All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மீள் நேசம் முகிழ்க்...
 
Notifications
Clear all

மீள் நேசம் முகிழ்க்காதோ..!! - (Story Thread)

Page 2 / 4
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 406
Topic starter  
 
 
நேசம் – 8
 
 
நாகராஜனுக்கு யுவனிடம் இருந்து அழைப்பு வந்தது. யோசனையோடு அதை ஏற்றிருந்தவர், “சொல்லுங்க தம்பி..” என்று தொடங்கவும் “உங்களுக்கு தாரக் தெரியுமா..?” என்று கேட்டிருந்தான் யுவன். இதில் ஒரு நொடி நெற்றியை சுருக்கியவர் “என்ன விஷயம்..? உங்களுக்கு அவனை எப்படித் தெரியும்..?” என்றார் தன் மகளின் விஷயமாக யுவன் பேசப் போவதாக நினைத்து நாகராஜன்.
 
 
“நாம அன்னைக்கு ஒரு டெண்டர் சம்பந்தமா பேசினோம் இல்லை, அப்பா கூட ரொம்பக் கோபப்பட்டாரே..” என்று யுவன் தொடங்கவும் “ஆமா ஞாபகம் இருக்கு, சொல்லுங்க..” என்றார் நாகராஜன்.
 
 
“இன்னைக்கு அந்த டெண்டர் சைன் ஆகிடுச்சு..” என்று யுவன் கூறவும் “வாழ்த்துக்கள் தம்பி.. எப்படியோ திட்டம் போட்டு கச்சிதமா முடிச்சிட்டீங்க போல, அப்பாகிட்ட சொல்லுங்க ரொம்பச் சந்தோஷப்படுவார்..” என்றார் நாகராஜன்.
 
 
அதில் அந்தப் பக்கம் ஒரு நொடி அமைதியானவன் “இல்லை இந்த முறையும் அவனுக்குத் தான் டெண்டர் கிடைச்சு இருக்கு..” என்றான் யுவன்.
 
 
இதில் யோசனையானவர், “போன முறை பேசும் போது நான் சொன்னதை வெச்சு ஏதோ ஏற்பாடு செஞ்சு இருக்கேன்னு சொன்னீங்களே..” என்றார் நாகராஜன்.
 
 
“ஆமா சொன்னேன், ஆனா..” என்றவன் சிறு இடைவெளி விட்டு, “இது எப்படி நடந்ததுன்னு இப்போ வரைக்கும் எனக்குப் புரியலை..” எனத் தொடங்கி அனைத்தையும் சொல்லி முடிக்க.. “அவ்வளவு பெரிய ஆளா அவன்..?” என்றார் நாகராஜன்.
 
 
“அவன் எவ்வளவு பெரிய ஆளுன்னு பேச நான் இப்போ உங்களைக் கூப்பிடலை..” என்ற யுவன், “அவனுக்கு உங்களைத் தெரிஞ்சு இருக்கு, எப்படித் தெரியும்..?” என்றான்.
 
 
“என்னைக் கேட்டா எனக்கு என்ன தெரியும்..? நாம கொஞ்சம் இந்தப் பக்கம் பிரபலம் தம்பி, அதனால் நம்மை எல்லாருக்கும் இங்கே தெரியும் தானே..!” என்று நாகராஜன் நிலைமை புரியாமல் பெருமை பேச, அதில் சலிப்பான யுவன், “நீங்க எனக்கு உதவி செஞ்ச வரைக்கும் அவனுக்குத் தெரிஞ்சு இருக்கு.. உங்களுக்குப் புரியுதா..?” என்றான் சிறு எரிச்சலோடான குரலில் யுவன்.
 
 
“என்ன சொல்றீங்க அது எப்படித் தெரிய வரும்..?” என்று குழப்பத்தோடு நாகராஜன் நெற்றியை தேய்த்துக் கொள்ள.. “அது தான் எனக்கும் புரியலை.. அவன் உங்களைக் கேட்டதா சொன்ன விதம், அதில் அவ்வளவு நக்கல் இருந்தது..” என்றான் யுவன்.
 
 
“நான் உங்களுக்கு நேரடியா இதில் எந்த உதவியும் செய்யலையே..!” என்றவர் “ஆமா அவங்க ஆபீஸில் யாரையோ பிடிச்சு எல்லா வேலையும் முடிச்சுட்டேன்னு சொன்னீங்களே.. அவன்கிட்ட என்ன இது..? எப்படியாச்சுன்னு விசாரிச்சீங்களா..!” என்றார் நாகராஜன்.
 
 
“இல்லை காலையில் இருந்து அவனுக்குத் தான் ட்ரை செஞ்சுட்டு இருக்கேன்.. அவன் ஃபோன் ரீச் ஆகவே இல்லை..” என்றான் யுவன். “ஒருவேளை அந்த உளவாளி உங்களையும் ஏமாத்திட்டானோ..!” என்று நாகராஜன் எடுத்துக் கொடுக்க.. “வாய்ப்பு இருக்கு.. அதனால் தான் அவனைத் தேடிட்டு இருக்கேன், அவன் ஆபீஸுக்கும் வருவதில்லைன்னு தெரிஞ்சது.. அவன் வீடு எங்கேன்னு விசாரிக்கணும்..” என்றான் யுவன்.
 
 
“சரி இப்போ என்ன செய்யலாம்னு இருக்கீங்க..?” என்று நாகராஜன் கேட்கவும், “தெரியலை பட் உங்களுக்கு அவனை எப்படித் தெரியும்னு கேட்க தான் கூப்பிட்டேன்..” என்றான் யுவன்.
 
 
“நீங்க யாரை சொல்றீங்க..? எனக்குத் தெரியலையே..” என்றார், பேச்சு ஆரம்பித்த விதத்தையே மறந்து நாகராஜன். “அதான் சொன்னேன் தாரக்..” என்றான் யுவன். அந்தப் பெயரைக் கேட்டு ஒரு நொடி அதிர்ந்தவர், “முழு பெயர் சொல்லுங்க..?” என்று கேட்க.. மீண்டும் “தாரக் அக்னிதீபன்..” என்றிருந்தான் யுவன்.
 
 
இதில் தன் நெற்றியில் இரு விரல் கொண்டு வேகமாகத் தட்டியபடியே முன்னும் பின்னும் நடந்த நாகராஜன் “இவனைப் பத்தி தான் அன்னைக்கு நீங்க என்கிட்ட பேசினதா..?” என்றார். ஆமென யுவன் கூறவும், “ஆபீஸில் யாரையோ பிடிச்சு வேலைய முடிச்சதா சொன்னீங்களே அவன் பேர் என்ன..?” என்றார் அடுத்ததாக நாகராஜன்.
 
 
“கிரி.. கிரிதர்..” என்று யுவன் சொல்லி முடித்த நொடி, “நான் அப்புறம் பேசறேன்..” என்று அழைப்பை துண்டித்து இருந்தார் நாகராஜன். இதில் புரியாமல் யுவன் தன் கையில் இருந்த அலைபேசியை பார்த்துக் கொண்டிருக்க.. வேகமாக கிரியை கட்டி வைத்திருந்த பின்பக்கத்தை நோக்கி சென்றார் நாகராஜன்
 
 
கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த வேகத்தில் நாற்காலியோடு சேர்த்து கட்டி வைக்கப்பட்டிருந்த கிரியை எட்டி உதைத்திருந்தார் நாகராஜன். அதில் நிலை குலைந்து கிரி கீழே விழுந்திருக்க.. “என்ன ண்ணே ஆச்சு..” என்று கேட்டிருந்தான் முத்து.
 
 
“ஏன்டா நாயே.. என்னவோ நல்லவன் போலவே இத்தனை நாள் பேசிட்டு இருந்தே.. ஃபிராட் பையன் தானே நீ..? ஏதோ கம்பெனி விவரம் எல்லாம் அந்த தாரக்கிட்ட இருந்து திருடி யுவனுக்குக் கொடுத்து இருக்கே. இல்லை. அந்த ஆத்திரத்தில் தான்டா அவன் இங்கே வந்து இவ்வளவு பெரிய வேலையைப் பார்த்து வெச்சு இருக்கான்.. உன்னைப் பழி வாங்கறதா நினைச்சு என் பொண்ணைத் தூக்கி இருக்கான்.. தேவையில்லாம இப்போ எனக்கு அவமானமா போச்சு..” என்று பேசியபடி கிரியை மிதித்து எடுத்து விட்டார் நாகராஜன்.
 
 
“இல்லையில்லை அங்கிள்.. அது வேற, இது வேற.. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்..?” என்று கிரி வலியோடு பேச முடியாமல் திணறவும், “என்ன சம்பந்தமா..? இன்னைக்கு அந்த யுவன் கூப்பிட்டு சொல்றான்டா அந்த தாரக் என்னைப் பத்தி அவன்கிட்ட விசாரிச்சானாம்..” என்றார் நாகராஜன்.
 
 
“என்ன ண்ணே சொல்றீங்க..? நிஜமாவா..!” என்று அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியாகக் கேட்கவும், “அவன் ஏன் இப்படி ஒரு கோக்குமாக்குத்தனம் செஞ்சான்னு இப்போ புரியுது.. பல வருஷமா அவன் கையில் இருந்த ஏதோ கான்ட்ராக்டோ டென்டரோ என்னவோ சொல்றாங்க அதை இவன் ஈஸியா இன்னொருத்தனுக்குத் தூக்கி கொடுக்கப் பார்த்திருக்கான்..
 
 
அந்த ஆத்திரம் அவனுக்கு, கூட இருந்தே குழி பறிக்கப் பார்த்தா சும்மா விடுவானா..? ஏன் நாம தான் சும்மா விடுவோமா..? அந்தக் கோவத்தில் தான் அந்தப் பரதேசி பழிவாங்க இங்கே வந்து குதிச்சு இருக்கான்..” என்று எரிச்சலோடு கத்தினார் நாகராஜன்.
 
 
இதில் கிரிதரனின் தந்தை அவனை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருக்க.. “இப்போ பேசுடா.. பேசு, என் பிள்ளை நல்லவன் வல்லவன்னு நாலு பக்கத்துக்குப் பேசுவியே எங்கே இப்போ பேசு பார்க்கலாம்..
 
 
இவனும் இதில் கூட்டுன்னு நான் தான் அன்னைக்கே சொன்னேனே..” என்று நாகராஜன் சொல்லவும், “அவர் அப்படியே பழிவாங்க செஞ்சு இருந்தாலும் அது எனக்கு எப்படி அங்கிள் தெரியும்..?” என்றிருந்தான் வீங்கி இருந்த வாயோடு கிரி.
 
 
“பரதேசி.. ஏதாவது பேசினே அடுச்சு மொகரையைப் பேத்திடுவேன் ராஸ்கல்.. செய்யறது எல்லாம் செஞ்சுட்டு விளக்கமா கொடுக்கறே.. நீ செஞ்சு வெச்சு இருக்க வேலைக்கு என் மானம் இங்கே போகுது..” என்று எரிச்சலானவர் மேலும் ஏதோ சொல்ல வருவதற்குள் வேகமாக அங்கு வந்த அருண், “அப்பா போலீஸ் வந்து இருக்காங்க..” எனவும், “என்னவாம்..?” என்றார் துளியும் பதட்டமில்லாத குரலில் நாகராஜன்.
 
 
“தெரியலைப்பா, உங்களைத் தான் பார்க்கணுமாம்..” என்று அருண் கூறவும் “நம்ம ரத்தினம் தானே..! காசுக்காக வந்திருப்பான், நீயே கொடுத்து அனுப்பு..” என்றார் எரிச்சலோடு நாகராஜன்.
 
 
“இல்லைப்பா.. வேற ஒருத்தர் புதுசா இருக்கு..” என்று அருண் கூறவும் “ண்ணே ரத்தினத்துக்கு மாற்றல் ஆகிடுச்சு..” என்றிருந்தான் சிவா. “இது எப்போ..? என்கிட்ட யாரும் சொல்லலையே..” என யோசித்த நாகராஜன், “சரி புதுசா வந்தவன் மட்டும் எதுக்கு வரப் போறான்..? இனி நான் தான் இங்கேன்னு சொல்லி கை நீட்ட தான் வந்திருப்பான், வேற என்ன ..?” என்று சொல்லியவாறே வீட்டின் முன்பக்கம் வந்தார் நாகராஜன்.
 
 
அங்கே இளம் இன்ஸ்பெக்டர் ஒருவர் நின்றிருக்க.. “வாங்க தம்பி, உள்ளே போய்ப் பேசலாம்..” என்றார் நாகராஜ். “இல்லை இருக்கட்டும் பரவாயில்லை.. இங்கேயே பேசுவோம்..” என்றார் இன்ஸ்பெக்டர் ராகவ்.
 
 
“அட பரவாயில்லை வாங்க தம்பி..” என்று சொல்லி விட்டு உள்ளே செல்ல திரும்பிய நாகராஜன், அடுத்து இன்ஸ்பெக்டர் கூறிய வார்த்தைகளில் அப்படியே நின்றார்.
 
 
“உங்க மேலே ஒரு கம்ப்ளைன்ட் வந்து இருக்கு..” எனவும், “என்னது கம்ப்ளைன்டா..? அதுவும் என் மேலேயா..?” என்று நம்பாமல் நாகராஜன் கேட்கவும், “ஆமா..” என்று அழுத்தமாகப் பதில் சொன்ன இன்ஸ்பெக்டர் திரும்பி பின்னால் பார்க்க.. அதுவரை ஜிப்பில் அமர்ந்திருந்த கிரியின் அம்மா லக்ஷ்மி இறங்கி வெளியில் வந்தார்.
 
 
லக்ஷ்மியை அங்குக் கண்டதும் நாகராஜனின் முகம் மாறியது. “இவங்க கணவரையும் மகனையும் மூணு வாரமா காணவில்லைன்னு சொல்றாங்க..” என்றார் இன்ஸ்பெக்டர்.
 
 
“காணோம்னா போய்த் தேடுங்க.. அதுக்கு இங்கே வந்து நின்னா என்ன அர்த்தம்..?” என்று அப்போதும் வீராப்பாகவே பேசினார் நாகராஜன். “மிஸ்டர் நான் ரொம்ப மரியாதையா பேசிட்டு இருக்கேன்.. இதே மாதிரி நீங்க பேசிட்டு இருந்தா, அப்புறம் உங்களைப் போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டுப் போய்த் தான் விசாரிக்க வேண்டி இருக்கும்..” என்று ராகவ் கறார் குரலில் கூறவும், சத்தம் போட்டுச் சிரித்திருந்தார் நாகராஜன்.
 
 
“ஹாஹா.. எங்கே கூட்டிட்டு போ பார்க்கலாம்.. என் ஊரில் என் வீட்டில் வந்து நின்னுட்டு என்னைப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போவாராம் இல்லை.. எங்கே தைரியம் இருந்தா கூட்டிட்டு போ..” என்று தெனாவட்டாக நாகராஜன் பேசவும், அவரின் அலைபேசி அடிக்கவும் சரியாக இருந்தது.
 
 
அதை எடுத்துப் பேச.. அந்தப் பக்கம் இருந்து அழைத்தது காவல்துறையின் நாகராஜனுக்கு மிக நெருக்கமான ஒரு உயர் அதிகாரி சுந்தர். அதைக் கண்டு தெனாவட்டாகச் சிரித்தப்படியே இன்ஸ்பெக்டரை பார்த்த நாகராஜன், “சொல்லு சுந்தர்..” என்று தொடங்கி அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை ராகவுக்கு காண்பிக்க முயன்றார்.
 
 
ஆனால் அதற்கு நேர்மாறாக.. “நாகு இப்போ தான் விஷயம் கேள்விப்பட்டேன், நான் சொல்றதை அமைதியா கேளு.. இப்போ புதுசா வந்திருக்கப் பையன் நாம நினைக்கறது போல இல்லை.. எல்லா ஊரிலும் பெரிய ஆளுங்க கூடப் பிரச்சனை செஞ்சுட்டு வந்து இருக்கான்.. கொஞ்சம் பார்த்து அவனை ஹேண்டில் செய், பையன் கொஞ்சம் பெரிய கையும் கூட.. தேவையில்லாம பிரச்சனையை இழுத்து விட்டுக்காதே பார்த்துக்கோ..” என்று எச்சரிக்கை செய்துவிட்டு அலைபேசியை வைக்க.. யோசனையோடு திரும்பி இன்ஸ்பெக்டரை பார்த்தார் நாகராஜன்.
 
 
“நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலை..” என்றார் ராகவ். “தேவையில்லாம பிரச்சனை செய்ய வந்து இருக்கீங்களா..?” என்றார் நாகராஜன்.
 
 
“நான் இங்கே பிரச்சனை செய்ய வரலை.. நான் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லுங்க..” என்றார் இன்ஸ்பெக்டர்.
 
 
“எவனோ காணோம்னு இங்கே வந்து நின்னா நான் பதில் சொல்லணுமா..?” என்று அப்போதும் நாகராஜன் திமிராகவே பேசவும். “இங்கே பாருங்க கடைசியா அவங்களை உங்க கூடத் தான் அனுப்பி இருக்காங்க.. ஆனா அதுக்குப் பிறகு அவங்க வீடு வந்து சேரலை, இதுக்கு நீங்க தானே பதில் சொல்லியாகணும்..” என்றார் இன்ஸ்பெக்டர்.
 
 
“ஆமா என் கூடத் தான் வந்தாங்க, வேலை முடிஞ்சதும் அவங்களை இறக்கி விட்டுட்டேன், அவ்வளவு தான் எனக்குத் தெரியும்..” என்று முடிவான குரலில் கூறியிருந்தார் நாகராஜன்.
 
 
“இல்லை இன்ஸ்பெக்டர் நம்பாதீங்க, இவர் பொய் சொல்றார்.. இவர் தான் அவங்களைப் பிடிச்சு வெச்சு இருக்கார், இவருக்கு மட்டும் தான் அவங்க எங்கே இருக்காங்கன்னு தெரியும், இரண்டு பேருக்கும் ஃபோன் கூடப் போகலை..” என்று லக்ஷ்மி அழுது கதறவும், “இருங்கம்மா விசாரிக்கறேன் இல்லை, பொறுமையா இருங்க..” என்ற ராகவ், “ஹ்ம்ம் சொல்லுங்க உங்களுக்கு அவங்களைப் பத்தி ஏதாவது தெரியுமா..?” என்றார்.
 
 
“எத்தனை முறை கேட்டாலும் எனக்குத் தெரிஞ்சா தான் சொல்ல முடியும்.. எனக்குத் தெரியாது..” என்றார் நாகராஜன். “உங்க பொண்ணு கல்யாணம் நின்னு போச்சுன்னு கேள்விப்பட்டேன்..” என்று இன்ஸ்பெக்டர் தொடங்கவும், “அது இந்தக் கேஸ்க்குச் சம்பந்தம் இல்லாதது..” என்றார் பல்லை கடித்துக் கொண்டே நாகராஜன்.
 
 
“இல்லை உங்க பொண்ணு கல்யாணத்தில் நடந்ததை எல்லாம் கேள்விபட்டேன், ஆனா பொண்ணைக் காணோம்னு நீங்க இப்போ வர எந்தக் கேஸும் கொடுக்கலை..” என்று இன்ஸ்பெக்டர் கேட்கவும், நாகராஜனின் அலைபேசி அடிக்கவும் சரியாக இருந்தது.
 
 
பிரைவேட் நம்பர் என்று வந்த திரையைக் குழப்பமாகப் பார்த்தபடி அலைபேசியை எடுத்திருந்த நாகராஜனுக்கு “ஹ.. ஹலோ.. அ.. அப்பா..” எனக் கதறலாக சிந்துவின் குரல் அந்தப் பக்கம் இருந்து கேட்டிருந்தது.
 
 
அதில் ஒரு நொடி திகைத்தவர், “சிந்து.. ஏய்..” என்று அழுத்தத்தோடு அழைக்கவும், “அ.. அப்பா..” என்று மீண்டும் கதறலோடு அழைத்தவள், “அப்பா நான்..” என்று அடுத்து பேச முடியாமல் திணற, எதிரில் இருப்பவரை நிமிர்ந்து பார்த்தபடியே அங்கிருந்து அலைபேசியுடன் நகர முயன்றார் நாகராஜன்.
 
 
“என்னாச்சு ஏதாவது பிரச்சனையா..?” என்று அதைக் கண்டு இன்ஸ்பெக்டர் ராகவ் கேட்டிருக்க.. “அதெல்லாம் ஒண்ணுமில்லை..” என நாகராஜன் கூறவும் “அப்போ நாம பேசி முடிச்சிடுவோம்..” என்றார் இன்ஸ்பெக்டர்.
 
 
அதில் வேகமாக “என் பொண்ணு..” என்று தொடங்கி அப்படியே நிறுத்தியவர், “முக்கியமான ஃபோன், நான் பேசணும்..” என்றார் நாகராஜன். “உங்க பொண்ணா ஃபோனில்..? நான் அவங்ககிட்ட பேசலாமா..?” என்றார் இன்ஸ்பெக்டர்.
 
 
“என்னையா வீடு புகுந்து அராஜகம் செய்யறியா..? யாரோ சொன்னாங்கன்னு இங்கே வந்து நின்னுட்டுக் கேள்வியா கேட்டுட்டு இருக்கே.. என்கிட்ட வந்து விசாரிக்கிறதே தப்புன்னு சொல்லிட்டு இருக்கேன்.. இதில் என் பொண்ணுகிட்ட வேற நீ பேசுவியா..?” என்று எகிறினார் நாகராஜன்.
 
 
“இல்லைங்க நான் அவங்களை விசாரிக்க நினைக்கலை..” என இன்ஸ்பெக்டர் கூறவும் “வேற எதுக்கு நீ அவகிட்ட பேசணும்..?” என்றார் நாகராஜன். இதையெல்லாம் இந்தப் பக்கம் ஸ்பீக்கரில் கேட்டுக் கொண்டிருந்த தாரக் “என்னமோ அப்பா, அப்பான்னு அப்படி உருகினே..? இத்தனை நாள் கழிச்சு நீ பேசியும், உங்க அப்பாவுக்கு உன்னை விட அங்கே எவன் கூடவோ பேசறது தான் முக்கியமா இருக்கும் போலேயே..!” என்றான் கேலியாக.
 
 
அதில் அழுகையோடு அலைபேசியைப் பிடித்திருந்த சிந்து, “அப்பா.. அப்பா..” என்று இந்தப் பக்கம் அழைத்துக் கொண்டிருக்க.. அது அந்தப் பக்கம் இருந்த இருவருக்குமே கேட்டது.
 
 
“ரொம்ப நேரமா கூப்பிடறாங்க பேசுங்க..” என இன்ஸ்பெக்டர் கூறியது வேறு நாகராஜனுக்கு எரிச்சலை கொடுத்தது “என் பொண்ணுகிட்ட நான் பேசணுமா வேண்டாமான்னு நீ என்ன சொல்றது..?” என அவர் சிடுசிடுத்தார்.
 
 
“இங்கே பாருங்க.. உங்க பொண்ணு கல்யாணத்தில் இருந்து தான் எல்லாப் பிரச்சனையும் தொடங்கி இருக்கு.. உங்க பொண்ணை யாரோ திடீர்னு தாலி கட்டி கடத்திட்டு போனதால், இவங்க கணவர் மேலேயும் மகன் மேலேயும் சந்தேகப்பட்டு அவங்களை நீங்க பிடிச்சு வெச்சு இருக்கறதா இவங்க சொல்றாங்க.. அப்போ உங்க பொண்ணுகிட்ட பேசினா தானே விவரம் தெரியும்..” என்றார் இன்ஸ்பெக்டர்.
 
 
“ஏன்யா அறிவு இருக்கா உனக்கு..? புரிஞ்சு பேசறியா இல்லை புரியாம பேசறியா..? யாரோ ஏதோ சொன்னா அதுக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்..? என் மேலே கோபம் இருக்க யார் வேணும்னாலும் என் மேலே பழி சொல்லலாம், அதுக்காக நேரா விசாரணைக்கு வீடு தேடி வந்துடுவீங்களா..?
 
 
படிச்சிருக்கே இல்லை, பொறுப்பான வேலையிலேயும் இருக்கே.. யோசிக்க மாட்டியா..? புத்தி வேண்டாம்..” என்று தன்னை மீறி நாகராஜன் இருந்த கோபத்தில் பேசிக் கொண்டே செல்ல.. “வார்த்தையைப் பார்த்து பேசுங்க..” என்றார் இன்ஸ்பெக்டர்.
 
 
“ஹாங்.. இப்போ மட்டும் கோபம் வருதோ..? அப்படித் தானே எங்களுக்கும் இருக்கும், யாரோ சொன்னா நேரா வந்துடுவீங்களா..? நான் யார் என்னன்னு ஊருக்குள்ளே விசாரிக்க மாட்டீங்களா..? கௌரவமா வாழ்ந்துட்டு இருக்கேன், இங்கே இப்படி வந்து நின்னா, நாலு பேரு என்ன நினைப்பாங்க..?” என்றார் நாகராஜன்.
 
 
“இவ்வளவு பேசறதுக்கு உங்க மககிட்ட என்னை ஒரு வார்த்தை பேச விட்டாலே எல்லாம் முடிஞ்சு போய் இருக்கும்..” என்ற இன்ஸ்பெக்டரை முறைத்தவர், “இவ்வளவு சொல்றேன்.. வீட்டு பொம்பளைங்ககிட்ட பேசணும்னு என்கிட்டேயே திரும்ப சொல்றே..” என்றார் ஆத்திரமாக நாகராஜன்.
அதற்குள் இங்குப் பத்து முறைக்கு மேல் அழுகையோடு “ஹலோ.. அப்பா..” எனக் கத்தி கதறி விட்டிருந்தாள் சிந்து. இப்படி ஒருத்தி அழைப்பில் இருப்பதோ..! இத்தனை நாள் கழித்துத் தன் மகள் அழைத்து இருப்பதோ..! துளியும் நினைவில்லாமல் நாகராஜன் அங்குப் பிரச்சனை செய்து கொண்டிருக்க.. “உங்க அப்பாவுக்கு உன் கூடப் பேச இஷ்டம் இல்லை போல..” என்று அழைப்பை துண்டித்து விட்டிருந்தான் தாரக்.
 
 
இதில் திகைத்துப் போய் அவனைச் சிந்து பார்க்க.. “வாய்ப்பு எப்போவாவது ஒருமுறை தான் கிடைக்கும்.. அப்படிக் கிடைக்கும் போதே அதைப் பயன்படுத்திக்கணும்.. உனக்கு அந்த வாய்ப்பு முடிஞ்சு போச்சு..” என்று விட்டு தாரக் அலைபேசியோடு அங்கிருந்து நகர முயல..
 
 
“இல்லை.. இல்லை ப்ளீஸ்.. வேண்டாம் இன்னும் ஒரே ஒருமுறை.. ப்ளீஸ்..” என்று வேகமாக வந்து அவன் வழியை மறித்தது போல் நின்று கெஞ்சிக் கொண்டு இருந்தாள் சிந்து.
 
 
“ஹேய் பொண்ணே.. உங்க அப்பாவுக்கே உன்கிட்ட பேச இஷ்டமில்லை.. அப்புறம் பேசி என்னாகப் போகுது விடு..” என்று அவன் மேலும் நகர முயல.. “அப்பா அங்கே ஏதோ கோபமா இருக்காங்க.. அதனால் தான் ப்ளீஸ்.. நான் இன்னொரு முறை.. பேசறேன்.. எனக்காக ப்ளீஸ்..” என்று கெஞ்சினாள் சிந்து.
 
 
யோசனையாக அவள் முகத்தைப் பார்த்தவன், “உனக்காக இல்லை.. உங்க அப்பாவுக்காக இதைச் செய்யலாம்..” என்று மீண்டும் தாரக் அலைபேசியை அவளிடம் கொடுக்க.. நாகராஜன் இங்கு வாதிட்டுக் கொண்டிருந்ததில் அலைபேசி துண்டிக்கப்பட்டது கூட அவருக்குத் தெரியவில்லை.
 
 
மீண்டும் அது அடிக்கவும் திரும்பி அதைப் பார்த்தவர், இன்ஸ்பெக்டரின் முன் அதை எடுப்பதா வேண்டாமா என்பது போல் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, வேகமாக அதை வாங்கி ஆன் செய்து ஸ்பீக்கரிலும் போட்டிருந்தார் இன்ஸ்பெக்டர்.
 
 
“என்ன இது அராஜகம்..?” என்று அவரிடம் இருந்து அலைபேசியை நாகராஜன் பறிக்க முயல.. “இரண்டு நிமிஷம் நான் பேசி முடிச்சுட்டு போயிட்டே இருப்பேன்.. இப்படி எல்லாம் நீங்க அமர்க்களம் செஞ்சா தான் இது வேற மாதிரி மாறும்.. நான் சொன்னது போல அரெஸ்ட் செஞ்சு கூட்டிட்டு போக வேண்டிய நிலைமை கூட வரும்.. புரிஞ்சு நடந்துக்கோங்க..” என்று மிரட்டலாகக் கூறிய இன்ஸ்பெக்டர் திரும்பி அலைபேசியில் கவனமாகி “ஹலோ..” என்றார்.
 
 
அதற்குள் இங்குப் பேசியதெல்லாம் அந்தப் பக்கம் கேட்டிருக்க.. பயத்தில் சிந்துவுக்கு வார்த்தைகள் கூட வரவில்லை. அதில் அவள் அமைதியாக இருக்க.. “ஹலோ.. நான் இன்ஸ்பெக்டர் பேசறேன்..” என்றான் மீண்டும் ராகவ்.
 
 
அப்போதும் சிந்து பயத்தில் அமைதியாக இருக்க.. வேகமாக அலைபேசியை இன்ஸ்பெக்டரிடமிருந்து வாங்கினார் நாகராஜன். அவர் ஸ்பீக்கரை ஆப் செய்ய முயல.. “நான் உங்களை வார்ன் செய்யறேன் மிஸ்டர் நாகராஜன்.. நான் அவங்ககிட்ட பேசணும், அட்லீஸ்ட் அவங்க பேசறதையாவது கேட்கணும், அப்போ தான் இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும்..
 
 
இல்லை நீங்க தான் இவங்க கணவரையும் மகனையும் கடத்தி இருக்கீங்கன்னு உங்க மேலே நான் கேஸ் போடுவேன்..” என்றார் இன்ஸ்பெக்டர்.
 
 
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சிந்துவுக்கு இப்போது அங்கு நிலைமை மோசமாகி கொண்டிருப்பது தெளிவாகப் புரிந்தது. தன் தந்தையின் மேல் கேஸ் அது இதுவெனக் காதில் விழவும், பயந்து போனவள் நாகராஜன் “ஹலோ..” என்றதில் பதில் சொல்ல முடியாமல் திணறினாள்.
 
 
அதில் கோபமான நாகராஜன் தன் எதிரில் இருந்த ராகவ் மேல் காண்பிக்க முடியாத ஆத்திரத்தை எல்லாம் ஒன்று சேர்த்து “ஹலோ.. லைனில் இருக்கியா இல்லையா..?” எனவும், “ஹலோ..” என்றிருந்தாள் நடுக்கத்தோடான குரலில் சிந்து.
 
 
“ஏய் இப்போ நீ எங்கே இருக்கே..?” என்று அவர் அடுத்ததாகக் கத்தவும், “அப்பா.. நீங்க.. நீங்க என்னைத் தேட வேண்டாம்.. நா.. நான்..” என்றவள் அதற்கு மேல் பேச முடியாமல் திணறி தாரக்கை பார்க்கவும், நீ பேசுவதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போலக் கைகளைக் கட்டியப்படி நின்றிருந்தான் தாரக்.
 
 
அதில் எதுவும் பேசாமல் அழைப்பை துண்டித்து விடலாம் என்று கூட ஒரு நொடி சிந்துவுக்குத் தோன்றியது. ஆனால் வீட்டுக்குத் திரும்பச் செல்ல கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்பு இது எனும் போது அதைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று எண்ணியவள், முயன்று வர வழைத்துக் கொண்ட மன தைரியத்தோடு, “அப்பா.. என்.. என்னை யாரும் கடத்திட்டு போகலை.. நா.. நானா விரும்பி தான் அவர் கூடப் போனேன்..” என்றாள் சிந்து.
 
 
இதைக் கேட்ட நொடி “என்ன சொன்னே..?” என்று ஆத்திரத்தில் நாகராஜன் கத்தி இருக்க.. அந்தக் குரலிலேயே சிந்துவுக்கு நடுக்கம் எடுத்தது. அதில் அடுத்து பேச முடியாமல் சிந்து அமைதியாக.. “ஹ்ம்ம்.. மேலே பேசு..” என்பது போல் அவளைப் பார்த்து கையசைத்தான் தாரக்.
 
 
அதில் எச்சில் கூட்டி விழுங்கியவாறே “நா.. நான் விரும்பி தான்.. நானே அவர் கூட..” என்று சிந்து இப்போது மேலும் பயத்தில் திணறவும், சட்டென நிலைமையைக் கையில் எடுத்திருந்த இன்ஸ்பெக்டர் “அதாவது இது உங்க விருப்பப்படி நடந்த கல்யாணம்னு சொல்றீங்களா..?” என்றார்.
 
 
அதற்குப் பதில் சொல்லாமல் சிந்து அமைதியாக.. ‘சொல்’ என்பது போல விழியசைத்தான் தாரக். அதில் “ஆ.. ஆமா..” என்று திணறலோடு சிந்து சொல்லவும், “உங்களோடது காதல் கல்யாணமா..?” என்றார் இன்ஸ்பெக்டர்.
 
 
இதற்குப் பதில் என்ன சொல்வது எனத் தெரியாமல் சிந்து விழிக்கவும், ‘ஆம்’ என்பது போல தலையசைத்தான் தாரக். ஆனால் அவளுக்கு வார்த்தைகளில் கூட இதைச் சொல்ல விருப்பமில்லை.
 
 
அதில் தொடர்ந்து சிந்து அமைதியாகவே இருக்க.. “சொல்லுங்க.. இது உங்க விருப்பப்படி நடந்த காதல் கல்யாணமா..?” என்றார் மீண்டும் இன்ஸ்பெக்டர்.
 
 
அதில் தாரக் கைகளைக் கட்டிக் கொண்டு சிந்துவை முறைக்கவும், “ஆ.. ஆமா..” என்றிருந்தாள் தடுமாற்றத்தோடு சிந்து. “அப்போ நீங்க பிளான் செஞ்சு தான் இங்கே இருந்து கிளம்பி இருக்கீங்க இல்லையா..?” என்று இன்ஸ்பெக்டர் திரும்பக் கேட்க.. இப்போதும் “ஆமா..” என்று திணறலோடு வந்தது சிந்துவின் குரல்.
 
 
“சரி ஓகே..” என இன்ஸ்பெக்டர் அந்தப் பேச்சை அத்தோடு முடித்துக் கொள்ள.. வேகமாக அவரிடம் இருந்து அலைபேசியைப் பறித்திருந்த நாகராஜன் “ஏய் திமிர் எடுத்த கழுதை என்னடி சொன்னே..?” என்று கத்திக் கொண்டிருக்கும் போதே, அவளிடம் இருந்து அலைபேசியைப் பறித்து அதை அணைத்திருந்தான் தாரக்.
 
 
அவள் இப்படிச் சொன்ன பிறகு, இந்த நொடி அங்கு எத்தனை பிரச்சனைகள் நடக்கும் என சிந்துவுக்குத் தெளிவாகப் புரிந்தது. ஆனால் அவளால் இப்போது என்ன செய்ய முடியும்..? இது ஒன்று தான் இங்கிருந்து அவள் தப்பிக்க வழி எனும் போது இதை அவள் சொல்லித் தானே ஆக வேண்டும்.
 
 
அதே நேரம் ‘வீட்டிற்குச் சென்றால் எத்தனை பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்குமோ..? எப்படியெல்லாம் பழி வருமோ..? முதலில் தன்னை வீட்டிற்குள் சேர்ப்பாரா..?’ என்ற பயம் வேறு சிந்துவின் மனதை பெரிதாக அழுத்தியது.
 
 
ஆனாலும் இங்கு யாரென்று தெரியாத ஒருவனிடம் சிக்கி தினமும் அனுபவிக்கும் வலியை விட, அது பரவாயில்லை என்று தோன்ற.. அறையை விட்டு வெளியேற முயன்ற தாரக்கை பார்த்து “நா.. நான் எப்போ இங்கே இருந்து போகலாம்..?” என்றிருந்தாள் சிந்து.
 
 
அதைக் கேட்டு இதழில் வழியும் கேலி புன்னகையோடு அவளைப் பார்த்தவன், “என்னை இன்னுமா நீ நம்பறே..? நான் சும்மா உலுலாய்க்கு சொன்னேன்.. உன்னால் எங்கேயும் போக முடியாது, இப்போதைக்கு நீ இங்கே தான்..” என்று விட்டு வெளியேறினான் தாரக்.
 
 
அதில் உண்டான திகைப்போடு அவன் சென்ற திசையையே அதிர்வோடு பார்த்துக் கொண்டிருந்தாள் சிந்து.

This post was modified 4 months ago 2 times by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 406
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ புது கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
MNM - 8
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 

This post was modified 9 months ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 406
Topic starter  
 
 
நேசம் – 9
 
 
ஆற்றுவார் தேற்றுவாரின்றி அழுது கரைந்து கொண்டிருந்தாள் சிந்து. இத்தனைக்குப் பிறகும் தாரக் சொன்ன வார்த்தைகளை நம்பி ஏமாந்து போன தன் முட்டாள் தனத்தை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
 
 
‘என்கிட்ட இவ்வளவு மிருகதனமா.. இவ்வளவு தப்பா நடந்துக்கும் ஒரு மனுஷன் சொல்லும் வார்த்தை உண்மையாக இருக்கும்னு எப்படி நான் நம்பினேன்..? எப்படி என்னால் அவரை நம்ப முடிஞ்சது..? அவர் நம்பிக்கைக்குரியவரா இருப்பாருன்னு நான் எந்த நொடியில் எப்படி நினைத்தேன்..? அவர் சொன்னதைச் செய்வார்னு எப்படி எனக்குத் தோணுச்சு..?’ என ஆயிரம் முறை தனக்குள் கேட்டு கேட்டு சோர்ந்து போனாள் சிந்து.
 
 
‘எதுக்காக இதெல்லாம்..? யார் மேலே அவருக்குக் கோபம்..? எதுக்காக என்னை இங்கே கூட்டிட்டு வந்தார்னு இப்போ வரைக்கும் நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவர்கிட்ட இருந்து பதில் வரலை.. என்கிட்ட அவர் நடந்துக்கும் முறைக்குச் சொன்ன வாக்கை காப்பாற்றுவார்னு நான் நம்பி இருக்கவே கூடாது.. இதை நம்பி அப்பாகிட்ட வேற அப்படிப் பேசி வெச்சுட்டேன்.. இப்போ நான் என்ன செய்வேன், இனி அப்பா என்னை வீட்டுக்குள்ளேயே சேர்க்க மாட்டாரே..!’ என்று அவளின் மனம் நினைக்கும் போதே..
 
 
‘இங்கே இருந்து நீ வெளியே போவேன்னு இன்னும் கூட நீ நம்பிட்டு இருக்கியா..? முதலில் நீ இங்கே இருந்து வெளியே போகணும்.. அடுத்து தான் உங்க அப்பா வீட்டுக்குள்ளே சேர்ப்பாரா இல்லையான்னு முடிவாகும்.. எனக்குத் தெரிஞ்சு காலம் முழுக்க நீ இங்கேயே அடைஞ்சு கிடந்து சாக வேண்டியது தான்..!’ என அவளின் மனசாட்சியே இடித்துரைத்தது.
 
 
இதில் தன் நிலையை எண்ணி அழுது கரைந்து கொண்டிருந்தவளுக்கு இதில் இருந்து மீள்வோமா என்ற சந்தேகம் எல்லாம் இப்போது துளியும் இல்லை. இனி சாகும் வரை தனக்கு இங்கிருந்து விடுதலை இல்லை என இப்போது தெளிவாகப் புரிந்திருந்தது.
 
 
ஆனால் மரணத் தண்டனை கைதிக்கு கூட அவரின் குற்றம் என்னவெனத் தெரிந்திருக்கும், ‘அவள் செய்த என்ன குற்றத்திற்கான தண்டனை இது..?’ எனப் புரியாதது தான் சிந்துவை மேலும் பாதித்தது.
இதில் காலையில் இருந்து சாப்பிட கூட விருப்பம் இல்லாமல் சுருண்டு படுத்து அழுது கொண்டிருந்தாள் சிந்து. இருமுறை அறைக்குள் வந்து பார்த்து விட்டு சென்ற சாரதாவும், சிந்துவை சாப்பிட சொல்லி வற்புறுத்தவில்லை.
 
 
அவள் அழுது கொண்டிருப்பதைப் பார்த்தும் அவருக்குச் சமாதானம் செய்யக் கூடத் தோன்றவில்லை. இரண்டு நிமிடம் நின்று அவளைப் பார்த்து விட்டு வெளியேறி இருந்தார் சாரதா.
 
 
அதே நேரம் அவன் பொக்கிஷமாகப் பாதுகாக்கும் வீட்டின் தரையில் சுருண்டு படுத்திருந்தான் தாரக். விழிமூடி சாய்ந்திருந்தவனின் கண்களில் இருந்து லேசாகக் கண்ணீர் துளிகள் வழிந்திருந்தது. ‘இன்னும் கொஞ்ச நாள் தான்.. இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான்..! எல்லாம் முடிஞ்சுடும்.. சீக்கிரமே எல்லாம் முடிஞ்சுடும்..
 
 
அதுக்குப் பிறகு எனக்கு இந்தத் தண்டனை இல்லை.. சீக்கிரம் இந்தத் தண்டனையிலிருந்து எனக்கு விடுதலை கிடைச்சுடும்.. இன்னும் கொஞ்ச நாள் தான்..!’ எனத் திரும்பத் திரும்ப அவன் மனம் சொல்லிக் கொண்டே இருந்தது.
 
 
இது ஒரு வகையில் மனதளவில் துவண்டு போய்க் கிடந்தவனுக்கு ஒருவித ஆறுதலை கொடுக்க.. இதெல்லாம் சீக்கிரம் முடிஞ்சா தான் நல்லது என்று எண்ணிக் கொண்டவனுக்கு ஆறுதலாக மெல்லிய கரம் ஒன்று தாரக்கின் தலையை வருடி விடுவது போல் இருந்தது.
 
 
அந்த நொடியை இழந்து விட்டால் இப்படி ஒரு ஆறுதல் திரும்பக் கிடைக்காது என்பது போல விழிமூடி அதை உணரத் தொடங்கினான் தாரக். இது போலான ஆறுதல் மனதளவில் கூட வேறு எங்கும் அவனுக்குக் கிடைக்காது..
 
 
ஆயிரம் வார்த்தைகள் கொடுக்க முடியாத ஆறுதலை, அந்த ஒற்றைத் தலை கோதல் அந்த நொடி அவனுக்குக் கொடுப்பது போல் இருந்தது. இது நிஜமில்லை எனப் புரிந்தாலும், மெல்லிய கரம் அவனின் தலை முழுக்கத் தன் விரல் கொண்டு வருட தொடங்கியதில் கட்டுப்பாடின்றித் தாரக்கின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
 
 
********
 
 
வீட்டிலிருந்த பொருட்களை எல்லாம் தூக்கிப் போட்டு நொறுக்கி கொண்டிருந்தார் நாகராஜன். அத்தனை பேர் முன்பு சிந்து கூறிய வார்த்தைகள் அவரைக் கொந்தளிக்கச் செய்திருந்தது.
 
 
“இதை.. இதை நான் எப்படி யோசிக்க மறந்தேன்.. இந்த ஓடு**லி வேலை தானா இது எல்லாம்..! அதனால் தான் என்னால் அவனை எந்த வகையிலேயும் கண்டுபிடிக்கவே முடியலையா..?” என்று அவர் கொந்தளித்துக் கொண்டிருக்க.. அவரிடம் நெருங்கி எதுவும் பேச அங்கிருக்கும் யாருக்குமே தைரியம் வரவில்லை.
 
 
“இது தெரியாம ஊரெல்லாம் தேடி அலைஞ்சு பைத்தியக்காரன் போலச் சுத்திட்டு இருந்து இருக்கேன்..” என்றவர், “ஏய் சுஜாதா.. எங்கே போய்த் தொலைஞ்சே..?” என்று கத்தவும், ஏற்கனவே விஷயம் கேள்விப்பட்டதில் இருந்து அழுகையோடு உள்ளே நின்று நடுங்கி கொண்டிருந்தவருக்கு இப்போது நெஞ்சு வலியே வந்து விட்டது.
 
 
ஆனாலும் நாகராஜன் கூப்பிட்ட ஒரு குரலுக்கு வெளியே செல்லவில்லை என்றால் அது வேறு பெரும் பிரச்சனையாக வெடிக்கும் என புரிந்து கால்கள் நடுங்க, பயத்தோடு வந்து அவர் முன் நின்றிருந்தார் சுஜாதா.
 
 
அடுத்த நொடி இடி இறங்கியது போல் அவரின் கன்னத்தில் நாகராஜன் அறைந்திருந்ததில், சுருண்டு கீழே விழுந்து அருகில் இருந்த தூணில் சுஜாதாவின் தலை மோதிக் கொண்டது.
 
 
“பெரியம்மா..” என வேகமாக விஷ்வா சென்று கை கொடுத்து அவரைத் தூக்க முயல.. “பக்கத்தில் போன கையைக் காலை உடைச்சுடுவேன் ராஸ்கல்.. தூரப் போடா..” என்று அவனிடம் எகிறினார் நாகராஜன்.
 
 
இதில் அவர் சொல்வதை மீற தைரியம் இல்லாத விஷ்வா தயக்கத்தோடு அப்படியே நிற்க.. வேகமாக வந்து கீழே விழுந்திருந்த சுஜாதாவின் கூந்தலை பிடித்துத் தூக்கி நிறுத்தியவர், “ஏன்டி நா** இத்தனை வருஷமா தண்டத்துக்குச் சோத்தை போட்டு உன்னை வீட்டில் வெச்சு இருந்ததுக்குப் பொண்ணை ரொம்ப அழகா வளர்த்து வெச்சிருக்க.. இதைக் கூட ஒழுங்கா செய்ய முடியலனா நீ எல்லாம் எதுக்கு உயிரோட இருக்கே..? இப்படி என் மானத்தை வாங்கறதுக்கு எப்போவோ நீயும் உன் பொண்ணும் விஷத்தை குடிச்சுட்டு செத்து தொலைஞ்சு இருக்கலாமே..!” என்று மேலும் கன்னம் கன்னமாக அறைந்தார் நாகராஜன்.
 
 
“இல்லைங்க.. சிந்து அப்படிப்பட்டவ இல்லை.. அவ ரொம்ப நல்ல பொண்ணுங்க..” என்று திக்கி திணறி அழுகையோடு அடி தாங்க முடியாமல் சுஜாதா சொல்லிக் கொண்டிருக்க..
 
 
“வாயமூடு உன் நல்ல பொண்ணு லட்சணம் தான் இப்போ ஊரே வேடிக்கை பார்த்தே..! அவளே ஃபோன் செஞ்சு என்கிட்ட சொல்றானா நான் இங்கே அவளைத் தேடிட்டு இருக்கறது தெரிஞ்சு, என்னைத் தேட வேண்டாம்.. நான் கிடைக்க மாட்டேன், நானே திமிர் எடுத்துப் போய்த் தான் தெருவில் போனேன்.. எவனும் என்னைக் கட்டாயப்படுத்திக் கூட்டிட்டு போகலைன்னு எனக்குச் சொல்றான்னு தானே அர்த்தம்..? புரிஞ்சுதா உனக்கு..? அத்தனை பேர் முன்னே என்கிட்ட சொல்றாடி அவ.. எவ்வளவு திமிரும் தெனாவட்டும் இருந்தா என்கிட்டேயே இப்படிச் சொல்லுவா..?” என்று கேட்டு மீண்டும் அடிக்க விஷ்வாவுக்குத் தான் சுஜாதாவை இந்த நிலையில் பார்க்க முடியாமல் மனம் கலங்கியது.
 
 
ஆனால் இடையில் சென்று இதைத் தடுக்கத் தான் அவனுக்குத் தைரியம் வரவில்லை. எப்போதும் நாகராஜன் மேல் இருக்கும் பயம் அவரின் இந்த ஆக்ரோஷ முகத்தைக் கண்ட பின் இன்னும் அதிகமாகியது. அதில் அவன் ஓரமாக நின்று விட..
 
 
“இது தெரியாம முட்டாளா.. முட்டாளா இருந்திருக்கிறேனே..!” என்ற கோபம் வேறு அவரைக் கொதிக்கச் செய்து கொண்டிருந்ததில், வழக்கம் போல் எல்லாக் குடும்பத் தலைவர்களும் அதை இறக்கி வைக்கும் இடமான தன் மனைவியிடத்திலேயே அதைத் துளியும் குறையாமல் இறக்கிக் கொண்டிருந்தார் நாகராஜன்.
 
 
எதிர்ப்பில்லா இடத்திலேயே தன் வீரத்தை காட்டுவது இங்கு உள்ள பலருக்கு வழக்கமாகி இருக்க.. அதற்குக் கொஞ்சமும் பிசாகாமல் இருந்தார் நாகராஜன்.
 
 
இவை அனைத்தையும் அருண் ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குமே சற்று முன் சிந்து பேசியது துளியும் பிடிக்கவில்லை. அதில் பல்லை கடித்தபடி அவன் அமைதியாக நின்றிருக்க.. சட்டென அவன் பக்கம் திரும்பியவர் “இங்கே நடக்கறதை எல்லாம் பார்த்தியா..? இதெல்லாம் உனக்கு முன்னேயே தெரியுமா..?” என்று பல்லை கடித்துக் கொண்டு கேட்டார் நாகராஜன்.
 
 
“இல்லைப்பா எனக்கு எதுவும் தெரியாது..” என்று அருண் உடனே கூறவும், “ச்சீ இப்படிச் சொல்ல உனக்கு வெக்கமா இல்லை.. வீட்டில் ஒரு வயசு பொண்ணு இருக்கா அவ என்ன செய்யறா ஏது செய்யறான்னு கூடத் தெரிஞ்சு வெச்சுக்காம என்ன டேஷ்க்கு நீ அண்ணனா இருக்கே..?
 
 
என் கூடவே இருந்து என்னைப் போலவே ஆகணும்னு நினைக்கறதுக்கு எனக்குப் பிறந்தா மட்டும் போதாது.. இதுக்கு எல்லாம் நான் என்ன செஞ்சேன்..? சின்ன வயசில் எப்படி எல்லாம் இருந்தேன்னு தெரியுமா..? அதில் பத்துப் பர்சன்ட் கூட இல்லை டா நீ..
 
 
இன்னைக்கு இருக்கும் செல்போன், கேமரா, அது இதுன்னு ஆயிரம் விஷயங்கள் அன்னைக்கு எங்களுக்கு இல்லை.. அப்போவே நாங்க அப்படி இருந்தோம்.. ஆனா நீ அத்தனையையும் கையில் வெச்சுட்டு ஒன்னும் வேலைக்கு ஆகாம நிற்கறியே வெக்கமா இல்லையாடா உனக்கு..?” என்று அவனிடம் எகிறினார் நாகராஜன்.
 
 
அதில் அருண் அமைதியாகத் தலை குனிந்து நிற்க.. “எனக்கு இப்போ தான்டி உன் மேலே சந்தேகமே வருது.. நிஜமாவே இவன் எனக்குத் தான் பிறந்தானா..?” என்று சுஜாதாவை பார்த்து கேட்கவும், மேலும் உடைந்து போனார் சுஜாதா.
 
 
இதற்கு வழக்கம் போல் ஒரு பத்து அடிகளை அவர் கொடுத்திருந்தால் கூட சுஜாதா தாங்கிக் கொண்டிருப்பார். ஆனால் இந்த வார்த்தைகளை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
 
 
அதுவும் இத்தனை பேர் சூழ்ந்து இருக்க அவர்களின் முன் இப்படியான வார்த்தைகளைத் தன்னை நோக்கி அவர் வீசுவது சுஜாதாவை மனதளவில் குறுகிப் போகச் செய்தது.
 
 
“பெரியப்பா..” என்று தயக்கத்தோடு ஏதோ சொல்ல தொடங்கிய விஷ்வாவை முறைத்தவாறே “வாயைமூடுடா அனாதை நா**..!” என்று நாகராஜன் கூறியதில், அப்படியே ஒடுங்கிப் போனான் விஷ்வா.
 
 
“இப்படிக் கண்டவனையும் செல்லம் கொடுத்து சீராட்டி வளர்க்கறதில் காட்டின அக்கறையை உன் பொண்ணைப் பார்த்துக்கறதிலும் வளர்க்கறதிலும் காட்டி இருக்க வேண்டியது தானேடி..” என்று மீண்டும் சுஜாதாவிடம் எகிறிக் கொண்டு செல்லவும், அதில் பயந்து பின்னுக்கு நகர்ந்தார் சுஜாதா.
 
 
அதைக் கண்டு, “நாடகம் போடாத நா**..” என சுஜாதாவை பிடித்துத் தள்ளி விட்டு அங்கிருந்து வெளியேறினார் நாகராஜன். அதில் மீண்டும் கீழே விழுந்தவரை விஷ்வா வேகமாகச் சென்று தாங்கி பிடித்து அமர வைக்க.. அப்படி ஒரு அழுகை சுஜாதாவிடம் இருந்து வெடித்துக் கொண்டுக் கிளம்பியது.
அவரால் சிந்து பேசிய ஒரு வார்த்தையைக் கூட நிஜம் என நம்ப முடியவில்லை. ‘ஏதோ ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டு தவிர்க்க முடியாமல் அழுகையோடு சிந்து பேசியது போல் மட்டுமே அவருக்கு அந்தக் குரல் உணர்த்தி இருந்தது.
 
 
ஆனால் அதைச் சொன்னால் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலையில் நாகராஜன் சுத்தமாக இல்லை எனப் புரிந்து அவர் அமைதியாக இருந்தாலும் அவரின் மனம் மகளின் நிலையை எண்ணி வருந்தியது.
 
 
அதில் அவர் மௌனமாக அழுது கொண்டிருக்க.. எப்படிச் சமாதானம் சொல்வது எனத் தெரியாமல் அருகில் நின்றிருந்தான் விஷ்வா.
 
 
அங்கிருந்து அதே கோபத்தோடு கிரியை அடைத்து வைத்திருந்த இடத்திற்குச் சென்ற நாகராஜன், தன் ஒட்டு மொத்த கோபத்தையும் “எங்கே இருந்துடா எனக்குன்னு ஒவ்வொருத்தனா கிளம்பி வரீங்க..? இத்தனை வருஷமா நான் கட்டி காப்பாற்றி வெச்சு இருந்த என் பேரு, என் கௌரவம் எல்லாம் உங்களால் வீணா போகுது..” என்று கிரியின் மீதும் அவன் தந்தையின் மீதும் காண்பிக்க.. முன்பே அடி வாங்கித் துவண்டிருந்த இருவரும் உடலில் உள்ள மொத்த சத்தும் போனது போல் கிட்டத்தட்ட மயங்கும் நிலைக்குச் சென்றனர்.
 
 
அதில் பயந்து போன முத்து “ண்ணே வேண்டாம்..” என்று இடையில் வந்து நின்று நாகராஜனை தடுக்க முயல.. “என்னடா வேண்டாம்.. இல்லை என்ன வேண்டாம்..? தேடி அலைஞ்சு நானே ஒரு சூனியத்தைப் பிடிச்சு மாப்பிள்ளையா கூட்டிட்டு வந்து இருக்கேன் பார்..” என்று கிரியை பார்த்து கூறியவர், “அடிச்சு கொல்லணும் இவனுங்களை..” என்று கத்தினார்.
 
 
“ண்ணே.. இவன் செஞ்சது தப்பு தான், நான் இல்லைன்னு சொல்லலை.. ஆனா தப்பு இப்போ இவனுங்க மேலே மட்டும் இல்லை..” என்று முழுதாகச் சொல்ல முடியாமல் முத்து மெல்லிய குரலில் இழுக்கவும், “அதுதான்டா இப்போ எனக்கு எரிச்சலா இருக்கு.. வீட்டுக்குள்ளேயே பிரச்சனையை வெச்சுட்டு நான் ஊரெல்லாம் சுத்தி வந்துட்டு இருக்கேன்.. இதை நான் எங்கே போய்ச் சொல்றது..?” என்று வெறுப்பில் கத்தினார் நாகராஜன்.
 
 
இதையெல்லாம் பார்த்தபடி அமைதியாக நின்றிருந்த அருண் “அப்பா இவங்களை இனியும் இங்கே வெச்சு இருக்கறது சரி இல்லை..” என்றான். அதில் அவனைத் திரும்பி முறைத்தவர் “உன் கடமையை ஒழுங்கா செய்யாம இப்போ எனக்குப் புத்தி சொல்ல வந்துட்டியா..?’ என்றார் நாகராஜன்.
 
 
“அதுக்கு இல்லைப்பா, இவங்க விஷயம் போலீஸ் வர போயிருக்கு.. அதுவும் வழக்கமா நம்ம பக்கம் இருக்கும் போலீஸும் இப்போ இங்கே இல்லை.. புதுசா வந்து இருக்கறவர் எப்படிப்பட்டவர்னு உங்களுக்கே புரிஞ்சு இருக்கும்.. இனி பிரச்சனை வேற மாதிரி எப்படித் திரும்பவும் வாய்ப்பு இருக்கு..” என்று அவன் பொறுமையாகவே தொடங்கவும் “அதுக்கு என்ன செய்யச் சொல்றே..? அவன் காலில் போய் விழ சொல்றியா..?” என்றார் நாகராஜன்.
 
 
“இல்லைப்பா..” என்றவன் வேறு ஏதோ சொல்ல தொடங்கவும், “வாயை மூடுடா..” என்று கத்தியவர், முன்னும் பின்னுமாக எதையோ யோசித்தப்படியே நடந்து விட்டு திரும்பி முத்துவை பார்த்து “இந்தக் குப்பைகளைக் கொண்டு போய், ஊருக்கு வெளியில் எங்காவது வீசிட்டு வா..” என்றார் நாகராஜன்.
 
 
“ண்ணே..” என்று அப்போதும் முத்துத் தயக்கமாக இழுக்கவும், “வேற எதுவும் செய்ய முடியாதுடா.. இல்லை இவனுங்களை மொத்தமா முடிக்கணும்னா சொல்லு முடிச்சுடலாம்..?” என்று ஒருவித அழுத்தத்தோடு நாகராஜன் கேட்கவும், “வேண்டாம்னா இப்போ சூழ்நிலை சரியில்லை..” என்றான் முத்து.
 
 
“அதனால் தான் சொல்றேன், தூக்கிட்டு போய் வீசிட்டு வாங்க..” என்றவர் திரும்பி கிரியை பார்த்து “வெளியே தான் போயிட்டோமேன்னு எவன்கிட்டயாவது எப்போவாவது வாயைத் திறந்தே.. அதுக்கப்புறம் பேசறதுக்கு நீயும் உங்க அப்பனும் இந்த உலகத்திலேயே இருக்க மாட்டீங்க.. நான் எதையும் செய்யக் கூடியவன்னு உங்களுக்கு நல்லா புரிஞ்சு இருக்கும்.. பார்த்து நடந்துக்கிட்டீங்கனா உசுரோட வாழலாம்..” என்று எச்சரித்து விட்டு வெளியேறினார் நாகராஜன்.
 
 
*****
 
 
அன்று முழுக்க தாரக் வீட்டிற்கு வரவில்லை. இது சாரதாவை கவலையாக்கி இருக்க.. இரண்டு முறை அவனுக்கு அழைத்துப் பார்க்க.. அவனின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.
 
 
அதிலேயே தாரக் எங்குச் சென்று இருப்பான் என ஓரளவு புரிந்து கொண்டவர், கவலையோடு வாயிலை பார்த்தபடி அமர்ந்திருக்க.. அங்குத் தன் சக்கர நாற்காலியில் வந்தார் குமரேசன்.
 
 
“என்னாச்சு ஏன் இங்கே இப்படி உட்கார்ந்து இருக்கே..?” என்றவரை திரும்பிப் பார்த்து “தீபன் இன்னும் வீட்டுக்கு வரலை.. ஃபோன் செஞ்சாலும் எடுக்கலை..” என்றார் கவலையோடு சாரதா.
 
 
“அப்போ தம்பி வீட்டுக்கு தான் போயிருக்கும்..” என்று குமரேசன் சரியாகக் கணித்துக் கூறவும், “எனக்கும் அதுதாங்க தோணுது..” என்றவர், “எப்போ தான் இதெல்லாம் சரியாகுமோ..!” என்று ஒரு பெருமூச்சோடு சாரதா கூறவும் “எனக்கு இதெல்லாம் தேவையான தோணுது..” என்றார் குமரேசன்.
 
 
அதில் சிறு அதிர்வோடு திரும்பி அவரைப் பார்த்த சாரதா, “தேவையானா என்ன அர்த்தம்..?” என்று கேட்கவும், சற்று நேரம் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தவர், “இவ்வளவு எல்லாம் தீபன் தன்னையே கஷ்டப்படுத்திட்டு இப்படி ஒரு வேலை செய்யணுமான்னு தான்..” என மெல்லிய குரலில் இழுக்க.. “எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படிப் பேசினா எப்படி..?” என்றார் சாரதா.
 
 
“அதில்லை சாரா.. அந்தப் பொண்ணு அழுதுட்டே இருக்கறதை பார்த்தா பாவமா இருக்கு..” என்று வருத்தத்தோடு குமரேசன் சொல்லவும், “இந்தப் பொண்ணு மட்டும் தான் பாவமா..? நம்ம பொண்ணு பாவமில்லையா..? உங்க கண்ணு முன்னே நடந்ததெல்லாம் மறந்து போச்சா..?” என்ற சாரதாவுக்கு அன்றைய நாளின் நிகழ்வுகள் எல்லாம் கண் முன் விரிந்தது.
 
 
அதில் அதீத பதட்டமாகி, கை கால்கள் லேசாக உதறல் எடுக்கத் தொடங்கி சாரதாவுக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது. அதைக் கண்டு பதட்டமான குமரேசன், “இப்போ எதுக்கு நீ இவ்வளவு டென்ஷனாகறே..? அதையெல்லாம் மறந்து நீ கொஞ்சம் அமைதியா இரு.. எல்லாம் சீக்கிரம் சரியாயிடும்..” என்று ஆறுதல் படுத்த முயன்றார்.
 
 
அதற்குள் கண்ணீர் விட்டு அழத் தொடங்கியிருந்த சாரதா, “எப்படிங்க மறக்க முடியும்..? எப்படி என்னால் அமைதியாக முடியும்..? அந்த நாளை நினைச்சாலே உடல் மட்டுமில்லை என் உயிரும் சேர்ந்து பதறுது.. இப்படி ஒரு நாள் நம்ம வாழ்க்கையில்  வராமலே இருந்திருந்தா இன்னைக்கு எல்லாரும் எவ்வளவு சந்தோஷமா வாழ்ந்து இருப்போம்.. தீபன் இப்படியா வாழ்க்கையே வெறுத்து ஒரு நடைப்பிணமா வாழ்ந்துட்டு இருப்பான்.. நீங்களே யோசிச்சு பாருங்க..” எனத் தன் மன வலிகள் மீண்டும் கிளறி விடப்பட்டதில் அழுகையோடு சாரதா பேசிக் கொண்டிருக்க.. “அழாதே சாரா.. நான் ஏதோ மனம் தாங்காம பேசிட்டேன்..” என்றார் குமரேசன்.
 
 
எப்படியோ பேசி சாரதாவை ஒருவாறு சமாதானம் செய்து முடிப்பதற்குள் அரைமணி நேரம் கடந்திருந்தது. அதன் பின் மெதுவாகச் சாப்பிட வைத்து இரவு மருந்து கொடுத்து தூங்க செய்து விட்டு மீண்டும் வெளியில் தன் சக்கர நாற்காலியில் வந்து அமர்ந்திருந்த குமரேசனின் மனம் பழையதை எல்லாம் அசை போட்டதில் மேலும் கலங்கி போனது.
 
 
மறுநாள் காலை களைப்போடு, சோர்வான நடையில் வீட்டிற்குள் நுழைந்த தாரக்கை எதிர்கொள்வது போல் சாரதா வரவேற்பறையிலேயே அமர்ந்திருந்தார். “நைட்டெல்லாம் அங்கே இருந்தியா தீபா..?” என்று அவர் கேட்கவும், ஆமென அசைந்தது தாரக்கின் தலை.
 
 
சோர்ந்திருந்த உடலும், கலைந்திருந்த தலையும், கலங்கி சிவந்திருந்த அவன் விழிகளும் முகமும் தாரக்கின் மனநிலையை அவருக்குத் தெளிவாகப் புரிய வைக்க.. “எல்லாம் சரியாகிடும், இன்னும் கொஞ்ச நாள் தான்..” என்றார் சாரதா.
 
 
“இதையே தான் நான் எனக்கு ஆயிரம் முறை சொல்லிட்டு இருக்கேன்..” என்றவன் அப்படியே அவரின் மடியில் தலை சாய்த்து படுத்து விட, அவன் மனநிலைப் புரிந்தது போல் மெல்ல தலையைக் கோதிவிட்டார் சாரதா.
 
 
இந்தத் தலைக்கோதல் அவனுக்குத் தன் இழப்பை உணர்த்த.. மேலும் கலங்கி தவித்தது தார்க்கின் மனம். அடுத்தப் பல நிமிடங்களுக்கு இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.
 
 
அதன் பின் அலுவலகம் கிளம்பி சென்று விட்ட தாரக்கிற்கு நாகராஜின் நேற்றைய நடவடிக்கைகள் பற்றிய முழுத் தகவல் வந்து சேர்ந்திருந்தது. அதை இதழில் நெளிந்த ஓர் அலட்சிய புன்னகையோடு கேட்டுக் கொண்டவன், “மிஸ்டர் நாகராஜனுக்கு வலிக்குது போலேயே..! ஆனா இந்த வலி எல்லாம் போதாது, இன்னும் கொடுக்கணும்..” என்றவன் அடுத்து என்ன செய்யணும்னு நான் அப்புறம் சொல்றேன்..” என்று விட்டு அழைப்பை துண்டித்தான்.
 
 
இதையெல்லாம் கேட்ட பிறகு, நேற்று முதல் இருந்த மனநிலை தாரக்கிற்கு முற்றிலும் மாறிப் போனது. அதே மனநிலையோடு அன்றைய நாளை கழித்தவன், மாலை வீடு திரும்பியவுடன் நேராக சிந்துவை தான் காணச் சென்றான்.
 
 
அங்கு இருள் படிய தொடங்கி இருந்த மாலை நேரத்தில் அந்தச் சிட் அவுட்டின் கிரில்லை பிடித்தபடி சோகச் சித்திரமாக எங்கோ வெறித்துக் கொண்டு நின்றிருந்தாள் சிந்து.
 
 
ஒரு வேகத்தோடு உள்ளே நுழைந்தவனின் பார்வையில் இந்தக் காட்சி விழவும், பக்கவாட்டுத் தோற்றத்தில் அவளைக் கண்டவன் தன்னை மறந்து ஒரு நொடி அப்படியே நின்று விட்டான்.
 
 
கலைந்திருந்த அவளின் கூந்தல் காற்றில் அலை பாய்ந்து சிந்துவின் முகத்தில் உரசி விளையாடிக் கொண்டிருக்க.. கைகள் இறுக அந்தக் கிரில்லை பிடித்துக் கொண்டு இருந்தது.
 
 
பக்கத்தில் இருந்த சுவரில் லேசாக தலைச் சாய்த்து நின்று இருந்தவளையே சில நொடிகள் பார்த்தவன் தன்னை மறந்த ஒரு மோன நிலையில் அவளை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான் தாரக்.
 
 
சிந்து இன்னும் அறைக்குள் தாரக் நுழைந்ததைக் கவனித்திருக்கவில்லை. அவளின் கவனமும் இங்கு இல்லை.. நேற்றைய ஏமாற்றமும் இனி தன் வாழ்வு என்னாகுமோ என்ற கலக்கமும் அவளைத் தன்னை மறந்து நிற்க செய்திருந்ததில், அப்படியே அசையாமல் நின்று கொண்டிருந்தவளை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி, சிந்து எதிர்பார்க்காத தருணத்தில் பின்னால் இருந்து அவளை அணைத்திருந்தான் தாரக்.
 
 
இதில் திடுக்கிட்டு சிந்து தன் உணர்வு திரும்பவும் தாரக் அவளின் கழுத்தில் தன் முகத்தைப் பதிக்கவும் சரியாக இருந்தது. இதில் திகைத்து விலக முயன்றவளுக்கு அந்தச் சந்தர்ப்பத்தைக் கொடுக்காமல் அவள் கழுத்தில் புதைத்திருந்த தாரக்கின் இதழ்கள் மெல்ல ஊர்ந்து முன்னேறி காது மடலை தீண்டவும், சிந்துவினுள் அப்படி ஒரு அதிர்வு உண்டானது.
 
 
இத்தனை நாள் தாரக்கிடம் இருந்த அதிரடியோ, மூர்க்கமோ இன்றைய அணைப்பிலோ இதழ் தீண்டலிலோ துளியும் இல்லை. அத்தனை மென்மையோடு இருந்த அவனின் அணுகுமுறையில் அவள் உணர்ந்த வேறொரு உணர்வில் கேள்வியாகத் திரும்பி தார்க்கை பார்த்தாள் சிந்து

This post was modified 4 months ago 2 times by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 406
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ புது கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
MNM - 9
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 

This post was modified 9 months ago by Kavi Chandra
This post was modified 2 months ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 406
Topic starter  
 
 
நேசம் – 10
 
 
சிந்துவுக்குத் திடீரென வந்து இப்படிப் பின்னால் இருந்து தாரக் அணைத்ததே பெரும் அதிர்வு என்றால் அந்த அணைப்பில் இருந்த அழுத்தம் மற்றொரு வித அதிர்வை கொடுத்தது.
 
 
இதுவரை அவள் உணர்ந்த அழுத்தம் இது இல்லை. இதற்கு முன் இருந்த ஆத்திரமுமோ கோபமோ இதில் கொஞ்சமுமில்லை. மாறாக மென்மையான நேசம் இதில் வெளிப்படுவது போல் அவளுள் ஒரு எண்ணம்.
 
 
‘இப்படி இருக்க வாய்ப்பில்லை..!’ என சிந்துவுக்கு நன்றாகவே புரிந்தாலும் அவள் மனமும் உடலும் உணரும் ஒன்றை இல்லை என அவளாலேயே மறுக்க முடியவில்லை.
 
 
அதில் உண்டான நம்ப முடியாத திகைப்போடு சிந்து அசையாமல் நின்றிருக்கும் போதே, அவளின் கழுத்து வளைவில் புதைத்திருந்த தன் முகத்தை மெல்ல நகர்த்திச் சின்னச் சின்ன முத்தங்களிட்டவாறே அவளின் செவி மடலை நெருங்கினான் தாரக்.
 
 
இதெல்லாம் அவளுக்கு முற்றிலும் புதிது. ‘இத்தனை மென்மையாகத் தாரக்கினால் நடந்து கொள்ள முடியுமா..?’ என்ற திகைப்போடும் ‘இது என்ன புதுசா..?’ என்ற மலைப்போடும் சிந்து நின்றிருக்கும் போதே மெதுவான குரலில் அவன் எதையோ முணுமுணுப்பது சிந்துவுக்குக் கேட்டது.
 
 
ஆரம்பத்தில் அவளுக்கு தாரக் முணுமுணுப்பது என்னவெனப் புரியவில்லை. ஆனாலும் அந்தக் குரலில் இருந்த தவிப்பும் தன் காது மடலில் இதழ் பதித்து அவன் முணுமுணுத்துக் கொண்டிருந்த குரலும் சேர்ந்து அவளுள் ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
 
 
அவளை அணைத்திருந்த தன் கைகளில், அவன் கூட்டிக் கொண்டே சென்ற இறுக்கம் கண்டு அவள் குழம்பி நிற்கும் போதே தாரக்கின் அந்த மெல்லிய முணுமுணுப்பு சிந்துவுக்குத் தெளிவாகக் கேட்டது.
 
 
“நீ இல்லாம என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியாது.. ப்ளீஸ் என்னை விட்டு எங்கேயும் போயிடாதே..! என் கடைசி நாள் வரை நீ என் கூடவே இருக்கணும்.. நீ இல்லைனா நான் இல்லை..” என்று அவன் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தது தெளிவாகக் கேட்க.. அதிர்வில் விழிகள் விரிய அசைய கூட மறந்து நின்று விட்டாள் சிந்து.
 
 
இப்படி ஒரு வார்த்தையை தாரக்கிடம் இருந்து அவள் துளியும் எதிர்பார்த்து இருக்கவில்லை. தன் மேலான அவனின் வெறுப்பும் கோபமும் பற்றி நன்றாக அறிந்திருந்தவளுக்கு இப்படி ஒரு வார்த்தை அவனிடம் இருந்து வரும் என எப்படி நம்ப முடியும்..?
 
 
இதில் தன் காதில் விழுந்தது சரி தானா என்பது போல் அவள் அப்படியே அசையாமல் நின்றிருக்க.. மீண்டும் அவளின் சந்தேகத்தைத் தீர்ப்பது போல் அதே வார்த்தைகளைத் தன்னை மறந்து உச்சரித்துக் கொண்டிருந்தான் தாரக்.
 
 
இப்போது நடந்த அனைத்தையும் மனதிற்குள் ஓட்டிப் பார்த்தவளுக்கு எதுவோ புரிவது போல் இருக்க.. மெதுவாகப் பார்வையைத் திருப்பி அவனைப் பார்த்தாள் சிந்து. அவளின் அந்த அசைவிலேயே அதுவரை விழி மூடிக் கொண்டிருந்தவன் தன் மோன நிலை கலைந்து விழிகளைத் திறந்து பார்த்தான்.
 
 
இருவரின் முகங்களும் வெகு அருகில் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டிருக்க.. இருவரின் விழிகளும் சந்தித்துக் கொள்ள.. ஒரு நொடி சிந்துவின் விழிகளில் தெரிந்த கேள்வியில் சட்டென அவளிடம் இருந்து விலகினான் தாரக்.
 
 
அதே வேகத்தில் அங்கிருந்து நகர முயன்றவனை சிந்துவின் குரல் தடுத்து நிறுத்தியது. “நீங்க.. நீங்க என்னை.. காதலிச்சீங்களா..?” என்ற கேள்வியில் அப்படியே நின்றவன், பின் பதிலேதும் சொல்லாமல் சிந்துவை திரும்பியும் பார்க்காமல் மீண்டும் அங்கிருந்து நகர முயல.. “உங்ககிட்ட தான் கேட்கறேன் சொல்லுங்க.. நீங்க என்னைக் காதலிக்கறீங்களா..?” என்று வேகமாக அவன் பின்னே வந்தவாறே மீண்டும் கேட்டாள் சிந்து.
 
 
அதில் இவ்வளவு நேரம் அவள் முகத்தைப் பார்க்க விரும்பாமல் எதிலிருந்தோ தப்பிப்பது போல் அங்கிருந்து நகரவே முயன்று கொண்டிருந்தவன், சிறு கேலியோடு திரும்பி அவளைப் பார்த்தான்.
 
 
“லவ்வா..? நானா..? அதுவும் உன்னையா..?” என்று கூறும் போதே அவன் குரலில் இருந்த வெறுப்பும் கோபமும் தெளிவாக சிந்துவுக்குப் புரிந்தது. ‘ஆனால் சற்று முன் அவள் உணர்ந்தது என்ன..?’ என அவளால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.
 
 
“அப்.. அப்போ இதெல்லாம் என்ன..?” என்று தன்னையும் மீறி அவள் வார்த்தைகளிலேயே அவனிடம் கேட்டிருக்க.. அதற்குப் பதிலளிக்காமல் அவளை நக்கலாகப் பார்த்தவன் “நீ வேணும்னா உன் காலேஜ் பியூட்டியா இருக்கலாம்..! அதனால் உன் பின்னே நிறையப் பேர் சுத்தியும் இருக்கலாம்.. ஆனா அதுக்காக இந்த உலகத்தில் இருக்க எல்லா ஆண்களும் உன்னைக் காதலிப்பாங்கன்னு நினைக்கறதெல்லாம் ஓவர் கான்ஃபிடன்ட்.. அதிலேயும் நான்..!” என்று ஒருவித கேலி குரலில் கேட்டு இடைவெளி விட்டவன், “வாய்ப்பே இல்லை..” என்றிருந்தான் ஒருவித அழுத்தம் திருத்தமான குரலில் தாரக்.
 
 
அதில் அவனைக் குழப்பமாகப் பார்த்தவள், “அப்புறம் இது..! இப்.. இப்போ நீங்க சொன்னது..!” என்று எதையோ சிந்து சிறு தடுமாற்றத்தோடு கேட்கத் தொடங்கவும், “இங்கே பார், உன் பின்னே காதல்னு பைத்தியமா சுத்தின கேசவ், நீரஜ், ரகு போல என்னையும் நினைச்சு இருந்தா.. இப்போவே அதை அழிச்சுடு.. உன் இந்த அழகால் என்னைக் கொஞ்சமும் அசைக்க முடியாது.. அவங்களைப் போல உன் பின்னே சுத்தி க்யூவில் நிற்கும் டைப் நான் இல்லை.. உன் இந்தச் சீப் டிரிக்ஸ் எல்லாம் என்கிட்ட பலிக்காது.. வேற ஏதாவது டிரை செய்..” எனக் கேலியில் தொடங்கிக் கடினமான குரலில் முடித்தான் தாரக்.
 
 
இதில் உண்டான சிறு திகைப்போடு சிந்து நின்று இருக்கும் போதே, “உனக்கு ஞாபகம் இருக்கா நீ பைனல் இயர் படிக்கும் போது தொடர்ந்து தொல்லை கொடுத்து உன்னைக் தொட்டு பேசினதுக்காக ஒருத்தனை.. ஹ்ம்ம் அவன் பெயர் என்ன..? சரத்.. எஸ் சரத் இல்லை.. உங்க அண்ணன்.. அந்த மினி நாகராஜன் அருண்கிட்ட சொல்லி நல்லா அடி வாங்கிக் கொடுத்தே இல்லை.. அவனும் ஏதோ ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துப் பாவம் அந்தப் பையனை காலேஜில் வெச்சு புரட்டி எடுத்தானே..!” என்றவன், மீண்டும் ஒரு நக்கல் சிரிப்போடு அவளைப் பார்த்து “இதோ இப்போ நான் உன்னை உன் அனுமதியில்லாம தான் தினமும் தொட்டுட்டு இருக்கேன்.. எங்கே முடிஞ்சா உங்க அண்ணன் ஹ்ம்ம், ஏன் உங்க அப்பாகிட்ட கூடச் சொல்லி அடி வாங்கிக் கொடேன் பார்க்கலாம்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறி இருந்தான் தாரக்.
 
 
அதில் சிந்து அவள் கேட்க வந்ததையே மறந்து தாரக் சென்ற திசையையே அதிர்வோடு பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். நிஜமாகவே அவளுக்கு எதுவும் புரியவில்லை.
 
 
தன் கல்லூரி கால நிகழ்வுகள் முதல் அனைத்தையும் தாரக் தெரிந்து வைத்திருப்பது அவளுக்கு அத்தனை அதிர்வாக இருந்தது. இதில் பல விஷயங்கள் இன்று வரை அவள் வீட்டினருக்கே தெரியாது.
தன் பின்னே சுற்றியவர்களின் பெயர் முதற்கொண்டு தாரக் சொல்லுவதை வைத்துப் பார்த்தால் பல வருடங்களாக அவன் தன்னைக் கண்காணித்து இருப்பதும் புரிந்தது. இது ஒரு வகையில் சிந்துவுக்குப் பயத்தையும் மற்றொரு வகையில் குழப்பத்தையும் கொடுக்க.. அப்படியே செய்வதறியாது நின்றிருந்தாள் சிந்து.
 
 
நிஜமாவே அவளுக்கு தாரக்கை புரிந்து கொள்ள முடியவில்லை இந்தக் கடத்தல், கல்யாணம், தன்னிடம் அவன் நடந்து கொண்டு கொள்ளும் முறை என எதற்குமே காரணம் புரியாமல் இத்தனை நாள் குழம்பிக் கொண்டிருந்தவளை மேலும் இன்றைய தாரக்கின் பேச்சும் செயலும் இரு வேறு வகையில் குழப்பி விட்டுச் இருந்தது.
 
 
அன்று அருண் திடீரெனக் கல்லூரிக்கு வந்த போது நடந்த சம்பவம் அது. சிந்துவே எதிர்பாராமல் நடந்த ஒன்று. அவள் அருணிடம் சொல்லி எல்லாம் அன்று அடிதடி நடந்திருக்கவில்லை. நேரில் தன் தங்கையிடம் ஒருவன் தவறாக நடப்பதை கண்ட ஆத்திரத்தில் அருண் அடித்திருந்தான்.
 
 
அதன் பின் அது ஒரு பிரச்சனையாகி, நாகராஜன் தன் செல்வாக்கினால் அதை ஒன்றுமில்லமால் செய்தது எல்லாம் தனிக்கதை. ஆனால் இப்போது வரை அருணுக்கு கூட அடித்தவனின் பெயர் தெரியாது.
 
 
இதையெல்லாம் நேரில் பார்த்தது போல் தாரக் பேசி செல்வது வேறு சிந்துவை குழப்பமடையச் செய்ய.. தன் தலையை இரு கைகளாலும் தாங்கிப் பிடித்தபடி அங்கேயே மடங்கி அமர்ந்தாள் சிந்து.
 
 
இப்போது தாரக் பேசி சென்ற எல்லாம் ஒரே சமயத்தில் நடந்த விஷயங்கள் இல்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தில் நடந்தவை. இவை அத்தனையும் தாரக்கிற்குத் தெரிந்திருக்கிறது என்றால் பல காலமாக அவன் தன்னைப் பின் தொடர்ந்து கண்காணித்து இருக்கிறான் என தெளிவாகப் புரிகிறது.
 
 
ஒருவேளை தன் மீது அதீத காதல் இருந்து அதனால் தன்னைப் பின் தொடர்ந்து இதையெல்லாம் அறிந்து கொண்டிருந்து இப்போது நடப்பதெல்லாம் அதன் பின்னான நிகழ்வுகள் என்றால் கூட ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகிறது.
 
 
ஆனால் அதுவுமில்லை எனும் போது தன்னை இத்தனை வருடங்களாக எதற்காகப் பின் தொடர்ந்து இருக்க வேண்டும்..? ஒருமுறை கூடத் தாரக்கை பார்த்தது போல் அவளுக்கு நினைவே இல்லை. அப்போது தாரக் தன் எதிரில் வரவே இல்லையோ என்ற சந்தேகமும் அவளுக்கு உண்டு.
 
 
இத்தனை விவரங்களைத் தெரிந்து வைத்து இருக்கும் ஒருவன் தன் மேல் காதலோடு இருந்தால் எதிரே வராமல் இருக்க வாய்ப்பே இல்லை என்றும் புரிந்தது.
 
 
தன் காதலை சொல்லி, அதை ஒருவேளை நான் மறுத்து இருந்தால் கூடச் சிலர் அதைப் புரிந்துக் கொள்ளாமலும், தன் காதலை எப்படி மறுக்கலாம் என்ற கோபத்திலும் இப்படி அதிரடியாகத் திருமண நேரத்தில் நுழைந்து பிரச்சனை செய்ய வாய்ப்பு உள்ளது.
 
 
ஆனால் இங்கு அப்படி எதுவுமே நடந்திருக்கவில்லை. அதிலும் தாரக் தன்னை விரும்பி இருக்க வாய்ப்பே இல்லை எனும் போது தன் ஒவ்வொரு செயலையும் தெரிந்து வைத்திருப்பது எதற்காக..? எனப் பல கேள்விகள் அவளுள் உண்டானது.
 
 
எவ்வளவு யோசித்தும் தாரக் தன்னை விரும்புவதாக அவளால் எண்ணவே முடியவில்லை. இது நிச்சயமா காதல் இல்லை.. அப்போ இது என்ன..? எதுக்காக..?’ என்று எண்ணம் செல்ல.. சற்று முன்னான தாரக்கின் செயல்களும் அந்த வார்த்தைகளும் மேலும் அவளைக் குழப்பியது.
 
 
இதில் தலையே வெடித்து விடும் போல் இருக்க.. தினமும் இதையே யோசித்துக் குழம்பி இருந்த மனம் இன்று மேலும் சோர்ந்து போக.. அப்படியே தலையைப் பிடித்தப்படி தரையில் சுருண்டுக் கொண்டாள் சிந்து.
 
 
******
 
 
அதே நேரம் தன் அறையில் இருந்த தாரக்கிற்கு இன்ஸ்பெக்டர் ராகவனிடம் இருந்து அழைப்பு வந்தது. அதை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல் இதழின் ஓரம் வழிந்த ஒரு புன்னகையோடு அழைப்பை எடுத்திருந்தவன் “எஸ் ராகவ்..” எனவும், “உன் பிளான் சக்சஸ்..” என்றான் சுருக்கமாக ராகவ்.
 
 
“ஹ்ம்ம் எதிர்பார்த்தேன்..” என்று தாரக் சொல்லவும், “நீ சொல்லும் போது கூட நான் இவ்வளவு சீக்கிரம் இதெல்லாம் நடக்கும்னு நினைக்கலை.. பட் மிஸ்டர் நாகராஜனை நீ நல்லாவே புரிஞ்சு வெச்சு இருக்கே..” என்று சிறு நக்கலோடு கூறினான் ராகவ்.
 
 
“ஹாஹாஹா.. இல்லையா பின்னே மாமனாராச்சே சும்மாவா.. அவர் யார்..? எப்படிப்பட்டவர்னு தெரிஞ்சா தானே என் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது..” என்றவனின் குரலில் இருந்த கேலியில் அந்தப் பக்கமும் சிரித்த ராகவ், “என்னவோ செய்யறே.. ஆனா என்னன்னு தான் புரியலை, சரி விடு.. இப்போ அந்த கிரியை என்ன செய்யலாம்..?” என்றான் ராகவ்.
 
 
“அவனை வெச்சு என்ன ஊறுகாயா போட முடியும்..? நாகராஜனே அவனை வெச்சு எதுவும் செய்ய முடியாதுன்னு தானே தூக்கி தூர வீசிட்டான்.. இனி அவன் நமக்கு எதுக்கு..? பாவம் எதுக்கு அவன் இன்னும் அடியும் உதையும் வாங்கணும்னு தான் அங்கிருந்து வெளியே கூட்டிட்டு வர சொன்னேன்.. எனக்கு அவன் செஞ்ச துரோகத்துக்கு இத்தனை நாள் அவன் வாங்கினதே போதும், அப்படியே விட்டுடு..” என்றான் தாரக்.
 
 
“ஆனா அவன் வாயை திறந்தா..? எங்கேயாவது போய்க் கேஸ் கொடுத்தா..?” என்று ராகவ் கேட்கவும், மீண்டும் பலமாகச் சிரித்திருந்த தாரக் “அவ்வளவு தைரியம் எல்லாம் அவனுக்குக் கிடையாது ராகவ்.. இந்த யுவன் விஷயத்தில் கூட ஆரம்பத்தில் பயந்து முடியாதுன்னு தான் பின் வாங்கி இருக்கான்.. ஆனா யுவன் கொடுத்த பெரிய தொகை அவனைக் கொஞ்சம் தடுமாற வெச்சுடுச்சுப் பாவம், அதுக்கான தண்டனையையும் அவனுக்குக் கொடுத்தாச்சு, விட்டுடுவோம்..” என்றிருந்தான் தாரக்.
 
 
“ஆனாலும் உனக்கு ரொம்பப் பெரிய மனசு தான்பா..” என்ற கேலி செய்தான் ராகவ். “ஹாஹா..” என்று சிரித்த தாரக், “இப்போ எங்கே இருக்காங்க இரண்டு பேரும்..?” என்றான். “அவங்க இப்போ இருக்க நிலைமைக்கு வீட்டுக்கா அனுப்ப முடியும்..? ஹாஸ்பிடலில் தான் சேர்த்திருக்கோம்..” என்றான் ராகவ்.
 
 
“சுயநினைவு இருக்கா..?” என்று தாரக் கேட்க.. “அதெல்லாம் இருக்கு, ஆனா இரண்டு பேருமே வாயைத் திறக்கலை.. என்ன கேட்டாலும் பதில் சொல்லலை..” என்ற ராகவ். “ஆனா, இது நாம எதிர்பார்த்தது தான்..” என்றும் சேர்த்துக் கூறினான்.
 
 
“ஆமா வாங்கின அடி ஞாபகத்தில் இருக்கும் இல்லை..” என்ற தாரக், “சரி நீயும் அவங்களை ரொம்பத் தொந்தரவு கொடுக்காதே..” என்று தாரக் சொல்லவும், “அவ்வளவு தான்.. அவங்க வீட்டில் கொடுத்த கம்ப்ளைன்டையும் வாபஸ் வாங்கிக்கறேன்னு சொல்லி இருக்காங்க..” என்றான் ராகவ்.
 
 
அதன் பின் சிறிது நேரம் ராகவ்வோடு பேசிக் கொண்டிருந்து விட்டு அழைப்பை துண்டித்தான் தாரக். அடுத்தடுத்து அவன் திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடந்து கொண்டிருப்பதை நினைக்கும் போது தாரக்கின் மனம் கொஞ்சம் அமைதியானது.
 
 
இன்னும் சில படிகளே முன்னேற வேண்டும், அதுவும் சரியாக நடந்து விட்டால் எல்லாம் இனிதே முடிவுக்கு வந்து விடும்.. இதற்காக எத்தனை வருடம் காத்திருக்க வேண்டி வந்தது என்று எண்ணியவன் விழி மூடி தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.
 
 
*******
 
 
இதற்கு நேர் மாறாகத் தன் அறைக்குள் குட்டி போட்ட பூனை போல் விழிகள் சிவக்க முழுப் போதையில் நடந்து கொண்டிருந்தார் நாகராஜன். தொலைத்த இடத்தை விட்டு வேறு எங்கோ தேடிக் கொண்டிருந்தது போல் தன் மகளைச் சந்தேகப்பட மறந்து, மற்ற இடங்களில் எல்லாம் சுற்றி அலைந்ததை எண்ணி அவருக்கு அவமானமாக இருந்தது.
 
 
‘எப்படி அவளைச் சந்தேகப்பட மறந்தேன்..?’ என அதைப் பற்றி என்று மட்டுமே மீண்டும் மீண்டும் யோசித்துக் கொண்டிருந்தார் நாகராஜன். ஆனால் அதற்கு அவருக்கு விடை தான் கிடைக்கவில்லை.
 
 
‘அவ்வளவு அழகா இத்தனை வருஷமா நடிச்சு என்னை ஏமாத்தி இருக்கா.. நான் சொன்ன பேச்சை எல்லாம் கேட்கறது போலவும், நான் கிழிச்ச கோட்டை தாண்டாது போலவும் என்ன அழகா நாடகம் ஆடி இருக்கா..? ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து பேசி இருந்தா கூடக் கொஞ்சம் சந்தேகம் வந்திருக்கும்.. ஆனா அதையும் செய்யாம, மறுவார்த்தை பேசாம நடிச்சு தன் காரியத்தைச் சாதிச்சுட்டா..’ என்று எண்ணிக் கொண்டிருந்தவர், தன் சிந்தனையைக் கலைப்பது போல் “அண்ணே..” எனத் தன் முன் வந்து நின்ற முத்துவை எரிச்சலோடு பார்த்து “என்ன..?” என்றார் நாகராஜன்.
 
 
“ண்ணே.. அந்த சபரி வந்து இருக்கான்..” என்றான் சிறு தயக்கத்தோடான குரலில் முத்து. “எந்த சபரி..?” என்று புரியாமல் எரிச்சலோடு கேட்டவர், அப்போதும் சிறிய தயக்கத்தோடு “அதான் ண்ணே அந்தத் தென்னந்தோப்பை குத்தகைக்கு எடுத்து இருக்கானே தவசி, அவன் மகன் சபரி..” என்று முத்து எடுத்துக் கொடுக்கவும், “அவனா..? அந்தக் குடிகாரன் இங்கே எதுக்கு வந்தான்..?” என்றார் வெறுப்போடு நாகராஜன்.
 
 
“அது.. அது அண்ணே.. அவன் உங்களைத் தான்..” என்று முத்து இழுக்கவும், “என்னன்னு சொல்லி தொலை..” என மீண்டும் கோபத்தில் கத்தினார் நாகராஜன்.
 
 
“அது நாம அந்தப் போட்டோவை வெச்சு தேடினோம் இல்லை அண்ணே..?” என்றான் முத்து. “எந்தப் போட்டோ..?” என்று முழுபோதையில் இருந்தவருக்கு உடனே முத்து சொல்ல வருவதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
 
 
“அதான் ண்ணே நம்ம வீட்டு பாப்பாவை தூக்கிட்டு போனானே..! அவன் போட்டோ..” என்று முத்து தொடங்கவும், “ஏன்டா நானே அதை மறக்க தான் குடிச்சுட்டு இருக்கேன்.. நீ வந்து அதையே சொல்லிட்டு இருக்கே.. அவ தான் நானே திட்டம் போட்டு தான் அவன் கூடப் போனேன்னு சொல்லிட்டாளே.. இன்னும் என்ன..?” என்று சிடுசிடுத்தார் நாகராஜன்.
 
 
“அதில்லை ண்ணே.. ஆரம்பத்தில் அவனைப் பத்தி தெரிஞ்சா சொல்லுங்கன்னு அவன் போட்டோவை வெச்சு தேடிட்டு இருந்தோம் இல்லை, அந்தப் போட்டோவை தான் இப்போ எடுத்துட்டு வந்து இருக்கான் சபரி..” என்றான் முத்து.
 
 
“சரி, இனி அதை வெச்சு நாம என்ன செய்ய..?” என்று நாகராஜன் சிடுசிடுக்கவும், “இல்லை ண்ணே அவன் வேற என்னமோ சொல்றான்..” என்றான் முத்து. அதில் புரியாமல் முத்துவை பார்த்து “ஏன் என்னவாம்..?” என்றார் நாகராஜன்.
 
 
“அவன் அந்தப் போட்டோவில் இருக்கறவனைப் பார்த்து இருக்கானாம்.. என்கிட்ட தான் உங்க வீட்டுக்கு போக வழி கேட்டார், நான் தான் வழி சொன்னேன்னு சொல்றான்..” என்று முத்து தொடங்கவும், “ஏன்டா அவன் தான் குடிச்சிட்டு எதையோ உளறிட்டு இருக்கான்னா, நீயும் அதைக் கேட்டுட்டு இங்கே வந்து என் நேரத்தை வீணாக்கிட்டு இருக்கே.. அது தான் நான் பெத்து வெச்ச ஓடு** அவளே தான் அவனை வர வெச்சு கிளம்பி போனேன்னு சொல்லிட்டாளே.. இதுக்குப் பிறகும் வழி வேற இவன்கிட்ட கேட்டானாமா..? ஒழுங்கா அவனை வீட்டுக்குப் போகச் சொல்லு, குடிக்கக் காசு இல்லைன்னு நீங்க வந்து பொய் சொல்லிட்டு நிற்கறான் போல..” என்றார் நாகராஜன்.
 
 
“அது இல்லை ண்ணே..” என்று அப்போதும் முத்து தயங்கி நிற்க.. “என்னதான்டா உன் பிரச்சனை..? சொல்லி தொலை..” என எரிச்சலில் படபடத்தார் நாகராஜன்.
 
 
“அண்ணே அவன் சொல்றது..” என்று தொடங்கி விட்டுப் பின் தயங்கி நாகராஜன் முகம் பார்த்து நிறுத்தினான் முத்து. “இப்போ நீ ஏதாவது சொல்லணும்னா சொல்லிட்டுக் கிளம்பு.. ஏற்கனவே கொலைவெறியில் குடிச்சுட்டு இருக்கேன், இதில் நிம்மதியா குடிக்கக் கூட விடாம வந்து தொல்லை கொடுத்துட்டு இருந்தேன்னு வெச்சுக்கோ.. இன்னைக்கு எவன் மேல இருக்கக் கோவத்துக்கோ நீ பலியாகிடுவே பார்த்துக்கோ..” என்றார் நாகராஜன்.
 
 
“அண்ணே சபரிகிட்ட அந்தப் பையன் வந்து வழி கேட்டது இப்போ இல்லை.. எட்டு வருஷத்துக்கு முன்னேயாம்..” என்று முத்துச் சட்டெனச் சொல்லிவிடவும், “என்னது..?” என்றார் ஒன்றும் புரியாமல் நாகராஜன்.
 
 
“அப்படித்தான் சொல்றான்..” என்று முத்து தொடங்கவும், “நான் தான் சொன்னேனே அவன் போதையில் இங்கே வந்து உளறிட்டு இருக்கான், அடிச்சு விரட்டி விடு அவனை..” என்றார் நாகராஜன்.
 
 
“ஆனா அண்ணே..” என்று அப்போதும் முத்து தயங்கவும், வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத சொற்களால் முத்துவை அர்ச்சித்து முடித்தவர் “என்ன தான்டா உன் பிரச்சனை..? இன்னைக்கு என் நிம்மதியை கெடுக்கணும்னு எல்லாரும் முடிவு செஞ்சு வந்து இருக்கீங்களா..?” என்று தன் கையில் இருந்த மது நிறைந்த கண்ணாடி கோப்பையை எதிரில் இருந்த சுவரில் தூக்கி அடித்து உடைத்து விட்டு கேட்டார் நாகராஜன்.
 
 
அதிலேயே அளவுக்கு மீறி நாகராஜனின் பொறுமையைச் சோதித்து விட்டதைப் புரிந்து கொண்ட முத்து, “அவன் சொல்றதை எல்லாம் வெச்சு பார்த்தா அவன் பொய் சொல்றது மாதிரி தெரியலை ண்ணே..” என்றான் முத்து.
 
 
“அப்படி என்ன தான் சொல்லிட்டான் அவன்..? எங்கே சொல்லு கேட்போம்..” என நாகராஜன் கேட்கவும், “எட்டு வருஷத்துக்கு முன்னே இங்கே அவன் நம்ம வீட்டை தேடி, அன்னைக்கு நைட்டு வந்தப்போ சபரிகிட்ட தான் வீட்டுக்கு வழி கேட்டிருக்கான்.. இவன் தான் வழி சொல்லி அனுப்பினதா சொல்றான்..” எனச் சொல்லவும், “எட்டு வருஷத்துக்கு முன்னே அவனுக்கு இங்கே என்னடா வேலை..?” என்றார் அப்போதும் புரியாமல் நாகராஜன்.
 
 
“அண்ணே உங்களுக்கு இன்னுமா புரியலை..?” என்ற முத்து எதையோ மெல்லிய குரலில் அக்கம் பக்கம் பார்த்தப்படியே சொல்லி முடிக்கவும், “என்னது..?” என்றார் திகைப்போடு நாகராஜன்.
 
 
‘ஆமா அண்ணே.. இவன் சொல்றதை எல்லாம் வெச்சு பார்த்தா.. அப்போ நடந்தது தான்..” என்றான் மெல்லிய குரலில் முத்து. “நல்லா தெரியுமா உனக்கு..?” என்று முழுப் போதையும் இறங்கி இருக்க.. வேர்த்து போன முகத்தைத் துடைத்தப்படியே கேட்டார் நாகராஜன்.
 
 
“ஆமா ண்ணே.. எனக்கு ஆரம்பத்திலேயே இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.. அவன் பெயரும் தான்.. அது ஏன்னு இப்போ புரியுது..” என்றான் முத்து.
 
 
“இதை முதலிலேயே சொல்றதுக்கு என்னடா..?” என எரிந்து விழுந்தார் நாகராஜன். “அது எட்டு வருஷம் ஆகிடுச்சு.. அதிலேயும் அப்போ நான் அவனை ஒரே முறை இருட்டில் தான் பார்த்தேன். அதான் சட்டுன்னு எதையும் கண்டுப்பிடிக்க முடியலை..” என்றான் முத்து.
 
 
ஆனால் அதைக் கவனிக்கும் மனநிலையில் இல்லாத நாகராஜன், “அவன்.. அவன் எப்படி சிந்து கூட..?” என்றார் பதட்டமாக. “அதான் ண்ணே எனக்கும் புரியலை..” என்றான் முத்து.

This post was modified 4 months ago 2 times by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 406
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ புது கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
MNM - 10 & 11
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 

This post was modified 4 months ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 406
Topic starter  
 
 
நேசம் – 11
 
 
நாகராஜனின் எதிரே செல்லவே பயந்து விஷ்வாவின் அறையில் சுருண்டு படுத்திருந்தார் சுஜாதா. அழுதழுது அவரின் கண்ணீரே வற்றிவிடும் நிலைக்கு வந்திருந்தது.
 
 
விஷ்வாவினால் அவரைத் தேற்றவே முடியவில்லை. எத்தனையோ முயன்று பார்த்து செய்வதறியாது அமர்ந்திருந்தான் விஷ்வா.
 
 
நாகராஜன் அடித்திருந்ததில் உண்டான வலியும் வீக்கமும் ஒருபுறம் அவரைத் துடிக்கச் செய்து கொண்டிருக்க.. மற்றொருபுறம் தன் மகளின் நிலையை எண்ணி துடித்துக் கொண்டிருந்தார் சுஜாதா.
ஆரம்பம் முதலே சிந்துவுக்கு வேறு ஏதோ பெரும் பிரச்சனை என அவருக்குத் தெளிவாகப் புரிந்து இருந்தும் அதைத் தன் வீட்டினரிடம் சொல்லி மகளைக் காக்கும் முயற்சியில் அவரால் இறங்க முடியவில்லை. ஏனெனில் இங்கு நாகராஜன் பேச்சை மீறி எதுவும் நடக்காது.
 
 
வீட்டுப் பெண்கள் சொல்லும் எதையும் கேட்கும் எண்ணம் நாகராஜனுக்கு எப்போதுமே இருந்ததில்லை. இப்போதும் அப்படியே தாரக்கின் மீதே அவரின் கவனம் முழுக்க இருக்க.. அவனைத் தேடி அலைந்து கொண்டிருந்தவருக்கு, தன் மகளைப் பற்றிய அக்கறை துளியும் இல்லை என்று தெளிவாகத் தெரிந்த பின் என்ன செய்ய முடியும் என்பது போல் தான் இருந்தது சுஜாதாவின் நிலை.
 
 
‘தன் மகனாவது முன் நின்று தங்கையின் நிலையை அறிந்து காப்பாற்றி விடமாட்டானா..?’ என்ற ஏக்கம் அவரின் மனம் முழுக்க இருந்தாலும் அப்பனுக்கு மகன் தப்பாமல் பிறந்திருப்பதை உணர்ந்திருந்தவர் அருணிடம் கூட எதையும் பேசவில்லை.
 
 
இப்போது அவரின் சந்தேகம் உண்மை என்பது போல் சிந்து அலைபேசியில் பேசியிருந்த வார்த்தைகள் அவரை நிம்மதி இழக்க செய்து கொண்டிருந்தது.
 
 
‘எங்கே யாரின் பிடியில் எப்படித் தன் ஒரே மகள் சிக்கித் தவிக்கிறாளோ..!’ என்ற கவலையே அவரைத் துடிக்கச் செய்து கொண்டிருக்க.. அதை உணர்ந்தது போல் “நாம வேணும்னா போலீஸ்கிட்ட போயிடலாமா பெரியம்மா..?” என்றிருந்தான் விஷ்வா.
 
 
அதில் அவனை விரக்தியாக விழிகளை உயர்த்திப் பார்த்தவர், “போய் என்ன செய்ய முடியும்..? நம்மால் எதுவுமே செய்ய முடியாது, உங்க பெரியப்பாவை மீறி எதுவுமே செய்ய முடியாது..” என்றிருந்தார் வெற்றுக் குரலில் சுஜாதா.
 
 
“முயற்சியே செஞ்சு பார்க்காம எப்படி பெரியம்மா அப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க..? நாம ஒருமுறை முயற்சி செஞ்சு பார்ப்போமே..” என்றான் விஷ்வா.
 
 
“இத்தனை வருஷத்துதில் நான் முயற்சி செஞ்சுருக்க மாட்டேன்னு உனக்குத் தோணுதா..?” என்ற சுஜாதாவின் கேள்விக்கு விஷ்வாவிடம் பதில் இல்லை. ஆனால் சிந்துவின் நிலையை எண்ணி அவர் துன்பப்படுவதைப் பார்த்தவன் ஏதாவது பேச வேண்டுமே என்றே அவருக்கு ஆறுதல் சொல்லியிருந்தான்.
 
 
அவனுக்குமே இந்த ஊரில் நாகராஜனை எதிர்த்து ஒரு துரும்பையும் இங்கு அசைக்க முடியாது என நன்றாகவே புரிந்திருந்தது. அவனின் அமைதியை கண்டு தானாகவே சுஜாதா, “நானும் எல்லா முயற்சியும் செஞ்சு பார்த்து, இதெல்லாம் எதுவும் இங்கே வேலைக்கு ஆகாதுன்னு தெரிஞ்சு தான் அப்புறம் வேறு எதுவும் செய்யாம இங்கே இப்படியே இந்த அடி உதைகளுக்குப் பழகிட்டேன்..” என்றிருந்தார் சுஜாதா.
 
 
இதில் அமைதியான விஷ்வா “இப்போ மட்டும் அப்பா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் இல்லை பெரியம்மா..” என்று கவலை குரலில் கேட்கவும், அவனை விழிகளில் தோன்றிய சிறு விரக்தியோடு நிமிர்ந்து பார்த்தவர் பதிலேதும் பேசவில்லை.
 
 
சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்திருந்தவனுக்கு கதிரவன் ஒருவேளை கதாநாயகனாக மனதில் பதிந்து போயிருக்கலாம். ஆனால் அவரும் நாகராஜனுக்குக் கொஞ்சமும் குறையாத அளவிலான ஒரு அரக்கனே என அவர்களோடு வாழ்ந்து பார்த்திருந்த சுஜாதாவிற்குத் தெரியுமே..! அதைச் சொல்லி இந்தச் சின்னப் பிள்ளையின் மனதை உடைக்க மனம் இல்லாமல் அமைதியாகி போனார் சுஜாதா.
 
 
தன்வினை தன்னைச் சுடும் என்பார்களே அப்படி ஒரு நிலையில் தான் விஷ்வாவின் தந்தை கதிரவனின் உயிரும் பிரிந்திருந்தது. ஆனால் அப்போது விஷ்வாவுக்கு எட்டு வயது என்பதால் அதை எல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் அவன் இல்லை.
 
 
தன் தந்தை சிறுவயதிலேயே இறந்தது மட்டுமே விஷ்வாவுக்குத் தெரியும் அதில் ஒருவேளை அவர் இருந்திருந்தால் இதைச் செய்திருக்கலாம், அதை மாற்றி இருக்கலாம் என்று கற்பனையில் தனக்குள் ஒரு உலகத்தை உருவாக்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தான் விஷ்வா.
 
 
அதைக் கலைக்க விரும்பாத சுஜாதாவும் பெரிதாக எந்த விளக்கமும் அவனுக்குச் சொல்வதில்லை. கற்பனையிலாவது அவன் விருப்பப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொள்ளட்டும் என்ற எண்ணம் தான் சுஜாதாவுக்கு இருந்தது.
 
 
சிந்து மட்டும் அவ்வப்போது விஷ்வா தன் சித்தப்பா பற்றிய பேச்சை தொடங்கும் போதெல்லாம் சுஜாதா அமைதியாகி போவதை கவனித்து ஒருமுறை தனிமையில் அவரிடம் பேசி சில விஷயங்களை அறிந்திருந்தாள்.
 
 
அப்போதும் கூட உடனே சுஜாதா அனைத்தையும் சொல்லிவிடவில்லை. முதலில் அதெல்லாம் ஒண்ணுமில்லை என மறுக்கத்தான் பார்த்தார். ஆனால் தன் அன்னையை நன்றாகப் புரிந்து வைத்திருந்த சிந்து கேட்டிருந்த விதத்தில் முழுமையாக இல்லை என்றாலும் அவரும் நாகராஜனுக்குக் கொஞ்சமும் குறைந்தவர் இல்லை என்று மட்டும் மேலோட்டமாகக் கூறியிருந்தார் சுஜாதா.
 
 
அதில் சிந்துவுக்கு ஓரளவு தன் தந்தையைப் பற்றியும் சித்தப்பாவைப் பற்றியும் தெரியும். இப்போது இதை எல்லாம் எண்ணிய சுஜாதா அமைதியாக இருக்க.. அப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என சுஜாதாவும் எண்ணுவதாக நினைத்துக் கொண்டான் விஷ்வா.
 
 
அதே நேரம் அந்த அறைக்குள் வந்த அருண், விஷ்வாவை முறைத்துக் கொண்டே “உனக்கு இதெல்லாம் முன்னையே தெரியுமாடா..?” என்றான்.
 
 
அதில் லேசான பதட்டத்தோடு எழுந்து நின்றிருந்த விஷ்வா “எ.. எதைப் ப.. பத்தி கேட்கறீங்க அண்ணா..?” என்று மெல்லிய குரலில் தடுமாற்றத்தோடு பேசவும், “அடச்சீ.. முதலில் இப்படிப் பேசும் போதே வாயில் தந்தி அடிக்கறதை நிறுத்து.. உனக்கு சிந்து காதலிக்கும் விஷயம் முன்னேயே தெரியுமா..?” என்றான் அருண்.
 
 
“இல்லை அண்ணா, எனக்கு அப்படி எதுவும் தெரியாது..” என்று அவசரமாக விஷ்வா கூறவும், “அவ ஊருக்கு வந்தா நாள் முழுக்க அவ கூடவே தானே இருப்பே.. அப்புறம் எப்படி உனக்குத் தெரியாம போச்சு..?” என்றான் நம்பாமல் அருண்.
 
 
“அப்படி ஏதாவது இருந்தா தானே அவனுக்குத் தெரியும்..!” என்று சுஜாதா கூறவும், அவரைத் திரும்பி முறைத்தவன் “நீங்க சும்மா இருங்க, அவளைச் செல்லம் கொடுத்து கெடுத்து வெச்சதே நீங்க தான்..” என்றான் அருண்.
 
 
“உன்னை எப்படி வளர்த்தேனோ அப்படித்தான் அவளையும் வளர்த்தேன்..” என்றார் சுஜாதா. “அம்மா..” என்று அருண் கோபமாக இடையிடவும், “உன் கூடப் பிறந்தவத் தப்புச் செய்ய மாட்டான்னு கூட உனக்குப் புரியலை இல்லை..” என்றார் சுஜாதா.
 
 
“இப்படியே இன்னும் எவ்வளவு நாளைக்கு ம்மா அவ செஞ்ச தப்பை மூடி மறைக்கப் போறீங்க..? நான் தான் செஞ்சேன்னு அவளே போன் செஞ்சு ஊர் முன்னே சொல்லியாச்சு, இப்போவும் நீங்க நம்ப மாட்டீங்க இல்லையா..? அவளா நேரா வந்து சொன்னா தான் நம்புவீங்களா..?” என்றான் அருண்.
 
 
“இல்லை அப்போவும் நான் நம்ப மாட்டேன்.. யார் சொல்லி எதுக்காகப் பயந்து அவ இங்கே வந்து இப்படிப் பேசறான்னு தான் யோசிப்பேன்..” என்றார் சுஜாதா. அதில் அவரை முறைத்து விட்டு அந்த அறையில் இருந்து வேகமாக வெளியேறினான் அருண்.
 
 
“அப்போ நீங்க சிந்து அக்கா சொன்னதை நம்பலையா பெரியம்மா..?” என்றான் விஷ்வா. “ஏன் நீ நம்பறியா..?” என்று திரும்ப சுஜாதா கேட்கவும், “இல்லவே இல்லை.. அக்கா அப்படிச் செய்யற ஆளே இல்லை, என்னைப் போல நீங்களும் நம்பலைன்னு நினைக்கும் போது ரொம்பச் சந்தோஷமா இருக்கு.. எப்படித் தான் பெரியப்பா உடனே நம்பினாங்களோ எனக்குத் தெரியலை.. அண்ணாவும் நம்பி இருக்கார் பாருங்க..” என்றான் விஷ்வா.
 
 
“வீட்டு ஆட்கள் மேலே அவங்களுக்கு இருக்க நம்பிக்கை அவ்வளவு தான் விஷ்வா..” என்றதோடு சுஜாதா முடித்துக் கொள்ள.. அதன் பின் விஷ்வாவும் வேறு எதுவும் பேசவில்லை.
 
 
*****
 
 
முத்து சொன்னதை எல்லாம் கேட்டு குழப்பமான நாகராஜன் வேகமாக வெளியில் செல்லவும், அவரை சபரி இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான் முத்து.
 
 
அங்கு முற்றத்தில் இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த சபரி, அப்படியே 90 டிகிரி கோணத்தில் சாய்ந்து அமர்ந்த நிலையிலேயே தலை மட்டும் தரையில் முட்டிக் கொண்டிருக்குமாறு சரிந்திருந்தான்.
 
 
அவனை அந்த நிலையில் கண்ட நாகராஜன் “இவன் என்னவோ நமக்கு முக்கியமான தகவல் சொல்ல வந்ததா சொன்னே.. ஆனா இவனைப் பார்த்தா தலையாலேயே தரையில் ஏதோ புதையல் எடுத்துட்டு இருக்கறது போல இல்லை இருக்கு..” என்றார் எரிச்சலோடு நாகராஜ்.
 
 
“இல்லை ண்ணே இதோ எழுப்பறேன்..” என்று சரிந்திருந்த சபரியின் தலையை நிமிர்த்தித் தூணில் சாய்த்த முத்து “ஏய் சபரி.. நாகராஜன் அண்ணே வந்திருக்கார் பார்.. அவர்கிட்ட என்னவோ சொல்லணும்னு சொன்னியே..” என்று கன்னம் தட்டி அவனை எழுப்ப.. சபரியோ முழுபோதையில் வேறு ஒரு லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.
 
 
கொஞ்சமும் சபரியிடம் அசைவில்லாததைக் கண்டு முத்துவை நாகராஜன் முறைக்கவும், “இல்லை ண்ணே.. கொஞ்ச நேரத்துக்கு முன்னே வரை நல்லா தான் பேசிட்டு இருந்தான்.. அதுக்குள்ளே போதையில் சாய்ஞ்சுட்டான்.. இருங்க இப்போ எழுப்பிடறேன்..” என்று அவசரமாக மீண்டும் முத்து சபரியின் கன்னம் தட்டிக் கொண்டிருந்தான்.
 
 
“டேய்.. அவனைப் பார்த்தா பாட்டிலில் குடிச்சது போலவா இருக்கு.. பக்கெட்டில் குடிச்சுட்டு வந்திருக்கான், இப்படி எல்லாம் தட்டினா அவனுக்கு எறும்பு கடிக்கறது போலத் தான் இருக்கும்.. கொண்டு போய்க் கிணத்தடியில் உட்கார வெச்சுத் தலையில் தண்ணியைக் கொட்டு..” என்றார் கடுப்போடு நாகராஜன்.
 
 
“சரிங்க ண்ணே..” என்ற முத்து இன்னும் இரண்டு பேரை அழைத்து சபரியை குண்டு கட்டாகத் தூக்கிச் சென்று கிணற்றடியில் அமர வைத்து அவன் தலையில் தண்ணீரை கொட்டினான்.
 
 
அத்தனைக்கும் சபரி லேசாக அசைந்தானே தவிர, அவன் கண் விழிக்கவே இல்லை. இதைக் கண்டு எரிச்சலான நாகராஜன், “ஏன்டா என் நேரத்தை வீணாக்கறே..? நானே கடுப்பில் உட்கார்ந்து இருந்தேன்.. நீ சொன்னதும் நானும் என்னமோன்னு வந்தேன் பார்.. என்னைச் சொல்லணும்..” என்று அங்கிருந்து நகர முயன்றார்.
 
 
“இல்லை ண்ணே, அவன் தெளிவா தான் சொன்னான்..” என்ற முத்து மீண்டும் அனைத்தையும் அனைவரின் முன்பும் பகிர்ந்து கொள்ள முடியாமல் அங்கு இருந்தவர்களைத் தயக்கத்தோடு பார்த்தான்.
 
 
இதைக் கண்டு நாகராஜன் தன் நடையை நிறுத்த.. மீண்டும் சபரியின் கன்னத்தை வேகமாகத் தட்டிய முத்து சற்றுச் சத்தமாக “டேய் எழுந்துடுடா நாகராஜன் அண்ணேகிட்ட பேசணும்னு சொன்னியே, வந்திருக்காரு பார்..” என்றதும், சட்டென விழிகளைத் திறந்த சபரி “அண்ணே நாகராஜ் அண்ணே வணக்கம்..” என்று அமர்ந்த வாக்கிலேயே இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி பெரிதாக வணங்க.. “ம்க்கும், இப்போ இது ரொம்ப முக்கியம்..” என்றவர், “டேய்.. நீ இந்தப் படத்தில் இருக்கறவனைப் பார்த்து இருக்கியா..?” என்று சபரியிடம் கேட்டார் நாகராஜன்.
 
 
ஆனால் அதற்குள் சபரிக்கு மீண்டும் தலை சரிந்து இருந்தது. இதில் கடுப்பானவர் முத்துவை முறைக்க.. “இதோ அண்ணே..” என்று அவன் மீண்டும் தண்ணீரை கொண்டு வந்து சபரியின் தலையில் கொட்ட.. “ஐயோ மழை வருது..” என்ற உளறலோடு இன்னும் வாகாகக் கிணற்றுச் சுவரில் சரிந்து படுத்தான் சபரி.
 
 
“டேய்.. அவன் இப்போதைக்கு எழுந்துக்கறது போலத் தெரியலை.. கொண்டு போய்ப் பின்னால் இருக்க வீட்டில் அடைச்சு வை.. அவன் எழுந்ததும் பேசிக்கலாம்..” என்று விட்டு நாகராஜன் அங்கிருந்து வேகமாகச் செல்ல.. “இப்போ இருக்க வேலையெல்லாம் விட்டுட்டு இந்தக் குடிகாரனை எதுக்கு அண்ணே நாம எழுப்பிட்டு இருக்கோம்..?” என்று கேட்டிருந்தான் முத்துவிடம் அங்கிருந்த ஒருவன்.
 
 
“ஹாங்.. வேண்டுதல்டா, இவனை நடுராத்தியில் குளிப்பாட்டி சீராட்டறேன்னு வேண்டுதல்..” என எரிச்சலான முத்து, மற்றவர்களோடு சேர்ந்து தரதரவென்று சபரியை இழுத்துச் சென்று பின்னால் இருந்த வீட்டில் போட்டு கதவை அடைத்தான்.
 
 
கதவை வெளிப்பக்கம் பூட்டியவன், “உள்ளே இருக்கறவன் மேலே ஒரு கண்ணு வைங்க, அவன் எழுந்ததும் என்கிட்ட சொல்லணும்.. அவன் கேட்டான்னு யாராவது கதவை திறந்து விட்டது தெரிஞ்சது அவ்வளவு தான்.. துவைச்சு தொங்க விட்டுடுவேன்..” என்று மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றான் முத்து.
 
 
“இப்போ எதுக்குடா இவனுக்கு நம்மைக் காவல் வெச்சுட்டு போறார்..” என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்க.. எரிச்சலோடு அங்கிருந்து நகர்ந்தான் முத்து.
 
 
***
 
 
அன்று முழுக்க சிந்துவின் அறைக்கு யாருமே வரவில்லை. வழக்கமாக ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அவளை வந்து பார்த்து விட்டுச் செல்லும் சாரதா பாட்டி கூட இன்று முழுக்க உள்ளே வந்திருக்கவில்லை. சிந்துவோடு அவர் வந்து பேசி பழகவில்லை என்றாலும் தினமும் அவளின் செயல்களைக் கவனித்துக் கொண்டே இருப்பார் சாரதா.
 
 
வெளியே வயதான ஒருவர் இருப்பதற்கு அடையாளமாக அவ்வபோது சாரதா பாட்டியோடு அவர் பேசும் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும். சில நேரங்களில் இவர்கள் இருவர் குரலோடு தாரக்கின் குரலும் கேட்கும்.
 
 
அதிகம் மூவரும் பேசி பழகி சிரித்து மகிழவில்லை என்றாலும் அவர்களுக்குள் ஒரு நெருக்கமும் நல்ல புரிதலும் இருப்பது ஓரிரு வார்த்தைகள் பேசினாலும் அதை ஒருவரைப் பற்றி ஒருவர் புரிந்து வைத்தது போல் பேசுவதிலிருந்தே புரிந்து கொண்டிருக்கிறாள் சிந்து.
 
 
எப்போதும் மூடி இருக்கும் அவளின் அறையின் கதவிற்கு வெளியே நடக்கும் எதுவும் சிந்துவுக்குத் தெரியாது. எப்போதாவது கேட்கும் இது போலான குரல்களை வைத்தே தன்னைச் சுற்றி ஆட்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வு அவளுக்கு உண்டாகும்.
 
 
பெரும்பாலும் தனிமையே அவளின் துணையாக இருக்க.. எவ்வளவு நேரம் தான் ஒரே விஷயத்தைத் தனியே யோசித்துக் குழம்பி தவித்துத் தீர்வே இல்லாமல் அதிலேயே உழன்று கொண்டிருக்க முடியும்..? இது போலான பேச்சுக் குரல்கள் தான் அவ்வப்போது சிந்துவை திசை திருப்பும். அதிலிருந்து எதையாவது தெரிந்து கொள்ள முடிகிறதா என முயற்சிப்பாள் சிந்து.
 
 
ஆனால் இன்று அப்படி எந்த ஒரு குரலும் அந்த வீட்டில் கேட்கவே இல்லை. ஏனோ இந்த அமைதி ஒருவித அமானுஷ்யத்தை அவளுக்கு உணர்த்துவது போல் இருந்தது. தவறாக ஏதோ நடக்கப் போகிறது என மனம் அடித்துக் கொண்டே இருக்க.. இந்த அமைதி அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.
 
 
ஆனால் அந்த அமைதியை கலைக்கும் முயற்சியை இன்று அங்கிருக்கும் யாரும் எடுக்கவே இல்லை. நீண்ட நெடிய அமைதி அவளுள் ஒருவித பயத்தை அதிகரித்துக் கொண்டே சென்றது.
 
 
அந்த அமைதியைக் கலைப்பது போல் வந்து நின்ற காரின் ஓசையில் திடுக்கிட்டு தன் உணர்வு பெற்றவள், விழிகளைத் திருப்பி மூடியிருந்த வாயிற்கதவை பார்த்தாள் சிந்து.
 
 
இது நிச்சயம் தாரக்கின் கார் தான் என அவளுக்குப் புரிந்தது. ஆனால் அது வந்து நின்ற வேகமும் அதை அவன் கொண்டு வந்து நிறுத்திய விதமும் அவளுள் ஒருவித நடுக்கத்தை உருவாக்கி இருந்தது. இத்தனை ஆத்திரத்தோடு முதல் நாள் சிந்துவை இங்கே அழைத்து வந்த போது காரை தாரக் இந்த வீட்டின் உள்ளே நிறுத்தியது தான் அவளுக்கு நினைவு வந்தது.
 
 
அன்றைய நாளின் நினைவுகள் சிந்துவினுள் பயப்பந்தை விதைத்திருக்க.. அடுத்து என்ன என்பது போல் மூடியிருந்த அறைக் கதவையே அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவளின் எண்ணத்தைத் துளியும் பொய்யாக்காமல் ஒரு வேக நடையோடு அந்த அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்து இருந்தான் தாரக்.
 
 
எப்போதும் மிடுக்கோடு இருக்கும் அவனின் தோற்றத்திற்கு நேர் மாறாக இன்றைய அவனின் தோற்றம் இருந்தது. கசங்கி இருந்த உடைகளும், கலைந்திருந்த தலையும், சிவந்திருந்த விழிகளும் முகத்தில் படர்ந்து இருந்த சோகமும் என முற்றிலும் வேறு தோற்றத்தில் வந்து நின்றவனை சிந்து அசையாவது நின்று பார்த்துக் கொண்டிருக்க.. வேகமாக அவளை நெருங்கியவன், அதே வேகத்தில் அவளைப் படுக்கையில் சரித்திருந்தான் தாரக்.
 
 
இதில் திகைத்து அவனிடமிருந்து விடுபட சிந்து எடுத்த முயற்சிகள் அனைத்தும் வழக்கம் போல் வீணானது. ஆனாலும் அனைத்தையும் அமைதியாக ஏற்றுக் கொள்ள முடியாமல் சிந்து முரண்டு பிடிக்க.. இது ஏற்கனவே மூர்க்கமாக இருந்த தாரக்கின் ஆத்திரத்தை மேலும் தூண்டியது.
 
 
எப்போதும் தாரக் தன்னிடம் மென்மையாக நடந்து கொண்டது இல்லை என்றாலும் ஆரம்பத்தில் இருந்த மூர்க்கம், அதன் பின் ஓரளவு குறைந்திருந்ததை அவளும் உணர்ந்தே இருந்தாள். தன் பிடித்தமின்மையை உணர்ந்தும் அதைப் பற்றிக் கவலையில்லாமல் தன்னை நெருங்குபவனிடம் குறைந்திருந்த மூர்க்கம் இன்று மீண்டு இருந்தது போல் அவளுக்குத் தோன்றியது.
 
 
அதில் மிரண்டவள், மேலும் தன் முயற்சியைத் தீவிரமாகத் தொடர்ந்து கொண்டிருக்க.. இது ஒரு கட்டத்தில் தாரக்கிற்கு எரிச்சலை கொடுத்தது. “உனக்கு ஒருமுறை சொன்னா புரியாதாடி..?” என்று அவள் கழுத்தைப் பிடித்து நெருக்கி இருந்தவன், “உன்னால் என்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. இன்னும் எத்தனை முறை இதை உனக்கு நான் சொல்லணும்..?” என்றான்.
 
 
அப்போதும் சிந்து வலியில் கண்ணீர் வழியும் விழிகளோடு அவனைப் பார்த்திருக்க.. “நானா உனக்கு விடுதலை கொடுத்தா தான் உண்டு.. இப்போதைக்கு உனக்கு விடுதலை கொடுக்கும் எண்ணம் எனக்குச் சுத்தமா இல்லை.. புரியுதா..? இல்லைனா நல்லா பதிய வெச்சுக்கோ.. அமைதியா இருந்தா வலியும் வருத்தமும் உனக்குக் குறையும்.. இல்லைனா உன் விருப்பம்..” என்றவன், தன் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவளின் கழுத்தை பிடித்திருந்த கையில் அழுத்தத்தைக் கூட்டிக் கொண்டிருந்தான் தாரக்.
 
 
இதில் ஒரு கட்டத்தில் தன் கழுத்து எலும்பு உடைந்து விடுமோ என்ற அளவுக்குப் பயந்து போனவள், தன் முயற்சியைக் கை விட்டு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
 
அந்தப் பார்வையோ அவளின் விழிகளில் இருந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீரோ எதுவும் அவனைப் பாதித்தது போல் தெரியவில்லை. அவன் செயல்களெல்லாம் துளியும் மனித தன்மையே இல்லாதது போல் இருந்தது.
 
 
அவளின் இந்த அமைதியை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தாரக், “இதைத் தானே கூடாதுன்னு சொன்னான்.. இப்போ எப்படித் தடுக்கறான்னு நானும் பார்க்கறேன்.. இப்போ என்ன செய்யறான்னு பார்க்கறேன்.. என்னைத் தடுக்க அவன் யார்..? என் வாழ்க்கையை முடிவு செய்ய அவன் யார்..? எல்லாம் அவன் தான் முடிவு செய்வானா..? இது நான் முடிவு செஞ்சது.. இப்போ அவன் என்ன செய்யறான்னு நான் பார்க்கறேன்..” என்று எதையோ விடாமல் சொல்லிக் கொண்டே அவளுள் மூழ்கிக் கொண்டிருந்தவனைப் புரியாமல் பார்த்தபடி அவனுள் அடங்க மறுத்து போராடி கலைத்து சோர்ந்து கிடந்தாள் சிந்து.
 
 
அவளின் இந்தத் தோல்வியை மனதார கண்டு ரசித்தவனின் விழிகள், அந்த ஆத்திரத்திலும் லேசாக மின்னியது. இதழில் வழிந்த நக்கல் புன்னகையோடு அவளைப் பார்த்து “இதைத்தான் ஆரம்பத்திலேயே சொன்னேன்..” என்றவன், “ஆனா உனக்கு எதையும் ஒருமுறை சொன்னா புரியாதே.. மறுபடியும் மறுபடியும் சொல்லணும் இல்லை, சொல்லிடுவோம்..” என்றவன்,
 
 
அவளின் செவியின் அருகில் குனிந்து “நீ விலகணும்னு நினைக்க நினைக்கத் தான் உன்னை விடவே கூடாதுன்னு எனக்குத் தோணுது.. ஒருவேளை நீயும் அதுக்காகத் தான் இப்படிச் செய்யறியா..? உனக்கும் இங்கிருந்து போக வேண்டாம் தானே.. அப்போ நான் சொல்லும் எதையும் கேட்காம இப்படியே செய், இது தான் எனக்கும் வசதியா இருக்கும்..” என்றான் தாரக்.
 
 
இதில் அழுகையோடு அவள் அமைதியாக இருக்க.. “அடடே இந்தக் கண்ணீர் என்னைக் கலங்க செய்யுதே..! உன்னை இப்படி என்னால் பார்க்க முடியலையே..! இப்போ நான் என்ன செய்ய..?” எனக் கேலியாகக் கேட்டவன், “இந்த மௌன கண்ணீர் மட்டுமில்லை நீ கதறி அழுதே நடிச்சாலும், வேலைக்கே ஆகாது..” என்றவன் அவளிடம் இருந்து விலகி எழுந்தான்.
 
 
இன்றும் அவளுள் பல கேள்விகள் இருந்தது. ஆனால் எதற்கும் வழக்கம் போல் தாரக்கிடமிருந்து பதில் கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்த பின் கேட்டு தான் என்ன பயன் என எண்ணியவள், அமைதியாக அவனையே விழிகளில் வழியும் கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருக்க.. ‘இந்தப் பார்வையோ விழியில் வழியும் கண்ணீரோ என்னை எதுவும் செய்யாது..’ என்பதைப் போல் அவளைப் பார்த்தான் தாரக்.
 
 
அது புரிந்தும் சிந்து தன் பார்வையை விலக்கி கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருக்க.. “என்கிட்டே எதையோ கேட்கணும்னு நினைக்கற போல.. கேள்..” என்றான் வேண்டுமென்றே தாரக்.
 
 
அப்போதும் சிந்து அமைதியாகவே இருக்க.. “ஹ்ம்ம்.. தெளிவாயிட்டே போலேயே..” என்றான் கிண்டலாக தாரக். அதில் மறுப்பாக அவனைப் பார்த்து தலையசைத்த சிந்து, “இப்போவும் நான் கேட்கும் எதுக்கும் உங்ககிட்ட இருந்து எனக்குப் பதில் கிடைக்காதுன்னு தெரிஞ்சும், கழுத்து வரைக்கும் உங்ககிட்ட கேட்க எனக்குக் கேள்விகள் இருக்கு..” என்றாள்.
 
 
அதில் இகழ்ச்சியான ஒரு இதழ் வளைவோடு அவளைப் பார்த்தவன், “அப்படி என்ன கேள்வி..? எங்கே கேளேன் பார்ப்போம்..” என்றான் தாரக்.
 
 
“இதெல்லாம் ஏன் எதுக்குன்னு கூட நீங்க எனக்குச் சொல்ல வேண்டாம்.. ஆனா உங்களுக்கு என்னை எப்படித் தெரியும்னு மட்டும் சொல்லுங்களேன்..?” என்று தன்னையும் மீறி நேற்று தாரக் பேசி சென்றதில் இருந்து அவளுள் குடைந்து கொண்டிருந்த கேள்வியைச் சிந்து கேட்டு விட்டிருந்தாள்.
 
 
“ஹ்ம்ம்.. விதின்னு வெச்சுக்கோயேன்.. உன்னைத் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் வந்தது, தெரிஞ்சுக்கிட்டேன்..” என்று விட்டு, அதற்கு மேல் அந்த அறையில் நிற்காமல் வெளியேறி விட்டான் தாரக்.
 
 
இது என்ன பதில் என்பது போல் அவன் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சிந்து.
 
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 406
Topic starter  
 
 
நேசம் - 12
 
 
மறுநாள் காலை பதினொரு மணியளவில் கண் விழித்த சபரி சோம்பலாகப் பார்வையைச் சுழற்ற.. அந்த இடம் அவனுக்குப் பழக்கமில்லாத ஒன்றாகப் புதிதாகத் தோன்றியது.
 
 
அதில் மெதுவாக எழுந்தமர்ந்தவன் சுற்றிலும் பார்க்க.. ஏதோ ஓர் அறையில் அவன் படுத்திருந்தது சபரிக்கு புரிந்தது. ‘என்ன இடம் இது..? யார் வீடா இருக்கும்..? இதைப் பார்த்தா வீடு மாதிரி தெரியலையே..!’ எனப் புலம்பியவனாக மெதுவாக எழுந்து ஜன்னல் வழியே வந்த வெளிச்சத்தில் அந்த அறை முழுதும் ஒருமுறை சுற்றி வந்தவன், மெதுவாக ஜன்னல் அருகில் சென்று பார்க்க.. அவன் பார்வைக்கு அங்கிருந்த கிணறும் மரங்களும் மட்டுமே தெரிந்தது.
 
 
‘இது யார் வீடு..? நான் இங்கே எப்படி வந்தேன்..?’ என வாய்விட்டு புலம்பியவனாகக் கதவை நோக்கி சென்றவன், அதைத் திறக்க முயல.. கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருப்பது அப்போதே அவனுக்குப் புரிந்தது.
 
 
அதில் இரண்டு மூன்று முறை கதவை வேகமாக இழுத்துப் பார்த்தவன் ‘என்னடா இது வம்பா போச்சு..? எங்கே வந்து சிக்கி இருக்கேன்னு தெரியலையே..!’ எனப் புலம்பியவனாக அவசரமாகத் தன் உடைமைகளை ஒருமுறை சரிபார்த்துக் கொண்டான் சபரி.
 
 
அவனிடம் இருந்ததோ ஒரு பழைய செல்போனும் எப்போது வேண்டுமானாலும் கிழிந்து விடும் அபாயத்தில் இருந்த ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்றும், இருபது ரூபாய் நோட்டு ஒன்றும் தான்.
 
 
அது பத்திரமாக இருப்பதைக் கண்டு உண்டான நிம்மதி பெருமூச்சோடு ‘அப்போ திருடங்க யாருமில்லை.. வேற எதுக்காக என்னை அடைச்சு வெச்சுருக்காங்க..?’ என்று குழம்பியவனாக மீண்டும் ஜன்னல் அருகில் சென்று சபரி நிற்க.. அப்போதே வெளியில் இருந்து பேச்சு குரல் சபரிக்கு கேட்டது.
 
 
“யாராவது வெளியே இருக்கீங்களா..? கதவை திறந்து விடுங்க, நான் உள்ளே மாட்டிகிட்டேன்..” எனக் கதவை தட்டினான் சபரி. “ஒருவழியா முழிச்சிட்டான் போலடா, முத்து அண்ணன்கிட்ட சொல்லு..” எனத் தன் அருகில் இருந்தவனிடம் இசக்கி கூற, அதைக் கேட்டு ‘முத்து வா..?’ என்று நெற்றியை சுருக்கினான் சபரி.
 
 
அதற்குள் முத்துவை தேடிச் சென்றவன், நாகராஜனோடு அவன் நின்று பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு முத்துடம் விவரம் சொல்ல.. கேள்வியாகத் திரும்பி நாகராஜனை பார்த்தான் முத்து.
 
 
சபரியிடமிருந்து பெரிதாக எந்தத் தகவலும் கிடைக்கும் என்று நம்பிக்கை இல்லை என்றாலும் நேற்று முதல் நெருடலாய் மனதிற்குள் ஒரு விஷயம் அவரைத் தொல்லை செய்து கொண்டிருந்தது.
 
 
ஒருவேளை சபரி சொல்வது உண்மையாக இருந்தால் இதை இப்படியே விடக் கூடாது என எண்ணியவராக முத்துவுடன் சென்றார் நாகராஜன்.
 
 
இத்தனை முறை தட்டியும் கதவு திறக்காதில் உண்டான கோபத்தோடு “டேய் என்னை ஏன்டா பிடிச்சு வெச்சுருக்கீங்க..? நான் என்ன செஞ்சேன்..? என்கிட்ட இருந்து உங்களுக்குச் சல்லி காசு தேறாது, மொத்தமா என்கிட்ட இருக்கறது இந்த எழுபது ரூபா தான்.. வேணும்னா இதையும் எடுத்துக்கோங்க.. கதவை மட்டும் திறந்து விட்டுடுங்கடா..” என்று கத்திக் கொண்டிருந்த சபரியை “அடச்சீ வாயைமூடுடா..” என்ற முத்துவின் குரல் அதட்டியது.
 
 
அதில் அவனை அடையாளம் கண்டு கொண்ட சபரி, “நீதானா முத்து..! என்னை எதுக்கு இங்கே அடைச்சு வெச்சுருக்க..? இவனுங்க கதவை திறக்க சொன்னாலும் திறக்க மாட்டேங்கறாங்க..” என்றான்.
 
 
“ஆமா இவர் அப்படியே வயசு பொண்ணு.. இவரைக் கூட்டிட்டு வந்து நாங்க இங்கே அடைச்சு வெச்சு எங்களுக்கு அஞ்சாறு ஆகப் போகுது..” என்று சிடுசிடுத்த முத்து, தன் பின்னே நுழைந்த நாகராஜன் அமர்வதற்கு நாற்காலியை எடுத்துப் போட.. “நான் என்ன இவன் கூடச் சம்பந்தம் பேசவா வந்திருக்கேன்..?” என்று முத்துவிடம் தன் எரிச்சலை கொட்டியவர், திரும்பி சபரியை பார்த்து “என்கிட்ட என்னடா சொல்லணும்.. எங்கே சொல்லு கேட்போம்..” என்றார்.
 
 
“என்ன சொல்லணும்..?” என சபரி புரியாமல் நாகராஜனின் முகத்தைப் பார்க்கவும் “நீ தானே ஏதோ சொல்லணும்னு என்னைப் பார்க்க வந்தே..?” என்றார் நாகராஜன்.
 
 
“யாரு நானா..? இல்லையே..” என்றான் சபரி. அதில் ‘என்ன இதெல்லாம்..?’ என்பது போல் நாகராஜன் திரும்பி முத்துவை முறைக்க.. சற்று முன்பே வேறு விஷயத்திற்கு அவரிடம் வண்டி வண்டியாகத் திட்டுகளை வாங்கிக் கொண்டிருந்த முத்து, மீண்டும் இதற்கும் சேர்த்து வசவு வாங்க வேண்டி வருமோ என்ற பதட்டத்தில் திரும்பி சபரியை பார்த்து “அந்தப் போட்டோவில் இருக்கறவனை நீ பார்த்து இருக்கேன்னு சொல்லி அண்ணனை பார்க்க வந்தே இல்லை.. அதைப் பத்தி கேட்கறார்..” என்றான்.
 
 
“யாரு நானா..? இல்லையே, எந்தப் போட்டோ..?” என்று சபரி முழிக்கவும் “என்னங்கடா ஆளாளுக்கு விளையாடறீங்களா..? ஏற்கனவே இருக்க வெறிக்கு எவனைப் போட்டு போளக்கலாம்னு சுத்திட்டு இருக்கேன்.. வான்டடா வந்து தலையைக் கொடுத்து சாகாதீங்க..” என இருவரையும் முறைத்தார் நாகராஜன்.
 
 
“நான் தான் சொன்னேனே இந்தக் குடிகாரன் பேச்சை நம்பாதே.. அவன் சாராயத்துக்குக் காசு இல்லைன்னு இங்கே ஏதாவது தேறுமான்னு பார்க்க வந்து இருப்பான்னு கேட்டியா நீ..?” என முத்துவை திட்டியவாறே எழுந்தவர், “அந்தப் பயலை இதுக்கு முன்னே நீ எங்கேயாவது பார்த்து இருக்கியாடா...?” என்று இறுதியாக ஒருமுறை சபரியிடம் கேட்டார்.
 
 
“இல்லை ண்ணே நான் யாரையுமே பார்க்கலை..” என்று கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்யாத குறையாகக் கூறினான் சபரி. இதில் தன் ஒட்டுமொத்த கோபமும் முத்துவின் பக்கம் திரும்ப “அடிச்சு விரட்டுடா அவனை..” என்று விட்டு அதே வேகத்தில் அங்கிருந்து வெளியேறி இருந்தார் நாகராஜன்.
 
 
இப்போது இருக்கும் பிரச்னையில் இவனால் தேவையில்லாமல் திட்டு வாங்கிய கோபத்தோடு சபரியை பார்த்த முத்து “எனக்குனே கிளம்பி வருவீங்களாடா..? நீ சொன்னதை நானும் நம்பினேன் பாரு என்னைச் சோட்டால் அடிச்சுக்கணும்..” என்று விட்டு வேகமாக வெளியேற, அங்கே நின்றிருந்த இசக்கி “அவனை என்ன செய்யட்டும் ண்ணே..?” என்றான் பவ்யமாக.
 
 
“ஆங், வெட்டி ஊறுகாய் போடுங்க..” என்று விட்டு நான்கடிகள் எடுத்து வைத்தவன் சட்டென்று நின்று திரும்பி அவனைப் பார்த்து “டேய் நான் எதுவோ வெறுப்பில் சொல்லிட்டேன், அதை நம்பி அவனை வெட்டிக்கிட்டி போட்டுட போறீங்க.. அவனை அனுப்பிட்டு நீங்களும் கிளம்புங்க..” என எரிச்சலோடு சொல்லி சென்றான் முத்து.
 
 
இங்கு நடப்பது எதுவும் புரியாமல் தலையைச் சொறிந்தபடியே வெளியில் வந்த சபரி “என்ன தான் ஆச்சு இவங்க எல்லாருக்கும்..? மொத்த பேரும் போதையில் இருக்காங்களா என்ன..?” என முணுமுணுத்தபடியே அங்கிருந்து வெளியேறினான்.
 
 
***
 
 
தன் அறைக்கு வெளியே கேட்ட பேச்சுச் சத்தத்தில் விழிகளைச் சுருக்கினாள் சிந்து. மதிய நேரத்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் தாரக் எங்கும் செல்லாமல் வீட்டில் இருப்பதே அவளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
 
 
ஒரே அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பவளுக்கு அவன் வீட்டில் இருக்கிறானா இல்லையா என்பதே கார் கிளம்பி செல்லும் சத்தத்திலும் திரும்ப வீட்டிற்குள் நுழைந்து கார் நிற்கும் ஓசையிலும் மட்டுமே தெரியும்.
 
 
இன்று வழக்கமான நேரத்திற்குக் கார் கிளம்பி செல்லாததிலேயே யோசனையானவள், சிட்அவுட்டிலேயே வெகுநேரம் அமர்ந்திருந்தும் காரின் ஓசை அவளுக்குக் கேட்கவே இல்லை.
 
 
அதோடு சாரதாவும் இன்று முழுக்க அறைக்குள் வரவில்லை. வழக்கமாகச் சாப்பிட எதையாவது கொண்டு வந்து வைத்துவிட்டு அவளை ஒரு பார்வை பார்த்து செல்வார் சாரதா. பெரிதாகப் பேச்சுக்கள் இல்லை என்றாலும் தன்னை அவர் கண்காணிக்கிறார் எனச் சிந்துவுக்கு நன்றாகவே தெரியும்.
 
 
இன்று அதற்காகக் கூட சாரதா அறைக்குள் வரவில்லை. சிந்துவின் காலை உணவை கூட வீட்டில் வேலை செய்யும் வாணி தான் கொண்டு வந்து வைத்தாள்.
 
 
இப்படி ஒருத்தி இந்த வீட்டில் இருக்கிறாள் எனக் காலையிலும் மாலையிலும் கேட்கும் அவளின் பேச்சு குரலின் மூலம் மட்டுமே அறிந்து கொண்டிருந்த சிந்துவுக்கு இன்றே அவளின் முகத்தைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது.
 
 
அதில் அறைக்குள் நுழைந்ததில் இருந்து வாணியைப் பார்வையாலேயே சிந்து தொடர்ந்து கொண்டிருக்க.. அவளோ சிந்துவின் முகத்தை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. தனக்கிட்ட கட்டளையை நிறைவேற்றுவது மட்டுமே என் கடமை என்பது போல் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த டீப்பாவின் மேல் அனைத்தையும் வைத்து விட்டு அப்படியே வெளியேறி விட்டிருந்தாள்.
வாணிக்கு கிட்டத்தட்ட முப்பத்திலிருந்து முப்பத்து ஐந்து வயதிற்குள் இருக்கும். இங்கு மற்ற வெளி வேலைகளைச் செய்வதற்காக இருக்கும் பாபுவின் மனைவி தான் வாணி என்பது வரை ஓரளவு கணித்திருந்தாள் சிந்து.
 
 
ஆனால் அவர்களுக்குக் கூடத் தன்னையும் தன் நிலையையும் நினைத்து கொஞ்சமும் பரிதாபம் எழவில்லை என்று புரிய.. இனி யாரிடமும் எந்த உதவியும் கேட்கவோ எதையும் தெரிந்து கொள்ளவோ முயற்சிக்கவும் கூடாது என்ற முடிவுக்கு நேற்றே வந்திருந்தவளாக அமைதியாக வாணி சென்ற திசையை வெறித்துக் கொண்டிருந்தாள் சிந்து.
 
 
அதே நேரம் “தீபன் தம்பி வெளியே வந்ததா சாரா..?” என்ற பெரியவரின் குரல் சிந்துவுக்குக் கேட்க.. அவர்கள் பேச்சை கூர்ந்து கவனிக்கத் தொடங்கினாள் சிந்து.
 
 
“இல்லைங்க நேத்து நைட் ரூமுக்குள்ளே போய்க் கதவை அடைச்சது தான்.. இப்போ வரை கதவை திறக்கலை, நானும் எத்தனையோ முறை கூப்பிட்டுப் பார்த்துட்டேன்.. சத்தமே இல்லை..” என்ற சாரதாவின் குரல் அடுத்து ஒலிக்க.. “எப்போ தான் இதெல்லாம் சரியாகுமோ..?” என்றார் வேதனையான குரலில் குமரேசன்.
 
 
“நாளெல்லாம் இப்படியே பச்சை தண்ணி பல்லில் படாம ரூமுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தா மட்டும் எல்லாம் சரியாயிடுமா என்ன..?” என்ற சாரதாவின் கவலைக் குரலில் “நமக்கே இந்த நாள் இத்தனை வலியையும் வேதனையும் கொடுக்கும் போது தீபன் தம்பி நிலைமையை நினைச்சு பார்.. அவ்வளவு சீக்கிரம் எப்படி இதைக் கடந்து வெளியே வர முடியும்..?” என்றார் குமரேசன்.
 
 
அவர்களின் இந்தப் பேச்சை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சிந்துவுக்கு அப்போதே ஒன்று உரைத்தது. இருவரும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்த பெயர் தீபன்.
 
 
இத்தனை நாள் அவள் தெரிந்து கொள்ள நினைத்த பெயர். எத்தனையோ முறை கேட்டும் அவன் சொல்லாத பெயர். இப்போதே அவர்கள் பேச்சிலிருந்து அது அவள் மனதில் பதிய.. “தீபன்.. தீபன்..” என்று மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தவள், தன் நினைவிடுக்குகளில் இந்தப் பெயரை இதற்கு முன் எங்காவது கேள்விப்பட்டிருக்கிறோமா என வேகமாகத் தேடிப் பார்த்தாள் சிந்து.
 
 
ஆனால் எப்படி இதற்கு முன் அவன் முகத்தை எங்காவது பார்த்திருக்கிறோமா எனத் தேடிப் பார்த்து கலைத்து ஏமாந்தாளோ அதே போல் இப்போதும் அவளுக்கு இந்தப் பெயரும் நினைவில் வரவில்லை.
 
 
அதில் உண்டான சோர்வோடு முகமோ பெயரோ கொஞ்சமும் நினைவில் இல்லாத அளவிற்கு இருவருக்கும் இடையே எந்த உறவோ பிரச்சனையோ இல்லாத நிலையில் எதற்குத் தன் மேல் இத்தனை கோபமும் வெறுப்பும்..? இருக்கக்கூடும் என அவளுக்குப் புரியவில்லை.
 
 
இதே குழப்பத்தில் அமர்ந்து விட்டவளுக்கு மாலை மங்கி இருள் கவிழ தொடங்கியது கூடத் தாமதமாகத்தான் புரிந்தது. வெகுநேரம் அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பது வேறு மூச்சு முட்டுவது போல் இருக்க.. மெல்ல சிட்டஅட்டின் சின்னக் கேட்டை திறந்து கொண்டு புல்வெளியில் கால் பதித்தாள் சிந்து.
 
 
அந்தச் சின்னச் செயல் அவளுள் அத்தனை ஒரு ஆஸ்வாசத்தைக் கொடுத்தது. இந்த நொடி பெரும் சுதந்திர காற்றைச் சுவாசித்தது போல் இருக்க.. தன் பாதம் உணர்ந்த புல்வெளியின் குளுமையைத் தன் மனதும் உணர வேண்டும் என்றெண்ணியவளாக விழிமூடி சில நொடிகள் அப்படியே நின்று இருந்தவள், நீண்ட ஒரு பெருமூச்சோடு மெல்ல நடக்கத் தொடங்க.. எதேச்சையாக அவளின் பார்வை சிந்துவின் அறைக்கு நேர் மேலே இருந்த பால்கனியில் பதிந்தது.
 
 
எப்போதுமே அந்தப் பால்கனியில் இருக்கும் மலர்களைப் பார்ப்பது சிந்துவுக்குப் பிடித்தமான ஒன்று. நித்திய மல்லி கொடிகள் பால்கனி எங்கும் மலர்ந்து படர்ந்திருக்க.. இடையே பன்னீர் ரோஜா பூக்கள் அழகாக எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி அத்தனை ரம்மியமாக இருக்கும்.
 
 
இரு பூக்களின் நிறமும் ஒன்றோடொன்று கலந்து தனியொரு அழகை தர, பச்சை பசேல் என்ற அழகாகப் பராமரிக்கப்பட்டிருந்த செடிகளும் மனம் எங்கும் ரணமாக இருக்கும் சிந்துவிற்கு ஒருவித அமைதியை கொடுக்கும்.
சிறு வயதிலிருந்தே சிந்துவுக்குப் பிடித்தமான பூ என்றால் அது நித்தியமல்லி தான். அதன் வாசமும் அழகும் அவளை எப்போதும் மற்ற மலர்களை எல்லாம் விடுத்து இதையே தேர்ந்தெடுக்க வைக்கும். மகளுக்காகவே சுஜாதா தோட்டத்தில் மூன்று நித்தியமல்லி கொடிகளை வைத்துள்ளார்.
 
 
ஒவ்வொரு முறையும் இந்தப் பூக்களைப் பார்க்கும் போதெல்லாம் தன் வீட்டின் நினைவு வந்து அவளைக் கலங்க செய்யும் அதே நேரம்.. அங்கு உணர்ந்த வாசம் இங்கும் பரவி, மனதினுள் ஏதோ ஒரு இனம் புரியா உணர்வை கொடுக்கும்.
 
 
அதனாலேயே இந்தப் பூக்களை மாலை மங்கிய நேரத்தில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பார்த்து ரசிப்பாள் சிந்து. இன்றும் அப்படியே மேலே பார்த்தவளுக்கு அங்கு அமர்ந்திருந்த தாரக்கை கண்டு சிறு திகைப்பு உண்டானது.
 
 
எப்போதும் அவள் பார்த்த தாரக் இல்லை இவன். முகம் எங்கும் வேதனையில் கசங்கி இருக்க.. தாங்க முடியாத வலியை சுமந்து கொண்டிருப்பதற்கு அடையாளமாக விழிகள் சிவந்து, உடல் தளர்ந்து எங்கோ வெறித்தப்படி அமர்ந்திருந்தான் தாரக்.
 
 
அதைக் கண்டவளுக்கு மனம் ஏதோ செய்தது. தன்னை இத்தனை கொடுமை செய்பவன் தானே நன்றாக அவனும் வலிகளை அனுபவிக்கட்டும் என அந்த நொடி அவளுக்கு எண்ண முடியவில்லை.
 
 
வலியும் வேதனையும் அனைவருக்கும் ஒன்று தானே..! சக மனிதனின் கவலை அவளையும் பாதிக்க.. ‘என்னாச்சு இவங்களுக்கு..?’ என்று தோன்ற தாரக்கையே பார்த்திருந்தாள் சிந்து.
 
 
இப்படி ஒருத்தி தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கூட உணராத நிலையில் சுற்றுப்புறம் என்பதே நினைவில் இல்லாதது போல் எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் தாரக்.
 
 
**
 
 
இரவு மொட்டை மாடியில் முழுப் போதையில் அமர்ந்திருந்தார் நாகராஜன். அவருக்குப் பக்கத்தில் தரையில் அரைப் போதையில் அமர்ந்திருந்தான் முத்து.
 
 
“டேய் அந்தப் பையல் எங்கே இருக்கான்னு தெரிஞ்சுதா இல்லையாடா..?” என்று நாகராஜன் பத்தாவது முறையாகக் கேட்க.. இத்தனை முறை சொன்ன பதிலான “இல்லை ண்ணே, நம்ம ஆளுங்க விசாரிச்சுட்டு தான் இருக்காங்க..” என்றான் சலிக்காமல் முத்து.
 
 
“என்ன விசாரிச்சு என்ன..? இன்னும் நாலு நாள் போனா ஒரு மாசம் முடிய போகுது.. இன்னும் அவன் எங்கே இருக்கான்னு கூடக் கண்டுப்பிடிக்க முடியாத கையாலாகாதவனுங்களா இருக்கானுங்களே..!” என்று எரிச்சலில் கத்தினார் நாகராஜன்.
 
 
“அவனைப் பத்தி எந்த ஒரு விவரத்தையும் கண்டுபிடிக்கவே முடியலை ண்ணே..” என்று கலைத்துப் போன குரலில் முத்து சொல்லவும், “இப்படிச் சொல்ல உனக்கு வெட்கமா இல்லை.. அவன் ஆபீஸ் எங்கே இருக்குன்னு தான் தெரியுமே.. அதையே வெச்சு அப்படியே தேடி இருந்தா கூட இத்தனை நாளுக்குக் கண்டுபிடிச்சு இருக்கலாமேடா..” என்றார் நாகராஜன்.
 
 
“அதெல்லாம் முயற்சி செஞ்சாச்சு ண்ணே, ஆனா எதுவும் முடியலை.. நம்ம ஆளுங்க இரண்டு பேரை அவன் ஆபிஸ் இருக்கத் தெருவில் காவலுக்கும் போட்டு இருக்கேன்.. அவன் எப்போ அங்கே வரான், எப்போ போறான்னு எதுவுமே தெரியலை..” என்றான் முத்து.
 
 
“நீ காவலுக்குப் போட்ட ஆளுங்க லட்சணம் என்னன்னு இதுலேயே தெரியுதே..!” என்று சலித்துக் கொண்டார் நாகராஜன்.
 
 
“அப்படியெல்லாம் இல்லை ண்ணே.. நம்பிக்கையான ஆளுங்களா தான் போட்டு இருக்கேன்.. இவனுங்க வேலையைக் கச்சிதமா முடிச்சிடுவானுங்க..” என்று முத்துத் திடமான குரலில் சொல்லவும், “எனக்கு அதெல்லாம் தெரியாது இன்னும் ஒரு வாரத்தில் அவன் எங்கே இருக்கான் என்னன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்..
எவ்வளவு திமிரும் தெனாவட்டும் இருந்தா என் பொண்ணையே தூக்கிட்டு போயிருப்பான்.. இதில் காதல் வேறயாம் காதல்.. அவன் கூட ஓடிப் போகணும்னு நினைச்சவ காதும் காதும் வெச்ச மாதிரி போயிருந்தா கூட ஊருக்கும் உறவுக்கும் தெரியாம இந்த விஷயத்தை மூடி மறைச்சு இருக்கலாம்.. ஆனா திமிர் எடுத்த கழுதைங்க ஊரை கூட்டி தண்டோரா போட்டு என் மானத்தை வாங்கிட்டு இல்லை போய் இருக்குங்க..
இதுங்களை இப்படியே விட்டா இத்தனை வருஷம் நான் கட்டி காப்பாத்தின கௌரவத்துக்கு என்ன பயன்.. விடமாட்டேன் இரண்டு பேரையும் என் கையாலேயே வெட்டி போட்டா கூட என் ஆத்திரம் தீராது..” எனப் போதை தலைக்கேறிய நிலையில் உளறிக் கொண்டிருந்தார் நாகராஜன்.
 
 
அவரின் நிலையை உணர்ந்தவனாக லேசான தள்ளாட்டத்தோடு எழுந்து நின்ற முத்து “சரிண்ணே.. கண்டுபிடிச்சுக் கவனிச்சுக்கலாம்.. இப்போ வாங்க கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாம்..” எனக் கை தாங்கலாகப் பிடித்து நாகராஜனை எழுப்ப முயன்றான்.
 
 
“ஓய்வா..? மனசும் வயிறும் தீயா அவமானத்தில் எரியும் போது எப்படி என்னால் ஓய்வெடுக்க முடியும்.. என் கண்ணு முன்னேயே என் பொண்ணைத் தூக்கிட்டு போனானே..! கண்ணை மூடினாலே அந்தக் காட்சி தானே கண்ணு முன்னே வந்து நிற்குது..” என்று அவர் கத்திக் கொண்டிருக்க.. அதே நேரம் அங்கு வந்த அருண் அவரைக் கை தாங்கலாகப் பிடித்தான்.
 
 
“தம்பி அண்ணனுக்குக் கொஞ்சம் ஓவராகிப் போச்சு.. மெதுவா கொண்டு போய்ப் படுக்க வெச்சுடுங்க..” என்று முத்து சொல்லவும் ‘சரி’ என்பதாகத் தலையசைத்து விட்டு அவரைக் கீழே இறக்கி செல்ல முயன்றான் அருண்.
 
 
“டேய் யாருடா நீ..? எனக்குப் பிறந்தவனா நீ..? இல்லை.. எனக்கு இப்போ தான் உங்க அம்மா மேலே சந்தேகமா இருக்கு.. நீ நிச்சயம் எனக்குப் பிறந்திருக்க மாட்டே.. இந்த வீட்டில் இத்தனை பிரச்சனை நடந்துட்டு இருக்கு.. நீ எனக்கென்னன்னு பிடிச்சு வெச்ச களிமண் பொம்மை மாதிரி உட்காந்துட்டு இருக்கே.. வெக்கமா இல்லை உனக்கு, இவ்வளவு நேரத்துக்கு அந்த ஓ**லியை தேடி போய் வெட்டி வீசிட்டு வந்து இருக்க வேண்டாம்.. எனக்கே கூப்பிட்டு நான் ஆசைப்பட்டுத் தான் அவன் கூடப் போனேன்னு சொல்றா.. அதைக் கேட்டும் அசையாம இருக்கே, ஆம்பளையாடா நீ..?” என்றார் நாகராஜன்.
 
 
“அவன் எங்கே இருக்கான்னு தான் கண்டுபிடிக்க முடியலைப்பா.. சீக்கிரம் கண்டுபிடிச்சுடலாம்..” என்று அருண் சொல்லிக் கொண்டிருக்கும் போதே “டேய் இதெல்லாம் ஒரு பதிலாடா..? உன் வயசில் நான் எல்லாம் எப்படி இருந்தேன் தெரியுமா..?” என அவர் தன் வீரதீர பிரதாபங்களை எல்லாம் குழறலாகச் சொல்லிக் கொண்டே செல்ல.. அதற்கு எல்லாம் அமைதியாகத் தலையசைத்தவாறே அவரைப் படுக்கையறைக்கு அழைத்துச் சென்றான் அருண்.
 
 
இரவு விளக்கை ஒளிர விட்டு அவருக்குப் போர்வையை போர்த்தி விட்டவன், மரியாதை கௌரவம் என அவர் முழுபோதையில் புலம்பிக் கொண்டிருந்ததைக் கேட்டவாறே வெளியில் வந்து நின்றான் அருண்.
 
 
இந்த நொடி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற திட்டம் அவன் மனதில் விஸ்வரூபம் எடுத்தது.
 
 
*****
 
 
இரவு மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரம் லேசான தள்ளாட்டத்தோடு நாகராஜன் வீட்டிற்குள் நுழைந்தான் சபரி.
 
 
“ஒரு விஷயத்தைச் சொல்லலாம்னு வந்தா இங்கே யாராவது பொறுப்பா கேட்கறாங்களா பாரு.. இவங்க தான் அவனைக் கண்டுபிடிச்சு கொடுங்க.. யாராவது பார்த்து இருக்கீங்களா இவனை..? அவன் யாருன்னு யாருக்காவது தெரியுமான்னு ஊர் எல்லாம் போட்டோ கொடுத்தாங்க.. எனக்குத் தெரியும்டான்னு நான் சொல்ல வந்தா என்னன்னு கேட்க ஒருத்தனும் இங்கே இல்லை..” என்று சத்தமாகப் புலம்பியவாறே சபரி வந்து நிற்கவும், முத்து அவனைப் பார்க்கவும் சரியாக இருக்க.. “டேய் நீயா..? திரும்ப இங்கே எதுக்கு வந்தே..?” என்றான் முத்து.
“ஹாங்.. விருந்து சாப்பிட்டு போகலாம்னு வந்தேன், கேட்கறான் பாரு கேள்வியை..! நீ தானேடா அந்தப் போட்டோவில் இருக்கறவனைப் பார்த்தா வந்து சொல்லுன்னு சொன்னே.. அதுக்காகத் தான் வந்தேன், நான் அன்னைக்கே சொன்னேன் இல்லை எனக்கு அவனைத் தெரியும்னு..” என்றான் சபரி.
 
 
“ஏன்டா குடிகார நா** உனக்கு என்னைப் பார்த்தா கிண்டலா இருக்கா.. நேத்தும் இப்படித்தான் வந்து எனக்கு அவனைத் தெரியும், பார்த்து இருக்கேன்.. எட்டு வருஷம் முன்னேயே வந்தான்னு எல்லாம் கதை விட்டே..” என எரிச்சலோடு முத்து தொடங்கவும் “என்னது கதையா..? நிஜமா சொல்றேன் நான் அவனைப் பார்த்து இருக்கேன்.. அவன் என்கிட்ட தான் வழி கேட்டான், நான் தான் அவனுக்கு வழிகாட்டினேன்.. ஆனா அப்போ அவன்..” என வேறு எதுவோ சொல்லத் தொடங்கியவன் “அடச்சீ வாயைமூடு..” என்ற முத்துவின் அதட்டலில் அப்படியே தன் பேச்சை நிறுத்தினான்.
 
 
“இதுக்கு மேலே ஏதாவது பேசின வாயை உடைச்சுடுவேன்.. உனக்குப் போதை தலைக்கு ஏறி இருந்தா போய் எங்கேயாவது மூலையில் சுருண்டு கிட.. அதை விட்டு இங்கே வந்து உளறிட்டு இருந்தேன்னு வை.. கையைக் காலை தனிதனியா உடைச்சு வீசிடுவேன் ஜாக்கிரதை..” என்று மிரட்டினான் முத்து.
 
 
“இது என்னடா வம்பா போச்சு.. நீங்க கேட்டீங்கன்னு தானே நான் சொல்ல வந்தேன், வேண்டாம்னா போங்க..” என்று விட்டு அங்கிருந்து தள்ளாட்டத்தோடு சென்றான் சபரி.
 
 
அவன் சென்ற திசையை முறைத்துக் கொண்டிருந்த முத்து, “இருக்கும் பிரச்சனை போதாதுன்னு இவன் வேற..” என முணுமுணுத்தவனாக அங்கிருந்து நகர்ந்தவனுக்கு அப்போது தெரியவில்லை, தாரக்கை நெருங்க எந்த ஒரு துருப்பு சீட்டும் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அவன் யாரென அறிந்து கொள்ளக் கிடைத்த பெரும் வாய்ப்பை தவறு விட்டிருப்பது.
 

 

 

 



   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 406
Topic starter  
 
 
நேசம் – 13 (1)
 
 
கொஞ்சமும் குறையாத அதே தன் மிடுக்கோடு அறைக்குள் நுழைந்தவனைத் தான் நம்ப முடியா திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள் சிந்து.
 
 
நேற்று மாலை அவன் இருந்த நிலைக்கும் இப்போதைய நிலைக்கும் இருக்கும் மலையளவு வித்தியாசம் அவளுக்குப் புரிய.. ஒரே இரவில் இப்படியொரு மாற்றம் எப்படிச் சாத்தியம் என அவளுக்குப் புரியவில்லை.
 
 
‘நிஜமாவே நேற்று நான் பார்த்தது இவரைத் தானா..? இல்லை வேற யாருமா..? ஒருவேளை டிவின்ஸா இருக்குமோ..!’ எனக் குழம்பிப் போய் அவள் நின்றிருக்க.. அறைக்குள் நுழைந்ததிலிருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த தாரக், சிந்துவின் இந்தப் பார்வையில் விழிகளைச் சுருக்கி அவளைப் பார்த்தான்.
 
 
நேற்று முதல் அவனிருந்த மனநிலைக்கு சிந்துவின் இந்தப் பார்வை அவனைத் தூண்டி விடுவது போல் இருக்க.. எப்போதும் அவளின் விழிகளில் தெரியும் பயமே அவனுக்கு வேண்டும் என்பதால் கூர்மையாக அவளைப் பார்த்தப்படியே சிந்துவை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான் தாரக்.
 
 
அவன் தன்னை நெருங்கி வரும் போதே சூழ்நிலை புரிய.. பதட்டமான விழியசைவோடு வேகமாக அங்கிருந்து சிந்து நகர முயல.. அதற்கு வாய்ப்பளிக்காமல் அவளின் வழியை மறித்தது போல் வந்து நின்றவன், கொஞ்சம் கொஞ்சமாக அவளை நோக்கி முன்னேற.. வேறு வழியில்லாமல் ஒவ்வொரு அடியாகப் பின்னுக்கு நகர்ந்தாள் சிந்து.
 
 
அடுத்தச் சில நொடிகளில் பின்னே இருந்த சுவரில் மோதி சிந்து நகர முடியா திகைப்போடு நிற்க.. “இந்த வாழ்க்கை உனக்கு இப்போ பழகி போச்சு இல்லை.. முன்னே போல ஐயோ என்னை விட்டுடுங்க.. நான் எங்க வீட்டுக்கு போகணும்.. எங்க அப்பாவை பார்க்கணும்னு எல்லாம் இப்போ நீ அழுது நடிக்கறதே இல்லையே..!
இந்த வசதியான வாழ்க்கைக்கு அவ்வளவுப் பழகிட்ட இல்லை.. எந்த வேலையும் செய்யாம நேரத்துக்கு சாப்பாடு, சகல வசதிகளோடு இப்படி ஒரு வீடு, மற்ற தேவைகளுக்கு நான்..” என இறுதி வரியில் ஒருவித அழுத்தத்தை கொடுத்து இகழ்ச்சியான குரலில் “இப்படி ஒரு சுகமான வாழ்க்கை வேற எங்கே கிடைக்கும்னு யோசிச்சு இங்கேயே செட்டில் ஆகிடலாம்னு முடிவு செஞ்சுட்டே போல..” என்று ஒவ்வொரு வார்த்தையும் அவளைத் துடிக்கச் செய்ய வேண்டும் என்பது போலான குரலிலேயே பேசினான் தாரக்.
 
 
அவன் குறிப்பார்த்து எய்த அம்பு சரியாக அவளின் மனதை சென்று குத்தி கிழித்ததில் சிந்துவின் விழிகள் கலங்கி எப்போது வேண்டுமானாலும் கீழே விழ தயார் எனக் கண்ணீர் எட்டி பார்க்க.. இதழ்களோ வெகுவாக அவள் கட்டுப்படுத்த முயன்ற அழுகையில் துடித்தது.
 
 
சற்று முன் அவளை இயல்பாக சிந்து எதிர் கொண்டதில் உண்டான ஆத்திரம் இதைக் கண்ட பிறகே அவனுக்கு லேசாகத் தணிய.. திருப்தியாக அதைப் பார்த்து ரசித்தான் தாரக்.
 
 
அவனின் அந்தப் பார்வையைக் கண்டு கொண்டவள், வேகமாக அங்கிருந்து நகர முயல.. அதற்கு வாய்ப்பளிக்காமல் சிந்துவின் இடக்கையைத் தன் வலக்கையால் பிடித்து நிறுத்தியவன், “உண்மையெல்லாம் தெரிஞ்சு போச்சேன்னு இங்கிருந்து ஓட பார்க்காதே..!” என்றான்.
இதற்கு மேல் இங்கே நின்றால் கதறி விடுவோம் எனப் புரிந்து சிந்து அவன் கைகளில் இருந்து தன் கரத்தை விடுவித்துக் கொள்ள முயல.. அதற்கு அவன் அனுமதிக்கவில்லை.
 
 
இதில் அவள் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்க.. தாரக்கின் பிடியும் இறுகிக் கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் எப்படியாவது அவனிடமிருந்து விலக வேண்டுமென எண்ணியவளாகத் தன் மற்றொரு கரத்தைக் கொண்டு தாரக்கின் கையை அவள் விடுவிக்க முயல.. சட்டென அவளின் இரு கைகளையும் சேர்த்து தன் பிடிக்குள் கொண்டு வந்திருந்தான் தாரக்.
 
 
சற்று முன் நடந்த தள்ளு முள்ளில் முன்பு சிந்துவை அவன் நிறுத்தியிருந்த இடத்தில் இருந்து இருவரும் கொஞ்சம் நகர்ந்து வந்திருக்க.. திரும்ப அவளை ஒரு வேகத்தோடு அந்தச் சுவரின் கொண்டு சென்று சாய்த்தவன், தன் கரத்தில் சிறைப்பட்டிருந்த அவளின் இரு கைகளையும் ஒரு அழுத்தத்தோடு பிடித்து சிந்துவின் தலைக்கு மேலே தூக்கி சுவரின் பதித்தான்.
 
 
அவன் பிடியில் இருந்த அழுத்தமும் அதை தாரக் பிடித்திருந்த விதமும் அவளுக்குப் பெரும் வலியை கொடுக்க.. “ஸ்ஸ்..” என்ற லேசான முனகலோடு அதைப் பொறுத்துக் கொள்ள முயன்றாள் சிந்து.
 
 
அவளின் இந்த வலி தன் மனவலிக்கு மருந்தாக இருப்பதை மீண்டும் ஒருமுறை உணர்ந்தவன், திருப்தியாக அதைப் பார்த்து ரசித்தப்படியே மேலும் தன் கைகளில் சிக்கியிருந்த அவளின் கரத்தில் அழுத்தத்தைக் கூட்டினான்.
 
 
அவன் எண்ணம் புரிந்து அதைப் பொறுத்துக் கொள்ள முயன்று முடியாமல் போக.. வழியில் முகம் கசங்க அவனை வேதனையோடு விழிகளை உயர்த்தி ‘இது போதுமா..? இப்போது உனக்குச் சந்தோஷமா..?’ என்பது போல் பார்த்தாள் சிந்து.
 
 
அவளின் விழி மொழியைச் சரியாகப் படித்தவனும், “ஹ்ம்ம், இப்போ தான் திருப்தியா இருக்கு..? ஆனாலும் இது போதாது தான், பரவாயில்லை நீ எங்கே போயிட போறே.. பொறுமையா அப்பறம் உன்னைப் பார்த்துக்கறேன்..” என்றான் தாரக்.
 
 
அதில் தன் பார்வையைத் தழைத்துக் கொண்டவளுக்கு, கன்னத்தைக் கடந்து கழுத்தில் வழியும் கண்ணீரை துடைக்கக் கூட முடியா நிலை. அதில் அவள் தவிப்போடு நிற்பதை நிதானமாக ரசித்தவாறே, “இங்கே நீ என்ன செய்யணும்னாலும் அதை நான் தான் முடிவு செய்யணும்.. மறுபடியும் நீயா எதையும் செய்ய நினைச்சு இப்படிச் சிக்கிக்காதே..!” என்று அவளின் கைகளை விடுவித்தான் தாரக்.
 
 
அதில் சோர்ந்து போய் வலியோடான தன் கரங்களைச் சிந்து உதறிக் கொண்டிருக்க.. அதை இகழ்ச்சியாகப் பார்த்தவாறே அங்கிருந்து நகர்ந்தவன், கதவருகில் சென்று அப்படியே நின்று திரும்பியும் அவளைப் பார்க்காது, “அப்பறம் கொஞ்சம் முன்னே என்னைப் பார்த்தே பார், அப்படி மறுபடி பார்க்காதே.. அது உனக்கு நல்லதில்லை..” என்று கடினமான குரலில் சொல்லி விட்டு வெளியேறி இருந்தான் தாரக்.
 
 
அவன் சென்ற திசையையே வெறுமையாகப் பார்த்தவள், அப்படியே மடங்கித் தன்னருகில் இருந்த படுக்கையில் அமர்ந்தாள். இடக்கை அதிக வலியை கொடுக்க.. அதை உயர்த்திப் பார்த்தவளுக்கு அங்குப் பதிந்திருந்த தாரக்கின் விரல் தடங்கள் தெரிந்தது.
 
 
கன்றிச் சிவந்திருந்த விரல் தடத்தில் மெல்ல ஊதியவள், அதை வருடிக் கொடுத்து வலியை போக்க முயல.. வலி அதிகமானதே தவிரக் கொஞ்சமும் குறையவில்லை.
 
 
கொஞ்சமும் மனிதத்தன்மையே இல்லாமல் இத்தனை மூர்க்கமாக நடந்து கொள்ளும் இவனுக்காகவா நேற்று அவ்வளவு கவலைப்பட்டோம் எனக் கசப்பான புன்னகை அவள் முகத்தில் வந்து போனது.
 
 
**********
 
 
சிந்துவின் அறைக்குள் சாரதா வந்த போது அந்த அறையே இருளில் மூழ்கி இருந்தது. மாலை மங்க தொடங்கி இருந்த நேரம், இன்று காலை முதல் அவள் எதையும் சாப்பிடவில்லை என்பதால் ஆரம்பத்தில் செய்தது போல் அமர்க்களம் செய்வதாக நினைத்து உள்ளே நுழைந்தவர், இருளாக இருந்த அறையைக் கண்டு திகைத்தார்.
 
 
எப்போதும் சிந்துவின் அறை இப்படி இருந்ததில்லை. ஆரம்ப நாட்களில் கூட அழுது கெஞ்சி இங்கிருந்து எப்படியாவது வெளியே சென்று விட வேண்டுமென முயன்றுக் கொண்டிருப்பாளே தவிர இப்படி இருந்ததில்லை.
 
 
நேற்று முதலே அவள் சாப்பிடவில்லை என்பது வாணி சொல்லி சற்று முன்பே அவருக்குத் தெரியும். நேற்று முழுக்க அவரிருந்த மனநிலையில் இதையெல்லாம் கவனிக்கவில்லை சாரதா.
 
 
இன்று காலை முதலே சாப்பிடவில்லை என நினைத்துக் கொண்டிருந்தவர், வாணி சொல்லியதை கேட்டு என்னவெனப் பார்க்க உள்ளே வர.. இங்கோ அறையின் இருளே அவரை வரவேற்றது.
 
 
‘என்னாச்சு இவளுக்கு..?’ என எண்ணியவராக சாரதா நிற்கும் போதே இருளில் இருந்து லேசான முனகல் அவருக்குக் கேட்டது. அதில் பதறியவராக வேகமாக விளக்கை போட்டவர், சிந்து படுக்கையில் சுருண்டு கிடப்பதைக் கண்டு அவளை நெருங்கினார்.
 
 
அழுதழுது சோர்ந்து அப்படியே தூங்கி விட்டிருப்பாள் போலும், கன்னத்தில் காய்ந்திருந்த கண்ணீரின் தடங்கள் அதற்குச் சாட்சியாக இருக்க.. ஒரு நொடி நின்று அவளைப் பார்த்தவர், பின் அவளின் முனகலை உணர்ந்து மெதுவாக சிந்துவின் நெற்றியில் கை வைக்க.. அதுவோ தீயாகக் கொதித்தது.
 
 
“ஐயோ காய்ச்சல் இப்படிக் கொதிக்குதே..!” என்றவரின் பார்வை அவளின் கரத்தில் பதிய அங்கிருந்த விரல் தடங்கள் அவரின் பார்வையில் விழுந்தது.
 
 
‘ஓ.. இது தான் காய்ச்சலுக்குக் காரணமா..? நேற்றில் இருந்து சாப்பிடாம வேற இருக்கா.. இப்போ அதோட அழுது இப்படி உடம்புக்கு இழுத்து விட்டுட்டு இருக்கா..’ என்று நினைத்தவராக வெளியே சென்று மாத்திரை கொண்டு வந்து சிந்துவை எழுப்ப முயல.. அவளோ அசையவே இல்லை.
 
 
“ஏய் பொண்ணே.. எழுந்துரு, இந்த மாத்திரையைப் போட்டுட்டு படு..” என அவளை லேசாக சாரதா உலுக்கவும், மீண்டும் ஒரு சிறு முனகலே அவளிடம் இருந்து வெளிப்பட்டது.
 
 
‘இப்போ என்ன செய்யறது..?” என்று யோசித்தவராக சாரதா நின்றிருக்க.. “சாரா.. என்னாச்சு..?” என்று அறைக்கு வெளியில் இருந்து குரல் கொடுத்தார் குமரேசன்.
 
 
“ஐயோ அதை ஏன் கேட்கறீங்க..? இந்தப் பொண்ணுக்கு காய்ச்சல் கொதிக்குது.. சாப்பிடவும் இல்லை மாத்திரையும் போடலை.. கண்ணையே திறக்க மாட்டேன்றா..” எனக் கவலை குரலில் சாரதா சொல்லவும், “டாக்டரை வேணும்னா வர சொல்லுவோமா..?” என்றவரின் குரலில் பதட்டமாகத் திரும்பி அவரைப் பார்த்தார் சாரதா.
 
 
“புரிஞ்சு தான் பேசறீங்களா..?” என்றவரின் அதட்டல் குரலிலேயே தான் அவசரப்பட்டுப் பேசி இருப்பது புரிய.. அமைதியானார் குமரேசன்.
 
 
“வாணியைப் பால் எடுத்துட்டு வர சொல்லுங்க..” என்ற சாரதா, மீண்டும் சிந்துவை நெருங்கி எழுப்ப முயன்றார்.
 
 
அடுத்தச் சில நிமிடங்களில் வாணி அறைக்குள் லேசாகச் சூடு செய்த பாலோடு நுழைய.. “வா வாணி.. ஒரு கைப்பிடி, மாத்திரையைக் கொடுப்போம்..” என்ற சாரதா, வாணியின் உதவியோடு எப்படியோ சிந்துவுக்குப் பாலையும் மாத்திரையையும் கொடுத்திருந்தார்.
 
 
இத்தனைக்கும் சிந்து கண் திறந்திருக்கவே இல்லை. இதைத் தன்னை மீறி உண்டான கவலையோடு அவள் முகத்தைப் பார்த்தவர், ‘இப்போவே என்ன பாவம் செஞ்சோமோ.. இவ்வளவு அனுபவிக்கறோம், இதில் இந்தப் பாவத்தையும் எங்கே போய்க் கழிக்கப் போறேமோ..!’ என்று நினைத்தவராக அங்கிருந்து வெளியேறினார் சாரதா.
 
 
இரவு பத்து மணியளவில் வழக்கம் போல் வீட்டிற்குள் நுழைந்ததுமே நேராக சிந்துவின் அறைக்கு வந்தான் தாரக். நேற்றிலிருந்து அவன் மனதில் எரிந்து கொண்டிருந்த தீ காலையில் சிந்துவின் செயலில் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது இப்போது வரை கொஞ்சமும் குறையாமல் எரிந்து கொண்டிருந்தது.
 
 
அதே ஆத்திரத்தில் உள்ளே நுழைந்தவன், எந்தக் கவலையும் இல்லாமல் தன் வருகையைக் கூட உணராமல் சிந்து உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட நொடி எரிமலையானான்.
 
 
சிந்துவுக்கு உடல்நிலை சரியில்லை என தாரக்கிடம் சொல்ல காத்திருந்த சாரதாவும் சோபாவிலேயே உறங்கி விட்டிருக்க.. அவள் சாதாரணமாகத் தூங்குவதாக எண்ணிக் கொண்டவனுக்கு ஆத்திரம் தலைக்கேறியது.
 
 
இப்படியொரு இடத்தில் இந்த நிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற பயம் துளியும் இல்லாமல், அவள் சுகபோகமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்தவனின் முகம் இறுகியது.
 
 
அதில் கொஞ்சமும் யோசிக்காமல் அவளைத் தரதரவென இழுத்து சென்றவன், ஷவருக்கு அடியில் தள்ளினான் சிந்து. அதில் தலை சுவரில் மோதிக் கொள்ள.. “ஸ்ஸ்..” என்ற முனகலோடு சற்று முன் உள்ளே சென்றிருந்த மாத்திரையின் உதவியால் கண் திறந்திருந்தவள், சில்லெனக் கொட்டிக் கொண்டிருந்த தண்ணீரில் உண்டான நடுக்கத்தோடு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
 
 
அவளின் அந்த நடுக்கமும் பார்வையும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தாரக்கின் மனதை கொஞ்சமாக அமைதியாக்க.. நக்கலான புன்னகையோடு அவளைப் பார்த்தவன், “ஹாலிடேக்கு ரிசார்ட்டுக்கு வந்தது போல நிம்மதியா தூங்கறே..! கொஞ்சமாவது நம்ம வாழ்க்கை என்னாகுமோன்னு உனக்கு ஒரு பயம் இருக்கா..? அப்போ நான் சொன்னது போல இங்கேயே இப்படியே செட்டிலாகலாம்னு தானே முடிவு செஞ்சு இருக்கே..!
அதுக்கு நான் விட மாட்டேன்.. என்னால் இந்தத் தண்டனையை இதுக்கு மேலே அனுபவிக்க முடியாது.. நான் நினைச்சது சீக்கிரம் நடக்கணும்.. புரியுதா..?” என்று மிரட்டியவனின் குரலில் மருண்டு விழித்தவளுக்கு அவன் பேசுவது எதுவுமே புரியவில்லை.
 
 
கிட்டத்தட்ட அவ்வளவு நேரமும் மயக்கநிலையில் இருந்தவளுக்குச் சுற்றுபுறம் புரியவே சில நிமிடங்களானது.
 
 
சிந்து குழப்பமான முகத்தோடு அமர்ந்திருக்க.. வெறுப்பான பார்வையோடு அவளைப் பார்த்தான் தாரக். காய்ச்சலின் காரணமாக அவள் உடல் குளிர்நீரில் வெளிப்படையாக நடுங்க தொடங்கியது. ஆனால் அதையும் நடிப்பாகவே பார்த்தவன், “இந்த நடிப்பெல்லாம் என்கிட்டே வேலைக்கு ஆகாது.. இதனால் எதுவும் மாறாது..” என்றவாறே அவளைத் தூக்கி தோளில் போட்டப்படி படுக்கையை நோக்கி சென்றான் தாரக்.
 

 

 

 



   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 406
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ புது கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
 
MNM - 12 & 13(1)
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 

This post was modified 2 months ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 406
Topic starter  
 
 
நேசம் – 13 (b)
 
பெரும் ஆத்திரத்தோடு சிந்துவை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு வெளியே வந்த தாரக், அவளை அப்படியே படுக்கையில் வீச.. துணி பந்தை போல் அங்கே சுருண்டு விழுந்த சிந்து கிட்டதட்ட அரை மயக்க நிலைக்கு சென்றாள்.
 
 
வழக்கமாக தன் மறுப்போ வெறுப்போ தாரக்கிடம் செல்லுப்படியாகாது என்றாலும் குறைந்த பட்சமாக விழிகளிலாவது தன் மறுப்பை தெரிவிப்பவள், இன்று அதைக் கூட காண்பிக்க முடியாமல் சுருண்டு கிடந்தாள் சிந்து.
 
 
அவளின் இந்த நிலையைக் கூட சிந்துவின் நடிப்பாகவே பார்த்தவன், அவளை நெருங்கிய நொடி தாரக்கின் அலைபேசி அடித்தது. அதில் யோசனையோடு நெற்றியை சுருக்கியவாறே, அதை எடுத்து பார்த்தவன், அலைபேசியில் ஒளிர்ந்த பெயரை கண்டு உடனே அதை எடுத்திருந்தான் தாரக்.
 
 
அந்த பக்கம் சொல்லப்பட்ட செய்தியில் “உடனே வரேன்..” என்று விட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறி இருந்தான் தாரக். ஆனால் அதை கூட உணரும் நிலையில் இல்லாத சிந்து விழிமூடி அப்படியே கிடந்தாள்.
 
 
முன்பே கொதித்துக் கொண்டிருந்த காய்ச்சல், இப்போது குளிர்ந்த நீரில் இத்தனை நேரம் இருந்ததில் அதிகமாகி இருக்க.. உடல் குளிரில் நடுங்கி உடை மாற்ற கூட முடியா நிலையில் நடுக்கத்தோடு கொஞ்சம் கொஞ்சமாக உணர்விழந்துக் கொண்டிருந்தாள் சிந்து.
 
*********
 
அதே நேரம் நாகராஜனின் முன் வந்து நின்ற முத்து, “ண்ணே.. நம்ம ஆளுங்க அவன் வீட்டை கண்டுப்பிடிச்சுட்டாங்களாம்..” என்றிருந்தான்.
அதில் சட்டென உண்டான உற்சாகத்தோடு எழுந்துக் கொண்ட நாகராஜன், “இதுக்கு தான்டா இவ்வளவு நாளா காத்திருந்தேன்.. கிளம்புங்க, நம்ம ஆளுங்களை கூப்பிட்டுக்கோ.. இன்னைக்கு அவனை..” என்று வேட்டியை மடித்துக் கட்டியவாறே முன்னே செல்ல.. முத்து அவன் பின்னே ஓடினான்.
 
 
நாகராஜனை சாப்பிட அழைக்க அங்கே வந்திருந்த சுஜாதா எதேச்சையாக இதையெல்லாம் கேட்டு உறைந்து போய் நின்றிருந்தார். நாகராஜனுக்கு இருக்கும் கொலைவெறிக்கு இப்போது சிந்து மட்டும் அவர் கையில் சிக்கினால் என்னாகுமோ என்ற பயம் தான் அவர் மனதில் இந்த நொடி எழுந்தது.
 
 
சிந்து வேறு ஏதோ ஒரு காரணத்துக்காக இவரிடம் பொய் சொல்லி இருப்பது நினைவுக்கு வந்து சுஜாதாவை நிலைக் கொள்ளாமல் தவிக்க செய்ய.. இதில் செய்வதறியாது திகைத்தவர், வேகமாக தன் மகனை தேடி சென்றார். அருணிடம் உதவி கேட்க நினைத்து சென்றவர், அவன் முன்பே நாகராஜனோடு வாகனத்தில் ஏறி அமர்ந்திருப்பதை கண்டு திகைத்தார்.
 
 
‘இவன் ஏன் இப்படி இருக்கான்..? இப்போ நான் என்ன செய்வேன்..?’ என எண்ணியவராக கைகளை பிசைந்தப்படி சுஜாதா நின்றிருக்கும் போதே தொடர்ச்சியாக மூன்று வாகனங்களும் உறுமி விட்டு அங்கிருந்து நகர்ந்தது.
 
 
அதில் அழுகையோடு அப்படியே சுஜாதா மடங்கி வாயிலில் அமர்ந்து விட.. சற்று நேரத்திற்கு பிறகு அங்கே வந்த விஷ்வா, இந்த நிலையில் சுஜாதாவை கண்டு உண்டான பதட்டத்தோடு அவரை நெருங்கி, “என்னாச்சு பெரியம்மா..?” என்று பதறினான்.
 
 
அவரும் அழுகையோடு அனைத்தையும் சொல்லி முடிக்க.. “அக்கா கிடைச்சுட்டாங்களா..?” என்று முகம் மலர கேட்டவன், சட்டென உண்டான அதிர்வோடு “ஐயோ பெரியப்பா..!!” என்றான் விஷ்வா.
 
 
சுஜாதாவும் ஆமென்பது போல் தலையசைக்க.. “இப்போ அவங்க எல்லாம் அங்கே தான் போய் இருக்காங்களா..?” என்று கவலையோடு கேட்டவன், “அண்ணாகிட்ட சொல்லி ஏதாவது செய்ய சொல்லலாமா பெரியம்மா..?” என்றான் விஷ்வா.
 
 
அதற்கு ஒரு கசப்பான புன்னகையை சிந்திய சுஜாதா, “அவன் தான் வண்டியில் முதலில் ஏறி உட்கார்ந்தான்..” என்றார். அதில் முகம் மாறிய விஷ்வா “ஐயோ இந்த அண்ணா ஏன் தான் இப்படி இருக்காங்களோ..?” என்று கவலையாக.. “அவன் அப்படி இல்லைனா தான் ஆச்சர்யம்..” என்றவர் நேராக எழுந்து சென்று பூஜையறையில் கண்ணீரோடு அமர்ந்து விட்டார்.
 
 
ஊருக்கு வெளியே செல்லும் பாதையில் வேகமாக சென்றுக் கொண்டிருந்த கார்கள் இடையே குறுக்கிட்ட மாடுகளால் கொஞ்சம் தேங்கி நிற்க.. “ஏய் யாருடா அது மாட்டை வழியில் விட்டது..?” என்று குரல் கொடுத்தான் முத்து.
 
 
“ஐயோ இதோ வந்துட்டேங்க..” என எங்கிருந்தோ ஓடி வந்த ஒருவன் மாடுகளை ஒரமாக ஒட்டி செல்ல முயல.. “சீக்கிரம்..” என்றார் கடுப்பாக நாகராஜன். “சரிங்கய்யா..” என பணிவாக சொன்னவன், மாட்டை ஒரமாக நகர்த்த.. “ண்ணே.. நாகராஜ அண்ணே.. உங்களை பார்க்க தான் நினைச்சுட்டு இருந்தேன், ஆனா இவனுங்க உங்களை பார்க்கவே விடலை..” என முழு போதையில் அவரின் முன் வந்து நின்று கும்பிடு போட்டான் சபரி.
 
 
“இவன் வேற..” என முணுமுணுத்தவர், “அடிச்சு விரட்டுங்கடா இந்த நா**” என்று குரல் கொடுக்க.. வண்டியின் பின் இருக்கையில் இருந்தவர்கள் வேகமாக இறங்கி செல்ல.. “அண்ணே அந்த பையன்..” என்று சொல்ல தொடங்கிய சபரியின் வாயை அப்படியே பொத்தி குண்டு கட்டாக இருவர் அவனை தூக்கி சென்றனர்.
 
 
“மனுஷனோட நிலைமை புரியாம இவன் வேற வந்து அவனை பார்த்தேன்னு இவனை தெரியும்னு குடிச்சுட்டு உளறிட்டு..” என சலித்துக் கொண்டவராக, முத்துவை பார்த்து கையசைக்க.. வண்டி வேகமாக அங்கிருந்து கிளம்பியது.
 
************
 
மாலையில் இருந்து குமரேசனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனித்துக் கொண்டிருந்த சாரதா, அப்போதே வெளியே வந்தார். வாணி வீட்டுக்கு கிளம்ப தயாராக இருக்க.. “வேலை எல்லாம் முடிஞ்சுதா வாணி..? சாப்பிட்டியா..? பாபு சாப்பிட்டாச்சா..?” என அக்கறையாக விசாரித்தார்.
 
 
“இல்லைம்மா.. நான் சாப்பாடு எடுத்துக்கிட்டேன், வீட்டில் போய் சாப்பிடறேன்..” என்றாள் வாணி. சரியென சாரதா சுடுதண்ணீர் வைக்க.. “ஐயாவுக்கு இப்போ எப்படி இருக்கும்மா..?” என்றாள் வாணி.
“ஹ்ம்ம், அப்படியே தான் இருக்கு..” எனும் போதே சாரதாவின் முகம் சோர்ந்து போனது. “கவலைப்படாதீங்கம்மா.. சீக்கிரம் சரியாகிடும்..” என்றாள் வாணி.
 
 
அப்போதே நினைவு வந்தவராக “அந்த பொண்ணு எப்படி இருக்கு..? சாப்பிட்டுதா..?” என்றார் சாரதா. “தெரியலைம்மா..” என்றவளை புரியாமல் திரும்பி பார்த்தவர், “மருந்து கொடுத்தோமே சரியாச்சான்னு நீ போய் பார்க்காலையா..?” என்றார்.
 
 
“இல்லைம்மா.. சார் வீட்டுக்கு வந்தார்..” என வாணி தயங்கி இழுக்க.. தாரக் வழக்கமாக வரும் நேரம் இதுவல்லவே என்று நினைத்தவராக “எப்போ..?” என்றார் சாரதா.
 
 
“ஒருமணி நேரம் முன்னே..” என்ற வாணியை புரியாமல் பார்த்தவர், “இப்போ தம்பி எங்கே இருக்கு..?” என்றார். “கொஞ்ச நேரத்திலேயே கிளம்பிட்டார் ம்மா..” என்றாள் வாணி.
 
 
“இப்போ எப்படி இருக்கான்னு தெரியலையே..!” என சாரதா சிந்துவின் அறையை நோக்கி செல்ல.. உடன் செல்வதா வேண்டாமா என தெரியாமல் அப்படியே நின்றாள் வாணி.
 
 
சிந்துவின் அறைக்குள் நுழைந்தவர், அங்கே சிந்து இருந்த நிலையை கண்டு பதறி வாணியை அழைக்க.. அவளும் ஓடினாள். அங்கே சுயநினைவே இல்லாமல் சிந்து சுருண்டு கிடக்க.. “ஏய் பொண்ணே.. எழுந்திரு..” என அவளின் கன்னம் தட்டி எழுப்ப முயன்றுக் கொண்டிருந்தார் சாரதா.
 
 
அதற்குள் அவளின் நிலையை கண்டிருந்த வாணி, “காய்ச்சல் அதிகமாகி மயங்கி இருக்காங்கம்மா.. குளிரில் உடம்பும் தூக்கி போடுது..” என்றவாறே போர்வையால் அவள் உடம்பை மூட முயல.. “இப்போ என்ன செய்யறது..? டாக்டரை கூப்பிடலாமா..?” என்று தொடங்கியவர், பின் அப்படியே நிறுத்தி செய்வதறியாது விழித்தார்.
அதை புரிந்தது போல் “ம்மா கொஞ்சம் வழி விடுங்க..” என்ற வாணி வேகமாக சிந்துவின் உடையை மாற்றி, அங்கிருந்த துணியை நனைத்து வேகமாக சிந்துவின் நெற்றியில் போட்டாள் வாணி.
 
 
அதேநேரம் அவசரமாக தாரக்கிற்கு அழைக்க முயன்ற சாரதா அவன் தொடர்பு எல்லையில் இல்லை என்ற தகவலே தொடர்ந்து வந்ததில் சோர்ந்து போனவராக “ஐயோ இப்போ என்ன செய்யறதுன்னு தெரியலையே..!” என்றார்.
 
 
“நான் வேணும்னா கஷாயம் போட்டு கொடுக்கட்டுமாம்மா..?” என்ற வாணியை பார்த்தவர், “காய்ச்சல் கொதிக்கறதை பார்த்தா இந்த கஷாயத்துக்கு எல்லாம் கேட்குமான்னு தெரியலையே..?” என்றார் சாரதா.
 
 
“இல்லைம்மா.. எங்க தாத்தா ஊரில் நாட்டு வைத்தியர், எனக்கு கொஞ்சம் அதெல்லாம் தெரியும்..” என்ற வாணி வேகமாக சென்று பாபுவிடம் சில பொருட்களை வாங்கி வர சொல்ல.. சிந்துவின் நிலையை கண்டு கவலையானார் சாரதா.
 
 
அடுத்த அரைமணியில் தன் மேல் சிந்துவை சாய்த்து அமர வைத்தப்படியே இளஞ்சூடான பதத்தில் கஷாயத்தை கொஞ்சம் கொஞ்சமாக புகட்டினாள் வாணி. 
 
 
இதற்கிடையில் சாரதா சென்று தன் கணவருக்கு மருந்துக் கொடுத்து உறங்க வைத்து விட்டு வந்திருந்தார். சிந்துவின் உடல்நிலையில் கொஞ்சமும் முன்னேற்றம் இல்லாததை கண்டு, அவர் தவிப்போடு பார்த்திருக்க.. “இவங்க இப்போதைக்கு கண்ணு திறக்க மாட்டாங்கன்னு தோணுது ம்மா..” என்றாள் வாணி.
 
 
“என்ன வாணி சொல்றே..? இப்போ நாம என்ன செய்யறது..?” என்று கவலையானார் சாரதா. “தெரியலை ம்மா.. ஆனா காய்ச்சல் கொஞ்சமாவது குறைஞ்சா தான் நல்லது.. இல்லைனா பெரிய பிரச்சனையாகிடும்..” என்றாள் வாணி.
 
 
“ஐயோ..” என பதட்டமான சாரதா, மீண்டும் தாரக்கை அழைக்க முயல.. இப்போதும் தொடர்பு கிடைக்கவே இல்லை. “வாணி.. தம்பியை கூப்பிடவே முடியலை.. எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு, இன்னைக்கு நீ இங்கேயே தங்கிடேன்..” என்றார்.
 
 
அதில் யோசனையான வாணி, “சரிம்மா.. இருங்க அவர்கிட்ட சொல்லி வீட்டுக்கு அனுப்பிட்டு வந்துடறேன்..” என வெளியே எழுந்து செல்ல.. தன் முன் விழிமூடி சரிந்திருந்தவளை வேதனையோடு பார்த்தார் சாரதா.
 
 
‘ஏன்டி பொண்ணே உனக்கு இவ்வளவு கஷ்டம்..? அப்படி என்ன வரம் வாங்கிட்டு வந்தே..? இதையெல்லாம் பார்க்கணும்னு எனக்கும் விதிச்சு இருக்கோ என்னவோ..?’ என மனதிற்குள் எண்ணியவாறே சிந்துவின் நெற்றியை வருட தன் கரத்தை மெல்ல கொண்டு சென்றவர், அதே நேரம் வாணி அறைக்குள் வருவதை கண்டு சட்டென கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டார்.
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 
 
 
 
 
 
 
 
 

This post was modified 2 months ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 406
Topic starter  
 
 
நேசம் - 14
 
நாகராஜன் குழுவினர் அந்த பிரம்மாண்ட வீட்டின் முன் சென்று காரை நிறுத்தினர். சுற்றிலும் இருந்த வீடுகளையும் அந்தப் பகுதியையும் ஒருமுறை விழிகளால் வலம் வந்த நாகராஜன், “நல்லா தெரியுமாடா..? அந்தப் பைய இங்கே தான் இருக்கானா..?” என்றார். 
 
 
“ஆமாண்ணே.. நம்ம பசங்க நல்லா விசாரிச்சு தான் கண்டுபிடிச்சுருக்கானுங்க..” என்று முத்து பணிவோடு சொல்லவும், அதில் யோசனையோடு தாடையை தடவியவர், அந்த வீட்டை கூர்ந்து பார்த்தபடியே “அந்த பைய வந்த காரும் கொஞ்சம் பெருசு தான்.. இவன் சொன்னதை வெச்சு பார்த்தா பிசினஸ்லேயும் பெரிய ஆளு தான் போல..” என்றார். 
 
 
அதில் அவர் மனதில் நினைப்பதை அறிந்து கொள்ள முடியாமல் குழப்பமாக பார்த்த முத்து “என்ன ண்ணே..?” எனவும் “ஒண்ணுமில்லை, சரி வாங்க உள்ளே போவோம்..” என்று முன்னே நடந்தார். 
 
 
அங்கு செக்யூரிட்டி கூண்டிலிருந்து வெளியில் வந்த ஜெய்சிங் “யார பாக்கோணும்..” என்று உடைந்த தமிழில் கேட்கவும், எரிச்சலானவர் “அந்த பைய பேர் என்னடா..?” என முத்துவிடம் திரும்பி கேட்க.. அவனோ தலையை சொறிந்தான்.
 
 
“ஏன்டா பேர் கூட தெரியாதா உங்களுக்கு..?” என நாகராஜன் சிடுசிடுக்க.. “இல்லை ண்ணே.. என்னவோ வரும் இங்கே நிற்குது, சட்டுன்னு வரலை..” என அவன் தொண்டைக்குழியை காண்பித்து சொல்ல.. அதற்குள் “தாரக்..” என்றிருந்தான் அருண். 
 
 
அதில் மகனின் பக்கம் பார்வையை திருப்பியவர் “நல்லா தெரியுமா..?” எனவும் “யுவன் உங்க கூட பேசும் போது கேட்டேன்ப்பா.. தாரக்குன்னு தான் சொன்ன ஞாபகம்..” என்றான் அருண். 
 
 
“ஹ்ம்ம்.. “ என்றவர் அதே வேகத்தில் திரும்பி செக்யூரிட்டியை பார்த்து “தாரக் உள்ளே இருக்கானா..? “ என்று அதிகார தோணியில் கேட்கவும், தன் முதலாளியை இப்படி ஒருவர் வந்து மரியாதை இல்லாமல் அழைப்பது இதுவே முதல் முறை என்பதால் யோசனையான ஜெய்சிங் “சாப் உள்ளே இருக்கார், உங்ககிட்ட அப்பாயின்மென்ட் இருக்கா..?” என்றான். 
 
 
“அப்பாயின்மென்ட்டும் இல்லை, ஆயின்மெண்ட்டும் இல்லை.. கதவை திறந்து விடு..” என அவர் ஆத்திரத்தில் சிடுசிடுக்கவும், “சாப் அப்படில்லாம் யாரையும் உள்ள விட முடியாது.. உங்கள எங்க சாப் வர சொன்னாரா..?” என்றான்.
 
 
இதில் நாகராஜனின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போனது. “என்னை எவனும் வர சொல்லலை.. நானா தான் வந்தேன்.. கதவை திற..” என்று அவர் தன் திமிர் முழுவதையும் குரலில் கலந்து பேசினார்.
 
 
இதில் எதுவோ சரியில்லை என நொடியில் புரிந்து கொண்ட ஜெய்சிங் “அப்படி எல்லாம் திறக்க முடியாது சாப்..” என்று கடினமான குரலில் சொல்லியவாறே கதவை மறித்தது போல் வந்து நின்றான்.
 
 
“ஹேய் யார்ரா இவன் கோமாளி..? நம்ம வழியை மறிக்கறான்..? நாம யாருன்னு இவனுக்கு காட்டுங்கடா..” என நாகராஜன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, உள்ளே இருந்து தாரக்கின் உதவியாளர் ராம் வெளியில் வந்தான்.
 
 
“ஜெய்சிங் என்ன இங்கே பிரச்சனை..?” என்று ராம் கேட்கவும், “சாப் இவங்க பிரச்சனை செய்றாங்க.. இவங்ககிட்ட அப்பாயிண்ட்மெண்ட் இல்லை, நம்ம சாப் பாக்கணும்னு சொல்றாரு..” என்றான் ஜெய்சிங்.
 
 
“பிரச்சனை செய்ய தான்டா வந்திருக்கோம்..” என நாகராஜன் ஜெய்சிங்கை தள்ளி கொண்டு உள்ளே நுழைய முயல.. சட்டென தன் உடையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவரின் முன் நீட்டி இருந்தான் ஜெய்சிங்.
 
 
அதில் மிரண்டு ஒரு நொடி நின்றாலும் “ஹேய்.. இதையெல்லாம் பார்த்து பயப்பட, எங்களை பார்த்தா குழந்தை மாதிரி தெரியுதா..? உன்னால் முடிஞ்சதை செய்டா..” என மேலும் நாகராஜன் உள்ளே நுழைய முயல.. “இனி ஒரு அடி அவங்க உள்ளே எடுத்து வெச்சாலும் யோசிக்காம சுட்டுடு ஜெய்சிங்..” என்ற குரல் பின்னே இருந்து கேட்டது.
அதில் அனைவரின் கவனமும் அந்தப் பக்கம் திரும்ப, கொஞ்சமும் பதட்டமில்லா உடல் மொழியோடு தன் பாக்கெட்டில் கைவிட்டபடி வாயிற் கதவுக்கு பக்கத்தில் நின்றிருந்தான் தாரக்.
 
 
அவனை அங்கு கண்டதும் நாகராஜின் ஆத்திரம் உச்சத்திற்கு சென்றது. அன்றைய நிகழ்வுக்குப் பிறகு இப்போதே தாரக்கை நாகராஜ் நேரில் பார்க்கிறார். அதில் உண்டான ஆத்திரத்தோடு வேகமாக உள்ளே நுழைய முயன்றவரை ஜெய்சிங் தன் முழு பலத்தையும் பயன்படுத்தி தடுக்க முயல.. அங்கு ஒரு தள்ளு முள்ளு நடந்தது.
 
 
“ஏய் எங்க மேலேயே கை வைக்கிறியா..?” என்று நாகராஜனின் ஆட்கள் துள்ள.. ‘முடிந்தால் என்னை மீறி உள்ளே போ பார்க்கலாம்..!’ என கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் ஒற்றை ஆளாய் எதிர்த்து நின்றான் ஜெய்சிங்.
 
 
“ராம் போலீஸுக்கு போன் செய்.. நம்ம வீட்டு முன்னே சில ரவுடிங்க அறிவாளோட வந்து பிரச்சனை செய்றாங்கன்னு சொல்லு..” என்ற தாரக்கின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, உடனே ராம் தன் அலைபேசியை எடுத்துக்கொண்டு ஓரமாகச் செல்ல.. “கூப்பிடுடா.. யாரை வேணாலும் கூப்பிடு.. என் வீட்டுக்குள்ளே வந்து என் பொண்ணை தூக்கிட்டு போன உன்னை பாராட்டி விழா எடுப்பாங்களா..?” என்று கத்தினார் நாகராஜன்.
 
 
“அதான் உன் பொண்ணே ஆசைப்பட்டு, விருப்பப்பட்டு, என்னை காதலிச்சு நானே வேணும்னு தான் என் கூட கிளம்பி வந்ததா சொல்லிட்டாளே..! இதுக்கும் மேலே என்ன வேணும் உனக்கு..?” என்றான் நக்கலாக தாரக்.
 
 
“அவ சொல்லிட்டா அப்படியே விட்டுட முடியுமா..? என்னை ஊர் முன்னே தலை குனிய வெச்ச உங்க இரண்டு பேரையும் நான் சும்மா விடமாட்டேன்டா.. “ என நாகராஜன் கொந்தளிக்க.. “உன்னால் முடிஞ்சதை பார்த்துக்க.. “ என்று விட்டு தாரக் உள்ளே செல்ல.. “திமிரை பார்த்தியாடா அவனுக்கு..!” என திரும்பி தன் அடியாட்களிடம் கத்தியவர், ஜெய்சிங்கை காண்பித்து “இவனை அடிச்சு தூக்கி போட்டுட்டு உள்ளே போய் அவனை இழுத்துட்டு வாங்கடா..” என கட்டளையிட்டார்.  
 
 
அதேநேரம் “அப்பா..” என்ற அருணின் குரல் யோசனையோடு ஒலிக்க.. அவனை திரும்பி நாகராஜன் ‘என்ன..?’ என்பது போல் முறைப்பாக பார்த்தார். “இல்லை நாம இத்தனை பேர் பொருளோடு வந்து இருக்கோம், அவன் கொஞ்சம் கூட பதட்டமாகவோ பயப்படவோ இல்லை.. முடிஞ்சா வந்து பாருங்கன்னு சொல்லிட்டு உள்ளே போய்ட்டான், இத்தனைக்கும் இவன் ஒரே ஆளு.. நாம நினைச்சா இவனை அஞ்சு நிமிஷத்தில் அடிச்சு ஓரம் போட்டுட முடியும்னு அவனுக்குமே தெரியும்.. ஆனாலும் இவ்வளவு தைரியமா பேசிட்டு போறான்னா எனக்கு ஏதோ தப்பா தோணுது ப்பா..” என்றான் அருண்.
“என்ன தப்பா தோணுது..? நீ என்ன அவனுக்கு விளம்பரம் ஓட்டிட்டு இருக்கியா..? பெருசா என்ன தைரியம் இருந்திட போகுது..! போலீஸை கூப்பிட சொல்லி இருக்கான் இல்லை, அந்த தைரியத்தில் தான் உள்ளே போய் இருப்பான்..” என்றார் எரிச்சலோடு நாகராஜன்.
 
 
“அதெல்லாம் சரிப்பா.. ஆனாலும் ஏதோ ஒண்ணு இடிக்குது, அவன் முகத்தை பாருங்க கொஞ்சம் கூட பதட்டமே இல்லை.. அவன் ஏதோ பிளான் செய்யறான்னு எனக்கு தோணுது ப்பா என்றான்..” அருண்.
“என்னடா பில்டப் எல்லாம் ஓவரா இருக்கு..? விட்டா அவனுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிப்பே போல..” என நாகராஜன் சிடுசிடுக்க.. “அப்படி இல்லை ப்பா.. ஆனா ஏதோ தப்பா தோணுது..” என்றான் அருண்.
 
 
அதற்கு கோபமாக ஏதோ சொல்ல வந்த நாகராஜனை இடையிட்டு இருந்த முத்து “ண்ணே எனக்கும் அப்படித்தான் தோணுது..” என்றான். “என்னடா விளையாடுறீங்களா..? ஆளாளுக்கு அவனுக்கு சப்போர்ட் செஞ்சுட்டு இருக்கீங்க..” என்றார்.
 
 
“சப்போர்ட் இல்லை ண்ணே முன்னெச்சரிக்கை..” என்று முத்து சொல்லிக் கொண்டிருக்க.. அதே நேரம் ஒரு போலீஸ் ஜீப் வந்து வீட்டின் முன்னே நின்றது. உடனே கையில் இருந்த ஆயுதங்களை பின்னே மறைத்தனர் நாகராஜனின் ஆட்கள். 
 
 
அதை பார்த்தவாறே வந்த இன்ஸ்பெக்டர் “யார் நீங்க இங்கே என்ன செஞ்சுட்டு இருக்கீங்க..? கையில் ஆயுதத்தோடு வந்து இருக்கீங்க, என்ன விஷயம்..?” என்று மிரட்டலாக கேட்க.. “என் பொண்ணை கூட்டிட்டு போக வந்தேன்..” என்றார் நாகராஜன். 
 
 
“பொண்ணா..! எந்த பொண்ணு..? பொண்ணை பார்க்க இப்படித்தான் பொருளோடு வருவாங்களா..?” என்று நாகராஜனின் பேச்சை நம்பாமல் இன்ஸ்பெக்டர் கேட்கவும், “இந்த வீட்டில் இருக்க பைய என் பொண்ணை தூக்கிட்டு வந்துட்டான்.. அதான் அவளை கூட்டிட்டு போக வந்து இருக்கேன்.. அவன் ஏதாவது பிரச்சனை செஞ்சா தேவைப்படுமேன்னு தான் இதெல்லாம் எடுத்துட்டு வந்தோம்.. இதை வெச்சு நாங்க எதுவும் செய்யப் போறது இல்லை..” என்று சமாளிக்க முயன்றார் நாகராஜன்.
 
 
ஆனால் அவர் சொல்வதை நம்பாத இன்ஸ்பெக்டர் “சரி எதுவா இருந்தாலும் ஸ்டேஷனில் போய் பேசிக்கலாம் கிளம்புங்க..” என்றார். “ஏன்..? எதுக்கு..? நாங்க ஏன் வரணும்..? அதெல்லாம் முடியாது..” என நாகராஜன் பிரச்சனை செய்ய.. “கும்பலா வந்து கொலை மிரட்டல் கொடுத்து இருக்கீங்கன்னு இந்த வீட்டில் இருக்கிறவர் உங்க மேலே கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கார்..” என்றார் இன்ஸ்பெக்டர்.
 
 
அதில் அதுவரை ஓரளவு சமாளிக்க முயன்று கொண்டிருந்த நாகராஜன் “என்னது கொலை மிரட்டலா..? ஆமாயா கொலை மிரட்டல் தான் கொடுத்தேன், என்ன இப்போ..? உன் வீட்டு பொண்ணை தூக்கிட்டு போனா நீ சும்மா விட்டுடுவியா..! கொலை மிரட்டல் தான்.. மிரட்டல் என்ன அவனை வெளியே இழுத்து போட்டு வெட்டிட்டு போக தான் வந்தேன்..” என்று தன் கட்டுப்பாட்டை இழந்து கத்தி இருந்தார்.
 
 
“நீங்களே வாக்குமூலம் கொடுத்துட்டீங்க, இனி என்ன..? எல்லாரையும் வண்டியில் ஏத்துங்க..” என்று தன்னோடு வந்த கான்ஸ்டபிளை பார்த்து இன்ஸ்பெக்டர் கட்டளையிடவும், “அவன் என் பொண்ணை தூக்கிட்டு வந்து இருக்கான்னு சொல்றேன், அதை பத்தி கேட்க கூட இல்லை.. எங்களை அரெஸ்ட் செய்யறதிலேயே இருக்கீங்களே..” என்று நாகராஜன் கோபமாக கேட்கவும், “எதுவா இருந்தாலும் ஸ்டேஷனில் போய் பேசிக்கலாம்.. “ என்று விட்டு அங்கே நிற்காமல் இன்ஸ்பெக்டர் நகர.. நாகராஜன் அதன் பின் கத்தியது எல்லாம் காற்றில் கரைந்து காணாமல் போனது. 
 
 
நான்கு காவலர்கள் சேர்ந்து இவர்களை மொத்தமாக வண்டியில் ஏற்றிக் கொண்டு செல்ல முயல.. அவர்களோடு செல்ல மறுத்து நாகராஜன் பிரச்சனை செய்து கொண்டிருந்தார். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாத காவலர்கள் குற்றவாளியை நடத்துவது போல கிட்டத்தட்ட அடித்து அவரை வண்டியில் ஏற்றுக் கொண்டு சென்றனர்.
 
 
இதை பெரும் அவமானமாக நினைத்த நாகராஜன் ‘உன்னை விட மாட்டேன்டா..’ என்று வாய்க்குள் முணங்கிக் கொண்டு அமர்ந்திருக்க.. ‘நான் அப்போவே சொன்னேன் கேட்டீங்களா..!’ என்பது போல் அவரைப் பார்த்தான் அருண். 
 
 
நாகராஜனை பொறுத்தவரை இது அவருக்கு பெரும் அவமானம். இதுவரை அவர் நினைத்தபடி தான் எல்லாம் நடந்திருக்கிறது. மற்றவர்களை தான் அவர் ஆட்டிப்படைத்துக் கொண்டு இருந்துள்ளார். ஆனால் முதல் முறையாக அவர் நினைப்பது எல்லாம் இவனிடம் மட்டும் தவறாகிக் கொண்டிருந்தது. 
 
 
அதோடு வாழ்க்கையில் அவர் இதுவரை அனுபவிக்காத அவமானங்கள் எல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க.. அதற்கு அனைத்தும் ஒருவனே காரணம் என்பது வேறு அவரை வெறியாக்கிக் கொண்டிருந்தது. ‘உன் சாவு என் கையில் தான்டா..’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டவர் முகம் இறுக அமர்ந்திருந்தார். 
 
 
தன் முன் வந்து நின்ற ராமை விழிகளை உயர்த்தி ‘என்ன..?’ என்பது போல் தாரக் பார்க்க.. “போலீஸ் அவங்களை அரெஸ்ட் செஞ்சு கூட்டிட்டு போய்ட்டாங்க சார்..” என்றான் ராம். ‘அவ்வளவுதானா..?’ என்பது போல் புருவத்தை உயிர்த்த.. “ஸ்டேஷனுக்கு போய் தரமா கவனிப்பாங்கன்னு நினைக்கிறேன் சார்.. “ என்றான் சிறு புன்னகையோடு ராம். 
 
 
“சவுண்ட்ஸ் குட் மேன்.. இன்ஸ்பெக்டருக்கு என்ன தேவையோ அதை பார்த்து செஞ்சுடு.. அவங்களை சிறப்பா கவனிக்கணும்னு என் சார்பா அழுத்தி ஒருமுறை சொல்லிடு.. “ என்றவனின் இதழின் ஓரம் நக்கல் புன்னகை ஒன்று வழிந்தது. 
 
*******
 
நள்ளிரவாகியும் சிந்துவின் காய்ச்சல் கொஞ்சமும் குறையவில்லை. இதில் கவலையான சாரதா “இந்த தீபன் தம்பி எங்கே போச்சுன்னு தெரியலையே..! இந்த பொண்ணுக்கு வேற இப்படி கொதிக்குது, நாம டாக்டரை கூப்பிடவும் பயமா இருக்கு..” என்று செய்வதறியாது கைகளை பிசைந்தபடி நின்றார் சாரதா.
 
 
“உள்ளே போயிருக்க கஷாயம் வேலை செய்ய நேரம் எடுக்கும் இல்லைம்மா.. காய்ச்சல் அதிகமா இருக்கே, கவலைப்படாம இருங்க சீக்கிரம் குறைஞ்சுடும்.. “ என்று வாணி தைரியம் கொடுக்க.. “நிஜமா தான் சொல்றியா..? சரியாயிடுமா..? இல்லை இந்த பொண்ணுக்கு ஏதாவது ஆகிட போகுது வாணி எனக்கு பதட்டமா இருக்கு.. “ என்றார் சாரதா.
 
 
“இல்லை ம்மா எனக்கு நல்லா தெரியும், இந்த கஷாயம் கண்டிப்பா வேலை செய்யும்.. கொஞ்ச நேரம் எடுக்குது அவ்வளவு தான், நாம ஆரம்பத்திலேயே பார்க்கலையே.. அதான் வேற ஒண்ணுமில்லை, கவலையே படாதீங்க இன்னும் இரண்டு மணி நேரத்தில் எல்லாம் சரியாகிவிடும் பாருங்க..” என்றாள் வாணி. 
 
 
“என்னமோ போ.. நீ சொல்ற மாதிரி நடந்தா உன் வாய்க்கு சக்கரை போடறேன்..” என சாரதா கவலையோடு சொல்ல.. வாணியின் பார்வை தயக்கத்தோடு ஒருமுறை சாரதாவின் மேல் படிந்து மீண்டது. ஆனால் அவள் எதுவும் கேட்காமல் திரும்பிக் கொள்ள.. அதை கவனித்திருந்த சாரதா “என்ன இந்த பிள்ளைக்கு இவ்வளவு கவலைபடற நீ ஏன் இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்க விட்டு இருக்கேன்னு தானே கேட்க நினைக்கறே..?” என்றார்.
 
 
“இல்லை ம்மா.. நான் ஏன் அதெல்லாம் கேட்க போறேன்.. “ என்று வாணி உடனே பின்வாங்க.. “நீ கேட்கலாம்.. கேட்டாலும் தப்பில்லை, யாராயிருந்தாலும் அப்படி தான் கேட்பாங்க.. ஆனா நிஜத்தை சொல்லணும்னா முழு மனசோட இந்த பிள்ளையை கஷ்டப்படுத்தணும்னு நாங்க யாருமே நினைக்கலை.. எங்களுக்குள்ளே இருக்க கோவம் பழி வெறி தான் இதை செய்ய வைக்குது.. 
 
 
இதை தவிர எங்களுக்கு வேற வழியும் தெரியலை.. முள்ளை முள்ளால் தானே எடுக்க முடியும்..? வைரத்தை வைரத்தால் தானே அறுக்க முடியும்..? இதுவும் அது போல தான், தெரிஞ்சே செய்யற பாவம்.. இதுக்கான பலன் என்னவா இருந்தாலும் ஏத்துக்க நான் தயாரா இருக்கேன்.. ஆனா இந்த பிள்ளைக்கு எதுவும் ஆகிட்டா என்னால் அதை தாங்கிக்க முடியாது..” என்று அவர் தன் போக்கில் சொல்லிக் கொண்டிருக்க.. இடையிட்டு எதுவும் பேசவோ கேட்கவோ வாணி முயலவில்லை. 
 
 
தன் இடம் தெரிந்து அவள் நடந்து கொள்ள.. ஒரு பெருமூச்சோடு அங்கிருந்து எழுந்தவர் “சரி நான் போய் அவரு எப்படி இருக்காருன்னு பார்த்துட்டு வரேன்..” என எழுந்தார் சாரதா.
 
 
“ஐயாவுக்கு இப்போ பரவாயில்லையா ம்மா.. “ என்று ஈர துணியால் சிந்துவின் நெற்றி முகம் கைகளை துடைத்தபடியே வாணி கேட்கவும், “முன்னேக்கு இப்போ பரவாயில்லைன்னு சொல்லலாம்.. வேற என்ன சொல்ல..? இதையெல்லாம் பார்க்கும் போது தான் அவனை..” என்று பல்லை கடித்தவர், வேறு எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நகர.. ‘ஏதோ பெருசா பாதிக்கப்பட்டிருப்பாங்க போல..!’ என்று தனக்குள்ளயே மெல்லிய குரலில் முணுமுணுத்தாள் வாணி.
 
 
அதேநேரம் வீட்டிற்குள் விறுவிறுவென நுழைந்த தாரக் சிந்துவின் அறையில் இருந்து சாரதா கவலையான முகத்தோடு வெளியில் வருவதை கண்டு நெற்றியை சுருக்கினான். ‘இந்த நேரத்தில் இங்கே என்ன செய்யறாங்க..?’ என்ற எண்ணத்தோடே “சாரதாம்மா..” என குரல் கொடுத்தான். 
 
 
“தீபன் தம்பி வந்துட்டியா..? எவ்வளவு நேரமா உன்னை கூப்பிட முயற்சி செஞ்சுட்டு இருக்கேன் தெரியுமா..?” எனவும், “என்னாச்சு ம்மா ஐயாவுக்கு உடம்பு எதுவும்..” என்று பதறினான் தாரக். “அதெல்லாம் இல்லை..” என்றவர், பின் நிதானமாகி “அவருக்கும் கொஞ்சம் முடியலை தான்.. ஆனா நான் கூப்பிட்டது அதுக்காக இல்லை, அந்த பொண்ணு ரொம்ப முடியாம கிடக்கு..” என்றார் சாரதா.
 
 
அதில் கேள்வியாக சிந்துவின் அறை இருந்த பக்கம் திரும்பியவன் “ஏன் என்னாச்சு..?” எனவும் “காய்ச்சல் கொதிக்குது, எவ்வளவு நேரமா அப்படி இருக்கான்னு தெரியலை.. இதில்..” என்றவர், அவள் இருந்த நிலையை உணர்ந்து அடுத்து எதுவும் பேச முடியாமல் தயங்கி அப்படியே நிறுத்த.. அதில் அவரை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் பார்வை திருப்பிக் கொண்டவன் “சரி நான் பார்க்கறேன்..” என்று உள்ளே நுழைய.. அதற்குள் இவர்களின் பேச்சு சத்தம் கேட்டு எழுந்து நின்றிருந்தாள் வாணி. 
 
 
அவளை உள்ளே கண்டதும் கேள்வியாக விழிகளை சுருக்கியவன் சாரதாவை திரும்பி பார்த்தான். வழக்கமாக வாணியும் பாபுவும் இரவில் இங்கே தங்குவது கிடையாது. அதில் உண்டான கேள்வியோடு அவன் சாரதாவை திரும்பிப் பார்த்திருக்க.. “அந்த புள்ளைக்கு ரொம்ப முடியலை தம்பி.. எனக்கு என்ன செய்யறதுனே தெரியலை, ரொம்ப பதட்டமாகி போச்சு.. அப்பறம் வாணி தான் கஷாயம் வெச்சு கொடுத்தா..” என்றவர் “நாம டாக்டரையும் கூப்பிட முடியாது இல்லையா..” என்றும் சேர்த்து சொல்ல.. புரிந்தது என்பது போல் தலையசைத்தவன் “கூப்பிட முடியாதுன்னு எல்லாம் எதுவுமில்லை, வேற வழி இல்லைனா நமக்கு சரிப்பட்டு வருவது போல யாரையாவது வர வெச்சுக்கலாம் தப்பில்லை..” என்றான் தாரக்.
“ஓ, அதுக்குத்தான் உனக்கு கூப்பிட அத்தனை முறை முயற்சி செஞ்சேன்.. ஆனா போன் ரீச் ஆகவே இல்லை..” என்ற சாரதாவை சிறு தலையசைப்போடு பார்த்து “கொஞ்சம் வேலையா இருந்தேன்.. இப்போ என்ன டாக்டரை வர வைக்கணுமா..?” எனவும், சாரதா வாணியின் பக்கம் திரும்பினார். 
 
 
அவளோ “இல்லை வேண்டாம் ம்மா.. காய்ச்சல் குறைய ஆரம்பிச்சுருக்கு, இப்படியே இன்னும் இரண்டு நாள் இந்த கஷாயம் குடிச்சா சரியாகிடும்.. என்ன முழுசா ஓய்வில் இருக்கணும்.. “ என்றவள் தயக்கத்தோடு தாரக்கை பார்த்தபடி சொல்ல.. அவள் சொல்ல வருவது அவனுக்கும் புரிந்தது.
 
 
“சரி பார்த்துக்கோங்க, ஏதாவது வேணும்னா சொல்லுங்க.. டாக்டர் கூப்பிடணும்னாலும் பரவாயில்லை பார்த்துக்கலாம்..” என்று சாரதாவிடம் சொல்லியவன், “நான் ஐயாவை பார்க்கறேன்..” என்று முன்னே செல்ல.. “ராத்திரி சரியா தூங்க முடியாம நிறைய அவஸ்தை பட்டார்..” என மெல்லிய குரலில் சொல்லியவாறே தாரக்கை பின்தொடர்ந்தார் சாரதா. 
 
 
“ஓ, இப்போ எப்படி இருக்கு..?” என்று அவன் கேட்கவும் “இப்போ தூங்கிட்டார், அது போதும் தூங்கும் வரைக்கும் தான் கஷ்டம்.. “ என சாரதா சொல்ல.. “சரி பார்த்துக்கோங்க, மருந்து இருக்கா..?” என அக்கறையாக தாரக் விசாரிக்கவும், “அதெல்லாம் நிறையவே இருக்கு தம்பி, ஏனோ மனசு தான் ஒரு மாதிரி இருக்கு..” என்றார் சாரதா. 
 
 
“அதெல்லாம் நீங்க கவலைப்படாதீங்க ஐயாவுக்கு எதுவும் ஆகாது, நான் இருக்கேன் இல்லை.. நான் பார்த்துக்குறேன்..” என ஆறுதலாக தாரக் சொல்லவும், பதிலினின்றி சாரதா கையை பிசைந்தபடி நின்றிருந்தாலும் அவரின் பார்வை சிந்துவின் அறைப்பக்கம் ஒருமுறை சென்று மீண்டது.
 
 
அதை தாருக்கும் சரியாக கவனித்திருந்தான். ஆனாலும் அதைப்பற்றி பேச விரும்பாமல் முற்றிலும் அதை தவிர்த்தவன், “சரி நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க, கவலைப்படாம இருங்க.. தப்பா எதுவும் நடக்காது..” என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல.. “இதெல்லாம் வேண்டாம்னு சொல்ல எனக்கே மனசு வரலை.. இப்படி இரண்டு வேற வேற மனநிலையில் தவிச்சுட்டு இருக்கேன்.. அந்த தம்பிக்கு எப்படி இருக்கும்..?” என்று எண்ணியவாறே அறைக்குள் நுழைந்தார் சாரதா. 
 
 
இங்கு தன் அறைக்குள் நுழைந்த தாரக் மனமும் உடலும் இறுக அப்படியே சோர்வோடு படுக்கையில் சரிந்தான். அவனைப் பொறுத்தவரை உறக்கமெல்லாம் தூரப் போய் பலகாலமாகி இருந்தது. அவ்வப்போது உடல் அசதிக்காக ஓய்வு எடுக்க மட்டுமே படுக்கையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் பலகாலமாக தாரக். 
 
 
இப்போதும் அப்படியே படுத்திருந்தவன், மனம் எதையெதையோ நினைத்து பாரமாக.. சட்டென எழுந்து கொண்டவன் விரட்டென வீட்டில் இருந்து வெளியேறியிருந்தான். கார் கிளம்பிச் சென்ற வேகத்தை கண்டே திடுக்கிட்டிருந்த வாணி ‘இவர்கிட்ட என்னன்னு இந்த புள்ள வாழ போகுதோ தெரியலை..! இரண்டரை வருஷமா இங்கே வேலை பார்க்கறேன்.. இதுவரை என் முகத்தை பார்த்து கூட அவர் பேசினது இல்லை, சம்பளம் முதல் தேவையானதை எல்லாம் பார்த்து செய்யறதில் தொடங்கி எதுலேயும் எந்த குறையும் சொல்ல முடியாது.. பெரியவங்ககிட்டயும் அவ்வளவு மரியாதையா இருக்காரு.. ஆனா இந்த புள்ளகிட்ட மட்டும் ஏன் இப்படி..? அப்படி என்ன தப்பு செஞ்சிருக்கும்..?’ என்று தனக்குள்ளையே சிந்தித்துக் கொண்டு அவள் அமர்ந்திருக்க.. அதே நேரம் அங்கு வந்த சாரதா “தீபன் தம்பியா கிளம்பி போச்சு..?” என்றார். 
 
 
“ஆமாமா, இப்போ தான் கார் கிளம்புச்சு.. “ என வாணி சொல்லவும் “திரும்பவும் அங்கே போயாச்சா..!” என ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்டபடியே அவர் அங்கிருந்து நகர.. அவர் சொல்லிச் சென்றதன் பொருள் புரியாமல் வாணி அவரைக் கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.   
 
 
சாரதாவின் எண்ணத்தை கொஞ்சமும் பொய்யாக்காமல் அந்தப் பழைய வீட்டின் முன் சென்று தாரக்கின் கார் நின்றது. அதில் இருந்து இறங்கி லேசான தள்ளாட்டத்தோடு உள்ளே நுழைந்தான் தாரக். அவனின் உடலின் தள்ளாட்டத்திற்கான காரணம் அதீத மனப்போராட்டம் தான். எதையெதையோ நினைத்து மனம் வேதனையில் நிரம்பி இருந்ததில் உடலிலும் அது பிரதிபலித்தது. 
 
 
மெல்ல தரைதளத்தில் இருக்கும் வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன், வழக்கம் போல் அந்த சேலையை கொண்டு வந்து தரையில் விரித்து அதில் சிறு குழந்தை போல் சுருண்டு கொண்டான்.
 
 
அடுத்த நொடி மனதில் ஏறி அழுத்திக் கொண்டிருந்த பெரும் பாரம் ஒன்று கரைந்து காணாமல் போவது போல் இருக்க.. அந்த நிம்மதி உணர்வு ஒன்றே போதும் என்பது போல் விழிமூடி அந்த நொடியை அனுபவித்துக் கொண்டிருந்தான் தாரக்.
 
 
அடுத்த ஒரு வாரம் சிந்துவின் அறை இருந்த பக்கமே தாரக் செல்லவில்லை. இரண்டு நாட்களிலேயே அவளின் உடல்நிலை பெருமளவில் தேறி இருந்தது. வாணி சிந்துக்குத் தேவையானதை எல்லாம் பார்த்து பார்த்து கவனித்துக் கொள்ள.. சாரதாவும் அவ்வப்போது வந்து அவளின் நலன் விசாரித்துச் சென்று கொண்டிருந்தார். 
 
 
இருவருக்கும் பெரும்பாலும் தலையசைவில் மட்டுமே பதில் சொல்லிக் கொண்டிருந்த சிந்து சோக சித்திரமாக ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாள். அவள் மனதில் இந்த நொடி என்ன இருக்கிறது என சிந்துவுக்கே புரியவில்லை. 
 
 
எதை நினைத்து இந்த அமைதி..? எது அவளை குழப்புகிறது..? எதை அவள் மனம் எதிர்பார்க்கிறது..? என்று எதுவும் புரியாத வெறுமையான ஒரு மனநிலையில் அமர்ந்திருந்தவள், கிட்டத்தட்ட பழக்கப்படுத்தப்பட்ட ரோபோ போல் நேரத்திற்கு சாப்பிட்டு கொடுக்கும் மருந்தை எடுத்துக்கொண்டு என அன்றைய நாளை அதன் போக்கில் செல்ல அனுமதித்துக் கொண்டிருந்தாள். 
 
 
‘தாரக் ஒரு வாரமாக இங்கு வராதது அவளுக்கு நிம்மதியை தந்ததா..?’ எனக் கேட்டால் அதற்கும் சிந்துக்கு பதில் சொல்லத் தெரியாது. அவனின் வரவு தன் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்களை எல்லாம் யோசித்து வருந்தும் மனநிலையை எப்போதோ கடந்து விட்டிருந்தாள் சிந்து. 
 
 
அதில் அதிகாலை காற்றை உள்ளே வர அனுமதித்து பால்கனியின் கண்ணாடி கதவை திறந்து வைத்தபடி படுக்கையில் சாய்ந்து சிந்து அமர்ந்திருக்க.. ஒரு வாரத்திற்கு பிறகு தன் வழக்கமான வேக நடையில் அவளின் அறைக்குள் நுழைந்தான் தாரக்.
 
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 

This post was modified 2 months ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 406
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ புது கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
 
MNM - 13(b) & 14
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 

This post was modified 2 months ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 406
Topic starter  
 
 
நேசம் – 15
 
சிந்து வெறுமையான பார்வையை எங்கோ பார்த்தவாறு அமர்ந்திருக்க.. படாரென கதவை திறந்து கொண்டு விறுவிறுவென உள்ளே நுழைந்தான் தாரக்.
 
 
அதில் நிமிர்ந்து அமர்ந்தவள் அவனை சிறு பதட்டத்தோடு பார்க்க.. சிந்துவின் முன் தன் கையில் இருந்ததை தூக்கி எறிந்தவன், “போ.. போய் செக் செஞ்சுட்டு வா..” என்றான் தாரக். 
 
 
அதில் அவனையும் தன் முன் இருந்த பொருளையும் புரியாமல் சிந்து பார்த்துக் கொண்டு இருக்கும் போதே.. “உனக்கு ஒருமுறை சொன்னா புரியாதா..? எனக்கு நேரமில்லை, ஏற்கனவே உன் இந்த காய்ச்சல் நாடகத்தால் எனக்கு ஒரு வாரம் வேஸ்ட் ஆகிடுச்சு.. போய் செக் செஞ்சுட்டு வா..” என்று தாரக் மீண்டும் அழுத்தமான குரலோடு சொல்ல.. “ஆனா..” என ஏதோ சொல்ல முயன்றவளின் வார்த்தைகள் தாரக்கின் முறைப்பில் அப்படியே நின்றது. 
 
 
“ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு வேல்யூவானது, அதை இப்படி உன் முன்னே நின்று வீணாக்க எனக்கு விருப்பமில்லை..” என்றவனின் எரிச்சலான குரலில் வேறு வழியில்லாமல் அதை எடுத்துக்கொண்டு குளியலறையை நோக்கி நகர்ந்தாள் சிந்து. 
 
 
லேசான பதட்டத்தோடு பால்கனி கதவின் அருகில் சென்று தன் இட கையால் அலைபேசியை பிடித்து இப்படியும் அப்படியும் சுழற்சியப்படியே நின்றிருக்க.. அடுத்த சில நிமிடங்களில் மெல்ல சிறு தள்ளாட்டத்தோடு வெளியில் வந்தாள் சிந்து.
 
 
அவள் வந்த சத்தம் கேட்டு பார்வையை திருப்பியவன், அவள் முகத்தில் தெரிந்த பதட்டத்தையும் முத்து முத்தாக வேர்த்திருந்ததையும் கண்டு சிந்துவை கேள்வியாக பார்க்க.. வார்த்தைகளிலின்றி தன் கையில் இருந்த பிரக்னன்சி கிட்டை தாரக்கின் பக்கம் திருப்பி காண்பித்தாள் சிந்து. 
 
 
அதில் இரண்டு சிகப்பு கோடுகள் அழுத்தமாக விழுந்து இருந்தது. அதை கண்டவனின் விழிகளில் லேசாக ஒரு மின்னல் வந்து போக.. எதையோ யோசித்து புன்னகைத்தவனாக அங்கிருந்து தாரக் எதுவும் பேசாமல் வெளியேறி இருக்க.. அவன் சென்ற திசையை ஒரு நொடி திரும்பி பார்த்த சிந்து அப்படியே மடங்கி தரையில் அமர்ந்து அழத் தொடங்கினாள். 
 
 
இது ஆனந்த கண்ணீரா..? அதிர்வில் உண்டான கண்ணீரா..! என அவளுக்கே தெரியவில்லை. இந்த நொடி அவள் எப்படி உணர்கிறார் என புரியா ஒரு உணர்வில் இருந்தாள் சிந்து. ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் எது என்றால் அவள் தாய்மை அடைந்த தருணத்தை தான் அனைவரும் சொல்வார்கள். ஆனால் இங்கு இந்த நொடி சிந்துவுக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை. 
 
 
ஆரம்பத்தில் தாரக்கின் வற்புறுத்தலால் குளியலறைக்குள் பரிசோதனை செய்ய சென்று இருந்தாலும் பரிசோதனையின் முடிவுகளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் பார்த்திருந்தாள் சிந்து. ஆனால் அவள் கண்ணில் கண்டது கருத்தில் பதிந்து, பரிசோதனை முடிவு என்ன என்று அவளுக்குப் புரியவே சில நொடிகள் தேவைப்பட்டது. 
 
 
அதன்பின் தன் கையில் இருக்கும் பரிசோதனை முடிவிற்கு சந்தோஷப்படுவதா..! இல்லை வருத்தம் கொள்வதா..? என்று கூட அவளுக்கு புரியவில்லை. 
 
 
அதில் இரு கைகளாலும் பரிசோதனை அட்டையை அழுத்தமாக பிடித்தபடி சில நொடிகள் அசையாது அமர்ந்து விட்டிருந்தவள், பின் தாரக் வெளியில் காத்திருப்பான் என்ற ஒரே காரணத்திற்காகவே எழுந்து மெல்ல வெளியில் வந்தாள். 
 
 
அவள் மனதில் பல உணர்வுகள் போட்டி போட்டுக்கொண்டு இருக்க.. அதன் பிரதிபலிப்பாக தாங்க முடியாத உணர்வுகளின் கலவையாக சிந்துவின் உடல் லேசாக தள்ளாடியது. 
 
 
நாகராஜன் ஏற்பாடு செய்திருந்தது போல் திருமணம் நடந்திருந்தால் இந்த நொடி எப்படிப்பட்ட சந்தோஷமான தருணமாக மாறி இருக்கும் என அவளால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. பல நாட்களுக்குப் பிறகு சுஜாதாவின் முகம் அவள் மனதில் வந்து போக.. “ம்மா.. நான் இப்போ என்ன செய்யறது..? நான் உங்க வயித்தில் இருக்கும் போது நீங்க என்ன எல்லாம் செஞ்சீங்க..? உங்களுக்கு எப்படி இருந்தது..? எப்படி உணர்ந்தீங்க..? எனக்கு இந்த நிமிஷம் எதுவுமே தோணலை ம்மா..
 
 
இப்போ என் வயித்துக்குள்ளே உருவாகி இருக்க இந்த சின்ன உயிரை நினைத்து என்னால் சந்தோஷப்பட கூட முடியலை.. அது என் குழந்தை தான்னாலும் என் மனசுக்குள்ளே எந்த ஒரு உணர்வும் வரலையே ம்மா..
 
 
நான் இப்போ என்ன செய்யறது..? என்னையும் அறியாமல் இந்த குழந்தையை வெறுத்துடுவேனோன்னு பயமா இருக்கு ம்மா.. எந்த பாவமும் அறியாத இந்த சின்ன உயிர் என்ன தப்பு செஞ்சது ம்மா..? இல்லை நான் தான் என்ன தப்பு செஞ்சேன்..? 
 
 
எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை..? எல்லார் மாதிரியும் என்னால் ஏன் இயல்பான ஒரு வாழ்க்கையை வாழ முடியலை..? அப்படி ஒரு வாழ்க்கையை வாழும் தகுதி எனக்கு இல்லையா..! 
 
 
எனக்கு இப்போ என்ன செய்யறதுன்னே தெரியலை ம்மா.. இப்போ நீங்க என் கூட இருக்கணும் போல இருக்கு, உங்களை தான் இந்த நிமிஷம் என் மனசு ரொம்ப தேடுது.. உங்களுக்கு என்னை ஞாபகமாவது இருக்காம்மா..? இத்தனை நாள் நான் எப்படி இருக்கேன் என்ன செய்யறேன்னு நீங்க யோசிச்சு இருக்கீங்களா..! 
 
 
இல்லை, அப்பாகிட்ட நான் பேசினதை வெச்சு நீங்களும் என்னை வெறுத்துட்டீங்களா..? நிச்சயம் அப்பாவும் அண்ணனும் என்னை முழுசா வெறுத்து இருப்பாங்கன்னு எனக்கே நல்லா தெரியும்.. அவங்க எப்போவுமே இப்படி தானே..! 
 
 
ஆனா நீங்களும் என்னை வெறுத்திடலை தானே ம்மா..! எனக்குன்னு இந்த உலகத்தில் இப்போதைக்கு இருக்கறது நீங்க மட்டும் தான்.. இந்த நிமிஷம் எனக்கு வேற எதுவும் வேண்டாம், உங்க மடியில் ஒரு அஞ்சு நிமிஷம் படுக்க ஒரு வாய்ப்பு கிடைச்சா போதும்னு தோணுது.. ஏதோ பாலைவனத்தில் தனியா சிக்கிட்ட மாதிரி ஒரு மனநிலையில் தான் நான் இங்கே இருக்கேன்.. 
 
 
ஏன்..? எதுக்கு..? எனக்கு இப்படி ஒரு நிலைமைன்னு கூட புரியாம, ஒவ்வொரு நாளையும் கடத்திட்டு இருக்கறது எவ்வளவு வலிக்குதுன்னு உங்களுக்கு நான் எப்படி சொல்லி புரிய வைக்கறதுன்னு தெரியலை ம்மா.. திரும்ப உங்களை எல்லாம் நான் பார்ப்பேனான்னு கூட தெரியலை..  
 
 
இப்படியே இன்னும் சில நாள் இங்கேயே காரணம் புரியா இந்த தனிமையிலும் மன அழுத்தத்திலும் இருந்தா நிச்சயம் ஒருநாள் என் இதயம் அதோட துடிப்பை நிறுத்திடும்னு மட்டும் எனக்கு நல்லா புரியுது.. 
 
 
ஒருவேளை திரும்ப உங்களை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்காமலே போனா.. நான் எந்த தப்பும் செய்யலைன்னு உங்களுக்கு புரியாமலே போயிடும் ம்மா.. ஆனா ஒண்ணை மட்டும் ஞாபகம் வெச்சுக்கோங்க ம்மா, நான் உங்க பொண்ணு.. இங்கே நான் வாழ்ந்த வாழ்க்கையோ இல்லை இங்கே நடந்த விஷயங்களோ என் சம்மதத்தோடவோ என் அனுமதியோடவோ நிச்சயம் நடக்கலை.. 
 
 
அன்னைக்கு அப்பாகிட்ட நான் பேசினது கூட திரும்ப உங்ககிட்ட வந்துட முடியும்னு நினைச்சு தான் பேசினேன்.. நான் அங்கே திரும்ப வந்த பிறகு அப்பாவுக்கு எப்படியாவது பேசி புரிய வெச்சுக்கலாம்னு சின்னதா ஒரு நம்பிக்கை எனக்குள்ளே இருந்தது.. ஆனா அதெல்லாம் இனி முடியாதுன்னு எனக்கு தெளிவா புரிஞ்சு போச்சு..
 
 
இப்போ நான் அம்மாவாக போறேன் ம்மா.. எனக்கு தெரியாம எனக்கு நடந்த திருமணம், அதன் மூலம் என் விருப்பம் இல்லாம எனக்குள்ளே உருவாகி இருக்க இந்த சின்ன உயிர்.. இதெல்லாம் என் வாழ்க்கை இனி எதை நோக்கி போகப் போகுதுன்னு கொஞ்சமும் புரியா ஒரு நிலையில் தான் வாழ்க்கை இந்த நிமிஷம் என்னை கொண்டு வந்து நிறுத்தி இருக்கு.. 
 
 
இதுவே அப்பா ஏற்பாடு செய்த திருமணத்தில் நான் இப்படி குழந்தை உண்டாகி இருக்கறது தெரிஞ்சா.. நீங்க இந்த நிமிஷம் எவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்பீங்க இல்லை ம்மா..? இப்போ இந்த விஷயம் உங்களுக்கு தெரியக்கூட வராது..
 
 
எல்லா உறவுகளும் இருந்தும் யாரும் இல்லா அனாதையா வாழணும்னு தான் என் தலையில் எழுதி இருக்கோ என்னவோ..! இங்கே என்னை சுற்றி உறவில்லா உறவா சில மனிதர்கள், எனக்குள்ளே உருவாகி இருக்கும் உயிரும் எனக்கு உறவான்னு தெரியலை.. இப்படியே இதையெல்லாம் யோசிச்சு யோசிச்சு ஒரு நாள் என் மனம் பேதலிச்சு போகப் போகுமோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு ம்மா..’ என அவள் மனதிற்குள் கதறிக் கொண்டிருக்க.. அதே நேரம் கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே நுழைந்து இருந்தார் சாரதா.
 
 
அவள் அமர்ந்திருந்த நிலையையும் கதறி அழுது கொண்டிருந்ததையும் கண்ட சாரதா, ஒரு நொடி செய்வதறியாது திகைத்து நின்றாலும் பின் சட்டென தன்னை சமாளித்துக் கொண்டு “ஏய் பொண்ணே எழுந்திரு.. என்ன இது இப்படி மடிஞ்சு உட்கார்ந்திருக்கே..? உன் வயிற்றில் குழந்தை இருக்குன்னு மறந்து போச்சா..!” என்ற அதட்டலோடு அவளை கை கொடுத்து எழுப்பி நிறுத்தியவர், படுக்கையில் சென்று சிந்துவை அமர வைத்து “இப்போ உடம்புக்கு என்ன செய்யுது..? தலை ஏதும் சுத்துதா..? வாந்தி வர மாதிரி இருக்கா..?” என்று சாரதா கேட்க.. “இல்லை என்பதாக மெதுவாக தலையசைத்தவளுக்கு அப்போதே கடந்த இரண்டு நாட்களாக எதையும் சாப்பிட பிடிக்காமல் வாந்தி வருவது போலான உணர்வு நாள் முழுக்க இருந்து கொண்டே இருந்தது நினைவுக்கு வந்தது.  
 
 
“நேத்து சாப்பிட பிடிக்கலை எதுவும் வேண்டாம்னு சொன்னதா வாணி சொன்னா.. அப்படி எதுவும் இருந்தா சொல்லு, அதுக்கு தகுந்த மாதிரி பக்குவமா ஏதாவது செஞ்சு தர சொல்றேன்.. அதுக்காக சாப்பிடாம எல்லாம் இருக்கக்கூடாது..” என்று அவர் பேசிக் கொண்டிருந்த வார்த்தைகளில் அக்கறை தெரிந்தாலும் குரலில் எந்த உணர்வும் வெளிப்படவில்லை. 
 
 
அதற்கும் சிந்து சரி என்பது போல் தலையசைக்க.. “ஆரம்ப நாட்களில் ரொம்ப கவனமா இருக்கணும் புரியுதா..? நல்லா படுத்து ரெஸ்ட் எடு, தேவையில்லாம உடம்பை கெடுத்துக்காதே.. அப்படி மட்டும் ஏதாவது செஞ்சேன்னு தெரிஞ்சுது தீபன் தம்பிக்கு கோபம் வரும், உனக்கே தெரியும் அவருக்கு கோபம் வந்தா அதை உன்னால் தாங்க முடியாது.. பார்த்து நடந்துக்கோ, இப்போ ஏதாவது சாப்பிடறியா..?” என்றவருக்கு ‘இல்லை வேண்டாம்..’ என்பது போல் அதற்கும் தலையசைத்தாள் சிந்து. 
 
 
“காலையில் இருந்து எதுவும் குடிக்க கூட இல்லைன்னு வாணி சொன்னா.. இப்படியே இருந்தா உடம்பு என்னாகும்..? கொஞ்சம் புளிப்பா எலுமிச்சை பழச்சாறு கலந்து தர சொல்றேன், குடிச்சுட்டு ரெஸ்ட் எடு.. மத்தியத்துக்கு பக்குவமா ஏதாவது வாணி சமைச்சு தருவா, அதை வேண்டாம்னு சொல்லாம சாப்பிடு..” என்று விட்டு சாரதா வெளியில் செல்ல.. அவர் சென்ற திசையையே புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சிந்து. 
 
 
அவள் இங்கே வந்த இத்தனை நாளில் சாரதா இவ்வளவு நீளமாக சிந்துவிடம் பேசுவது இதுவே முதல்முறை. இதெல்லாம் குழந்தைக்காக தான் என்று புரிந்தாலும், என்னையே பிடிக்காதவர்களுக்கு என் மூலம் வரும் குழந்தை மட்டும் எப்படி பிடித்தமானதாக இருக்க முடியும்..? என்ற கேள்வி தான் எழுந்தது. 
 
 
அதற்கான பதில் அவளுக்கு கிடைக்காது என புரிந்தாலும் கட்டுப்பாடு போடப் போட அவள் மனம் அதைப்பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தது.
 
********
 
இரண்டு மாதங்கள் கடந்திருந்தது..
 
 
அன்றைய நாளுக்குப் பிறகு சிந்து தாரக்கை பார்க்கவே இல்லை. இந்த அறைக்குள் மட்டுமல்ல அவன் அந்த வீட்டில் இருக்கிறானா எனக் கூட அவளுக்கு தெரியவில்லை. 
 
 
எப்போதாவது வெளியில் இருந்து கேட்கும் அவன் குரலும் பல நாட்களாக அவளுக்கு கேட்டிருக்கவில்லை. ஆனால் அதை எல்லாம் யோசிக்கவே கூடாது என நினைத்து நான்கு சுவருக்குள் மனதை திசை திருப்ப முயன்று வெற்றி கரமாக தோற்றுக் கொண்டு இருந்தாள் சிந்து.
 
 
ஆரம்பத்தில் இந்த தாய்மையை எப்படி எடுத்துக் கொள்வது என்ற உணர்வுக்கும் உண்மைக்குமான போராட்டத்திலேயே நாட்களை கடத்தியவளுக்கு தொடர்ந்து அந்த நேரத்திற்கே உரிய உடல் உபாதைகள் வேறு படுத்தி எடுத்ததில் நிறையவே சிரமங்களை அனுபவித்து விட்டாள் சிந்து. 
 
 
சாரதாவின் கட்டளைப்படி வாணி அவளுக்கு தேவையான அனைத்தையும் அவ்வப்போது வந்து கவனித்துக் கொண்டாலும் உரியவர்கள் உடன் இருந்து பார்த்துக் கொள்வது போல் ஆகாதே..!
 
 
அப்படித்தான் சிந்துவின் நிலையும் இப்போது இருந்தது. வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு கூட கணவனின் துணை இருக்கும். இது போலான நேரங்களில் உடன் இருந்து தாங்கி பிடிக்க கணவனின் காதலும் அரவணைப்பும் இருந்து விட்டால் எத்தனை கஷ்டங்களையும் எளிதில் கடந்து விடலாம். ஆனால் இங்கு சிந்துவுக்கு பாவம் அதுவும் கிடைக்கவில்லை.
 
 
அன்னையின் அன்பும் கணவனின் காதலும் கிடைக்காமல் தனியே தாய்மையின் ஆரம்ப நாட்களை சமாளிக்க முடியாமல் தவித்து துவண்டு வாடிய மலராக கிடந்தாள் சிந்து.
 
 
நாளுக்கு நாள் அவளின் உடல் மெலிந்து கொண்டே செல்வதை கவனித்த சாரதா “என்ன பொண்ணே சரியா சாப்பிடறியா இல்லையா..? நீ இப்படி இருந்தா ஒரு பிள்ளையை தாங்க இந்த உடம்பில் எப்படி சக்தி இருக்கும்..? நீ சாப்பிடுவது தான் உன் குழந்தைக்கும் போகும்னு தெரியுமில்லை..!” என்று அதட்டலாக கேட்டார்.
 
 
அதற்கும் சிந்துவிடமிருந்து அமைதியே பதிலாக வந்தது. இப்போது அவள் எதற்குமே வாயை திறப்பதில்லை. பல நாட்களாகவே பேச மறந்தது போல் தான் இருந்தாள் சிந்து.
 
 
இதைப் பற்றி சாரதா கூட ஒருமுறை தாரக்கிடம் பேசி விட்டிருந்தார். “அந்த பொண்ணு என்ன கேட்டாலும் வாயே திறக்க மாட்டேங்குது தம்பி.. என்ன பிரச்சனைன்னு தெரியலை, முன்னெல்லாம் ஏதாவது பேசும்.. கேட்கும், ஆனா இப்போ அப்படி எதுவுமே இல்லை..” என்று அவர் யோசனையாக தன் கவலையை தெரிவிக்கவும், “அவ பேசுறதை கேட்கணும்னு உங்களுக்கு அவ்வளவு ஆசையா..?” என்றிருந்தான் நக்கலாக தாரக். 
 
 
“அட எனக்கு என்ன ஆசை தம்பி.? ஏன் திடீர்னு இப்படி இருக்கான்னு தான் யோசனையா இருக்கு..? என்று சாரதா சொல்லவும் “இங்கே பேசி எந்த பயனும் இல்லைன்னு அவளுக்கு புரிஞ்சுருக்கும், அவ்வளவு தான்.. இதுக்கு போய் தேவையில்லாம யோசிச்சு குழப்பிக்காதீங்க, அவ பேசினா என்ன.. பேசலைனா என்ன..? நான் நினைச்சது நடக்கணும், அதில் மட்டும் தான் நம்ம கவனம் இருக்கணும்..
 
 
இன்னும் கொஞ்ச நாள் தான், விருப்பம் இருக்கோ இல்லையோ பல்லை கடிச்சுட்டு பொறுத்துக்கோங்க.. எல்லாம் முடிஞ்சுடும், எல்லாமே முடிஞ்சுடும்..” என்று தீவிரமான குரலில் சொல்லிவிட்டு சென்றிருந்தான் தாரக்.
 
 
அவன் சொல்ல வருவது புரிந்து சாரதாவும் அதன் பின் சிந்துவை பற்றி தாரக்கிடம் எதுவும் பேசுவதில்லை. அவன் சிந்துவின் அறைக்கு வருவதில்லை என்பதை அவருமே அறிந்திருந்தார். அதனாலேயே இனி அவளை கவனித்துக் கொள்ள வேண்டியது தன் பொறுப்பு என்ற எண்ணத்தோடு அனைத்தையும் வாணியின் மூலம் செய்து கொண்டிருந்தார் சாரதா. 
 
 
ஆரம்ப நாட்களில் அவள் வாந்தி மயக்கம் எனப்படும் அவஸ்தைகளைக் கண்டு பதட்டமான சாரதாவை வாணி தான் அமைதி படுத்த வேண்டி இருந்தது. “இதுக்கெல்லாம் போய் பயந்தா எப்படி ம்மா..? மாசமான பொண்ணுங்களுக்கு இப்படித்தான் இருக்கும், இதுக்கே இப்படினா பிரசவ வலியை எப்படி தாங்குவாங்க..? எல்லாம் சரியா போகும் கவலைப்படாம இருங்க..” என்று வாணி ஆறுதல் சொல்ல “ஓ அப்படியா..!” என கேட்டுக் கொள்வார் சாரதா. 
 
 
அவர் வாழ்க்கையில் கிடைக்காத ஒரே வரம் என்றால் அது தாய்மை தான். அதனால் அதைப் பற்றிய புரிதல் பெரிதாக அவருக்கு இருந்ததில்லை. அன்பும் ஆசையுமாக அவர் சீராட்டி பாதுகாக்க நினைத்த உயிரும் பாதியில் பறிப் போயிருந்தது. 
 
 
அதுவே அவரை மேலும் பதட்டமாக்க.. அனைத்தும் தெரிந்தது போல் வாணி சொல்வதை கேட்டுக் கொண்டவர், “கொஞ்சம் கூட இருந்து பார்த்துக்கோ வாணி..” என்று மட்டும் அடிக்கடி சொல்வார் சாரதா.
 
 
வாணிக்குமே அவரின் சிந்துவின் மேலான சமீபத்திய அக்கறை நன்றாகவே புரிந்தது. ஆனால் அதில் துளி கூட அன்பு இல்லை என்றும் அவளுக்கு புரிய.. இதில் இருந்த முரண்பாட்டை கண்டு குழம்பியவளுக்கு எவ்வளவு யோசித்தும் அதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை.
 
 
‘இவங்களை புரிஞ்சிக்கவே முடியலை..!’ என்று எண்ணி கொண்டவளாக தன் வேலையை கவனிப்பாள் வாணி. சில வருடங்களாக இங்கே வேலை செய்தாலும் இந்த வீட்டில் உள்ள ஒருவரையும் அவளால் சிந்து உட்பட, இதுவரை புரிந்து கொள்ள முடிந்ததில்லை.
 
 
 
ஆனால் அதைப் பற்றி எல்லாம் அதிகம் யோசித்துக் குழப்பிக் கொள்ளாமல் தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் தனக்கு கொடுத்த வேலையை மட்டும் அமைதியாக செய்து கொண்டு அவர்கள் கொடுக்கும் சம்பளத்திற்கு உண்மையாக இருக்க முயன்று கொண்டிருந்தாள் வாணி. 
 
 
பாபுவும் அப்படித்தான், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தான். இதனாலேயே தாரக் இவர்கள் இருவரையும் தொடர்ந்து இங்கே வேலையில் இருக்க அனுமதித்து இருந்தான். 
 
 
சாரதா சொல்லிய பிறகே தன் உடலில் ஏற்பட்டிருந்த மாற்றங்களை கவனிக்க தொடங்கினாள் சிந்து. வழக்கத்தை விட அடிக்கடி சோர்வும் மயக்கமும் உண்டாகி கொண்டிருந்தது. இப்படியே இருந்தால் நிலைமை மேலும் மோசமாகும் எனப் புரிய.. ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதாலோ அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பதாலோ இனி தன் வாழ்வில் மாறப்போவது எதுவுமில்லை என உணர்ந்து மெல்ல தன்னை மீட்டுக்கொள்ள முயன்றாள் சிந்து.
 
 
ஒரு வாரமாக அவளிடம் ஏற்பட்டிருந்த மாற்றங்களை கவனித்திருந்த சாரதா, அவள் போக்கில் இருக்க சிந்துவை அனுமதித்தார். பால்கனி வழியே வெளியே தெரிந்த புல்வெளியில் சில நேரங்களில் இயற்கை அழகை ரசித்தபடியே நடப்பது, மனம் வெறுமையாக உணரும் தருணங்களில் செடிகளுக்கு தண்ணீர் விடுவது, தோட்டத்தை பராமரிப்பது என தன் மனதை திசை திருப்ப முயன்று கொண்டிருந்தாள் சிந்து.
 
 
அன்றும் அப்படியே காய்ந்த இலைகளை அப்புறப்படுத்தி செடிகளுக்கு உரம் போடுவதற்காக வந்த பாபுவிடமிருந்து அதை வாங்கிக் கொண்டவள், பொறுமையாக ஒவ்வொரு செடியையும் கவனித்து பக்கத்தில் அமர்ந்து அதனுடன் மனதிற்குள் பேசிக்கொண்டு இருக்க.. மேலிருந்து பேச்சு குரல் கேட்டது. 
 
 
அவளுக்கு நேர் மேலே தாரக்கின் அறை இருப்பதால் ஆரம்பத்தில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன் போக்கில் அமர்ந்து இருந்தவள், “இல்லை, எல்லாம் சரியாக நடக்கும்.. “ என்ற தாரக்கின் குரலும் “எனக்கு என்னமோ கொஞ்சம் பயமா தான் இருக்கு, எதுவும் தப்பாகிடாது இல்லை மாமா..” என்ற இன்னொரு குரலும் ஒலித்து அவளின் கவனத்தை கலைக்க.. அதில் யோசனையாகி அங்கே பேசுவதை கவனிக்கத் தொடங்கினாள் சிந்து. 
 
 
“இவ்வளவு செஞ்சுட்டு கடைசி நேரத்தில் கோட்டை விட்டுடுவோமா என்ன..? நீ கவலையே படாதே எல்லாம் சரியா நடக்கும்..” என்றான் தாரக். “ஆனா மாமா ஏதோ ஒரு பயம் மனசை உறுத்திக்கிட்டே இருக்கு, நாம எதையும் மிஸ் செஞ்சுடலையே..?” என்ற குரலில் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தியவள், தனக்கு நன்கு பழக்கப்பட்ட குரலாக இருப்பதில் யோசனையாகி தன் மனப்பெட்டகத்தில் இந்த குரலுக்குரியவனை வேகமாக தேட தொடங்கினாள் சிந்து. இத்தனை மாதங்களில் இங்குள்ளவர்களை தவிர மற்றவர்களின் குரலும் முகமும் அவளுக்கு மறந்து போனது போல் இருந்தது.
 
“அதெல்லாம் இல்லை, நீ ஏன் கடைசி நேரத்தில் இவ்வளவு டென்ஷனாகற..?” என தாரக் தைரியம் சொல்ல.. “நீங்க இருக்கும் போது நான் ஏன் டென்ஷனாக போறேன்..? எனக்கு உங்க மேலே முழு நம்பிக்கை இருக்கு மாமா..” என்று கூறிய வார்த்தைகளை கேட்டவளுக்கு அந்த குரலும் வார்த்தைகளும் சேர்ந்து அவளுள் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. 
 
 
“இது.. இது.. இந்த குரல்..!” என பெரும் அதிர்வோடு தனக்குள்ளே கேட்டுக் கொண்டவளுக்கு கிடைத்த பதில் தான் அவள் கொஞ்சம் நம்ப முடியாததாக இருந்தது. அதில் உண்டான பதட்டத்தோடு மெல்ல அவள் அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து எழுந்து வந்தவள் தாரக்கின் பால்கனியை மெதுவாக நிமிர்ந்து பார்க்க.. அங்கு இருவர் என்று பேசிக்கொண்டு இருப்பது நன்றாக தெரிந்தது.
 
 
அங்கிருந்த செடிகள் லேசாக மறைக்க.. உள் பக்கம் திரும்பி நின்றிருந்தவர்களின் முகம் சரியாக அவளுக்கு தெரியவில்லை. அதில் சிந்து எட்டி பார்க்க முயன்று கொண்டிருக்க..
 
 
“இப்போ இங்கே பிரச்சனை எதுவும் இல்லையே மாமா..?” என்றவனுக்கு “இல்லைன்னு தான் நினைக்கறேன், அப்படியே இருந்தாலும் அதை யார் கண்டுக்க போறா..” என்ற அலட்சியமான பதில் தாரக்கிடமிருந்து வந்தது. “அப்படியெல்லாம் கவனக்குறைவா இருந்திடாதீங்க மாமா, உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை தான்.. ஆனாலும் கடைசி நேரத்தில் ஏதாவது தப்பாகி நம்ம மொத்த திட்டமும் வீணாகிடக்கூடாது இல்லையா.. அதனால் சொல்றேன், இன்னும் கொஞ்ச நாள் கவனமா இருங்க..” என்றவனின் முகம் இப்போதே சிந்துவுக்கு தெரியவும், அவளுக்கு காலுக்கு அடியில் பூமி நழுவியது போல் இருந்தது. 
 
 
இத்தனை உரிமையாக தாரக்குடன் பேசுவது யார் என பார்க்க முயன்றவளுக்கு அந்தக் குரலும் அது உணர்த்திய பரிச்சயமும் பெரும் ஆர்வத்தையும் சிறு பதட்டத்தையும் ஒரு சேர அவளுள் விதைத்திருக்க.. இத்தனை பொறுமையோடு அன்பான குரலில் தாரக்கால் பேச முடியுமா என்ற கேள்வியோடே அங்கு பார்த்திருந்தாள் சிந்து.
 
 
தாரக்கை அவள் அறிந்த இத்தனை மாதங்களில் முதன்முறையாக அவனின் இந்தக் குரலை கேட்டே தன் கவனத்தை அந்த பக்கம் திருப்பியவள், உடன் இருப்பது தன்னால் துளியும் யூகிக்க முடியாத ஒருவன் என கொஞ்சம் எதிர்பார்த்து இருக்கவில்லை. 
 
 
இதுவே இருவரின் பேச்சையும் கேட்காமல், இந்த நொடி அவனை இங்கே கண்டிருந்தால் கூட தன்னை தேடி மீட்டுக் கொண்டு போக தான் வந்து விட்டானோ என்று கூட நினைத்து ஏமாந்து இருப்பாள் சிந்து. 
 
 
ஆனால் அவர்கள் இருவரின் பேச்சையும் துல்லியமாக கேட்டிருந்தவளுக்கு நடந்த அனைத்திலும் அவன் பங்கும் இருப்பது தெளிவாக புரிய.. கொஞ்சமாக அவளுள் ஒட்டிக் கொண்டிருந்த வாழ வேண்டும் என்ற ஆசையும் இந்த நொடி சுத்தமாக மறித்து போனது. 
தன் முன் இருந்த உருவத்தை நம்ப முடியாமல் பார்த்தபடியே சிந்து நின்றிருக்கும் போதே, தாரக்கோடு பேசிக்கொண்டே இயல்பாகத் திரும்பிய விஷ்வா சிந்துவை அங்கே பார்த்திருந்தான். அதில் உண்டான திகைப்போடு அவன் நின்றிருக்கும் போதே.. தாங்க முடியாத அதிர்வில் மயங்கி சரிந்திருந்தாள் சிந்து. 
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
 

This post was modified 2 months ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 year ago
Posts: 406
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ புது கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
 
MNM - 15
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 


   
ReplyQuote
Page 2 / 4

You cannot copy content of this page