All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

காற்றில் நிறம் கருப...
 
Notifications
Clear all

காற்றில் நிறம் கருப்பு - (Story Thread)

Page 4 / 4
 

Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 2 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு 45
 
உண்மையில் பிரபாவதி சொன்னது கீழ்க்கண்ட  ஃபிளாஷ்பேக் தான்.
 
"முத்துப்பாண்டி கிட்ட இந்த நிலத்தையும், காவண வீட்டையும் வளைக்கிறது சம்பந்தமா நான் பேசிகிட்டு இருந்ததை எங்க அப்பா எதேச்சையா  கேட்டுட்டார். சதி திட்டமா போடுறீங்க, போலீசுக்கு போறேன்னு பயமுறுத்தினார்.  வேண்டாம்ன்னு எவ்வளவோ கெஞ்சி பார்த்தேன். கேட்கல, கோவத்துல முத்துப்பாண்டி ஒரு தட்டு தட்டினான். செத்துப் போயிட்டாரு, வேற வழியில்லாமல் முனி அடிச்ச மாதிரி தூக்கி போட வேண்டியதா போச்சு. வண்டியில எடுத்துட்டு போயி மேட்டு தெருவுல கொண்டு போடும்போது அதை சடைசாமி தூரத்தில் வச்சி அரைகுறையா பாத்துட்டான். அவன் சரியா பாக்கலாம்னாலும் என்னிக்கி இருந்தாலும் ஆபத்து தானே. அவனையும் முத்துப்பாண்டி தீத்து கட்டினான்.. 
 
இதெல்லாம் நான் வேணும்னு செய்யல, எதிர்பாராத விதமா நடந்து போச்சு... வேணும்னு அப்பாவை கொலை பண்றதுக்கு, எனக்கு என்ன பேயா புடிச்சிருக்கு? பாண்டி செஞ்ச அக்கிரமங்களுக்கு என்னை மிரட்டி ஒத்துழைக்க வச்சான். நானா எதுவுமே செய்யல... நான் செஞ்சு தப்புக்கு, மனசாட்சி தான் டெய்லி தண்டிச்சிட்டு இருக்கே, அதுக்கு மேல என்ன தண்டனை வேணும்? "
 
அவளின் கண்ணீர் சுரப்பிகள் சிக்னல் கிடைத்ததும் உடனே வேலை செய்ய ஆரம்பித்தன. கண்கள் கலங்கி வேதனையுடன் திருமுடியை பார்த்தாள்.
 
அவள் கண்ணீரிலும், சொல்லிலும், செயலிலும்... இருந்த 100% போலித்தனம் திருமுடிக்கு தெரிந்தது. இம்மியளவு கூட அவன் நம்பவில்லை.
 
அவளின் ஒப்புதல் வாக்குமூலம் போலி தான்  என்றாலும், கருப்பன் கொலையில் இந்தளவுக்கு கூட பங்கு இருக்கும் என்று தாமஸ் எதிர்பார்க்கவில்லை.  
 
பாவம்! அந்த மனுஷன் என்ன வேதனைல செத்துப் போனாரோ!
 
திருமுடி தலையை சொரிந்தான்.
 
M.V: கொலைக்கு உடந்தையாக இருந்தேன்னு தான் சொல்றாளே தவிர, கொலை செய்ததை ஒப்புக்கலியே. ஒருவேளை அது தான் உண்மையா?
 
அவளை ஏறிட்டுப் பார்த்தான்.
 
"நீ சொல்றது ஏத்துக்கிற மாதிரியே இல்லையே.. ஒன்னும் தெரியாத பாப்பா. அவர் மிரட்டினாராம். இவங்க ஒத்துழைச்சாங்களாம்... நீங்க பேசுனதை தாத்தா கேட்டாலும், கொலை பண்ற அளவுக்கு அது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லையே. இவ்வளவு தூரம் ரகசியமாக வந்து, அதுவும் நைட் டைம்ல நீயும் பாண்டியும் என்னத்துக்கு குடும்ப ரகசியம் பேசணும்?   காண்டம் பாக்கெட்டெல்லாம் பார்த்தேனே. தாயைப் போல புள்ள, நூலை போல சேலை... உன் மகளாவது பரவால்ல, பகல்ல வந்து அவ புருஷனோட தான் ஜல்சா பண்றா. நீ ராத்திரி வந்து மருமகன் கூடவே ஜல்சா பண்றியா? இந்த ஃபீல்டுல நான் எக்ஸ்பர்ட்மா.. என்கிட்டயே காது குத்துறியா?"
 
பிரபா முகம் பூராவும் முறைத்தாள்.
 
"அனாவசியமா பேசாத. தவறான முறையில் தொடர்பு வச்சிக்கிறதுக்கு நான் என்ன அவுசாரியா?.. ஏதோ என் நேரம், அவன் கொலை மிரட்டலுக்கு  அடி பணிஞ்சிட்டேன்..."
 
திருமுடி அவளை நன்றாக மேலிருந்து கீழ் வரை பார்த்தான். தொப்புளுக்கு கீழே லோ ஹிப்பில் சேலையை கட்டிருந்தாள். 
 
திருமுடி mind voice: பச்சை பாம்பு இவ்வளவு நாள் புல்லுக்குள்ளே பதுங்கில்ல கிடந்துருக்கு.
 
திருமுடி: 45 வயசு இருக்குமா உனக்கு? பாடி நல்ல டைட்டாதான் வச்சிருக்க .நம்ம கண்ணுல மாட்டாம போயிட்டியே!!!
 
"என்னல ஏதேதோ பேசுற... உனக்கு தேவை பணம் தானே?" என்று பிரபா எகிறினாள். நிமிர்ந்து நின்றவள், தளர்ந்தாள்.
 
"இல்ல, நான் என் முடிவை மாத்திக்கிட்டேன்.. பணம் வேண்டாம். எப்படியும் உன் கிட்ட இப்போதைக்கு காசு இல்லை. அதனால நீ தான் வேணும்.. " என்று அவள் தோளில் கை வைத்து கண்ணடித்தான்.
 
"என்னல பேசுற? மடமுட்டி பயல, இந்த வேலையெல்லாம் வச்சுக்காத" என்று அவன் கையை தட்டி விட்டாள்.
 
திருமுடி: சும்மா நடிக்காத... நானும் பல பேரை பார்த்தவன் தான். ராத்திரி இவ்வளவு தூரம் ஒருத்தன பாக்குறதுக்கு அதுவும் இந்த முள்ளு காட்டுக்கு வர்றன்னா, எதுக்கு வர்றன்னு எனக்கு நல்லாவே தெரியும். என்னையும் அதே மாதிரி கவனிச்சு விடு. பணம் கூட வேண்டாம். ஆதாரத்தை உன்கிட்ட கொடுத்துடறேன்.
 
பிரபா: சீ!!!! நான் ஒன்னும் அப்படிப்பட்ட ஆளு கிடையாது. என்று சீற்றமாக சொன்னாள்.
 
திருமுடி: உன் விருப்பம்... நீ ஒத்துக்கிட்டனா நமக்குள்ள மேட்டரை மேட்டராவே முடிச்சுக்கலாம்.. இல்ல, ஒரு வாரத்துக்குள் எனக்கு பணம் ரெடி பண்ணி கொடு. முடிவு உன் கைல. எனக்கு எதுனாலும் ஓகே தான்.
 
பிரபா ஒரு சில நொடிகள் யோசித்தாள். முகத்தில் சீற்றம் குறைந்தது. தளர்ந்து நின்றவள் மறுபடியும் நிமிர்ந்தாள்.
 
"எனக்கு டைம் வேணும். உன்னைல்லாம் நம்ப முடியாது. நீ சொல்றபடி நடந்தால் ஆதாரத்தை கொடுப்பேன்னு என்ன நிச்சயம்?"
 
வெளியே கேட்டுக் கொண்டிருந்த தாமஸ், அடிப்பாவி என்று கையால் வாயை மூடினான்.
 
சற்று நேரத்துக்கு முன்னால்தானே நான் அவுசாரியா என்று கேட்டாள்.. கருப்பு தாத்தா விஷயம் வெளியே வராமல் இருப்பதற்கு, என்ன சொன்னாலும் செய்வதற்கு தயாராக இருக்கிறான்னா இவள் தான்  அவரை கொலை செய்திருக்க வேண்டும்!
 
திருமுடி:
"அப்படி வா வழிக்கு, அப்போ உனக்கும் அவனுக்கும் matter தொடர்பு இருந்திருக்கு. கருப்பு தாத்தா பாத்துட்டாரு, அதனால அவரை போட்டீங்க.. ஒன்னும் ஒன்னும் ரெண்டு, ஓகே. இப்ப புரியுது. எது எப்படியோ கருப்பு தாத்தா சாவுக்கும்,  சடை சாமி சாவுக்கும் முத்துப்பாண்டியும் நீதான் காரணம்.. அது சரி முத்துப்பாண்டியை எதுக்காக போட்ட?
 
பிரபா: முத்துப்பாண்டியை அடிச்சது முனி தான்... என்றாள் கடுப்பாக.
 
திருமுடி: அவன் இடுப்பிலிருந்து முனி அருணாகயிறை கழட்டுனது யாரு? உண்மையை சொல்றியா? இல்ல அதுக்கு ஒரு பத்து லட்ச ரூபாய் எக்ஸ்ட்ரா கேட்கவா?
 
பிரபா அவனை அதிர்ச்சியாக பார்த்தாள். இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்? 
 
திருமுடி எப்படியோ விஷயத்தை வெளியே சொல்ல மாட்டான். ஒன்னு பணம், இல்லன்னா  மேட்டருக்கு தான் ஆசைப்படுகிறான் என்று 50 சதவீதம் அவளுக்கு நம்பிக்கை வந்திருந்தது.
 
திருமுடி: எனக்கு எப்படி தெரியும்னு பாக்குறியா? அதெல்லாம் அப்புறம் சொல்றேன், விஷயத்துக்கு வா.
 
பிரபா: எப்படியோ தாத்தாவும் இல்லை. இவனும் ஓவரா பேசிகிட்டு இருந்தான். இந்த நிலத்துல பாதி பங்கு வேற கேட்டுட்டு இருந்தான். என் பொண்ண கட்டி வச்சு கைக்குள் வச்சுக்கலாம்னு பார்த்தேன். அவன் கேட்கவே இல்லை. பாண்டி விஷயத்தை முனி பார்த்துகட்டும்ன்னு ஒரு நாள் குடிச்சிட்டு இங்கே படுத்திருக்கும் போது, அவன் அருணாகயிறை மட்டும் கழட்டிட்டேன். மத்தபடி அவனை நான் எதுவும் செய்யல. அவனை அடிச்சது சத்தியமா முனி தான்.
 
கேட்டுக் கொண்டிருந்த தாமசுக்கும் திருமுடிக்கும் திக் என்று இருந்தது. 
 
பயங்கரமான கைகாரியா இருக்கிறாளே!
 
திருமுடி: எப்படியோ அவன் சாவுக்கு நீ தான் காரணம். எம்மா தாயே!!! எனக்கு சீக்கிரம் எப்படியாவது செட்டில் பண்ணு. உன்னைல்லாம் நம்பிட்டு ஊருக்குள்ள நடமாட முடியாது. 
 
பிரபா: உன் பேச்சு வார்த்தை எல்லாம் முடிஞ்சுதா? அந்த மெமரி கார்டு குடு. என் போன்ல போட்டு பார்க்கிறேன். 10 லட்ச ரூபாய்க்கு அந்த வீடியோ ஒர்த்தான்னு தெரிஞ்சுக்கணும்.
 
திருமுடி ஏதேதோ பேசி சமாளிக்க பார்க்க, மெமரி கார்டில் பிரபா உறுதியாக நின்றாள். வேறு வழியில்லாமல் மெமரி கார்டை அவளிடம் கொடுத்தான்.
 
"சரி நீ போட்டு பாரு. ஒர்த்தா இல்லையான்னு தெரிஞ்சுரும். நான் கிளம்புறேன் எனக்கு லேட் ஆயிருச்சு.. வரட்டா", என்று திருமுடி வெளியேற பார்க்க, 
 
பிரபா நகர்ந்து, கதவை மறித்தபடி நின்று மூடினாள்.
 
"இருல... ஆனது ஆச்சு.. ஒரு அஞ்சு நிமிஷம் பொறு.."
 
மெமரி கார்டை போனில் போட்டு, கேலரிக்கு சென்று வீடியோஸ் எடுத்து பார்த்தாள். 
 
திருமுடி பதட்டத்தில் நெளிய ஆரம்பித்தான்.
 
இருந்தது ஒரு சில வீடியோக்கள் தான். அனைத்தும் தர லோக்கலான  குத்து பாடல்கள்.
 
பிரபா கொலை வெறியோடு திருமுடியை பார்த்தாள்: லேய்!!! என்னல இது? விளையாட்டா காமிக்கிற... வீடியோ எங்கல?
 
திருமுடி ஹிஹி என்று ஜனகராஜ் மாதிரி சிரித்தான்.
 
"அதில் பாரு, ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு... என்கிட்ட வீடியோவும் இல்ல, ஆடியோவும் இல்லை. விஷயம் என்னன்னு தெரிஞ்சுக்கறதுக்காக ஒரு பிட்ட போட்டோம். நீயே வந்து சிக்கிக்கிட்டு, ஒப்புதல் வாக்குமூலம் மாதிரி எல்லாத்தையும் சொல்லிட்டே. நீ சொன்னதை இந்த போன்லயும், அங்க இருக்குற வீடியோ கேமராவிலயும் ரெக்கார்ட் பண்ணியாச்சு. இதுதான் இனிமே ஆதாரம்.."
 
ஆப்பை எடுத்து தானே சொருகிக் கொண்ட விஷயம் பிரபாவுக்கு உரைத்தது.... முகம் கோக்குமாக்காக சிவக்க, அவளின் கோப மூச்சுகள் மார்பின் விம்மல்களில் தெரிந்தது. இவர்களை ஏதாவது செய்யணுமே என வெறியில், சுத்திலும் அரக்க பறக்க பார்த்தாள்.
 
சொருகி வைத்திருந்த வீடியோ கேமராவை எடுப்பதற்காக ஓட... அதற்குள் தாமஸ் வெளியில் இருந்து கேமராவை உருவினான்.
 
திருமுடி: கொஞ்சம் பொறுமையா இரு....
என்று அவளை தடுக்க பார்க்க,
 
மேற்பக்கமாக பனந்தடி ஒன்றில் சொருகி வைத்திருந்த இரும்பு கம்பியை சரக்கென உருவினாள். கண்ணிமைக்கும் நேரத்தில் திருமுடியின் மண்டையில் அடிக்க, பயந்து போன திருமுடி சைடு வாங்கினான். அடி அவன் தோள்பட்டையில் விழ, ஐயோ என்று கத்தியபடி சைடில் சரிந்தான். 
 
கீழே விழுந்தவனை ஒரு காலால் அவன் கழுத்தில்  அழுத்தி பிடித்தபடி, அவன் கையில் இருந்த மொபைலை பறித்தாள். மெமரி கார்டை உருவினாள். போனை கீழே போட்டு சுக்குநூறாக உடைத்தாள். 
 
"ரெக்கார்ட்டால பண்றிங்க... ரெக்கார்டு, மவனே எவனும் உயிரோட போக மாட்டீங்க..."
 
கர்லா கட்டை போலிருந்தது அவள் கால்கள்.  திருமுடி அவள் காலை பிடித்து தள்ள முயற்சித்தபடி, மூச்சுக்காக திணறினான்.
 
கார்டை இரண்டாக நசுக்கி முந்தானையில் முடிந்து கொண்டாள். தலை முடியை அள்ளி கொண்டை போட்டு கொண்டாள். கழுத்தை அழுத்தியிருந்த கால்களை பிரபா எடுத்துக் கொள்ள, திருமுடி கக் கக் என்று எச்சில் உமிழ்ந்தபடி மூச்சுக்காக பரிதவித்தான்.
 
பிரபா சிரித்தாள், இகழ்ச்சியாக சிரித்தாள்.
 
திருமுடி வலி தாங்க முடியாமல், மூச்சிரைத்துக் கொண்டு பிரபாவை பார்த்தபடி, தரையில் கிடந்தான். 
 
"யோவ் வாத்தியாரே.. எங்க போயிட்ட..." கத்த முடியாமல் கத்த.... சத்தம் வராமல் செறுமாறினான்.
 
பிரபா: அவனையும் வர சொல்லு, இங்கேயே வெட்டி பொதைச்சிடறேன். இப்ப கேட்டுக்குங்கல.. என் அப்பனையும் நான் தான் கொன்னேன். சடசாமியையும் நான் தான் கொன்னேன்ல....
உச்சபட்ச வெறியில் கொக்கரித்தாள்.
 
மறுபடியும் திருமுடியை அடித்து சாவடிப்பதற்காக கம்பியை தூக்கினாள்.  திருமுடி அலறியபடி, கதவை நோக்கி பரபரவென தவழ்ந்து சென்று, கதவை பிடித்து இழுத்தான். தகர கதவு கையோடு வந்தது... வெளியே பாய்ந்தான்.
 
"அய்யய்யோ!!! வாத்தியாரே காப்பாத்துங்க..."
 
தாமசை காணவில்லை.
 
ஏய் என்று வெறி பிடித்தவள் மாதிரி கத்தியபடி, அங்கங்கள் அதிர, வெளியே ஓடி வந்த பிரபா, திருமுடியை நெருங்கி கம்பியை உயர்த்தினாள்.
 
தலையை இரண்டு கைகளால் மறைத்தபடி அய்யய்யோ என்று திருமுடி கத்தினான்.
 
கண்ணிமைகள் கைநொடி ஆகி, பின்னர் நொடியாக மாறி வினாடியானது.
 
தலையில் அடி விழவில்லை.
 
உயர்த்திய கம்பியை திருமுடி மேல் இறக்க முடியாமல்  பிரபா  ஸ்தம்பித்து நிற்க, பின்பக்கமாக கம்பியை பிடித்தபடி தாமஸ் நின்றிருந்தான்.
 
கேமராவை பத்திரமான இடத்தில் வைத்து விட்டு தாமஸ் வருவதற்குள் மேற்படி சம்பவங்கள் நடந்து விட்டன.
 
பிரபா பின்பக்கமாக திரும்ப, தாமஸ் ஒட்டுமொத்த பலத்தையும் பிரயோகித்து, கம்பியை உருவி எறிந்தான். இருட்டுக்குள் போய் தடங் என்று விழுந்தது.
 
ஹே ஹே என்று வேட்டை நாய் போல் வாயால் பிரபா மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். இவளுக்கு என்னமோ பேய் புடிச்சிருச்சு போலன்னு நினைக்குமளவுக்கு இருந்தது அவளுடைய நடவடிக்கைகள். ஆக்ரோஷமாக உறுமியபடி, இரண்டு கைகளையும் நீட்டி தாமஸ் மேல் பாய்ந்தாள்.
 
தாமஸ் அவள் கைகளை தட்டி விட்டு, பின்னால் நகர்ந்தான். மறுபடியும் அவன் கழுத்தை பிடிப்பதற்காக அவள் விரட்டிக்கொண்டு பின்னாலே வர, அவள்  நெஞ்சில் எட்டி மிதித்தான். கீழே விழுந்தவள் அதே வேகத்தில் எழும்பினாள். சேலையை முட்டி வரைக்கும் உயர்த்தி, அவனை எட்டி மிதிக்க, தாமஸ் சைடில் விலகிக் கொண்டான்.
 
அவன் பக்கமாக திரும்பி, மறுபடியும் அவள் மிதிக்க முயற்சிக்கும் முன், அவள் கழுத்தைப் பிடித்தான். மற்றொரு கையால் சப்பு சப்பு என்று செவிளில் அறை விட.. அறை சத்தம் அந்த முள்ளு காட்டில் சுழன்று சுழன்று கேட்டது. பலமுறை அறை வாங்கியதும் பிரபாவுக்கு பொரிகலங்க, தலையைப் பிடித்துக் கொண்டு பொத்தென்று கீழே விழுந்து, மயங்கினாள்.
 
தாமஸ் கைகளை உதறிக் கொண்டான். 
 
திருமுடி தோளை பிடித்துக் கொண்டே எழும்பி, "சண்டாளி, கொஞ்சம் சுதாரிக்கிறதுக்குள்ள செப்ப  கழட்டி விட்டுட்டாளே..", என்றான்.
 
தாமஸ்:  ஸ்கிரிப்ட்டை மாத்தி பேசினதும், கோட்டை விட்டுருவியோனு நினைச்சேன். அதுக்கு மேலேயே பெர்பார்ம் பண்ணிட்டே..brilliant... நீ எல்லாம் போலீஸ்ல இருக்க வேண்டியவன். you have done a great job.
 
திருமுடி: இவ சொன்னது ஃபுல்லா எனக்கு நம்பிக்கை இல்லை. போலீஸிடம் பிடித்து கொடுத்து, அவங்க பாணியில விசாரிச்சா தான் எல்லா உண்மையும் வெளியவரும்.
 
கீழே விழுந்து கிடந்தவளை பார்த்தபடியே பேசினார்கள். அவளிடமிருந்து எந்த அனக்கமும் இல்லை. மாராப்பு அவளை கைவிட்டுருக்க, முழுவதுமாக மயங்கி கிடந்தாள்.
 
திருமுடி ஒரு கத்திரி சிகரெட் பற்றவைத்து புகை விட்டான்.
 
"வாத்தியாரே, அதான் எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடுச்சே... அவங்க பிரச்சனை எல்லாம் தீத்துட்டீங்க. போதாக்குறைக்கு சம்பந்தமே இல்லாத அவங்க தோழியுடைய பிரச்சினையும் சரி பண்ணிட்டீங்க.  இதுக்கு மேல என்ன வேணும்?  எப்ப  உங்க காதலை சொல்ல போறீங்க?"
 
நரம்புகள் இறுகி, புஜங்கள் புடைத்து, உக்கிரமாக ஆக்சன் மூடிலிருந்த தாமஸ், அகல் பெயரை கேட்டதும்  வெயிலில் வைத்த ஐஸ்கிரீமாய் இளகினான்.
 
தாமஸ் முகத்தில் கோபத்தில் சிவந்த பகுதிகள், இயல்பான நிறத்துக்கு மாறின.  
 
திருமுடி: இப்பவாவது உங்க உண்மையான பேரை சொல்லுங்களேன்?
 
தாமஸ் ஆழமாக மூச்சை உள்ளுக்கு இழுத்து நுரையீரலை நிரப்பிக் கொண்டான். பின்னர் மேலே வானத்தை பார்த்தான். தலையை குனிந்து பூமியை பார்த்தான். பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு திருமுடியை நிமிர்ந்து பார்க்க,
 
"அய்யய்யோ ஆரம்பிச்சிட்டாப்புல... முடியல...  ஆள விடு சாமி",  என்று திருமுடி கையெடுத்து கும்பிட்டான்.
 
தாமஸ் அவனை ஆழமாக பார்த்து: என் பேரு குமார்,
ரிஷிகுமார்... என்றான்.
 
முதல் முறையாக ஒரிஜினல் பேரை கேட்டதும் திருமுடி ஆச்சரியமாகி,  நெற்றியை சுருக்கி, "எந்த குமார், சரியா லேவை தெரியலையே?"
 
ரிஷி: தூத்துக்குடி கல்யாணி இருக்காங்களே, அவங்க மகன்.
 
அடையாளம் தெரிந்ததும், திருமுடி வாயெல்லாம் பல்லாக முகம் மலர்ந்தான்.
"ஏலே குமாரு... மச்சான் நீயா? பார்த்து எவ்வளவு வருஷம் ஆச்சு..." என்று பாய்ந்து கட்டிக் தழுவிக் கொண்டான்.
 
இருவரும் அணைப்பில் பழைய நட்பை புதுப்பித்து கொண்டார்கள். மாத்தி மாத்தி சிரித்தார்கள்.
 
திருமுடி ஒரு நொடி அலர்டாகி,
 
"ஒரு நிமிஷம் இரு.. இவ மறுபடியும் எழும்பி கம்பியால் மண்டையை ஒடச்சிட போறா..." என்று அணைப்பில் இருந்து விடுபட்டு, திரும்பி நின்று, கீழே கிடந்த பிரபாவை பார்த்தபடி பேசினான். வாங்குன அறை காரணமாக இன்னும் மயக்கத்திலே கிடந்தாள்.
 
திருமுடி: மச்சான்,  ஆளு சும்மா ஹீரோ கணக்காயிட்டியளே... நாம பார்த்து ஒரு பத்து வருஷம் இருக்கும்ல...
 
ரிஷி: அதுக்கு மேலேயே இருக்கும்..
 
திருமுடி: என்கிட்டயாவது ஒரு வார்த்தை உண்மையை சொல்லி இருக்கலாமே.... ஆமா எதுக்கு இவ்வளவு கஷ்டம்? நீ அகல்யாவை கட்டிக்கிற முறை தானே. சின்ன வயசுலயே உங்களுக்குள்ள நல்ல பழக்கம் வேற இருந்துச்சு. அப்புறம் என்ன?
 
ரிஷி: சின்ன வயசுல அப்பாவுக்கு மாத்தலாகி தூத்துக்குடி போனதுக்கப்புறம், எனக்கும் அவளுக்கும் தொடர்பு இல்லாம போச்சு. காதல்னா என்னனு தெரியாத வயசுல ஏற்பட்ட காதல். நாளாவட்டத்தில் வெவ்வேறு வேலைகள், நண்பர்கள், சூழ்நிலைகள்னு வந்தப்ப, நானும் அவ என்னை மறந்துருப்பான்னு நெனச்சேன். ஆனா கொஞ்ச நாள் முன்னால தான், அவ இன்னும் என்னை மறக்கல. கல்யாணத்தையே அவ வெறுக்கிறதுக்கு காரணம் நான் தான். அவ குடும்ப சூழ்நிலைக்காக கல்யாணம் வேணாம்னு சொல்றாங்கற விஷயம்ல்லாம் தெரிஞ்சுகிட்டேன். மனசு பதப்பதச்சு போச்சு. 
 
என்னை எந்தளவுக்கு விரும்பிருந்தா, கல்யாணமே வேண்டாமுன்னு வெறுத்திருப்பா. அதனால எங்கம்மா மூலமா, உறவுக்காரங்க மூலமா சம்பந்தம் பேசுறதுக்கு ஆள் அனுப்பி வச்சேன். முடியாதுன்னு ஒரே வார்த்தையில் நிர்தாட்சண்யமா மறுத்துட்டா. நேர்ல போய் நின்னாலும் பிரயோஜனம் இருக்காதுன்னு தெரிஞ்சு போச்சு. என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்தப்ப  தான், கருப்பு தாத்தா காவண வீட்டை வாடகைக்கு விடுறது சம்பந்தமா ஆள் தேடிட்டு இருக்காருன்னு கேள்விப்பட்டோம்.
 
எனக்கு ஒரு ஐடியா. ரிஷிகுமாரா போனா தானே பிரச்சனை... வேற யாரோ மாதிரி, வீட்டுக்கு வாடகைக்கு வந்து, முயற்சி பண்ணுனா என்னன்னு யோசிச்சேன். என்னை இவங்க யாருமே பார்த்ததில்லைங்கறது  ரொம்ப வசதியா போச்சு. இங்க வந்தப்புறம் தான், நான் நினைச்சது அவ்வளவு ஈசி இல்லைன்னு புரிஞ்சுது. ஏகப்பட்ட பிரச்சனைகள், ஒவ்வொன்னா சரி பண்ண வேண்டிய சூழ்நிலை.... 
 
ரெண்டு விஷயத்த நெனச்சிட்டு தான் வந்தேன். எந்த காலத்திலும் நான் அவளை மறக்கலன்னு அவளுக்கு நிரூபிக்கணும். மறுபடியும் அவ மனசுல இடம் பிடிக்கனும். அதுதான் என்னோட ஆசை, அவளுக்கும் சந்தோசம். அதற்காகத்தான் இவ்வளவு கஷ்டங்கள்!!!"
 
இப்படில்லாம் காதலிப்பவர்கள் கூட இருக்கிறார்களா??? என்று திருமுடி அவனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தான். 
 
"நீ வேலை பாக்குற ஆபீஸ்ல ஏதோ ஒரு பொண்ண விரும்புறதாகவும், கல்யாணம் ஆயிருச்சுன்னும் கேள்விப்பட்டனே..."
 
ரிஷி: அது சும்மா நானா கிளப்பிவிட்ட வதந்தி... இங்கே வர முடிவெடுத்ததும், என் மேல சந்தேகம் வர கூடாது என்பதற்காக, சும்மா அப்படி ஒரு கதையை விடச் சொன்னேன்.
 
திருமுடி: எப்பா சாமி!!! தலையே சுத்துது. எவ்வளவு பொய்யி... எவ்வளவு தகிடு தத்தங்கள். ஒரு பொண்ணுக்காக ஒருத்தன் இவ்வளவு வேலை செய்வானா? அதுவும் இந்த காலத்துல? கொஞ்சம் முயற்சி பண்ணிருந்தா கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருக்கலாமே, இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டுருக்கணுமா? தலைய சுத்தி மூக்க தொடுற மாதிரி இருக்கு.
 
ரிஷி: உனக்கு சொன்னா புரியாது திருமுடி... அகல் பத்தி உனக்கு தெரியாது...
 
ஜிலுஜிலு ஜிகினாக்கள் தூவியது போல அவன் முகம் பிரகாசமானது. சூழ்நிலையை காதல் தழுவியது. இறுக்கம் குறைந்தது.
 
"அகல் ஒரு முடிவு எடுத்துட்டா அதை மாத்திக்கிற ரகம் கிடையாது. முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்ணி பாத்துருவோமேன்னு தான் வந்தேன்.  எங்க காதல் தோத்துப் போச்சு. நான் காதலனா தோத்து போயிட்டேன். அவ மனச நோகடிச்சிருக்கேன். அதனால அவ மனசுல மறுபடியும் இடம் பிடிக்கணும்னு எனக்கு ஒரு பிரதிக்கினை. அதனால் தான் இவ்வளவு கஷ்டப்பட்டேன். நான் சொல்றது கொஞ்சம் cringeஜா தான் இருக்கும். இருந்தாலும் சொல்றேன். ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கையில ஒவ்வொரு விஷயம் முக்கியம்.  எனக்கு அவ முக்கியம்.
அவளுக்காக, அவ காதலுக்காக, என்ன வேணா செய்யலாம், உயிரைக்கூட கொடுக்கலாம்...."
 
திருமுடி நெஞ்சம் நெகிழ்ந்து, கண்கள் கலங்கியது. கடைசியாக ஒரு காதல் சமாச்சாரத்தை பார்த்து, கண்கள் கலங்கியது டைட்டானிக் படம் பார்க்கும்போதுதான், அதன் பிறகு அவனுக்கு இப்போது தான் அந்த சம்பவம் நடந்திருக்கிறது.
 
அவன் கையை திருமுடி வாஞ்சையுடன் பிடித்துக் கொண்டான்.
 
"நீ அவளுக்காக செஞ்ச விஷயம்ல்லாம் தெரிஞ்சா,  காதலனாவே நிச்சயமாக உன்னை ஏத்துக்குவா. எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ  அவகிட்ட நாளைக்கு பேசு..."
 
"அதான் எப்படி பேசுறதுன்னு தெரியல. யோசிச்சிட்டு இருக்கேன்..." என்றான் வெட்கப்பட்டுக் கொண்டே....
 
திருமுடி: அடங்கப்பா.. சாமி முடியலடா. எல்லாத்துக்கும் ஏதோ ஒரு ஐடியா பண்ணி, இருக்கிறவன் டவுசர்ல்லாம் உருவின தாமஸ் வாத்தியாருக்கா எப்படி சொல்றதுன்னு தெரியல? தாமஸ்ன்னு சொன்னதும் தான் ஞாபகம் வருது. தயவு செய்து அந்த ஒரிஜினல் தாமசை ரிலீஸ் பண்ணி விடுங்க. பாவம், அவனும் எவ்ளோ நாள் தான் ஹவுஸ் அரெஸ்ட்டில் இருப்பான். அதுக்காகவாவது நாளைக்கே உன் லவ்வ சொல்லி கதையை முடிச்சு வையு.
 
ரிஷி: சரி ஓகே. நீ இவளை பத்திரமா பாத்துக்க.  கட்டி போடுறதுக்கு வீடு வரைக்கும் போய் கயிறு  எடுத்துட்டு வரேன்... அஞ்சு கிராமம் போலீஸ்ல இன்பார்ம் பண்ணி, அவங்க வர்றதுக்கு எப்படியும் காலையில் ஆயிடும். ஜாக்கிரதை, ஆளு ரொம்ப சேட்டை புடிச்சவ.
 
திருமுடி: நான் பாத்துக்குறேன். நீ பத்திரமா போயிட்டு வா.
 
பைக்கில் வந்தால், சத்தம் ஊரெல்லாம் கேட்கும் என்பதற்காக சைக்கிளில் வந்திருந்தார்கள்.
 
ரிஷி தென்னந்தோப்பில் நிறுத்தி வைத்திருந்த சைக்கிளை நோக்கி சென்றான்.
 
அதே நேரம்,
 
முனி கோயிலில் இருந்து ஊருக்குள் செல்லும் கடற்கரை சாலையில் பிரம்மாண்ட அரை பனைமர உயர கருங்காற்று, சுழண்டபடி துள்ளித்துள்ளி வந்தது. சுழற் காற்றுக்குள் கிரைண்டர் ஓடவது போல் கடா முடா வென்று விசித்திரமான சத்தங்கள். பூனையின் கண்களைப் போல் காற்றுக்குள் மூர்க்கத்தனமாய் தீக்கங்கு கண்கள் மின்னியது.
 
ஆளரவமற்ற கடற்கரை சாலையை கடந்து, ஊருக்குள் செல்லும் சாலையில் நுழைந்தது.
 
நாளைக்கு அகலிடம் எப்படில்லாம் ப்ரொபோஸ் செய்யலாம் என்று மனதுக்குள் கால்குலஸ் போட்டபடி, உற்சாகமாக விசிலடித்துக் கொண்டு சைக்கிளில் ரிஷி சென்றான். 
 
ஆகாயம் சரசரவென தூறல் அம்புகளை அனுப்ப, அசந்தர்ப்பமாக தெருவோர கரு நாய் ஊளையிட்டது.
 
அகல் ரெஸ்பான்ஸ் எப்படில்லாம் இருக்கும் என்று நினைத்து பார்த்துக் கொண்டே சென்றதால், 
 
முனி பாய்ச்சல் சமாச்சாரத்தையே அவன் முற்றிலுமாக மறந்து போயிருந்தான்.
 
தொடரும்
 
for your valuable comments 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 2 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு 46
 
ரிஷி சொன்னதை யோசித்தபடி திருமுடி சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான். நல்ல விஷயத்துக்கு உதவி செய்த திருப்தி அவன் புகையில் கலந்திருந்தது. மயங்கி கிடந்த பிரபா லேசாக முனகி,  அசைந்தாள். கடுப்பான திருமுடி, கோபத்தில் பற்களை நற நறவென கடித்தபடி சுற்றிலும் பார்த்தான்.
 
"பேசாம மயங்கி கிடந்தா என்ன?.... நாரமுண்டை!"
 
தூரத்தில் கிடந்த ஒரு சிறிய மரக்கட்டையை எடுத்து வந்து படாரென்று அவள் மண்டையில் அடிக்க, கடைசி முனகலை காற்றில் விட்டு விட்டு, மறுபடியும் மயங்கினாள்.
 
"இவளல்லாம் முனி அடிக்காம போயிருச்சே!!!' என்று சொல்லியபடி கட்டையை தூர எறிந்தான்.
 
உடனே பதட்டமாக தலையில் அடித்துக் கொண்டான்.
 
"அய்யோ மச்சான்!"
 
பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து உடனே ரிஷிக்கு கால் செய்ய, ரிங் போய்க்கொண்டே இருந்தது.
 
முள்ளு செடிகள், மரங்கள், புதர்கள், வெவ்வேறு சைஸ் பூதங்களாக இருட்டில் தெரிந்தது. காற்று சிலீரென்று அடித்துக் கொண்டிருந்தது. சைக்கிளில் உற்சாகமாக சென்ற ரிஷிக்கு, போன் ரிங் அடிப்பது ரெஜிஸ்டர் ஆகவில்லை. அகல்யாவின் முகமும், அவளின் வெவ்வேறு விதமான மறுமொழிகளும் மன திரையில் ஓடிக்கொண்டிருக்க, அதில் லயித்து போயிருந்தான். சைக்கிள் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு ரோட்டில் சென்று கொண்டிருந்தது.
 
முள்ளு காட்டை தாண்டி மேட்டு தெருவுக்கு போகும் பாதையில் சைக்கிள் சென்று கொண்டிருக்க, ரோடு துடைத்து வைத்தது போல் காலியாக இருந்தது.
 
மேட்டு தெரு மரங்களின் இருள் போர்வைக்குள் விசித்திர இயக்கங்கள், இனம் புரியாத சத்தங்கள்.  காத்துகருப்பு மேட்டு தெருவில் நுழைந்து இருந்தது. 
 
தெருவின் மறுமுனையில் டகடகவென சைக்கிள் சத்தம்.
 
ரிஷி வந்து கொண்டிருந்தான். மேட்டு தெருவுக்குள் நுழைந்ததும் திடீர் வெப்பத்தை உணர்ந்தான். குளிர் காற்றில் நீச்சலடித்து வந்தவனுக்கு, மேட்டு தெரு பாயிலருக்குள் இருந்தது போலிருக்க, அப்போதுதான் போனடிக்கும் சத்தம் அவன் காதுலயே விழுந்தது.
 
வீறிட்டுக் கொண்டிருக்கும் போனை சமாதானப்படுத்தி, காதுக்கு ஒற்றினான். மறுமுனையில், ஹலோ கூட சொல்லாமல் திருமுடியின் கதறல்.
 
"மச்சான்.... முனி ஓட்ட நேரம் மறந்துட்டியே.... ஜாக்கிரதை அந்த பாதையில் போகாதததததத..."
 
ஆமால, திடுக்கென்று இருந்தது. அவனுக்கு பதில் சொல்லாமல், எங்கே இருக்கிறோம் என்று ரிஷி பார்க்க, மேட்டு தெருவில் நுழைந்து வாத்தியார் வீட்டை தாண்டி இருந்தான்.
 
அவனுக்கு நேர் எதிரே, 30 அடி தூரத்தில்,  அரை இருட்டுக்குள் மங்கலாக, கருப்பு சுழற்காற்று  நெட்டரகுத்தலாய் தலை முடியை விரித்து போட்டு நிற்கும் சூனியக்காரி கிழவி போல் தெரிந்தது. ரிஷி கண்களில் சுருக்கி கூர்ந்து பார்க்க, இருட்டுக்குள் காற்று வடிவாய் ஒரு பிரம்மாண்ட உடலின் அவுட்லைன் தெரிந்தது. அதிலும் குறிப்பாக தீக்கங்கு போன்ற கண்களும், மூர்க்கத்தனமான அரிவாள் மீசையும் தெளிவாக தெரிய, ரிஷிக்கு புரிந்து போனது.
 
மேற்படியான்????
 
அதனிடமிருந்து வெளிபட்ட விசித்திர சத்தத்தை விவரிக்கவே முடியவில்லை. கிரைண்டர் ஓடும் சத்தமா? மரம் அறுக்கும் ஃபேக்டரியில் மிஷின்கள் ஓடும் சத்தமா? அல்லது கடலுக்கு மீன் பிடிக்க கட்டுமரத்தில் போகும்போது எதிர்காற்றில் விசித்திரமான சத்தங்கள் கேட்கும். அந்த மாதிரி சத்தமா?
 
முனியோட பேரு என்னமோ வருமே, சட்டென்று அவனுக்கு ஸ்ட்ரைக் ஆகவில்லை. 
 
Whats that???.....shit,shit,shit, ahhh got it... 
சண்டி முனி!
 
காத்துகருப்பு காவண வீட்டின் முன்னால் நெருங்கியிருக்க, சைக்கிளில் வந்தவன் சடன் பிரேக்  பிடித்தான். நியூட்டனின் நிலைம விதி விளையாட, சைக்கிளும் ஸ்கிட்டானது. ரிஷி  சைக்கிளில் இருந்து துள்ளி முன்னால் போய் விழுந்து உருண்டான். 
 
சுழன்று கொண்டிருந்த காத்து கருப்புக்கும் அவனுக்கும் ஒரு சில அடிகள் தூரமே இடைவெளி. 
 
எந்த நேரமும் அவனை உறிஞ்சி, அடிச்சு தூக்கி எறிந்து விடும். யோசிக்காமல் துள்ளி எழும்பி, சைடில் புதர்களை நோக்கி ஃபுல் லென்த் டைவடித்தான். காவண வீட்டுக்கு நேர் எதிரில் இருந்த மரங்களுக்கு இடையே போய் விழுந்து, முனியின் நேர் பார்வையில் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் விலகினான்.
 
அவனுக்கு பின்னால் ஸ்கிட்டாகி வந்த சைக்கிள், நேராக சுழற் காற்றுக்குள் சென்று மாட்டிக் கொண்டது. 
 
மறு நொடி,
 
தட தட தட...
 
ரோடு ரோலரில் அடிபட்டது போல் சைக்கிள் நசுங்கி, அவன் டைவடித்த திசையை நோக்கியே தூக்கி வீசப்பட்டது.
 
அவனை நோக்கி சைக்கிள் வருவதை பார்த்ததும், மேலும் வேகமாக உருண்டு சைடில் நகர்ந்தான். நசுங்கிய சைக்கிள் அவனருகே வந்து விழுந்து மூச்சை நிறுத்தியது.
 
காவண வீட்டின் முன்னால் நின்றிருந்த காத்து கருப்பின் கிரைண்டர் சத்தம் குறைய, சுழற்சியின் வேகமும் குறைந்தது. மரங்களுக்கு இடையே கிடந்த ரிஷி என்ன நடக்கிறது என்று திகிலுடன் கவனித்து கொண்டிருந்தான். காத்து கருப்பு சுற்றிலும் பார்வையால் மெழுகிக் கொண்டிருக்கிறது என்று அவனுக்கு புரிந்தது. கிரைண்டர் சத்தம் மறுபடியும் ஆரம்பிக்க, காற்றின் சுழற்சி காவண வீட்டை நோக்கி திரும்பியது.
 
திடுங்..திடுங்...
 
காத்து காவண வீட்டின் கேட் வாசலில் காலை வைத்ததும்,  எங்கிருந்தோ பயங்கர மூர்க்கத்தனமான உறுமல். 
 
காத்து முன்னேறாமல் அப்படியே நின்றது.
 
மரங்களுக்கு இடையே படுத்தபடி பார்த்துக் கொண்டிருந்த ரிஷிக்கு தூக்கி வாரி போட்டது. எங்கிருந்து சத்தம் வந்தது என்று அவனால் யூகிக்கவே முடியவில்லை.
 
காத்து கருப்பு வாசலிலேயே நிக்க, காவண வீட்டின் கதவு படார் என்று திறந்தது. வீட்டுக்குள் இருந்து கண்ணை கூசம் வெளிச்சம், அணைக்கட்டில் இருந்து திறக்கப்பட்ட வெள்ளம் போல், வெளியே பாய்ந்தது.
 
காவண வீட்டு கேட்டை தாண்டி, ரோட்டை தாண்டி, காத்தை தாண்டி, எதிர்ப்புறமாக மரங்களுக்கு இடையே கிடந்த ரிஷியின் முகம் வரைக்கும் வெளிச்சத்தின் பிரதிபலிப்பு.
 
ஒளி ஊடுருவதால் காத்து கருப்புக்குள் இருந்த உடல், அவுட்லைனையும் மீறி, தெளிவாகத் தெரிந்தது. இரண்டு ஆள் உயரம். சடைமுடி மாதிரி ஏதோ ஒரு சமாச்சாரம் பின்பக்க முதுகை தாண்டி தவழ்ந்து கொண்டிருந்தது. தூண் போன்ற நீளமான கை கால்கள். புஜ பல பராக்கிரமுள்ள உடற்கட்டு என்று பார்த்ததுமே தெரிந்தது.
 
காவண வீட்டின் வாசலில் மஞ்சள் நெருப்பின் தகிப்பு. வெறும் அக்னிச் சூடாக இல்லாமல் ஒரு சக்தியின் உக்கிரமாய், வெப்பம் வெளியில் பாய காத்திருந்தது.
 
மஞ்சள் ஒளி வெள்ளம் திடீரென்று சில்லு சில்லாக சிதற, பச்சை பசேலென முழுக்க பச்சை பெயிண்ட் அடித்தது போல் யாரோ ஒருத்தி வெளிச்சத்தினூடே காட்சி அளித்தாள்.
 
ரிஷி கண்களை கசக்கி கொண்டு பார்க்க,
 
என்னடா நடக்குது இங்க?
 
நெடிய உருவம், காற்றில் அலைந்தபடி இருக்கும் ஈட்டிகளைப் போன்ற கேசங்கள்... கழுத்தில் மின்னலைப் போன்று ஒளிவீசும் மாலை.  நெருப்புப் பந்துகள் போல சுழன்று கொண்டிருக்கும் கண்கள். மூச்சு விடும்போது தெறிக்கும் அக்னி ஜுவாலை.   
 
இடக்கையில் ஒரு பச்சை குழந்தையும், வலக்கையில் திரிசூலமும் வைத்திருந்தாள்.
 
சொடக்கு போடும் நேரத்தில், மற்றொரு உருவம் தோன்றியது. கரு கருவென இருளை குடித்தது போல், கண்களில் குரோதம் பீறிட, காட்டேரி போன்ற உருவம். ஏற்கனவே பார்த்த உருவத்தின் கருப்பு மிரர் இமேஜ் போல் இருந்தது.
கஸ்தூரி சந்தனமாகப் கருப்பு உடம்பு பூராக இரத்த குழம்பு. வெளியே தொங்கிக் கொண்டிருந்த சிவத்த நாக்கு
பயங்கர பசியோடு, ரத்தத்தை துழாவிப் ருசிக்கும் வெறியோடு சுழன்று கொண்டிருந்தது.
 
ரெண்டு உருவங்களும் மாத்தி மாத்தி ஒளிர்ந்தன.
 
ஓ!!! இதுதான் 
வெட்டி முறிச்சான் இசக்கியா?
 
ரிஷிக்கு உடல் பூராவும் ஆன்மீக சிலிர்ப்பு. மயிர் கால்கள் குத்திட்டு நின்றன.
 
திகிலாக இருந்தாலும், ஏனோ சுவாரசியம் தோன்ற, ரிஷி கண் சிமிட்டாமல் பார்த்தான்.
 
கேட்டில் காத்து கருப்பு versus காவண வீட்டின் முன்னால் இசக்கி. 
 
காவண வீட்டின் உரிமைக்காக போராட்டம்.
 
இந்த மாதிரி காட்சில்லாம் யாருக்கு காண கிடைக்கும்?
 
ஒரு சில நொடிகளுக்கு பிறகு, இருள் உருவம் ஒரு பாதியும், பச்சை உருவம் மீதி பாதியுமாக இரண்டற கலந்து, அர்த்தநாரீஸ்வரர் போல் நின்றிருந்தாள்.
 
காத்து கருப்பின் சுழற்சி அதிகமாக... கிரைண்டர் சத்தம் அதிகமானது. கேட்டை தாண்டி முன்னேற முயற்சிக்க...
 
இசக்கியின் உறுமல்கள், கர்ஜனையாக மாறியது.
அவள் கண்கள் செந்தணல்  துண்டங்களாகத் தகித்தன. கையில் வைத்திருந்த திரிசூலம் காத்தை நோக்கி திரும்பியது.
 
ஒரு புலி ஆட்சி செய்யும் பிரதேசத்துக்குள், மற்றொரு புலி நுழைய முயற்சிக்கும் போது, முதல் புலி சீறி கர்ஜித்து," என் ஏரியா...உள்ள வராதே...", என்று மிரட்டல் விடுவதை போலிருந்தது.
 
ரிஷிக்கு பயமும் பதட்டமும் சுவாரஸ்யமும் அதிகமானது.
 
இரண்டாவது புலி பதிலுக்கு சீற, இருவரும் கர்ஜனையில் பேசிக் கொண்டார்கள்.
 
சுழல் காற்று கேட்டை தாண்டி முன்னேற, இசக்கி கையில் இருந்த திரிசூலம் எம்பி காற்றைக் கிழித்து பாய்ந்தது.
 
விஷ்க்...!
 
சுழற் காற்று முன்னேறாமல் நிற்க, திரிசூலம் காற்றுக்குள் போய் சொருகாமல், அந்தரத்தில் தடதடத்தபடி ஆக்ரோஷமாக அப்படியே நின்றது.
 
எந்த இயக்கமும் இல்லை.
 
கொஞ்ச நேரம் அனைத்துமே அமைதியானது. 
 
போர் நிறுத்தத்திற்கான அமைதியா?  
 
இரண்டு பேருக்கும் நடுவில் அந்தரத்தில் திரிசூலம்.
 
காத்து முன்னேற முயற்சிக்கும் போதெல்லாம் திரிசூலம் கரகரவென சுத்த ஆரம்பித்தது.
 
என்ன நடக்கப் போகுதோ என்று டென்ஷனுடன் ரிஷி பார்த்துக் கொண்டிருக்க,
 
என்ன நினைத்ததோ, முடிவாக இரண்டாவது புலி பின்வாங்கியது. 
 
சுழற்காற்று பின்பக்கமாக சுழண்டது. மேட்டு தெருவில் இறங்கி, வீடு பறி போன கோவத்தில் கண்டமேனிக்கு சுழண்டு கோபத்தை காட்டியது. சுழற் காற்றுக்குள் விசித்திர சத்தங்கள் அதிகமாகி, அது சுழண்ட வேகத்தில் ரோட்டோரமாக இருந்த  மரங்களின் சிறுகிளைகள் உடைந்து விழுந்தன. ரோட்டில் கடந்த குப்பை காகிதங்கள், சருகுகள் அகஸ்மாத்தாய் பறந்து தெருவில் சூறைக்காற்று அடித்தது போலிருந்தது.
 
தெருவின் மறுமுனைக்கு சென்று, கடற்கரைக்கு செல்லும் சாலையில் சுழண்டபடி துள்ளி துள்ளி சென்றது.
 
முனி போவதையே பார்த்துக் கொண்டிருந்த ரிஷிக்கு ஏனோ முனி பயந்து ஓடவில்லை, தற்காலிகமாக பின்வாங்கி இருப்பதாக தான் தோன்றியது.
 
"சார், ரொம்ப டென்ஷன் ஆறாரே. ஊருக்குள்ள கூட வரவிடாம ஆப்பு வச்சிர வேண்டியதுதான்..."
 
ரிஷி திரும்பி,  காவண வீட்டின் வாசலை பார்க்க, திரிசூலமும், இரட்டை உருவமும், மஞ்சள் ஒளி வெள்ளமும் மறைந்து போயிருந்தது.
 
ரிஷிக்கு அதுவரை பெரிதாக  கடவுள் நம்பிக்கை இல்லை. முனியை விரட்டுவதற்கு மறித்துக்கட்டும் பூஜைகள் நடத்தப்படுவதை பார்த்திருக்கிறான். அந்த லாஜிக் பிரகாரம், ஒரு நெகட்டிவ் எனர்ஜியை விரட்டுவதென்றால் பாசிட்டிவாக ஒரு விஷயத்தை 
சும்மா முயற்சி பண்ணி பார்ப்போமே என்பதுதான் அவன் ஐடியாவாக இருந்தது. 
அதனால் தோன்றியது தான் காவண வீட்டை இசக்கிக்கு நேர்ந்து விடும் ஐடியா. 
 
முனி என்பது கூட முழுக்க முழுக்க நெகட்டிவ் எனர்ஜி கிடையாது என்பது அவன் விசாரித்த வகையில் தெரிந்தது. அதுவும் குறிப்பாக சண்டிமுனிக்கு வந்த கோபம்... மறக்கப்பட்ட, மறுதலிக்கப்பட்ட யாருக்குமே வரும் கோவம் தான். 
 
இப்போது சண்டிமுனிக்கு இன்னும் கோபம் அதிகமாக வரக்கூடும்!!! ஊராருக்கு  நிச்சயமாக முன்பை விட அதிக ஆபத்து.
 
ஊருக்குள்ள முனி வராம  தடுக்குறதுக்கு அடுத்து என்ன செய்வதென்ற யோசனையோடு, ரிஷி தூசியை தட்டிக் கொண்டு எழும்பினான்.
 
மறுநாள்,
 
ரஸ்தா காட்டில் இருளும் பனியும்  விலகி, காட்சிகள் அனைத்தும் துல்லியமாக தெரியும் வெளிச்சக்காலை.
 
அஞ்சு கிராமத்தில் இருந்து வந்த போலீஸ்காரர்கள் பிரபாவை கை விலங்கிட்டு கூட்டி சென்றனர்.  ஊர்க்காரர்களை பார்க்க முடியாமல் கூனிக்குறுகி, முந்தானையை எடுத்து தலையை மறைத்துக் கொண்டு சென்றாள்
 
ரஸ்தாக்காடு அணுகுண்டு விழுந்ததைப் போல் அதிர்ந்து போனது.
 
தெருவுக்கு தெரு, மக்கள் கூட்டம் கூட்டமாக நம்ப முடியாமல், பேசிக் கொண்டிருந்தார்கள்.
 
மேட்டு வீடு துக்கம் அனுஷ்டிக்கப்பட்ட நிலையிலிருந்தது.
சிட் அவுட்டில் அகல்யா கைகட்டி யோசனையாய் நின்றிருந்தாள்.  ராமன் வாத்தியாரும், சரஸ்வதியும், ஹேமாவும், சித்ராவும், கார்த்தியும், சந்தனமேரியும் மேலும் ஒரு சில ஊர்க்கார பெண்களும் என்னென்னமோ பேசி, களைத்து, வெறுத்துப் போய் உட்கார்ந்து இருந்தார்கள்.
 
அகல்யா முதலில் விஷயத்தை கேள்விப்பட்டதும், நிலைகுலைந்து போனாள். பிரபா அத்தையா? பிரபா அத்தையா? என்று நம்ப முடியாமல் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தாள்.
 
ஏற்கனவே வெந்து புண்ணாகி இருந்த நெஞ்சத்தில், இந்த செய்தி வேல் பாய்ச்ச, நொறுங்கிதான் போனாள்.
 
பின்னர் அவளின் இயல்பான தைரியம் அவளை எப்படியோ மீட்டெடுக்க, சமாளித்து சுதாரித்துக் கொண்டாள். ஆனாலும் அத்தையின் நம்பிக்கை துரோகத்தினால் உள்ளுக்குள், "யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்" என்பது போல் உடைந்து போயிருந்தாள். சிறுவயதிலிருந்தே அவள் யாரை பெரிதாக நினைக்கிறாளோ அவர்கள் பாதியிலேயே விட்டுப் போய் விடுகிறார்கள், இல்லையென்றால், நெஞ்சில் துரோக ஆணியை அரைகிறார்கள்.
 
கார்த்தி மூலமாக கருப்பு தாத்தா பேசும்போது, துரோகிகள் பக்கத்திலேயே இருக்கிறார்கள் என்று சொன்னாரே, அது இதுதான் போலிருக்கிறது என்று அவளுக்கு இப்போது புரிந்தது.
 
சரஸ்வதி: சண்டாளி, கூடவே இருந்து குழி பறிச்சிருக்கிறாளே. என்னால தாங்கவே முடியல.  நீ எப்படி தாங்கிக்க போறியோ? எது எப்படினாலும் தைரியமா இரு. கருப்பு தாத்தா தான் வந்து உங்களை காப்பாற்றி இருக்கிறார். வேறன்ன சொல்ல?
 
சந்தன மேரி: அவளைப் பற்றி இனிமே பேசாதீங்க, அவளை நம்பியா இருந்தீங்க.
 
ஹேமா: சரிமா, இனிமே அவளை பத்தி பேசாதீங்க. ஏற்கனவே எல்லாரும் மனசால உடைந்து போய்ருக்காங்க. மேலும் மேலும் அவளை பத்தி பேசி நம்மள நாமளே காயப்படுத்திக்க வேண்டாம்.
 
சந்தன மேரியும், மற்ற ஊர்க்கார பெண்களும் அவர்களால் முடிந்த ஆறுதலை சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.
 
ராமன் வாத்தியாரும் சரஸ்வதியும் வீட்டுக்கு கிளம்புவதற்காக தயாராக
 
கேட் திறக்கப்படும் சத்தம் கேட்டது. கண்ணீரும் கம்பலையுமாக ராகினி ஓடி வந்தாள்.
 
ராமன் வாத்தியார் m.v: இப்பதான் பேசி பேசி அகலின் காயம்பட்ட மனசுக்கு மருந்து போட்டோம். அடுத்தது இவ வந்துட்டாளா? ஆத்தாளும் மகளும், அகலை நிம்மதியா இருக்க விட மாட்டாளுகளே.
 
நேராக அகல்யா காலில் வந்து விழுந்தாள்.
 
"அக்கா எனக்கு இந்த விஷயம் எதுவுமே தெரியாது. எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தெரிஞ்சிருந்தா நிச்சயமா உங்ககிட்ட முன்னாலேயே சொல்லிருப்பேன்",  என்று அவள் காலை பிடித்து கதற... சித்ராவை திரும்பி பார்த்தாள்.
 
சித்ராவின் அனுதாப முகத்தை பார்த்ததும், பாவம் விட்டுரலாம்  என்பதாக அகல்யா டிகோட் செய்து கொண்டாள்.
 
"அக்கா, அக்கா" என்று அழுது அரற்றி கொண்டிருக்கும் ராகினியை பார்த்தாள்.
 
அவள் தோளை பிடித்து எழுப்பி விட்டாள்.
 
"அழாதம்மா... உன் மேல எனக்கு எந்த கோபமும் இல்லை. ஏன் அத்தை மேல கூட எனக்கு எந்த கோபமும் இல்லை... வருத்தம் தான். தாங்க முடியாத வருத்தம்.  எங்க அம்மா அப்பா போனதுக்கப்புறம் தாத்தாவும், அத்தையும் தான் எங்களுக்கு எல்லாமேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம். எங்க கிட்ட கேட்டுருந்தாலே நானே அத்தைக்கு செஞ்சிருப்பேன். எப்படி அவங்களால இப்படி செய்றதுக்கு மனசு வந்துச்சு? எதுக்காக அவங்க இவ்வளவு வன்மத்தை?... என்னால  தாங்கிக்க....", அவளால் பேச முடியாமல் குரல் தழுதழுத்தது. என்னதான் சரியாகி விட்டது போல் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் இருந்த வேதனை கொப்பளிக்க தான் செய்தது.
 
ஹேமா அவள் அருகில் போய் நின்று, ஆதரவாக முதுகை தடவி கொடுத்தாள். 
 
ஹேமா: சரி விடுடி. எல்லாருக்கும் தைரியம் சொல்றது நீ... நீயே கலங்கி போலாமா? அதைப்பற்றி தான் பேச வேண்டாம்ன்னு சொல்லியாச்சே. நடந்தது நடந்து போச்சு. இன்னும் அதையே நினைச்சுகிட்டு இருந்தா எல்லாருக்கும் கஷ்டம். தூக்கி எறிஞ்சிட்டு அடுத்தது நடக்க போறதை பத்தி பேசுவோம்.
 
அகல்யா உணர்ச்சிகளை வெளி காட்டாமல் சுதாரித்து, ராகினியின் தலையில் தட்டி கொடுத்து,
"நீ ஒன்னும் பீல் பண்ணாத.... உன்னை நான் எதுவுமே சொல்ல மாட்டேன். நீயும் என் தங்கச்சி மாதிரி தான். கண்ண தொடைச்சுக்கோ. எல்லாம் நடக்கணும்னு இருக்கு. நம்ம தலையெழுத்து...", என்றாள்.
 
ராகினி நன்றி பெருக்குடன் அகல்யாவை பார்த்தாள்.
 
மூக்கை உறிஞ்சி, முந்தானையால் கண்ணீரை துடைத்துக் கொண்டு, பழைய உரிமையுடன், சித்ராவிடம் தண்ணீர் வேண்டும் என்று சைகை செய்தாள்.
 
சித்ரா உள்ளே சென்று, அவள் குடிப்பதற்காக ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.
 
மறுபடியும் நிலைமை சீரடைய, 
 
ராமன் வாத்தியாரும் சரஸ்வதியும் கிளம்ப தயாரானார்கள்.
 
திரும்பவும் கேட் திறக்கப்படும் சத்தம்.
 
ராமன் வாத்தியார் சலிப்பாக, இப்ப யாருப்பா என்று பார்க்க, அந்தோணி நின்று கொண்டிருந்தான்.
 
இவன் எதுக்கு வர்றான்?
 
முக்கியமான ஒரு ராணுவ ரகசியத்தை அவன் தெரிந்து கொண்டதால், தலை வெடித்து விடும் நிலையில், எப்படியாவது அகல்யாவிடம் சொல்லி, தலையை காப்பாற்றி விட வேண்டும் என்ற முடிவோடு வந்திருந்தான்.
 
தொடரும்
 
Your Value Comments please
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 2 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு 47
 
கேட்டருகே நின்றிருந்த அந்தோணி அங்கு இருப்பவர்களை ஒரு முறை கணக்கெடுத்தான்.
 
ஓகே!!! எல்லோரும் அகல்யா குடும்பத்திற்கு வேண்டப்பட்டவர்கள் தான்.
 
ராமன்: என்னப்பா, அந்தோணி என்ன விஷயம்? என்று சத்தமாக கேட்க,
 
அந்தோணி: அகல்யா பாப்பா கிட்ட ஒரு விஷயம் சொல்றதுக்காக வந்தேன்.
 
ராமன்: சொல்லுப்பா...
 
அந்தோணி தயங்கி: பாப்பா, ஒரு நிமிஷம் இங்க வரீங்களா?... என்றான்
 
அகல்யா வரேன் என்று தலையாட்டி, " இருங்க என்னன்னு  கேட்டுட்டு வரேன்", என்று ராமன் வாத்தியாருக்கு பதில் சொல்லி விட்டு,  அந்தோணியை நோக்கி சென்றாள்.
 
ராமன் வாத்தியாரிடம் சரஸ்வதி : அப்படி என்ன ரகசியம் பேசறதுக்காக கூப்பிடுறான்?
 
ராமன்: தெரியலையே, வரட்டும் கேட்போம்.
 
கிசுகிசுவென அகல்யாவுக்கு மட்டும் கேட்கும் வகையில் அந்தோணி விஷயத்தை சொல்லி முடித்தான்.
 
கேட்கும்போதே தடதடவென இதயத்துடிப்பு அகலுக்கு எகிறி கொண்டிருந்தது.
 
அகல்: என்னண்ணே சொல்றீங்க? பச்ச புள்ள மேல பழி போடாதீங்க.. என்னை விட வயசுல மூத்தவர்ன்னு பார்க்கிறேன் இல்லன்னா கண்டமேனிக்கு திட்டிருவேன்... கோபத்தில் இறைந்தாள்.
 
அந்தோணி: அம்மாடி, எனக்கு இருக்கிறது ஒத்த பொட்ட புள்ள... அவ மேல சத்தியமா சொல்றேன்... என் ரெண்டு கண்ணால பார்த்தேன். என் மச்சான் தான் அங்க செக்யூரிட்டியா இருக்கான். அவனை வச்சு விசாரிச்சேன். அதுல கிடைச்ச தகவல் தான் இது.
 
அவன் சொல்லச் சொல்ல, அகல்யாவுக்கு உள்ளுக்குள் படபடவென வெடிகள் வெடித்தன. வயிற்றில் அமிலம் சுரந்தது. மூளை திகுதிகுவென பற்றி எரிந்தது. 
 
சற்று முன்னால் தான் ஃபிரஷ்ஷாக ஒரு துரோகத்தை நாக்கில் ருசித்திருந்தாள். வெந்த புண்ணில் ஏற்கனவே சொருகிய வேல் போக, அந்தோணி வெடிவைத்துக் கொண்டிருந்தான்.
 
அந்தோணி: யாருகிட்டயும் சொல்லலம்மா. உங்ககிட்ட கூட சொல்ல வேணாம்னு தான் நினைச்சேன். ஏற்கனவே உங்க குடும்பத்து காரங்க நிறைய பிரச்சனைல இருக்கீங்க.  இதனால ஏதாவது புது பிரச்சனை வந்துற கூடாதுங்கறதுக்காக  சொல்றேன்.  பாத்துக்கோங்க.... என்று சொல்லிவிட்டு வெடிக்கவிருந்த தலையை காப்பாற்றிய திருப்தியுடன், அந்தோணி கேட்டை விட்டு இறங்கி வெளியே சென்றான்.
 
அதிரடித்த ட்யூனிங் போர்க் போல் அவள் உள்ளம் உதறிக் கொண்டிருந்தது. ஜிகு ஜிகவென நரம்பல்லாம் ஆத்திர வெள்ளம். நெருப்புக் குழம்புகள் பீறிட்டுக் கொண்டு நிற்க, எரிமலை எந்நேரமும் வெடிக்க தயாராக இருந்தது.
 
அகல்யா திரும்பி நடந்தாள். சிட்டவுட்டுக்குள் நின்றிருந்த சித்ராவை வெறித்தபடி நடந்தாள்.
 
உள்ளுக்குள் எண்ண அம்புகள் குறுக்க மறுக்க பாய்ந்தன.
என் தங்கச்சி அப்படி பண்ணிருக்க மாட்டா? 
ஒரு நாளும் இது உண்மையா இருக்காது?
குழந்தை மேல் சத்தியம் செய்கிறானே!
யார் மேல் சத்தியம் செய்தால் என்ன?
சித்ரா மட்டும் இல்லைன்னு சொல்லட்டும், அந்தோணி சொன்னது பொய்ன்னு சொல்லட்டும்... அதன் பிறகு அவனுக்கு இருக்கு வாசாப்பு.
 
ராமன்: என்னம்மா அந்தோணி சொன்னான்?
 
எதுவும் பேசாமல் இறுகிய முகத்துடன் சென்றாள்.
 
என்ன இவள் கேட்பதற்கு பதில் சொல்லவில்லையே என்று ராமன் பார்க்க, மற்றவர்களும் என்னாச்சு இவளுக்கு என்பது போல் முழித்துக் கொண்டிருந்தார்கள்.
 
சித்ரா மைண்ட் வாய்ஸ்: அக்கா  யாரை முறைக்கிறாங்க?..  (சுற்றிலும் ஒரு முறை பார்த்தாள்). என்னை தான் பாக்குற மாதிரி இருக்கு.
 
அவளுக்கு திடுக்கென்று உள்ளுக்குள் உதறல்.
 
அக்கா பார்த்த பார்வையில் வழக்கமான அக்கா இல்லை. சித்ராவுக்கு என்னமோ சரியில்லை என்று தோன்ற, கைகளில் உதறல்.
 
அகலின் நடை கோபத்தின் வீரியத்தை வெளிப்படுத்த விட்டாலும், வழக்கத்திற்கு மாறான ஒரு தன்மை.
 
ஹேமா: என்னடி ஒன்னுமே சொல்ல மாட்டேங்குற? ஏதாவது பிரச்சனையா, அந்தோணி அப்படி என்ன சொன்னாரு?
 
சிட் அவுட்டு படிக்கட்டுகளில்  கால்களை அழுத்தி பதித்து, ஏறிய அகல்யா எதுவும் பேசாமல் அனைவரையும் கடந்து, சித்ரா முன்னால் போய் நின்றாள்.
 
சித்ராவுக்கு கதிகலங்க ஆரம்பித்தது.
 
அகல் வெப்ராளத்தை கஷ்டப்பட்டு ஜீரணித்து கொண்டு: பார்வதிபுரம் ஆஸ்பத்திரிக்கு தாமஸ் கூட நீ போயிருந்தியா?.... இல்ல தானே?....
என்று கேட்க,
 
"அய்யய்யோ போச்சு.. மாட்டி விட்டுட்டானே..."
சித்ரா உடம்பில் ஒவ்வொரு சென்டி மீட்டரும் நடுங்க ஆரம்பித்தது.
நெஞ்சின் தடக் தடக் அதிகரிக்க,  கைகளால் நெஞ்சின் நடுவில் அழுத்தி பிடித்துக் கொண்டாள். 
 
"அக்....கா அது வந்து.."
 
சித்ராவால் அக்காவின் பார்வை நேருக்கு நேராக சந்தித்து பொய் சொல்ல முடியவில்லை. தடுமாறினாள்.
 
"போனியா... இல்லையா?" அகல்யாவின் சொந்த குரல் பதுங்கி, வேறு குரல் வெளிப்பட்டது.
 
சித்ரா மிடறு விழுங்கி கொண்டே.. ஒன்றுமே பேசாமல் பரிதாபமாக மற்ற எல்லாரையும் ஒரு பார்வையை பார்த்தாள்.
 
என்ன பிரச்சனை என்று புரியாமல், வாத்தியார் குடும்பத்தினரும், கார்த்தியும் குழம்பி போய் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
 
"போனியா... இல்லையா?"
 
அகலின் குரலில் கடுமை ஏறிக்கொண்டே போனது.
 
"அக்...கா.."
 
"சொல்லப் போறியா? இல்லையா?"
 
பதில் சொல்லாமல் சித்ரா தலை குனிந்தாள்.
 
அவள் பதில் சொல்லாவிட்டாலும், உடல் மொழியில் புரிந்து போக, அகல்யா உடல் முழுவதும் தீப்பற்றிக் கொண்டது போல் பேராத்திரம்.
 
எரிமலை வெடித்தது.
 
இடது கையால் சித்ரா தலை முடியை பற்றி, தலையை நிமிர்த்தி, பொளேர் பொளேர் என்று அறைந்தாள்.
 
சித்ரா பதிலேதும் சொல்லாமல் அரையை வாங்கிக் கொண்டிருக்க, 
 
அகல்யா காட்டிய மூர்க்கத்தனம் இதுவரை அவர்கள் அனைவரும் இதுநாள் வரை அறியாதது.
 
ஹேமாவும் மற்றவர்களும், அடிக்காதே என்று கத்தியபடி விலக்கி விடுவதற்காக அவர்களை நோக்கி ஓடி வந்தார்கள்.
 
துரோகம்... துரோகம்... துரோகம்.
 
அகல்யா வெறி தாங்காமல் ஒரு நொடி ஆக்ரோஷத்தில் வெறித்தனமாக அரைய, சித்ரா சுழன்று, திரும்பி, "டாம்ஸ்...." என்று கத்தியபடியே பின்பக்க சுவரில் போய் மோதினாள்.
 
தாமஸ் பெயரை சொன்னதும், அந்தோணி சொன்னது அனைத்தும் உண்மை என்று யூகித்து கொண்டாள்.
 
மோதிய வேகத்தில் நெற்றி ஓரமாக ரத்த  கசிவு. சித்ரா கீழே விழுந்து சுயநினைவை இழந்தாள்.
 
என்னாச்சு என்னாச்சு என்று அகல்யாவை பிடித்து ஹேமா உலுப்ப,
 
ராமன்: அந்தோணி அப்படி என்னதான் சொன்னான்? ஏன் அவளை அடிக்கிற? ஏன் இவ தாமஸ்னு அலர்னா?
 
ராகினியும் கார்த்தியும்... சித்ராவை தாங்கி பிடித்து அவளை எழுப்ப முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். சித்ரா முற்றிலுமாக சுய நினைவை இழந்திருந்தாள். 
 
சித்ரா அருகே சரஸ்வதி சென்று, மூச்சி இருக்கிறதா என்று பார்த்து, மயக்கம் தான் என்று உறுதி செய்தாள்.
 
"தண்ணி எடுத்துட்டு வா" என்று ராகினியிடம் கூறினாள்... ராகினி எழும்பி உள்ளே சென்றாள்.
 
அகல்யாவின் உதடுகள் துடித்துக் கொண்டிருந்தது.  உள்ளம் வேதனையில் வெடித்துக் கொண்டிருந்தது.
 
கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று முடிவு எடுத்திருந்ததால், ஆண்கள் மேல் பெரிதாக அகலுக்கு எந்த அபிப்ராயமும் ஏற்பட்டதில்லை. ஆனால் அதையும் மீறி தாமஸ் வாத்தியாரை பார்க்கும்போது அவளுக்கு சலனங்கள் தோன்றியது நிஜம். சலனங்கள் பிடிக்கவும் செய்தது, பிடிக்காமலும் இருந்தது. பரவசமாகவும் இருந்தது, பதட்டமாகவும் இருந்தது. அதற்கு அவளுக்கு சரியான காரணம் தெரியவில்லை. சித்ரா தாமஸ் வாத்தியாரை காதலிக்கிறா என்று தெரிந்ததும், அவளுக்கு ஏற்பட்ட சலனங்களை ஒட்டுமொத்தமாக விலக்கியதும் நிஜம்.
 
நல்லவன்னு நம்பி ஏமாந்தது தான் மிகவும் வேதனையாக இருந்தது. அதைவிட தங்கச்சி, தங்கச்சி என்று எல்லாத்துக்கும் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்திருந்தால் அவர்களே இப்படி ஒரு காரியத்தை செய்த போது, எல்லாவற்றையும் விட வேதனையாக இருந்தது.
 
ஐயோ!! ஐயோ!!! என்று இரு கைகளாலும் முகத்தில் அறைந்து,
 
"நான் என்ன பண்ணுவேன்? எவ்வளவு துரோகத்தை தான் தாங்குவேன்... என்னால முடியல... நம்புனவங்கல்லாம் இப்படி பண்ணினா, நான் என்ன பண்ணுவேன்?, என்று கதறினாள்
 
ஹேமா:  நீ இப்படியெல்லாம் தங்கச்சிங்கள அடிக்க மாட்டியே. என்ன தாண்டி நடந்துச்சு?
 
அந்தோணி சொன்ன விஷயத்தை அகல்யா சொல்ல வேண்டிய நிர்பந்தம். சொன்னாள்.
 
கேட்ட அனைவருக்கும் பதட்டம், பயம், பதக்களிப்பு.
 
ராமன்: தாமஸ் வாத்தியாரா இப்படி? என்னால நம்பவே முடியல? அந்தோணி உண்மையைத்தான் சொல்றானா?
 
சரஸ்வதி: இவ்வளவு கேட்டும் சித்ரா வாயை திறந்து பேசலையே!! உண்மைய ஒத்துக்கிற மாதிரி தானே இருக்கு.
 
ஹேமா இடைமறித்தாள்: "ஆமாமா... எனக்கு முதல்லருந்தே அந்தாளு நடவடிக்கைகளில் சந்தேகம். எனக்கு ஒருத்தன் கால் பண்ணி தொந்தரவு பண்ணிட்டு இருந்தானே... அது வேற யாரும் இல்ல. அவன் தான்.. "
என்று போன் விஷயம் மூலமாக கண்டுபிடித்ததை சொன்னாள்.
 
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
 
ராமன் வாத்தியாரும், சரஸ்வதியும் நெருப்புத் துண்டை மிதித்தது போல் திகைத்தார்கள்.
 
கார்த்தி அவர்கள் சொன்ன எதையுமே நம்ப முடியாமல், பார்த்துக் கொண்டிருந்தாள்... அவள் கண்களில் அவளையும் அறியாமல் நீர் கசிவு.
 
ஹேமா: டீசன்ட்டா பழகுறானே, ஜென்டில்மேனா இருப்பான்னு நினைச்சு எல்லா உரிமையும் கொடுத்தாள். இப்ப அடி மடியிலேயே கை வச்சிட்டான்... இந்த குடும்பத்துக்கு தீராத களங்கத்தை உண்டாக்கிட்டான் ராஸ்கல்.
 
சரஸ்வதி: வயசு பொண்ணுங்க ரெண்டு பேருமே அவன் கிட்ட பழகுன விதமே எனக்கு புடிக்கல. நான் ஜாடை மாடையா எவ்வளவோ சொல்லி பார்த்தேன். ஒருத்தரும் கேட்கல. இப்ப பாரு என்ன ஆச்சுன்னு? என்னதான் அவனுக்கு சித்ராவை கல்யாணம் பண்ணி வச்சாலும், இந்த விஷயத்தை நாக்குல பல்லு போட்டு பேசத்தானே செய்வாங்க. கல்யாணம் ஆறதுக்கு முன்னாடியே கர்ப்பம் ஆயிட்டான்னு குத்திக் காட்ட தானே செய்வாங்க. சே!! உங்களுக்கு இப்படியா அடுக்கடுக்கா சோதனை வரணும்.
 
போன் செய்து தொந்தரவு கொடுத்தது தாமஸ் தான் என்று ஹேமாவே உறுதியாக சொன்ன பிறகு, ராமன் வாத்தியாருக்கு தாமஸ் மேல் வைத்திருந்த மரியாதை காற்றில் பறந்தது.
 
கோபத்தில் கத்தினார்: இப்ப எங்க இருக்கான் அவன்?
 
ஹேமா: ஏதோ போலீஸ் பார்மாலிட்டிஸ் இருக்கு. பாக்க போறேன்னு சொல்லிட்டு போயிருக்கான். வர்ற நேரம் தான்.
 
எதுவுமே பேசாமல் ஆளுக்கொரு மூலையில் போய் நின்று கொண்டார்கள். அவன் வரட்டும், இன்னைக்கு அவன பொளந்துரனும் என்கிற வெறி அனைவரும் மனதிலும்...
 
கேட் திறக்கப்படும் சத்தம்.
 
அனைவரும் ஏறிட்டு கேட்டை பார்க்க,
 
"என் உச்சி மண்டைல சுர்ரின்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது.
டர்....",
 
குழந்தைகள் சைக்கிள் ஓட்டுவது போல், டர் சத்தத்துடன்,  சைக்கிள் ஓட்டியபடியே உற்சாகமாக பாட்டு பாடி, உள்ளே நுழைந்து கொண்டிருந்தான்.
 
சிட் அவுட்டில் நின்றிருந்தவர்கள் பேச்சு மூச்சுற்று அவனை வெறித்து கொண்டிருப்பதை பார்த்ததும், பாட்டை சப்பென்று நிறுத்தினான்.
 
அனைவரும் முகங்களிலும் வெறுப்பும் பகைமையும் தாண்டவமாடியது.
 
ரிஷி m.v: என்ன ஒருத்தன் பார்வையும் சரி இல்ல. Something is wrong.
 
ராமன் அகல்யாவிடம், " நீ கொஞ்சம் பொறுமையா இருமா..  நான் விசாரிக்கிறேன்.."
 
அகல் அவரைப் பார்த்து கையை நீட்டி," வேண்டாம் நானே கேட்கிறேன்..." என்பது போல் சைகையில் சொன்னாள்.
 
நின்றிருந்தவர்களின் பார்வையின் அர்த்தம் புரியாததால், ரிஷி யோசித்தபடியே அவர்களை நோக்கி சென்றான். அகல் மறுபக்கம் இருந்து அவனை நோக்கி வந்தாள்.
 
ஒருவரை ஒருவர் நெருங்கியதும்,
 
அகல் அவனை ஆழமாக பார்த்து,
"எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் தான் பதில் வேணும். பார்வதிபுரம் ஹாஸ்பிடலுக்கு நீங்க சித்ராவை கூட்டிட்டு போனீங்களா இல்லையா?"
 
ரிஷி m.v: அய்யய்யோ!!! எவனோ போட்டு கொடுத்திட்டான் போலிருக்கே.
 
பின்னால் சித்ரா மயங்கி கிடப்பதை பார்த்தான்.
 
ரிஷி: யாரு சொன்னாங்க?
 
அகல்: கேட்ட கேள்விக்கு பதில்.
 
ரிஷி அவளின் தீர்க்கமான கேள்வியையும், பின்னால்  இருந்தவர்களின் முறைப்பையும் பார்க்கும்போது, உண்மை தெரிந்து விட்டதை புரிந்து கொண்டான். இனிமேல் மறைப்பதில் பிரயோஜனம் இல்லை. அவனை பொறுத்த வரையில் சித்ராவை கூப்பிட்டுக்கொண்டு சென்று, கர்ப்பத்தை கலைக்க உதவி செய்து, பாடிகார்ட் வேலை செய்ததை தான் கண்டுபிடித்து விட்டார்கள் போல என்று நினைத்துக் கொண்டான்,
 
ரிஷி தயங்கி தயங்கி,
"எனக்கும் இதுல உடன்பாடு இல்லை, சித்ரா ரொம்ப ரொம்ப கெஞ்சி கேட்டுக்கிட்டதனாலதான்... வேறு வழி இல்லாம கூட்டிட்டு போனேன்.  ஆனா....."
 
பொளேர்!
 
ரிஷி முடிப்பதற்குள் அரை வாங்கினான்.
 
சிவந்திருந்த அகல் கண்களில், துரோகத்தின் வலி..
 
"சே!!! நீல்லாம் ஒரு மனுஷனா? உன்னை எவ்வளவு தூரம் நம்பினேன். இந்த வீட்டுக்குள்ள என் அப்பாவையும், தாத்தாவையும் தவிர வேறு ஒரு ஆம்பளையும் உள்ள விட்டதில்லை. ஆனா உன்னை நம்பி பெட்ரூம் வரைக்கும் விட்டேன். ஏன்???? எனக்கே தெரியல. ஆனா நம்பினேன். அது சின்ன பொண்ணு..?? நல்லது கெட்டது தெரியாதது. உன் கூட அவ பழகுறா, உன்மேல அவளுக்கு ஆசை இருக்குன்னு தெரிஞ்சும், நான் எதுக்கு அனுமதிச்சேன்னா... உன் மேல எனக்கு ஒரு நம்பிக்கை... நீ அதுக்கு நல்லது சொல்லிக் கொடுத்துருக்கணும். ஆனா இப்படி  சீரழிச்சு வச்சிருக்கியே உனக்கே நியாயமா இருக்கா? உன்ன பாக்கவே அருவருப்பா இருக்கு. உன் கூட பேசுற தகுதியை கூட நீ இழந்துட்டே.. தயவு செய்து போயிரு. என் கண்ணு மேல நிக்காத...", அவனைப் பார்க்க கூட பிடிக்காமல், முகத்தில் அருவருப்பின் ரேகைகள் படர, வேற எங்கேயோ பார்த்து பேசினாள்.
 
அகல் சொல்ல சொல்ல... ரிஷிக்கு இன்னமும் சித்ராவை கூப்பிட்டு சென்று, கர்ப்பத்தை கலைக்க உதவி செய்ததற்காக தான் கொந்தளிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான்.
 
ரிஷி: தப்புதான்... நானே இப்படி செய்யணும்னு நினைக்கல... ஆனா உங்க நல்லதுக்கு...
 
ராமன் வாத்தியார் பின்னால் இருந்து வேகமாக வந்து, 
 
"எல்லாம் பொம்பள புள்ளைங்க. அவங்களுக்கு துணை யாருமே இல்லைன்னு நினைச்சுக்கிட்டு தான் இவ்ளோ வேலை செஞ்சியா? நானே உனக்கு நல்லவன்னு சர்டிபிகேட் கொடுத்தத நினைச்சு வெட்கப்படுகிறேன்... கருப்பன் இருந்தா உன்ன இங்க வெட்டி பொதைச்சிருப்பான். தப்பிச்சிட்டேன்னு நினைச்சுக்க. அகல்யா சொல்லிட்ட இல்ல பேசாம வெளிய போயிரு...", என்றார்.
 
வழக்கமாக மரியாதையாக பேசும் ராமன் வாத்தியார், மரியாதை குறைவாக பேசுவதை பார்க்கும்போது, தப்பு செய்தவர்களை விட்டுவிட்டு தன்னிடம் எதற்காக கோபப்படுகிறார்கள் என்று தான் குழம்பிப் போனான்.
 
ரிஷி பொறுமையாக: எதற்காக இப்படி உணர்ச்சி வசப்படுறீங்க. நான் வெளியே போறது பத்தி ஒன்னுல்ல. ஆனா விஷயம் என்னன்னு நீங்க சரியா தெரிஞ்சுக்கிட்டிங்களா, இல்லையான்னு தெரியலையே.
 
ராமன் வாத்தியாருக்கு கோபம் சுர்ரென்று மண்டைக்கு ஏறியது: சொல்லிக்கிட்டே இருக்கேன். அசால்டா பேசிக்கிட்டு இருக்க... அவ்வளவு தடிப்புதனமா?
 
கோபத்தில் அவனைப் பிடித்து தள்ளி விட்டார்.
 
ரிஷி தள்ளப்பட்டதால், தரதரவென தடுமாறினான்.
 
"நீங்க எதுக்காக என்கிட்ட இப்படி over react பண்றீங்கன்னு எனக்கு புரியல..."
 
ஹேமாவும் அப்பாவுக்கு சார்பாக துணைக்கு வந்தாள்: "ஆமாண்டா உனக்கு புரியாது.. எதுவுமே புரியாது. என்ன ஒரு நடிப்பு. உன்ன பத்தி நல்லா தெரியும்டா. எனக்கு போன் பண்ணவன் நீ தானே.."
 
ரிஷி m.v: போன் பண்ண விஷயத்தை கண்டுபிடித்து விட்டாள் போலயே. அதனால்தான் இவ்வளவு டென்ஷனா இருக்காங்களா?
 
எங்கே கோட்டை விட்டோம்!!
 
சித்ரா விஷயத்தில் ஓவர் ரியாக்ட் பண்ணுவது தான் அவனுக்கு புரியவில்லை. ஒருவேளை நான்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று தப்பாக நினைத்து விட்டார்களோ!!! சித்ரா உண்மையை சொல்லவில்லையோ!!!
 
நுங்கு தின்னவன் தப்பிச்சுக்கிட்டான், நோண்டித் தின்னவன் மாட்டிக்கிட்டான்ங்கற கதையா? 
 
அதுகூட சரி இல்லை... நாம் எங்கே சாப்பிட்டோம். நுங்கு மேற்கொண்டு கெட்டுப் போகாமல் பாதுகாக்க தானே செய்தோம்.
 
ரிஷி: நீங்க வேற ஏதோ நினைச்சுகிட்டு தப்பா பேசுறீங்கன்னு நினைக்கிறேன். போன் விஷயம் நீங்க நினைக்கிற மாதிரி கிடையாது. அது எதுக்காக பண்ணினேன்னா...
 
ராமன்: அப்ப நீ தான் பண்ணிருக்கேன்னு ஒத்துக்குற... ராஸ்கல் வெளியே போடா... என்று மறுபடியும் பிடித்து தள்ளினார்.
 
சரஸ்வதி பின்னாலிருந்து கத்தினாள்.
 
"என்ன அவன் கிட்ட பேசிட்டே இருக்கீங்க? கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளுங்க..." 
 
அவள் சொன்னதும் ஹேமாவும் ராகினியும் வரிஞ்சு கட்டிக்கொண்டு ஓடி வந்தார்கள். ராகினி புதிதாக கிடைத்த உறவை தக்க வைத்துக் கொள்வதற்காக, கொஞ்சம் அதிகப்படியாகவே எதிர்வினை ஆற்றினாள்.
 
ரிஷி எட்டிப் பார்க்க, அகல்யா எதுவும் பேசாமல் கைகட்டி தலை குனிந்து நின்றிருந்தாள். அனைவரும் முறைத்துக் கொண்டிருக்க, கார்த்தி மட்டும் ஏதோ தப்பு நடக்கிறது என்று புரிந்ததால், அவன் மேல் இருந்த பரிதாபம், கண்ணீராக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
 
சொடக்கு போடும் நேரத்தில் எல்லா திட்டமும் தலைகீழாக மாறிப்போனது.
 
ரிஷி: நீங்க எதோ தப்பா நினைச்சுட்டு பேசுறீங்க? என்ன நடந்துச்சுனு நான் விளக்கமா சொல்றேன். கொஞ்சம் பொறுமையா கேளுங்களேன்.
 
ஹேமாவும், ராகினியும், ராமனும், அவன் கழுத்தை பிடித்து தள்ளினார்கள்.
 
ராகினி: நீ ஒரு மயிரும் பேச வேண்டாம்.  வெளிய போடா. அதான் சொல்லிட்டாங்கல்ல.
 
தள்ளப்பட்ட வேகத்தில் கேட்டில் போய் விழுந்தான்.
 
கேட் தடதடவென ஆடியது.
 
அதுவரை பம்மி கொண்டிருந்தவன், நெஞ்சை நிமிர்த்தி, படார் என்று திரும்பினான். அவன் பார்வையில் அனல் பறந்தது.
 
கைகளை நீட்டி, "ஏய்ய்ய்ய்ய்" என்று கர்ஜித்தான். 
 
கேட்டை விட்டு அவனை வெளியே தள்ளுவதற்காக வந்த மூவரும், பயந்து போய் எட்ட நின்றார்கள்.
 
அவன் கர்ஜனை அங்கிருக்கும் காற்றில் தொங்கி, ரொம்ப நேரம் நின்றிருந்தது.
 
ரிஷி சொடக்கு போட்டு, சுட்டு விரலை காண்பித்து, அடிவயிற்றில் இருந்து உறுமினான்.
 
"என் ஜில்லு பேசுனா, அமைதியா இருப்பேன். வேற எவனாச்சும் ஓவரா பேசுனா. அதே அமைதியை எதிர்பாக்காதீங்க. மரியாதை கொடுத்தா தான் மரியாதை கிடைக்கும்.... 
எப்படி? மரியாதை.....Respect.......
ஜாக்கிரதை. 
என் துணிமணில்லாம் காவண வீட்டில இருக்கு... எடுத்துட்டு தான் போவேன்..."
 
ஜில்லு என்று அவன் சொன்னது அகல்யாவின் காதில் விழ... தலை குனிந்து நின்றிருந்தவள், திடுக்கென்று ஏறிட்டு அவனை பார்த்தாள்.
 
ஜில்லு என்றா சொன்னான்?
 
அனைவரையும் தீர்க்கமாக ஒருமுறை பார்த்து விட்டு, ரிஷி காவண வீட்டை நோக்கி நடந்தான். கசங்கிய   சட்டையை சரி செய்து விட்டு, காலரை தூக்கி விட்டுக் கொண்டு, தெனாவட்டாக நடந்தான். 
 
எல்லாவற்றையும் செய்து விட்டு சித்ரா மயங்கியே கிடக்க, வேதனையின் விளிம்பில் இருந்த அகல்யாவை ஜில்லு குழப்பியிருந்தது.
 
ரிஷி காவண வீட்டுக்குள் நுழைந்து பொருட்களை எடுக்கும் சத்தமோ, குலைக்கும் சத்தமோ, என்னமோ சத்தங்கள் படபடவென கேட்டது.
 
மேட்டு வீட்டில் பொறுமை காக்க வேண்டிய நேரத்தில், யாரும் காக்காமல், இப்போது பொறுமையாக இருந்தார்கள்.
 
சற்று நேரத்தில் ஒரு சிறிய அட்டைப்பெட்டியை தூக்கிக்கொண்டு ரிஷி வெளியே வந்தான்.
 
அனைவர் பார்வையின் வெறுப்பையும் கடந்து, நேராக கார்த்தியை நோக்கி சென்றான்.
 
அவனுக்காக அவள் அழுததைப் பார்த்திருந்தான்.
 
பெட்டியை அவள் கையில் கொடுத்து, 
குரல் தழுதழுக்க, 
கண்களில் கண்ணீர் மினுமினுக்க, 
விரக்தி வெளிப்பட...
 
"என் ஜில்லு, அறியாத வயசுல என்னை லவ் பண்றதா சொல்லி, எனக்கு கொடுத்த பரிசுகள். எங்க காதலுக்கு இதுதான் சாட்சி. இன்னும் பொக்கிஷமா பாதுகாத்துட்டு வர்றேன். அவளுக்காக தான் இங்க வந்தேன். இப்ப அவ போன்னு சொல்றா, நான் போறேன்.  அவ சந்தோஷத்துக்காக எதுனாலும் செய்றேன். என் சார்பா, நீ அவகிட்ட கொடுத்துடு... நான் வரட்டுமா?"
 
அகல்யா குழப்பத்திலேயே பார்த்தாள்.
 
நடந்து முடிந்த சம்பவங்கள்,  அவனை கூப்பிட்டு நேருக்கு நேராக விசாரிக்க விடாமல் தடுத்தது.
 
ஜில்லு என்கிறானே, இவனுக்கு எப்படி தெரியும்?
 
குமார் ஒருவன் தானே, ஜில்லு என்று என்னை கூப்பிடுவான்.
 
கார்த்தி 'போகாதீங்க' என்பது போல் அவன் கையைப் பிடிக்க,
 
கண்ணில் நீர் திரையுடன், "நான் வரேன்" என்று தலையாட்டினான். பிடித்திருந்த அவளின் கைகளை தட்டி கொடுத்து, அதை எடுத்து விட்டு கிளம்பினான்.
 
கேட்டை திறந்து கொண்டு வெளியே சென்றவன், திரும்பி ஒருமுறை அகல்யாவை பார்த்தான். அகல் குழப்பமாக அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். கண்கள் முழுவதும் அவளை நிறைத்து கொண்டு கிளம்பினான்.
 
வெளியே நிறுத்தி வைத்திருந்த பைக்கை ஸ்டார்ட் செய்து கொண்டு கிளம்பினான்.
 
ராமனும், ஹேமாவும் பெட்டியை வாங்கி பிரித்துப் பார்த்தார்கள்.
 
சின்ன வயதில் அகல்யாவுடன் அவன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள், பொருட்காட்சியில் அவள் வாங்கிக் கொடுத்த சீப்பு, சிறிய கண்ணாடி, கர்ச்சீப், பேனா,  பவுடர் டப்பா. அவள் பயன்படுத்திய கிளிப், ரிப்பன், வளையல் எல்லாம் இருந்தன.
 
ஹேமா போட்டோவை எடுத்து பார்த்ததும், அவளுக்கு சுருக் என்று இருந்தது. 
 
இவன்... இவன்... குமார் மாதிரி இருக்கானே!
 
குமாரே தான்!
 
அய்யோ!!!  ஏதோ தப்பு நடந்திருக்கிறது!!! 
 
தலையில் அடித்துக் கொண்டாள்.
 
ஜில்லு ஜில்லு என்று சொன்னது அகல்யாவை தானா????
 
ஹேமா தலையில் இடியே இறங்கியதை போல் உணர்ந்தாள்.
 
ஓடி சென்று, அகல், அகல் என்று கண்ணீர் மல்க,
 
பெட்டியை நீட்டினாள்.
 
அகல்யா ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்க... சுனாமி சுழண்டடித்தது. அவள் கண்களில்  சிறு வயது நினைவுகள் பளிச்சிட ஆரம்பிக்கவும்.... சித்ராவுக்கு சுயநினைவு வரவும் சரியாக இருந்தது.
 
இதற்கிடையே,
 
பைக்கை கிளப்பி வந்து, இரண்டு, மூன்று, நான்கு என கியர்களை பட்டு பட்டு என்று ஏற்றி, ரிஷி ரோட்டில் சீறி பறந்தான்.
 
வெயில் தார் ரோட்டில் தாண்டவமாடியது. என்ன இப்பவே, இவ்வளவு வெயிலா என்று இரை தேடும் கட்சிகள் கிளைகளில் தயங்கி காத்திருந்தன.
 
மனசு நிறைய ரணத்துடன் பைக்கில் சென்று கொண்டிருந்தான் ரிஷி.
 
நல்லது தானே செய்தோம்! அதுலயும் ஒரு குற்றம் கண்டுபிடித்து, தப்பல்லாம் என் தலையில் சுமத்தி, இப்படி பேசி விட்டார்களே!!! சித்ரா மயக்கத்தில் கிடக்கிறாள்! ஒருவேளை அவள் கண் விழித்தால், உண்மையை சொல்வாளா? இல்லை, பயந்து போய் வாயை மூடிக்கொண்டு இருப்பாளா? திருமுடி எங்கே போய்விட்டான். அவனாவது பேசுவானா? இல்லை, அவனும் கர்ப்ப விஷயம் என்பதால் பயந்து, சம்பந்தமில்லை என்று ஒதுங்கிக் கொள்வானா?
 
அவன் ஆசைப்பட்ட மாதிரி, அகல் அவள் வாயால், 
"லவ் யூ ரிஷி"ன்னு சொல்வா, ஆசை தீர அவளை கண்களால் பருகலாம்ன்னு எவ்வளவோ  ஆசையுடன் போனோம்!
 
நாயை விரட்டுற மாதிரி, அடித்து விரட்டி விட்டார்களே!
 
சரி, விடுரா மயிறு.... என்றைக்காவது ஒரு நாள் அகலுக்கு உண்மை தெரியவரும்.
 
என்னதான் அவனுக்கு அவனே சமாதானம் சொல்லிக் கொண்டாலும்,  கொடிய விஷத்தை அருந்தியது போல் நெஞ்சமெல்லாம் எரிந்தது. தாங்க முடியாமல் எரிந்தது.
 
ரஸ்தா காடு ரோடு அஞ்சு கிராமம் மெயின் ரோட்டில் வந்து முத்தமிடும் இடத்தில், அவன் பைக்கை திருப்பும் போது,
 
எதிரே வந்த லாரியை, அவன் பைக் 80 கிலோமீட்டர் வேகத்தில் முத்தமிட்டது.
 
தட்டார்....
 
ரிஷி கட்டுப்பாட்டை இழந்து, காற்றில் வீசி எறியப்பட்டு அந்தரத்திலேயே ரெண்டு குட்டி கரணங்களை போட்டான். பைக் லாரிக்கடியில் மாட்டி நசுங்கி உயிரை உடனே விட்டது.
 
ரிஷி தொலை தூரத்தில் போய் தட் என்று கீழே விழுந்து, சிகப்பு ரத்தம் உடலின் பல பகுதிகளில் இருந்து வெளிப்பட்டு, சட்டையை நனைக்க, கண்கள் இருண்டு தலை தொங்கும் முன், 
 
அவன் கடைசியாக சொன்ன ஒற்றை வரி கவிதை..... 
 
"அகல்......."
 
தொடரும்
Your Value Comments please
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 2 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு 48
 
அரை மணி நேரத்திற்கு பிறகு,
 
சித்ரா அழுதபடி எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருக்க, அனைவரும் அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
 
"எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை அவர்கிட்ட சொன்னதும், நம்ம குடும்பத்துக்கு எந்த பிரச்சனையும் வந்திடக் கூடாதுன்னு கெஞ்சி கேட்டதுனாலயும் தான் எல்லாத்தையும் செஞ்சாரு. அப்ப கூட அவர் குமார் மச்சான்னு எனக்கு தெரியவே தெரியாது. அவர் சொல்லவும் இல்லை. ஆனா அவரு அகல் அக்காவை காதலிக்கிறாரு, அதனால தான் நம்ம குடும்பத்துக்கு இப்படில்லாம் செய்றாருன்னு  புரிஞ்சுகிட்டேன். கொஞ்சம் பொறுமையா இருந்துக்கலாமே அக்கா... எல்லா தப்பும் என்னோடது தான்... என்னை மன்னிச்சிடுங்க"... என்று  கதறினாள்.
 
அவள் சொல்லி முடிக்கவும், அகல்யா நிலைகுலைந்து, தளர்ந்து போய் கீழே சரிந்தாள்.
 
ஹேமா அவளை தாங்கிப் பிடித்துக் கொண்டாள்.
 
ராமன் வாத்தியார் சுய வெறுப்புடன் தலையில் அடித்துக் கொண்டார்.
 
சித்ரா: ஹேமா அக்காவுக்கு அவர் தான் போன் பண்ணி இருந்தாருன்னா... நிச்சயமா அதுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். இல்லாம இருக்காது. நீங்க அவர் கிட்டயே கேட்டுருக்கலாம்.
 
ஹேமாவுக்கு எல்லாமே புரிந்தது போல் இருந்தது.
 
காரணம் இல்லாமல் இருக்காது!!!
 
காரணம் இல்லாமல் இருக்காது!!!
 
ஹேமா m.v: 
 
அகல்யாவின் தோழி நான்! எனக்கு திருமண வாழ்வில் பிரச்சனை.
தனியாக குழந்தையுடன் கஷ்டப்படுறேன்.
போனில் மிரட்டல்.
தனியாக இருப்பதால் தான் மிரட்டல்ன்னு எனக்கு புரிய வைக்கப்படுகிறது.
விஷயம் கேள்விப்பட்டதும், அப்பாவும் அம்மாவும் அனுதாபப்படுகிறார்கள்.
பிரிந்த குடும்பம் சேருகிறது.
 
ஹேமா அழுங்குரலில்,
"ஐயோ தப்பு பண்ணிட்டனே!  என்னை மீண்டும் குடும்பத்தோடு சேர்த்து வைப்பதற்காக தான் அவரு போன் பண்ணிருக்கணும்.. வேற என்ன காரணம் இருக்க முடியும்?,? தப்பு பண்ணிட்டேன்..." 
 
ராகினி தயங்கி தயங்கி, "நானும் ஒரு விஷயம் சொல்லணும். என் புருஷன் பணம் கேட்டு என்னை ஒதுக்கி வச்சாலும், யாருக்கும் தெரியாம, அப்பப்போ வந்து என்னை பாத்துட்டு போயிட்டு தான் இருந்தாரு, திடீர்னு இன்னிக்கு காலையில, பிரிஞ்சி வாழ்ந்தது போதும், இனிமே நாம சேர்ந்துருக்கலாம். நான் பணம் ரெடி பண்ணலைன்னு சொன்னதுக்கு, அதெல்லாம் வேண்டாம்ன்னு சொல்லிட்டார்.  நான் ஆச்சரியமா உங்களுக்கு எப்படி திடீர்னு மனமாற்றம் வந்துச்சுன்னு கேட்டப்ப, எல்லாம் வேண்டப்பட்டவங்க எடுத்து சொன்னாங்க. மனசு மாறிட்டேன். அதுவா முக்கியம், உனக்கு சந்தோஷம் தானேன்னு கேட்டார். அப்படில்லாம் எடுத்துச் சொன்னா மனசு மாறக்கூடிய ஆள் இல்ல அவரு, எனக்கு என்னவோ நீங்க சொல்றதெல்லாம் வச்சு பார்க்கும்போது, இந்த வேலையையும் குமார் அண்ணன் தான் செஞ்சிருப்பாரோன்னு தோணுது...."
 
அதுவரை அமைதியாக இருந்த கார்த்தி, எரிச்சலில் கத்தினாள்.
 
"பாவம், மாமாவை இஷ்டத்துக்கு பேசி புண்படுத்தி அனுப்பிட்டு, ஒவ்வொன்னா இப்ப கதை சொல்லுங்க. முதல்ல ஃபோன் போட்டு, அவர் எங்க இருக்காருன்னு பாருங்க. ஆளாளுக்கு சும்மா பேசிகிட்டு இருக்கீங்களே!!!"
 
சித்ரா போனை எடுத்து ரிஷிக்கு கால் பண்ண,
நாட் ரீச்சபிள்... பலமுறை ட்ரை செய்தாள். நாட் ரீச்சபிள்.
 
ராமன்: யாரும் பதட்டப்பட வேண்டாம். எங்கேயாவது பக்கத்துல தான் போயிருப்பாரு. கண்டுபிடிச்சிடலாம்.
 
நேரம் போய்க்கொண்டே இருக்க, பரபரப்பு அடங்கவில்லை.
 
தங்கள் மேல் அன்பு செலுத்துபவர்கள் எல்லாம் பாதியில் விட்டுப் போகும் ராசி, அகல்யாவுக்கு ஞாபகத்துக்கு வர, இனம் புரியாத பயம் தொற்றிக் கொண்டது.
 
அந்த நினைப்பை உதறிவிட, அவள் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. விடாப்பிடியாக அவளை பிடித்துக் கொண்டிருந்தது.
 
நினைக்க நினைக்க அகல்யாவின் கழுத்து மடிப்புகளிலும், முகத்திலும் வியர்வை பெருகியது. முந்தானையால் துடைத்துக் கொண்டாள்.
 
தாமசுக்காக,
 
ரிஷிக்காக,
 
ஒட்டுமொத்த குடும்பமும், பதட்டமாக, 
வழி மேல் விழி வைத்து, காத்திருந்தது.
 
ஆனால் அவன் வரவில்லை.
 
ஒரு மணி நேரத்திற்கு பிறகு,
 
கேட்டை திறந்து கொண்டு, கண்ணீரும் கம்பலையுமாக திருமுடி ஓடி வந்தான்.
 
என்னமோ ஏதோ என்று அனைவரும் பார்க்க,
 
திருமுடி: தாமஸ் வாத்தியாருக்கு, ஊர் விலக்குல ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. ரோட்ல இருந்தவங்க, அவரை கார்ல தூக்கி போட்டு ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய்ருக்காங்களாம்.
 
ராமன் பதறிப் போய்: அவரு உயிருக்கு ஆபத்து இல்லையே!
 
திருமுடி: சரியா தெரியல. ஆக்சிடென்ட்டை பாத்தவங்க பயங்கரமான ஆக்சிடென்ட்ன்னு தான் சொன்னாங்க. சீரியஸான நிலைமைதான்.  பார்வதிபுரம் ஹாஸ்பிடல் தான் கிளம்பிட்டு இருக்கேன்.... 
துக்கம் காரணமாக மனமுடைந்து பதிலளித்தான்.
 
ஐயோ!! ஐயோ!! என்று அனைவரும் தலையில் அடித்துக் கொண்டு, ஒப்பாரி வைக்க,
 
அகலுக்கு அழுகை பீறிட்டது. தலை சுற்றிக் கொண்டே வர, எதையாவது ஆதரவுக்கு பிடித்துக் கொள்ள விரும்பினாள்.
 
அங்கு நிலவிக் கொண்டிருந்த பதட்டத்தை மீறிய குழப்பத்தை பார்த்ததும்,
என்ன நடந்துச்சு என்று புரியாமல் திருமுடி கேட்க, கார்த்தி நடந்ததை சொன்னாள்.
 
கார்த்தி சொல்ல சொல்ல திருமுடிக்கு பிபி ஏறிக் கொண்டே இருந்தது. திருமுடி அவன் பங்குக்கு எரிமலையாய் வெடித்தான்.
 
"அட முட்டா பசங்களா!!! கொஞ்சம் பொறுமையா என்ன நடந்துச்சுன்னு கேட்டுருக்கலாமே .."
 
சித்ராவில் ஆரம்பித்து, ஹேமா விஷயத்தில், ராகினி விஷயத்தில், முனியை விரட்டுவதற்கு  எடுத்துக்கொண்ட முயற்சிகள், உண்மையான குற்றவாளிகளை பிடிக்க செய்த முயற்சிகள், என எல்லாவற்றையும் புட்டு புட்டு  வைத்தான்.
 
"எவ்வளவு ஆசையா அகலை பாக்குறதுக்காக மச்சான் இன்னிக்கு வந்தாரு.. கெடுத்து குடிச்சவராக்கிட்டிங்களே! உயிர பணயம் வச்சு அவர் காவண வீட்டுல தங்கினது அகல்யாவுக்காக தான். எல்லாம் செஞ்சதும் அகல் மனசுல இடம் புடிக்கறதுக்காக தான். அவ வாயிலிருந்து காதலிக்கிறேன்னு ஒரு வார்த்தையை கேட்பதற்காக தான்.  எவ்வளவு கஷ்டம், எவ்ளோ பொய், எவ்வளவு போராட்டம், எல்லாத்தையும் இன்னைக்கு உன்கிட்ட சொல்லி, நீ சந்தோஷப்படுவதை கண்ணால பாத்து, ரசிக்கணும்னு என்கிட்ட சொன்னார்... இப்படி கழுத்தை புடிச்சு விரட்டிருக்கீங்களே..." 
 
அவன் சொல்ல சொல்ல, அகல்யாவுக்கு என்னவோ உள்ளுக்குள் டமார் டமார் என்று வெடித்து தவிடு பொடியாக  உடைந்தது. கண்களில் நீர் தாரைதாரையாக வழிந்தது.
 
அனைவரும் குற்ற உணர்ச்சி காரணமாக நெருப்பில் நின்று கொண்டிருப்பதைப் போல் உணர்ந்தார்கள்.
 
திருமுடி சித்ராவை பார்த்து, "நீயாச்சும் ஒரு வார்த்தை சொல்லிருக்க கூடாது..."
 
சித்ரா: நான் மயக்கத்திலிருந்து முழிச்சி பேசுறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு.
 
திருமுடி: இப்ப வாத்தியார் என்ன நிலைமையில் இருக்காருன்னு தெரில்லையே.
 
கார்த்தி எரிச்சலின் உச்சத்தில்: மறுபடியும் பேசியே நேரத்தை வீணாக்குறீங்களே!!! எந்த ஹாஸ்பிடல்ல அட்மிட்  பண்ணிருக்காங்க. வாங்க உடனே கிளம்பலாம்..
 
அனைவரும் போட்டது போட்டபடி பதைபதைபோடு கிளம்பினார்கள்.
 
பார்வதிபுரம் கிருஷ்ணகுமார் ஹாஸ்பிடல்
மதியம் ஒரு மணி
 
ஹாஸ்பிடல் புதிதாக கட்டப்பட்ட கம்பீரத்துடன் இருந்தது. ரிசப்ஷனில் அழகு போட்டியில் பங்கு பெற கூட தகுதி வாய்ந்த ரிசப்ஷனிஸ்ட் ஒருத்தி நின்றிருந்தாள். ஓபி வார்டில் ஒரு சில வருத்த முகங்கள், ஆஸ்பத்திரிகளுக்கு இருக்கும் பிரத்தியோக வாசம் அங்கேயும் தட்டுப்பட்டது.
 
ஃபர்ஸ்ட் கிரவுண்ட் ஃப்ளோர் கடைசியில் இருந்த ஐசியு வாசலில், பிரேம் போட்டாற்போல் அனைவரும் நின்றிருந்தார்கள்.
 
வெள்ளை சிறகுகளுடன், ஐசியூ வை விட்டு அவ்வப்போது நர்சுகள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
 
விஷயம் கேள்விப்பட்டு, தூத்துக்குடியில் இருந்து கார் பிடித்துக் கொண்டு கல்யாணியும், மேலும் ஒரு சில சொந்தக்காரர்களும்  அடித்து பிடித்து வந்து சேர்ந்திருந்தார்கள்.
 
பேச வந்த அகல்யாவிடம்,
 
கல்யாணி அதீத உஷ்ணத்துடன்: பேசாம போயிரு. ஐசியு ங்கறதால பல்ல கடிச்சுட்டு பொறுமையா இருக்கிறேன். என் மகனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு. உன்னையும் உன் தங்கச்சிகளையும் சும்மா விடமாட்டேன்... என்று சீறினாள்.
 
அகல்யாவும் கல்யாணியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதற்கு முயல, அதற்கு இடம் கொடுக்காமல், மேற்கொண்டு பேசவும் பிடிக்காமல் நகர்ந்தாள். வந்திருந்த சொந்தக்காரர்களும், அகல்யாவிடம்,' இப்ப வேண்டாம் அப்புறமாக பேசிக்கலாம்' என்று சமாதானப்படுத்தி அனுப்பினார்கள்.
 
சித்ராவின் கண்கள் சிவந்த சேறு போல் கலங்கி இருந்தது. ஹேமா, ராகினி, கார்த்தி இதயத்தில் ஊசிகள் இறங்கி இருந்தன.
 
நேரம் போய்க் கொண்டே இருக்க, நர்சுகள் பரபரப்பாக வந்து போய்க் கொண்டிருந்தார்களே தவிர உருப்படியாக  எந்த  தகவலும் தெரியவில்லை. 
 
திருமுடி அவ்வப்போது கண்ணாடி செவ்வகத்தின் வழியாக ஐசியு க்குள் எட்டிப் பார்த்தான். பெட்களை திரைகள் மறைத்து இருந்ததால், உள்ளே நடக்கும் விஷயங்கள் தெரியவில்லை.
 
திருமுடி ஒரு நர்சை பிடித்து என்னவென்று விசாரிக்க,
"கண்டிஷன் ரொம்ப மோசம்.. லைப் சப்போர்ட்டில் இருக்காரு", என்ற தகவல் மட்டும் கிடைத்தது.
 
அகல்யா  நம்பிக்கை தளர்ந்து போய் தலையில் கை வைத்து, ஓரமாக இருந்த பெஞ்சில் போய் உட்கார்ந்தாள். அவள் ராசி தான் அவளுக்கு தெரியுமே!
 
அவள் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது. சித்ரா அருகே போய் உட்கார்ந்து கையைப் பிடித்துக் கொள்ள,
 
கண்களில் திரண்டிருந்த நீர் முத்துக்களுடன் அகல் அவளைப் பார்த்தாள்.
 
சித்ரா பதறி, 
"பயப்படாதீங்கக்கா... நீங்க வேணும்னு எதுவும் பண்ணல. மச்சானுக்கு ஒன்னும் ஆகாது.."
 
"ஒரு வார்த்தை.. ஒரு வார்த்தை... முதல் நாளே என்கிட்ட வந்து, நான் தான் உன் குமாரு... இவ்வளவு நாளா உன்ன தான் நினைச்சுகிட்டு இருந்தேன்னு சொல்லி இருந்தாலே.... கொஞ்ச நேரம் கோபப்பட்டுருப்பேன். அப்புறம் என் கோவம்ல்லாம் போய்ருக்குமே, எதுக்காக இவ்வளவு கஷ்டப்படணும்? எதுக்காக இவ்வளவு பொய் சொல்லணும்" சித்ராவுக்கு மட்டும் கேட்கிற மாதிரி, கதறும் குரலில் சொன்னாள்.
 
சித்ரா: ஆம்பளைங்க மேல உனக்கு இருக்கிற கோபம் தெரிஞ்சதனால, சொல்லலையே என்னவோ!!
 
அகல்யா: எல்லா ஆம்பளைங்களும் அவரும் ஒண்ணா??? என்று விசும்பல்கள் வெடிக்க, 
 
"உனக்கொரு விஷயம் தெரியுமா? உங்களை கரை சேர்க்கணும்ன்கிற பொறுப்பு, குமார் மேல இருந்த வெறுப்பு, எல்லாம் சேர்ந்து கல்யாணமே பண்ணிக்க கூடாதுன்னு முடிவுல இருந்தேன். எவ்வளவோ பேரு என்னை காதலிக்கிறேன், கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லியும், யார் மேலேயும் எனக்கு எந்த பீலிங்கும் வந்ததில்லை. ஆனால் தாமஸ் பேசுவதை, பழகுவதை பார்த்ததும் என் மனச என்னால கட்டுப்படுத்தவே முடியல, அவர நோக்கி போச்சு.  என்னையும் மீறிய என் மனசை வசியப்படுத்துகிறானேன்னு தாமஸ் மேல எனக்கு சின்ன கோபம் கூட உண்டு. அதுக்கு என்ன காரணமுன்னு அப்ப எனக்கு தெரியவும் இல்லை.  அதுக்கு காரணம் இவர்தான் குமார்ன்னு இப்பதானே தெரியுது...."
 
இவ்வளவு வெளிப்படையாக அக்கா என்றைக்குமே மனசு திறந்து பேசியதே கிடையாது. ஆச்சரியத்துடனும் அச்சத்துடனும் சித்ரா பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
அகல்யா: குமாருக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னை நானே மன்னிச்சுக்க மாட்டேன்.. சத்தம் வராமல் குலுங்கி குலுங்கி அழுதாள்.
 
"அழாதேக்கா," சித்ரா ஆதரவாக அவளை கட்டி பிடித்துக் கொண்டாள்.
 
சித்ரா m.v: கடவுளே எப்படியாவது என் அக்காவையும், மச்சானையும் சேர்த்து வச்சிரு... என்று உள்ளுக்குள் கதறினாள்.
 
ஐசியு கதவுகளை திறந்து கொண்டு டாக்டர் வெளியே வர, அவர் பின்னால் இரண்டு நர்சுகள் பரபரப்பாக வந்தார்கள்.
 
கல்யாணியும் மற்றவர்களும் டாக்டரை சூழ்ந்து, என்னாச்சு என்று கேட்க,
 
டாக்டர்: நீங்க அவருக்கு என்ன உறவு?
 
சொந்தக்காரர்: இவங்கதான் அவரோட அம்மா.
 
டாக்டர்: இதோ பாருங்கம்மா.. ஆக்சிடெண்ட் காரணமா மூளையில் இரண்டு இடத்தில் blood clot ஏற்பட்டுருக்கு. ரொம்ப கிரிட்டிக்கலான சிட்டுவேஷன். He is under life support. ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு. 24 மணி நேரம் போனால் தான் எதுவும் சொல்ல முடியும். உடனடியா தலையில் ஒரு மேஜர் ஆபரேஷன் பண்ணனும். பண்ணாலும் உயிரை காப்பாற்றுவதற்கு சான்ஸ் ரொம்ப கம்மி. அப்படியே காப்பாற்றினாலும், பழைய நினைவுகள் இருக்குமான்னு சொல்ல முடியாது.... தைரியமா இருங்க, கடவுளை நம்புங்க.."
 
என்று பொறுப்பை நைசாக கடவுள் மேல் போட்டதை கேட்டதுமே, அனைவருக்கும் புரியாமல் புரிந்தது 
 
கல்யாணியும், அவள் கூட வந்தவர்களும் ஐயையோ என்று கதற, அகல்யாவும் மற்றவர்களும் நொறுங்கிப் போனார்கள்.
 
தொடரும்

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 2 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு 49
 
டாக்டர்: அம்மா உங்க சிட்டுவேஷன் புரியுது, ஆனா இது  ஐசியூ. கண்ட்ரோல் யுவர்செல்ப்.
 
கல்யாணி நடுங்கும் குரலில்: என் மகனை காப்பாற்றுவதற்கு ஏதாவது செய்யுங்க டாக்டர்.... ப்ளீஸ்.... என்றாள்.
 
டாக்டர்: we are trying our level best... மீதி அவன் கையில.... என்று மேலே பார்த்து சொல்லிவிட்டு நகர்ந்தார்.
 
நர்சுகள் அவரை பின் தொடர்ந்தார்கள்.
 
கல்யாணி இறுகிப்போன முகத்துடன் சிறிது நேரம் உறைந்து நின்றிருந்தாள். அவள் கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டு இருந்தது. பின்னர் கண்ணீரை துடைத்துக் கொண்டு, நேராக அகல்யாவை நோக்கி சென்றாள்.
 
என்ன செய்யப் போறாளோ என்று அனைவரும் பதறிப் போய் பார்க்க,
 
"இப்போ உனக்கு திருப்தியா? சந்தோஷமா? உன்னைத்தானே காலம் பூரா நினைச்சுகிட்டு இருந்தான். சம்மந்தம் பேச நான் வந்தப்ப, சொந்தக்காரங்க வந்தப்ப, நீ சரின்னு சொல்லிருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா? பெரிய பேரழகின்னு மனசுல நினைப்பா உனக்கு? வேண்டாம்னு எங்களை மூஞ்சில அடிச்சு அனுப்புனது மட்டுமில்லாம, இப்போ உனக்காக, உன் ஊருக்கு வந்து இவ்வளவு கஷ்டப்பட்டு, எல்லாம் செஞ்சப்புறமும், அவனை நாய் மாதிரி அடிச்சு விரட்டிருக்கீங்க. எல்லாம் உன் மனசுல இடம் பிடிப்பதற்காக செஞ்சான். உங்க மனசுல கொஞ்சமாவது  ஈரம் இருந்தா இப்படி நடந்துருப்பீங்களா நீல்லாம் உருப்படுவியா? நல்லா இருப்பியா?...
என்று கொந்தளித்துப் பேசி, அவளை நோக்கி பாய்ந்தாள்.
 
திருமுடியும், மற்றவர்களும் கல்யாணியை பிடித்து இழுத்து, சமாதானப்படுத்தினார்கள்.
 
அகல்யா சுவரில் தலையை முட்டிக்கொண்டு அழுதாள். "இப்படில்லாம் எனக்கு நடக்கும்னு தெரியாது அத்தை. நான் வேணும்னு செய்யல. தெரிஞ்சிருந்தா இப்படி நடந்திருப்பேனா? என்னையும் மீறி நடந்துருச்சு. எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க...."
 
தன்னைத் தானே தண்டிக்க வேண்டும் என்று நோக்கத்தில், ணங் ணங் என்று தலையை இன்னும் வேகமாக சுவரில் முட்டினாள்.
 
ராமன் வாத்தியார்: 
"அகலை புடிங்கப்பா... அவளுக்கு ஏதாவது ஆயிரப்போகுது"
 
ஹேமாவும் ராகினியும் அவளை நோக்கி ஓடிச் சென்று அவளை பிடித்தார்கள். மற்றவர்கள் கல்யாணியை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தார்கள்.
 
காரிடரில் கோபமாக டக் டக் என்று வந்த நர்ஸ், ரசாபாசமாகி இருந்த சூழ்நிலையை பார்த்து,
 
"இது என்ன ஹாஸ்பிடலா? சந்தை கடையா? சைலன்ஸ்..? என்று கல்யாணியை பார்த்து கத்தினாள்.
 
அகல்யா கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டிருப்பதை பார்த்த நர்சுக்கு பாவமாக இருந்தது. 
 
அட்மிட் ஆயிருக்கும் பேஷண்ட் ஹிஸ்டரியை விசாரிக்கும் போது காதல் சமாச்சாரம் என்று ஹாஸ்பிடல் ஊழியர்களுக்கு தெரிந்து போயிருந்ததால், அனைவருக்கும் எப்படியாவது நல்லபடியா நடக்க வேண்டுமே என்ற மனிதாபிமான துடிப்பு.
 
15 நிமிடத்திற்கு பிறகு,
 
ஐ சி யு வில் இருந்து வெளிப்பட்ட மற்றொரு நர்ஸ்,
 
"பேஷண்ட் கண்ணு முழிச்சிட்டாரு. அகல்யா யாரு... சித்ரா யாரு... அவங்க கூட பேசணும்னு பிரியப்படுகிறார்..."
 
இருவரும் கண்ணை துடைத்துக்கொண்டு ஐசியு விற்குள் நுழைவதற்காக தயாராக, மற்றவர்களும் நுழைய முற்பட்டார்கள்.
 
"அவர் இன்னும் அபாய கட்டத்தை தாண்டல. ஏதோ முக்கியமா சில வார்த்தை பேசணும்னு சொன்னார்ன்கிறதால, அவங்களை மட்டும் கூப்பிட்டேன். எல்லாரும் கூட்டமா வந்தீங்கன்னா ஒன்னும் பண்ண முடியாது. டாக்டர் என்னை தான் திட்டுவாரு...", என்று காட்டமாக சொன்னாள்.
 
கல்யாணி கடுப்பானாள்.
 
"அவனோட இந்த நிலைமைக்கே இவளுக தான் காரணம்.  இவங்களை எப்படி பாக்குறதுக்காக அனுப்புறது?"
 
நர்ஸ்: அதெல்லாம் எனக்கு தெரியாதுமா. அவர் தான் கடைசியா எதோ பேசணும்னு பிரியப்பட்டாரு. அனுப்புறீங்கன்னா அவர் கூப்பிட்ட ரெண்டு பேர் மட்டும் உள்ள வாங்க, இல்லன்னா ஆள விடுங்க.
 
எல்லோரும் கல்யாணியை சமாதானப்படுத்த,
 
அகல்யாவும், சித்ராவும்,  உள்ளே நுழைந்தார்கள். கூடவே நைசாக திருமுடியும் நுழைந்தான். நர்ஸ் அவனை வெளியே அனுப்ப முயற்சி செய்ய,
 
"என்ன நர்ஸ் அக்கா நான் ஒருத்தன் தானே... அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க", என்று ஐஸ் போட்டு, அவள் முடியாது என்று சொல்வதற்குள் நுழைந்து விட்டான்.
 
ஐசியு வின் முதல் பெட்டில் ரிஷி படுக்க வைக்கப்பட்டிருந்தான்.... தலையை சுற்றிக் கட்டு. கை கால்களில் பேண்டேஜ்கள். அதன் முகப்பில் ரத்த தீற்றல்கள். மற்ற பெட்டுகளை திரை மறைத்திருந்தது. ரிஷி பெட்டுக்கு அருகே ventilator மெஷின்... உயிரை நிறுத்திப் பிடிக்கும் அதன் டியூப்புகளும், ஆக்சிஜன் மாஸ்க்கும் அவன் பேசுவதற்காக கழட்டி வைக்கப்பட்டிருந்தன. பக்கத்து மானிட்டர் திரையில் துடிப்புகள்.
 
நல்ல வேளையாக ரிஷியின் முகத்தில் காயம் இல்லை. ஆனால் அவனின் வழக்கமான சிரிப்பு தொலைந்து போய் முகம் பூராவும் நோயாளிகளுக்குரிய தளர்ச்சி.
 
உள்ளே நுழையும் போதே நர்ஸ் அவர்களைப் பார்த்து,
"யாரும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ண கூடாது. பாசிட்டிவா பேசுங்க...", என்று சொல்லி தான் விட்டிருந்தாள்.
 
மூவரும் பெட் அருகே வந்தார்கள். ரிஷி கண்களை திறந்து அவர்களைப் பலவீனமாக பார்த்தான். அகல்யாவை பார்த்ததும் உயிரற்ற அவன் கண்களில், லேசான மினுமினுப்பு தோன்றி மறைந்தது. மெலிதாக சிரித்தான்.
 
அவன் சிரிப்பில் எக்கச்சக்க வலி.
 
ரிஷி உடைந்த குரலில்:  வந்துட்டியா... உன்னை பார்க்காமல் போயிருவேன்னு  நெனச்சேன். நல்ல வேளையா வந்துட்டே. ஒரே ஒரு தடவை உன் வாயால என்னை காதலிக்கிறேன்னு நீ சொல்லணும்.. அதை நான் கேட்கணும். அதுதான் என் கடைசி ஆசை... "
பேச முடியாமல் திக்கித் திணறி பேசி முடித்தான்.
 
சித்ராவும் திருமுடியும்...  அகல்யாவை பார்க்க, அகல்யா மார்புக்கு குறுக்காக கைகட்டி கொண்டு,
 
"சாரி, சாகப் போற உங்ககிட்ட ஐ லவ் யூ சொல்றதுங்குறது சரியான ஒரு வழிமுறை கிடையாது... நீங்க ஆசைப்பட்டதை நான் செஞ்சிட்டேன்னா, அந்த மன திருப்தியில் நீங்க செத்துப் போயிருவீங்க... அதனால்  முதல்ல உயிர் பொழச்சி வாங்க... அதுக்கப்புறம் பார்க்கலாம்..", என்று கடுமையாக பதிலளித்தாள்.
 
ரிஷி முகத்தில் துல்லியமான அதிர்ச்சி.
 
சித்ராவை பார்த்து, "என்ன இது... உங்க அக்காவுக்கு மனசுல கொஞ்சம் கூட ஈரமே கிடையாதா? நீயாவது நடந்த உண்மைல்லாம் சொல்லு. சாக போறவன் கடைசி ஆசையாக கேட்கிறேன். இது கூட செய்ய மாட்டியா?"
 
சித்ரா விட்டேத்தியாக: அக்கா சொன்னது சரிதானே... சாக போறவங்க கடைசி ஆசையை நிறைவேற்றினால், அந்த சந்தோஷத்தில் செத்துற மாட்டீங்களா?  எல்லாத்துக்கும் நீங்க தானே காரணம்... வேற எந்த உண்மையை சொல்லணும்?... என்றாள்.
 
அவள் குரலில் தெனாவட்டு தென்பட்டது.
 
அடிப்பாவிகளா!!!
 
ரிஷிக்கு அவர்கள் நடவடிக்கை கொஞ்சம் கூட புரியவில்லை. கர்ப்ப விஷயத்தைப் பற்றி, சித்ரா சொன்னால் தானே மற்றவர்கள் நம்புவார்கள். இவள் சொல்ல மாட்டேங்குறாளே!!
 
அடுத்ததாக  நின்ற திருமுடியைப் பார்த்தான். 
"திருமுடி!!! இந்த பொண்ணுங்களுக்காகவா  இவ்வளவு கஷ்டப்பட்டேன்! மச்சான்றதுக்காக சொல்ல வேண்டாம்... அட்லீஸ்ட் யாரோ ஒரு இளைஞன், உயிருக்கு போராடிட்டு இருக்கான்... கடைசி ஆசையா கேட்கிறான். அதுக்காகவாவது ஒரு மனிதாபிமானத்தோடு என் கோரிக்கையை நிறைவேற்ற கூடாதா? உண்மைல்லாம் சொல்லக்கூடாதா... நீயாச்சும் சொல்லு?"
 
திருமுடி அவன் சொன்ன அதே மாடுலேஷனை பிடித்து,
"யா....ரோ ஒரு இளைஞன்...  உயிருக்கு போராடிட்டு இருக்கான்னா.... கடைசியா கேக்குறதல்லாம் நிறைவேற்ற முடியுமா? புடிச்சிருந்தா தானே செய்ய முடியும்.. அவங்க சொல்றது சரிதான்... எனக்கும் ஒரு உண்மையும் தெரியாது" திருமுடி குரலில் புதைந்திருந்த தொனி, கட்சி மாறிட்டேன் என்று சொல்லாமல் சொல்லியது.
 
என்னடா நடக்குது இங்க!!!
 
ரிஷி தளர்ந்து போய்: யாருக்குமே மனிதாபிமானம் கிடையாதா?
 
மூவரும் ஒன்று சேர்ந்து கிடையாது என்றார்கள், ஒரே குரலில், உரத்த குரலில்.
 
கதவைத் திறக்கப்படும் சத்தம் கேட்க, அனைவரும் திரும்பி பார்த்தார்கள்.
 
உள்ளே ஓடி வந்த கல்யாணி, "எப்பா, சாமி...ரீல் அந்து போச்சு... போதும் நிறுத்திக்க.... இதுக்கு மேலயும் ஆக்டிங்கை போடாத", என்று சொல்லிவிட்டு,
அகல்யாவை பார்த்து, கையெடுத்து கும்பிட்டாள்.
 
"என்னை மன்னிச்சிடுமா... தயவுசெய்து கோபப்படாதே. எல்லாம் உங்களை சேர்த்து வைப்பதற்காக தான்....", 
 
ரிஷி ஜெர்க்காகி: என்ன... எப்படி..? என்று கேட்க, 
 
கல்யாணி திரும்பி பார்க்காமல், அவசர அவசரமாக வெளியே நடையை கட்டினாள்.
 
டீச்சரிடம் பொய் சொல்லி கையும் களவுமாக மாட்டிக் கொண்ட சிறுவன் போல், களை இழந்தவனாக எழுப்பி உட்கார்ந்து, மூவரையும் திருட்டு முழியுடன் பார்த்தான்.  தலையில் போட்டுருந்த கட்டை மெதுவாக அவிழ்த்தான். வெறும் கட்டு. தலை நன்றாகத் தான் இருந்தது.
 
கண்களில் லிட்டர் கணக்கில் கேப்மாரித்தனம். உடல் மொழியில் கிலோ கணக்கில் மொள்ளமாரித்தனம்.
 
"நான் போட்டதிலேயே கொஞ்சம் கஷ்டமான கெட்டப் இது தான்...', என்றான் தர்மசங்கடமாக சிரித்தபடி...
 
அவனைப் பார்த்துக் கொண்டிருந்த மூவர் முகத்திலும் சிரிப்பு இல்லை. முறைப்பு.
 
டர் என்று டேப் ரிக்கார்டர் ரீவைண்டு செய்யும் சத்தம். கொஞ்ச நேரத்துக்கு முன்னால், 
அகல்யாவை பரிதாபமாக பார்த்த நர்ஸ், அவளருகில் ரகசியமாக வந்து,
 
"அக்கா  ICUவில் இருக்கிற உங்க ஆளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆக்சிடென்ட் ஆனதுல கால்ல லேசான சுளுக்கு மட்டும்தான். சின்ன சின்ன வெட்டு, சிராய்ப்பு அவ்ளோதான். இந்த ஹாஸ்பிடல் சீப் டாக்டர் அவர் பிரண்டுங்கரதால, எல்லாரும் சேர்ந்து நடிச்சுட்டு இருக்காங்க. எங்களையும் cooperate பண்ண சொல்லிட்டாரு... நீங்க தலையை சுவர்ல மோதிட்டு அழுவதை பார்த்துட்டு, மனசு கேட்காம சொல்லிட்டேன். தயவு செய்து என்னை மாட்டி விட்ராதீங்க...", என்றாள்.
 
கட் பண்ணினா,
 
இடுப்பில் கை வைத்த படி முறைத்துக் கொண்டு அகல்யாவும் சித்ராவும் நிற்க... திருமுடி ரூமுக்குள் எங்கேயோ சுற்றி பார்த்து, குளுக்கோஸ் பாட்டில் மாட்டும் ஒரு கம்பியை அடிப்பதற்காக தூக்கிக் கொண்டு வந்தான்.
 
அகல்யா: சாரு,கெட்டப்பை மாத்தி, பெயரை மாத்தி, ஊரை மாத்தி, இல்லாத பிராடுத்தனத்தையும் எல்லாம் பண்ணுவாரு. நாங்க ஒரு அஞ்சு நிமிஷம் நடிக்க கூடாதா?
 
சித்ரா: எப்பா... எப்பா... வாய தொறந்தாலே பொய்... முடியலடா சாமி.
 
திருமுடி: எய்யா போதும்யா.. உன்னை ஒன்னும் சொல்ல முடியாது, உன்ன பெத்தாளே... அந்த மகராசி. அவ கால்ல விழுந்து கும்பிடணும்.
 
ரிஷி கட்டிலில் இருந்து மெதுவாக எழும்பி, அனைவரையும் அடி கண்ணால் பார்த்தபடி, நின்றான்.
 
"அது வந்து... வந்து... நீ கோவத்துல பேசி அனுப்பிட்டியா... ஒருவேளை... சித்ரா பயத்துல உண்மைய சொல்லாம மறைச்சுட்டா, என்ன பண்றதுன்னு தெரியல. அதான் இப்படி ஒரு டிராமா போட்டேன்... ஒரு பரிதாபத்துல, உனக்கும் கோபம் போயிரும்ல. ஒரு  நப்பாசையில..."
 
சொல்லியபடியே ரிஷி கதவை நோக்கி ஓடுவதற்காக தயாராக, அகல்யாவும் சித்ராவும் அவனை சாத்துவதற்காக கைகளை ஓங்கினார்கள்.
 
திருமுடி கம்பியோடு அவனை நோக்கி பாய்ந்தான்.
 
ரிஷி திருமுடியை நோக்கி சென்று கம்பியை பிடிக்க, இருவரும் இரண்டு பக்கமாக கம்பியை பிடித்து, ஹேய் ஹேய் என்று சவுண்ட் போட்டு தள்ளினார்கள். பின்பக்கமாக வந்த அகலும் சித்ராவும் அவனைப் பிடிக்க முயல,
 
ரிஷி திருமுடியை டபாய்த்து, கபடி மேட்சில் ரெய்டு வருபவனை தள்ளிவிட்டு ஓடுவதைப் போல்,  திருமுடியை தள்ளிவிட்டு, கதவை திறந்து வெளியே ஓடினான்.
 
"டேய் நில்ரா...."
 
மூவரும் அவன் பின்னால் வெளியே ஓடி வந்தார்கள். 
 
திருமுடி: புடிங்க அவன... 
 
ஐ சி யூ முன்னால் சிறிய கூட்டம். அதற்குள் வெளியே எல்லோருக்கும் விஷயம் கசிந்து விட... அனைவரும் முகத்திலும் வருத்தம் மறைந்து போய், ஆபத்து எதுவும் இல்லாததால் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டார்கள். 
 
ரிஷி செய்த விளையாட்டுதனத்தினால், அவர்களுக்கு கோபம் மட்டுமே மிஞ்சியிருந்தது. 
செல்ல கோபம்.
 
வந்திருந்த சொந்தக்காரர்கள் அவனை வளைத்து பிடிக்க, திருமுடி ஓடிவந்து ரிஷி கையைப் பிடித்தான். ரிஷி திமிரினான். அனைவருக்கும் சந்தோஷ உற்சாகம்.
 
"விடாதீங்க புடிங்க' என்ற குரல்கள். 
 
ஆயா, நர்ஸ்கள், வார்டு பாய்ஸ் உட்பட எல்லோரும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். 
 
ரிஷி பின்னால் பிடித்துக் கொண்டிருந்த இருவரையும் நெட்டி தள்ள, இருவரும் பிடியை விட்டு விலகினார்கள். முன்னால் நின்ற திருமுடியை சைடில் தள்ளி விட்டான். 
 
தள்ளிவிடப்பட்ட திருமுடி ஓரமாக நின்றிருந்த, 50 வயது ஆயா மேல் மோதாமல், லாவகமாக தாண்டி சென்று, அவளுக்கு பின்னால் மெத்து மெத்து என்று நின்றிருந்த icu நர்ஸ் மேல், நல்ல நயமாக போய் மோதினான்.
 
ICU முன்னால் இருந்த காரிடரில் ஓடினான் ரிஷி.
 
அனைவரையும் விலக்கிவிட்டு ஓடியவன்... அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.
 
அவனுக்கு முன்னால், அகல்யா கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தாள்.
 
இருவரும் புதிதாக பார்ப்பது போல், பார்த்துக் கொண்டார்கள். 
 
அவள் கண்களை அகல விரித்தாள். உதட்டை மடித்து, இமைகளை படபடத்தாள். கண்களில் கண்ணீரின் பளபளப்பு. 
 
நிச்சயமாக இது ஆனந்த கண்ணீர் தான்.
 
ரிஷியிடம் வெளிப்பட்ட விளையாட்டுத்தனமும் வெட்டி பரபரப்பும் அடங்கியது. பெட்டி பாம்பாய் அடங்கி, அவளை நோக்கி அமைதியா சென்றான். அவளும் அவனை நோக்கி சென்றாள்.
 
ரிஷி கண்களிலும் காதல் சுரந்தது.
 
இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்கினார்கள்.
 
கைகளை கோர்த்து கொண்டார்கள். 
 
ரிஷி புன்னகையால் அவளை நனைத்தான். அகல் யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை.
 
எல்லோரும் ஆர்வமாக அவர்களை பார்த்துக் கொண்டிருக்க,
 
ரிஷியும் அகலும் ஆழமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, அவள் முகம், அந்த கண்களில் தெரிந்த கனிவு, காதல், கண்ணீர், சிவந்த அதிரங்களில் மலர்ந்தும் மலராமல் இருந்த புன்முறுவல்...
 
இவ்வளவு குளோசப்ல அகலை இப்போதுதான் பார்க்கிறான்.
 
இருவரின் கண்களுக்குள் இருவரும் துழாவி பார்த்து, காணாமல் போன ஜில்லையும் குமாரையும் தேடி கண்டுபிடித்தார்கள்.
 
ரிஷி:  ஜில்லு.....
அவன் குரல் ஏகத்துக்கு தழுதழுத்தது.
 
அகல்யா: குமார், நீங்க ஜில்லு ஜில்லுன்னு சொன்னப்பவே நாம் சுதாரிச்சிருக்கணும்.. தப்பு பண்ணிட்டேன்.
 
அவள் கண்களில் துளிர்த்த கண்ணீரை துடைத்து விட்டான்.
 
அகல்யா: ஆனா எனக்கு தாமஸ் வாத்தியாரை விட... குமார் தான் பிடிக்கும்... ஐ லவ் யூ குமாரு...ஐ லவ் யூ..ஐ லவ் யூ..ஐ லவ் யூ... என்று திரும்பத் திரும்ப,
 
தழுதழுத்தபடி சொல்லி, அவனை இறுக கட்டிப்பிடித்தாள்.
 
அவனும் பதிலுக்கு கட்டியணைக்க, அகல்யாவின் அனைத்து சோகமும், கோபமும், தாபமும் கண்ணீரும், அவன் அணைப்பில் கரைந்து போனது.
 
மாலையில் ஒவ்வொரு பூவாய் பூக்கிற மாதிரி, ஒவ்வொரு பட்டாம்பூச்சியாய் சிறகை விரித்து சுத்தி சுத்தி பறந்தன. அனைத்தும் அவர்களை விட்டு சென்ற பட்டாம்பூச்சிகள், மறுபடியும் வந்து சேர்ந்தன.
 
"என்ன மன்னிச்சிடுங்க, மன்னிச்சிடுங்க" என்று அவள்  மனமுருக சொல்ல, இடது கையால் அவள் தலையில்  தட்டி கொடுத்து, அவள் முகத்தை அவன் மார்புக்குள் அழுத்தி பொத்திக்கொண்டான். அவளால் மேற்கொண்டு வாயைத் திறந்து மன்னிப்பு கேட்க முடியவில்லை. கேட்கவும் தேவையில்லை.
 
பார்த்துக் கொண்டிருந்த  அனைவர் கண்களிலும் நீர்க்கசிவு.
 
இருவரும் மாற்றி மாற்றி ஆசை தீர கட்டி தழுவி கொண்டார்கள். முன் எப்போதும் அனுபவிக்கிறாத ஒரு பூர்ண சந்தோஷம். அகல்யாவை திக்கு முக்காட வைத்தது.
 
ஹேமாவுக்கும், மற்றவர்களுக்கும் மகிழ்ச்சி குறைந்து,  வெட்கம் நிறைந்தது.
 
ஓரமாக நின்றிருந்த சித்ராவும், கார்த்தியும் ஆளுக்கொரு பக்கமாக  ஓடி சென்று "அக்கா... மாமா" என்று அவர்கள் இருவரையும் சேர்த்து கட்டித் தழுவி கொண்டார்கள்.
 
ICU நர்ஸ் தோளில் கை வைத்த திருமுடி,
"சக்சஸ்... சக்சஸ்" என்று கத்தினான்.
 
நர்ஸ் அவன் தோளில் வைத்திருந்த கையை தட்டி விட்டு, "வெட்டிடுவேன்" என்று அவனைப் பார்த்து சிக்னல் காண்பித்தாள்.
 
மேட்டு வீட்டுக்காரிகளின் பாச அணைப்பில் இருந்து, ரிஷி விடுபடவே இல்லை.
 
அவர்களும் இனிமேல் அவனை விட போவதில்லை.
 
தொடரும்
 
50
 
நிறைவுரை
 
இரண்டு வாரத்துக்கு பிறகு,
 
ரஸ்தா காடு மெயின் ரோடு டீக்கடையில் ஏதோ மகத்தான ஹாசியத்தை கேட்டது போல், அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
பைக்கில் வந்த ரிஷியும், திருமுடியும், பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு டீக்கடையை நோக்கி சென்றார்கள்.
 
அவர்கள் போய் சேர்வதற்குள், இரண்டு வாரத்துக்குள் நடந்த சம்பவங்கள் ஒரு அவசரமான recap
 
டாக்டர் கிருஷ்ணகுமாருக்கு நன்றி செல்வதற்காக தாமஸ், மன்னிக்கவும், ரிஷி, அவர் ரூமுக்குள் செல்ல... அவனை பார்த்து பெரிய கும்பிடு போட்டார்.
 
"என்ன மாப்பி? நாம அப்படியா பழகிருக்கோம்..."
 
கிருஷ்ணகுமாரின் கோபத்துக்கு காரணம், லோக்கல் சேனல் நியூஸில் "நாகர்கோவில் ஹாஸ்பிடலில் இளைஞரின் ருசிகரமான காதல். சினிமா பாணியில் கிளைமாக்ஸ்..", என்கிற தலைப்பில் வந்த செய்தி தொகுப்பு.
 
"தயவு செய்து இனிமே வேற எதுக்காகவும் இந்த ஹாஸ்பிடல் பக்கமே வந்துராத..." 
 
இதுதான் அவன் போகும் போது, டாக்டர் சொன்ன கடைசி வார்த்தை.
 
ரஸ்தாகாடு சம்பவம் பண்ணுவதற்காக வேலையை விட்டுவிட்டு தான் ரிஷி வந்திருந்தான். மறுபடியும் சென்னைக்கு அவன் வேலைக்கு போவதாக அபிப்பிராயமே இல்லை... 
 
முனி பிரச்சினை முடியும் வரைக்கும், மேட்டு வீட்டில் தான் தங்கி இருக்கிறான். அவர்கள் நிலத்தில் அறுப்பு சமயம் என்பதால் அன்றைக்கு இரவே கல்யாணி தூத்துக்குடி கிளம்பி விட்டாள். வயசு பெண்கள் இருக்கும் வீட்டில் தங்குவதற்கு அவன் தான் கூச்சப்பட்டானே தவிர, பெண்கள் மூவருக்கும் எந்த கூச்சமும் இல்லை.
 
உண்மையான தாமஸ் வாத்தியாரை ஹவுஸ் அரெஸ்டில் இருந்து ரிலீஸ் செய்யும் போது, ரிஷியும் அகல்யாவும் ஜோடியாக அவன் காலில் விழ... கொலைவெறியில் இருந்தவன் ஜோடியாக மன்னிப்பு கேட்டதும், கேஸ் எதுவும் கொடுக்காமல் மன்னித்து விட்டான்.
 
ஊர் பூராவும் கலெக்ஷனை போட்டு, முனி கோவிலை சரி செய்து, பூஜைகள் நடத்தி, முனியை ஓரளவுக்கு சாந்தப்படுத்தி வைத்திருந்தார்கள். ஆனால் இரவில் முனி ஓட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
 
இருவரும் டீக்கடையை நெருங்கியதும்,
 
சகாயராஜ் திருமுடியை பார்த்து முறைத்தபடி,
"வாங்க வாத்தியாரே, உட்காருங்க... உங்க சேதி எல்லாம் கேள்விப்பட்டோம். நீங்க செஞ்சது தப்பா இருந்தாலும், எந்த நோக்கத்துக்காக செஞ்சீங்கன்னு இருக்குல்ல. ரொம்ப சந்தோஷம். ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள். இந்த பய கூட இனிமே சேர்ந்து சுத்தாதீங்க... உங்க நல்ல பேரை கெடுத்துருவான்."
 
திருமுடி கையைக் கட்டிக் கொண்டு பவ்யமாக உட்கார்ந்து இருந்தான். சந்தனமேரி ஊரை காலி செய்து கொண்டு போய் ஒரு வாரம் ஆகி இருந்ததால், சந்தன காற்று பாட்டை அவனால் பாட முடியவில்லை.
 
திருமுடி: என்ன சித்தப்பு, நான் அப்படிப்பட்டவனா?
 
சந்தனமேரி இல்லாததால், சகாயராஜிடம் பழைய கண்டிப்பு வந்திருந்தது.
 
"நீ எப்படிப்பட்டவன்னு எனக்கு நல்லா தெரியும்ல. ஒழுங்கு மரியாதையா நடக்கல. தோல உரிச்சு தொங்கவிட்டுருவேன்"
 
அந்தோணி: உங்க பிரச்சனையை விடுங்கப்பா.. (ரிஷியை பார்த்து) நீங்க வாத்தியார் இல்லனாலும், எங்களுக்கு எப்பவுமே வாத்தியார் தான். நீங்க வந்ததுனாலதான் ஊர்ல பிரச்சினைகள் ஓரளவுக்கு சரியாச்சு. ஆனா இன்னும் முனி ஓட்டத்தைத் தான் நிறுத்த முடியல.
 
ரிஷி: அத பத்தி பேச தான் வந்தேன். அதுக்கும் ஒரு வழி இருக்கு.  முனி கோயிலருந்து இடது பக்கமாக கடற்கரைக்கு போற ரூட்ல, நான் சொல்ற இடத்துல, வெட்டி முறிச்சான் இசக்கிக்கு ஒரு கோயில் கட்டினோம்னா முனி ஊருக்குள்ள வர முடியாது. அதோட ஓட்டம் வேற பக்கமா திரும்பிடும்.  என் சொந்த செலவுல, நானே சின்னதா ஒரு கோயில் கட்டி தரேன்.
 
அமிர்தம் ஆச்சரியமாக:  இசக்கி கோவில் கட்டுனா முனி ஓட்டம் இருக்காதுன்னு எதை வச்சு சொல்றீங்க?... என்று கேட்க,
 
ரிஷி: நீங்க சொன்னத வச்சு தான்..   ஏற்கனவே முனி ஓட்டம் இருந்த பாதையில் இருளாயி கோவில் கட்டியதால் தானே, டைவர்ட் ஆகி முனி ஓட்டம் ஊருக்குள்ள வந்துச்சுன்னு நீங்கதானே சொன்னீங்க. இருளாயி கோயில்  கட்டினதால முனி ஓட்ட பாதை டைவர்ட் ஆகும்னா.... இசக்கி கோயில் கட்டுனா ஊருக்குள்ள நுழையவே முடியாது. அதனுடைய பாதை வேறு பக்கமா திரும்பிடும். இசக்கி முனியை எதிர்ப்பதை  நானே நேரடியா பார்த்தேன்... என்று அன்றிரவு நடந்த சம்பவத்தை விளக்கினான்.
 
அவன் சொல்லி முடித்ததும், ஜோசப் உட்பட டீக்கடையில் இருந்த அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
 
சகாயராஜ்: சார் சொல்றது சரியா தானே இருக்கு... 
 
அனைவரும் அவர்களுக்குள்ளே பேசி, எசக்கிக்கு கோயில் கட்டிருவோம் என்று ஏகமனதாக ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
 
அன்றிரவு பத்து மணி,
மேட்டு வீடு சிட் அவுட்
 
கார்த்தி சன் மியூசிக் பார்த்துக் கொண்டிருக்க, ரிஷி சிட்அவுட்டில் சித்ரா மற்றும் அகல்யாவுடன் பேசிக் கொண்டிருந்தான்.
 
ரிஷி: காவண வீட்டை வித்து, உங்களைல்லாம் செட்டில் பண்ணனும்னு தாத்தா ரொம்ப பிரியப்பட்டுருக்கிறார். அவர் ஆசைப்படி காவண வீட்டை  வித்துரலாம். நமக்கு இவ்வளவு பெரிய வீடு போதும். அது போக தூத்துக்குடியில் இன்னொரு வீடு இருக்கு. நிலம் இருக்கு. எக்ஸ்ட்ரா காவண வீடு தேவையில்லை தான். இத கொடுத்துட்டு பணத்தை சித்ரா பேர்லையும், கார்த்தி பேரிலும் பிக்சட் டெபாசிட் போட்டுடுறேன்.
 
அவன் சொல்வதற்கு இனிமேல் மறுப்பு எதுவும் அவர்கள் சொல்லப் போவதே இல்லை.... என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
 
மூவரும் தன்னைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது போல்... 
 
காவண வீடு அவர்களை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது.
 
பேசிக் கொண்டிருந்த அகல்யா எதார்த்தமாக காவண வீட்டை பார்க்க, அதிர்ந்தாள். இரண்டு வீட்டுக்கும் நடுவே இருக்கும் செடிவேலி அருகே ஏதோ ஒரு கருப்பு உருவம் நின்றிருப்பது போல் தோன்றியது.
 
அகல்யா துணுக்குற்று போய் கூர்ந்து பார்த்தாள். உண்மைதான்... ஏதோ ஒரு உருவம், இருட்டுக்குள் நின்றபடி அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தது.
 
அகல்யா திடுக்கிட்டாள்.
 
என்னடா இது?? மறுபடியும் முதல்ல இருந்தா?
 
அகல்யா காவண வீட்டையே பார்த்துக் கொண்டிருப்பதை ரிஷி பார்த்ததும், 
"என்னாச்சு?" என்று கேட்க,
 
அகல்யா: அங்கே யாரோ இருட்டுக்குள்ள நிக்கிற மாதிரி இருந்துச்சு. நான் பார்த்ததும், காணல.... என்று கிசுகிசுத்தாள்.
 
ரிஷி: அங்க யாரு வரப்போறா?? முனி வருவதற்கு வாய்ப்பே இல்லை. அன்னைக்கு நடந்த சம்பவத்தை தான் நான் உங்ககிட்ட சொன்னனே! இது முனிவோட்ட நேரமும் இல்லையே.
 
ரிஷி திரும்பி காவண வீட்டை பார்த்தபடி பேசி கொண்டிருக்க, அதற்குள்ளாக சித்ரா வீட்டுக்குள் சென்று டார்ச் லைட் எடுத்து வந்து, ரிஷியிடம் கொடுத்தாள்.
 
ரிஷி டார்ச் லைட் அடித்து பார்க்க, வேலி செடிகள் அசைந்தது போல் தோன்றியது.
 
"இருங்க, போய் பாத்துட்டு வரேன்...."
 
அகல்யா: "இருட்டுல தனியா போக வேணாம்... நானும் வரேன்."
 
"என்ன பெரிய இருட்டு!  அங்க தானே இவ்வளவு நாளா குப்பை கொட்டிக்கிட்டு இருந்தேன். நான் போய் பார்த்துட்டு வரேன்..."
 
ரிஷி சிட்டவுட்டில் இருந்து இறங்கி, இடது பக்கமாக திரும்பி காவண வீட்டை நோக்கி நடந்தான். 
 
சித்ரா: இல்ல, இல்ல... இந்த விஷயத்துல,  நாங்க சொல்றத தான் நீங்க கேட்கணும்... என்று சொல்லிவிட்டு இருவரும் அவன் கூடவே வந்தார்கள்.
 
முனி சம்பவத்துக்கு பிறகு, அவனை மேட்டு வீட்டுக்காரிகள் தனியா எங்கேயுமே அனுப்புவதில்லை.
 
அன்றைக்கு இரவு, இசக்கி வெளிப்பட்டு முனியை விரட்டி விட்ட சம்பவத்தை பார்த்த பிறகு, காவண வீட்டை பூட்டி போட்டதுதான்.. அகல்யா கொடுத்த சிறுவயது பரிசு பொருட்களை எடுப்பதற்காக ஒரே ஒரு தடவை உள்ளே போனானே தவிர, அதன் பிறகு ரிஷியும் அந்த பக்கமே போகவில்லை.
 
காவண வீட்டின் முன்னால் ஒரே ஒரு பல்ப் மட்டும் நைட் டூட்டி பார்த்துக் கொண்டிருந்தது. 
 
வீட்டை சுற்றிய இடங்களில் இருள் சூழ்ந்திருந்தது. டார்ச் லைட்டின் வெளிச்சம் காவண வீட்டை சுற்றி ஊர்ந்து நகர, தடதடவென ஏதோ மெல்லிய அதிர்வுகள். 
 
காவண வீடு அவர்களுக்கு தெரியாமல் எதையோ மறைத்து வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தது.
 
அகல்யாவுக்கு என்னமோ சரி இல்லை என்று தோன்ற, அவன் கையை பிடித்து இழுத்தாள்.
 
"மச்சான், வேணாம் வந்துருங்க. காலையில பாத்துக்கலாம்.."
 
சித்ராவும், "ஆமா மச்சான் வந்துருங்க", என்று கூப்பிட, மூவரும் மேட்டு வீட்டை நோக்கி நடந்தார்கள்.
 
அகல்யா: காவண வீட்டை விக்கிறதை பற்றி பேசினாலே, அதுக்கு என்னமோ பைத்தியம் புடிச்சிருது.. என்று கமெண்ட் அடித்துக் கொண்டே செல்ல அவர்களுக்கு பின்னால், காவண வீடு இருட்டுக்குள் சிலிர்த்து நிமிர்ந்தது.
 
இரவு... நிலவு... மேட்டு தெரு... மரங்கள்...
 
இசக்கி திரிசூலத்தை ரிஷியை நோக்கி குறி பார்த்தபடி, ரத்த நாக்கை சுழட்டி, கண்களில் குரோதம் மிளிர,
 
"ஏம்ல... எனக்கு நேர்ந்து  விட்ட வீட்டை விக்கிறதுக்கு யோசனை பண்ணிட்டு இருக்கீங்களா? நீங்க வான்னா வரணும்,  போன்ன்னா போகணுமா? வகுந்துருவேன் வகுந்து... " என்று சொல்லிவிட்டு திரிசூலத்தை அவனை நோக்கி உயர்த்த...
 
திடுக் என்று ஹாலில் படுத்திருந்த ரிஷி தூக்கத்திலிருந்து முழித்துக் கொண்டான். உடம்பெல்லாம் வியர்வையில் ஊறிப் போயிருந்தது.
 
ஓஹோ கனவா?
 
மொபைலை எடுத்து டைம் பார்த்தான். மணி இரவு 3.
 
பின்பக்க ரூமில் இருந்து யாரோ டக் டக் என்று நடந்து வரும் சத்தம் கேட்க, ரிஷி திரும்பி பார்த்தான். அகல்யா பதட்டமாக வந்து கொண்டிருந்தாள்.
 
ரிஷி: என்னம்மா ஆச்சு? தூங்கலையா?
 
அகல்யா பதட்டமாக வந்து அவனருகே உட்கார்ந்து, "மச்சான், ரொம்ப பயமா இருக்கு. என் கனவுல இசக்கி வந்து...." என்று அவனுக்கு வந்த அதே கனவை சொன்னாள்.
 
ரிஷி ஆச்சரியமாக, "உனக்கும் இதே கனவு தான் வந்துச்சா?"
 
"உங்களுக்கும் இதே கனவு தான் வந்துச்சா?" என்று கதவோரமாக சித்ரா குரல் கேட்டது. அவளும் பதட்டமாக நின்றிருந்தாள்.
 
அகல்யா முகத்தில் அச்ச ரேகை.
"எல்லாருக்கும் ஒரே கனவா?"
 
சித்ரா: ஆச்சரியமா இருக்கே.
 
ரிஷி ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான்.
 
அகல்: காவண வீட்டை விக்கிற ஐடியாவை இதோட விட்டுடலாம்... இனிமே எந்த பிரச்சனையும் வேண்டாம். யாரையும் இழப்பதற்கு நான் தயாராக இல்லை. இசக்கிக்கு நேர்ந்து விட்டது நேர்ந்து விட்டதாகவே இருக்கட்டும்..
 
சொல்லிவிட்டு ரிஷியை அவள் பார்க்க, 
 
அவன் முகத்தில் எந்த சலனமும் இல்லை.
 
மறுநாள் காலை,
 
பொழுது விடிந்ததும் விடியாததுமாக, திருமுடி அடித்து பிடித்து மேட்டு வீட்டின் கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
 
அப்போதுதான் எழும்பி, சோம்பல் முறித்துக் கொண்டு வெளியே வந்த ரிஷி,
 
திருமுடி வருவதை பார்த்ததும்,
 
"என்ன திருமுடி, என்ன விஷயம்?"
 
திருமுடி, இரவு அவனுக்கு வந்த இசக்கி கனவை பற்றி பரபரப்பாக சொன்னான்.
 
ரிஷி சத்தமாக சிரித்து விட்டு, "கவலைப்படாதே, எங்களுக்கும் இதே கனவு தான் வந்துச்சு.. காவண வீட்டை விக்கிறது சம்பந்தமா நேத்து பேசுனதுனால வந்திருக்கும். எல்லாம் பாத்துக்கலாம்... Dont worry"
 
திருமுடி அவனைக் கடுப்பாக பார்த்துவிட்டு,
 
"அதுக்கு... உங்க பேமிலிக்கு தானே வரணும்.. எனக்கு ஏன் கனவு வந்துச்சு?..."
 
ரிஷி குறும்பாக, "நம்ம குடும்பத்துக்கு எல்லாமே நீ தானே திருமுடி... உன் கிட்ட கலந்துக்காம ஒரு விஷயமும் பண்ண மாட்டோம்ல..", என்று ஜோராக, காவண வீட்டுக்கு கேட்கிற மாதிரி, அதைப் பார்த்து, சத்தமிட்டு சொல்ல...
 
அடப்பாவி!!! 
 
திருமுடி ஜெர்க்காகி,
 
"எலேய் உனக்கு முனி கூடவும், இசக்கி  கூடவும் விளையாடுறதே ஒரு பொழப்பா போச்சு. போங்கல போக்கத்த பசங்களா!!! நேரா இசக்கி கோவிலுக்கு போய், கற்பூரம் ஏத்தி, இந்த ஃபேமிலிக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சத்தியம் பண்ணிட்டு தான், மறு வேலை... ஆத்தா இந்தா வந்துடுறேன்", காவண வீட்டை நோக்கி, சத்தமிட்டு சொன்னான்.
 
ரிஷி ஏதோ சொல்வதற்காக வாய் எடுக்க,
 
திருமுடி திரும்பி கூட பார்க்காமல், 
 
துண்ட காணும், துணிய காணும் என்று  ஓட ஆரம்பித்தான்.
 
நிறைவடைந்தது
 

   
ReplyQuote
Page 4 / 4

You cannot copy content of this page