில் இருந்த சுவரோவியம் தான்.

"என்னடா இது என " ரிஷியிடம் கேட்க " கண்முழிச்சதும் நீயே கேட்டுக்க என்றான் ரிஷி,சிரிப்புடன்,வேணியும் அதனைப் பார்த்தவர் சிரித்துக் கொண்டார்.

வேணியும் குழந்தையையுடன் கீழே கணவனிடம் விடயத்தை சொல்ல செல்ல,டாக்கர் பிரகாஷோடு பேசிக் கொண்டிருந்தார்.ரஞ்சித்தும் அங்கு தான் காஃபி குடித்துக் கொண்டிருந்தான்.

ரஞ்சித்திடம் தாவிய குழந்தையை மருமகனிடம் கொடுத்தவர். மகிழ்சியுடன் சகஸ்தா பற்றி சொல்ல,பிரகாஷிசும் மகிழ்ச்சி தான், "சாருக்கு ஹால் பண்ணிச் சொல்லு வேணி"என்றார் அவர்.வேணியும் சாருவுக்கு அழைப்பெடுத்து விடயத்தை தெரிவிக்க அவர்களுக்கும் மகழ்ச்சியே......

சிறிது நேரத்தில் சகஸ்தா கண்விழிக்க,அவள் கையைப் பற்றிய ரிஷி, நெகிழ்வாக அவளைப் பார்த்தான்.அவள் எழ முயற்சிக்க,அவள் எழுந்து அமர உதவினான்.சகஸ்தாவிடம் வந்து ஸ்ரீ " டால் உன்னப் போல குட்டி டால் வரப்போது" என சந்தோசத்துடன் அவளை அனைத்து வாழ்த்தினாள்.

"ஏம்மா நீ ஆர்டிஸ்னு தெரியும் ஆனா இவளோ பெரிய ஆர்டிஸ்னு தெரியா என்றாள்.சகஸ்தாவோ வெட்கத்துடன் ரிஷியைப் பார்க்க.

அவர்களுக்கு தனிமை கொடுத்து ஸ்ரீயும் வெளியேறினாள். சகஸ்தாவை அனைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டவன்,"இந்த நொடி உலகத்திலே ரொம்ப சந்தோசமான ஆள் நான் தான் சகா என்றான் தாங்யூ டால்" என்றான்.

மஞ்சத்தில் இருந்து எழுந்த சகஸ்தா அவனிடம் ஒரு பார்சலைக் கொடுக்க,அதைப் பார்த்தவன், "எனக்கா,ம்ம் என்றாள்...அவனும் அதை பிரித்தவன் இதழிலோ புன்னகை.அன்று அவன் கேட்ட ஓவியம் அவள் கைவண்ணத்தில்,
இன்று அவன் கைகளில் தவழ்கிறது.

அவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டவன் தாங்யூ பேபி என்றவன்.மீண்டும் அவள் இதழ்களில் இதழ் பதித்து ஆழ்ந்து முத்தமிட்டான்.அவ் முத்தம் இருவரையும் உயிர அவரை சென்று தாக்கியது.

அவளை தன்னிலிருந்து பிரித்தவன்.அவ் ஓவியத்தையும் அவ்வறையில் மாட்டினான்."யாரும் பார்த்தா என்றாள்.யாரும் வர மாட்டாங்க என்றான் கண்சிமிட்டி.

பின் அவளருகில் வந்து ரிஷி அமர அவன் தோளில் வாகாக சாய்ந்து கொண்டாள். அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி, மகிழ்ச்சி மட்டுமே......அதைத் இரட்டிப்பாக குழந்தையும் இணைந்து கொண்டது.இப்போது ரிஷியின் மனதில் சகஸ்தா நிற்க ,சகஸ்தாவின் மனதில் ரிஷி நிற்க இருவர் மனதிலும் காதல் நின்றது.

சகஸ்தாவும் ரிஷியும் உங்க மனதில் நின்றார்களா?????

மனதில் நின்றவள் 25
எப்படி இருக்குனு சொல்லுங்க 😍😍😍😍😍😍😍😍😍😍😍

 

   
ReplyQuote

You cannot copy content of this page