About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம்: 2
கார்த்திகா ஆரபியை அணைத்து கொண்டவள் பிறகு…. அவள் முகத்தை ஏந்தி நெற்றியில் முத்தமிட்டாள்.
கார்த்திகா “ என் வேண்டுதலை என் குருவாயூர்ப்பா ஏற்று கொண்டு விட்டான்…என் பையு வாழ்க்கை இப்படியே போய் விடுமோ எனக்கு பிறகு… அவனை பார்க்க யார் இருக்கா என தினம் தினம் யோசித்து தனியாக அழுது இருக்கிறேன் மோளே.
இது கொட்டாரம் தான் இங்கே பார்க்கும் பக்கம் எல்லாம் செல்வமும், பகட்டும் இருக்கு தான்…ஆனால் அந்தி பழம் போல உள்ளே என்ன இருக்கு என யாருக்குமே தெரியாது… ஏன் எங்களை பெத்தவங்களுக்கு கூட தெரியாது… அப்படிப்பட்ட ஆளுங்க என் பையனை அதுவும் அவன் இருக்கும் நிலையில் கவனித்து கொள்வாங்களா என நினைத்தேன்.
அவனுக்கு என் சேச்சி மோள் அவந்தி ஒரு சதவீதம் கூட பொருத்தம் இல்லை…ஆனால் அதை நான் இங்கே சொன்னால் என் பேச்சு எடுபடாது ஏன் என்றால்… கொட்டார வழக்கத்தின் படி பெண்குட்டிகள் பேசுவது குறைவு…
பையு உன்னை ஸ்நேகம் செய்வதாக என் கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை…ஆனால் ஒரு நாள் ஒரு ஊட்டியில் ஒரு பெண்குட்டியை சந்தித்தேன்…அது பற்றி சொல்ல வேணும் என்று சொன்னான்.
அதற்குள்ளே தான் இந்த விவாக பிரசன்னம்( பிரச்சினை) வந்தது இப்போ தான் தெரிகிறது… உன்னை பற்றி தான் பேச வந்து இருக்கிறான் என்று…யுவா கூட என் கிட்ட ஒரு வார்த்தை இது பற்றி ஏதும் சொல்லவில்லை.
அவன் என் கிட்ட பெரிதாக ஏதும் சொல்ல மாட்டான் நான் வருத்தபடுவேன் என்று…பையு தான் அவனுக்கு ரொம்ப குளோஸ்…உங்க காதலை பற்றி அவன் சொன்னான் ஆனால் அதை இங்கே யாருமே நம்ப தயாராக இல்லை.
அது தான் இப்போ நிங்கள் இரண்டு பேருமே வர பிரச்சனை பெரிதாகி விட்டது …சரி இதை பிறகு பார்த்து கொள்ளலாம் நிங்கள் ப்ரெஷ் அப் செய்து வாங்க… நான் நிங்களுக்கு ஊண் எடுத்து வருகிறேன் “என சொல்லி விட்டு சென்றார்.
கார்த்திகாதேவி போக ராதிகா அங்கே இருந்த சோபா குஷனை தூக்கியெறிந்தாள்…ராது என ஆரபி அழைக்க…
ராதிகா “ என்ன ராது என்ன தைரியம் இருந்தால் அந்த வெள்ளை பன்றி… என்னை அவன் லவ்வர் என அறிமுகபடுத்துவான்…நீ இங்க நடிக்க வந்ததே எனக்கு பிடிக்கவில்லை இதில் இவன் இப்படி சொல்லி இருக்கிறான்.
நீ தான் சொன்ன பைரவ் செய்த உதவிக்கு நம்ம செய்யும் இந்த உதவி போதாது என்று…அதுவும் அவர் கேட்டது தனக்காக இல்லை தன்னை நம்பி இருக்கும் மக்களை காப்பாற்ற…அவருக்கு இந்த பதவி இப்போ வேணும் என்றார்.
நீயும் இது வரைக்கும் பொய் சொல்லாதவள் பாதர்,மதரிடம் வேலைக்கு… கேரளா போவதாக பொய் சொல்லி விட்டு வந்து இருக்க…உன்னை இந்த ஆளுங்க கூட தனியே விட முடியாது என்று நானும் உன் துணைக்கு வந்தேன்.
ஏன் நீ மட்டும் தான் பைரவ் கண்ணுக்கு பெண்ணாக தெரிந்தாயா? ஊரில் வேற பெண்ணுங்களே இல்லையா?…ஏன் அவர் அத்தை மகள் அந்த மோகனாங்கியை கட்டி கொண்டால் கூட தான்.. ஏதோ ராஜா பதவி என்றார் அது கிடைத்து இருக்கும்.
ஏய் இது எல்லாம் சும்மா பொய் டி நான் நினைக்கிறேன் கேரளாவில் மாந்திரீகம் அதிகம்… நம்ம கதைகளில் ,படங்கள் கூட பார்த்து இருக்கிறோம் தானே…
அழகான பெண்களை அதுவும் கன்னி கழியாத பெண்களை கடத்தி கொண்டு வந்து…காளிக்கு பழி கொடுத்து இவங்க நினைத்தை அடைவதாக சோ அப்படி தான் இருக்கும்.
இந்த குடும்பமே டூபாகூர் குடும்பம் டி அது தான் எதற்க்கும் இருக்கட்டும் என்று…நான் எனக்கு தெரிந்த ஜர்னலிஸ்ட் நம்பர்,ஒரு லேடி போலீஸ் கிட்ட சொல்லி விட்டு வந்தேன்.
இப்படி கேரளா போகிறோம் அங்கே எங்களை பலி கொடுக்க நினைத்தால்…நீங்க மொத்த இந்தியன் போலீஸ் ஃபோர்ஸ், பிரஸ்,மீடியா எல்லாம் அழைத்து கொண்டு எங்களை காப்பாற்ற வாங்க என்றேன்.
எப்படி டி என் இன்டெலிஜென் ப்ரைன் நான் இப்போ அவங்களுக்கு ஒரு மெசேஜ் போடுக்கிறேன் …அதுவும் எப்படி தெரியுமா? கோர்ட் வொர்ட் கூட வைத்து இருக்கிறோம்.. இப்போ பாரு மொத்த போலீஸ்,பிரஸ், மீடியா இந்த இடத்தில் தான் வந்து குவியும் “ என்றாள்.
“ குவியும் கூடவே நீயும் உலகம் பூராகவும் தெரிவ நீ ஒரு முட்டாள் என்று தெரியும்…ஆனால் அடிமுட்டாள் என்று தெரியாது “ என சொல்லி கொண்டு யுவராஜ் வர பின்னால் பைரவ் வந்தான்.
ராதிகா “ யு’ யு’ ஹாவ் டார் யு என்ன தைரியம் இருந்தால் இந்த ராதிகாவை உங்க லவ்வர் என்று சொல்வீங்க …என் டேஸ்ட் என்ன அவ்வளவு சீப்பாக போய் விட்டதா…ஏதோ மிஸ்டர் பைரவ் ஹெல்ப் கேட்டார் என்று வந்தால் நீங்க உங்க சீப் டெக்னிக்கை காட்டுகிறீங்களா?.
நான் இப்போவே போலீஸ்க்கு கால் பண்ண போகிறேன் இந்த மலையக மந்திரவாதிகள் …எங்களை நரபலி கொடுக்க பொய் சொல்லி அழைத்து வந்து விட்டதாக “என்றாள்.
யுவராஜ் பேச வர “ஐ சோ ஸ்டாப் இட் மிஸ் ராதிகா இனாஃப்” என்றான் பைரவ்.
பைரவ் “ நீ ரொம்ப எல்லை மீறி போகிற எங்க உயரம் தெரியுமா? உனக்கு இதை கூட விடு நீ இப்போ செய்ய போன விஷயத்தால்… என்ன என்ன சங்கடம் வரும் என்று உனக்கு தெரியுமா? …
போலீஸை விடு பிரஸ், மீடியா உன் லைவ் மட்டுமல்ல ஆரபி லைவ்வையும் சேர்ந்நது அழித்து விடுவாங்க…படித்த பெண்ணு தானே நீ கொஞ்சம் கூடவா யோசிக்க தெரியாது.
அதுவும் கதவை சரியாக பூட்டாது திறந்து போட்டு என்ன எல்லாம் பேசி கொண்டு இருக்க…நாங்க கேட்டது போல என் அம்மாயி கேட்டு இருக்க அவங்களால் அதை தாங்கி கொண்டு இருக்க முடியாது.
அவங்களுக்கு ஒன்று என்றால் நான் பெண்ணு என்று கூட பார்க்க மாட்டேன் …அவங்க என் உயிர் என் பேரன்ட்ஸ் போன பிறகு அவங்க வாழ்வதே எனக்காகவும் யுவாவுக்காகவும் தான்…இது கொட்டாரம் ராதிகா.
இங்கே மதில்(சுவர்) க்கு கூட காது இருக்கும் என்பது எழுதபடாத விதி…மலையாள ஆளுங்க என்றால் யார் சொன்னது மந்திரீகனாக தான் இருக்க வேணும் என்று.
நாங்க யாரு தெரியுமா? எப்படிபட்ட வம்சம் தெரியுமா? என் முத்தச்சி கூட உன் ஊர் ராஜ வம்சம் தான்…அப்போ அவங்களுக்கு தெரியாதா?... நாங்க மலையாளி என்று…
உன்னை போல ஆளுங்களால் தான் இந்த நாடு இப்படி பிளவுபட்டு இருக்கு…..இது எங்க கோட்டை எங்களை மீறி ஒரு ஈ, காகம் கூட வர முடியாது.
நீ பேச தொடங்கும் போதே வந்து விட்டோம் பட் இரண்டு நண்பிகள்… அதுவும் பெண்குட்டிகள் பேசும் போது... உள்ளே வர கூடாது என்று தான் டோர் பெல் அடிக்க…நினைத்தால் நீ பேசுவது கேட்டது.
உன் பேச்சு போல வேற ஒருவர் பேசி இருக்க நடப்பது வேறாக இருந்து இருக்கும்…ஆனால் நீ ஆரபி மேலே உண்மை அன்பு கொண்ட பெண்… பணத்தை விட நட்புக்கு முதலிடம் கொடுப்பவள்.
அதனால் தான் நான் அமைதியாக நின்றேன் என்ன கேட்ட எனக்கு வேற பெண்ணு கிடைக்கவில்லை என்றா…நான் கை அசைத்தால் நூறு பெண்கள் வருவாங்க பட் ஆரபி போல பெண்ணை பார்க்க முடியாது.
நான் பொதுவாக எங்குமே சட்டென போக மாட்டேன் அதற்க்கு காரணங்கள் பல உள்ளது…பட் முதல் தடவை என் நிழலாக இருக்கு யுவாக்கும் சொல்லாது ஊட்டி வந்தேன்…காரணம் ஆரபி இந்த பெயர் என் பார்யா பெயரை எனக்கு ஞாபகபடுத்தியது.
அவள் பெயர் ஆரணி ரொம்ப மென்மை அமைதி ,கருணை மொத்ததில் ஆரபியின் குணங்களை கொண்டவள்…அவள் ஒரு தடவை கேட்டாள் எனக்கு இயற்க்கை சூழலில் வாழ வேணும் சாம் என்று …ஏனோ அவளுக்கு இங்கே அதிகமாக இருக்க பிடிக்காது .
அது தான் ஊட்டியில் இடம் வாங்கி அவள் பெயரில் ஹோட்டல் கட்ட நினைத்தேன்…பட் அவள் இருந்து இருக்க கூட ஆரபி போல தான் ஹோம்மை வாங்க விட்டு இருக்க மாட்டாள்.
எனக்கு ஆரபி பேச்சு, குரல் எல்லாம் அவளை நினைவுபடுத் தான் நானே இதை சரி செய்ய வந்தேன்…வந்து பார்த்த போது உண்மை புரிந்தது குழந்தைகளை என்னால் அதற்க்கு பிறகு கை விட முடியவில்லை…அது தான் அவங்களுக்கு எல்லாம் கிடைக்க ஏற்பாடு செய்ய சொன்னேன்.
ராதிகா நீ நினைக்கலாம் பாட்டன், அப்பா சொத்தில் நாங்க வாழ்வதாக…நெவர் அது அவங்க சொத்து எங்க சொத்தில் தான் நாங்க மற்றவர்களுக்கு உதவி செய்ய வேணும்…. என்று நினைத்து இப்போ வரைக்கும் உழைத்து கொண்டு இருக்கிறோம்.
நான் ஏன் ஆரபியை என் பார்யாவாக நடிக்க கேட்டேன் தெரியுமா?... தாய்மையின் கருணை அவளிடம் கொட்டி கிடக்கிறது ராதிகா…அதை நாளை நான் காட்டும் சில விஷயங்களில் உங்களுக்கு புரியும்.
நாங்க கார்த்திகாதேவி வளர்த்த பசங்க வழி தவற மாட்டோம் நீங்க வந்தது போல திரும்பி போவீங்க…இது நான் தரும் வாக்கு யுவராஜ் விஷயம் உண்மையில் நாங்க எதிர்பாராத விஷயம்.
இதற்க்கு நான் என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை”... என சொல்லி கொண்டு இருக்கும் போது… டோர் பெல் அடித்தது யுவராஜ் போய் பார்க்க…
கார்த்திகா சாப்பாட்டு டிராலியை தள்ளி கொண்டு ஓமனா இவர்கள் கூட நிலாவும் வந்து இருந்தாள்…யுவராஜ் கதவை திறக்க நிலா ஓடி வந்து ஆரபியை அணைத்து கொண்டவள்.
நிலா “ சேட்டத்தி (அண்ணி) ஞான்னான(நான்) யார் தெரியுமோ?... நிங்களட பர்த்தாவுவின் சேரியா அனியத்தி (கணவனின் சின்ன தங்கை)... நிங்கள் வல்லிய சுந்தரியாக இருக்குகா( ரொம்ப அழகாக இருக்கிறீங்க) “ என்றாள்.
அவள் மலையாளத்தில் பேசியதால் ஆரபி மொழி புரியாது பார்க்க…
பைரவ் “ இது என் சித்தப்பா அருள்மொழிவர்மனின் பெண்ணு நிலாயினி…என் செல்ல தங்கச்சி அன்பால் செய்யபட்ட என் மாலாகா( தேவதை)”... என சொன்னவன் கண்களில் எல்லை இல்லாத அன்பு இருந்தது.
யுவராஜ் “ நிலா குஞ்சு இவங்களுக்கு மலையாளம் அறிஞ்சில்லா (தெரியாது) மா…நீ தமிழில் பறயனு (பேசு)”... என்றான்.
கார்த்திகா “ பையு ,யுவா நிங்கள் ஏன் இது முறிக்கு வரூ( இந்த ரூம்க்கு வந்தீங்க)...என கேட்டார்.
மலர் பூக்கும்….
Recently viewed by users: KalaiKarthi 40 minutes ago.
Latest Post: பாரிஜாத மலர் என் கை சேருமா? -24 Our newest member: Chitrasaraswathi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page