All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நின்னுக்கோரி வர்ணம்
 
Notifications
Clear all

நின்னுக்கோரி வர்ணம்

Page 3 / 4
 

Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 29
 
ரிஷாந்த் ஹால்வேயில் நடந்து தாரிகா ரூமுக்குள் நுழையலாமா என்று யோசித்தான். பின்னர் யோசனையை கைவிட்டு,  அவள் ரூமை கடந்து சென்று கிச்சனை நோக்கி சென்றான்.
 
கிச்சனில் ஸ்விட்ச் போர்டை கழட்டி, கடமைக்கு ஒவ்வொரு வயராக தடவிக் கொண்டிருந்தான் வீராசாமி. வேலைக்காரி அவன் பின்னாலேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
"என்ன லைன் மேன் சார்?? ரொம்ப நேரமா வயரை தடவிட்டு இருக்கீங்க?? என்ன பிராப்ளம்னு இன்னைக்குள்ள கண்டுபிடிச்சிடுவீங்களா?"
 
வீராசாமி: உனக்கு ஒண்ணும் தெரியாதுமா... வயர் எல்லாம் டயர் மாதிரி, டயர் எப்படி ஓட தேயுமோ, அதே மாதிரி வயரும் கரண்ட் ஓட ஓட தேஞ்சிடும். தடவி கொடுத்து தான் வேலை வாங்கணும்.
 
ரிஷாந்த் கிச்சனுக்குள் நுழைந்ததும், 
வீராசாமி: "இப்பதான் உன்னை தேடி செக்யூரிட்டி வந்தான்... நீ எங்க போயிருந்த?", என்று கேட்க,
 
ரிஷாந்த்: நான்... மேல... வந்து..
 
வீராசாமி கேப்பில் புகுந்து: ஓஹோ பின்னால செக் பண்ணிட்டு இருந்தியா?? ஓகே.. ஓகே... என்றான்.
 
ரிஷாந்த்: ஆமா, ஆமா.
 
வீராசாமி: செக்யூரிட்டி உன்னை தேடி மாடிக்கு போயிருக்காப்புல. நீ தான் பார்த்திருக்க மாட்டியே.
 
ரிஷாந்த் மேற்கொண்டு பேசுவதற்குள், போன் அடித்தது. மறுமுனையில் லோகேஷ், எடுத்து ஹலோ சொல்லி, அங்கிருந்து தூரமாக சென்றான்.
 
லோகேஷ்: என்னமோ தெரியல. கிரி ஆபீஸ்லருந்து அவசரமா கார் எடுத்துட்டு கிளம்புறான். அனேகமாக அங்க தான் வர்றான்னு நினைக்கிறேன். ஜூட் விட்ருங்க.
 
ரிஷாந்த் போனை வைத்துவிட்டு, வீராசாமியை நெருங்கி,
 
"எல்லா பக்கமும் செக் பண்ணிட்டேன். இங்கதான் எந்த பிராப்ளமும் இல்லல. எதுக்கும் வெளியில போஸ்ட்ல மறுபடியும் செக் பண்ணலாம்", என்று கண்ணை காட்டினான்
 
வீராசாமி: ஆமா ஆமா.. நானும் ரொம்ப நேரமா செக் பண்ணிட்டேன். எந்த பிரச்சனையும் இல்ல. வா போலாம்.
 
இருவரும் சென்று தாரிகா ரூம் கதவை தட்டினார்கள்.
 
கூடாரத்துக்குள் ஒட்டகம் நுழைந்தது போல்.... தாரிகா ரூமுக்குள் ஜானி நுழைந்தபோது, முதலில் அவள் எதிரே நின்று பேசினான். சிறிது நேரம் கழித்து, முன்னால் சேர் போட்டு அமர்ந்து பேசினான். இப்போது கட்டிலில் அவளுக்கு பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்தான். அடுத்தது.....
 
"Yeah...come in..."
 
ரிஷாந்த்தும், வீராசாமியும் ரூமுக்குள் நுழைந்தார்கள். இருவரையும் பார்த்ததும், கட்டிலில் இருந்த ஜானி பட்டென்று எழும்பினான்.
 
ரிஷாந்த்தும், வீராசாமியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்
 
ரிஷாந்த்: அண்ணா, எல்லா இடமும் பாத்துட்டோம். வீட்ல எந்த பிரச்சனையும் இருந்த மாதிரி தெரியல. திரும்ப போஸ்ட்ல, செக் பண்ணினா தான் கரெக்ட்டா இருக்கும்னு லைன் மேன் சொன்னாப்ல.
 
ஜானி: இந்த ரூம்ல நான் செக் பண்ணலையே.
 
வீராசாமி கட்டில் காட்சியை ஞாபகம் வைத்துக் கொண்டு: தேவை இருக்காது. செக் பண்ண வரைக்கும் போதும். ஷார்ட் சர்க்யூட் ஆயிருந்தா இந்நேரம் எரிஞ்சி இருக்கும். போஸ்ட் தான் போயிருக்கும். வாங்க போலாம்... என்றான்
 
ஜானி தாரிகாவை திரும்பிப் பார்த்து, " அப்ப நான் கிளம்புறேன். மீதி கதையை அப்புறமா வந்து சொல்றேன். எப்ப ஃப்ரீயா இருந்தாலும், எனக்கு போன் பண்ணுங்க.."
 
தாரிகா: OK OK...thank u guys...
 
மூவரும் அவள் அறையில் இருந்து வெளிப்பட்டார்கள். தாரிகா அவர்கள் பின்னால் வந்தாள். ஹாலுக்கு வந்தார்கள். செக்யூரிட்டி மாடிப்படியில் இறங்கி கொண்டிருந்தான். அவன் கேள்வி கேட்பதற்குள், ரிஷாந்த் முந்திக்கொண்டு, அவனை பார்த்து,
 
"நீ எங்க போயிட்ட... உன்னை எங்கெல்லாம் தேடுறது? வீட்டு வயரிங்க்ல எந்த பிரச்சனையும் இல்ல. போஸ்ட்ல தான் போய் பார்க்கணும். வா போலாம்..."
 
தாரிகா: இடியட்... இவனுக்கு இதே வேலை. ஒரு வேலையை உருப்படியா செய்ய மாட்டான். Do what they say.
 
மூவரும் வாசலை தாண்டி வெளியே சென்றார்கள். தாரிகா திட்டியதும், ஒன்றும் பேசாமல் செக்யூரிட்டியும் அவர்கள் பின்னால் சென்றான். அவன் முகத்தில் சந்தேக நிழல் படிந்தது.
 
அதுவரைக்கும் எங்கேயோ மேய போயிருந்த ரோசியும், ரெக்சியும் புது நபர்களை பார்த்ததும், ஓடி வந்து ஆவேசமாக குறைக்க ஆரம்பித்தது.
 
தாரிகா:  SHUT UP....
 
இரண்டு நாய்களும் பயந்து போய், பின்வாங்கி வாலை குழைத்தபடி நின்றன.
 
அனைவரும் கேட்டை தாண்டி, மெயின் ரோட்டுக்கு சென்றார்கள். எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வீராசாமி டிரான்ஸ்பார்மரை ஆஃப் பண்ணிவிட்டு, போஸ்டில் ஏறி கொணக்கி வைத்திருந்த வயர்களை, ஜாயிண்ட் அடித்து கனெக்ஷன் கொடுத்தான்.
 
"பயபுள்ள இங்கதான் wire போய்ருக்கு... இதை இவ்ளோ நேரம் கவனிக்காமல் போயிட்டேனே", என்று கீழே நின்று பார்த்துக்கொண்டு இருந்தவர்களை பார்த்து, ஆச்சரியமாக சொன்னான்.
 
ஜானி குறைக்கண்ணால் செக்யூரிட்டியை சைடில் பார்த்துவிட்டு,
 
"நான் அப்பவே நினைச்சேன்... ஏன்னா the total current entering lamp post or junction is exactly equal to the current leaving the post as it has no other place to go except current cut , as no current is lost within the post. அந்த அடிப்படையில்  போஸ்ட்ல தான் பாக்கணும்னு சொன்னேன். நீ தான் கேட்கல", என்றான்.
 
ரிஷாந்த் பாயிண்ட்டை கப்புன்னு கேட்ச் பண்ணி: "ஆமாண்ணே, நீங்க சொல்றது கரெக்ட் தான். The total current   entering lamp post is exactly equal to the current leaving the post. கரண்ட் போனதுக்கு முக்கியமான காரணமே இதுதான்."
 
அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை பார்த்ததும், செக்யூரிட்டி, " சே!!! இவர்களை போய் சந்தேகப்பட்டோமே", என்று ஒரு நொடி ஃபீல் பண்ணினான்.
 
கிரிதரின் கார் தெருவுக்குள் தூசியை கிளப்பி விட்டு நுழைந்தது. 
 
செக்யூரிட்டி:  சாரே வந்துட்டாரு.
 
கார் அவர்களை கடந்து செல்லும்போது, இறக்கிவிட்ட கார் கண்ணாடி வழியாக கிரிதர் அவர்களை திரும்பிப் பார்த்தான். அவன் பார்த்த பார்வையில் சிநேகம் இருக்காது என்று அவர்களுக்கு தெரியும். கூலிங் கிளாஸ் அணிந்து இருந்ததால் அவன் கண்களை சந்திக்க முடியாமல் போனது.
 
செக்யூரிட்டி கார் பின்னாடியே ஓடினான்.
 
வீராசாமி போஸ்டில் இருந்து இறங்கி, மறுபடியும் போய் டிரான்ஸ்பார்மரை போட, பண்ணை வீட்டுக்கு கரண்ட் வந்தது.
 
வீராசாமி தூசி தட்டுவது போல் கைகளை தட்டி, சக்ஸஸ் சென்றான்.
 
முதல் படையெடுப்பு வெற்றிகரமாக முடிந்ததால்,
 
மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அடுத்த நொடி வெடி சிரிப்பு சிரித்தார்கள்.
 
டிரான்ஸ்பார்மர் முன்னாடியே, ஹை ஃபை செய்து கொண்டார்கள்.
 
தொடரும்


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 30
 
ரிஷாந்த் போனடிக்க,
 
"இபி காரன் தான் பண்றான்"
 
ரிஷாந்த் போனை அட்டென்ட் செய்து, மற்ற இருவரையும் பார்த்து கண்ணடித்துவிட்டு,
 
"ஹலோ இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் பேசுறேன்... சொல்லுங்க"
 
ஈபி காரன் ஜெர்க்காகி, 
"என்ன சார் ஏற்கனவே பேசும்போது அலெக்ஸ் பாண்டியன்னு சொன்னீங்க?"
 
"அலெக்ஸ் பாண்டியன், துரைசிங்கம், ஆறுச்சாமி, எல்லாருமே இங்கதான் இருக்காங்க. எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு தான். இருங்க, அலெக்ஸ் பாண்டியன் கூட பேசுறீங்களா?", சொல்லிவிட்டு போனை வீராசாமியிடம் கொடுக்க,
 
அவன் கண்ணடித்துவிட்டு,
 
' இப்புடு சூடு......'
 
அவன் ரஜினி கேரக்டரை, கமல் மாடுலேஷனில் பேசினான்.
 
"எஸ்... அலெக்ஸ் பாண்டியன் ஸ்பீக்கிங்..."
 
மறுமுனையில் அவன்,
 
"ஒண்ணுல்ல சார். இன்னைக்கு நீங்க போன ரெய்டு நல்லபடியா முடிஞ்சிருச்சான்னு விசாரிப்பதற்காக, கால் பண்ணுனேன். டிஸ்டர்ப் பண்ணிருந்தா மன்னிச்சிடுங்க."
 
"டிஸ்டர்ப்பா??? அதெல்லாம் ஒண்ணுல்ல... ஹா ஹா... நீங்க செஞ்ச உதவியை பத்தி ஆறுச்சாமி சொன்னார். நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா, எதுவுமே தப்பில்லை. உங்கள மாதிரி ரெண்டு பேர் இருந்தா.. எந்த ரைடயும் வெற்றிகரமாக நடத்தலாம். அடுத்த வருஷம் குடியரசு தின விழாவில் உங்களுக்கு மெடல் நிச்சயம். ஏற்கனவே எஸ்பி சவுதரி கிட்ட பேசிட்டேன். சவுத்ரி சார் கிட்ட பேசுறீங்களா?"
 
"சார்.... வேணாம் வேணாம்... நீங்க சொன்னதே போதும். அந்த பேப்பர்ல போட்டோ....?", என்று இழுத்தான்.
 
"கண்டிப்பா வரும்... ஊரே பார்க்கும். ஓகேவா!!!", என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.
 
மற்ற இருவரையும் பார்த்து வீராசாமி, "இவன் பண்ணத கிரி கிட்ட சொன்னா போதும், கண்டிப்பா இவனோட கண்ணீர் அஞ்சலி போட்டோ  பேப்பர்ல வந்துரும்"
 
மற்ற இருவரும் சிரித்தார்கள்.
 
இரவு 9 மணி
 
ஒரு மணி நேரத்திற்கு முன்னால், வேலைக்காரி தேனு வைத்து விட்டுப் போன இரவு உணவு அப்படியே இருந்தது. படுக்கையில் ரெஜினா தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள். பூட்டியிருந்த ரூம் கதவை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் ரூமுக்குள் அவள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். 
 
வழக்கமாக இரவு 11 மணிக்கு வரும் கிரியும், இன்றைக்கு சீக்கிரமே வந்திருந்தான்.  கதவின் கீழிடுக்கு வழியாக கசிந்து கொண்டிருந்த ஹால் வெளிச்சம், இப்போது இல்லை. பங்களாவில் வழக்கமாக கேட்கும் நாள் பொழுதின் சத்தங்கள் அடங்கியிருக்க, இரவின் இயக்கம் ஆரம்பித்து இருந்தது.
 
இதுதான் நல்ல சந்தர்ப்பம்!!! ஜாக்கெட்டுக்குள் சொருகி வைத்திருந்த குட்டி மொபைல் போனை தொட்டுப் பார்த்தாள். பாத்ரூமுக்கு போய் பேச விட வேண்டியதுதான். கட்டிலில் இருந்து அவள் எழும்ப போன சமயம்...
 
டப் டப்.... கதவை தட்டும் சத்தம்.
 
திடுக்கிட்டாள். யாரது இந்த நேரத்தில்? 
 
கதவுக்கு வெளியே பேச்சு குரல் கேட்டது.
 
கூர்ந்து கவனித்தாள்.
 
தாரிகா: இல்ல, வேண்டாம்.
  அவங்க இந்த பக்கமா வரவே இல்லை. நீ டென்ஷனாக தேவையில்லை.
 
கிரிதர்: உனக்கு கன்ஃபார்மா தெரியுமா, இல்ல உன்னுடைய assumption ஆ?
 
தாரிகா: Assumption தான்
 
கிரி: Assumption is the reason for all fuck ups. மூணு பேர்ல, அந்த வளர்ந்து கெட்டவன் இந்த ரூம் வரைக்கும் வந்திருக்கான். அதுக்கப்புறம் எங்க போனான்னு தெரியலன்னு சூரஜ் சொல்றான். எதுக்கும் ரூமை ஒரு தரம் செக் பண்ணிடலாம்.
 
தாரிகா: He went backside...those guys seem ok for me. இல்லன்னா உள்ள விட்டுருப்பேனா? நான் தான் சொல்றனே. இப்பதான் இவளுக்கு டோஸ் கொடுத்திருக்கோமே, தூங்கிருப்பா. கதவை எப்படி திறப்பா?, we will check tomorrow. அது கூட உன்னோட திருப்திகாக, ஓகேவா?
 
கிரி: Ok
 
தாரிகா: Relax giri, lets go...i need the show today. 
 
இருவரும் பேசிக் கொண்டே நிதானமாக நடந்தார்கள்.
 
கிரி: அந்த இங்கிலாந்துக்காரிய பார்த்தா எனக்கு மூடே வரல. கலர் தான் இருக்கே தவிர, மொசைக் மாதிரி, ரெண்டு பக்கமும் மழ மழன்னு தட்டையா  இருக்கு.
 
தாரிகா: இன்னைக்கு அவ வேண்டாம்..Do today with thenmozhi.
 
கிரி நின்றான். அவளை  திரும்பி பார்த்தான்: வேலைக்காரி கூடல்லாம் எப்படி?...
 
தாரிகா: நான் பேசிட்டேன். She is interested. ஒரு சேஞ்சுக்கு தானே... நல்ல நாட்டுக்கட்டை... Show எப்படி இருக்குன்னு பார்க்கலாம். 
 
கிரி: Ok then.. உன்னோட show பாக்கணும்ன்கிற ஆசையில், எனக்கு வெரைட்டி கிடைக்குது.
 
தாரிகா: 21 ஐ டிஸ்போஸ் பண்ணிடலாம். நெக்ஸ்ட் வீக் 22 வருது. நம்ம பைனான்ஸ் கம்பெனில லோனுக்கு வந்த ஒருத்தியை ஃபிக்ஸ் பண்ணி வச்சிருக்கேன். பேக்ரவுண்ட் ரொம்ப வீக்கு. பிரச்சனையே வராது. நல்லா கொழுக்கு  மொழுக்குனு இருக்கா.
 
கிரி: Good. Where is the maid?
 
தாரிகா: She is in my room... இன்னைக்கு என் ரூம்ல பண்ணு.
 
கிரி: Few days ஆ அவ இங்கேயே ஸ்டே பண்றத பாத்ததுமே கேட்கணும்னு நினைச்சேன். குப்பத்துல அவ புருஷன் இருந்தானே, அந்த குடிகார பயல என்ன பண்ணிங்க?
 
தாரிகா: வந்ததிலிருந்து நம்ம கூட தேனு செட் ஆயிட்டா. So சூரஜ் மூலமா தேவையான அளவுக்கு பணத்தை அவ புருஷனுக்கு கொடுத்து அனுப்பி, தேனை இனிமே தேடவே கூடாதுனு வாயை அடைச்சாச்சு. அவன் பேச மாட்டான். அப்படியே பேசினான்னா, இங்க கூட்டிட்டு வந்து, கிணத்துல தூக்கி போட்டுடலாம். 
 
இருவரும் அவள் ரூமுக்குள் நுழைந்தார்கள்.  ரூமுக்குள் சேரில் உட்கார்ந்திருந்த தேன்மொழி அவர்களைப் பார்த்ததும், எழும்பி நின்றாள். தாரிகா ஏற்கனவே போதுமான அளவுக்கு அறிவுரையும், ஸ்டஃப்பும் வழங்கி இருந்ததால், தேன்மொழியிடம் எந்த பதட்டமும் தெரியவில்லை. எதிர்பார்ப்பு மட்டுமே தெரிந்தது.
 
கிரி தேன்மொழியை நெருங்க, தாரிகா ரூம் லைட்டை ஆப் செய்து விட்டு, மெல்லிய நீல நிற நைட்லாம்பை போட்டாள். கிரி தேன்மொழியை கூப்பிட்டு கொண்டு போய், படுக்கையில் உட்கார வைத்தான். அவளும் எதுவுமே சொல்லாமல் ஒத்துழைத்தாள்.  கட்டிலின் சைடில் சேரை எடுத்து போட்டு, தாரிகா உட்கார்ந்தாள்.
 
தேன்மொழியின் உதடுகளில் அழுத்தமாக முத்தமிட்டு, கிரி அவள் முந்தானையை உருவினான். நீல வெளிச்சத்தில், பாவாடை ஜாக்கெட்டில் அவளை பார்த்ததும், அவனுக்கு உள்ளுக்குள் மோக நரம்புகள் விரைப்பாயின. திரும்பி தாரிகாவை பார்த்து  "உண்மையிலேயே நாட்டுக்கட்டை தான்", என்றான்.
 
தாரிகா புன்னகைத்து, "Rolling. Action", என்றாள்.
 
கிரி அவள் ஜாக்கெட்டில் கை வைத்து கழட்ட ஆரம்பித்தான்.
 
கதவருகே கேட்ட பேச்சு சத்தமும், காலடி சத்தமும் தேய்ந்ததும், ரெஜினா படுக்கையில் இருந்து எழுப்பி உட்கார்ந்தாள்.
 
இருவரும் ஏதோ வேலையாக போகிறார்கள்!!! இதுதான் நல்ல சந்தர்ப்பம், கால் பண்ணிட வேண்டியதுதான்.
 
ரெஜினா எழும்பி பாத்ரூமுக்கு சென்றாள். மொபைலை ஸ்விட்ச் ஆன் பண்ணினாள். போன் on ஆனதும், காண்டாக்ட்ஸில் பார்த்தாள். A1, A2 என்று இரண்டு நம்பர்கள் இருந்தன.
 
A1 நம்பருக்கு கால் செய்தாள்.
 
"All lines to this route are busy..." நெட்வொர்க் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்து கொண்டிருந்தது. திரும்பவும் இரண்டு முறை ட்ரை செய்தாள். மறுபடியும் அதே மெசேஜ் தான் வந்தது.
 
'கொஞ்ச நேரம் கழிச்சு ட்ரை பண்ணி பார்க்கலாம்'.... பாத்ரூம் சுவர்களில் சாய்ந்தபடியே, சறுக்கி கொண்டு கீழே உட்கார்ந்தாள்.
 
தொடரும்


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 31
 
விரலிடுக்கில் சிகரெட் புகைந்து கொண்டிருக்க, ரிஷாந்த் முன்பக்கம் இருந்த சிட் அவுட்டுக்கு வந்தான். கீச் மூச் என்று இரவு பூச்சிகளின் சத்தம்... பக்கவாட்டு தோட்டத்தையும், முன்னால் இருந்த ரோட்டையும் நிரப்பியிருந்தது. மெயின் ரோட்டில் அவசர வாகனங்கள்  இருட்டின் மூஞ்சியில் ஹெட்லைட்டால் டார்ச் அடித்தபடி சென்றன. சிட் அவுட்டில்லிருந்து வெளியே வந்து, வீட்டின் சைடில் இருந்த  மாடிப்படிகளில் ஏறி மாடிக்கு சென்றான். கடற்கரை காற்று செல்லமாக அவன் முடியை கலைத்துப் போட்டது. பின்பக்க பண்ணை வீட்டை பார்த்தான். எந்த அசம்பாவிதங்களும் நிகழ்ந்த மாதிரி தெரியவில்லை, அமைதியாக காட்சியளித்தது.
 
மாடி சுற்று சுவரில் சாய்ந்து நின்று சிகரெட் புகையை  ப்பூவென்று ஊதினான். சிகரெட் புகை முன்னால் சுழன்று காற்றில் கலைய கலைய, பழைய படங்களில் வருவது போல் பிளாஷ்பேக் சம்பவங்கள் எல்லாம், அவன் கண் முன்னால் சுழண்டது. 
 
மெட்ராசில் வேலை பார்த்த காலத்தில் இருந்து, தேவையிருக்கிற, தேவையில்லாத பல விஷயங்களிலும் ரிஷாந்த்தும் ஜானியும் மூக்கை நுழைத்து இருக்கிறார்கள். ஆபீஸ் பிரச்சினைகள், லோன் பிரச்சினைகள், நல்ல காதல், கள்ளக்காதல் பிரச்சனைகள் பலதும் வரும். ரெண்டு பேரையும் பொருத்தவரையில், நல்லது செய்த மாதிரியும் இருக்க வேண்டும், இன்ட்ரஸ்டிங்காகவும், திரில்லிங்காகவும் இருக்க வேண்டும், அதுதான் மெயின் குறிக்கோள். சுள் என்று அனலடிக்கும் வெயில் காலத்தில் கூட.. பிரச்சினையை பெட் சீட்டாக போர்த்திக் கொண்டு தூங்கிய சம்பவம்ல்லாம் நடந்திருக்கிறது.
 
பாதியில் கழட்டி விட்டதால், ஜானிண்ணா ஷீபா மேல் கோபத்தில் இருக்கிறார். அதான் அவள் விஷயத்தை கண்டு கொள்ளவே இல்லை. சுசி பிரச்சனை சரியானதுக்கு அப்புறம், ஜானிண்ணாவை ஷீபா பிரச்சனையில் கோர்த்து விடலாம் என்று பார்த்தால், அதுவரைக்கும் தாங்காது போலிருக்கிறதே!!!
 
அதே நேரம்,
 
Varsh cafeteria 
 
வெறுமையாக இருந்த டேபிள்களும் சேருகளும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. ஒரே ஒரு டேபிளை மட்டும் ஓய்வெடுக்க விடாமல், ஜானியும், அவன் டீம் ஏஜெண்டுகளான சீனிவாசனும், பழனியும் பேசிக் கொண்டிருந்தார்கள். டிஸ்போசபல் கப்பில் டீ குடித்துக் கொண்டிருந்தார்கள்.
 
பழனி: நேத்து கூட இரண்டு பசங்களை டெர்மினேட் பண்ணிட்டாங்க. இத்தனைக்கும் அவ்வளவு ஒன்னும் rude ஆ பேசல. மேனேஜ்மெண்ட் எதிர்த்து கேள்வி கேக்குற பசங்களா பார்த்து டெர்மினேட் பண்ணிடறாங்க. எல்லாம் அந்த அரை மண்டையன் HR மேனேஜர் தான் காரணம்.
 
சீனிவாசன்: பசங்கல்லாம் அவன் மேல செம கடுப்புல இருக்காங்க. ஏதாவது கேட்டா ரூல்ஸ் பேசுறான். ஏதோ இவன் ரூல்ஸ் படி நடக்கிற மாதிரி.
 
ஜானி பெருமூச்சு விட்டான்.
 
"எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க...."
 
சீனிவாசன் லைட்டாக கடுப்பாகி: சார், நைட் டைம்ல பழமொழில்லாம் வேண்டாமே. விட்டுருங்களேன்.... என்றான்.
 
ஜானி: கேளுங்கடா....
 
பழனி: நாங்க வேணான்னு சொன்னாலும் நீங்க விடவா போறீங்க.. சொல்லுங்க.
 
ஜானி:
 
"கறக்கிறது உழக்கு பாலு, உதைக்கிறது பல்லு போகங்கற கதையா..." பசங்களுக்கு குடுக்கிறது பிசாத்து சம்பளம். மூச்சு முட்ட முட்ட வேலை வாங்குறது. இதுக்கு தான் எங்க ஊர்ல சொல்லுவாங்க.
 
அஞ்சு காசுக்குக் குதிரையும் வேணும், பஞ்சா அது காத்துல பறக்கவும் செய்யணும்னா எப்படி?"
 
ஜானி போன் அடித்தது.
 
மறுமுனையில் ரிஷாந்த்.
 
போனை எடுத்து காதில் ஒற்றி, "என்னப்பா அவ கால் பண்ணினாளா?"
 
சீனிவாசனும், பழனியும் பழமொழியிலிருந்து தப்பித்த சந்தோஷத்தில், ப்ளோருக்கு போறோம் என்று சைகை செய்துவிட்டு, நகர்ந்தார்கள்.
 
"இல்லண்ணே... அவ கிட்டருந்து போன் வரல... நானும் அதான்  வெயிட் பண்ணிட்டு இருக்கேன்".
 
ஜானி: ஒருவேளை எல்லாரும் தூங்கினப்புறம் பண்ணுவாளோ என்னவோ... அந்த கிரி வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் நிச்சயமா செக்யூரிட்டிக்கு செம டோஸ் விட்டிருப்பான். பண்ணை வீட்டுக்குள்ள வெளி ஆட்கள் நுழைவதை நிச்சயமாக விரும்ப மாட்டான். நாளைக்கு செக்யூரிட்டி கிட்ட பேச்சு கொடுத்தா, அவன் நடவடிக்கையில் இருந்து கண்டுபிடிச்சிடலாம். அந்த தாரிகா கூட பேசிட்டிருந்த வகையில் பார்க்கும்போது, அவதான் அங்க கமேண்டிங் ஆபிசர் மாதிரி தோணுது.
 
ரிஷாந்த்: ஆளும் செம ஃபிகர் தான்.
 
ஜானி: ஒருத்தன் தான் சீரியல் கில்லரா, இதுவரைக்கும் நான் கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா இங்க ஒரு குரூப்பே சீரியல் கில்லரா இருக்கிறத இப்பதான் பார்க்கிறேன். அந்த வேலைக்காரியும் இவங்க குரூப்பா தான் இருக்கணும். 
 
ரிஷாந்த்: அதான் பாஸ் எனக்கும் ஆச்சிரியமா இருக்கு.
எல்லா சீரியல் கில்லரும் ஒண்ணா சேர்ந்துட்டாங்களா? இல்ல, ஒருத்தர் மத்த எல்லாரையும் சீரியல் கில்லரா மாத்திட்டாங்களா?
 
ஜானி: Whatever, சுசியை ஐடென்டிபை பண்ணியாச்சு. அதனால இப்ப இவனுங்க தான் சீரியல் கில்லர்ஸ்னு தெரிஞ்சு போச்சு. இருந்தாலும், நிரூபிக்கிறதுக்கு ஆதாரம் வேணும்!!! அதையும் ரொம்ப சீக்கிரமா செய்யணும். ரொம்ப நாள் சுசியை அங்க இருக்க விடக்கூடாது. அந்த கேரேஜுக்குள் நுழைஞ்சு பார்த்தா, ஏதாவது எவிடன்ஸ் கிடைக்கலாம். எங்கெல்லாம் சிசிடிவி இருக்குன்னு ஓரளவுக்கு பார்த்து வச்சுட்டேன். இன்னொரு தடவ உள்ள எப்படியாவது பூரணும்.
 
ரிஷாந்த் நக்கலாக: அதான் தாரிகா கட்டில் வரைக்கும் போயிட்டீங்களே!!! ஒரே நாள்ல கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் பண்ணிட்டீங்க! அப்புறம் என்ன? அவகிட்ட உங்க செல்வாக்கை பயன்படுத்தி  ஈஸியா நுழைஞ்சிடலாமே.
 
ஜானி: இல்ல ரிஷ்... கட்டில்ல உட்காரத்துக்காக இடம் கொடுத்தாளே தவிர, அவளை ஈஸியா மேட்டர் பண்ணிரெல்லாம் முடியாது. பயங்கரமான ஆளா இருக்கா. Actually she is a badass bossy girl. ஏன் இன்னும் நீ கல்யாணம் பண்ணிக்கலைன்னு கேட்டதுக்கு, அவ சொன்ன பதில் என்ன தெரியுமா?
“I keep waiting to meet a man who has more balls than I do.”  so வீட்டுக்குள்ள போறதுக்கு வேற வழி தான் கண்டுபிடிக்கணும்.
 
ரிஷாந்த்: boss, இன்னொரு விஷயம் சொல்றேன், தயவுசெய்து என் மேல கோவிச்சுக்க கூடாது. ஊர் பேர் தெரியாதவர்களுக்கு கூட நாம ஹெல்ப் பண்றோம். ஷீபா ஒரு காலத்துல நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவ. நம்ம தோஸ்த். அவ பிரச்சனையை நம்ம கிட்ட சொன்னா என்ன? சொல்லாட்டி என்ன? இவ்வளவு நாள், மேற்படி விஷயத்துல அவ இன்ட்ரஸ்ட்டா இருக்கறதுனால தான் அப்படி பண்றாளோனு நினைச்சோம். ஆனா இப்ப தான், சரத் அவளை பிளான் பண்ணி,  போர்ஸ் பண்ணி, கவுத்திருக்கானு உறுதியா தெரிஞ்சிருக்கு. ப்ளீஸ்ண்ணே அவளுக்கு ஹெல்ப் பண்ணுங்க.
 
மறுமுனையில் ஜானியிடமிருந்து பதில் இல்லை.
 
ரிஷாந்த்:  அண்ணே ப்ளீஸ், ஏதாச்சும் பண்ணுங்க. சரி அவளுக்காக வேண்டாம். அட்லீஸ்ட்  நான் சொல்றேன்ல, எனக்காகவாச்சும் பண்ணுங்க.
 
ஜானி ஒரு சில நொடிகள் யோசித்தான்.
 
ஜானி: ஓகே, நம்மள கண்டுக்காம போனாளே... அவளுக்காக இல்ல... உனக்காக செய்றேன்...Ok வா?
 
ரிஷாந்த் உற்சாகமாக😀😀😀: Double ok பாஸ்.... சரத் சாருக்கு ஆப்பு ரெடி ஆயிட்டுருக்கு... ஹய்யா ஜாலி..👏👏
என்று சிரித்தான்.
 
ஜானி: சரி ஓகே. நான் ஃப்ளோருக்கு போறேன். வச்சுறவா?
 
ரிஷாந்த்: அண்ணே, ஒரு நிமிஷம். இது வரைக்கும் நிறைய பேருக்கு ஆப்பு வச்சிருக்கோம். ஒரே மாதிரி வச்சு வச்சு போரடிச்சிருச்சு. இவனுக்கு மட்டும் ஏதாவது டிஃபரண்டா வச்சா என்ன?
 
ஜானி: புரியலையே?
 
ரிஷாந்த்:  சுசி விஷயத்துல, அவளுக்கு கொடுமைகள் செஞ்சவங்கள, போலீஸ்ல பிடிச்சு கொடுத்து சட்டத்தால தண்டனை வாங்கி தர முடியும். ஆனா ஷீபா விஷயத்துல, சரத் பத்தி, அவளால வெளியில சொல்ல முடியாது. தண்டனை வாங்கி தர முடியாது. ஒரு அப்பாவி பொண்ண மடக்குறதுக்காக, திட்டம் தீட்டி, உதவி பண்ற மாதிரி நடிச்சு, வலவிரிச்சி, படுக்கையில் வீழ்த்தி, போட்டோ எடுத்து வச்சு மிரட்டி, செட்டப் பண்ணிக்கிறேன்னு திமிரா பேசிருக்கிறானே?  ரத்தம் கொதிக்குதுண்ணே. நீங்க அவனுக்கு வைக்கப் போற ஆப்பு, வாழ்நாள் பூரா அவன் மறக்க முடியாததா  இருக்கணும். உங்களால முடியுமா?
 
ஜானி: என்ன இப்படி கேட்டுட்ட... ஒரே மாதிரி செய்வினை வச்சு வச்சு, போரடிச்சிருச்சு. ஏதாவது வித்தியாசமா பண்ணினாத்தான் எனக்கு சேலஞ்சிங்கா இருக்கும். என்ன பண்ணனும்னு நீயே சொல்லு. செஞ்சிருவோம்.
 
ரிஷாந்த்: அவனுக்கு பெரிய ஆப்பா வைக்கணும். ஷீபா பேரு வெளியில வரவே கூடாது. நாமதான் வெச்சோம்னு முதலில் தெரியக்கூடாது. ஆனா கடைசில தெரியணும். அவன் தவிக்கணும், அல்லாடனும், மண்டைய பிச்சிக்கணும். நடுத்தெருவுல நிக்கணும். கடைசி கடைசியா அவனுக்கு எதனால் இந்த தண்டனைன்னு ஷீபா வாயால சொல்லணும், அவன் கையை கட்டிட்டு கேட்கணும்... அவ கால்ல விழனும். கதறனும். அத நாம பக்கத்துல இருந்து பார்த்து ரசிக்கணும். இவ்வளவும் உங்களால் செய்ய முடியுமா?
 
ஜானி: இன்னொரு தடவை சொல்லு.
 
ரிஷாந்த் ஏற்கனவே சொன்னதை rewind பண்ணி மறுபடியும் வரிசையாக சொன்னான்.
 
ஜானி: என்னடா... ரூம் போட்டு யோசிச்சியா? கொஞ்சம் tough ஆ இருக்குற மாதிரி இருக்கே..
 
ரிஷாந்த்: அதெல்லாம் கிடையாது. முடியுமா, முடியாதா? முடியாதுன்னா முதலிலேயே சொல்லிருங்க... முடியும்னு சொல்லிட்டு சிரமப்படாதீங்க. சொல்லிட்டேன்.
 
ஜானிக்கு எங்க தட்டினால் சூடாவான் என்று ரிஷாந்த்துக்கு நல்லாவே தெரியும். அருமையாக ரேக்கி விட்டான். 
 
ஜானி: என் ஸ்டைல்ல பதில் சொல்லவா?
 
ரிஷாந்த்: சொல்லுங்க?
 
ஜானி: எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க.
 
ரிஷாந்த்: ஐயையோ!!!
 
ஜானி ஏண்டா பழமொழின்னா அலறுரீங்க... சொல்ல விடுங்கடா. கடுப்பாயிருவேன்.
 
ரிஷாந்த் வெறுப்பாக: சொல்லுங்க பாஸ்... என்றான்
 
ஜானி: அண்டத்தைக் கையில் வச்சுக்கிட்டு ஆட்டுகிற பிடாரிக்கு, சுண்டைக்காய் எம்மாத்திரம்?
 
அவன்ல்லாம் சுண்டக்கா பையன்.
 
ரிஷாந்த் ஆர்வமாக: என்னண்ணே பண்ணப் போறீங்க?
 
ஜானி:  Wait and see... அவனை நீ சொன்ன மாதிரில்லாம் பண்ணி, சுருட்டி மடக்கி, குப்பைல தூக்கி போடுறேன் பாரு.
 
போனை கட் செய்து விட்டு,
கையில் வைத்திருந்த டிஸ்போசபிள் டீ கப்பை, சுருட்டி மடக்கி, குப்பைத்தொட்டியை குறி பார்த்து எறிந்தான். குப்பைத் தொட்டியின் மேல் பக்க பிளாஸ்டிக் லைனரில் மோதிய கப், 
 
பவுன்ஸ் ஆகி, 90 டிகிரியில் மேலே சென்றது.
 
ஜானி பார்த்துக் கொண்டிருக்க, 
 
மறுபடியும் கீழே வந்த கப், குப்பைத் தொட்டிக்குள்ளேயே சரணடைந்தது.
 
அஜித் ஸ்டைலில், ஜானி "அது" என்றான்.
 
தொடரும்
 


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 32
 
ஜானியிடம் பேசிவிட்டு போனை வைத்ததும், ரிஷாந்த் மாடியில் இருந்து கீழே போலாம் என்று யோசித்த நொடி, அவனுடைய போன் மறுபடியும் அடித்தது.
 
சுசியிடமிருந்து கால்.
 
ரிஷாந்த்துக்கு பரபரப்பு பற்றிக் கொண்டது.
 
உடனே காலை அட்டென்ட் செய்து பேசினான்.
 
"நான் சுசி பேசுறேன்", என்று அவன் சொன்ன கோட் வேர்டில் ஆரம்பித்தாள்.
 
ஓகே அப்போ எந்த பிரச்சனையும் இல்லை.
 
"எங்கருந்து பேசுறீங்க?"
 
"என்னோட ரூம்லருந்து தான். பாத்ரூம்ல....", என்று கிசுகிசுப்பாக பேசினாள்.
 
ரிஷாந்த் அவனை பற்றியும், ஜானியை பற்றியும், சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டான். 
 
ரெஜினா: பாக்கும்போது சுசி சுசின்னு சொல்றீங்களே. யாரந்த சுசி? என்னோட பேரு ரெஜினா.
 
ரிஷாந்த்: நீங்க கஸ்டமர் கேருக்கு பேசும்போது, உங்க பேரு அட்ரஸ் சொல்லாம வச்சுட்டீங்க. கால் கட் ஆயிடுச்சு. சோ நாங்க இந்த விஷயத்தை பத்தி பேசும்போது, உங்க பேர் என்னன்னு தெரியலை. அதனால என்னுடைய எக்ஸ் கேர்ள் ஃபிரண்ட் சுசி பேரை உங்களுக்கு வச்சுட்டேன். ஏன்னா உங்க வாய்ஸ், நீங்க பேசுறதல்லாம் அவளை மாதிரி இருந்துச்சு.
 
ரெஜினா: எனக்காக இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்திருக்கீங்க. தயவு செய்து என்னை இந்த நரகத்திலிருந்து காப்பாத்துங்க. இவங்க என்ன பண்றாங்கன்னு எனக்கு தெரியல. ஏதோ பெரிய தப்பு நடக்குது, அது மட்டும் தெரியும்.
 
ரிஷாந்த்: நான் ஒண்ணு சொல்றேன். கவனமா கேளுங்க. அவங்க என்ன பண்றாங்கன்னு நாங்க கண்டுபிடிச்சிட்டோம்... என்று சீரியல் கில்லிங் சமாச்சாரங்களை சொன்னான்.
 
அவன் சொன்னதை கேட்க கேட்க எழும்பி நின்றிருந்த ரெஜினா மறுபடியும் சர் என்று சுவரில் சறுக்கி கொண்டே கீழே உட்கார்ந்தாள். இவ்வளவுக்கு மனசாட்சி இல்லாத கொடூர சைக்கோக்களாக இருப்பார்கள் என்று அவள் நினைக்கவே இல்லை.
 
மறுமுனையில் பேச்சு மூச்சு இல்லாமல் ரெஜினா இருப்பதை பார்த்ததும்,
 
ரிஷாந்த்: என்னாச்சு ரெஜினா?
 
அழுகை சத்தம் மட்டும் விட்டு விட்டு கேட்டது. ஏற்கனவே சுக்கு நூறாய் உடைந்திருந்த ரெஜினா, மேலும் உடைவதற்கு வழி இல்லாமல், தகர்ந்து தவிடு பொடி ஆயிருந்தாள். வாயை பொத்திக் கொண்டு அழுதாள்.
 
காட்டாற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போவது போல், கும்மிருட்டான ஏதோ அதள பாதாள நரகத்துக்குள் விழுந்து கொண்டிருப்பது போல், யாருமே இல்லாத மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்குக்கு நடுவில் நிற்பது போல், ஆழம் தெரியாத கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருப்பது போல்....
 
உணர்ந்தாள்.
 
ரிஷாந்த்: அழாதீங்க... அழறதுக்கான நேரம் இல்ல. நான் சொல்றத கவனமா கேளுங்க. நீங்க சிஸ்டராகன்னு ஆசைப்பட்டது, உங்க வாழ்க்கை, தங்கச்சி, அப்பா, அம்மா இத பத்தில்லாம் நீங்க போன்ல சொன்னத நான் கேட்டேன். கடவுள் என்னை இந்த மாதிரி சூழ்நிலையில் தள்ளிட்டாரே, என்னை கை விட்டுட்டாரேன்னு  நீங்க சொன்னதையும் நான் கேட்டேன். ஆனா நான் அப்படி நினைக்கல. இந்த கொடூரர்களை நீங்க கண்டுபிடிச்சு,  மேலும் உயிர்கள் பலியாகாமல் தடுத்து, இவர்களை சட்டத்து முன்னால் நிறுத்தி, தகுந்த தண்டனை வாங்கி கொடுக்கிறதுக்காகத்தான், கடவுள் உங்க வாழ்க்கையில் இந்த விளையாட்டு பண்ணிருக்கிறார். எங்கேயோ இருந்த நீங்க இந்த சைக்கோக்கள் மத்தியில வந்துருக்கீங்கன்னா அதுதான் காரணமா இருக்கும். அதனால் நீங்க தைரியமா இருக்கணும். இன்னும் ஒண்ணு ரெண்டு நாள் தான். நாங்க எதிர்பார்க்கிற ஆதாரம் கிடைச்சிருச்சுனா உங்களை வெளியில கூட்டிட்டு வந்து, உங்க அப்பா அம்மா கிட்ட பத்திரமா சேர்த்திடுவோம்.
 
மறுமுனையில் ரெஜினா அழுது முடிப்பதற்கு ஒரு சில நிமிடங்களானது. ரிஷாந்த் பொறுமையாக காத்திருந்தான்.
 
ஒரு சில நிமிடங்கள் அமைதியில் கழிந்தது.
 
அவளுடைய விம்மல்களும், மாடியில் ரிஷாந்த் நின்றிருந்ததால், கடற்கரை காற்றின் விஷ் விஷ் சத்தமும், தான் கேட்டது.
 
ரிஷாந்த் போனை காதில் வைத்தபடி, பேசாமல் நின்றிருந்தான்.
 
ரெஜினா: சாரி சாரி... இருட்டான... நரகத்துக்குள்ள... இருக்கிறேன். எனக்கு... என்ன பண்றதுன்னு தெரியல... என்ன சுத்தி.... எல்லாமே குழப்பமா இருக்கு.... 
அவள் குரல் உடைந்து  வந்தது.
 
ரிஷாந்த்: குழப்பமே வேண்டாம். நீங்க என்ன பண்றதுன்னு நான் சொல்றேன். நான் சொல்ற மாதிரி பண்ணுங்க.
 
ரெஜினா: சொல்லுங்க.
 
ரிஷாந்த்: ஃபர்ஸ்ட் அழுகையை நிறுத்துங்க. கண்ணை தொடைச்சுக்குங்க.
 
ரெஜினா துடைக்காமலேயே தொடச்சிட்டேன் என்றாள்.
 
ரிஷாந்த்: இல்ல பொய் சொல்லக்கூடாது. கண்ண தொடைச்சுக்குங்க.
 
ரெஜினா கண்ணீரை துடைத்துக் கொண்டே பேசினாள்.
 
"அப்புறம்"
 
"பைபிள்ல வர்ற உபாகமம் 31:6 தெரிஞ்சா சொல்லுங்க.. எனக்கு ரொம்பவும் பிடித்த வசனம்."
 
முந்தானையால் கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தவள் அவன் சொன்னதைக் கேட்டதும், ஆச்சரியத்தால் உறைந்து போனாள்.
 
ரிஷாந்த்: சொல்லுங்க ப்ளீஸ்.
 
ரெஜினாவின் உதடுகள், அவன் கேட்ட வசனத்தை முணுமுணுத்தது.
 
"நீங்கள் பலங்கொண்டு திடமானதாயிருங்கள், எவருக்கும் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடன்கூட வருகிறார்; அவர் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை."
 
சொல்லும்போதே அவளுக்குள் பரவசம். உடம்பின் செல்களுக்குள் ஏதோ ஒரு புது சக்தி பாய்ந்தது. இருட்டான நரகத்துக்குள் நின்றவளுக்கு தூரத்தில் ஏதோ ஒரு நம்பிக்கை வெளிச்சம் தெரிந்தது. காட்டாற்று வெள்ளத்தில் அடிக்கப்பட்டு சென்றவளுக்கு, திடீரென்று பிடிமானம் கிடைத்தது போல், பிடிப்பதற்கு ஒரு மரக்கிளை கிடைத்தது.
 
ரிஷாந்த்: வெரி குட்... அடுத்து வர இரண்டு மூன்று நாட்களுக்கு எப்படி நடக்கணும்னு நான் சொல்றேன். கொஞ்சம் கவனமா கேளுங்க.
 
ரெஜினா: ம்ம்ம்
 
ரிஷாந்த்:  நீங்க நைட்டு சாப்பிடுற டின்னர்ல தூக்க மாத்திரை கலக்கப்படலாம். அதனால மேக்ஸிமம் நைட் சாப்பிடறத அவாய்ட் பண்ணிருங்க. நீங்க அவாய்ட் பண்றது அவங்களுக்கு தெரிய வேண்டாம். சாப்பாட்டை அவங்களுக்கு தெரியாம எப்படியாவது டிஸ்போஸ் பண்ணிருங்க. எப்பமெல்லாம் முடியுமோ, அப்பல்லம் எனக்கு கால் பண்ணுங்க. வழக்கம்போல இருங்க. வழக்கம் போல அவங்களுக்கு பயப்படுங்க. எதுவும் தெரிஞ்ச மாதிரி காமிச்சுக்காதீங்க. மேற்கொண்டு என்ன பண்றதுன்னு நான் அப்பப்ப போன் பண்ணி சொல்றேன். போனை மறக்காம சைலன்ட்ல போட்டு வைங்க. நாங்க இப்ப போட்டிருக்கிற சார்ஜ் இன்னும் மூணு நாளைக்கு தாங்கும்.
 
ரெஜினா; ஓகே
 
ரிஷாந்த்: உங்க ரூம்ல செக்கிங் பண்ண வந்தாலும் வரலாம். போன் அவங்க கையில மாட்டிக்க கூடாது. கவனம். அவங்க விஷயங்கள் எதுவும் நீங்க தெரிஞ்சுக்காம இருக்கிற வரைக்கும், உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. அவனுடைய முதல் மனைவி இந்த விஷயங்கள் எல்லாம் தெரிஞ்சதனால்தான் கொலை செய்யப்பட்டு இருக்கலாம். நீங்க தெரிஞ்ச மாதிரி காமிச்சுக்காதீங்க. மொத்தத்தில் தைரியமா இருங்க. உங்களுக்கு ஏதாவது கேட்கணுமா? 
 
ரெஜினா: ஆமா, உங்களை எப்படி கூப்பிடுறது? உங்க பேர் ரொம்ப வித்தியாசமா இருக்கே?
 
Varsh Office
மறுநாள் காலை 9.20 மணி
 
ஆபீஸில் ஒன்பது மணி ஷிப்ட்க்கு வர வேண்டியவர்கள் ஏற்கனவே வந்து லாகின் செய்து, வேலையை ஆரம்பித்து விட்டார்கள். ஜானி ஆபீஸிலிருந்து வெளியே போகும் வழியில், முன்பக்க மீட்டிங் ரூமில் நின்றிருந்தான். ஷிப்ட்க்கு வருபவர்கள், அந்த மீட்டிங் ரூமை கடந்து தான் ஆபீசுக்குள் நுழைய வேண்டும்.
 
10 மணி ஷிப்ட்டுக்கு வர வேண்டியவர்கள் ஒவ்வொருத்தராக வந்து கொண்டிருந்தார்கள். இந்த கதை ஆரம்பிப்பதற்கு காரண கர்த்தாவான நபர் இன்னும் வந்திருக்கவில்லை. ஜானி அவளை எதிர்பார்த்து பார்த்துக் கொண்டிருந்தான்.
 
மீட்டிங் ரூமை கடந்து சென்று கொண்டிருந்த பாக்யா, அவனைப் பார்த்ததும், கண்ணாடி கதவுகளுக்கு மறுபக்கம் ஹாய் என்று கை காட்டினாள்.
 
ரெஜினா ஏர்டெல் கஸ்டமர் கேருக்கு முதல் முறையாக கால் பண்ணும் போது, கால் அட்டென்ட் பண்ணுனவள் இவள் தான். அவளை வர்ணிக்க வேண்டிய அவசியம் இந்த கதைக்கு இல்லை. சிலர் வர்ணிக்காமலேயே க்யூட்டாக தெரிவார்கள். இவள் அந்த ரகம்.
 
ஜானி அவளைப் பார்த்து உள்ளே வா என்று சைகை காண்பித்தான்.
 
பாக்கியா உள்ளே நுழைந்து, "சார் பஸ்ல வந்ததுனால, தலை கலைஞ்சி, face டல்லாருக்கு. ஒரு 2 மினிட்ஸ்ல டச் அப் பண்ணிட்டு வந்துடறேன்..."
 
ஜானி: ஆமா டச்அப் பண்ணிட்டு வா... அப்படியே உன்னை பொண்ணு பாக்கறதுக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் வந்துருவாங்க. பையனை புடிச்சிருக்கா இல்லையான்னு பாத்து சொல்லு.
 
பாக்யா ஆரோக்கியமான பல் வரிசையை காட்டி சிரித்தபடி, "அப்படியா சார்? சொல்லவே இல்ல.
இந்த வேலைக்கு நீங்க எப்ப மார்னிங்க...", என்றாள்.
 
"வாய், வாய்" அவள் தலையைப் பிடித்து, நச்சு நச்சென்று வலிக்காதவாறு கொட்டினான்.
 
ஜானி:  உன்னால ஒரு காரியம் ஆகணும்.... நான் சொல்றபடி பண்ணு ஆனால் ஏன் எதுக்குன்னு இப்ப கேட்காத.. பின்னால சொல்றேன்
 
என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக சொன்னான்.
 
பாக்யா அவன் சொன்னதை கேட்டு விட்டு, அரை அங்குலத்துக்கு புருவங்களை உயர்த்தினாள், ஆனால் கேள்வி கேட்கவில்லை. சரி என்றாள்.  பிறகு,
 
"சுசி கிட்ட பேசிட்டீங்களா?", என்று அவள் கேட்க,
 
ஜானி: நேத்து நைட் ரிஷ்க்கு கால் வந்திருக்கு. எல்லா விஷயத்தையும் பேசிட்டான். அடுத்த படையெடுப்பு நாளை அல்லது நாளை மறுநாள். சரி  இந்த விஷயத்துக்கு வா. நீ டச் அப் பண்றனா பண்ணிட்டு, சரியா 9.45க்கு HR ரூமுக்கு போ. 10 மணிக்கு தானே உன் ஷிப்ட் ஆரம்பிக்குது, அதுவரைக்கும் எப்படியாவது ஷீபாவை இழுத்து பிடித்து பேசு. எனக்கு HR ரூமில் கொஞ்சம் வேலை இருக்கு.
 
பாக்யா எஸ் சார் என்று சத்தமாக சல்யூட் அடித்தபடி சொன்னதில், மீட்டிங் ரூமை கடந்து ஷிப்ட்க்கு சென்று கொண்டிருந்த இரண்டு பசங்க திடுக்கிட்டு நின்றார்கள். பாக்கியா கிளுக் என்று சிரித்தாள்.
 
ஜானி அவர்களைப் பார்த்து, "ஒன்னுமில்ல போங்க, போங்க", என்று சைகை காண்பித்தான்.
 
தொடரும்
 


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 33
 
HR room
9.45 Am
 
பாக்யா: May i come in, madam.
 
உள்ளே இருந்து ஷீபா, " yes, come in...", என்றாள்.
 
பாக்யா கதவை திறந்து உள்ளே நுழைந்தாள். ரூமுக்குள் வேறு யாரும் இல்லை. கடந்த ஒரு வாரமாக  ஆப்ரேஷன் மேனேஜர் ரூமில், ஏதோ ஒரு சர்டிபிகேஷன் சம்பந்தமாக daily morning briefing நடக்கிறது. அதற்கு சரத்தும் பிரவீனும் சென்று இருப்பார்கள். அவர்கள் வருவதற்கு பத்து மணிக்கு மேலாகும்.
 
உள்ளே நுழைந்த பாக்யா தயங்கியபடி நின்றிருக்க, ஷீபா அவளிடம்,
 
"நீ ரிஷாந்த் டீம் பாக்கியா தானே. என்ன விஷயம் சொல்லு?"
 
"மேடம் எனக்கு ஒரு பிரச்சனை.
அத பத்தி உங்க கிட்ட பேசணும். நீங்க ரிஷாந்த் சார் பிரண்டு தானே. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. உங்க கிட்ட பேசினா ஒரு ஐடியா கிடைக்கும்னு நினைச்சு வந்தேன்."
 
ஷீபா அவள் தயக்கத்தை பார்த்து, ஏதோ ஒரு விவகாரம் என்று புரிந்து கொண்டாள்.
 
"ஆபீஸ் விஷயமாக இல்லை பர்சனலாவா?"
 
"Personal"
 
அவள் பார்த்து கொண்டிருந்த பைலை மூடி வைத்துவிட்டு, 
"சொல்லு" என்றாள்.
 
"மேடம் cafeteria போய் பேசலாமா?"
 
"Ok lets go..."
 
ஷீபாவும் பாக்யாவும் HR ரூமை விட்டு வெளிப்பட்டு, கேப்பிட்டீரியா நோக்கி நடந்தார்கள்.
 
ஹால்வேயிலிருந்து கேப்பிட்டீரியா நோக்கி அவர்கள் திரும்பியதும், ஹால்வேயின் மறுபக்கமாக இருந்து பபுள்கம் மென்றபடி ஜானி வெளிப்பட்டான்.
 
ட்ரெயினிங் ரூம்களை கடந்து, HR ரூம் வாசலில் போய் நின்றான். கதவில் இருந்த கண்ணாடி சதுரம் வழியாக உள்ளே பார்த்தான். யாருமே இல்லை என்று உறுதி செய்து கொண்டு, கதவை திறந்து உள்ளே நுழைந்தான். பரபரவென்று செயல்பட்டான்.
சரத் டேபிளின் மேலே கிடந்த திங்ஸ்சை பார்த்தான். கார் சாவியும் மேலும் ஒரு சில சாவிகளும் கிடந்தன. அதில் அவன் அப்பார்ட்மெண்ட் சாவி எதுவாக இருக்கும் என்று ஓரளவுக்கு கெஸ் செய்து, இரண்டு சாவிகளை தேர்ந்தெடுத்தான். இரண்டையும் தனியாக  எடுத்து, அவன் பர்ஸில் இருந்து டெபிட் கார்டை எடுத்தான்.
 
HR ரூமில் ஓரமாக இருந்த ஜெராக்ஸ் மெஷினுக்கு சென்று, டெபிட் கார்டு மேல் சாவியை வைத்து, ஜெராக்ஸ் எடுத்தான். 
 
பாக்கெட்டில் இருந்து பெரிய சைஸ் பபுள்கம்களை  எடுத்தான். சாவியின் முனைகளை அதில் பதித்தான். பபுள்கம் சாவி பதிவுகளை கவரில் போட்டு, பத்திரமாக பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். 
 
ஓரமாக இருந்த பெடல் பிரஸ் டஸ்ட் பின் அருகே போய், காலால் அமுக்கி டஸ்ட்பின் வாயை பிளந்ததும், மென்று கொண்டிருந்த பபுள்கம்மை துப்பினான். தூசி தட்டுவது போல் கையைத் தட்டிக் கொண்டு, ரூமை விட்டு வெளியே சென்றான்.
 
கேப்பிடீரியாவில் பாக்யா, அவள் பாய் பிரண்ட் ஏற்படுத்தும் பிரச்சினைகளை, ரீல் ரீலாக விட்டுக் கொண்டிருந்தாள்.
 
பாக்யா: ஸ்டார்டிங்ல தெரியாத்தனமா லவ் பண்ணிட்டேன். இப்போ அவன் எல்லா வகையிலும் என்னை abuse பண்றான். மென்டலா, ஃபிசிகலா abuse பண்றான். நாங்க ஜோடியா எடுத்துகிட்ட போட்டோஸ் காட்டி மிரட்டுறான்... மகாபலிபுரம் போலாம், ஊட்டி போலாம் வான்னு  டார்ச்சர் பண்றான். நான் சம்பாதிக்கிற பணம் பாதி அவனுக்கு தான் போகுது. அவனை திருத்த முடியும்ன்கிற நம்பிக்கை எனக்கு இல்லை.  அவன் ரிலேஷன்ஷிப் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா அப்படி நினைக்கும் போது குற்ற உணர்ச்சியா இருக்கு. என்னமோ தடுக்குது. எப்படி இதிலிருந்து வெளியே வர்றதுன்னு தெரியல்லை.  யாருகிட்ட சஜ்ஜசன் கேக்குறதுன்னும் தெரியல. ரொம்ப பர்சனலா இருக்கறதுனால ரிஷாந்த் சார் கிட்டயும் சொல்ல முடியல. அதான் உங்ககிட்ட யோசனை கேட்கிறேன். 
 
நம்ம ஆபீஸ் whistle blower டீமுக்கு நீங்கதானே ஹெட். ஆபீஸ்ல பொண்ணுங்களுக்கு என்ன பிரச்சனைனாலும் உங்க கிட்ட தானே வந்து சொல்லணும். இது ஆபீஸ் சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்ல தான். இருந்தாலும், யாரு கிட்ட சொல்றதுன்னு தெரியாம உங்க கிட்ட வந்து சொல்றேன்.
 
ஷீபா அவளை ஒரு பரிதாப பார்வை பார்த்தாள், பின்னர்,
 
"Dont worry... இந்த மாதிரி விஷயங்களை யார்கிட்டயாவது பேசணும். நீ என்கிட்ட வந்து சொன்னது நல்லது தான். உன் நிலைமை எனக்கு நல்லாவே புரியுது. பொண்ணுங்க ரிலேஷன்ஷிப் என்கிற பெயரில், பாய் ஃப்ரெண்ட்ஸ் கிட்டையோ, புருஷன் கிட்டயோ, கஷ்டப்படுறதுக்காகவோ, அவங்கள திருத்துவதற்காகவோ, அவங்களுக்கு நல்ல பாதையை காட்டுவதற்காகவோ, பிறக்கல்லை. நமக்கு அது வேலையும் இல்லை. கஷ்டத்தை எல்லாம் தாங்கிக்கிட்டு, பொறுத்துட்டு  போய் வாழ்க்கையை வீணடிச்சுக்கிட்டு இருக்க முடியாது. கஷ்டப்படுறதுக்கு கூட ஒரு வேல்யூ இருக்கணும். வேல்யூ தெரியாதவங்களுக்காக கஷ்டப்பட கூடாது. ஒருவேளை பொண்ணுங்க இதே மாதிரி abusive ஆ நடந்துக்கிட்டா, ஆம்பளைங்க விட்டுக் கொடுத்து போறதுக்கோ, திருத்துறதுக்கோ முயற்சி பண்ணுவாங்களா? பண்ணவே மாட்டாங்க. ஒரு சிலர் ட்ரை பண்ணுவாங்களா இருக்கும். ஆனா 99.99% பேர் கழட்டி விட்டுட்டு, டைவர்ஸ் பண்ணிட்டு, போயிட்டே இருப்பாங்க. Abusive ரிலேஷன்ஷிப்பில் இருந்து நீ வெளிய வரணும்னு முடிவு பண்ணது நல்ல விஷயம் தான். தப்பே கிடையாது.
 
உனக்கு ஏன் guilt feeling வருதுன்னு எனக்கு புரியுது. ஒருத்தன் கூட பிசிகலா இருந்துகிட்டு, அந்த ரிலேஷன்ஷிப் வேண்டாம்னு முடிவு பண்ணும் போது, இந்த மாதிரி பீலிங் வருவது இயற்கை தான். ஆனால் நாமளா ரிலேஷன்ஷிப் வேண்டாம்னு முடிவு பண்ணலையே. அவனுடைய மோசமான நடவடிக்கைகள்னால தான, நீ அந்த முடிவுக்கு வர வேண்டியதா இருக்கு. முதலில் அவன் ஏதாவது பண்ணிருவானோ, செஞ்சிருவானோன்னு பயப்படுவதை நிறுத்து. தப்பு பண்ற அவனுங்களே இவ்வளவு தைரியமாக நடக்கும்போது, உண்மையா நடக்கணும்னு நினைக்கிற நீ எதுக்கு பயப்படனும். இத பத்தி இன்னும் பேச வேண்டிருக்கு. ஆமா உன் ஷிப்ட் டைமிங் என்னது?
 
பாக்யா: 10 o clock  madam. ஆல்ரெடி டைம் ஆயிருச்சு.
 
ஷீபா: ஓகே நீ இப்ப போ. ஈவினிங் ஷிப்ட் முடிஞ்சதுக்கு அப்புறம் நம்ம பேசலாம். Ok va?
 
பாக்யா; ஓகே மேடம்.... என்று சொல்லிவிட்டு அவள் கிளம்பி சென்றாள்.
 
ஷீபாவும் கிளம்புவதற்காக சேரில் இருந்து எழும்ப... படாரென்று அவள் கன்னத்தில் அடி விழுந்தது. யார் அடித்தது என்று பார்த்தாள். அடித்தது அவள் மனசாட்சி தான்.
 
"இதே மயிறு பிரச்சனை தானே உனக்கு இருக்கு. அவளுக்கு சொன்னதெல்லாம் உனக்கு சொன்னதா நீ நினைச்சுக்கோ. First உன் பிரச்சனைல இருந்து நீ வெளிய வர பார்... அதன் பிறகு அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணலாம்... வெண்ண மவளே"
 
வழக்கமாக எல்லாருடைய மனசாட்சியும் போல், மானங்கெட்ட தனமாக கேள்வி கேட்டது.
 
ஷீபா அதிர்ந்து போய், கேப்பிட்டேரியாவில் உட்கார்ந்து இருந்தாள். அவள் பாக்கியாவுக்கு சொன்ன விஷயங்களே, அவ மனசுக்குள் மறுபடியும் ரீவைண்டாகி ஓடிக்கொண்டிருந்தது.
 
"எப்படிண்ணே பின்றீங்களே?", என்றான் ரிஷாந்த்.
 
பைக்கை நிறுத்திப் பேசிக் கொண்டிருந்தான் ஜானி,
"ஷீபாவை HR ரூமில் இருந்து கிளப்பணும். அவளுக்கு அட்வைஸ் பண்ண மாதிரியும் இருக்கணும். நேரடியாவும் பண்ண கூடாது. அதனால்தான் இப்படி ஒரு மெத்தட். ஆனாலும் ஷீபா பாக்யா கிட்ட சொன்னது, கருத்தாழமிக்க வசனங்கள்.. இல்ல?...."
 
ரிஷாந்த் சிரித்தான்.
 
"அது ஓகேண்ணா. சாவியை  ஜெராக்ஸ் எடுத்தீங்க ஓகே. பபுள்கம்ல எதுக்கு காப்பி எடுத்தீங்க?"
 
"ஒரு பேக்கப்புக்கு தாண்டா... ஜெராக்ஸ்ல சாவி டைமென்ஷன்ஸ் சரியா தெரியலன்னா... பபுள்கம்ல இருக்கிற மோல்டு வச்சு, இங் தடவி, பதிவு எடுத்து, அதன் மூலமாகவும் டூப்ளிகேட் கீ ரெடி பண்ணிடலாம்."
 
"சூப்பர்ண்ணா... அப்படின்னா, அடுத்த எபிசோட் அவன் அப்பார்ட்மெண்டுக்கு போயி, ஷீபா ஃபோட்டோஸ் இருக்கிற கேமராவை தூக்குறது தானே.."
 
"அந்த சமாச்சாரத்தை எல்லாம் ஒரு எபிசோடுக்கு எழுதி நம்ம வாசகர்களை டார்ச்சர் பண்ண கூடாதுடா... நாம என்ன மெகா சீரியலா எடுக்குறோம். ஒரு சீனை ஒரு மாசத்துக்கு காட்றதுக்கு... கடுப்பாயிடுவாங்க. சரத் ஆபீஸ்ல இருக்குற நேரத்துல, அவன் பிளாட்டுக்கு போனா, அரை மணி நேரத்துல வேலை முடிஞ்சிடும். சல்பி சமாச்சாரம்...  டூப்ளிகேட் கீ ரெடி பண்றதுக்கு, அரியாங்குப்பத்தில் நம்ம துரைராஜ் கிட்ட சொல்லிட்டு, ஒன் அவர்ல நான் அனுமந்தை வந்துறேன்."
 
"ஓகே பாஸ். அப்ப நம்ம நெக்ஸ்ட் ப்ரோக்ராம்?"
 
"நேர்ல வந்து சொல்றேன்... ஆனா அதுக்கு முன்னால, எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க... ஹலோ... ஹலோ..."
 
வந்து சொல்றேன் என்று சொன்னப்பவே, ரிஷாந்த் காலை கட் பண்ணிருந்தான்.
 
தொடரும்
 


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 34
 
நைட் ஷிப்ட் முடித்து வந்து, களைப்பில் ஜானி தூங்கிக் கொண்டிருந்தான். ரிஷாந்த், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்காக ஏரியாவுக்குள் சுற்றிக்கொண்டு, தகவல் சேகரிக்க முடியுமா என்று பார்த்தான். சூரஜ் சரியாக பேச்சு கொடுக்கவில்லை. ஜானிண்ணா சொன்னது போல் டோஸ் வாங்கிருப்பான். ரெஜினா நைட் தான் கால் பண்ண வாய்ப்பு இருக்கிறது. 
 
பண்ணை வீட்டில் எந்த பிரச்சனையும், பரபரப்பும் இல்லை. அமைதியான தினமாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
 
பின்பக்கம் இருந்த பீச்சிற்கும் சென்றான். ஓரிரு தென்னை மரங்கள், மூங்கில் மரங்கள், எக்கச்சக்கமான கருவேல மரங்கள், மணல் திட்டுகள் என ஆளரவம் இல்லாமல் பிரைவேட் பீச் போலிருந்தது. நண்டுகளும் ஆமைகளும் பீச்சை குத்தகைக்கு எடுத்திருந்தன. பீச் மணல் காலடித்தடங்கள் படாமல், பரிசுத்தமாக இருந்தது. வெள்ளைக்காரர்கள் இந்த பீச்சை பார்த்திருந்தால், துண்டை விரித்து அம்மணமாக சன் பாத் எடுத்திருப்பார்கள். அவர்களை நன்றாக கவனித்து பார்த்து, சன் பாத்தின் நுணுக்கங்களை தெரிந்து கொண்டு இருக்கலாம். சே! அந்த வாய்ப்பும் இல்லாமல், கடற்கரையில் வெறுமனே சுத்திட்டு இருக்க வேண்டியதாருக்கு. ரிஷாந்த் சலித்துக் கொண்டான்.
 
மனித நடமாட்டமே பீச்சில் இல்லாததை பார்த்ததும், அவனுக்கு வேறொரு எண்ணம். ஒருவேளை அந்த சைக்கோ,  பொண்ணுங்களை கொலை செய்து இங்கேதான் புதைக்கிறானா அல்லது எரிக்கிறானா?
 
இருக்கலாம். அன்னைக்கு செக்யூரிட்டியிடம் போனில் பேசும்போது கூட...  கிணற்றில் இல்லன்னா கடலில் தூக்கி போட்டுருவேன்னு தான் மிரட்டினான். பண்ணை வீட்டின் பின்பக்கம் ஏதோ ஒரு கிணறு இருக்கிறது. அதில் கூட பிணங்களை போட்டுருக்கலாம். தண்ணீருக்கு என்ன செய்கிறார்கள்? வேறு ஏதாவது போர் போட்டு இருக்கிறார்களா? ரெஜினா கால் பண்ணினால் விசாரிக்க வேண்டும்.
 
துரைராஜ் ஜானிக்கு கால் பண்ணி எடுக்காததால், ரிஷாந்த்துக்கு கால் செய்து சாவி ரெடி என்றான். அனைவரும் நட்புக்காக செயல்படுவதால், வாங்குற காசுக்கு மேலாக வேலை செய்வார்கள்.
 
மதியம் 2 மணிக்கு ஜானி தூங்கி எழும்பியதும், ரிஷாந்த் விஷயத்தை சொல்ல,
 
"ஓகே, நாளைக்கு வேலையை காட்டிடலாம். இந்த சாட்டர்டே, சண்டே சரத் பெங்களூர் போகலையாம். So நாளைக்கு ஆபீஸ்க்கு வருவான். நான் ஆபீஸ்ல தான் இருப்பேன். அவன வாட்ச் பண்ணிக்கிறேன். நீயும், வீராசாமியும், அவன் பிளாட்டுக்கு போயி கேமராவை தூக்கிருங்க."
 
ரிஷாந்த் தயங்கியபடி, 
"எனக்கு பயமாருக்கு. பக்கத்து பிளாட்டில் ஆட்கள் இருப்பாங்க. செக்யூரிட்டி இருப்பான். அவங்களையெல்லாம் மீறி போய் எப்படி தூக்குறது?"
 
ஜானி: ஆபீஸ்ல சரத்தை வாட்ச் பண்றதுக்கு ஒரு ஆள் வேணும். நீ ஆபீஸ் பக்கம் போக முடியாது. அப்போ வேற வழியில்ல. நான் தான் ஆபீஸ் போகணும். அப்பார்ட்மெண்ட் ஆட்களை பற்றில்லாம் கவலைப்படவே வேணாம். வீட்ட பூட்டினால் வெளியில் வரவே மாட்டானுங்க. அழகா அம்சமா அவன் பிளாட்டுக்குள்ள போயிரலாம். மதிய டைம்ல போனேன்னா ப்ராபளமே இருக்காது. Only thing என்னன்னா  சிசிடிவி ஏதாவது இருக்குதான்னு பார்த்துக்குங்க. இருக்க வாய்ப்பு இல்லை. மெட்ராஸ்ல இருக்கிற மாதிரி பாண்டி அப்பார்ட்மெண்டுகளில் இன்னும் சிசிடிவி கலாச்சாரம் வரல.
 
ரிஷாந்த்: இல்லண்ணா, எனக்கு பயமாருக்கு. நான் ஆபீஸ்க்கு இன்னொரு லீவ் லெட்டர் கொடுக்க போற மாதிரி போயி, சரத்தை வாட்ச் பண்ணிக்கிறேன்.
 
ஜானி: ஓகே விடு, ரொம்ப பயப்படுற. நானே பாத்துக்குறேன். Main hoon na.
 
ரிஷாந்த்: எவிடன்ஸ் கலெக்ஷன்காக பண்ணை வீட்டுக்குள்ளே எப்போ நுழையிறது?
 
ஜானி: அந்த ப்ரோக்ராம்  Monday தான். கிரி ஃபேக்டரி போயிருவான். அந்த சொப்பன சுந்தரியும், பைனான்ஸ் கம்பெனி விசிட்டுக்கு போய்டுவா. ஆல்ரெடி, அவ கிட்ட பேசிட்டு இருக்கும்போது நைசா விசாரிச்சிட்டேன். வாட்ச்மேனும், வேலைக்காரியும் மட்டும்தான் வீட்ல இருப்பாங்க. அவங்களை சமாளிச்சுட்டு உள்ள பூந்துட்டோம்னா ஏதாவது தேறுதான்னு பார்க்கலாம்.
 
ரிஷாந்த்: அப்ப இன்னைக்கு வேற என்ன ப்ரோக்ராம்?
 
ஜானி: ரெஸ்ட் தான்.  ரெஸ்ட் நாளில் என்னென்ன பண்ணினோம். எங்க போனோம்? என்ன சரக்கு அடிச்சோம்? கிளப்ல எவளை பாத்து ஜொள்ளு விட்டோம். எவ கூட டிஸ்கோதேல டான்ஸ் ஆடினோம்ன்னு, இதெல்லாம் எழுதி நம்ம இமேஜை  ஸ்பாயில்  பண்ண வேண்டாம்னு அந்தாளு கிட்ட சொல்லி வை.
 
ரிஷாந்த்: எந்தாளு கிட்ட?
 
ஜானி: இந்த கதை எழுதுறானே அந்த மைக்கா மண்டையன்கிட்ட தான்... இப்பதான் வாசகர்கள் கிட்ட ஒரு நல்ல பேர் கிடைச்சிருக்கு. நம்மள பத்தி ஏதாவது எழுதி, இருக்கிற கொஞ்சம் நல்ல பேரையும் கெடுத்திறப் போறான்.
 
ரிஷாந்த்: நான் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிடறண்ணே. அப்படின்னா மறுநாள் மதியம் 12 மணின்னு jump cut கொடுக்க சொல்லிடலாம்ல.
 
ஜானி:  சொல்லாதே... செய்.
 
Jump cut to
 
மறுநாள் மதியம் 12 மணி
 
ரெஸ்ட் டேயின் போது மாலை நேரத்திலும், இரவு நேரத்திலும் ஜானியும் ரிஷாந்த்தும் நல்ல பிள்ளைகளாக வீட்டிலேயே இருந்தார்கள். பைபிளும், பகவத்கீதையும் படித்தார்கள். மெடிடேஷனும் யோகாவும் செய்தார்கள். அவர்கள் வீட்டுக்கு எதிரே இருந்த ECR ரோட்டை, கிராஸ் பண்ண முடியாமல் இருந்த கண்ணு தெரியாத கிழவி கையை பிடித்து, ரோட்டை கிராஸ் பண்ணி விட்டார்கள். இல்லை, இல்லை, தூக்கிக்கொண்டு போய் மறுபக்கம் விட்டார்கள். ரோட்டில் சும்மா சுற்றிக் கொண்டிருந்த நாய்களுக்கு பன்னும் புரையும் போட்டார்கள். ராத்திரி ஒரு கிளாஸ் பால் குடித்து விட்டு, சீக்கிரமே படுத்து விட்டார்கள்.
 
ஜானி மேற்கண்ட விஷயங்களை படித்தால், திருப்திப்பட்டு விடுவான் என்பதால், அடுத்த விஷயத்துக்கு வருவோம்.
 
ரிஷாந்த் மதியம் 12 மணிக்கே ஆபீஸ்க்கு வந்து, லீவ் ஃபார்ம் கையெழுத்து போட்டுவிட்டு, அவன் டீம் பசங்க ஒரு சில பேரை பார்த்து பேசினான். அவனை காணாமல் டீம் பசங்க இளைத்திருப்பார்கள் என்று பார்த்தால், இப்பதான் ரொம்பவே ஹாப்பியா இருக்கிறோம் என்று பாக்யா சொல்லிவிட்டு, பின் குறிப்பாக, 
 
"சும்மா, காமெடி காமெடி", என்றாள்.
 
ரிஷாந்த்: நம்புற மாதிரி இல்லையே. மனசுக்குள்ள இருக்கிறது, வெளியில வர்ற மாதிரி இருக்கு.
 
மேலும் கதைக்கு தேவைப்படாத பேச்சுக்கள், அவர்களுக்கு மட்டுமே தெரிந்த இன்சைடு ஜோக்குகள், பரிமாறிக் கொண்டார்கள்.
 
சரத் ஆபீஸில் தான் இருக்கிறான் என்பதை, ரிஷாந்த் உறுதிப்படுத்திக் கொண்டே இருந்தான்.
 
சரியாக அதே 12 மணிக்கு, ஜானியும் வீராசாமியும் லாஸ்பேட்டில் இருக்கும் சுவர்ணா அப்பார்ட்மெண்ட்ஸ்க்கு சென்றிருந்தார்கள். கெட்டப்புக்கு வீராசாமி ரொம்ப மெனக்கெடவில்லை. தலையை படிய வாரி, ஒரே ஒரு சோடாபுட்டி கண்ணாடி மட்டும் போட்டுக் கொண்டான். ஒட்டு மொத்தமாக அவன் அடையாளமே மாறிப் போயிருந்தது.
 
சரியாக மதியம் ஒன்றரை மணிக்கு, ஆபீசுக்கு வெளியே பார்க்கிங்கில், சரத் கார் அருகே நின்றிருந்த ரிஷாந்த்துக்கு போன் வர, எடுத்து பார்த்தான். மறுமுனையில் ஜானி.
 
என்னடா இது? பன்னெண்டு மணிக்கு தானே சரத் அப்பார்ட்மெண்ட்க்கு போனாரு. வேலை முடியலையா? பிரச்சனை ஆயிடுச்சா? பதட்டமாக போனை அட்டென்ட் செய்தான்.
 
ஜானி: மத்தியானம் என்ன சாப்பிடலாம்? வயித்துல அபாய சங்கு ஒலிக்குது. அயில மீன் குழம்பு சூப்பரா இருக்கும். எந்த ஹோட்டல்ல நல்லா வச்சிருப்பான்? உனக்கு நெத்திலி குழம்பு தானே பிடிக்கும்.
 
ரிஷாந்த்: அண்ணே விளையாடாதீங்க. என்னாச்சு? நானே பதட்டமா இருக்கேன். விஷயத்தை சொல்லுங்க.
 
ஜானி:  போனமா வந்தோமான்னு வேலை முடிஞ்சுது. அது ஒரு மொக்க அப்பார்ட்மெண்ட் ரிஷ். எட்டு மாச கர்ப்பத்தோடு ஒரே ஒரு செக்யூரிட்டி மட்டும் தான் இருந்தான். அவனையும் வீராசாமி வெளியே இருக்கிற டீ கடைக்கு தள்ளிட்டு போயி, பிளாட் என்ன ரேட் வருது? எந்த பிளாட் ஃப்ரீயா இருக்குன்னு   விசாரிச்சுட்டு இருந்த கேப்ல, நான் உள்ள போயிட்டேன். சரத் பிளாட் இருக்கிற தேர்ட் ப்ளோர், தொடச்சி வச்ச மாதிரி காலியா இருந்துச்சு. எவனுமே இல்ல. கதவை திறந்து உள்ள போயிட்டேன். என்னா வசதியா இருக்கான்? தேவி... மவன்.
 
பிளாட் பூராவும் கரன்சி காத்து. அவன் பெட் ரூம்ல ரீடிங் டேபிளில் கேமரா, லேப்டாப், மொபைல் போன்கள் எல்லாம் இருந்துச்சு. டிராவுல, ஏதாச்சும் மெமரி கார்டு, பென்டிரைவ் இருக்குதான்னு பார்த்தேன். இல்லை. கிடைச்ச அவ்ளத்தையும்  தூக்கி ஒரு பேக்ல போட்டுட்டு கிளம்பிட்டேன். ஆபீஸ்க்கு ஒரு லேப்டாப் கொண்டு வரான்.  வீட்ல எதுக்கு இன்னொரு லேப்டாப். சம்திங் ராங்ல? அதான் டைம் பாஸ்க்கு குடைஞ்சி பார்ப்போம்ன்னு தூக்கிட்டு வந்துட்டேன்.
 
ரிஷாந்த்: கரெக்ட் தான் பாஸ். கிளம்பிட்டீங்களா?
 
ஜானி: ஆன் த வே... நீயும் கிளம்பி IG சிக்னலுக்கு வந்துரு. காமாட்சியை இன்னைக்கு அடிச்சு துவைச்சு காய போட்டுருவோம்.
 
ரிஷாந்த். " பாஸ்" என்று அலற....
 
ஜானி: பதறாதடா, காமாட்சி ஹோட்டலை சொன்னேன்.
 
தொடரும்
 


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 35
 
மாலை 4 மணி 
 
ஜானியும், ரிஷாந்த்தும் வாயடைத்து போய் இருந்தார்கள். அவ்வபோது ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு பக்கத்தில் இருந்த ஆஸ்ட்ரேவில், ஒரு மணி நேரத்துக்கு முன்னால்,  உயிர் துடிப்புடன் இருந்த 10 சிகரெட்டுகள், இப்போது வெறும் சாம்பலாக, துண்டுகளாய் உயிரற்றுக் கிடந்தன.
 
ஜானி: என்னடா இவன் ஆல் இந்திய அளவில் சீட்டிங், ஃபிராடு, பண்ணிருக்கான். பல இடங்களில் வாயை வேற வச்சிருக்கானே. வீட்டில் தானே இருக்குதுன்னு  லேப்டாப்பை லாக் செய்யாமல், அவன் போட்டு வச்சது ரொம்ப நல்லதா போச்சு.
 
மதியம் அவர்கள் வீட்டுக்கு வந்ததும், சரத் பிளாட்டில் இருந்து எடுத்து வந்த லேப்டாப்பை ஜானி குடைந்தான். சொல்ல மறந்துட்டேனே குடைவதில் அவன் எக்ஸ்பர்ட். போல்டர்களில் இருந்த போட்டோக்கள், பிரவுசரில் ஜிமெயில் என்று தட்டியதும், லாக் அவுட் பண்ணாததால் ஆட்டோமேட்டிக்காக ஓபன் ஆகி அதில் படித்து தெரிந்து கொண்ட விஷயங்கள், வரி ஏய்ப்பு சமாச்சாரங்கள், போட்டி கம்பெனியுடன் நடத்திய பேரங்கள், போதாகுறைக்கு கம்பெனி ஜிஎம் சுஷ்மிதாவுடன் ஜிமெயில் சேட்டில் பகிர்ந்து கொண்ட கில்மா விஷயங்கள்... இன்னும் பல பல.. மூச்சு முட்டியது.
 
ரிஷாந்த்: ஒரே லேப்டாப்ல ஒட்டு மொத்தமாக ஆள் காலி.
 
ஜானி: ஒரு சவரன் தங்கத்துக்கு ஆசைப்பட்டால், ஒரு தங்க சுரங்கமே கிடைச்சிருக்கு. இதை வச்சு இவன நீ சொன்னதெல்லாம் செஞ்சது போக, அதற்கு மேலேயும் செய்யலாமே. டேஷ் மவன்... 3 மெயில் ஐடி கிரியேட் பண்ணி, மூணு பேர் கூட விதவிதமா சாட் பண்ணிருக்கான். வேற சிஸ்டம்ல லாகின் பண்ணி, ஜிமெயில் சமாச்சாரங்களை அவன் டெலிட் பண்ணிட கூடாதுங்கறதுக்காக மெயில் ஐடி பாஸ்வேர்டு எல்லாம் மாத்தி, லாக் பண்ணி வச்சிட்டேன்.
 
அடுத்தது ஜானி கேமராவை எடுத்து போட்டோக்களை வரிசையாக பார்த்தான். பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு ஸ்டேஜில், ஆத்திரத்தில் கேமராவை தூக்கி போட்டு உடைக்க போக... ரிஷாந்த்துக்கு எதற்காக என்று புரிந்தது. அதனால் தடுக்கவில்லை. ஆனால் உடைக்க போன ஜானி, உடைக்காமல் நிறுத்தி, மேற்கொண்டு போட்டோக்களை பார்த்தான்.
 
சிறிது நேரத்திற்கு பிறகு,
 
"ஷீபாவை எடுத்த போட்டோக்கள் எல்லாம் இதுல தான் இருக்கு. அது போக இன்னும் நிறைய போட்டோக்கள் இருக்கு. ஏதோ ஒரு ஆத்துல ஜட்டியோட குளிச்சிட்டு இருக்கான், டூர் போனப்ப எடுத்த போட்டோஸ், நிறைய பொண்ணுங்க கூட நெருக்கமா போட்டோ எடுத்துருக்கான், கேட்டா பிரெண்ட்ஸ்ன்னு கத விடுவான்னு நினைக்கிறேன். இதெல்லாம் அவன் பொண்டாட்டிக்கு தெரியுமான்னு தெரியல்லை. அவனும் அவன் பொண்டாட்டியும் எடுத்துக்கிட்ட பிரைவேட்டான போட்டோசும் கொஞ்சம் இருக்கு. அது அவன் பொண்டாட்டியா தான் இருக்கணும். "
 
ரிஷாந்த்துக்கு பிளாஷ் கட்டில். ஆபீஸில் ஜாயின் பண்ணும் 
போது, சரத் ஸ்டேஜில் விரைப்பாக நின்றபடி, " Work disipline is very very important. அதில் ஏற்படும் குறைகளை என்னால் tolerate செய்யவே முடியாது", என்று மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி கர்ஜித்ததை நினைத்து பார்த்து அடக்க முடியாமல் சிரித்தான்.
 
ஜானி: எப்படியும் ஈவினிங் அவன் பிளாட்டுக்கு போனதும், முக்கியமான ஒரு சில ஐட்டங்களை காணலன்னு கண்டுபிடிச்சிடுவான். நேரடியா போலீசுக்கு போக மாட்டான். ஏன்னா இது திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி, தனிப்பட்ட முறையில் போலீஸ்ல யாராவது பிரண்ட்ஸ் இருந்தாங்கன்னா... அவங்க கிட்ட சொல்லி விசாரிக்க சொல்லலாம். 
 
ரிஷாந்த்: அய்யய்யோ கைரேகை, மோப்பநாய் அது இதுன்னு போவானுங்களா?
 
ஜானி: தமிழ் சினிமா ரொம்ப பாக்குறியா? அந்த ரேஞ்சுக்கு போகணும்னா போலீஸ் ஸ்டேஷனில் பார்மலா கம்ப்ளைன்ட் கொடுக்கணும். அவன் கொடுக்க மாட்டான். May be போலீஸ்ல தெரிஞ்சவங்க யாராவது இருந்தா, வேற டைப்பில விசாரிக்கலாம். விசாரிச்சு தான் பாக்கட்டுமே. நமக்கும் இன்ட்ரஸ்டிங்கா இருந்தா தானே நல்லாருக்கும்... இல்ல... என்ன சொல்றே ரிஷ்?
 
ரிஷ், ஆமா என்றும் சொல்லாமல் இல்லை என்று சொல்லாமல், பொதுப்படையாக தலையாட்டினான்.
 
ஜானி:
...த்தா மாட்டுனான்டா. ரிஷ், நம்ம blackmail kit ஐ எடுறா.
 
ரிஷாந்த்: இன்னைக்கே பிராசஸ் ஆரம்பிச்சிடலாமா?
 
ஜானி: நீ தானே அவனை கதற விடனும், கண்ணீர் வடிக்க வைக்கணும்னு சொன்னே.
 
ரிஷாந்த்: ஆமா ஆமா.
 
ஜானி: அப்போ எடு.. நம்ம பசங்கள கூட்டிட்டு வேற ஏரியாவுக்கு போலாம்.
 
ரிஷாந்த்: அப்ப கிளைமாக்ஸ் ஆரம்பிச்சுருச்சுன்னு சொல்லுங்க.
 
இந்த மாதிரி சந்தர்ப்பங்களுக்காகவே அவர்கள் வாங்கி வைத்த சிம்கார்டுகள் ஒரு சிலது கிடந்தது. விவேகானந்தர், நம்பர் 15, துபாய் குறுக்கு சந்து, துபாய் பஸ் ஸ்டாண்ட், துபாய் என்ற அட்ரஸ் கொடுத்து வாங்கிய சிம் கார்டுகள். இப்போது இருக்கிற மாதிரி ஆதார் கொடுத்து வாங்குற சம்பிரதாயங்கள் எல்லாம், 2010க்கு முன்னால் கிடையாது. 
 
IMEI நம்பரை வைத்து trace பண்ணுவார்கள் என்பதற்காக, ஒரு சில டுபாக்கூர் மொபைல்களும் கிடந்தன. அனைத்தும் பிளாக்மெயில் கிட்டில் வரும். எடுத்துக் கொண்டான். மொபைல் டவர் செக்கிங் கூடாது என்பதற்காக தான் வேற ஏரியா பயணம்.
 
அவர்களின் புரோட்டோகாலை உங்களுக்கு விளக்கிக் கொண்டிருக்கும், இந்த நேரத்தில்,
 
பைக்கில் இருவரும் ஈசிஆர் ரோட்டில் போய்க் கொண்டிருந்தார்கள்.
 
தொடரும்


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 36
 
இரவு 7 மணி 
 
அப்பார்ட்மெண்ட் மெயின் கேட் அருகே சரத் நின்றிருக்க,  பக்கத்தில் அவன் ஃப்ரெண்ட் ஆனந்தும், மேலும் ரெண்டு பேரும் நின்றிருந்தார்கள். சரத் பதட்டமாக இருக்க, மற்ற அனைவரும் பதட்டமில்லாமல் இருந்தார்கள்.
 
சாலையில் மக்கள் விரைந்து கொண்டிருந்தார்கள். வாகனங்களின் நெரிசல்.
 
ஆனந்த் யூனிஃபார்மில் இல்லை என்றாலும், போலீஸ் ஆபீஸர் தான் என்று வெளிப்படையாக எடுத்துரைக்கும் விஷயங்கள், பின்வருமாறு... முடியை போலீஸ் கட் அடித்து, சற்றே  ட்ரிம் செய்யப்பட்ட மீசை. முகத்தில் படர்ந்திருந்த செயற்கை கடுமை. நிலையில்லாமல் அலையும் கண்கள். Tight டி-ஷர்ட் போட்டு, கிண்ணென்று மேல் கை தசைகளை காட்டிக் கொண்டிருந்த விதம்.  
 
ஆனந்த் பக்கத்தில் நின்றிருந்த இரண்டு பேரும், அவன் ஸ்டேஷன் பிசிகள். அவர்கள் யூனிஃபார்மில் இருந்தார்கள்.
 
ஆனந்த்: பயப்படாதடா... எவனோ உன்னுடைய பிளாட்டில் உள்ள பூந்திருப்பான். அவசரமா கைல கிடைச்சத எடுத்துட்டு  போய்ருப்பான். இதுதான் நடந்திருக்கும். போலீசுக்கு தெரியாத திருட்டு பசங்களா? எவன் எவன் பிக்பாக்கெட், வீடு பூந்து திருடுறவன், செயின், ஸ்நேச்சர், கஞ்சா குடிக்கிங்க அவ்ளோ பேரு லிஸ்டும் இருக்கு. எவன் உள்ளூர்ல இருக்கான், எவன் வெளியூர்ல இருக்கான், எவன்  ஜெயிலுக்குள்ள இருக்கான், எவன் வெளியில் இருக்கான். எல்லாம் அத்துபடி. அடுத்த 24 மணி நேரத்துல, எவன் லேப்டாப் தூக்கினானோ அவனை புடிச்சு நெம்புறேன் பாரு.
 
சரத் டென்ஷனாக,  "அதுக்கில்ல ஆனந்த். வீடு பூந்தவன் கரெக்டா லேப்டாப்பையும், கேமராவை மட்டும் தூக்கிட்டு போய்ருக்கான். அதுதான் குழப்பமா இருக்கு. அதை விட காஸ்ட்லியான பொருட்கள் எவ்வளவோ ரூம்ல இருக்கே", என்றான்.
 
ஆனந்த்: எல்லாம் கஞ்சா குடிக்கிற பயலுக. அறிவே இருக்காது. தங்கத்துக்கும் தகரத்துக்கும் வித்தியாசமா தெரிய போகுது. நீ கவலையே படாதே. நான்தான் சொல்றேன்ல. போலீஸ் நினைச்சா, எந்த கேசையும் 24 மணி நேரத்துல முடிக்க முடியும்.
 
சரத்தின் போன் அடித்தது. 
புது நம்பர். அவன் நெற்றியில் சுருக்கங்கள். காலை அட்டென்ட் செய்தான்.
 
"ஹலோ மிஸ்டர் சரத். My name is X.W.D Ramarathinam....X.W.D என்னுடைய இனிஷியல். உங்க லேப்டாப், கேமரா எல்லாம்  என்கிட்ட தான் பத்திரமா இருக்கு. நான் ஒரு professional burglar. Glad to meet u..", என்று வாய்ஸை மாற்றி பேசினான் ஜானி.
 
சரத், போனை தள்ளிப்பிடித்து,
"ஆனந்த், அந்த fucker தான் பேசுறான்....", என்றான்.
 
பேசு பேசு என்று சரத்திடம் அவசர சைகை செய்தான். 
 
சரத்: யாரு சார் நீங்க? எப்படி என்னுடைய லேப்டாப் கேமரா எல்லாம் எடுத்துட்டு போனீங்க? Give it to me... எங்க இருக்கீங்க சொல்லுங்க, நான் வந்து வாங்கிக்கிறேன். எந்த பிரச்சினையும் இல்லாம செட்டில் பண்ணிக்கலாம்.
 
ஜானி: Sorry for the inconvenience. என்னோட ப்ரொபஷன் அப்படி... சொல்லாமல் கொள்ளாமல் எடுத்து வர வேண்டியதா போச்சு. அதுல பாருங்க... செட்டில் பண்ணிக்கலாம்னு சொன்னீங்கல. ஐ லைக் யு... எல்லாம் ஒரு தடவை ஜோரா கைதட்டுங்க.
 
பக்கத்தில் நின்றிருந்த ரிஷாந்த், வீராசாமி, லோகேஷ் அனைவரும் கைதட்டினார்கள்.
 
"ஓகே... போதும் போதும்"... ஜானி எண்ணினான்.
 
"1 பிளஸ் 2 ப்ளஸ் 3 ப்ளஸ் 4.... a+b+c+d. ஆளுக்கு 5 லட்சம் மொத்தம் 20 லட்சம். எங்களுக்கு அவசரமா தேவைப்படுது. Personal commitments இருக்கு. If u dont mind... எப்ப தருவீங்கன்னு சொன்னீங்கன்னா, எங்க வந்து கொடுக்கிறதுன்னு நான் இன்பார்ம் பண்ணுவேன்."
 
"20 லட்சமா??? அவ்ளோ பணத்துக்கு நான் எங்க போவேன். ஒரு லேப்டாப்பும் கேமராவும் புதுசா வாங்குனா, ஐம்பதாயிரம் கூட வராது. எனக்கு தேவையில்லை நீயே வச்சுக்கோ...", ஆனந்தை பார்த்து, எப்படி நம்ம பிட்டு என்று கண்ணடித்தான் சரத்.
 
இருவரும் பேசிக் கொண்டிருக்க, சைடில் நின்றிருந்த ஆனந்த், அவன் போனில், சைபர் செல்லுக்கு கால் பண்ணி, சரத் நம்பரை கொடுத்து பேசிக் கொண்டிருக்கும் காலை, டிரேஸ் பண்ண சொல்லிக் கொண்டிருந்தான்.
 
போன குடுங்க என்று வாங்கிய வீராசாமி,
 
"Sarath bro, நான் தான்  ஆஃப்பாயில்  ஆறுமுகம் பேசுறேன். ஒரு சாதாரண லேப்டாப்புக்கும், கேமராவுக்கும் யாராவது இருவது லட்ச ரூபா கேப்பாங்களா? எதுனால கேக்குறோம்ன்ட்டு உங்களுக்கே தெரியும். கேமராவுல இருக்கக்கூடிய போட்டோக்கள், லேப்டாப்பில் இருக்கக்கூடிய சேட்டிங், கம்பெனி ரகசியங்கள். எல்லாத்தையும் படிச்சு பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு போச்சு. அதுக்காக நாங்க ரொம்ப வருத்தப்படுறோம். ஒரு உண்மையை சொல்லணும்னா உங்க பிளாட்டுக்குள்ள, எல்லா பொருட்களையும் வழிச்சி வாரிட்டு போணும்னு தான் நுழைஞ்சோம். 
 
சொல்ல மறந்துட்டேன், பிளாட் ரொம்ப அருமையா இருந்துச்சு. பிரிட்ஜ்ல  இருந்த ஐட்டங்கள் எல்லாம் சாப்பிட்டு ஒன் ஹவர் ரெஸ்ட் எடுத்துட்டு தான் போனோம். சரி விஷயத்துக்கு வர்றேன். லேப்டாப்பில் உள்ள விஷயங்களை பார்த்த போது, எதுக்கு டிவி, பிரிட்ஜ் எல்லாத்தையும் கஷ்டப்பட்டு தூக்கிட்டு போயி, அதை விக்க வேற கஷ்டப்படணும். ஒரு திருடனுக்கு இந்த பாழாபோன சொசைட்டில, எவ்வளவு கஷ்டம் இருக்கு பாருங்க. சோ, அதை விட்டுட்டு, உங்ககிட்ட நட்பு அடிப்படையில் காசு கேட்டு வாங்கிக்குவோம்ன்னு முடிவு பண்ணினோம்."
 
சரத்திற்கு அபரிதமாக வேர்க்க ஆரம்பித்தது. லேப்டாப்பில் உள்ள விஷயங்கள் வெளியே கசிஞ்சிதுன்னா... மானம் போறது மட்டுமில்லாமல், கம்பெனி ரகசியங்களை வெளியிட்டோம்ன்கிற  அடிப்படையிலே ஜெயிலுக்கே போக வேண்டிருக்குமே என்று அவசரமாக கால்குலேஷன்கள் போட்டுக் கொண்டிருந்தான்.
 
சரத்: டேய் யாருடா நீங்க? என்னதான்டா உங்களுக்கு வேணும்... என்று கேட்க...
 
ரிஷாந்த் போனை என்கிட்ட குடு என்று வாங்கி, வாய்ஸை மாற்றி பேசினான்.
 
"அதான் ஏற்கனவே சொன்னாங்களே... இப்போ உங்களிடம் உரையாடி கொண்டிருப்பது முட்டம் சின்னப்பதாஸ். அடுத்தது சுகிர்தராஜா வெயிட்டிங்ல இருக்காரு."
 
சுகிர்தராஜா பெயர் தனக்கு பொருத்தமா இல்லையே என்று லோகேஷ் யோசித்தான்.
பெயர் மாற்றம் செய்ய முடிவுக்கு வந்தான்.
 
சரத் போனை சைடில் தாழ்த்தி, "ஏதேதோ பேர் சொல்லிட்டு இருக்காங்க... மொத்தம் ஆனா நாலு பேர்...", என்றான் ஆனந்திடம்.
 
ரிஷாந்த்: ஹலோ சார் லைன்ல இருக்கீங்களா?
 
சரத் கர்ச்சீப் எடுத்து வியர்வையை துடைத்தபடி, "இருக்கேன் சார், சொல்லுங்க..."
 
ஆனந்துக்கு போன் வர, எடுத்துப் பேசினான்.
 
"ஓல்ட் ஹார்பர் டவர் காமிக்குது சார். அந்த ஏரியாவுல தான் பேசிட்டு இருக்காங்க... சிம் கார்டு டீடைல் check பண்ணிட்டேன். விவேகானந்தர், துபாய் குறுக்கு சந்து, துபாய்ன்னு போலி அட்ரஸ் கொடுத்திருக்காங்க. அந்த நம்பர்ல இருந்து வேற எந்த காலும் லாஸ்ட் ஆறு மாசத்துல போகல. Phone IMEI  நம்பர்ல வேற எந்த சிம்மும் யூஸ் பண்ணல சார்"
 
ஆனந்த் பக்கத்தில் நின்ற ரெண்டு பிசிகளை தனியா கூப்பிட்டு,
 
"ரவி, குமார், ஓல்டு ஹார்பர் ஏரியாவில் இருந்து தான் பேசுறாங்க. அங்கு வழக்கமா பசங்க கூடுற இடம், ப்ளே கிரவுண்டு, Pier, ஒரு வாட்டர் டேங்க் கூட இருக்கு. அந்த ஏரியாவில் செக் பண்ணி பாருங்க. அக்யூஸ்ட் மொத்தம் நாலு பேர். ரோட்டோரமா எவன் நின்னாலும் விசாரிங்க. சந்தேகம் இருந்துச்சுன்னா தூக்கிட்டு போய் ஸ்டேஷன்ல வைங்க. எந்த பிரச்சினை வந்தாலும் நான் பாத்துக்குறேன். எனக்கு இவரு ரொம்ப கிளோஸ் பிரண்டு. பிரச்சனைல மாட்டிகிட்டாரு.  கிளம்புங்க..", என்றான்
 
இருவரும் சல்யூட் அடித்து விட்டு, ஆளுக்கொரு பைக்கில் கிளம்பினார்கள்.
 
சரத்: என்கிட்ட அவ்வளவு பணம் இல்ல.
 
ரிஷாந்த்: போங்க சார், விளையாடாதீங்க. உங்க மெயில் எல்லாம் வரிசையா எடுத்து படிச்சு பாத்துட்டோமே. Entelnet கம்பெனியிலிருந்து ரெண்டு வாரத்துக்கு முன்னால, உங்களுக்கு 50 லட்சம் ட்ரான்ஸ்பர் பண்ணிருக்காங்களே.. அதுவும் பிரச்சனைல மாட்டக்கூடாது என்பதற்காக அஞ்சு அஞ்சு லட்சமா வெவ்வேறு பெயரில் டிரான்ஸ்பர் பண்ணிருக்காங்க. உங்க பேங்க் பேலன்ஸ், உங்க வைப்போட பேங்க் பேலன்ஸ், சொத்துக்கள் எல்லாம் சேர்த்தாலே அஞ்சு கோடி ரூபாய் தேறும் போலிருக்கே. ஒரு எம்என்சில  HR ஹெட்க்கு லட்சங்களை தாண்டி கோடியில சொத்து... எப்படி சார்?  20 லட்சம் எல்லாம் உங்களுக்கு ஜூஜூபி அமௌன்ட்..."
 
சரத்திற்கு கடா முடா வென்று வயிற்றில் பயப்பந்து உருண்டது. எப்படி இவ்வளவு விஷயம் இவர்களுக்கு தெரிந்தது?
 
ஜானி: அந்த பாயிண்ட சொல்றா... அந்த பாயிண்ட்டை சொல்லு.
 
ரிஷாந்த், சரத் காதில் விழும்படியாகவே, எந்த பாயிண்ட் பாஸ் என்று கேட்க,
 
ஜானி: அட போடா... இப்படில்லாம் பண்ணா நம்ம ப்ரொபஷனல் பிளாக்மெயிலர் இல்லை. இப்பதான் புதுசா தொழிலுக்கு வந்துருக்கோம்னு நினைச்சுக்க மாட்டான்... என்று போனை வாங்கி ஜானியே பேசினான்.
 
அதையும் சரத் கேட்டுக் கடுப்பானான்.
 
"ப்ரோ, சின்னப்பதாசுக்கு பேச தெரியல. விஷயம் என்னன்னா, நீங்க அமௌன்ட் எங்களுக்கு தரல்லைன்னா  விஷயத்தை முதல்ல, உங்க வைஃப் கிட்ட சொல்லுவோம்.  அவங்க அட்ரஸ், போன் நம்பர்   எடுத்துட்டோம். 984313×××× தானே. அப்புறம் உங்க போட்டோஸ் எல்லாம் இன்டர்நெட்ல போடுவோம். நீங்க ஜட்டியோடு நிக்கிறது, ஜட்டி இல்லாம நிக்கிறது, எல்லா போட்டோக்களும் தான். அப்புறம் உங்க கம்பெனி ஹெட் ஆபீசுக்கு, நீங்க entelnet கம்பெனியுடன் வச்சுக்கிட்ட ட்ரான்ஷாக்ஷன், எல்லா டீடைல்ஸ்ம் அனுப்புவோம். இன்னும் எங்களுக்கு என்னென்ன தோணுதோ எல்லாம் செய்வோம்... 
 
ஆங், சொல்ல மறந்துட்டேனே! கூகுள் சேட்ல, சுஷ்மிதான்னு  ஏதோ ஒரு லேடியோட சாட்டிங் பண்ணிருக்கீங்க? ரொம்ப சூப்பர் சார். படிச்சு பார்த்தோம். எங்களுக்கே கிளுகிளுப்பா இருந்துச்சு. அவங்களோட boob pic கேட்டுருக்கீங்க, nude photos கேட்டுருக்கீங்க? அவங்களும் உங்க மனசு கோணாம அனுப்பிருக்காங்க.  விசாரிச்சு பார்க்கும்போது, உங்க கம்பெனி ஹெட் ஆஃபீஸில் அவங்க GM போஸ்ட்ல இருக்கிறாங்களாமே..."
 
சரத்: டேய் யாருடா நீங்க...
உச்ச குரலில் கத்தினான்.
 
ஜானி: அதான் சொன்னேனே... என் பேரு XWD ராமரத்தினம். XWD என் இனிஷியல். 
 
சரத்: டேய்ய்ய்ய்.... மறுபடியும் உச்சபட்சமாக கத்த, ஜானி போனை காதிலிருந்து எடுத்தான்.
 
ஜானி: ஏன் சார் இப்படி ஹை டெசிபலில் கத்துறீங்க? காது வலிக்குது. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். காலை trace பண்றேன்னு ஓல்ட் ஹார்பர் ஏரியாவுக்கு போய் சுத்தி, டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம். நாங்க அந்த ஏரியாவில் இருந்து எப்பவோ கிளம்பிட்டோம்... பேசி பேசி டயட் ஆயிருச்சு. பழைய பஸ் ஸ்டாண்ட் பஜார் பக்கத்துல இருக்குற ஏதாவது ஒரு பாருக்கு போய், கொஞ்சம் சார்ஜ் ஏத்திக்கிட்டு, ஒரு அரை மணி நேரம் கழிச்சி பண்றேன், சரியாடா சரத்து... ஞான் வச்சிரட்டே.."
 
ஜானி போனை கட் பண்ணினான்.
 
சரத்தும், ஆனந்தும் திகைத்துப் போய் நின்றார்கள்.
 
ஆனந்த்: உன்னுடைய மெயில் ஐடி ல forgot password ஆப்ஷன்ல போயி, பாஸ்வேர்ட் மாத்தி  லாக் பண்ணலாம். போட்டோ விஷயங்களுக்கு வேற ஏதாவது யோசிப்போம்... Come lets go.
 
ஆனந்த், அந்த இரண்டு பிசிகளுக்கும் போன் பண்ணினான். ஓல்ட் ஹார்பர் ஏரியாவை விட்டுவிட்டு, ஓல்டு பஸ் ஸ்டாண்ட் ஏரியா பார்களில், செக் பண்ண சொன்னான்.
 
சரத்தின் கார் அப்பார்ட்மெண்ட் வெளியவே நின்றிருந்தது. இருவரும் போய் காரில் ஏறினார்கள். கார் வேகம் எடுத்து, டிராபிக்கில் கலந்தது.
 
தொடரும்


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 37
 
நியூ பஸ் ஸ்டாண்ட் பின்னால் இருந்த ஒரு பாரில், கடைசிக்கு முந்தின டேபிளில் ரெண்டு பேரும்,  கடைசி டேபிளில் ரெண்டு பேருமாக பிரிந்து உட்கார்ந்திருந்தார்கள். மாட்டுக்கு தண்ணீர் காட்டுவது போல், பாடிக்கு விஸ்கியை காட்டிக் கொண்டிருந்தார்கள்.
 
ரிஷாந்த்: அண்ணே, இன்னும் கதற விடணும். சேடிஸ்பேக்ஷனா இல்லை. ஷீபாவை இவன் பண்ண டார்ச்சருக்கு ஜட்டியோட ரோட்ல ஓட விடணும். 
 
ஜானி: ஜட்டியோடவா?... கரெக்டா சொல்லு??? ஜட்டி போட்டுருக்கணுமா? இல்ல, கழட்டி கைல வச்சுட்டு ஓட விடணுமா?
 
ரிஷாந்த் சிரித்தான்.
 
"கழட்டி கையில் வச்சிட்டு ஓடவிட்டால், எவன் பாக்குறது?  பாக்குறவன் கண்ணு அவிஞ்சு போய்டாது... இன்னும் கதற விடுங்கண்ணா.."
 
ஜானி: "இப்பதானே ஆரம்பிச்சு இருக்கேன். Dont worry. இவனல்லாம் ரெண்டு நாளைக்கு நல்லா வச்சி குமுறுகஞ்சி காய்ச்சிறலாம்"
 
ரிஷாந்த்: அடுத்த ரவுண்ட் போன் பண்ணிட்டு, நம்ம ஏரியாவுக்கு போயிடலாம். லேப்ல சார்ஜ் இல்லன்னு போட்டு விட்டுட்டு வந்தேன். அதை எடுக்கணும். நெக்ஸ்ட் சுசி கிட்டருந்து கால் வரும்.
 
ஜானி: சுசியை மறந்துட்டோமே, அவ இன்னைக்கு கால் பண்ணலையா?
 
ரிஷாந்த்: இனிமேதான் பண்ணுவா... என்று சொல்லவும் அவன் போன் அடித்தது. எடுத்துப் பார்த்தான்.  பாக்கியா தான் கால் செய்திருந்தாள். எடுத்துப் பேசினான்.
 
பாக்கியா: ஜானி சார், ஷீபா கிட்ட என்ன கோர்த்துவிட்டது தான் விட்டாரு. நான் எங்க போனாலும், நிறுத்தி வச்சி அட்வைஸா பண்ணிட்டு இருக்காங்க. கேட்டு கேட்டு காதுல ரத்தம் வருது.
 
ரிஷாந்த்: எல்லாம் அவங்க நல்லதுக்காக செஞ்சது தான். உனக்கு தான் விஷயம் தெரியுமே. கொஞ்சம் பொறுத்துக்கோ.
 
பாக்யா: நீங்க சொல்றதெல்லாம் செய்றேன். பின்னால எனக்கு பெருசா ட்ரீட் வைக்கணும்.
 
ரிஷாந்த்: வைச்சிரலாம்.
 
பாக்யா: சரி ஓகே சார். நான் வச்சிடறேன்.  என் BF வேற செகண்ட் லைன்ல வந்துகிட்டே இருக்கான். Bye
 
ரிஷாந்த்: 5 அடி உயரம் கூட வளரல உனக்கு பாய் பிரெண்டா?... அவன் சொன்னதை கேட்பதற்கு, அவள் லைன்லையே இல்லை, காலை எப்போதோ கட் செய்திருந்தாள்.
 
15 நிமிடத்திற்கு பிறகு, 
 
சரத்தும், ஆனந்தும் நியூ பஸ் ஸ்டாண்ட் அருகே இருந்த ஒரு நெட் சென்டருக்கு வெளியே வந்தார்கள். ஆனந்துக்கு முகத்தில் கோப சிவப்பு.
 
ஆனந்த்: bloody bastards. எல்லா மெயில் ஐடிக்கும்.. பாஸ்வேர்டு, போன் நம்பர், retrieving mail id எல்லாத்தையும் மாத்தி வச்சிருக்கானுங்க.
 
சரத் முகம் பூராவும் கலவரத்தை பூசிக்கொண்டு, என்ன நடக்குமோ என்று பதட்டத்தில், வழிந்து கொண்டிருக்கும் வேர்வையை கர்சீப்பால் பிழிய பிழிய துடைத்துக் கொண்டிருந்தான்.
 
ஆனந்த்: காலை ட்ரேஸ் பண்ணி ஆள கண்டுபிடிக்க முடியல. டுபாக்கூர் சிம், போலி அட்ரஸ், imei number useless. உன்னோட மெயில் எல்லாமே அவங்க கண்ட்ரோல்ல இருக்கு. எனக்கு என்னவோ, வழக்கமான திருடர்கள்  இல்லைன்னு தோணுது.  நான் misjudge பண்ணிட்டேன்.
 
சரத் அதிர்ந்தான்: என்ன கையை விரிச்சிட்டே... அப்ப அவங்கள கண்டுபிடிக்க முடியாதா?
 
ஆனந்த்: ட்ரை பண்ணலாம். உனக்கு விரோதிகள் யாராவது இருக்காங்களா?... என்று கேட்டவனின் குரலில் முதலில் இருந்த உற்சாகம் இல்லை.
 
சரத்: எனக்கு விரோதிகளுக்கா பஞ்சம். ஒரு மாசத்துல எங்க ஆபீஸ்ல, எவ்ளோ பேரை டெர்மினேட் பண்றேன்.   பிசினஸ்ல எவ்வளவு பேரை பகைச்சிக்கிறேன். அதெல்லாம் நிறைய பேர் இருக்காங்க. யாருன்னு சந்தேகப்படுறது?
 
ஆனந்த்: உங்க அப்பார்ட்மெண்ட்ல சிசிடிவியும் கிடையாது. செக்யூரிட்டி கிட்ட விசாரிச்சா, இன்னைக்கு சந்தேகப்படும்படியாய் எந்த சம்பவமும் நடக்கல. ஒரே ஒரு சோடாபுட்டி ஆள் மட்டும், வந்து பிளாட் ரேட் டீடைல்ஸ் விசாரிச்சிட்டு இருந்தான்கிறான். மத்தியானம் 12ல் இருந்து ஒரு மணிக்குள்ள... அட்லீஸ்ட் சிசிடிவி facility இருந்தா, அந்த டைம்ல எவனாச்சும் உன் பிளாட்டுக்குள்ள பூந்தானானு கண்டுபிடிக்கலாம். அதுவும் கிடையாது.
 
சரத் உற்சாகமாக: அப்பார்ட்மெண்ட் இருக்கிற தெருவுல, ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இருக்கு. அதுக்கு வெளியில சிசிடிவி ஒன்னு நான் பார்த்திருக்கேன். அந்த footage கேட்டு பாக்கலாமா?.. என்றான்.
 
ஆனந்த்: வெரி குட்... வா போலாம்.
 
அதேநேரம், 
 
பாரை விட்டு நால்வரும் வெளியே வந்தார்கள். Unsteady ஆகிற அளவுக்கு, சரக்கு அடிக்காமல், நிதானத்தை கடைபிடித்து இருந்தார்கள்.
 
ஜானி: ஓகே, நீங்க ரெண்டு பேரும், இப்போ கிளம்புங்க. நாங்க ஐயர் வீட்டுக்கு போறோம். போற வழியில இன்னொரு தடவை அவனை கலாய்ச்சிகிட்டு, மிச்ச வேலையை நாளைக்கு பாத்துக்கலாம்.
 
வீராசாமி: இன்னைக்கு நீ ஆபீஸ் போகலையா?
 
ஜானி: எனக்கு week off தானே.
 
இரண்டு பைக்கில் நால்வரும்  கிளம்பினார்கள் உருளையன்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் தாண்டி, அடுத்து வந்த பழைய பஸ் ஸ்டாண்ட் சிக்னலில் ரெண்டு பைக்கும் பிரிந்து, ஆளுக்கொரு பக்கமாக சென்றது.
 
ஜானியும், ரிஷாந்த்தும் அனுமந்தை வந்து சேர்ந்தபோது இரவு 9 மணி.
 
பாதி வழியில் பைக்கில் வரும்போது சரத்திற்கு போன் பண்ண, அவன் போனிலேயே கதறினான். பணம் ரெடி பண்ண வேண்டும் என்றால், இரண்டு நாட்கள் டைம் வேண்டும் என்று கெஞ்சினான். மனைவிக்கு தெரியாமல் அக்கவுண்டில் இருந்து வித்ட்ரா பண்ணி கொடுப்பதற்காக, அந்த அவகாசம் தேவைப்படுகிறது என்று புலம்பினான்.
 
ஜானி: ரெண்டு நாள் ஆகுமா? ஓகே வெயிட் பண்றேன். ஆனா இந்த ரெண்டு நாளும் என் மனசு நோகாம நீ நடந்துக்கணும். ஒருவேளை எனக்கு மூட் அவுட் ஆயிடுச்சுன்னா. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. ஏற்கனவே சொன்னேன்ல, நெட்ல போடுவேன். உன் பொண்டாட்டிக்கு நீ பண்ணுன சில்மிஷங்களை எல்லாம் தெரியப்படுத்துவேன். மெயில்ல இருக்குற எல்லா ஐடிக்கும், போட்டோக்களை  மெயில் பண்ணுவேன். என்ன வேணா பண்ணுவேன். என் மூடை பொறுத்தது. கரெக்டா சொல்ல முடியாது.
 
சரத்: அய்யய்யோ சார் சார்... அப்படிலாம் பண்ணிடாதீங்க. நீங்க என்ன சொல்றீங்களோ அப்படியே செய்றேன். தயவு செய்து, ரெண்டு நாள் மட்டும் டைம் கொடுங்க. பணம் கொடுத்ததும், லேப்டாப்பையும் கேமராவையும் கொடுத்துடுங்க... அழாத குறையாக கேட்டான்.
 
ஜானி: ஓகே, ஓகே. உன்கிட்ட பேசி பேசி எனக்கு போர் அடிக்குது. நான் அப்புறமா பண்றேன். வையி.
 
போன் காலை கட் செய்தான்.
 
இருவரும் கேட்டைத் திறந்து, வீட்டுக்குள் நுழைந்து, கதவை திறந்தார்கள்.
 
திடுக்கிட்டார்கள்.
 
ஜானி காலை கட் செய்ததும், சரத் திரும்பி, ஆனந்தை பார்த்து,
 
"நீ சொன்ன மாதிரி ரெண்டு நாள் டைம் கேட்டுட்டேன். அவனும் ஓகே சொல்லிட்டான்..", என்றான்.
 
ஆனந்த்: வெரி குட்... எப்படியும் இந்த ஸ்டோரை தாண்டி தான் உங்க அப்பார்ட்மெண்டுக்கு போய்ருக்கணும். அந்த பர்டிகுலர் டைம்ல செக் பண்ணினா நிச்சயம் கண்டுபிடிச்சிடலாம். சிசிடிவி ஃபுட்டேஜ் போய் கேட்கலாம்... வெளியே ரோட்டை பார்த்தபடி, இருந்த அந்த சிசிடிவி கேமராவை பார்த்துக் கொண்டே அவன் பேசினான்.
 
இருவரும் டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்குள் புகுந்தார்கள்.
 
ஜானியும், ரிஷாந்த்தும் திடுக்கிட்டதற்கு காரணம். கதவை திறந்ததும், வீடு பூராக புகையாக இருந்தது.
 
ஜானி: எங்க இருந்துடா இவ்ளோ புகை வருது?
 
இருவரும் வேகமாக வீட்டுக்குள் செல்ல, பெட்ரூமில் ரிஷாந்த் சார்ஜ் போட்டுட்டு வந்த லேப்டாப் புகைந்து எரிந்து கொண்டிருந்தது. பக்கத்தில் வைத்திருந்த கேமராவையும் நெருப்பு அன்பாக அரவணைத்து இருந்தது. நல்லவேளை!! வேறு துணி மணியோ, படுக்கையோ  இல்லாததால், தீ பெரிதாக பற்றிக் கொள்ளவில்லை.
 
ரிஷாந்த் ஓடிச் சென்று பெட்ஷீட் இரண்டு எடுத்து வந்து, புகைந்து கொண்டிருந்த லேப்டாப் மற்றும் கேமராவின் மேல் போட்டு, நெருப்பை அணைத்தான்.
 
லேப்டாப்பையும், கேமராவை ஜானி எடுத்து பரிசோதிக்க,
 
ரிஷாந்த் பதட்டமாக, என்னண்ணா ஆச்சு?
 
ஜானி செக் பண்ணி பார்த்துவிட்டு,
"பொசுங்கி போய் கிடக்குது. இனிமே இது யூஸ்லெஸ்...", என்றான் சுரத்தில்லாத  குரலில்.
 
ரிஷாந்த்: அய்யய்யோ!!! இப்படி ஆயிருச்சே...Dell lap தானே இது? எவ்ளோ நேரம் சார்ஜ் போட்டாலும் burst ஆகாதே. எப்படி ஆச்சு? இப்ப என்னண்ணா பண்றது?...  
 
தலையில் கைவைத்து அப்படியே கீழே உட்கார்ந்தான்.
 
ஜானி யோசித்துக் கொண்டிருந்தான்.
 
ரிஷாந்த்: இனிமே அவர்களை ஒண்ணுமே பண்ண முடியாதா? தப்பிச்சிருவானுங்களா?
 
புகைக்கு நடுவே... ஜானி மந்தகாசமாக சிரித்தான்.
 
ரிஷாந்த்: "என்னண்ணே சிரிக்கிறீங்க? நானே எல்லாம் போச்சேன்னு வேதனையா இருக்கேன். சும்மா இருந்தவன் மூக்கை வேற சொரிஞ்சாச்சு.
எந்த ஆதாரமும் இல்லாமல் அழிஞ்சு போச்சே? ச்சே!!! ஷீபாவுக்கு அவன் செஞ்ச அநியாயத்துக்கு கதற விடலாம்ன்னு நினைச்சேனே!! எல்லாம் போச்சா? இனிமே அவனை ஒண்ணும் பண்ண முடியாதே."
 
"ஏன் இப்ப புலம்புற? Relax....அப்படி என்ன ஆயிப்போச்சு? லேப்டாப்பும், கேமராவும் டேமேஜ் ஆயிடுச்சுன்னு நமக்கு மட்டும் தானே தெரியும். அவனுக்கு தெரியாதுல்ல?  இத வச்சியே ப்ளே பண்ணலாம். ஆதாரம் போனால் என்ன? புதுசா ஆதாரத்தை உருவாக்கிட்டா போச்சு...."
 
தலையில் கை வைத்து கீழே உட்கார்ந்திருந்த ரிஷாந்த், தலையை உயர்த்தி, ஜானியை ஆச்சரியமாக பார்த்தான்.
 
தொடரும்


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 38
 
 
பெட்ரூம் ஜன்னல்களை  திறந்து, புகையை  வெளியேற்றினார்கள். புகை அவர்களை முறைத்து பார்த்து விட்டு, சாவதானமாக,  மூச்சு முட்ட வைத்து விட்டு தான் வெளியேறியது.
 
ஜானி சொன்ன பிறகும், இன்னும் ரிஷாந்த்  நல்ல வாய்ப்பு பறி போயிருமோ என்ற பீலிங்கில் தான் இருந்தான்.
 
ஜானிண்ணா கிட்ட எப்படி ஆதாரத்தை உருவாக்கிக்க முடியும்னு கேட்டாலும், அவர் சொல்லப்போவதில்லை. சில விஷயங்களை யோசித்து விட்டு சொல்வார், சிலதை சொல்லிய பிறகுதான் யோசிப்பார். இது எந்த category என்று தெரியவில்லை. ஐடியாக்காக நாம ஏன் ட்ரை பண்ண கூடாது? என்ன சூழ்நிலையில் இருக்கிறோம் என்று நமக்கு தெரியும். இதற்கு மேல் எப்படி ஆதாரத்தை உருவாக்க முடியும்னு நாம் யோசித்துப் பார்த்தால் என்ன?
 
வேர்வை கசகச என்றிருந்ததால், ஜானி குளிக்க சென்றான். 
 
"என்னடா தீவிர யோசனையில் இருக்க?"
 
"உங்க பாணியிலேயே யோசிச்சு, ஏதாவது ஐடியா வொர்க் அவுட் ஆகுதான்னு பார்க்கிறேன்?"
 
ஜானி சிரித்தான்,"யோசி, யோசி. நல்லது தான். எனக்கு செலவு மிச்சம். 
 
ரிஷாந்த் என்ன செலவு என்பது போல் பார்க்க...
 
ஜானி:  மூளை செலவை சொல்றேன்... சிரித்தபடி சொல்லிவிட்டு சென்று விட,  
 
ரிஷாந்த் போனை எடுத்துப் பார்த்துக் கொண்டான். சுசியிடமிருந்து இன்னும் கால் வரவில்லை. ஆதாரங்கள் கிடைக்குதா என்று பார்ப்பதற்காக, திங்கட்கிழமை தான் அவள் வீட்டுக்குள் இரண்டாவது அட்டம்ட்  அடிக்க வேண்டும். இடையில் ஒரு ஞாயிற்றுக்கிழமை இருக்கிறது. எந்த பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டும். அவளைப் பார்த்து பேசி விட்டாலும், இடையில் எந்த பிரச்சனையும் வந்துரகூடாதேன்னு திக்கு திக்குன்னு இருக்கிறது.
 
ரிஷாந்த் வெளியே சிட் அவுட்டுக்கு வந்து சிகரெட்டை பத்த வைத்துக் கொண்டான். ஆள் நடமாட்டம் இல்லாத தெருவை பூச்சிகளின் சத்தம் நிரப்பியிருந்தது. கடற்கரை அருகே என்பதால் காற்றில் லேசான பனி.
 
சரத் வீட்டிலிருந்து அடித்துக் கொண்டு வந்த லேப்டாப்பும் கேமராவும் போச்சு. லேப்டாப்பில் இருந்த தகவல்கள், கம்பெனி சமாச்சாரங்கள், இன்கம்டேக்ஸ் பற்றிய விஷயங்கள். அதே மாதிரி கேமராவில் இருந்த போட்டோக்கள் எல்லாம் தீயில் கருகி விட்டது. அவனிடம் போன் பண்ணி எல்லாம் எங்களிடம் இருக்கிறது, பணம் வேணும்னு சொல்லியாச்சு. இரண்டு நாளில் ரெடி பண்றேன்னு சொல்லிருக்கான். ரிஷ் கோர்வையாக யோசித்துக் கொண்டிருந்தான்.
 
ஆதாரங்கள் தீயில் கருகிப் போன விஷயம் அவனுக்கு தெரியாது தான். அதனால் இன்னும் இருக்கிற தொனியிலேயே பேசி விளையாடலாம். ரெண்டு நாள் கழித்து அவனிடம் பணம் வாங்கிவிட்டு, எதுவுமே இல்லைன்னு போனில் கை விரிக்கலாம்... அல்லது அதன் பிறகு அவனிடம் தொடர்பு கொள்ளாமலேயே இருந்து விடலாம். இடைப்பட்ட இரண்டு நாளில் அவனை ஓட விடலாம், நடுத்தெருவில்  நிற்க வைக்கலாம், கதற விடலாம். That is possible.
 
ஆனால் பினிஷிங் டச்சாக ஷீபா காலில், சரத் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டுமே. அதை நாங்கள் இரண்டு பேரும் பக்கத்தில் இருந்து வேடிக்கை பாக்கணும்னு  சொல்லிருக்கேன். அதுதானே ரொம்ப முக்கியமான சீன். அதை செய்யறதா சொல்லிருக்கிறார். அதை எப்படி செய்ய முடியும்?
 
சிட் அவுட்டில் இருந்த ஸ்டீல் ரயிலிங்கை பிடித்து நின்று, ரோட்டை பார்த்தபடி, யோசித்துக் கொண்டிருந்தான்.
 
நான் தான் இதற்கெல்லாம் காரணம்னு அவன் முன்னால் போய் நிக்கணும்னா, ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் போய் நிற்க முடியாது. லேப்டாப் எங்க? கேமரா எங்கன்னு கேப்பானே. அவன் பிடி நம் கையில் இருக்க வேண்டுமே!!!
 
எப்படி? எப்படி?
 
யோசிக்க யோசிக்க குழப்பமாக இருந்தது. ஆரம்பித்த இடத்திலேயே சுத்தி சுத்தி யோசித்து கொண்டிருந்தான்.
 
கடுப்பானான்... ஒரு கட்டத்தில் சரியான முடிவை எடுத்தான். யோசிக்கும் வேலையை ஜானி கிட்டயே ஒப்படைத்து விட வேண்டியதுதான்.
 
இதற்கிடையே,
 
டிபார்ட்மெண்ட் ஸ்டோரை விட்டு சோர்வான முகத்துடன் சரத்தும், என்ன செய்வதென்று தெரியாமல் ஆனந்தும் வெளிப்பட்டார்கள்.
 
ஸ்டோருக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா ரொம்ப நாட்களாகவே செயல்படவில்லை என்ற தகவல் கிடைத்தது தான், சோர்வுக்கு காரணம்.
 
ஆனந்த்:  சரி ஓகே விடு. சைபர் செல்லுல, சிம் நம்பர் வைத்து தொடர்ந்து track பண்ண சொல்றேன். எப்படியும் பணம் கேக்குறதுக்கு கால் பண்ணுவாங்க, கலெக்ட் பண்ண வருவாங்க. அப்போ ஆள புடிக்க முடியுதான்னு பார்ப்போம்.
 
சரத் கவலையாக சரி என்று தலையசைத்தான்.
 
கேட்டருகே லைட் வெளிச்சம். படபடவென மூச்சிரைத்தபடி TVS 50 வண்டி, ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
 
ரிஷாந்த் கேட்டை பார்க்க, இந்த கதையின் முதல் ட்விஸ்டுக்கு காரணமாக இருந்த மீசைக்கார அண்ணாச்சிகள் ரெண்டு பேரும் வண்டியில் இருந்து பரபரப்பாக இறங்கினார்கள்.
 
சிட் அவுட்டில் ரிஷாந்த் இருப்பதை பார்த்ததும்,
"தம்பி, தம்பி... ஒரு நிமிஷம் வாங்க. கொஞ்சம் அர்ஜெண்டான விஷயம்..."
 
ரிஷாந்த் கேட்டை நோக்கி சென்று, திறந்து, வெளியே சென்றான்.
 
"என்னண்ணே இந்த நேரத்துல, ஏதாவது அர்ஜெண்டான விஷயமா?" 
 
இருவரும் மெயின் ரோட்டை திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மெயின் ரோட்டில் ஒரு சிறு கூட்டம் நின்றிருந்தது.
 
மீசை 1: ஆமா தம்பி, அங்க நிக்கிறாங்களே...
அவங்கல்லாம் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை போகிற பக்தர்கள். அந்த பாதயாத்திரை குழுவில் வந்த ஒரு நடுத்தர வயசு பொம்பள மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. பேச்சு மூச்சு இல்ல. நாங்க வீட்டுக்கு  போயிட்டு இருந்தோம். வண்டியை நிறுத்தி என்னன்னு கேட்டா, விஷயத்தை சொன்னாங்க. பக்கத்துல மரக்காணத்தில்  ஹாஸ்பிடல் இருக்கு. ரோட்ல போற வாகனங்களை கை நீட்டி நிறுத்தி, லிப்ட் கேட்டு பார்த்தோம். யாரும் நிறுத்தல.  பக்கத்துல உங்க வீடு தெரிஞ்சது. உங்ககிட்ட எப்படியும் கார், பைக் ஏதாவது ஏதாவது இருக்கலாமேன்னு உதவிக்காக வந்தோம்.
 
ரிஷாந்த் பதறி, "அண்ணே நம்ம கிட்ட பைக் தான் இருக்கு. வேணும்னா நான் ஓட்டுறேன். அந்த அம்மாவை நடுவுல உட்கார வைத்து, கடைசியா யாராவது உட்கார்ந்து  பிடிச்சுக்க சொல்லுங்க."
 
மீசை 2: முடியுமான்னு தெரியல. அந்த அம்மாவே மயக்கத்துல கிடக்குறாங்க.
 
ரிஷாந்த்: இசிஆர் ரோட்ல இந்த நேரத்துல யாரும் வாகனங்களை நிறுத்த மாட்டாங்க. திருட்டு பயம் ஜாஸ்தி இல்லையா? காலை நேரமாக இருந்தால், பரவாயில்லை. இந்த சுற்று வட்டாரத்தில் தெரு விளக்குகள் கூட கிடையாது. அதனால வாய்ப்பே இல்லை. நேரத்தை போக்குறதுக்கு பதிலா பைக்ல கூட்டிட்டு போயிடலாம்.
 
மீசை 1: தம்பி சொல்றது தான் சரி.
 
அதற்குள் குளித்துவிட்டு ஜானி சட்டையை மாட்டிக் கொண்டே வெளியே வர, என்னவென்று கேட்டான். விஷயத்தை தெரிந்து கொண்டான்.
 
ரோட்டில் நின்றிருந்த கூட்டம் லிப்ட் கேட்பதற்காக, முயற்சி செய்து கொண்டிருக்க, யாரும் நிறுத்தவில்லை.
 
ஜானி: பைக்ல எப்படிடா கூட்டிட்டு போக முடியும். பண்ணை வீட்டுக்காரர் கிட்ட கார் இருக்குமே. Help கேட்டு அதுல கூட்டிட்டு போயிடலாம்.
 
மீசை 1: இதுதான் நல்ல ஐடியா.
 
ரிஷாந்த் தயங்கிக்கொண்டிருக்க, ஜானி புரிந்து கொண்டு, 
 
"அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல. நான் போய் கேட்கிறேன்..", என்றான் அவசரமாக.
 
ரிஷாந்த்:  எப்படியும் இந்த நேரத்துல, கிரி சார் வீட்ல இருக்க மாட்டாரு. காரை எடுத்துக்கிட்டு, கிளப் எங்கையாவது போயிருப்பாரு. 11 மணிக்கு தான் வருவாரு. மேடம் தான் இருப்பாங்க. அதான் தயக்கமா இருக்கு.
 
ஜானி: பரவால்லடா, ஆபத்துக்கு பாவமில்ல. அவங்க வீட்ல தான் ரெண்டு கார் இருக்குமே. வாங்கண்ணா, நாம போய் கேட்போம்.
 
ஜானியும், ரெண்டு மீசைகளும் பண்ணை வீட்டை நோக்கி செல்ல, ரிஷாந்த் ரோட்டில் நின்ற கூட்டத்தை நோக்கி ஓடினான். ஆண்களும், பெண்களும் சரிசமமாக இருந்தார்கள். அனைவரும் முகங்களிலும் பதட்டம். கூட்டத்தின் நடுவே, ஒரு நடுத்தர வயது பெண்மணி மயங்கி கிடக்க, அவளை மடியில் தாங்கியபடி ஒரு இளம் பெண் அழுது கொண்டிருந்தாள்.
 
ரிஷாந்த் அவர்கள் அருகே சென்றதும், " என்னாச்சு?", என்றான்.
 
கூட்டத்தில் நின்றிருந்த ஒருவன், " தம்பி, நாங்க பாலவாக்கத்தில் இருந்து ஒரு செட்டா வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை கிளம்பினோம். இந்த அம்மாவும் எங்க ஏரியா தான். அது அவங்க பொண்ணு நிர்மலா. அம்மாவுக்கு பிரஷர்  இருக்கும் போலிருக்கு. அதுதான் மயங்கிட்டாங்க லிஃப்ட் கேட்பதற்கு முயற்சி பண்ணுறோம். யாரும் உதவல்லை.."
 
ரிஷாந்த் மயங்கி கிடந்தவளின் நாடியை பிடித்து பார்த்தான். நாடித்துடிப்பு ரொம்ப பலவீனமாக இருந்தது.
சீக்கிரமாக ஹாஸ்பிடலுக்கு கூப்பிட்டு போக வேண்டும்.
 
எழும்பி நின்று இரண்டு பக்கமும் பார்த்தான். ஈசிஆர் ரோட்டில் அவ்வளவாக வாகன போக்குவரத்து இல்லை. அவ்வப்போது ஒன்றிரண்டு கார்கள் கடந்து சென்று கொண்டிருந்தன. கூட்டத்தோடு வந்த இரண்டு பேர் கையை நீட்டி, லிப்டுக்கு முயற்சித்து கொண்டிருந்தார்கள். ரோட்டில் பெரிய கூட்டத்தை பார்த்ததாலோ என்னவோ... யாரும் நிறுத்தவில்லை.
 
ரிஷாந்த் போனடிக்க, எடுத்து பார்த்தான்.  டிஸ்ப்ளேயில் ரெஜினா பெயர்.
 
புயல் வேகத்தில் காலை அட்டென்ட் செய்தான். எடுத்த உடனையே, ஹலோ கூட சொல்லாமல் அவள் பேச ஆரம்பித்தாள்.
 
"ரிஷ்... நா சொல்றத கவனமா கேளு. கொஞ்ச நேரத்துக்கு முன்னால தாரிகா செக்யூரிட்டிகிட்ட சொல்லிட்டு இருந்தது,  என் காதுல விழுந்துச்சு. இன்னைக்கு நைட்டு 22 or 23, ஏதோ ஒரு நம்பர் சொல்லி dispose பண்ணனும். ரெண்டு நாள்ல இன்னொரு ஐட்டம் வருதுன்னு சொல்லிட்டு இருந்தா. நீங்க கிரியை பத்தி சொன்ன விஷயமும், இதுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிற மாதிரி தோணுச்சு. யாரோ வந்திருக்காங்க போல, தாரிகா பங்களா வாசலில் நின்னு பேசிகிட்டுருக்கா, அந்த கேப்ல போன் பண்ணினேன். கிரி கிளம்பி வந்துட்டு இருக்கிறதா பேசிக்கிட்டாங்க... சரி ஓகே. நான் வச்சிர்றேன்...", என்று பரபரப்பாக பேசிட்டு போனை வைத்தாள்.
 
வந்தது ஜானியும்,  மீசை அண்ணாச்சிகளும் தான் என்று அவன் சொல்வதற்குள், போனை வைத்து விட்டாள்.
 
ரிஷாந்த் தெருவை பார்த்துக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில், பண்ணை வீட்டின் கேட்டிலிருந்து காரின் ஹெட்லைட் வெளிச்சம் தெரிந்தது. ஜானிண்ணா பேசி காரே கிளப்பிக் கொண்டு வந்துட்டார்ன்னு புரிந்தது. அதானே பார்த்தேன்!!! அண்ணனுக்கு தாரிகா கிட்ட செல்வாக்கு நிறையவே இருக்குது... என்று டபுள் மீனிங்கில் நினைத்து சிரித்துக் கொண்டான்.
 
கார் மெயின் ரோட்டுக்கு வந்ததும், ஜானியும் மீசை அண்ணாச்சிகளும் காரில் இருந்து இறங்கினார்கள்.
 
ஜானி பரபரப்பாக, "அந்த அம்மாவை கார்ல ஏத்துங்கப்பா.."
 
ரிஷாந்த் ஜானியை தனியாக கூப்பிட்டு, " அண்ணே, இன்னொரு முக்கியமான விஷயம்...", என்று சுசி சொன்ன விஷயத்தை கிசுகிசுத்தான்.
 
மயங்கி விழுந்தவளை, தூக்கி காருக்குள் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.
 
ஜானி அவசரமாக யோசித்துக் கொண்டிருந்தான். ரெஜினா தெரிந்தோ தெரியாமலோ அருமையான க்ளு கொடுத்திருக்கிறாள். ஏதோ ஒரு பெண் அவுட்ஹவுசில் இருக்கிறாள். உயிரோடவா அல்லது பாடியா? அது தெரியவில்லை. அவளை இன்னைக்கு டிஸ்போஸ் செய்யப் போகிறார்கள். அடுத்தது இன்னொருத்தியை தூக்கிக் கொண்டு வரப் போகிறார்கள். கிரி எங்கேயோ ஒரு கிளப்பில் இருந்து வந்து கொண்டிருக்கிறான். இதுதான் சரியான சந்தர்ப்பம். திங்கட்கிழமை வரை வெயிட் பண்ணி, வீட்டுக்குள்ளே போய் ஆதாரங்களை தேடுவதை விட... இன்னைக்கு அதிரடியாக உள்ளே புகுந்து, ஒரே அடி... மரண அடி.
 
ஜானி முகத்தில் பிரகாசத்தை பார்த்த, ரிஷாந்த்  என்ன சொல்ல போகிறான் என்பதற்காக பார்த்துக் கொண்டிருக்க,
 
"ரிஷ்... திங்கட்கிழமை வரைக்கும் வெயிட் பண்ண வேண்டாம். இன்னைக்கே கிரி கோஷ்டியை தட்டலாம். என்ன சொல்ற?
 
ரிஷாந்த் அதிர்ந்து போய்,
"என்னண்ணா சொல்றீங்க?  சுசி வீட்டுக்குள்ள இருக்கிறா. அவளுக்கு ஏதாவது ஆபத்தா முடிஞ்சிர போகுது."
 
ஜானி: என்னை நம்பு, ஒரு ஆபத்தும் வராது. இன்னைக்கு அவனையும், அவன் சாம்ராஜ்யத்தையும் போட்டு பார்த்துரலாம். அவன் கட்டங்கள் சரியில்லைன்னு உள்ளுக்குள்ள பட்சி பாடிருச்சு. போட்றலாமா? What do you say?
 
ரிஷாந்த் பதில் சொல்லாமல், தயக்கத்தோடு அவனைப் பார்த்தான்.
 
தொடரும்


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 39
 
ஜானி: கமான் பதில் சொல்லு?
 
ரிஷாந்த் தயக்கமாக," நீங்க சொன்னா, நான் மறுக்கவா போறேன்... ஓகே..ண்ணா...", என்று இழுத்தான். அவனுக்கு என்னவோ அவசரப்படுகிறோமோ என்று தோன்றியது.
 
ஜானி திரும்பி, கூட்டத்தைப் பார்த்து, "யாருக்காவது கார் ஓட்ட தெரியுமா?"
 
எனக்கு தெரியும் என்று ரெண்டு பேர் கையை உயர்த்த,
 
ஜானி: யாராவது ஒருத்தர் கார் ஓட்டிட்டு போங்க. கொஞ்ச தூரத்தில் மரக்காணத்துக்கு போற ரோடு ரைட்ல  cut ஆகும். 12 கிலோமீட்டர் தான். அங்க ஜிஹெசில கொண்டு போய் அவங்கள அட்மிட் பண்ணுங்க. (மீசை அண்ணாச்சிகள் ரெண்டு பேரையும் பார்த்து) அண்ணே, உங்கள்ள யாராவது ஒருத்தர் கூட போயிட்டு வாங்க.
 
இருவரும், ஒரு சேர... சரி தம்பி என்றார்கள்.
 
ஜானி: மற்றவங்க யாரும் பதட்டப்பட வேண்டாம். அந்த பங்களாகாரங்க நம்மள நம்பி காரை கொடுத்திருக்காங்க. மீதி பேர் பங்களா கேட் முன்னாலேயே காத்திருங்க. இவங்க போய் அட்மிட் பண்ணிட்டு, என்ன விஷயம்னு சொல்லட்டும். அவங்களுக்கு நன்றி  தெரிவிச்சிட்டு, காரை பத்திரமா ஒப்படைச்சிக்கிட்டு, அதுக்கப்புறம் கிளம்பலாம்.
 
மீசை 2: ஏன் தம்பி அவங்க வீட்டு முன்னால தான் நிக்கணுமா? சங்கடமா ஏதாச்சும் பீல் பண்ண போறாங்க? இப்படியே ஒரு ஓரமா நிக்க கூடாதா?
 
ஜானி: அதுக்கு இல்லண்ணே. நாங்களும் இந்த ஏரியாவுக்கு புதுசு. இவங்களும் புதுசு. நம்மள நம்பி கார் கொடுக்கிறார்கள், உங்களுக்கு நான் சொல்றது புரியுதில்ல?? அவங்களுக்கு ஒரு நம்பிக்கை வர வேண்டாமா?
 
மீசை 2: புரியுது தம்பி. புரியுது.
 
மீசை 1 முன் சீட்டில் ஏறிக்கொள்ள, பின் சீட்டில் மயங்கி கிடந்த அம்மாவுடன், அவள் மகள் நிர்மலாவும், இன்னொரு பெண்மணியும் ஏறினார்கள். டிரைவர் சீட்டில் இருந்தவனை பார்த்து,
ஜானி, "கிளம்புங்க, கவனமா ஓட்டுங்க", என்றான்.
 
கார் புகையை கக்கிவிட்டு கிளம்பியது.
 
ஜானி, இரண்டாவது மீசை அண்ணாச்சியை பார்த்து, "மிச்சம் இருக்குறவங்கள பங்களா வாசல்ல வெயிட் பண்ண சொல்லுங்க. நீங்க கூட்டிட்டு போங்க. செக்யூரிட்டி என்ன விஷயம்னு கேட்டா, ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ருக்காங்க. அதனால வெயிட் பண்ணிட்டு இருக்கோம்னு சொல்லுங்க."
 
மீசை அண்ணாச்சி:  சரி தம்பி... என்று சொல்லிவிட்டு, 
வாங்க எல்லாரும் போலாம்... என்று சத்தமாக சொன்னார்.
 
மிச்சம் இருந்தவர்கள் பேக் மற்றும் மூட்டை முடிச்சுகளுடன், மீசை அண்ணாச்சியை பின் தொடர்ந்து, பங்களாவை நோக்கி சென்றார்கள்.
 
ஜானி ரிஷாந்த்திடம்: நீ பைக் எடுத்துட்டு உடனே மரக்காணம் போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி, விஷயத்தை சொல்லி அவங்களை கூட்டிட்டு வா. ஒருவேளை பார்ட்டி பெரிய இடங்கறதுனால, சர்ச் வாரண்ட் இல்லாமல் வீட்டுக்குள்ள போறதுக்கு பயந்தாங்கன்னா, குற்றவாளி ஒருத்தன் தப்பிச்சிட்டான். துரத்திட்டு வந்தோம், உங்க பண்ணை வீட்டுக்குள்ள எகிறி குதிக்கிறத பார்த்தோம்ன்னு கதையடிக்க சொல்லு. இவன் தான் தமிழ்நாடே தேடுற இசிஆர் ரோடு சீரியல் கில்லர். நிச்சயம் உங்க எல்லாருக்கும் புரமோஷனும், அவார்டும் உண்டுன்னு வெண்ணை அடி. Come on quick.
 
ரிஷாந்த் m.v: இன்னைக்கு கிரி கூட்டத்திற்கு ஆப்பா?? இல்லை, நமக்கு ஆப்பான்னு தெரியலையே!!!
 
இருவரும் ஓட்டமும் அடையுமாக அவர்கள் வீட்டை நோக்கி சென்றார்கள்.
 
ரிஷாந்த்: அண்ணன் எனக்கு என்னமோ அவசரப்படுறமோன்னு தோணுது. இருந்தாலும், நீங்க சொல்றீங்க கேட்காம இருக்க முடியல. எதுக்கும் என் போன வச்சுக்குங்க. சுசிகிட்ட இருந்து அர்ஜென்ட் கால்கள் வரலாம்.
 
ஜானி: வேணாம், நீ வச்சுக்கோ உன்னை காண்டாக்ட் பண்ண முடியலன்னா, என் நம்பர் அதுல சேவ் பண்ணி வச்சிருக்கோமே.
 
ரிஷாந்த்: அவ இன்னொரு நம்பருக்கு பேசுவாளான்னு தெரியல. இதுவரைக்கும் என் நம்பருக்கு தான் பேசிட்டு இருக்கா. அதனால நீங்க போன் வெச்சுக்கோங்க. நான் ஸ்டேஷனுக்கு போய் இன்பார்ம் பண்ணிட்டு, போலீசை கையோட கூட்டிட்டு வர்றேன்.
 
ஜானி ஓகே சொல்ல, இருவரும் போனை எக்சேஞ்ச் பண்ணிக் கொண்டார்கள். ரிஷாந்த் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
 
வீட்டு வாசலில் நின்று ஜானி பார்க்க, பங்களா கேட்டருகே பாதை யாத்திரைக் கூட்டம் உட்கார்ந்திருந்தது. அண்ணாச்சி செக்யூரிட்டியிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.
 
கதையில் ஆரம்பத்தில் இருந்தே வருகிறார்கள்... இந்த இரண்டு அண்ணாச்சியின் பெயரை இன்னும் நாம் கேட்கல்லையே!!!
 
வீட்டு வாசலில் பெருங்கூட்டம். இருந்த ஒரு காரையும் எடுத்துட்டு போயாச்சு. கிரி என்னும் வரவில்லை
அவன் வந்தால் தான் வீட்டில் இருக்கும் பெண்ணை காரில் கொண்டு போக முடியும்.   அவன் இன்னும் வரவும் இல்லை. அதற்குள் போலீஸ்காரர்கள் வந்துவிட்டால், பண்ணை வீட்டுக்குள் சர்ச் ஆப்ரேஷன் நடத்தி, ரெஜினாவை மீட்டு விடலாம்.  அந்த இன்னொரு பெண்ணையும் காப்பாற்றலாம், அவள் உயிரோடு இருந்தால்...
 
பங்களா வாசலில் இருந்த மீசை 2, ஜானியை நோக்கி நடந்து வந்தார்.
 
ஜானி: என்னண்ணே... செக்யூரிட்டி என்ன சொன்னான்?
 
மீசை 2:  கேட் வாசலில் உட்கார வேண்டாம், ஓனருக்கு பிடிக்காது, தள்ளி உட்கார சொல்லுங்கன்னு என்னென்னமோ சொன்னான். நான் தான், இல்ல உங்க காரை வாங்கிட்டு போயிருக்காங்க. யார் என்னன்னு தெரியாம உதவி செஞ்சுருக்கீங்க. சம்பந்தப்பட்டவர்கள் இங்கேயே இருக்கட்டும்ன்னு வலுக்கட்டாயப்படுத்தி, உட்கார சொன்னேன். நீங்க சொன்னதுல லாஜிக் இருந்தாலும்... என்னமோ, இடிக்குதே... நீங்களும் உங்க நண்பரும் தனியா போய் கிசுகிசுன்னு பேசுறதும், உங்க நடவடிக்கைகளும், மத்த விஷயங்களையும் பார்க்கும் போது..
 
மீசை பேச்சை முடிக்கவில்லை.
 
ஜானி; அண்ணே, நீங்க நினைக்கிறது சரிதான். நாங்க இங்க வந்த காரணமே வேற....
 
மீசைகளின் உதவும் குணத்தையும், வெள்ளந்தித்தனத்தையும், பார்த்தபோது அவர்களை நம்பலாம் என்று ஜானிக்கு தோன்றியது. அதனால் கடகட என்று உண்மையை சொன்னான்.
 
ஜானி சொல்ல சொல்ல,  மீசை முகத்தில் ரியாக்ஷன் மாறிக்கொண்டே வந்தது. முடிவில் உச்சகட்டமாக அதிர்ந்து போனார்.
 
மீசை 2: என்னப்பா... ஒரு கோஷ்டியே சீரியல் கில்லரா இருக்கு. நான் கேள்விப்பட்டதே இல்லை. நல்ல காரியம் பண்ணிங்க தம்பி. எங்க ஸ்டேஷன்ல கூட காணாமல் போன பொண்ணுங்க பத்தி மூணு கேஸ் பெண்டிங்ல இருக்கு. ஆனா இது பெரிய இடம்ப்பா... ஆதாரம் இல்லாமல் மோத முடியாது.
 
ஜானி ஆச்சரியமாக பார்த்தான்.
 
"நீங்க போலீசா?"
 
மீசை 2: ஆமா தம்பி, காலாப்பட்டு ஸ்டேஷனில் கான்ஸ்டபிளா இருக்கேன். என் கூட வந்த இன்னொருத்தர் என் தம்பி. அவர் கடலுக்கு போறாரு. நான் சகாதேவன். அவர் பெயர் மகாதேவன்.
 
ஜானி சிரித்தபடி, "உங்க மீசையை பார்த்து நான் சந்தேகப்பட்டுருக்கணும் கோட்டை விட்டுட்டேன்..."
 
சகாதேவனும் சிரிப்பில் சேர்ந்து கொண்டு:  சரி தம்பி. இப்ப என்ன பண்ண போறீங்க?... என்று கேட்க,
 
ஜானி: கிரி இன்னும் வரல. இந்நேரம் ரிஷாந்த் மரக்காணம் ஸ்டேஷனுக்கு போயிருப்பான். விஷயத்தை சொல்லி எப்படியாவது போலீசை கூட்டிட்டு வந்துருவான். அதுவரைக்கும் தாக்குபிடிச்சா, உள்ள போய் நிச்சயமா கடத்தப்பட்ட அந்த கடைசி பொண்ணை மீட்டுருலாம். ரெஜினாவையும் மீட்டுருலாம். அவதான் இவங்க பண்ண எல்லாத்துக்கும் ஒரே சாட்சி. இவனுங்க தான் சீரியல் ரேப்பிஸ்ட் மற்றும் சீரியல் கில்லர்ன்கிற ஆதாரமும்  கிடைச்சிரும்.
 
ஆதாரம் இருக்கு என்று தெரிந்ததும், சகாதேவன் உற்சாகமானார்:  எங்க ஸ்டேஷனுக்கு நானும் போன் பண்றேன் தம்பி...
 
போனை எடுத்து பேசினார்.
 
திடீரென்று,
 
தெருமுனையில் கார் ஹெட் லைட் வெளிச்சம் தெரிய, இருவரும் திரும்பி பார்த்தார்கள். ஹெட் லைட் வெளிச்சம் அரை இருட்டான தெருவையே நிறைத்து, அவர்கள் இருவரின் கண்களையும் நிரடியது.
 
கார் அவர்களை நெருங்கியதும், கிரியின் கார் என்று தெரிந்தது. 
 
இருவருக்கும் திக் கென்று இருந்தது.
 
அவர்கள் இருவரையும், சைடில் திரும்பி சந்தேகமாக பார்த்தபடியே, கிரி கப்பல் போன்ற காரை, பங்களா கேட்டை நோக்கி செலுத்தினான்.
 
தொடரும்


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 40
 
கார் பங்களா கேட் முன்னால் நின்றது. தலையை வெளியே வெறுப்புடன் நீட்டி, கிரி கூட்டத்தை பார்த்தான்.  செக்யூரிட்டியிடம் என்ன விஷயம் என்று விசாரித்தான்.
 
தூரத்தில் நின்ற ஜானியும், சகாதேவனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் காருக்குள் இருந்தபடியே, தலையை திருப்பி, கிரி அவர்கள் இருவரையும் பார்த்தான். வெகு தூரத்தில் இருந்ததாலும், அரை இருட்டாக இருந்ததாலும், அவன் பார்வையில் பாதரசம் எவ்வளவு அதிகரித்திருந்தது என்று கணிக்க முடியவில்லை. ஆனால் அவனின் பார்வை, சில நொடிகள், ஒரு சில நொடிகள், அவர்கள் மேல் அதிகமாக தேங்கியிருந்தது, ஜானிக்கு வழக்கத்துக்கு மாறாக இருக்கிறதே என்று தோன்றியது.
 
ஆமை போல் தலையை காருக்குள் இழுத்து, காரை பங்களாவுக்குள் செலுத்தினான்.
 
அவன் பார்த்த விதம் சரி இல்லையே, சம்திங் இஸ் ராங்!!! 
 
நிச்சயம் சுதாரித்துக் கொள்வான் என்றே தோன்றியது. சுதாரித்தாலும், அவனால் கடத்தப்பட்டிருக்கிற பெண்ணை, அவுட் ஹவுஸில் இருந்து தூக்கி வந்து, காருக்குள் வைத்து, இவ்வளவு பெரிய கூட்டத்தை தாண்டி, கொண்டு போக முடியாது. நிச்சயம் கூட்டம் கலையும் வரை அவன் காத்திருக்க வேண்டும்.
 
கேட்டுக்கு பக்கத்துலயே கிட்டத்தட்ட 20 பேர் அமர்ந்து இருந்தார்கள். பிரஷர் மற்றும் சுகரினால் ஏற்படும் ஆபத்துக்களை பற்றி விலாவரியாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
 
"இப்படித்தான் எங்க பக்கத்து வீட்டுல ஒருத்தரு...  50 வயசுக்குள்ள தான் இருக்கும். சுகர் ஜாஸ்தியாகி கால்ல புண்ணு வந்து, காலையே எடுக்க வேண்டியதா போச்சு"
 
"இது பரவாயில்லைங்க. எங்க பெரியப்பாவுக்கு சுகர்னால, கண்ணு தெரியாம போயிருச்சு."
 
"பிரஷர் இருக்கிறவங்க இந்த மாதிரி பாதயாத்திரைக்கு வந்திருக்கவே கூடாது."
 
"அவங்க வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக வந்தாங்க..  இப்படியாவும்ன்னு நினைச்சு பார்த்தாங்களா?"
 
"மாதாவுக்காக போறோம். ஒரு பிரச்சனையும் ஆகாது"
 
மேற்கண்டவை அவர்கள் பேசிக் கொண்டிருந்ததில் ஒரு சில துளிகள்.
 
ஜானி: அண்ணே, பங்களாகுள்ள இருக்கிறது, கடைசியாக ஈசிஆர் ல காணாம போன பொண்ணா தான் இருக்கனும். அது யாருன்னு உங்க ஸ்டேஷன்ல போன் போட்டு கொஞ்சம் விசாரிங்க. காருக்குள்ள தூக்கிப்போட்டு வெளியில் கொண்டு போக ட்ரை பண்ணலாம். நீங்க கேட் வாசல்ல நில்லுங்க. அங்க இருக்குற மக்களையும் அசையாம பாத்துக்கங்க. தப்பித்தவறி அவன் கார் வந்துச்சுன்னா அதை நிறுத்தி சோதனை போடுறதுக்கு கூட தயங்க கூடாது. ஆனா கூட்டம் கலைகிற வரைக்கும் வரமாட்டான்னு தான் நினைக்கிறேன்.
 
சகாதேவன்: அவனுக்கு சந்தேகம் வந்திருக்கும்னு சொல்றியா?
 
ஜானி: இருக்கலாம். உள்ளுக்குள்ள ஒரு பட்சி பதட்டமா பாடுது.  நீங்க போங்க.. கேட் வாசல்லயே நில்லுங்க. நான் ரிஷாந்த் போலீஸை கூட்டிட்டு கிளம்பிட்டானான்னு கால் பண்ணி கேட்கிறேன்.
 
சகாதேவன் கேட் வாசலை நோக்கி நடந்தார்.
 
ஜானி போன் பண்ணினான்.
 
ரிஷாந்த் போனுக்கு கால் போய்க்கொண்டே இருந்தது.
 
அவன் எடுக்கவில்லை.
 
"Comeon Rish...attend the calllllll"
 
ஜானி பதட்டத்தில் வாயை விட்டு கத்தினான்.
 
பிளான் இம்மி பிசகினாலும், சொதப்ப வாய்ப்பு இருக்கிறது. போலீசுடன் உள்ளே நுழையும்போது, ஏதாவது ஒரு காரணத்துக்காக ரெஜினா பேசவில்லை என்றால், ஏதாவது ஒரு காரணத்துக்காக கடத்தி வைக்கப்பட்டிருக்கும் பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், ஒட்டுமொத்தமாக collapse ஆகிவிடும். கிரி சந்தேகப்பட்டு  ஏதாவது நடவடிக்கை எடுப்பதற்குள் செயல்பட வேண்டும்.
 
கேட்டில் நின்றிருந்த செக்யூரிட்டி பண்ணை வீட்டுக்குள் நுழைவதை பார்த்தான். கேட் வெளியே கூட்டம் அதிகமாக இருப்பதால், நிச்சயமாக அவனுக்கு செம டோஸ் விழும்.
 
ஜானி மறுபடியும் போன் பண்ண... இம்முறை ரிஷாந்த் ஃபோனை எடுத்தான்.
 
"அண்ணே on the way... விஷயத்தை சொல்லிட்டேன். போலீஸ் ஸ்டேஷனே ஆடி போச்சு. பெரிய இடம், ஆதாரம் எதுவும் இல்லாமல் கை வைக்கணுமான்னு முதலில் தயங்குனாங்க. மெஜிஸ்திரேட் கிட்ட சர்ச் வாரண்ட் வாங்க டைம் இல்ல.. நான் அவங்க பேர்ல ரிட்டன் கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன்னு சொன்னப்புறம், எஸ்பி கிட்ட கேட்டுட்டு கிளம்புனாங்க.  ரெண்டு ஜீப் நிறைய போலீஸ் வந்துட்டு இருக்கு. நானும் பைக்ல வந்துட்டு இருக்கேன்..."
 
பைக்கில் வந்து கொண்டிருந்ததால், கடற்கரை காற்று அவனைப் பேசவிடாமல், விஷ் விஷ் என இடையில் புகுந்து இம்சை செய்தது.
 
"அங்க நிலவரம் எப்படி?"
 
"இதுவரைக்கும் ப்ராப்ளம் இல்ல. நீங்க சீக்கிரம் வந்துடுங்க.."
 
பேசும் போது காற்றின் கலப்படம் அதிகமாக இருந்ததால், சரியாக பேச முடியவில்லை. சரிண்ணா என்று சொல்லிவிட்டு வைத்தான்.
 
இன்னும் பத்து நிமிடங்கள், கூடி போனால் 15 நிமிடங்கள்.
 
ரெஜினா தைரியமாக இரு... எல்லாமே உனக்காகத்தான்!!!
 
ரூமுக்குள் இருந்த ரெஜினா, வெளியே நடக்கும் விஷயங்கள் எதுவுமே தெரியாமல், ரூமுக்குள்ளேயே யோசனையில் உலாத்தி கொண்டிருந்தாள். பஞ்சமா பாதகர்கள், யாரோ ஒரு பெண்ணை இன்னைக்கு கொலை செய்யப் போகிறார்களே என்ற பதட்டம் அவளுக்கு... அவளைக் காப்பாற்ற முடியாதா!!!
 
ஹாலில் கிரியும், தாரிகாவும் காரசாரமாக பேசிக் கொண்டிருந்தது அவளுக்கு கேட்டது. வழக்கத்துக்கு மாறாக இருக்குதே! தாரிகா சொல்வதை வழக்கமாக அவன் தட்டிப் கேட்க மாட்டானே, இன்றைக்கு எகிறி எகிறி பேசுகிறான். 
 
"You are solely responsible for all these fuckups..."
 
"You think so...what happened to you....you never spoke to me like this."
 
"Bloody shit...they are trying to nab us
..don't you understand?"
 
"Ok...Now you tell me what to do?"
 
"Good....just we have to... 
(அதன் பிறகு பேச்சு சத்தம் குறைந்து போனது)
 
ஏதோ ரகசியம் பேசுகிறார்கள்.
 
என்னமோ சரியில்லை என்று ரெஜினாவுக்கு உள்ளுணர்வு.
 
திடீரென்று பேச்சு சத்தம் மொத்தமாக நின்றது... 
 
ஒரு சில நொடிகளுக்கு பிறகு, ஹால்வேயில் காலடி சத்தம் கேட்டது. சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அவள் ரூம் கதவை நெருங்கியது.
 
தொடரும்
 


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 41
 
ஐயர் வீட்டு கேட்டருகே, ஜானி நின்றிருக்க... பங்களா கேட்டில் சகாதேவன் கூட்டத்தினருடன் நின்றிருந்தார். பண்ணை வீட்டுக்குள் சென்று கிரி திரும்பி வெளியே வரவில்லை.
 
ஜானி தெரு முனையை பார்த்தபடியே நின்றான். நொடிகள் நொண்டியபடியே இருக்க.... ஜானி இருப்புக் கொள்ளாமல் தவித்தான்.
 
டேய்ய்ய்ய்.... யாராச்சும் வாங்கடா சீக்கிரம்!!!!
 
கேட்டில் செக்யூரிட்டியையும் காணவில்லை.
 
அடுத்த ஒரு சில நொடிகளில் ரிஷாந்த் பைக்கில் தெருவுக்குள் நுழைய, அவனைத் தொடர்ந்து இரண்டு போலீஸ் ஜீப்புகள். வழக்கமாக கிளைமாக்ஸ் முடிந்த பிறகு தான் போலீஸ் ஜீப் வரும். கிளைமாக்ஸுக்கு முன்னாலே வந்தது இதுதான் முதல் முறை என்று ஜானி நினைத்துக் கொண்டான். போலீசை பார்த்தது, அளவில்லாத மகிழ்ச்சி அடைந்ததும் இதுவே முதல் முறை.
 
ஜானி பங்களா கேட்டை நோக்கி ஓடினான். போலீஸ் ஜீப்புகளை பார்த்ததும், உட்கார்ந்து இருந்த மக்கள் என்னமோ ஏதோ என்று பயந்து போய் எழும்பி நின்றார்கள்.
 
ரிஷாந்த் பைக்கை ஓரங்கட்டி நிறுத்த, ஜீப்புகள் கேட்டின் முன்னால் வந்து நின்றது. ஜீப்புகளில் இருந்து போலீஸ்காரர்கள் அனைவரும் இறங்கினார்கள்.  
 
ஜானி கேட்டுக்குள் கை வைத்து, உள்ளே பூட்டப்பட்டிருந்த கொண்டியை எடுத்து கேட்டை திறந்தான்.
 
"சார் உள்ள ரெண்டு நாய் இருக்கு. பார்த்து போகணும்.."
 
மரக்காணம் ஸ்டேஷன் எஸ்ஐ சபாபதியும், கான்ஸ்டபிள்கள் நாலு மற்றும் ஐந்து பிசி என ஒட்டுமொத்த ஸ்டேஷனுமே வந்திருந்தது. ரைட்டர், இன்ஸ்பெக்டர் மட்டும்தான் வரவில்லை... எஸ் ஐ சபாவதியை பார்த்ததும், சகாதேவன் சல்யூட் அடித்தார்
 
"யோவ், காலாப்பட்டு ஸ்டேஷன் தானே... நீ இங்க என்னய்யா பண்ற?"
 
சகாதேவன் சுருக்கமாக விஷயத்தை சொன்னார்.
 
"என்னமோ சொல்றீங்க? தப்பாச்சின்னா நமக்கு ஆப்பு தான். சரி வாங்க போய் பார்ப்போம்...", என்று பெருமூச்சு விட்டு, SI கேட்டை திறந்து உள்ளே நுழைந்தார். போலீஸ் அனைவரும் அவர் பின்னால் சென்றார்கள். கடைசியில் சகாதேவனும் ரிஷாந்த்தும்  நுழைந்தார்கள். என்னமோ ஏதோ என்று மக்கள் பதட்டமாக பார்த்துக் கொண்டிருக்க, ஜானி அவர்களை சமாதானப்படுத்தினான். 
 
"பதட்டமாகாதிங்க. இது ஏற்கனவே போலீசுக்கும், இந்த பங்களாகாரருக்கும்  இருக்கிற பிரச்சனை. அதனால் தான் வந்திருக்காங்க. வேற ஒண்ணுமில்ல. கார் ஓட்டிட்டு போன தம்பி, இல்லன்னா நிர்மலா நம்பர் உங்களுக்கு தெரியும்னா, போன் பண்ணி அந்தம்மாவுக்கு என்னாச்சுன்னு கேளுங்க. கார் ரிட்டன் ஆகுற வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க", என்று பொதுவாக அவர்களைப் பார்த்து சொல்லிவிட்டு, ஜானியும் பங்களாவுக்குள் நுழைந்தான்.
 
பண்ணை வீட்டுக்குள் தடதடவென்று போலீஸ் பட்டாளம் நுழைவதை பார்த்ததும், ரெண்டு நாய்களும் குலைத்துக் கொண்டு, சீறி பாய்ந்து வந்தன.
 
போலீஸ்காரர்கள் ஜெர்கானார்கள்.
 
Si: யோவ்... அந்த ரெண்டையும் புடிங்கயா...
 
பங்களா வாசலில் கிரி வந்து நின்றான். அவன் நடையில், பார்வையில் அசால்ட்டுதனம். 
 
"Rosy...Rexy....quiet...." என்று சத்தமிட்டான்.
 
அடுத்த நொடி, இரண்டு நாய்களும் மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல், குறைப்பதை நிறுத்தி, அப்படியே நின்றது.
 
அவன் முகத்தில் கலக்கமோ பயமோ எதுவுமே இல்லை.  செக்யூரிட்டி எங்கே என்று ஜானி சுற்றிலும் பார்த்துக் கொண்டிருக்க, அவன் கண்ணில் படவே இல்லை. எங்கே போயிருப்பான்?
 
எஸ் ஐ யும்... மற்ற போலீசும் வாசலை நெருங்கியதும்,
 
கிரி:  என்ன எஸ்ஐ சார்? எங்க வீட்டுக்கு அன்டைம்ல வந்துருக்கீங்க.  ஏதாவது முக்கியமான விஷயமா?
 
எஸ் ஐ: நாங்க தேடிட்டு இருக்குற ஒரு குற்றவாளி உங்க பண்ண வீட்டுக்குள்ள எகிறி குதிக்கிறத இவரு பார்த்திருக்காரு...( என்று ரிஷாந்த்தை கை காண்பித்தார்) அதனால ஒரு routine செக் தான். தொந்தரவுக்கு மன்னிக்கணும்.
 
கிரி ரிஷாந்த்தை உஷ்ணமாக பார்த்தான்.
 
கிரி மட்டும் தான் இருக்கிறான். தாரிகாவை காணவில்லை, செக்யூரிட்டியை காணவில்லை. ஜானி சுற்றிலும் பார்வையை ஓட்டிக் கொண்டிருந்தான். அவுட் ஹவுஸை பார்த்ததும், திடுக்கிட்டான். அவுட் ஹவுஸின் கதவுகள் திறந்து கிடந்தன.
 
ஜானி மூளைக்குள் ரத்த குழாய்கள் விரிவடைந்தன. பதட்டமானான். கிரி ஏதாவது சித்து விளையாட்டு காட்டிவிட்டானா?
 
கிரி: இதோ பாருங்க சார் routine செக்கப்போ என்னவோ... அதை பத்தி எனக்கு கவலை இல்லை. ஆனால் சர்ச் வாரண்ட் இல்லாமல் யாரையும் என்னுடைய வீட்டுக்குள் அனுமதிக்க முடியாது.
 
எஸ்ஐ:  சார், உங்க அனுமதி எனக்கு தேவையில்லை. தப்பிச்சு போன குற்றவாளியை பிடிக்க வேண்டியது எங்களுடைய கடமை. அவனால் உங்களுக்கும், உங்க வீட்ல இருக்குற மத்தவங்களுக்கும் கூட தான் ஆபத்து. அதனால நாங்க செக்  பண்ணி தான் ஆகணும். 
 
கிரி அலட்டி கொள்ளாமல் சர்வ சாதாரணமாக, " சாரி எஸ் ஐ சார். உங்களுக்கு சட்டம் தெரியும்னு நினைக்கிறேன். Crpc la  section 93, 94,95  அப்புறம் indian constitution article 19,  right to privacy எல்லாம் கேள்விப்பட்டு இருப்பிங்க. வாரண்ட் இல்லாம சர்ச் பண்ண முடியாது. நான் எங்கேயும் போயிற மாட்டேன்.
இங்கே தான் இருப்பேன். ஏதாவது ஒரு magistrate கிட்ட போய் search warrant வாங்கிட்டு வாங்க. அதுக்குள்ள நான் என் லாயரை வர சொல்றேன்.
அதுக்கப்புறம் நீங்க தாராளமா சர்ச் பண்ணிக்கலாம். அதுக்கு முன்னால, என் ஆட்களை விட்டு நான் சர்ச் பண்ண சொல்றேன். அப்படி யாராவது என் பார்ம் ஹவுஸில் நுழைந்து இருந்தால், நானே பிடித்துக் கொண்டு வந்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கிறேன். Now i could not allow you inside my premises.
Do you understand?"
 
என்னடா இவன் crpc section எல்லாம் பேசுறான் என்று எஸ்ஐ சபாபதியும்,  கூட வந்த போலீஸ்காரர்களும் வாயடைத்து பார்த்துக் கொண்டிருக்க, 
 
"Sir, one minute...." என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
 
கிரி உட்பட அனைவரும் சப்தம் வந்த திசையை திரும்பி பார்த்தார்கள்.
 
மீசை சகாதேவனின் வாய்ஸ் தான் அது.
 
"SI sir ஏற்கனவே சொல்லிட்டாரு...they are in hot pursuit of an accused they have the authority to arrest, so they can enter your home without a warrant or permission. This is as per Crpc 165....Also, ஒரு போலீஸ் ஆபிசரை அவருடைய டூட்டியை செய்ய விடாம தடுத்தாலோ இல்ல தாக்க முயற்சித்தாலோ, ஐபிசி செக்சன் 353 பிரகாரம், உங்களை இப்பவே அரெஸ்ட் பண்ண முடியும். அதனால தயவு செய்து வழியை மரிக்காம கொஞ்சம் கோ ஆப்ரேட் பண்ணுங்க."
 
கிரிக்கு மினி அதிர்ச்சி. ஜானிக்கும் ரிஷாந்த்துக்கும் நிஜமாகவே ஆச்சரியம். என்னடா பாக்குறதுக்கு கிராமத்துக்காரன் மாதிரி இருக்காப்புல.... அசால்ட் பண்ணிட்டாரே. மற்ற போலீஸ்காரர்களுக்கு அவர் எதைப் பற்றி பேசுகிறார் என்றே தெரியவில்லை. 
 
ரிஷாந்த் ஜானி காதுக்குள் கிசுகிசுத்தான்.
 
"சட்டத்தையும் இங்கிலீஷையும் பிச்சு உதறுறாரே... இதான் ஆளைப் பார்த்து எடை போடக்கூடாதுன்னு சொல்றது."
 
ஜானி: உண்மைதான்.  எங்க ஊர்ல ஒரு பழமொழி கூட சொல்லுவாங்க....
 
ரிஷாந்த்: அண்ணா... இப்ப வேண்டாம் plssss. டென்ஷனா போயிட்டுருக்கு அப்புறமா கேட்டுக்குறேன்.
 
சகாதேவன் ஜானியை திரும்பி பார்த்து, பெருமையாக  மீசையை நீவி விட்டுக் கொண்டார்... ஜானி, 'பிரமாதம் அண்ணா' என்பது போல் விரல்களை காண்பித்தான்.
 
பங்களாவின் சைடில் காலடி சத்தங்கள் கேட்க, செக்யூரிட்டி வந்து கொண்டிருந்தான். அவன் காக்கி உடையில் ஆங்காங்கே திட்டு திட்டாக அழுக்கு ஒட்டியிருந்தது. தட்டிக் கொண்டே வந்தான்.
 
கிரி: ஓகே... நீங்க சொல்ற பாயிண்ட்ஸ் நான் ஏத்துக்கிறேன். சர்ச் வாரண்ட் இல்லாம சோதனை போடணும்னா, மரக்காணம் ஸ்டேஷன் லிமிட்ல இந்த ஏரியா வர்றதுனால, உங்க ஸ்டேஷன் இன்சார்ஜ் தான் வரணும். ஆனா எஸ் ஐ வந்துருக்காரு. இன்ஸ்பெக்டரை வர சொல்லுங்க. நான் வெயிட் பண்றேன். அப்படி இல்லன்னா, ஸ்டேஷன் இன்சார்ஜ் அதாவது உங்க இன்ஸ்பெக்டர், எழுத்துப்பூர்வமா, எனக்கு பதிலா எஸ்ஐ வந்து சோதனை இடுவார்னு எழுதி கொடுத்துருக்கணும். அப்படி ஏதாவது எழுதி கொடுத்து இருக்கிறாரா காட்டுங்க... என்றான்.
 
சகாதேவன் மீசையை நீவி விட்டுக் கொண்டிருந்ததை நிறுத்தி, கிரியை ஆச்சரியமாக பார்த்தார். பதிலுக்கு ரிவிட் அடிச்சிட்டானே.
 
எதற்கோ பேசியே அவன் நேரத்தை போக்கிக் கொண்டிருப்பது போல், ஜானிக்கு தோன்றியது.
 
கடைசியில் நின்றிருந்த இரண்டு பிசிகள் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.
 
"ஏன்யா.... இன்னைக்கு  வீட்டுக்குள்ள பூந்து சர்ச் பண்ண முடியுமா, முடியாதா?"
 
"முடியும்.... ஆனா..... முடியாது", என்று வடிவேலு பாணியில் இழுத்தான்.
 
"கிரி, ஏன் போலீஸ் கூட நாம பிரச்சனை பண்ணனும். அவங்க செக் பண்ணினால் பண்ணிட்டு போகட்டும்", என்று வீட்டுக்குள் குரல் கேட்க, திரும்பி பார்த்தான். தாரிகா, சரசரக்கும் ஒரு மெல்லிய சாரி அணிந்து, கேட் வாக்கிங்கில் வந்தாள்.
 
தாராளமான இரக்கம் மிகுந்த ஜாக்கெட், மார்பின் ரோஸ் நிற துவக்கம், பளிச்சென்ற இடுப்பு என பளபளப்பாக வந்தவளை பார்த்ததும், போலீஸ்காரர்கள் அனைவரின் கண்களும் டாலடித்தன.  
 
எப்படி இருவருமே பதட்டப்படாமல் இருக்கிறார்கள் என்று ஜானிக்கு சந்தேகம்.
 
தாரிகா:  எஸ் ஐ சார். நீங்க தேடி வந்தது குற்றவாளியா அல்லது வேற என்னமோ... அது என்னனு எங்களுக்கு தெரியல... ஆனா ஒண்ணு எப்படியும் வெறுங்கையை வீசிட்டு தான் திரும்ப போகிறீர்கள். Search warrant  இல்லாமல் இரவு நேரத்தில் அதுவும் பெண்களில் இருக்கும் ஒரு வீட்டில், எங்களுடைய பிரைவசியை நீங்கள் intrude செஞ்சீங்கன்னு  உங்க மேல கேஸ் போடுவேன். சும்மா இல்ல, உள்துறை அமைச்சர் வரைக்கும் போவேன். காக்கி சட்டையை நீங்கள் போட்டிருக்கிறது இன்னைக்கு தான் கடைசி நாள்... தெரிஞ்சுக்கோங்க..
 
எஸ்ஐ உட்பட அனைத்து போலீஸ்காரர்களும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இதெல்லாம் நமக்கு தேவையா என்பது போல் மிடறு விழுங்கி கொண்டார்கள்.
 
சகாதேவன்: அட வாங்க சார்... எவ்வளவு பேரை பார்த்தாச்சு. நமக்கு என்ன புதுசா??? இந்த ஊரு இல்லன்னா வேற ஏதோ ஒரு தண்ணியில்லாத காடு... இல்லன்னா, இருக்கவே இருக்கு, ஆயுதப்படைக்கு மாத்துவாங்க... நாம பார்க்காததா!!!...", என்று உந்தி தள்ள.. 
 
பங்களா வாசலில் நின்ற கிரியையும் தாரிகாவையும் விலகிக் கொள்ள சொல்லி, அவர்களை கடந்து... எஸ்ஐ வீட்டுக்குள் நுழைந்தார்.
 
அவர் நுழைந்ததும், மற்ற போலீஸ்காரர்களும்  உள்ளே நுழைந்தார்கள்.
 
ஜானி: அவுட் ஹவுஸ்ல போய் பாக்கணும். யாராவது ரெண்டு பேர் அங்க போங்க. அப்படியே பங்களா பின்பக்கம் யாராவது ரெண்டு பேர் போய் பாருங்க.
 
சகாதேவன் பிசி ஒருத்தரை கூப்பிட்டுக்கொண்டு அவுட் ஹவுஸை நோக்கி சென்றார். மேலும் இரண்டு பேர் பின்பக்கமாக சென்றார்கள்.
 
எல்லா போலீஸ்காரர்களும் சென்றதும், கடைசியில் நின்றிருந்த ரிஷாந்த்தும் ஜானியும் மட்டுமே மிச்சமிருந்தார்கள். அவர்களும் பங்களாவுக்குள் நுழைந்தார்கள். நால்வரையும் சுற்றி அதிர்வலைகள். டென்ஷன் எகிறி கொண்டிருந்தது.
 
கிரி அவர்களைப் பார்த்து,
 
"Ek minute...", என்றான்.
 
இருவரும் நின்றார்கள்.
 
தாரிகா இருவரையும் ஆக்ரோஷத்துடன் வெறித்து கொண்டிருந்தாள். தனியாக மாட்டினால் நிச்சயமாக கடித்து குதறி விடுவாள்.
 
கிரி: இதுக்கெல்லாம் நீங்க ரெண்டு பேரு தான் காரணம்னு எனக்கு தெரியும். தாரிகா உங்க விஷயத்துல கோட்டை விட்டுட்டா... நானும்  கொஞ்சம் careless ஆ இருந்துட்டேன். கரண்ட் பிரச்சனை அன்னைக்கு நீங்க உள்ள வந்தப்பவே... நான் அலர்ட் ஆயிருக்கணும். But one thing,
 
எங்களை புடிச்சிரலாம்னு மட்டும் நினைக்காதே!!! அது மட்டும் நடக்காது. இன்னைக்கு போலீஸ் ஒண்ணுமே கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பி போகட்டும்... அதுக்கப்புறம் நீங்க எழுதின இந்த கதைக்கு நான் முடிவுரை எழுதுறேன்.
 
கிரியும், தாரிகாவும்... எதிரே நின்றிருந்த ஜானியையும் ரிஷாந்தையும் கொலை வெறியோடு பார்த்துக் கொண்டிருக்க,
 
ஜானி ஒன்றுமே பேசாமல் , இதழோரம் சிரிப்புடன் நின்றிருந்தான்.
 
ரிஷாந்த் கிரியை நேருக்கு நேராக பார்த்து: Best of luck ... என்றான். 
 
இருவரும் சிறிது நேரம் வெறித்து பார்த்துக் கொண்டார்கள்.
 
"வாடா போலாம்", என்று ஜானி அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
 
பங்களா முழுவதும் பூட்ஸ் சத்தங்கள். எல்லா ரூம்குள்ளும் நுழைந்து இருந்தார்கள். கிச்சனுக்கு வெளியே வேலைக்காரி தேனு பதட்டமாக நின்றிருந்தாள்.
 
ஜானியும், ரிஷாந்தும்... ஹால் கடைசியில் இருந்த ரெஜினா ரூமை நோக்கி ஓடினார்கள். ரூம் கதவு திறந்தே கிடந்ததும், திக்கென்று இருந்தது. 
 
ரிஷாந்த் ரூமுக்குள் நுழைய, ரெஜினா இல்லை. அதிர்ச்சியாக ஜானியை பார்த்தான். உள்ளே சென்று பாத்ரூம் கதவை திறந்து எட்டிப் பார்த்தான். உள்ளேயும் அவள் இல்லை.
 
ஜானி:  என்னடா ஆள காணல. இந்த ரூம் தானே?
 
ரிஷாந்த்: இந்த ரூம் தாண்ணா. 
 
அவளை என்ன செய்திருப்பார்கள்??? 
 
இருவரும் ரூமை விட்டு பதட்டமாக வெளியே வந்தார்கள். 
 
ஹாலில், சிரிப்பு சத்தம்.
 
முதுகு பக்கமாக உரசியபடி திரும்பி நின்று, இடுப்பில் கைவைத்து சைடு ப்ரோபைலில் தாரிகாவும், கிரியும் சிரித்துக் கொண்டிருந்தனர்.
 
அலட்சியமான, ஏளனமான, எகத்தாளமான சிரிப்பு.
 
தொடரும்
 


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 42
 
ஜானிக்கும் ரிஷாந்துக்கும் ரத்தம் கொதித்தது.
 
ரிஷாந்த் அவர்களை நோக்கி ஆக்ரோஷமாக சென்றான்.
 
"ரெஜினா எங்கடா? தேவி.... பசங்களா???
 
ஜானி: எலே அவளை என்ன பண்ணுனீங்க? மரியாதையா சொல்லிருங்க. 
 
இருவரும் சிரித்தார்கள். சத்தமாகவே சிரித்தார்கள்.
 
கிரி:  ஓ!!! ரெஜினாவை உனக்கு தெரியுமா?  அபிஷியலா கம்பெனி விஷயமா வெளிநாடு சுற்றுலா போயிருக்கா. போய் ஒரு வாரம் ஆச்சு. வரதுக்கு எப்படியும் ஒரு மாசம் ஆகும். வந்ததுக்கப்புறம் உனக்கு இண்ட்ரடியூஸ் பண்றேன்.
 
ரிஷாந்த்: டேய்... என்று கத்தி, பாய்ந்து, அவன் கழுத்தை பிடித்தான்.
 
தள்ளி நின்றிருந்த செக்யூரிட்டி ஓடி வந்து ரிஷாந்த்தை பிடித்து இழுத்தான். ரிஷாந்த் திமிர, சூரஜ் இழுக்க, சிறிய தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 
 
ஜானி:  Rishhh... அவனை விடு.
 
ரிஷாந்த் கையை எடுக்கவில்லை.
 
ஜானி:  நான் சொல்றேன்ல்ல... அவனை விடு.
 
ரிஷாந்த் கழுத்தில் இருந்து கையை எடுக்க, கிரி சட்டையை தூசி தட்டுவது போல், தட்டிக் கொண்டான்.
 
வீட்டுக்குள்ளே போலீஸ்காரர்களில் இயக்கங்களைத் தவிர... வேறு சத்தங்கள் கேட்கவில்லை. சூழ்நிலையில் ஒரு நிசப்தமான கிலி கலந்திருந்தது.
 
கிரி கடுப்பாக புன்னகைத்தபடி,
 
"You have spoiled my luxury designer shirt...Do you know the cost of this shirt??? Never mind.
சொல்ல மறந்துட்டேன். ஃபாரின் டூருக்கு போயிருக்கிற என்னுடைய மனைவி, பத்திரமா திரும்பி வந்தா தான் உங்ககிட்ட introduce பண்ண முடியும். ஒரு வேளை வராமல் அங்கேயே ஏதாவது விபத்து ஏற்பட்டாலோ, மலையில் இருந்து விழுந்தாலோ, நீரில் மூழ்கினாலோ, பாடி கிடைக்காமல் போயிரும். தேடிக் கொண்டே இருப்பார்கள். கடைசி வரையில் தேடிக் கொண்டே இருப்பார்கள். அப்புறம் introduce பண்ண முடியாது..."
 
ரெஜினாவை என்னமோ செய்து விட்டார்கள் என்று ரிஷாந்த்திற்கு பதட்டமாக ஆரம்பித்தது. அவன் கைகள் நடுங்கினான். ரெஜினாவை முகம் வரை வெள்ளை துணியால் மூடி, ஸ்ட்ரக்சரில் வைத்து தள்ளிக் கொண்டு போவது போல், மின்னலாய் ஒரு எண்ண கீற்று, அவன் இதயத்தில் கத்தியை சொருகி விட்டு  மறைந்தது.
 
கிரி: உங்க மூஞ்சிகளை பார்த்தாலே பட்டிக்காடுனு தெரியுது. ஏண்டா country brutes, எங்கேயோ அட்ரஸ் இல்லாத ஊரிலிருந்து இங்கே வந்து, நான் கஷ்டப்பட்டு கட்டமைச்ச இந்த  சாம்ராஜ்யத்தை அசைச்சிரலாம்னு பாக்குறீங்களா?? ... எவ்வளவு பேரை பார்த்திருப்பேன்!! எவ்வளவு பேருக்கு டேக்கா கொடுத்துருப்பேன். எவ்வளவு பேரை அட்ரஸ் இல்லாம பண்ணிருப்பேன்.... த்தா, சின்ன பசங்கடா நீங்க!!!
 
தாரிகா சத்தம் வராமல் கைத்தட்டி குரூரமாக புன்னகைத்தாள்.
 
ஜானியும், ரிஷாந்தும் அவன் சொன்னதற்கு பதில் சொல்ல முடியவில்லை.
 
ஜானி மைண்ட் வாய்ஸ்; இவன் செம பிரில்லியண்ட் தான்.
அனேகமா என்னுடைய ஸ்லாங்கை வைத்து திருநெல்வேலி கிராமத்தான் என்று கண்டுபிடித்து இருப்பான்.
 
பங்களாவுக்குள் ரூம்களில், மாடியில், தேடிக் கொண்டிருந்த எஸ்ஐ சபாபதியும், மற்ற போலீஸ்காரர்களும் சோர்வாக திரும்பினார்கள். யாரும் இல்லை என்று தலையாட்டினார். சபாபதி, 'என்னப்பா இப்படி மாட்டி விட்டுட்டியே' என்பது போல் ரிஷாந்த்தை கடுப்பாக பார்த்தார்.
 
அவுட் ஹவுஸ்க்கு தேட சென்ற சகாதேவனும், மற்றோர் போலீஸ்காரரும் வந்து, பங்களா வாசலில் நின்றார்கள்.
 
ஜானியும் ரிஷாந்த்தும் ஆர்வமாக அவரைப் பார்க்க, 
 
"யாரும் இல்லை", என்பது போல் சோர்வாக தலையாட்டினார்.
 
ரிஷாந்த்: நல்லா பாத்தீங்களா அண்ணே!!!
 
சகாதேவன் அவனை அருகே கூப்பிட்டு காதில் கிசுகிசுத்தார்: நல்லா பாத்துட்டேன் தம்பி, ரெண்டே ரூம் தான்.  ஒரு வினோதமான கப்பு மெல்லிசா அடிக்குது. மத்தபடி யாருமே அங்க இல்ல. சந்தேகப்படும்படியா தான் இருக்கு ஆனா ஆதாரம் இல்லை. 
 
பங்களாவுக்கு பின்பக்கம் தேட சென்றவர்களும், வாசல் பக்கம் வந்தார்கள். "யாருமே இல்லை" என்று உதட்டை பிதுக்கினார்கள்.
 
எஸ்ஐ சபாபதி டிரான்ஸ்பர் செய்தால், எந்த தண்ணீ இல்லாத காட்டுக்கு மாற்றுவார்கள் என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.
 
கிரி:  எஸ்ஐ சார், நான் உங்ககிட்ட அப்பவே சொன்னேன். நீங்க கேட்கல. அனாவசியமா எவன் சொல்றதையோ கேட்டுகிட்டு, எங்களுடைய நிம்மதியை கெடுத்துட்டீங்க. இதுக்கு நீங்க பதில் சொல்லித்தான் ஆகணும். நான் உங்களை சும்மா விட போறதில்லை.
 
எஸ் ஐ தடுமாறினார். பண்ணை வீட்டுக்குள் நுழையும் போது இருந்த வேகம் இல்லை. குழைந்தபடி பேசினார்.
 
"சாரி சார். உங்களை தொந்தரவு பண்றது எங்க நோக்கமில்லை. நாங்க தேடி வந்த குற்றவாளி உங்க வீட்டுக்குள்ள வந்ததா இவர் தான் சொன்னார் (ரிஷாந்தை காண்பித்தார்) அதனால தான் வந்தோம். மத்தபடி உங்க மேல எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. Sorry for the trouble... வாங்கய்யா போலாம்."
 
ஜானி அவசரமாக யோசித்துக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் ரெஜினா போன் பண்ணினா... வீட்டுக்குள் இருக்கும் பெண்ணை டிஸ்போஸ் பண்ண போறத பத்தி, இவர்கள் பேசிட்டு இருந்ததா சொன்னாள். அப்படின்னா ரெண்டு பேரும் வீட்டுக்குள்ள தான் இருக்கணும். வெளில எங்கேயுமே போகல.. 20 நிமிஷம் தான் இடையில்  ஆகிருக்கும். இருவரும் வீட்டை விட்டு வெளியே போயிருக்கவே முடியாது. இந்த பண்ணை வீட்டுக்குள் தான் இருக்க வேண்டும்.
 
எங்கே? எங்கே?
 
ஒருவேளை கொலை செய்து புதைத்து விட்டார்களா? 20 நிமிஷத்துக்குள் கொலை செய்து அவசரமாக புதைக்க முடியுமா? முடியும்.
 
ஜானி கிளம்பி கொண்டிருந்த போலீஸ்காரர்களை பார்த்து, 
 
"ஒரு நிமிஷம்... நில்லுங்க. நாம் தேடி வந்தவர்கள் வீட்டுக்குள்ள, அவுட் ஹவுஸில் தான் இருக்கணுமா என்ன? இவ்வளவு பெரிய பண்ணை வீட்டில் எங்கேயாவது புதைக்க கூட செய்திருக்கலாம். 20 நிமிஷம் இடைவெளியில் நடந்திருக்கலாமில்ல..."
 
எஸ் ஐ சபாபதி:  மிஸ்டர், நாம தேடி வந்தது தப்பிச்சு போன குற்றவாளியை,  அவன எதுக்கு இவங்க கொலை செய்திருக்கணும். அதனால மேற்கொண்டு பிரச்சினை வேண்டாம்... வாங்க போலாம்", என்று சமாதானப்படுத்துற மாதிரி பேசினார்.
 
ஜானி: சகாதேவன் சார், காணாமல் போன அந்த பொண்ணோட பெயர் கேட்டீங்களா?
 
சகாதேவன்: கேட்டேன் தம்பி. பிரிக்கெட் டைலர் இங்கிலாந்து நாட்டுக்கார பொண்ணு.
 
ஜானி: எஸ்ஐ சார் நான் இப்ப கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன். இவருடைய மனைவி மற்றும் இங்கிலாந்தில் இருந்து சுற்றுலாவுக்கு வந்த பிரிக்கெட் டைலர், இருவரையும் இவர் தான் கொலை செய்து இந்த பண்ணை வீட்டுக்குள் எங்கேயோ ஒளித்து வைத்திருக்கிறார். தயவு செய்து தேடுங்கள்.
 
கிரியும், தாரிகாவும் பொசுக்கும் கண்களோடு வெறித்தார்கள்.
 
எஸ்ஐ: என்னப்பா சொல்ற? இவ்வளவு பெரிய பண்ணை வீட்ல, எங்க பொதச்சி வச்சிருக்காங்கன்னு எப்படி தேடுறது? அது மட்டும் இல்லாமல் இதற்கெல்லாம் என்ன ஆதாரம்? நீங்க ஸ்டேஷன்க்கு வந்து இன்ஸ்பெக்டர் கிட்ட நேரடியா பேசுங்க.
 
எஸ் ஐ பயத்தில் கட்சி மாறிவிட்டார் என்று ஜானிக்கு புரிந்து போனது.
 
கிரி:  whoa...whoa... wait a minute... இந்தப் பட்டிக்காட்டு பசங்க சொல்றத கேட்டு அனாவசியமா திரும்பத் திரும்ப என்னை தொந்தரவு பண்ணாதீர்கள். பண்ணை வீட்டில் தாராளமா தேடிக்குங்கன்னு நான் நான் சொல்லிடுவேன் ஆனா திரும்பவும் அதே தான் சொல்றேன். நீங்க தேடுற விஷயம் கிடைக்கலன்னா, you are all finished.
 
எஸ் ஐ கிரியை பார்த்து, " சாரி சார். நாங்க கிளம்புறோம்..."
 
அவருடன் வந்த போலீஸ்காரர்கள் கேட்டை நோக்கி நடந்தார்கள். எஸ்ஐ அவர்களுக்கு பின்னால் சென்றார். கேட்டுக்கு வெளியே நின்றிருந்த மக்கள் கூட்டம் உள்ளே என்ன நடக்கிறதென்று ஆவலாக, எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
 
கான்ஸ்டபிள் சகாதேவன், தலை குனிந்து நின்றிருந்த ஜானியையும், ரிஷாந்த்தையும் பரிதாபமாக பார்த்தார்.
 
பாவம்!!! நல்லது செய்யணும்னு நினைத்து வந்திருக்கிறார்கள். அவர்களால் செய்ய முடியாமல் போய்விட்டது.
 
ரிஷாந்த் எதுவுமே பேசாமல் நின்றிருந்தான். ரெஜினாவை காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என்று பரிதவித்துக் கொண்டிருந்தான். எப்படினாலும் உன்னை பத்திரமா இங்கிருந்து கூட்டிட்டு போயிருவேன்னு... கொடுத்த வார்த்தையை காப்பாத்த முடியாமல் போய்விட்டதே!!!
ஐயோ ரெஜினா!!! நான் என்ன பண்ணுவேன்???
 
நீ எங்க இருக்க??? உயிரோட இருக்கியா இல்லையா??? கடவுளே!!! அவளை காப்பாற்று.
 
சுசி!! ரெஜினா!!!! 
 
மனசுக்குள் அலறினான்.
 
ரிஷாந்த் தோளில் தட்டி,  ஜானி "வா போகலாம்", என்று வருத்தத்தோடு சொல்ல...
 
இருவரும் தலை குனிந்தபடி கேட்டை நோக்கி நடந்தார்கள். 
 
தொடரும்


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 43
 
சைடில் நின்றிருந்த செக்யூரிட்டி, இருவரையும் பார்த்து ஈ என்று இளித்தான்.
 
பான்பராக் கரை படிந்திருந்த பற்கள்.
 
"கட்டி தூக்கி கிணத்துல.
இல்ல கடல்ல போட்டுருவேன்.." என்று அன்றைக்கு கிரி செக்யூரிட்டியிடம் பேசியது, திடீரென்று ரிஷ்க்கு எக்கோ அடித்தது.
 
வெளியே எங்கும் போகவில்லை... வீட்டிலும் இல்லை...
so கிணறு தான்.
 
பங்களா பின்னால் இருக்கும் கிணறு.  
 
கிணற்றில் தான் போட்டுருப்பார்கள்.
 
ரிஷாந்த் வெறியில் கத்தினான்.
 
"ஜானிண்ணா, கிணத்துல தான் போட்டுருக்கானுங்க....", என்று சொல்லிட்டு, அடுத்த நொடி, புயலாய் பங்களா பின்பக்கம் ஓடினான்.
 
ஃபார்ம் ஹவுஸில் அவர்கள் நுழையும் போது, செக்யூரிட்டி அவன் உடையில் இருந்த அழுக்கை தட்டியபடி, பின்பக்கமாக இருந்து வந்தது, ஜானிக்கு ஞாபகத்துக்கு வந்தது.
 
கிரி செக்யூரிட்டியை பார்த்து, "அவனைப் பிடிரா", என்று கத்தினான்.
 
செக்யூரிட்டி ரிஷாந்தை நோக்கி பாய, ஜானி கப்பென்று செக்யூரிட்டியை பாய்ந்து பிடித்தான். கேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த சகாதேவன் திரும்பி பார்க்க, அவரும் யோசிக்காமல் ஓடி வந்தார்.
 
செக்யூரிட்டி ஜானியை உதறி தள்ளினான்.  ஜானி இரண்டு சுற்று சுற்றி பின்பக்கமாக போய் விழுந்தான். செக்யூரிட்டி திடகாத்திரன். 10 பேரை கூட சமாளிப்பான். அவனுடன் பைட்ல்லாம் பண்ண முடியாது என்று ஜானிக்கு தெரியும்.
 
செக்யூரிட்டி ஜானியை தாக்குவதற்காக வர... வெய்ட் என்று ஜானி கையை தூக்கி காண்பித்தான்.
 
செக்யூரிட்டி நின்றான்.
 
ஜானி:  you see, பைட்டிங்க்ல எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல... எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம்... என்று அடுத்த அடி வாங்குவதை தள்ளிப் போட்டான்.
 
இதற்கிடையே ஜானி கிரியை பார்க்க, அவன் முகத்தில் பதட்டம். முதல் முறையாக பதட்டம் தெரிந்தது. அவன் ரிஷாந்த் ஓடும் திசையை பார்த்துக் கொண்டிருந்தான். ஜானிக்கு புரிந்து போனது.
 
கிணறுதான்.
 
கிரி: Go catch him... என்று கையை காட்ட,
 
செக்யூரிட்டி ஜானியை விட்டுவிட்டு, ரிஷாந்த்தை பிடிப்பதற்காக ஓடினான்.
 
ஜானி ஓடி வந்த சகாதேவனை பார்த்து, " அண்ணே கிணத்துல தான் தூக்கி போட்டுருக்கானுங்க.. 100% confirm... வீட்டையும், அவுட் ஹவுஸ்ஐ யும் செக் பண்ணுன நாம கிணத்தை  கோட்டை விட்டுட்டோம்."
 
கிரி தாரிகாவை பார்த்து,
"உள்ள போய் என்னுடைய கன்னை எடுத்துட்டு வா... ஒருத்தனையும் விடக்கூடாது. சுட்டு தள்ளு."
 
தாரிகா ஆவேசமாக பங்களாவுக்குள் ஓடினாள்.
 
இதற்கிடையில் கேட்டருகே சென்றிருந்த போலீஸ்காரர்கள், மற்றும் சபாபதி, உள்ளே நடந்து கொண்டிருக்கும் கலவரத்தை திரும்பி பார்த்தார்கள். 
 
சபாபதி, என்னடா ரோதனையா போச்சு என்று சலித்துக் கொண்டார்.
 
சகாதேவன் அவர்களைப் பார்த்து.
 
"சார்... இவன் தான் சார் அக்யூஸ்ட்... ஓடி வாங்க...evidence கிடைச்சிரும்", என்று சத்தமிட,
 
எஸ் ஐ சபாபதி முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்.
 
'கொப்பன் மவனே மாட்டுனடா, போலீஸ்காரங்க கிட்டயே சட்டம் பேசுறியா!!'
 
மற்ற போலீஸ்காரர்களை பார்த்து, "எல்லாரும் வாங்கயா..", என்றபடி உள்ளே ஓடினார். எல்லோரும் அவர் பின்னால் மறுபடியும் பண்ணை வீட்டை நோக்கி ஓடினார்கள்.
 
சகாதேவன்: சார், அந்த லேடி உள்ள துப்பாக்கி எடுத்து வர போயிருக்கா... fire பண்ணாலும் பண்ணுவா... ஜாக்கிரதை... என்று மறுபடியும் கத்தினார்.
 
ஜானியும், சகாதேவனும் செக்யூரிட்டியை விரட்டிக்கொண்டு பங்களா பின்பக்கமாக ஓடினார்கள்.
 
பங்களா பின்பக்கம், காம்பவுண்ட் சுவர் ஓரமாக இருந்த கிணற்றை ரிஷாந்த் நெருங்கினான்.
 
பெரிய கிணறு தான்.
கிரில் கம்பிகள் போட்டு கிணற்றை மூடி வைத்திருந்தார்கள். பின்னால் இருட்டுக்குள் இருந்ததால் யாரும் இதை கவனித்திருக்க வாய்ப்பில்லை. ரிஷாந்த் மேலே வைக்கப்பட்டிருந்த கம்பியை நகர்த்தி கீழே தள்ளினான். டங் என்ற சத்தத்துடன் விழுந்தது.
 
உள்ளே எட்டிப் பார்த்தான். சைடில் படிக்கட்டுகள் தெரிந்தன. உள்ளே மையிருட்டு. கிணத்துக்குள்ளே இருந்த கற்களின் துளைகளில், ஆங்காங்கே செடி கொடிகள் வளர்ந்திருந்தன.
 
பேன்ஞ்..த் என்று கத்திக்கொண்டே ஓடி வந்த சூரஜ் ரிஷாந்த்தை நோக்கி பாய,  ரிஷாந்த் திரும்பி அவன் நெஞ்சில் மிதித்தான்.  டிஸ்டன்ஸ் குறைவாக இருந்ததால், போர்ஸ் அதிகம் கொடுக்க முடியவில்லை. நாலடி சரசரவென பின்னால் சென்ற சூரஜ், நெஞ்சில் தடவிக் கொண்டே, மறுபடியும் மெக்சிகோ தேசத்து காளை போல் ரிஷாந்த்தை நோக்கி பாய்ந்தான். ரெண்டு கைகளாலும் காட்டு தனமாக அவனை மாறி மாறி தாக்க, டப்பு டப்புன்னு ரிஷாந்த் கைகளால் தடுத்தான். கேப் கொடுக்காமல் சூரஜ் தாக்கினான். இரும்பால் அடித்தது போல் ரிஷாந்த்திற்கு கைகள் வலித்தது.
 
டக... டக... டக
 
ஜானியும் சகாதேவனும் ஓடி வரும், சத்தம் பின்னால் கேட்டது.
 
காலடி சத்தத்தை கேட்டு, சூரஜ் சின்னதாக ஒரு கேப் விட... ரிஷாந்த் கால் முட்டியை மடக்கி, உச்சபட்ச விசையுடன், அவன் அடிவயிற்றில் இறக்கினான். மறுபடியும் பேன்ஞ்..த் என்று சொல்லியபடியே பின்னால்  பறந்து போய், ஓடி வந்த ஜானி மற்றும் சகாதேவன் காலடியில் போய் பொத்தென்று விழுந்தான்.
 
சகாதேவன்: தம்பிகளா!!! இவனை நான் பார்த்துக்கிறேன். நீங்க கிணத்த கவனிங்க.
 
ஜானி கிணத்தை நோக்கி ஓடினான்.
 
சகாதேவன் கீழே கிடந்த சூரஜ்ஜை, "எழும்புடா", என்று சொல்ல, சூரஜ் அடி வயிற்றை தடவியபடி எழும்பினான்.
 
எழும்பிய வேகத்தில் அவன் முஷ்டி, சகாதேவன் கன்னத்தில் வெடிக்க, சகாதேவன் அந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை.
 
"யாரு கிட்டடா உன் வேலையை காட்டுற?"
 
சகாதேவன் மீசையை முறுக்கிக் கொண்டே சூரஜ்ஜை நோக்கி சென்றார்.
 
சண்டை தொடர்ந்தது.
 
கிணத்துக்குள்ள மொபைல் டார்ச்சை அடித்து பார்த்துக் கொண்டிருந்த ரிஷாந்த்தை,  ஜானி நெருங்கி, அவனும் உள்ளே எட்டிப் பார்த்தான்.
 
ரிஷாந்த்: நல்ல பெரிய ஆழமான கிணறு மாதிரி தெரியுதுண்ணா... பேசாம படிக்கட்டில் இறங்கி பார்த்துடலாம்.
 
ஜானியும் டார்ச்சை அடிக்க, தண்ணீர் கிடக்கும் சத்தமே கேட்கவில்லை.
 
ரிஷாந்த் கிணத்தின் மேலே ஏறி, படிக்கட்டில் இறங்கினான். ஜானியும் ஏறினான்.
 
சகாதேவன் சூரஜ்ஜை எட்டி மிதிக்க, பின்பக்கமாக சம்மர்சால்ட் அடித்து சூரஜ் விழுந்தான். உடனே எழும்பினான். பாய்ந்தான்.
 
டிஷ்யூம்... டிஸ்க்...தட்
 
கிரியின் ரூமுக்குள் சென்று டேபிள் டிராயரை திறந்து, அவனுடைய ஹேண்ட் கன்னை தாரிகா எடுத்தாள். அதை முத்தமிட்டாள். உலோகம் சில்லென்று இருந்தது.    ரூமை விட்டு வெளியே வந்தாள். தபதபவென படிக்கட்டில் வெறியாக இறங்கினாள்.
 
இன்னைக்கு மாட்டிக்கொண்டால்... அவ்வளவு பேரையும் சுட்டு பொசுக்கிட்டு, இங்கிருந்து தப்பிச்சு போயிட வேண்டியதுதான்.
 
முதலில் சுட வேண்டியது அந்த இருவரையும் தான்.
 
அவள் உதட்டோரம் ஒரு குரூர புன்னகை துளிர்த்தது.
 
தொடரும்


   
ReplyQuote
Page 3 / 4

You cannot copy content of this page