About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம் :9
வந்தனாவையே பாவமாக பார்த்தபடி நின்றிருந்தாள் ஆராதனா.
அவளருகே வந்த வந்தனா அவளின் தோளினைத் தொட்டு, " இங்க பாரு ஆரா... சிம்பிளா சொல்லனும்ன்னா பின்னாடி கஷ்டப்படாதே... அவ்வளவுதான் சொல்லுவேன்.நீ பச்சை மண்ணு இல்ல, புரிஞ்சு நடந்துக்க..." எனக்கூறி நகர்ந்தாள்.
வந்தனாவின் அறிவுரை மனதில் பதிந்தாலும் அறிவு ஏற்க மறுத்தது.
வாரங்கள் மாதங்கள் ஆகின.ஆராதனாவும் தன் ஆய்வறிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தினாள்.
அதை மீறி தேவ் விடம் அநாவசியமாக பேசவில்லை.அவனும் அவளின் சிகிச்சை முறைகள் சம்பந்தமான அவளது ஆர்வத்தை கண்டு அவளுக்கு உதவினான்.
தன்னிடம் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளின் சிகிச்சை முறை பற்றியும் உடல் நிலைக்கேற்ப சிகிச்சை தருவது எவ்வாறு என்று விளக்கினான்.
அன்று வேறு மருத்துவமனையில் அவசரமாக ஒரு குழந்தையின் சிகிச்சைக்கு அவனை அழைத்திருந்தனர்.
மாலை மங்கத் துவங்கிய நேரம் அவனது அலைபேசி அலறியது, " ஹலோ.. மம்.. சொல்லுங்க சார்…அப்படியா…சரி ஓகே… …நான் வர்றேன் சீக்கிரமே…இல்ல சார்…நோ ப்ராப்ளம்….” எனக்கூறி அலைபேசியை வைத்தான்.
எதிரே இருந்த ஆராதனா ஏதோ குறிப்பெடுத்து கொண்டிருந்தாள்.அவள் கிளம்பினால்தான் அவன் கிளம்ப முடியும் எனவே, “ஆராதனா, ஒரு எமர்ஜென்சி….. பி.எம்.ஹாஸ்பிட்டல்ல ஒரு கான்ஜெனிட்டல் ஹார்ட் டீசிஸ்(congenital heart disease) கேஸ் ,சோ நம்ம மீதிய நெக்ஸ்ட் வீக் பாக்கலாம்…” என்றவாறே கிளம்ப தயாரானான் .
“சார்….” எனத் தயங்கிவாறே நின்றாள்.
அவன் திரும்பி என்னவென்பது போல் பார்த்தான். “தப்பா நினைக்காதீங்க சார்…இந்த கான்ஜெனிட்டல் கேஸ்க்கு நானும் உங்க கூட வந்து அபசர்வ் பண்ணலாமா...? தீசிஸ்க்கு இன்னும் கொஞ்சம் யூஸ்ஃபுல்லா இருக்கும்...சோ...இப் யூ டோன்ட் மைண்ட் ?..“ எனத் தான் கேட்க நினைத்தவற்றை தயங்கி தயங்கி கேட்டுவிட்டு ஏதேனும் திட்டி விடுவானோ என மிரண்டு பார்த்தாள்.
அவனும் அவளது ஆர்வத்தை பார்த்து கொண்டு தான் இருக்கிறான்.சிறு சிறு நுணுக்கமான விஷயங்களையும் நன்றாக கிரகித்துக் கொள்கிறாள்.
“ அன்னிசியா ஃபீல் பண்ணுனீங்கன்னா வேணாம் சார்” என அவசரமாக முடித்தாள் .
” நோ …நோ…நாட் லைக் தட்,நீ ஹாஸ்டல்ல பர்மிஷன் கேக்கனும்…. அப்புறம் ரிட்டர்ன் லேட்டானா உனக்கு கஷ்டமாகும்.. அதான் யோசிச்சேன்….” என்றான்.
“ நான் பர்மிஷன் வாங்கிட்டு ஆட்டோல வந்துடுறேன் சார்.. பக்கம் தானே சார். உங்களுக்கு டைமாகும்.. நீங்க கிளம்புங்க…நா வந்து ஜாயின் பண்ணிக்குறேன்..” என்றாள்.
சிறு தயக்கத்துடன்,
“ ஓகே…பாத்து வா” என்று கூறிவிட்டு சென்றான்.
அவளும் ஹாஸ்டல் வார்டனிடம் அனுமதி பெற்று அந்த மருத்துவமனைக்கு சென்று விட்டாள்.
அங்கு அவன் அவசர சிகிச்சை பிரிவில் சில மருத்துவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தான்.
இவளுக்குத்தான் “எப்படி உள்ளே செல்வது…” எனத் தயக்கத்துடன் நின்றிருந்தாள்.
அவளை கண்ட தேவ் அவளை உள்ளே வருமாறு அழைத்து அவளை அறிமுகப்படுத்தினான். அங்கிருப்பவர்களுக்கு அவள் இருப்பதில் விருப்பமில்லையென்றாலும் தேவ்விற்க்காக சரி என்றனர்.
தேவ் குழந்தையின் பரிசோதனை மாதிரிகளை பார்த்து விட்டு குழந்தையை பரிசோதித்தான். கான்ஜெனிட்டல் (cogential) பாதிப்பில் பல வகை உள்ளது அதில் எந்த வகையான பாதிப்பு என்பதை தெளிவாக கூறி குழந்தையின் அறுவை சிகிச்சை பற்றி விவாதித்தான். ஓரிரு நாட்களில் அறுவை சிகிச்சை செய்யலாம் , என்று பரிந்துரைத்துவிட்டு, அங்கிருந்த மூத்த மருத்துவர்களிடம் சிலவற்றை தெளிவுபடுத்திவிட்டு கிளம்பத் தயாரானான், அப்போது தான் ஆராதனா என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பதை கவனித்தான்.
அவள் குறிப்புகளை எடுத்து முடித்து நிமிர்ந்தாள்.
அவளைத்தான் அவனும் பார்த்தான், அவளருகே வந்து ,” எல்லாம் நோட் பண்ணிக்கிட்டயா?..., நெக்ஸ்ட் கிளாஸ் ல மத்த ஸூடுடண்ட்ஸ்க்கு செமினார் ரெடி பண்ணிடு“ என்றான்.
“சரி சார்” என்றாவது மணியைப் பார்த்தாள், ஒன்பதரையை நெருங்கியது.
வெளியில் மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.இதமான மெல்லிய மண்வாசனையுடன் கூடிய தென்றல் வீசியது.
இரவினை ரம்மியமாக்கும் இதமான சூழ்நிலை நிலவியது.
வேகமாக இருவரும் கிளம்பி கீழே வந்தனர்.
ஆராதனா, “ ரொம்ப நன்றி சார்.ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருந்தது, கிளம்புறேன் சார்” என வேகமாக திரும்ப ,தேவ் ,”எப்படி போவ?... மழை பிடிக்கும் போலவே?...” என்றான்.
.
அத்தியாயம் 10
தெளிவான நீரோடை போல இருந்த தேவ்வின் வாழ்வில் சிறு கல்லெறிந்து கலங்கியது போல் இருந்தது ஆராதனா வின் மேல் வந்த சிறு சலனம்.
மனம் முழுவதும் முதல் முறையாக ஒரு தடுமாற்றம்.
" இல்லை இது வேண்டாம்" என மனதில் ஒரு உறுதியான முடிவினை எடுத்த பிறகுதான் தேவ்வால் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்ல முடிந்தது.
தேவ் -ஆராதனா நிலை திரிசங்கு நிலையிலிருக்க , அங்கு வந்தனா ரிஷியின் மனதில் ஆழப் பதிந்து கொண்டு இருந்தாள்.
அவளது தைரியம், தெளிவான சிந்தனை, எப்படிப்பட்ட வேலையில் இருந்தாலும் மற்றவருக்கு ஓடிப்போய் உதவும் குணம், எளிமையான தோற்றம் என ஒவ்வொரு விடயத்திலும் அவள் பால் அவன் மணம் சென்று கொண்டிருந்தது.
எத்தனையோ அழகான பெண்களிடம் பேசி பழகி நட்பு பாராட்டி இரவு விருந்தில் கூட கலந்து கொண்டிருக்கிறான் ரிஷி, அதுவும் அளவோடுதான்.
அவர்களிடம் தோன்றாத ஒரு உரிமையுணர்வு வந்தானா விடம் மட்டுமே தோன்றியது.
அவனால் தன் மனதினை பூட்டி வைக்க முடியவில்லை.உடைத்துஅவளிடம் கூற நேரம் பார்த்து கொண்டு இருந்தான்.
ஏதோ ஒரு வகையில் அவனை ஈர்த்து கொண்டு இருந்தாள்.
மருத்துவமனை வளாகம் ஒரு பக்கம் இருக்க ,சிறிது தூரம் தள்ளி தான் கல்லூரியும் இருக்கும்.
வகுப்பினை
தவிர்த்து மற்ற நேரங்களில் தேவ்வும்,ரிஷியும் மருத்துவமனை வளாகத்தில், தங்களுடைய அறையில் புறநோயாளிகளைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.
வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே
வகுப்புகள் என்பதால் மீதி நேரம் புற நோயாளிகளுக்கான பார்வை நேரத்திலோ அல்லது ஏதேனும் அறுவை சிகிச்சையிலலோ இருப்பார்கள்.
ஒரு நாள் மாலை நேரத்தில் வந்தனா மட்டும் ஆய்வறிக்கைக்காக நோயாளிகளின் புள்ளி விபரங்கள் சரி பார்க்க ரிஷியினை பார்க்கச்சென்றாள்.
” மே ஐ கம் இன் சார்?....” என்றாள்.
” எஸ்…,கம் இன்..” என்றான் ரிஷி.
“ சார் இந்த ஸ்டாடிஸ்டிகல் ரிப்போர்ட் கரெக்டா வந்துருக்கான்னு பாருங்க சார்” என்றாள்.
ஏனெனில் எந்த ஒரு ஆய்வறிக்கைக்கும் புள்ளி விபரங்கள்தான் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது சரியாக இருந்தால்தான் அவளால் அடுத்தடுத்து செய்ய முடியும்.எனவே தான் நேரம் காலம் பார்க்காமல் கடந்த ஒரு வாரமாக இந்த புள்ளி விபரங்களை மிகச் சரியாக தயாரிக்க படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறாள்.
அவனும் பார்த்து கொண்டே தான் இருக்கிறான் இந்த ஒரு வாரமாக அவனை கேள்விகளை கேட்டும், சந்தேகங்களால் அவனை திணறடித்தாள்.
இப்போது கடைசியாக ஒருவழியாக முடித்து கொண்டு வந்திருக்கிறாள். அதனை வாங்கி பார்த்தவன் சில நிமிடங்களில்,
” ஃபெர்பக்ட்,வந்தனா …வெரி குட்.இத நீ தாராளமா மெயின் காப்பி போட்டுக்கலாம்,
ஃபர்தரா என்ன புரோசீட் பண்ணனுமோ பண்ணிட்டு எனக்கு ஒரு சாஃப்ட் காபி அனுப்பிரு” என்றான்.
அவள் முகம் இப்போது தான் தெளிந்தது.தான் மிகவும் பிரயத்தனப்பட்டு செய்த ஒன்று மிகச் சரியாக வந்த திருப்தி அவளிடத்தில்.
.” ஓகே சார்…. தாங்க்யூ” என்றாள்
அவனோ,” இப்பதான் உன் முகம் டென்ஷன் இல்லாம இருக்கு,ஒரு வாரமாக ரொம்பவே டென்ஸ்டா இருந்த,ஹோப் யூ ஃபீல் ரிலாக்ஸ்ட்” என்றான்.
அவள் அதற்கு பதிலேதும் சொல்லாமல் பேச்சை கத்திரித்தாள்,” ஓகே சார், தாங்க் யூ,நான் மெயில்ல சாஃப்ட் காபி அனுப்பிடுறேன்” என்றவாறே வாயிலை நோக்கி திரும்பும்முன்
“ வந்தனா …ஒரு நிமிஷம்” என நிறுத்தினான் ரிஷி.
அவளோ திரும்பி அவன் முகம் பார்த்தாள்.
“ நான் நேரடியாகவே சொல்லிடுறேன்.நான் உன்ன மனப்பூர்வமா விரும்புறேன்.லைப் லாங்கா நீ என் கூட இருக்கனும் ன்னு ஆசைப்படுறேன். அதுக்காக நான் உன் பின்னாடி சுத்தி உன்ன தொந்தரவு பண்ணிட்டு இருக்க மாட்டேன்.டேக் யுவர் ஓன் டைம்.” என சொல்லிக்கொண்டே இருக்கும்போது அவள் ஏதோ பேச வர அவளை கையமர்த்தி,” இரண்டு நிமிஷம் நா சொல்றத முழுசா கேட்டுட்டு பேசு” என்றான்.
“ இப்ப இல்லன்னாலும் லைப்ல கல்யாணம் பண்ணனும்னு நினைச்சின்னா என்னோட ரிக்வஸ்ட கன்சிடர் பண்ணு,பொத்தாம் பொதுவா முடியாது ன்னு சொல்லிடாத" என முடித்தான்.
அவளோ ,”இது சரி வராது சார்….நாட் இன்ட்ரெஸ்டட்” எனக் கூறி அவனை வலிக்கச் செய்தாள்.
ஆனால் அவனோ சுருக்கென்று குத்திய வலியை பொருட்படுத்தாமல்,
“ இப்ப இன்ட்ரெஸ்ட் இல்லன்னா… பின்னாடி இன்ட்ரெஸ்ட் வரும் வந்தனா" என்றான்.
அவளோ,
“ கொஞ்சமாவது டாக்டர் மாதிரி பிகேவ் பண்ணுங்க,விடலப் பையன் மாதிரி பேசிட்டு இருக்காதீங்க” என்றாள்.
" ஏன் விடலைப் பையனுக்கு மட்டும் தான் காதல் வரணுமா,டாக்டர்ஸ்க்கெல்லாம் வரக்கூடாதா என்ன?....” என்றான்.
“ சார்…ப்ளீஸ்… இதோட இந்த டாபிக்க விட்டுருங்க,இனிமே வேண்டாம் , அப்புறம்….அப்புறம்….
ஒரு ரெக்வஸ்ட் உங்க புரோபோசல அக்சப்ட் பண்ணல்ன்னு இன்டர்னல்ஸல கம்மி பண்ணிடாதீங்க “ என்றாள் அவசரமாக.
அவனுக்கு சிறிது
சினம் வந்துவிட்டது உடனே ரிஷி,
“ அந்த அளவுக்கு சீப்ஃபா பிகேவ் பண்ணமாட்டேன்.
புரபஷன் வேற பெர்சனல் வேறன்னு எனக்கு நல்லாவே தெரியும் நீ கவலைப்படாத.எப்பயும்போல பேசு. ஏதும் டவுட்ஸ்ன்னாலும் தயங்காம கேளு” என்றான்.
“ ம்ம் “ என மட்டும் அவனை நோக்கி கூறிவிட்டு வெளியேறினாள்.
இவ்வளவு நேரம் அவனிடம் விறைப்பாக பேசினாலும் அறையினை விட்டு வெளியே வந்ததும் சிறு படபடப்பு வந்தது.கோடிக் கணக்காண சொத்துகளுக்கு அதிபதி இந்த மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியே அவனுடைய தந்தையினுடையது. அவன் தன்னிடம் காதலைக் கூறுவது போலித்தனமாக இருந்தது.
“ சும்மா டைம்பாஸுக்கு சொல்லிருப்பாரு , இதெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காத வந்தனா” எனத் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு விடுதியை நோக்கி செனறாள்.
அதன் பின்னர் வந்த நாட்களில் அவனும் வந்தனாவை தொந்தரவு செய்ய வில்லை அவளும் வெறுப்பைக் காட்ட வில்லை.விலகி நின்றாள் அவ்வளவே.
ஆராதனாவின் பார்வை மட்டும் கொஞ்சமும் மாறவில்லை.
அவன் செல்லும் இடங்களில் எல்லாம் அவளது கண்கள் அவனை பின் தொடர்ந்து கொண்டே இருந்தது.
அவனும் கவனித்தான் அவளது பார்வையை.
அது கூட அவனுக்கு ஒரு வித எரிச்சல் தரவே அவளை தனியாக அழைத்து ,"இது போல எல்லா இடத்திலும் என்னையே பார்க்காதே.. ,இனி இப்படி நடந்தா ....நா வேறவிதமா ஆக்ஷ்ன் எடுக்க வேண்டிவரும்" என எச்சரிக்கை விடுத்தும் அவளைத் திட்டியும் அவனது பலவீனத்தை அழகாக மறைத்துவிட்டான்.
அவளுக்கோ கண்கள் எல்லாம் கலங்கி விட்டது.
தவறென்று நன்றாக தெரியும் ஆனாலும் அவனை ரசிப்பது மட்டுமே பிறவிப் பயன் போல் செய்து கொண்டிருந்தாள் அவள்.
அவளும் "சாரி... சார் ..... இனிமேல் இப்படி பண்ணமாட்டேன், உங்களுக்கு தொந்தரவு கொடுக்க மாட்டேன் " எனக் கூறி விட்டு விறுவிறுவென வகுப்பினை நோக்கி சென்றாள்.
அங்கு ஒரு அறையிலிருந்த டாக்டர் விக்டருக்கு இவையனைத்தும் கேட்க நேர்ந்தது .
ஆனால் பாவம் ஆராதனாவிற்கு தெரியவில்லை அடுத்தமுறை அவனுடான அவளுடைய சந்திப்பு , அவளுக்கு பலத்த அடியினை கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறதென்பதை.
அப்போது வந்தனாவின் வார்த்தை எவ்வளவு உண்மையாக இருக்கும் என்பதை உணர்வாள்.
ஆம்! காலம் அவளுக்கு மிகுந்த கஷ்டத்தை கொடுக்க தயாராகிவிட்டது.
யாரின் மேல் தவறு என்று பிரித்தறிய முடியாத நிலை ஏற்படும்.
அத்தியாயம் 11:
ஏனோ ஆராதனாவின் மனம் சோர்ந்து போய் இருந்தது தன்னை தானே முயன்று சமாதானம் செய்து கொண்டாள்.
அவனுக்கு விருப்பமில்லையேல் அவளால் என்ன செய்ய முடியும் .
முதலில் மருத்துவ மேற்படிப்பை முடித்து விட்டு ...பின்னர் பார்த்துக் கொள்ளலாம் எனத் தன்னை தேற்றிக்கொண்டு பாடத்தில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.
எவ்வளவு பட்டாலும் மனம் அவனையே சுற்றியது.
அதனை கவனமாக தன் முகத்தில் காட்டாமல் இருந்தாள்.
அவளது பாராமுகம் தேவ்வினை ஏதோ செய்தது.
”ரொம்ப திட்டிட்டோம் போலவே...., பாக்கவே மாட்டேங்குறாளே... “ என நினைத்தான்.
அவனது மனசாட்சி அவனை காறி உமிழ்ந்து,
” வேண்டாம் ன்னு தானே அவள திட்டுன, அப்புறம்….. எதுக்கு அவ பாக்கல,திரும்புல ன்னு என்ன புலம்புற…இது சரியா வராது….உன் முடிவுல உறுதியா இரு...” என மதில் மேல் பூனையாக யோசித்தான்.
டாக்டர் விக்டர் ஆராதனா மற்றும் வந்தனாவின் மேல் மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர் ,எனவே அவர் தேவ் ஆராதனா உரையாடலை கேட்க நேர்ந்தால் அவளை அழைத்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறி தன் புதிய வீட்டு முகவரி மற்றும் புதிதாக பணியில் சேர்ந்திருக்கும் மருத்துவமனையின் பெயரினை அவளுக்கு தந்துவிட்டு ஏதேனும் உதவி தேவையெனில் தயங்காமல் தன்னை அணுகுமாறு கூறிவிட்டு டெல்லிக்கு மாற்றலாகி சென்றுவிட்டார்.
முதலாமாண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு முதுகலை மருத்துவ படிப்பு தொடங்கியது.
வெற்றிகரமாக வந்தனா மற்றும் ஆராதனா தங்களுடைய ஆய்வறிக்கையை சமர்பித்தனர்.
வாய் மொழித் தேர்வில் இருவரும் அருமையாக பதிலளித்து மருத்துவக் கல்லூரி டீன் களின் பாராட்டைப் பெற்றனர்.
ரிஷி வெகுவாக வந்தனாவைப் பாராட்டினான்.வந்தனா அதனையும் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டு சென்று விட்டாள்.அவளது இந்த அலட்டலில்லாத குணம் அவனை இன்னும் இன்னும் பிடித்தது.
தேவ் ஒரு மெச்சுதல் பார்வையுடன் நகர்ந்து விட்டான்.ஆராதனாவிற்கு சிறிது ஏமாற்றமே , ஏதாவது ஒரு வார்த்தை கூறுவான் என்று எதிர்பார்த்தாள் ,அவனோ வெறும் பார்வையுடன் சென்று விட்டான்.
ஏனோ அவளுக்கு அவன் சாதரணமாகக் படிப்பு விஷயமாகக்கூட சரியாக பேசாமலிருப்பதுஒரு வித அழுத்தத்தை கொடுத்தது.
இப்படியே மூன்று மாதங்கள் சென்றது.
ஆராதனாவின் அக்காவிற்கு திருமணம் முடிந்து முதல் வருடம் திருமண நாளைக் கொண்டாடினார்கள்.
ஆராவும் மகிழ்ச்சியாக தன் அம்மா, அப்பா,அக்கா மற்றும் மாமாவுடனும் அவர்களின் கைக்குழந்தையுடன் மகிழ்ச்சியாக கொண்டாடி விட்டு விடுதிக்கு திரும்பியிருந்தாள்.
வந்தனாவோ, “ என்னடி அக்காவோட முதல் வருஷ கல்யாண நாளை நல்லா செலிப்ரேட் பண்ணியாச்சா? குட்டி பையன் எப்படியிருக்கான்?...”
என்றாள்.
"ம்ம்... நல்லா செலிப்ரேட் பண்ணினோம் டி, பாவம் மாமா ஆசிரமத்தில படிச்சு வளர்ந்துனால அவங்களுக்குன்னு சொந்தம் ன்னு யாருமில்லை அதனால அவர் வளர்ந்த ஆசிரமத்திலயே போய் செலிப்ரேட் பண்ணிட்டு வந்தோம்.அக்காவும் மாமாவும் செம ஹேப்பி ,எனக்கும் ரொம்பவே சந்தோஷமா இருக்கு . எங்க அக்கா.. மாமா… இப்படியே ஹேப்பி கப்பிள்ஸா இருக்கனும் டி....குட்டி பையன் நல்லா இருக்கான் . எல்லாரையும் ஃநைட் ட்யுட்டி செய்ய வைக்கிறான் டி, குட்டி வாலு” என கண்கள் மின்ன நெகிழ்ச்சியுடன் கூறினாள்.
அவளின் தலையை வருடி விட்டு தூங்கச் சென்றாள் வந்தனா.
சொன்னபடியே வந்தனாவை காதல் என்னும் போர்வையில் தொந்திரவு செய்யாமல் இருந்தான் ரிஷி.
அவளுக்கே சந்தேகம் வந்துவிட்டது , "தன்னிடம் உண்மையாகவே ரிஷி தன் காதலைக் கூறினானா?..... அல்லது ஏதேனும் கனவு கண்டிருப்பேனா?” என்று.
ஏனெனில் அந்த அளவு சிறு பார்வையில் கூட கண்ணியத்தை கடைப்பிடித்தான் ரிஷி.பின்னாளில் அந்த கண்ணியத்தை உடைக்க போகிறவனே அவன்தான் எனப் புரியவில்லை அவனுக்கு.
ஒரு மாதம் கடந்த நிலையில் ஆராதனாவின் அலைபேசி அலறியது அவளது அக்கா அழைத்திருந்தார், “ஹலோ!...சொல்லுக்கா,
எப்படியிருக்க? நல்லாயிருக்கியா, குட்டி பையன் என்ன பண்றான்?....தூங்க விடுறான?..” என மடமடவென பேசிக் கொண்டே இருந்தாள்.
அவள் தமக்கையோ ஒரு பெருமூச்சுடன், ”இங்க பாரு ஆராதனா இப்போதைக்கு உன் கிட்ட பேச நேரமில்லை ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லத்தான் கூப்பிட்டேன் .நாள கழிச்சு உன்ன பொண்ணு பாக்க வர்றாங்க.அம்மா அப்பாவோட தீடீர் ஏற்பாடு.நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் மாமாவும் சொல்லி பார்த்தார் இப்ப வேணாம் நீ படிச்சு முடிச்சப்பறம் பாத்துக்கலாம் ன்னு.ஆனா ரெண்டு பேரும் பிடிவாதமா உனக்கு கல்யாணம் பண்ணனும்னு நிக்குறாங்க.ஏன்னா உனக்கு பின்னாடி நேரம் சரியில்லை இப்பவே பண்ணனும் இல்லன்னா ஆறு வருஷத்துக்கு மேலதான் பண்ணனும்னு ஜோசியர் சொல்லிருக்காங்களாம்.அதனாலதான் இந்த ஏற்பாடு.இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மா ஃபோன் பண்ணுவாங்க .நீ என்ன பேசனுமோ பேசிடு டி” என வைத்து விட்டாள் .
"என்ன தீடீரென்னு... இப்படி யோசிக்கக் கூட நேரம் கொடுக்காம...." என நினைத்துக் கொண்டிருக்கும்போதே அடுத்து அவளது அலைபேசி அலறியது.
எடுத்துப் பார்த்தாள் அவளது தந்தையின் எண் ஒளிரியது.
இரண்டு மூன்று முறை அடித்து ஓய்ந்தது அவளது அலைபேசி.
அதனை எடுக்காமல்... தந்தையிடம் என்ன சொல்வது... ஏது சொல்வது எனக் குழப்பம் அவளுள்.
இன்னும் அவளின் காதலை ஏற்கவில்லை தேவ்.அப்படியிருக்கும் போது எப்படி "தேவ்வை விரும்புகிறேன்..." எனக் கூறுவது.
அவளால் ஏதும் செய்ய இயலாத கையறு நிலை.பின் சற்று தன்னை சமன்படுத்திக் கொண்டு அவளது தந்தைக்கு அழைத்தாள்.
பரஸ்பர நல விசாரிப்புக்குப் பின்னர் நேரடியாக அவளது தந்தை விஷயத்தைக் கூறினார், “ ஆரா ம்மா …அப்பா ஒரு விஷயத்தை பண்ணினா உங்க ரெண்டு பேரோட நல்லதுக்குத்தான்னு நினைச்சேன்னா உடனே கிளம்பி வா. உனக்கு நல்ல வரன் வந்திருக்கு மா.மாப்பிள வீட்டுல நீ படிச்சு முடிக்கறது, வேலைக்கு போறதெல்லாம் பிரச்சினை இல்லை ன்னு சொல்லிட்டாங்க மா.நல்ல குடும்பம், நல்ல வசதி,ஒரே பையன் பார்க்கவும் நல்ல இருக்கான்.அவனும் டாக்டரா தான் இருக்கான்.இத விட பெத்தவங்களுக்கு வேற…என்ன வேணும்……சொல்லு.முடியாதுன்னு சொல்லிடாதம்மா உன்னைய நம்பி அவங்கள வரச்சொல்லிட்டேன்..” என்றார்.
ஆராதனாவோ, ” அப்பா ஏன் இப்படி கொஞ்சம் கூட டைமே கொடுக்காம தீடிர்ன்னு ஏற்பாடு பண்ணிருக்கீங்க?....நான் இன்னும் படிக்கனும் பா. ப்ளீஸ் வேண்டாமே…. இப்ப கல்யாணம் …” எனக் குரல் தழுதழுக்க கூறினாள் .
அவளுடைய தந்தையோ பிடிவாதமாக, “ என் மேல் மரியாதை வைச்சிருந்தா உடனே கிளம்பி வா,இல்லனா உன் இஷ்டம்" என வைத்துவிட்டார்.
அந்த “ உன் இஷ்டம் “ என்ற வார்த்தையிலேயே வரவேண்டும் என்றமறைமுக கட்டளையிருந்தது.
அவருக்கு நன்றாகத் தெரியும் மகள் தன் சொல்லை மீறமாட்டாள் என.
தொப்பென அமர்ந்தாள் நாற்காலியில்.அடுத்து அவள் கிளம்ப வேண்டும்..அவளுக்கோ மனம் முழுவதும் தேவ்வின் நினைவு.
எவ்வளவோ அவமானம் பட்டாகி விட்டது.
கடைசியாக ஒரு முறை பேசிப் பார்க்கலாமா? எனத் தோன்றியது.
வந்தனாவின் அறிவுரையெல்லாம் காற்றில் பறக்க விட்டு தேவ்வினை நேரில் காணச் சென்றாள்.
முகம் வெளிறிப் போய் நடை தடுமாறியது.
மனமோ, ” மீண்டும் அவமானப்படத் தயாராகி விட்டாயா” எனச் சாடியது .
மாலை நேரம் கருமேகங்கள் சூழல தொடங்கியது வானம் பெயர்ந்து கீழே விழுமளவு இருள் சூழ்ந்து வந்தது .
ரிஷியின் அறைக்கு அனுமதிப் பெற்று சென்றாள்.
“ குட் இவ்னிங் சார்…தேவ் சார….பாக்க அவரோட ரூமுக்கு போனேன் ஆனா…காணோம்.. எங்க இருக்கார் சார்” எனத் தொண்டை கமறக் கேட்டாள்.
அவளது முகத்தை பார்த்த ரிஷி ஏதோ சரியில்லை என நினைத்து “அவன் பின்னாடி இருக்குற லேப் பில்டிங்க்கு போணும்ன்னு சொன்னான்.மே பீ அங்க இருக்கலாம் மா,ஏன்?...ஏதாவது முக்கியமா கேக்கனுமா “ என்றான்.
“ ம்ம். ஆமா… சார் கேக்கனும்” என்றாள்.
” பார்த்து சீக்கிரம் ஹாஸ்டல் போயிடு மா,லேப் பில்டிங் கொஞ்சம் தூரம் போகனும் யாரையும் துணைக்கு கூட்டிட்டுப் போ மா” என்றான்.
அந்தக் கட்டிடம் விடுதியில் இருந்து சற்று அதிக தூரத்தில் உள்ளது…
“தேங்க்யூ சார்” எனக் கூறி விட்டு அவனிருக்கும் கட்டிடத்திற்குள் சென்றாள்…
அங்கிருந்த அறை ஒன்றில் தேவ் ஏதோ மிகத் தீவிரமாக பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.
சற்று நேரத்தில் வேகமாக கீழே இறங்கி வந்தான்.
அவளோ மறுபக்கத்தில் இருந்து வருவதற்குள் காரை இயக்க அமர்ந்து விட்டான்.
வேகமாக ஓடி வந்த ஆராதனா அவனின் காரின் முன்னால நின்றாள்.
“ சார் சாரி. சார் அர்ஜன்டா உங்க கிட்ட பேசணும்….. முடியாதுன்னு சொல்லிட்டாதீங்க” என கண்கள் கலங்க கேட்டாள்.
அவனோ மிகவும் அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான்.இவள் வந்து நிற்கவும் கண்மண் தெரியாமல் கோபம் வந்தது.
"ஏய், உனக்கு அறிவில்ல எத்தனை தடவை சொல்றது, எனக்கு உன் மேல எந்த ஒரு இன்ட்ரெஸ்டும் இல்லைன்னு, இந்த காதல் கண்றாவி எல்லாம் நம்பிக்கை இல்லை எனக்கு.உனக்கென்ன டீனேஜ் பொண்ணு ன்னு நினைப்பா , கொஞ்சம் புரபஷனலா இரு ,என் கோவத்த கிளறாம இங்கிருந்து முதல்ல கிளம்புடி எனக்கு வழிய விடு முதல்ல “என்றவாறே அவசரமாக கிளம்பும் போது,
“ப்ளீஸ் நா சொல்றது கேளுங்க “என்று தவிப்புடன் அவசரமாக அவன் கையை பிடித்தாள்.
“ஏய் சீ டோன்ட் டச் மீ இடியட், அதான் எனக்கு பிடிக்கலன்னு சொல்றேன் ல, உலகத்துல வேற ஆம்பளயே இல்லையா, ஓஓ என்ன கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணி வசதியா செட்டில் ஆயிடலம்ன்னு நினைக்கிறியா? “ம்ம்..” என தன் தாடையை தடவியபடி”இல்ல வேற ஏதாவது என்கிட்ட இருந்து எதிர்பாக்குறியா”என்று வார்த்தையால் அவளை காயப்படுத்தினான்.
“ பிளீஸ் ஒரு அஞ்சு நிமிஷம்...”என்று அவள் மீண்டும் அவன் கையை பிடிக்க வர, அவன் வேகமாக கைகளை உதறி தள்ளியதில் நிலை தடுமாறி கீழே தேங்கியிருந்த மழைநீரில் விழுந்தாள்.
அவனின் இந்த பரிணாமம் கண்டு அதிர்ந்தே போனாள்.
கீழே விழுந்ததில் முழங்கையும், உள்ளங்கையும் கூரிய கல்லில்பட்டு இரத்தம் வழிந்தது .
அவள் எழுவதற்கு முன் தனது காரினை வேகமாக ரிவர்ஸ் எடுத்ததில் அவள் மீது முழுவதும் மழைநீரோடு சேறும் இறைந்தது.
அவள் கீழே விழுந்ததும் அவன் கவனிக்கவில்லை அடிபட்டதும் அவன் கவனிக்கவே இல்லை. அத்தனை வேகமாக அவன் அந்த இடத்தை விட்டு கிளம்பியிருந்தான்.
அவள் மெல்ல புடவையின் தலைப்பை தன் முழங்கை இரத்தத்தில் வைத்து அழுத்தி பிடித்து கொண்டு எழுந்தாள்.
எதற்கும் கண் கலங்காதவள் அடிவயிற்றில் இருந்து “ஹோ” வென வெடித்து அழுதாள்.
தன்மானத்தையும் ,சுய மரியாதையையும் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவள் இன்று அனைத்தும் தன் காதலுக்காக அவனின் காலடியில் மிதிபட வைத்து கோழையாக நின்றிருந்தாள்.
அவன் சென்ற திசையை பார்த்திருந்தாள்.அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தை போல் விழித்திருந்தால்.
” ஏன் இப்படி ஆனேன்”என மனதினுள் போராடினாள்
உடலில் உள்ள ஜீவன் வற்றயது போல் உணர்ந்தாள்.
அடித்த பேய் மழையில் எவ்வாறு வீடு வந்து சேர்ந்தாள் எனத் தெரியவில்லை.
அவள் நனைந்தபடி வரவும் வந்தனா வாயிலேயே நின்றிருந்தாள்.
“ஏய் ஆரா …எங்கடி போன எவ்வளவு நேரம் உன்னய தேடுறது.உங்க அப்பா ஃபோன் பண்ணினார் டி…” எனத் தயங்கி நிறுத்தினாள்.
ஆராதனா சலிப்புடன் ,” அதான் நாளைக்கு கிளம்பறேன் டி” என அவளுடைய தந்தை வீட்டிற்கு வரச் சொன்னதே நினைத்து கூறினாள்.
ஆனால் வந்தனாவோ ,
"இல்லஆரா இன்னிக்கே நீ கிளம்பனும்..ஏன்னா ….உன் மாமா கடைக்குப்போய்ட்டு வரும்போது லாரி மோதி ஸ்பாட் அவுட் டி…..”என்றாள்.
” என்னடி... என்னடி... சொல்ற மாமாக்கு என்ன ஆச்சு ,காலையில் கூட..
அய்யோ!... கடவுளே!..... நான்ஒரு பைத்தியம் நான் ஒரு பைத்தியம்” எனத் தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
ஆராதனாவிற்கு குற்ற உணர்வு மேலோங்கியது.
முக்கியமான நேரத்தில் கூட தான் எப்படி இருந்திருக்கிறோம் என.
"ஆரா..! ஏய் ஆரா.. ! என்னடி… என்ன …ஆச்சு?... ஏன்டி ஒரு மாதிரி இருக்க …கையில என்னடி இரத்தம், சொல்லேன் டி” என்றாள்.
“ இல்லடி நான் கிளம்புறேன் , அப்புறமா... சொல்றேன் டி” என கொட்டும் மழையில் கிளம்பினாள் தன் ஊருக்கு.
இனி திரும்ப வரவே மாட்டாள் என இருவருக்கும் தெரியவில்லை பாவம்.
ஊருக்குச் சென்றவள் தன் மாமாவின் இறுதி காரியத்தை முடித்து விட்டு அமர்ந்தாள்.
” அம்மாடி வந்து ரொம்ப நாளாச்சு காலேஜ் போலயா? …” எனக் கேட்டார் தந்தை.
அவளோ அவரை நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் பார்வையில் தலை குனிந்தார் அவளது தந்தை.
பின் ஆராவே,” நான் இனிமேல் அங்க போகல டெல்லியில இருக்குற காலேஜ் ல ரிஜாய்ன் பண்ணப்போறேன்.டாக்டர் விக்டர் கிட்ட பேசிட்டேன். அவரும் இன்னும் மூணு மாசம் கழிச்சு திரும்ப செகண்ட் இயர் ஜாய்ன் பண்ணிக்கோ ன்னு சொல்லிட்டார்.இனி நீங்க எனக்காக பண்ற ஒரே விஷயம் நான் டெல்லிக்கு போய் சேந்தத யாருகிட்ட யும் சொல்லாதீங்க. இப்ப லீவு விட்டுருப்பாங்க காலேஜ் ல, நம்ம போய் பார்மாலிட்டீஸ் முடிச்சிட்டு ஹாஸ்டல் வெகேட் பண்ணிட்டு வந்துடுலாம். டீன் கிட்டயும் நான் டெல்லிக்கு போறத யார்கிட்டேயும் சொல்ல வேண்டாம்ன்னு சொல்லிடுங்க பா” என்றாள்.
ஏனோ அவளுக்கு அத்தனை துக்கமாக இருந்தது.
யாரையும் பார்க்க பிடிக்கவில்லை.
வந்தனாவின் முகத்தில் விழிப்பதற்கும் சங்டமாக இருந்தது எனவே அவளிடம் கூட தகவல்களை சொல்ல வேண்டாம் முடிவெடுத்து கிளம்பி விட்டாள்.
டெல்லியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு ஆண்டு முடித்து மேற் கொண்டு இதயநோய் சம்பந்தமாக சிறப்பு படிப்பினை தேர்ந்தெடுத்து படித்துக் கொண்டிருந்த நேரத்தில்,தங்ககளுடையதெய்வம் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் போது ஆராதனாவின் பெற்றார், தமக்கை மற்றும் குழந்தை சூர்யா சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி மூவரும் இறந்தனர். குழந்தை சூர்யா மட்டும் கொஞ்சம் காயங்களுடன் தப்பினான்.
இறக்கும் முன் ஆராவின் தந்தை அவளது அலைபேசி எண்ணை மருத்துவருக்கு கொடுத்து தகவல் அளிக்கக் கூறிவிட்டு உயிரிழந்தார்.
அதனை கேள்வியுற்று துடிதுடித்து போய் வந்து சேர்ந்த ஆராதனா மூவரின் உடலைக் கண்டு கதறினாள்.
டாக்டர் விக்டரும், டாக்டர் நேத்ரனும் தான் அவளின் கூட இருந்து அவளுக்கு தேவையானதை செய்து விட்டு குழந்தை மற்றும் ஆராதனாவுடன் டெல்லி சென்றனர் .
அத்தியாயம் 12:
வந்தனாவோ ஆராதனாவிற்கு அழைத்து அழைத்து ஓய்ந்து போனாள்.
ஆராவின் தாயின் அலைபேசி எண்ணும் தெரியவில்லை, தந்தையின் அலைபேசியும் வேலை செய்யவில்லை.
ஆராவின் பெற்றோர் மற்றும் தமக்கை உயிருடன் இருந்த போது ஒரிரு முறை அவளின் அன்னையிடம் நேரில் சென்று “ஆரா ஏன் இப்படி செஞ்சா?...,எங்க இருக்கான்னு சொல்லுங்க..? “எனக் கேட்டாள்.
ஆராவின் பெற்றோரோ அவளது முடிவினைக் கூறி “அவளை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்…” என தெரிவித்திருக்கிறாள் என்றும், “ஏன்?... தீடீரென இப்படி முடிவெடுத்தாள் என தெரியவில்லை...”எனக் கூறி மிகவும் வருந்தினார்கள்.
வந்தனாவோ மிகவும் உடைந்து போய் விட்டாள். அவளது முடிவிற்கு சரியான காரணம் தெரியாவிட்டாலும், தேவ்வினால் ஏதாவது காயப்பட்டிருப்பாளோ என யூகித்தாள் .
வந்தனாவோ மேற்படிப்பை முடித்துவிட்டு அங்கேயே பயிற்சி மருத்துவராக பணியாற்றினாள்.
இவ்வாறு ஒரு வருடம் கடந்தது.ரிஷியோ இப்போது அவளை விட்டு பிடிக்க எண்ணவில்லை.
அதிரடியாக வந்தனாவின் தாய் மூலம் அழகான காய் நகர்த்தி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைத்தான்.
அரைமனதாகத்தான் திருமணத்திற்கு சம்மதித்தாள்.அவளால் ஆராவின் செயலை ஏற்க முடியவில்லை . முதலில் முடியாது என்று தான் மறுத்தாள், ரிஷிக்கும் தனக்கும் உள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகம்,இதனால் ரிஷிக்கும் அவனது பெற்றோருக்கும் மனக்கசப்பு வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.
ஒருநாள் ரிஷியோ, ”இங்க பாரு வந்தனா.. எப்படியும் நீ யாரையாவது கல்யாணம் பண்ணிக்கத் தான் போற…..அது ஏன் நானா இருக்கக்கூடாது.அப்பா அம்மா கிட்ட எப்படி பேசனுமோ அப்படி பேசி சம்மதம் வாங்கிடுவேன்.உன்னோட சம்மதம் மட்டும் எனக்கு போதும் டி…என்னய ரொம்பவே காய வைக்கிற வந்தனா… இதுக்கு மேல கெஞ்ச முடியாது டி…என்ன உன் காலுல விழனுமா?..”எனக்கூறி அவளின் பாதங்களை பிடிக்கவே குனிந்து விட்டவனை கைப்பிடித்து தடுத்து, ”ஏன் இப்படி பண்றீங்க? என்ன விட அழகான... வசதியான.. பொண்ணுங்க இருக்காங்க” என்றாள் .
அவன் அவளை முறைத்து விட்டு கோபத்துடன் சென்றுவிட்டான்.
ஒரு வாரத்திற்கு அவன் கண்ணிலேயே படவில்லை.
அப்போது தான் வந்தனா மிகவும் தவித்துப் போனாள்.
அவளுக்குமே அவனை பிடித்தது தான்.ஆனால் அதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல அவள் விரும்பவில்லை.
ஏமாற்றம் அடைந்தால் அதனை தாங்கக்
கூடிய மனபலம் அவளிடம் இல்லை என்பதே உண்மை.
ஆனால் ரிஷியோ வெகு சீக்கிரத்தில் தன் பெற்றோரிடம் அனுமதி பெற்று அவளது தாயாரை வைத்து வந்தனாவை தன் சரிபாதியாக ஏற்றுக்கொண்டான்.
ஆனால் திருமணத்திற்கு பின் அவனது அன்பை மட்டுமல்ல அவனது பெற்றோரின் அன்பையும் பெற்றாள்.
நன்றாக கலகலப்பாக இருக்கும் பெண்கள் திருமணத்திற்கு பின்னும் அதே இயல்புடன் இருக்கின்றார்களா? என்றால் ,”ஆம்..”
என்பது சந்தேகமே.
ஆனால் வந்தனாவை பொறுத்தவரை அவளது கூட்டிலிருந்து வெளிவரத் செய்து அவளை கலகலப்பாக மாற்றியது ரிஷியும் அவனது பெற்றோரும்தான்.
அந்தவகையில் வந்தனா மிகவும் அதிர்ஷ்டசாலியே!... இப்படி ஒரு குடும்பம் அமைவதற்கு....இப்படி ஒரு காதல் நாயகன் கிடைப்பதற்கு.....
அதன் பின்னர் வந்தனா, சில வருடங்களுக்கு ஆராதனாவினுடய தொடர்பிலேயே இல்லை .அவளது அலைபேசியும் பழுதாகி விட்டால் ஆராவின் பெற்றோருடைய எண்கள் கூட அழிந்து போனது.
எனவே அவர்கள் சிறிது காலம் டெல்லியில் இருந்தது , பின்னர் இங்கு வந்து அவர்கள் இறந்ததோ வந்நனாவிற்கு தெரியவில்லை.
அதே சமயம் அளவிற்கு அதிகமாக கோபமும் வந்தனாவிற்கு ஆராதனா மேல் இருந்தது.
எனவே தன் கல்யாணத்திற்கு கூட ஆராதனாவை தொடர்பு கொண்டு பேச முயற்சிக்கவில்லை.
திருமணத்திற்கு பின் அவளை ராணியாக உணரவைத்தான் ரிஷி.
அவளை தன் கூட்டிலிருந்து வெளியே வரவைத்தான் . அவளது இயல்பினை அழகாக மாற்றியமைத்தான்.
ரிஷியின் தாய் தந்தையோடு இருக்கும் தருணங்களை நேசிக்க ஆரம்பித்தாள் வந்தனா.
அழகிய திருமண பந்தத்தில் அடுத்த அடியினை எடுத்து வைத்தார்கள் இருவரும்…
ஆம்!....அழகியலாக மலர்ந்த காதலுக்கு சாட்சியாக அழகிய பெண் குழந்தையை ஈன்றறெடுத்தாள் வந்தனா.
நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்த நேரத்தில் தான் ஆராதனா மற்றும் சூர்யாவின் வருகை....
ஆராதனாவும் தேவ்வும் தத்தம் நினைவலைகளிலிருந்து வெளிவந்தனர்.
தேவ் அடுத்த சில நாட்களில் சிகிச்சையை தொடங்குவதற்குண்டான ஏற்பாடுகளை ஆரம்பித்தான்.
இடையில் அவரது தாய்
” என்னப்பா… லயவர்ஷினிக்கு என்ன பதில் சொல்றது?....” என்று அனத்தினார்.
“ எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க மா” என சலிப்புடன் கூறினான்.
அவருக்கோ எப்படியாவது இந்த திருமணத்தை நடத்தி விட வேண்டும் என ஆதங்கம்.
ஆராதனா சூர்யாவுடன் தேவ்வினுடைய மருத்துவமனைக்குச் சென்றாள்.
அவனின் பிரத்தியேக அறையில் இருவரும் அமர்ந்திருந்தனர்.
உள்ளே வந்த தேவ் ,” ஹாய் சூர்யா ஹவ் ஆர் யூ?...” என்றான்.
“ ஐயம் ஃபைன் டாக்டர் “ என்றான்.
” ம்ம்…குட்” என அவனது தலை முடியை லேசாக கலைத்து விட்டு சிரித்தான்.
“ அகெய்ன் சில டெஸ்ட் எடுத்து பாத்துட்டு லாம்” எனக்கூறி அவளையும் சூர்யாவையும் கீழ் தளத்திலுள்ள ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பார்பதற்கு அழைத்துச் சென்றான்.
” நாங்களே போய்கிறோம் சார்…” என ஆராதனா கூறியதற்கு , “ ஏன்?... நா வர்றதுல உனக்கு என்ன பிரச்சினை? “ எனக்கூறி வாயை அடைத்தான்.
அதன் பின்னர் ஆராதனா எதுவும் பேசவில்லை.
அந்த நேரம் ஆராவின் அலைபேசி சிணுங்கியது.
எடுத்துப் பார்த்ததில் டாக்டர் நேத்ரனின் எண் ஒளிர்ந்தது .
எடுத்து உடனே,” வெரி சாரி நேத்ரன் உங்ககிட்ட பேச முடியல , கொஞ்சம் பிசியா இருந்தேன்” என்றாள்.
“ இட்ஸ் ஓகே ஆரா…டேக் கேர்…சூர்யா எப்படி இருக்கான்?நார்மலா இருக்கானா? ஹார்ட் பம்பிங் செக் பண்ணுனியா?சர்ஜரி கன்பர்ம் பண்ணியாச்சா?....” என அடுக்கடுக்காக கேட்டான்.
ஆராதனாவோ,” இல்ல இனி தான் எல்லாம் டிசைட் பண்ணனும், இப்ப டெஸ்டெல்லாம் திரும்ப எடுக்கறாங்க.சோ இரண்டு மூணு நாள்ல கன்பார்ம் பண்ணிருவாங்க பா” என பதிலளித்தாள்.
“ ஓகே ஆரா , பாத்துக்கோ.யூ டூ டேக் கேர் ஆஃப் யுவர் ஹெல்த் டூ.நான் இன்னும் டென் டேஸ்ல அங்க வருவேன். கொஞ்சம் வேலயிருக்கு அது முடிச்சிட்டு டெல்லி ரிட்டர்ன் ஆயிடுவேன்” எனக் கூறினான்.
அவளும் “ சரி வரும்போது இன்பார்ம் பண்ணுங்க.இங்கயே ஸ்டே பண்ணிக்கலாம், பை..” எனக்கூறி அழைப்பைத் துண்டித்து விட்டு திரும்பினாள் தேவ்வோ அவளையேப் பார்த்து கொண்டு இருந்தான்.
அவளோ அதனை கண்டுகொள்ளாமல், "ரிசல்ட்ஸ் இன்னிக்கே பாத்துடலாமா?….வேற ஏதும் டெஸ்ட் இருக்கா?... ஹார்ட் பம்பிங்யெல்லாம் செக் பண்ணனும்ல..” எனக் கூறினாள் .
அவனது மண்டையில் "யாரது நேத்ரன்..?” என்றக் கேள்வியே ஓடிக் கொண்டிருந்தது.
அதனைப் பற்றி காட்டிக்கொள்ளாமல் , "எஸ் ..இன்னிக்கே எல்லா ரிசல்ட்ஸூம் பாத்துடலாம். ஹார்ட் பம்பிங் நாளைக்கு சாயங்காலம் செக் பண்ணி பாக்கலாம்.வேற ஏதாவது தொந்தரவு அவனுக்கு இருக்கா? மூச்சு திணறல், பேசும்போது மூச்சு வாங்குறது,திடீர்ன்னு அதிகமா வேர்க்கறதுன்னு ஏதாவது இஷ்யுஸ் இருக்கா இல்ல இருந்திருக்கா…?” எனக் கேட்டான்.
ஆராதனாவோ, “இப்ப கொஞ்ச நாளா எந்த ப்ராப்ளமும் இல்ல ஆனா கொஞ்ச நாள் முன்னாடி ஓடி விளையாடும் போது கொஞ்சம் மூச்சு திணறல் இருந்தது, மயங்கியும் விழுந்து ட்டான் .”எனத் தெரிவித்தாள்.
“ம்ம்…சரி டெஸ்ட் ரிப்போர்ட் பாத்துட்டு சொல்றேன் " எனக் கூறி விட்டு அவனறைக்குச் சென்று விட்டான்.
அவளும் சூர்யாவும் பரிசோதனை அறையிலுருந்து மெதுவாக நடந்து அவனது அறைக்குச் சென்றார்கள்.
அனைத்து ரிப்போர்ட்களையும் பார்த்து விட்டு "ஹார்ட்க்கு ஃப்ளட் போற இடத்தில கொஞ்சம் ப்ளாக் இருக்கு ,அப்பறம் வால்வ் மஸில்ஸ் கொஞ்சம் திக்கான இருக்கு….சோ இரண்டையும் சரி பண்ணனும். பண்ணிடலாம்.... கவலப்படாதே ஃபுயூச்சர்ல அவன் நார்மல் லைப் லீட் பண்ணலாம். ஒன் இயர் கம்பீளிட் ரெஸ்ட் எடுக்கனும்… டேப்லட்ஸ் கொஞ்ச வருஷத்துக்கு கண்டின்யூ பண்ணனும். சர்ஜரி டேட் நீ டிசைட் பண்ணி சொல்லு… பத்து நாள்ல கூட பண்ணிடலாம்…வேற ஏதும் கேட்கனுமா?.....” எனத் தெளிவாக சூர்யாவின் உடல்நிலை குறித்து விளக்கினான்.
ஆராதனா ஒரு பெருமூச்சுடன், " ரொம்ப தாங்க்ஸ் சார்...அப்பறம் திரும்பவும் கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க அப்ராக்ஸிமேட்டா சர்ஜரி காஸ்ட் எவ்வளவு ஆகும்.ஏன்னா நான் அதுக்கு ஏத்த மாதிரி அரேஞ் பண்ணனும், சொல்லுங்க ப்ளீஸ்….” என்றாள்.
அவனோ இந்த முறை சரியான தொகையைக் கூறி ,” நீ சர்ஜரிக்கு அப்பறம் கூட பே பண்ணிக்கலாம் அவசரமில்ல….” என்றான்.
"எல்லாருக்குமே இந்த ஆப்ஷன் இருக்கா? ….” எனக் கூறினாள் .
அவள் கூற வருவது புரிந்தது அவளுக்கு மட்டும் இவ்வாறு சலுகை அளிக்கிறானா? என்ற எண்ணத்தில் கேட்டாள்.
அவளது முகத்திற்கு அருகில் வந்தவன் அவளது கண்களைப் பார்த்தவாறே , "முடியாதவங்களுக்கு சாரிட்டி மூலமா கூட ஏற்பாடு பண்ணுவோம்..” என அழுத்தமாக கூறினான்.
அவளோ அவனை விட அழுத்தமாக “ என்னால கட்ட முடியும் சார்…. ஆப்ரேஷன்க்கு முன்னாடியே பே பண்ணிடுவேன் சார்…. நாளைக்கு எப்ப வரணும் சார்…சர்ஜரி டேட் நாளைக்கு சொல்லிடுறேன்” எனக் கூறினாள்.
” ஈவ்னிங் நாலு மணிக்கு வந்துடு” எனக் கூறி விட்டு ,“நேத்ரன் யாரு?...” என்றான்.
”ஒட்டு கேட்டீங்களா?” என்றாள்.
“அது.. என் வேலயில்ல காதுல விழுந்துச்சு…” என நக்கலாக கூறி விட்டு அவளைப் பார்த்தான்.
“ அதே உங்களுக்கு தேவையில்லாதது தான் சார், நான் கிளம்புறேன் “ எனப் பேச்சை கத்திரித்து சூர்யாவுடன் கிளம்பிச் சென்றாள்.
அவள் செல்வதையே பார்த்து கொண்டு இருந்தான்.
அவளிடம நிறையவே மாற்றங்கள், அனைத்தும் வாழ்வில் அடிபட்டதால் வந்தது எனப் புரிந்தது. கைகளை கட்டி அவள் சென்ற பாதையை வெறித்து கொண்டிருந்தான்.
அத்தியாயம் 13
ஆராதனா சூர்யாவுடன் வந்தனாவின் வீட்டிற்கு வந்துவிட்டாள்.
வந்தனாவும் ரிஷியும் மருத்துவமனையிலுருந்து இன்னும் வரவில்லை என்பதனால் சகானா விஜயாம்மாவிடம் சமர்த்தாக விளையாடிக் கொண்டிருந்தாள்.
சூர்யாவை பார்த்தவுடன் தத்தி தத்தி அழகாக ஓடி வந்தாள்.அவள் ஒடி வருவதைப் பார்த்த சூர்யாவும் ஓடி அவளைப் பிடிக்கப் போனான்.
ஆராதனாவோ, “ ஓடாத…. சூர்யா நில்லு மெதுவா போ…” எனக்கூறி கொண்டே பின்னால் வேகமாக வந்து சூர்யாவை ஓடாமல் தடுத்தாள்.
” ஏன் அம்மூ? என்னைய ஓடவே விடமாட்டேங்குறீங்க,எல்லாரும் எப்படி ஓடி விளையாடுறாங்க நான்.. மட்டும்தான் எப்ப பார்த்தாலும் உக்காந்தே விளையாடுறேன்…” எனச் சிணுங்கினான்.
அவளுக்கோ மனம் பாரமாகிப் போனது.
ஆம்!....ஓடியாடி விளையாட வேண்டிய பருவத்தில் மருந்து மாத்திரைகளோடு போராடிக்கொண்டிருக்கிறானே இந்த பாலகன்.
“கவலப்படாதே சீக்கிரம் நீயும் ஓடியாடி விளையாடலாம் சூர்யா, ஓகே வா?....” எனக் கூறினாள்.
“ டாக்டர் சார் என்னய சீக்கிரம் மருந்து குடுத்து விளையாட வச்சிருவாரா?..... நெக்ஸ்ட் டைம் அவர்கிட்ட சீக்கிரம் என்னய விளையாட வச்சிட்டாருன்னா இன்னும் பிக் சாக்லேட் பார் அவருக்கு கொடுப்பேன்னு சொல்லுவேன்….” எனக் கூறினான்.
ஆராதனாவோ , “ சீக்கிரம் அவர் உன்னய கியூர் பண்ணிடுவார் தங்கம்…நீ வேணா பாரு …. டாக்டர் சார் கூடவே விளையாடப் போற….” எனக் கூறி அவனின் கன்னம் கிள்ளினாள்.
“ அய்... ஜாலி! ஜாலி! நான் ஓகே ஆகிட்டா , ஃபர்ஸ்ட் டாக்டர் சார் கூடத்தான் விளையாடுவேன்……” எனக் கூறி சிரித்தான்.
ஆராதனாவோ, “அத அப்புறம் பாத்துக்கலாம் இப்ப சாப்பிட்டுட்டு டாப்லெட்ஸ் போடலாம் வா” என்று கூறி சகானாவை தூக்கி வைத்தவாறே சூர்யாவை உணவு உண்ணும் மேசைக்கு அழைத்துச் சென்றாள்.
“ அம்மூ! சகானா ரொம்ப கியூட் ல” எனக் கூறினான்.”
"ஆமா .. சூர்யா.. சகானாகுட்டி அழகு தங்கம் தான்” எனக்கூறி சகானாவின் கன்னம் கிள்ளி கொஞ்சினாள்.
அழகாக சிரித்தபடி தத்தி தத்தி நடந்தாள் சகானா.
ஆராதனா அவளுக்கும் ஊட்டிவிட்டு வாயைத் துடைத்து விட்டாள்.
சிறிது நேரத்தில் ரிஷியும் வந்தனாவும் வந்து விட்டனர் .
மகளை கொஞ்சி விட்டு தங்களை சுத்தப்படுத்தி கொண்டு வந்தனர்.
ஆராதனாவே இருவருக்கும் தேநீர் கலந்து கொடுத்தாள்.
விஜயாம்மா வீட்டு சாமான்கள் வாங்க சென்று விட்டார்.எனவே சூர்யாவும் சகானாவும் விளையாடிக்கொண்டிருந்தனர்.
“ என்ன ஆரா? தேவ் என்ன சொன்னார் ?... ப்ராப்ளம் ஒண்ணும் இல்லையே?....” என வந்தனா கேட்டாள்.
“ ப்ராப்ளம் ஒண்ணும் இல்லடி.நாளைக்கு ஹார்ட் பம்பிங் மட்டும் செக் பண்ணிடலாம்.அப்பறம் சர்ஜரி டேட் நம்மள பிக்ஸ் பண்ணிக்க சொன்னார்.” என்று கூறி விட்டு ரிஷி யைப் பார்த்து,” அப்பா என் பேர்ல் கொஞ்சம் ஃபிகசட் டெபாசிட் போட்டுருக்காங்க எனக்கு அது எடுக்கனும் அதுக்கு மட்டும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க" எனக் கூறினாள்.
ரிஷி ஏதோ கூற வர , வந்தனாவோ ரிஷியின் தோளைத் தொட்டு அமைதியாக இருக்கும்படி சைகை செய்து விட்டு, “ சரி ஆராதனா அத எடுத்துடலாம்.ஆனா அது போதுமா?...சர்ஜரிக்கு பின்னாடி செலவுகள் இருக்கும் தானே.அதுக்கு என்ன பண்ணுவ?” எனக் கேட்டாள்.
” ஒண்ணும்… பிரச்சினை இல்லை டி,என்னோட நகை கொஞ்சம் இருக்கு அதை வச்சு யூஸ் பண்ணிக்கலாம்.”என கூறிவிட்டு, “ பத்து நாள்ல சர்ஜரி வச்சுக்கலாம் டி, சீக்கிரம் பண்ணுறது நல்லது. “ எனக் கூறினாள்.
ரிஷிக்கும் வந்தானாவிற்கும் சரி என்பதை தவிர வேறு எதுவும் கூறமுடியாத நிலை.
மறுநாள் தேவ் வின் மருத்துவமனைக்குக் சென்று சூர்யாவின் பரிசோதனையை முடித்து விட்டு அறுவை சிகிச்சையின் தேதியை குறித்து விட்டு வந்தாள்.
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தன.இடையில் ஒரு நாள் அறுவை சிகிச்சைக்கான தொகையை செலுத்த வந்திருந்தபோது தேவ் எதுவும் கூறாமல் அவளை ஒரு பார்வை மட்டுமே பார்த்தான்.அதைனை கண்டுகொள்ளாமல் பணத்தை செலுத்தி விட்டு சென்று விட்டாள்.
நிராகரிப்பின் வலியை இப்போது தேவ் நன்றாகவே உணர்ந்தான்.
உயிரற்ற பொருளோ உயிருள்ள பொருளோ எதுவாயினும் அருகில் இருக்கும் போது அதனுடைய அருமை நமக்கு தெரிவதில்லை.நம்மை விட்டு அது தொலைவில் சென்றால் தான் அதனை கைக்குள் வைத்துக் கொள்ள மனம் பரபரக்கும். தேவ்வின் மனநிலையும் அதே போல்தான் இருந்தது.
இதனிடையே தேவ் வின் தாயும் தந்தையும் மிகவும் பிடிவாதமாக லய வர்ஷினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் அவனுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.
அவனுக்கோ சரியென்றோ வேண்டாமென்றோ சொல்லமுடியாத நிலை.அவன் மனது அவனுக்கே புரியாத நிலையில் தெளிவாக முடிவெடுக்க முடியாமல் தத்தளித்தான்.முதலில் சூர்யாவின் அறுவை சிகிச்சையை முடித்து விட்டு பிறகு முடிவு செய்யலாம் என்று நினைத்திருந்தான் .
அறுவை சிகிச்சைக்கான நாளும் வந்தது.சூர்யா முதல் நாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.அவனது உடல்நிலை சீராக உள்ளதா என மணிக்கொருதரம் பரிசோதனை செய்யப்பட்டது.
தேவ்வினுடைய நேரடி கண்காணிப்பில் இருந்தான் சூர்யா.அவனே தனிப்பட்ட முறையில் சூர்யாவை நன்றாக பார்த்துக் கொண்டான்.சிறிது நேரம் சூர்யாவுடன் பேசி அவனது விருப்பங்களை தெரிந்து கொண்டான்.
காலையிலிருந்து ஆராதனாவுடன் வந்தனா துணையாக இருந்தாள் . பின்னர் வந்தனாவை இரவில் சகானா தேடுவாளென வீட்டிற்கு அனுப்பி விட்டாள் ஆராதனா . சிறிது நேரம் கூட கண்ணுறங்காமல் விழித்தே இருந்தாள் ஆராதனா.மனம் முழுவதும் ஏதோ பாரம் அழுத்தியது.
மறுநாள் விடியல் யாருக்கும் காத்திராமல் அழகாக விடிந்தது . விடிந்து சற்று நேரம் கழித்து தேவ்வினுடைய அறைக்குச் சென்றாள் ஆராதனா.அவனோ வீட்டிற்கு செல்லாமல் அவனுடைய அறைக்குள்ளே அமைந்திருக்கும் குளியலறையில் குளித்துவிட்டு அறுவை சிகிச்சை செய்வதற்கான நீல நிற உடையில் இருந்தான்.
” மே ஐ கம் இன் சார்” என அனுமதி கேட்டாள்.
“உள்ள… வா ஆரா ” எனக்கூறி விட்டு அவளை அமரச் சொன்னான்.
அவளோ , “ எனக்குன்னு இருக்குற உறவு இவன் மட்டும் தான்.எப்படியாவது அவன் சீக்கிரம் குணமாகி வரணும்.என் மேல் என்ன கோவம் இருந்தாலும் அத இங்க காட்டிடாதீங்க.ப்ளீஸ்.உங்ககளுக்கு நான் ரொம்பவே நன்றிக் கடன் பட்டுருக்கேன்.அவன் நல்லபடியா சீக்கிரம் எழுந்து நடமாடனும்.உங்களுக்கு ஏதாவது நன்றிக்கடனா செய்யனும்னு ஆசைப்படுறேன்.ஏன்னா நேத்திலயிருந்து அவன் கூடவே இருந்து அவன நல்லபடியா கவனிச்சுகிட்டீங்க . ரொம்ப தாங்க்ஸ்.” என பயத்தின் காரணமாக முன்னுக்கு பின் முரணாக பேசிக்கொண்டே போனாள்.
முதலில் அவள் கூறியது தேவ்விற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.ஆனால் அவள் பேசப் பேச சூர்யாவின் மீதான அதீத பாசத்தில் முரண்பாடாகப் பேசுகிறாள் எனப் புரிந்தது.
இப்போது அவன் ஏதாவது பேசினால் அதை புரிந்து கொள்ளும் மனநிலையில் அவளில்லை எனத் தெளிவாக தெரிந்தது.
எனவே தேவ் அவளருகில் வந்து அவளது முகத்திற்கு அருகே அமைதியானக் குரலில்,” ஆராதனா…. டோண்ட் வொர்ரி.அவன் சீக்கிரம் குணமாகி மத்த குழந்தைகளைப்போல விளையாடுவான்.எதிர்காலத்துல அவனால் நார்மல் லைப் லீட் பண்ண முடியும்.ஒரு வருஷத்துக்கு கொஞ்சம் அவன நல்லாப் பாத்துக்கணும்.அப்பறமா அவன ஸ்கூல்ல போட்டுடலாம். ஃபிளீஸ் ஸ்டே காம்”.எனக் கூறி அவளது கைகளைப் ஆறுதலாகப் பற்றி லேசாக அழுத்தினான்.
அவளுக்கும் அது தேவையானதாக இருந்தது.கண்களிலுருந்து கண்ணீர் கன்னம் தாண்டி வழிந்தோடியது.
அவனே அதை துடைத்து விட்டான்.பின்பு “இதுக்கெல்லாம் கண்டிப்பா உன்னோட நன்றி கடன் நீ காட்டித்தான் ஆகனும்” என அவளை சமாதானம் செய்யும் பொருட்டு பேச்சை மாற்றினான்.
அவளோ கண்களை துடைத்துக் கொண்டே “ நிச்சயமா சார்” என உறுதியாகக் கூறினாள்.
அவனோ,” ஹேய் …ஜஸ்ட் ரிலாக்ஸ்….நா சும்மா சொன்னேன்…நீ போய் ரெடி ஆகு.சூர்யாவை ஆப்ரேஷன் தியேட்டர் கொண்டு போகனும்.” எனக்கூறி அவளைத் தயாராகி வரச்சொன்னான்.
அவள் சூர்யாவின் அறைக்குச் சென்ற போது வந்தனாவும் ரிஷியும் வந்திருந்தனர்.அவளோ வேகமாக தயாராகி வந்தாள்.செவிலியர்கள் வந்து சூர்யாவை தயார் செய்து அறுவை சிகிச்சை அறைக்குள் அழைத்துச் சென்றனர்.கண்களில் கண்ணீரோடு அமர்ந்திருந்தாள் ஆராதனா.தாய், தந்தை, தமக்கை அவளின் கணவர் என்று தனக்கென இருந்த உறவுகள் அனைத்தும் பறிபோய்விட்டது, மீதமிருக்கும் ஒரே உறவு சூர்யா மட்டுமே அவன் மட்டுமே அவளை மீட்டெடுத்து வைத்திருக்கும் வாழ்வின் ஜீவாதாரம்.அவனைப் பற்றுகோலாய் கொண்டே அவளின் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது .
சற்று நேரத்தில் தேவ் கையுறையையும் முகக்கவசத்தையும் அணிந்து கொண்டே அறுவைசிகிச்சை நடைபெறும் அறைக்குள் நுழைந்தான்.
வந்தனாவோ ஆராதனாவிற்கு அருகில் அமர்ந்திருந்தாள்.ரிஷியோ இருவருக்கும் எதிரே அமர்ந்திருந்தான்.குழந்தை சகானாவை விஜயாம்மாவிடம் விட்டுவிட்டு வந்திருந்தனர்.
இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வந்தான் தேவ்.
கதவுகள் திறந்ததும் பாய்ந்து ஒடி அவனருகே நின்று அவனது முகத்தினை பார்த்தாள் ஆராதனா.
அவனோ முகக்கவசத்தை கழட்டியபடி,” பயப்படாதே... ஆராதனா நல்லபடியா ஆப்ரேஷன் முடிஞ்சது. ஐ.சி.யு ல இன்னும் ஒரு நாளைக்கு இருக்கனும்.இப்போதைக்கு இங்கிருந்தே பாத்துக்கோ.நாளைக்கு பக்கத்துல போய் பாக்கலாம் . லிக்விட் புட் தான் போகனும்.நீ முதல்ல போய் ஏதாவது சாப்ட்டு வா..மத்ததெல்லாம் அப்பறம் பேசிக்கலாம்.” என்றான்.
அவளோ உணர்ச்சி பெருக்கில் அவனது கைப்பற்றி நன்றி தெரிவித்தாள்.
"இது என்னோட டியூட்டி தான் ஆராதனா.நா பெருசா எதுவும் பண்ணல.சோ நீ இவ்வளவு ஃபீல் பண்ண தேவையேயில்லை…ரிஷி!.. நீ இவங்கள கூப்பிட்டு போய் ஏதாவது சாப்பிட வைச்சு கூட்டிட்டு வா.அவன் கண் முழிக்கும் போது நீ மயங்கி விழுந்துடாதே” என்றவாறு தனதறைக்குச் சென்றான்.
இரு நாட்களுக்கு பின் நன்றாகவே கண் விழித்து பார்த்தான் சூர்யா.
மருந்தின் வீரியத்தினால் துவண்டு போய் இருந்தான் சூர்யா.
அதனைக் கண்டு ஆராதனா வின் மனது வெதும்பியது.இருப்பினும் அதனை வெளிக்காட்டாமல் அவனை கவனமாகப் பார்த்துக் கொண்டாள்.
தேவ்வும் காலை மாலை என இரு வேளையும் அவனை பரிசோதித்து விட்டு சென்றான். மூன்றாம் நாள் காலை டாக்டர் நேத்ரன் தேவ்வின் மருத்துவமனைக்கு வந்து சூர்யாவைப் பார்த்தான்
டாக்டர் நேத்ரன் டெல்லியில் ஆராதனாவோடு பணிபுரியும் மருத்தவர்.வயது இருபத்தி ஒன்பது திருமணம் இன்னும் ஆகவில்லை.மனதில் ஆராதனா வை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உண்டு .
ஆனால் தன் விருப்பத்தை இன்னும் அவளிடம் தெரியப்படுத்தவில்லை.அவளுக்கு கஷ்டப்படும் நேரத்தில் உதவி செய்ததால் உரிமை எடுத்துக் கொள்வதாக நினைத்துக் கொள்வாளோ என்ற தயக்கம்.
இந்த முறை அவளிடம் சம்மதம் பெற்றே தீர வேண்டும் என்ற முடிவுடன் வந்திருந்தான் நேத்ரன்.
யாருக்கு யாரோ?... .காலம் என்ன செய்ய காத்திருக்கிறதோ....... பார்ப்போம்..
அத்தியாயம் 14
சூர்யாவின் அருகிலே இருந்து கவனமாகப் பார்த்து கொண்டாள் ஆராதனா.
வந்தனாவோ தான் இருந்து சூர்யாவை பார்த்து கொள்வதாகவும் இவளை வீட்டில் சிறிது நேரம் ஓய்வெடுத்து கொண்டு வருமாறு கூறினாள்.ஆனால் அதனை ஆராதனா மறுத்து விட்டாள் .
நேத்ரன் ஏற்கனவே ஆராதனாவிற்கு அலைப்பேசியில்அழைத்து தான் வேலையை முடித்துவிட்டு நேராக மருத்துவமனைக்கு வருவதாக கூறியிருந்தான்.
அவன் சூர்யாவின் அறையில் நுழையும் போது,தேவ் சூர்யாவை பரிசோதனை செய்து கொண்டிருந்தான்.
“ வாங்க நேத்ரன்…எப்படியிருக்கீங்க?..” என வரவேற்றாள் ஆராதனா.
நேத்ரனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டிருந்த தேவ்வோ சட்டென திரும்பிப்பார்த்தான்.
ஆறடிக்கு சற்று குறைவாக,அடர்ந்த சிகையுடன் கட்டுக்கோப்பான உடற்கட்டுடன் கோதுமை நிறத்தில் இருந்தான் நேத்ரன்.
” ஹலோ சார் ,ஐ யம் நேத்ரன் ஃப்ரம் பி.எல்.கே ஹாஸ்பிட்டஸ், டெல்லி”என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
தேவ்வோ அவனுடன் கைக்குலுக்கி விட்டு “ ஹலோ நேத்ரன்” என்று மட்டும் கூறிவிட்டு ஆராதனாவின் பக்கம் திரும்பி சூர்யாவிற்கு மருந்துகளை கொடுப்பது பற்றி கூறிவிட்டு நகர்ந்தான்.
நேத்ரன் சூர்யாவின் அருகில் வந்து அவனது தலையைக் கோதி விட்டு , "ஹவ் ஆர் யூ லிட்டில் ப்ரின்ஸ்?" எனக் கேட்டான்.
சூர்யா மெதுவாக," ஐ ..யம் ஃபைன் அங்கிள் " எனக் கூறினான்.
பிறகு தேவ்வினைப் பார்த்த நேத்ரன்,” ஹீலிங்க்கு என்ன விதமான டாப்லெட்ஸ் பிரிஸ்க்ரைப் பண்ணிருக்கிங்க டாக்டர் …?” என சாதாரணமாகத்தான் கேட்டான்.
தேவ்விற்கோ சுறுசுறுவென ஏறியது ஏனெனில் ஏற்கனவே ஆராதனா அலைப்பேசியில் பேசிய நேத்ரன் இவன்தான் என யூகித்தான். எனவே சற்றே எள்ளலுடன்,” ஆராதனா கிட்ட சொல்லிருக்கேன்…ப்ளீஸ் கேட்டுக்கோங்க” என தனது அறைக்குச் சென்று விட்டான்.
அவனது பதிலில் ”உனக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை….” என்ற பொருள் மறைமுகமாக இருந்தது.
நேத்ரனின் முகம் நொடியில் மாறி பின்னர் இயல்பாகிவிட்டது.
சிறிது நேரம் ஆராதனாவுடன் பேசிவிட்டு கிளம்பி விட்டான்.
ஆராதனாவோ சூர்யாவை விட்டும் மருத்துவமனையை விட்டும் நகரவேயில்லை.அவளது ஜீவன் சூர்யா மட்டுமே.எனவே கண்ணும் கருத்துமாய் அவனை பெறாத தாயாகப்பார்த்து கொண்டாள்.
ஒரு நாள் வந்தனா அதிரடியாக ஆராதனா வை தனது வீட்டிற்கு அனுப்பி ஓய்வெடுத்து விட்டு வரச் சொல்லி மிகவும் வற்புறுத்தி அனுப்பி வைத்தாள்.
அவளோ அரை மனதாகவே வந்தானவின் வீட்டிற்குச் சென்று சற்று நேரம் ஓய்வெடுத்து திரும்பி வந்து கொண்டிருந்தாள்.
மருத்தவமனை வளாகத்தில் சிறிய பிள்ளையார் கோயில் ஒன்று இருந்தது.
அதனருகே வரும் போது நேத்ரனும் எதிரே வந்தான்.
ஆராதனாவோ ,” ஹாய் நேத்ரன் எப்ப வந்தீங்க?.. ஃபோன் பண்ணிருக்கலாமே சீக்கிரம் வந்திருப்பேனே,கிளம்பிட்டீங்களா? ...“ எனக் கேட்டாள்.
” பரவாயில்ல நீ பர்ஸ்ட் நல்லா ரெஸ்ட் எடுத்தியா?.நான் வந்து ஒன் ஹவர் ஆச்சு.வந்தனாவும் ரிஷியும் தான் நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு அப்படியே மாத்துறதுக்கு வேற டிரஸ் எடுத்துட்டு வரப்போறதா சொன்னாங்க.நோ ப்ராப்ளம் ஆரா…..நான் இன்னிக்கு நைட் கிளம்பனும். வந்த வேலை முடிஞ்சது.அதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்.தப்பா எடுத்துக்காத ப்ளீஸ்…” என நிறுத்தி அவளது முகத்தைப் பார்த்தான்.
அவளோ அவனைப் புரியாத பார்வை பார்த்து விட்டு,” சொல்லுங்க நேத்ரன் “ என்றாள் .
”நேரடியா விஷயத்துக்கு வர்றேன் .நான்... உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் ஆராதனா.உன்னையும் சூர்யாவையும் நல்லாப் பாத்துப்பேன். நீ என் கூடயிருந்தா என் லைஃப்
நல்லாயிருக்கும்ன்னு நினைக்கிறேன்.சோ... வில் யூ அக்சப்ட் மை பிரபோசல்?..” என ஒரு வழியாகக் கூறி முடித்தான்.
அவளோ அவனைப் பார்த்து மென்மையாக புன்னகைத்து, “ ஐ யம் சாரி நேத்ரன் ...எனக்கு இப்ப கல்யாணத்துல இன்ட்ரெஸ்ட் இல்லை.நீங்க ஒரு நல்லப் பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க” என முடித்து விட்டாள்.
நேத்ரனோ,” அப்படி சொல்லாத ஆரா …உனக்குன்னு ஒரு லைஃப் இருந்தா சப்போர்டிவ்வா இருக்கும் எவ்வளவு கஷ்டங்கள் உன் லைஃப் ல...,உன்ன நான் நல்லா பாத்துக்கணும் ன்னு ஆசைப்படுறேன்”என விடாமல் அவளை வற்புறுத்தினான்.
” உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி… நேத்ரன்.ஆனா இப்போதைக்கு என்னால எதைப்பத்தியும் யோசிக்க முடியாது ....சோ...என்னைய வள்புறுத்தாதீங்க.” என அந்த பேச்சை மேலும் தொடர விரும்பாமல், “ உங்க அப்பா அம்மாவ கேட்டதா சொல்லுங்க,சரி நா கிளம்புறேன்.வந்தனாவும் ரிஷியும் வீட்டுக்கு கிளம்பனும் பா....பை நேத்ரன்.சீக்கிரம் டெல்லிக்கு வரப் பாக்குறேன்.நீங்க டீன் கிட்ட மட்டும் கொஞ்சம் சொல்லிடுங்க” எனக் கூறினாள்.
அவனுக்கு புரிந்தது திருமணப்பேச்சு அவளுக்கு பிடிக்கவில்லை என உடனே ,” சரி ஆராதனா டேக் கேர்.நா டீன் கிட்ட பேசிடுறேன்.சூர்யாவ பாத்துக்கோ,என்ன உதவி தேவைப்பட்டாலும் தயங்காம கேளு.வீ ஆர் ஹியர் ஃபார் யூ,பை…” எனக்கூறி விட்டு சென்றுவிட்டான்.
அவளோ அவன் சென்றதை சிறிது நேரம் பார்த்து விட்டு சூர்யாவின் அறையை நோக்கிச் சென்றாள்.
இவை அனைத்தும் கோவிலின் பின்புறம் உள்ள சிறிய பூங்காவில் வட்ட வடிவமைப்பு கொண்ட கல்மேசையில் அமர்ந்திருந்த தேவ் மற்றும் ரிஷி கேட்டுவிட்டனர்.
பூங்காவின் ஒரு பக்கம் அடைப்பாக இருந்ததால் ஆராதனா மற்றும் நேத்ரனால் ரிஷி மற்றும் தேவ்வை பார்க்க முடியாது போனது ,ஆனால் ரிஷி மற்றும் தேவ்விற்கு அவர்களைப் பார்க்க முடியாவிட்டாலும் அவர்களின் உரையாடல் தெளிவாக காதில் விழுந்தது.
தேவ்விற்கு ஆராதனா நேத்ரனை திருமணம் செய்ய முடியாது எனக் கூறியது மயிலிறகு வருடியது போல் இதமாக இருந்தாலும் எங்கே நேத்ரன் திரும்பவும் வந்து அவளை திருமணத்திற்கு மீண்டும் வற்புறுத்திவிடுவானோ என்ற எண்ணம் மோலோங்கியது.
ரிஷியும் தேவ்வும் சற்று நேரத்திற்கு முன்புதான் அருகிலிருந்த கேஃபிடேரியாவில் தேநீர் அருந்திவிட்டு அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
ரிஷி அவனிடம் ஆராதனா கல்லூரியை விட்டு நின்ற பிறகு நடந்த விஷயங்களை அவனிடம் தெரிவித்தான்.
அதைக் கேட்டுவிட்டு அமைதியாக சிறிது நேரம் அமர்ந்திருந்த போதுதான்
அவர்களின் பேச்சுக்களை கேட்க நேர்ந்தது.
ரிஷியோ, “ என்னடா இந்த கோதுமை மூஞ்சி இப்படி பேசிட்டு போறான்.நீ என்னடா பண்ணப்போற?”எனக் கேட்டான்.
” தெரியல டா பாப்போம் …” எனக் கூறி கொண்டிருக்கும் போது அவனது அலைப்பேசி அலறியது,எடுத்துப் பார்த்தான் புதிய எண்ணாக இருந்தது.
"யாராக இருக்கும் ?” என யோசித்து கொண்டே எடுத்து,” ஹலோ! “ என்றான்.
“ ஹாய் ! தேவ்.. நான்தான் லயவர்ஷினி பேசுறேன்.எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டாள்.
” ஹான்…. சொல்லுங்க வர்ஷினி “ எனக் கூறினான்.
“ என்ன ?..ஒண்ணும் தெரியாத மாதிரியே கேக்குறீங்க…இன்னிக்கு உங்க அப்பா அம்மா வந்து நேரடியாக கல்யாணத்துக்கே நாள் குறிச்சிட்டு போய்ட்டாங்க, ஐ யம் சோ... ஹேப்பி. உங்கள நேர்ல பாக்கனும்னு இருக்கு. இந்த வீக் எண்ட் மீட் பண்ணலாமா?” எனத் தொடர்ந்து அவளோ பேசிக்கொண்டே போனாள்.
தேவ்வினுடைய முகமோ மாறியது . பின்னர் ஏதோ அவளிடம் பேசி சமாளித்து விட்டு அலைப்பேசியை அணைத்தான்.
” என்னடா என்ன ஆச்சு?” என ரிஷி அவனின் தோளினைத் தொட்டான்.
தேவ்வோ,” வீட்ல வரன் பாத்து கல்யாணத்துக்கு தேதி குறிச்சிட்டாங்க” என சுருக்கமாக வீட்டில் நடந்ததை கூறினான்.
” ஏன்டா.. இவ்வளவு நடந்திருக்கு ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லல நீ….” எனக் கேட்டான் .
” அதான் இப்ப சொல்லிட்டேனே” என்றான் தேவ்.
ரிஷியோ, “ எப்பா.. டேய்…என்னால முடியல டா…ஏன்டா நீ இப்படி இருக்க…?” என ஆதங்கத்தை காட்டினான் ரிஷி.
தேவ் ஒரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தான் பின்னர் ஏதோ ஒரு முடிவுக்கு வந்து ,” எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணணும்” எனக் கேட்டான்.
"சொல்லு டா” என்றான் ரிஷி.
அவனிடம் சில விஷயங்களைப் பகிர்ந்தான் தேவ்.
அதனை கேட்ட ரிஷியோ, "இதெல்லாம் சரி வருமா டா? “ என சிறிதே கலக்கத்துடன் கேட்டான்.
“ ட்ரை பண்ணி பாக்கலாம் ரிஷி “ என்று கூறிவிட்டு யோசனையுடன் தனது அறைக்குச் சென்றான்.
பிறகு சூர்யாவின் உடல்நிலையை கேட்டுவிட்டு ஆராதனாவைப் பார்த்தான்.
அவளோ சூர்யாவை கவனிப்பதிலேயே மும்முரமாக இருந்தாள்.
அதன்பிறகு தன் வீட்டிற்கு கிளம்பிச் சென்றான்.
வீட்டிற்கு வந்தவுடன் அவனது தாயார் அவனுக்கு உணவினை பரிமாறி விட்டு அவன் சாப்பிட்டு விட்டு வரும் வரை காத்திருந்தார்.
அவன் கை கழுவி விட்டு வந்தப் பின்.” தேவ், உன்கிட்ட பேசணும் பா” என்றார்.
அவனோ முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் , “ அதான் அவசர அவசரமா போய் கல்யாண ஏற்பாடு பண்ணிட்டு வந்துட்டீங்களே…வேற என்ன புதுசா?” என கத்தரித்து பேசினான்.
” அதில்லை... பா” என ஆரம்பித்தவரை கைகளை பூந்துவாலையால் துடைத்த வாறே அவரை கையமர்த்தி ,” ம்ம் …உங்க கிட்ட பேச விரும்பமில்லை….உங்க இஷ்டம் போல செய்யுங்க..” என முடித்து விட்டு வேகமாக மாடிக்குச் சென்றான்.
லதாவோ விக்கித்துப் போய் நின்றார்.
பிரசாத் அவரருகில் வந்து, "என்னடி?... இப்படி பேசிட்டு போறான்.என்ன பண்றது இப்ப?....” எனப் பதட்டமாக கேட்டார்.
லதா சிறிது நிதானித்து கொண்டு,” பாத்துக்கலாம் விடுங்க “ என ஒரே வார்த்தையில் முடித்து கொண்டார்.
பிரசாத்திற்கோ தலையை பிய்த்துக் கொள்ளலாம் என்று இருந்தது.
தலையில் கை வைத்தவாறு அமர்ந்துவிட்டார்.
நாட்கள் அதன்போக்கில் சென்றது .
சூர்யாவின் உடல்நிலை தேறி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான்.
அனைத்திற்க்கும் தேவ் முன்னிருந்தான்.சூர்யா கிளம்பும் முன் தேவ்வின் முன்னால் வந்து ,” நா சீக்கிரம் சரியாகிட்டா நீங்களே வந்து என் கூட வந்து விளையாடுவீங்கன்னு அம்மூ சொன்னாங்க” என்று கூறிவிட்டு தேவ்வை பார்த்தான்.
தேவ்வோ திரும்பி ஆராதனாவை ஆழ்ந்து பார்த்தான்.
அவளோ சிறு திடுக்கிடலோடு அவனைப் பார்த்தாள்.
அவனோ அதை பொருட்படுத்தாமல் அவளிடம் சூர்யாவிற்கு தர வேண்டிய மருந்துகள் மற்றும் பத்திய உணவுகளை கூறி அவற்றை பின்பற்றச் சொன்னான்.
அவளோ அதையெல்லாம் கவனத்துடன் கேட்டுக் கொண்டே,” திரும்பவும் ரொம்ப நன்றி சார்...சூர்யாவ பெர்சனல் கேர் எடுத்து டீரிட்மெண்ட் பண்ணதுக்கு.”எனக் கூறி விடைபெற்றுச் சென்றாள்.
அவள் சென்ற பிறகு அவனின் மனதும் அவளுடனே சென்றது போன்றதொரு உணர்வு.
நெடுநேரம் அவள் சென்ற வழியேப் பார்த்து கொண்டிருந்தவன் தன்னிலை அடைவதற்கு நீண்ட நேரமானது.அப்போது தான் புரிந்தது அவனுக்கு தன்னுடைய இதயத்தை ஊடுருவிக் கொண்டு ஆராதனா சென்றுவிட்டாளென.
நேச விதையானது ஆழமாக ஊன்றி அவனது மனதில் விருட்சமாக வளரத் தொடங்கியது .
அத்தியாயம் 15:
ஆராதனாவைப் பார்த்து பத்து நாட்களாகி விட்டது.
அன்று ஞாயிற்று கிழமை.மெதுவாக தன் விழிகளைத் மெல்லத்திறந்து நேரத்தைப் பார்த்தான் தேவ் .
கடிகாரம் எட்டு பதினைந்தை காட்டியது சோம்பலாக எழுந்து அமர்ந்தான்.
லயவர்ஷினியை இன்று காலை ஒன்பதரை மணிக்கு காஃபி ஷாப்பில் சந்திப்பதாக கூறியிருந்தான்.
அதே சிந்தனையுடன் கண்ணாடி முன் நின்று தனது முகத்தை பார்த்தான்.நான்கு நாட்களாக மழிக்கப்படாததால் கன்னத்தில் லேசான முடிகள் எட்டிப் பார்த்தது.அவற்றை தடவியவாறு யோசனையுடன் நின்றிருந்தான்.
தான் செய்யப்போவது நிச்சயமாக அனைவருக்கும் வருத்தம் தரும் தான்.ஆனால் என்ன செய்வது இதனைத் தவிர வேறு எந்த வழியும் புலப்படவில்லை.எது நடந்தாலும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் தயாராகி கிளம்பி கீழே வந்தான்.
அவனது தாய் உணவு பரிமாற நின்றிருந்தார்.
அவனோ தாயிடம் பேசாமல் உணவினை உண்டுவிட்டு கிளம்பிவிட்டான்.
அவருக்கோ வருத்தமாகத்தான் இருந்தது . இருந்தாலும் மகன் தன்னை மீறி எதுவும் செய்யமாட்டான் என்ற நம்பிக்கையில் தானும் உணவு உண்டுவிட்டு எழுந்தார்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.
தேவ் சரியான நேரத்திற்கு காஃபி ஷாப்பிற்கு சென்றுவிட்டான்.
அங்கு அவன் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட மேசையில் அமரந்திருந்தான்.
சற்று நேரத்தில் .அடர்நீல நிற சல்வாரில் முடியை தோளின் இரு புறமும் படர விட்டு தேவதையென முகம் கொள்ளாப் புன்னகையுடன் அவனிற்கு எதிர்புற நாற்காலியில் வந்தமர்ந்தாள்.
”ஹாய்!….தேவ் குட் மார்னிங், வந்து ரொம்ப நேரமாச்சா?” எனக் கேட்டபடி அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
“ இல்ல... ஜஸ்ட் டென் மினிட்ஸ் தான் ஆச்சு".
எனக் கூறினான் தேவ்.
“ கேக்குற கேள்விக்கு மட்டும் ஒன்வேர்ட் அன்ஸர் மாதிரி பதில் சொல்றீங்க,” என கேலியாகக் கூறினாள்.
அதற்கும் அவன், ” அதிகம் பேசி பழக்கமில்லை “. என ஒரு வரியில் முடித்தான்.
அவளோ , "பார்றா….அதுக்கும் ஒரு வரி தானா?...” எனக் கேட்டுவிட்டு தோளைத் குலுக்கினாள்.
"நான்அப்படித்தாங்க….சரிமுதல்ல ஏதாவது ஆர்டர் பண்ணிடலாம் ,எனக்கு கோல்ட் காஃபி, உங்களுக்கு?” எனக் கேட்டான் தேவ்.
அவளோ,” எனக்கு ஹாட் சாக்லேட் “என்றாள்.
தேவ் ஆர்டர் செய்துவிட்டு அவளைப் பார்த்தான்.
“ சரி சொல்லுங்க….உங்க அப்பா அம்மா கல்யாணத்துக்கு டேட் பிக்ஸ் பண்ணிட்டு போயிட்டாங்க…எனக்கும் உங்கள பிடிச்சிருக்கு, ஆனா...? உங்க வாய்ல இருந்து இன்னும் நீங்க என்னை பிடிச்சிருக்குன்னோ இல்லை என்னைய கல்யாணம் பண்ணிக்க சம்மதம்முன்னோ சொல்லல.ஓப்பனா எதா இருந்ததாலும் பேசிடுங்க…” என்றாள்.
அவனோ ஒரு பெருமூச்சுடன்,” நான் சொல்றது நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல.பட் எனக்கு இது விட்டா வேற ஆப்ஷன் இல்ல…” என்று கூறி நிறுத்தினான்.
அவளது முகம் மாறியது , "சொல்லுங்க தேவ்….”என்றாள்.
அவனோ மிகுந்த தயக்கத்துடன் தான் கூற வேண்டியவற்றை சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறி முடித்தான்.
அவளது முகமோ கோபத்தில் சிவந்தது, "என்ன ?...என்னைய பாத்தா எப்படி தெரியுது உங்களுக்கு...?” என சிறிது சத்தமாக பேச ஆரம்பிக்கும் முன் அவர்கள் ஆர்டர் செய்தது வந்தது.
தேவ்வோ, “ முதல்ல இத சாப்பிடுங்க ப்ளீஸ்…. அப்புறம் நான் சொன்னத யோசிச்சு பாருங்க.நிதானமா யோசிச்சு பதில் சொல்லுங்க” எனக் கூறினான்.
அவளோ அவனை முறைத்தவாறே தனது ஹாட் சாக்லேட்டை எடுத்து பருகினாள்.
அவனும் தனது கோல்ட் காஃபியைப் பருகினான்.இருவரும் குடித்து முடிக்கும் வரை எதுவும் பேசவில்லை.
லயவர்ஷினியோ,” உங்க முடிவுல மாற்றம் இல்லையா?....” எனத் திரும்பக் கேட்டாள்.
“ இல்ல ..அண்ட் ஐ யம் சாரி" என்றான்.
அவளோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல்,” நான் வீட்டுக்கு போய் மெஸேஜ் பண்ணுறேன்” என மிடுக்காக கூறிவிட்டு தான் சாப்பிட்டதற்கான பணத்தையும் அவனிடம் வைத்து விட்டு வெளியேறினாள்.
அவனோ ஒரு பெருமூச்சுடன் பணத்தை செலுத்தி விட்டு கிளம்பினான்.
வீட்டிற்கு வந்தவுடன் தன் தாயினை அழைத்து தனது திருமணச் செலவுகளை தானே பார்த்து கொள்வதாகவும் அதற்கான தொகையை அவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விடுவதாக கூறினான். மேலும் திருமணத்திற்கு பெண்ணிற்கான நகைகள் மற்றும் புடவையை தான் பார்த்துக் கொள்வதாக கூறிவிட்டான்.
அவனது பெற்றோருக்கு இம்மையும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை அவனது நடவடிக்கையில்.
ஆனால் அவன் மீதுள்ள நம்பிக்கையில் அவர்களோ,” சரிப்பா…நீ சொன்னபடியே செஞ்சிடலாம்” எனக் கூறினார்கள் .
இங்கு சூர்யாவின் உடல்நிலை நன்றாகவே தேறிக் கொண்டு வந்தது.
இடையில் ஒரு நாள் தேவ்விடம் சூர்யாவுடன் மறுபரிசோதனைக்குச் சென்று விட்டு வந்தாள் ஆராதனா.
ஒரு நாள் ரிஷி, ஆராதனா மற்றும் வந்தனா அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
அப்போது ரிஷி ,”தேவ் இன்னுமே ரெண்டு ஹாஸ்பிட்டல் கட்டியிருந்திருக்கலாம் ஆனா நடுவுல ஏற்பட்ட பிரச்சினையில இருந்து அவனால மீண்டு வரவே ரொம்ப நாளாச்சு” எனக்கூறி பெருமூச்சு விட்டான்.
“ ஏன்? என்ன ஆச்சு?...” என ஆராதனா கேட்டாள்.
“நீ காலேஜ் விட்டு போறதுக்கு முன்னாடி தான் அவனுக்கு ஒரு ஃபோன் கால் வந்தது. தேவ்வோட அப்பா பிரசாத்தோட பார்ட்னர் ஒருத்தர் பல கோடி ரூபாய் மோசடி பண்ணிட்டார் .அது மட்டுமில்ல போலி வைரத்தை விக்கறத்துக்கு தேவ்வோட அப்பாவோட பெயரை யூஸ் பண்ணிக்கிட்டார்.அந்த பழியும் தேவ்வோட அப்பா மேல விழுந்ததுனால அவருக்கு சிவியர் ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு.நிலைமை ரொம்பவே கை மீறி போயிடுச்சு.தேவ்வாலையும் சமாளிக்க முடியாம ரொம்பவே திணறி போயிட்டான்.சேவிங்க்ஸ் எல்லாம் கடன் அடைக்கவே சரியா போச்சு. மதுரையில அவங்களுக்கு இருக்குற பரம்பரை வீட்டையும் விக்குற அளவுக்கு அவ்வளவு கடன். எல்லாத்தையும் சமாளிச்சான்.நடுவுல ஒரு வருஷம் அவங்க அப்பாவோட வியாபாரத்தை அவரோட ஃபிரண்ட் மணிகண்டன் சாரோட சேர்ந்து தூக்கி நிறுத்தவும், பழைய நிலைக்கு இல்லாட்டியும் கடனில் லாம் வாழற அளவுக்கு வியாபாரத்தை சரி பண்ணி வச்சான்.அவ்வளவு ஃபிரஷர் அவனுக்கு.அவங்க அப்பா பிழைச்சு வந்ததே பெரிய விஷயமா இருந்தது.அவரோட உடம்பையும் ரொம்பவே கேர் எடுத்து பாத்துக்கிட்டான்.அவன் தனியா மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் ஆரம்பிக்கனும்ன்னு ரொம்ப போராடினான்.கடைசில எங்க ஹாஸ்பிட்டல் மட்டுமில்லாம வெளியே சில ஹாஸ்பிட்டல்ஸ்ன்னு வித்தியாசம் பாக்காம உழைக்க ஆரம்பிச்சான் .ஒன்றை வருஷத்தில தேவையானத சேர்த்தது மட்டும் இல்லாமல் அவன் பீடியாட்ரீக் கார்டியாலஜி சர்ஜரில(pediadric cardiology surgery)ரொம்ப பிரபலமாகிட்டான்.இப்ப அவனுக்கு நல்லா பேரும் புகழும் கிடைச்சிருக்குன்னா..அவனோட அவனோட கடுமையான உழைப்பு மட்டும்தான் காரணம்.அதனால இப்ப முன்னுக்கு வந்துட்டான் .நடுவுல இந்த பிரச்சனை மட்டும் இல்லன்னா இன்னும் ரெண்டு ஹாஸ்பிட்டல் நிச்சயமா கட்டிருப்பான். மணிகண்டன் சாரோட பொண்ணதான் தேவ்க்கு பேசி முடிச்சிருக்காங்க.இன்னும் இருபது நாள்ல கல்யாணம்” என கடைசியாக ஒரு குண்டைத் தூக்கி போட்டு விட்டு அவனது வாழ்க்கையில் நடந்தவற்றை முழுவதுமாக பகிர்ந்து கொண்டான் ரிஷி.
வந்தனாவிற்கு ஏற்கனவே மேலோட்டமாக தெரியும் என்றாலும் சில விஷயம் அவளுக்கு புதிதுதான், அதிலும் கடைசியாக அவன் சொன்ன தேவ்வின் கல்யாண செய்தியை கேட்டு திடுக்கிட்டு ஆராதனாவைப் பார்த்தாள்.
ஆராதனா ஏற்கனவே ஒரளவு ஊகித்திருந்தாலும் ரிஷியின் வாயினால் கேட்கும் போது மனதில் சுருக்கென்று வலி தைத்தது.கண்களும் கலங்கத் தயாரானது.
இருப்பினும் அதனை உள்ளிழுத்து கொண்டு ,” ஓ..ஹோ…அப்படியா சந்தோஷம்” எனக் கூறி குனிந்து கொண்டாள்.காதல் கொண்ட மனமோ தவியாய் தவித்துப் போனது.
ரிஷியோ வந்தனாவை நோக்கி ,"அவளை பார்த்து கொள்.." எனும் விதமாக கண்ணால் சைகை செய்து விட்டு வெளியே கிளம்பினான்.
வந்தனாவோ,” ஆரா….” என்று அழைத்தது தான் தாமதம். அவளைக் கட்டிக் கொண்டு கதறி விட்டாள் பெண்ணவள்.
அவளது முதுகு அழுகையில் குலுங்கியது.
அவளது முதுகினை ஆதரவாக தட்டிக் கொடுத்தாள் .
மனதில்,” இந்தப் பெண் இன்னும் என்னென்ன கொடுமைகள் பார்க்க வேண்டுமோ ?......” என நினைத்தாள்.
அவளுக்குத் தெரியவில்லை இதை விட அவளது மனதினை குத்திக் கிழிக்க வைக்கும் சம்பவம் நடக்கப்போவதென...தெரிந்திருந்தாலும் தடுக்க முடிந்திருக்குமோ????என்னவோ?...
தேவ்வினுடைய வீட்டிலோ கல்யாணக்களை வந்திருந்தது.
லதாவும் பிரசாத்தும் மிக மகிழ்ச்சியுடன் வலம் வந்தனர்.
திருமாங்கல்யம் வாங்குவதற்கு மட்டும் தாய் தந்தையை அழைத்துக் கொண்டு கடைக்கு சென்றான் .
மற்ற எதிலும் அவர்களை அவன் தேவையின்றி அலைய வைக்கவில்லை.
திருமாங்கல்யம் வாங்கும் அன்று லயவர்ஷினியையும் அழைத்திருந்தனர். ஆனால் அவளோ தனக்கு மாதாந்திர பிரச்சினை எனவே வர இயலாது எனக்கூறி விட்டாள்.
எனவே தேவ், அவனது பெற்றோர் மற்றும் ரிஷி கடைக்குச் சென்று திருமாங்கல்யத்தை வாங்கினார்கள்.
பத்திரக்கை அடித்து வந்தாகிவிட்டது.தெரிந்தவர்கள் அனைவருக்கும் கொடுத்தாகி விட்டது.
ரிஷியின் தாய் தந்தைக்கு நேரிலேயேப் போய் அழைத்து விட்டு வந்தனர்.
ஓரு வாரம் கழித்து தீடீரென ஒரு நாள்
தேவ் மற்றும்அவனது பெற்றோர் ரிஷியின் வீட்டிற்கு வந்தனர்.
வந்தனாதான் கதவைத் திறந்தாள். முதலில் அவர்களை பார்த்து சற்றே அதிர்ந்து போனாள் பின்னர் சமாளித்து கொண்டு,” வாங்க தேவ் சார்…வாங்கம்மா,வாங்கப்பா…உள்ள வாங்க….”என அவர்களை வரவேற்று அமர வைத்தாள்.
”ஒரு நிமிஷம் டீ போட்டு எடுத்திட்டு வந்துடுறேன்..” என அவர்கள் மறுத்து கூறும் முன்னரே உள்ளே சென்று ரிஷியை அழைத்து விவரத்தை கூறினாள்.
ரிஷி அவர்கள் வருவார்கள் என எதிர்பார்த்தான் தான்.ஆனால் இப்படி திடீரென்று வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
தன் மகளை ஏந்தியபடி வந்தவன்,”வாங்கப்பா,
வாங்கம்மா. எப்படியிருக்கீங்க?.வாடா தேவ்..” எனக்கூறி யபடி அமர்ந்தான்.
உள்ளே சமையலறைக்குள் இருந்த வந்தனாவிற்கோ கோபமாக வந்தது.” இப்ப எதுக்கு வந்துருக்காங்கன்னு தெரியலயே, ஆரா வேற உள்ளதான் இருக்கா…ம்ம்” என நினைத்தபடி டீ போட்டு அனைவருக்கும் கொடுத்தாள்.
ரிஷியின் மகள் தேவ்வினுடைய மடியில் அமர்ந்திருந்தாள்.
சில நிமிடங்கள் பொதுவாக பேசிவிட்டு ,தேவ்வினுடைய தந்தை பத்திரிகை எடுத்து,” தேவ்வோட கல்யாணத்துக்கு வந்துடுங்க.நீங்க ரெண்டு பேரும்தான் முன்னயிருந்து நடத்தி கொடுக்கனும்” என்று கூறி பத்திரிகை கொடுத்தார்.
வந்தனாவோ ரிஷியை முறைத்தப்படி நின்றாள்.
” இரண்டு பேரும் சேர்ந்து வாங்கிக்கோங்க…” என்றார் தேவ்வின் தாய் லதா.
அதனை இருவரும் வாங்கிக் கொண்டு நகருமுன்,” வந்தனா…சூர்யாவோட…” என உள்ளிருந்து பேசிக்கொண்டே வந்த ஆராதனா தேவ் மற்றும் அவனது பெற்றோரைப் பார்த்து திகைத்து நினறாள்.
ரிஷியோ உடனே,” இவங்க தேவ்வோட பேரண்ட்ஸ்.பத்திரிக்கை வைக்க வந்திருக்காங்க” என முந்திரி கொட்டைத் தனமாக பேசி மனைவியின் பார்வையில் பஸ்பமானான்.
மனதினுள்.” அய்யோ எப்படி சமாளிக்கப் போற ரிஷி…..?” என நினைத்தவாறே மனைவியைப் பார்த்து,
"ஃப்ளீஸ் …எனக்கு அவங்க வருவாங்கன்னு தெரியாது…” என சைகையில் உரைத்தான்.
அவளோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், "இன்னிக்கு இருக்கு உங்களுக்கு கச்சேரி…..” என மெதுவாக வாயசைத்தாள்.
அவனோ தன் பின்னந்தலையைக் கோதியவாறு வேறு பக்கம் திரும்பிக் கொண்டு இருந்தான்.
ஆராதனாவோஉள்ளேப் போன குரலில்,” வாங்க “என்று மட்டும் கூறி விட்டு நின்றாள்.
ரிஷியோ,” இது வந்தனா வோட ஃப்ரெண்ட் ஆராதனா “ என அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
தேவ்வின் தாயோ ,” அந்தப் பொண்ணுக்கும் ஒரு பத்திரிகை கொடு தேவ்.. நீயும் கண்டிப்பா என் பையனோட கல்யாணத்துக்கு வந்திடனும் …சரியா?” என்றார் .
அவளோ கனத்த இதயத்துடன்,” சரிங்க… மா” எனக் கூறி அவனிடமிருந்து பத்திரிகையை கைகள் நடுங்க வாங்கிக் கொண்டாள்.
“ஆராதனா!..” என்று அழுத்தமாக அழைத்தான்.
நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.அவனோ அவளருகில் வந்து அவளது கண்களை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே,” கண்டிப்பா கல்யாணத்துக்கு நீ வரணும்…. நான் உன்கிட்ட கடைசியாக கேக்குற விஷயம் இதுதான்.. ஃப்ளீஸ் “ என மெல்லிய குரலில் அவளுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம் கூறினான்.
அவளோ அதிர்ந்து” ஏன் என்னை மேலும் மேலும் இப்படி வதைக்கிறாய்?...” எனும் விதமாக கண்கள் கலங்கியபடி அவனது முகத்தைப் பார்த்தாள்.
அவனோ,” கண்டிப்பா நீ வருவேன்னு எதிர்பாக்குறேன்” எனக் கூறி விட்டு அவளது கலங்கிய முகத்தை பாராமல் விறுவிறுவென வெளியே சென்று விட்டான்.
அவனது பெற்றோர் வந்தனாவிடம் குழந்தையைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததால் இவர்களை கவனிக்கவில்லை.
ஆனால் வந்தனாவும் ரிஷியும் கவனித்து கொண்டுதான் இருந்தனர்.
சில நிமிடங்கள் கழித்து தான் மகன் இல்லாததை கவனித்தனர்.” அவன் வெளியே போயிட்டான் மா” எனக் கூறினான் ரிஷி.
" சரிப்பா..நாங்களும் கிளம்புறோம்.கல்யாணத்துக்கு முதல் நாளே வந்துடுங்க பா.ஆராதனாவையும் அழைச்சிட்டு வந்துடுங்க” எனக் கூறி விடை பெற்றனர்.
வெளியே வந்த பிறகுதான் தேவ்விற்கு சுவாசம் சீரானதுப் போன்ற உணர்வு.
இடுப்பில் இரு கைகளையும் வைத்து ஆழ்ந்த மூச்சினை வெளியிட்டான்.
இங்கு ரிஷியின் அறையிலோ,” நில்லுங்க.. ரிஷி ஓடாதீங்க…மாட்டினீங்க.. சட்னி தான்…..” என கணவனை ஒரு வழியாகக் கிக் கொண்டிருந்தாள் அவனது மனைவி வந்தனா.
” வேணாம் …டார்லிங்….நா சொல்றத கேளு மா….புருஷன் அடிக்கறதெல்லாம் மகாப் பாவம்…. அதெல்லாம் நீ பண்ணாதே தங்கம்….” என கட்டிலைச் சுற்றி கபடி ஆடிக் கொண்டிருந்தான் ரிஷி…
அத்தியாயம்.16
தேவ் வந்துவிட்டு சென்றபிறகு ஆராதனா தனது அறைக்குள்ளேயே முடங்கி விட்டாள்.
தேவ்விடம் முறைத்துக் கொண்டு வெளியில் விரைப்பாக நின்றாலும் அவன் இன்னமும் திருமணம்செய்யவில்லை என்று அறிந்த பேதையின் மனம் சற்று சமன்பட்டது என்பது நிஜமே….காதல் கொண்ட மனமல்லவா..! சிறு அல்ப சந்தோஷம்.
ஆனால் ரிஷியின் வாயிலாக தேவ்விற்கு திருமணம் என்று கேள்விப்பட்ட நாள் முதல் மனம் கரையானாய் அரிக்கத் தொடங்கிற்று.
அதிலும் அவன் நேரடியாக வீட்டிற்கு வந்து பத்திரிகையை நீட்டும் போது அவளது இதயம் சில்லுசில்லாக நொறுங்கி போயிற்று.
இனி இழப்பதற்கு அவளிடம் ஒன்றும் இல்லையே…. அடுத்து செய்வதறியாது அடைந்தே கிடக்கிறாள் அறையினுள்.
சூர்யா ஆரோக்கியமாக அவளிடம் ஒப்படைத்திருக்கின்றான் தேவ் அந்த நன்றியுணர்வு அவளிடம் எப்போதும் உண்டு .
ஆனால் அதற்கு விலையாக அவனது திருமணத்திற்கு அவள் செல்வதெல்லாம் அவளால் முடியாத காரியமல்லவா…?.
தேவ் வந்து சென்ற பிறகு வந்தனா ரிஷியின் மேல் பயங்கர கோபத்தில் இருந்தாள்.
இதில் அவன் வேறு சென்று ஆராதனாவை எப்படியாவது தேவ்வின் திருமணத்திற்கு அழைத்து கொண்டு வரும் படி மனையாளிடம் காலில் விழாத குறையாக கெஞ்சி கொண்டிருந்தான் .
ஆம்…! நாளை மறுநாள் திருமணம் நடைபெற உள்ளது.
“ என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ரிஷி..?. உங்களுக்கு நட்டு, போல்ட் ஏதாவது கழண்டு போச்சா…? அவளோட மனநிலையை தெரிஞ்சிகிட்டே இப்படி பண்ணிட்டு இருக்கீங்க…நானும் வரமாட்டேன்,அவளும் வரமாட்டா…நீங்க வேணா உங்க நண்பனோடு கல்யாணத்துக்கு முன்னாடி போய் நின்று எல்லாம் நல்லபடியா முடிச்சு குடுத்திட்டு வாங்க.. இதையெல்லாம் பாக்குற சக்தி எங்க ரெண்டு பேருக்கும் இல்லை….ஃப்ளீஸ் விட்ருங்க…என் கோவத்தை கிளறாம பேசாம போயிடுங்க….” என்றாள்.
அவனோ ஆராதனாவை பார்க்க சென்றான். அவளும் முதலில் வரமுடியாது என மறுத்துவிட்டாள்.
அவனோ ,”இங்க பாரு ஆராதனா…நான் எதுக்கு உன்னை வரச்சொல்றேன்னு கொஞ்சம் புரிஞ்சிக்க..அவன் என்ன பெரிய அப்பாடக்கரா…அவன் இல்லாம உன்னால வாழ முடியும்ன்னு நீ நிருபிக்கனும்..நீ வந்து அவன் கல்யாணத்துக்கு முன்னாடி நிக்குறதே அவனுக்கு நீ கொடுக்குற பதிலடி .அதுக்கு ஒரு தனி தைரியம் வேணும் ".
எனப் பேசிக்கொண்டே போக.அவனது தோளினை ஒரு கை தட்டியது.
“ ம்ம்ச் …. நா பேசி முடிச்சிடுறேன்" என கையை தட்டி விட்டு பேசிக் கொண்டே திரும்பினான்.
வந்தனாவோ அவனை முறைத்து விட்டு, ” அவள் ஃப்ரையின் வாஷ் பண்றத நிப்பாட்டுங்க..நாங்க வரமாட்டோம்,என்ன புரியுதா..?” எனக் கூறி விட்டு “ ஆராதனா வா சாப்பிடலாம் ….சூர்யாவை எழுப்ப வேணாம்…நம்ம சாப்டுட்டு அவனுக்கு கொடுக்கலாம்...“ என டைனிங் டேபிளுக்குச் சென்றாள்.
ரிஷியோ தொப்பென்று சோஃபாவில் அமர்ந்துவிட்டான்.
“ இப்ப சாப்பிட வர்றீங்களா இல்ல ஜிம்மிக்கு போட்டுடவா…” என வெளியே இருந்து வந்தனாவின் குரல் கேட்டது.” இதோ வந்துட்டேன் மா….” எனக் கூறி கொண்டே மனதினுள் “ இல்லனா …சோறு கிடைக்காது “.. எழுந்து சென்றான்.
“ சரி..சரி வாப்பா உள்ள..நா போய் உள்ள என்னன்னு கேட்கிறேன்.நீ தேவ் ரூமுக்கு போய் அவனைப் பாரு…” எனக் கூறி விட்டு நகர்ந்தார்.
இங்கு மணப்பெண் அறையிலோ முகத்தில் எவ்வித சலனமுமின்றி தயாராகி அமர்ந்திருந்தாள் லயவர்க்ஷினி.
எல்லாரும் “ ஏன் இப்படி இருக்க ..?“ எனக் கேட்க ஆரம்பித்து விட்டனர்.
அவளோ,” தலைவலி” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டாள். மனம் எதையோ யோசித்து கொண்டிருந்தது.
ரிஷியோ நேராக தேவ் வின் அறைக்குள் சென்றான்.
அவனோ கைகளை கட்டியவாறே ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தவாறு நின்றிருந்தான்.
“ தேவ்” என பதட்டமாக அழைத்தான். அவனோ நிதானமாக திரும்பி “ வாடா” எனக் கூறி விட்டு திரும்பவும் ஜன்னல் வழியாக வெறிக்க தொடங்கினான்.
"டேய்..வந்தனாவும், ஆராதனாவும் வரல டா…அடுத்து என்ன பண்றது…. ரொம்பவே ரிஸ்க் எடுத்துருக்குற தேவ்…இதெல்லாம் சரி வராதுன்னு அப்பவே சொன்னேன் கேட்டியா..” என படபடவென பொறிந்தான் ரிஷி.
“ ஏன்..? வரமாட்டேன்னு சொல்லிட்டாளா..?” எனத் திரும்பவும் கேட்டான்.
“அடேய்…முதல்ல இருந்தே வரமாட்டேன்னு தான் டா சொல்லிட்டு இருக்காங்க…தேவ் ..பேசாம நீ…” என ஆரம்பிக்கும் முன் அவனை கையமர்த்தி, “ இன்னும் நேரமிருக்குல்ல” என்றான்.
“ஆமா ..டா அதுக்கென்ன..?” எனபடபடத்தான் ரிஷி.
“ வெயிட் பண்ணுவோம்... “ எனக் கூறி ஃபோனை நோண்ட ஆரம்பித்தான்.
ரிஷிக்குதான் மண்டை காய்ந்து போனது. சற்று நேரத்திலேயே மணமகனை மேடைக்கு அழைத்தனர்.
தேவ்வோ அமைதியாக சென்று மணமேடையில் அமர்ந்தான். சிறிது நேரத்தில் லயவர்ஷினியும் தேவதையென அவனருகே வந்து அமர்நதாள்.
தேவ் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.அவளோ அக்னி குண்டத்தையே வெறித்து பார்த்து விட்டு அவனைப் பார்த்தாள்.
அவனோ ஐயர் கூறிய மந்திரங்களை கூறிக்கொண்டிருந்தான்.ரிஷியோ அவனிடம் ஏதோ கூறிவிட்டு நிமிர்ந்த போது வாசலில் வந்தனா சகானாவுடனும் ஆராதானா சூர்யாவுடன் நின்றிருந்தார்கள்.
அவனோ வேகமாக மேடையை விட்டு இறங்கி அவர்களருகே சென்று சகானாவை கையில் வாங்கி கொண்டு அழைத்து வந்து முதல் இருக்கையில் அமர வைத்தான்.
ஆராதனாவோ தேவ்வையும் லயவர்ஷினியையும் பார்த்தாள்.
அவ்வளவு பொருத்தமாக இருந்தது . அவளையும் அறியாமல் கண்கள் கலங்கியது.அதனை வெளிக்காட்டாமல் வேறு புறம் திரும்பியிருந்தாள்.
சூர்யாவோ தேவ்வை பார்த்த மகிழ்ச்சியில் “ அய்.. …டாக்டர் அங்கிளுக்கு கல்யாணமா?...ஜாலி .. ஜாலி…. நான் போய் விஷ் பண்ணிட்டு வந்துடவா அம்மூ..?” எனக் கேட்டான்.
ஆராதனாவோ,” அப்பறம் பண்ணிக்கலாம் சூர்யா.அமைதியா உட்காரு…” என்றாள்.
“ இல்ல அம்மூ ஃபீளீஸ்..” என அவளது பதிலை எதிர்பாராமல் குடுகுடு வென மணமேடைக்கு ஓடினான்.
ஆராதனாவோ அவன் ஓடுவதை கண்டு பதறி,” சூர்யா…ஓடாத..நில்லு “ என்றவாறே அவன் பின்னால் ஓடி மேடைக்குச் செல்வதறகுள் சூர்யா தேவ்வின் அருகே சென்றுவிட்டான்.
அப்போது ,” கெட்டிமேளம் கெட்டிமேளம் “ என ஐயர் கூறி மந்திரங்களை கூறி திருமாங்கல்யத்தை எடுத்து தேவ்வின் கையில் கொடுக்கவும்.
ஆராதனா சூர்யாவை தன்னிடம் இழுக்கும் பொருட்டு அவனுடைய முகத்திற்கு நேரே குனியவும் சரியாக இருந்தது.திருமாங்கல்யத்தை கையில் வாங்கிய மறு நொடி ஆராதனாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னவளாக ஏற்றுக் கொண்டான்.
திருமண மண்டபமே ஸ்தம்பித்தது.
“ தேவ்….தேவ்…” என இரு வீட்டாரும் கத்தத் தொடங்க.
லயவர்ஷினி அமைதியாக எழுந்து நின்றாள். “ஃப்ளீஸ் …எல்லாரும் அமைதியா இருங்க… நான் சம்மதிச்சுதான் தேவ் ஆராதனா கழுத்துல தாலி கட்டியிருக்காரு.அவரோட வாழ்க்கை ஆராதனா கூட இருந்தா தான் நல்லா இருக்கும்.இந்த விஷயம் ஆராதனாவுக்கே தெரியாது.தெரிஞ்சிருந்தாலும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருக்க மாட்டாங்க.” எனக் கூறி விட்டு ஆராதானாவின் பக்கம் திரும்பினாள்.
அவளோ நடந்த நிகழ்விலிருந்து வெளிவர இயலாமல் கைகள் நடுங்க திருமாங்கல்யத்தை கையில் எடுத்து பார்த்து கொண்டிருந்தாள்.
லயவர்ஷினியோ அவளருகே வந்து அவளது தோளினைத் தொட்டு “உங்க தேவ் உங்களுக்காகத் தான் இப்படி பண்ணிட்டாரு.நீங்க வந்து மணவறையில உட்காருங்க “ எனக் கூறி அவளை மணவறையில் அமரச் செய்தாள்.
தன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டினாள்.
வேகமாக ரிஷி அவளுக்காக வேறு மாலையை தேவ்விடம் கொடுத்து அணிவிக்க செய்தான்.
அவளோ நிமிர்ந்து தேவ்வினை பார்த்தாள்.அவளது கண்களை ஆழ்ந்து பார்த்தவாறே அவளது நெற்றியில் குங்குமம் வைத்தான்.
சூர்யா அவளருகே வந்து நின்றான்.அவனை தனதருகே அமர வைத்தான் தேவ்.
ஐயர் மற்ற சம்பிரதாயங்களைக் கூற அவற்றை செய்து முடித்து விட்டு எழுந்தான்.
அவனது பெற்றோருக்கு இப்போது புரிந்தது தன் மகன் ஏன் திருமண செலவினை மற்றும் மற்ற ஏற்பாடுகளை தானே செய்ததன் பொருள்.
தேவ் லயவர்ஷினியின் அருகில் சென்று “உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல.ஆனா உனக்கு ஒரு நல்ல நண்பனா என்னிக்கும் இருப்பேன்.இவ்வளவு பெரிய கஷ்டத்தை உனக்கு நான் கொடுத்திட்டேன். மன்னிச்சிடு.ஆனா லைஃப்ல உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா இந்த தேவ் தான் முதல்ல நிப்பான்.வேற என்ன சொல்றதுன்னு தெரியல.ஆனா ரொம்பவே நன்றி “ எனக் கூறி அவளது கைப்பற்றி லேசாக குலுக்கி விடுவித்தான்.
லயவர்ஷினியோ,” நான் உங்களுக்காக இத பண்ணல.உங்களால நிறையவே பாதிக்கப்பட்ட ஆராதனாவுக்காக மட்டும் தான் நீங்க சொன்ன எல்லாத்துக்கும் சரின்னு சொன்னேன்.அவங்கள நல்லபடியா பாத்துக்கோங்க..” எனக் கூறி விட்டு தந்தையிடம்
திரும்பி,” உங்கள கேக்காம லைஃப் ல பெருசா முடிவெடுத்துட்டேன். சாரி டாடி..இனி உங்க வாரத்தையை மீறி மாட்டேன்.இதுதான் முதலும் கடைசியுமா நான் பண்ண தவறு..வாங்க பா போகலாம் “எனக் கூறி விட்டு அவரை அழைத்துக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறினாள்.
தந்தையுடன் நிமிர்வாக செல்லும் லயவர்ஷினியை கண்களில் நீர் மறைக்க ," என்ன பெண் இவள்" என ஆச்சர்யத்துடன் பார்த்தாள் ஆராதனா. அவளது மனதில் பெரும் போராட்டமே நடந்து கொண்டிருந்தது.
அத்தியாயம் 17
மண்டபத்தை விட்டு வெளியேறிய லயவர்ஷினியையே பார்த்து கொண்டிருந்த தேவ் இப்போது திரும்பி ஆராதனாவை பார்த்தான்.
அவளோ இன்னும் அதிர்ச்சியிலிருந்து வெளி வராமல் தலையை குனிந்து கொண்டிருந்தாள்.
அவள் சொல்ல முடியாத உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள்.
அது குற்றவணர்வா?அதிர்ச்சியா?,மகிழ்ச்சியா? அல்லது தன் அனுமதியின்றி தாலி கட்டியதால் வந்த கோபமா? எனப் பிரித்தறிய முடியாத நிலை.
தேவ்வினுடய பெற்றோர்களுடைய நிலையும் அதுவே.
எப்படியோ ஒரு வழியாக திருமணம் செய்து கொண்டான் என மகிழவும் முடியவில்லை அதே சமயம் ஒரு பெண்ணின் மனதை வதைத்து இன்னொரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினான் என கோபப்படவும் முடியவில்லை ஏனெனில் இது முழுக்க முழுக்க லயவர்ஷியின் முழு சம்மதத்தோடுதான் நடந்தது .
அதனால் அவர்களும் பலவகையான உணர்வுகளுக்கிடைய மற்ற சம்பிரதாயங்களை நடத்தி முடித்தனர்.
ரிஷியோ மனைவியின் முறைப்பில் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருந்தான்.
வந்தனாவின் மனநிலை மட்டுமே சற்று சமன்பட்டிருந்தது.
தோழிக்கு அவள் விரும்பிய வாழ்வே கிடைத்தால் வந்தனா பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் சாதாரணமாக இருந்தாள்.
ஆனால் கணவன் தன்னிடம் முதலிலேயே சொல்லாமல் தவிக்க விட்டதால் தான் அவளுக்கு கோபம் வந்தது.
முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு இருந்தாள்.
“ ஏய்..! வந்தனா கோபமா இருக்கியா..?சாரி மா…. முன்னாடியே சொல்லிருந்தா ஆராதனாவும்.. நீயும் இதுக்கு ஒத்துகிட்டுயிருக்க மாட்டீங்க , அதான் சொல்லாமலே உங்கள் அழைச்சிட்டு வந்து கல்யாணத்தை முடிச்சிடலாம்ன்னு நினைச்சோம். ஆனா….? நீயும் அவளும் வர மாட்டேன்னு தானே சொன்னீங்க .தீடிர்ன்னு வந்து எங்களுக்கு ஷாக் குடுத்தீட்டீங்க . என் செல்லம் ,தங்கம் மாமன கஷ்டப்படுத்த மாட்டேன்னு தெரியும்…..” என கெஞ்சலில் ஆரம்பித்து வாயெல்லாம் பல்லாக கொஞ்சலில் முடித்தான்.
அவளுக்கோ அவன் பேசிய விதத்தில் சிரிப்பு வந்துவிட கஷ்ட்டப்பட்டு வேறு புறம் திரும்பிய படி , ” உங்க ஃப்ரெண்ட் என்ன ப்ளான் வச்சிருக்காரு ன்னு தெரியல. ஆராதனா ,சூர்யா ரெண்டு பேரோட திங்க்ஸ்யெல்லாம் பேக் பண்ணி அனுப்பி வச்சிடுங்க” என்றாள்.
அவனும் சரியென்று கூறிவிட்டு தன் நண்பன் அருகே சென்றான்.
அவனிடம் தேவ் , ” கல்யாணத்துக்கு வந்தவங்கள எல்லாம் சாப்பிட்டு போகச் சொல்லு, பாக்கி செட்டில்மென்ட் எவ்வளவுன்னு கேட்டு செக் போட்டுடலாம் .அத மட்டும் நீ கொஞ்சம் பாரு” எனக் கூறி விட்டு, சூர்யாவின் புறம் திரும்பி, ” சூர்யா, இனிமே நீ ,நான் உன்னோட அம்மூ எல்லாரும் ஒரே வீட்ல தான் இருக்கப் போறோம். உனக்கு ஹேப்பியா..?” எனக் கேட்டான்.
சூர்யாவிற்கோ எதுவும் புரியவில்லை என்றாலும் யோசனையுடன், ” நீங்க என் கூட விளையாடுவீங்களா..?” என்றான்.
தேவ்வோ,” நிச்சயமா டெய்லி விளையாடலாம், உன்னை வெளியே கூட்டிட்டு போறேன். தென்.... ஸ்கூல்க்கு போகலாம்.... இன்னும் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து நிறையவே ஆக்டிவிட்டிஸ் பண்ணலாம்…” எனக் கூறியவுடன் சூர்யாவின் முகம் தாமரையென மலர்ந்தது.
” அய்… ஜாலி…. ஜாலி.. அம்மூ.. நீங்க சொன்னதுப் போலவே டாக்டர் அங்கிள் என் கூட டெய்லி விளையாடப்போறாங்க” என குதூகலித்தான். அவளோ அமைதியாக சூர்யாவின் தலையை வருடிக் கொடுத்தாள்.
அனைவரும் திருமண மண்டபத்தை விட்டு காலி செய்து கொண்டு புறப்படும் சமயம் வந்தனா ஆராதனா வின் அருகே சென்று அவளது கைகளைப் பிடித்து கொண்டு ,” எது நடந்தாலும் நன்மைக்கேன்னு நினைச்சுக் கோ ஆரா. இதுவரை நீ பட்ட கஷ்டத்துக்கெல்லாம் இனி உன் லைஃப் நிச்சயமா நல்லா இருக்கும்.மனசப் போட்டுக் குழப்பிக்காத சரியா..?.வாழ்க்கைய சீக்கிரம் தொடங்கப் பாரு… ரிஷி உங்களோட திங்க்ஸ் எல்லாம் எடுத்திட்டு பின்னாடி வருவாரு.” எனக் கூறி கொண்டே இருக்கும் போது அவளது தோளில் சாய்ந்து ஈழத் தொடங்கினாள்.
அவளது தோளைத் தட்டி ஆறுதல் கூறி விட்டு அவளது கண்களை துடைத்து விட்டாள்.
” கிளம்பலாமா ஆராதனா..? “ என்றவாறே தேவ் அவளருகே வந்து நின்றான்..
அவள் பதிலேதும் கூறாமல் அவனுடைய காரில் சூர்யாவுடன் ஏறிக்கொண்டாள்.
தேவ் காரினை ஒட்ட ஆராதனா மற்றும் சூர்யா பின்னிருக்கையில் அமர்ந்திருந்தனர்.
அவளோ வெளியே வேடிக்கை பார்த்த வண்ணம் வந்தாள்.
தேவ் கண்ணாடியினூடே அவளை பார்த்த வண்ணம் காரினை ஓட்டிக் கொண்டிருந்தான்.
அரக்கு நிறப் புடவையில் ,நெற்றி வகிட்டில் அவன் வைத்த குங்குமம் லேசாக கலைந்திருக்க, அவன் கட்டிய பொன்மஞ்சள் தாலி அவளது மார்பினில் தவழ, அஞ்சனம் பூசிய விழிகள் இரண்டும் கலங்கி லேசாக சிவந்திருந்தது.
காலையிலிருந்து ஏற்பட்ட மன உளைச்சலே அவளுக்கு மிகுந்த சோர்வைப் தந்திருந்தது.
காரில் ஏறிய சில நிமிடங்களிலேயை கண்ணயர ஆரம்பித்து விட்டாள்.
அவளது மடியிலேயே சூர்யாவும் நன்றாக உறங்கிவிட்டான்.
நேராக காரினை அவனது வீட்டுவாசலில் நிறுத்தி விட்டு கதவினை திறந்து ,” ஆராதனா…!” என்று அழைத்தான்.
அசதியில் நன்றாகவே தூங்கிப்போயிருந்தாள்.
இரண்டு மூன்று முறை அழைத்தும் எழாததால் அவளின் தோளைத் தொட்டு எழுப்பினான்.
அவளோ என்னவோ ஏதோவென்று பதறி அடித்து கொண்டு எழுந்தாள்.
“ ஹேய்….ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்...வீடு வந்துருச்சு அதான் எழுப்பினேன்” என்றான்.
அவளோ தன்னை ஆசவாசப்படுத்திக் கொண்டு இறங்கினாள்.
இருவருக்கும் தேவ்வின் தாய் மற்றும் அவரது தங்கை ஆரத்தி எடுத்த வரவேற்றனர்.
சூர்யாவினை தோளில் தூக்கிக் கொண்டு இருவரும் வலது காலை எடுத்து உள்ளே நுழைந்தனர்.
காத்திருந்து காதல் கை கூடினாலும் அதனை முழு சந்தோஷத்தோடு ஏற்ற முடியாது மனநிலை ஆராதனாவிற்கு.
தேவ்வினுடைய சித்தியோ உள்ளோ நுழைந்தவுடன் ,” என்னப்பா தேவ்… குழந்தையோட இருக்கிறவள போய் கல்யாணம் பண்ணிக்கிட்டயே…இது மாதிரியெல்லாம் நம்ம குடும்பத்தில் நடந்ததேயில்ல.சொன்னா நீ என்னைய கோச்சிக்குவ…உங்க அம்மாவுக்கு உன் கல்யாணத்தை எப்படியெல்லாமோ பாக்கனும்னு கனவு ..ஆனா நீ இப்படி ஒரு காரியத்தை பண்ணி உங்க அம்மாவ கஷ்டப்படுத்திட்டியே..” எனவாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிக்க கொண்டேப்போக,
” கொஞ்சம் நிறுத்துரீங்களா…?” எனகர்ஜித்தான்.
அவனது முகத்தை கண்டு சித்தி மிரண்டு விட்டாள்.
“ என் பொண்டாட்டிய பத்தி பேசறதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.வந்த வேலை முடிஞ்சதுன்னா கிளம்புங்க…” என தயவு தாட்சணியமின்றி கூறினான்.
அவரோ வாய்க்குள் ஏதோ முணுமுணுத்து விட்டு “ நா கிளம்புறேன் லதா…ஏதோ நீங்க வற்புறுத்தி கூப்பிடதுனாலதான் வந்தேன்.உன் பிள்ள வந்ததுக்கு எங்கள் நல்லா செஞ்சிட்டான்டியம்மா…” என நொடித்துக் கொண்டு சென்றார்.
லதாவிற்குமே அவரது தங்கை பேசியது பிடிக்கவிவ்லைதான் , ஆனால் இப்படி முகத்தில் வைத்தார் போல் மகன் பேசியிருக்க தேவையில்லை என்றே தோன்றியது.
அதன் பின்னர் அனைத்து உறவினர்களும் கிளம்பி விட்டார்கள்.
தேவ் அவளை தன்னுடைய அறையில் ஓய்வெடுக்குமாறு கூறி விட்டு கீழே வந்தான்.
தனது தந்தையை நோக்கி வந்தான்.
” உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் “ என்றான்.
அவனதே தந்தை , "சொல்லு தேவ்” என்றார்.
என்னதான் அவன் செய்தது மிகப்பெரிய தவறு என்றாலும் ஏனோ அவரால் அவன்மேல் கோபப்படமுடியவில்லை.
தேவ்வே தொடர்ந்தான், "நான் பண்ணினது தப்புதான்.ஆனா இத நான் சொல்லிட்டு செய்ய எனக்கு நீங்க அவகாசம் தரல. என்னைய நானே உணர்ந்துக்கவே இவ்வளவு நாளாச்சு. இதுல ரொம்பவே கஷ்டபட்டது ஆராதனா தான். எங்களுக்கான வாழ்க்கைய ஆரம்பிக்க இன்னும் கொஞ்ச நாளாகும் அதுக்கான நேரத்தை எங்களுக்கு கொடுங்க. சூர்யா ஆராதனாவோட அக்கா பையன்தான். அவங்க எல்லாரும் விபத்துல இறந்துட்டாங்க. இனி அவளுக்கு இருக்கப் போற உறவுன்னா அது நம்ம மட்டும் தான்...அவள கஷ்டப்படுத்திடாதீங்க ப்ளீஸ்…. ஏற்கனவே நிறைய பட்டுட்டா. இனி அவ முகத்தில் சந்தோஷம் மட்டும் தான் இருக்கனும். நைட் சம்பிரதாயமெல்லாம் வேணாம். எல்லாம் தானாகவே நடக்கட்டும். அம்மாகிட்ட சொல்லிடுங்க. நான் அவங்ககிட்ட அப்பறம் பேசுறேன்” எனக்கூறி விட்டு தனதறைக்குச் சென்றான் .
ஆராதனாவோ பட்டுப் புடவையிலேயே இருந்தாள் .நல்லவேளை லேசான சரிகை புடவையென்பதால் பெரிதாக அசௌகரியம் ஏற்படவில்லை.
அவளருகே வந்த தேவ் , “ ஆராதனா..! " என்றழைக்கும் போதே அவனது அலைப்பேசி அலறியது.
எடுத்துப் பார்த்தான் ரிஷி தான் அழைத்திருந்தான்.
எடுத்து,” சொல்லுடா….” என்றான்.
“ டேய்…! நான் அவங்க ரெண்டு பேரோட திங்க்ஸ்யெல்லாம் எடுத்துட்டு வந்துட்டேன்.இப்போதைக்கு போதும் ன்னு நினைக்கிறேன். கீழ வந்து கலெக்ட் பண்ணிக்கோ “ என்றான்.
“ ம்ம் ..வரேன் டா” என அலைப்பேசியை அணைத்து விட்டு, "ஆராதனா…ரிஷி உன்னோட திங்க்ஸ்யெல்லாம் எடுத்துட்டு வந்துருக்கான். வா… கீழப் போய் கலெக்ட் பண்ணிட்டு அப்படியே டின்னர் சாப்பிட்டு வந்துடலாம்...என்றான்.
அவளோ அமைதியாக கீழே இறங்கிச் சென்றாள்.
ரிஷியோ அவளுடைய பொருட்களையும் சூர்யாவின் பொருட்களையும் தனித்தனிப் பைகளில் எடுத்து வந்திருந்தான்.
அவற்றை அவளிடம் கொடுத்து விட்டு “ சரியா. இருக்கான்னு பாரு ஆராதனா ஏதாவது மிஸ் ஆகியிருந்ததுன்னா பாத்துட்டு கால் பண்ணு “ என்றான் .
அவளோ அவற்றை வாங்கிக் கொண்டு ஒன்றும்பேசவில்லை.
அவள் தன் மீதும் கோபமாக இருக்கிறாள் எனப் புரிந்தது.
“ ஐ யம் சாரி…. ஆராதனா. உன் லைஃப் நல்லா இருக்கும்ன்னுதான் இப்படி பண்ணினோம். இப்ப தப்பாத் தெரியுற எல்லாம் பின்னாடி சரியாகத் தெரியும். டேக் கேர்…சூர்யாவ மிஸ் பண்ணுவோம். டைமிருக்கும் போது வீட்டுக்கு வா ,நான் கிளம்புறேன்” என்றவாறு தேவ்வைத் தேடிப் போனான்.
“ தேவ் கிளம்புறேன் டா…பாத்துக்க ..அப்பறம் பேசுறேன்..” எனறான் ரிஷி.
தேவ்வோ, “இருடா டின்னர் முடிச்சிட்டு போ..” என்றான்.
“இல்ல டா.. வீட்ல வந்தனாவும் பாப்பாவும் வெயிட் பண்ணுவாங்க டா கிளம்புறேன் “ எனக் கூறி விட்டு வாசலின் அருகே சென்றவன் மீண்டும் தேவ் அருகில் வந்து அவனது காதில் , “ மச்சி…உனக்கு ஆல்ரெடி கல்யாணமும் லேட்டு இதுல ஃபர்ஸ்ட் நைட்டும் லேட்டாகும் போலத் தெரியுதே டா….நீ அந்த புள்ளய படுத்துன பாட்டுக்கு அவ இனி உன்ன வச்சு செய்யப் போறா…கல்யாணம் பண்ணியும் அக்மார்க் பிரம்மச்சாரி டா… நீ .உன்னைய பாத்தாலும் பாவமாத்தான் இருக்கு. இதுதான் முற்பகல் செய்யின் பிற்பகல் வரும்ன்னு சொல்ற பழமொழிப் போல” எனப் பேசிக்கொண்டே போனவனை, தேவ் அருகிலிருந்த தலையணையைத் தூக்கி வன் மீது வீசி,” என் பிரம்மச்சரிய சாபம் உன்னைய சும்மா விடாது டா” எனக் கத்தினான்.
“ பாக்கலாம் மச்சி…. நான் பண்ணின காரியத்துக்கு இன்னிக்கு எனக்கு டபுள் டிரீட்டு டா” என போகிறபோக்கில் தேவ்வினுடைய வயிரை கொழுந்து விட்டு எரியச்செய்து விட்டுச்சென்றான் ரிஷி.
“ படுபாவி...!” என முணுமுணுத்து விட்டு திரும்பினான்.
ஆராதனா அவனைப் பார்த்து கொண்டு இருந்தாள்.
அவனுக்கு ஒரு நிமிடம் திக்கென்றது,” ஒருவேளை பேசுனதெல்லாம் கேட்டுட்டாளா..?” என நினைத்து கொண்டு “ அது வந்து…சும்மா..தான்” என ஆரம்பிக்கும் முன்பே, "அத்தை உங்கள சாப்பிட கூப்பிட்டாங்க” எனக்கூறி விட்டு முன்னே நடந்தாள்.
இடையை தாண்டிய அவளது கார்மேக கூந்தல் அசைந்தாடும் அழகை ரசித்தவாறே அவளின் பின்னால் சென்றான்.
ஆராதனா , சூர்யா, தேவ் மூவரும் உணவு உண்டுவிட்டு எழுந்தனர்.
தேவ் லதாவிடம் சென்று, "அப்பா உங்கிட்ட சில விஷயங்கள் சொல்லிருப்பாருன்னு நினைக்கிறேன் .அவளுக்கான உறவு இனி நம்ம மட்டும் தான். யாரு பேச்சையும் கேட்டு அவள கஷ்டப்படுத்திடாதீங்க.அவளும் சூர்யாவும் என் ரூம்லயே இருக்கட்டும்.வேற எதுவும் இப்போதைக்கு வேண்டாம் “ என்றான்.
“ எனக்கு நீ பண்ணுறது வருத்தம் தான்…இல்லன்னு சொல்ல மாட்டேன். மத்தவங்க பேச்சை கேட்டு அவள் கஷ்டப்படுத்தற அளவுக்கு உன்அம்மா ஒண்ணும் கொடுமைக்காரியில்ல. நீ தைரியமா இருக்கலாம்.அவள ஒண்ணும் தப்பா பேசிடமாட்டேன்.” என்றார்.
தேவ்வோ, “தேங்க்ஸ் மா…” எனஅவரை அணைத்து விடுத்தான்.
“ லேட்டாச்சு.. போய் தூங்குங்க..” என்றார் லதா.
அவனும் தனதறைக்குச் சென்று கதவை தட்டினான்.
ஆராதனாதான் திறந்தாள். அவளோ லேசான ஷிபான் புடவையை உடுத்தியிருந்தாள்.
ஏனோ இரவு உடை அவன் முன் உடுத்துவது மிகுந்த தயக்கமாக இருந்தது.சூர்யா தூங்கியிருந்தான்.
கதவை திறந்து விட்டு அவள் பால்கனியில் போய் நின்றாள்.
உள்ளே வந்தவன் குளியலறை சென்று முகத்தினை கழுவி விட்டு தன் கப்போர்டிலிருந்து ஆர்வம் கட் பனியன் மற்றும் நைட் பேன்ட்டை எடுத்து அணிந்தான்.
ஆராதனாவோ பால்கனியில் நின்று முழு நிலவினை பார்த்து கொண்டிருந்தாள்.
தேவ் ஆராதனாவின் அருகில் சென்று,” ஆராதனா..” என்றான்.
அவளோ மெல்லத் திரும்பி அவனைப்பார்த்தாள்.
காலையிலுருந்து யாராவது ஒருவர் அவர்களை சுற்றியே இருந்ததால் தேவ்வால் அவளுடன்தனியே பேசமுடியாது போயிற்று.
முழுநிலவின் பாலொளியுடன் இதமான தென்றலுடன் மணம் கமழ்ந்து வரும் மல்லிகையின் நறுமணமும் புது மணத்தம்பதியருக்கு மயக்கும் இரவாக இருக்க வேண்டியது....ஆனால்..? இங்கு இருமனங்களுமே பல போராட்டத்திற்கு பின் ஒன்று சேர்ந்தாலும் இல்லறபந்தத்தில் இணைவதற்கு கடினமான மனச்சுவர் ஒன்று இருபக்கமும் எழும்பிருந்தது.
அதை தகர்ந்து வெளி வந்தால் மட்டுமே தாம்பத்தியத்தின் தாத்பரியம் இருவருக்கும் புரியும்.
தேவ் மீண்டும் "ஆராதனா..” எனக் கூறி அவளது முகத்தினை நிமிர்த்தினான்.
அவளோ அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த ஆதங்கத்தை கொட்டினாள் ..,” ஏன் இப்படி பண்ணுனீங்க ….உங்க இஷ்டத்துக்கு என்னை ஆட்டுவிக்கனும்ன்னு
நினைக்கிறீங்களா..? நான் சதை இரத்தம் இருக்குற சாதாரண மனுஷி.. என்னோட உணர்வுகள திரும்ப திரும்ப கொன்னுட்டு இருக்கீங்க….? இப்ப நான் என்ன பண்ணனும்…?எனக்கு புரியல... இன்னும் என்ன பண்ணி என் உணர்வுகளை கொல்லனும்ன்னு நினைக்கிறீங்க…சொல்லுங்க தேவ்… சொல்லுங்க…ஏன் இப்படி ஒரு பொண்ணோட உணர்வ கொன்னு இன்னொரு பொண்ணோட கழுத்தில் தாலி கட்டுனீங்க….” எனப்பேசிக் கொண்டே உணர்ச்சிவசப்பட்டு அவனது பனியனை பிடித்து உலுக்க… அவனோ அவளது முகத்தினை இருகைகளில் ஏந்தி ,“ ஏன்னா… நான் உன்னை மனப்பூர்வமா காதலிக்கிறேன் டி. எஸ்…. ஐ லவ் யூ பேட்லி….உனக்காக மட்டும் தான் இதெல்லாம் .நீ எனக்கு வேணும்.எனக்கு மட்டும் தான் வேணும்….” என அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே அவளது இதழில் மெல்லிய முத்தம் வைத்து விலகினான்.
அவளோ அதிர்ச்சியில் பேச்சிழந்து நின்றாள்.
மனம் கவர்ந்தவனின் முதல் முத்தம் கூட அவளது புத்தியில் உரைக்கவில்லை.
அத்தியாயம் 18:
தேவ்வோ ,” உனக்கான நேரத்தை நீ எடுத்துக்கோ ஆராதனா. நான் உன்னை எந்த விதத்திலும் தொந்தரவு பண்ண மாட்டேன்..”எனக் கூறி அவளது முகத்தை நிமிர்த்தி , “ நான் சொல்றது எல்லாம் நிஜம்தான்…எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல….பட் உன்னையும் சூர்யாவையும் நல்லாப் பாத்துக்கணும்ன்னு தோணுது …போய் தூங்கு “ என்றான்.
அவளோ அவனை நிமிர்ந்து பார்த்தவாறே, ” நான் ஒண்ணு கேக்கவா..?”என்றாள்.
அவனோ, “ கேளு….” என்றான்.
“ நீங்க லயவர்ஷினி கிட்ட என்ன பேசி இந்த கல்யாணத்த நடத்துனீங்கன்னு தெரியல…ஆனா அவங்க மணமேடை வரைக்கும் வந்து அவங்க வாழ்க்கைய பணயம் வச்சு இந்த கல்யாணத்துக்கு உங்களுக்கு உதவியிருக்காங்க…எனக்கு அதுவே பெரிய குற்றவுணர்ச்சி யா இருக்கு…அது மட்டுமில்ல , நான் உங்கள காதலிக்கிறேன்னு சொல்றப்பயெல்லாம் வராத காதல் இப்ப எப்படி தீடிர் ன்னு குதிச்சு வந்தது..?. எவ்வளவு அவமானப் படுத்தினீங்க …உங்களையே சுத்தி சுத்தி வந்ததுக்கு நல்லாவே என்னைய கஷ்டப்பட வச்சிட்டீங்க…. அன்னைக்கு நான் உங்ககிட்ட அவ்வளவு அவசரமா வந்தது எதுக்கு தெரியுமா..? எங்க வீட்ல எனக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணத்துக்கு தேதி குறிக்கிற அளவுக்கு போயிட்டாங்க .மனசுல உங்கள நினைச்சிட்டு வேற ஒருத்தன் கிட்ட தாலி வாங்கிக்கிற அளவு எனக்கு பரந்த மனசு கிடையாது . அது என்னால முடியவும் முடியாது . அன்னிக்கு நீங்க ஓரே ஒரு வார்த்தை “ நான் இருக்கேன்னு" சொல்லிருந்தீங்கன்னா ஏதோ ஒரு வகையில் கொஞ்சம் ஆறுதலா இருந்திருப்பேன். இப்ப வந்து நான் காதலிக்கிறேன், எல்லாம் உனக்காக தான்னு சொன்னா என்னால எப்படி ஏத்துக்க முடியும்…? அடுத்தடுத்த இழப்புகள் என்னோட உணர்வுகள கொன்னு போட்ருச்சு..,அது திரும்ப உங்க மேல பழையபடி வருமான்னு கேட்டா அதுக்கு பதில் தெரியல தான்….. உங்களுக்கு உங்க கஷ்டம் …எனக்கு என்னோட கஷ்டம் தான் கண்ணு முன்னாடி நிக்குது.அதுல இருந்து என்னால இன்னுமே மீண்டு வர முடிய மாட்டேங்குது…..ஐ யம்…சாரி….எனக்காகன்னு இனி எதுவும் செஞ்சி குற்றவுணர்ச்சிக்கு என்னைய ஆளாக்காதீங்க.. .என் வேலைகளை நானே பாத்துக்குறேன்…. ஃப்ளீஸ் “ எனக் கூறி விட்டு அவனது பதிலை எதிர்பாராமல் சோஃபாவில் தலையணையை வைத்து படுத்துக் கொண்டாள்.
தேவ்விற்கு அவளது மனநிலை புரிந்தது.
ஆனால் அவனது நிலை புரியவில்லை ஆராதாவிற்கு....எம்மாதிரியான சூழ்நிலையில் அவளை தள்ளி வைத்திருந்தான் என்பதை பேதையவள் அறியவில்லை.
அறிந்திருந்தால் அவளது மனம் சற்று இளகியிருக்குமோ...?என்னமோ.....?
ஒரு பெருமூச்சுடன் சென்று சூர்யாவின் அருகில் படுத்து கொண்டான்.
இருவருக்குமே இரவு முழுவதும் கண்ணில் ஒரு பொட்டு தூக்கம் இல்லை.
மனமொத்து திருமணம் நடைப்பெற்றிருந்தால் முந்தைய இரவு இனிமையான இரவாக இருந்திருக்கும்.அவனின் கைவளைவினில் அவளும் அவளது கார்மேக கூந்தலில் முகம் புதைத்து அவளை முத்தாடி கொண்டாடியிருப்பான். ஆனால் இங்கு நிலையோ தலைகீழாக இருந்தது.
விடியற்காலையில் தான் கண்ணயர்ந்தார்கள்.
ஆராதனா கண்விழிக்கும் போது மணி எட்டரை ஆகியிருந்தது. விடியலும் அவளது மனதைப் போலவே சோர்வாக இருந்தது.
சோம்பலாக திரும்பி படுக்கும்போது தான்... தான் இருப்பது வேறு புதிய இடமென உரைத்தது.
“ ஆம்..! நேற்றுதான் திருமணம் முடிந்துள்ளது.இன்று தாமதமாக எழுந்தால் என்ன நினைப்பார்கள்…சரியான சோம்பேறி என்றல்லவா நினைப்பார்கள்" என நினைத்துக் கொண்டு
“ச்சை..! எவ்வளவு நேரம் தூங்கிட்டேன்…” என தன்னைத் தானே திட்டிக்கொண்டே காலைக்கடன்களை வேகமாக முடித்தாள்.
வந்தானா வீட்டின் இருக்கும் நியாபகமாக பூந்துவாலையை மட்டும் எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றுவிட்டாள்.
குளித்து முடித்ததும் தான் நியாபகம் வந்தது ஆறடி உயரத்தில் புதிய ஜீவன் ஒன்று சூர்யாவின் அருகில் படுத்திருப்பது .”அய்யோ…! “எனத் தலையில் கை வைத்து ,” ம்ம்…இப்ப எப்படி வெளியே போய் டிரெஸ் சேஞ்ச் பண்ணறது. இவரு வேற இருக்காரே….அறிவேயில்ல ஆரா.. இப்படித்தான் மாத்துத் துணி எடுத்துட்டு வராம இருப்பியா..? “ எனத் தன்னைத் தானே நொந்து கொண்டு மெல்ல தலையை மட்டும் குளியலறையிலுருந்து நீட்டி பார்த்தாள்.
தேவ்வோ குப்புற படுத்துக் கொண்டு சூர்யாவை அணைவாக அணைத்துக் கொண்டு படுத்திருந்தான்.
சூர்யா ஒரு காலை மட்டும் தூக்கி அவன் முதுகின் மேல் போட்டு படுத்திருந்தான்.
பார்க்க தந்தை மகன் என ஓர் அழகிய கவிதையாக அவளது மனதில் பதிந்தது.
பூந்துவாலையை மட்டும் அணிந்து ஈரமான தலைமுடியுடன் மெல்ல சத்தம் வராமல் பூனை போல் நடந்து தனது பெட்டியை திறந்து ஆடைகளை எடுத்துக் கொண்டிருந்தாள்.
அவள் கீழே அமர்ந்து எடுத்துக் கொண்டு இருந்ததால் தேவ்விற்கு அவள் இருப்பது தெரியவில்லை.
அவன் எழுந்து கண்ணாடியின் முன் வந்து நின்று தலைமுடியை கோதிக்கொண்டே திரும்பினான்.
ஆராதனா அமர்ந்திருந்திருந்ததால் அவளின் பளிங்கு முதுகினை ஈரமான கூந்தல் மறைந்திருந்தது.
அவனோ “ ஆராதனா ஏன்…இப்படி ஈரமான முடியோட …..” என்பதற்குள்அவள் பதறி எழுந்ததால் அவள் முடிவிலிருந்து சொட்டிய ஈரம் அவளது காலை வழுக்கியது.
நிலைத் தடுமாறி கீழே விழப்போனவளை தேவ் கைகொடுத்து தன்னருகே இழுத்து நிறுத்தியதில் அவனது திண்ணிய மார்பில் மோதி நின்றாள்.
தேவ்வின் வலிமையான கரங்கள் அவளது இடையினை இறுகப்பற்றியிருந்தது.
அவனது விழிகள் ஆழ்ந்து அவளை ரசிக்கத் தொடங்கியிருந்தது.
அவளது பிறை நெற்றியிலுருந்துவழிந்த நீரானது அவளது நாசி தீண்டி இதழில் இளைப்பாறி சங்கு கழுத்தில் இறங்கியது. அவன் கட்டிய புத்தம் புதிய பொன் மஞ்சள் தாலி அவளது அழகினை இன்னும் அதிகப்படுத்திக் காட்டியது.
அவளது முகத்திலிருந்த நீர்த்துளிகள் “என்னை அள்ளி பருகிவிடு” என்றழைப்பது போல் இருந்தது தேவ்விற்கு.
உஷ்ணப்பெருமூச்சு வெளியேறியது அவனுக்கு . அவளின் இதழ்களை தீண்ட அவளருகே சென்றுவிட்டான்.
ஆராதனாவோ அதிர்ச்சி விலகாமல் நின்றிருந்தாள்.
அவனது பெருமூச்சானது அவளது முகத்தில் சூடாகப் படவே சட்டென்று சுதாரித்து கொண்டு விலகியிருந்தாள்.
அவனது உள்ளங்கையின் வெப்பமானது இன்னும் தன்னிடையில் மிச்சமிருப்பதைப்போல் தோன்றியது.
வேகமாக் தன் உடையினை எடுத்துக் கொண்டு திரும்பவும் குளியலறை செல்ல இருந்தவளை தேவ் தடுத்து, “ ஐ...யம் சாரி….நீ இங்கேயே டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கோ…. நான் அப்பறம் வர்றன் “ என்றான்.
இப்போது அவன் கீழே போனால் நன்றாக இருக்காது எனவே ,” இல்ல நான் பாத்ரூம்லயே மாத்திக்கிறேன்….நீங்க இப்ப கீழே போகாதீங்க……நல்லா இருக்காது.” எனக் கூறி விட்டு அவனது பதிலை எதிர்பாராமல் பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள்.
குளியலறை நன்றாகவே பெரிதாக இருந்தது.அதனால் உடை மாற்றுவது சிரமமாக இல்லை அவளுக்கு.
வேகமாக உடையை மாற்றிக்கொண்டு கீழே விரைந்தாள் ஆராதனா.
சமயலறையில் லதா காலை உணவை தயார் செய்து வைத்திருந்தார்.
சமயலறை வாசலிலேயே சில நிமிடங்கள் தயங்கி நின்றாள்.உள்ளே செல்வதா? வேண்டாமா?...அவரை அத்தை என்றழைப்பதா? இல்லை அம்மா என்றழைப்பதா என்ற குழப்பம்.
சில வீடுகளில் மாமியாரை அம்மா என்றழைக்கும் வழக்கம் இருக்கவே செய்கிறது.
அதனால் தயங்கி தயங்கி உள்ளே சென்றாள். “ ஏதாவது உதவி செய்யட்டுமா?...” என மொட்டையாக கேட்டாள் ஆராதனா.
லதாவோ திரும்பி பார்த்து விட்டு, “ இல்லம்மா…எல்லாம் முடிச்சாச்சு..இனி மதியத்துக்கு தான் சமைக்கனும்….நீ சாமி விளக்கு ஏத்திட்டு வந்து சாப்பிடும் மா….சூர்யா எழுந்தவுடனே என்ன கொடுப்ப..?” என்றார்.
“அவனுக்கு ராகி கஞ்சி தான்..ம்மா” எனக் கூறி விட்டு அவரைப் பார்த்தாள்.
“ இல்ல உங்கள எப்படி கூப்பிடறது…? அதான் அம்மான்னு சொன்னேன்.தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க….” என்றாள்.
லதாவோ இப்போது நன்றாக அவளது பக்கம் திரும்பி,” உன் மனசுக்கு எது நெருக்கமா இருக்கோ அப்படியே கூப்பிடு.” என்றார்.
“ அவர் எப்ப சாப்பிடுவார்..?” என்றாள்.
“ நீ முதல்ல சாப்பிடு…அவன் வர்றப்ப வந்து சாப்பிடட்டும்..நீ வெயிட் பண்ணாத…” என்றார்.
“ புது இடம் நைட் தூக்கம் வரல.அதான் லேட்டா எழுந்துட்டேன். இனி சீக்கிரமே எழுந்துடுறேன்.” என்றாள்.
“ நா தவறா எதுவும் நினைக்கல..மா.அஞ்சு மணிக்கே எழுந்து வேலை செய்ற அளவுக்கு இங்க அவ்வளவு வேலை கிடையாது.மெதுவா ஆறரை மணிக்கு எழுந்தா போதும்… வா முதல்ல வா போய் சாப்பிடலாம்…” என்றார் லதா.
அவருக்கு தெரிந்தது தேவ் வராமல் அவள் சாப்பிட வரப் போவதில்லை என்று.
எனவே தானும் சென்று உணவருந்த முடிவு செய்தார்.
அவளுக்கு பூஜையறையை காண்பித்து விளக்கேற்றும்படி கூறிவிட்டு அமைதியாக நின்றார்.
அவள் விளக்கேற்றி விட்டு நெற்றியில் குங்குமம் வைத்தாள்.
தேவ் குளித்துவிட்டு சூர்யாவை தூக்கி கொண்டு கீழே இறங்கி வந்தான்.
அவள் பூஜையறையை விட்டு வெளியே வந்து சூர்யாவை தூக்கிக் கொண்டாள்.
" வா... தேவ் ...நீயும் ஆராதனாவும் சாப்பிடுங்க...நா சூர்யாவுக்கு ராகி கஞ்சி குடுக்கிறேன்.." என அவனை அழைத்து கொண்டு சமயலறை சென்றார்.
ஆராதனா தேவ்விற்கு தட்டை எடுத்து வைத்தாள். தேவ்வோ ," நீயும் உட்காந்து சாப்பிடு, டைம் ஆச்சு..." என்றான்." இல்ல பரவாயில்ல..." என்று ஆரம்பிக்கும் போதே , தட்டை எடுத்து வைத்து அவளின் தோளினைப் பிடித்து அமர வைத்தான்.
பின்னர் அவளுக்கு நான்கு இட்லியை வைத்து சாம்பாரை ஊற்றி தானும் போட்டுக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.
அவளோ அவனைப் பார்த்து கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள். " என்னைய பார்த்தது போதும் தட்டைப் பார்த்து சாப்பிடு" என்றான்.
அவளோ அவனை முறைத்து விட்டு விடுவிடுவென சாப்பிட ஆரம்பித்தாள்.சூர்யாவோ சமர்த்தாக லதா கொடுத்த ராகி கஞ்சியை குடித்துவிட்டு தேவ் வின் அருகில் அமர்ந்தான்.
" கஞ்சி. குடிச்சாச்சா..? சூர்யா" என்றான்.
" எஸ் ..டாக்டர் அங்கிள் " என்றான்.
ஆராதனாவிற்கும் தேவ் விற்கும் இச்சமயத்தில் தோன்றியது ஒன்றே ஒன்றுதான் சூர்யா தேவ்வினை தந்தையாக ஏற்றுக்கொள்ளவானா..? அல்லது டாக்டர் என்ற அளவிலே அவனது மனநிலை இருக்குமா? நாளை அவர்களுக்கென்று குழந்தை எனப் பிறந்துவிட்டால் அதை சூர்யா எவ்வாறு ஏற்றுக்கொள்வான்...? எந்த உறவினை சொல்லச் சொல்லி அவனை பழக்கப்படுத்துவது....? என்ற எண்ணங்களே மனதினுள் சுழன்றடித்தது.
.
லயவர்ஷினியை அப்படியே விட்டுட மனசு வரல.அதான் அவளுக்கு ஜோடியா புது ஆள எறக்குறேன்
பெயர்: ஆர்யன் என்கிற ஆர்ய இளநெடுமாறன்
அத்தியாயம் 19
லயவர்ஷினி அமைதியாக தனது மடிக்கணினியில் ஏதோ பார்த்து கொண்டிருந்தாள்.
மணிகண்டன் அவளின் அருகில் வந்து அமர்ந்தார்.
“ என்ன மா வர்ஷினி என்ன அவ்வளவு சீரியஸா பாத்துட்டு இருக்க..? “ என்றார் .
அவளோ ,”அப்பா நம்ம ரொம்ப நாளா எதிர்பாத்துட்டு இருந்த அபூர்வமான சிவப்பு வைரத்தை ஆஸ்திரேலியால இருந்து வரவைச்சு இங்க ஏலத்தில் விடப்போறாங்க.
அதோட மதிப்பு பல கோடி. நான் அந்த ஏலத்தில் கலந்துக்கப் போறேன். அந்த வைரம் நமக்கு கிடைச்சா ரொம்பவே பெருமையா இருக்கும் பா….என்ன சொல்றீங்க…? முயற்சி செய்து பார்க்கலாமே “ என்றாள்.
மணிகண்டன் ஒரு பெருமூச்சுடன் , " " "கல்யாணத்தையும் மணமேடை வரை வந்து நிறுத்திட்ட . இப்ப சிவப்பு வைரத்தை வாங்கனும்ன்னு சொல்ற. நான் எதைச் சொன்னாலும் கேட்கக் கூடாதுன்னு இருக்கியா..? உன்னோட வாழ்க்கையைப் பாரு வர்ஷினி . இந்த வைரம் தங்கம் எல்லாம் போதுமான அளவு நம்மகிட்ட இருக்கு . இருக்குறத வச்சு சந்தோஷப்படு . பறக்கறதுக்கு ஆசைப்படாதே..! இந்த ஏலத்தை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக எடுத்து நடத்துல . அதனால் இதுல ஏதாவது அசம்பாவிதம் நடந்தா அரசாங்கம் பொறுப்பேற்காது . உலகம் முழுதும் இருக்குற மிகப்பெரிய புள்ளிகள் இதுல கலந்துக்கு வாங்க . நமக்கு சரிப்படாது மா.விடு . இரண்டு கட்டமா வேற நடத்துறாங்க . கிட்டத்தட்ட ஒரு வாரம் இல்ல பத்து நாள் இழுத்தடிக்கும்…நான் மாப்பிள்ளை பாக்குறேன். நீ முதல்ல கல்யாணம் பண்ணி லைஃப்ல செட்டிலாகு.” என்றார்.
லயவர்ஷினியோ, “ கண்டிப்பா பண்ணிக்குவேன் பா கவலைப்படாதீங்க . எனக்குன்னு பிறந்தவன் கண்டிப்பா வருவான். என்னை அப்படியே ஏத்துக்கனும் அது தான் முக்கியம் பா. ஃப்ளீஸ் பா இந்த ஒரு தடவ “ என்று அவரது கன்னம் பிடித்து ஐஸ் வைத்தாள்.
தன் மகள் மீது மிகுந்த பாசமும் அவளது திறமையில் பலத்த நம்பிக்கையும் இருந்ததால் சரி என்றார்.
இங்கோ தனி விமானத்தில் முகத்தில் புத்தகத்தை மூடியபடியே அமர்ந்திருந்தான் ஆர்யன் என்கிற ஆரிய இளநெடுமாறன்.
கிடைப்பதற்கரியப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கி தனது பிரம்மாண்டமான பொக்கிஷ அறையில் பத்திரப்படுத்தி தினமும் அழகுப் பார்ப்பது அவனுக்கு ஒரு விதமான போதையைத் தரும்.
வைர வியாபாரத்தில் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்து கோடிகளில் புரளுபவன்.
ஆறடிக்கும் சற்று அதிக உயரத்தில், அலையலையான கேசத்துடனும், கட்டுக்கோப்பான உடற்கட்டுடனும், அடர்ந்த மீசையுடன், இறுக்கமான உதடுகளுடன் அமர்ந்திருந்தான்.
மாநிறமாக இருந்தாலும் ஆண்மை ததும்பிய அவனது தோற்றத்திலும் வசீகரிக்கும் கூர்மையான விழிகளிலும் கன்னிப்பெண்கள் இதயத்தை களவாடி விடுவான்.
தன் பின்னால் தேவையில்லாமல் வரும் பெண்களை விழிகளாலேயே சுட்டெரித்து தள்ளி நிறுத்தி விடுவான்.
அவனுக்கு எதிரிகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய சூழ்நிலையால் தன்னை பலவீனமாக்கும் எந்த ஒரு கெட்ட பழக்கத்தையும் அருகில் அண்ட விட மாட்டான்.
முகத்திலிருந்த பத்திரிக்கையை எடுத்த ஆர்யன்,” பத்ரி..” என தனது பால்ய நண்பன் மற்றும் தனது தனிப்பட்ட காரியதரிசியை அழைத்தான்.
“ சொல்லுங்க சார்…” என்றான்.
“ அந்த ரெட் டைமண்ட்க்கான ஆக்ஷன் டெண்டர்ல இனிஷியல் ரவுண்டுக்கு செலக்ட் ஆகி எத்தனை பேர் வர்றாங்க…?” என்றான்.
“பதினஞ்சு பேர்…சார்.ஒரு லேடி உட்பட “ என்றவுடன்.
ஆர்யனது கண்கள் ஒருமுறை விரிந்து சுருங்கியது.
அந்த பதினஞ்சு பேரோட பேக்கரவுண்ட் எல்லாம் ரெடி பண்ணு . முதல் ரவுண்டுக்கு மட்டும் தான் அவங்க வரணும். இரண்டாவது ரவுண்டுக்கு நான் மட்டும் தான். புரியுதா…?” எனத் தெனாவெட்டாக கூறினான்.
பத்ரியோ மனதில் , "உன்னைய மாதிரி தானடா எல்லாருக்குமே வாங்கனும் ன்னு ஆசையிருக்கும் . இப்படி எல்லா இடத்திலும் போய் எல்லாரையும் தள்ளிவிட்டு வாங்கிட்டு வந்துடுற….” என நினைத்தான்.
ஆர்யனோ அவனது எண்ணங்களைப் படித்தவன் போல் எழுந்து நிமிர்ந்து நின்று பத்ரியின் சட்டைக் காலரை சரி செய்தவாறே ,” ஆமா…மிஸ்டர் பத்ரி நான்தான் எல்லாத்துலையும் ஃபர்ஸ்ட் இருக்கனும். உலகத்தில இருக்குற எல்லா யுனிக் பீஸும் என்கிட்ட தான் இருக்கனும்…” என்றான்.
உடனே பத்ரியின் வாய் அவனது சொல் பேச்சு கேளாமல்,” எல்லா யுனிக் பீஸூம் ன்னா…?” என நிறுத்தினான்.
ஆர்யனோ அவனைக் கூர்ந்து பார்த்தவாறே, "பொண்டாட்டி உட்பட” என்றான்.
பத்ரியோ மனதில் , "அடேய்….. பொண்டாட்டிய எப்படா யுனிக் பீஸுல சேர்தத..? “ என நினைத்து கொண்டு வந்தவன் கண்கள் மின்ன ,” மச்சி அப்ப கல்யாணம் பண்ற ஐடியா வந்துடுச்சா…?” என்றான்.
ஆர்யனோ,” கால் மீ சார்….” என்றான்
பத்ரி ,” சாரிங்க சார்….இப்ப சொல்லுங்க கல்யாணம் பண்ணிக்குற ஐடியா இருக்கா?” என்றான் பல்லைக் கடித்தவாறே.
ஆர்யனோ,” நோ வாய்ப்பில்லை, ஜஸ்ட் நீ உன் மனசுல நினைச்சதுக்கு சொன்னேன். தடஸ் இட். இந்த மேரேஜ் கமிட்மெண்டெல்லாம் எனக்கு செட் ஆகாது …..அது விடு நான் சொன்னத ரெடி பண்ணு. எல்லாரோட ஃபோட்டோ உட்பட .” என்றான்.
பத்ரியோ ,” சரிங்க சார்…” என்றான்.
சிறிது நேரத்தில் பத்ரி அனைவருடைய தகவல்களையும் அவர்களின் புகைப்படத்தோடு அவனுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தான்.
ஆர்யன் ஓவ்வொருவருடைய புகைப்படத்தையும் அவர்களைப் பற்றிய தகவல்களையும் பார்த்து கொண்டே வந்தவன் , இறுதியில் லயவர்ஷினையைப் பற்றிய தகவல்களை பார்த்து விட்டு அவளது புகைப்படத்தை பார்த்தான். அடர் நீல நிறப் புடவையில் தனது நீண்ட விழிகளுக்கு மைத்தீட்டி அடர்ந்த கூந்தலைப் பின்னி லேசான ஒப்பனையில் தேவதையென மிளிர்ந்தாள்.
ஆர்யனது கண்கள் அவளை அளவெடுத்தது.
அழகிய செம்பவள உதடுகளின் மேலே இருந்த சிறிய மச்சம் அவனை உள்ளிளுததுக் கொண்டது.
ஆர்யனது நீண்ட ஆள்காட்டி விரல் அவளது பிறை நெற்றியில் தொடங்கி கூரிய நாசியில் இறங்கி தேனூறும் இதழ்களை தாண்டி கழுத்தில் இறங்கி அவளது முழு உருவத்தையும் வருடியது.
ஏனென்றே தெரியாமல் அனிச்சை செயலாக அவளது புகைப்படத்தை வருடிக் கொண்டிருந்தான் ஆர்யன்.
அதை பார்த்த பத்ரி , “ எந்த சொட்டைத் தலையன் ஃபோட்டோவ இப்படி வச்ச கண்ணு வாங்கம பாத்துட்டு இருக்கான் …?“ என மெதுவாக எட்டிப்பார்த்தான்.
ஏனெனில் ஏலத்திற்கு வரப்போகிற அனைத்து பெரும்புள்ளிகளும் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றவர்கள். அனைவரும் ஐம்பது வயதை தாண்டியவர்கள்.
வியாபாரத்திலும் நிர்வாகத்திலும் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்.
ஆர்யனும் லயவர்ஷினி மட்டுமே இளம் வயதினர்.
பாவம் லயவர்ஷினியின் புகைப்படம் கொடுத்தது மறந்து விட்டது போலும் பத்ரிக்கு.
தன் நண்பனது விரல்கள் அவளின் நிழல் பிம்பத்தோடு விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து திகைத்தான்.
ஏனெனில் தனது நண்பன் இதுவரை எந்த ஒரு பெண்ணையும் நிமிர்ந்து பார்த்ததும் இல்லை.நிதானமாக அவர்களின் அழகை ரசித்ததும் இல்லை.
தொழில்முறையாக சிலருடன் பேசியிருப்பானேத் தவிர அதைத் தாண்டி அனாவசியமான பேச்சுக்கள் கிடையாது.
அப்படியிருப்பவன் இன்று ஒரு பெண்ணின் புகைப்படத்தை வருடிக் கொண்டு இருக்கிறான் என்றால் அவனுக்கு ஆச்சர்யமே.
அவனருகே வந்து,
“ இவங்க பேர் லயவர்ஷினி…” என்று ஆரம்பிக்கும் முன்பே அவனை கை நீட்டி தடுத்து “ எல்லா டீடெய்ல்ஸூம் பார்த்தாச்சு “ என்றான்.
பத்ரியின் சிறு மூளையோ விவகாரமாகவே சிந்தித்தது,
” அதான் பார்த்தேனே…” என்றான்.
ஆர்யனோ அவனை முறைத்தான்.
“ இல்ல சும்மா…தான் “ என இளித்து விட்டு நகர்ந்தான்.
தனது அலைப்பேசியை எடுத்து நண்பன் ரிஷிக்கு அழைத்தான்.
அழைப்பு எடுக்கப்படவில்லை. சிறிது நேரம் கழித்து அவனது நண்பனே அழைத்தான்.
“ ஹாய் டா ஆர்யா . எப்படி இருக்க..?. முக்கியமான வேலையில் இருந்தேன் …அதான் எடுக்கல“ எனக் கூறும்போதே ஆர்யனுக்கு புரிந்தது என்ன வேலையென்று.
“சாரி டா…உன் வேலைய டிஸ்டர்ப் பண்ணுனதுக்கு…. நா வர்ற ரெண்டாம் தேதி நடக்குற ரெட் டைமண்ட் ஆக்ஷனுக்கு உதய்பூர்ல இருக்கிற தி ஓபேராய் உதய் விலாஸுக்கு போறேன்(The oberoi udai vilas). நீ எனக்கு சில விஷயங்களை பண்ணனும்” என்றான்.
ஏனெனில் ரிஷியின் தந்தைக்கு உலகம் முழுவதும் நல்ல செல்வாக்கு இருப்பதினால் ஏலத்திற்கு வரும் பெரும்புள்ளிகளை பற்றிய மேலும் சில தகவல்களை சேகரிக்க ரிஷியின் உதவியை நாடினான் .
சென்னையிலிருந்து ஏலத்திற்கு போவது லயவர்ஷினி மட்டுமே என்பதால் அவளைப் பற்றி எதுவும் ரிஷியிடம் கூறவில்லை.
கூறியிருக்கலாமோ என்னவோ…?
தேவ் தனது பெற்றோருடனும் ஆராதனா மற்றும் சூர்யாவுடன் அருகில் இருக்கும் தனது குலதெய்வ கோவிலுக்கு சென்று திரும்பிக் கொணாடிருந்தான்.
ஆராதனாவிற்கு குலதெய்வ வழிபாடு என சொன்னதும் தனது பெற்றோர் மற்றும் தமக்கை இறந்ததே முதலில் நியாபகம் வந்தது.
முதலில் வர மறுத்தவள் .பின்னர் லதா வந்து சமாதானம் செய்தவுடன் சரியென்றாள்.
தேவ்வோ அவளை நெருங்க முயற்ச்சிக்கிறான், ஆனால் அவளோ விலகி விலகிப் போகிறாள்.
விலகலின் வலி எத்தகையது என்பதை அவன் நன்கு உணர்ந்திருந்தான்.
அவனை எந்த விடயத்திற்கும் அவள் எதிர்பார்ப்பதேயில்லை.
ஆனால் பாவம் அவனுக்கு தான் அவளிடம் தனது காதலை எவ்வாறு புரிய வைப்பது என்பது தெரியாமல் திண்டாடினான்.
ஏலத்திற்கு லயவர்ஷினியின் தந்தையும் அவளுடன் வருவதாக இருந்தது.
ஆனால் கிளம்புவதற்கு முதல் நாள் வேறு ஊருக்கு கிளம்பும் சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தால் லயவர்ஷினியும் அவளது தோழி மற்றும் காரியதரிசி தேன்மொழி மட்டுமே விமானத்தில் கிளம்பினார்கள்.
மணிகண்டனுக்கோ மகளை தனியே அனுப்ப மனமில்லை என்றாலும் மகளின் பிடிவாதத்திற்காக அரை மனதாக சம்மதித்திருந்தார்.
லயவர்ஷினியும் தேன்மொழியும் உதய்பூருக்கு வந்துவிட்டனர்.
அந்த பிரம்மாண்டமான உல்லாச தங்கும் விடுதி இருநூறு ஆண்டுகள் பழைமையானது.
அரண்மனை போன்ற அமைப்பு கொண்டது.
ஒவ்வொரு அறையுமே பிரம்மாண்டத்தையும் பழைமையையும் எடுத்துக் காட்டுவதாக இருந்தது.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றார்கள் இருவரும் .
முன்னரே வந்துவிட்ட ஆர்யன் யார் யார் வருகின்றார்கள் எப்படி வருகின்றார்கள் என பார்த்துக் கொண்டே இருந்தான்.
ஏனெனில் அவர்கள் முதல் கட்ட ஏலத்திற்கு மட்டுமே வருவதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு வந்திருக்கின்றான்.
எல்லோரும் சொல்லி வைத்தார் போல் இரண்டாம் கட்ட ஏலத்திலிருந்து கிளம்ப வழிவகைகளை செய்து வைத்து விட்டு வந்திருக்கிறான் எமகாதகன்.
இதில் லயவர்ஷினி மட்டுமே விதிவிலக்கு.அதன் காரணம் என்னவோ?...
பொருளின் மதிப்பு அதிகம் என்பதால் ஆரம்ப கட்ட விலையே கோடிகளில் தான் ஆரம்பம் ஆகும் .
லயவர்ஷினிக்கும் அந்த சிவப்பு வைரத்தின் மீது ஆர்வம் மிக அதிகமாக இருந்தால் பணத்தை பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.
தனது டெண்டரை மிகவும் திறமையாக தயாரித்திருந்தாள்.அவளுக்கு இவ்வாறு ஏலத்தில் விலை மதிப்பு மிக்க வைரங்களை வாங்கி பழக்கம் என்பதால் பெரிதாக சிரமப்படவில்லை.
என்ன ...! இப்போது ஏலத்திற்கு வருபவர்கள் அனைவருமே வெளிநாட்டவர் என்பதால் சிறிது பதட்டமாக இருந்தாள்.
வெளிநாட்டவருக்கு கோடிகள் ஒரு பொருட்டே கிடையாது அவர்களுக்கு பொருளின் பழைமையும் அதை வைத்திருப்பதே பெருமையயாக கருதுவார்கள்.
வந்ததிலிருந்து அனைவரையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். லயவர்ஷினியையும் தேன்மொழியையுமே அவனது கண்கள் அலசிப் கொண்டிருந்தன.
லயவர்ஷினியை ஆழ்ந்துப் பார்த்தன அவனது காந்த விழிகள்.அவனது மனதில் ஏதேதோ நினைவுகள் முட்டிமோதியது.இரு கரங்களால் முகத்தை அழுந்தத் தேய்த்து கொண்டான் .
அத்தியாயம் 20
ஆர்யன் தனக்குரிய பிரம்மாண்டமான அறையினுள் இங்குமங்கும் நடந்துக்கொண்டிருந்தான.
இவ்வளவு வருடங்களுக்கு பிறகு லயவர்ஷினியை காண்போம் என அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
அவளைப் புகைப்படத்தில் பார்த்தபோதே உள்ளுக்குள் ஏதோ ஒன்று கனன்று கொண்டிருந்தது.
நாளை மதியம்தான் ஏலம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர் .
இருப்பினும் அனைவரும் ஒரு நாள் முன்னதாகவே உல்லாச விடுதிக்கு வந்துவிட்டனர்.
அனைவரும் விடுதியின் அழகினை ரசித்து கொண்டு இருந்தனர்.
இரவு மகள் முழுநிலவின்அழகினை அள்ளி உல்லாச விடுதி முழுவதற்கும் வாரி வழங்கியிருந்தாள்.
செயற்கை வண்ண விளக்குகளின் ஜாலம் ஒரு புறம் என்றால் அழகிய நிலவொளியில் இதமான தென்றல் வீசி சூழ்நிலையை இன்னும் ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது.
வர்ஷனியும் தேன்மொழி யும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அதிக மதிப்புள்ள வைரத்தின் ஏலம் என்பதால் அந்த உல்லாச விடுதி முழுவதும் அதில் கலந்துகொள்பலவர்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
வெளி ஆட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
ஏலம் முழுதாய் முடியும் வரைக்கும் இந்த கட்டுப்பாடு இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது…
நிச்சயமாக வைரம் தன்னுடைய கைகளில் வந்துவிடும்என்ற மிதப்புடன் அமர்ந்திருந்தான் ஆர்யன்.
இந்த முறை பெண்ணவள் தன்னிடம் தோற்றுப் போய் பரிதாபமாக ஊர் போய் சேருவாள் என்றெண்ணியிருந்தான்.
முன்னர் பட்ட அவமானத்திற்கு பதிலளிக்க தானாகவே சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது என நினைத்துக்கொண்டான்.
சிறிது நேரத்தில் அனைவருக்கும் பஃபே உணவு வழங்கப்பட்டது.
நான்கு நான்கு நாற்காலிகள் இடைவெளி விட்டு போடப்பட்டிருந்தது.
லயவர்ஷினி உணவு எடுத்து வரச் சென்றிருந்தாள்.
தேன்மொழி மட்டுமே அமர்ந்திருந்தாள்.
“ எக்ஸ்கியூஸ் மீ “ எனஆண் குரல் ஒன்று கேட்டது.
நிமிர்ந்து பார்த்தாள் ஆர்யனுடன் பத்ரி நின்றிருந்தான்.
“தமிழா..? “ எனக் கேட்டான் ஆர்யன்.
உடனே தேன்மொழியோ , "ஆமா சார்…” என்று கூறிக்கொண்டு இருக்கும்போதே லயவர்ஷினி வந்துவிட்டாள்.
ஆர்யனோ ,” நாங்களும் உங்க கூட ஜாயின் பண்ணிக்கலாமா..? வெள்ளக்காரன்ட்ட பேசி போரடிச்சிருச்சு.சோ இப் யூ டோண்ட் மைண்ட் இங்க உட்காரலாமா?...” என அமைதியாகக் கேட்டான்.
“ யா…ஷூயோர்” என்றாள் லயவர்ஷினி.
ஆர்யனை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை .
.அவனோ தன் கூலர்ஸை சரி செய்தவாறே தன் உணவுத் தட்டுடன் நாற்காலியில் அமர்ந்தான்.
தன்னைப் பற்றி சுருக்கமாக அறிமுகம் செய்து கொண்டான்.
சிறிது நேரம் நான்கு பேரும் பொதுவான விஷயங்களை பேசிக்கொண்டிருந்தனர்.
“ ஓகே நாளைக்கு பார்க்கலாம்…ஆல் தி பெஸ்ட் “ என்று கூறி விட்டு நகரப் போனான், ”ஆர்யன்…” என்றழைத்தாள் வர்ஷினி.
"சொல்லுங்க வர்ஷினி…” என்றான்
“ உங்கள எங்கயோ பாத்த மாதிரி இருக்கே..?” என்றாள் .
அவனோ மனதினுள், "பரவாயில்ல ஷார்ப் தான்.. “ என்று நினைத்துக் கொண்டு , அவளை ஆழ்ந்து பார்த்தவாறே "வாய்ப்பேயில்லை மேடம்” என கூறிவிட்டு நடந்தான்.
சிறிது நேரம் அவனது முதுகினை பார்த்தபடி நின்றிருந்தாள்.
பின்னர் தோளைக் குலுக்கி விட்டு தனதறைக்குச் சென்றாள்.
அவளறைக்கு அருகிலேயே தான் ஆர்யனது அறையும் இருந்தது.
மறுநாள் மதிய உணவிற்கு பிறகு ஏலம் ஆரம்பமாகியது.
ஆரம்பக்கட்ட விலையே இரண்டு கோடியைத் தொட்டது .
அதனை தொடர்ந்து வ ஆளாளுக்கு விலையை ஏற்றிக்கொண்டேப்போக இருபத்திமூன்று கோடியில் வந்து நின்றது.
ஜெர்மனியைச் சேர்ந்த பெரும்புள்ளி ஒருவர் இருபத்து மூன்று கோடிக்கு விலையை நிர்ணயித்திருந்தார்.
நேரம் தாண்டி விட்டதால் மறுநாள் மதியத்திற்கு விருப்பமுள்ளவர்கள் விலையை மேலும் நிர்ணயிக்கலாம் என்றார்கள்.
அனைவரும் கலைந்து சென்றனர்.
அன்றிரவே ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் ஏதோ வகையில் பணம் முடக்கப்பட்டிருந்தது. லய வர்ஷினியைத் தவிர.
பங்கு சந்தையில் நஷ்டம், வங்கிக் கணக்கு ஹேக் செய்யப்பட்டு பணம் எடுக்க முடியாத சூழ்நிலை,என எவராலும் ஊகிக்க முடியாத காரணங்களால் ஏலத்தில் கலந்து கொண்ட வெளிநாட்டவர்கள் உடனடியாக கிளம்பவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அதிக அளவில் செலவிடப்பட்டு ஏற்பாடு செய்த ஏலம் என்பதால் ஏலத்தை பாதியில் நிறுத்த முடியாது எனக் கூறி விட்டார்கள்.
மறுநாள் மதியம் ஏலம் ஆரம்பமாகியது.
லயவர்ஷினி மட்டுமே அமர்ந்திருந்தாள்.
ஏலத்திற்கு வந்தவர்கள் திடீரென கிளம்பி சென்றதை அறிந்து அதிர்ந்தே போனாள்.
"என்னவாயிற்று அனைவருக்கும் …?என்ற கேள்வியே மனதை அரித்து தின்றது.
நேற்றிரவு ஆர்யனைப் பார்த்தாளே…அவனெங்கே…? . யாருமே இல்லையா…? ஏலத்தை கண்டிப்பாக நிறத்திவிடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவளருகே தேன்மொழியும் அமர்ந்திருந்தாள்.
சிறிது நேரத்தில் அதிகாரிகள் வந்து முந்தைய நாள் ஏலத்தின் நிலையிலிருந்து ஆரம்பித்தனர்.
இருபத்திமூன்று கோடியிலிருந்தே தொடங்கியது.
அவளோ போட்டியே இல்லாமல் இருபத்தி மூன்று கோடியே இருபது லட்சத்திற்கு வாங்கினாள்.
அவளால் நடந்த நிகழ்வுகளை நம்பவே முடியவில்லை.
பல வருடங்களாக தனது கனவாக இருந்தது இன்றுஅது நிறைவேறிய மகிழ்ச்சியில் அவளுக்கு தலைகால் புரியவில்லை .
இவ்வளவு எளிதாக அவளது ஆசை நிறைவேறியதை நினைத்து நினைத்து மகிழ்ந்து போனாள். பின்னர் வரும் துயரத்தை அறிந்திருந்தால் அவள் அந்தளவுக்கு மகிழ்ந்த இருக்க மாட்டாளோ. என்னவோ... ? பின்னர் நடப்பதை அறியும் சக்தி சாதாரண மனிதர்களுக்கு இல்லையல்லவா..?
அதற்கு நேர்மாறாக முகம் இறுக பெங்களூருவில் பிரபலமான மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் முன்பு அமர்ந்திருந்தான் .
ஆம்...! அவனது தாய் பத்மினிக்கு இரண்டாம் முறையாக மாரடைப்பு வந்துவிட்டது.
அதிகாலையிலேயே அவனது அலைப்பேசிக்கு அழைப்பு வந்தது.
உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டதால் அவனை உடனே கிளம்பி வருமாறு மருத்துவர்கள் கூறினார்கள் .
உலகில் அவன் நேசிக்கும் ஒரே ஜீவன் அவனது தாய் மட்டுமே.
அவரைத் தவிர அவனுக்கு பேரும் புகழும் எல்லாம் ஒன்றுமே இல்லைதான்.
மருத்துவர்களின் அழைப்பு வந்தவுடனே அவன் வேறு எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை.
பத்ரியை அழைத்து அடுத்த விமாத்திலேயே பெங்களூரூவுக்கு பறந்தான்.
இது தான் தன் வினை தன்னைச் சுடும் என்பதோ…? ஆனால் அவனோ அதற்கெல்லாம் அசரும் ஆளில்லையே..? விட்டதை பிடிக்கும் வழியை வகுக்கும் வல்லவன் அவன்.
மருத்துவர்களோ பத்மினியின் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்கவில்லை.
ஆனால் ஆர்யனின் மனம் முழுவதும் “நீங்க வந்துடனும் , என்கிட்ட வந்தே ஆகனும். என்னை விட்டுட்டு நீங்க போகக்கூடாது…..என்னோட முழு பலமே நீங்கதான்” என்று கர்ஜித்துக்கொண்டே இருந்தது.
முகம் இறுகிப்போய் அமர்ந்திருக்கும் தனது நண்பனின் தோள் தொட்டான் பத்ரி… "அம்மாவுக்கு ஒண்ணும் ஆகாது டா…” என ஆறுதல் அளித்தான்.
அவனை எட்டு மணி நேரமாக தவிக்க விட்டு ஆபத்தான கட்டத்தை தாண்டினார் பத்மினி.
மருத்துவர்கள் போராடி அவரை காப்பாற்றினர்.
யாரேனும் ஒரு மருத்துவர் அவனின் தாயை விட்டு நகர்ந்தாலும் அவர்களின் கதி என்னவென்பதை அனைவரும் அறிவர்…எனவே எட்டு மணி நேரமாக மருத்துவர்களும் பத்மினியை கண்காணித்து கொண்டும் தீவிர சிகிச்சை அளித்துக் கொண்டும் இருந்தனர்.
சிறிது நேரத்தில் அவனை உள்ளே அழைத்தனர் மருத்துவர்கள்.
பத்மினியை இனி மிகவும் ஜாக்கிரதையாக பார்த்து கொள்ள வேண்டும் எனவும் அடுத்த முறை ஏற்பட்டால் காப்பாற்றுவது கடினம் என்று எச்சரித்தார்கள்.
ஆர்யனோ மெல்ல அவரருகில் வந்து அவரது
கைகளை பிடித்து கொண்டு தனது முகத்தை புதைத்தான்.
பின்னர் நிமிர்ந்து ,” உங்க பேச்சை கேக்கலன்னு என்னை ரொம்பவே பயமுறுத்திடீங்கல்ல…”என்றான். அவரது கரங்கள் மெல்ல எழுந்து அவனது கேசத்தை வருடியது.
தாய் மடி சேர்ந்த கன்றைப் போல் அமர்ந்திருந்தான் ஆர்யன்.
பின்னர் அவரைப் பார்த்து, " சரி நான் கல்யாணம் பண்ணிக்குறேன்....நீங்க அதிகமாக உங்க உடம்பை வருத்திக்க கூடாது ...சரியா..?" என்றான்.பத்து நாட்களுக்கு பின்னர் பத்மினி மருத்துமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.பத்மினியை அருகிலிருந்தே கவனித்து கொண்டான் ஆர்யன்
பத்ரியோ ஆர்யனிடம் , "அந்த வைரத்தை லயவர்ஷினி வாங்கிட்டா ங்க டா.நம்ம கைய விட்டு வைரம் போயிடுச்சு.ம்ம்ச்...
இதுக்கு இவ்வளவு செலவு பண்ணிருக்க வேண்டாம்..மனசே ஆறல டா..ஜம்முன்னு அசால்ட்டா வாங்கிட்டு போய்ட்டாங்க...அந்த சொட்டத்தலையனுங்களுக்கு செலவு செஞ்சது தான் மிச்சம்.. நீ கொஞ்சம் ஆபிஸ்க்கு வரணும் டா . சில ஃபைல்ஸுல சைன் பண்ணனும். முதல்ல யாராவது நல்ல நர்ஸ ஏற்பாடு பண்ணனும் டா அம்மாவை பாத்துக்க..." என்று பேசிவிட்டு அவனைப்பார்த்தான் பத்ரி.
அவனது முகமோ தீவிர யோசனையிலிருந்தது.
" என்ன யோசிக்குற மச்சான்..." என்றான் பத்ரி.
தாடையை தடவியவாறே அவனைப் பார்த்து," என்ன சொன்ன... வைரம் நம்மள விட்டு போயிடுச்சுன்னா. இல்ல ...நான் செலவு செஞ்சது வீண் போகாது... அந்த வைரம் நம்மகிட்ட வந்து சேரும்..." எனப் பொடி வைத்து பேசினான்.
அவனோ தன் நண்பனை புரியாமல் பார்த்தான்.
ஆனால் ஆர்யன் ஏதோ பெரிதாக திட்டமிட்டுவிட்டான் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது.
அதற்கான விடை ஒரே மாதத்தில் தெரிந்தது.
ஆம் ...!ஆர்யன் மணிகண்டனை சந்தித்து லயவர்ஷினியை மணந்து கொள்ள கேட்டான்.
முதலில் யோசித்த மணிகண்டன் அவனைப் பற்றி விசாரித்த பின்னர் திருப்தி ஏற்படவே உடனை தன் மகளைஅழைத்து திருமணம் நிச்சயம் செய்யப் போவதாக அறிவித்தார்.
வைரத்தை ஏலத்தில் வாங்கிய மகிழ்ச்சியை கொண்டாடிக்கொண்டிருந்தவள் தந்தையின் திடீர் அறிவிப்பால் மிகவும் தடுமாறிப் போனாள்.
அவளால் மறுத்துக் கூறவே முடியாத சூழ்நிலை.
தேவ்விற்கு தன் தந்தைக்கு தெரியாமல் தான் உதவி செய்ததால் அவர் மிகவும் மன உளைச்சலில் இருந்திருப்பார் என்று அவளறிவாள்.
மணிகண்டனுக்கு மகள் மீது மிகவும் வருத்தம் இருந்தது உண்மைதான்.
இருந்தாலும் அதனைப் பெரிதாக காட்டிக்கொள்ளாமல் மகளுடன் சகஜமாக பேசிக் கொண்டு இருந்தார்.
தற்போது ஆர்யன் வந்து தனது மகளை மணந்து கொள்ள கேட்டது மற்றும் அவனது பின்புலமும் மிகுந்த திருப்தி தரவே. உடனடியாக திருமணம் நடத்த திட்டமிட்டார்.
தேவ்வுடனான திருமணம் மணமேடை வரை சென்று நின்றது குறித்து ஆர்யனிடம் மணிகண்டன் தெளிவுபடுத்தியிருந்தார்.
லயவர்ஷினியும் வேறு வழியின்றி ஒப்புக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டாள்.
அவளுக்கு ஆர்யனிடம் பேச வேண்டி இருந்தது ஆனால் அதற்கு சந்தர்ப்பமே தராமல் நேரடியாக திருமணத்திற்கே நாள் குறித்துவிட்டான். அவளது மகிழ்ச்சிக்கும் தான்.
இரவு நேர மெல்லிய நிலா வெளிச்சத்தில் தூரத்தில் தெரிந்த ஏதோ ஒன்றை இலக்கின்றி வெறித்துக்கொண்டிருந்தான் ஆர்ய இளநெடுமாறன்.
அத்தியாயம் 21:
பத்மினியின் உடல்நலம் சிறிது சிறிதாக முன்னேற்றம் அடைந்தது.
ஆர்யன் தன் தாயிடம் திருமண விஷயத்தை பக்குவமாக எடுத்துச் சொன்னான்.
அதீத சந்தோஷமும் அதீத துக்கமும் அவருடைய உடல்நிலைக்கு ஏற்புடையதில்லை என மருத்துவர்கள் கூறியிருந்தார்கள்.
அதனால் மெதுவாக வர்ஷினியுடனான தனது திருமணத்தை கூறியிருந்தான்.
சரியாக ஒன்றரை மாதத்தில் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது.
லயவர்ஷினி மற்றும் அவளது தந்தை மணிகண்டனையும் தனது வீட்டிற்கே அழைத்து அவளுக்கு தேவையான நகைகள் மற்றும் முகூர்த்த புடவைகள் ,வரவேற்புக்கு உண்டான உடைகள் என அனைத்தையும் வாங்கி குவித்தான்.
அனைத்து உடைகளையுமே அவளது தோளில் வைத்து , "ரொம்பவே ....அழகா இருக்கு “ என தேன் தடவிய வார்த்தைகள் கூறி அனைவரையும் குளிர்வித்தான்.
வர்ஷினிக்கும் ஒரளவு அவன் பேசுவதும் பழகுவதும் சமாதானமாகவே இருந்தது.
ஒரு பெண்ணுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்..நல்ல பழக்கவழக்கங்கள், அனைவரிடமும் நன்றாக பழகுகிறான். தன்னையும் நன்றாக பார்த்துக்கொள்வான். இருவரும் ஒரே தொழிலில் இருப்பதால் நிச்சயமாக துணையாக இருப்பான் என தப்பு கணக்கு போட்டுவிட்டாள் லயவர்ஷினி.
தொழிலிருந்து தன்னை முடக்கி வைக்கப் போகிறவனே அவன்தான் என அப்போது தெரியவில்லை பேதையவளுக்கு.
இரண்டாம் முறையாக வாழ்க்கை அவளுக்கு பலத்த அணியினை கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் போனாள்.
விதியின் கைகளிலோ அல்லது ஆர்யனின் கைகளிலோ சிக்கி தன்னையும் தொலைத்து தன்னுடைய அடையாளத்தையும் தொலைக்க தயாராகி நின்றாள்.
தினமும் இரவில் அவளுடன் இரண்டு மணி நேரமாக பேசிக் கொண்டு இருந்தான்.
அதில் சில விஷயங்கள் தொழில் ரீதியாகவும் இருக்கும்.
அவளும் ஆர்யனுடன் பேசும் போது தேவ்வுடனான திருமணத்தை பற்றி தெளிவு படுத்தியிருந்தாள்.
நல்வேளையாக தேவ் அவனுடைய மனதினை அவளிடம் தெளிவாக கூறி திருமணத்தை நிறுத்த உதவி கேட்டதால் தான் உதவியதாகவும், தேவ்விற்கு தன்னுடனான திருமணத்தில் விருப்பமில்லை என்பதை முன்பே ஓரளவுக்கு ஊகித்திருந்ததால் பெரிதாக அவனை திருமணம் செய்வதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை எனவும், அதனால் தன் மனதளவில் அவனை என்றுமே நெருக்கமாக நினைத்ததில்லை என்று தெளிவாக தன் மனநிலையினை
கூறினாள்.
ஆர்யனும் அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருந்தான்.
திருமண பத்திரிகை அடித்து வந்ததும் மணிகண்டனும் லயவர்ஷினியும் தேவ்வினுடைய வீட்டிற்கு சென்று பத்திரிகை வைத்து விட்டு வந்தனர்.
கண்டிப்பாக ஆராதனாவை அழைத்து கொண்டு திருமணத்திற்கு வருமாறு கூறினாள் லயவர்ஷினி.
தேவ்விற்கு இப்போது தான் மனம் நிம்மதியாக இருந்தது .
எங்கே அவளுக்கென்று வாழ்க்கை சரியாக அமையாமல் போய்விடுமோ என்று வருந்தினான்.
ஆனால் அதற்கு அவசியமேயில்லை என்னும் விதமாக இருந்தது அவளது திருமணச் செய்தி.
ஆர்யனோ ரிஷியையும் அவனது பெற்றோரையும் அழைத்திருந்தான்.
பத்ரி தான் ஆர்யனது அனைத்து திருமண வேலைகளும் செய்வதற்கு உதவியாக இருந்தான்.
என்னதான் திருமணம் உறுதி செய்யப்பட்டிருந்தாலும் ஆர்யன் மீது வர்ஷினிக்கு காதல் என்பது உள்ளதா என்றால் கேள்விக்குறியே..?
ஆனால் திருமணத்திற்கு பிறகு அவனை நிச்சயம் காதலிக்கத் தொடங்கிவிடுவாள் என்ற எண்ணத்தில் தன்னை முழுமையாக இந்த திருமண பந்தத்தில் இணைத்துக்கொள்ள தயாராகிவிட்டாள்.
திருமண நாளும் வந்தது. ஆர்யனது தாயாரைப் பார்த்துக் கொள்ள வேலைக்கு வைத்திருந்த செவிலிப் பெண் நகரும் நாற்காலியில் மணமேடைக்கு அருகிலேயே அமர வைத்திருந்தாள்.
அவரும் மகனது திருமணக் கோலத்தை காண அழகிய வெண்பட்டு உடுத்தி கைகளில் வைர வளைகளோடு, காதில் விலை உயர்ந்த வைரத் தோடு அணிந்து பார்க்கவே கம்பீரமாக இருந்தார்..
மனச்சோர்வு நீங்கி அவரது முகம் பிரகாசமாக இருந்தது.
ஆராதனா, தேவ் மற்றும் சூர்யா வந்திருந்தார்கள்.அவர்கள் முதல் வரிசையில் அமரந்திருந்தார்கள்.
ரிஷியும் அவனது குடும்பமும் வந்ததை கண்டு தேவ்விற்கு ஆச்சரியம்…” என்னடா நீ இந்த கல்யாணத்துக்கு வந்திருக்க..?” என்றான்.
“ ஆர்யன் என்னோட ஃபிரண்ட் டா…ஷயவர்ஷினி தான் பொண்ணுன்னு தெரிஞ்சதுக்கு அப்பறம் ரொம்ப ஹேப்பியா இருந்தது டா…நல்லவன் டா ஆர்யன். ரொம்பவே கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்தவன் டா.
இனி வர்ஷினிய பத்தி கவலைப்பட வேண்டாம்..” எனக் கூறி விட்டு தனது மகளை தூக்கி வந்தான்.
வந்தனாவே ஆராதனாவிடம்,
” எப்படியிருக்க ஆரா..? லைஃப் எப்படி போகுது..? சூர்யாவுக்கு இப்ப பிரச்சனை ஒண்ணும் இல்லையே..? “ என்றாள்.
“ இல்லை டி . ஹீ இஸ் ஆல் ரைட் …தேவ் நல்லா பாத்துக்குறாரு… ரிவியூ பண்ணியாச்சு ஒண்ணும் பிராப்ளம் இல்லை டி…” என்றாள் ஆராதனா.
வந்தனாவோ அவளிடம் எப்படி சொல்வது எனத் தெரியாமல் தயங்கியபடி , "ஆனா…சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத…நீ சீக்கிரம் உன் லைஃபை ஆரம்பிச்சிடு…லேட் பண்ணாத. இப்பதான் வர்ஷினிக்கும் மேரேஜ் ஆகப்போகுதுல்ல . நீ இன்னும் பழசையே நினைச்சிட்டு இருக்கனுமா…? தேவ் ஒண்ணும் கெட்டவர் இல்லையே... சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி அமைஞ்சி போச்சு…ரொம்ப டிலே பண்ணாதே…அவ்வளவு தான் சொல்லுவேன்..இனி உன் இஷ்டம் “ என கூறிவிட்டு நன்றாக சாய்ந்து அமர்ந்தாள் வந்தனா.
ரிஷி சகானாவையும் தேவ் சூர்யாவையும் தூக்கிக் கொண்டு நின்றிருந்தனர்.
சிறிது நேரத்தில் மணப்பெண்ணான லயவர்ஷினியை அழைத்து வரச் சொன்னார் ஐயர்.
அடர்சிவப்பு நிறப் புடவையில் தங்க வைர நகைகள் மின்ன பால் வண்ணமுகத்தில் திருஷ்டி பொட்டு உதட்டுக்கு கீழே வைத்திருக்க அழகு பதுமையென ஆர்யனின்அருகினில் அமர்ந்தாள் லயவர்ஷினி.
ஆர்யன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான் .
அவனது காதில் ,
"உன்னை மாதிரி கருப்பனுக்கு என்ன மாதி
ரி பெண்ணை லவ் பண்ணனுமா..? ஆளப் பாரு நல்லா ஒட்டடக்குச்சிக்கு கை கால் வச்ச மாதிரி…ம்ஹூம்.. நீயெல்லாம் என் பக்கத்துல உட்காரவே யோசிக்கனும் . என் ரேன்ஜ் என்ன..? உன்னோட தகுதி என்ன..? சின்ன பெட்டிக்கடை மாதிரி நகைக்கடை வச்சி ஆயிரம் பத்தாயிரம் ன்னு தான் நீ பாப்ப…ஆனா நான் லட்சக்கணக்குல…ஏன் கோடிக்கணக்குல பாக்குறவ…என்ன புரியுதா….லவ்ன்னு கிவ்ன்னு சொல்லிட்டு பின்னாடி வராதே.. உன்னையே பாத்த உடனே அப்படியே மயங்கிடுவாங்க பாரு…. வந்துட்டான் பெருசா லவ்வு மண்ணாங்கட்டி ன்னு....வாந்தி தான் வருது ..ம்ம்கூம்” என அகம்பாவத்திலும் பணத் திமிரிலும் பேசிய லயவர்ஷினி கண்முன் வந்தாள்.
ஏழாண்டுகளுக்கு முன் இளமாறன் என்னும் பெயரில் அறிமுகமாகி தனது காதலை அவளிடம்
உரைத்த போது அவள் பதிலுக்கு வீசிய கொடுஞ்சொற்கள்தான் அவை.
அன்று அவன் மனதினுள் பணம் மற்றும் அழகு தான் வாழ்க்கையின் பிரதானம் என்னும் வாக்கியத்தை ஆழப்பதித்தவள் வர்ஷினி.
அன்று அவளிடம் பட்ட அவமானம் அவனது உழைப்பை மேம்படுத்தி அவனை வாழ்வில் அசுர வளர்ச்சியை அடையவைத்தது.
அன்று பட்ட அவமானம் இன்று அவள் அருகில் வந்து அமரும் போது ஒன்றுமில்லாததை போலிருந்தாலும் , அவனது மனதினுள் வன்மத்தீ கொழுந்துவிட்டு எறியத் தொடங்கியிருந்தது.
அது மட்டுமல்ல அவனுக்குரிய வைரமும் அவளிடத்தில் இருப்பதினால் தான் இந்த திருமண நாடகம் .
இதில் காயப்படாமல் காக்க வேண்டியது அவன் தாய் பத்மினியை மட்டுமே.
அவன் செய்யப் போகின்ற காரியத்தை ஒரு நல்ல தாயாக அவரால் தாங்க முடியாது.
எனவே அதற்கு அவன் மாற்று ஏற்பாடுகள் செய்யவேண்டும் என எண்ணிக் கொண்டான்.
ஐயர் திருமாங்கல்யத்தை எடுத்து கொடுத்து, "கெட்டிமேளம், கெட்டிமேளம் “ எனக் கூற..மேள தாளங்கள் முழங்க மங்கல நாணை வர்ஷினியின் சங்கு கழுத்தில் முடிச்சிட்டு தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான்.
எந்த வாயினால் அவன் அழகில்லை, பணமில்லை என்று கூறினாளோ, இன்று அவன் கைகளாலேயே தாலி வாங்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
கர்வத்துடன் தனது மீசையை முறுக்கி விட்டு அவளைத் திரும்பி ஏளனத்துடனத்துடன் பார்த்தான்.
அனைவரும் அட்சதையை தூவி அவர்களை ஆசிர்வதித்தனர்.
மணிகண்டன் நெகிழ்ந்து போனார்.
ஒரே மகளது வாழ்க்கை சிறப்பாக அமையவேண்டும் என மனதினுள் வேண்டினார்.
மற்ற சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை முடித்து விட்டு அனைவரும் சாப்பிட சென்றனர்.
அனைவருக்கும் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளித் தட்டுகளில் விதவிதமான உணவுகள் பரிமாறப்பட்டது.
எதிலும் குறையில்லாமல் அனைத்திலும் நேர்த்தியிருந்தது.
வர்ஷினியோ,” எல்லாமே பெர்பெக்டா இருக்கு…உங்கள் மாதிரியே….” எனக்கூறி சிரித்தாள்.
“ஆமா எனக்கு எல்லாமே பெர்பெக்டா இருக்கனும் …” என ஒரு விதமான குரலில் கூறினான்.
அவளோ அதெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில்லை.
அனைத்து சடங்குகள் முடிந்து ஆர்யனது வீட்டிற்கு கிளம்பும் நேரத்தில் தேவ் அவளருகே வந்து , "வாழ்த்துக்கள் வர்ஷினி “ என்றான்.
அவளோ, தாங்க்ஸ் தேவ்…”என்று கூறி விட்டு ஆர்யனின் புறம் திரும்பி , "இவர்தான் தேவ் பீடியாட்ரீக் கார்டியாலஜி ஸ்பெஷலிஸ்ட்”என்றாள்.
தேவ் கை நீட்ட ஆர்யனோ வேண்டுமென்றே தவிர்க்க அவனை ஒரு ஏளனப் பார்வையோடு , "ஒரு நிமிஷம் இதோ வந்துடுறேன்..” என விலகிப்போனான்.
தேவ்வின் முகம் சிறுத்ததுர என்றால் வர்ஷினியின் முகம் யோசைனையில் சுருங்கியது.
உடனே அவள் சமாளித்து கொண்டு,” அவங்க அம்மா ஹார்ட் பேஷண்ட் அடிக்கடி பாத்துக்கணும் அதான்…” என மேலே பேச முடியாமல் தவித்தாள்.
தேவ்வோ சட்டென்று , "கூல்…நோ டென்ஷன்…அவர் பாவம் பிசியா இருப்பார். இன்னொரு சந்தர்ப்பத்துல பேசிக்கலாம்…பை..” என்று கூறி விட்டு திரும்பியவன், ”வர்ஷினி” என்றழைத்தான்.
அவளோ யோசனையுடன் திரும்பினாள்.
அவனோ ,” திரும்பவும் சொல்றேன் நான் உனக்கு எப்பவுமே நல்ல ஃபிரண்ட். எதுனாலும் என்கிட்ட ஷேயர் பண்ணிக்கலாம். எமர்ஜென்ஸின்னா கூப்பிடு….தயங்காத…”என்றான்.
வர்ஷினிக்கு தேவ் ஏதோ சொல்ல முடியாமல் தவிப்பதைப் போலிருந்தது.
சட்டென தலையை போய் வருவதாக அசைத்து விட்டு ஆராதனாவுடன்
வெளியேறினான்.
ஆராதனாவும் வர்ஷினிக்கு வாழ்த்து சொல்ல வந்தவள் அங்கே நடந்ததைப் பார்த்துக்கொண்டு தான் இருந்தாள்.
ஆர்யன் தேவ் விடம் நடந்துக்கொண்ட முறை அவளுக்கு பிடிக்கவில்லை.
எனவே தேவ் அழைத்தவுடன் வர்ஷினிக்கு வாழ்த்து கூறாமலே அவனுடன் சென்று விட்டாள்.
அவளுக்கு மனதே ஆறவில்லை.
தேவ்வின் மனம் முழுவதும் குழப்பங்கள். வர்ஷினியின் வாழ்வு சரியான பாதையில் அமையுமா? என்ற எண்ணமே அவனது மனம் முழுவதும் தேங்கியிருந்தது.
அமைதியாக காரினை ஓட்டிக்கொண்டிருந்தான்.
இங்கே ரிஷியும் அவனது பெற்றோரும் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பிச் சென்றனர்.
ரிஷியின் தந்தைக்கு ஆர்யன் ஏலத்திற்கு வெளிநாட்டவர்களை வராமல் செய்த தகிடுதத்தமெல்லாம் தெரியாது.
இவ்வளவு ஏன் அவர்களை பற்றிய தகவல்களை கொடுத்து ரிஷிக்குமே ஆர்யனது திட்டங்கள் தெரியாது.
அவ்வளவு சாமர்த்தியமாக சூழ்நிலையை கையாண்டான்.
எஞ்சிய சொந்த பந்தங்கள் ஆர்யனது வீட்டிற்கு சென்று அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
புதுமண தம்பதியினருக்கு பாலும் பழமும் கொடுத்து சடங்குகளை செய்தனர்.
பத்மினியோ வர்ஷினியை அழைத்து தனது அறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்து கொள்ளச் சொன்னார்.
அவளும் வேறு சாதாரண புடவையை உடுத்திக்கொண்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தாள்.
காலையில் சீக்கிரம் எழுந்தது , ஓய்வுக்கு விழிகள் ஏங்கியது.
கட்டிலில் படுத்து நன்றாக உறங்கி விட்டாள்.
மாலை விளக்கேற்றி விட்டு சிறிது நேரம் பத்மினி,ஆர்யன்,வர்ஷினி பேசிக்கொண்டு இருந்தார்கள்.
முதலிரவுக்கான ஏற்பாடுகள் ஒரு புறம் நடந்துக் கொண்டிருந்தது.
வர்ஷினிக்கு ஒரு பதட்டமாக இருந்தாலும் அவனை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் என தனது மனநிலையில் உறுதியாக இருந்தாள்.
ஆனால் தேவ்விடம் ஆர்யன் முகம் காட்டியது அவளுக்கு நெருடலாக வே இருந்தது.
அவளுக்கு தாய் இல்லயென்பதால் ஆர்யனது சொந்தங்களில் சில மூத்த பெண்கள் தான் அவளை முதலிரவுக்கு அலங்கரித்தார்கள்..
அடர்பச்சை புடவையில் , மெல்லிய நகைகள் அணிந்து மிதமான ஒப்பனையில் தேவதையென முதலிரவு அறைக்குள் நுழைந்தாள்.
ஏனோ படப்படவென வந்தது.
தொழிலில் பல வெற்றிகள் பெற்றிருந்தாலும் ,உயர்ந்த நிலையில் இருந்தாலும் சராசரி பெண்களுக்கே உரிய நாணமும் அச்சமும் ஒருங்கே அவளை உள்ளிழுத்து கொண்டது.
மிகப்பெரிய அறை.
செம்மரத்திலான பெரிய கட்டில்.அரசர்கள் காலத்து கட்டில் போன்ற வடிவமைக்கப்பட்டிருந்தது.அழகிய வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.இதமான வாசனைதிரவியம் தெளிக்கப் பட்டிருந்தது.
சுற்றிலும் பார்த்தாள் ஆர்யனோ சரிகை வேஷ்டி சட்டையில் இரு கைகளையும் கட்டிக்கொண்டு அறையை ஒட்டியுள்ள பால்கனி கண்ணாடி கதவருகே நின்றிருந்தான்.
அவள் உள்ளே நுழைந்தது கூடத் தெரியாமல் ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.
நெற்றி சுருங்கி விழிகள் கூர்மையாக நிலவினைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தன.
மனதில் ஆயிரம் சஞ்சலங்கள். அவளோ அவனருகில் வந்து , "ஆர்யன் “ என்றாள்.
அவனோ திரும்பவேயில்லை.
மீண்டும் அவனது தோள் தொட்டு, “ ஆர்யன்” என அழைத்தாள்.
இப்போது திரும்பி அவளைப் பார்த்தான் .
செதுக்கிய சிற்பம் போல் நின்றிருந்தாள்.அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டே இருந்தான்.
அவனது பார்வையில் தெரிந்த வித்தியாசத்தை உணரந்தவளது உள்ளம் பந்தையக் குதிரைப் போல் ஓடியது.
அவனோ அவளது முகத்தை நிமிர்த்தி ,” சாரி நீ வந்ததை கவனிக்கல” என்றவாறே அவளது முகத்தில் தன் விரல்களால் கோலமிட்டு கொண்டிருந்தான்.
அவளுக்கு அவஸ்த்தையாக இருந்தது.
அவனது விரல் நெற்றியில் இருந்து இறங்கி, நாசியைத் தொட்டு உதடுகளை அழுத்தமாக பற்றியிருந்தது.
அவளோ பயந்து விட்டாள். அவனது கைகளை மெதுவாக விலக்கிவிட்டு,” கொஞ்ச… நேரம் பேசிட்டு இருக்கலாமே….” என வார்த்தைகள் விட்டு விட்டு வெளிவந்தன.
அவனோ ,” ஓகே..சொல்லு உனக்கு என்னென்ன பிடிக்கும்….” எனப் பொதுவாகப் பேச்சினை ஆரம்பித்தான்.
அவளும் சற்று இயல்பாகி தனது விருப்பங்களை கூறினாள்.
பால்கனி கதவினை ஒட்டியிருந்த சோஃபாவில் இருவரும் அமர்ந்திருந்தனர்.
நிலவொளியில் அவளது அழகு அள்ள அள்ளக் குறையாத அட்சயபாத்திரமாக காட்சியளித்தது.
அவனது பார்வை அவளை ஊடுருவிச் சென்றது.
அதனை தவிர்க்க அவளோ,” ஆமா ..நீங்க ஏன் தேவ் கை குடுக்கும் போது கைகுடுக்காம போய்டீங்க…அவர் முகமே மாறிப்போச்சு.. ஃபார்மாலிட்டிக்காவது கை குடுத்திருக்கலாமே..?” என்றாள்.
அவனோ,” சாரி.. அவரை பிடிக்கலை எனக்கு…ஏன் தெரியுமா…?” அற கேள்வியோடு நிறுத்தினான்.
அவளோ நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்,
"உன்னை மணமேடை வரைக்கும் கொண்டு வந்து அசிங்கப்படுத்திருக்கான்.அவன்கிட்ட கை குடுக்க சொல்றியா…என்னால முடியாது .உன்னை அசிங்கப்படுத்திய யாரையும் நான் மதிக்கமாட்டேன்..” என்றான்.
அவளோ அவனின் பதிலில் அகமலர்ந்தாலும் , "இல்லை நான்தான் பரவாயில்ல ன்னு..” ஆரம்பிக்கும் முன் அவளை கையமர்த்தி அவளது முகத்தினை தன் இருகைகளாலும் தாங்கியபடி அவளது முகத்திற்கு மிகவும் அருகே சென்று தனது உஷ்ணமான மூச்சுக்காற்று அவளது முகத்தில் படும்படி, ” உனக்கு விருப்பமா இருந்தா மட்டும் நம்ம இப்ப லைஃப தொடங்கலாம். இல்லலான்ன கூட எனக்கு பிரச்சினை இல்லை உன் மனசு என்னை ஏத்துக்கும் வரைக்கும் வெயிட் பண்ணுறேன்” என அவளது முகத்திலிருந்து பார்வையை அகற்றாமலே கேட்டான்.அவளை வேறு எதைப்பற்றியும் யோசிக்கவே விடவில்லை அவன்.
“ ஓருவேள உன் மனசுல….வேற” எனத் தொடங்குமுன்னரே ,” நான் வேண்டாம்னு எப்ப சொன்னேன்..”என அவனது உதடுகளில் கை வைத்து கூறி தலையை கவிழ்ந்து தனது சம்மதத்தை தெரிவித்தாள்.
ஆணவனது நெஞ்சமோ பெருமையில் தத்தளித்தது.
இவ்வளவு அழகிய மனைவியை அருகில் வைத்துக் கொண்டு விரதம் காக்க அவன் முற்றும் துறந்தவன் அல்லவே.. இருப்பினும் அவள் சம்மதத்துடன் அவளைத் தொட வேண்டும்.
தனது தொடுகையில் பெண்ணவள் உருகி அவனது கைகளில் குழைய வேண்டும் என்பதே அவனது எண்ணமாக இருந்தது.
அவளது முகத்தை தாங்கிய வண்ணமே நெற்றியில் ஆழ்ந்த முத்தத்தை பதித்தான்.
பெண்ணவளின் விழிகள் அதீத வெட்கத்தினால் அவனது முகத்தை பார்க்க முடியாமல் தாமாகவே மூடிக்கொண்டது.
“ கண்ணைத் திற லயா..” எனக் குரல் கரகரக்க கூறினான்.
அவளோ விழிகளை மூடியவண்ணமே முடியாது என தலையசைத்தாள்.
அவனோ பட்டென்று நகர்ந்தான்.
அவனது விலகலில் தனது விழிகளை வேகமாக திறந்தாள்.
”ஏன் இப்படி….” என முணுமுணுத்தாள்.
அவனோ ," இன்னைக்கு முழுதும் நீ என்னை மட்டும் தான் பார்க்கனும் .கண்ணை மூடக்கூடாது" என்றவாறே அவளை கைகளில் ஏந்தியபடி நிலா வெளிச்சத்தில் பால்கனியிலிருந்த ஊஞ்சலில் அமர்ந்தான்
அவளைத் தனது மடியில் அமர்த்திக்கொண்டு தனது கரங்களால் பின்னிருந்து அவளை இறுக அணைத்துக் கொண்டு அவளது தோளில் முகத்தை புதைத்தான்.
பெண்ணுவள் சூடியிருந்த மல்லிகையின் மணம் இதமான தென்றலோடு கலந்து அவனது நாசியில் நுழைந்து அவனை ஏகாந்த நிலைக்கு கொண்டு செல்ல, அதனை தாங்க முடியாமல் அவளது முகத்தை தன் புறமாக திரும்பி வெளிச்சத்தில் மின்னும் அவளது இதழ்களை அழுத்தமாக தன் இதழ்களால் பற்றிக் கொண்டான்.
அவனது வேகத்தில் பெண்ணவள் நிலை தடுமாறி ஊஞ்சலில் சாய்ந்தே விட்டாள்.
அவனோ ஒற்றை முத்தத்தில் அவளுடைய ஜீவனை முழுமையாக எடுத்துக் கொண்டான்.
மெல்லிய உடல்வாகு கொண்ட பெண்ணவளின் தேகம் ஆணவனின் முத்தத்திற்கே சிலிர்த்து அடங்கியது.
தேகமெங்கும் நடுக்கம் தோன்றியது .
அதனை வெளிக்காட்டாமல் தனது கரங்களை உயர்த்தி அவனது தலைமுடியை இறுகப் பற்றிக்கொண்டாள்.
ஆணவனுக்கு இன்னுமே அது போதையேற்ற இன்னும் இன்னும் அவளது மிருதுவான இதழ்களில் தொலைந்து போனான்.
அவன் மனதிலிருந்து வன்மமும் சென்ற இடம் தெரியவில்லை.
இதற்கு மேல் முடியாது என்று அவளைத் தன் கைகளில் ஏந்தியபடி அறையினுள் நுழைந்தான்.
விளக்குகளை அணைக்கக் கூட பொறுமையின்றி அவளது புடவையில் தனது கரங்களை வைத்தான். அவளோ அவனது அவசரம் புரியாமல்,” ஒரு நிமிஷம் ..” என்று கையை விலக்கினாள்.
அவனோ, "என்னடி…..பிடிக்கலையா…?” மோகத்தோடு பிதற்றினான்.
“அது இல்லை…..லைட்…வெளிச்சமா… இருக்கு….” என்று தயங்கி தயங்கி கூறினாள்.
அவனோ சிரித்தபடி அறையின் விளக்குகளை அணைத்துவிட்டு அவளை முத்தமிட்டவாறே மஞ்சத்தில் சரிந்தான்..
அவனது உடலும் மனமும் அவள் வேண்டும் என்று பேயாட்டம் போடத் துவங்கியது.
பெண்ணவளை மோகத்தில் துடிக்க வைத்து அவனில்லையெனில் அவளில்லை என்னும் அளவிற்கு முதல் சங்கமத்திலேயே உணர வைத்தான்.
அவளின் மனம் முழுவதும் நீக்கமற நிறைந்துப் போனான்.
அவனது வேகம் கண்டு அவள் தான் பயந்தாள் .
ஆனால் அவனோ மனதிலிருந்த வன்மத்தை யும் மீறி ஆழ்மனதில் இருந்த காதலை முரட்டு தனமாக அவளது தேகமெங்கும் தீயாய் பரவச் செய்தான்.
அவளது உடல் முழுவதும் ஓய்வுக்கு கெஞ்சியது.
சொன்னது போலவே அவளை விழிகளை மூட விடாமல் செய்தான்.
மஞ்சத்தை அலங்கரித்த மலர்கள் முழுவதும் தரையில் கேட்பாரற்று சிதறி கிடந்தது.
அழகிய ஓவியமாக வந்தவளை முழுமையாக கலைந்த ஒவியமாக்கி அவளை மொத்தமாக கொள்ளையிட்டு விலகியிருந்தான்..
அவனது திண்ணிய முடியடர்ந்த மார்பினில் தலை வைத்து கண் மூடியிருந்தாள் .
மீண்டும் மீண்டும் அவளைக் கொள்ளைக்கொண்டான் ஆடவன்.
முத்தங்களால் பெண்ணவளை கொண்டாடித் தீர்த்தான்.
அவளது முனகல்களையும் வலிகளையும் கூட வெளிவிடாத வண்ணம் தனது இதழ்களால் உள்ளிழுத்துக் கொண்டான்.
ஏனென்றேத் தெரியாத அழுத்தமான மோகத்தில் மூழ்கியிருந்தான்.
பெண்ணவள் தேகம்... அவனது முரட்டுத்தனமான ஆலிங்கனத்தை தாங்க முடியாமல் துவண்டு போய் அவனது மார்பினில் கண்மூடினாள்.
விடியற்காலையில்தான் அவளை தன்னை விட்டு விலக்கிவிட்டு பால்கனியில் போய் நின்றுகொண்டிருந்தான்.
வர்ஷினியோ அசதியில் ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றிருந்தாள்.
கணவனின் வன்மையான முத்தங்களினால் அவளது மெல்லிய அதரங்கள் சிவந்து போய் இருந்தது
பக்கவாட்டாக திரும்பி அவளது முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
கள்ளம் கபடமற்ற முகமாக இருந்தது.
அதிலிருந்து அவ்வளவு கடினமான வார்த்தைகள் வந்திராமல் இருந்தால்..ஒரு நீண்ட பெருமூச்சு தோன்றியது அவனிடம்..
Latest Post: வனமாலி - (Comment Thread) Our newest member: Ghanaselvi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page