All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மனதில் நின்றவள் 23

 

VSV 31 – மனதில் நின்றவள்
(@vsv31)
Trusted Member Author
Joined: 8 months ago
Posts: 29
Topic starter  

மனம் -23
சகஸ்தாவும் காஃபியுடன் வந்தவள்.அதனை ரிஷியிடம் நீட்ட ," அவனும் அநனைப் பெற்றுப் பருகியவன் " தோட்டம் அழகாயிருக்கு என்றான்.*அவளும் மென் புன்னகையோடு தலையாட்டினாள்.

அருகில் இருந்த ரோஜாச் செடியில் இருந்து ஒரு பூவைப் பறித்தவன், பின்னாடி திரும்பு என்றபடி அவளும் திரும்ப அவளது நீண்ட கூந்தலில் வைத்து விட்டான்.இதனை சமயலறை ஜன்னல் வழியாக பார்த்த சாருவுக்கோ மகிழ்ச்சி மருமகன் மற்றும் மகளின் அந்நியோன்னியத்தைப் பார்த்து.

"சுபி இங்க வா என அன்னை அழைக்க,வாரன்மா என்றவன். ரிஷியையும் சகஸ்தாவையும் கண்டவன், இவனப் பார்த்தீங்களாத்தான்,போனவாட்டி மெட்ச் நடந்துச்சு என்னோட பேன்ஸ்ச பார்த்து நானும் கையாட்டினன் அவுட் என்டுதானுங்க,அத சொல்லிக் காட்டுறான் என்றான் சுபி.

சுபியை ஒரு மார்க்கமாகப் பார்த்தான் ரிஷி .சகஸ்தாவோ சுபியின் தலையில் தட்டியபடி "அதுக்கு ரன் பண்ணநீ அத முடிக்காம நடுல நின்னு கையாட்டினா அவுட் பண்ணாம என்ன பண்ணுவாங்க என்றாள்."ரிஷியோ சுபியை முறைக்க." ஹீஹீஹீ இதோ வாரன்மா "என அங்கிருந்து நகர்ந்தான் சுபி.

சகஸ்தாவோ      இருங்கவாரன் என்றபடி அவன் கொடுத்த காலி காஃபி  கோப்பையை வாங்கியவள் அதனை சமையல் அறையில் வைத்து விட்டு,கூடையுடன் வர, என்ன என அவன் புருத்தை உயர்த்தி கேட்க, அவன் கையில் அக் கூடையைக் கொடுத்தவள்,மிளகாயைப் பறித்து கூடையில் போட்டாள். பின் கத்தரிக்காய், வெண்டைக்காயைப் பறித்தாள்,கொய்யாப் பழம் இரண்டும், முருங்கைக்காயும் பறித்தாள்.அப்படியே கோழி வளர்க்குமிடம் வந்தவள்அதன் கதவைத் திறந்து ஐந்து முட்டைகளை வெளியே எடுத்து. கூடையில் வைத்தாள்.

ரிஷியின் கையில் தான் கூடை , "ஹேய் சகா செமபா ஆர்கானிக் ஹெல்தி பூட்,அழகா இருக்கு, எல்லாம் என்றான். அவளும் புன்னகைத்தபடி " வாங்க ஒரு இடம் காட்றன் என்றபடி , கொஞ்சம் தள்ளி அழைத்து வந்தாள்." அப்பகுதியில் பெரும் பாலும் பெரிய மரங்கள் தான் இருந்தன மா, கொய்யா, தென்னை, வாழை ,போன்றன.

மிகப் பெரிய பருத்த மாமரம் அதில் ஒரு ஊஞ்சல் மாமரத்தின் ஒரு பகுதியில் முல்லை, மல்லிகை, இணைந்து மிக மிக அழகாக வாசனையாக இருந்தது அவ்விடம்.

ஊஞ்சலின் கயிற்றை ரிஷி பற்ற,"ம்ம் உக்காருங்க  கூடைய உள்ள வச்சிட்டு வாரன்.என அவள் கூடையுடன் செல்ல ரிஷியும் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டான்.

அவளும் சிறிது நேரத்தில் அவள் கையில் தட்டுடன் அவ்விடம் வந்தாள்.அவனும் அவளை பார்த்திருந்தவன் என்ன என தட்டை கண்களால் காட்டி கேட்க,அவளும் அவன் அருகில் ஊஞ்சலில் அமர்ந்தவள் தட்டை அவன் புறம் நீட்ட அதிலோ,கொய்யாப்பழத் துண்டுகள் மிளகுத் தூள் போடப்பட்டிருந்தது.ஒரு துண்டை எடுத்து அவன் கடிக்க அதன் இனிப்பும்,உறைப்பும் சேர்ந்து ஒருவித புதிய சுவையைத் தந்தது.

அப்படியே சரிந்து அவள் மடியில் அவன் சாய,அவளோ "ஐயோ எழுந்திருங்க ,யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க" என்றாள்.அவனோ அவள் பேச்சை சட்டை செய்யாது கொய்யாப் பழத் துண்டைக் கடித்தவன்" வேனுமா? "என அவன் கடித்த துண்டைக் காட்டிக் கேட்க,"இல்ல" தட்டைக் கீழே வைத்தவள் அவன் முடியைக் கோதியபடி மெல்ல கால்களை உன்ன ஊஞ்சலும் மெல்ல நகர்ந்து.

கணநேரத்தில் அவள் பின் தலையில் கை வைத்தவன் தன்னை நோக்கி இழந்தவன் அவள் இதழை கொய்யாவோடு சேர்த்து கொய்து கொண்டான்.அவள் மூச்சுக்குத் தவிக்கவே அவள் தலையில் இருந்து கையை எடுத்தான்.அவனை முறைத்தபடி பார்க்க தனது நாவை ஈரப்படுத்திக் கொண்டு நோக்க , அவளோ கையால் இதழை மூடிக் கொண்டாள்.ரிஷியோ சத்தமாகச் சரித்துக் கொண்டான்.

"எப்படி இவளோ அழகா வரைர" என ரிஷி கேட்க...... ம்ம் வரைய ரொம்ப பிடிக்கும் அப்படியே பிக் அப் பண்ணிகிட்டன், சிலவேளை யாரும் கிஃப்ட்டா வரைந்து கொடுப்பன்,வால் ஆர்ட் செய்து கொடுப்பன்,அதுலயும் இன்கம் கிடைக்கும் என்றாள் கண்களை சிமிட்டி......ம்ம் இன்ரஸ்டிங் என்றான்.

ரிஷியோ அவள் கையை தலையில் எடுத்து வைக்க தலையை கோதும் போது அவ்விடம் வந்த சுபி அவர்களை புகைப்படமும் எடுத்துக் கொண்டான்.அதனைக் கண்ட சகஸ்தா " சங்கடப்பட்டவள் டேய் டிலிட் பண்ணு என்றாள் அழகாக இருக்குடி என்றான் சுபி எட்டி அவன் ஃபோனை பறித்து எடுத்தவள் அதனை அழித்து இருந்தாள்.சுபியோ ரிஷியைப் பார்த்து கண்சிமிட்டினான்.

அன்று மதியம் சீலனும் வர இருவரும் மதிய உணவை முடித்து விட்டு பொத்துவில் நோக்கி சென்றனர்.சில மணி நேரப் பயணத்தின் பின் ஜெட்வின் ரிசாட்டை வந்தடைந்தனர்.அதன் பின் அவளை தங்களுக்கான குடிலில் விட்டவன் மேனேஜரை சந்தித்து விட்டு வர,இரவுணவும் வந்தது.இருவரும் இரவுணவை உண்டதும் அசதியில் தூங்கிவிட்டனர்.

காலை எழுந்தது முதல் அவளைக் கொண்டாடித் தீர்த்தான்."ஐயோ கொஞ்சம் தூங்க விடுங்க பாஸ் என அவள் போர்வையில் பதுங்க,அவனோ அவளை அள்ளிக் கொண்டு குளியலறை நுழைந்தான் அங்கும் அவர்களின் செல்லச் சீண்டல்கள் முத்தங்கள் என தொடர்ந்து  

இருவரின் வாழ்க்கையும் தெளிந்த நீரோடை போல் அழகாகச் சென்றது.
இருவரிடமும் காதல் காதல் காதல் மட்டுமே,அனைப்பு, முத்தம்,அதையும் தாண்டி மொத்தம் என அவளில் பித்தாகித்தான் போனான்.

ரிஷி , பொத்துவில் செல்லும் போது சகஸ்தாவையும் அழைத்துச் செல்வான் . பொத்துவில் சென்றாலே இருவருக்கும் குதூகலம் தான், என்ன தான் பேசுகிறார்கள் என தெரியாது,ஆனால் இருவரும் மணித்தியாலக் கணக்காக பேசுவார்கள்.

வரும் போது மட்டக்களப்பில் இரு நாட்கள் தங்கித் தான் செல்வர். அவள் தேடத் தேடக் கிடைக்காத அட்சய பாத்திரம் பொத்துவில் இருந்து சகஸ்தாவின் வீட்டிற்கு வந்தனர் இருவரும் இரு நாட்களும் தாயுடன் தான் திரிவாள் அவனுக்கு பொறுமை சிலவேளை தலை தூக்கும் ,பின் அவளை தள்ளிக் கொண்டு அவனிற்குப் பிடித்தமான இடமான ஊஞ்சலுக்கு செல்வான் ,அவளிடமிருந்து இதழனைப்பைப் பெற்றே விலகுவான்.அவ்விடமும் அச்சூழலும் அவனுக்கு மிகவும் பிடிக்கும் அவளுக்கு பிடித்ததாலோ என்னவோ,

சுபீட்சனும் கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு தனக்கான வேலையையும் தேடிக் கொண்டான்.

அன்று ரேத்திக் தன் மனைவியுடன் ஜெட் வின் வந்திருந்தான்."ஹாய் மச்சான் என்றான். எப்போ வந்த என கேட்க ஜஸ்ட் இப்போ தான் ரூம் புக் பண்ணிட்டு வாரன் என்றான் ரேத்திக் .அதற்கு ரிஷியோ. கொஞ்சம் பொறு என்றவன் ரிசப்ஷனில் பேசி அறையொன்றை புக் செய்தான்.பின் சேர்வன்ட் ஒருவன் அவ்விடம் வந்து சாவியை நீட்ட "ஓகேடா போய் ரெஸ்ட் எடுங்க ஈவினிங் பார்ப்போம் என்றான் ரிஷி.

ரேத்திக் மற்றும் அவனது மனைவியும் தங்களுக்கான அறையை நோக்கிச் சென்றனர்.
அவ்விடம் வந்த சகஸ்தா ரேத்திக்ண்ணாட வைஃப் பேசமாட்டாங்களா???? ஏதோ ஒரு யோசனை இருந்துடே இருக்கு அவங்கட முகத்தில என்றாள்.

பெருமூச்சொன்றை விட்ட ரிஷி பேசுவா பட் இப்போ குறைச்சிட்டா.....ரேத்திக் பார்த்துப்பான் என்றான்.

மாலை வேளையில் சகஸ்தா குடையின் கீழ் இருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்திருக்க ரிஷியோ கடலில் குளித்துக் கொண்டிருந்தான்."சகஸ்தா வா குளிப்போம்" என அழைக்க அவளோ "எனக்கு ஏலா நீங்க குளிங்க என்றாள்."

அவன் உடலில் சகஸ்தாவின் பார்வை ரசனையாய் படிய கடல் நீரில் இருந்து அவன் எழுந்ததால் நீர்த்துளிகள் அவன் உடற்பயிற்சியால் உண்டான சிக்ஸ் பேக்கில் படிந்து ஓட சகஸ்தாவோ அச் சூழலை சூடாக உணர்ந்தவள் பார்வையை வேறு புறம் திருப்ப அங்கோ சில பெண்கள் அறைகுறை ஆடையுடன் ரிஷியைத தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சகஸ்தாவிற்கோ அவர்களின் மேல் கோபம் வர.... அங்கிருந்து எழுந்தாள் அப்போது ரிஷியை நோக்கி அப் பெண்கள் கூட்டம் கையாட்ட,ரிஷியும் கையாட்டினான்.அவர்கள் மேல் இருந்த கோபம் இப்போது ரிஷியின் மேல் படிய ரிஷியை முறைத்தபடி ரிஷியை நோக்கி வந்தவள். கடலில் இறங்கினாள். இதற்கு தானே அவனும் அடிப்போட்டது.

சகஸ்தாவைக் கண்டதும் அவளை நோக்கி பார்வையை திரும்ப்ப  கறுப்பும் வெள்ளையுமான முட்டி வரையான ஜீன்ஸ் மற்றும் டீ சேட்ஸ் போட்டிருந்தவள் கடல் நீரினால் உடலோடு அவை ஒட்டிக் கொண்டன்.

கடலில் இறங்கியதும் ஓர் அலை சற்று உயரமாக அடிக்க சமநிலை இன்றி சரியப் போனவளை தன்னோடு சேர்த்து அனைத்த ரிஷி நீரில் மூழ்கி எழுந்தான். அவளோ கோபம் மறந்து நீரில் விளையாட இப்போது அவன் விழிகள் அவளில் ரசனையாக படிந்தது.

ரிஷி தங்களை பாரக்க மாட்டானா என பார்த்திருந்த அப் அப்பெண்கள் அவனின் பார்வை முழுக்க சகஸ்தாவில் இருப்பதைக் கண்டவர்கள் பெருமூச்சுடன் அங்கிருந்து அகன்றனர்.

"டால் வா போகலாம்" என அவன் அழைக்க அவளோ "ஏலா" என அவன் மீது நீரை வாரி இறைத்து கலகல என சிரித்தாள். சிறிது நேரம் அவளோடு அக் கடலில் நீந்தியவன் அவ்விடம் குளிக்க வரும் ஆட்களின் எண்ணிக்கை அதிகரிக்க சிலரின் பார்வை அவளில் படிய....அதனை கண்டவன் "டால் ஆட்கள் அதிகமா வாராங்க வா போகலாம் என்றான். முடியாது என்றாள் சகஸ்தா,

"இவள" என்றவன் அவளை அப்படியே கைகளில் ஏந்தியபடி தங்களுக்கான் குடிலினுள் நுழைந்தவன் அவளை இறக்கி விட குளிரிலோ தேகம் நடுங்க கைகளை தேய்த்து கன்னத்தில் வைத்தபடி நின்றாள். அவளின் உடையோ உடலோடு ஒட்டி. அவளின் அங்கங்கள் அவனுக்கு விருந்தாக்க. அவள் இடையில் கை வைத்து இழுத்தவன் . அவள் இதழை முற்றுகையிட்டான்.இறுதியில் மஞ்சத்தில் முற்றுகை முடிவடைந்தது.

அழைபேசி சினுங்க அதனை ஏற்று காதில் வைத்தவன்."இதோ வாரன்" என்றவன் மீண்டும் சகஸ்தாவின் நெற்றியில் முத்தமிட்டவன் ." பேபி எழுந்திரு "என்றான் அவளோ சினுங்க மீண்டும் ஆசை அவனுள் தன்னை கட்டுப்படுத்தியவன் நண்பனை சந்திக் வேண்டி.. மீண்டும் அவளை ஒருவழியாக எழுப்பி இருவரும் குளித்து அங்கிருந்த ரெஸ்டாரன்ட் நோக்கி சென்றனர்.

ரேத்திக் மற்றும் அவனது மனைவியும் அங்கு தான் இருந்ததனர்."ஹாய் டா என்றவன் ஹாய் சிஸ்டர் என்றான் ரேத்திக்கின் மனைவியோ சிறு தலையசைப்பு மட்டுமே. இரவுணவை வரவழைத்து இருவரும் உண்டனர்.

ரேத்திக்கின் மனைவியும் சகஸ்தாவும் அங்கே இருக்க உணவை முடித்துக் கொண்ட நண்பர்கள் இருவரும் பூல் பார் நோக்கிச் சென்றனர்.

"சகஸ்தாவோ மட்டக்களப்புல எங்க இருக்கீங்க நான் பார்த்ததே இல்ல என கேட்க,மற்றையவளோ பூம்புகார் என்றாள். இருவரும் கொஞ்சம் நெருங்கி பேசத் தொடங்கினர்.

"மச்சான் லைஃப் எப்படி"என ரிஷி கேட்க "அடிதடி இல்லாம போகுதுடா என்றான் ரேத்திக் " அடிவாங்கினாலும் தப்பில்ல என சத்தமாக சிரித்தான் ரிஷி.

நாட்களும் அதன் போக்கில் செல்ல அன்று காலை "சகா இதுல சைன் பண்ணு "என ஒரு கோப்பை சகஸ்தாவின் முன் நீட்டினான் ரிஷி,அவளும் கையொப்பத்தையிட்டு விட்டு மீண்டும் விட்ட தூக்கத்தைத் தொடர்ந்தாள்.அவன் இரவில் தூங்க விட்டால் தானே........

மனதில் நின்றவள் 23
நான் VSV 31
எப்படி இருக்குனு சொல்லுங்க 🙄


   
ReplyQuote

You cannot copy content of this page