About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
மனம் _24
நாட்களும் அதன் போக்கில் செல்ல,சகஸ்தாவும் வேணியுடனும் ஸ்ரீயுடனும் நாட்களைப் போக்க ரிஷியும் அடிக்கடி வெளியூர் என செல்பவன் சில சமயங்களில் சகஸ்தாவையும் அழைத்துச் செல்வான்.
அன்று வீட்டில் அனைவரும் ஹாலில் இருக்கும் போது அலுவலகம் இருந்து வந்த ரிஷி சகஸ்தாவிற்கு அருகில் அமர்ந்து கொண்டவன்,தந்தையைப் பார்த்து,"ப்பா நாளைக்கு கொழும்பு போகனும் அசோசியேஷனால மீட்டிங் போட்டிருக்காங்க "என்றான்.
அதற்கு பிரகாஷோ "ம்ம் ஓகே ரிஷி ஏஆர் கம்பனி டீலையும் போறதோட முடிச்சிடு" என்றார்.அவனும் "ம்ம்..... என்றபடி சகஸ்தாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு மாடியேறிச் செல்ல தான் மடியில் வைத்திருந்த ஸ்ரீயின் குழந்தையை வேணியிடம் கொடுத்தவள் தானும் மாடி ஏறிச் சென்றாள்.
ஸ்ரீக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் தான் ஆகின்றது. அழகான பெண் குழந்தையது குழந்தை பிறந்ததை தொடர்ந்து ரஞ்சித்தும் தொழில் நிமித்தம் கனடா சென்றுள்ளான்
ஸ்ரீயும் விரைவில் கனடா செல்ல உள்ளாள். அறைக்குள் சகஸ்தான் நுழைய குளியலறையில் ரிஷி குளிக்கும் சத்தம் கேட்டது. அவன் போன் அலற அதனை பார்க்க அதன் திரையில் அன்று சுபி எடுத்த புகைப்படம்,
சகஸ்தாவோ திரையை வெறித்தபடி பார்க்க, குளியலறையில் இருந்து அப்போது இடையில் டவலுடன் வந்த ரிஷி அவள் கையில் இருந்த அலைபேசியை எடுத்தவன் அழைப்பை ஏற்று பேசினான்.அதுவோ அலுவலகம் தொடர்பான அழைப்பு சிறிது நேரம் பேசி விட்டு அழைப்பை துண்டித்தவன். அலைபேசியை மேசையின் மீது வைத்து விட்டு திரும்ப அவன் முன் வந்து நின்றாள் சகஸ்தா, உங்க ஃபோன் வால்பேப்பர்ல இருக்கிறது தம்பி எடுத்தது தானே, எனக் கேட்க,
அவனோ "ஆமா" என்றபடி உடைய மாற்றினான்."அத டெலிட் பண்னிடன் தானே என்றாள்,எனக்கு பிடிச்சிருக்கு பேபி என்றான்.அவளோ கண்கள் கலங்க "நம்ம பெர்சனல் சுபி பார்க்கவே சங்கடப்பட்டன் நீங்க போன்லயே, வச்சிருக்கீங்க" என அவளும் கோபமா கேட்க, "என்னடி உன் பிரச்சினை யாரும் பார்க்க மாட்டாங்க" என கடுப்பாய் சொன்னவன்,அவள் மீண்டும் மீண்டும் அப் புகைப்படத்தை அழிக்க சொல்ல,
"இந்தா பிடி நீயே டெலிட் பண்ணு என அலைபேசியை அவள் கையில் கொடுக்க" அவளோ வாங்கவில்லை,பின் அவனே அதனை அழித்தவன், இப்போ சரியா எனும் விதமாக அவளை முறைத்துப் பார்க்க,
"ஏன் இப்போ கோபமா பேசுறீங்க "என அவள் கேட்க அவள் கண்களில் இருந்து கண்ணீர் கன்னத்தை நனைத்தது. அடிக்கடி ஊடல் கொள்வதும் பிறகு அது கூடலில் முடிவதும் நடப்பது தான்,
"சிற் என தலையை பிடித்தவன் ஆஃபிஸ்ல டென்ஷன் பண்ணா நான் என்னடி செய்வன் என்றவன்,இங்க வா என அவளை அழைத்தவன் தனது கைவளைவுக்குள் கொண்டு வந்து அவள் கண்களை துடைத்து விட்டவன், காலைல ஏர்லியா போகனும் ரெஸ் பெக் பண்ணு என்றான் அவளும் மீண்டும் கண்களை துடைத்தபடி உடைகளை அடுக்கினாள்.
இரவுணவை முடித்ததும் ,அவனும் அவளை அனைத்தபடி தூங்கிப் போனான்.விடியற் காலையில் எழுந்து ரிஷி ஆயத்தமாக,சகஸ்தாவோ "நானும் வரவா" எனக் கேட்க,
"பேபி நீ வந்தா நல்லம் தான் ஆனா உங்கூட டைம் ஸ்பென்ட் பன்ன எனக்கு டைம் கிடைக்காது.நெக்ஸ் டைம் ஒன்னாவே போவோம்" என்றான்,சகஸ்தாவோ உம் என்றபடி இருக்க,
இப்படி இருந்தா நான் எப்படி பேபி சந்தோசமா கிளம்புறது.சகஸ்தாவோ ரொம்ப மிஸா பன்னுவன் என அவள் அவனை அனைக்க,அவனும் அவளை அனைத்தவன் அவள் இதழில் இதழ் பதித்து விலகியவன் ரெண்டு நாள்ல வந்துடுன் லவ் யூ பேபி என விடைபெற்றுக் கிளம்பினான்.
சகஸ்தாவோ சோகமாய் வீட்டில் திரிய, ஸ்ரீயோ ரெண்டு நாள்ல வந்துடுவான் அதுக்கு ஏண்டி இப்படி இருக்க ,என சகஸ்தாவை கிண்டல் செய்ய,பிரகாஷோ வீட்ட போயிட்டு வாரியாமா ???எனக் கேட்க அனைவரும் தன்னை இப்படி கேட்கும் அளவுக்கா வித்தியாசம் தெரிது எனத் தன்னையே நொந்தவள் இல்ல மாமா என சமாளித்தாள்.
இரண்டு நாள் என்ற ரிஷி ஒரு வாரம் ஆகியும் வரவில்லை " வேலை முடியல டால் சாரிமா...என இரவில் அவளை ஃபோனில் கொச்சிக் கொள்வான்.
அவனும் தான் என்ன செய்வான்,வேலையும் இழுத்துக் கொண்டு செல்கிறதே.....
அன்று இரவு ஒரு வாரத்தின் பின் சகஸ்தாவிடம் சொல்லாமல் வீட்டிற்கு வந்தான் ரிஷி , வேணி தான் அவ் இரவு வேளையில் கதவைத் திருந்தார்.ரிஷியின் முகத்திலோ அப்பட்டமாக சோர்வு தெரிந்தது. வேலை முடித்த கையோடு தானே கார் ஓட்டி வந்ததாலே இச் சோர்வு "குளிச்சிடு வா ரிஷி தோசை செய்து வைக்கன்" என்றார்.
அவனும் "ஓகேமா " என்றபடி தனது அறைக்கு வந்தவன் மஞ்சத்தில் சகஸ்தாவைக் காணாது மற்றைய அறைக்கதவை மெல்லத் திறந்தது பார்க்க அவளோ அங்கு ஆழ்ந்த உறக்கத்தில் கதவைச் சாத்தி விட்டு ,குளியலொன்றைப் போட்டவன் கீழே வர வேணி தோசையும் சம்பலும் தயாராக வைத்திராந்தார்.
ரிஷிக்கு அவரே பறிமாற "நீங்க தூங்குங்கம்மா நான் சாப்பிடுறன் என்றான்.
மாப்பிள்ளை வார கிழமை வாரார் என்றார் அவர் ரிஷியோ ஆமாம்மா அத்தான் பேசினார் என இருவரும் பேசிக் கொண்டே இருக்கும் போது ரிஷியும் சாப்பிட்டு முடித்தான் " ஓகே நீங்க தூங்குங்க நானும் தூங்குரன் என்றான்".
மற்றைய அறைக் கதவை திறந்து அவளருகில் சென்றவன் சில நிமிடங்கள் அவளையே ரசனையாய் நோக்கினான்,ஒரு வாரம் அவனும் அவளை மிஸா பண்ணினான் தானே அவனின் தவிப்பு அவனுக்கு மட்டும் தான் தெரியும்.
ஏதோ உள்ளுணர்வு உணர்த்த கண் விழித்தவள் தன் எதிரே தன்னையே பார்த்தபடி இருந்த ரிஷியைக் கண்டு இன்பமாய் அதிர்ந்தவள்,அவளின் ஏக்கம் புரிந்தது,அவனை தாவி அனைத்தவள் அழுகையில் குலுங்கினாள்.
அவளை நிமிர்த்தி கண்ணீரைத் துடைத்தபடி
அவளை அனைத்தபடியே தஙக்ளது அறைக்கு தூக்கி வந்தான் அவளும் வாகாக தனது கால்ளை அவன் இடையில் போட்டு பிணைத்துக் கொண்டாள்.
விடிவிளக்கை எரியவிட்டவன் அவளை அனைத்தபடியே மஞ்சத்தில் சரிந்தான்.பின் அவள இதழை முற்றுகையிட்டவன்,அவள் முனகல் சத்தமும் மூச்சுவிடும் சத்தமும் தான் அறையை நிறைத்தது.
காலையில் நேரம் சென்றே இருவரும் எழுந்தனர்.தன் மார்பில் தூங்கியவளை தலையனையில் சரியாகத் தூங்க வைத்தவன், சோம்பல அமாறித்தபடி எழுந்தவன் உடலை அப்படியும் இப்படியும் நெழித்தவன்,ஒரு இடத்தில் நிலைக்க,அங்கோ அவள் எப் புகைப்படத்தை அழக்க சொல்லி அடம் பிடித்தாளோ அதுவே அச் சுவரை நிறைத்திருந்தது.அவள் கை வண்ணத்தில்.
சில சமயங்களில் ரிஷியும் அவ் ஓவியத்தை பார்த்து வெட்கப்படுவான். சில நாட்கள் சென்றிருக்கும் அன்று காலையில் "பேபி ஒரு இடத்திற்கு போகனும் சேலை கட்டிக்கோ" என்றான்.
சகஸ்தாவோ திருதிருவென விழிக்க,என்ன என ரிஷி கேட்க, சேலை இல்லை என்றாள்அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன் அரை மணி நேரத்தில் சேலையும் அதற்கு பொருந்தமான பிளவுஸ் மற்றும் பொருத்தமான நகைகள் என அவள் கையில் வைத்தான்.
அப்போதும் அவள் முழியைப் பார்த்து என்ன என ரிஷி வினவ " சாரி கடைசியா சாப்பிங் போனப்போ வாங்கின சேலை இருக்கு, என்றாள்.சோ வட் இத கட்டிக்க என்றான்" அவளோ எனக்கு சேலை கட்டத் தெரியாது" என்றாள் உதட்டைப் பிதுக்கி ,
சத்தமாச் சிரித்த ரிஷி "ம்ம் நான் கட்டிவிடுறன் என்றான்.அவன் முன் ஜாக்கட் மற்றும் பாவாடையுடன் நிற்க அவள் கூச்சத்தில் நெழிய, அவனோ விசிலடித்தபடி அவளை சுற்றி வந்தவன் அவள் இடையில் சேலையை சொருகியவன் , சிறிது நேரத்தில் கட்டி முடித்தான்.
பின் அவளை இழுத்து அனைத்தவன், என்ன ரொம்ப டெம்பர்ட் பண்ற வந்து பாரத்துக்கிறன் என்றான்,அவளோ கன்னங்கள் சிவக்க நகைகளை அணிந்தாள். அவனும் அவளின் சேலைக்கு ஏற்ற மெரூன் நிற சேர்ட்டை அணிந்தவன் மேலோ கோர்ட் டையும் அணிந்து கொண்டான்.
இருவரும் கீழே வர சகஸ்தாவின் பெற்றோர் மற்றும் அவளது தம்பியும் இருந்தனர் எப்போ வந்தீங்க நேற்றுக் கூட பேசும் போது சொல்லல என்றபடி அவர்கள் அருகில் வந்தாள். பின் அனைவரும் வேனில் தான் பயணித்தனர்.
எங்கபோறம் கோயிலுக்கா,என கேட்க ரிஷி எதுவுமே சொல்லவில்லை தாயிடம் நீங்களாச்சும் சொல்லுங்களன்மா என கேட்க அவரோ ரிஷியை பார்த்து விட்டு பங்க்ஷன் ஏதோ தான் என்றார் சாமாளிப்பாக,ரிஷியைப் பார்த்து முறைத்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.
வேனும் அப் பெரிய விபுலானந்த மண்டபத்தின் முன் நின்றது.அனைவரும் உள்ளே செல்ல,தங்களுக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.என்ன நிகழ்வென்றே தெரியவில்லை ஆனால் ஏதோ கௌரவிப்பு விழா என்பது மட்டும் புரிந்தது.
நிகழ்வும் ஆரம்பமானது ,சகஸ்தாவின் கண்கள் விரிந்து பக்கவாட்டாக ரிஷியைப் பார்க்க எப்போதும் போல் கண்சிமிட்டினான் மென் புன்னகையுடன்.
அப்போது அறிவிப்பாளர் "சகஸ்தா சப்தரிஷி சிறந்த ஓவியருக்கான விருதைப் பெறுகிறார், சகஸ்தா சப்தரிஷி மேடைக்கு வரழவும், என மும்மொழிகளிலும் அழைக்க அவளோ ரிஷியைப் பார்க்க அவனும் செல்லுமாறு சைகை செய்தான்.
படபடப்புடன் எழுந்தவள் இரு அடிகள் வைத்திருப்பாள் கால்கள் பின்ன,பின் நோக்கி மறு அடி வைக்க,அவள்கையாப் பற்றிய ரிஷி அவளை மேடை ஏற்றினான்.கரகோசங்களுக்கு மத்தியில் அவளும் தனக்கான விருதைப் பெற்றவள்,ரிஷியைப் பார்த்து "தாங் யூ" என இதழசைத்தாள்.
பின் "சகா கலரியில்" இருந்து அவள் ஓவியங்கள் சில அங்கு திரையில் காட்சிப்படுத்தப்பட்டது.அவளும் மேடையை விட்டு இறங்கியவள் தன் இருக்கைக்கு வர குடும்பத்தினர் அனைவரும் அவளை வாழ்த்தினர், ரிஷியும் கைகுலுக்கினான். அவளோ அவ் விருதை அவனிடம் நீட்டியவள், எப்படி என்றாள் தழுதழுத்த குரலில்,........
அவளுக்கு பிடித்த துறை ,அதிலும் முதல் அங்கிகாரம் அவனை அனைத்து முத்தமிடத் துடித்த கைகளை அடக்கியவள் நிகழ்வு முடியும் வரை பொறுமையாக. இருந்தாள்.
அதனைத் தொடர்ந்து மற்றும் சிலருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.பின் நிகழ்வும் இனிது நிறைவடைந்தது.அனைவரும் கலைந்தனர்.அவளுக்கோ என்ன உணர்வென்றே தெரியவே இல்லை அவ் மண்டபத்தின் மற்றோரு பக்கம் அவளை அழைத்துச் செல்ல அங்கு தான், ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது.ஓவியர்கள் பலர் தங்களது ஓவியங்களை காட்சிப்படுத் இருக்கின்றனர். "சகா கேலரி" எனும் பெயரில் சகஸ்தாவின் ஓவியங்கள் அங்கு,அதனை நோக்கி குடும்பத்தார் அனைவரும் நுழைந்தனர்.
"சுபியோ அத்தான் இதுக்கு தான் ட்ராயிங்ஸ் கேட்டீங்களா ????நீங்க பெரியாள் தான் இவளுக்கு தெரியாமலே இத நடத்தி முடிச்சிடீங்க" என்றான்.
ரிஷியோ புன்னகயுடன் சகஸ்தாவைப் பார்க்க, அவளோ ஒரு பிரமிப்புடன் தான் ஓவியங்களைப் பார்வையிட்டாள் சில ஓவியங்கள் நானா வரைஞ்சது எனும் அளவுக்கு யோசித்தாள், ஏனெனில் அது வரைந்து வனபல வருடங்கள் இருக்கும்,
அவளது ஒவ்வொரு ஓவியத்தின் கீழும் ஒரு கவிதையோ அல்லது ஒரு வாசகமோ இருந்தது.அவளது கலரியைப் பார்த்தவள் உணர்ச்சி மிகுதியால் அவன் கைகளை தனது கைகளால் கோர்த்துக் கொண்டாள்.
சாருவுக்கும் சீலனுக்கும் மிக்க மகிழ்ச்சி,பெருமை பிரகாஷோ என்னமா,இந்த மாமன மட்டும் வரையாம விட்டுட",என கேட்க,"சகஸ்தாவோ அதுக்கென்ன வரைஞ்சிடலாம் மாமா "என்றாள்,
அவளும் அவ் மண்டபத்தின் ஒரு பகுதியில் இருந்த தூரிகை மற்றும் வர்ணஙக்ளின் அருகில் சென்றவள் ரிஷியைப் பார்க்க அவனும் கட்டை விரலை துங்கி காட்டி ஓகே என்றான்,மாமா நீங்க சுற்றிப் பாரத்துடு வாங்க என்றாள் ."சும்மா சொன்னன்டா என பிரகாஷ் சொல்ல, நீங்க பார்துடு வாங்க என்றாள்.
ஸ்ரீயோ அம்மா இவ அழறா நாங்க வீட்ட போறோம்,நீங்க எல்லாம் முடிய வாங்க என்றாள்,வேணியோ மகளை தறியே விடுவாரா??? என்ன இருடி நானும் வாரன் என்றபடி அனைவருடனும் சொல்லிக் கொண்டு கிளம்ப,இருங்க நான் கொண்டு விட்டுடு வாரன் என்றான் ரிஷி அதன் படி ரிஷி அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்குப் பறப்பட,சுபி பிரகாஷ்,சாரு, மற்றும் சீலன் மற்றைய ஓவியர்களின் ஓவியங்களை பார்வையிட்டச் சென்றனர்..
மனதில் நின்றவள் 24
இன்னும் ஒரு சில பகுதி தான் உள்ளது.படிக்கிறவங்க படிக்க ஆரம்பிக்கலாம்.
அப்படியே எப்படி இருக்குனும் சொல்லுங்க, 🙄
நான் VSV 31
Latest Post: கையில் மிதக்கும் கனவா நீ..!! (முதல் பாகம்) - Story Thread Our newest member: Jayam Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page