All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

வட்டிக்காரனின் வசியக்காரியவள்-7

 

VSV 44 – வட்டிக்காரனின் வசியக்காரியவள்
(@vsv44)
Eminent Member Author
Joined: 4 months ago
Posts: 16
Topic starter  

அத்தியாயம்-7
சரியாக இரவு 9:00 மணி இருக்கும்,உயர்ரக கருப்பு நிற பிஎம்டபிள்யூ கார் ஒன்று சென்னையின் புகழ்பெற்ற ஏரியாவில் ஒரு வீட்டின் முன்னால் நின்றது. அதிலிருந்து இறங்கியவன் வேறு யாருமில்லை ரணவேந்தன் தான். புயல் வேகத்துடன் இறங்கியவன் அதே வேகத்துடன் வீட்டினுள் செல்ல ஆரம்பித்தான். கையில் போனை வைத்துக்கொண்டு நோண்டியவாறே சென்றவன் சட்டென்று தன் பிஏவிற்கு போன் செய்தான்.

"வெல் சர்வா.. அந்த ஏகே கம்பெனியோட ஒன் ஆஃப் த சேர்மேன் குணநாதன் இருக்காறே அவர் இந்த மந்த் என்ட் நம்மகிட்ட வாங்குன லோன் அமொண்ட் தரனுமே.. அவர்கிட்ட இருந்து ஏதாச்சும் தகவல் வந்துதா. ஏதும் மெயில் வந்துதானு செக் பண்ணீங்களா..."என்றான் தன் கம்பீர குரலில்

அய்யோ இந்த மனுஷன் வீட்டுக்கு போனாலும் விடமாட்றாறே என்று மனதில் புலம்பியவாறே இருந்த சர்வாவோ.. "இன்னும் மெயில் எதுவும் வரல சார்.. நாளைக்கி தான் அவருக்கு வார்னிங் மெயில் போடனும்.. நாளைக்கு சென்ட் பண்ணிடுறேன் சார்.."என்றவன் தன் முன்னால் ஆசையாக உட்கார்ந்திருக்கும் புது மனைவியை ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் மனைவியோ ஆபிஸில் இருந்து வந்து அரைமணி கூட இல்லாதபோதும் ஆபிஸ் வேலையையே பார்த்துக்கொண்டிருக்கும் தன் கணவனை கண்களால் மிரட்ட…

சர்வாவோ வாயை மெல்ல அசைத்து சாரி கேட்டவன் காற்றில் முத்தத்தை பறக்கவிட்டான்..

"வெல் ஓஒஓகே நாளைக்கு காலையில முத வேலையா மெயில் அனுப்பிடுங்க.."என்றான் கட்டளையாக ரணவேந்தன்.

"ஹான் சரி சார்.."என்றவன் ரணவேந்தன் போனை வைப்பதற்காக தவிக்க… ரணவேந்தனுக்கு போன் மூலம் அவனின் நாளைய அனைத்து வேலைகளையும் கூறியவனுக்கு சர்வாவின் புது மண வாழ்க்கை சுத்தமாக மறந்து போனது. தொழ்ல் என்றால் அவனுக்கு அனைத்தும் தொழில் தான். அதனை விட்டால் வேறு எதுவும் யோசிக்கமாட்டான். குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் தொழில் என்று வந்துவிட்டால் அவனுக்கு மற்ற க்ளைன்ட் போல தான்.

சாதாரண வட்டி பிஸ்னஸ் போல தான் இவனுடையதும். ஆனால் அதனையே டீசன்டாகவும், லேட்டஸ்ட் டெக்னாலஜியுடனும் செய்துக்கொண்டிருக்கின்றான். மெயிலில் ஆரம்பிக்கும் லோன் ப்ராசஸ் கடைசியில் மெயிலில் தான் லோன் க்ளோஸ் ஆகும். லோன் டியூ கட்டுவதற்கான டேட் கூட மெயிலில் தான் வரும்.

அவனின் நேர்மையே அவனுக்கு பிற்காலத்தில் பல சங்கடத்தை தர போவது உறுதி. "ஓகே சார் எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..."என்ற சர்வா போனை வைக்க தலையால் தண்ணி குடித்தான். ஒருவழியாக பத்து நிமிடம் அறுத்துவிட்டே ரணவேந்தன் சர்வாவை விடுதலை செய்ய.. சர்வாவிற்கு வாயே உலர்ந்துவிட்டது.

"ஹா அய்யோ இப்போவே நாக்கு தள்ளுதே..."என்று புலம்பிய சர்வா தன் மனைவியின் அருகில் போய் உட்கார…

அவளோ முறுக்கிக்கொண்டு திரும்பிக்கொள்ள.. அவளின் முதுகில் சாய்ந்துக்கொண்டவன்.. "பட்டு.. அவர் என்னோட பாஸ்டா.. இந்த ஒரு பழமொழி சொல்லுவாங்களே வேலனு வந்துட்டா வெள்ளக்காரனு.. அதுக்கு சரியான எக்ஸாம்பிள் என் பாஸ் தான்… அவ்ளோ கறார் பார்ட்டி.."என்று அவனின் பாஸை பற்றி புகழ.. அகன் மனைவியோ அவனை திரும்பி பார்த்து முறைத்தவள்… "ஓஓஓ இன்னும் உங்க முதலாளி புராணம் முடிலையா… நல்லது நீங்க என்ன செய்றீங்க முதல உங்க முதலாளி புராணத்த முடிச்சிட்டு நம்ம ரூம்க்குள்ள வாங்க. நான் போய் தூங்குறேன்.."என்றவள் வேக வேகமாக தன் அறைக்குள் சென்றுவிட.. அய்யோ கெட்டது குடி.. என்று தலையில் கை வைத்துக்கொண்டவன்.. "அய்யோ பட்டும்மா… சாரி டா தங்கம்..."என்று அவள் பின்னால் ஓடினான்.

இங்கு ரணவேந்தனோ வேகமாக தன் வீட்டிற்குள் செல்ல அங்கு யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லாமல் போனது.ஹாலை சுற்றி தன் பார்வையை ஓட்டியவன் வீடே அவ்வளவு அமைதியாக இருந்தது. ரணவேந்தனுக்கோ இது நம் வீடா என்ற எண்ணமே ஒரு நிமிடத்தில் வந்தது என்றால் பாருங்களேன்.

"என்ன இது நம்ம வீடா இவ்ளோ அமைதியா இருக்கு..” என்றவாரே சுற்றி முற்றி பார்க்க. அங்கு யாரும் இருப்பதற்கான அடையாளமே தெரியவில்லை. ரணா அதற்கு மேல் அங்கு நிற்காமல் அங்கிருந்து நேராக கிட்சனுள் சென்று எட்டி பார்க்க அங்கேயும் யாரும் இருப்பதற்கான அடையாளமே தெரியவில்லை.. அதனை பார்த்து தன் உதட்டை சுழித்தவன் கிட்சனுள் இருந்து வெளியில் வந்து அந்த தரைதளத்தில் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் எட்டிப் பார்த்தான்.

கீழே கிட்டத்தட்ட மூன்று அறைகள் இருந்தது. ஒவ்வொரு அறையிலும் எட்டிப்பார்த்தவனுக்கு யாரும் அல்லாத அறையே காட்சியளிக்க. ம்ச் என்று சலித்தவாறே முதல் தளத்திற்கு மாடி ஏறினான். மாடிக்கு செல்வதற்கு சிறிய லிஃப்ட்டும் இருந்தது. ஆனால் ரணவேந்தனுக்கு அதனை எப்போதும் உபயோகித்ததில்லை. அதேபோல் முதல் மாடியிலும் கிட்டத்தட்ட நான்கு அறைகள் இருந்தது. ஒவ்வொரு அறையையும் எட்டிப்பார்த்தவனுக்கு எந்த அறையிலும் யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.

ரணவேந்தன் அப்படியே ஒரு நிமிடம் நின்றவன். தன் தாடையிலேயே ஒற்றை விரலைக் கொண்டு தட்டியவாறே நின்று கொண்டிருந்தான். அந்த நேரத்திலும் அவனின் கம்பீரமான தோற்றத்திற்கு இந்த போஸ் கூட அவ்வளவு அருமையாக இருந்தது. அதே நேரம் ஆளுமையாகவும் தெரிந்தது.

"ம்ம்ம் வெல் எல்லாரும் எங்க போனாங்க...” என்று யோசித்தவனுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது தன் மொபைலை வேகமாக எடுத்தவன் பெர்சனல் வாட்ஸ் அப்பை அன்லாக்கில் இருந்து எடுக்க.. அதில் மெசேஜ் வந்ததற்கான அடையாளமாய் சத்தம் கேட்க… "ஓஓஓ காட் மெசெஜ் பாக்கல...”என்றவன் தன் குடும்ப வாட்ஸப்பில் போய் பார்க்க அங்கோ ஏகப்பட்ட மெசெஜ் வந்திருந்தது. அவனது ஃபேமிலி குரூப்பில் வந்திருந்த மெசேஜ் படித்தான். படித்தவனின் இதழ்கள் மெல்ல விரிந்தது காலையில் இருந்து சற்று நேரத்திற்கு முன் வரை அவனுக்கு வந்திருந்த குறுஞ்செய்தியை படித்து புன்னகைத்தான்.

அவன் அலுவலகத்தில் இருக்கும் வரை அவனின் இந்த புன்னகையை யாருக்கும் காட்டாமல் தான் இருந்தான். இப்போது அவனைப் பார்க்கும் யாவருக்கும் கண்டிப்பாக நெஞ்சு வலி வருவது உறுதி. வாட்ஸ் அப்பை ஒரு நிமிடம் பார்த்தவன் "ஓ இன்னைக்கு பௌர்ணமியா..” என்றவன் வேக வேகமாக தன்னுடைய அறைக்கு சென்றான்.

தன் அறைக்கு சென்ற வேகத்திற்கு ஒரு டவலை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டான். சரியாக பத்து நிமிடத்தில் வேக வேகமாக ஒரு ட்ராக் பேன்டையும் ,ஸ்லீவ்லஸ் டி-ஷர்டையும் போட்டுக் கொண்டவன் வேக வேகமாக மொட்டை மாடி படிகளில் துள்ளி குதித்து ஏற ஆரம்பித்து விட்டான். மொட்டை மாடிக்கு சென்றவனின் இதழ்கள் இதற்கு முன்னால் பார்த்த புன்னகையை விட இன்னும் அழகாக விரிந்தது. அவன் கண்களும் சிரிக்க அது தான் அங்கு ஹைய் லைட்.

"ஐ சித்தப்பா வந்தாச்சி..” என்று இரண்டு மழலை செல்வங்கள் அவன் கால்கள் இரண்டையும் கட்டிக் கொள்ள…

அதே போல "ஐ மாமா வந்துட்டாங்க... பாட்டி தாத்தா இங்க பாருங்க.. மாமா" என்று மேலும் இரண்டு வாண்டுகள் ஓடி வந்து அவன் காலை கட்டிக் கொண்டது. அதில் இன்னும் அவன் முகம் புன்னகையில் ஜொலிக்க... "ஹேய் வாண்டூஸ்.. என்ன பண்றீங்க...” என்றவாறே நான்கு பேரையும் தூக்கியவன் ஒரு பக்கம் இருவர் இருவராக தூக்கி வைத்துக் கொண்டான்.

"மாமா உன்ன பாக்குறதுக்காக நாங்க காலையிலிருந்து காத்துட்டு இருந்தோம் தெரியுமா...” என்று இரண்டு வாண்டுகள் கூட. அதில் தன் தலையை மெல்ல அந்த இரு வாண்டுஸ் தலையிலும் முட்டிக்கொண்டவன். "ஏன் வாண்டூஸ் இங்க பக்கத்துல தான் இருக்கு உங்க வீடு...அங்கிருந்து இங்க காலையிலேயே வந்து இருந்துட்டு இன்னைக்கு நைட்டு வரைக்கும் எனக்காக காத்துட்டு இருந்தீங்களா...” என்று மழலை போல அவனும் பேச இரு குழந்தைகளும் புன்னகையுடன் ஆமாம் என்று தலையாட்டியது.

"அது சரி" என்றவன். நால்வரின் தலையிலும் செல்லமாக முட்டை. “ மாமா...”என்றும் "வலிக்குது சித்தப்பா வலிக்குது" என்றும் நால்வரும் அவனிடம் குறை கூற. அதில் ஹா ஹா ஹா என்று புன்னகைத்துக் கொண்டான்.

"மாப்ள..” என்றவாறே ஒரு குரல் கேட்க. அதில் புன்னகையை குறைத்துக் கொண்டவனோ. "வாங்க அத்தான்.. எப்படி இருக்கீங்க...” என்றான் கம்பீரமாக.

"அதெல்லாம் நல்லா இருக்கேன் மாப்ள... நீ எப்படி இருக்க.. உன் பிசினஸ் எல்லாம் எப்படி போகுது..” என்று கேட்டான் ஈஸ்வரன். ஈஸ்வரன் வேறு யாரும் இல்லை ரணவேந்தனின் அக்கா அலர்விழியின் கணவன் தான். அவனுக்கும் இதே சென்னை தான் என்ன ரணவேந்தன் வீட்டினை தாண்டி இரண்டு தெரு தள்ளி தான் அவன் வீடும் இருக்கும். அடிக்கடி தன் மனைவியையும் ,பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு இங்கே வந்து விடுவான். இது அவன் வீட்டில் இருக்கும் எழுதப்படாத சட்டம்.

"டேய் பசங்களா அவன் வந்த உடனே மாமாவ, சித்தப்பாவ இம்சை பண்றீங்களா நாலு பேரும் இறங்குங்கடா...” என்று அதட்டினாள் அலர்விழி

அட விடுக்கா குழந்தைங்க தானே...”என்ற ரணவேந்தனும் நால்வரின் கன்னத்திலும் முத்தமிட பதிலுக்கு நால்வரும் அவன் கன்னத்தில் ஆசையாக தன் பிஞ்சி இதழை பதித்தவர்கள்.. ஐ லவ் யூ மாமா, சித்தப்பா...என்றனர் நால்வரும் முழு அன்பினை தன் குரலில் தேக்கி வைத்து கோரஸாக.

"ஐ லவ் யூ டூ..."என்றான் ரணவேந்தன் முகம் முழுவதும் புன்னகையுடன்.. பின் நால்வரும் இறங்கி ஓடிவிட

"உனக்கு இவங்க நாலு பேரு இருந்தாலே போதுமே வேந்தா... காலையில இருந்து நைட் வரைக்கும் ஓயாமல் வேலை பார்த்துட்டு வரேன்னு சொன்னேன்டா தம்பி" என்றாள் அலர்விழி அவனின் அக்கா.

"இட்ஸ் ஓகே கா ஒன்னும் பிரச்சனை இல்ல குழந்தைகள் தானே...” என்றவரே. மேலும் முன்னேறி நடக்க.

"அண்ணா…” என்று இரண்டு கோரஸ் குரல்கள் கேட்க… வேந்தனின் முகம் இன்னும் பளீச் என்று ஆனது. ஒன்று ரணவேந்தனின் தம்பி யுகதேவனின் குரல் இன்னொன்று அவனின் குட்டி தங்கை, மற்றும் அவ்வீட்டின் இளவரசி சுடர்விழியின் குரல்.

ரணவேந்தன் மெல்ல புன்னகைத்தவன்… "ஹேய் நண்டூஸ்...”என்றான் இருவரையும் கட்டியணைத்தவாறே… அவர்களும் அவனை இறுக்கிக்கொள்ள…

அட போதும் போதும்… தம்பி சாப்பிடுறீங்களா..."என்ற குரல் கேட்க.. ரணவேந்தன் நிமிர்ந்து பார்த்து புன்னகைக்க.. அங்கு புன்னகையுடன் நின்றிருந்தாள், அவனின் அண்ணி ஷாலினி.

"ஹான் அண்ணி சாப்பிடணும்.. பயங்கரமா பசிக்குது...” என்றான் அவன்.

"வாடா… வேந்தா கொஞ்சம் சீக்கிரமா வரலாம் இல்ல இப்டியா பசியோட வருவ.. பசியோட ஏன்டா வேலை பார்த்துட்டு இருக்க...” என்றவாறே அங்கு வந்தான் ரணவேந்தனின் அண்ணன் ஆதித்தன்.

இந்த நடுவலவன் எத்தனை தடவை சொன்னாலும் ஒரு தடவை கூட கேட்க மாட்டான் பெரியவனே..” என்றவாறே அங்கு வந்தார் இவர்கள் அனைவரின் அன்னை தாமரை.

(வட்டி. வசி)


   
ReplyQuote

You cannot copy content of this page