About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
சில்லாஞ்சிருக்கியே - 5
“ஐ நீட் யூ” என்றவனை அதிர்ந்து பார்த்தவள்,
“ஹலோ என்ன பேசுறீங்க நீங்க?” என்றாள் முறைப்புடன். அவளது பாவனையில் சிரித்தவன்,
“ஐ மீன் ஐ நீட் யூ டு கம்ப்ளீட் மை ப்ராஜெக்ட்” எனவும் அவளின் இடுங்கிய புருவங்கள் அப்பொழுது தான் சற்று தளர்ந்தது.
“ஓஹோ” என்றாள்.
“ஏன் நீ என்ன நினைச்ச?” தெரிந்தும் தெரியாதது போல குறும்பு சிரிப்புடன் கேட்டான்.
“ஏன் உங்களுக்கு தெரியாதா?”
“தெரியாதே” உதட்டை பிதுக்கினான்.
“சும்மா நடிக்காதீங்க. வேணும்னே தான பாதிய மட்டும் முதல்ல கேட்டீங்க”
“முதல்லயே மொத்தமா எல்லாத்தையும் கேட்க முடியாது தானே”
“நீங்க பேசுற விதமே சரி இல்ல சொல்லிட்டேன்” என்று அவள் கூறவும் சத்தமாக சிரித்தவன்,
“லுக். ஐ கான்ட் ரெஸ்பான்சிபிள் பார் யுவர் இமேஜினேஷன். நீ எக்ஸ்பிளைன் பண்ற விதம் நல்லாயிருக்கு. உங்க ஊர பத்தி நிறைய விஷயம் தெரிஞ்சு வச்சிருக்க. சோ நீயே என்னை கைட் பண்ணி என்னோட ப்ராஜெக்ட் முடிக்க ஹெல்ப் பண்ணா நல்லாயிருக்கும்னு தோணுது.” என்றவன் சட்டென முட்டிப்போட்டபடி, வில் யூ?” என்று கேட்டிட அதிர்ந்தவள் இரண்டடி பின்னே நகர அவள் எண்ணத்தை புரிந்து சிரித்தவன்,
“ஷூ லேஸ் கழண்டுருச்சு மா” என்றான். நம்பாமல் அவனது ஷுவை பார்க்க நிஜமாகவே லேஸ் கழண்டு தான் இருந்தது.
‘பேசுறது ஒன்னு செய்றது ஒன்னு. முருகா இவர்கிட்ட இருந்து என்னை காப்பாத்து’ என்று மனதினுள் கதறினாள்.
“சரி பதில் சொல்லு நீ” எழும்பாமலே கேட்டான். அங்கு அவர்களை கடந்து சென்ற ஒருவர் அவர்களை ஒருகணம் வினோதமாக பார்த்துவிட்டு செல்ல,
“முதல்ல எந்திரிங்க நீங்க” என்றாள். எழுந்தவன் பதில் வேண்டி ஹேசல் விழிகளால் உறுத்து பார்த்தான் அவளை. அவன் பார்வையில் தடுமாறியவள் என்ன கூறுவது என்று தெரியாமல் முழித்தாள்.
“கம் ஆன். தமிழ் மேல இருக்குற காதலை வளர்க்க தமிழ் தான ஹெல்ப் பண்ணனும்” என்று அவன் கூறவும் அவளுக்கோ எங்கு சென்று முட்டிக் கொள்ளலாம் என்று இருந்தது.
‘இவரு எந்த தமிழை சொல்றாருன்னே தெரிய மாட்டேங்குது. தமிழ்னு பேரு வச்சது ஒரு குத்தமாயா’ என்று நொந்தவள்,
“நீங்க என்னை தமிழ்னு கூப்பிடாதீங்க” என்றிட,
“ஆஹான் வேற எப்படி கூப்பிடனும்?”
“தமிழை தவிர வேற எப்படின்னாலும் கூப்பிடுங்க.” என்றாள்.
“வேற எப்படி கூப்பிடலாம்?” என்று யோசித்தவனின் கண்களில் அவள் கழுத்தில் இருந்த டாலர் பதிய,
“ஜோன்னு கூப்பிடுறேன்” எனவும் அவளோ,
“இல்ல இல்ல.. ஜோன்னும் கூப்பிட கூடாது” என்றாள்.
“நீ தான எப்படின்னாலும் கூப்பிடலாம்னு சொன்ன. இப்போ என்ன மாத்தி பேசுற… தமிழ்ஜோதிங்குற பேருல தமிழும் போச்சு ஜோவும் போச்சு. வெறும் தி வச்சு என்ன செய்றது. நான் பிக்ஸ் ஆயிட்டேன். ஜோ தான் உன் நேம்.” என்று அவன் திட்டவட்டமாக கூற அவளோ,
“ப்ளீஸ். ஜோ வேணாம்” கலக்கமாக கூறியவள் கழுத்தில் இருந்த டாலரைப் பற்றிக் கொண்டாள்.
“ஹே ரிலாக்ஸ். ஏன் டென்ஷன் ஆகுற. சாரி. நான் ஜோன்னு கூப்பிடல” என்றான். அவளும் தலையசைத்தாள். பிறகு அவளை சகஜமாக்க எண்ணியவனோ,
“சரி அப்போ என்னை பொறுத்த வரை உன் பேரு சில்லாஞ்சிருக்கி” என்று அவன் கூற,
“சில்லாஞ்சிறுக்கியா.. ஏன்?” என்று முகத்தை அஷ்டகோணலாய் வைத்தவள், “எங்க ஊருல சிறுக்கிங்குற வார்த்தையை திட்ட தான் யூஸ் பண்ணுவாங்க. சிறுக்கினா ஒரு பெண்ணை இழிவா சொல்ற மாதிரி அர்த்தம்” என்றாள்.
“உன்னை யாரு பெரிய ‘று’ போட சொன்னாங்க. சின்ன ‘ரு’ போட்டுக்கோ”
“சிருக்கின்னு ஒரு வார்த்தை இருக்குதா என்ன?”
“இருக்கே.. ஆலோவேராக்கு.. அதாவது கற்றாழைக்கு தமிழ்ல சிருக்கின்னு ஒரு சொல் இருக்கு. குமரின்னு கூட சொல்லுவாங்க” என்று அவன் கூற அவனின் தமிழ் புலமையை எண்ணி அவளின் புருவம் உயர்ந்தது.
“ஓஹோ.. சரி அதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?”
“சம்மந்தம் இருக்கு. ஆனா இப்போ சொல்ல மாட்டேன்.”
“எனக்கு தெரிஞ்சாகனும்”
“நீ தமிழ்னும் ஜோன்னும் கூப்பிடக்கூடாதுன்னு சொன்னதுக்கு நான் காரணம் கேட்டேனா? இல்லை தானே. அப்போ நீயும் கேட்காத” என்றிட அவளோ வேறு வழியின்றி அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
“சரி பேச்சு வாக்குல கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்ற பார்த்தியா. ப்ராஜெக்ட் முடிக்க ஹெல்ப் பண்ணுவியான்னு கேட்டேன்” என்றவன் மீண்டும் அங்கு வந்தே நிற்க ஏனோ முடியாதென்று பட்டென பெண்ணவளால் கூற முடியவில்லை. அவள் அமைதியாக இருக்கவும்,
“அவசரம் இல்ல பொறுமையா யோசிச்சு உன் முடிவை சொல்லு.” என்றவன் சட்டென தன் குரலை தாழ்த்தி ஆழ்ந்த குரலில், “நான் உனக்காக வெயிட் பண்றேன்” என்றான் கண்ணடித்தபடி. கேமராவை வாங்கியவன் பின் கோவிலை பற்றி அவள் பேசியதை போலவே பேச ஆரம்பித்தான். அவள் தான் அவனது பேச்சில் உறைந்து நின்றாள்.
‘நிஜமாவே நமக்கு தான் இவர் பேசுற எல்லாம் வேற மாதிரி தோணுதா. ஐயோ மண்டை காயுதே’ என்று நினைத்து பெருமூச்சுவிட்டவள் ஓரமாக சென்று அமர்ந்துக் கொண்டாள்.
‘ஆனா இவர் பேசுற ஸ்லாங் கேட்க நல்லா இருக்கு. வெள்ளைக்காரன் நம்மள விட தமிழை பத்தி நிறைய தெரிஞ்சு வச்சுருக்கான்’ என்று அவனின் அமெரிக்க பாணியில் பேசும் தமிழை ரசித்தாள். பிறகு அவன் வேலையை முடித்து வந்து சேர இருவரும் கீழே இறங்கினர். வண்டியை அவள் எடுக்க அவனோ அங்கிருந்த பொம்மைக் கடையில் கவனம் செலுத்தியிருந்தான்.
“ஹலோ என்னாச்சு?” என்றவள் கேட்க அவனோ,
“ஒரு நிமிஷம்” என்றபடி பொம்மை கடையை நோக்கி விரைந்தவன் குழந்தைகள் வாயில் வைத்து கடித்து விளையாடுவதற்கு என்று செய்யப்பட்ட ரப்பரால் ஆன ஒரு பொருளையும் ஒரு சிறு கரடி பொம்மையும் வாங்கி வந்தான்.
“இது எதுக்கு?” என்று அவள் கேட்க அவனோ,
“கண்டிப்பா உனக்கில்ல” என்றிட,
“அய்ய டா. ரொம்ப தான்” என்றுவிட்டு வண்டியை இயக்க அவனும் ஏறிக்கொண்டான்.
ராக்காயி தேநீர் கடையின் அன்றைய வியாபாரம் முடிந்திருக்க கடையின் உள்ளே தேன்மொழி பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள். கடையின் வெளியே இருந்த மேஜையில் அமர்ந்திருந்த நேத்ரன் தேன்மொழியின் குழந்தை மகிழுடன் விளையாடிக் கொண்டிருந்தான். நேத்ரனுக்கு மகிழின் மேல் கொள்ளை பிரியம். மகிழும் நேத்ரனோடு ஒட்டிக்கொள்வான். வேலையை முடித்துவிட்டு தேன்மொழி வெளியே வரவும் தமிழும் யாஷும் அங்கு வந்து சேரவும் சரியாக இருந்தது. தமிழ் நேத்ரனிடம் சொல்லாமல் யாஷுடன் சென்றது நேத்ரனுக்கு சிறிது வருத்தமே.
“வாங்க தமிழக்கா.. வேலை எல்லாம் முடிஞ்சுது..” என்றபடி தேன்மொழி கூற,
“முடிச்சுட்டியா? சாரிட்டி தேனு சீக்கிரம் வர தான் நினைச்சோம். ஆனா முடியல.” என்றாள் தமிழ்.
“என்ன திருமலைக் கோவிலை சுத்தி காமிச்சாச்சா?” முயன்று தன்னை இயல்பாக்கிக் கேட்டான் நேத்ரன். ஆனாலும் அவன் முகவாட்டத்தை வைத்து கண்டுக் கொண்ட தமிழோ,
“சாரி நேத்து. சொல்லிட்டு போலாம்னு நினைச்சேன். உனக்கும் இன்னைக்கு வேலை அதிகம்னு மாமா சொன்னாரு. அதான் சொல்ல முடியாம போச்சு டே” உண்மையான வருத்தத்துடன். அதைக்காண பொறுக்காதவன்,
“சரிட்டி விடு.” என்றபடி யாஷை முறைத்து பார்த்தான். யாஷால் தான் இன்று தமிழ் தன்னைக் கண்டுகொள்ளவில்லையோ என்ற எண்ணம் அவனுக்கு. அது யாஷுக்கும் புரிய லேசாக சிரித்துக் கொண்டான். பின்பு நேத்ரனிடம் இருந்து மகிழை வாங்கியவன், தான் வாங்கி வந்த பொம்மையை எடுத்து குழந்தையிடம் கொடுக்க மகிழ் சிரித்தான்.
“ஐயோ இதெல்லாம் எதுக்கு? வேணாம்” என்று தேன்மொழி பதறியபடி கூற,
“உனக்கு தரலை. குழந்தைக்காக தான். ஹான் அப்புறம் கைல கிடைக்குறதை எல்லாம் வாயில வைக்குறான். அது சேப்ஃ இல்ல. இதுல ரப்பர் டாய் இருக்கு. அதை கொடு அவனுக்கு.” என்றிட தமிழுக்கு அவனை பார்த்து ஆச்சரியமாக இருக்க நேத்ரனுக்கோ வயிறு எரிந்தது.
ஏற்கனவே தன் தோழி தன்னிடம் சொல்லாமல் சென்றதற்கு காரணமானவனாக யாஷ் இருக்க, இப்பொழுது மகிழுக்கு அவன் உரிமையாக வாங்கிக் கொடுப்பது எரிகிற தீயில் எண்ணையை ஊற்றியது போல இருக்க முகத்தை பாவமாக வைத்தான். அவனின் பார்வையோ தேன்மொழியிடம் இருந்தது.
‘நான் வாங்கி கொடுத்தா மட்டும் வாங்க மாட்ட. ஆனா இவரு கொடுத்தா வாங்கிக்குற’ என்றபடி. அதனை அறிந்த தேனோ,
“இல்ல சார். வேணாம். யாராச்சு…” என்று அவள் இழுக்க,
“யாராச்சும் கேட்டா அண்ணன் வாங்கி கொடுத்தாருன்னு சொல்லு” என்று பட்டென கூறிவிட மூவருமே இதனை எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு நேரம் எரிந்துக் கொண்டிருந்த நேத்ரனின் வயிற்றில் யாரோ ஜில்லென தண்ணீர் ஊற்றியது போன்ற உணர்வை அளித்தது யாஷின் வார்த்தைகள். தமிழுக்கும் அவனின் மீது மரியாதை வந்தது. தேன்மொழியோ கண்கலங்க நோக்கினாள் அவனை. பிறகு தேன்மொழியும் தமிழும் வீட்டிற்கு கிளம்ப,
“நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லல. மறந்துறாத” என்றான் யாஷ்.
“யோசிச்சு சொல்றேன்” என்றபடி தமிழ் சென்றிட சிரித்துக் கொண்டான்.
“அக்கா என்னை நடக்குது? அவர் என்ன கேட்டாரு உங்க கிட்ட? நீங்களும் யோசிச்சு சொல்றேன்னு சொல்றீங்க. முருகர் வேலையை காட்டிட்டாரா?” என்று கிண்டலாக தேன் கேட்க,
“ஏட்டி.. நீ நினைக்குற போல ஒன்னும் இல்ல. அவருக்கு எல்லா இடமும் நான் சுத்தி காமிக்கணுமாம். அதை தான் கேட்டாரு. நீ கற்பனைக் குதிரையை ஒட்டாத ராசாத்தி” என்க சிறித்தபடி அவளுடன் வீட்டிற்கு சென்றாள்.
நேத்ரனோ, “என்ன பதில்? என்ன கேட்டீங்க அவகிட்ட?” என்றான்.
“என் ப்ராஜெக்டை முடிக்க அவளோட ஹெல்ப் வேணும்னு கேட்டேன்” என்றிட,
“ஓ சரி சரி” என்ற நேத்ரனும் அவனுடைய வீட்டிற்கு செல்ல போக,
“அது இருக்கட்டும். இது எத்தனை நாளா ஓடுது இது?” என்ற யாஷின் குரல் தடுத்தது.
“எது ப்ரோ?” கேள்வியாய் நோக்கியவன்,
“நீங்க தேனை லவ் பண்றீங்க தான?” என்றிடவும் அதிர்ந்து நோக்கினான்.
“உங்களுக்கு எப்படி தெரியும்?”
“அது உங்க லுக்குலயே தெரியுதே” என்றிட அதில் சிரித்த நேத்ரன்,
“ஆமா கரெக்ட் தான். ஆக்சுவலி நான் உங்களை அண்ணான்னு கூப்பிட நினைச்சேன். நீங்க அவளை கூப்பிட சொல்லிட்டீங்க”
“நீயும் கூப்பிடு. இதுல என்ன இருக்கு?”
“அதெப்படி சரி வரும். அவளும் அண்ணான்னு கூப்பிட்டு நானும் அண்ணான்னு கூப்பிடுறது சரி வராதே”
“இங்க பாரு.. நீயும் அவளும் என்னை அண்ணான்னு கூப்பிடுறதுனால நீங்க அண்ணன் தங்கச்சி ஆயிடுவீங்களா என்ன? இல்ல தான. இதெல்லாம் நம்ம உணர்வுகள் சம்மந்தப்பட்டது மட்டும் தான். கூப்பிடுற முறையில ஒன்னும் இல்ல. எனக்கு தேனு மேல ஒரு சிஸ்டர் பீலிங் வந்ததுச்சு. அதனால அண்ணான்னு கூப்பிட சொன்னேன். உனக்கு என்மேல பிரதர் பீலிங் வந்தா நீயும் தாராளமா கூப்பிடு. அவ உன்னை அண்ணான்னு கூப்பிட்டா தான் தப்பு” என்றவன் சிரிக்க,
“ஐயையோ பேச்சுக்கு கூட அப்படி சொல்லாதீங்க பிளீஸ். உங்களை நான் அண்ணான்னு கூப்பிட்டுக்குறேன்.”
“அது. சரி கேட்டதுக்கு பதிலை காணுமே?” என்றிட நேத்ரனோ பெருவிரலால் மண் தரையில் கோலம் போட ஆரம்பித்தான்.
“ஓஹோ ரொம்ப லவ்ஸோ?”
“ரொம்ப ரொம்ப” என்று வெட்கப்பட்டவன் கூற ஆரம்பித்தான்.
தொடரும்…
Latest Post: காலம் தாண்டிய பயணம் 03 Our newest member: drr Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page